மனம் மட்டுமே’ என்னும் தத்துவம்! (Post No. 3223)

buddha-1

Written by S. NAGARAJAN

Date: 6 October 2016

Time uploaded in London: 18-30

Post No.3223

Pictures are taken from various sources; thanks

 

 

.நாகராஜன்

 

 

 

புத்த போதனை

‘மனம் மட்டுமே என்னும் தத்துவம்!

 

ச.நாகராஜன்

 

மனித வாழ்க்கையில் மனம் என்னும் மர்மம் முக்கிய பங்கை வகிக்கிறது.

கண் முன்னால் நண்பர் ஒருவர் வந்து நிற்கிறார். மனம் எதையோ பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது. அவர் தன் கைகளை கண்களின் முன்னால் ஆட்டி என்ன, என்னைத் தெரியவில்லையா என்று சத்தம் போடுகிறார். திடீரென கண் “பார்வையை அடைந்து, அட, நீயா, எப்ப வந்தே” என்று கேட்கிறோம். அவரோ, நான் வந்து ஐந்து நிமிடம் ஆயிற்று. என்கிறார்,

 

 

நல்ல பார்வையுள்ள கண்கள் தான், ஆனால் மனம் அத்துடன் சேராததால் ‘பார்க்கவில்லை’.

 

. மனம் சேர்ந்தவுடன் பார்வை வந்து விடுகிறது.

இனிய சங்கீதம் ஒலிக்கிறது. ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை. ஒரே கரகோஷம். திடுக்கிட்டு “விழித்த” நாம் பக்கத்திலிருந்தவரை, “என்ன, பாட்டு பாடினார்?” என்கிறோம். அடுத்தவர் நம்மை முறைக்கிறார். சங்கீத ரஸனை இல்லாத இந்த பைத்தியத்திற்குப் பக்கத்தில் நான் வந்து சேர்ந்தேனே, கிரகசாரம் என்று அவர் நொந்து கொள்கிறார். மனம் செவிப் புலனுடன் சேரவில்லை. சங்கீதம் கேட்கவில்லை.

 

சாப்பாடு பரிமாறப்படுகிறது. சாப்பிட்டு முடிந்து விட்டோம். “என்னடா, சாப்பிட்டே, அதாவது தெரியுமா?” தாயின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறோம். மனம் சாப்பாட்டில் லயிக்காத போது சுவை தெரியவில்லை, சாப்பிட்டது என்ன என்பது புரியவில்லை.

 

இதோ போல ஒவ்வொரு புலனின் செயலையும் கவனித்துப் பார்த்தால் மனமே சுவையைத் தருகிறது; பார்வையைத் தருகிறது; செவிப் புலனைக் கேட்க வைக்கிறது என்பதை அறிய முடிகிறது.

 

மஹாயான புத்த மதத்தில் மனம் மட்டுமே – மைண்ட் ஒன்லி –MIND ONLY –  என்று ஒரு தத்துவம் உண்டு

இப்போது பாகிஸ்தானில் உள்ள இடத்தில் – வடமேற்கு இந்தியாவில் பிறந்த சகோதரர்களான ஆஸங்கா மற்றும் வசுபந்து இந்தத் தத்துவத்தைப் பிரபலப் படுத்தியவர்கள்.

அவர்களின் தர்க்கம் எளிதானது.

 

 

எந்த ஒரு பொருளும் மனதாலேயே உருவாக்கப்படுகிறது பார்க்கின்ற அனைத்துமே மனதின் ப்ரொஜக் ஷன் தான்!

எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள், அது பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்து மாறுபடுகிறது.

உதாரணமாக பாலை எடுத்துக் கொள்வோம், அது மனிதருக்கு அருமையான உணவாகத் தோன்றுகிறது. அதுவே தேவர்களுக்கு அமிர்தமாக் ஆகிறது. நரகத்திலிருப்பவருக்கோ அது கொதிக்கும் இரும்பாக இருக்கிறது. சாந்தி அடையாத ஆவிகளுக்கோ அது சீழ் அல்லது இரத்தமாக ஆகிறது.ஒரே பொருள், பல நிலைகளில் உள்ளவர்களின் மனதிற்குப் பலவிதமாக அது காட்சி தருகிறது.

ஒரு அழகிய பெண்ணை வாலிபன் ஒருவன் இன்பம் தரும் போகப் பொருளாகப் பார்க்கிறான். ஆனால் ஓநாய் ஒன்றுக்கோ அது மாமிசக் குவியலாக ஆகிறது.

 

 

 

அடுத்ததாக கனவு நிலையை எடுத்துக் கொள்வோம். புதிய உலகம் ஒன்றைக் காண்கிறோம். தெரிந்தவர், தெரியாதவருடன் புதுப் புது அனுபவங்கள். ஏற்படுகின்றன. புலன்களின் செயலின்மையை நமது கனவு நிலை காட்டுகிறது.

 

 

மூன்றாவதாக எந்த ஒரு பொருளுக்கும் தனியான ஒரு ‘இருக்கை’ – எக்ஸிஸ்டென்ஸ் – இல்லை. ஏனெனில் எந்த ஒரு பொருளும் முடிவற்ற அணுக்களால் ஆனவையே. அணுக்களின் சேர்க்கையே ஒரு மேஜையாக நாற்காலியாக ஆகிறது. ஒவ்வொரு அணுவும் ஆறு பாகங்களைக் கொண்டிருக்கிறது. மேல், கீழ், வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என இப்படி ஆறு பாகங்களைக் கொண்டு ஒன்றுடன் ஒன்று உரிய விதத்தில் இணைந்து ஒரு “பொருளாக” ஆகிறது.

 

இப்படி வாதங்களை முன் வைக்கிறார் வசுபந்து.

இதற்கு எதிரான வாதங்களைக் கூட ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து அலசி ஆராய்ந்து அவற்றிற்குத் தக்க மறுமொழி அளிக்கிறார்.

 

இதனால் கவரப்பட்டவர்கள் மனம் மட்டுமே தத்துவத்தைப் பெரிதும் விரும்புகின்றனர்.

ஆரம்பத்தில் சற்று சிரித்து ஒதுக்கப்பட்ட மனம் மட்டுமே தத்துவம் இப்போது அறிவியல் வளர்ந்திருக்கும் நிலையில் ஒரு புதிய அந்த்ஸ்தைப் பெறுகிறது.

இந்த தத்துவத்தின் அனைத்து நிலைப்பாடுகளையும் விஞ்ஞானம் ஆமோதிக்கிறது.

 

 

ஜான் லாக்கின் (John Locke) கொள்கை இந்த மனம் மட்டுமே தத்துவத்தைப் போலவே உள்ளது. நவீன அறிவியலில் அணுக்களைப் பற்றிய இப்போதைய கண்டுபிடிப்புகளும், கனவு பற்றிய ஆய்வுகளும் மனம் மட்டுமே கொள்கையை ஆச்சரியத்துடன் பார்த்து அதற்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.

நமது உபநிடதங்களில் அம்ருதபிந்தூபநிஷத் என்று ஒன்று உண்டு.

buddha-india

அதன் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது:

“மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ”:

இதன் பொருள் : மனம் மட்டுமே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம்”

 

இந்த உபநிடதம் மனதை அடக்க வேண்டிய வழியைக் கூறி பாலில் நெய் மறைந்திருப்பது போல ஒவ்வொரு உயிரிலும் விக்ஞானம் உறைகிறது. மனமெனும் மத்தினால் அதை இடைவிடாது கடைந்தெடுக்க வேண்டும் என்கிறது.

மனம் என்னும் மாயத்தை ஹிந்து  மதமும் புத்த மதமும் ஆராய்ந்து உரைக்கும் உண்மைகள் நவீன அறிவியலால் உரசப்பட்டு உண்மை என்று கூறப்படும் போது நமது மனம் ஆனந்தம் அடைகிறது, இல்லையா!

*******

கோண்ட் பழங்குடி இன நட்புறவு ஒப்பந்தம் (Post No.3222)

pic-gaund

Written by London Swaminathan

 

Date: 6 October 2016

 

Time uploaded in London:5-45 AM

 

Post No.3222

 

Pictures are taken from various sources; thanks.

 

 

Contact swami_48@yahoo.com

 

 

 

கோண்ட் இன மக்களை திராவிடப் பழங்குடி என்றும் அவர்களுடைய “கோண்டி” மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் அவர்களை ஆதரிக்கும் திராவிடங்களும் மார்கஸீயங்களும் கதைக்கும்.

 

நேற்று,  முதல் பகுதியில் அவர்களுடைய விநோத வழக்கங்களைப் பட்டியலிட்டேன். சில வழக்கங்கள் பிராமணர்கள் வழக்கங்களை ஒத்திருக்கும். மற்ற பல காட்டுமிராண்டித் தனமான வழக்கங்களாக இருக்கும்.

 

கோண்ட் இன மக்களுக்கு மாய மந்திரங்களில் நம்பிக்கை உண்டு. விசாகப் பட்டிணம் பகுதியில் கோண்ட் இன மக்களிடையே நடந்த ஒரு படுகொலை சென்னை போலீஸ் ரிகார்டுகளில் இருக்கிறது.

 

மூன்று சகோதரர் உள்ள குடும்பத்தில் இளைய சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவரது சடலத்தை எரித்தபோது சடலத்தின் மேல்பகுதி எரியவில்லை. இது எதிரிகள் செய்த பில்லி சூனிய வேலை என்று 2 சகோதரர்கள் கருதினர். யார் மீது சந்தேகம் எழுந்ததோ அந்த கோண்ட் இன ஆளைக் கொன்று அவரது சடலத்தை வெட்டி மேல்பகுதியை, இளைய சகோதரர் சடலத்தின் மேல்பகுதி எரிய மறுத்த இடத்தில் வீசினர்.

 

இந்தக் குற்றத்துக்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது போலிஸ் குறிப்பேடுகளில் இருப்பதாக ஆர்தர் மைல்ஸ் என்பவர் எழுதிய புத்தகத்தில் உள்ளது.

 

ஒரு கிராமத்தில் காலரா நோய் பரவிவிட்டால் அவர்கள் பன்றிக் கொழுப்பை மேலே தடவிக்கொண்டு வளைய வருவர். காலரா நோய் ஒழியும் வரை இது நீடிக்கும். பன்றிக் கொழுப்பானது காலராவை உண்டாக்கும் தேவதையை விரட்டிவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

 

அந்த தேவதை கிராமத்துக்குள் நுழையாமல் இருக்க வழிகளில் பள்ளங்களைத் தோண்டி அதில் முட்களை நிரப்பி நாற்றம் வீசும் எண்ணையையும் ஊற்றி வைப்பர்.

 

கோண்ட் இன மக்கள் ஒரு நட்புறவு பிரமாணம் (உறுதி மொழி) எடுப்பர். புரி நகர ஜகந்நாதர் ஆலயத்து அட்சதை (புனித அரிசி) மீது சத்தியம் செய்வர். இந்துக்களின் ஏழு புனிதத் நகரங்களில் ஒன்றான புரி (ஒரிஸ்ஸா) ஆலயத்துக்குச் செல்லுவோர் இந்த அட்சதையை வாங்கி யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விநியோகிப்பர். அந்த புனித அட்சதை ஒருவர் கையில் இருக்கும்போது அவர்கள் பொய் சொல்லக்கூடாது. கிராமங்களில் உள்ள ஏழைக் குடியானவர்களுக்கும் நகர மாந்தர்களுக்கும் இடையே இப்படி நட்புறவு ஒப்பந்தம் செய்வதுண்டு. இப்படி ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால் திருவிழாக் காலங்களில் அவர்கள் பரிசுகளை ஒருவருக்கொருவர் கொடுப்பர். ஒருவர் வீட்டு விழாவுக்கு மற்றொருவரை அழைப்பர்.

 

நட்புறவு சத்தியப் பிரமாணம் செய்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவர். இதற்கு “சொங்காதோ” என்று பெயர் (சங்காத்தம்) பழங்குடி மக்களிடையே பல தலைமுறையினருக்கு இடையேகூட இப்படிப்பட்ட நட்புறவு நீடிக்கும்.

 

மற்றொரு பழங்குடி இனம் சிறுத்தைப் புலியின் தோல் மீது நின்றோ அல்லது மயில் இறகைக் கையில் வைத்துக்கொண்டோ சத்தியப் பிரமாணம் செய்வர்.

pic-gond

வாக்குறுதியின் பெயரில் இப்படிப்பட்ட நட்புறவு, பல தலை முறைகளுக்கு நீடிப்பது சத்தியத்தின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. எவ்வளவுதான் வன்முறை, மூட நம்பிக்கை இருந்தாலும் சங்க இலக்கியம் குறிப்பிடும் “வாய்மொழிக் கோசர்” (Truthful Kosas of Sangam Tamil Literature)  போல கோண்ட் இன மக்களும் ‘சத்திய கோண்ட்’ இனத்தினரே.

 

கோண்ட் இனம் உருவானது பற்றி ஒரு நரபலிக் கதையும் இருக்கிறது. பூமியில் முதலில் இரண்டே பெண்கள்தான் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பூமிக்கடியிலிருந்து புதல்வர் இருவர் கிடைத்தனர். ஒரு பெண்மணி செடிகொடிகளை வெட்டும் போது கை விரலில் கத்தி படவே ரத்தம் வழிந்தோடி தரையில் விழுந்தது. அந்த இடம் காய்ந்து அதிலிருந்து மரம் செடி கொடிகள் உருவாயின. அதைச் சமைத்தபோது சுவையாக  இருந்தது. அவளுடைய மகன் காரணம் கேட்டான். உடனே அவள் தன் மகனை அழைத்து என்னைத் தாயென்று எண்ணித் தயங்காதே. என் முதுகை வெட்டிப் புதை என்றாள். அவனும் அப்படியே செய்தான். உலகில் ஜீவ ராசிகள் உண்டாயின. அதிருந்து அவர்கள் ஆண்டுக்கு ஒரு சிறுவனை நரபலி கொடுக்கத் தீர்மானித்தனர். போரா பெண்ணு என்ற கடவுளுக்கு இப்படி நரபலி கொடுக்கப்படும்.

 

இப்போது நரபலிக்குப் பதிலாக எருமை பலி தரப்படுகிறது. ஆனால் கோண்ட் இன பூசாரி சொல்லும் உச்சாடனம் நரபலி உச்சாடனமே: “ஆண் அடிமையே வா, பெண் அடிமையே வா; நீ என்ன சொல்லுகிறாய்? ஹட்டியினால் நீ சிறைப் பிடிக்கப்பட்டய். டொம்பாவினாவால் நீ சிறைப் பிடிக்கப்பட்டாய். நீ எனது குழந்தையாகவே இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்?  ஒரு பானைச் சோற்றுக்கு நீ விற்கப்பட்டுவிட்டாய்”.

 

தமிழ்க் கடவுள்களா?

 

கோண்ட் இன நரபலியில் தொடர்புடைய இரண்டு கடவுளரும் தமிழ்ப் பெயர்கள் உடைய கடவுளர். போரா பெண்ணு,  தரைப் பெண்ணு; இந்தச் சடங்கிற்கு மறியா (மறித்தல்=இறத்தல்) என்று பெயர். மரியா என்பது “ம்ருத்” என்ற சம்ஸ்கிருத வேர்ச் சொல்லில் இருந்து வந்தது. தீவிரமாக ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் மூலமான வேர்ச் சொல் கிடைக்கும். பெண் என்பதும் அந்த மூலச் சொல்லில் இருந்தே வந்தது என்பது புரியும். தரை என்பது “தரணி” என்ற சம்ச்கிருத சொல்லில் இருந்து வந்தது. மற்ற மொழிகளில் இது டெர்ரா TERRA என மருவி வரும்.

 

 

சிந்து சமவெளியிலும் நரபலி காட்சி இருக்கிறது. சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே என்று வாதிடுவோர் இந்த நரபலிக் காட்சியை கோண்ட் இன திராவிடக் குடிகளுடன் ஒப்பிடுவர். உலகில் நரபலி இல்லாத நாகரீகமே கிடையாது. வேதத்திலும் “புருஷ மேத யக்ஞம்” இருக்கிறது. ஆனால் இது நடந்ததற்கான சான்று வேதத்தில் கிடையாது. கம்பத்தில் நரபலிக்காகக் கட்டப்பட்டிருந்த ஒரு சிறுவனையும் புரட்சிக் கவிஞன் விஸ்வாமித்திரன் விடுதலை செய்ததாகவே இருக்கிறது. ஆதி சங்கரரை நரபலி கொடுக்க காபாலிகர் முயன்றபோது அவரது சீடர்களில் ஒருவரே நரசிம்மாவதாரம் எடுத்து அந்தக் காபாலிகனை துவம்சம் செய்ததாகவே இருக்கிறது.

 

 

-subham–

 

 

 

 

 

 

Waiter Anecdotes (Post No.3221)

rls

Compiled by London Swaminathan

 

Date: 5 October 2016

 

Time uploaded in London: 19-04

 

Post No.3221

 

Pictures are taken from various sources; thanks.

 

 

Contact swami_48@yahoo.com

 

 

Robert Louis Stevenson, in the days of his residence in San Francisco, took a friend to a restaurant in which he said, the waiters would never admit that anything was lacking from the bill of fare. They will take your order for the slice of the moon, said he, and go away as if to fetch it, and come back to tell you they are just out of it.

 

The two men seated themselves and the waiter came up.

“A double order of boiled Brohemoth”, said Stevenson.

“Will you have it rare or well done?” Asked the waiter.

“Rare”,said Stevenson.

In a few moments the waiter had returned , “I am very sorry, sir”, the waiter began……

“What!” Interrupted Stevenson in a tone of annoyance.

“No more Behemoth?”

“Oh, no, sir, said the waiter hastily, then lowering his voice, I have some more, sir, he explained, but the truth is I would not bring it to you as it is not quite fresh”.

rls-bookshelf

Xxxx

 

Bishop Brewster of Connecticut (USA), while visiting some friends, tucked his collar to avoid the juice of grapefruit at breakfast. He laughed as he did so, and said it reminded him of a man he knew who rushed into a restaurant and, seating himself at a table, proceeded to tuck his napkin understand his chin. He called a waiter and said,

“Can I get lunch here?”

“Yes”, replied the waiter in a dignified manner

“But not a shampoo”.

 

Xxxx

Hotels and Restaurants Anecdotes

 

A man walked into a hotel and asked for a room.

“On the American plan or the Japanese plan?” asked the clerk.

“What is the difference?”

“The American plan is with cross ventilation. The Japanese plan is with double cross ventilation”.

 

Xxx

 

A certain cafeteria in New York caused much pleasure to many of its patrons by prominently displaying on its walls, the motto

“Courteous and Efficient Self-Service”

 

Xxx

563_maxim_gorky

A certain lodging house in the south of Italy had the Russian writer Maxim Gorky as its guest some years ago. He complained to the landlady, “The morning after the night before that his bed was infested by vermin”.

The landlady indignantly remonstrated.

“No sir, we haven’t one single bug in the house”.

“No, Madame”, Gorky agreed amiably,

“They are all married and have large families too”.

 

Xxx

 

A game of Poker at Delmonicos had lasted well into the night when one of the party, the late Colonel John R Fellows, ordered a plate of sandwiches.

The familiar dainty triangle variety was served and disappeared instantly. A hungry shout went up for more.

“More Sandwiches, waiter”, said Fellows.

“Yes, sir, how many sir?” returned the waiter.

“Well, said Fellows, with a calculating air, judging by the size of your sandwiches and the size of this bill, I should say about 2000 dollars worth!”

 

Xxx

disraeli

Mr.Disraeli said he could not remember a certain inn, upon which the owner assured him that he must be mistaken.

 

“You must remember the house, sir; there was a handsome bar-maid there — monstrous fine gal — you must have been in the King’s Arm, Sir”

“Perhaps, said , said Disraeli, if I had been in her arms I might have remembered it”.

Xxx

 

For a laconic philosophy it is hard to match the case of the man who checked into a hotel in a small mid we term city and went up to his room. Later in the evening he came down, his suitcase in his hand, checked out.

“What is the trouble? Sir” asked the clerk, slightly puzzled.

“Don’t you find the room satisfactory?”

 

“The room is alright, said the man, except for one thing.

It is on fire”.

chechnya-hotel-fire

Xxx

 

In a gloomy and depressed state Eugene Field wandered into a restaurant. A busy waiter hastened up and reeled off at a high speed a long line of dishes on the present menu.

Field gazed up in melancholy and said, “Friend, I want none of these thing. All I want is an orange and a few kind words”.

–SUBHAM–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 13 (Post no.3220)

buddha-face-sudhakar-chalke

Written by S. NAGARAJAN

Date: 5 October 2016

Time uploaded in London: 8-11 AM

Post No.3220

Pictures are taken from various sources; thanks

 

 

.நாகராஜன்

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 13

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 67. பீஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளிடம் மடாலயத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் அபரிமிதமான வரிகளைத் தள்ளுபடி செய்யுமாறு ஸு யுன் கோரிக்கை விடுத்தார்.

 

 

அதிசயமாக அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. அடுத்து அங்கு திரிபிடகத்தின் ஒரு நகலை வைக்க ஸு யுன் விழைந்தார். அதுவும் ஏற்கப்பட்டது. அனைவரும் மன மகிழ்ச்சி அடைந்தனர்.

வருட முடிவு நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பீஜிங்கிலேயே ஸு யுன் தங்கி இருந்தார்.

 

 

அடுத்த வருடம், ஸு யுன்னின் 68ஆம் வயதில் அவர் ஷாங்காய் மற்றும் அமாய் நகர்களுக்குச் சென்றார்.

அங்கு அவருக்கு ஒரு துயரச் செய்தி கிட்டியது. மவுண்ட் கு வில் இருந்த வ்யதான துறவி மியாவோ-லியான் மறைந்து விட்ட செய்தி கேட்டு ஸு யுன் மிக்க வருத்தமுற்றார். அவரது தகன கிரியைக்கு ஏராளமான துறவிகள் அங்கு சென்றனர்.

ஸு யுன்னும் அங்கு விரைந்தார்.

 

 

அவருக்கு நினைவுச் சின்னமாக வழக்கமான முறையில் ஒரு பகோடா நிறுவப்பட்டது.

நான்காம் மாதம் 10ஆம் நாளில் பகோடா முடிந்த நாளனறு சரியான மழை.

 

siddhartha_by_elvis882.jpg

அந்த ம்ழை 15 நாட்கள் தொடர்ந்தது. அடுத்த மாதம் எட்டாம் நாள் மழை நின்றது. அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பத்தாம் நாள் பகோடாவின் மீது ஸ்தூபி நிறுவப்பட்டது. நூறு மேஜைகளில் சைவ உணவு பரிமாறப்பட்டது. சூத்ரங்கள் சொல்லப்பட்டன.

 

 

உணவு படைக்கப்படும் போது சொல்லப்படும் மந்திரங்கள் ஓதப்பட்ட்ன.

திடீரென ஒரு சுழல் காற்று வீச ஆரம்பித்தது.ஸ்தூபியிலிருந்து ஒரு பிரகாசமான சிவப்பு ஒளி வீச ஆரம்பித்தது. படைக்கப்ப்ட்ட உணவு அனைத்தையும் ஸ்தூபத்தின் உச்சிக்கு  காற்று மேலே தூக்கிச் சென்றது. இந்த அற்புதமான காட்சியைக் கண்டு அனைவரும் மெய் சிலிர்த்துப் போற்றினர்.

அனைவரும் மடாலயம் திரும்பிய பின்னர் அடை மழை ஆரம்பித்தது.

 

 

மியாவோ-லியானின் அஸ்தியுடன் ஸு யுன் பினாங்கு வந்தார். அங்கு அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.\

 

அங்கும் சூத்ரங்கள் சொல்லப்பட்ட பின்னர் ஒரு சுழற்காற்று தோன்றியது படைக்கப்பட்ட அனைத்தும் ஆயிரக்கணக்கான மலர்களுடன் மேலே தூக்கிச் செல்லப்பட்டது. ஒரு சிவப்பு நிற ஒளி பகோடாவின் உச்சியிலிருந்து வீசியது.

 

 

 

இந்த இரு நிகழ்ச்சிகளை ஸு யுன் நேரில் கண்டு அனுபவித்தார். அவருக்கு புத்தரின் பொன்னான வாசகம் நினைவுக்கு வந்தது.

“ தொன்று தொட்டு இருந்து வரும் சடங்குகள் ஏற்கப்படும் விதம் மிகவும் மர்மமானது”

பின்னர் ஸு யுன் தாய்லாந்திற்கு – அப்போதைய சயாமிற்கு – கப்பலில் சென்றார்.

 

 

அப்போது ஒரு பிரிட்டிஷ் அதிகாரி அவரிடம் வந்து, “எங்கு செல்கிறீர்கள்” என்றார்.

ஸு யுன் : யூனானுக்கு

“அங்கு எங்கு தங்குவீர்கள்?”

 

 

“காக் ஃபுட் மலையில் உள்ள மடாலயத்தில்”

அவர் தன்னைப் பற்றித் தெரிவித்தார்.

டெங்கு யு வில் அவர் பிரிட்டிஷ் தூதரக அதிகாரியாக இருந்தவர்.

ஸு யுன் நன்கொடை திரட்டுவதை அறிந்த அவர் உடனே முன்னூறு டாலர்களைத் தந்தார்.

இது அவரது நல்ல கர்மாவின் விளைவே என்பதை ஸு யுன் உணர்ந்தார்.

 

 

கப்பல் சயாமை அடைந்தது.

ஸு யுன் பிரிட்டிஷ் அதிகாரியிடம் விடை பெற்றார்.

யூனானில் போதிசத்வரின் க்ஷிதிகர்ப சூத்ரங்களை ஸு யுன் விளக்கலானார்.

 

ஒரு நாள் அதே பிரிட்டிஷ அதிகாரி ஸு யுன்னைப் பார்க்க வந்தார். அவரிடம் 3000 டாலர்களை நன்கொடையாகத் தந்தார்!

திரிபிடகத்தை நிறுவ ஏராளமான பணம் ஸு யுன்னுக்குத் தேவையாக இருந்தது. இந்தப் பணத்தை சந்தோஷமாக அவர் பெற்றார்.

 

ஒரு நாள் கால்களை சம்மணம் போட்டு அமர்ந்த நிலையில் ஸு யுன் சமாதி நிலையை எய்தினார்.

ஒன்பது நாட்கள் அதே நிலையில் இருந்த அவர் சகஜ நிலைக்கு மீளவில்லை.

 

 

செய்தி நகரெங்கும் பரவியது. மக்கள் திரளாக அவரை தரிசிக்கக் கூடினர்.

 

 

ஒன்பது நாட்களுக்குப் பிறகு சமாதியிலிருந்து அவர் மீண்டார். தாய்லாந்து மன்னர் அவரை தரிசித்து தன்னை அவரது சிஷயனாக ஏற்குமாறு பணிவன்புடன் வேண்டினார்.

இப்போது பல்லாயிரம் பேர் அவரது சிஷ்யர்களாக மாறினர்.

ஒன்பது நாள் அமர்ந்த நிலையில் முதலில் கால்கள் நகர முடியாமல் மரத்துப் போயின. உடலிலும் அதே உணர்ச்சி!

இதை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. ஒரு வேளை மரணம் அணுகினால் காக் ஃபுட் மலையில் உள்ள அறை கட்டப்பட மாட்டாது. அதில் திரிபிடகம் இடம் பெறாது.

என்ன செய்வது?

 

 

அவர் உறங்குகையில் ஒரு கனவு வந்தது.

 

 

அதில் ஒரு வயதான மனிதன் தோன்றினான். அவரிடம், “பிட்சுவே! உன் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாதே!

உனது துவராடையை  மடி. உன் திருவோட்டை அதை வைத்து  மூடி தலைகாணியாக அதை வைத்துக் கொண்டு தூங்கு” என்றார்.

விழித்தவுடன் ஸு யுன் அப்படியே செய்தார். உடலெல்லாம் வியர்த்தது.

 

 

இரண்டு நாளில் உடல் நலம் சீரடையத் தொடங்கியது. இருபது நாட்களில் அவர் பூரண குணமடைந்தார்.

 

 

அவர் சூத்ரங்களை விளக்கி ஆற்றிய் உரைக்காக அரசர் டாங் லி என்னும் இடத்தில் 4550 ஏக்கர் நிலத்தைப் பரிசாக அளித்தார். அதை ஏற்ற ஸு யுன் அந்த நிலத்தை ஜி லுவோ மடாலயத்திற்கு அளித்தார். அங்கு ஒரு ரப்பர் தொழிற்சாலையை நிறுவி ஒரு நிரந்தர வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

 

 

புது வருடம் தொடங்கிய போது தொழிற்சாலை தயாரானது. அந்தத் தொழிற்சாலையிலேயே ஸு யுன் புது வருடத்தை வரவேற்றார்

– தொடரும்

, “

 

கோண்டு இன மக்களின் விநோதப் பழக்க வழக்கங்கள் -Part 1 (Post No.3219)

india-group-of-gonds

Compiled by London Swaminathan

 

Date: 5 October 2016

 

Time uploaded in London: 6-30 AM

 

Post No.3219

 

Pictures are taken from various sources; thanks.

 

 

Contact swami_48@yahoo.com

 

 

 

 

ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேச எல்லைப் பகுதி காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் கோண்ட் இன மக்களை திராவிடர்கள்  வெள்ளைக்கார அறிஞர்கள் முத்திரை குத்தி வைத்துள்ளனர். நட்புறவு ஒப்பந்தம் முதல் நரபலி வரை பலவகை விநோத வழக்கங்களை உடையவர்கள் இவர்கள்.

 

எல்லா கருப்புத் தோல் ஆட்களையும் திராவிடர்கள் என்று வெள்ளைக்காரர்கள் முத்திரை குத்தினாலும் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் “ஸ்நானப் ப்ராப்தி” உறவு கூடக் கிடையாது! இதைப் பற்றி படித்தவர்கள் அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கலாம்!

 

காண்டவ இனப் பழங்குடி நாகர்கள் பற்றி மஹாபாரதத்தில் உள்ள விஷயங்களையும், கிருஷ்ணனுக்கும் அவர்களுக்கும் நடந்த மோதலுக்குப் பிறகு அவர்கள் தென் அமெரிக்காவுக்குக் குடியேறி அஸெடெக், மாயன் நாகரீகங்களுக்கு அடிகோலியதையும் முன்னரே எழுதியுள்ளேன். கோண்ட் என்னும் சொல், காண்டவ வனம் என்பதிலிருந்து வந்ததையும் அதிலிருந்தே GONDWANA LAND கோண்ட்வானா (காண்டவ+வன) லாண்ட் என்ற சொல் வந்ததையும் முன்னரே எழுதிவிட்டேன்.

 

gond-women-grinding-corn

 

சில வழக்கங்களை மட்டும் காண்போம்.

 

கோண்ட் இன மக்கள் மண் சுவர் எழுப்பிக் குடிசை கட்டுகின்றனர்.

(சிந்துசமவெளியிலிருந்து விரட்டப்பட்டவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இப்படி மண்குடிசைகளில் வசிக்காமல் செங்கல் வீட்டில் வசித்திருப்பார்கள். வெள்ளைக்கார திருடன் தத்துப் பித்து என்று உளறியதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு).

 

அவர்கள் மஞ்சள் முதலியவற்றைப்  பயிரிடுகின்றனர். மஞ்சளை இரத்த பலி தொடர்பான சடங்குகளில் பயன்படுத்துவர். மஞ்சளே இரத்தத்தின் சிவப்பு நி ற த்திற்குக் காரணம் என்பது அவர்களின் நம்பிக்கை.

 

ஆண்களும் பெண்களும் முடியை நன்கு அலங்கரிப்பர். பெண்கள் மலர் சூடி மான் கொம்பு ஊசிகளை கொண்டை ஊசியாகப்   பயன்படுத்துவர்.

ஆண்கள் வேஷ்டி போன்ற ஒரு துணியையும், பெண்கள் புடவை போல ஒன்றையும் மேலே சுற்றிக்கொள்வர். பெண்கள் கல்யாணம் ஆகும்வரை காதில் தோட்டுக்குப் பதிலாகக் குச்சியைச் சொருகிக் கொள்வர். கல்யாணமான பின்னர் காதில் தோடுகள் அணிவர். காப்பு, மூக்குத்திகளையும் அணிவர்.

 

(சில அறைகுரை ஆராய்ச்சியாளர்கள் இந்த மூக்குத்தி அணியும் வழக்கமெல்லாம் வெளி நாட்டிலிருந்து வந்ததென்று எழுதியுள்ளனர். ஆனால் பழங்குடி மக்களிடையே இதை யார் புகுத்தியது?)

 

பெண்களிடையே ஒழுக்கம் குறைவுதான். பழம் பறிக்க, மீன் பிடிக்க என்று காட்டிற்குள் போவார்கள்; கள்ளத் தொடர்பு ஏற்படும் பின்னர் பெற்றோர்கள் கல்யாணம் செய்துவைப்பர்.

பெண்களுக்கு ஒரு “கோண்டி” சீதனம் தர வேண்டும்; ஒரு “கோண்டி” என்பது ஒரு ஆடு அல்லது ஒரு பன்றி அல்லது, ஒரு பித்தளைப் பானை ஆகும்.

 

கோண்ட்,  தனது கிராமத்துகாரரைத் திருமணம் செய்யக் கூடாது (பிராமணர்கள் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யமாட்டார்கள் என்பதைப் போல)

 

பெண்ணை, அவளுடைய மாமன் தூக்கிக் கொண்டுபோய், மணமகன் வீட்டில் விட வேண்டும். அவளை ஒரு சிவப்புக் கம்பளத்தில் சுற்றி தூக்கிக் கொண்டு செல்வர் ( பிராமணப் பெண்கள் சிவப்பு நிறக் கூரைப் புடவை கட்டிக் கொண்டு தாலி கட்டிக்கொள்வதையும், மாமன் தோளில் ஏறி மால மாற்றிக் கொள்வதையும் ஒப்பிடுக)

gonds1

(ஆரியர்- திராவிட என்று பகச் சொல்லி கேளிர் பிரிப்போரைப் பார்த்து நகைக்க இவை எல்லாம் உதவும்).

 

கிராம எல்லையில்  பெண் வீட்டுக்காரர்களை மணமகன் வீட்டுக்காரர்கள் கம்பு கொண்டு தாக்கி வேடிக்கை செய்வர். சில நேரத்தில் பெண் வீட்டுக்காரகள் தா குவதும் உண்டு. மணமகன் வீடு செல்லும்வரை இந்த சண்டை நீடிக்கும். ( பிராமணர் திருமணத்தில் நடக்கும் காசி யாத்திரை, திரு மணத்துக்குப் பின்னர் நடக்கும் நலுங்குப் போட்டிகள் ஒப்பிடற்பாலது)

 

திருமண விருந்தில் ஒரு பன்றி அல்லது எருமையை வெட்டி உண்ணுவர். குடித்துவிட்டு கூத்தாடுவர். மூன்று நான்கு நாட்களுக்குப் பின்னர் மணமகனின் சகோதரன் ஒரு விருந்து கொடுப்பார்.

பெண்ணே நீ நல்லபடி நடந்துகொண்டால், புலி போல ஒரு மகன் பிறப்பான். கண்டபடி நடந்தால் உனக்கு குரங்குதான் பிறக்கும் என்று சகோதரன் புத்திமதி சொல்லுவான். கூடியிருக்கும் பெரியோர் அனைவரும், உனக்கு நிறைய ஆண்பிள்ளைகள் பிறக்கட்டும் என்று ஆசீர்வாதம் செய்வர்.

 

சில கோண்ட் இன மக்கள் பெண்ணின் கைகளில் 20 அல்லது 30 பவுண்டு எடையுள்ள பித்தளை விலங்கு பூட்டுவர். அப்படி மூன்று நாட்களுக்கு வைப்பர். அப்பா வீட்டுக்கு (பிறந்தகத்துக்கு) ஓடிவிடக்கூடாதென்பதற்காக.

 

(அந்தக் காலத்தில் பெண்ணை கடத்தி வந்து கல்யாணம் செய்ததால் இது வழக்கத்தில் வந்திருக்கலாம் (மனுவும் தொல்காப்பியரும் சொல்லும் எண்வகை திருமணங்களில் இவ்வகை இராக்கத திருமணமும் ஒரு வகையாகும்).

 

சிலந்தியின் சாம்பல்

பிரசவம் பார்க்கும் தாதி கர்ப்பிணியின் வயிற்றில் விளக்கெண்ணை தடவுவார். ஒரு சிலந்தியை மெழுகுவர்த்தித் தீயில் எரித்து சாம்பலை விளக்கெண்ணையில் குழைத்து பிறந்த குழந்தையின் தொப்புளில் தடவுவார். ஒரு மாதம் வரை குங்குமப்பூ/  விளக்கெண்ணை சாந்தையும் பூசுவர்.

 

பிறந்த ஆறாவது மாதத்தில் பெயர் சூட்டும் வைபவம் நடக்கும். ஒரு அரிவாளையும் அரிசியையும் பயன்படுத்துவர்.முன்னோர்களின் பெயர்க ளைச் சொல்லுவர். மேலிருந்து தொங்கும் அரிவாள் எந்தப் பெயர் சொல்லும்போது நகர்கிறதோ அந்தப் பெயரை குழந்தைக்கு வைப்பர். எல்லோருக்கும் விருந்து படைப்பர்.

 

கோண்ட் இன மக்களின் ஈமச் சடங்குகளும் வேறுபட்டவையே. சடலத்தை எரித்துவிட்டு அந்த இடத்தில் சமைத்த சோறை வைப்பர்; (பிராமணர்களின் பிண்டக் கிரியை ஒப்பிடுக) மந்திர உச்சாடனம் செய்து உணவைச் சாப்பிடச் சொல்லுவர். அந்த ஆவியை புலி உடலிலோ, பேயின் உடலிலோ புகாமல் இருக்க வேண்டுவர்.

 

ஒருவர் இறந்த மூன்றாம் நாளன்று இறந்தவரின் உருவ பொம்மை செய்து, அதை இறந்தவரின் வீட்டுக் கூரையில் வைப்பர். எல்லா உறவினர்களும் நண்பர்களும் அதைப் பார்த்து அழுவர். ஏழாவது நாளில் ஒரு எருமை மாட்டை பலி கொடுத்த பின்னர் தீட்டு கழியும்.

 

சில கோண்ட் இனங்களில் பிணத்தின் காலில் ஒரு ஆட்டை கட்டி தர தர என்று இழுத்துச் செல்லுவர். சுடுகாட்டுக்குச் சென்ற பின்னர் கட்டி அதை அ வி ழ்த்து விடுவர்.

 

 

ஈமச் சடங்குகளில் ஆண்களின் நடனமும் இருக்கும். 12ஆம் நாளன்று பெரிய ஆட்டமும் எருமை மாட்டு மாமிசத்துடன் விருந்தும் நடைபெறும்.

 

(எனது கருத்து:– இறந்தோருக்கு எருமை மாட்டை பலி கொடுப்பது நீலகிரி தோடர்கள் இனத்திலும் உண்டு. சொல்லப்போனால் எங்கு எல்லாம்  எருமைகள் வசிக்கின்றனவோ அங்கெல்லாம் இது இருக்கிறது. எமனின் வாஹனம் எருமை என்பதால் இப்படி இருக்கலாம். இந்தோநேஷியாவின் செலிபிஸ் தீவுகளில் 10 எருமைகள் வரை பலி கொடுப்பர்)

நட்புறவு ஒப்பந்தம், நர பலி முதலியன குறித்து அடுத்த பகுதியில் காண்போம்

 

தொடரும்……………….

 

Dasara in 1930s: Arthur Miles (Post No. 3218)

dasaradinamalar

Compiled by London Swaminathan

Date: 4 October 2016

Time uploaded in London: 19-06

Post No.3218

Pictures are taken from various sources; thanks.

(latest Dasara pictures )

 

Contact swami_48@yahoo.com

 

mysbrhi-w157_ar_20_1243406e

“Under the Aswija (September or October) moon, the Dasara festival begins. Dasara means ten nights and for ten nights and days the festival continues. A more elaborate spectacle than the festival of Dasara of Mysore can be seen nowhere in the world to-day. To say that the city is arrayed for carnival, gives no idea of the ten nights. Haroun-el-Rashid might have dreamed of something resembling it for ten of his Arabian Nights.

 

The palace of the Maharaja twinkles with thousands of electric lights. From the temple at the entrance gate a god, so decked in jewels and garlands that only his face remains visible, looks out at his worshippers, who are dressed in silks exquisite linen, and tissues of spun gold. The metallic clink of bracelets and necklaces is heard above the wail of age-old musical instruments, and glittering figures bring their offerings to the temple and prostrate themselves before the god. For all this the nights have a strange quiet, and it is as if the worshippers moved through an ancient dance lost in meditation.

 

The days blaze with colour, until the eyes fairly ache. It would seem that where nature is so passionately vivid nothing could be added to the picture. But streamers from posts for miles, and temporary structures along the streets are buried under multi-coloured silk and embroidery. On the tenth day (victory day), the Maharaja, seated on the State elephant, caparisoned with velvet, flowers and jewels, leads a procession through the streets.

 

It was customary in former years for the Prime Minister to ride beside him. But the present Prime Ministeris a Mohammedan, and the heir apparent sits beside the Maharaja today. The elephant’s huge ears are painted with designs such as one sees in old frescoes and he wears gold anklets studded with precious stones.

KPN photo

The cream coloured State cows, walking close together, wear  ropes of pearls and gold casings on their horns. Across their backs purple colour thrown, into which gold thread has been woven. Their hoofs have received a gold wash, and just above. them are clamped anklets, the value of which would balance a tottering empire. Men wearing dhoties as light as a cobweb, move along carrying garlands of flowers; followed by men in uniform and the Palace guard, resembling players in some gorgeous extravaganza. The orchestra plays something which might have been heard in the temple of Milita in old Babylon while the virgins sacrificed themselves to Venus. Sometimes the animals from the zoo have been known to join the procession. The whole pageant is as colourful and sensuous as an oriental carpet on which slept some barbaric princess of old.

 

Before the opening of the festival, an auspicious hour has been chosen for setting up the Maharaja’s throne in the Durbar hall. It is the throne of his house, andis used now only for the Dasara. Tradition says that the throne was once the possession of the Pandavas, the heroes of the Mahabharata, and that it later belonged to the Yadu dynasty of Sri Krishna, from which ancestry the present reigning family claim descent. It is also said, that after the English had conquered Seringapatam, the throne was rescued from Tippu Sultan’s lumber room and set up for the house of Wodiyar, in the state of Mysore. When the throne is set up in the Durbar hall, the image of a lion is placed on it; since it was on a lion that the goddess Kali went into the battle against the demons.

05bgdasara_5assam_2139442g

On the occasions of the Dasara the goddess Kali destroys the demon of physical desire, who, in the form of a buffalo, is called Bandasura. The battle waged for nine days, and the victory to Kali came on the tenth day. One of the goddesses, fought beside Kali, slew the two demons Chanda and Manda. For this daring exploit the goddess was called Chamundi, the name being a combination of the names of the defeated demons. Chamundi hill, from which at night the city of Mysore with its thousands of lights reflected in the sacred tanks looks like an enchantment, is associated with the goddess. The Maharaja has a small temple on the top of the hill, to which he frequently retires to meditate. It is said that he is a holy man, who refuses to leave his beloved India to visit the materially-minded West.

 

For the first nine days of the Dasara the Maharaja cannot leave the palace. Standing before the image of the Goddess Chamundi, wearing a bracelet which is sacred to her, and a substantial growth of beard (during the nine days he must not shave), he is supposed to give himself up to the contemplation of his soul. No energy should be given to physical desire of any sort, consequently all his attention is concentrated upon the goddess and the occasion. The Maharaja is the central point of the Dasara, as according to the ancient laws of Manu the king was the representative of God. He was the will, the devotion of all his people, and during the nine nights, by his own purification, he purifies his subjects.

 

The festival of the nine nights is called the Navaratri. There is no difference between the two festivals, save that the Dasara celebrates its day of victory. On the ninth night European guests, who wish to pay their respects individually and receive floral acknowledgment, are received by the Maharaja. At the palace both Western and Eastern music can be heard each night of the festival.

 

All the aspects of the Dasara are feminine. It is the Sakta which in Mysore takes what is known as the right-hand path. This means that it does not descend into its lowest form. The people are apparently content with the magnificent pageant furnished by the Maharaja.

dasara-wrestling

The sakti, or energy of the masculine principle, goes into the female principle for destructive reasons. The female represents the male as the agent of destruction. Some woman, usually a virgin (although even widows have been known to officiate), represents the energy of Siva. Sometimes the woman is worshipped as the wife, sometimes as the mother. Behind all this objective expression lies the cosmic energy, of which Siva is supposed to be the active embodiment. The cosmic energy, which is believed by the Hindus to be masculine, cannot destroy. It has created the world and all that is in it, and when it seeks to destroy it must become feminine.

 

In this respect Hinduism does not differ very much from other religions. From time immemorial human imagination has given the woman the role of destruction. Even her power to destroy, according to the Hindus, had to be borrowed from man.  Each Hindu god shows his disposition through his sakti, or wife. Sivamust destroy in order to build, in order to build and is impersonated by the goddess, Kali. Brahma a milder god, uses his energy in the goddess Saraswati; while Vishnu, the lord of creation, uses Lakshmi as his vehicle of power.

 

 

At the Mysore Dasara wrestling bouts are staged which the Maharaja watches. Special attention is paid to the girls of unusual beauty, as they are considered special representatives of the sakti. The animals are grouped with the human population on this occasion, and all are purified; the State elephant and the State horse having a special ceremony.

dasara-majestic

After the State sword is worshipped, it is placed in a palanquin and sent with the State horse and elephant to the parade ground, three miles from the palace. At sunset a parade of troops is held on the ground. The scene is very dramatic, with its background of amber sky, and its veil of sparkling sun-mist. The Maharaja performs puja (worship) before the State sword and the banni-tree, and the sword is then sent back to the palace, accompanied by the elephant and the horse. The Maharaja follows by torchlight. The worship of the banni (Vanni) tree is an incident from the Mahabharata”.

 

(After this, the writer narrates the story of Arjuna hiding the weapons under the Vanni, tree and the principle of Sakti, parting of hair on the head of Hindu women and applying Kumkum etc.)

 

Mysore Palace - Dasara procession mural

Mysore Palace – Dasara procession mural

dasara color 3.jpg

 

–Subham–

 

 

 

 

தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்! -2 (Post No.3217)

india-pakistan-map

Written by S. NAGARAJAN

Date: 4 October 2016

Time uploaded in London:5-59 AM

Post No.3217

Pictures are taken from various sources; thanks

 

 

.நாகராஜன்

 

Hindu American Foundation என்ற இணைய தளம் இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை நன்கு விவரிக்கிறது.

 

அங்கு, திட்டமிட்டு ஹிந்துக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலிருந்தும் ஒதுக்கப்படுகின்றனர்,

 

அவமானப்படுத்தப்படுகின்றனர். இஸ்லாமியர் அல்லாத ஒருவர் ஃபெடரல் ஷரியத் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட முடியாது. பாகிஸ்தான் அரசியல் சாஸனப்படி அந்த நாட்டின் பிரதமரும் ஜனாதிபதியும் நிச்சய்மாக ஒரு முஸ்லீமாக இருக்க வேண்டும்.

 

மகம்மது நபியைப் பற்றித் தூற்றுவதோ அல்லது விமரிசிப்பதோ தெய்வ நிந்தனைக் குற்றமாகும். இதற்கான ஒரே தண்டனை மரண தண்டனை தான்! தனிப்பட்ட முறையில் வஞ்சம் தீர்க்க இந்த அஸ்திரம் ஏவப்படும். வேண்டாத ஹிந்து அல்லது இதர மைனாரிட்டிகள் இந்தக் குற்றத்திற்கு “ஆட்பட்டு” தங்கள் இன்னுயிரைத் துறப்பர்.

 

பாகிஸ்தானின் உயர்நீதி மன்ற நீதிபதிகள் – உதாரணமாக லாகூர் ஹைகோர்ட்டில் நீதிபதியாக இருக்கும் நீதிபடி அக்தர் (Justice Akhter of Lahore High Court) – தெய்வ நிந்தனை செய்வோரின் குரல்வளை நசுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திப் பிரச்சாரம் செய்கின்றனர்.

 

பாகிஸ்தானில் உள்ள 20 லட்சம் ஹிந்துக்கள் வழக்கமாக ஒரு பிணைத்தொகையைத் தருதல் வேண்டும். அவர்கள் உடலுக்கு ஊறு நேராமல் இருக்க அங்குள்ள தீவிரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்தத் தொகை கண்டிப்பாகத் தருதல் வேண்டும்.

 

குமாஸ்தா வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் ஒரு ஹிந்துவுக்குக் கிடைக்காது என்பது சாமான்ய அறிவு. வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றாலோ ஒரு முஸ்லீமை ‘சைலண்ட் பார்ட்னராக’ -அவர் பெயருக்காகத் தான் இருப்பார் – சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

 

ஹிந்துக் கோவில்கள் அங்கு தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 1992ஆம் ஆண்டு  மட்டும்  இந்தியாவில் நடந்த வகுப்புக் க்லவரங்களுக்குப் பதிலாக நூற்றுக்கணக்கான ஹிந்துக் கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன. (இந்தியாவில் வகுப்புக் க்லவரங்களைத் தூண்டி விடுபவர் இங்குள்ள தீவிரவாத முஸ்லீம்கள் தான் என்பது வேறு விஷயம்!)

 

 

ஹிந்துக்களின் கோவில் நிலங்களை/ இடங்களை அநியாயமாக சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்தல். ஹிந்துப் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் புரிதல், அவர்களைக் க்டத்தி பெரும் தொகையைப் பிணைத் தொகையாகக் கேட்டல் போன்றவை எல்லாம் அங்கு சர்வ சாதாரணம்.

 

 

2016, ஏப்ரல் 16 ஆம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. 24 வருடங்களுக்கு முன்னர் 50 வயதான க்ருபால் சிங் என்பவர்  அட்டாரி – வாஹ் (Attari –Wagah) எல்லையைத் தாண்டி விட்ட குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அவரைச் சேர்த்து இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.  ஏப்ரல் 11ஆம் தேதி மர்மமான முறையில் அவர் லாகூரில் உள்ள காட் லக்பட் (Kot Lakhpat) சிறையில் இறந்து கிடந்தார். அவரது கல்லீரலும் இதய்மும் அவர் உடலிலிருந்து அகற்றப்பட்டிருந்தன!

 

 

இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் உடனே மறுக்க ஒரு கோஷ்டி இந்தியாவில் உண்டு. சில கம்யூனிஸ்டுகள், அருந்ததி ராய் போன்ற “அறிவுஜீவிகளாகத்’ தங்களைச் சித்தரித்துக் கொள்வோர், காங்கிரஸை சேர்ந்த நடிகை ரம்யா உள்ளிட்ட சில பாகிஸ்தான் ஆதரவாளர்கள், திராவிட தீய சக்திகள் என்று இந்தப் பட்டியல் வெகு நீளம் கொண்ட ஒன்றாக விரியும்.

இவர்கள் அனைவரும் இந்தியாவை வாய்க்கு வந்தபடி விமரிசிப்பர்.

 

கருத்துச் சுதந்திரம்!!

 

இவர்களில் பெரும்பாலானோர் ஹிந்து தெய்வங்களை கண்டபடி விமிரிசிப்பார். (ஹிந்து தெய்வங்களை நிர்வாணமாகப் படம் வரைதல், உயரிய மரியாதைக்குரிய தெய்வமான ராம்ரைச் செருப்பால் அடித்த உள்ளிட்டவை இதில் அடங்கும்)

கருத்துச் சுதந்திரம்!!!

 

 

ஆனால் முகம்மது நபியைப் பற்றியோ அல்லது அல்லாவைப் பற்றியோ ஒரு சிறிய கருத்தைத் தூக்கத்தில் கூட இந்தப் பகுத்தறிவு வீரர்கள் சொல்ல மாட்டார்கள்.

சொன்னால் உடனே கிடைக்கும் தண்டனை எது என்று அவர்களுக்கு நன்றாகவே புரியும்.

 

 

அதில் அவர்களின் கருத்துக்கு சுதந்திரமே கிடையாது.

 

ஒரு சிறிய நாடு மிகப் பெரும் சாத்வீகமான ஒரு நாட்டை எப்படி தைரியமாக எதிர்க்கிறது. ஏன் பிரம்மாண்டமான நாடான இந்தியா அதை எதிர்கொள்ள-அதன் தீவிர வாதத்தை எதிர்க்கச் சற்றுத் தய்ங்குகிறது.

 

 

முற்றும்

 

*********

 

இந்தக் கட்டுரைக்கான பல கருத்துக்களைத் தந்துதவிய 16-9-2016 TRUTH  ஆங்கில வார இதழுக்கு எமது மனமார்ந்த நன்றி!

 

Erukku Plant (Calotropis gigantea) in Hinduism!(Post No.3216)

calotropis_gigantea-jpgwiki

Arka/Erukku:-Picture taken from wikipedia;thanks

Complied by London Swaminathan

Date: 3 October 2016

Time uploaded in London: 20-51

Post No.3216

Pictures are taken from various sources; thanks.

Contact swami_48@yahoo.com

 

 

Tamils are very familiar with this Erukkam Pu (Calotropis gigantea)  plant because it is the most sought after plant during Ganesh Chaturthy. No other day they use it to worship god. It grows on its own in dilapidated building sites and road side bushes.

 

There is no reference to Lord Ganesh in Sangam Tamil literature (except an appendix verse in Tiru Murukaatrup padai). Neither Kalidasa nor the Tamil saint Manikkavasagar mentioned Ganesh, because they lived in the early centuries of common era or before that. But Tamils must have known Lord Ganesh because Kapilar mentioned Erukku and grass for gods in verse 106 of Purananuru. Both these are offered to Lord Ganesh only in Tamil Nadu and the very name Kapila is the one of the important 16 names of Lord Ganapathy.

Erukkam pu is offered to Lord Siva in certain parts of India. Maharashtrians also use it as one of the five plants (Pancha Pallava).

 

Adi parva of Mahabharata has a reference to this lant. Upamanya, disciple of seer Ayoda Dhaumya, became blind after eating the Erukkam leaves. This plant and its latex are poisonous.

 

Cambodians use it in funeral service. Probably this is the reason for an Indian curse, “May the Arka/Erukku grow at your door”.

calotropis_gigantea_plant-ogv

Erukku Marriage

A brahmin marries second wife when his first wife is dead or sick or separated. But he is very superstitious about marrying a third wife. If he marries for the third time, it is believed that she will become a widow.  To avoid this, he marries the arka (Erukku) plant. Indians believe that this is the oldest plant. After marrying himself to the plant and goes for a new wife, who will be his fourth wife. The bridegroom will go to the place where the Erukku grows, with a friend and a priest, on an auspicious day. The accompanying friend acts like the father in law and the plant is addressed with Mantras. After the marriage the plant is cut down.

 

The plant is named Arka in Sanskrit which is one of the names of the sun. The plant is supposed to catch some property from the sun. Some people used to apply the leaves to their foreheads when the sun is in a certain position. A person suffering from some illness ties a lock of his hair or a rag from his clothing on to the plant, and it takes on his ailment and withers.

Tying rags to trees and marrying with the trees happen in other parts of the world as well.

TREE MARRIAGES

Allegorical marriage of trees is practised in India. All the rituals that are performed in an actual wedding are done to the trees. Big feast is also given to everyone.  Aswatta Tree (peepal tree) is the symbol of Vishnu. First, Lord Vishnu is invoked into the tree. Some years later, a mate is chosen for the tree, and with all the pomp and ceremony of a Brahmin wedding,  a bride, in the shape of a neem tree, is brought and legally married to the Aswatta tree.

In the fruit growing districts of the country it is supposed to be extremely unlucky for the owner of a plantation, or his wife to tatse any of their own fruits until one of the trees has been legally married to another of a different species. An owner of a mango grove will marry one of his trees, preferably to a tamarind tree. If it is not possible, jasmine plant will be the bride.

brahma-thailand

Brahma from Thialand

The origin of these tree marriages centres around an old legend, where Brahma of the four faces, induced a certain prince Indramena to restore the temple of Jagannath that was buried under the sand. After some time, the king was able to discover the buried temple but could not restore it. Then Brahma allowed him to build a new temple in a new site. Brahma also told him that Vishnu would come to the king  in the shape of a tree, which would be washed by the sea. Then the trunk of an Aswatta tree was washed up on the shore. A wood carver Visvakarma,  was allowed to carve the figure of Krishna. Half way through it, the king peeped into the room , violating the stipulated condition and so the Viswakarma left it without completing it.

 

Suham–

சிவ பெருமானுக்கு மீசை! விஷ்ணுவுக்கு ‘ஷேவ்’ ஏன்? (Post No.3215)

siva-ravi-varma

Written by London Swaminathan

Date: 3 October 2016

Time uploaded in London: 12-36

Post No.3215

Pictures are taken from various sources; thanks.

Contact swami_48@yahoo.com

வேதத்தில் உள்ள நூற்றுக் கணக்கான சொற்களை இன்றும் தமிழர்கள் உள்பட நாட்டிலுள்ள எல்லோரும் பயன்படுத்துவது வியப்புக்குரிய்து. உலகிலேயே பழமையான நாகரீகம் இந்து நாகரீகமே என்பதையும் உலகிலேயே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும்தான் என்பதையும் இது காட்டும்.

 

கேசம் என்ற சம்ஸ்கிருதச் சொல் இன்றும் கூந்தல் வளர் தைல விளம்பரங்களிலும் பெயர்களிலும் இருப்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

 

முடி என்பது தலை முடியையும், மன்னர் முடியையும் (கிரீடம்) குறிக்கும் என்பதுமிரு மொழிகளுக்கும் பொது. இது இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்தவை என்பதைக் காட்டும். ஆரிய மொழிக் குடும்பம் – திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் பிதற்றல் என்பதையும் விளக்கும்.

indus-valley-priest

சிந்து சமவெளி யோகி முத்திரையில் காணப்படும் குருவின் தாடி விநோதமாக இருப்பது பலருக்கும் பெரும் புதிராக இருக்கிறது.

 

இதைவிட வேடிக்கை இந்துமதக் கடவுளரின் உருவங்களின் வரை படங்கள் வெவ்வேறாக இருப்பதாகும். புகழ் பெற்ற ரவி வர்மா வரைந்த ஓவியங்களில் சிவன் மீசையுடன் காட்சி தருவார். இன்னும் சில சிலைகளில், குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சிவன், இந்திரன் முதலியோர் மீசையுடன் காணப்படுவர். ஆனால் எல்லா இடங்களிலும் விஷ்ணு, கிருஷ்ணன் ஆகியோர் நல்ல ‘ஷேவ்’ (சவரம்) செய்த முகத்துடன் காட்டப்படுவர். இது ஏன் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

 

இதை விட வியப்பான விஷயம் சிகை (குடுமி) என்ற வேத கால சம்ஸ்கிருதச் சொல்லாகும். பிராமணர்கள் இன்றும் இந்தச் சொல்லை பயன்படுத்துவதில் வியப்பில்லை.ஆனால் கிராமப்புறத் தமிழர்களும் இதை பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்பதைத் தெளிவாக்கும்.

 

சிகைக் காய் பொடி (சீயக்காய் பொடி) என்பதை அறியாதோர் இல்லை. எண்ணை தேய்த்துக் குளிப்போருக்கு இது அவசியம். சிகை+ காய் = சீயக்காப் பொடி. சிகை என்பது குடுமி என்னும் பொருள்படும் சம்ஸ்கிருதச் சொல்!

 

வேத காலத்தில் வாழ்ந்த இரண்டு குருமார்களின் பெயர் சிக, அனு சிக. இதைக் குடுமி, துணைக் குடுமி என்றும் மொழி பெயர்க்கலாம். சிக என்பது சிகரம் (உச்சி, மலை உச்சி), சிகாமணி போன்ற சொற்களிலும் புழங்குகிறது.

 

persian-2

சிகா (குடுமி, நீண்ட தலை முடி), புலஸ்தி (நேரான முடி), சிகண்ட (குடுமி), ஸ்மஸ்ரு (தாடி, மீசை Rig veda (2-11-17; 8-33-6 etc), சீமன் (தலை வகிடு) ஆகிய சொற்கள் வேதங்களிலும் பின் வந்த இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்தியர்கள் சாகும் வரை மீசை, தாடியை போற்றி வளர்த்ததாக மெகஸ்தனீஸ் 2300 ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார்.

 

பாரசீகர்கள், தேன்கூடு போல தாடி வைத்திருப்பதை உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் சம்ஸ்கிருதத்தில் பாடிப் பரவியுள்ளான்.

 

persian-beard

—subham–

 

 

ஆதிவாசிகளின் சிகை அலங்காரம்

kampti-woman

Written by London Swaminathan

 

Date: 3 October 2016

 

Time uploaded in London: 9-01 AM

 

Post No.3214

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

பெண்கள்,  பிறந்த நாள் முதலே,  தங்களை அலங்கரிக்கத் துவங்கி விட்டார்கள். இதற்கு ஆதிவாசிப் பழங்குடிகளும் விலக்கல்ல. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஜாதிகளும் பல நூற்றுக்கணக் கான பழங்குடி இன மக்களும் வசிக்கின்றனர். ஒவ்வொரு இனத்தினரும் வெவ்வேறு வகை திருமணச் சடங்குகள், ஈமச் சடங்குகள், நடை, உடை, பாவனை கொண்டு வாழ்கின்றனர். இப்பொழுது நாகரீகம் வேகமாகப் பரவி வருவதால் அவர்களும் மாறி வருகின்றனர். வெளிநாட்டுக்காரர்கள் நம்மைத் திட்டுவதற்காக எழுதி வைத்த பல குறிப்புகள் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.

 

கருப்புத் தோல் உடைய அவ்வளவு பெயரும் “திராவிடர்கள்” என்றும் அவர்கள் உயரிய நாகரீகம் வாய்ந்தவர்கள் என்றும், அவர்களைக் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் விரட்டி அடித்ததாகவும் வெள்ளைக்காரன் பொய்யுரைகளை பரப்பி இருந்தான். ஆனால் இந்த “திராவிடப் பழங்குடியினரோ” கொஞ்சமும் நாகரீகம் இல்லாத, காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதும் அவர்களில் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பழக்க வழக்கங்கள் இருப்பதுமாராய்ச்சி செய்வோருக்கு வெள்ளிடை மலையென விளங்கும். இந்த திராவிட– ஆரிய கதைகள் எல்லாம் நல்ல கட்டுக்கதை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும்.

 

இதோ சில சிகை அலங்காரங்கள்:

 

பர்மா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் எல்லையில் காம்டி இன மக்கள் வசிக்கின்றனர். அந்த இனப் பெண்கள் திருமணமானவுடம் தலைமுடியை உயர்த்தி ‘கொண்டை’ போடுவர். திருமணமாகாத பெண்கள் முடியைக் கழுத்தின் பின்புறத்தில் தொங்கவிட்டு முடித்து வைப்பர்! ஆக ஒரு பார்வையிலேயே யார் திருமணமானர் என்று கண்டுபிடித்துவிடலாம்!

 

ஒரிஸ்ஸா, ஆந்திரா, மத்தியப்பிரதேச எல்லைகளில் காடுகளில் வசிக்கும் கோண்டு இன ஆண்களும் பெண்களும் முடியைப் பராமரிப்பதில் பெரும் கவனம் செலுத்துவர். மான் கொம்புகளினால் ஆன பெரிய கொண்டை ஊசியைத் தலையில் குத்திக்கொள்வர். மலர்களையும் சூடுவர். திருமணமாகாத பெண்கள் காதில் விளக்கு மாற்றுக்குச்சியை சொருகிக் கொள்வர். திருமணமானபின்னர் நிறைய தோடுகளை அணிவர்.

 

காதுகளைப் பார்த்துதான் காதலிக்க வேண்டும்!!!

 

நாயர் இனப் பேரழகிகள்

nayars-of-kerala-wiki

கேரளத்தில் வசிக்கும் நாயர் இனப் பெண்கள் பற்றி ஆர்தர் மைல்ஸ் என்பவர் 1933 ஆம் ஆண்டில் எழுதியது:-

“இந்தியாவிலேயே பேரழகிகள் நாயர் இனப் பெண்களே. அவர்கள் தலை முடி பிசுக்கில்லாமல் பள பள என்று இருக்கும் . எப்போதும் சிகைக்காய் பொடியால் கழுவி சுத்தமாக வைத்து மலர் சூடுவர். தோலில் ஒரு பருவோ கொப்புளமோ வந்தால் அதைப் பெரிய அவமானமாகக் கருதுவர். மற்ற இனப் பெண்கள் போலல்லாது இடது மூக்கில் மூக்குத்தி அணிவர். குளிக்காமல் எதையும் செய்யார். ‘சுத்தம் சோறு போடும்’ என்பதை அறிந்த இனம். ஒரே ஒரு உடற்குறை! காதில் பெரிய தொளையிட்டு தங்க நகைகளை அணிவதே!”

 

இங்கிலாந்துக்கு வரும் திருப்பதி முடி

 

ஆர்தர் மைல்ஸ் 1933ல் எழுதியது:–

 

ஒருமுறை என் வீட்டுத் தோட்டக்காரன் மீசை, தலை முடி எல்லாவற்றையும் சிரைத்துவிட்டு வெழுமூன பள பள என்று வேலைக்கு வந்தான். எனக்கோ அதுபற்றிக் கேட்கத் தயக்கம். இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின்னர் அவனே சொல்லத் துவங்கினான். நேர்த்திக் கடனுக்காக் கடவுளுக்கு முடியைக் கொடுத்ததாகச் சொன்னான்.

 

இந்தியாவில் பணக்காரகளுகுச் சமமாக ஒரு ஏழையும் தானம் செய்யக்கூடியது தலை முடி ஒன்றே. அதில் அவர்களுக்குப் பரம திருப்தி. அதுவும் பெண்கள் தனது  தலை மயிரை கொடுப்பது பெரிய தியாகமே. இப்படி அவர்கள் திருப்பதியிலும் பழனியிலும் முடி காணிக்கை செலுத்தாவிடில் நாம் ஐரோப்பாவிலும், குறிப்பாக இங்கிலாந்திலும் முடிகளால் ஆன மெத்தைகளில் உறங்க முடியுமா?

 

பிராமணப் பெண்கள், கணவனை இழந்து விட்டால் தலை முடியை எடுத்துவிட்டு தலையை புடவையால் மறைத்துக் கொள்ளுவர். ஆனால்  ஐயங்கார்களில் தென்கலை சம்பிரதாயத்தினர் இப்படிச் செய்வதில்லை என்றும் ஆர்தர் மைல்ஸ் எழுதியுள்ளார்.

 

(இப்போது முடியைக் களையும் வழக்கம் மிக மிகக் குறைந்துவிட்டது)

vv-anni-5

Nilgris:-Toda Tribal woman

பெண்கள் வகிடு எடுப்பது — ஒரு புறம் சக்தியையும் மறுபுறம் சிவனையும் குறிக்கும் என்றும் இது பாசிட்டிவ், நெகட்டிவ் POSITIVE & NEGATIVE சக்திகளை இணைக்கிறது என்றும் 1926ல் ஒருவர் ஆற்றிய உரையையும் மைல்ஸ் விரிவாக கொடுத்துள்ளார் ( எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க).

vv-aani-4

–subham——