COURT TRIAL ANECDOTES (Post No3354)

Compiled  by London Swaminathan

 

Date: 14 November 2016

 

Time uploaded in London: 12-35

 

Post No.3354

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

‘Back’ to the Bench!

Knowing  his client to be innocent, the defence lawyer rested his case in the assurance that all would be well. Great was his astonishment when the justice of the court pronounced the man guilty, and imposed a fine of fifty dollars and a jail sentence.

The lawyer deliberately turned his chair so that his back was to the bench.

“Fine me too”, he said in a loud voice.

Why?, asked the justice.

For contempt

Bewildered, the justice said, Contempt? But you haven’t said a word.

Exactly, My contempt is silent”.

 

Xxx

 

DOG MURDER!

A sentry near one of the army camps on Long Island was bitten by a valuable dog from one of the neighboring estates, and in self-defence drove his bayonet into the animal. The owner brought charges against him to retrieve its value and the evidence showed that the sentry had not been badly bitten.

“Why did you not knock the dog with the butt end of your rifle asked the judge. The sentry clinched his case by replying, “Why didn’t he bite me with his tail?”

xxx

 

Wife desertion!

 

“I feel very strongly on this subject and must deal severely with you,” began the Judge, in his address to Sam, who was in court on a charge of wife desertion.

 

“But, Boss, you don’t understand,” protested the Negro.

“You don’t know my old woman. I ain’t no deserter. I’se a refugee!”

 

xxxx

 

Deaf men Case

A deaf man went to law with another deaf man, and the judge was much deafer than either. One of them asserted that the other owed him five months’ rent, and the other said that his opponent had been grinding corn at night to avoid the tax.

 

The judge looked at them and said, “Why are you quarrelling; She is your mother; you must both support her.

Xxxx SUBHAM xxxxx

புலி நிகர் புலிட்ஸர்! (Post No.3353)

Written by S NAGARAJAN

 

Date: 14 November 2016

 

Time uploaded in London: 9-08 AM

 

Post No.3353

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

இந்த வார பாக்யா இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

புலிட்ஸர் பரிசுகள் அளிக்கப்பட ஆரம்பித்து நூறு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டிய சிறப்புக் கட்டுரை!

 

புலி நிகர் புலிட்ஸர்!

ச.நாகராஜன்

அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு என்றால் ஒரே ஆனந்தம். தங்கள் பணிக்கான உயரிய அங்கீகாரம் புலிட்ஸர் பரிசு என அவர்கள் கருதுகின்றனர்.

 

பத்தாயிரம் டாலர் பரிசுத் தொகை, தங்க மெடல் இவற்றிற்கெல்லாம் மேலாக அவர்கள் பெறும் பெரும் அங்கீகாரம் உலகிலேயே பத்திரிகைத் தொழிலின் மிகச் சிறந்த பரிசாகும்.

இந்த புலிட்ஸர் பரிசு 1917ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.  சரியாக நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றன!

 

 

பத்திரிகைத் துறையில் மிகப் பெரும் சாதனையாளரான புலிட்ஸரை ஒரே வரியில் விவரித்து விடலாம். புலிக்கு நிகராகப் பாய்ந்து செய்திகளைப் பிடித்தவர் புலிட்ஸர்.

அவரது வாழ்க்கையே உத்வேகமூட்டும் ஒன்று.

புலிட்ஸர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகருக்கு அருகில் உள்ல  மகோ என்ற இடத்தில்  பிறந்த யூதர். (தோற்றம் 10-4-1847 மறைவு: 29-10-1911).

 

 

அமெரிக்க ராணுவம் ஆள் எடுக்கிறது என்று கேள்விப் பட்டு ராணுவத்தில் சேர அமெரிக்கா வந்தார். ராணுவத்தில் பணியாற்றினார். போர் முடிந்த பின்னர் நியூயார்க் திரும்பினார்.

அவர் இள வயதில் செய்யாத வேலை இல்லை. அவருக்குக் கண் பார்வை வேறு மங்கல். அமெரிக்கா வந்த போது அவருக்கு ஆங்கிலமும் தெரியாது. 17 வயது இளம் வாலிபர்!

வெய்ட்டராகப் பணிபுரிந்தார். மூட்டைகளைத் தூக்கினார். கல்லறையில் சவப்பெட்டியை வைப்பதற்காகக் குழிகளைக் கூட வெட்டினார்.

 

 

ஜெர்மானிய பத்திரிகை ஒன்றிற்கு நிருபர் தேவைப் படுகிறார் என்று கேள்விப்பட்டு அதில் சேர்ந்தார். பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டவுடன் தனக்கு எது உகந்தது என்பதை நொடி நேரத்தில் முடிவெடுத்தார்

 

பத்திரிகை. ஆம், பத்திரிகைத் தொழில் தான் தனது சுவாசம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

செய்தி என்றால் அவருக்கு வெல்லக் கட்டி. ஒரு செய்தியை எப்படித் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும், அதில் எது முக்கியம், மக்கள் எதை விரும்புவர், அதை அவர்களுக்கு என்ன சொற்களில் எப்படித் தர வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துபடியானது.

 

36ஆம் வயதில் சொல்லும்படியாகச் சற்றுப் பணம் சேர்ந்தது.

அப்போது 1883ஆம் ஆண்டில் நியூயார்க் வோர்ல்ட் என்ற பத்திரிகை விற்பனைக்கு வந்தது. அது வருடத்திற்கு இமாலய நஷ்டம் என்று சொல்லக் கூடிய நாற்பதினாயிரம் டாலர் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

தைரியமாக அதை வாங்கினார் அவர்.

 

அவர் கைக்குப் பத்திரிகை வந்தவுடன் பத்திரிகை செய்தியே ஒரு புது வடிவம் கொண்டது.

சம்பிரதாயம் தூக்கி எறியப்பட்டது.சின்னச் சின்ன எழுத்துக்களில் சுவாரசியமின்றி தரப்பட்ட செய்திகள் புது வடிவம் கொண்டன! முதன் முதலாக முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி என்று ஒன்றை பெரிய கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்தார்.

என்ன விஷயம் என்பதைப் பளிச்செனப் பார்த்த மக்கள் மிக்க ஆவலுடன் பத்திரிகையை வாங்கிப் படித்தனர். நாளுக்கு நாள் சர்குலேஷன் கூடியது.

 

 

பளீர் தலைப்புகள், விறுவிறுப்பான செய்திகள், வேகமான எழுத்தோட்டம், உடனடிச் செய்தி என ஏராளமான அம்சங்களைத் தாங்கிய பத்திரிகை 15000 பிரதிகள் விற்பனை என்பதிலிருந்து ஒரு லட்சத்திஐம்பதினாயிரம் என்ற அளவுக்குத் தாவியது.. 1883இல் பிரதிகள் ஆறு லட்சம் என்ற அளவுக்கு உயர்ந்தது.

சக போட்டியாளர்கள் அரண்டு போயினர்.

பத்திரிகை தர்மத்தை அவர் மீறுகிறார் என வயிற்றெரிச்சலுடன் கூவிப் பார்த்தனர்.

 

 

எல்லோ ஜர்னலிஸம் (மஞ்சள் பத்திரிகை) என்ற புது வார்த்தையே புலிட்ஸரால் தான் உருவானது.

மக்கள் புலிட்ஸரின் ஸ்டைலுக்கு மகத்தான ஆதரவு தரவே எதிர்ப்புகள் அமுங்கிப் போயின.

 

பத்திரிகைத் துறையில் நேர்மையான சுதந்திரம் வேண்டும் என்று அவர் முழங்கினார். வெறும் செய்திகளை மட்டும் தருவது பத்திரிகையாளரின் வேலை இல்லை, செய்திகளின் ஆதாரத்தைத் தூண்டித் துருவிக் காண வேண்டும், அத்தோடு துப்பறிந்து ஆராய்ந்து என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் இன்வெஸ்டிகேடிவ் ரிபோர்டிங் என்பதைத் தொடங்கினார்.

இதனால்  அரசியல்வாதிகள் உட்பட்ட பலருக்கும் சங்கடம் ஏற்பட்டது. எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர் விடவில்லை.

43ஆம் வயதில் அவரது பார்வை முற்றிலுமாகப் போனது. தனது நியூயார்க் மாளிகையிலிருந்தே அவர் பத்திரிகை நிர்வாகத்தை நடத்தலானார்.

 

 

அவர் நியமித்த காப் என்ற  எடிட்டருக்கும் அவருக்கும்  தலையங்கம் சம்பந்தமாக அவ்வப்பொழுது கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. கடைசியில் அவருக்கு சுதந்திரத்தைத் தந்து தன் கருத்துக்களையும் அவருக்குத் தெரிவிக்கலானார்.

 

தனது தகவல் தொடர்புக்கு ஒரு ரகசிய கோடிங் முறையை அவர் தயாரித்தார். அந்த குறிப்பிட்ட இரக்சிய கோடிங் அமைப்பிற்காக 20000 வார்த்தைகள் அடங்கிய ஒரு பெரிய புத்தகமே உருவானது.

64ஆம் வயதில் கான்ஸர் நோயினால் அவர் இறந்தார்.

அவரது உயிலில் எழுதப்பட்ட விருப்பத்தின் படி  அவர் பெயரால் 1917இல் இன்வெஸ்டிகேடிவ் ரிபோர்டிங் உள்ளிட்ட பத்திரிகைத் துறைகளுக்கு பரிசுகள் அளிக்கப்படலாயின..

 

 

சுவையான சம்பவங்கள் நிரம்பிய வாழ்க்கை அவருடையது.

ஒருமுறை புரபஸர் தாமஸ் டேவிட்ஸன் என்பவர்,” மிஸ்டர் புலிட்ஸர், நீங்கள் நிருபர்களிடம் மிகவும் மிருதுவாகப் பேசி நடந்து கொள்கிறீர்கள். ஆனால் எடிட்டர்களிடமோ மிகவும் கடுமையாக இருக்கிறீர்கள், இது சரியா என்று கேட்டார்.அதற்கு உட்னே புலிட்ஸர்,”நல்லது, அது ஏனென்றால் ஒரு நிருபர் என்பவர் எனது நம்பிக்கையாக இருக்கிறார். ஆனால் எடிட்டரோ எனக்கு ஏமாற்றம் அளிக்கிறார்” என்று பதில் அளித்தார். அவரது

இந்த பதில் முத்திரை பதிலாக பத்திரிகை உலகில் பேசப்படுகிறது.

 

புலிட்ஸர் அமெரிக்க ஜனாதிபதியை விட உலகம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த மக்களின் சக்தியும் அவர்களின் கருத்துச் சுதந்திரமும் என்பது வேற்று கிரகங்களில் வசிப்பவர்களிடம் கூட செல்வாக்கைச் செலுத்தும் என்று எண்ணினார். இது சம்பந்த்மாக பிரம்மாண்டமான ஒரு விளம்பர போர்டைக் கூட நியூ ஜெர்ஸியில் நிறுவ அவர் விரும்பினார். அந்த விளம்பரத்தை செவ்வாய் கிரகத்தில் இருப்பவர் கூடப் பார்க்கும் படி பெரிதாக அமைக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.

 

 

தன் எண்ணத்தை அவர் அனைவரிடமும் சொன்ன போது இதை எப்படி மறுப்பது என்று யாருக்கும் புரியவில்லை. ஒரே ஒருவர் மட்டும் மெதுவாகக் கேட்டார் இப்படி: “சரி சார்! அதை எந்த மொழியில் எழுதுவது, அதைச் சொல்லுங்கள்!”

அவ்வளவு தான், புலிட்ஸரால் பதில் சொல்ல முடியவில்லை. செவ்வாய் கிரக வாசிகளின் மொழி யாருக்குத் தான் தெரியும்?!

 

அமெரிக்க பத்திரிகை வரலாற்றில் புலிட்ஸரின் பெயர் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டதற்கான காரணம் : “பொது ஜன சேவையில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுஜனங்களின் ஒழுக்க நெறிகளை உயர்த்துவதை ஊக்குவிப்பதற்காகவும், அமெரிக்க இலக்கியத்தை மேம்படுத்தவும், கல்வியை மேம்படுத்தவும் அவர் புலிட்ஸர் பரிசுகளை நிறுவியது தான்!

 

*********.

 

 

 

 

 

 

கம்ப ராமாயணத்தில் பரத நூலும், சுரத நூலும்! (Post No.3352)

Written by London Swaminathan

 

Date: 14 November 2016

 

Time uploaded in London: 6-48 AM

 

Post No.3352

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

நாட்டியம் பற்றித் தெரிந்த எல்லோரும் அறிந்த நூல் பரத நூல். பரத முனிவரால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாட்டிய சாத்திர நூல் பரதம் எனப்படும். அதிலிருந்து வந்ததுதான் பரத நாட்டியம் என்ற சொல். அந்த நூலில் நாடகம் பற்றியுமுளது. அந்தக்காலத்தில் நாட்டியம் மூலம் நாடகங்கள் நடித்துக் காண்பிக்கப்பட்டன. ஆனால் சுரத நூல் பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சுரத நூல் என்பது காம சாத்திரம். இதை எழுதியவர் வாத்ஸ்யாயனர் என்பவராவார். அவருக்கு முன்னரும் பல நூல்கள் இருந்தன.

 

 

கம்பனும் சில இடங்களில் காளிதாசன் போல கொஞ்சம் செக்ஸி (SEXY)யாக எழுதி இருக்கிறார். இது போன்ற பாடல்களாகப் பொறுக்கி எடுத்து கம்பரசம் என்னும் நூலை எழுதினார் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை. கம்பனோ அறிவுக்கடல். அவரைப் புரிந்துகொள்ள அரசியல்வாதிகளுக்கு இயலாத காரியம். ஒரு சில பாடல்களை மட்டும் வைத்து கம்பனை மட்டம்தட்ட நினைத்தவர்கள் எல்லாம் தோற்றுப் போனார்கள்.

 

 

இதோ பாடல்:-

சரத நாள் மலர் யாவையும் குடைந்தன தடவிச்

சுரத நூல் தெரிவிடர் எனத் தேன் கொண்டு தொகுப்ப

பரத நூல் முறை நாடகம் பயன் உறப் பகுப்பான்

இரதம் ஈட்டுறும் கவிஞரைப் பொருவின தேனீ

 

பொருள்:-

சிற்றின்பம் பற்றிக் கூறும் நூலைக் கற்ற காமுகர்கள், பல மகளிரிடம் சென்று இன்பம் துய்ப்பதுபோல தேனீக்களும் அனறலர்ந்த பல பூக்களுக்குச் சென்று தேனை உறிஞ்சி அமகிழ்கின்றன. இந்த தேனீக்கள்ப பரதரத நூலில் கூறியபடி நவரசம் மிக்க நாடகங்களைப்ண்போ படைப்போர்ரு போல இருந்தன.

 

தேனீக்கள்= காமுகர்கள்=கவிஞர்கள்

 

ஒரு பக்கம் தேனீக்களைக்  காமுகர்களுக்கும் மற்றொரு பக்கம் கவிஞர்களுக்கும் ஒப்பிடுவது கம்பனின் தனித் திறமையைக் காட்டும்.

 

தேனீக்கள் பல வகையான மலர்களைக் குடைந்து தேனை எடுக்கின்றன. காமுகர்கள் பல பெண்களை அணுகி இன்பம் அடைகின்றனர். கவிஞர்கள் பரத நூலில் கண்ட நவரசங்களையும் சேர்த்து நாடகம் படைக்கின்றனர்.

 

பல மலர்த் தேன்= பல பெண்கள்  தரும் காம சுகம்= கவிஞர் தரும் நவரச நாடகச் சுவை.

From Tamil Dictionary:-

சுரத நூல் = காம நூல்; சுரத தாது= இந்திரிய நீர்; சுரத மங்கை= வேசி; சுரத வித்தை= புணர்ச்சி விற்பன்னம்

 

–SUBHAM–

 

 

 

 

SUPREME COURT JUGDES DON’T KNOW THE LAW! COURT ANECDOTES (Post No.3351)

Written by London Swaminathan

 

Date: 13 November 2016

 

Time uploaded in London: 16-13

 

Post No.3351

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

LAW AND JUSTICE COURTS ANECDOTES

 

Chief Justice Fuller was practicing before Judge Mac Arthur of the Supreme Court of Illinois in Chicago. In his speech before the Judge he pleaded his client’s ignorance of an offense he had committed.

 

The Judge said, “Every man is supposed to know the law Mr. Fuller.”

 

“I am aware of that,” responded Mr. Fuller.

 

“Every shoe- maker, tailor, mechanic and illiterate laborer is presumed to know the law. Yes, every man is presumed to know it, except the judges of the Supreme Court, and we have a Court of Appeals to correct their mistakes.

XXX

 

COURT IS FULL OF THIVES!

The highly nervous young lawyer stepped up to plead his case before the Court. It was in New York City. He laid his coat and hat on the bench and stood before the Judge.

 

“Is this the first time you’ve practiced in this Court?”

 

“Yes, your Honor replied the lawyer, feeling nervous and afraid he had already committed some breach of precedent.

“Then get your hat and coat and put them where you can keep an eye on them.

XXX

 

Fine Cancelled!

There seems to be enough evidence to prove that, even if Abe Lincoln had never been President of the United States, he still would have become immortal as a story teller. Here is another example of his talents in that direction as related by a court clerk

 

“I was never fined but once for contempt of court. Davis fined me five dollars. Mr. Lincoln had just come in, and leaning over my desk had told me a story so irresistibly funny that I broke out into a loud laugh. The Judge called me to order, saying, “This must be stopped. Mr. Lincoln, you are constantly disturbing this court with your stories.”

Then to me: “You may fine yourself five dollars. I apologized but told the Judge the story was worth the money.

 

In a few minutes the Judge called me to him. “What was that story Lincoln told you?” he asked. I told him, and he lauged aloud in spite of himself.

“Remit your fine, he ordered.

xxx

 

CONTEMPT OF COURT?

When Stevens was a young lawyer he once had a case before a bad-tempered judge of obscure Pennsylvania court. Under what he considered a very erroneous ruling it was decided against him; thereupon he threw down his books and picked up his hat in a state of indignation, scattering imprecations all around him.

 

The judge assumed an air of offended majesty, and asked Thaddeus Stevens if he meant to express his “contempt for this court?” Stevens turned to him very politely, made a respectful bow and feigned amazement.

 

“Express my contempt for this court? No sir I am trying to conceal it, your honor,” adding as he turned to leave, “but I find it damned hard to do it.”

xxx

 

PUNISHEMNT FOR SILENCE!

A Chinese thus describes a trial in the English law courts :–

“One man is quite silent, another talks all the time, and twelve men condemn the man who has not said a word.”

XXX

கம்பனில்,திருவாசகத்தில் ‘இயம் சீதா மம சுதா’! (Post No.3350)

Written by London Swaminathan

 

Date: 13 November 2016

 

Time uploaded in London: 14-15

 

Post No.3350

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

இயம் சீதா மம சுதா

“இவள் என் மகள் சீதை; இவளை உன் மனைவியாக ஏற்பாயாக; இவள் கையை உன் கைகளால் பற்றுவாயாக; இவள் உன்னை நிழல் போல தொடர்ந்து வரட்டும்” — என்று ஜனக மகாராஜன் சொன்ன சொற்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது பிற்காலத்தில், மகளைக் கொடுக்கும் எல்லா தந்தையரும் சொல்லும்  சொற்களாக, வாக்கியமாக மாறிவிட்டது.

இயம் சீதா மம சுதா ஸஹதர்மசரீ தவ!, ப்ரதீச்ச சைநாம் பத்ரந்தே பாணீம், க்ருண் ஹீஷ்வ பாணிநா”– பால காண்டம், வால்மீகி ராமாயணம்.

 

Siva and Uma kalyan

திருவாசகத்தில்

 

மாணிக்க வாசகரும் கூட இந்தச் சொற்ளை அப்படியே பயன்படுத்தியுள்ளர். அவருக்குப் பின்னர் வந்த கம்பன், பயன்படுத்தியதில் வியப்பில்லை. ஏனெனில் அவரே தான் வால்மீகி யைப் பின்பற்றி ராமாயணத்தை இயற்றியதாகக் கூறுகிறார்.

 

திருவாசகத்தின் ஒரு பகுதியான திருவெம்பாவையில் வரும் பாடல் இதோ:-

உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்

றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப் போங்ககேள்

 

-திருவெம்பாவை, 19

மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி (POSTED ON 15TH JANUARY 2012) என்ற எனது பழைய கற்பனைப் பேட்டியிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன்

 

 

Siva and Parvati wedding, Ellora

கம்ப ராமாயணத்தில்

 

கம்பனும் இதை ராமன் வாயிலாக வெளிப்படுத்துகிறான் (கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்)

 

நெய்யடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள்

கைய்யடை என்ற அச் சனகன் கட்டுரை

பொய்யடை ஆக்கிய பொறி இலேனொடு

மெய்யடையாது இனி விளிதல் நன்றரோ

 

பொருள்:-

இராமன், இலக்குவனை நோக்கிச் சொன்னது:– நெய்வார்த்து உண்டாக்கப்பட்ட ஹோமத்தீயின்   முன்னால், சீதையைக் கொண்டுவந்து நிறுத்தி, இவள் உனக்கு அடைக்கலம் என்று என்னிடம் ஜனகன் கூறினான். அந்த சொற்களை இன்று பொய்யாக்கிவிட்டேனே. இனிமேல் நான் இதை மெய்யாக்க முடியாது. ஆகையால் நான் இறப்பதே மேல்.

 

இன்றும் கூடப் பெண்களைத் திருமணம் செய்து கொடுபோர், “ இனி இது உங்கள் வீட்டுப் (பெண்) பிள்ளை; உங்களிடம் அடைக்கலம் புகுந்துவிட்டாள்; கண்மணி போலக் காப்பாற்றுஙள்” -என்று சொல்லி (ஆனந்தக்) கண்ணீர் விடுவதைக் காணலாம்.

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜனகன் சொன்ன அந்த சத்திய வாக்கியம் “இயம் சீதா மம சுதா” — காலத்தால் என்றும் அழியாத கல்லெழுத்து ஆகிவிட்டது. இவள் உன்னை நிழல் போலப் பிந்தொடர்வாள் — என்று ஜனகன் சொன்ன சொல்லும் உண்மையானது. கானகம் என்பது கொடிய விலங்குகள் வாழும் இடம் என்ற போதும் அவன் பின்னால் நிழல் போலப் போனாளே அந்தப் பெண்ணரசி! ஒவ்வொரு கட்டத்திலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு நல்ல செயல்களைத் துணிந்து செய்த கதா பாத்திரங்களினால் என்றும் அழியாத காவியம் ஆகிவிட்டது இராமாயணம்!

 

–subham–

 

 

 

டைரக்டராக, கவிஞராக உங்களிடம் ‘ஃப்ளோ’ இருக்கிறதா? (Post No.3349)

Written by S NAGARAJAN

 

Date: 13 November 2016

 

Time uploaded in London: 5-15 AM

 

Post No.3349

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யாவில் வெளிவந்துள்ள கட்டுரை

டைரக்டராக, கவிஞராக, எழுத்தாளராக உங்களிடம் ‘ஃப்ளோ இருக்கிறதா?

ச.நாகராஜன்

 

“பெரிய மனங்கள் கருத்துக்களை விவாதிக்கின்றன.சராசரி மனங்களோ நிகழ்வுகளை விவாதிக்கின்றன. அல்ப மனங்களோவெனில் மனிதர்களை விமரிசிக்கின்றன – ஹென்றி தாமஸ் பக்கிள்

     இன்று வாழ்ந்து  கொண்டிருக்கும் மிகச் சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான மிஹாலி சிக்ஸெண்ட்மிஹாலி (Mihaly Csikszentmihalyi) படைப்பாற்றல் பற்றி நன்கு ஆராய்ந்தவர். அதைப் பற்றி உலகில் பேசுவதற்குத் தகுதியான முதல் நிபுணர் இவரே.

இவரது படைப்பாற்றல் பற்றிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்று சாதனை படைத்துள்ளன.

 

 

சிறந்த டைரக்டராக, பெரிய கவிஞராக, பிரபல எழுத்தாளராக உங்களுக்குத் தேவையானது ‘ஃப்ளோ (FLOW) – அதாவது ஓட்டம் தான் என்கிறார் இவர்.

ஃப்ளோ பற்றிய அரும் தகவலை இவர் விளக்கும் விதமே அலாதியானது!

 

 

இன்றைய நவீன விஞ்ஞான, தகவல் புரட்சி உலகில் நாம் பெறும் தகவலின் அளவு பிரம்மாண்டமானது. நமது மைய நரம்பு மண்டலம் எவ்வளவு தகவலை உள்வாங்கி முறைப்படுத்த முடியும் என்பது பற்றி இவர் ஆராய்ந்துள்ளார்.

 

 

எந்த மனிதனாக இருந்தாலும் கூட அவனால் ஏழு பிட்ஸ் தகவலை (7 bits of information) மட்டுமே ஒரு நேரத்தில் சமாளிக்க முடியும் என்கிறார் இவர். ஒலியாகட்டும், பார்க்கின்ற காட்சித் தூண்டுதல்கள் ஆகட்டும், அல்லது உணர்ச்சிகள் அல்லது எண்ணங்களாகட்டும் ஏழு பிட்ஸ் தான் மனிதன் ஏற்கக் கூடிய அளவு ஆகும்!

 

 

ஒரு செட் பிட்ஸ் தகவலை இன்னொரு தொகுப்பு பிட்ஸ் தகவலுடன்  ஒப்பிட மூளை எடுத்துக் கொள்ளும் நேரம் வினாடியில் பதினெட்டில் ஒரு பாகமே ஆகும். அதாவது ஒரு வினாடிக்கு நாம் 126 பிட்ஸ் தகவலை மட்டுமே முறைப்படுத்த முடியும். இந்தக் கணக்கில் ஒரு நிமிட நேரத்திற்கு 7560 பிட்ஸ் தகவலை நாம் முறைப்படுத்தலாம்.

 

 

ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஐந்து லட்சம் பிட்ஸ் என்ற அளவை நாம் இதிலிருந்து பெறுகிறோம்!

ஒரு மனிதனுக்கு 70 வயது என்று சராசரியாக வைத்துக் கொள்வோம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் 16 மணி நேரம் விழித்திருப்பார் என்று வைத்துக் கொண்டால் அவர் முறைப்படுத்தக் கூடிய தகவலின் அளவு 185 பில்லியன் என்று ஆகிறது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி)

 

 

இந்த 18500 கோடி தகவலிலிருந்து தான் வாழ்க்கையில் நாம் அனைத்தையும் பெறுகிறோம். நம் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதும் இதைப் பொறுத்ததே!

 சரி, ஒருவரின் வாழ்க்கையில் விழித்திருக்கும் நேரத்தில் அன்றாடத் தேவைகளுக்கு –  பல் துலக்குவது, ஷேவ் செய்வது, குளிப்பது, சாப்பிடுவது போன்றவற்றிற்கு 15  சதவிகித உணர்வு தேவையாக இருக்கிறது. அவற்றில் ஈடுபடும் போது இதர சிக்கலான விஷயங்களில் மனதை ஒருமைப்படுத்த முடியாது.. மற்ற நேரங்களில்?

 

 விந்தை என்னவெனில் இது போன்ற எதுவும் இல்லாத போதிலும் கூட பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மனதை எதிலும் ஈடுபடுத்திப் பயன்படுத்துவதில்லை என்பது தான்!

ஓய்வு நேரத்தில் டெலிவிஷன் பெட்டிக்கு முன்னர் அமர்ந்து விடுகிறார்கள் உலக மக்கள்!

 

 

டெலிவிஷன் பார்ப்பதில் தகவல்களை முறைப்படுத்துவது என்பது மிகவும் எளிதாக இருக்கிறது. காணுகின்ற காட்சிகளுக்கு பெரிதாக நினைவாற்றல், எண்ணுதல், முடிவெடுத்தல் போன்ற எதுவும் தேவையில்லை.

பார்ப்பது, பார்த்துக் கொண்டே இருப்பது – அவ்வளவு தான்!

 

 

ஒரு சிக்கலான நேரத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கணிப்பது, தகவல்களை முறைப்படுத்தி மதிப்பிடுவது, உடனே அவசரமாக முடிவெடுப்பது போன்றவற்றிற்கு மனதின் குறைந்தபட்ச முறைப்படுத்தும் திறனே தேவை. எடுத்துக்காட்டாக ஒரு தெருவின் திருப்பத்தில் காரை வேகமாகத் திருப்பும் ஒரு டிரைவர் அப்போது தன் கையில் உள்ள தான் பேசிக் கொண்டிருக்கும் செல் போனை நிறுத்தி விடுகிறார் – இல்லையேல் விபத்து அல்லவா ஏற்படும்!

 

ஒரு சில கணங்களே என்றாலும் கூட தான் செய்வதில் தீவிர கவனம் இருந்தால் மட்டுமே அவரால் விபத்தைத் தடுக்க முடியும்!

ஒரு மனிதன் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற வேண்டுமெனில் தீவிரமான கவனம் வேண்டும். அத்துடன் தான் செய்கின்ற வேலையில் மனதை முழுவதுமாகச் செலுத்துவதோடு அதை விரும்பிச் செய்ய வேண்டும். அந்த வேலையில் ஒரு விதமான பரவச நிலையினை அடையும் போது அவனது படைப்பாற்றல் முழுமை பெறுகிறது. இன்னதென்று விவரிக்க முடியாதபடி மிதப்பது போன்ற ஒரு நிலை அவனுக்கு ஏற்படுகிறது. அது தான் ஃப்ளோ!

 

 

ஒருவன் எப்போது இந்த அரிய ஃப்ளோ நிலையை எய்துகிறானோ அவன் எந்தத் துறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அவனால் உன்னதமான படைப்பாற்றலைக் கொள்ள முடியும்.

ஒரு கவிஞராக இருந்தால் சிறந்த கவிதை பிறக்கும். ஒரு டைரக்டராக இருந்தால் அவரது காட்சியில் மூழ்கிப் பரவசராகி காட்சியுடன் ஒன்றி ஒரு மிதக்கும் நிலை ஏற்படும். ஒரு எழுத்தாளராக இருந்தால் அவர் தன்னை மறந்து தன் எழுத்தில் மூழ்கி விடுவார்.

 

 

அப்போது படைப்பாற்றல் துள்ளிக் குதிக்க தனது அப்போதைய கவனத்தில் தான் செய்ய விரும்புவதில் அந்தப் படைப்பாளி வெற்றி பெறுகிறார்.

ஒருவர் ஃப்ளோவை அனுபவித்து உணர ஆறு காரணிகள் உண்டு:

  • ஒரு விஷயத்தில் நிகழ்காலத்தில் அந்தக் கணத்தில் அதி தீவிரமான கவனக் குவிப்புடன் கூடிய ஒருமைப்படுத்தப்பட்ட மனம்.
  • விழிப்புணர்வும் செயலும் இரண்டு என்றில்லாமல் ஒன்றாக மாறுதல்
  • தனது சுய உணர்வை முற்றிலுமாக இழந்து செயலில் ஒன்றி இருத்தல்
  • தனது செயல்பாட்டில் ஒரு கட்டுப்பாட்டைத் தான் கொள்ளுதல்
  • அந்தச் செயலைச் செய்யும் போது நேரம் பற்றிய உணர்வை  முற்றிலுமாக இழத்தல். அதாவது பல மணி நேரம் கூட ஒரு சில நிமிடங்களாகத் தோன்றும்
  • அந்த அனுபவம் ஒரு மிகச் சிறந்த பரிசு போன்ற ஒன்றாக படைப்பாளிக்கு அமைதல்

 

ஒருவரது திறமை, ஆர்வம், கவனக் குவிப்பு ஆகிய அனைத்தும் இணைந்து தன் குறிக்கோளை அடையும் போது,  திடீரென்று எதிரில் ஒரு கதவு திறந்து வெட்டவெளியில் மிதப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறதே அது தான் படைப்பாற்றல் வெற்றிக்கான ஓட்டம் அல்லது ‘ஃப்ளோ ஆகும்.

 

இந்த மெய்மறந்த நிலையை எய்துவது என்பது சுலபமே என்பதை உலகின் தலை சிறந்த படைப்பாளிகள் நிரூபித்துள்ளனர். அவர்களுக்குத் தனிமையில் இருப்பது என்பது ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறது என்பதே மிஹாலியின் கண்டு பிடிப்பு.

இந்த நிலையை எய்தும் போது ஒவ்வொருவரும் ஒரு சிறந்த படைப்பாளியே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. …

 

அலெக்ஸாண்டர் டி ஸெவர்ஸ்கி (Alexander de Severrsky) என்பவர் ஒரு சிறந்த விமான வடிவமைப்பாளர்.

முதல் உலகப் போரில் அவர் ஒரு காலை இழந்திருந்தார். மரத்தினாலான செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டிருந்தார்.

ஆகவே இரண்டாம் உலகப் போரில் ஒரு கை அல்லது ஒரு காலை இழந்த போர்வீரர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்த ஒரு மருத்துவ மனைக்கு அவர் சென்றார்.

 

 

தனது அனுபவத்தைச் சொல்லி போர் வீரர்களை அவர் உற்சாகப் படுத்தினார். ஒரு காலுடன் இருக்கும் போது குறைந்தபட்சம் ஒரே ஒரு ஆதாயம் நிச்சயமாக இருக்கிறது என்று கூறிய அவர் இழந்த காலில் மரத்தினால் ஆன செயற்கைக் கால் பொருத்தப்பட்டிருப்பதால் அதில் வலியே இருக்காது என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

இதை நிருபித்துக் காட்டும் விதமாக ஒரு போர்வீரரிடம் கம்பு ஒன்றைக் கொடுத்து, “சும்மா காலில் அடியுங்கள் என்றார்.

 

 

அவரும் ஸெவர்ஸ்கியின் காலில் அடித்தார். ஸெவர்ஸ்கி பெரிதாகச் சிரித்தார். அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

பிறகு அறையை விட்டு வெளியே வந்த அவர் ஓவென்று அலறினார்.

மருத்துவமனை அதிகாரிகள் திடுக்கிட்டு, என்ன, என்ன என்று பதறிப் போய் அவரிடம் வினவினர்.

“அந்த ராணுவ வீரர் எனது தவறான காலில் ஓங்கி அடித்து விட்டார் என்றார் ஸெவர்ஸ்கி

 

 

செயற்கைக் காலில் அடிப்பதற்குப் பதிலாக நிஜக்காலில் அடித்தால் வலிக்காதா, என்ன?

சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று புரியாமல் மருத்துவமனை அதிகாரிகள் திகைத்தனர்!

ஸெவர்ஸ்கியோ சிரித்துக் கொண்டே வலியுடன் வெளியேறினார்!

******

 

வரி விதிப்பது எப்படி? புறநானூற்றுப் புலவர் புத்திமதி (Post no.3348)

Research article written by London Swaminathan

 

Date: 12 November 2016

 

Time uploaded in London: 18-12

 

Post No.3348

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

வரி விதிப்பது பற்றி காளிதாசன், மனு, திருவள்ளுவர் ஆகியோர் கருத்துகளை நேற்று கண்டோம். புறநானூற்றில் (பாடல் 184) பிசிராந்தையார் கூறும் புத்திமதி நல்லதொரு உவமையுடன் வருகிறது.

 

பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் புலவர் சொன்ன புத்திமதி:-

 

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,

மா நிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,

கோடியாத்து, நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம்போல,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

 

பொருள்:-

ஒரு ‘மா’ அளவைவிடக் குறைந்த நிலமாயினும் அதில் விளைந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாக யானைக்கு ஊட்டினால் பலநாட்களுக்கு அது வரும்.; யானையும் பல நாட் பசியடங்கி இன்புறும். அல்லாது, நூறு “செய்” நிலமாயினும், தன் போக்கிலே யானை சென்று தின்னுமானால், அது சாப்பிட்ட நெல்லைவிட அதன் காலடியில் பட்டு அழியும் நெல்லே மிகுதியாகிவிடும். இதே போல, அறிவுள்ள ஒரு அரசன் தர்ம நியாயத்தை உணர்ந்து மக்களிடம் வரி வசூலித்தால் கோடிக்கணக்கில் அவனுக்கு வருவாய் வருவதுடன் நாடும் செழிக்கும். அஃதன்றி, அவனுடைய மந்திரிகளும் புத்திமதி சொல்லாமல், அவனும் குடிகளை வருத்தி அதிக வரி வசூலித்தால், அவனுக்கும் நாட்டுக்கும் கேடே விளையும். (மா, செறு=செய் என்பன பழங்கால நில அளவைகள்)

குடிகொன்று இறை கொள்ளுங் கோமகற்குக் கற்றா

மடிகொன்று பாலகொளலும் மாண்பே – குடியோம்பிக்

கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்

வெள்ளத்தின் மேலும் பல –நீதிவெண்பா

 

குடிமக்களை வருத்தி வரிவாங்கும் அரசன் செயலைவிட, கன்றையுடைய பசுவின் மடியை வருத்திப் பால் கறப்ப்து நல்ல செயல் ஆகும். குடிகளைப் பாதுகாக்கும் அளவுக்கு வரி வாங்கும் அரசர்களுக்கு வெள்ளம் அளவைவிட செல்வம் சேருவதைக் காணலாம்.

 

வெள்ளம்= 57, 000 000 000 000 00

(14 zeroes)

 

உப்புக்கும் நெல்லுக்கும் ஒரே அளவு வரி

 

யாவரும் கேளிர் என்ற நூலில் டாக்டர் இரா.நாகசாமி எந்தந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டது என்ற பட்டியலைத் தந்துள்ளார். இது 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டிலிருந்து எடுக்கப்பட்ட செய்தி. உப்புக்கும் நெல்லுக்கும் ஒரே அளவு வரி விதிக்கப்பட்டது நெல்லைப் போல இரு மடங்கு வரி அரிசிக்கும், பருத்தியைப் போல இருமடங்கு வரி, நூல்களுக்கும் விதிக்கப்பட்டது. நூலுக்கும் இரும்புக்கும் ஒரே வரி!. வாசனைப் பொருள்களான சந்தனம், அகில், பன்னீர், சவரிமயிர் ஆகியவற்றுக்குத்தான் அதிகமான வரி.

 

ஒரு சில எடுத்துக்காட்டுகள்:-

 

உப்பு தலைச் சுமை ஒன்றுக்கு அரைக் காசு

உப்பு பாக்கம் ஒன்றுக்கு அரைக் காசு

உப்பு பொதி ஒன்றுக்கு ஒரு காசு

உப்பு வண்டி ஒன்றுக்கு பத்து காசு

 

சந்தனம் பொதி ஒன்றுக்கு 30 காசு

 

வரி, இறை, சுங்கம், உல்கு, திறை முதலிய பல பொதுப் பெயர்களும் பின்னர் ஒவ்வொரு வரிக்குமுள்ள சிறப்புப் பெயரும் பயன்படுத்தப் பட்டன.

 

-subham–

 

Don’t Tax Brahmins: Manu’s Warning! (Post No.3347)

Research article written by London Swaminathan

Date: 12 November 2016

 

Time uploaded in London: 8-16 AM

 

Post No.3347

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Manu in his Manava Dharmasastra gives lot of concessions to Brahmins. At the same time he lays down very strict rules for the Brahmins. He asks the kings nit to tax the Brahmins. Chapter seven of the book contains rules regarding taxation; we get precise rates of taxation from Kautilya’s Arthasastra. But that is a book on Economics. Though Manu also mentions the proportion of tax in some of his couplets, it is not very comprehensive.

 

Here are some interesting couplets on taxation:

Even if he is dying of hunger, a king must not take taxes from a priest who knows his Veda by heart and no priest who knows his Veda by heart living in his territory should faint with hunger (7-133)

 

If a priest who knows his Veda by heart faints with hunger, the kingdom of the king in whose territory he lives will also soon faint with hunger (7-134)

 

The king should always establish the taxes in his kingdom after due consideration, in such a way that both the king and the man are rewarded 7-128

Leech, Calf and Bee

Just as the leech, the calf and the bee eat their food little by little, so the king should take the early taxes from the people little by little 7-129

 

The king should take a fiftieth part of livestock and god and an eighth or a sixth or a twelfth of crops.7-130

 

My comments:-

We may think that Manu is unbalanced in his views. But if we replace the word Brahmins with the word “Intellectuals”, then we will understand the significance of his rule. Poor Intellectuals, if exempted from taxes, will work more efficiently to elevate the society.

Thousands of Tamil inscriptions and epigraphs on land donations to Brahmins and the temples talk about the exemption of taxes to Brahmins. So we know that Manu’s laws regarding Tax exemption were followed by the kings for a very long time.

The simile of leech, calf and bee allows us to give a new interpretation: If one is wealthy suck his blood, that means take more tax. We do see such things in most of the countries the rich are taxed up to 60%. If one belongs to the middle income group, be a calf in taxing. If someone is poor be a bee to him.

 

Tamil Veda Tirukkural says don’t tax the people like a robber (Kural 552)

 

A sceptered king demanding illegitimate gifts or exhorting taxes beyond approved limit

Is like an armed robber relieving wayfarers of their belongings. (Kural 552)

 

Kalidasa says be a sun when you tax the people. Take the water with your thousand hands (rays) and return it with million drops of rain (benefits) in his Raghuvamsa Kavya(1-18)

Taxation in Sangam Tamil Literature

Sangam Tamil literature gives details of import tax. When goods were brought in from foreign countries they were taxed.

Pisiranthaiyar, a famous Tamil poet advises his king Panyan Arivudai Nambi to follow moderation in taxing. He gives a beautiful simile to emphasize his point.

If an elephant is fed with cooked food mouth by mouth from a small patch of land, the harvested grains will last for many months. If the same elephant is allowed to graze the fields larger in size, there will be more wastage than the food it took. The crops will be crushed under its feet and left wasted. So be wise in taxing the people. Don’t crush them under your feet like a rash elephant. Take it little by little.(Puram 184)

Later day Tamil inscriptions gives a long list of different taxes.

–Subham-

 

Rare Pictures of Hindu Yogis, Saints, Aghoris, ascetics from a German book (Post No.3346)

Compiled by London Swaminathan

 

Date: 12 November 2016

 

Time uploaded in London: 6-16 AM

 

Post No.3346

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

\

 

 

 

 

மீண்டும் திறக்கப்பட்ட ஏசு கிறிஸ்துவின் கல்லறை! (Post No3345)

புனித கல்லறை, ஜெருசலம்

 

WRITTEN by S NAGARAJAN

 

Date: 12 November 2016

 

Time uploaded in London: 4-59 AM

 

Post No.3345

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

 

பல  நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட ஏசு

 

கிறிஸ்துவின் கல்லறை!

 

ச.நாகராஜன்

 

புனிதர் ஏசு கிறிஸ்துவின் கல்லறை கி.பி.1555ஆம் ஆண்டுக்கு முன்னரே அதன் மூடப்பட்ட ஒரிஜினல் கல்லின் மீது புதிதாகச்  சலவைக் கற்கள் வைக்கப்பட்டு மூடப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி.

 

ஏசு கல்லறை,ஜெருசலம்

 

இந்தப் புனிதமான கல்லறையைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரீஸ் நாட்டில் ஏதன்ஸ் நகரில் உள்ள நேஷனல் டெக்னிகல் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்கள் இந்தப் புனித ஸ்தலத்தின் உட்பகுதிகளை அணுக வேண்டியது அவசியம் எனத் தீர்மானித்தனர். நேஷனல் ஜியாகிராபிக் சொஸைடியைச் சேர்ந்த ஃப்ரெடெரிக்  ஹைபெர்ட், “எங்களுக்குத் தெரிந்த வரையில் நாங்களே முதன்முறையாக இதைத் திறந்து பார்க்கப் போகிறோம்” என்று அறிவித்தார்.

 

 

பழைய புராணங்களை ஆய்கின்ற வரலாற்று ஆய்வாளர்கள், ஏசு உண்மையில் வாழ்ந்த ஒரு புனிதரே என்று சொல்வதோடு அவர் கி.பி. முதல் ஆண்டில் இப்போது பாலஸ்தீனம என்று அழைக்கப்படும் பெத்லஹேமில் பிறந்தார் என்றும் இஸ்ரேலில் உள்ள நாசரேத்திற்குப் பின்னர் சென்றதாகவும் கி.பி, 29ஆம் ஆண்டு வாக்கில் அவர் மறைந்ததாகவும் உறுதி படக் கூறுகின்றனர்.

ஹிப்ரூ பைபிளின் படி ஏசு ஒரு குகையில் கல் மேடை ஒன்றில் வைக்கப்பட்டு கற்களினால் மூடப்பட்டார்.

 

கான்ஸ்டண்டைன் என்ற முதல் கிறிஸ்தவ சக்கரவர்த்தி கி.பி, 326இல் தனது தாயான ஹெலினாவை தனது பிரதிநிதியாக ஜெருசலத்திற்கு அனுப்பினார். அங்குள்ளோர் ஒரு குகையைக் காண்பித்து இங்கு தான் ஏசுவின் கல்லறை உள்ளது என்று அவரிடம் குறிப்பிட்டனர். உடனே அந்தக் குகையில் ஒரு புனித

ஸ்தலத்தை கான்ஸ்டண்டைன் நிர்மாணித்தார். குகையின் மேல் மூடி அகற்றப்பட்டது. அங்கு வருகை புரிவோர் குனிந்து கீழே பார்க்கும் வண்ணம் அந்த புனித ஸ்தலம் அமைக்கப்பட்டது. அது ஹோலி எடிக்யூல் (Holy Edicule) என்று அழைக்கப்படலாயிற்று.

ஆயிரத்தி எண்ணூறுகளில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தால் அதை  மீண்டும் புனருத்தாரணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதை மூன்று சர்ச்சுகளின் அமைப்புகள் கூட்டாக இப்போது நிர்வகித்து வருகின்றன..

 

Picture of Holy Edicule in Jerusalem

1958இல் இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரு மனதாக இதை உரிய முறையில் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்று தீர்மானித்தன. என்றபோதும் ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னரே இதை எப்படிச் செய்வது என்றும் இதற்கு எப்படி நிதி திரட்டுவது என்றும் தீர்மானித்தன. இதற்கு ஆகும் செலவு சுமார் 40 லட்சம் டாலர்கள் ஆகும்.

 

 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் இரும்புக் கம்பிகளால் ஒரு தடுப்பு இங்கு அமைக்கப்பட்டது.

 

இதை உரிய முறையில் சீரமைக்கத் தீர்மானித்த புனரமைப்புக் குழுவினர் முதலில் 19ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சலவைக் கற்களை அகற்றினர். பின்னர் 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சலவைக்கற்களையும் அகற்றினர். அப்போது அவர்கள் கண்டது 12ஆம் நூற்றாண்டில் மூடப்பட்ட சலவைக் கற்களை. அவற்றையும் அகற்றிய பின்னர் முதன் முதலில் நிறுவப்பட்டிருந்த கல்லைக் கண்டனர்.

 

 

“இங்கு உள்ளே இருப்பதை ஆய்வு செய்வது எங்கள் நோக்கமல்ல. ஒரு டி என் ஏ (DNA) சோதனையும் நடைபெறாது வேறு எந்த ஒரு ஆய்வும் செய்யப்பட மாட்டாது” என்று உறுதிபடக் கூறிய குழுவினர் இது ஆய்வுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்றனர்.

 

‘கடந்த பல நூற்றாண்டுகளாகப் புனிதமாகக் கருதப்பட்ட இந்த ஸ்தலத்தில் எந்த ஒரு ஆய்வும் எந்த  ஒரு புதிய விஷயத்தையும் தரப் போவதில்லை. இந்தத் திட்டதின் மூலமாக நீங்கள் குனிந்து பார்த்து, இது வரை பார்க்க முடியாம்ல இருந்த, முன்னர் அமைக்கப்பட்டிருந்த பழைய இடத்தை இப்போது நன்கு பார்க்க முடியும்’ என்கின்றனர் இதைப் பராமரிக்க இருக்கும் குழுவினர்.

 

ஏசுபிரானின் ஒரிஜினல் கல்லறை திறக்கப்பட்டதையொட்டி

உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த புனித ஸ்தலம் பற்றிய செய்தியே இப்போது பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய செய்தி!                  ஆதாரம் : லைவ் ஸயின்ஸ்

***********