ஆர்க்டிக் பனி உருகுகிறது! Post No. 2376

polarbear480x270

வட துருவக் கரடி, நீந்த முடியாமல் தவிக்கிறது; கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், தண்ணீர்!!!

  1. ஆர்க்டிக் பனி உருகுகிறது!

 

 Radio Talk written by S NAGARAJAN

Date: 10 Decemberember 2015

Post No. 2376

 

Time uploaded in London :– 8-43 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஆர்க்டிக் பிரதேசத்தை ஆராய முதன் முதலாக முயன்றவர் நார்வேயைச் சேர்ந்த ப்ரிட்ஜாப் நான்ஸேன் (Fridrjof Nansen)  ஆவார். 1893ஆம் ஆண்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து எப்படியேனும் அதை ஆராயக் கங்கணம் கட்டிக் கொண்ட அவர் அங்குள்ள பனி பிரதேசத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார். நீர்ப் பாதையே தென்படவில்லை. அவரது கப்பலைச் சுற்றி இருந்த பனிப் பாறைகள் தொடர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  இருந்ததால் தனது முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

 

 

ஆனால் அதே ஆர்க்டிக் பிரதேசத்தை இன்று ஒப்பிட்டுப் பார்த்தால் சுலபமாக அதில் செல்லும்படியான நீர்ப் பாதை உருவாகியுள்ளது! பனிப்பாறைகள் உருகி வருவதே இதன் காரணம் ஆகும்.

 

pg-6-arctic-ice-pa

இன்னொரு ஆச்சரியமான விஷயம், அங்கு சமீபத்தில் ஆர்க்டிக்கை ஆராயப் போன விஞ்ஞானி ஒருவருக்கு தரையைத் தோண்டிக் காட்டிய அப்பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் ஒரு உருளைக்கிழங்கைக் காட்டினார். இது வியப்பூட்டும் விஷயம் ஆகி விட்டது, எதுவுமே விளைய முடியாத பனிப்பாறைகள் இருக்கும் பகுதியில் பனி உருகி நிலப்பகுதியும் நீர்ப்பகுதியும் அதிகரிப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

 

 

நான்ஸேனுக்குப் பின்னால் 1926ஆம் ஆண்டு ஆர்க்டிக் பிரதேசத்தை ஆராய முனைந்த ரோல்ட் அமுண்ஸென் (Roald Amundsen) ஆர்க்டிக்கை முதன்முதலாக அடைந்தார்.

 

 

2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாடலைட் படங்கள் ஆர்க்டிக் எப்படி மாறி விட்டது என்பதைக் காண்பித்தது. இப்போது விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்விலோ ஆர்க்டிக் பகுதியில் உஷ்ணமான கடல் நீர் பாய்ந்து இன்னும் பனியை உருக்கும் என்று தெரிய வருகிறது.

 

 

பொதுவாக உலகில் அதிகமாகி வரும் உஷ்ணநிலை கடும் பனிப்பாறைகளையே உருக வைக்கிறது என்றால் அதன் பாதிப்பு எவ்வளவு கடுமையானது என்பதை நாம் சுலபமாக உணரலாம்.

 

 

இயற்கையின் சமச்சீர் தன்மையைக் காக்கும் ஆர்க்டிக் பனியை அப்படியே இருக்குமாறு காப்பது மனித குலத்தின் கையிலேயே உள்ளது. அதை எண்ணி செயல்படுவோமாக!

 

***

Visit to Trayambakeswaram Temple! Post No. 2375

IMG_2692

Written by London swaminathan

Date: 9 December 2015

Post No. 2375

 

Time uploaded in London :– 11-31 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

I was fortunate enough to visit five places Mumbai, Trayambakeswar, Panchavati, Muktidham and Shirdi under good weather conditions. I give below my experience, observations and ideas for improvement. I was moved by the blind faith of the devotees who are the followers of Lord Shiva and Lord Ram. In contrast to South Indian temples where we see much show with women in silk saris and men in silk dhotis with hour long rituals, people in the North simply worshipped without any pomp.

 

We went to Trayambakeswar via Nashik from Mumbai. Being a Sunday we had to wait in the queue for nearly four hours. First we tried the special Q where one can pay Rs.200 and have quick Darshan. But we understood that there was a special time table for the paid Darshan. When we reached the sanctum sanctorum, it was Four O clock and the special Q also merged with us.

Trayambakeswar is one of the twelve important Shiva shrines spreading over from Rameswaram in the South to Kedarnath in the Northern Himalayas. They are called Dwadasa Jyotirlinga Shrines. Three of them are in Maharashtra.

IMG_8090

Tortoise Mystery

I was surprised to see a big tortoise carved on the marble floor in front of the god. I have already written two articles about the mystery of tortoise. That is the longest living land animal with a life span of 300 years. That is the reason Lord Krishna mentioned it in Bhagavad Gita. Tamil literature also mentioned it. The second mystery is the Dwajasthambas (Flag staff) in Kerala temples are on the figure of a tortoise. This is not seen anywhere else. This mystery was not explained in any other scriptures. The third tortoise mystery is the Chinese belief that a turtle came with a magic square on it shell (adds up to No. 15= Kubera Yantra) and that is considered a lucky number. To my surprise shops in Panchavati and other places are selling yantras with tortoise picture. But we have no explanation for it in our scriptures. We know only the Kurmavatara of Vishnu and turtle shell, as a part of Lord Siva’s dress. (Please read my earlier articles on the tortoise mystery)

12 jyotirlinga

Here are some suggestions for improvement:

 

One disappointing thing was the flowers that devotees bought were taken by a woman even before we entered the Garbagriha and she gave us back a few flowers or leaves as Prasad. Devotees should be allowed to take at least a few flowers inside to offer them to the god.

 

 

In the Balaji temple at Tirupati, one would know where he stands in the Q. The sheds are numbered. In the same way the trust can number the lines and make announcement about the approximate time of waiting. For instance they can say, “ if you are in line 22, you will have to wait for at least three hours”.

 

Actually, we started in line 22 and it took three and a half hours to reach the Jyotirlinga. Though we were able to watch the Garbagriha and the main deity over big screen while waiting, there was no music. At least sweet devotional songs or Shiva Bhajans may be broadcast. Water facility for the people in the Q was good. Another suggestion is about the special Q. there was utter confusion and stampede in the junction where it merged with the ordinary Darshan Q. to avoid such stampede, there may be two lines : one for the special Q and another for ordinary Q. both can approach the deity at the same time.

 

There is a tradition to pour water over the Linga throughout the day. So the priests were doing Abishek with water now and then. I read in a book that the gold Kavasa (shield) is brought in a palanquin every Monday. Probably it has three faces of Shiva.

 

IMG_8070 (2)

Outside the temple all the devotees get this beautiful Trisula Mudra!

Hindu Stamps please!!

Modi Government should issue postage stamps for all the 12 Jyotirlinga shrines ,108 Vaishnavite shrines and 51 Sakti shrines. All the Christian countries such as UK, USA, Canada, Australia issue Christmas stamps every year. I have got hundreds of Christmas stamps with Christmas themes in my album. I have got stamps from Muslim countries in my album with mosques on it. All the Buddhist countries like Sri Lanka, Burma, Thailand, and Laos have issued hundreds of stamps for Buddha. Why shouldn’t we issue stamps for all the one hundred thousand temples in India?  The British boldly issued stamps with Hindu temples, when they ruled India. But secular India issued only stamps with Hindu statues or temples with architecture as its focus. It must issue stamps with religious focus.

 

IMG_8069 (2)

IMG_2688

 

Read also my articles on Panchavati and Muktidham

 

 

 

 

கணக்குப் போடும் நாய்! Post No. 2374

Meet the dog who can count

A bizarre video has emerged from China of a clever dog showing his ability to do maths. In the video, which was captured on Tuesday in Taiyuan, Shanxi Province, the dog’s owner and passersby say simple arithmetic problems to the dog and he taps the answer on a bell with his paw.

படத்தில் கணக்குப் போடும் சீன நாய்!

Written by ச.நாகராஜன்

Date: 9 December 2015

Post No. 2374

Time uploaded in London :– காலை 5-46

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

டிசம்பர் 4, 2015 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

மிருகங்களுக்கு அதீத உளவியல் ஆற்றல் உண்டா?      

.நாகராஜன்

 

 

“தங்களின் சொந்த அறிவைக் கொண்டு மிருகங்களின் அறிவைத் த்வறாகக் கணிக்கின்றனர் மனிதர்கள்” – ஹாலிவுட் மிருகப் பயிற்சியாளர் ரால்ஃப் ஹெய்ஃபர்

மிருகங்களுக்கு அதீத உளவியல் ஆற்றல் உண்டா?

இந்தக் கேள்விக்கு அனுபவ பூர்வமான பதில், உண்டு என்பது தான்! மனிதர்களைப் போலவே மிருகங்களுக்கும் இந்த அதீத உளவியல் ஆற்றல் உண்டு.

 

 

கணக்குப் போடும் நாய்:

கரிடா பார்டரிக்ஸ் என்ற பெண்மணி பாரிஸ் நகரைச் சேர்ந்தவர். 1927ஆம் ஆண்டு அவர் தனது நாய் கணக்குகளைப் போட்டுக் காண்பிக்கிறது என்று கூறி உலகையே அதிசயிக்க வைத்தார்.  தியோடர் பெஸ்டர்மேன் என்பவர் மேடம் கரிடா பார்டரிக்ஸ் தன்னிடம் தனது நாய் கணக்குப் போடுவதை நேருக்கு நேராகச் செய்து காண்பித்தார் என்று எழுதியிருக்கிறார். நாய் அந்தப் பெண்மணியின் கை அசைவுகளைப் பார்த்து கணக்குகளுக்கான விடைகளைச் சொல்கிறது என்று அவர் சந்தேகப்பட்டார். என்றாலும் எந்தக் கணக்கைக் கொடுத்தாலும் நாய் சரியான விடையையே தந்தது!

Enjoying School

Young cute dog in front of blackboard during a math class

 

ப்ளாக் பேர் (BLACK BEAR)  ;

கரும் கரடி என்று அழைக்கப்பட்ட ஒரு குதிரை செய்த  கணக்குகளைப் பார்த்து  யாரும் எந்த விதமான சந்தேகத்தையும் எழுப்ப முடியாமல் போனது! கண்ணுக்குத் தெரியாத சைகைகள், மறைமுகமாகச் சொல்லித் தருவது போன்ற அனைத்து சந்தேகங்களையும் ப்ளாக் பேர் விஷயத்தில் சொல்ல முடியாமல் போனது. அது எல்லாக் கணக்குகளையும் சரியாகப் போட்டதோடு ஒரு போர்டில் உள்ள ஆங்கில எழுத்துக்களைச் சரியாகக் காட்டி பல கேள்விகளுக்கு விடையை வேறு அளித்தது. 1931ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அனைவரையும் மலைக்க வைக்கும் ஒரு அதிசயத்தையும் அது செய்து காட்டியது. சீட்டுக் கட்டிலிருந்து ஒருவர் ஒரு கார்டை எடுத்துத் தன் கையில் ம்றைத்து வைத்துக் கொண்டதும் அவர் கையில் உள்ள கார்டு எது என்பதை அந்த குதிரை சொன்ன போது அனைவரும் திகைத்துப் போனார்கள்! கார்டின் பின் பக்கத்தை மட்டும் பார்த்து அது எப்படி கார்டு இன்னது தான் என்பதைச் சரியாகக் கூறியது என யாருக்கும் புரியவில்லை! சில சமயம் அது பதிலைக் கூற மறுத்தது. ஆனால் பொதுவாக கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறும் அதன் திறனைப் பார்த்து அனைவரும் அசந்து தான் போனார்கள்!

 

math dog

பிறந்த நாளைக் கூறிய ப்ளாக் பேர்!

ப்ளாக் பேருக்குப் பல வித பயிற்சிகளைத் தந்த பயிற்சியாளரின் பெயர்  பாரட்! ப்ளாக் பேரைப் பார்த்து சோதனை செய்யப் பலதரப்பட்டவர்களும் வந்து கொண்டே இருந்தனர். ஃப்ளெட்சர் என்ற பெண்மணிக்கு பிறந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இதை அந்தப் பெண்மணியே நினைவு கூரவில்லை. ஆனால் பாரட் ப்ளாக் பேரிடம்  “ப்ளாக் பேர், ஒரு நல்ல விசேஷமான நாள் நெருங்குகிறது. அது என்னவென்று உன்னால் கூற முடியுமா?” என்று கேட்ட போது ப்ளாக் பேர், “பிறந்த நாள்” என்று சரியாகக் கூறியது.

 

 

இதைக் கேட்ட ஃப்ளெட்சர், “ஆம், அது உண்மை தான்” என்று கூறினார். “சரி, அது என்று வருகிறது என்று உன்னால் கூற முடியுமா” என்று அவர் கேட்டார். “வெள்ளிக்கிழமை அன்று” என்று ப்ளாக் பேர் பதில் கூறியது. “எந்த வெள்ளிக்கிழமை” என்று மேலும் ஃப்ளெட்சர் கேட்க, அது, “ஆகஸ்ட் 3ஆம் தேதி” என்று பதில் கூறியது!

 

 

குதிரைகளும் பேய்களும் :

சர் வில்லியம் பாரட் என்பவர் மிஸ் மாண்ட்கோமரி என்பவரைப் பற்றி தனது நூலில் குறிப்பிடும் அதிசய சம்பவம் பேயைப் பற்றித் தெரிவிக்கிறது. ஒரு நாள் குதிரைகள் பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது  சாலையில் பேய் ஒன்று அந்தரத்தில் மிதப்பதை மாண்ட்கோமரி கண்டார். பேயைக் கண்ட மாத்திரத்தில் குதிரைகள் நின்று அலறின.. தமது முன்னங்கால்களைத் தூக்கிக் கனைத்தன. குதிரைகளுக்குப் பேயை உணரும் சக்தி இருப்பதை அவர் உணர்ந்து அனைவரிடமும் இந்தச் சம்பவத்தைக் கூறினார்.

 

dog

1844இல் ஒரு அதிசயமான சம்பவம் நடந்தது. இதைப் பலரும் தங்கள் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர். பால்டிக் தீவில் ஆஸல் என்ற இடத்தில் குதிரைகள் பல பயந்து போய் திடீரென்று அலறின. காரணம் பூமியில் புதைந்திருந்த ஒரு  சவப்பெட்டியிலிருந்து இடி போன்ற குரல் எழுந்ததினால் தான்!

இதை விவரமாக ராபர்ட் டேல் ஓவன் என்பவர் தான் எழுதிய நூலான ‘ஃபுட்பால்ஸ் ஆன் தி பவுண்டரி ஆஃப் அனதர் வோர்ல்ட்’ (FOOTFALLS ON THE BOUNDARY OF ANOTHER WORLD) என்ற நூலில் எழுதியுள்ளார்.

மிகவும் ஆய்வு செய்த பின்னர் மிகச் சரியாகக் குறிப்புகளிலும் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஏராளமான சம்பவங்கள் மிருகங்களுக்கும் அதீத உளவியல் ஆற்றல் உண்டு என்பதை நிரூபிக்கின்றன!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

அமெரிக்காவைச் சேர்ந்த  பெர்ட் ரீஸ் என்பவர் பிரபலமான மீடியம். அவரைச் சோதனை செய்ய பல விஞ்ஞானிகள் முன் வந்தனர். அவர்களில் ஒருவர் பிரபல விஞ்ஞானி எடிஸன். அவர் கஷ்டமான அறிவியல் கேள்வியை ரீஸிடம் கேட்டார். ரீஸ் தொலைவில் இன்னொரு அறையில் இருந்தார். எடிஸன் தன் அறையில் ஒரு பேப்பரில் ஒரு கேள்வியை எழுதினார் இப்படி:

 

”ஆல்கலைன் எலக்ட்ரிக் பேட்டரிக்கு நிக்கல் ஹைட் ராக்ஸைடு பேட்டரியை விடச் சிற்ந்தது ஏதாவது இருக்கிறதா?” இன்னொரு அறையில் இருந்த ரீஸ் உடனே பதில் எழுதினார் இப்படி:”இல்லை. ஆல்கலைன் எலக்ட்ரிக் பேட்டரிக்கு நிக்கல் ஹைட் ராக்ஸைடு பேட்டரியை விடச் சிற்ந்தது வேறு எதுவும் இல்லை!” எடிஸன் அசந்து போனார்.

 

பரோன்  ஷ்ரெங்க் நோட்ஸிங் என்பவர் ஐந்து கேள்விகளைத் தனித் தனி பேப்பர்களில் எழுதினார் : 1) எனது அம்மாவின் பெயர் என்ன? 2) நீங்கள் ஜெர்மனிக்கு எப்போது போவீ ர்கள்? 3)நான் எழுதிய புத்தகம் வெற்றி பெறுமா? 4) எனது மூத்த மகனின் பெயர் என்ன? ஐந்தாவது கேள்வி அந்தரங்க விஷயம் பற்றிய ஒரு கேள்வி. ஐந்து பேப்பர்களையும் குலுக்கிப் போட்டு ரீஸிடம் தந்தார் பரோன். எந்தச் சீட்டில் என்ன கேள்வி இருக்கிறதென்று யாருக்கும் தெரியாத நிலையில் ரீஸ் அவற்றை ஒவ்வொன்றாகத் தொட்டு சரியான விடைகளை உடனே சொன்னார். பரோன் மிகவும் வியப்படைந்தார்.

 

ஆவி உலகம் பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலரும் ஆவி உலகம் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்!

*************

 

Yatra to Shirdi Baba Samadhi (Post No. 2373)

a78e7-shirdi2bred

Written by London swaminathan

Date: 8 December 2015

Post No. 2373

Time uploaded in London :– 13-37

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

I have heard that Shirdi Sai Baba Samadhi has got good divine vibrations. I have visited Puttaparthi several times from 1964. I was planning to visit Shirdi for several years and at last it happened on 30th November 2015.

 

We travelled from Mumbai via Nashik to Shirdi by car and stayed in a mediocre hotel paying Rs.2000 per double room. My driver told me that there will be tea stalls along the road for those who go to Kakad Arti at 4-30 am. But we skipped it and stood in the queue at 6 am and finished our ‘darshan’ (viewing) by 7 am. Then we had a good breakfast in the Udupi restaurant opposite the temple. While we were queuing, sweet (Boondi) packets were distributed to us as Prasad inside the temple.

26088-img_95232b252822529

 

No mobile, no cameras inside temples– a good policy

In Shirdi Baba’s Samadhi temple, only lady’s hand bags are allowed. l liked the restrictions on mobile phones and cameras inside all the temples. If they allow the mobile phones inside the temples, there will be unnecessary shouting and giggling spoiling the divine atmosphere. Cameras, I pads and mobile phones are used for selfies disrupting other activities. Those who want to take pictures of the temples may be taken in escorted groups for a fee at a specified time.

 

After the ‘darshan’ we went round the temple where there are a few more ‘Samadhis’ (burial places of holy people) including a Muslim devotee’s. Then we queued for the ‘Udi’ holy ash, which is derived from the eternal fire near the Samadhi.

 

There is a very good museum inside the Samadhi complex. Baba devotees would love to see the objects used by Baba during his life time. His disciples’ rare black and white photos are also displayed there.

8eb5f-img_9527

Cheats in the Q

People visit holy places to acquire good virtues, but we saw some cheats in two places. One group of people wearing badges hung in blue strings jumped the Q. Many of us thought they were working there. But  they were actually cheating “devotees”. In Trayambakeswar, one person sent his children first and tried to follow them crying “Oh Bacha, bacha”. These cheats won’t get the blessings of the Lord or the saint.

 

What I don’t like…………………………….

Mahatma Gandhi did a Himalayan blunder by corrupting the famous old Hindu Bhajan song ‘Ragupati ragava rajaram’ by inserting Allah’s name etc. Not many Muslims sang this or uttered Vandemataram. They shouted Allahu Akbar and divided the country. In the same way Sathya Sai Baba devotees corrupted the age old Hindu Bhajans by inserting baba’s name in the last lines saying you are Rama, Krishna, Nanak, Allah, Jesus and Moses. Only  Hindus sing this Bhajan. Not the followers of other religions.

9d09e-shirdi2bquote

I am a devotee of both the Babas. But I don’t like or approve this sort of corruption. The second blunder was showing Arti to a ‘holy man’ instead of God. Great philosophers like Sankara , Ramanuja, Madhwa, Ramakrishna, Ramana, Vallabha never did this. Now following this Puttaparti custom, all fraudulant Babas, Bhagavans and  Anandas inserted their names in the traditional Bhajans and accept Arti for them instead of God!

 

Already ignorant Hindu parents were not able to answer their children’s genuine questions. After two or three generations, the children may wonder whether these fraudulent Swamijis were real Gods or the Hindu Trinity real Gods. Every month we read in the newspapers of an Ananada or Baba or Bhagawan arrested for rape or murder. So it is our duty not to allow such corruptions. But everyone has the right to praise his own Guru separately. It is individual’s belief. What I am opposed is to getting their names included in the traditional Bhajans replacing our Gods’ names.

f127e-img_9526

You may wonder why I mentioned all these things in an article on Shirdi pilgrimage. My taxi driver loaded a newly bought Shirdi CD into his car CD player. The music and voice was beautiful. But the wordings irked me. “You won’t get peace when you go to Banaras or Mathura , you will get it only when you visit Shirdi”. I thought it was too much. You praise Shirdi, but don’t decry the Hindus’ holiest shrine Kasi! If we allow such things, then we need another Adi Shakara who wiped out 96 bad sects of Hinduism and established Shanmatha (Six sects)!

 

Bad Experience in a London Temple

Hare Krishna devotees decry Lord Shiva as demi god. Swaminarayans believe the Brahmin boy Neelakanda as God himself. Some fanatic Vaishnavites don’t even enter the Saivaite temples. I took one such Vaishnavite into London Murugan temple with his wife, because the venue happened to be the temple hall. Since it is the custom of the priests and temple authorities to honour all the speakers who come into temple, I took him into the sanctum sanctorum. As the priests honoured him, they gave him Vibhuti (holy ash) Prasad which he simply threw it on the floor. We were all angry, but yet did not say anything against the visiting guest. It is customary to give the visitor an envelope containing a small gift (amount). The priests who were angry did not present him the envelope. His wife did not insult Lord Muruga/Skanda. When they left the temple, the priests came running to me saying that they wanted to give him the envelope. I commented. “ I know why you didn’t give him in the first place. I also think he did not deserve your honorarium. Please save it for the next guest speaker.”

50c2f-img_2693

In short, we have to stop such parochial attitudes and teach basic Hinduism to our youths like the Chinmaya Mission, Divine Life Society, Ramakrishna Mission and other non-sectarian organisations. Gurus can be praised and sung, without altering the age old hymns and customs.

1f614-img_2700

bada7-img_27012b252822529

Street Vendors in Shirdi

Om Sri Sai Ram!!!

எனது ஷீரடி யாத்திரை! Post No. 2372

Written by London swaminathan

Date: 8 December 2015

Post No. 2372

 

Time uploaded in London :– 6-41 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தத்தாவதார ராதகுரு சாயி

கஜலா தாவு தாவா பாயி

 

எனது டயரியில் (Diary) வைத்திருக்கும் படங்களில் ஒன்று சீரடி சாய் பாபா படம். அதன்கீழ் “தத்தாவதார ராதகுரு சாயி. கஜலா தாவு தாவா பாயி” என்று எழுதியிருக்கும். பொருள் தெரியாமலேயே, இந்த ஸ்லோகத்தைப் படித்துவிட்டு அன்றாட வேலைகளைத் துவக்குவேன். பாபாவின் பொன்மொழிகளில் பிடித்தது “நானிருக்க பயமேன்?” Why fear when I am here?

 

1964-ம் ஆண்டுமுதல் பல முறை புட்டபர்த்திக்குச் சென்று ஸ்ரீ சத்யபாபாவைத் தரிசனம் செய்துள்ளேன். அதுமுதல் சீரடி பாபா பற்றி கேள்விப்பட்டு பல நூல்களில் சீரடி பாபா செய்த அற்புதங்களைக் படித்தறிந்தேன். புட்டபர்த்திக்குப் போனதுபோலவே சீரடிக்கும் போகவேண்டுமென்று பல ஆண்டுகளுக்குத் திட்டமிட்டு இறுதியில் அந்த ஆசை 2015 நவம்பர் 30ஆம் தேதி நிறைவேறியது.

 

பம்பாயிலிருந்து நவம்பர் 29ஆம் தேதி புறப்பட்டு நாசிக் சென்றோம். அங்கிருந்து 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான த்ரயம்பகேஸ்வரம் சென்றுவிட்டு, பஞ்சவடி (Panchavati), முக்திதாம் (Muktidham) ஸ்தலங்களை தரிசித்துவிட்டு (இவை பற்றி அடுத்த கட்டுரையில் காண்க)  இரவு சீரடியில் தங்கினோம். ஒரு நடுத்தர ஹோட்டலில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்வீதம் (Double Room) டபுள் ரூம் (இரண்டு படுக்கை அறை) எடுத்தோம். கோவில் ஐந்து நிமிட தூரத்தில் இருந்தது. காலையில் ஆறு மணிக்கு போய் வரிசையில் நின்றோம். 45 நிமிடங்களில் பாபாவின் சமாதியுள்ள சந்நிதியில் நின்று தரிசித்தோம். நல்ல சூழ்நிலை. காலை நாலு மணிக்கு காகடி (Kakadi) ஆரத்தி இருந்த போதிலும் அதற்குச் செல்லவில்லை.

எங்களை அழைத்துச் சென்ற டாக்ஸி டிரைவர், இது கூட்டமில்லாத ஒரு நாள் என்றார். பொதுவாக வியாழக்கிழமை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமிருக்கும் என்று சொன்னார். காலையில் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போதே பாபாவின் ஆரத்தி பாடல்கள், சஹஸ்ரநாமம் முதலியன ஒலிபெருக்கி மூலம் காதில் விழுந்தது.

 

கோவிலுக்குள் பாபா சந்நிதியை தங்க கவசத்தால் அலங்கரித்துள்ளனர். ஆயினும் மொபைல் போன், கேமரா, மற்றும் வீடியோ புகைப்படக் (Mobile Phones, Cameras, Video Equipments) கருவிகளுக்கு அனுமதியில்லை.

 

ஒரு ஐடியா (IDEA) / யோஜனை!

இது எனக்கு மிகவும் பிடித்த பாலிஸி. ஏனெனில் வெறி பிடித்ததுபோல் மொபைல் போனில் கத்துவதும், அல்லது இளம் பெண்களும் ஆண்களும் மொபைனில் “கிளுக் கிளுக்”கு என்று சிரித்து நமக்கு எரிச்சல் ஊட்டுவதும் இருக்காது. மேலும் ‘’செல்பி’’ (Selfie) எடுப்பது போல முன்னாலுள்ள பின்னாலுள்ள அழகிகளைப் படமெடுக்கும் வாய்ப்புகளும் இராது. ஆகவே எந்த இந்துக் கோவிலிலும் மொபைல் போன், காமெராக்களைப் பிடுங்கிவைக்க வேண்டுமென்பதை பலமாக ஆதரிப்பவன் நான். எனக்கும் புகைப்படமெடுத்து போட ஆசைதான். அத்தகையோருக்கு கோவில் நிர்வாகம் தனி நேரம் ஒதுக்கி, ‘’எஸ்கார்ட்’’ (Escort) செய்து அழைத்துச் செல்லலாம். அதற்குத் தனி கட்டணம் வசூலிக்கலாம். ஐம்பது ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான கோவில்களுக்குச் சென்றதில் கண்டுபிடித்த ஒரு உண்மை இதோ:—-

“சாமி கும்பிடச் செல்லும்போது கலை அழகு ரசிக்கச் செல்லாதே; புகைப்படம் எடுக்காதே.

புகைப்படம் எடுக்கவோ, சிலை அழகுகளை ரசிக்கச் சென்றாலோ சாமியை மறந்து விடு” – இது எனது பொன்மொழி!!

 

முஸ்லீம் சமாதி:

சீரடி பாபா கோவிலுக்குள் பல பாபா பக்தர் சமாதிகளும் உள்ளன. சில முஸ்லீம் பக்தர்கள், அவருடைய நெருங்கிய பக்தரான ஏ.எஸ். ஐயர் சமாதி ஆகியன உள்பட குறைந்து நாலு சமாதிகளை வலம் வந்துவிட்டு, பாபா விபூதி பொட்டலம் கொடுக்குமிடத்தில் கீயூ (Queue) வில் நின்று அதையும் வாங்கினோம். உண்டியலில் காசு போட்டோம். இந்த விபூதி ‘உடி’ எனப்படும். சமாதியில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் அக்னியின் சாம்பல் இது.

 

சமாதியில் மியூசியம்

சமாதி காம்பவுண்டுக்குள் பபவின் மியூசியமும் உள்ளது. இதில் அவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் உள்ளன. அரிய புகைப்படங்களும் உள்ளன. இவ்வளவு விஷயங்களையும் வேறு எந்த புத்தகத்திலும் கண்டதில்லை. பாபா பக்தர்கள் பார்க்கவேண்டிய இடம்.

கோவிலுக்கு வெளியே தேநீர்க்கடை

எங்களை அழைத்துச் சென்ற பம்பாய் தமிழ் டிரைவர் அடிக்கடி அங்கே செல்வதால் காலை நாலரை மணி முதல் சாலையின் இருமருங்கிலும் டீ விற்பார்கள் என்று சொல்லியிருந்த்தார். அது உண்மைதான். கோவிலுக்கு அதிகாலை 4 மணிக்குப் போவோர் டீ அருந்திச் செல்லலாம். இது நல்ல (Idea) ஐடியா. மற்ற தலங்களிலும் இதைப் பின்பற்றலாம். பேப்பர் கோப்பைகள் (Paper Cups) என்பதால் சுகாதாரம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சாப்பிட்டவுடன் நாமே அவைகளைக் கசக்கித் தூக்கி எறிந்துவிடலாம்.

 

நல்ல பிசினஸ் (Business)

நாங்கள் சென்ற கோவில்களுக்கு வாசலில் நூற்றுக் கணக்கான இடங்களில் “இங்கே உங்கள் , காமெராக்களை விட்டுச் செல்லுங்கள், மொபைல் போன்களை விட்டுச் செல்லுங்கள், பூ வாங்குங்கள், செருப்புகளை விட்டுச் செல்லுங்கள்”— என்று வணிகர்கள் நச்சரிக்கிறார்கள். கோவில் நிர்வாகம் இதை ஏற்பாடு செய்யாததால், அவர்களில் ஒருவரை நம்பி காமெரா, போன் – ஆகியவற்றை விட்டுச் சென்றோம். திரயம்பகேஸ்வரர் கோவிலில் நாங்கள் கொண்டு சென்ற பூக்களை சந்நிதிக்குள் நுழையும் முன்னரே ஒரு பெண் வாங்கி ஒரு கூடையில் போட்டுவிட்டு இரண்டு மூன்று பூக்களை நமக்கு பிரசாதம் என்று கொடுக்கிறார். ஆனால் சீரடியில் பாபா சமாதி வரை பூக்களைக் கொண்டு செல்லலாம். பிரசாதமும் பெறலாம்.

 

நாங்கள் வரிசையில் நின்று சமாதியை அடையும் முன்னரே ஒருவர் வந்து மலைபோல பிரசாத பாக்கெட்டு (Packets) களைக் குவித்தார். அதில் சுவையான இனிப்பான பூந்திப் பிரசாதம் இருந்தது. உங்களுக்கு விருப்பமிருந்தால் சர்க்கரை உருண்டை பிரசாத பாக்கெட்டும் வாங்கிச் செல்லலாம்.

 

சீரடியிலும் விஷேச தரிசன வசதிகள் உண்டு. முதியோர்கள் ஒருவரை துணைக்கு அழைத்துச் சென்று விரைவில் தரிசிக்கலாம். மின்னணுப்பதிவின் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து விரைவில் திரும்பிவரலாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் நேரம் முதலிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

சீரடி பாபா சமாதி முகப்பு தோற்றம்

 

ஏமாற்றுப் பேர்வழிகள்!

எல்லா மதங்களும் சொல்லித்தருவது – சத்தியத்தைக் கடைப்பிடி; உண்மையாக இரு, அன்பாக இரு. இதைக் கடைப் பிடிப்போர், வேறு எந்த தெய்வத்தையும் வணங்கத் தேவையில்லை. ஆனால் பாபாவின் அருளைப் பெற வந்த ஒரு கும்பல், ஒரு நீல நிற கயிற்றில் ஒரு பாட்ஜை அணிந்துகொண்டு, ஏதோ அங்கு வேலை பார்ப்போர் மாதிரி எல்லாரையும் முந்திக் கொண்டு சென்றது. இந்தக் கும்பல் பாபாவைக் கும்பிட்டென்ன பயன்? கும்பிடாமல் போனால் என்ன? கழுதை, கழுதையே!

 

எனக்கு பிடிக்காத விஷயம் இரண்டு!!

புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா கொண்டுவந்த புதிய பழக்கம் இப்பொழுது இந்து மதத்தை விஷமாக அரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடைய ஞானிகள் பாடிவைத்த அருமையான, சக்தி வாய்ந்த பஜனைப் பாடல்களில் எல்லாம் கடைசி வரியை மாற்றி பாபாவின் பெயரைப் புகுத்தினர். இது தவறு – மிகப் பெரிய தவறு. பாபாவைப் புகழ்ந்து பாடுங்கள் அவரே கடவுள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் பாடல்களில் கை வைக்காதீர்கள்.

 

இப்பொழுதே நமது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் கேட்கும் நூற்றுக் கணக்கான கேள்விகளுக்குப் பெரும்பாலான பெற்றோர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. இதற்கு அடுத்த தலைமுறை “நேற்று வந்த பாபாதான் கடவுள்” என்று பாடினால் அவர்கள் குழம்பிப்போவார்கள். ஆகையால் தயவு செய்து ட்ரடிஷனல்’ (Traditional) /சம்பிரதாய பஜனைகளை மாற்றாதீர்கள். பாபா பற்றி தனியே பாடுங்கள், ஆடுங்கள்— அது உங்களின் தனி உரிமை.

இதே போல பாபா கொண்டுவந்த மற்றொரு வழக்கம்- காட்டுத் தீ போல பரவி வருகிறது- அதாவது தனி மனித தீபாரதனை. எனது அப்பா, அம்மா, குருமார்கள், சங்கராசார்யார்கள் எல்லோரும் கடவுள் படங்களுக்கும் சிலைகளுக்கும் தான் ஆரத்தி (Arti) காட்டினர். இன்றோ பாபாவைப் பார்த்து, தோழான், துருத்தி, குப்பன், சுப்பன் எல்லாம் – ஆனந்தா பெயரைச் சேர்த்து வைத்துக்கொண்டு தனக்கு தீபாரதனை வாங்கிக் கொள்ளுகின்ரனர். பின்னர் அந்த பாபாக்கள், ஆனந்தாக்கள் எல்லாம் கொலை வழக்கிலும், கற்பழிப்பு வழக்குகளிலும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் (கம்பி எண்ணுதல்= சிறைவாசம்).

 

ஏன் இந்தப் புலம்பல்?

சீரடி விஷயம் எழுதப் போய், திடீரென இதை ஏன் எழுதுகிறேன் என்று நீங்கள் வியக்கலாம். காரணம் என்ன? தமிழ்நாட்டில் சில அயோக்கியர்கள், இப்படி பாபா வேஷம், பகவான் வேஷம், ஆனந்தா வேஷம் போட்டு காசு பணம் அடிப்பதை நான் அறிவேன். மேலும் சீரடியில் எனது டாக்ஸி டிரைவர் வாங்கிய ஒரு புதி சி.டி.யைக் (Compact Disc) காரில் போட்டு ‘சுவிட்’சை அமுக்கினார். அருமையான குரல், அருமையான மியூசிக் (Music) ஆனால் பாடலின் பொருள்: காசி, மதுரா சென்றபோதெல்லாம் கிடைக்காத அருள் ஆனந்தம், சீரடி சென்றால் கிடைக்கும்!!!!! நீ ராமனுக்கு மேல், அல்லாவுக்கு மேல், ஜீசசுக்கு மேல், மோசசுக்கு மேல் என்று ஒரே பிதற்றல்!!

இந்துக்களின் வீக்னெஸ் Weakness/ பலவீனம்

மஹாத்மா காந்தி செய்த பயங்கரத் தவற்றை (ஹிமாலயன் பிளண்டர் HIMALAYAN BLUNDER), பாபா பக்தர்கள் பின்பற்றுகின்றனர். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நாம் பாடும் ரகுபதி ராகவ ராஜா ராமில் அல்லா, குல்லா என்ற வார்த்தைகளை நுழைத்து பாடலை களங்கப் படுத்தினார் காந்தி. அதையே பர்த்தி, சீரடிக்காரர்களும் பின்பற்றி பிதற்றத் துவங்கிவிட்டனர். அல்லாவை, ஏசுவை, நானக்கை, மோசசை சேர்க்க நமக்கு உரிமையுமில்லை, தேவையுமில்லை. அப்படிப் பாடுவதற்கு அந்தந்த மதத்தினர் முன்வர வேண்டும்.  காந்தி பாடிய ரகுபதி ராகவ ராஜாராமை முஸ்லீம் எவரும் பாடுவதில்லை. காந்தி சொன்ன வந்தே மாதர கோஷத்தை ஏற்க மறுத்து அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பாகிஸ்தானை உருவாக்கினர். இந்தப் பாடத்தை இந்துக்கள் மறக்கக்கூடாது.

 

ஷீரடி: சமாதியின் நுழை வாயில்

 

எனக்கு பயங்கர அனுபவம்!!!

ஒரு முறை பிரபல தமிழ் உபந்யாசகர் ஒருவரை லண்டன் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். முருகன் சந்நிதியில் விபூதி கொடுத்தவுடன் அதை வாங்கி, அர்ச்சகர் முன்னிலையிலே கீழே போட்டுவிட்டார். எனக்கும் அவர்களுக்கும் ரத்தம் கொதித்தது. ஆயினும் கடவுள் சந்நிதி என்பதால் அவரை மன்னித்து விட்டனர். நானும் அவரை உபந்யாச ஹால்/ மண்டபம் அங்கிருப்பதால்தான் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். யார் வந்தாலும் அவர்களுக்குரிய மரியாதை செய்து அர்ச்சகர்கள் ஆளுக்கு ஐந்து பவுன் போட்டு ஒரு ஐம்பது பவுனை ஒரு கவரில் போட்டுக் கொடுத்து, மரியாதை செய்வது அவர்களுடைய வழக்கம். ஆகையால்தான் சந்நிதியில் நுழைய நேரிட்டது. ஆனால் அவருடைய மனைவி, முருகனை அலட்சியம் செய்யாமல் விழுந்து கும்பிட்டார். அவர்களிருவரும் காரில் ஏறிச் சென்றவுடன் அர்ச்சகர்கள் அந்த பண உறையுடன் ஓடிவந்தனர். “முதலில் நாங்கள் கொடுக்கத் தயங்கினோம். நீங்கள் கூட்டி வந்ததால் கொடுப்பது முறை என்று ஓடிவந்தோம்” என்றனர். நான் சொன்னேன்: நீங்கள் செய்தது மிகவும் சரியே! நானும் இதையேதான் செய்திருப்பேன். இந்தப் பணத்தை அடுத்த உபந்யாசகருக்குப் பயன்படுத்துங்கள்” – என்றேன்.

 

இதே போல ஹரே கிருஷ்ணா இயக்கத்திலும் பல பிருஹஸ்பதிகள், அசமஞ்சங்கள் உண்டு. ராமனையும், கிருஷ்ணனையும், போற்றிப் பரவி ஆடிப்பாடி, உச்சுக் குடுமியுடன் தெருவில் தேர் இழுத்துவந்து, வாழ்நாள் முழுதும் குடி, கூத்து இன்றி, முழு வெஜிட்டேரியனாக இருப்பதால் அவர்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. ஆனால் இத்தனைக்கும் நடுவில் சிவ பெருமானை டெமி காட்/ உப தேவதை (DEMI GOD) என்று வலிய, வம்புக்கு இழுத்துப் பேசும்போது “அடப் பாவி மகன்களா! ஒரு குடம் அமிர்தம் கொண்டு வந்து அதில் ஒரு சொட்டு விஷம் சேர்க்கிறீர்களே” என்று மனதுக்குள் நொந்துபோவேன்.

 

 

குஜராத்தி ஸ்வாமிநாராயணன்களும் இதே போலத்தான். அவர்களுக்கு ஸ்வாமிநாராயணன் என்பவர் நீலகண்டன் என்ற பிராமணச் சிறுவன் என்பதுகூடத் தெரியாமல் அவர்தான் ஆதி தெய்வம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ஆயினும் பல பாபாக்களும், பகவான்களும், ஆனந்தாக்களும் செய்த மிகப்பெரிய நன்மை:– வேற்று மதங்களில், இந்துக்கள் போய் விழாமலிருக்க, இவர்களுடைய கவர்ச்சி உதவுகிறது. அதுவும் சத்ய சாய்பாபா போன்றோர் செய்த பொதுநல சேவைகளும் இமயம் போல உயர்ந்தவை. அவருடைய கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனைகளும், குடிநீர்திட்டங்களும் அவர்தம் புகழை எந்நாளும் காப்பாற்றும், போற்றும்.

ஷீரடியில் பிச்சைக்காரர்கள்

 

நாம் என்ன செய்ய வேண்டும்?

சின்மயா, சிவானந்தா ஆஸ்ரமம் போல பேஸிக் BASIC/ அடிப்படை இந்துமத தத்துவங்களைப் போதிக்க வேண்டும். ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகளின் ஆழ்ந்த தத்துவங்களையும் புனிதக் கொள்கைகளையும் போதிக்க வேண்டும். பழைய பாடல்களில் வேற்று மதத்தினரின் பெயர்களைச் சேர்த்தாலோ, தனி மனிதரைத் தெய்வம்போலப் பாராட்டி தீபாரதனை , ஆரத்தி காட்டினாலோ அவர்களிடமிருந்து ஒதுங்க வேண்டும்; புராதன இந்துமதத்தை ‘’கரப்ட்’’ CORRUPT ஆகாமல், துருப்பிடிக்க (RUSTY) விடாமல் காப்பது நம் கடமை.

ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ரமணர் போன்றோரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும்.

ஷீரடி பாபாவுக்கு நமஸ்காரம்! புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவுக்கு நமஸ்காரம்.

 

 

சீரடியில் சமாதியருகே சிறு வியாபாரிகள்.

-சுபம்-

 

ஆவிகள் மூலம் அற்புத இசை! Post No. 2371

pepito2

 

Written  by S NAGARAJAN

Date: 8 December 2015

Post No. 2371

 

Time uploaded in London :– 5-35 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடரில் நவம்பர் 27,2015 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளியானது.

ஆவிகள் மூலம் அற்புத இசை வழங்கிய இசை மீடியம்கள்!

 

.நாகராஜன்

இருபதாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் ஆவி உலக ஆராய்ச்சி உச்ச கட்டத்தை அடைந்தது.விஞ்ஞானிகள் கூப்பிட்ட இடங்களில் எல்லாம் சென்று மீடியம் என்று அழைக்கப்படும் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்வோரை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

 

பல மீடியம்கள் மோசடிப் பேர்வழிகள் என்பதை அவர்கள் நிரூபித்தனர். பல கேஸ்களில் நடந்த நிகழ்வுகளுக்கு விஞ்ஞான ரீதியாக பதில் சொல்ல முடியாமல் அவர்கள் திகைத்தனர்;

இந்த மீடியம்களில் இசைத்துறை விற்பன்னர்களாக இருந்த சில ஆவிகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன.

 

 

உணர்வுடன் தன் இயல்பில் இருக்கும் போது அவர்களால் பாட முடியவில்லை. ஆனால் ஆவி உலகத் தொடர்பால் ஆவிகளுடன் தொடர்பு கிடைத்த போது பிரமிக்க வைக்கும் இசை மேதைகளாக அந்த நிலையில்  மட்டும் அவர்கள் மாறினர்!

1900 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது. பெபிடோ அரியோலா (Pepito Ariola) என்ற ஸ்பெய்ன் தேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவன் இண்டர்நேஷனல் சைக்கிகல் காங்கிரஸில் பேராசிரியர் ரிச்சட் (Professor Richet) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டான். அவர் பாரிஸில் பிஸியோலோஜி துறையில் பேராசிரியராக இருந்தார்.

குழந்தை ஒரு வருடத்திற்கு முன்பாகவே அதாவது இரண்டரை வயதில் பியானோவை இசைக்க ஆரம்பித்தது. தன் பிஞ்சு விரல்களால் எப்படியோ பியானோவில் உயர்ந்த ரக இசையைத் தந்தது. பியானோவை இசைக்கும் போது மட்டும் அதன் விரல்கள் வளர்ந்தது போல இருந்தது. இல்லாவிட்டால் எப்படி அந்தக் குட்டி விரல்கள் அப்படிப்பட்ட இசையை அள்ளித் தர முடியும்! ஒவ்வொன்றும் மணி மணியான இசைப் பாடல்!

 

நமது திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தோடுடைய செவியன் எனப் பாட ஆரம்பித்து பல்லாயிரம் பாடல்களைத் திருநெறிய தமிழாகத் தந்ததை இங்கு நினைவு கூரலாம்.

 

ப்ளைண்ட் டாம் என்னும் நான்கு வயதுக் குழந்தை சவுத் ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒரு நீக்ரோ குழந்தை. அந்தக் குழந்தையை முட்டாள் என்றே சொல்லி விடலாம்; ஒன்றுமே அதற்குத் தெரியாது. ஆனால் பியானோவில் வெள்ளை மற்றும் கறுப்பு ‘கீ’களை இரண்டு கைகளாலும் அமுக்கி இசையைத் தர ஆரம்பித்து விட்டால் அது தேவ கானமாக இருக்கும், தனது ஐந்தாம் வயதில், அவன் ‘ரெய்ன் ஸ்டார்ம்’ (Rainstorm) என்ற இசையைக் ‘கம்போஸ்’ செய்து பியானாவோல் இசைக்க ஆரம்பித்தான். இதை மழையும் காற்றும் இடியும் தன்னிடம் சொன்னதாக அவன் கூறினான்.

 

ஒரே சமயத்தில் இரண்டு டியூன்களை அவனால் பியானோவில் இசைக்க முடிந்தது. ஒரு கையால் ஒரு டியூனும் இன்னொரு கையால் இன்னொரு டியூனையும் அவன் இசைத்துக் காட்டி வாயால் இன்னொரு பாடலைப் பாடி அனைவரையும் அசத்தினான். அரங்கத்தில் குழுமி இருந்தோரில் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க அதற்கேற்றபடி டியூனை அவன் வாசித்துக் காட்டினான்.

 

பிரான்ஸை சேர்ந்த மீடியம் ஒருவரின் பெயர் ஜார்ஜ் ஆல்பர்ட்.. இவருக்கும் இசைத்துறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் ஆவி உலகில் இருக்கும் அற்புதமான இசை மேதைகளால் பியானோவை வாசிப்பதாகக் கூறி பியானோவை வாசித்துக் காட்டினார். 1906ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஜெனரல் சைக்கோலொஜிக்யூ’ என்ற நிறுவனம் இவரை ஆராய முன் வந்தது.

 

 

அவர் சுய உணர்வுடன் தன் திறமை மூலமாக பியானோவை வாசிக்க இயலாதபடி பல சோதனைகள் நடத்தப்பட்டன. ஆய்வை நடத்தியவர்கள் மொஜார்ட் சொனாடாவை இசைக்கும் படி வேண்டினர். அவர் கண்களைக் கட்டினர். இரண்டு கிராமபோன்கள் ஒரே சமயத்தில் இசைக்க, அதிலிருந்து டியூபுகள் அவர் காதில் செருகப்பட்டன. அவரோ மொஜார்ட் இசையை கச்சிதமாக அப்படியே வாசித்து அவர்களை பிரமிக்க வைத்தார்.

 

இன்னொரு சோதனையில் அவரிடம் தரப்பட்ட ஒரு பெரிய தத்துவ நூலை அவர் மெதுவாகப் படித்துக் கொண்டே பியானோவை இசைத்துக் கொண்டிருந்தார்! அவரிடம் வந்த ஆவி உலக இசை மேதைகள் : பீத்தோவன், பெர்லியாஸ், மெண்டெல்ஷான், மொஜார்ட், சோபின், ஷுமன், லிஸ்ஜ்ட், வேக்னர் உள்ளிட்ட பல இசை மேதைகள்!

 

அவரது சுய கல்பனைகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்ஸ்டிடியூட்டால் ரிகார்ட் செய்யப்பட்ட அவரது இசை தொலைந்து போய் விட்டது. 1920ஆம் ஆண்டு பாரிஸில் லா மெடிமின்டே ஸ்ப்ரிட் என்ற இடத்தில் ஒரு நிகழ்வில் தனது ஆவி உலகத்துடனான தொடர்பையும் எப்படி இசைமேதைகள் தன்னுள் ‘பிரவேசித்து’ இசை நிகழ்ச்சிகளை நடத்தினர் என்பதையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

 

1903 ஆம் ஆண்டு டீ பாயொன் என்ற பிரான்ஸ் தேசத்து இசை மீடியத்தை லண்டனில் கவுண்ட் ஹாம்மன் என்பவர் அறிமுகப்படுத்தினார். அவர் விக்டோரியா காலத்து சிறப்பு இசையான சர்டோ உள்ளிட்ட இசையை அவர் பிரமாதமாக வழங்கினார். தான் என்ன இசைத்தோம் என்பது அவருக்குத் தெரியவே தெரியாது. அவரது விரல்கள் விளையாடும்! ஒரு தரம் இசைத்ததை மறு தரம் அவரால் இசைக்க முடியாது!

 

இப்படிப் பலரும் ஆவிகளின் உதவியால் ‘இசை மேதைகளாக’ மாறியதைத் துல்லியமாக ஆய்வேடுகள் விளக்குகின்றன. சிலரைப் பொய் என்று விஞ்ஞானிகள் நிரூபித்த போதும் மேலே கூறப்பட்ட பல இசை மீடியம்களை விஞ்ஞானிகள் வியப்புடன் தான் பார்க்க முடிந்தது!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

விண்வெளியில் பறந்த விண்வெளி வீரர்களின் மீது பல விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. 1992இல் கெல்லி மற்றும் கனஸ் ஆகியோரால் நடத்தப்பட்ட ஆய்வில் 54 விண்வெளி வீரர்கள் பங்கு கொண்டனர். இவர்கள் அனைவருமே விண்வெளியில் பறந்தது பரவசமான ஒரு அனுபவம் என்று கூறினர். விண்வெளியில் பறந்த அனுபவம் தகவல் தொடர்பில் மிகப் பெரும் முன்னேற்றத்தைத் தங்கள் வாழ்க்கையில் தந்ததாகவும் அவர்கள் கூறினர். 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தால் தாங்கள் சிறந்த ஆன்மீகவாதிகளாக ஆகி விட்டதாகத் தெரிவித்தனர். அத்தோடு நாடு மொழி என்ற குறுகிய எல்லையை விட்டு உலகளாவிய அளவில் எதையும் நோக்கும் பிரபஞ்ச பார்வை தங்களுக்கு வந்து விட்டதாகக் கூறினர்.

 

இன்னொரு ஆய்வு உளவியல் மற்றும் நடத்தை ரீதியாக நடத்தப்பட்டது. இதில் நடத்தையில் 34 விதமான மாற்றங்கள் விண்வெளி வீரர்களிடம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மனச் சோர்வு, விரக்தி, ஞாபக மறதி,  உள்ளிட்ட எதிர்மறை விளைவுகள் இந்த 34 மாற்றங்களில் அடங்கும். இவர்கள் அனைவருக்குமே பொதுவாக இருந்த ஒரு மாற்றம் அட்ஜஸ்ட்மெண்ட் டிஸ்ஆர்டர் என்பதாகும். நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டதால் நேரம், நாள், பேச்சு, நினைவு உள்ளிட்ட ஏராளமான விஷயங்களில் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்வது பெரிய காரியமாகி விட்டது என்பது இவர்களின் அனுபவம்!

 

 

ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தீர்க்கமான ஆய்வை நடத்திய பின்னரே விண்வெளியில் இன்றைய வெற்றியை விஞ்ஞானம் கண்டுள்ளது!

**************

 

3 JAIL ANECDOTES (Post No. 2370)

Jail_Cell

Compiled by London swaminathan

Date: 7 December 2015

Post No. 2370

 

Time uploaded in London :– 16-52

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

In the first days of the governorship of the State of New York, Al Smith spoke to the assembled inmates of Sing Sing Prison. Not until he had already risen to his feet did he realize that he did not know how to address the particular audience.

 

“My fellow citizens”, he said, almost without thinking, but then stopped, remembering that the citizenship of those there imprisoned was forfeited.

 

Embarrassed he said, “My fellow convicts”, and that too did not seem to be the most just. Giving the thing as hopeless he launched once and for all into the sentence, “Well in any case, I am glad to see so many of you here.”

Vector illustration of a man lock up in prison

Stupid English law

In an English act of parliament there was a law passed for rebuilding Chelmsford jail. By one part of the law the new jail was to be built from the material of the old one; by another part of the law, the prisoners were to be kept in the old jail until the new jail was finished.

 

John Bunyan in Jail

John Bunyan, while in Bedford jail, was called upon by a Quaker desirous of making a convert of him.

 

“Friend John”, said he, “I come to thee with a message from the Lord; and after having searched for thee in all the prisons in England, I am glad I have found thee at last.”

 

“If the Lord has sent you”, answered Bunyan, “you need not have had so much pains to find me out, for the Lord knows that I have been here for twelve years.”

john bunyan

Pilgrim’s Progress of John Bunyan

–Subham—

 

 

 

உடைந்த மெழுகுவர்த்தி கதை! POST No. 2369

broken

Compiled by London swaminathan

Date: 7 December 2015

Post No. 2369

 

Time uploaded in London :– 16-36

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

I have already posted it in English

ஒரு மாதா கோவிலில் கிறிஸ்த பாதிரியார் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அந்த பிராத்தனைக் கூட்டத்துக்கு பலவகைப்பட்ட மக்கள் வந்திருந்தனர். அவர்களில் சிலர் ஏழைகள், சிலர் பணக்காரர். சிலர் உடலூனமுற்றோர், மற்றும் சிலர் நல்ல பலசாலிகள். சிலர் ஆரோக்கியசாலிகள், மற்றும் சிலர் நோயாளிகள்.

 

அவர் சொன்னார்: கடவுள், எல்லோர் மீதும் ஒரே அளவில் கருணையைப் பொழிகிறார்.

 

இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவருடைய கண்கள் திடீரெனப் பளிச்சிட்டன. அவர் எதையோ கண்டுவிட்டார். மெதுவாகப் பேசிக்கொண்டே அதை நோக்கி நடந்தார். அவர் கண்டது, கீழே தரையில் கிடந்த ஒரு மெழுகு வர்த்தி ஆகும். அது உடைந்து கிடந்தது.

 

எல்லோர் முன்னாலும் அதைக் காட்டினார். எல்லோரும் எதற்காக என்று சிந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு தீப்பெட்டியை எடுத்து அந்த மெழுகுவர்த்தியை ஏற்றினார். உடைந்த மெழுகுவர்த்தி, மற்ற எல்லா வத்திகளைப் போலவே பிரகாசமாக எரிந்தது. அது உடைந்தது என்பதற்காக இறைவன் அதற்குப் பிரகாசத்தை மறுக்கவில்லை.

broken 2

கடவுளின் கருணையும் இதே போன்றதே. சூரியனின், சந்திரனின் ஒளி எப்படி வேறுபாடின்றிப் பாய்கிறதோ அப்படியே இறையருளும் அனைவர் மீதும் பொழிந்து கொண்டிருக்கிறது.

 

சுவாமி ராமதாஸ் சொன்ன கதை; தமிழ் மொழிபெயர்ப்பு—லண்டன் சுவாமிநாதன்

–Subham–