மரணத்தை முன்னறிவித்த கோயம்புத்தூர் செட்டியார்!(Post No.2591)

IMG_3563 (2)

Compiled by london swaminathan

Date: 2 March,2016

 

Post No. 2591

 

Time uploaded in London :–  14-35

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் பல பழைய புத்தகங்களைப் புரட்டுகையில் கோயம்புத்தூர் ஸ்ரீ கிரந்தி வேங்கட கோபலார்யா பற்றிய ஒரு அதிசய விஷயம் கடைசி பக்கத்தில் இருந்ததைப் படித்தேன். தான் இன்ன தேதியில் இறப்பேன் என்பதை அறிவித்து, அதே தினத்தன்று பலர் சூழ இறந்தார். இது போல எத்தனையோ பேர் முன்கூட்டி மரணத்தை அறிவித்த சம்பவங்கள் இந்துமத பெரியோர்கள் சரித்திரத்தில் இருக்கின்றன. இதோ அந்தப் பக்கங்கள்:–

 

 

IMG_3578

 

 

IMG_3577

 

IMG_3576 (2)

 

IMG_3575

 

–சுபம்–

 

 

 

A whip for a fool, and a rod for a school (Post No.2590)

siva's 12 shrines

31 Golden Sayings on DISCIPLINE in this month’s calendar

 

March, 2016 Good Thoughts Calendar

 

Compiled by london swaminathan

Date: 2 March,2016

 

Post No. 2590

 

Time uploaded in London :–  9-10 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

Festivals in March, 2016: 7- Mahasivaratri, 9- Solar Eclipse, 14- Karadaiyan Nonbu, 22-Holi, 23- Panguni Uttaram, 25- Good Friday,27- Easter Sunday, 28- Easter Monday

 

 

 

Auspicious Days: 6, 10, 11, 18, 25

 

Full Moon/Purnima- 22/23

 

New Moon/Amavasya- 8/9

 

Ekadasi Fasting Days: 5, 19

 

holi-hand

 

March 1 Tuesday

Corn is cleansed with wind, and soul with chastenings.

 

March 2 Wednesday

Reward and punishment are the walls of a city.

 

March 3 Thursday

He that corrects not small faults, will not control great ones.

 

March 4 Friday

The best horse needs breaking, and the aptest child needs teaching.

 

March 5 Saturday

It is the bridle and spur that makes a good horse.

 pasupathinath,nepal

March 6 Sunday

A boisterous horse must have a rough bridle

 

March 7 Monday

The plough goes not well if the ploughman hold it not.

 

 

March 8 Tuesday

Rule youth well, and age will rule itself

 

March 9 Wednesday

Give me a child for seven years, and you may do what you like with him afterwards.

 

March 10 Thursday

Time is the rider that breaks youth.

dj-06-holi-02 

March 11 Friday

A (spoilt) child may have too much of his mother’s blessing.

 

March 12 Saturday

Give a child while he craves and a dog while his tail doth wave

And you will have a fair dog, but a foul knave.

 

March 13 Sunday

A pitiful mother makes scabby (nasty) daughter.

 

March 14 Monday

Dawted (spoilt) daughters make daidling (lazy) wives.

 

March 15 Tuesday

A blate (bashful) cat makes a proud mouse.

 

 

siva girl

March 16 Wednesday

Spare the rod and spoil the child.

 

March 17 Thursday

A whip for a fool, and a rod for a school, is always in good season.

 

March 18 Friday

A woman, a dog and a walnut tree, the more you beat them the better they be – English proverb.

 

March 19 Saturday

He that is sick of a fever lurden (laziness), must be cured by hazel gelding.

 

March 20 Sunday

You may ding (beat) the devil into a wife, but you will never ding (beat) him out of her.

 

holi,ht

March 21 Monday

Happy is he that chastens himself.

 

March 22 Tuesday

He that is master of himself, will soon be master of others.

 

March 23 Wednesday

He is not fit to command others that cannot command himself.

 

March 24 Thursday

He gets a double victory, who conquers himself.

 

March 25 Friday

One eye of the master sees more than ten of the servants.

 

 

holi-kiss

March 26 Saturday

The master’s footsteps fatten the soil, and his foot the ground.

 

March 27 Sunday

A sleepy master makes his servant a lout.

 

 

March 28 Monday

The rod breaks no bones.

 

March 29 Tuesday

Spaniels that fawn when beaten, will never forsake their masters.

 

March 30 Wednesday

Never take the tawse (Scottish leather strap used to punish people) when a word will do the turn.

 

March 31 Thursday

He that cockers (spoils) his child provides for his enemy.

 sivaya nama

–subham-

 

 

கருகத் திருவுளமோ? (Post No. 2589)

green field, hare krsna

Written by S Nagarajan

 

Date: 2 March 2016

 

Post No. 2589

 

Time uploaded in London :–  6-00 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

நாட்டு நடப்பு

கருகத் திருவுளமோ?

 

ச.நாகராஜன்

 

கெட்டதிலும் நல்லதைப் பார் என்று கூறுகின்றன ஹிந்து அற நூலகள்.

 

இது சாத்தியம் தானா? முயல்கிறோம். பார்க்கிறோம்!

சமீபத்தில் ஜவஹர்லால நேரு பல்கலைக் கழகத்தில் தலை தூக்கி கோர தாண்டவம் ஆடிய சக்திகள் இரண்டு விஷயங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன:

 

 

  • தாங்கள் தேச துரோக சக்திகள் என்பது.
  • தாங்கள் ஹிந்து விரோத சக்திகள் என்பது.

 

 

இந்த இரண்டையும் இணைத்து ஒரு தூண்டுதலைச் செய்தால் ஆங்காங்கு விதைக்கப்பட்டிருக்கும் இந்த தீய சக்திகளின் ஆதரவுகள் தலை தூக்கி ஆடும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்தக் கெடுதலிலும் ஒரு நல்லதையே நாம் பார்க்கிறோம்.

 

 

நமது நாட்டின் இராணுவம் உலகின் தலை சிறந்த ராணுவம் என்றாலும் தனித் தனியாக தேச துரோக சக்திகளை இனம் காண நாட்கள் ஆகும்.

 

 

நமது நாட்டின் போலீஸ் அற்புதமான நுண்ணறிவுத் துறையைக் கொண்டிருக்கிறது என்றாலும் அதால் கூட அனைத்து ரவுடிகளையும் தேச துரோக சக்திக்ளையும் ஒரே இடத்தில் கூட வைக்க முடியாது.

 

இந்த அரிய காரியத்தை ஜவஹர்லால நேரு பல்கலைக் கழகம் செய்துள்ளது.

 

ஜவஹர்லால் நேருவுக்கு நன்றி. அவர் வாரிசுக்கு வாரிசு வழை வந்த ராகுல் காந்திக்கு நன்றி.

 

ஏன்?

 

இந்த நிகழ்வு மூலம் இவர்களை ஆதரிக்கும் தீய சக்திகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன என்பதையும் சுலபமாகத் தெரிந்து கொள்ள முடிந்து விட்ட்து.

 

ஜவஹர்லால நேரு தந்த வாரிசுச் செல்வம் தேசத் துரோகிகளை நேரில் சென்று பார்த்து ஆதரவை வழங்கியது தீய சக்திக்குத் துணை போவது என்ற குற்றத்தின் பால் படாதா?

 

இந்த தேச துரோகிகளை ஆதரிக்கும் ஊடகங்களை சுலபமாக இப்போது அறிய முடிந்து விட்டதே!

field, HT

இதற்கு வரிந்து கட்டும் காம்ரேடுகள் எங்கெல்லாம் பாக்கட் பாக்கட்டாக குழுமி இருக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டதே!

மொத்தத்தில் தேச துரோக செயல்களைத் தூண்டி விடும் மோசமான அறிவு ஜீவிகள், அன்னிய சக்திகளிடமிருந்து பணமும் தளவாடமும் வாங்கி இந்த நாட்டைத் துண்டாட நினைக்கும் சதிகாரர்கள் ஆகிய அனைவரையும் நன்கு இனம் காண முடிகிறதே!

 

சாமர்த்தியமாக இதை காங்கிரஸ் ப்ளஸ் கம்யூனிஸ்டுக்கும்  பாரதீய ஜனதாவிற்கும் உள்ள கருத்து மோதலாகச் சித்தரிக்கப் பார்த்தால் அந்த  ஊடகங்களை மக்கள் ஒரேயடியாகப் புறக்கணித்து அழித்து விடுவர்.

 

ஏனெனில் கற்பில் ஒரு சதவிகிதக் கற்பு 99 சதவிகிதக் கற்பு என்று கிடையாது. கற்பு என்றால் அது 100 சதவிகிதம் தான்!

அதே போல,

 

தேச பக்தியிலும் விகிதாசார பக்தி கிடையாது.

தேச பக்தி என்றால் அதில் 100 சதவிகிதம் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருக்கும்.

 

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தர பாடுபட்ட காங்கிரஸ் இன்று இருக்கலாம். ஒரு வேளை காந்திஜியின் கனவை மெய்ப்பிக்க நாளையே இல்லாமல் போகலாம்.

 

பி.ஜே.பி என்பது சில காலம் முன்னால் ஜனதா கட்சி. அதற்கும் முன்னர் ஜன சங்கம். நாளை ஒருவேளை இதன் பெயர் இன்னமும் ஒரு முறை மாறலாம். ஆனால் மக்கள் இந்தக் கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தேசத்தை நேரிக்கிறார்கள்..

இன்று பிஜேபிக்கு இந்தியாவே ஒட்டு மொத்தமாகத் தரும் ஆதரவு அந்தக் கட்சிக்காக அல்ல; இந்த தேசத்திற்காக.

இந்த தேசத்தை எதிர்க்கும் தீய சக்திகளை அகற்றுவதற்காக.

இந்த தீய சக்திகளுக்கு காங்கிரஸும் காம்ரேடுகளும் துணை போவார்கள் என்றால் அவர்களை மக்கள் புறக்கணித்துப் புறம் தள்ளி விடுவார்கள்.

 

சட்டம் இவர்கள் மீது தன் கடமையைச் செய்யட்டும்.

யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டார் என்பதைக் கண்ட நீதி அரசர் சுமோடோ அடிப்படையில் தானே வழக்கைப் பதிவு செய்கிறார்.

மாபெரும் தேசத்திற்கு எதிராக சில சின்ன பொடிசுகள் ஆட்டம் ஆட நினைக்கும் போது அதற்குத் தூபமிட ‘பெரிய தல’கள் முன் வரும் போது நாட்டின் உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் தாமே வழக்கைப் பதிவு செய்து விடலாமே

 

இதை சமீபத்தில் 33 வருடம் கழித்துத் தீர்ப்பளித்ததைப் போலத் தீர்ப்பளிக்க கூடாது. ஒரு சில நாட்களிலேயே விசாரித்து இந்த தீமையைச் செய்தவர்களுக்கும் ஆதரவு அளித்தோருக்கும் எதிர்மறை ஊடக சக்திகளுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்.

டிவி சானல்களை உடனடியாக மூடி விட உத்தரவிட வேண்டும்.இதற்கென அப்பீலுக்கும் தடை விதிக்க வேண்டும்.

 

கட்சிகளை விட தேசம் பெரிது! தேசத்திற்கென பாடுபடும் கட்சிகள் மட்டுமே நிலைக்கும் அல்லாதவை அகலும்  அல்லது அழியும்.

 

இந்த வகையில் தேசத்தைக் காக்கும் பிஜேபிக்கு மக்களின் நல்லாதரவு கூடுகிற; இன்னும் கூடும்.

 

ஜ.நே.ப. போன்றவை இந்தியாவிலிருந்து அகலும். இனியும் தேச துரோக சக்திகளை அனுமதிக்க முடியாது.

 

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா?

இப்பயிரைக் கண்ணீரார் காத்தோம்

கருகத் திருவுளமோ?

கருக விடமாட்டோம்!

ஃபேஸ் புக் நல்லனவற்றைப் பரப்ப ஒரு நல்ல சக்தி. அதன் மூலம் வலுவான இந்தியவை உருவாக்குவோம். தேச துரோகிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவொம்.

Five Big Sins, 5 untrustworthy, 5 walking Dead & 5 lowest people! (Post No.2588)

10 BAD QUALITIES

Date: 1st March 2016

 

Post No. 2588

 

Time uploaded in London :–14-58

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

for more articles and pictures.

 

brahmin5

1.Five Great Sins/ Pancha mahaapaataka

Killing of Brahmana- Brahmahatya

Consuming liquor- suraapaanam

Stealing- Steyam

Misbehaving with teacher’s wife- Gurvanga naagamah

Having association with the above – Samsargi

 

Brahmahatyaa suraapaanamsteyam gurvanganaagamah

Mahanti paatakaanyaahustasamsargi cha panchamah

–Manu smrti 11-54

Xxx

dussehra-8

2.Five Untrustworthy

Son in law- Jaamaataa

Cobra – Krsnasarpa

Fire- Agni (Paavaka)

Bad people- Durjana

Sister’s son – Bhaginiisutah

Jaamaataa krsnasarpascha paavakoo durjanastathaa

Visvaaso naiva kartavyah panchamo bhaginiisutah

 

xxx

 

dussehra-16

A Kid scared while A artist dressedup at Ravana enjoying with Spectators during Dussehra celebrations in Sector 46 of Chandigarh on Thursday, October 22 2015. Express Photo by Kamleshwar Singh

3.Five Walking Dead

Poor – Daridra

Diseased –Vyaadhita

Fool -Muurkha

One who lives abroad – Pravaasi

Always servant – nitya sevakah

Jiivantopi mrtah pancha sruuyante kila bharate

Daridro vyaadhito muurkhah pravaasi nityasevakah

xxx

anti god poster

4.Five Karma Candaalaah

Five lowest category of people are:

Atheist – naastikah

Wicked -pisunah

Ungrateful- krtaghnah

Sinner- dirgha dosakah

By birth- janmatah

Naastikah pisunashchaiva krtaghno diirghadosakah

Chatwaarah karmachandaalaa janmataschaapi panchamah

 

Xxx

 

Dussehra Celebrations

The effigy of the evil king Ravana burns during Dussehra Celebrations at Dushera Maidan in Jaipur on Thursday. Express photo by Rohit Jain Paras . 22.10.2015

5.Five afflictions/Klesa

Ignorance – Avidyaa

Egoism – Asmitaa

Desire – Raaga

Aversion – Dvesa

Clinging to life – Abhinivesa

Avidyaa Asmitaa Asmitaa Dvesa Abhinivesaah pancha klesaah

–Yogasuutram 2-3

dussehra-11

Dussehra celebrations at Lal Qula Ground in New Delhi on Thursday Express Photo By Amit Mehra 22 Octobert 2015

–Subham-

 

உலகமஹா கவிஞன் பற்றி ஒரு சுவையான கதை!(Post No 2587)

hindu poets

Date: 1st March 2016

 

Post No. 2587

 

Time uploaded in London :– 9-20

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

for more articles and pictures.

homer

கிரேக்க மகா கவி ஹோமர்(கி.மு.800)

உலகிலேயே மிகவும் பழைய கவிஞன் பெயர் உசனா கவி; அவரை உசனஸ் என்றும் அழைப்பர். கிருஷ்ணன், பகவத் கீதையில் காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழி என்று கூறும் விபூதி யோகத்தில் கவிஞர்களுள் நான் உசனா கவி என்கிறார். அவ்வளவு மிகப்பெரிய கவி அவர். ரிக் வேத காலத்திலேயே அவர் மிகவும் பழங்காலக் கவிஞர் ஆகிவிட்டார். அப்படியா னால் இற்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருப்பா ரென்பது எனது துணிபு.

 

எப்படித் தமிழில் பல கபிலர்கள், பல நக்கீரர்கள், பல அவ்வையார்கள் இருந்தனரோ அதே போல பிற்காலத்தில் வந்த சுக்ராச்சார்யாரையும் உசனா கவி என்றனர்.

ஆயினும் அவருக்கு முந்தி வாழ்ந்த முதல் உசனஸ் பற்றி மனு ஸ்மிருதி ஒரு ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார். அதற்கு உரை எழுதியோர் மஹாபாரதத்திலும் (9-50), பஞ்சவிம்ச பிராமணத்திலும் உள்ள ஒரு சுவையான கதையைச் சொல்லுகின்றனர்.

goethe

இதோ அந்தக் கதை:

ஆங்கிரஸின் புதல்வரான உசனஸ், வயதில் மிகவும் சிறியவர். ஆனால் வேதத்தைக் கரை கண்டவர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. அவர் தன்னைவிட வயதானவர்க ளுக்குப் பாடம் நடத்துகையில், “ஓ! சின்னப் பிள்ளைகளே! நன்றாகக் கவனியுங்கள்” என்று அடிக்கடி சொல்லுவார். வயதானவர்களுக்கோ கோபமும் ஆத்திரமும் வந்தது. இவனே பொடிப்பயல்; இவன் நம்மைப் பார்த்து, சின்னப் பையன்களே (புத்ரஹா) என்று சொல்லுவதாவது என்று முறைத்துப் பார்த்தனர். முகக்குறிப்பால அதிருப்தியைக் காட்டினர். ஆனால் உசனா கவி தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவிலை.

 

எல்லா ரிஷிகளும் ஒரு மஹஜரை எடுத்துக்கொண்டு, கடவுளிடம் போனார்கள். அவரும் சொல்லிவிட்டார், அவன் உங்களை சின்னப் பையன்களே என்று சொல்லுவது சரிதான் என்று! அவன் அறிவினால் தந்தைக்குச் சமமானவன் என்றும் கடவுள் தீர்ப்பு சொல்லி விடுகிறார்!

 

இக்கதையில் மிகப்பெரிய கருத்து உள்ளது. வேதங்களைக் கரைத்துக் குடித்தவனே அறிவாளி; மூத்தவன். மேலும் கவிஞன் என்பவன் தந்தைக்கு சமமானவன்; அவன் முக்காலமும் உணர்ந்தவன்.

dante

டாண்டே படம்

இந்தச் சின்னப் பையன் கதையைக் கோடிட்டு காட்டிய உலகின் முதல் சட்ட நிபுணன் மனு, இரண்டாம் அத்தியாயம் 150 ஸ்லோகம் முதல் பல விஷயங்களைச் சொல்லுகிறார். மனுவின் காலம் கி.மு. 1500 என்று அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ப்யூலர் கூறுகிறார். என் கருத்தும் அதுவே. ஏனெனில் ரிக் வேதத்திலேயே பல மனுக்களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன.

இப்போது எழுத்து வடிவிலுள்ள மனு ஸ்மிருதி, பல இடைச் செருகல்களுடன் உள்ளது. சில பிராமண உற்சாகிகள், சூத்திரர்களுக்கு எதிராக சில ஸ்லோகங்களை நுழைத்துவிட்டனர். எல்லா நூல்களிலும் இடைச் செருகல் பற்றி பிரஸ்தாபிக்கும் வெள்ளைக்காரர்கள், மனு ஸ்மிருதி பற்றி மட்டும் எதுவுமே சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவர்கள், இந்து மதத்தை மட்டம்தட்ட அந்த ஸ்லோகங்களைப் பயன்படுத்துவர்.

Gibraltar-Shakespeare-2014

இந்தச் சின்னப் பையன் கதையுள்ள பிராமணம் என்னும் இலக்கியம், சம்ஹிதைக்குப் பிறகு வந்தது. அதை கி.மு 1000 என்று மாக்ஸ்முல்லர் முதலியோரும் ஏனையோர் அதற்கும் முந்தையது என்றும் செப்புவர். எப்படிப் பார்த்தாலும் கிரேக்க நாட்டு ஹோமர் போன்றோர் தோன்றுவதற்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே உசனா கவி வாழ்ந்தார். ஆக அவரே உலகின் மிகப் பெரிய கவி; உலகின் மிக மூத்த கவி. மேலும் கவி, கவிஞன், கவிதை என்ற சொல்லெல்லாம் அவர் முதற்றே பிறந்தது எனின் மிகையாகாது.

 

சுமேரியாவிலுள்ள ஜில்காமேஷ் கவிதை போன்றவை வேதத்திற்குப் பிற்காலத்தில் வந்தவை. மேலும் மிகவும் நாகரீகத்தில் பின் தங்கியோரால் எழுதப்பட்டவை. ஆனால் வேத காலக் கவிதைகளோ நாகரீகத்தின் உச்சநிலையைத் தொட்ட ஒரு சமுதாயம் இயற்றியது. உலக அமைதி, மனித நேயம் பற்றிப் பாடுகிறது. அவர்களுக்கெல்லாம் மூத்தவர் நம் கவி – உசனா கவி. வேத இண்டெக்ஸ் தொகுத்த கீத், மக்டொனால்டு ஆகிய இருவரும், இந்தப் பெயர் வேத காலத்திலேயே, புராதனப் பெயராகிவிட்டது என்று பகர்வர். கண்ண பிரானும் பகவத் கீதையில் இவரைப் புகழ்வதால் கி.மு 1500 க்கு முன் அவர் வாழ்ந்தது உறுதியாகிறது.

 

அகஸ்தியர், விசுவமித்திரர் போன்ற வேத கால ரிஷிகள் பற்றி புராணங்களில் நிறைய செய்திகள் உள்ளன. ஆனால் உசனஸ் போன்றோர் பற்றி நாம் ஒன்றும் அறிய முடிவதில்லை. இதிலிருந்தே அவர்தம் பழமை வெள்ளிடை மலையென விளங்கும்.

ts eliot

மனு என்ன சொல்கிறார்?

மூத்தவர் என்ற தகுதி நரைமுடியாலோ, செல்வத்தாலோ, பரம்பரையாலோ வருவதில்லை. இது ரிஷிகள் வகுத்த சட்டம்; வேதங்களையும் வேதத்தின் அங்கங்களையும் கற்றவனே நம்மில் உயர்ந்தோன் (2-154 மனு).

பிராமணர்களில் மூத்தவன் வேதம் கற்றோன்;

க்ஷத்ரியர்களில் மூத்தவன், வீரம் மிக்கவன்;

வைஸ்யர்களில் மூத்தவன், அதிக தானியம் வைத்திருப்பவன்.

சூத்திரர்களில் மூத்தவன், வயதில் பெரியவன்! (மனு 2-155)

 

 

வேதத்தைப் படித்தவன், இளைஞனாக இருந்தாலும் அவனே பெரியவன் (2-156)

 

சங்க இலக்கியமான புறநானூற்றிலும் இதுவே வலியுறுத்தப்படுகிறது:

“ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது, அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” – (புறம் 183)

கவி என்றாலேயே அறிஞன் என்று பொருள்!

வாழ்க கவிகள்! வளர்க கவிதைகள்!

-சுபம்-

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்? (Post No 2586)

happy 3

Written by S Nagarajan

 

Date: 1st March 2016

 

Post No. 2586

 

Time uploaded in London :–  8-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஹிந்து வாழ்வியல்

 

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்!

.நாகராஜன்

 IMG_2726

ஹிந்து இலக்கியம் வெற்றி இலக்கியமே

ஹிந்து இலக்கியங்கள் கூறும் வாழ்வியல் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குமான வாழ்வியலாகும்.

ஆனால் அவை பல லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் பொதிந்துள்ளபடியால் எளிதில் பெறுதல் சிறிது கடினம்! ஆகவே, அவற்றை அன்றாடம் அறவோர் மக்களுக்குக் கூறி வந்தனர்.

 

ஆனால் இன்றைய நடைமுறையில் அந்த பழைய கால குரு குல முறை மற்றும் கதா ப்ரவசனங்கள் இல்லை. காடுகளும் பாழ்பட்டுப் போயின; கதை சொல்லும் மண்டபங்களும் பாழாகி இடிந்து வீழ்ந்துள்ளன.

ஆகவே ஆர்வமுள்ளோர் தேடித் தேடி அவற்றைத் தாமே தொகுக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

 

 

நான் ஏன் சந்தோஷமாகவே இருக்கிறேன்!

ஒரு சின்ன எடுத்துக் காட்டாக, ஒரே ஒரு பொருள் பற்றி சில அறிவுரைகளைஅறவுரைகளை இங்கு பார்ப்போம்.

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?!

இது சாத்தியம் தானா? சாத்தியமே!

 

 happy4

நாரதர்ஸமங்கர் ஸம்வாதம்

பீஷ்மரிடம் தர்மர் ஏராளமான விஷயங்களை அவர் மரணப்படுக்கையில் இருக்கும் சமயம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

அதில் சாந்தி பர்வத்தில் 292ஆம் அத்தியாயத்தில் வரும் ஒரு சிறிய பகுதி இது.

நாரதருக்கும் ஸமங்கருக்கும் நடந்த ஸம்வாதத்தில் (ஸம்வாதம் என்றால் அர்த்தமுள்ள உரையாடல்!) நாரதர், ஸமங்கரை நோக்கி, “எப்பொழுதும் மனதில் சந்தோஷமடைந்து சோகமற்றவர் போல இருக்கிறீர்என்று சொல்லவே அவர் பதிலாகச் சொல்வதில் ஒரு பகுதி:-

 

நான் சகலமான பிராணிகளிடமும் நடந்ததையும் நடக்கின்றதையும் நடக்கப் போகின்றதையும் அவைகளின் தத்துவங்களையும் அறிகின்றேன். அதனால் நான் மன வருத்தமில்லாதவனாக இருக்கின்றேன்.”

நான் உலகத்தில் காரியங்களின் ஆரம்பங்களையும், மறுபடி பயன்களின் உற்பத்திகளையும் நானாவிதமான பயன்களையும் அறிவேன். அதனால் நான் மன வருத்தமில்லாதவனாக இருக்கின்றேன்.”

அவருடைய பயன் தரும் விளக்கம் தொடர்கிறது.

 

 IMG_2750

ஹிந்து ஞானம்சந்தோஷமடையும் வழி பற்றி!

ஹிந்து இலக்கியங்களின் சாரத்தை மைசூரிலிருந்து வெளியான வாரப் பத்திரிகையான ரேஷனலிஸ்ட் (Rationalist) இதழில் ஜி.ஆர். ஜோஸ்யர் (G.R.Josyar) தொகுத்து வெளியிட்டு வந்தார். இதைப் படித்தவர்கள் வியந்தனர். இப்படி ஒரு ஹிந்து பொக்கிஷம் இருக்கிறதா என்று!

 

மைசூர் மஹாராஜா, சர் சி.பி.ராமஸ்வாமி ஐயர் போன்றோர் இதைப் புத்தகமாக வெளியிட ஆலோசனை கூறினர். அதை ஏற்று ஜி.ஆர், ஜோஸ்யர்சான்ஸ்க்ரீட் விஸ்டம்’ (Sanskrit Wisdom) என்ற சிறு நூலை (160 பக்கம்) வெளியிட்டார்.

அதில் இடம் பெறும் ஒரு விஷயம்நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?!

 

“I do not get feverishly concerned with what is happening to me now, or what may happen to me tomorrow. Therefore I live quite happily.”

“I do not fear the approach of old age or death, or rejoice over conquests and achievements. Therefore I live quite happily.”

“I look upon gains as they come and losses as they come as the same as my two hands. Therefore I live quite happily.”

 

“When I acquire some fresh knowledge from time to time, it brings me wisdom, and not conceit. Therefore I live quite happily.”

“Though I am powerful I do not forcefully defraud others. Though poor I do not cherish wants. Therefore I live quite happily.”

 

“I rejoice in the happiness of others, and sympathize with the miserable. The proud find in me a companion. Therefore I live quite happily.”

“I do not look on anyone as my own or any as aliens. Therefore I live quite happily.”

 

“I view all things with steadfast, genuine and friendly interest. Therefore I live quite happily.”

 the_laughing_buddha_by_mdhamka-d5qlx26

இதற்கான எமது தமிழாக்கம்:-

எனக்கு இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியோ அல்லது நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பற்றியோ நான் பதட்டத்துடன் கவலைப்படுவதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

முதுமை அல்லது சாவு வருகிறதே என்று நான் பயப்படுவதும் இல்லை, அல்லது வெற்றிகளையும் சாதனைகளையும் பற்றி எண்ணி மகிழ்வதுமில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

வருகின்ற லாபங்களையும் வருகின்ற நஷ்டங்களையும் என் இரு கைகளைப் போல நான் பார்க்கிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

அவ்வப்பொழுது நான் புதிய விஷயம் பற்றிய அறிவைப் பெறும் போதெல்லாம் அது எனக்கு ஞானத்தை நல்குகிறது. இறுமாப்பை அல்ல. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

நான் சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை. நான் ஏழையாக இருந்த போதும் கூட தேவைகளை மனதில் வைப்பதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

நான் மற்றவர்களின் மகிழ்ச்சியில் சந்தோஷப்படுகிறேன். துன்பப்படுவோரின் மீது இரக்கமுறுகிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

 

நான் யாரையும் எனக்குச் சொந்தமானவராகவோ அல்லது எனக்கு அன்னியராகவோ நினைப்பதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

நான் அனைத்தையும் நேர்மையுடனும், சுத்தமாகவும், நட்புடன் கூடிய ஆர்வத்துடனும் பார்க்கிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 happy2

சந்தோஷமாக வாழ வழி தெரிகிறதல்லவா!

வாழ்வோம்; வளர்வோம்; அனைவரையும் சந்தோஷமாக வாழ வைப்போம்!

****************