
Translated by London swaminathan
Date: 26 April 2016
Post No. 2757
Time uploaded in London :– 8-28 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Thomas Carlyle (1795-1881), Scottish Essayist, Historian, Philosopher, Satirical Writer and Teacher

தாமஸ் கார்லயில் பிரிட்டனின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்; பெரிய தத்துவ அறிஞர், வரலாற்று அறிஞர்; அங்கத எழுத்தாளர், ஆசிரியர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
அவர் சிறுவராயிருந்தபோது வீட்டையும் மற்ற குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அவருடைய தாயாரும் தந்தையும் அருகிலுள்ள மார்க்கெட்டுக்குச் சென்றனர். அன்று குளிர் அதிகமாயிருந்தது. அந்தக் குளிரைத் தாங்கும் அளவுக்கு ஆடையில்லாத பிச்சைக்காரன் ஒருவன் உடல் நடுங்க, பசியால் மெலிந்து, நடக்கமுடியாமல் தள்ளாடிக் கொண்டே வந்தான். கார்லயிலின் வீட்டிற்கருகில் வந்து நின்றான். அவனது தாங்கமுடியாத, தரித்திர நிலைமையைக் கண்ட கார்லயிலின் மனம் உருகியது.
உடனே கார்லயில், எனது தாய் தந்தையர் எனக்கு அவ்வப்போது கொடுத்த காசுகளை நான் மண் உண்டியலில் போட்டு சுவரின் உச்சியில் மறைத்து வைத்திருக்கிறேன். இப்போது அதை எடுத்துவந்து, அதை உடைத்து அதிலிருக்கும் காசுகளைத் தருகிறேன் என்று சொல்லி அவ்வாறே அவனிடம் கொடுத்தார். இதை கார்லயிலே ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதால்தான் நமக்குத் தெரியும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் அவரது திறமையை அறிந்த ஆசிரியர், அவருடைய தந்தையை அழைத்து உமது பிள்ளையை எடின்பரோ பல்கலைக்கழகத்துக்கு படிப்பதற்கு அனுப்புங்கள். அவன் உயர் படிப்பில் மிகவும் அக்கறையுள்ளவனாகக் காணப்படுகிறான் என்றார்.
தாமஸ் கார்லயிலின் தந்தையான ஜேம்ஸ் கார்லயில் அதிகம் படித்தறியாதவர். இருந்தபோதிலும் தன் மகனை எடின்பர்க் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பவேண்டும் என்று முடிவு செய்தார். அவரது கிராமத்தைச் சேர்ந்தோர், உன் மகன் படித்துவிட்டு அடங்காப்பிடாரனாக வந்து உம்மையே அடிப்பான் என்று சொல்லி எள்ளி நகையாடினர். ஆனால் அவரோ, அந்தப் பொறாமைக்காரர்களின் பேச்சைக் கேட்கவில்லை.
ஒரு நாள் மகனை எடின்பரோவுக்கு வழியனுப்புவதற்காக தாயும் தந்தையும் அவனுடன் ஊர் எல்லை வரை நடந்து வந்தனர். பின்னர், தந்தை ஏற்பாடு செய்த ஆளுடன் எடின்பர்க் நகரத்துக்கு நடந்தே சென்றார். அவர் நூறு மைல் தூரம் நடந்தே வந்து எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.

விடுமுறையின்போது மகன் வீட்டுக்கு வருவதை அறிந்தவுடன் பல மைல்தூரத்துக்கு நடந்து சென்று மகனை எதிர்கொண்டு அழைத்துவருவார்.1814 ஆம் ஆண்டு அவர் பல்கலைப் படிப்பை முடித்தார்.
பின்னர் ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதினார். பிரெஞ்சுப் புரட்சி பற்றி அவர் எழுதிய புத்தகம் அக்காலத்தில் மிகவும் பிரபலமானது.அரசியர் விமர்சனங்களை அங்கத நடையில் எழுதுவதில் வல்லவர்.
—சுபம்—
You must be logged in to post a comment.