வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது? (Post No 2641)

 

dieases

பாக்யா 18-3-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?
ச.நாகராஜன்

 

 

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 18 March 2016

 

Post No. 2641

 

Time uploaded in London :–  5-44 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

gee-naming-diseases-690

“நாம் ஒருவரை ஒருவர் ஏன் நேசிக்கிறோம் என்றால் நமக்கு வரும் வியாதிகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.” – ஜோனாதன் ஸ்விப்ட்

 

புதிய புதிய வைரஸ்கள்! புதிய புதிய வியாதிகள்!  ஜிகா வைரஸ் இப்போது பயமுறுத்துகிறது. அது எப்படி ஜிகா வைரஸ் என்று பெயர் வந்தது? உகாண்டாவில் உள்ள ஜிகா காடுகளில் முதன் முதலாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இதன் பெயர் ஜிகா வைரஸ்.

பார்கின்ஸன் நோய். அல்ஸைமர் நோய், இப்படி பல வியாதிகளுக்கும் ஏன் அப்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது?

 

 

பி.பி.சியின் மருத்துவ எழுத்தாளர் லிஸ்ஸி க்ரவுச் களத்தில் இறங்கினார். அதன் விளைவாக வியாதிகளின் பெயர் சூட்டல் பற்றி ஏராளமான தகவல்கள் வெளி வந்துள்ளன.

 

 

ஒரு புது வியாதி நோயாளிகளைப் பீடிக்கும் போது அதற்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வியாதிகளுக்கு பெயர் சூட்ட பேபிகளுக்குப் பெயர் சூட்டும் புத்தகம் போல எதுவுமே இல்லை! சரி, பின்னர் எப்படி பல விசித்திரப் பெயர்கள் சூட்டப்படுகின்றன?

 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் டாக்டர் க்ரஹாம் ஹ்யூஸ் என்பவர் ரத்தக் கட்டிகளை ஏற்படுத்தும் ஒரு விதமான  பிசுபிசுப்பான ரத்தத்தை சில நோயாளிகளிடம் கண்டார். அவரது சகாக்கள் அவரை கௌரவிக்கும் விதமாக அந்த நிலைக்கு ஹ்யூஸ் சிண்ட் ரோம் என்று அவரின் பெயரைச் சூட்டினர்.

 

 

பழைய காலத்தில் நோயையோ அல்லது அதற்கு காரணமான வைரஸையோ முதலில் கண்டுபிடித்தவரின் பெயரை அந்த நோய்க்குச் சூட்டுவது வழக்கம். இப்போது அப்படியில்லை. காலம் மாறி விட்டது!

 

disease-names

டாக்டர் அலாய்ஸ் அல்ஸைமர் கண்டுபிடித்த நோய்க்கு பாராலிஸிஸ் அஜிடன்ஸ் என்று  பெயர் வைக்கலாம் என்று அவர் சொன்னார். ஆனால் அனைவருமே அவர் சுட்டிக் காட்டிய வியாதிக்கு அல்ஸைமர் நோய் எனப் அவரின் பெயரையே இட்டனர். வயது மூப்பின் காரணமாக வரும் மறதி நோய் இன்று அல்ஸைமர் என்று அவரை கௌரவித்து அழைக்கப்படுகிறது.

டாக்டர் ஜேம்ஸ் பார்கின்ஸன் முதுமை காரணமாக வரும் நடுக்குவாத நோயைக் கண்டுபிடித்தார். அந்த நோய்க்கு அவர் பெயரைச் சூட்டினர். இன்று பார்கின்ஸன் நோய் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.

 

 

சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் லின்ஃபா வேங் தனது குழுவினருடன் இணைந்து ஒரு புதிய வைரஸைக் கண்டு பிடித்தனர். ஆஸ்திரேலியாவில் ஹெண்ட் ரா என்ற இடத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கு ஹெண்ட் ரா வைரஸ் என்ற பெயரைத் தந்தனர்.

 

 

வந்தது கோபம் ஹெண்ட் ரா நகர மக்களுக்கு! விஞ்ஞானிகள் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டாலும் அந்த நகரத்து மக்கள் தங்களை அந்தப் பெயர் அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு தொலைபேசி அழைப்புகளால் வேங்கை வறுத்து எடுத்து விட்டனர். பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூடத் தொலைபேசி அழைப்பு வந்த போதெல்லாம் அவர் நடுநடுங்கினார்!

 

 

அமெரிக்காவில் கனெக்டிகட் அருகில் உள்ள ஓல்ட் லைம் என்ற இடத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் குழந்தைகளுக்கு உண்ணியினால் வரும் நோய் ஒன்றைக் கண்டு பிடித்து  அதறகு லைம் நோய் என்று பெயரிட்டனர்.

 

 

அந்த நகர  மக்களுக்குக் கோபம் வந்ததா? இல்லை. அதை அவர்கள் பெருமையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்! அதை வணிகத்தை ஊக்குவிக்கும் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு அந்த உண்ணியை டி-ஷர்ட்டுகளில் போட்டு அமோக விற்பனையக் கண்டனர்.!

 

 

உலக சுகாதார நிறுவனமான WHO  பொதுவான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. புதிதாகக் கிளம்பும் வைரஸுக்கோ அல்லது நோய்க்கோ இடத்தின் பெயரைச் சூட்டாதீர்கள் என்ற அதன் அறிவுரை வம்பை விலைக்கு வாங்காதீர்கள் என்பதற்கான நாகரீகமான அன்புரை!

 

nov08-GB Churchill stamp unissued

ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும் ஒரு வகை வீக்கத்திற்கு  (Granulomatasois) வெஜினர் (Frederich Wegener ) என்ற விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அவரது கடந்த காலத்தை ஆராய்ந்த போது அவர் நாஜிக் கட்சியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சித்திரவதை முகாம்களில் இருந்த போது அங்குள்ளவர்களை அவர் சோதனைக்குத் தவறாகப் பயன்படுத்தி இருக்கக் கூடும் என்ற எண்ணத்தினால் அந்த வியாதிக்கு அவர் பெயரைக் கூற தடை விதித்து விட்டனர்.

 

 

இதற்கிடையில் மே 2015இல் உலக சுகாதார நிறுவனம் அனைவரும் ஒப்புக் கொள்ளும் பெயரையே வியாதிகளுக்குச் சூட்ட வேண்டும் என்று வழிகாட்டுதலைத் தந்துள்ளது.

 

 

டாக்டர் ஹ்யூஸ், “ ஒரு வியாதிக்குப் பெயரிடுவது அவ்வளவு சுலபமில்லை. சில வியாதிகளை விவரிக்கவே பத்து சொற்கள் தேவையாக உள்ளன” என்கிறார். இந்த பத்து சொற்களும் மருத்துவ நிலையை விளக்கும் சொற்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம், அந்த வியாதியின் பெயரைச் சொன்னாலே வியாதியினால் வரும் சங்கடமே தேவலை என்று ஆகி விடும்!

 

ஆகவே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும், யாரையும் புண்படுத்தாத ஒரு பெயரைத் தேட வேண்டிய அவசியம் புதிய வியாதிக்குப் பெயர் சூட்டுவதில் வருகிறது.

 

சரி, டெங்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? யாருக்குமே இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஊகமாக ஒரு ஆய்வு செய்து சொல்ல முடியும். ஆப்பிரிக்காவில் வழங்கி வரும் ஸ்வாஹிலி மொழியில் “கா டிங்கா பெப்போ” என்ற வார்த்தைக்கும் கெட்ட ஆவியினால் ஏற்பட்ட நடுக்கத்துடன் கூடிய வலிப்பு என்று அர்த்தம். இதைச் சுருக்கமாக டிங்கா என்பார்கள். இந்த டிங்கா ஸ்பானிய மொழியில் டெங்கு என்று சொல்லப்பட்டு உலகின் எல்லா இடங்களுக்கும் பரவி விட்டது!

 

 

நல்ல வேளையாக ஜிகா காடுகளை வைத்து சூட்டப்பட்டுள்ள ஜிகா வைரஸுக்கு இதுவரை எந்த கண்டனமும் வரவில்லை; ஆர்ப்பாட்டக் கூட்டங்களும் இல்லை! உகாண்டா காடு தானே என்று விட்டு விட்டார்களோ!

 

british-winston-churchill-postage-stamp-7530095

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரிட்டனின் போர்க்கால பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அணு ஆயுதம் என்றால் அடங்காத ஆசை. எப்படியாவது அணு ஆயுதத் தயாரிப்பில் பிரிட்டன் தலை தூக்கி நிற்க வேண்டும் என்று அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால் அணு ஆயுதம் அபாயம் விளைவிக்கும் ஒன்று என்பது பிரபல விஞ்ஞானி நீல்ஸ் போரின் எண்ணம்.

 

 

இதன் அபாயத்தை நேரில் சென்று சர்ச்சிலிடம் விளக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவரை 1944ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியன்று சந்தித்தார். சர்ச்சிலின் மிக நெருங்கிய ஆலோசகரான லார்ட் செர்வெல்லும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் நீல்ஸ் போரின் அபாய அறிவிப்பை சர்ச்சில் ஏற்கவில்லை.

 

சந்திப்பு முடிந்தவுடன் வருத்தத்துட நீல்ஸ் போர் கூறினார்: “எங்கள் இருவரையும் இரண்டு பள்ளிச் சிறுவர்களைத் திட்டுவது போல அவர் திட்டினார்”

 

பின்னர் அமெரிக்கா சென்ற போரை ஜனாதிபதி ரூஸ்வெல்ட் சந்திக்க விரும்பினார். 1946, ஆகஸ்ட் 26ஆம் தேதி அவர் ரூஸ்வெல்ட்டைச் சந்தித்தார். ஆனால் சர்ச்சிலைப் போல ரூஸ்வெல்ட் திட்டவில்லை. அவரை ஆதரித்து நான் சர்ச்சிலிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சொன்னார்.ஆனால் வரலாறு வேறு விதமாக ஆனது!

 

 

அணுகுண்டு தயாரிக்கப்பட்டு ஹிரோஷிமா நாகசாகி மீது போடப்பட்ட போது தான் அது எவ்வளவு அபாயகரமான ஆயுதம் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

 

இருந்தாலும் சர்ச்சிலின் அணு ஆயுத ஆர்வம் அவரை விடவே இல்லை. வயது முதிர்ந்த நிலையில் கூட பிரிட்டனின் அணு ஆயுத ஆய்வகம் ஒன்றிற்குச் சென்ற அவர் அங்கு நியூட் ரான்கள் சிதற அடிக்கப்படும் சோதனையைக் கண்டு மகிழ்ந்தார்.

விஞ்ஞானிக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள வேறுபாடு நமக்குப் புரிந்த ஒன்று தான்!

*******

 

 

 

 

What did Mahmud of Ghazni learn from the Owls? (Post No 2640)

owl story

Written by london swaminathan

 

Date: 17 March 2016

 

Post No. 2640

 

Time uploaded in London :–  7-58 AM

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

One of the tyrants of Indian sub-continent was Mahmud of Ghazni. He invaded India 17 times and destroyed Hindu temples including the most famous Somanath temple of Lord Shiva. Saying that he was an iconoclast, he broke the 15 foot high Shivlinga in to pieces. He was a fanatic Muslim. He plundered many rich temples and took the booty back to Ghazni in Afghanistan. He displayed them for the public to see. His unruly army damaged lot of valuable things along its way. This unruliness spread to his own country.

 

His soldiers were looting the villagers and setting fire to their houses and crops in Afghanistan. People were unhappy.

 

One of his ministers was very intelligent and believed in the rule of law. He learnt the language of animals through a Muslim saint. Mahmud also knew about his minister’s knowledge in this area.

lrg360owls

One day Mahmud and his minister went for hunting. After a long day of hunting they were returning on their horses.  Mahmud saw two owls sitting on a tree and talking. Immediately he stopped the horse and asked his minister to find out what they were talking. The minister pretended to listen to them for some time and came back with a sad face. He told that he couldn’t divulge the contents of their conversation because it wouldn’t be palatable to the king. The king insisted to reveal their talking. The minister told him that he would tell him if he would promise him not to harm him. When he gave him an assurance, the minister told him:

One of the owls wanted to give her daughter in marriage to the son of another owl. He insisted that he would give consent to the marriage provided the she owl give 50 dilapidated villages as dowry with the girl (owl). Immediately that owl replied, “Oh, that shouldn’t be a problem as long as the Mahmud was ruling. Even 500 dilapidated villages can be given as dowry under his rule.”

 

As soon as Mahmud heard this he hung his head in shame!

 

-subham-

 

 

 

 

மூன்று நாழிகை சிம்மாசன யோகம்! (Post No 2639)

3 NAZIKAI THRONE (2)

Written by london swaminathan

 

Date: 17 March 2016

 

Post No. 2639

 

Time uploaded in London :–  6-15 AM

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

HUMAYUN BABAR (2)

மொகலாய அரசர்களுள் ஹூமாயூன் இரண்டாவது அரசராவார். ஹுமாயூன் என்னும் சொல்லுக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள். ஆனால் அவர்தான் மிகவும் துரதிருஷ்டசலியாக இருந்தார். இதற்குக் காரணம் அவரேதான். நல்ல வீரர்; இளகிய மனமுடையவர். ஆனால் சிற்றின்பப் பிரியர். அபினி தின்பதிலும் விருப்பமுடையவர்.

 

அவர் பட்டத்துக்கு வந்த சில நாட்களுக்குள் செர்ஷா என்னும் ஆப்கானிய பட்டாணியர் தலைவன் படையெடுத்து வந்தான். அவனை எதிர்த்து ஹுமாயூன் சென்ற போது அவன் மலைகளில் ஓடி ஒளிந்துகொண்டான்.; ஹுமாயூன் நடந்து, நடந்து சென்று வங்காளம் வரை போய்விட்டார். அங்கே மீண்டும் குடி, கூத்தில் காலத்தைக் கழித்தார்.

 

மழைக்காலம் துவங்கி ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்தது. அந்த நேரத்தில் செர்ஷா, மலைகளிலிருந்து இறங்கி வந்து போர் தொடுத்தான். வங்காளத்துக்கும் டில்லிக்கும் இடையேயுள்ள பாதையை அடைத்து முற்றுகையிட்டான். ஹுமாயூன், வங்களத்திலிருந்து, தலைநகர் டில்லிக்குப் போக முயற்சித்தார். முடியவில்லை. அவரது படைவீரர்களும் அதிகாரிகளும் நோய்வாய்ப்பட்டனர். உடனே செர்ஷாவுடன் சமாதானம் செய்துகொண்டு சில பகுதிகளை அவனுக்குத் தருவதாகச் சொன்னார். உடனே அவர் டில்லிக்குப் போக பாதையைத் திறந்துவிடுவதாக செர்சா வாக்கு கொடுத்தான். அவனை நம்பி எல்லோரும் கங்கைக் கரையில் ஓய்வு எடுத்தனர். அன்றிரவு அவர்கள் மீது பாய்ந்த ஆப்கன் படைகள் பலரையும் கொன்று தீர்த்தன.

 

ஹூமாயூன் உயிர் பிழைக்க வேண்டி முக்கிய அகாரிகளுடன் குதிரை மீது ஏறி கங்கை நதியைக் கடக்க முயன்றார். பலரும் கங்கைப் பிரவாகத்தில் சிக்கி இறந்தனர். ஹூமாயுனும் நதியில் விழுந்து மூழ்கி இறக்கவிருந்த நேரத்தில், தோல் பைகளில் கங்கை ஜலத்தை நிரப்பும் ஒரு நீர்துருத்திக்காரன், இரண்டு தோல் பைகளில் காற்றை நிரப்பி அந்த மிதவையில் நீந்திச் சென்று கொண்டிருந்தான். அவன், ஹுமாயூன் மீது இரக்கப்பட்டு தன் துருத்தியைப் பிடித்துக்கொண்டு நீந்தி வரும்படி கேட்டுக்கொண்டான். ஹுமாயூனும் அப்படியே செய்து கங்கை நதியைக் கடந்து ஆக்ராவுக்கு வந்து சேர்ந்தார்.

humayun-3

உயிர்தப்ப வைத்த உதவிக்கு நன்றிக்கடனாக அவனை மூன்று நாழிகை நேரத்துக்குச் சிம்மாதனத்தில் உட்கார வைத்து மொகலாய சாம்ராஜ்யத்தை ஆள்வதற்கு அனுமதிப்பதாக வாக்குக் கொடுத்தார். ஆக்ரா போய்ச் சேர்ந்தவுடன், அந்த நீர்துருத்திக்காரன், அவரிடம் போய் நின்றான். உடனே அவனை மூன்று நாழிகை நேரத்துக்கு சிம்மாசனத்தில் அமரவைத்தான். அதுமட்டுமல்ல.

 

நீர்துருத்திக்காரன், தன் கொண்டுவந்த தோல்பையை துண்டு துண்டாக நறுக்கி அதில் தன் பெயரை முத்திரையிட்டு, அதை நாணயமாக்கி உற்றாருக்கும் உறவினருக்கும் கொடுத்தான்.அவர்களுக்கு நல்ல வெகுமதிகள் கிடைக்கவும் மன்னரிடம் உதவி நாடினான்.

 

இந்தக் நிகழ்ச்சி முடிந்தபின்னர், ஹூமாயூன், டில்லிக்குச் சென்றார். அங்கே திடீரென்று செர்ஷா தாக்குதல் நடத்தி, ஹுமாயூனை டில்லிக்கு வெளியே துரத்திவிட்டான். ஹூமாயுன், தன் சகோதர்ககளிடம் உதவி கேட்டார். அவர்கள் உபகாரம் செய்யாமல், அபகாரம் செய்து ஹுமாயூனை ஓட ஓட விரட்டினார்கள். அவர் பாரசீகத்துக்குத் தப்பிப் போனார். அங்குள்ள மன்னர், இவனுக்கு அன்பாக உதவிகளைச் செய்தார். அவருடைய படைகளின் உதவியுடன்  காபூல் நகரைப் பிடித்தார்.15 ஆண்டுகளுக்குப் பின்னர் டில்லிக்கு வந்து மீண்டும் ஆட்சியை ஏற்றார். அதற்கு முன்பாகவே செர்ஷாவும் அவருடைய மகனும் இறந்து போனார்கள்.

இதுதான் ஹுமாயுனின் கதை!

ஒரு நாழிகை= 24 நிமிடம்

-சுபம்-

மின்சார சாதனங்களின் கழிவு பற்றிய விழிப்புணர்ச்சி உருவாக்குவோம் (Post No 2638)

electronics

WRITTEN BY S NAGARAJAN (for AIR Talk)

 

Date: 17 March 2016

 

Post No. 2638

 

Time uploaded in London :–  5-59 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 e-waste

எலக்ட்ரானிக் வேஸ்ட் எனப்படும் மின்சார சாதனங்களின் அபரிமிதமான கழிவு உலகின் சுற்றுப்புறச் சூழலுக்கு இன்று ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும்.

 

ஐரோப்பாவில் மட்டும் 50 மில்லியன் டன் என்ற பெரும் அளவில் மின் சாதனக் கழிவு ஏற்படுகிறது என்றால் உலகெங்கும் எவ்வளவு கழிவு ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கும்.

 

கணினிகள், அலைபேசிகள், அலுவலக மின்சார சாதனங்கள், பொழுது போக்கு மின்னணுச் சாதனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் என்ற இவை அனைத்திலும் ஏற்படும் கழிவுகள் மலைக்க வைக்கும் ஒன்று.

 

இவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல், வாங்குவோர், கழிவு எனத் தூக்கி எறிந்து விடுகின்றனர். சி ஆர் டி எனப்படும் காதோட் ரே டியூப் (Cathode ray tubes) மறுசுழற்சிக்கு உட்படாத ஒன்று. இதில் உள்ள ஈயம், பாஸ்பார்ஸ் (phosporsபாஸ்பரஸ் அல்ல) அபாயம் விளைவிக்கும் வீட்டு சாதனக் கழிவு என அறிவியல் வல்லுநர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்சாதனக் கழிவுகளால் ஏற்படும் திரவ மற்றும் வாயுக் கழிவுகள் மிகப் பெரும் அபாயத்தைச் சுற்றுப் புறச் சூழலில் ஏற்படுத்துகின்றன. இவை நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண், காற்று ஆகியவற்றுடன் கலப்பதால் மனிதர்களுக்கு பல அபாயங்களை ஏற்படுத்துகின்றன. நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகளும் ஜந்துக்களும் கூட இவற்றால் பாதிக்கப்படுகின்றன. பாதரஸம், ஈயம், காட்மியம், பெரில்லியம், க்ரோமியம் மற்றும் இதர இரசாயன நச்சுப் பொருட்கள் இவற்றில் இருப்பதால் இவற்றை உரிய முறையில் அகற்ற இதற்காக பிரத்யேகமாக உள்ள அரசு அல்லது தனிப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

 

மின்னணு சாதனங்களில் அலுமினியம், தாமிரம், தங்கம், வெள்ளி, பிளாஸ்டிக், இரும்பு போன்ற அரிய உலோக வகைகள் இருப்பதால் இவற்றைக் கழிவாகத் தூக்கி எறிவது அரிய தாது வளத்தைத் தூக்கி எறிவதாகும். இவற்றை உரிய முறையில் பிரித்தெடுத்து மறு சுழற்சிக்கு உட்படுத்தினால் அரிய செல்வத்தைக் காத்தவர்கள் ஆவோம்.

 

மின் சாதனக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதன் மூலம் ஆற்றலை சேமிக்கலாம்; சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதைத்யுடுக்கலாம்; பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கலாம்; ஆதார வளங்களைக் காக்கலாம்; அரிய உலோகங்களைச் சேமிக்கலாம். சிந்திப்போம்; செயல்படுவோம்.

 

recycle_electronics

-subham-

India, farewell! Poem by Edwin Arnold (Post No 2637)

 

ilove my indiaCompiled by london swaminathan

 

Date: 16 March 2016

 

Post No. 2637

 

Time uploaded in London :–  6-09 AM

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

An Adieu

India, farewell! I shall not see again

Thy shining shores, thy peoples of the sun

Gentle, soft mannered, by a kind word won

To such quick kindness! O’er the Arab main

Our flying flag streams back; and backwards stream

My thoughts to those fair open fields I love,

City and village, maidan, jungle, grove,

The temples and rivers! Must it seem

Too great for one man’s heart to say it holds

So many many Indian sisters dear,

So many unknown brothers? That it folds

Lakhs of true friends parting? Nay! But there

Lingers my heart, leave-taking; and it roves

From hut to hut whispering “he knows and loves!”

Good-bye! Good-night! Sweet may your slumbers be,

Gunga! And Kasi! And Saraswati!

-Edwin Arnold

March 8, 1886

From his book India Revisited (Published in1886)

edwin arnold

On the last page of the book he says:

“I leave my heart behind me in leaving these Indian peoples, who have taught me, as I have wandered among them, that manners more noble and gentle, learning more modest and profound, loyalty more sincere, refinement more natural, and sweeter simplicities of life, and love, and duty exist in the length and breadth of British Asia than even I had gathered from my old experiences, before India was “revisited.”

THE END (page 324)

EdwinArnold 1832 – 1904 (English Poet, Journalist and author of many books)

His famous books (poetical works) are:

The Light of Asia, Indian Poetry, Pearls of the Faith, Indian Idylls,The Secret of Death, The Song Celestial (Bhagavad Gita)

-subham-

 

 

கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம் (Post 2636)

owl story

Compiled by london swaminathan

 

Date: 16 March 2016

 

Post No. 2636

 

Time uploaded in London :–  காலை 5-56

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இந்தியாவை ஆண்ட வெளிநாட்டினர் செய்த அக்கிரமங்களை மஹா கவி பாரதி ஒரே வரியில் சொல்லிவிட்டார்: “ ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று. அப்படிப்பட்ட அன்பில்லாத கொடுங்கோலர்களில் மிகக் கொடியவர்கள் கஜினி முகமதுவும் அவுரங்கசீப்பும் ஆவர். இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோமநாதபுரத்தில் இருந்த 15 அடி உயர சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்த மதவெறியன் கஜினி முகமது. அவன்கூட ஆந்தைகளிடம் பாடம் கற்று அடங்கி ஒடுங்கிய ஒரு சம்பவம் இதோ:-

 

கஜினி நகருக்கு மேற்கே தொலைதூரத்திலுள்ள கிராமங்களை முகமதுவின் படை வீரர்கள் அழித்து நாசமாக்கி வந்தனர். ஆடுமாடுகளைக் கொள்ளையடிப்பது, பயிர்பச்சைகளை அழிப்பது அகியவற்றில் ஈடுபட்டதால் கிராம மக்கள் ஓடி ஒளிந்தனர். கிராமங்கள் எல்லாம் பாழடைந்த திடல்களாகிவிட்டன.

 

கஜினி முகமதுவிடம் மந்திரியாக வேலை பார்த்த ஒருவருக்கு தெய்வ பக்தி இருந்தது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்பது வள்ளுவன் குறள். ஆகையால் தன் கடமை கஜினி முகமதுவிடம் சொல்லி அட்டூழியங்களை நிறுத்துவதே என்று உறுதி பூண்டார். அவருக்கு பீர் என்ற முஸ்லீம் சந்யாசி பறவைகளின் பாஷையைக் கற்பித்திருந்தார். இது விஷயம், கஜினி முகமதுவுக்கும் தெரியும். ஒரு நாள் இருவரும் வேட்டையாடப் போனார்கள்.

 

இருவரும் மாலையில் திரும்பிவருகையில் ஒரு மரத்தின் மீது இரண்டு ஆந்தைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. கஜினி முகமது, குதிரைகளை நிறுத்தச் சொல்லி, மந்திரியிடம் சொன்னார்:

உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவைகள் என்ன பேசிக்கொள்கின்றன? என்று கேட்டார்.

அமைச்சரும் அதை உற்றுக் கேட்பதுபோல கொஞ்ச நேரம் பாவனை செய்தார். பின்னர் வந்து, “அரசே அவைகள் பேசுவதைச் சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அது உங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

கஜினி முகமது அதைச் சொல்லும்படி வலியுறுத்தவே, “நான் சொல்கிறேன். ஆனால் கோபத்தில் என்னைக் கொன்று விடக்கூடாது” என்று சொன்னார். கஜினி முகமதுவும் ஒரு தீங்கும் வராது என்று உறுதி கூறியவுடன் அமைச்சர் (மந்திரி) சொன்னார்:

அந்த ஆந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அவைகள் இரண்டும் கல்யாணப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஆந்தையின் பையனை மற்றொரு ஆந்தையின் பெண்ணுக்கு மணம் முடிப்பதைப் பற்றி பேசுகையில் ஆணின் தந்தை (ஆந்தை) சொன்னது: “இதோ பார் உன் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்யத் தயார்தான். ஆனால் பெண்ணுடன் எனக்கு 50 பாழான கிராமங்களைச் சீதனமாக அனுப்ப வேண்டும்” என்றது. அதற்குப் பெண்ணின் தாயார் “நமது சுல்தான் ஆட்சியில் இருக்கும் வரை பாழாய்ப்போகும் கிராமங்களுக்கு என்ன குறை? 50 என்ன 500 கிராமங்களை வேண்டுமானாலும் தருவேன்” என்றது

கஜினி முகமது இதைக் கேட்டுவிட்டு வெட்கித் தலை குனிந்தான்.

-சுபம்-

பூமியைக் காப்போம்! (POST No 2635)

EARTH

WRITTEN BY S NAGARAJAN (for AIR Talk)

 

Date: 16 March 2016

 

Post No. 2635

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 பூமி 300 கோடி டன் ஐஸை வருடந்தோறும் இழக்கிறது!

      விண்ணில் உலவும் ஒரு சாடலைட் பூமி வருடந்தோறும் 300 கோடி டன் ஐஸை அதாவது பனிக்கட்டிகளை அண்டார்க்டிக் மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் இழக்கிறது என்பதை அறிவித்துள்ளது. இந்த சாடலைட்டின் பெயர் க்ராவிடி ரிகவரி அண்ட் க்ளைமேட் எக்ஸ்பெரிமெண்ட் (Gravity Recovery
And Climate Experiment – GRACE)
என்பதாகும். சுருக்கமாக இதை க்ரேஸ் என்று குறிப்பிடுகின்றனர்.

      பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இந்த சாடலைட்டை 2002ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வருகின்றனர். புவி ஈர்ப்பு விசை மண்டலத்தை ஆராயும் இந்த விண்கலம் அந்த வேறுபாடுகளால் பூமி எவ்வளவு பனிக்கட்டிகளை இழக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிடும்.

    இப்படிப் பெருமளவில் ஐஸ் இழப்பானது கடல் நீர் மட்டத்தை உயரவைக்கும். கடல் வாழ் உயிரினங்களைத் திகைக்க வைத்து அவற்றின் அழிவிற்கு வழி கோலும்.

      பூமியில் உள்ள மொத்த பனிக்கட்டிகளில் 99.5 சதவிகிதம் அண்டார்க்டிக் மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் உள்ளது.இந்தப் பனிக்கட்டிகளை பூமி முற்றிலுமாக இழந்து விடுவதாக வைத்துக் கொண்டால் கடலின் நீர் மட்டம் சுமார் 63 மீட்டர் அளவு உயர்ந்து விடும்.அதாவது சுமார் 206 அடி கடல் நீர் மட்டம் உயர்ந்து விடும். அப்போது ஏற்படும் உலக நாடுகளின் அழிவை எண்ணிப் பார்த்தால் அனைவரின் மனமும் திடுக்கிடும், இல்லையா! ஆகவே தான் மக்களும் மிருகங்களும் இதர கடல் வாழ் உயிரினங்களும் உயிர் வாழ அண்டார்க்டிக் பகுதி ஐஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவியல் சுட்டிக் காட்டுகிறது.

       இந்த ஆய்வின் முடிவுகள் பனிக்கட்டிகளை இழப்பதன் மூலம் பூமியின் வெப்பம் எப்படி ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது என்ற அபாயத்தைச் சுட்டிக் காட்டுவதால் புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்ச்சியை உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவது இன்றைய தலையாய கடமையாக அமைகிறது. விழிப்புணர்ச்சி பெறுவோம்;பூமியைக் காப்போம்!

*********      

 

 

 

Snake Charmers of India and Hindu Magic: Edwin Arnold (Post No 2634)

snke2

Compiled by london swaminathan

 

Date: 15 March 2016

 

Post No. 2634

 

Time uploaded in London :–  17-17

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Following is the extract from the book “India Revisited” by Edwin Arnold published in 1886.

 

“It is a mistake to think that the snakes are always harmless which are brought round to house doors and hotels in India by jugglers and samp-walahs. An almost universal opinion exists that these men extract the poison –fangs (teeth) from the serpents kept in their baskets and that anybody, therefore, may approach and play with them as freely as their exhibitors. This is by no means the case. Many of the reptiles which hiss and coil about in the Indian verandahs are as deadly as any to be found in the jungle.

 

 

The conjuring people tame and familiarise their snakes, especially the cobras, which are then disinclined to strike and become quite friendly and playful; so that unless suddenly frightened or irritated, they dart at the hand of the snake charmer without erecting the poison fangs or even opening their mouths.

 

Hindu Tricks by Palace jugglers!

The Maharajah of Benares was kind enough to send the entire company of his jugglers for our entertainment. They performed with much adroitness the usual series of Hindu tricks. They made the mango tree grow and bear ripe fruit from a deed; swallowed fire and swords; disentangled inextricable knots; and, having mixed together in water and drunk up three powders, red, green and yellow, one of them brought what seemed the same powders from his mouth in a dry state again. Then they produced a large selection of snakes, of which three are cobras, and one of these was made to dance to the gourd and bansula, striking again and again meanwhile at the hand of the performer.

 

Poisonous Snake!

A doubt being expressed by somebody as to the lethal power of this creature, the chief juggler declared that it was truly a dant-wallah, and had his poison teeth. “If the sahib-lok would supply a sheep or goat, they might quickly see whether I spoke a true word.” Eventually a white chicken was produced and seizing his cobra by the neck, the juggler pinched its tail and made it bite the poor fowl, which uttered a little cry when the sharp tooth punctured its thigh. The chicken was dead in another ten minutes.

 

At Pahalpur, a snake charmer for whom we sent to catch a serpent, said to be infesting the compound, had just died by a bite from one of his own captive snakes. The fact is snakes are not understood, and especially cobras. They are extremely intelligent, slow to anger, conscious of their terrible venom and loath to employ it. They are easily tamed, are anxious to escape notice, but extraordinarily sensible to kindness, and when not frightened are among the most gentle and attached of creatures. I shall print in this place an unpublished poem written by me some time ago, which illustrates the topic: THE SNAKE AND THE BABY.”

(Here he had given his long poem which ran to three pages)

–subham-

ஜீரண சக்தி அதிகரிக்க 5 விஷயங்கள்!

agastyanepal-carole-r-bolon

Written by london swaminathan

 

Date: 15 March 2016

 

Post No. 2633

 

Time uploaded in London :–  9-36

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல; ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

saturn

சம்ஸ்கிருதத்தில் பல அழகான ஸ்லோகங்கள் உள்ளன. அவைகளில் மூன்று பாக்களில் எந்தெந்த ஐந்து விசயங்களை நினைவிற் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன. அவைகளில் ஜீரண சக்திக்கான ஐந்து பேர்கள் விநோதமாகவுள்ளன. அதில் ஒன்று சனிக் கிரகம். அட, ஜீரண சக்திக்கு அஷ்ட சூர்ணம் சாப்பிடு, த்ரிபலா சூர்ணம் சாப்பிடு என்று சொல்லாமல் கீழ்கண்ட ஐந்து பேரை நினை என்று சொல்லுகிறது அந்த செய்யுள்:

 

அகஸ்திம் கும்பகர்ணம் ச சனிம்  ச வடவானலம்

ஆஹாரபரிபாகார்த்தம் ஸ்மராமி ச வ்ருகோதரம்

அகஸ்தியர், கும்பகர்ணன், சனி, வடவைத் தீ, பீமன் (வ்ருகோதரன்) ஆகிய ஐந்து பேரை நினைத்தால் ஜீரணம் எளிதாகும் என்கிறது இந்தப் பா!

அகஸ்தியர்: இல்வலன் என்ற அசுரன் எல்லோரையும் கொல்லப் பயன்படுத்தும் தந்திரத்தை அகஸ்தியரிடமும் பயன்படுத்த முயன்றபோது அவர் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வயிற்றைத் தடவவே, இல்வலனின் சகோதரனான வாதாபி ஜீர்ணமாகி விடுகிறான் என்பது புராணக் கதை. அகஸ்தியர் கடலைக் குடித்தார், அகஸ்தியர் கமண்டலத்திலிருந்து காவிரி வந்தது, அகஸ்தியர் விந்தியமலையை கர்வபங்கம் செய்தார், அகஸ்தியரை மக்கட் தொகைப் பெருக்கத்தால் சிவபெருமான் தெற்கே அனுப்பிவைத்தார் என்பன எல்லாம் விஞ்ஞான பூர்வ அல்லது வரலாற்று ரீதியிலான விஷயங்கள்- வெறும் புராணக் கதைகள் அல்ல என்பதை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்.

கும்பகர்ணன்:- ராவணனின் தம்பியான கும்பகர்ணன் ஆறு மாதம் சாப்பிட்டுவிட்டு ஆறுமாதம் நிம்மதியாகத் தூங்குவான். அவனுக்கு ஒரு உடற்  பிரச்சனையும் ஏற்படவில்லை. நல்ல ஜீரண சக்த்திக்கு நிம்மதியான உறக்கம் தேவை!

 

வடவைத்தீ: கடலுக்கடியில் சீறும் எரிமலைகளால் சுனாமி போன்ற ஆபத்துகளும், பெரும் தீயும் உண்டாகி பேரழிவை உண்டாக்குவதை நாம் அறிவோம். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் மர்மத் தீ உண்டானது பற்றியும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

பீமன்/வ்ருகோதரன்: பீமனின் அசுரப் பசி உலகிற்கே தெரிந்ததுதான். பகாசுரனுக்காக பல வண்டிகளில்  வைக்கப்பட்டிருந்த உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டவன் அவன். ஒரு அஜீரணக் கோளாறு அவனுக்கு ஏற்பட்டதில்லை.

 

சனி: இந்தப் பட்டியலில் மிகவும் புரிந்துகொள்ள கடினமானது சனிக் கிரகம் தான். அதற்கும் ஜீரணத்துக்கும் என்ன தொடர்பு என்று வியப்போம். சனிக் கிரஹம், உடலுறுப்புகளில் பாதத்துக்கும் பெருங்குடலுக்கும் அதிபதி. உலோகங்களில் இரும்புக்கு அதிபதி. இரும்புச் சத்து ரத்தத்தில் குறைந்தால் எல்லா உறுப்புகளும் ஜீரண சக்தியும் பாதிக்கப்படும். ஹீமோக்ளோபின் என்ற இரத்தச் சிவப்பணுக்களுக்கு இரும்பு தேவை என்பதை எனது நண்பர் கல்யாண குருக்கள் சுட்டிக்காட்டினார். மேலும் சனிக் கிரஹமே ஆயுள்காரகன். ஒருவன் இறப்பதும், இருப்பதும் சனியின் வேலையே.ஆக சனிக்கும் ஜீரணத்துகுமுள்ள தொடர்பு சரியே!

 

xxxx

 

indonesia-gifts-saras

வேதக் கல்வியில் முன்னேற கீழ்கண்ட 5 பேரை நினைவு கொள்வது அவசியம்:-

கணநாத சரஸ்வதீ ரவிசுக்ர ப்ருஹஸ்பதீன்

பஞ்சைதானி ஸ்மரேந்நித்யம்  வேத வாணீப்ரவ்ருத்தயே

 

கணநாதன் என்பது முதற்கடவுளான கணபதியையும், சிவனையும் குறிக்கும். சரஸ்வதி, கல்விக்கு அதிதேவதை. வியாழனும் (ப்ருஹஸ்பதி), வெள்ளியும் (சுக்ரன்) தேவ, அசுர கணங்களுக்கு ஆசிரியர்கள். ஆக  இவர்களை நினைப்பது வேதம் கற்க உதவும் என்பதில் பொருளுண்டு.

 

Xxx

 

india00015

தினமும் நினைக்க வேண்டிய ஐவர்:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்நாடு, தர்மத்தை உபதேசிக்கும் குரு (வியாசர் போன்றோர் அல்லது ஒவ்வொருவருக்கும் மந்திரம் முதலியன கற்பிக்கும் ஆசிரியர்). இதை விளக்கத் தேவையே இல்லை. இது ஒவ்வொரு இந்துவின் ரத்தத்திலும் ஊறிய கருத்து!

ஜனனீ ஜன்மதாதா ச சுவித்யாம்  ப்ரததாதி ய:

ராஷ்ட்ரம் தர்மோபதேஷ்டா ச பஞ்சகம் சந்ததம் ஸ்மரேத்

 

–சுபம்–

 

 

 

இஸ்லாமியர்கள் முன்னேற இஸ்லாமியர்களே உதவுக! (Post 2632)

muslims and hindu swamijis

தீவிரவாதம் ஒழிய வழி

 

இஸ்லாமியர்கள் முன்னேற இஸ்லாமியர்களே உதவுக! (Post 2632)

 

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 March 2016

 

Post No. 2632

 

Time uploaded in London :–  7-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

muslim eating on banana leaves

அமெரிக்காவில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் நாவல்கள் லட்சக் கணக்கில்  விற்பனையாகின்றன.

 

இர்விங் வாலஸ், சிட்னி ஷெல்டன், ராபர்ட் லுட்லம் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் காலம் ஒரு காலம்; இன்றைய எழுத்தாளர்களின் காலம் ஒரு காலம்!

 

முன்பு ஹாலிவுட் திரைப்படங்களிலும் நாவல்களிலும் எதிரியாக சித்தரிக்கப்படுவது ஒரு கம்யூனிஸ்ட் தான். அந்த எதிரியிடமிருந்து கதாநாயகன் கதாநாயகி நாட்டை (அமெரிக்காவை) அல்லது உலகத்தையே காப்பாற்றுவர்.

ஆனால் கொள்கை அளவில் உள்ளீடே இல்லாத கம்யூனிஸ கொள்கையை அது பிறந்த ரஷியாவிலேயே தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

 

75 ஆண்டுகளுக்குள்ளேயே தள்ளாட்டம் போட்ட கம்யூனிஸ கொள்கை உலக தொழிலாளர்களை ஒன்று சேர்ப்பது இருக்கட்டும்; உள்ளூர் தொழிலாளர்களையே ஒன்று சேர்க்க முடியவில்லை.

 

சோவியத் யூனியன் சிதறுண்டு போனது; கம்யூனிஸம் காலாவதியானது.

 

அதன் மிரட்டல் கொள்கை, அடிதடி, வன்முறை, சர்வாதிகாரம் மட்டும் எஞ்சி உள்ளன.

 

அதை, கலக்கும் காம்ரேடுகள் முதலாக வைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிழைப்பை ஓட்டுகின்றனர்.

செத்த  பிணத்திற்கு தினசரி பூஜை!

 

இப்போது அமெரிக்கர்களுக்கு உத்வேகமூட்டிய கலக்கல் காம்ரேடுகளைக் காணோம் என்பதால் ஹாலிவுட் தயாரிப்பாளர்களும் எழுத்தாளர்களும் வேறு ஒரு களத்தைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

வந்து சேம்ர்ந்தார் ஒஸாமா பின் லேடன்.

 

 

தவறான கம்யூனிஸ கொள்கையை விட மோசமான ஒரு கொள்கையை முன் வைத்து அருமையான ஒரு மதத்தையே காவு கொடுக்க முன் வந்த அவர் செய்த மாபெரும் தவறு இரட்டை கோபுரத் தாக்குதல் தான்!

 

 

இப்போது அமெரிக்க சீரியல்கள், ஹாலிவுட் படங்கள், நாவல்கள் அனைத்திலும் வரும் ஒரே வில்லன் தீவிரவாத முஸ்லீம் தான்!

24 என்ற பிரபலமான அமெரிக்க சீரியலில் நம் பாலிவுட் அனில் கபூரும் நடித்துக் கலக்கியுள்ளார்.

 

அதில் வரும் ஒரு வாக்கியம் இது! முஸ்லீம் தீவிரவாதி சொல்வது:

 

“நமக்கு எப்போதுமே முதல் எதிரி அமெரிக்கா தான்!”

இது தான் அமெரிக்காவின் தீம். இதற்குத் தக தீவிர வாத முஸ்லீம்கள் செயல்படுகின்றனர்.

ஒரு பெரும் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா தயாராகிறது.

தீவிர வாதத்திற்கு எதிராக!

 

அதில் மேலை நாடுகள் அனைத்தும் – பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி,பிரான்ஸ், உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள்கின்றன! தீவிரவாத்தை விரும்பாத இதர உலக நாடுகள் அனைத்தும் இந்த் அணிக்கு முழு ஆதரவு தருகின்றன!

கம்யூனிஸம் தானாக அழிந்தது போல தீவிரவாதமும் தானாகவே அழியும் காலம் வந்து விட்டது.

 

ஆனால் இதற்கு இஸ்லாம் பலி ஆகி விடக் கூடாது. இதை இஸ்லாமிய சகோதரர்கள் நன்கு உணர்ந்து தீவிரவாதிகளை தாமே அழிக்க முற்பட வேண்டும்.

 

இல்லாவிடில் 24 போன்ற ஏராளமான சீரியல்கள் கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஆதரவு தரப்படும். தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் முன் வருவது காலத்தின் கட்டாயமாகி விடும்!.

 

இன்று உலக மக்களின் ஒட்டு மொத்த வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளாகியுள்ளவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளே!

இஸ்லாம் இவர்களிலிருந்து விடுபட்டு முன்னேற இஸ்லாமியர்கள் தாம் உதவ வேண்டும்! செய்வார்களா?

காலம் பதில் சொல்லும்!

 

*******