ஏசு கிறிஸ்து பற்றி பாரதியார் (Post No. 2423)

painting jesus

(c) St Stephen’s House, University of Oxford; Supplied by The Public Catalogue Foundation

 

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2423

Time uploaded in London:- 21-26
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

0637-christmas-stamps-2013

2013  பிரிட்டிஷ் கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

பாரதிக்கு எம்மதமும் சம்மதம். இந்திய ஞானிகளுக்கே உள்ள தனிப்பெரும் உயர்ந்த சிந்தனை அவருக்கும் இருந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரியோர்கள் ஒவ்வொரு மதத்துக்குள்ளும் நுழைந்து உண்மைப்பொருளை உலகிற்கு எடுத்துரைத்தனர். பாரதியோ பாடலின் மூலம், ஏசுவையும், மரியா மக்தலேனாவையும், அல்லாவையும் பாடிப் பரவியுள்ளார். இதோ அவரது பாடல்:

நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்

அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்

அதற்கடுத்த ராமனுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!

மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான்,

மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே

நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.

 

இது ஒரு தத்துவப் பாடல். புத்தன், ஏசு, ராமன், கிருஷ்ணன் ஆகிய அனைவரும் இயற்கைக்கு மாறான மரணம் அடைந்தனர். ஆனாலும் ஆன்மா அழியாது. அவர்களுடைய பூத உடல் அழிந்தாலும் புகழ் உடம்பு நீடிக்கிறது. இந்தப் பொருளிலேயே பாரதியும் நான் சாகாதிருப்பேன் என்கிறார்.

Christmas Stamps revised artwork

2015 பிரிட்டிஷ்  கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

இந்தப் பாட்டின் அடுத்த செய்யுளில் “அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் மிச்சத்தைப் பின் சொல்வேன்” … என்று தொடர்கிறார். இதிலிருந்து அவர் சொல்லும் மரணமிலாப் பெரு வாழ்வு என்ன என்பது தெள்ளிதின் விளங்கும்.

 

ஏசு பிரான் பற்றி பாரதி பாடிய பாடல் இதோ:–

 

யேசு கிறிஸ்து

1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்

நேசமா மரியா மக்தலேநா

நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்

தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர்;

தேவர் வந்து நமக்குட்புகுந்தே

நாசமின்றி நமை நித்தங் காப்பார்

நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்.

 

2.அன்புகாண் மரியா மக்தலேநா

ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;

முன்பு தீமை வடிவினைக் கொன்றால்

மூன்று நாளில் நல்லுயிர் தோன்றும்;

பொன்பொலிந்த முகத்தினிற் கண்டே

போற்றுவள் அந்த நல்லுயிர்தன்னை;

அன்பெனும் மரியா மக்தலேநா

ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.

 

3.உண்மையென்ற சிலுவையிற் கட்டி

உணர்வை ஆணித் தவங் கொண்டடித்தால்

வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து

வான மேனியில் அங்கு விளங்கும்

பெண்மைகாண் மரியா மக்தலேநா

பேணும்நல்லறம் யேசு கிறிஸ்து

நுண்மைகொண்ட பொருளிது கண்டீர்

நொடியிலிஃது பயின்றிடலாகும்.

 

 2014 X mas

கிறிஸ்தவ மத தத்துவம்

 

இந்தப் பாட்டில் ஏசு பிரான் மூன்று நாளில் உயிர்த்தெழுந்தது, சிலுவையில் அறையுண்டது எல்லாவற்றிற்கும் தத்துவ விளக்கம் தரப்படுகிறது.

 

தமிழில் பொருள் விளங்காதவர்களுக்கு ஒருவேளை, இதை ஆங்கிலத்தில் படித்தால் நன்றாகப் பொருள் விளங்கலாம்:-

1.The Lord came died upon the cross,

And rose up resurrected on the third day,

Devoted and glorious Mary Magdalene

Was witness to this wondrous event

Listen, countrymen, to its secret meaning;

The gods will come and live within us,

And shield us from evil, and redeem us for ever

If only we would shed our pride of self.

 

2.Look! Mary Magdalene is Love incarnate;

And look! Jesus Christ is the Holy Spirit!

If first we shed this embroiled evil,

Godly sacred life will manifest itself in three days.

Mary Magdalene, Love incarnate, saw the radiant vision

Of that godly sacred life beaming from the face

Of golden splendour, and praised it in adoration

This is bliss indeed! The greatest, most ecstatic bliss!’

 

3.If you tie the senses fast to the Cross called Truth,

And hammer them down with the nails of austere penance

Gloriously great and sacred life will shine with radiant splendour

In the sublime and celestial body of Lord Jesus Christ.

Look! Mary Magdalene is true womanhood incarnate;

And Jesus Christ is eternal virtue, which all cherish and revere!

Look! This is the finest, greatest secret, and inmost, mystic meaning;

Yet anyone can learn and practise it in just a moment’s time.

(Translated from Tamil into English by P N Appuswami)

 

இன்னுமொரு பாடலில் எல்லா மதங்களும் மனிதனை இறைநிலைக்கு இட்டுச் செல்வதைப் பாடுகிறார்:

2011_Xmas_set

2011 கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

 

பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,

நாமமுயர் சீனத்துத் ‘தாவு’மார்க்கம்

நல்ல ‘கண்பூசி’ மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கொன்றே.

 

எல்லா மதங்களும் “சாமி நீ, சாமி நீ, கடவுள் நீயே, தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்” — என்று அடுத்தவரிகளில் சொல்லி, பெரிய அத்வைத கருதுக்களை “தத்வமஸி” என்ற உபநிஷத வாக்கியம் மூலம் போதிக்கிறார்.

பாரதி பாடாத பொருளே இல்லை!

xxxxx

Leave a comment

Leave a comment