மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -10

Kaliya-Mardana-

Article Written by S NAGARAJAN

Date: 4 November 2015

Post No:2298

Time uploaded in London :–  8-35 AM

(Thanks  for the pictures) 

பாரதி இயல்

ச.நாகராஜன்

கண்ணன் என் கவி

பாரதி இயலில் பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு புத்தகம் கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோர் எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற புத்தகம். இந்த நூலை மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதியது ஒரு சிறப்பு அம்சம் என்றால் இதில் பாரதியார் உலக மகாகவியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு அம்சம்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம் பாரதியார் எப்படி மிகப் பெரும் கவியாக அங்கீகரிக்கப்பட்டார், அதற்கு பாரதி ஆர்வலர்கள் ஆரம்ப காலத்தில் எப்படி மகத்தான முயற்சிகளை எடுத்தனர் என்பதைச் சுட்டிக் காட்டும் மிக முக்கியமான நூலும் இது தான்.

சுமார் 195 பக்கங்கள் உள்ள இந்த நூல் முதலில் 1937இல் வெளிவந்தது. நல்ல வேளையாக 2007இல் இது மீளவும் பதிப்பிக்கப்பட்டது.

நூலின் பின்னணி குறித்து 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள நூல் விவரிக்கிறது:

.ரா.வின் கடிதம்

அதில் சில பகுதிகள்:

“1935 டிசம்பர் மாதம். சென்னையில் மணிக்கொடிக் காரியாலயத்தில் தங்கி இருந்த சமயம். இரவில் ராமையா, கி.ரா. புதுமைப்பித்தன், ஆர்யா, சிட்டி ஆகியோரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். சிட்டி ஒரு கடிதத்தை எடுத்துப் படித்தார். வ.ரா.வின் கடிதம்.இலங்கையிலிருந்து எழுதி இருந்தார். “வீரகேசரி” ஆசிரியராக அப்போது அங்கே இருந்தார். பத்திரிகையில் ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி)யும் தானும் எழுதிக் கொண்ட பகிரங்க கடிதப் போக்குவரத்தைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.

1936 இல் தினமணி பத்திரிகை, ‘பாரதி மலர்’ என்று ஒரு அநுபந்தம் வெளியிட்டிருந்தது. அதில் முதல் கட்டுரை ‘நெல்லை நேசன்’ என்ற புனை பெயரால் பி.ஶ்ரீ. ஆசார்யா எழுதிய ‘வீர முரசு’ என்பது. அதில் கண்டிருந்த இரண்டு விஷயங்கள் பற்றித் தான் விவகாரம். ஒன்று, பாரதியை தேசபக்திக் கவி என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம், அல்லவா? என்பது. இரண்டாவது பாரதி ஒரு நல்ல கவி. மகா கவி அல்லர் என்பது.

kalki stamp

கல்கியின் விமரிசனம்

நெல்லை நேசனின் கட்டுரையைப் படித்த ஒருவர் ஆனந்த விகடனுக்குக் கடிதம் எழுத, அதில் ஆசிரியர் குறிப்பாக கல்கி தன் பங்கிற்கு இப்படி எழுதி இருந்தார்:

“ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் தாகூரையும் காட்டிலும் பாரதியார் உயர்ந்தவர். அவர்களது கவிதைகள் எல்லாம் சேர்ந்து பாரதியாரின் ஒரு வரிக்கு ஈடாகாது” என்று யாராவது வெளியிட்டிருந்தால் (இப்படி எழுதியவர் வ.ரா. அவரைக் கல்கி தாக்கும் வகையில் இப்படி எழுதி இருந்தார்.) அவருக்கு இலக்கியம், கவிதை ஆகியவற்றைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது வெளிப்படை. அவர் நிரக்ஷரகுக்ஷி (எழுத்து வாசனை இல்லாதவர்) என்று சந்தேகிப்பதற்கு இடம் உண்டு. அவர் ஷெல்லியையும் தாகூரையும் படித்திருப்பார் என்பது நம்பத்தக்கதல்ல. ஒரு வேளை படித்திருந்தாலும் ஒரு வரி கூட அர்த்தமாகாமலே படித்திருக்க வேண்டும். அவர் பாரதியின் கவிதையைப் படித்து ரசித்தார் என்பதும் சந்தேகத்துக்கு இடமாகும். தேசாபிமானமும் பாஷாபிமானமும் பகுத்தறிவை மறைத்து விட இடம் கொடுக்காது. பாரதியை ஷெல்லியுடன் ஒப்பிடலாம். ஆனால் ஷேக்ஸ்பியருடனும் தாகூருடனும் ஒப்பிடுதல் கூட சரியல்ல. வால்மீகி, திருவள்வக்ளுவர், காளிதாசர், கம்பர், ஷேக்ஸ்பியர், தாகூர் ஆகியவர்கள் நீண்ட காலத்துக்கு ஒரு முறையே தோன்றி உலகத்துக்கே பொதுவாய் விளங்கும் கவிகள். ஷெல்லி, பாரதி போன்றவர்கள் அந்தந்த தேசத்திற்கே சிறப்பாக உரியவர்கள். இலக்கிய ஆராய்ச்சியும் கவிதை உணர்வும் சொற்ப அளவில் உள்ளவர்களுக்குக் கூட இவ்விஷயத்தில் சந்தேகம் ஏற்படக் காரணம் இல்லை.”

கல்கியின் மேற்படி குறிப்புக்கு வ.ரா. சுதேசமித்திரன் பத்திரிகையில் விரிவாக எதிர் பதில் எழுதினார்.

இப்படிப்பட்ட சூடான கவிதா விமரிசனப் போட்டியைத் தொடர்ந்து பாரதியாரின் இடத்தை உலக மகாகவிகளுள் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமும் காலத்தின் கட்டாயமும் ஏற்பட்டது.

அதன் விளைவாக எழுந்ததே இந்த கண்ணன் என் கவி என்ற நூல்.

globe stamp

பாரதியாரின் உலக பரிமாணம்

ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர் ஆகியோரின் கவிதைகளை எடுத்து அலசி ஆராய்ந்து பாரதியாரின் கவிதைகளையும் ஒப்பிட்டு இந்த நூல் எழுந்தது.

பல்வேறு ஒப்பீடுகளில் நூல் குறிப்பிடும் ஒரு ஒப்பீடு இது:

“ஷெல்லி, பைரன் முதலியவர்களைப் போல ஜெர்மனியில் கதேக்குப் பிறகு தோன்றிய ஹென்ரிக் ஹைன் என்ற சிறந்த சுதந்திரக் கவிஞர் தமது அபாரமான கவிதா திறமையைக் காட்டி தம் நாட்டாருக்குச் சில ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு உபயோகித்தார். சமீப காலத்தில் ஹைன் திறமைக்கு இணையான கவிஞன் ஜெர்மனியில் தோன்றியதில்லை. ஜெர்மானிய இலக்கியத்தில் மிகவும் எளிதான செய்யுள் முறையையே ஹைன் பெரும்பாலும் உபயோகித்தார். இந்த முறையை மிகவும் லகுவாய் கையாண்டு இதன் மூலம் மகத்தான உணர்ச்சிகளை வெளியிட்டார். பாரதியார் பழைய யாப்பு முறைகளைப் புறக்கணித்து தைரியமாய் எளிதான புது முறையில் பிரம்மாண்டமான கருத்துக்களை அமைத்தது இங்கே குறிப்பிடத்தகுந்தது. பாரதி சொந்த இடத்தை விட்டு பிரெஞ்சு நிலமாகிய புதுவையில் வசிக்க நேரிட்டது, ஹைன் பல வருஷங்களுக்கு முன்னால் தன்னுடைய சுதந்திர மனப்பான்மையின் பயனாகத் தன் சொந்த நாடாகிய ஜெர்மனியை விட்டு பிரெஞ்சு ஸ்தலமாகிய பாரிஸ் நகரத்தில் வசித்ததும் சிலருக்கு பிரமாத வியப்பாகத் தோன்றாது. ஆனால், கவிதைகள் மூலம் சுதந்திர உணர்ச்சிகளையும் கலை உணர்ச்சிகளையும் வெளியிட்டது, இருவருக்கும் பெரிய கவிகளின் லட்சணமாக அமைந்திருந்தது.”

இந்த நூல் கண்ணம்மா பாடல்களை அலசி ஆராய்கிறது; பாரதியை நிகரற்ற உலக மகாகவிகள் வரிசையில் சேர்க்கிறது.

இப்போது எண்ணிப் பார்த்து வியப்படைகிறோம். பண்டிதர்களில் ஒரு சாராரும், படித்தவர்களின் ஒரு சாராரும், பத்திரிகைத் துறையினரில் ஒரு சாராரும், அரசியல் துறையில் ஒரு சாராரும் பாரதியாரை மூடி வைக்கப் பார்த்ததையும் அவரை அதிலிருந்து தக்க சான்றுகளைக் காட்டி பாரதி ஆர்வலர்கள் அவரை உலக மகாகவியாக மீட்டதையும் வரலாறு சொல்கிறது.

கு.ப.ரா. சிட்டி, வ.ரா போன்ற எண்ணற்றோர் இந்த பாரதி யாகத்தில் தம்மை ஆகுதியாக அர்ப்பணித்துக் கொண்டதால் அல்லவா உலக மகா கவியாக பாரதி ஒளிர்ந்தான். இந்த ஆரம்பகால பாரதி பக்தர்களுக்கு நம் சிரம் தாழ்த்திய அஞ்சலியைச் செய்து இந்த நூலை பல முறை படித்து மகிழலாம்!

**********

Sex Change: Science agrees with Saint Sambandhar

5000 year old yew tree

5000 year old Yew Tree (from The Guradian News paper)

Research Article Written by London swaminathan

Date: 3 November 2015

Post No:2297

Time uploaded in London :–  15-31

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

What a Tamil saint reported about sex change of trees 1300 years ago is confirmed by scientists today.

London newspapers have published an interesting news time this morning which featured a sex change by a Yew tree. Scientists have reported, probably for the first time, such a change. But we already know that certain lower organisms and a few fishes change sex. Here a 5000 year old Yew male tree became a female tree and started giving berries/fruits.

Here is the London Newspaper Story:–

The Fortingall Yew in Perthshire has always been recorded as male but has started sprouting berries – something only female yew trees do.

The UK’s oldest tree, thought to be up to 5,000 years old, is undergoing a “sex change”.

Records have always noted the Fortingall Yew in Perthshire as a male tree but it has recently started sprouting berries – something only female yew trees do.

Experts at the Royal Botanic Garden in Edinburgh spotted three berries on a high branch of the tree, located in the churchyard of the village of Fortingall, Perthshire, and have now taken them for analysis as part of a conservation project.

Dr Max Coleman, of the Royal Botanic Garden, said yew trees have been known to change sex before but discovering the process on “such a special tree is what makes this a special story”.

The Fortingall Yew is believed to be between 3,000 and 5,000 years old, and is one of the oldest living organisms in Europe.

It has survived the ravages of time and the attention of eager tourists, who in previous centuries took clippings from it as souvenirs.

The trunk changed shape many years ago and has lost its centre and one side, and the tree is now protected by a small wall.

Coleman said: “Yew trees are male or female usually and it is pretty easy to spot which is which in autumn – males have tiny things that produce pollen and females have bright red berries from autumn into winter.

“This process may have happened before but we know the Fortingall Yew has been classed as male for hundreds of years through records.

palmtree

My comments:

This is what the Boy Wonder of Tamil Nadu did 1300 years ago with a Palmyra tree (please see below). One may wonder how Sambandhar, the miracle boy, did it at once. Saints can alter time, interfere with time and go beyond the time. This I have explained in my previous post:

Time Travel by Two Tamil saints, posted on 14th February 2012.

Following is the Palmyra Tree Miracle Story:

From my old post: — “Tree Miracle and Statue Miracle of a Saivaite Saint”, posted on 4th March 2013

 

Thirugnana Sambandhar was a child prodigy. He started composing poems when he was three years old. We know many other child prodigies from different parts of the world who composed poems. But there is a big difference between Sambandhar and those poets. He composed devotional poems in different metres and genres. Though he did compose them 1300 years ago still they are used by millions of Tamil Hindus. His words had miraculous powers. Whatever he wanted to achieve, he achieved them through his verses. His poems led to a big moral and religious reformation. Above all, though we lost several thousands of his verses, we have more than 4000 of them today.

Hundreds of miracles happened during Sambandhar’s life.

When Sambandhar visited Tiruvothur he saw a devotee crying. The devotee raised some Palmyra trees so that he can use the income for his community service in the Shiva temple. By rare coincidence all the trees were male trees and did not yield fruits. Atheists were mocking at him and teased him asking when his god would yield him fruits. When Sambandhar asked him the reason for his sad face, he told him about the male only Palmyra trees. Later Sambandhar visited the Shiva temple and looked at the Palmyra trees and he sang ten verses in praise of the Lord and said the male trees will yield (Kurumpai Aan Panai Eenum in Tamil). Next minute all the trees bloomed and bore plenty of Palmyra fruits!

palmyra-palm-fruit

Dr R Nagasamy, renowned historian and archaeologist, has quoted the Sanskrit lines from the Upamanyu Bhakta Vilasam giving the same meaning: “Tala: pumamsa: sruthvai they bhavanthu paritha: palai:”

 

Once again it proved that what our scriptures say has scientific background.

—Subham—

மறு பிறப்பு பற்றி பிரமுகர்கள் நம்பிக்கை!

napoleon

Written  by  S NAGARAJAN

Date: 3 November 2015

Post No:2296

Time uploaded in London :–  8-11 am

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடர்

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 30-10-2015 இதழில் வெளி வந்த கட்டுரை இது. இந்தத் தொடர் நாலரை ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வருகிறது.

மறு பிறப்பு பற்றிய சிந்தனையாளர்கள், கவிஞர்கள், தளகர்த்தர்களின் நம்பிக்கை!

 

.நாகராஜன்

வருந்தாதே. நீ இழப்பது இன்னொரு உருவத்தில் வந்து விடும்!” – ரூமி

உலகின் தலை சிறந்த தளகர்த்தர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மறுபிறப்பின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டவர்கள்.

 

நெப்போலியன் தன் படையை வழி நடத்திச் செல்லும் போது படை நடுவில் ஆவேசத்துடன் குதிரையின் மீது எழுந்து நின்று இரு கைகளையும் உயர்த்திநான் சார்லி மாக்னே நான் சார்லி மாக்னேஎன்று உரக்கக் கூவுவானாம். (மாவீரனான சார்லிமாக்னே மேற்கு ஐரோப்பா முழுவதையும் ஒன்று படுத்தியவன். நெப்போலியனுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன்). நெப்போலியனின் ஆவேசத்தைப் பார்க்கும் அவன் படைவீரர்கள் உக்கிரத்துடன் போரிடுவார்களாம்!

 

 

அடுத்து அமெரிக்க ராணுவ தளபதியான திறமைவாய்ந்த ஜார்ஜ் பேட்டன் சரித்திரத்தில் தனக்கென தனியிடம் பிடித்தவர். இரண்டாம் உலகப் போரில் அவரது சாகஸ செயல்கள் பற்றிய ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. பேட்டன் என்ற படம் தலையாயது. பேட்டன் தனது ஆறு முந்தைய ஜென்மங்களை வரிசையாகக் கூறுவாராம். நெப்போலியனின் படையில் தான் பணி புரிந்து போர்க்களத்தில் போரில் உயிர் துறந்ததை அவர் கூறியதுண்டு. நேரம் வாய்க்கும் போதெல்லாம் தனது மறுபிறப்பு நம்பிக்கையை அவர் வலியுறுத்திக் கூறுவார்.

 

 dante

இத்தாலிய கவிஞனான தாந்தேக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. கவிஞர்கள் டென்னிஸன். ப்ரௌனிங், கிரேக்க சிந்தனையாளர்கள் சாக்ரடீஸ், ப்ளேடோ ஆகியோரும் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்களே. லியனார்டோ டா வின்ஸி, வால்டேர், வாக்னர், ஹென்றி ஃபோர்ட், எடிஸன், எமர்ஸன், ரஸ்கின், பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் ஆகியோரும் இதில் தங்களின் நம்பிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தவர்கள்.

 

 

எட்கர் கேஸ் 3000 மறுபிறப்பு கேஸ்களை சுட்டிக் காட்டி இருப்பது உலக பிரசித்தமான தொகுப்பு நூலானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வேறொரு நாட்டில் இறந்து போய் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் கல்லறையைச் சரிபார்ப்பது வரை இவரது முன் ஜென்ம கேஸ்கள் பலராலும் தீவிரமாக ஆராயப்பட்டு சரிதான் என்று கண்டுபிடிக்கப்பட்டன.

 

தியாஸபி இயக்கம் எனப்படும் பிரம்மஞான சபை இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கியவுடன் மேடம் ப்ளாவட்ஸ்கி, அன்னிபெஸன்ட் ஆகியோர் மறுபிறப்பிற்கான காரணங்களை விரிவாக விளக்கி உலகெங்கும் பேசினர். அன்னிபெஸண்ட் எழுதியரீ இன்கார்னேஷன்என்ற 96 பக்கம் கொண்ட சிறு நூலில் மறுபிறப்பிற்கான ஆட்சேபங்களாக ஐந்தையும் அது உண்டு என்பதற்கு 14 காரணங்களையும் தெளிவாக விளக்குகிறார். நூறு குருடர்களின் ஆயிரம் வார்த்தைகளை விட நேரில் பார்த்து ஒன்றை விளக்கும் பார்வையுள்ளவனின் ஒரு வார்த்தை பொருள் பொதிந்தது என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

 Adolf_Hitler_42_Pfennig_stamp

ஹிட்லரின் ஆராய்ச்சிகள் எப்போதுமே சற்று ஆழமானவையாகவும் விசித்திரமானவையாகவும் இருக்கும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் ஐவர் அடங்கிய குழு ஒன்று 1946ஆம் ஆண்டு ஹிட்லர் என்னென்ன ஆராய்ச்சிகளைச் செய்தார் என்பதை அறிவதற்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழுவின் தலைவர் விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் டி லஸ்டிக் (Dr Robert T Lustig). இவர் எலக்ட்ரோ பயாலஜியில் பெரும் நிபுணர். இவர் ஜெர்மனி சென்று ஹிட்லர் செய்த ஆய்வுகளைக் கண்டு பிரமித்துப் போனார். அவற்றில் முக்கியமான சுவையான ஆய்வு ஃப்ராங்க்பர்ட்டில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட் டைரக்டரான டாக்டர் பி ராஜேஸ்வ்ஸ்கி (Dr B Rajewski) செய்த ஆராய்ச்சிகளே.

 

 

ராஜேஸ்வ்ஸ்கி மூளை, நரம்பு மண்டலம் மூலமாக செய்திகளை அனுப்புகிறது என்ற பாரம்பரிய கொள்கையை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, ரேடியோ ஒலிபரப்பு போல நேரடியாக செய்திகள் மூளையிலிருந்து உடல் அங்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கான சோதனைச்சாலை ஆதாரங்களையும் அவர் வைத்திருந்தார். இந்த முடிவுகள் வியக்கத்தக்க ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் பற்றிய தீர்க்கமான உண்மைகளைத் தந்திருக்கும். ஆனால் உலக யுத்த முடிவில் அரைகுறையாக கைவிடப்பட்ட ஹிட்லரின் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகளுள் இதுவும் ஒன்றானது.

 

ஹிந்து மத யோகிகளை எடுத்துக் கொண்டால் பல ஆயிரம் பக்கம் மறு ஜென்மத்திற்கென்றே ஒதுக்க வேண்டும். அமெரிக்காவை மிகவும் கவர்ந்த யோகாதா சத் சங்கத்தை நிறுவிய பரமஹம்ஸ யோகானந்தா தனதுஆயோபயாக்ராபி ஆஃப் யோகி’ (Autobiography of a Yogi) நூலில் தரும் சம்பவம் சுவையானது.

 

அவருக்குத் தெரிந்த ஒரு பையன் சீக்கிரமாகவே இறக்கப் போகிறான் என அவருக்குத் தெரிந்து விட்டது. அந்தப் பையன் பெயர் காசி. அவன் யோகானந்தரிடம் நான் அடுத்த பிறவி எடுக்கும் போது எங்கு பிறந்திருந்தாலும் என்னைக் கண்டுபிடித்து ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டான்சில நாட்கள் கழித்து பொல்லாத விதிப்படி அவனது மரணம் சம்பவித்தது. சில காலம் சென்ற பின்னர், யோக முறை மூலம் ஆவி உலகில் சஞ்சரித்த யோகானந்தர், காசி மறு பிறவி அடைந்து விட்டானா என்று பார்த்தார். அவரது உள்ளுணர்வு அவன் சீக்கிரமே பிறக்கப் போகிறான் என்று கூறியது.

 yogananda

 

ஆனால் எங்குஎப்போது பிறக்கப் போகிறான்?

ஒரு நாள் யோகானந்தர் கல்கத்தா தெரு ஒன்றின் வழியே சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவரது உணர்வில்நான் காசி, இங்கு இருக்கிறேன்என்று தெளிவான குரல் ஒலித்தது.

 

காந்தத்தினால் ஈர்க்கப்பட்ட இரும்பு போல தன் சகாக்களுடன் ஒரு குறிப்பிட்ட வீட்டினுள் நுழைந்தார் யோகானந்தர். அந்த வீட்டு எஜமானிக்கு பிரசவ சமயம். யோகானந்தர் காசி பிறக்கும் இடம் இது தான் என நிச்சயித்தார். வீட்டு எஜமானன், எஜமானியிடம் உங்களுக்குப் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று ஆரம்பித்து அங்க அடையாளங்களைத் தெளிவாகச் சொன்னார். அவன் ஆன்மீகப் பாதையில் நாட்டம் கொண்டு அதில் செல்வான் என்பதையும் கூறி விட்டுச் சென்றார். அதன் படியே நடந்தது. பிறந்த குழந்தை காசியின் மறு தோற்றம் போல இருக்க, சில காலம் சென்ற பிறகு அவன் உலக வாழ்க்கையைத் துறந்து துறவியானான்.

 

 

இது போன்ற சம்பவங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. புனரபி ஜனனம் புனரபி மரணம் (மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு) என்ற ஆதி சங்கரின் வாக்கும் நவீன விஞ்ஞானிகளின் வாக்கும் ஒத்துப் போகும் நாட்களில் நாம் வாழ்கிறோம்.

மனிதப் பிறவியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என வாழ்க்கையில் சில நிமிடங்களேனும் சிந்திக்க வைக்க விஞ்ஞானிகளின் ஆய்வுகள் பெரும் தூண்டுகோலாக விளங்குகின்றன!

 

 Benjamin-Franklin

அறிவியல் அறிஞர் வாழ்வில்

அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒருவரும் சிறந்த ராஜ தந்திரியும் விஞ்ஞானியும் மாபெரும் கண்டுபிடிப்பாளருமான பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் (1706-1790) மறுபிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். 84 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தனது 22ஆம் வயதிலேயே தனது கல்லறையில் பொறிக்க வேண்டிய வாசகத்தை இப்படி எழுதி வைத்தார்:

 

The Body of B. Franklin, Printer                                                 

Like the Cover of an old book                                                         

Its contents worn out,                                                            

And Stripped of its Lettering and Gilding,                                           

Lies here, Food for Worms,                                                              

But the Work shall not be wholly lost:                                                     

  For it will, as he believed,                                                            

Appear once more                                                               

In a new and more elegant Edition                                                           

Corrected by the Author

 

 

இதன் சுருக்கமான பொருள் இது தான்: பிரிண்டர் பெஞ்சமின் ஃப்ராக்ளினின் உடல் பழைய புத்தகத்தின் அட்டை போல உள்ளடக்கம் தேய்ந்து, எழுத்துகள் உரிக்கப்பட்டு மெருகு தேய்ந்து புழுக்களுக்கு உணவாக இங்கே இருக்கிறது. ஆனால் அது முழுவதுமாக தொலைந்து போகாது; ஏனெனில் அவர் நம்புவது போலவே அது மீண்டும் தோன்றும்அதை எழுதியவரால் சரி செய்யப்பட்டு ஒரு புதிய இன்னும் அதிக எழிலுடன் கூடிய பதிப்பாகத் தோன்றும்.

 

இறுதி வரை அவருக்கு மறுபிறப்பு பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது.

*********

3 Hospitality Anecdotes!!!

webster

Compiled   by London swaminathan

Date: 2 November 2015.

Post No: 2295

Time uploaded in London :–  11-10 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

webster2

American Farmer’s Hospitality?

Daniel Webster was once bested by one of the farmers of his native state. He had been hunting at some distance from his Inn, and rather than make the long trip back, he approached farm house some considerable time after dark and pounded on the door. An upstairs window was raised and the farmer, with head thrust out, called, “What do you want?”

“I want to spend the night here”, said Webster.

“All right. Stay there,” said the farmer. Down went the window.

How to find my house?

Andrew Lang at one time lived in the very far reaches of a London suburb. Inviting a friend to dinner, he instructed him how to get to the house. After long and explicit explanations he wound up saying, “Just walk along Cromwell Road’. Keep on walking until you drop dead of exhaustion, and my house is just opposite.”

w james

Never say No!

Alice James, wife of William James, says that often during evenings her husband would exclaim, “Are we never to have an evening alone? Must we always talk to people every night?” And she would answer, “I will see that whoever calls tonight is told that you are strictly engaged.”

So they would settle down to their quiet evening. Presently the doorbell would ring and Alice would go to the entry, to make sure that her instructions were carried out; but close behind her would be William, exclaiming, “Come in! Come right in!”

Source: Old book: Encyclopaedia of Anecdotes

ஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை! கொக்கும் வெள்ளை! என்ன வேறுபாடு?

swan1

ஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை! கொக்கும் வெள்ளை! என்ன வேறுபாடு?

Written  by London swaminathan

Date: 2 November 2015.

Post No:2294

Time uploaded in London :–  7-41 (காலை)

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

1).சர்வாரம்பா தண்டுலப்ரஸ்த மூலா:

எல்லாவற்றிற்கும் மூல காரணம் (அரிசிச்) சோறு!

ஒப்பிடுக:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் -ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது— அவ்வையார்.

xxxx

2).சா சபா யத்ர சப்யோஸ்தி (கதா சரித்சாகரம்)

எங்கு அவை ஒழுக்கமுடையோர்

இருக்கிறார்களோ அதுவே சபை!

ஒப்பிடுக: மாநில சட்டசபைகள், லோக் சபை உறுப்பினர்களின் நடத்தை!!

xxx

3).ஸா சேவா யா ப்ரபுஹிதா– (பஞ்ச தந்திரம்)

முதலாளிக்கு (தலைவருக்கு/ எஜமானனுக்கு) இதம் தருவதே சேவை

xxx

4).சூர்ய ஏகாகி சரதி (யஜூர் வேதம்)

சூரியன் தன்னதனியனாகச் சொல்கிறான்

xxx

5).ஸ்வஜாதிர் துரதிக்ரமா (பஞ்ச தந்திரம்)

எங்கும் தனது இனத்தை (ஜாதியை) விட்டுக்கொடுக்க முடியாது

xxx

6).ஸ்வதேச ஜாதஸ்ய நரஸ்ய நூனம் குணாதிகஸ்யாபி பவேதவக்ஞா

சொந்த நாட்டுக்காரர்களுக்கு எவ்வளவு பெருமை/திறமை இருந்தாலும் அவனுக்கு அவமதிப்பே மிஞ்சுகிறது (இக்கரைக்கு அக்கரை பச்சை)

ஹிந்தி: கர் கா ஜோகீ ஜோக்டா ஆன் காவ்ன் கா சித்த

xxx

7).ஸ்வாத்யாய  ப்ரவசனாப்யாம் ந ப்ரமதிதவ்யம் (தைத்ரீய உபநிஷத்)

வேதங்களைக் கற்பதையும், கற்பிப்பதையும் புறக்கணிக்காதீர்கள்

xxx

swan2

8).ஹம்சோ ஹி க்ஷீரமாதத்தே தன்மிஸ்ரா வர்ஜயத்யப:  – (சாகுந்தலம் நாடகம்)

அன்னப் பறவையானது பாலை மட்டும் எடுத்துக் கொண்டு தண்ணீரை விட்டுவிடும்

Xxxx

9).ஹம்ச: ஸ்வேதோ பக: ஸ்வேத: கோ பேதோ பக ஹம்சயோ:

நீரக்ஷீர விபாகே து ஹம்ஸோ ஹம்ஸோ பகோ பக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அன்னப் பறவையும் வெள்ளை; கொக்கும் வெள்ளை! பின்னர் என்ன வேறுபாடு?

தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் அன்னம், பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் நீரை விட்டுவிடும். கொக்கு, கொக்குதான்! அன்னம், அன்னப் பறவைதான்!

xxx

crane

10).ஹிமவதி திவ்ய ஔஷதய: சீர்ஷே சர்ப: சமாவிஷ்ட: (முத்ராராக்ஷசம் நாடகம்)

தலைக்கு மேலே பாம்பு! இமய மலையில் மூலிகைகள்!

(தொலைவில் தீர்வு/ மருந்து இருந்தால் என்ன பயன்?)

ஹிந்தி: ஜப் தக் ஹிமாலய் சே சஞ்சீவனீ ஆயே, பீமார் மர் ஜாயே.

சாம்ப் தோ சிர் பர், பூடி பஹாட் பர்

–சுபம்–

காலம் என்னும் மர்மம்! – 3

Written  by S NAGARAJAN

Date: 2 November 2015

Post No:2293

Time uploaded in London :–  5-13 am

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஹிந்து தத்துவ விளக்கம்

காலம் என்னும் மர்மம்! – 3

.நாகராஜன்

8

தேவர் உலக கால அளவுகள்

தேவர் உலகில் உத்தராயணம் அதாவது 6 மாதம் ஒரு பகலாகவும், தக்ஷிணாயனம், அதாவது இன்னொரு 6 மாதம் இரவாகவும் ஆகிறது. அதாவது மனித மாதங்கள் பன்னிரெண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது.

பிரம்மாவின் ஆயுள்

அதிகமான ஆயுளுடன் இருப்பவர் பிரம்மா.

தேவர் கால அளவில் தேவர்களின் ஒரு நாள் என்பது மனிதர்களி  360 நாள் என்று பார்த்தோம்.

12,000 தேவ வருடங்கள் ஒரு சதுர் யுகம் எனப்படுகிறது.

ஒரு சதுர் யுகத்தில் கிருத யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம் என நான்கு யுகங்கள் உள்ளன.

கிருத யுகம் 4000 தேவ வருடங்களையும் திரேதா யுகம் 3000 தேவ வருடங்களையும் த்வாபர யுகம் 2000 தேவ வருடங்களையும் கலியுகம் 1000 தேவ வருடங்களையும் கொண்டிருக்கிறது.

இந்த வருடங்கள் யுகத்தின் சரியான காலமாகும்.

என்றாலும் யுக ஆரம்பத்திற்கு முன் ‘சந்தி’ என்ற காலமும் யுகத்திற்குப் பின் ‘சந்தி அம்சம்’ என ஒரு கால அளவும் உள்ளது.

இதன் படி கிருத யுகத்திற்கு சந்தி அளவு 400 தேவ வருடமும் சந்தி அம்சம் 400 தேவ வருடமும் ஆகிறது.

இதே போல திரேதா யுகத்திற்கு சந்தி அளவு 300 தேவ வருடமும் சந்தி அம்சம் 300 தேவ வருடமும் ஆகிறது.

ஆக, திரேதா யுகத்தின்  மொத்த வருடம் 3600. இதே போல த்வாபர யுகத்தின் மொத்த வருடம் 2400. கலி யுகத்தின் மொத்த வருடம் 1200.

ஆக சதுர் யுகங்களின் – நான்கு யுகங்களின் மொத்த காலம் 12000 தேவ வருடம். அதாவது 43,20,000 மனித வருடம்.

கலியுகம், 1200 x 360 = 4,32,000 மனித வருடம்.

த்வாபர யுகம் கலி யுகத்தைப் போல இரு மடங்கு. அதாவது 8,64,000 மனித வருடம்.

திரேதா யுகம் 12,96,000 மனித வருடம். கிருத யுகம் 17,28,000 மனித வருடம்.

ஆக மொத்தம் ஒரு சதுர் யுகத்தின் கால அளவு 43,20,000  மனித வருடம்.

இது போன்ற ஆயிரம் சதுர் யுகங்கள் – அதாவது 432 கோடி மனித வருடமே பிரம்மாவிற்கு ஒரு பகலாகும்.

இந்த பிரம்மாவின் ஒரு பகலே ‘கல்ப’ம் எனப்படுகிறது.

பிரம்மாவின் இரவுக்கு இன்னொரு இன்னொரு 432 கோடி மனித வருடம்.

ஆக, பிரம்மாவின் ஒரு பகலும் இரவும் சேர்ந்தால் 864 கோடி மனித வருடங்களுக்குச் சமமாகும்.

பிரம்மாவின் ஆயுள் 100 வருடமாகும். அவருக்கும் ஒரு முடிவு. உண்டு. அவர் ஆயுளுக்கும் எல்லை இப்படி இருக்கிறது என்பது தெளிவு.

பிரம்மாவின் முழு ஆயுளைக் கணக்கிட்டால் 31.54 x 10 to the power 13  மனித வருடங்களாகிறது!

இதே போன்ற பிரம்மாக்கள் ஏராளமானோர் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பர்.

இது தான் காலத்தின் எல்லையற்ற எல்லை!

மனக் கற்பனைக்கு அப்பாற்பட்ட உண்மை!!

மனித ஆயுளை இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை சிறிது! ‘காய கல்பம்’ என ஆயுளை நீடிக்க வைக்கும் வித்தையைச் சொல்கிறார்கள்.

ஒரு கல்பம் அளவு – பிரம்மாவின் ஒரு நாள் அளவு – அதாவது 432 கோடி மனித வருடம் வாழ்கின்ற சித்தராகவே நீங்கள் இருந்தாலும் எல்லயற்ற கால வெள்ளத்தில் நீங்கள் ஒரு சிறு துளி தான்!

ஆயுள் ‘குறைவாக’ உள்ள மற்ற தேவர்களும் இருக்கிறார்கள்.

“தெய்வீக நிர்வாகத்தில்” அவரவர்க்கு உரிய பணியைச் செய்யும் இந்திரன், அக்னி, சூரியன், வருணன் ஆகிய தேவர்களின் ஆயுள் மனிதரின் கால அளவை விட மிகப் பெரியது. என்றாலும் பிரம்மாவின் ஆயுளுடன் ஒப்பிடும் போது அது மிகக் குறைவே!

Konark_Sun_Temple_Wheel

SUN TEMPLE, KONARK, ORISSA

9

ஆன்மீக உயர் நிலையை எட்டி மேலே சொன்ன தேவ நிலையை மனிதர்கள் அடையலாம்.

கடோபநிஷத்தில் – யமன் – இறப்பிறகு அதிபதி – இதை விளக்குகிறார்.

தவத்தின் மூலம் பிரம்ம நிலையை எய்துதற்கு முடியும். என்றாலும் அவன் இந்த நிலைக்கு மட்டுமே வர முடிந்தது என விவரிக்கிறான்.

பிரம்ம நிலையை எய்துவதே மனிதனின் இலட்சியம்.

தைத்ரியோபநிஷத் பேரின்ப நிலைகளை வரிசையாகக் குறிப்பிடும் போது (இன்பமான, லட்சிய) மனித இன்பம், கந்தர்வர், பிதிர், தேவர், இந்திரன், பிரஹஸ்பதி, பிரஜாபதி, பிரம்மா எனக் குறிப்பிடுகிறது.

ஆயுளும் இதே வரிசையில் கூடுகிறது.

சில ரிஷிகள் – முனிவர்கள் – ஒரு கல்ப காலம் ஆயுளை உடையவர்களாக இருக்கின்றனர். மற்ற சிலரோ ஒரு மன்வந்தரமே ஆயுள் உடையவர்களாக இருக்கின்றனர்.

பெரும் தவ சிரேஷ்டர்கள் பிரம்மாவின் ஆயுள் எல்லையையும் தாண்டி வாழ்கின்றனர்!

மன்வந்தரம் என்பது கல்பத்தில் ஒரு பகுதி. 14 மன்வந்தரம் கொண்டது ஒரு கல்பம். ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு உண்டு.

நாம் இப்போது இருக்கும் கல்பத்தின் பெயர் ஸ்வேத வராஹ கல்பம்.

நாம் இப்போது இருக்கும் மன்வந்தரத்தின் பெயர் வைவஸ்வத மன்வந்தரம். வைவஸ்வத மனு என்பவரின் பெயரைக் கொண்டது இது!

அதாவது ஒரு மன்வந்தரம் சுமார் 31 கோடி மனித வருடங்களைக் கொண்டது. ((துல்லியமாக வேண்டுமெனில் கல்பத்தை 14ஆல் வகுத்துச் சரியாகவும் கணக்கிட்டுக் கொள்ளலாம்)

ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இந்திரன், அக்னி, சில ரிஷிகள் மாறலாம். ஆனால் அவர்களின் பணிகள் புதிய பெயரிலேயே நடந்து கொண்டே தான் இருக்கும்.

சப்த ரிஷிகளின் பெயர்கள் பல்வேறு விதமாகக் கூறப்படுவதால் குழப்பம் அடைவதாகப் பலரும் சொல்வர்.

அனைத்துப் பெயர்களும் சரியே! எந்த மன்வந்தரத்து சப்த ரிஷிகள் என்று கேட்டால் குழப்பம் நீங்கி விடும்!

நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கும் துல்லியமான கால அளவுகளைப் போல உலகின் வேறு எந்த மதமும், நாகரிகமும் வகுத்து வைத்திருக்கவில்லை.

அதனால் தான் காஸ்மாஸ் தொடரை தொலைக்காட்சி சீரியலாக தயாரித்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் உலகின் எந்த மதம் அல்லது நாகரிகம் எல்லையற்ற கால அளவைச் சரியாகச் சொல்லி இருக்கிறது என ஆராய ஆரம்பித்தார்.

ஹிந்து மதத்தின் இந்த கால அளவுகளைக் கண்டு அவர் பிரமித்தார். உடனே இந்தியாவிற்கு வந்து சிதம்பரம் சென்றார்.

அவர், தன் தொடரில் நடராஜரை முதலில் காட்டியது இதனால் தான்!

நமது அறிவுத் திறனுக்கும் மூளை ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட காலம் பற்றிய சரியான விவரணம் தருவது –

ஹிந்து மதமே!

  • தொடரும்

குறிப்பு: காலம் பற்றிய இந்த தொடர் எழுதப்பட்ட நாள் 14-7-1996. பழைய கைப்பிரதிகளை கிழிக்க முற்பட்ட போது இது என் கையில் அகப்பட்டது. ஆஹா, எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இதை முழுத் தொடராக்குகிறேன்.

 

3 Mother Anecdotes

Written  by London swaminathan

Date: 1 November 2015.

Post No:2292

Time uploaded in London :–  15-04

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Two small boys were hesitant about approaching their mother for a permission which was almost certain to be denied. They felt that they must take the long shot, however. “You ask her”, said Billy to his younger brother. “No, you”.

At this point the mother chanced to overhear the balance of the conversation.

“Oh, go on, you ask her”, urged Billy. “No, you do it”, said the younger, “you have known her longer than I have.”

Mum, I am nearer to you than Papa

A number of years ago my little girl said to her mother, in one of those bursts of confidence that children sometimes have, “Mama I am nearer to you than I am to papa.” Her mother asked, “Why, what do you mean, my dear?”

“Why ,” she replied, “I am your own little girl, but I am only related to papa by marriage.”

Whipping Credits!

John D.Rockfeller, Sr. was reared with strict discipline. Upon one occasion, while being punished, he succeeded in convincing his mother that he was not guilty of the offense for which he was being whipped.

“Very well, son,” is mother replied with grim humour, “but we have gone so far that we may as well proceed. It will be credited to your account for next time.”

காலம் என்னும் மர்மம்! – 2

mayan-calendar

Mayan Calendar

Written  by S NAGARAJAN

Date: 1 November 2015

Post No:2291

Time uploaded in London :–  14- 40

(Thanks  for the pictures) 

 

 

ஹிந்து தத்துவ விளக்கம்

காலம் என்னும் மர்மம்! – 2

.நாகராஜன்

4

தன் வலிமையால் பெரிதான காலமானது அதிகம் படிப்புள்ளவனானாலும், அல்பப் படிப்புள்ளவனானாலும், பலசாலி ஆனாலும், பலவீனன் ஆனாலும், அழகுள்ளவனானாலும், குரூபி ஆனாலும், நல்லவனானாலும், கெட்டவனானாலும் எல்லோரையும் தன் வசமாக்கிக் கொள்கிறது.

மனிதன் முதலில் எரிக்கப்பட்டதையே பிறகு எரிக்கிறான். அடிக்கப்பட்டதையே பிறகு அடிக்கிறான்.

நாசமடைந்ததே நசிகிறது. அடைய வேண்டியதையே அடைகிறான்.

 

ஆச்சரியமான விதியைச் சிந்தித்தால், காலமாகிற இந்தக் கடலுக்குத் தீவு இல்லை!

அக்கரை ஏது? இக்கரையும் காணப்படுகிறதில்லை. இதன் முடிவை நான் காணேன்.

காலம் யாவற்றையும் எடுத்துக் கொள்ளுகிறது. காலம் யாவற்றையும் கொடுக்கிறது.

யாவும் காலத்தால் செய்யப் படுகின்றன.

 

 

காலம் எல்லாவற்றையும் நிலை பெறச் செய்கிறது.காலம் எல்லாவற்றையும் பழுக்கச் செய்கிறது.

வேதமறிந்த ஜனங்கள் கால ரூபியான பிரம்மத்தை, மாதத்தையும், பட்சத்தையும் வீடாகக் கொண்டதும், இரவாலும், பகலாலும் மூடப்பட்டதும், ருதுக்களைத் துவாரமாகக் கொண்டதும், பிராண வாயுவை முகமாகக் கொண்டதுமாகக் கூறுகிறார்கள்.

 

ஐந்து விதமான இந்திரியங்கள் யாவும் எதைத் தொடர்ந்து அறிகிறதில்லையோ அதைக் காலம் என்று தெரிந்து கொள்.

இவ்வுலகம் அனைத்தும் அதன் வசம் இருக்கிறது.

 

பூஜ்யமான காலமானது பூதங்களுக்குள்ள வேற்றுமையைச் செய்கிறதென்று இவ்வளவைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாது.

காலத்தைக் காட்டிலும் இவ்வித சக்தியுள்ள வேறு பதார்த்தம் இல்லாததாலும் எல்லாப் பிராணிகளும் அடையத்தக்க அக்காலத்தை அடையாமல் எங்கு போக முடியும்?

 

ஓடுகிறவனானாலும் அக்காலத்தைத் தள்ள முடியாது. நின்றாலும் அதிலிருந்து விலக மாட்டாது.

ஐந்து விதமான இந்திரியங்களும் யாவும் அதைக் காண்பதில்லை.

சிலர் இக்காலத்தை அக்னி என்று சொல்கிறார்கள். சிலர் பிரம்மா என்று சொல்கிறார்கள்.

argos clock 3

5

 

காலத்தைப் பற்றி ஶ்ரீ கிருஷ்ணர் கீதையில் கூறுவது:-

सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।

रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥८- १७॥

ஸஹஸ்ர யுக பர்யந்தமஹர்யத் ப்ராஹ்மனோ விது:  I                        

ராத்ரிம் யுக சஹஸ்ராந்தாம் தேஹோராத்ரி விதோ ஜனா: II (கீதை 8 – 17)

 

இதன் பொருள்: அநுபூதியினால் பிரம்மாவின் ஒரு பகல் ஆயிரம் மகாயுகங்களையும், அவரது இரவு மற்றும் ஆயிரம் மகாயுகங்களையும் கொண்டிருக்கிறது என்று எந்த யோகிகள் உணர்கிறார்களோ அவர்களே காலத்தின் உண்மை நிலையை உணர்ந்தவர்கள்.

இவ்வாறு பகவத் கீதையில் ஶ்ரீ கிருஷ்ணர் காலத்தைப் பற்றி விரிவாக அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.

இது எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை பிரம்மாவின் ஆயுள் பற்றி அடுத்து விவரிக்கும் போது அறியலாம்.

 

 argos clock

6

இனி கால அளவுகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் வாழும் பூமியில் நம்மால் உணரப்படும், அளக்கப்படும் நேரம் வேறு.

சூரிய மண்டலத்திற்கும், நட்சத்திர மண்டலங்களுக்கும் எப்படி கால அளவு இருக்கிறது என்று பார்த்தோமானால் வருவது வேறு அளவு. இந்த அளவைக் கொண்டு பிரம்மாவின் ஆயுளைக் கணக்கிட்டால் பிரமித்துத் திகைப்போம்!

 

மனித அளவில் உள்ள கால அளவுகள் இதோ:

18 இமைப் பொழுது                     1 கஷ்டை

18 கஷ்டை                               1 கலை

30 கலை                                  1 க்ஷணம்

12 க்ஷணம்                                1 முகூர்த்தம்

30 முகூர்த்தம்                             24 மணி அல்லது ஒரு நாள்

15 நாள்                                    1 பக்ஷம்

2 பக்ஷம்                                    1 மாதம்

2 மாதம்                                    1 ருது

6 ருது                                       1 வருடம்

ஒரு வருடம் இரண்டு அயனமாகப் பிரிக்கப்படுகிறது.

உத்தராயணம்             – 6 மாதம்

தக்ஷிணாயணம்           – 6 மாதம்

 

 

7

இனி இறந்தவர்களின் உலகில் கால அளவுகளைப் பார்ப்போம்.

தேவ நிலையை எய்தாமல் இறந்தவர் இருக்கும் உலகின் கால அளவுகள் வேறு. ‘பிதிர்லோகம் எனக் குறிப்பிடப்படும் இந்த உலகில் மனித உலகின் ஒரு பக்ஷம் அதாவது 15 நாட்கள் ஒரு பகலாகவும் இன்னொரு பக்ஷம், அதாவது அடுத்த 15 நாட்கள் இரவாகவும் இருக்கிறது. அதாவது மனித தினத்தின் 30 மடங்கு ஒரு பிதிர் தினமாகும்.

 

இறந்தவருக்கு அவர் இறந்த வருடம் மாதத்திற்கு ஒரு முறைபடையல்உணவு அளிக்கும் வழக்கத்தை நினைத்துப் பார்த்தால் புரியும்அவர்களது கணக்குப்படி தினமும் நாம் உணவு அளிக்கிறோம் என்று.

இனி தேவர் உலக கால அளவுகளை அடுத்து பார்ப்போம்.

to be continued………………………………..