Four Duties of Ascetics (Post No.3971)

Written by London Swaminathan

 

Date: 4 June 2017

 

Time uploaded in London- 20-50

 

Post No. 3971

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

1.Dhyaanam saucham tathaa bhikshaa nityamekaanthasiilathaa

yateschatwaari karmaani panchamam nopapadhyate

 

Dhyana – Meditation

Saucam – Maintaining purity

Bhiksa- Getting alms

Nitayamekanta silata -Remaining in solitude

 

xxxx

 

Four Types of Ascetics

One of the Upanishads classified ascetics into four types based on their goals:

 

Kutiicaka= seeking atmospheric world

Bahuudaka = seeking heavenly world

Hamsa= seeking penance world

Paramahamsa = seeking truth world

 

2.sanyaasaii syaat caturbedhah kutiicakabhahuudakau

hamsah paramahamsasca teshaam samjnaa ime bhudhaih

–Vedanta Samnjavali 135

xxxx

 

Four Types of Bad Disciples

Prajnaamaandya- dull

Kutarka= argumentative

Viparyaya – Erroneous

Duraagraha – Adamant

 

  1. atha vakshye caturbhedaah samnjaah sisyahitaaya vai

pranjamaandhyam kutarkasca viparyayaduraagrahah

—–Vedanta Samnjavali 98

 

xxxx Subham xxxx

 

 

 

பயனில சொல்லாமை நன்று; புத்தரும் வள்ளுவரும் செப்பியது – Part 8 (Post No.3970)

பயனில சொல்லாமை நன்று; புத்தரும் வள்ளுவரும் செப்பியது – Part 8 (Post No.3970)


Written by London Swaminathan

 

Date: 4 June 2017

 

Time uploaded in London- 15-53

 

Post No. 3970

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று (குறள் 197)

 

பொருள்-

அறத்தோடு பொருந்தாத  சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்; பயன் தராத வெறும் சொற்களை சான்றோர் சொல்லாதிருப்பது நல்லது

 

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்  (குறள் 198)

பொருள்-

அரிய பொருளை ஆராயும் அறிவினை உடையோர், வாழ்க்கைக்கு பெரும்பயனைத் தராத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்

 

1.கொலை செய்தல்

2.பொய் பேசுதல்,

3.திருடுதல்,

4.பிறன் மனைவியிடம்  போதல்

5.கள் குடித்தல் – இந்த ஐந்து செயல்களும் தன்னுடைய வேரை தானே தோண்டிக் கொள்வதற்குச் சமம் தம்மபதம் 246/247

யானை தனக்குக்குத் தானே மண்ணைவாரி தன்  தலையில் போட்டது போல.

பிறருடைய மனைவி

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- (குறள் 147)

 

பிறருடைய மனவியை நாடுபவனுக்கு

1.பகைமை (முதல் கணவனுடன் மோதல்)

2.பாவம் (மறு ஜன்மத்தில் பாவத்தின் பலன்)

3.அச்சம் (எந்த நேரத்தில் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயம்)

4.பழி (ஊரே தூற்றும் கெட்ட பெயர்)– இந்த நான்கும் எப்போதும் நீங்காது-

 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற  ஒழுக்கு – (குறள் 148)

பிறருடைய மனைவியை தவறான எண்ணத்துடன் கண் எடுத்தும்

பார்க்காத  பேராண்மை என்னும் பண்பு சான்றோர்க்கு அறமாக மட்டும் அமைவதில்லை; பொருந்திய ஒழுக்கமும் ஆகும்.

 

மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309

வெறுப்பு

பகல் கருதிப் பற்றா செயினும் இகல் கருதி

இன்னா செய்யாமை தலை  ( குறள் 852)

 

பொருள்

கருத்து மாறுபட்டு ஒருவன் அன்பில்லாத செயலைச் செய்யினும் , வெறுப்பினால் அவனுக்கு கெடுதல் செய்யாது இருப்பது சிறந்தது.

 

நம்மை வெறுப்போருக்கு இடையே நாம் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம் (தம்மபதம் 197)

 

இகலானாம் இன்னாத எல்லாம்  நகலானாம்

நன்னயம் என்னும் செறுக்கு (குறள் 860)

 

ஒருவனுக்கு வெறுப்பினாலேயே துன்பம் உண்டாகும்; நட்பினால் நல்லவன் என்ற மதிப்பு கிடைக்கும்.

நற்குணங்கள்

 

உள்ளத்தால் பொய்யாதொழுகின்  உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன் (குறள் 294)

 

ஒருவன் மனத்தாலும் பொய் சொல்லாதிருக்கக் கற்றுக் கொண்டால் அவன் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் நிலைபெற்று இருப்பான் (அரிச்சந்திரன், ராமன், தர்மன், காந்தி அடிகள் போல)

 

பொய் பேசாதிருப்பவனை உலகமே நேசிக்கும் (தம்ம 217)

 

ஒரு மனிதனின் தோற்றத்தையும் சொற்களையும் வைத்து அவனை கௌரமானவன் என்று நினைப்பதற்கில்லை; பொறாமை, பேராசை, அகந்தை ஆகிய மூன்று பாவங்களும் இல்லாதவன், விவேகமுள்ளவன், அன்பே உருவானவன் — ஒருவனே மதிக்கப்படத் தக்கவன் –தம்ம 262, 263

 

இதே கருத்து பகவத் கீதை 16-21லும் உளது மூன்று நரக வாசல்கள் என்று கீதை சித்தரிக்கும்.

வள்ளுவன் குறளில்

 

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக்கூடும் நோய் (குறள் 360)

காமம், க்ரோதம், மோகம் ஆகிய மூன்றின் பெயர்கூட மனத்தில் தோன்றாதவாறு ஒருவன் வாழ்ந்தால் அவன் உள்ளத்தில் ஞானம் பிறக்கும்; கர்ம வினை அறுபட்டுப்போகும்; பிறவ்தி தளை அறுபடும்;  மோட்சம் கிட்டும்

 

–சுபம்-

எண் ரகசியம்–3; தொண்ணூறு க்யாட் கரன்ஸி! (Post No.3969)

Written by S NAGARAJAN

 

Date: 4 June 2017

 

Time uploaded in London:-  5-24  am

 

 

Post No.3969

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

எண் ரகசியம்

காபிரைட் உள்ள தொடர் இது. திரு எஸ்.சுவாமிநாதன் அனுமதி பெற்று www.tamilandvedas.com மற்றும் கட்டுரை ஆசிரியரின் பெயரோடு வெளியிடல் வேண்டும். மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

எண் ரகசியம் – 3

தொண்ணூறு க்யாட் கரன்ஸி!  

 

ச.நாகராஜன்

பழைய காலத்தில் பர்மா என்று சிறப்புற்றிருந்த நாட்டை நாம் நன்கு அறிவோம்.

 

இப்போது மியான்மர் என்ற பெயரில் அறியப்படும் நாடு அது.

 

பர்மாவை சர்வாதிகாரியாக இருநது ஆண்டவர் நீ வின்.

(பிறப்பு 14-5-1911 மரணம் 5-12-2002) 1958 முதல் 1960 முடியவும் மீண்டும் 1962லிருந்து 1974முடியவும் பிரதமராக இருந்தவர் அவர். 1962லிருந்து 1981 முடிய அரசின் தலைமை பீடத்திலும் அவர் இருந்தார்.

 

அவருக்கு எண் கணித சாஸ்திரத்தின் மீது அபாரமான நம்பிக்கை.

அவர், 1963இல் பர்மாவின் கரன்ஸியாக இருந்த 50 மற்றும் 100 க்யாட் நோட்டுகளை 45 மற்றும் 90 க்யாட் நோட்டுகளாக மாற்றினார். உலகில் இப்படி அதிசயமான எண்களில் கரன்ஸியைக் கொண்டிருந்த ஒரே நாடு பர்மா தான்!

45 மற்றும் 90 ஆகிய எண்கள் ஒன்பதால் வகுபடக் கூடியவை. அவற்றை கூட்டினால் வருவது 9. (45 க்யாட் நோட்டில் 4= 5 = 9; 90 க்யாட் நோட்டில் 9 + 0= 9)

1963இல் 50 மற்றும் 100 க்யாட் நோட்டுகள் செல்லாது என்று அவர் செய்த அதிரடி உத்தரவால் பர்மாவே ஆடிப் போனது.ஒரே நாளில் வாழ் நாள் முழுவதும் சேர்த்த  மொத்த பணத்தையும் இழந்தோர் ஏராளம்.

 

 

இப்படி ஒன்பது வரும்படியான க்யாட் நோட்டை அவர் அமுல் படுத்தியதற்கான காரணம் அவரது நியூமராலஜி ஆலோசகர் அவருக்கு ஒன்பது என்ற எண்ணே அதிர்ஷ்டம் என்றும் எதையும் அவர் ஒன்பது வரும் படி பார்த்துக் கொண்டால் அவர் நிச்சயம் தொண்ணூறு ஆண்டுகள் வாழ்வார் என்றும் சொன்னது தான்!

பர்மாவின் கரன்ஸியை மட்டும் அவர் ஒன்பது  என்று வரும் படி பார்த்துக் கொள்ளவில்லை தனது அலுவலக மற்றும் பிரத்யேக வாழ்க்கையில் வரும் அனைத்தையும் ஒன்பது வரும்படி பார்த்துக் கொண்டார்.

 

 

இதனால் பர்மாவின் பொருளாதாரமே பலவீனமாகி நாசமாகியது.

ஆனால் அவரது நியூமராலஜி நம்பிக்கை அவரைக் கைவிடவில்லை.

 

 

ஏராளமானோர் அங்கு இறந்த போதிலும் 28 ஆண்டுகள் பலம் பொருந்திய தலைவராக அவர் ஆட்சி செலுத்தினார்.

நியூமரலாஜி ‘உறுதி அளித்த’ தொண்ணூறு வயதையும் தாண்டி வாழ்ந்து 91ஆம் வயதில் மரணமடைந்தார்.

 

 

அவரைப் பற்றிய ஏராளமான வதந்திகள் உண்டு.பர்மாவில் இரத்த புரட்சி ஏற்படும் என்றும் அதனால் அவருக்கு அபாயம் வரும் என்றும் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கண்ணாடி முன்னால் நின்று கொண்டு மாமிச ரத்தத்தைத் தன் மேல் தெளித்துக் கொண்டு கண்ணாடியில் இருந்த தன் உருவத்தை துப்பாக்கியால் சுட்டுத் தான் இறக்கவிருக்கும் “தோஷத்தை” அவர் விலக்கிக் கொண்டாராம்.

 

அத்துடன் இளமையுடன் “என்றும்” இருக்க டால்பினின் ரத்தத்தில் அவர் குளிப்பாராம்.

 

 

எண் ஜோதிடம் தவறாகக் கையாளப்பட்டால் அது தனி நபர் அளவில் நன்மையைத் தந்தாலும் ஒரு நாட்டிற்கே அவலத்தைத் தந்ததை நீவின் சரித்திரத்தின் மூலம் பார்க்கலாம்.

 

இதே போல சிங்கப்பூரை நிறுவிய சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீ க்வான் யூ (பிறப்பு 16-9-1923 மறைவு 23-3-2015) தனிச் சிறப்பு வாய்ந்த தலைவராக சிங்கப்பூர் மக்களால் கருதப் படுபவர்; 91 வயது வாழ்ந்து மறைந்தார்.

 

 

அவர் பெங் சுயி சாஸ்திரத்தின் அடிப்படையில் புத்த துறவி ஒருவரின் அறிவுரையின் பெயரில் எட்டு பக்கம் கொண்ட (பாகுவா என்று சொல்லப்படும் அமைப்பைக் கொண்ட) ‘ஒரு டாலர்’ நாணயத்தை சிங்கப்பூரில் கொண்டு வர சிங்கப்பூரின் பொருளாதாரம் பிரமாதமாக செழித்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரோ தனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று தான் எழுதிய ஹார்ட் ட்ரூத்ஸ் (Hard Truths)  என்ற நூலில் சொல்லி இருந்தாலும் கூட அவர் எடுத்த பல நடவடிக்கைகள் ஆழ்ந்த பெங் சுயி கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவையே என்று பெங்சுயி ஆதரவாளர்கள் நம்புகின்றனர்; அதற்கான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

Singapore’s Octal Coin

 

 

91 வயது வாழ்ந்த அவரை 91 என்ற எண்ணுடன் சம்பந்தப்படுத்தும்  அவர் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை மக்கள் இன்று தொகுத்துக் கூறி மகிழ்கின்றனர்.

 

ஆழ்ந்து யோசியுங்கள், எண்களின் ரகசியம் புரியும் என்று நியூமராலஜி ஆர்வலர்கள் கூறி  மகிழ்கின்றனர்!

-to be continued………………………………..

Q and A on Kali Yuga and Nava Graha Homa (Post No.3968)

Written by London Swaminathan

 

Date: 3 June 2017

 

Time uploaded in London- 21-55

 

Post No. 3968

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Sir

 

I came across this article and it says that the kaliyuga will be over by year 2025?

 

how come, if each yuga is 4,300, 3,600,2,400 and 1,200 years each ?

 

so we should have been over with the Kaliyuga

 

or is this the demigod years 360 human years Still it doesn t stand ground

 

thanks

G.D

 

 

Answer:

 

Dear GD,

 

About Yugas there are two different calculations.

One with more zeroes and another with less zeroes.

Whatever it may be, we see for ourselves Kaliyuga now.

 

It will not finish in 2025 unless there is Third World War.

 

I have read an article in Madras Mail in 1970s that Krta Yuga has already begun.

Now it looks ridiculous.

 

We published another book review in Dinamani Kadir (where I worked as Senior Sub Editor for 16 years) that Kalki Avatar would appear in 1985.

Nothing happened. It was written by a Swamiji of a famous Mutt!

 

But let us try to bring Kaliyuga like the great Tamil poet Bharati said.

 

 

Navagraha Homam

 

Navagraha Homa  and Nine types of Wood

 

Question

I have been given a note to buy nine different fuel sticks for the fire sacrifice to propitiate nine planets. I cant identify the nine plants. More over they are not available here. Can you please tell me the nine different woods.

VS

 

Answer

Dear VS’

Nowadays all are available in different parts of the world through courier service. You can google Navagraha Samithu and get the bundle. But please be aware of the import restrictions in your country.

 

Following are the nine types of woodds or fuel sticks in English and Tamil:-

When Hindus do Navagraha Homa ( Fire Sacrifice) to celebrate entering a new house (House warming) or for a long life they sacrifice nine different sticks in the fire. They display nine different grains, pulses and nine differently coloured cloths to propitiate the nine heavenly bodies, roughly translated as Nine Planets.

 

அத்தி- சுக்கிரன் (Ficus Udumbura) = Venus

நாயுருவி- புதன் (Achyranthe aspera) = Mercury

புரசு /பலாச மர – சந்திரன் (Butea monosperma) = Moon

அரச மர – குரு (Ficus Religiosa)= Jupiter

வன்னி மரம்- சனைஸ்வரன் (Prosopis cineraria) = Saturn

அருகம் புல் – ராகு (Cynodon dactylon) = ascending node

தர்ப்பை – கேது (Desmostachya bipinnata) = descending node

கருங்காலி—செவ்வாய் (Diospyros ebenum) = Mars

எருக்கு- சூரியன் (Calotropis gigantean) = Sun

 

In Tamil from my previous post:-

நவக்கிரக ஹோம சமித்து

நவ சமித்துகள், நவ தானியங்கள்

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்:

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலை

நவக்ரஹ ஹோம சமித்துகள்

எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அரச மரம் வேதத்தில் உள்ளது, சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.
வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

 

—Subham–

 

 

 

ஸ்ரீ ஆனந்தமயீ மா- எல்லோரையும் வியக்கவைத்த பெண்மணி (Post No.3967)

Written by London Swaminathan

 

Date: 3 June 2017

 

Time uploaded in London- 12-50

 

Post No. 3967

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

கிழக்கு வங்காளத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஏழைப் பிராமணனக் குடும்பத்தில் பிறந்த நிர்மலா என்ற பெண் பிற்காலத்தில் உலகம் போற்றும் ஆனாந்த மயீ மா என்ற புனிதவதியாக உயர்ந்த கதை கேட்பதற்கே சுவையானது; புனிதமானது.

 

1896ஆம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி பிறந்த அவர் 86 ஆண்டுகளுக்கு வாழ்ந்து இந்தியாவிலுள்ள புனித ஹரித்வாரில் 1982 ஆகஸ்ட் 27ல் சமாதி அடைந்தார். உடனே அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி விசேஷ  ஹெலிகாப்டரில் வந்து அந்திமக் கிரியைகளில் கலந்து கொண்டார்.

 

தெய்வ நெறிக் கழகத்தின் சுவாமி சிவாநந்தா, யோகதா சத் சங்கத்தின் பரமஹம்ச யோகாநந்தா போன்றோர் புகழ் மாலை சூட்டிய ஆன்மீகப் பேரரசி அவர்.

 

ஆனந்தமயீ மா, கியோரா என்னும் சிறு கிராமத்தில் விபினவிஹாரி பட்டாசார்யா- மோக்ஷதா சுந்தரி தேவி ஆகிய தம்பதியருக்கு தவப் புதல்வியாக  அவதரித்தார் நிர்மலா சுந்தரி. சிறுவயதிலிருந்தே படிப்பில் நாட்டமில்லாமல் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் செலுத்தினார். எல்லா இந்துக் குடும்பங்களிலும் உள்ளது போலவே அவரது வீட்டிலும் ஒரு சுவாமி அறை இருந்தது. அதிலுள்ள பல கடவுளரிம் படங்களுக்கு முன்னால் தியானம் செய்வது இவரது வழக்கம்.

அந்தக் கால வழக்கபடி நிர்மலாவுக்கும் விக்ரமபுரத்தைச் சேர்ந்த ரமணி மோஹன சக்ரவர்த்திக்கும் திருமணம் நடந்தது. அப்போது நிர்மலாவுக்கு வயது 13. ஆயினும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தது அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான். எப்படி பிற்காலத்தில் நிர்மலா– ஆனந்தமயீ ஆனாரோ,  அப்படி ரமணி மோஹன் — போலாநாத் ஆனார்.

 

நிர்மலாவும் ரமணியும் பெயர் அளவிலேயே மனைவி- கணவனாக இருந்தனரே தவிர தாம்பத்திய உறவு என்பது கிடையவே கிடையாது.

 

சிறிது காலத்தில் போலாநாத்துக்கும் ஆன்மீக உணர்வு அதிகமானது எப்படி ராமகிருஷ்ன பரமஹம்சரால், அவரது மனைவி சாரதா தேவி சந்யாசினி ஆனாரோ அப்படி ஆனந்தமயீ முன்னிலையில் போலாநாத் சந்யாசி ஆனார்.

 

 

ஆனந்தமயீ மாவின் தவ வலிமை அவ்வளவு சக்தி வாய்ந்தது.

பிறப்பிலேயே இறை உணர்வு பெற்ற ஆனந்தமயீ, அடிக்கடி தன்னை மறந்த நிலையை அடைந்தார். நாளடைவில் இது அதிகமாகி, பல நாட்களுக்கு நினைவற்றுக் கிடப்பார். கணவனும் கூட அவருக்கு சேவகம் செய்யத் துவங்கினார். அறியாத ஒரு மகளுக்கு தந்தை எப்படி உதவுவாரோ அது போல போலாநாத் தன் மனைவிக்கு உதவினார்.

 

ஆனந்தமயீயின் பெருமை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் துவங்கியது அவரது கணவருக்கு பாஜிப்பூரில் நவாப்பிடம் முதலில் வேலை கிடைத்தது. பின்னர் டாக்காவில் வேலை கிடைத்தது.

 

 

டாக்காவில் ஆனந்தமயீ இருக்கும் போது சமூகத்தின் உயர் நிலையில் இருந்த டாக்டர்கள், வக்கீல்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அவரைப் பார்க்க குவிந்தனர். காலப் போக்கில் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து டாக்காவில் அவருக்கு ஒரு ஆஸ்ரமம் கட்டினர். ஆனால் தன்னை சி றைப்படுத்திக் கொள்ள விரும்பாத ஆனந்தமயீ தேச சஞ்சாரம் செய்யத் துவங்கினார். நாடு முழுதும் தீர்த்த யாத்திரை செய்யத்  துவங்கினார். எந்த இடத்திலும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்குவதில்லை.

 

 

தென்னிந்தியாவில் ரமண மகரிஷிக்கு வெளிநாட்டு பக்தர்கள் சேர்ந்தது போல ஆனந்தமயீக்கும் நிறைய வெளி நாட்டு பக்தர்கள் சேர்ந்தனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு,  அவரது மகள் இந்திரா காந்தி , தத்துவ அறிஞர் கோபிநாத் கவிராஜ் ஆகியோர் இவரது பக்தர்களாயினர்.

 

இவரது ஆன்மீக சக்தி, இவரைத் தரிசித்த அனைவரிடமும் பரவியது. அனைவரும் இவரது செல்வாக்கின்கீ ழ் வந்தனர். குறிப்பிடத்தக்க ஒரு வெளிநாட்டுக்காரர் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் பிறந்த பிளாங்கா (Blanca) ஆவார். அ ந்த யூத மதப் பெண்மணி இவரது உபதேசத்தில் உருகி ஆத்மாநந்தா என்ற பெயர் பெற்றார். அவர் எழுதிய டயரி, ஆத்மாநந்தா சமாதி அடைந்தபின்னர்  ராம் அலெக்ஸாண்டர் என்பவரால் வெளியிடப்ப ட்டது. அதில் ஆனந்தமயீ மற்றும் ஆத்மாநந்தாதாவின்  வரலாறு வெளியானது.

 

ஆனந்ததமயீயிடம் வந்த அறிஞர்களில் ஒருவர் ஒரு நாள் திடீரென்று உரத்த குரலில் பேசினார். இன்று நான் உங்களை “அம்மா” என்று அழைத்துக் கதறிவிட்டேன்; எதிர்காலத்தில் உலகம் முழுதும் உங்களை “அம்மா” என்று அழைக்கும் என்று ஆரூடம் சொன்னார். அது உண்மையும் ஆயிற்று. உலகமே அவரை மா (அன்னை) என்று அழைக்கத் துவங்கியது.

 

வெளிநாட்டுப் பேராசிரியர்கள், தத்துவ அறிஞர்கள் ஆகியோர் இவரிடம் பல வினாக்களுக்கு விளக்கம் கேட்டறிந்தனர். அவர் படிக்காத மேதையாக விளங்கினார்.

குரு இல்லை!

 

ஆனந்தமயீ தனக்குத் தானே குரு ஆனார். அவருக்கு குரு என்று எவரும் இல்லை. தனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் ஆயிரத்தில் ஒரு பகுதியை கூட தான் வெளி உலகிற்குச் சொல்லவில்லை என்று பிற்காலத்தில் அவரே கூறியதுண்டு. சுமார் 60 ஆண்டுக் கால தர்மப் பிரசாரத்திற்குப் பின்னர் ஆனந்தமயீமா 1982 ஆகஸ்ட் 27ல் ஹரித்வாரில் சமாதி அடைந்தார். அங்கே அவரது புனித சமாதி இருக்கிறது.

அவர் பரப்பிய ஞான ஒளியும், அவர் பொழிந்த அருள் மழையும் இன்றும் நீடிக்கிறது; அவரை நினைப்போருக்கு அவை என்றும் கிடைக்கும்!

 

xxxx SUBHAM xxxxxx

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால்! (Post No.3966)

Written by S NAGARAJAN

 

Date: 3 June 2017

 

Time uploaded in London:-  6-29  am

 

 

Post No.3966

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருக்குறள் மர்மம்

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

 

ச.நாகராஜன்

 

 

வள்ளுவர் தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கையாளும் மஹாகவி. மஹரிஷி.

 

அவரது குறளில் பகுத்தறிவு என்ற ஒரு அறிவைப் பற்றிச் சொல்லவே இல்லை.

பகுத்து என்ற வார்த்தை,

 

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)

 

என்ற ஒரே ஒரு குறளில் மட்டுமே வருகிறது. பகுத்து உண் என்பதில் மட்டுமே பகுத்து என்ற வார்த்தை வருகிறது.

பகுத்தறிவு என்பதைச் சொல்லாத வள்ளுவர் அறிவை அற்புதமாக மூன்று விதமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

கார் அறிவு (குறள் 287)

களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார் கண் இல்

 

இங்கு கார் அறிவு என்பது குறுமதி அல்லது இருண்ட அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது.

ஆக அறிவில் கீழ்த்தரமான கீழ் மக்களது அறிவு கார் அறிவு.

அடுத்து பேரறிவு (குறள் 215)

 

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு

 

பொது சேவையில் ஈடுபடும் ஒருவனது பேரறிவை இக்குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

ஆக கார் அறிவு மற்றும் பேரறிவைச் சொல்லிய வள்ளுவர் இன்னொரு அறிவைச் சொல்கிறார்.

வால் அறிவு (குறள் 2)

 

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

 

வால் அறிவு இறைவனது அறிவு. தூய அறிவு.

ஆக இப்படி கார் அறிவு, பேரறிவு, வாலறிவு ஆக மூன்று விதமாக நுண்ணறிவைப் பிரிக்கிறார் வள்ளுவர்.

பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு புது வித இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைப் படிக்க ஆர்வப்படலாமா?

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.

 

எடுத்துக்காட்டிற்காக சில குறள்களை மட்டும் கீழே காணலாம்:

  • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.

கேள்வி: பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர். அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும்? உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா? யாருமே பெய் என்று சொல்லி மழை பெய்ததைப் பார்க்க முடியவில்லையே!

  • வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ர் என்று (குறள் 1317)

3) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று (குறள் 1318)

 

தும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம்? காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா?

 

  • அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொற்த்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

சிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆயிரக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறார். முதலாளி அமர்கிறான்.

இது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். எங்கள் பகுத்தறிவுக்கு இது ஒத்ததல்ல.

  • மலர்மிசை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3) நீண்ட ஆயுளுக்கும் இறைவனுக்கும் என்ன சம்ப்ந்தம்?
  • கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

கொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்?

  • மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

எந்நோற்றான் கொல் எனும் சொல்

தந்தை நோன்புக்கும் மகனுக்கும் என்ன தொடர்பு? அவனவன் வாய்ப்பு, அறிவு, பணம் போன்றவற்றிற்குத் தக முன்னேறுகிறான். தந்தை உதவி செய்யாவிட்டாலும் கூட பலர் முன்னேறவில்லையா, என்ன?

  • ஊழிற் பெருவலி யா உள? மற்றொன்று

சூழினும் தான் முந்துறும் (குறள் 380)

விதி எப்படியும் தான் செய்வதைச் செய்தே தீரும் என்பது பொருந்தாத ஒன்று.

விதியின் மீதே பகுத்தறிவாளருக்கு நம்பிக்கை இல்லை. ஆக வள்ளுவரின் இந்தக் குறள் பகுத்தறிவுக்குப் பொருந்துமா?

  • ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398)

இந்தப் பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறவிகளில் பயன் தரும்.

மனிதனுக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு. அதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டியது தான். எங்கிருந்து வந்தது ஏழு பிறவி? இது இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாதே. அவர்கள் ஒரு பிறவி நம்பிக்கை உடையவர்கள் அல்லவா? ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

 

 

இப்படிப் பல குறள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐயன் வள்ளுவனுக்கு விழா எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு விழாவைத் தவறாமல் எடுத்துக் கொள்ளும் பகுத்தறிவுத் தலைவருக்கும் அவரது அன்புத் தம்பிகளுக்கும் இந்த வள்ளுவர் சரிப்பட்டு வருவாரா?

ஒன்று தங்கத் தம்பிகள் தவறாக வழி சொல்லும் தலைவனைக் கைவிட வேண்டும். அல்லது வள்ளுவரைக் கைவிட வேண்டும்.

 

 

சற்று சிந்தித்தால் ஒரே ஒரு விஷயம் புலப்படும்.

வள்ளுவரின் குறள்கள் ஆழ்ந்த தத்துவங்களின் அடிப்படையில் எழுந்தவை. காலம் காலமாக நிற்பவை. காலத்தை வென்றும் நிலைப்பவை.

 

எளிதில் மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படும் பொருளுக்கும் அப்பாற்பட்டு ஆழ்ந்த உட்கருத்தைக் கொண்டவை.

 

அதனால் தான் வேதங்களுக்குச் சொல்லப்படும் புகழ்மொழியான மறை என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தமிழில் இருப்பதால் தமிழ் மறை.

 

 

அதி மானுடவியல் என்னும் சைக்கிக், அதற்கும அப்பாற்ப்ட்ட வால் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இவற்றின் உட்பொருளை ஒருவர் அறிய முடியும்.

புண்ணிய பாவங்கள் பிறப்பைத் தரும்.

 

அதற்கேற்ப இன்றைய வாழ்வு அமையும்.

நல்லதைச் செய்து நல்ல பிறவியை எடு.

பின்னர் பிறவிச் சுழலிலிருந்து இறைவனை வேண்டி அவன் அருள் பெற்று விடுபடு.

 

கற்பில் சிறந்தவள் கடவுளே. அவள் ஆணைக்கு பஞ்ச பூதங்களும் அடி பணியும்.

 

நோன்பு அல்லது தவம் செய்தால் நன் மக்களைப் பெறலாம்.

எண்ணம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் நினைக்கும் போது அதே லயத்தைக் கொண்டவர்க்கு எண்ண சக்தியின் ஓட்டம் தெரியும்.

 

இப்படி அதிமானுடவியல், ஹிந்து தத்துவம், சாஸ்திரங்கள் அல்லது அறநூல்களின் அடிப்படையில் மட்டுமே வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய பகுத்தறிவின் அடிப்படைக்கு அப்பாற்பட்டவர் வள்ளுவர்.

 

 

தமிழ் மக்கள் செய்த தவத்தால் வந்தவர் வள்ளுவ.ர்

கார் அறிவை (இன்றைய பகுத்தறிவு) விட்டு விட்டு பேரறிவை ஈட்டி, அடைந்து, வாலறிவனை அறியும் முயற்சியில் ஈடுபடும் போது வள்ளுவம் புரியும்; வாழ்க்கையும் சிறக்கும்!

****

 

 

 

 

BENGALI MYSTIC SHRI ANANDAMAYEE MA- PART 2 (Post No. 3965)

Written by London Swaminathan

 

Date: 2 June 2017

 

Time uploaded in London- 14-59

 

Post No. 3965

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

PLEASE READ THE FIRST PART POSTED HERE YESTERDAY.

“In 1918 Bholanath, Ma’s husband, got a job as estate manager for the Nawab of Dacca in Bhajitpr. Ma’s ‘sadhana leela’ began here. Ma always emphasised that she was in a perfect state of spiritual illumination from her birth and she had always been immersed in that timeless state. But yet she started practising sadhana and slipped into trance. Bholanath watched it with fascination after a day of hard work. When Nirmala’s (Ma) mystic absorption occurred more frequently he decided to leave her alone.

 

On 3rd of August, 1922 she fell into Samadhi. For the next several years she went into Samadhi and remained so for days. When she had the vision of different deities she would merge into them.

 

Later in her life she said that she had never revealed even a thousandth part of what she had experienced then. During that time her day was not divided in to mornings, evenings and nights – there was only one prolonged period of indescribable length. Hunger, thirst, sleep and other demands of body remained totally absent for many days. During this period Bholanath looked after her as a father would a helpless child.

 

in 1925 when she completed a lengthy period of silence, Bholanath urged her to speak to the people assembled there. Se waned himthat there will be a overwhelming crowd if he had opened the doors like this.

By 1926 her period of sadhana leela was coming to end. She was no more a shy village girl who kept her face covered with sari. She had begun to assume the role of a spiritual teacher. Her devotees continued to increase they set up an ashram to her in Dacca. But she refused to be chained by her followers and started on a pilgrimage all over India. She travelled a lot without staying in a single place for more than two days.

 

In April 1927 Bholanath and Ma moved to Dacca. Her divine ecstasies intensified and she emanated a  spiritual radiance which others found irresistible. It was at this time Ma came to be known to world at large. Those who now came to her came from the highest echelon of Indian society. They were doctors, lawyers, government officials and aristocrats.

 

For another 55 years until 1982 she travelled and met lot of people. Mrs Indira Gandhi, Prime Minister then,was one of her admirers. When Ma attained Samsadhi on 27th of August Indira Gandhi flew by a specil helicopter to Haridwar to attend her funeral ceremonies. Later a shrine was built in her Ashram in Haridwar.

 

Swami Sivananda of Divine Life Society described her as, “the most perfect flower that the Indian soil has ever produced”

Sri Paramahamsa Yogananda said, “Joy permeated” (anandamayee).

Whenever a foreing devotee asked ker a question she gave illuminating answers. It is all in her teachings and the diary of Atmananda in the book DEATH MUST DIE.

xxx

only a few points:

Today in the course of conversation, Ma said, “If you kill in the line of duty, you also have to bear the consequences. So when people say, Why I have these difficulties? Due to what sin? It is certainly due to some thing that they have committed” (the infallible Law of Karma)

xxx

This morning she talked to two of us and asked me (Atmananda) to write it down:

When you work in the garden, you should serve the trees and plants, and living with them, try to become like them. Let the trees be your Gurus. A tree gives fruit and shade. When the fruit is ripe it falls down and is sweet to the taste. It gives its wood (fuel) with which you cook your food. So the tree gives itself entirely. It holds nothing back. Watch how the trees grow and make them your friends and learn from them. Also from the grass. Grass is lowly and bares everything. People tread on it, cut it and it does not defend itself. So also the earth.

 

You will also be in charge of Ashram library. Catalogue it and later on it will grow. It was Bhaiji’s wish. He himself had the cup boards made.

Be friendly with the servants. Do not get angry with them, but be firm and see that they do their work.”

 

(These teachings are very basic. You may find better quotations about trees and gardening. But the big difference is that when it comes from a person who is pure in word, thought and deed, the words get tremendous energy. Everyone who hears will follow it letter and spirit. They become Mantras.)

 

Indira Gandhi with Ma Anandamayee.

–Subham–

 

சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு (Post No.3964)

 

Research ArticleWritten by London Swaminathan

 

Date: 2 June 2017

 

Time uploaded in London- 8-40 am

 

Post No. 3964

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

(I wrote this for ‘Soundaryam’ published by Hindu Tamil Cultural Association, Enfield,London)

 

“ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்

கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—

வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,

ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

(வேட்டுவ வரி, சிலப்பதிகாரம்)

 

செந்தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” — என்று பாரதியாரால் போற்றப்பட்ட அற்புத காவியம். பழந்தமிழ் நாட்டில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நாநிலப் பிரிவுகளுக்கு முறையே விஷ்ணு,முருகன், இந்திரன், வருணன் தெய்வங்களாக இருந்ததை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” எழுதிய தொல்காப்பிய சூத்திரம் மூலம் அறிகிறோம்:

மாயோன் மேய காடுறை யுலகமுஞ்

சேயோன் மேய மைவரை யுலகமும்

வேந்தன் மேய தீம்புன லுலகமும்

வருணன் மேய பெருமணலுலகமும்

முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

(தொல். பொருள். 1-5)

 

இந்த நாநிலம் அதன் நிலை திரிந்து வறண்டு போனால் அது பாலை நிலம் எனப்படும். அதற்கான தெய்வம் கொற்றவை என்னும் ‘தேவி’யாகும். சம்ஸ்கிருதத்தில் கொற்றவையை ‘துர்கா’ என்று அழைப்போம். கொற்றவை வழிபாடு குறித்து பல சுவையான தகவல்களை, நமக்கு, இளங்கோ அடிகள் யாத்த, சிலப்பதிகாரம் தருகிறது. அவை இன்று வழக்கற்றுப் போனது மேலும் வியப்பை ஏற்படுத்தும்.

 

தற்போதுள்ள உலக மதங்களில் இந்து மதம் ஒன்றில் மட்டுமே கடவுளைப் பெண் வடிவத்திலும் வணங்குகிறோம். அந்த அளவுக்குப் பெண்களுக்கு உயர்நிலை கொடுக்கப்பட்டது. சங்க காலம் முதல் இந்தக் கொற்றவை எனும் பெண் தெய்வம் (முருகு.368, பெரும்.583, நெடு.192) வழிபாடு இருப்பதற்குப் பல சான்றுகள் உள. இக்கட்டுரையில் சிலப்பதிகாரக் குறிப்புகளை மட்டும் காண்போம்:

மான் வாகனம்

துர்கைக்கு/ கொற்றவைக்கு மான் வாகனம் என்ற குறிப்பு சிலம்பில் வருகிறது. பிற்காலத்தில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரும் மான் வாகன தேவி பற்றி (கலையதூர்தி) என்று பாடுகிறார். ஆனால் சிங்கத்தின் மீதும், புலியின் மீதும் காட்சி தரும் தற்கால துர்கை, மான் வாகனத்தில் அமர்ந்த கட்சி எங்கேயும் காணக் கிடைக்கவில்லை; அதாவது சிலையிலோ, படத்திலோ இல்லை! இது ஒரு வியப்பான செய்தி. இளங்கோ பாடிய சிலம்பிலிருந்து, சம்பந்தர் பாடிய தேவாரம் வரை காணப்படும் கொற்றவையின் மான்  வாகன ‘’போஸ்’’ நமக்குக் கிடைத்தில.

 

பாலைவனத்தில் வாழ்வோர் மறவர்கள் ஆவர். அவர்கள் கொலைக்கும் அஞ்சாத வீரர்கள். பாலைவனம் வழியாகக் கடந்து செல்லும் வணிகர், தூதர் முதலியோரைத் தாக்கி, அவர்களைக் கொன்று, பொருள்களை வவ்வுவதே பாலை நில மக்களின் தொழில். தாங்கள் கொன்ற மிருகங்களை கொற்றவைக்குப் படைப்பதும் இவர்கள் வழக்கமாகும்.

சிலப்பதிகாரத்தில் ஐயை, கார்த்திகை என்ற பெயர்களுடைய பெண்களும் காட்சி தருகின்றனர். அவை துர்க்கையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,

மையறு சிறப்பின் வான நாடி

ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்”

(காடுகாண் காதை, சிலம்பு)

 

இதைத் தொடர்ந்துவரும் வேட்டுவ வரிப் பாடல் முழுதும் கொற்றவை வருணனை வருகிறது.

கொற்றவை கோவிலில் சாலினி வெறியாடியதை (சாமி ஆடல்)  எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். கலையமர் செல்விக்கு பலிதந்தால்தான் நன்மைகள் விளையும் என்று அவள் சாமி ஆடுகையில் முழங்குகிறாள். இதோ இளங்கோவின் வரிகள்:

 

“கலையமர் செல்வி கடன் உணின் அல்லது

சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்;

மட்டு உண் வாழ்க்கை வேண்டுதீர் ஆயின்

கட்டு உண் மாக்கள்! கடம் தரும் என் ஆங்கு”

(கலை= மான்)

பெண்ணுக்கு கொற்றவை வேஷம்

இன்னொரு விநோத வழக்கத்தையும் சிலம்பு பாடுகிறது. அதாவது ஒரு சிறு பெண்ணை கொற்றவை போல அலங்கரித்து மான் வாஹனத்தில் ஏற்றி ஊர்வலம் விட்டு வணங்கியதையும் இளங்கோ சொல்லுகிறார். சங்க காலத்தில் நடந்த இக்கொற்றவை வழிபாடு இன்று எங்கும் காணக் கிடக்கில. நேபாள  நாட்டில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து “குமாரி” என்று தெய்வமாக வழிபடுவதை இன்றும் காணலாம்.

 

“பழங்குடிக் குமரியின் முடியை உயர்த்திப் பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் கொம்பை பிறைச் சந்திரன் போல அவளுக்கு அணிவித்தனர். புலிப்பல் தாலியை அணிவித்து புலித்தோலை ஆடையாகப் போர்த்தி, அவளை மான் மீது ஏற்றி ஊர்வலம் விட்டனர். அவள் கையில் கிளி, கோழி முதலியவற்றைக் கொடுத்து வழிபட்டனர். அவளைத் தொடர்ந்து பெண்கள் பலர், சோறு, எள்ளுருண்டை, நிணச் சோறு, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். பெரிய வாத்தியங்கள் முழங்கின. இது இளங்கோ அடிகள் நமக்கு அளிக்கும் செய்தி.

 

இதற்குப் பிறகு இளங்கோ அடிகள், துர்கையை மஹிஷாசுரமர்த்தனியாக வருணிக்கிறார். இன்றும் மாமல்லபுரத்தில் “எருமை அசுரனை” (மஹிச அசுரன்) தேவி, வதம் செய்த காட்சி, அருமையானச் சிலை வடிவில் காட்சிதருகிறது;

பல்லவர்கள் சிலை செய்வதற்கு முன்னரே இளங்கோ அடிகள் செய்யுள் வடிவில் ஓவியம் தீட்டிவிட்டார்:

 

“மதியின் வெண்தோடு சூடும் சென்னி

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்

பவள வாய்ச்சி, தவளவாள் நகைச்சி,

நஞ்சு உண்டு கறுத்த கண்டி, வெஞ்சினத்து

அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்

துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி,

வளியுடைக் கையில் சூலம் ஏந்தி

கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,

வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை!

இரண்டு வேறு உருவின் திரண்டதோள் அவுணன்

தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்

அமரி, குமரி, கவுரி, சமரி,

சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை

ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்

பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை;

ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை

தமர் தொழ வந்த குமரிக் கோலத்து

அமர் இளங்குமரியும் அருளினள்

வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே”

 

பொருள்: சந்திரப் பிறை சூடிய தலை; நெற்றிக் கண்; பவள வாய், முத்துச் சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பையே கயிறாகக் கொண்டு மேரு மலையை வில்லாக  வளைத்த வில்லி; துளை அமைந்த பல்லுடைய விஷப் பாம்பையே கச்சு ஆக அணிந்த முலையுடையாள்; வளைகள் அணிந்த கையில் சூலம், யானைத்தோல் போர்வை, புலித்தோல் மேகலை, இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, மகிஷாசுரன் தலையில் நிற்பவள்; எல்லோரும் தொழும்குமரி, கறுப்பி, போரின் அதிதேவதை, சூலம் ஏந்திய பெண்; நீல நிறத்தவள்; எம் தலைவி, செய்யவள், தடக் கையில் கொடிய வாளேந்திய நங்கை; பாயும் மான் மீது ஏறி வருபவள்; மலைமகள், கலைமகள், திருமகளின் உருவம்; இளங்குமரி; அவள் அருள் நமக்குக் கிடைத்துவிட்டது.

 

வழக்குரை காதையிலும் கண்ணகியின் தலைவிரி கோலத்தைக் கண்டவுடன், வாயிற்காப்போன், பாண்டிய மன்னனிடத்தில் சொல்லுகையில் வாசலில் வந்து நிற்கும் பெண் கொற்றவை அல்லள், காளி அல்லள், பிடாரி அல்லள் என்று பல பெண் தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லுகிறான். சங்க காலத்தில் பெண் தெய்வ வழிபாடு, குறிப்பாக கொற்றவை வழிபாடு, எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைக் காண முடிகிறது. புராணத்தில் வரும் மஹிஷாசுர மர்தனி, அர்த்தநாரி முதலிய கருத்துகளும் துர்கை என்பவள் சிவன், நாராயணன் எனும் வடிவத்தின் பெண் உரு என்ற கருத்தும் மூன்று தேவியரின் மாற்று உரு என்றும் கருத்து தொனிக்கும் அற்புத வரிகள் இவை. சங்க காலத்தில் ஒரே தெய்வம் என்ற கொள்கையை மக்கள் உணர்ந்த போதிலும் அவளைப் பல்வேறு வடிவங்களில் வழிபட முழ்டியும் என்பதை இளங்கோ சொல்லும் போது நாம் துர்கா அஷ்டோத்திரம் படிக்கும் உணர்வு ஏற்படும்!

 

மேலும், வேட்டுவ வரி முழுதும் கொற்றவை வழிபாடுதான்; படிக்கப்படிக்கக் கழிபேருவகை தரும்!

 

கண்ணகி, தனது கணவன் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டவுடன், அவள் வளையல்களை உடைத்தெரிகிறாள். இதுவும் கொற்றவை கோவிலில் நடந்த நிகழ்ச்சி.

 

சிலப்பதிகாரம் தவிர தமிழில் பல்வேறு கால கட்டங்களில் எழுந்த இலக்கியங்களில் கொற்றவைக்குப் பல பெயர்கள் காணப்படுகின்றன:

அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, ஆளியூர்தி, பாலைக் கிழத்தி, வீரச் செல்வி, மகிடற்செற்றாள், குமரி, கலையதூர்தி, கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசயை, அரியூர்தி, நாரணி, விந்தை, நீலி, காத்தியாயனி, சுந்தரி, யாமலை, சயமகள், மேதிச் சென்னி, மிதித்த மெல்லியல், கௌரி, ஐயை, பகவதி, கொற்றி, சக்கராயுதத்தி, மாலுக்கிளையநங்கை, சூலி, வீரி, சண்டிகை, கன்னி, கார்த்திகை, நாராயணி, தாருக விநாசினி

 

வாழ்க கொற்றவை / துர்க்கை புகழ்!

பெருகுக! தேவியின் அருள்!

எங்கும் மங்களம் பொங்குக!!!

 

-Subham-

பாரதியார் பற்றிய நூல்கள் – 32 (Post No.3963)

Written by S NAGARAJAN

 

Date: 2 June 2017

 

Time uploaded in London:-  7-03  am

 

 

Post No.3963

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல் 

பாரதி அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சுவையான செய்தி!

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 32

 

ஸ்ரீ கபாலி சாஸ்திரி ஸ்ரீ அரவிந்தரை தரிசனம் செய்ய உதவிய மஹாகவி பாரதியார்!

 

வேதங்களைச் சிறப்பாக ஆராய்ந்த மேதைகளுள் ஸ்ரீ டி.வி. கபாலி சாஸ்திரியார் தனி இடத்தைப் பெறுகிறார்.

காவ்யகண்ட் கணபதி முனிக்ளின் சிஷ்யரான இவர் ஸ்ரீ அரவிந்தரை தரிசித்து ஆஸ்ரமத்திலேயே சில காலம் தங்கி இருந்தவர். அவ்ரையே பின்னர் குருவாக வரித்தவர்..

வேத ரகசியங்களை விண்டு உரைக்கும் ஏராளமான கட்டுரைகளையும் நூல்களையும் படைத்தவர்.

 

இவர் பெயரால் இன்றும் வாசகர் வட்டம் எனப்படும் ஸ்டடி சர்க்கிள் நடந்து வருகிறது.

 

அவர் மஹாகவி பாரதியாரை ஒரு நாள் சந்தித்தார். அப்போது பாரதியார் ஜயமுண்டு பயமில்லை மனமே என்று கம்பீரமாகப் பாடிக் கொண்டிருந்தார்.

 

ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்க வேண்டும் என்ற தன் ஆவலை பாரதியாரிடம் அவர் தெரிவிக்கவே, “இப்போது முன் போல அவரை சுலபமாகச் சந்திக்க முடிவதில்லை” என்று கூறிய மகாகவி ஒரு துண்டுச் சீட்டை சக்திகுமார் என்று பெயர் எழுதி அனுப்பி வைத்தார்.

 

ஸ்ரீ அரவிந்தர் கபாலி சாஸ்திரிகளை அன்று மாலை ஆறு மணிக்கு வந்து சந்திக்குமாறு தெரிவித்தார்.

இப்படியாக ஒரு பெரிய சந்திப்பை மகாகவி ஏற்பாடு செய்தார். அது வேத ஆராய்ச்சியின் வித்தாக அமைந்தது.

 

அத்துடன் ஸ்ரீ கபாலி சாஸ்திரிகளிடம் பாரதியார் தான் சுமார் 200 வேத ரிக்குகளை ஸ்ரீ அரவிந்தரிடம் கற்றதாகக் கூறியுள்ளார்.

அதன் மூலமே காலத்தை வென்ற பல் பாக்கள் உருவாயின.

கீழே க்பாலி சாஸ்திரிகள் தனது சந்திப்பைக் கூறியதை அவர் எழுத்துக்களிலேயே பார்ப்போம்.

 

அரிய இந்த செய்தி அரவிந்த ஆசிரம வெளியீடுகளில் உள்ளது.

ஆசிரமம் காப்புரிமை பெற்ற நூலக்ள், கட்டுரைகளை ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் பாண்டிச்சேரியுடன் தொடர்பு கொண்டு ஆர்வமுள்ளவர்கள் பெறலாம்.

 

How Sri Kapali Sastri met Sri Aurobindo through the introduction by the Mahakavi is an interesting story:

 

In Kapali Sastri’s words:-


“I decided to take the trip with this main object of visiting Sri Aurobindo. On arrival in Pondicherry, I called at Poet Bharati’s. He was then living in Iswaran Dharmaraja Kovil Street and when I was announced, his little daughter led me up to the first floor where I found him singing

˜Victory in this life is certain
O Mind, fear there is none.”

 

(ஜயமுண்டு பயமில்லை மனமே)

Then after a pause he made enquires of one or two friends in Madras. I had met Bharati in Mylapore, the last I saw him was a little before 1907. But what a change! Circumstances had conspired to wreck the physique and handsome and spirited face of the inspired poet, the national poet of Tamilnad; he was shrunken, pale and setting. Suddenly he burst out:

˜In the secret cave, O growing Flame,
Son of the Supreme”

I knew Bharati had some knowledge of Sanskrit which he had studied at Kashi but not that he had acquaintance with the Vedas deep enough to give expression to such an essentially Vedic conception or as the growing Flame in the heart of man. Besides the poet identifies Agni as Guha, Kumara, son of the Supreme. When I asked him how he caught the idea, he gave an interesting explanation in the course of which he said:

“Yes, I have studied 200 hymns (I do not quite recollect whether he said hymns or Riks) under Aurobindo Ghose.”

It was from Bharati himself that I learnt he got the inspiration and general knowledge of the Vedic gods and hymns from Sri Aurobindo. Later he translated into Tamil, some of the Vedic hymns to Agni. So the talk switched on to A. G. (as he used to be known in those days – Aurobindo Gosh).


“Where is he living?”
I asked.
“There”
he pointed out in the direction of the European quarters.
“I want to see him”


“But now-a-days he is very much disinclined to see people. I myself do not meet him often as I used to do before. Anyway I shall ascertain”.
“Please mention that I have come on a pilgrimage to him”.
I pressed, as if on impulse. Indeed the pilgrimage had commenced somewhere long ago.

Bharati wrote out a short note in Tamil- a characteristically humourous one- to Nagaswami who was attending on Sri Aurobindo at that time, and signed himself as Shakti Kumar, and he sent me with an escort to the house where Sri Aurobindo lived.

It was 3 p.m. when we arrived there. Nagaswami was obliging. He took the note, went up to A.G. and was back within a couple of minutes. “He will see you at 6 p.m. today”. He said.

 


Dilemma of dilemmas! The hour for which I had looked forward with so much eagerness had arrived. But the timing was embarrassing. For precisely at 6 the meeting was also scheduled to commence at which the lecture was to be delivered. Neither of these could be missed. And yet both could not be fulfilled at the same time. Was it the proverbial sattva-pariksha?
I wondered. I thought for a while and sent word to the organizers of the function that the meeting could commence a little later than the fixed hour.

 

.

 At six, I was escorted up the stairs of the house of Sri Aurobindo. It is now known as the Guest House-, which name it acquired after Sri Aurobindo shifted to another building now in the main Ashram block. As I went up the stairs and reached the threshold, there stretched in front of me a long hall with a simple table and two chairs at the center. At the farther end was a room on the threshold of which stood Sri Aurobindo. Like a moving statue- such was his impersonal bearing- he advanced towards the table as I proceeded from my end and we both met at the center. Like Rama, the Aryan model of courtesy and nobility held up by Valmiki, Sri Aurobindo spoke first, purva-bhashi. I carried with me a lemon fruit as a humble expression of my esteem for him and after he sat down, I placed it on the table in his front and said: sudinam asid adya (a happy day today)”.

 

 

An extract  from ‘My First Meeting with Sri Aurobind’, Service Letter, September 1997, Edited and Published by Sraddhalu Ranade, for Diptri Trust, Sri Aurobindo Ashram, Pondicherry, 605002

 

நன்றி : அரவிந்த ஆசிரமம், தீப்தி ட்ரஸ்ட்

****

 

 

சோமபான ரஹசியங்கள் (Post No.3962)

Research Article Written by London Swaminathan

 

Date: 1 June 2017

 

Time uploaded in London- 22-10

 

Post No. 3962

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

சோம லதா என்று அழைக்கப்படும் அதிசயமான அற்புதமான குளிகை பற்றி ரிக் வேதம், யஜூர் வேதம்,அதர்வண வேதம் ஆகிய மூன்றிலும் பல வியப்பான விஷயங்கள் உள்ளன. மூன்று ஆங்கிலக் கட்டுரைகளில் நிறைய விஷயங்களைத் தந்துள்ளேன். இங்கே சுருக்கமாக சில விஷயங்களைத் தருவன்.

 

சோம பானம் என்பது ஒரு போதை தரும் பானம் என்றும் இது ஒரு வகைக் காளான் அல்லது கள்ளிச்செடி போன்ற தோற்றமுள்ள ஒரு செடி என்றும் அந்தக்காலத்தில் வெள்ளைக்காரர்கள் புத்தகம் எழுதினர்.

 

நம்ம ஊர்க்கார்களுக்கு ஆட்சியில் இருக்கும் வெள்ளைகளை எதிர்க்கும் துணிவும் இல்லை; ஆங்கிலத்தில் எழுதும் அறிவும் இல்லை; மூன்று வேதங்களை ஆராய்ச்சி கோணத்தில் படித்தவர்களும் இல்லை. ஆங்கிலத்தில் எழுதும் வல்லமை படைத்தவர்களோ ஜால்ரா கேஸுகள்!

நல்ல சிந்தனை படைத்தவர்களுக்கு மனதில் சில கேள்விகள் எழும்.

1.உண்மையில் வெள்ளையன் சொன்னது போல போதை தரும் தாவரமானால் அதை ஆப்கனிஸ்தான் முஸ்லீம்கள் கஞ்சா பயிரிட்டு உலகம் முழுதும் ஏற்றுமதி செய்து பில்லியன் கணக்கில் (நூறு கோடி) சம்பாதிப்பது போல அவர்களும் சம்பாதித்திருப்பர். முதலில் பேடன்ட் (Patent) வாங்கி இருப்பர்.

அவர்கள் அப்படிச் செய்யாததிலிருந்தே இந்தத் தாவரம் என்ன என்று தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது. இன்று தெரிந்தால் கூட அவர்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம்.

 

2.மாதா என்பது மதர் (mother) என்றும் பிராதா என்பது பிரதர் (brother) என்றும் ஹோரா என்பது ஹவர் (hour) என்பதும் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆரியர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தனர் என்று வில்லியம் ஜோன்ஸ் (William Jones) முதலியோர் சொன்னவுடன் எல்லா அரை வேக்காடுகளும் ஆமாம் என்றன. ஆனால் வேதத்தில் கூறப்படும் நூற்றுக் கணக்கான வழக்கங்களும் சொற்களும் ஏன் ஐ ரோப்பாவில் இல்லை என்று கேட்டால் பேந்தப் பேந்த முழித்து அரைகுறை பதில்களை வெள்ளையர் தந்தனர்

முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் செய்த அஸ்வமேத யாகமோ, பெஉநற்கிள்ளி செய்த ராஜசூய யாகமோ, கரிகாற் சோழன் செய்த பருந்துவடிவ யாக குண்டமோ புற நானூற்றில் கூட இருக்கிறதே ஏன் வெளி நாட்டில் இல்லை. ஜாதி முறை பற்றி சங்க இலக்கியம் முழுதும் இருக்கிறதே இது ஏன் வெளிநாட்டில் இல்லை, சுயம்வரம் என்பது ராமயண மஹாபாரதம் ஆகியவற்றில்  கூட இருக்கிறதே, ஏன் வெளி நாட்டில் இல்லை என்று நம்மவர்.கேட்கவில்லை. உண்மையில் வேத கால இந்துக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று காலாசாரத்தைப் பரப்பினர், அவர்கள் வெளி நாட்டிலிருந்து வரவில்லை என்பதே உண்மை

 

3.இரானில் சொராஸ்தர்  (Zoroaster) கூட அவர்களது வேதப் புத்தகத்தில் (Zend Avesta) சோம லதையைப் புகழ்ந்து பேசியுள்ளாரே, அதில் அவர் 4 முக்கிய விஷயங்களைச் சொல்லி இருக்கிறாரே. கங்கைச் சமவெளி முதல் ஈரான் வரை பல்லாயிரக் கணக்கான சதுர மைல் பரப்பில் மூவாயிரமாண்டுகளுக்கும் மேலாக சோம லதை இருக்கிறதே! ஏன் ஐரோப்பாவில் ஒரு வரி கூட இல்லை? ஆரியர்கள் அங்கிருந்து அல்லது மத்திய ஆசியவிலிருந்து வந்தால் அங்கும் இது பற்றிப் பேச்சு இருக்குமே? மேலும் சோம ரசம் ஆயுளைக் கூட்டும், குழந்தை பெற உதவும், சக்தியைக் கூட்டும், நோய்களை விரட்டும் என்று சொராஸ்தர் சொல்கிறாரே. மூன்று வேதங்களும் இதைச் செப்புகின்றனவே. இது போதை மருந்தாக இருந்தால் இப்படிப் பேசியிருப்பரா?

 

4.ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோமபானம் புகழ் பாடுகிறதே. இதை 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சரிப்பு மாறாமல் பாடி வருகின்றனரே. உலகில் எவனாவது இப்படி போதை மருந்து புகழ்ந்து பாடுவானா அப்படி போதை மருந்தைப் றா போற்றி இருந்தால் அந்த இனமே அடியோடு அழிந்திருக்குமே.ஆனால் வேத கால இந்து மதமோ சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, சீன, கிரேக்க நாகரீகங்களை மியூசியத்துக்கு அனுப்பிவிட்டு இன்றும் உயிர்த்துடி ப்புடன் இருக்கிறதே இது எப்படி முடியும்?

5.சோம யாகம்செய்ததால் மனோசுத்தம் ஏற்பட்டதாகத் தமிழ் கல்வெட்டு கூ றுகிறதே. எங்கள் லண்டன் மாநகரில் டிரக் DRUG – போதைப் பொருள் விஷயத்தால் வாரத்துக்கு ஒரு கொலை நடக்கிறதே; உலகம் முழுதும் போதைப் பொருள் சாப்பிட்டவர்கள்

ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்வர் என்பதை மெக்ஸிகோ, பிரேஸில், லண்டன் வன்செயல்கள் காட்டுகின்றனவே. ஆனால் வேதத்திலோ இதிஹாசத்திலோ இப்படி போதை தொடர்பான வன்முறைகளும் இல்லை; மேலும் பாராட்டுரைகள் அல்லவா இருக்கின்றன?

 

  1. சோமயாகம் பற்றிய வியப்பான விஷயங்களுக்கு விளக்கம் கிடைக்காமல் வெளி நாட்டினர் திணறி, தத்துப் பித்து என்று உளறுகின்றனரே. 12 ஆண்டுகளுக்கு சோம யாகம் நடந்ததாக யஜூர் வேத தைத்திரீய சம்ஹிதை சொல்கிரதே; அதே வேதம் ஆயிரம் ஆண்டும் சோம யாஹம் பற்றிப் பேசுகிறதே; உலகில் எவனாவது யாக குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு 12 ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டுவரை போதை மருது சாப்பிட்டானா? ஆகவே இதுவும் சோம லதை என்பது ஒரு அரிய குளிகை, போதை மருந்து அல்ல என்பதைக் காட்டுகிறது அல்லவா?
  2. சோமலதையைக் கழுகு கொண்டு வந்ததாகச் சொல்கிறதே. இதற்கு விளக்கம் சொல்ல முடியாமல் உளறுகின்றனரே. ஏன்?

  1. சோமலதை என்பதை விலைக்கு வாங்கும் சடங்கு விநோதமாக இருக்கிறதே. அதாவது சோமலதையை மலையில் இருந்து எடுத்து வருபவனுக்கு ஒரு கன்றுக்குட்டியைக் கொடுத்துவிட்டு அதை அவனிடமிருந்து பிடுங்கிக் கொள்ளும் மந்திரம் உள்ளதே. எந்த வியாபாரியாவது ஒரு முறை இப்படி அடிபட்டவுடன் மீண்டும் அதே ஆளுக்கு சோமலதை விற்பா னா?. அவன் தனது சஹ வியாபாரிகளிடமும் சொல்லி சோம லதையை விற்காமல் அல்லவா செய்திருப்பான். இந்த வழக்கமும் வேத மந்திரம் மறை பொருளாகச் சொல்ல வந்ததது வேறு என்பது தெரியாமல் உளறுகின்றீரே. உலகில் இப்படி யாராவது போதைப் பொருள் விற்பனை செய்தது உண்டா?

9.சோமலதையை ‘அரசன்’ என்றும் ‘விருந்தாளி’ என்றும் வேத மந்திரம் சொல்கிறதே; விலைக்கு வாங்கிய சோம லதையை ஒரு வண்டியில் வைத்து அதை ராஜ உபசாரத்துடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வேத மந்திரங்கள் உள்ளதே. உலகில் எவனாவது போதை மருந்தையோ, கஞ்சா, அபினியையோ இப்படி ஊர்வலம் விட்டு ராஜ உபசாரம் செய்தானா? அப்படிச் செய்திருந்தால் முதலில் அந்த இனத்தைச் சேர்ந்த பெண்களே அவர்களை ஓட ஓட விரட்டி இருப்பார்களே.

  1. சோம யாகம் செய்தோர் சோமரசத்தை மந்திரம் சொல்லிப் பிழிந்தெடுத்து யாகத் தீயில் கடவுளுக்கும் அர்ப்பணம் செய்துவிட்டுக் குடித்ததாக தம் சொல்கிறதே. எவனாவது போதை பொருளைத் தீயில் போட்டு “வீண்” அடிப்பானா? உண்மையில் போதைப் பொருளானால் அவர்களுக்குள் அடிதடி அல்லவா ஏற்பட்டிருக்கும்? மேலும் ஒவ்வொரு கோப்பைக்கும் ஒரு பெயர் கொடுத்து அதை யாகத்தில் பயன்படுத்தினரே. இதெல்லாம் இது போதைப் பொருள் அல்ல; ஒரு அபூர்வ குளிகை என்பதைக் காட்டவில்லையா?

சமீப காலம் வரை சோம யாகம் நடந்தது. ஆனால் உண்மையில் சோமலதைக் கிடக்கததால் மாற்றுப் பொருள் பயன்படுத்தப்பட்டது. அந்த மாற்றுப் பொருள் கூட போதை மருத்து இல்லையே.

 

அப்படியானால் உண்மை என்ன?

வேத கால இந்துக்கள் ‘மண்ணின் மைந்தர்கள்’ (Sons of the soil). அதனால்தான் வேத கலாசாரம் பரவிய ஈரான் வரை இது பரவியது.

 

மேலும் சோமபானம் சக்தி, ஆயுள், இன விருத்தி, நோய் நீக்கம் ஆகியவற்றைத் தந்த அபூர்வ குளிகையாகும்

இது மூஜாவத் என்ற மலையில் இருந்து கிடைத்தது.

நீண்டகாலத்துக்கு முன்னரே இது அழிந்துவிட்டது. வேதகாலத்திலும் கூட இதைக் கஷ்டப்பட்டே பெற்றனர்.

 

என்றாவது ஒரு நாள் சோம லதையைக் கண்டுபிடிப்போம்; அது வரை ரிக்வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தைப் பாடி வருவோம்!

 

Confusion about Vedic Soma Plant | Tamil and Vedas

Confusion about Vedic Soma Plant

5 May 2013 – Confusion about Vedic Soma Plant Soma was the famous plant used by the Vedic priests to make juice for the fire sacrifice. The whole of Ninth …

 

Madurai Temple Tunnel and Soma Plant of Vedas … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/madurai-temple-tunnel-and-soma-pla…

23 Apr 2017 – Madurai Temple Tunnel and Soma Plant of Vedas (Post No. 3844) … Soma Plant. I read your “Confusion about Vedic Soma Plant” article.

 

MYSTERY AND MIRACLE OF SOMA PLANT, SOMA RASA! (Post No …

https://tamilandvedas.com/…/mystery-and-miracle-of-soma-plant-soma-rasa-post-no-3…

1 day ago – Anjaneya appears in Sacrificial Fire Research Article Written by London Swaminathan Date: 31 May 2017 Time uploaded in London- 18-13 …

 

–SUBHAM–