தலாய் லாமாவிடம் ஒரு திடுக்கிடும் கேள்வி கேட்ட விஞ்ஞானி!

File photo dated 18/04/13 of the Dalai Lama, as Glastonbury has announced he is going to make a guest appearance at the famous festival. PRESS ASSOCIATION Photo. Issue date: Thursday June 25, 2015. The exiled Tibetan spiritual leader will visit the event on Sunday as part of a UK visit which will also take in Aldershot. See PA story SHOWBIZ Glastonbury. Photo credit should read: Paul Faith/PA Wire

Written by ச.நாகராஜன்

Post No.2250

Date: 17 October 2015

Time uploaded in London: 8-49 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

பாக்யா வார இதழில் வெளியாகும் அறிவியல் துளிகள் தொடரில் 243வது அத்தியாயமாக 16-10-2015 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

தலாய் லாமாவிடம் ஒரு திடுக்கிடும் கேள்வி கேட்ட விஞ்ஞானி!

.நாகராஜன்

நான் ஹிந்து இல்லை. ஆனால் அவர்களின் கொள்கையான மறுபிறப்பை நான் ஆதரிக்கிறேன். அது ஈடு இணையற்றது. பகுத்தறிவுக்கு ஒத்தது. சமயப் பற்றுள்ளது. மனிதர்களைத் தீய காரியம் செய்ய விடாமல் தடுப்பது.

                                          –  வில்லியம் ஜோன்ஸ்

dalai1

உலகிலுள்ள கோடிக்கணக்கான புத்த மதத்தினரின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா. இன்று உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரான இவரது ஒரு பெரும் சிறப்பு, விஞ்ஞானிகளுடன் இவர் அடிக்கடி அளவளாவுவது தான்! விஞ்ஞானிகளுக்கு இவரைக் கண்டால் மிகவும் பிடிக்கும்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் சொல்வதுடன் அவர்களைக் கேள்விகள் கேட்டு திகைக்கவும் வைப்பார். 1999ஆம் ஆண்டில் இந்தியாவில் இவர் தங்கி இருக்கும் தர்மஸ்தலாவில் 30க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை அழைத்து ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒருங்கிணைப்பதற்கான கலந்துரையாடல் கூடிய ஒரு கருத்தரங்கத்தை இவர் ஏற்பாடு செய்தார்.

ஒரு விஞ்ஞானி இவரது தாராளமான அணுகுமுறையைப் பயன்படுத்த நினைத்தாரோ என்னவோ, திடீரென்று வெடிகுண்டு போல ஒரு கேள்வியை அவர் மீது தூக்கிப் போட்டார்.

தலாய் லாமா அவர்களே! புத்தமதத்தை நீங்களே விட்டு விடும் வகையில் ஏதேனும் அறிவியல் கொள்கை இருக்கிறதா? அப்படி ஒன்று ஏற்படுமா?”

அனைவரும் திகைத்து விட்டனர். உலகின் புத்தமதத்தினரின் குருவைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி! கேட்கலாமா? கேட்பது முறை தானா?

தலாய் லாமா கோபப்படவில்லை.

dalai2

மெல்லிய குரலில் இனிமையாகப் பதில் கூறினார்:-“இதுவரை அப்படி ஒரு கொள்கையும் இல்லை. ஒருவேளை விஞ்ஞானிகள் மறுபிறப்பு என்பதே இல்லை என்று நிரூபித்தால் நான் புத்த மதத்தைத் துறப்பது பற்றி மறு சிந்தனை செய்யக் கூடும்!”

எப்படிப்பட்ட அருமையான பதில்! விஞ்ஞானிகள் வாயடைத்துத் திகைத்து நின்றனர்.

இன்றைய விஞ்ஞானத்தால் பதில் கூற முடியாத ஆயிரக் கணக்கான கேள்விகள் உள்ளன? பல கோடி அண்ட பிரபஞ்சங்கள் உள்ள படைப்பின் நோக்கம் என்ன? படைத்தவர் யார்? உயிர் எப்படி கருவை எந்த சமயத்தில் அடைகிறது? எப்படி மனிதனை விட்டு உயிர் பிரிகிறது? உணர்வு எப்படி உருவாகிறது? மனத்தின் மாண்புகள் என்னென்ன? மனிதன் இறந்த பின் மீண்டும் பிறக்கிறானா? மூளையின் சிக்கலான அமைப்பையும் மனத்தையும் பகுத்தறிவையும் கொண்ட ஒரு ரொபாட்டை அமைக்க முடியுமா? இப்படி ஆயிரக் கணக்கான கேள்விகள் உள்ளன.

ஆனால் தலாய் லாமா சிக்கலான பெரிய விஷயங்களில் விஞ்ஞானிகளைத் ஒரு தட்டு தட்டுவது போல மறு பிறப்பு பற்றி மட்டும் சுட்டிக் காட்டினார். அதற்கு அவ்வளவு முக்கியத்துவத்தைத் தந்தார்.

இன்றைய விஞ்ஞான உலகில் மறு பிறப்பு பற்றிய ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. கிடைக்கும் தகவல்கள் விஞ்ஞானிகளையே பிரமிக்க வைக்கின்றன.

லிடியா ஜான்ஸன் என்ற அமெரிக்கப் பெண்மணியின் கேஸ் வியப்பூட்டும் ஒன்று. பிலடெல்பியாவில் வாழ்ந்து வந்த முப்பத்தேழே வயதான அந்தப் பெண்மணிக்கு ஜென்ஸன் ஜாகோபி என்ற மனிதனைப் பற்றிய அனைத்து நினைவுகளும் வந்தன. இதில் திகைப்பூட்டும் ஒரு விஷயம் ஜாகோபி என்பவர் ஸ்வீடனில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நபர். அந்தக் கால ஸ்வீடிஷ் பாஷையில் அந்தப் பெயரை யென்ஸன் எக்கோபி என்று அவர் உச்சரித்தார். அவரைப் பற்றி கேள்விகள் கேட்ட போது பழைய கால ஸ்வீடிஷ் மொழியில் சரளமாகப் பேசலானார்.

அமெரிக்கப் பெண்மணிக்கு 17ஆம் நூற்றாண்டு ஸ்வீடன் மொழி எப்படித் தெரியும்? சரளமாக அதில் ஒரு நொடி நேரத்திற்குள் எப்படி உரையாட ஆரம்பிக்க முடியும்? 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல ஸ்வீடன் தேசத்துப் பொருள்களை மட்டும் தனியே அவரால் பிரித்தெடுக்க முடிந்தது.

மகாத்மா காந்திஜியின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்த சாந்தி தேவி பற்றிய சம்பவம் உலகில் மறுபிறப்பு ஆய்வில் முக்கிய பங்கை வகிக்கிறது. 1926ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் பிறந்த சாந்தி தேவி திடீரென்று தன் முந்தைய பிறப்பைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள். தனது ஊரான மதுராவைப் பற்றி விவரித்த அவள் தனது (முந்தைய ஜென்ம) கணவரான  கேதார் நாத் சௌபே பற்றி விவரிக்கலானாள். ஆர்வம் தாளாத ஒரு தலைமை ஆசிரியர் அந்த கிராமத்தில் சாந்தி தேவி குறிப்பிட்ட முகவரிக்கு கேதார் நாத் பெயரில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். பதில் வந்ததுகேதார்நாத்திடமிருந்தே!

 ஒன்பது வயதுச் சிறுமி தன்னைத் தனது கிராமத்திற்கே அழைத்துச் செல்ல வற்புறுத்தினாள். அங்கு அவள் அழைத்துச் செல்லப்பட்ட போது தனது முன் ஜென்ம உறவினர்களை மறக்காமல் அடையாளம் கண்டு அளவளாவினாள். தனது முந்தைய வீட்டிற்குச் சென்ற அவள் க்ளைமாக்ஸான ஒரு காரியத்தை அனைவரும் வியக்கும்படி செய்தாள்.

dalai time

தான் ஒரு டின் பெட்டியில் காசை வைத்து ஒரு மூலையில் புதைத்து வைத்திருப்பதாகவும் அதை எடுக்க வேண்டும் என்றும் அவள் கூறிய போது அனைவரும் வியந்தனர். அவள் சொன்ன மூலையைத் தோண்டிய போது டின் பெட்டியில் பணம் இருந்தது.

உலகளாவிய விதத்தில் பரபரப்பூட்டிய சிறுமி சாந்தி தேவி மறு ஜென்ம ஆய்வாளர்களுக்கு ஒரு முக்கிய கேஸ் ஆனாள். மகாத்மாவோ ஒரு குழுவை அனுப்பி அனைத்து விவரங்களையும் சரி பார்க்கச் செய்து திருப்தி அடைந்தார்.

காந்திஜி மறுபிறப்பு கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். டால்ஸ்டாயின் ஒரு நூலின் பகுதியை வெளியிட அவர் அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை அவருக்கு எழுதிய காந்திஜி அதில் மறுஜென்மம் இல்லை என்று டால்ஸ்டாய் கூறி இருக்கும் பகுதியை மட்டும் தான் எடுத்து விட விரும்புவதாகவும் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே தனது நாட்டு மக்களை எழுப்பி உத்வேகம் ஊட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார். டால்ஸ்டாயும் காந்திஜியின் விருப்பப்படியே அப்பகுதியை நீக்க ஒப்புதலும் அளித்தார்!

இனி மறு பிறப்பைத் தீவிரமாக ஆராய்ந்த ஒரு விஞ்ஞானியைப் பார்ப்போம்!

Percy Shelley bio docstoc.com

அறிவியல் அறிஞர் வாழ்வில்

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான ஷெல்லிக்கு இரசாயன பாடத்தின் மீது அளவற்ற ஆவல். அவர் முதலில் படித்த பள்ளியான ஸயான் ஹவுஸில் (Sion House) இருந்த ஒரு ஆசிரியர் அவரிடம் இந்த ஆர்வத்தைத் தூண்டி விட்டார். ஆனால் அவர் ஈட்டனில் உள்ள பள்ளியில் படிக்க வந்த போது இரசாயனம் படிக்கக் கூடாதென்று அவருக்கு தடை போடப்பட்டது. இதனால் எல்லா சோதனைகளையும் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் செய்து மகிழ்ந்தார்.

ஒரு நாள் அவருக்குப் பாடம் கற்பிக்க வரும் ஆசிரியரான பெத்தல் (Mr Bethel) ஷெல்லியின் அறையிலிருந்து விசித்திரமான ஒலிகள் வருவதைக் கேட்டுத் திகைத்தார்.

என்ன செய்கிறாய், ஷெல்லி?” என்று கேட்டவாறே அவர் ஷெல்லியின் அறைக்குள் நுழைந்தார். அங்கு அவர் பார்த்த காட்சி அவரைத் திகைக்க வைத்தது. நீல நிற ஜுவாலை எரிய புகை நடுவே ஷெல்லி இருந்தார்.

என்ன செய்கிறாய், நீஎன்று அலறினார் ஆசிரியர்.

நான் பிசாசை எழுப்பிக் கொண்டிருக்கிறேன்என்றார் ஷெல்லி.

ஷெல்லியின் முன்னால் ஒரு கண்ணாடி ஜாடி இருந்தது. அதன் பெயர் லெய்டன் ஜார் (Leyden Jar) இரண்டு எலக்ட்ரோடுகளை வைத்து எளிய வழி மூலம் மின்சாரம் செய்வதற்கான ஜாடி அது.

அது என்ன என்று பார்க்க ஜாடியின் மீது கை வைத்தார் ஆசிரியர் பெத்தல். ஜாடியைத் தொட்டதால் ஷாக் அடிக்கவே ஐயோ என்று கத்தியவாறே அங்கிருந்து வெளியில் ஓடினார் அவர்.

சோதனை ஜாடியின் மூலம் மின்சக்தியை வெளிப்படுத்திய கவிஞர் ஷெல்லி, பின்னால் கவிதை மூலமாகவும் துடிக்க வைக்கும் மின் ஆற்றலை வெளிப்படுத்தியது பொருத்தம் தானே!

*******************

EFFECT OF NEEM LEAVES!

Compiled by london swaminathan

Post No.2249

Date: 16 October 2015

Time uploaded in London: 17-13

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

A lesson learnt!

In a village there lived a couple. The husband was often given to quarrelling with his wife. Whenever they quarrelled the husband would hold out a threat to his wife that he would renounce his home and become a Sadhu. The wife led a miserable life owing to her husband’s behaviour.

On the outskirts of the village a sadhu lived in his hut engaged in meditation and in imparting in spiritual advice to aspirants who went to him in the evenings. Among them, this young man was one.

One day when the husband was away to a neighbouring village on some business, his wife paid a visit to the sadhu and complained to him about how her husband threatened her that he would run away from home , and become a sadhu. The sadhu advised her that when her husband next held out the threat, she should tell him to go away and do what he liked.

neem leaves

After some days the husband again had sharp differences with his wife and as was his vogue said that he would become a Sadhu and run away from home. The wife retorted that he might do as he pleased. The husband, in a huff, left home and went straight to the sadhu in the hut. The man told the sadhu that he had cut off all relationships with his home and the world and spend rest of his life in the service of the sadhu. The sadhu welcomed him and asked him to be seated.

Lunch time was approaching. The sadhu instructed one of his disciples to bring a good quantity of neem leaves. These leaves are very bitter. He was asked to grind them and make Laddus out of them. The disciple did not take much time to get the Laddus ready. The man who had quarrelled with his wife was closely watching the situation.

Neem-Tree (1)

Meanwhile the sadhu held a discourse on the efficacy of Neem (Margosa) leaves. He said for improving health and observing Brahmacharya (chastity) , neem leaves are most efficacious and added that he had decided to have for food on that day and the next day the diet of Laddus made of neem leaves. At the suggestion of the Guru, Laddus were at once served to the devotees who were present in the hut at that time. A big Laddu fell to the share of the irascible visitor. The visitor had no other go than to eat the Laddu with a wry face. The same food was served also in the evening, and the next morning. Before noon next day the visitor strangely disappeared and found himself at his home, as quiet and tame as one could be under the circumstances. From that time he neither quarrelled with his wife nor threatened her as he did before.
Story told by Swami Ramdas of Anandashram

வேப்ப மர மகிமை!!!

neem leaves

எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல;

ஆன்மீகக் கட்டுரை!!!

Compiled by london swaminathan

Post No.2248

 

Date: 16 October 2015

Time uploaded in London: 13-26

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Neem-Tree

ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் கணவன் மனைவி வசித்து வந்தனர். பொழுது விடிந்தால் சண்டைதான். மனைவி ஏதாவது பேசத் துவங்கினால் கணவன் சொல்லுவான்: “வாயை மூடு, இன்னும் ஒரு வார்த்தை பேசினால் நான் வீட்டைவிட்டு வெளியேறி சன்னியாசம் வாங்கிவிடுவேன்.” இதைக் கேட்டவுடன் அவளும் பயந்து வாயை மூடி விடுவாள்! பாவம் அந்தப் பதிவிரதை! ஒன்றும் செய்ய இயலாமல் விழித்தாள், முழித்தாள், தன்னையே பழித்தாள், நாட்களைக் கழித்தாள்!

ஒரு நாள் அவளுடைய கணவன் வெளியூர் வேலையாகப் போனார். அந்தப் பெண்மணியின் புத்தி வேலை செய்யத் துவங்கியது. தன்னுடைய கணவர் அடிக்கடி போய் தரிசித்துவரும் ஒரு துறவி கிராமத்துக்கு வெளியே ஒரு எளிமையான குடிலில் வசிப்பது அவளுக்குத் தெரியும். ஓடினாள், ஓடினாள், ஊரின் எல்லைக்கே ஓடினாள்!

குடிலில் வசிக்கும் குருநாதர் காலில் விழுந்தாள். சுவாமி! காப்பாற்றுங்கள். உங்களை வந்து தரிசித்துப் போகும் என் கணவர் காரணமே இல்லாமல் தினமும் கோபிக்கிறார். நியாயம் சொன்னால் சந்யாசம் வாங்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். நீங்கள்தான் வழி காட்டவேண்டும்” – என்றாள்.

குருநாதர் சொன்னார், “தாயே! அஞ்சற்க. அடுத்த முறை சந்நியாசி ஆவேன் என்று சொன்னால், “அன்பரே , போய்வாருங்கள். எனக்கு ஒன்றும் கவலை இல்லை” என்று சொல்லி கதவையும் திறந்து வெளியே அனுப்பிவிடுங்கள். என்னிடம் வரட்டும். அருள் மழை பொழிகிறேன் – என்றார்.

Neem-Tree (1)

மறு நாளும் வந்தது. சூரியன் உதிக்கத் தவறினாலும் தவறுவான். கணவன் சண்டைபோடத் தவறுவதில்லை! வழக்கமான பல்லவியை ஆரம்பித்தான். நீ ஏதேனும் சொன்னால் நான் வீட்டைவிட்டு வெளியேறுவேன். சந்யாசம் வாங்குவேன் – என்று மிரட்டினான்.

அவள் சொன்னாள், “ அன்பரே! போய் வாரும். உமக்கும் நல்லது, எமக்கும் நல்லது; எனக்கு இகலோக சௌக்கியம் கிட்டட்டும் உமக்கு பரலோக சாம்ராஜ்யம் கிடைக்கட்டும்” – என்று ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’– என்னும் பாணியில் சொல்லிவிட்டு வாசல் கதவையும் திறந்து வைத்தாள்.

அவன் ஆண் மகனல்லவா! வீராப்போடு வெளியேறினான். துறவியின் குடிலுக்கு வந்தான். “ஸ்வாமி! ஒரு நற்செய்தி. இன்று முதல் பந்த பாசங்களை வேரறுத்து விட்டேன். இனி எமக்கு எவ்வித உறவுமில்லை. வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம்; இனி உங்கள் பணியிலேயே வாழ்நாளைக் கழிக்கப் போகிறேன். குருவருள் இருந்தால் திருவருள் கிட்டுமன்றோ என்றான்.

குரு சொன்னார், “ வா மகனே! வா! உனக்காக இவ்வளவு நாளாகக் காத்திருந்தேன். என் காலடியில் அமர்க—என்றார்.

சற்று நேரத்தில், “சிஷ்யர்களே ஓடிவாருங்கள் ஞான திருஷ்டியில் கண்டுபிடித்த அற்புத உண்மையை நவில்வேன்! செவி மடுங்கள்!! என்றார். எல்லா சிஷ்யர்களும் வந்தனர். ஒரு சீடனை அழைத்து, சீடனே! வேப்பமரத்திலுள்ள எல்லா இலைகளையும் பறித்து வா. உதவிக்கு இன்னும் பலரை அழைத்துக் கொள் என்றார். அவனும் சிறிது நேரத்தில் வேப்ப மரத்தையே ஒடித்து வந்து நின்றான். அனைவரும் இந்த இலையை அரைத்து லட்டு போல உருட்டுங்கள் என்றார். எல்லோரும் வேப்பிலை லட்டு செய்தனர். இன்று முதல் நமது பிரதான உணவு இதுதான். இதனால் ஆரோக்கியம் பெருகும்; பிரம்மசர்ய சக்தி வளரும் என்றார். உடனே சிஷ்யர்கள், ஆளுக்கு பத்து, இருபது என்று வேப்பிலைக் கட்டிகளை – லட்டுகளை—பார்சல் கட்டிக் கொண்டனர். மனைவியை விட்டுப் புதிதாக வந்த சீடனும் அவ்வாறே செய்தான்.

காலை உணவு , மதிய உணவு, இரவு உணவு, மறு நாள் உணவு – என்று அல்லும் பகலும் அனவரதமும் வேப்பிலைக் கட்டி உணவுதான். திடீரென புது சிஷ்யன் மறைந்து விட்டார்! குருநாதர் ரகசியமாக ஒரு சீடனை உளவு பார்க்க அனுப்பினார். மனைவியை விட்டு ஆஸ்ரமத்துக்கு வந்த அந்த ஆசாமி, மீண்டும் வீட்டுக்கே திரும்பிப் போய்விட்டார் என்றும் வீட்டில் நல்ல சமையல் விருந்து மணம் வீசுகிறது என்றும் உளவாளி கண்டுபிடித்து வந்து குருநாதரிடம் சொன்னார்.

neem

திரும்பிவந்த கணவனுக்கு விருந்துச் சாப்பாடு. அவனும் வாய் திறக்கவில்லை. அந்த வீட்டில் அப்புறம் சண்டை சத்தமே இல்லை. வேப்பிலை ரகசியம் அந்த மனைவிக்கும் குருநாதருக்கும் மட்டுமே தெரியும்!

–சுபம்–

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 2

cuba-5

Compiled by S NAGARAJAN

Post No.2247

 

Date: 16 October 2015

Time uploaded in London: 7-48 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

அறிவியல் துளிகள்

பாக்யா 9-10-2015 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 242ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 2

First Part of this article was published yesterday in this blog.

.நாகராஜன்

, வருணரே! எங்களைப் பேரிடரிலிருந்து காப்பீராக!

                                          –  அதர்வண வேத பிரார்த்தனை

 

napoleon

நெப்போலியனின் ரஷியப் படையெடுப்பு

1812ஆம் ஆண்டு. நெப்போலியனின்  படை ஆறு லட்சம் போர் வீரர்களைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப் பெரும் படையாக உருவாகி இருந்தது. எதற்கும் அஞ்சாத போர் வீரர்கள்! ரஷியாவிற்குள் அஞ்சாமல் சென்றான் நெப்போலியன். குளிர்காலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் நெப்போலியனுக்குக் அது ஒரு கவலைப் படக் கூடிய விஷயமா, என்ன! அவனது தளரா நம்பிக்கைக்கு முன்னர் எதுவும் துச்சம் தான்! மாஸ்கோவைப் பிடிக்கும் ஆவலில் படை முன்னேறியது. நகர் சூறையாடப்பட்டது. போர்வீரர்கள் தம் மனைவிமாருக்குக் கொடுப்பதற்காக ஏராளமான நகைகளைக் கொள்ளை அடித்திருந்தனர். ஆனால் நெப்போலியன் அறியாத ஒரு சின்ன உண்மை, ரஷியாவின் குளிர் பயங்கரமான ஒன்று என்பது தான்! ரஷியாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் படை வெளியேறிய போது குளிர் மைனஸ் நாற்பது டிகிரி செல்ஸியஸ் என்ற உறைகுளிர் நிலையை அடைந்து விட்டது.மைனஸ் நாற்பது என்பது ஒரு அபூர்வமான உஷ்ணநிலை. மைனஸ் நாற்பது செல்ஸியஸும் மைனஸ் நாற்பது ஃபாரன்ஹீட்டும் ஒரே அளவு என்ற விசித்திர நிலை மைனஸ் நாற்பது டிகிரியில் ஏற்படுகிறது. வீரர்கள் பொத் பொத்தென்று விழுந்தனர்; இறந்தனர். ஒரு நாளில் மட்டும் 50000 வீரர்கள் இறந்தனர். ரஷியாவை நோக்கிச் சென்ற ஆறு லட்சம் படைவீரரில் மீண்டு வந்தவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தான்! மகத்தான இழப்பு!! வந்தவர்களும் நொண்டி நொண்டி வந்தனர். மாபெரும் தளகர்த்தனான நெப்போலியனின் வீழ்ச்சி ரஷியப் படையெடுப்பில் ஆரம்பித்தது. ரஷிய நாடானது அப்பொழுதிலிருந்து ஐரோப்பாவின் சக்தி மிகுந்த நாடாக வளர ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம் குளிர் தான்!

 

 Greek-Persian_duel

கிரேக்கர்பெர்ஸியர் போர்

பெர்ஸியா வலிமை வாய்ந்த நாடாக இருந்த சமயம். கிரீஸின் மீது அது தன் பார்வையைப் பதித்ததுஆனால் கிரேக்க படை தளகர்த்தனான தெமிஸ்டோக்ளஸ் ஒரு அபூர்வமான கால நிலை வல்லுநன். அவனுக்குக் கடல் காற்றின் வலிமை, அது எந்த திசையில் எப்படி அடிக்கும் என்பதெல்லாம் அத்துபடிகி.மு 480இல் போர் ஆரம்பித்தது. சலாமிஸ் என்ற இடத்தில் நடந்த கடும் போரில் காற்றைப் பற்றிய தன் அறிவால் அவன் வென்றான். கிரேக்க கலாசாரம் பிழைத்தது!

 

ஜப்பானை நோக்கிய குப்ளாய்கான்

13ஆம் நூற்றாண்டு. மங்கோலிய அரசனான குப்ளாய்கானின் பார்வை ஜப்பானின் மீது திரும்பியது. ஜப்பானின் மீது படையெடுத்துச் சென்ற அவன் தோல்வியுற்றான். காரணம் ஜப்பானில் அப்போது வீசிய புயல் காற்றோடு கூடிய பருவ மழையால்! இன்னொரு முறை படையெடுத்தான். அப்போதும் தோல்வி. அப்போதும் காரணம் புயல் காற்றுடன் வந்த பருவ மழை தான்ஜப்பானிய ஷிண்டோ குருமார்களுக்கோ ஒரே சந்தோஷம். அவர்களின் தீவிரமான பிரார்த்தனைக்கு வருணன் செவி சாய்த்து வெற்றி அருளி விட்டான் என்று. அந்தப் புயல் மழையை அவர்கள் காமிகேஸ் என்று அழைத்துக் கொண்டாடினர். காமிகேஸ் என்றால் தெய்வீகக் காற்று என்று பொருள்!

 kublai good

அடிமைகளின் புரட்சி தோல்வியில் முடிந்தது

1800ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி. ரிச்மாண்ட் என்ற இடத்தில் இருந்த ஆயிரக்கணக்கான அடிமைகள் தங்கள் எஜமானர்களை எதிர்த்து தீவிரமான புரட்சி ஒன்று நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அது மட்டும் நடந்திருந்தால் ஏராளமானோர் பலியாகி, வரலாறே மாறி இருக்கும். ஆனால் அடிமைகளின் துரதிர்ஷ்டம்அன்று ஒரு பெரும் மழையுடன் கூடிய புயல் வந்தது. புரட்சி தோல்வியுற்றது!

 

 

ஹிட்லரின் ரஷியயெடுப்பு

அசராத அசுரனான ஹிட்லரின் மின்னல் வேகப் படையெடுப்புக்கு சடசடவென நாடுகள் சுருண்டு வீழ்ந்தன. ராட்சஸனின் கண்கள் ரஷியா மீது பதிந்தன. 1941ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷிய படையெடுப்புக்கு நாள் குறித்தான் அவன். அந்தப் படையெடுப்பின் பெயர் ஆபரேஷன் டைபூன். ரஷியாவை அவன் படைகள் தாக்கின. படையெடுப்பில் வெற்றியோ நிச்சயம். ஆகவே ஜெர்மானிய வீரர்கள் ரஷிய ரெட் ஸ்குயரில் வெற்றி அணிவகுப்பின் போது அணிய வேண்டிய வெற்றி யூனிஃபார்மையும் எடுத்துச் சென்றனர். அவ்வளவு நம்பிக்கை. ஆனால் அது ரஷியாவின் கடுங் குளிர் காலம்வெற்றி சீருடையை மறக்காமல் எடுத்துச் சென்ற ஜெர்மனி வீரர்கள் மறந்தது குளிர்காலத்தில் போட வேண்டிய ஆடைகளைத் தான்! விளைவுமாஸ்கோவின் வெளிப்புறத்திலும் ஸ்டாலின்கிராடிலும் வீரர்கள் சுருண்டு செத்தனர். படையெடுப்பு பெரும் தோல்வியைத் தழுவியது. ஸ்டாலினும் ரஷிய மக்களும் மகிழ்ந்தனர். ரஷியாவின் குளிர் வரலாற்றைப் பல முறை மாற்றிய தெய்வீகக் குளிர்!

 hitler

மாயன் நாகரிக அழிவின் மர்மம்

மாயன் நாகரீகம் எப்படித் திடீரென மறைந்தது என்பது பற்றி வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரே திகைப்பு. ஆனால் அதை ஆராய்ந்த கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லாமண்ட் டோஹெர்டி ஆப்ஸர்வேடரி அண்ட் தி நாஸா காடண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் ஸ்டடீஸில், உலக காலநிலை மாதிரிகளை அமைத்து ஆராயும் பேராசிரியர் பெஞ்சமின் குக் என்பவர் மாயன் நாகரிகம் அழிவதற்குக் காரணம் அவர்களே எனத் திட்ட வட்டமாகத் தெரிவிக்கிறார்.

திடீரென ஏற்பட்ட பஞ்சத்தால் லட்சக்கணக்கில் மக்கள் அழிந்து பட்டனர். ஆனால் இந்த திடீர் பஞ்சம் இயற்கையினால் ஏற்பட்ட சாபம் அல்ல; அவர்கள் காடுகளை அபரிமிதமாக அழித்ததினாலேயே பஞ்சம் ஏற்பட்டது என்கிறார்.

ஆக காலநிலை மாறுதல்களால் உலகின் வரலாறும் வரைபடமும் மாறிக் கொண்டே இருக்கிறது. போர்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வீரமும் புத்திசாலித்தனமும் மட்டுமல்ல. காலநிலையும் கூட என்பதை வரலாறு தெரிவிக்கிறது.

இயற்கையான காலநிலை மாறுபாடுடன் மனிதன் இன்றைய உலகில் எல்லா நாடுகளிலும் காடுகளை வெகு வேகமாக அழித்து வருகிறான்.

மக்களுக்கு காடுகளின் முக்கியத்துவம் தெரியவே இல்லை என்பது விஞ்ஞானிகளின் புலம்பலாக மாறி விட்டது.

தன்னைத் தன்னைத் தானே அழித்துக் கொள்ளலாமா என விஞ்ஞானிகளில் பலர் வெளிப்படையாக மனித குல அழிவு பற்றி வேதனை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

காலநிலை மாறுதல்கள் பற்றிய செய்திகளை அறிந்தால் இயற்கையை இன்னும் அருமையாகப் பாதுகாக்க மனம் வரும், இல்லையா!

 Mayan-Calendar

 

 அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரபல விஞ்ஞானி. தாமஸ் ஆல்வா எடிஸன் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு.

நான் இரண்டு முறை வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் என்று ஒருமுறை அவர் கூறினார்.

விவரத்தையும் அவரே கூறினார் இப்படி: முதலில் ஒரு ஆபீஸில் நான் டெலிபோன் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த மெஷினிடம் எனக்கு மிகவும் ஈடுபாடு வந்து விடவே அதையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால், வந்த செய்திகளை அனுப்புவதற்கு மறந்து விட்டேன். அவ்வளவு தான், என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.

எடிஸன் சிரித்தவாறே தொடர்ந்தார்:—“இன்னொரு ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்தேன். பழைய கால கட்டிடம் அது. எங்கு பார்த்தாலும் எலிகள். அவற்றின் அட்டகாசம் என்னால் பொறுக்க முடியாத அளவிற்குப் போனது. ஈக்களை அடித்துக் கொல்வது போல எலிகளைக் கொல்ல ஒரு சாதனத்தைக் கண்டு பிடித்தேன்.

edison

அவ்வளவு தான், அறை முழுவதும் கொலையுண்ட எலிகளின் துண்டுகள் சிதறிக் கிடந்தன. அறையைப் பார்த்தவர்கள் உடனே என்னை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

எப்போதும், எதனாலும் மனம் தளராதவர் எடிஸன்!

***************

A Saint is all Forgiveness !

eknatha

Compiled by London swaminathan

Post No.2246

 

Date: 15 October 2015

Time uploaded in London: 18-40

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Eknath was a great saint of Maharashtra. He lived in Paithan. He was married and had a wife and a son. He had gained fame for his extremely patient and forgiving nature. He was kindness, mercy and peace personified.

Once it happened a poor Brahmin who wanted to give his daughter in marriage was wandering from place to place for getting monetary help from wealthy people. He came to Paithan and went to a rich man of the place. The rich man had no respect for saints. He had heard that saint Eknath never got angry. He was on the lookout for an occasion to make him angry and falsify the report about his patient and forgiving nature.

He told the poor Brahmin, “Go to Saint Eknath and provoke him to anger. If you do so I will gladly give you Rs 200 for the marriage expenses|. The avaricious Brahmin undertook to fulfil the wish of the rich man and directly proceeded to the saint’s house. When he approached the saints house he found the saint seated on the veranda chanting god’s name. The Brahmin, as he ascended the steps of the house, started abusing the Saint. The Saint was unperturbed. He led the Brahmin guest inside the house and giving him a proper seat, asked him what he wanted.

The Brahmin without giving him any reply continued to hurl abusive epithets at the Saint. The time was nearing for the midday meal. So the Saint requested the Brahmin to have his bath and partake of the humble meal which was being prepared for him. Eknath’s wife was his ideal partner. She was also very devout and good natured. Eknath took the guest to the bathroom and gave him a clean wash and brought him to the dining room for taking food.

ekanatha2

The Brahmin had tried his best to provoke the Saint to anger but so far he had failed completely. When he and the Saint sat for meals, a new thought struck the Brahmin. He got up from the seat and, as the saint’s wife was bending to serve food, sat on her back as on horse-back. Now, he fully expected the Saint would fly into temper. On the contrary, calmly looking on the scene, he warned his wife not to stand erect lest the honoured guest should topple down. Then his wife replied

Certainly I shall see to it that the Brahmin does not fall down. I know how I balanced our son when he used to climb on my back.

When the Brahmin heard the conversation between the Saint and his wife, he was stung with remorse. He got down from her back and, falling prostrate before both of them, sobbing with grief, prayed for their forgiveness.

Saints are so kind and gracious that they do not recognise any harm or insult from anybody. The Saint assured the Brahmin that he had done nothing wrong. They somehow persuaded him to take his food.

After the meals, when they sat together, saint asked the Brahmin why he had been so highly disturbed. Now the Brahmin told the entire story how a rich man had promised him to give him a sum of Rs 200 provided he provoked Eknath to anger. But fool as he was trying to make the Saint angry by use of a buses against him once more he fell at the feet of the Saint and sought pardon for his bad behaviour.

Eknatha FDC

Then the Saint with great love and compassion, said, “O, If you had only told me earlier, I would have got angry so that you might get the generous gift from the rich man”.

Swami Ramdas of Anandhashram in Kerala told this story.

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 1

here on arth

Compiled by S NAGARAJAN

Post No.2245

 

Date: 15 October 2015

Time uploaded in London: காலை 8-54

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

அறிவியல் துளிகள்

பாக்யா 2-10-2015 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 241ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 1

.நாகராஜன்

எல்லோரும் சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டாலும் கூட இரண்டு விஷயங்களைப் பற்றித் தான் நிச்சயமாக எதையும் சொல்ல முடியவில்லை. காதலும், காலநிலையும் தான் அந்த இரண்டு விஷயங்கள்!  

 

 –  ஆலிஸ் ஹாஃப்மேன் (பிரபல பெண் எழுத்தாளர் ‘Here on Earth’ என்ற நாவலில்)

காலநிலை மாறுபாடு என்பது சாதாரண விஷயமில்லை. மனிதகுல வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெரும் புயல்கள், சுனாமி, தீவிரமான பருவமழை போன்றவை பல நாடுகளின் சரித்திரப் போக்கையே அதிரடியாக மாற்றியுள்ளன. ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தது முதல் நெப்போலியனின் குதிரைப்படை அழிந்தது வரை பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பித்தது முதல் ஜார்ஜ் வாஷிங்டன் அதிர்ஷ்டவசமாக தோல்வி அடையாமல் இருந்தது வரை காலநிலையை மட்டுமே வரலாறு காரணமாகக் குறிப்பிடுகிறது.

காலநிலை மாறுபாடு பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறும் சரித்திரப் போக்கின் மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பார்க்கலாம்.

 

பன்னிரெண்டாம் சார்லஸின் ரஷ்யப் படையெடுப்பு  

1709ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் சார்லஸ் ரஷியாவின் மீது படையெடுத்தார். ஐரோப்பாவிலிருந்து ரஷியா மீது படையெடுத்த முதல் ஆள் இவர் தான்! அதுவும் ரஷியாவின் கடுங்குளிர் காலத்தில் தன் படைவீரர்களை மரணத்தை நோக்கி நடை போட வைத்தார் இவர். ஸ்வீடன் தேசத்துப் படைகளுக்கு ரஷிய குளிர் என்றால் என்ன என்று புரிந்தது. ஏராளமானோர் மடிந்து விழ  ரஷிய மன்னர் முதலாம் ஜார் பீட்டர் வெற்றி வாகை சூடினார்.

 wasshingtom

ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில் ஒரு அதிசயம்!

அமெரிக்க ராணுவத்திற்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமைப் பொறுப்பை ஏற்ற போது அவரது படைவீரர்களுக்கு யூனிஃபார்மே கிடையாது. அவர்களிடம் ஆயுதமும் கிடையாது. தன்னார்வத் தொண்டர்கள் அவர்கள். ஆனால் அவர்களை எதிர்த்த பிரிட்டிஷ் ராணுவமோ அசுர பலம் பொருந்திய ஒன்று. ஏராளமான ஆயுதங்கள். அவர்களை ஜெயிப்பது நிச்சயமாக முடியாத ஒன்று. 1776ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி லாங் ஐலேண்டில் பிரம்மாண்டமான போர் ஒன்று நடக்க இருந்தது. போர் மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்குமானால் அமெரிக்கா மண்ணைக் கவ்வுவது நிச்சயம். ஆனால் என்ன ஆச்சரியம். திடீரென்று கடும் பனிப் போர்வை ஒன்று தோன்றியது. பிரிட்டிஷ் வீரர்கள் திகைத்தனர். எதுவுமே கண்ணுக்குத் தெரியாத நிலையில் யாருடன் எங்கு சண்டை போடுவது. அவர்கள் பின் வாங்கிச் சென்றனர். சரித்திரம் காலநிலை மாறுபாடு காரணமாக அமெரிக்காவை வாழ வைத்தது. அந்தப் பனியை திடீரென்று உருவாக்கியவர் யார்?இயற்கையா, கடவுளா?

 11-old-french-postage-stamp-howard-hershon

பிரெஞ்சு புரட்சி எப்படி உருவானது?

பிரான்ஸ் நாட்டில் பொருளாதாரம் பயங்கரமான வீழ்ச்சியைக் கண்ட காலம் அது! அமெரிக்கர்கள் பிரிட்டிஷாருடன் போர் புரிந்த சமயமும் அது தான்! ஏகப்பட்ட கடன் சுமை! பிரான்ஸில் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்தது. கடைசி மரண அடியாக ஒரு பெரும் புயல் வந்தது. நாடு முழுவதும் இருந்த பயிர்களை அது நாசப் படுத்தியது. கொஞ்ச நஞ்சமிருந்த பயிர்களும் காலி; அவர்களின் நம்பிக்கையும் காலி! ஒட்டு மொத்த ஜனங்களும் கிளர்ந்தெழுந்தனர். வெடித்தது பிரெஞ்சுப் புரட்சி. இதைத் தொடர்ந்து உலகில் ஏற்பட்ட மாறுதல்களை அனைவரும் அறிவர். அந்த கடைசிப் புயலை உருவாக்கி உலகத்தையே மாறுதலை அடையச் செய்தது எது? காலசக்தியா???!!!

 nuclear stamp

ஹிரோஷிமா மீது விழுந்த அணுகுண்டு!

நல்ல கோடைக்காலம். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரம் வழக்கம்போல இயல்பான வாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. காலை மணி 7.09 

ஹிரோஷிமா மீது பறந்த விமானம் ஒன்று செய்தி ஒன்றை பரிபாஷையில் அனுப்பியது. அதன் உண்மையான அர்த்தம் இது தான்:- பத்தில் மூன்று பகுதிக்கும் குறைவாகத் தான் மேகம் இருக்கிறது. குண்டைப் போட்டு விடலாம்!

அதாவது குண்டு போட சரியான காலநிலை உள்ளது. போட்டு விடலாமா என உத்தரவு கேட்கப்பட்டது. போடலாம் என்று பதில் வந்தவுடன் ஹிரோஷிமாவின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது. அதன் மீது அணுகுண்டு போடப்பட்டு உலக வரலாற்றின் ஒரு கோரமான நாடகம் அரங்கேற்றப்பட்டது. அடுத்து ஆகஸ்ட் 8ஆம் தேதி. கோகுரா என்ற ஜப்பானிய நகர் மீது குண்டு போட அமெரிக்க விமானம் பறந்தது.ஆனால் அந்த நகரின் மீது குண்டு போட முடியாதபடி மேகமூட்டம் இலக்கை மறைத்து விட்டிருந்தது. விமானம் மாற்று இலக்கான நாகசாகி நோக்கி பறந்தது. காலநிலையால் கோகுரா பிழைத்தது!

இன்னும் சில மாறுதல்களை அடுத்த வாரம் பார்க்கலாம்!

kelvin

அறிவியல் அறிஞர் வாழ்வில்

லார்ட் கெல்வின் பெரிய விஞ்ஞானி. அவர் பெயரால் தெர்மாமீட்டரில் கெல்வின் என்ற உஷ்ணநிலை அளவீடே குறிக்கப்படுகிறது.

ஒரு நாள் அவர் ஒரு மின் உற்பத்தி நிலையத்திற்கு திடீரெனச் சென்றார். தன்னை யார் என்று அவர் சொல்லிக் கொள்ளவில்லை. ஒரு ஃபோர்மன் அவரை அழைத்துக் கொண்டு சென்று அந்த நிலையம் முழுவதும் சுற்றிக் காண்பித்தார். ஒவ்வொரு இடமாக நன்கு விளக்கியதோடு மின்சாரம் பற்றிய அனைத்தையும் எடுத்துரைத்தார்.

மின் நிலையம் முழுவதும் சுற்றிப் பார்த்து விட்ட நிலையில் விடை பெறும் நிலையில் இருந்த கெல்வின் ஃபோர்மனை இறுதியாக ஒரு கேள்வி கேட்டார்: அது சரி, அப்படியானால் மின்சாரம் என்றால் என்ன?”

இது வரை விளக்கி வந்த ஃபோர்மன் வாயடைத்துத் திகைத்துப் போய் நின்றார்.

அன்புடன் அவரை நோக்கிய கெல்வின், “பரவாயில்லை, அந்த ஒன்று தான் உங்களுக்கும் எனக்கும் தெரியாது!” என்று சொல்லியவாறே அங்கிருந்து நகர்ந்தார்.

பின்னர் தான் ஃபோர்மனுக்கு வந்தவர் லார்ட் கெல்வின் என்பது தெரிய வந்தது.

************

2.Herbs, Trees, Flowers in Sanskrit Literature – Part 2

850_Lotus

Compiled by London swaminathan

Post No.2244

Date: 14 October 2015

Time uploaded in London: 19-22

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

download

1.Cupid’s Five Flower Arrows

Aravinda – Red Lotus

Asoka – Asoka flower (saraca asoka)

Cuutam – Mango Flowers

Navamallikaa – Jasmine Flowers

Niilotpala – Blue Lotus or Lily

Aravindamasokamcha chuutancha navamallikaa

Niilotpalamcha panchaite panchabaanasya  saayakaa:

–Amarakosa 1-1-27

xxx

Sita-Ashok_(Saraca_as

2.Pancha pallavam (Five Leaves) used for Puja

Jack fruite tree leaves

Amra/ Mango leaves

Asvattha/Pipal leaves

Vata/Banyan leaves

Bakula/Mimusops elengi leaves

Panasaamra tathaasvattham vatam bakulameva cha

Panchapallavamuktam cha munibhis tantra vedibhi:

—Sabda kalpa druma, 3-9

Xxx

852_Kadamba

3.Five Fragrant leaves

Amra- mango leaves

Jambu-rose apple

Kapittha- wood apple

Biijapuura- Guava

Bilva – Vilva (wood apple variety)

Amra jambu kapitthaanaam biijapuurabilvayo:

Gandhakarmani sarvatra  patraani pancha pallavam

Xxx

851_Rhododendron

4.Panchamuula (Five Roots)

Hrasva

Prsniparnii, Saalaparnii, Kantakaarikaa, Brhatii, Goksuraka

Jiivana

Sataavarii, Kaakolii, Jiivantii, Jiivaka, Rsabaka

Xxx

1142_Rose_Sugandha

5.Panchavati (Five Trees or Five trees at Panchavatii)

Asvattha/Pipal leaves

Vata/Banyan leaves

Bilva – Vilva (wood apple variety)

Dhaatrii = Myrobalan

Asoka – Saraca asoka

Asvatthabilva vrksancha vatadaatrii asokakam

Vatii panchamiyuktam (Sabda kalpa druma 3-14)

Xxx

1993-Pride_of_India_Tr

6.Five Flowers for Puja

Campaka, Amra, Samii, Padma, Karaviira.

Champakaamrasamii Padma karaviiram  cha panchakam

–Subham–

16 வயதினிலே!

donkey1

Compiled by London swaminathan

Post No.2243

Date: 14 October 2015

Time uploaded in London: 10-40 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

1.ந உலூக அபி அவலோகதே யதி திவா சூர்யஸ்ய கிம் தூஷணம்? (பர்த்ருஹரி)

ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது; இது சூரியனுக்கு என்ன குறை?

Xxx

2.பத்ரம் நைவ யதா கரீர்விடபே தோஷோ வசந்தஸ்ய கிம்? (பர்த்ருஹரி)

கரீல செடியில் (துளசி) இலை இல்லாததற்கு வசந்த காலம் என்ன செய்யும்?

Xxx

3.ப்ராணீ ப்ராப்ய ருஜா புனர்ன சயனம் சீக்ரம் ஸ்வயம் முஞ்சதி –ஸ்வப்னவாசவதத்தம்

நோயாளி தானாகவே படுக்கையைவிட்டு உடனடியாக எழுவதில்லை

Xxx

donkey2

4.ப்ராப்தே து ஷோடஸே வர்ஷே கர்தபீ சாப்யப்சராயதே.

16 வயது வந்துவிட்டால் கழுதைகூட அப்சரஸ் (தேவ லோக அழகி) போலத் தோன்றும்!

Xxx

5.மலயேபி ஸ்திதோ வேணு: வேணுரேவ ந சந்தனம்

மூங்கிலானது மலய பர்வதத்தில் வளர்ந்ததால் சந்தனம் ஆகிவிடாது.

Xxx

6.ப்ரம்மசர்யேன தபஸா ராஜா ராஷ்ட்ரம் விரக்ஷதி – அதர்வ வேதம்

பிரம்மசர்யரூப தவத்தினால் அரசன் ஆனவன் நாட்டைக் காப்பாற்றுகிறான்

Xxx

7.மனுர் பவ, ஜனயா தைவ்யம் ஜனம் – ரிக்வேதம்

மனிதனாக இரு; தெய்வீகமான குழந்தைகளைப் பெறு

Xxx

crow nest2

8.ப்ரசாதசிகரஸ்தோபி காக: கிம் கருடாயதே (சாணக்ய நீதி தர்பணம், பஞ்சதந்திரம்)

அரண்மனையின் உச்சியில் உட்கார்ந்தால், காக்கை என்ன கருடன் ஆகிவிடுமா?

ஒப்பிடுக: கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாசி சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி – அவ்வையாரின் மூதுரை.

Xxx

9.மலயே பில்லபுரந்த்ரீ சந்தனதருமிந்தனம் குருதே – சு.ர.பா.

மலய பர்வத ப்ரதேசத்தில் மலைஜாதிப் பெண்கள், சந்தன மரத்தை விறகாகப் பயன்படுத்துவர்

crow nest

Xxx

10.முண்டே முண்டே மதிர் பின்னா

ஒவ்வொருவர் தலையிலும் ஒவ்வொரு எண்ணம் (புத்தி)

ஒப்பிடுக (இந்தி)

அப்னா அப்னா டங் ஹை

அப்னீ அப்னீ சமக்ஞா ஹை

Xxx

11.யௌவனம் தன சம்பத்தி: ப்ரபுத்வமவிவேகதா

ஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் – ஹிதோபதேச

இளமை, அதிகாரம், செல்வம், விவேகமில்லாத போக்கு – இந்த நான்கில் ஒன்று இருந்தாலே கெடுதல் ஏற்படும். நாலும் சேர்ந்து இருந்தால் என்ன கதியோ!!

Xxx

12.ரிக்த: சர்வோ பவதி ஹி லகு: பூர்ணதா கௌரவாய – மேகதூதம்

வெற்றிடமாக உள்ள ஒரு பொருளுக்கு எடை இராது;

பூரணமாக இருந்தால் அதற்கு எடை இருக்கும்

ஒப்பிடுக: குறைகுடம் கூத்தாடும் (தழும்பும்) நிறைகுடம்

தழும்பாது.

பெரியார் அடக்கமாக இருப்பர். அரைவேக்காடுகள் ஆர்ப்பரிக்கும்!!

–Subham–

இறைவன் ஏமாந்தான்!

siva, jabalpur

திருவாசக சுகம்

இறைவன் ஏமாந்தான்! சதுரன் யார்? மணிவாசகரின் ஹஹ்ஹா!

 

Written by S Nagarajan

Post No.2242

Date: 14 October 2015

Time uploaded in London:  7-47 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog it at least for a week.

 

.நாகராஜன்

 

தன் பெண் ஒருவனைக் காதலிப்பதை அறிந்த தாய் ஒருத்தி பதறிப் போனாள். தன் கணவருக்கு மட்டும் அது தெரிந்தால் ..?

ஆனால் பெண் அம்மாவிடம் தீர்க்கமாகப் பேசினாள். அந்தப் பையன் நல்லவன், சாமர்த்தியமானவன் என்றும் மணந்தால் அவனையே மணப்பேன் என்றும் உறுதிபடக் கூறியதோடு அப்பாவிடம் நல்ல விதமாக எடுத்துச் சொல்ல தூதும் அனுப்பினாள்.

விஷயத்தைக் கேட்ட தந்தை திகைத்துப் போனார். சரி, பையனை வந்து என்னை பார்க்கச் சொல் என்றார்.

பையனும் வந்து பவ்யமாக நின்றான்.

 

 

காதலிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். படிக்கின்ற வயது. நல்ல காலேஜில் இடம் கிடைக்க வழி செய்ய வேண்டும். அங்கு கேட்கப்படும் நிறைய ஃபீஸைத் தர வேண்டும். இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

தந்தை தொடர்ந்தார்: படிப்பு முடிந்தவுடன் நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும்? எப்படிக் கிடைக்கும்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

 

 

அது சரி, கல்யாண செலவு வேறு நிறைய ஆகும். பின்னர் குடும்பம் என்று வந்தால் குழந்தை குட்டி என்று வேறு செலவு இருக்கும். ஒரு வீடு, கார் எல்லாம் வாங்க வேண்டாமா? அதற்கு என்ன செய்யப் போகிறாய்?”

பையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்

பையனை அனுப்பி விட்டார் தந்தை. அதுவரை தள்ளி இருந்த தாய் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளூம் ஆவலுடன் ஓடி வந்தாள். “எப்படிங்க பையன்?”

என்றாள்.

நிறைய கேள்வி கேட்டேன். நல்லாத் தான் பதில் சொல்றான். ஆனால் என்னைக் கடவுளா நினைக்கிறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு!” என்றார் தந்தை!

*

 

 IMG_6892 (2)

படம்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

எப்போதுமே வணிக பேரத்தில் சாமர்த்தியமாக ஈடுபட்டுநரியைப் பரியாக்கிய புகழ்மணி வாசகர் இப்போது கடவுளிடமே தன் பேரத்தைக் காட்டி விட்டார்.

ஒன்று கொடுத்தார்; ஒன்றை வாங்கினார்.

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை!”

இப்போது அவருடைய சாமர்த்தியம் வெளிப்படுகிறது. இதில் திறமைசாலி யார்?

யார் கொலோ சதுரர்?

எனக்குக் கிடைத்ததோ Never ending Bliss – அந்தம் ஒன்றில்லா ஆனந்தம்!

உனக்கு என்ன கிடைத்தது, என்னிடம்?

 

 

நானோ பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன். எனக்கு செம்மையே ஆய சிவபதம் அல்லவா அளித்து விட்டாய்!

நம்மில் யார் சதுரன்? உன்னைப் பிடித்த பிடி விட மாட்டேன். சிக்கெனப் பிடித்து விட்டேன்!

கோயில் திருப்பதிகம் பாடலைப் பாருங்கள்:

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை

சங்கரா ஆர் கொலோ சதுரர்?

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என்பால்?!

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறை சிவனே!

எந்தையே ஈசா! உடலிடம் கொண்டாய்

யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!

*

 

 siva head

தந்தையிடம் பேசிய பையனை எடுத்துக் கொள்வோம், யார் சதுரர்? தந்தையா, பையனா?

இங்கே மணிவாசகரா, சிவபிரானா!

இப்படிப்பட்ட நிகழ்வுகள், பேரங்கள்,(டீல்) எப்படி நடைபெறுகின்றன?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிஎன்பது தான் பதில்!

எதற்கும் அவன் அருள் இருக்க வேண்டும். அப்போது தான் அவனுடைய நினைவை ஊட்டும் இந்தக் கட்டுரை கூட உங்கள் பார்வையில் படும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

சிவாய நம் என்றிருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை!

–சுபம்–

Five Divine Trees and Five Important Grasses!

861-Flame-of-the-For

Compiled by London swaminathan

Post No.2241

Date: 13 October 2015

Time uploaded in London: 17-53

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Herbs, Trees, Creepers, Flowers in Sanskrit Literature – Part 1

1.Five Devapaadapa = Five Divine Trees

Trees are called ‘paadapa’ in Sanskrit = eating with/by foot; they take their food through their feet i.e.roots!

Mandaara

Paarijaata

Santaana

Haricandana

Kalpavrksa

Panchaite devataravo mandaara: paarijaataka:

Santaana: kalpavrkshascha pumsi vaa harichandanam

–Amarakosa 1-50

xxx

sandalwood

2.Fragrances

Kasturi = musk (animal product; not from plants)

Candana – a variety of sandal wood tree

Karpura = camphor (extracted from plant)

Agaru = aloewood tree

Malayaagaru = Candana from Malaya Hills

Kastuuricandanam chandramagaru dvitiiyam tathaa

Panchagandha samaakyaatam sarvakaaryeshu sobhanam

These five plants add beauty and colour to any event.

Xxx

862-Crateva-Indian-Flowering-Tre

3.Guduucii Pancakam

Guduucii

Padmaka

Arista

Dhaanakaa

Rakta candana

Group of these five plants is helpful in the subjugation of fever, vomiting, burning sensation, thirst and improves digestion.

Guduuciipadmakaarishtadhaanakaararaktacandanam

Pittasloshmajvarachardidaahatrushnaadhvamagnikrut

–ashtaanga nighandu -66

xxx

864-Bauhinia-

4.Trnapanchamuula = Five (Important) Grasses

Kusa

Kaasa

Nala

Darbha

Kaandeksu

Kusakaasanaladarbhakaandekshukaa iti trunasamknaka:

–Susruta Sutra 38-75

xxx

5.Aamalapanchaka = Five varieties of Aamala (sour) Fruits

Kola = jujube

Daadima =Pomegranate

Vrsaamla = Tamarind (imli)

Cullikaa

Cukrikaa = wood soorel

Kola dadima vrkshaamlachullikaa chukrikaarasa:

Panchaamlakam samudhdhishtam tacchoktam  cha aamla panchakam — Rasa ratna samuchaya

Xxx

1272_Trees_Pipal

6.Kasaaya = medicinal decoction

Sami

Udumbara

Asvatta

Nyagrodha

Palaasa

Samyudumbara masvattam nyagrodham cha palaasakam

Yajnam yajne vimantreens dadhyaath pancha kashaayikam –Saptakalpadruma

Xxx

1549_Yellow_Silk_Tree

7.Thorny plants

Karamardi;  Trikantaka; Saireyaka; Sataavari; Grdranakhi

–Susruta Sutra 38-73

xxx

Source: compiled from the Encyclopaedia of Numerals –Volume 1; The Kuppuswami research Institute, Chennai; 2011

–Subham–