வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய பிராமணம் (Post No.4046)

Compiled by London Swaminathan
Date: 2 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4046

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்பன அவை. அதில் நேற்று சுவையான சில கதைகளைத்  தந்தேன். இன்று மேலும் சில தகவல்களைக் காண்போம்

 

தாண்ட்ய மஹா  பிராமணம் தரும் தகவல்:-

 

உயிரினங்களைப் படைத்த பிரஜாபதி, தேவர்களின் நன்மைக்காக  தன்னையே, யாகத்தில் ஆஹுதியாக அளித்தார். முன்னர் மரணம் அடைந்து கொண்டிருந்த தேவர்கள், இதன் காரணமாக இப்பொழுது தெய்வீக நிலையைப் பெற்றனர் (தேவர்களாயினர்)

 

இது பற்றி ஆபஸ்தம்பர் (2-7-16) தரும் வியக்கியானம் சுவையானது:-

முன் காலத்தில் இவ்வுலகத்தில் தேவர்களும் மனிதர்களும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். பின்னர் யாக யக்ஞங்கள் செய்தவர்கள், அதன் பலனாக, தேவ லோகம் சென்றனர். மனிதர்களோவெனில் உலகிலேயே தங்க நேரிட்டது தேவர்களைப் போல யாக யக்ஞங்களைச் செய்பவர்கள் மரணத்துக்குப் பின்னர், தேவ லோகத்தில் பிரம்மாவுடன் வசிப்பர்..

தேவ லோகவாசிகள் பற்றி இந்துமத புராணங்கள் தரும் தகவல் வேறு எங்கும் இல்லை. ஆக,  நாமே இத்துறையில் மிகவும் முன்னேறி உள்ளோம்; எதிர்காலத்தில் வெளி கிரஹ வாசிகளைக் கண்டுபிடிக்கையில் நாம் அன்றே சொன்னோம் என்று சொல்லலாம்:-

1.தேவலோக வாசிகள் கண் இமைக்காது

2.கால்கள் நிலத்தில் பதியாது

3.அவர்கள் போட்டிருக்கும் மாலைகள் வாடாது

4.அவர்கள் இன்பமாக இருப்பர்; ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது

5.அவர்கள் மானசீகமாக எங்கும் பயணம் செய்யலாம்.

6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே

 

ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான்  இங்கு வந்து, பூமியில் உயிரினங்களை உண்டாக்கினர் என்பர்

தசரதர் போன்றோர் இறந்த பின்னரும் பூமிக்கு வந்து காட்சி தந்தனர்.  அர்ஜுனன் போன்றோர் இந்திர லோகம் வரை சென்று வந்ததை மஹாபாரதம் கூறுகிறது.

 

ஐதரேய பிராமணக் கதை

 

வேதங்களுக்கு உரை எழுதிய சாயனர் சொல்லும் கதை இது. பழங்கால ரிஷிகளில் ஒருவருக்கு பல மனைவியர் உண்டு. ஒரு மனைவியின் பெயர் இதரா. அவருக்கு மஹிதாச ஐதரேய என்ற ஒரு மகன் இருந்தான். ஆனால் அவர் அந்த மகனைத் தவிர மற்ற மனைவியர் மூலம் பிறந்த எல்லோர் இடத்திலும் அன்பு காட்டினார். அவனைத் தவிர மற்ற எல்லோரையும் மடியில் உட்கார வைத்துக் கொஞ்சுவார். மஹிதாசனுடைய அம்மாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தன்னுடைய குல தெய்வத்திடம் வேண்டினாள்.

மஹிதாசன் எல்லோரையும் விட அறிவில் சிறந்தவனாக இருந்ததால் எல்லோர் முன்னிலையிலும் தேவி தோன்றி அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். ஐதரேய பிராமணம் அவர் முன்னிலையில் தோன்றியது –ஆரண்யகமும் அவர் முன்னிலையில் தோன்றியது

 

பிராமண நூலும் ஆரண்யக நூலும் அவர் முன்னிலையில் “தோன்றியது” என்பதன் பொருள், அவர் அருள் பெற்றபோது பொங்கி எழுந்த விஷயங்களே இவ்விரு நூல்களும் என்பதாகும்.

 

–Subham–

More Stories from the Brahmana Literature (Post No.4045)

Compiled by London Swaminathan
Date: 2 July 2017
Time uploaded in London-15-05
Post No. 4045

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Extra Terrestrials in Tandya Maha Brahmana

The Lord of creatures offered himself a sacrifice for the benefit of the Devas. The Devas were mortals who thus became divine or glorified.

Apastamba (2-7-16) comments on this are interesting:

“Formerly men and gods lived together in this world. Then the gods in reward of their sacrifices went to heaven, but men were left behind. Those men who perform sacrifices in the same manner as the gods did, dwell (after death) with the gods and Brahma in heaven.

“Whatever sins we have committed by day or night, you are the annulment thereof. Whatever sins we have committed sleeping or awake you are the annulment thereof. Whatever sins we have committed knowing or unknown you are the annulment thereof. You are the annulment of sin.

xxxx

Why Asvamedha is performed?

Prajapati, having created all living beings, through affection entered within them. But afterwards he could not get out of them. He said, “whoever will extricate me from this confinement will become wealthy. The Devas performed an Asvamedha and thereby extricated him; thus they became wealthy. Whoever performs an Asvamedha attains profusion of wealth by extricating Prajapati—Taittiriya Brahmana

xxx

Why a cow immediately on calving should not be milked?

Certain descendants of Angiras, the expounder of the fourth Veda, had a lean white milch cow, which for want of grass lived on the pressed stalks of Soma vine. The sight of this grieved the owners much, and they performed a sacrifice which brought on plenteous rain, every drop of which grew up into nutritious vegetables. The Pitris (manes) besmeared them with poison when the cow was affected, and appeared before the sacrificers. They enquired who had caused the evil, whereupon the pitris (departed souls) said, we co -sharers of the ceremony, have caused this.

The sacrificers then gave a share of the sacrifice to the Pitris who benignantly removed the poison. When the cow was fattened by profusion of fodder, the calf was let loose  and requested by  the sacrificers  to drink a little milk and leave the rest for the sacrifice. The calf refused to do so unless they would engage to milk the cow for the first ten days after calving, and to allow the calf to suck for a period equal to one fifth of the day or night after morning and evening milking. The calf which drinks for a longer period is cursed by Rudra.

My comments:

Even a cursory reading will tell us that the story is symbolic.  Literally it may look like a meaningless story. Moreover, stories like this must be read in their contexts.

–subham–

 

 

செரிங்கட்டி விதிகள்! – 2 (Post No.4044)

 

Written by S NAGARAJAN

 

Date: 2 July 2017

 

Time uploaded in London:-  5-40 am

 

 

Post No.4044

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

16-6-2017 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

செரிங்கட்டி விதிகள்! – 2

ச.நாகராஜன்  

 

 

“நல்ல காடுகளே நமக்கு அறிவை வழங்கியுள்ளன. காடுகளே நம்மை மனிதர்களாக ஆக்கியுள்ளன. இங்கிருந்து தான் நாம் வந்திருக்கிறோம். ஒருவேளை, அதனால் தானோ என்னவோ நாம் செரிங்கட்டி என்னும் இந்த இடத்தின் மீது ஒரு அரிய பாசப்பிணைப்பைக் கொண்டுள்ளோம். இது நமது இளமையின் தேசம் – பாய்ட் நார்டன்

 

இரண்டாவது உலக் மகா யுத்தத்தில் ராணுவத்தில் பணியாற்றிய வால்டர் கனான் (Walter Cannon) என்ற விஞ்ஞானியே “எதிர்த்துப் போராடு அல்லது இடத்தை விட்டு ஓடு” என்ற பொருள் படும் “Fight or Flight” என்ற பொருள் பொதிந்த வாசகத்தை முதலில் உலகுக்கு அளித்தவர்.

 

போரில் காயம் பட்ட வீரர்கள் ஏன் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இறக்கின்றனர் என்பதை ஆராயப் புகுந்தார் அவர்.

காடுகளில் கொல்லப்படும் மிருகங்களில் காணப்படும் அதே விதமான அறிகுறிகளான அதி வேக நாடித்துடிப்பு, பிதுங்கிய விழிகள், உடல் முழுதும் வேர்வை வெள்ளம் ஆகியவற்றை இந்த ராணுவ வீரர்களிடம் அவர் கண்டார்.  நாடித்துடிப்பிற்குப் பதிலாக அவர்களின் இரத்த அழுத்தத்தை அவர் அளக்க ஆரம்பித்தார். அது மிக மிகக் குறைவாக இருந்தது. உடனே சோடியம் பைகார்பனேட்டை அவர்களுக்குத் தர, குறிப்பிடத் தகுந்த நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

 

இந்த ஆய்வுகளால் மனித உடலின் அங்கங்கள் இரட்டை விதமான நரம்பு மண்டலக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைக் கண்டார்.

 

ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் இப்படிப்பட்ட கட்டுப்பாடு இயற்கையின் அனைத்து இடங்களிலும் உள்ளது.

 

இயற்கையின் கட்டுப்பாடு என்பது சுற்றுப்புறச் சூழல் அமைப்பு, அதில் உயிர் வாழும் உயிரினங்கள் என்ற அனைத்து அம்சங்களிலும் எதிரொலிக்கிறது.

 

இந்த அடிப்படையை வைத்தே விஞ்ஞானிகள் செரிங்கட்டி காடுகளில் தங்கள் ஆய்வைச் செய்து ஆறு விதிகளைக் கண்டனர்.

முதல் மூன்று விதிகளைப் பார்த்தோம். இனி அடுத்த மூன்று விதிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

சிறிய மிருகங்களை பெரிய மிருகங்கள் அடித்துத் தின்பது என்பது அதன் பெரிய உடலாலும் சக்தியாலும் முடிகிறது. 1980லிருந்து 1987 முடிய சிங்கங்களும் நரி முதலிய மிருகங்களும் கொல்லப்பட்டதாலும் கடத்தப்பட்டதாலும் செரிங்கட்டியில் சிறிய மிருக வகைகள் எண்ணிக்கையில் உயர்ந்தன. இதை இடைவிடாது ஆராய்ந்த விஞ்ஞானிகள் சிங்க்ளேர் மற்றும் அவரது சகாக்கள் புதிய விதியைக் கண்டனர்.

 

செரிங்கட்டி விதி எண் 4

 

ஒரு மிருகத்தின் உடல் அளவு அந்த மிருக வகையின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான அம்சம்.

ஒரு மிருக இனத்தின் எண்ணிக்கை குறையும் போது தானாகவே அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. மிக அதிகமாகும் போது அவற்றிற்கான உணவுக்கு வழி இல்லை என்பதால் தானாகவே எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது.

 

 

சிங்க்ளேர் ஒவ்வொரு மிருக இனத்தின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதற்கு ஒப்பீட்டு வரைபடங்கள் தயாரித்து இதைக் கண்டு பிடித்தார். ஆக செரிங்கட்டியின் விதி எண் 5 உருவானது.

 

விதி எண் 5

மிருகங்களின் எண்ணிக்கையானது அதன் அடர்த்தியைப் பொறுத்து உள்ளது.

 

உணவுக்கு ஓரிடத்தில் வழி இல்லை என்னும் போது குறிப்பிட்ட மிருகங்களின் கூட்டம் இடம் விட்டு இடம் மாறுகிறது. விஞ்ஞானி சிங்க்ளேர் இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும் நான்கு லட்சம் ‘தாம்ஸன் மான்’களும் இப்படி ‘மைக்ரேஷன்’ எனப்படும் இடம் விட்டு இடம் பெயர்தலைக் கண்டு வியந்தார்.

 

ஆக செரிங்கெட்டியின் ஆறாவது விதி உருவானது.

 

 

விதி எண் 6

 

இடம் விட்டு இடம் பெயர்தலானது ஒரு மிருக வகையின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது.

டாக்டர் ஆஸ்கார் பாமன் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி 1892இல் செரிங்கட்டி காடுகளை ஆராய அதனுள் புகுந்தார்.

அன்றிலிருந்து இன்று வரை ஏராளமான சுவையான செய்திகளை செரிங்கட்டி காடுகள் மனித இனத்திற்கு தந்து வ்ருகின்றன.

அதில் இயற்கையின் இயல்பான கட்டுப்பாடு முக்கிய அம்சமாக இலங்குகிறது.

 

இந்த இயற்கை கட்டுப்பாட்டைப் பேணிக் காக்காமல் நமது செயற்கையான வழிமுறைகள் மூலம் இயற்கையைக் கெடுத்து விடக் கூடாது என்பது தான் விஞ்ஞானிகளின் ஒரே வேண்டுகொள்.

 

புவியை வெப்பமயமாக்கல், இயற்கை உயிரினங்களை பணத்திற்காக அழித்தல், கடத்துதல் போன்றவற்றை மனித இனம் விட்டு விட்டால் இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் இநதக் காடுகள் அழியாமல் வாழும்; மனித இனத்தையும் வாழ வைக்கும்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

கம்ப்யூட்டருக்கு முன்னோடியான  ‘மெகானிகல் எஞ்சினை’ உருவாக்கியவ்ர் சார்லஸ் பாபேஜ் (1792-1871) பாபேஜ் பெரிய மேதை என்பதால் லண்டனில் உள்ள இலக்கிய வட்டத்தில் பெரிதும் மதிக்கப்பட்டார். அங்கு உலகின் புகழ் பெற்ற கவிஞரான ஆல்ஃப்ரட் லார்ட் டெனிஸன் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.

தனது அருமையான கவிதையான ‘தி விஷன் ஆஃப் சின்’ (The Vision of Sin) என்ற கவிதையில்,  “ஒவ்வொரு கணமும் ஒரு மனிதன் இறக்கின்ற தருணத்தில், இன்னொரு மனிதன் பிறக்கிறான்” (Every moment dies a man, Every moment one is born) என்ற தனது கருத்தை அழகுற கவிதை நயத்துடன் உரிய சந்தத்தில் தெரிவித்திருந்தார்.

 

இதைப் படித்தார் கணித மேதையான சார்லஸ் பாபேஜ். கவிதையானாலும் கணிதத்தில் கோட்டை விடலாமா? நேரடியாக அவரிடம் வந்து அந்த வரியை மாற்றச் சொன்னார்.

 

“ஒவ்வொரு கணமும் ஒரு மனிதன் இறக்கின்ற தருணத்தில் ஒன்றும் ஒன்றின் கீழ் ஆறும் என்ற விகிதத்தில் மனிதன் தோன்றுகிறான்” (Every moment there dies a man, And one and a sixth is born) என்பதே சரியான உண்மை என்பது அவரது வாதம்.

 

 

ஆனால் இவ்வளவு துல்லியமாக மாற்றச் சொன்னாலும் தனது வரியிலும் கூட ஒரு கணிதப் பிழை இருப்பதையும் அவரே ஒப்புக் கொண்டார். அதாவது ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும் 1.167 (என்ற விகிதத்தில் இன்னொரு) மனிதன் பிறக்கிறான் என்பதே துல்லியமான உணமையாகும்!

“ஆனால் கவிதையில் யாப்பிலக்கணம் சந்தத்திற்கான விதியைத் தந்திருக்கிறதே! அதையும் நாம் அனுசரிக்கத் தானே வேண்டும்” என்று ஒரே போடாகப் போட்டார்.

 

அனைவரும் டென்னிஸனுக்கும் சார்லஸ் பாபேஜுக்கும் நடந்த இந்தக்  கவிதை கருத்துப் போரை வெகுவாக ரசித்துப் பாராட்டினர்!

 

மேதைகள் மேதைகளே!

*****

 

 

 

 

பரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் திருத்துவது எப்படி? கதை (Post No.4043)

Compiled by London Swaminathan
Date: 1 July 2017
Time uploaded in London-20-44
Post No. 4043

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேதகால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு: 1.சம்ஹிதை/துதிகள் 2.பிராமணங்கள் 3.ஆரண்யகங்கள் 4.உபநிஷத்துகள்

 

இதில் பிராமணங்களில் நிறைய விநோதக் கதைகளும் விளக்கங்களும் இருக்கின்றன; பல விஷயங்கள் புரியவே புரியாது; ஏனெனில் அடையாளபூர்வ, சங்கேத மொழிகளில் விஷயத்தைச் சொல்லுவர். சில கதைகளை இங்கே காண்போம்.

தைத்ரீய பிராமணத்தில் உள்ள கதை

பரத்வாஜர் வேதம் கற்கும் பிரம்மசாரியாக மூன்று முறை

பிறவி எடுத்து பயின்றார். மிகவும் வயதாகி தளர்ந்துபோய் படுக்கையில் கிடந்தார். இந்திரன் அவர் முன்னே தோன்றினான்.

பரத்வாஜரே, உமக்கு நான்காவது முறை வாழ வரம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

நான் மீண்டும் பிரம்மசாரியாக குருகுலத்தில் சேருவேன் என்றார் பரத்வாஜர்.

உடனே இந்திரன் மூன்று மலைகளைக் காட்டினான். அவை ஒவ்வொன்றிலும் ஒரு கை மண் அளவு எடுத்தான்.

பரத்வாஜரே, இவைதான் (நீர் படித்த) வேதங்கள்; அவை அளவற்றவை. நீர் மூன்று ஜன்மங்களில் படித்தது மூன்று கை மண் அளவே. ஆகையால் நீர் படிக்காதவை இன்னும் இருக்கின்றன. வாருங்கள்; பயிலுங்கள் என்றான். இதுதான் பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கும் அறிவு. இதை அறிந்தவன் மூன்று வேதங்களையும் அறிந்தவன் வெல்லக்கூடிய அளவுள்ள பெரிய உலகை வெல்லுவான் என்றான்.

 

என் கருத்து

கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்று சரஸ்வதி தேவியே சொன்னதாக அவ்வையார் பாடி இருக்கிறார். அதுவும் கூட கௌஷிதகி பிராமணத்தில் இருந்து வந்திருக்கலாம்.

பிரதர்தன என்ற மன்னன் துருக்கி பகுதியை ஆண்டதை கிமு 1400 ஆண்டு துருக்கி நாட்டுக் கல்வெட்டுகளால் அறிகிறோம்; விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் பிரதர்தன என்ற பெயர் உள்ளது. ஆகவே ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தனர் என்ற கொள்கை எல்லாம் தவிடு பொடியாகின்றன. எகிப்திலுள்ள தசரத கடிதங்கள் முதலியனவும் கி.மு 1500 ஆண்டு வாக்கில் இந்துக்களின் பெயர்கள் இருந்ததைக் காட்டுகின்றன. ஈரானில் இந்துக்களின் பெயர்கள் இருப்பதை எல்லோரும் அறிவர். இந்த மறுக்க முடியாத தொல் பொருத் துறைச் சான்றுகளால் ஆரிய திராவிட வாதம் தவிடு பொடியகிறது. கௌஷிதகி பிராமணத்திலும் பிரதர்தன என்ற அரசன் பெயர் வருவதும், காசி போன்ற தேசங்களில் இந்த மன்னர் பெயர்கள் வழங்கியதும் கிமு 1500க்கு முன்னரே இந்தப் பெயர்கள் கங்கைச் சமவெளி முதல் துருக்கி-சிரியா எல்லை வரை பரவி இருந்ததை (மிடன்னி நாகரீகம்-Mitanni Civilization)  காட்டுகிறது

 

xxx

கௌசிதகி பிராமணத்தில் உள்ள ஒரு சுவையான கதை

 

நைமிசாரண்ய ரிஷிகள் முன்னால் பிரதர்தன ராஜன் அமர்ந்தான். ஒரு

வேத சதஸில் (சபை) ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அதனால் ஏற்படும் பாவத்திலிருந்து தப்பிப்பது எப்படி?என்று அரசன் பிரதர்தனன் கேட்டான். எல்லா புரோகிதர்களும் மௌனமாகிவிட்டனர். அவர்களுடைய தலைவர், நாம் நம்முடைய தந்தையர்க்கெல்லாம்  ஆசிரியரான ஜாதுகர்ன்யாவிடம் கேட்போம் என்றர்.

அரசனும் கேட்டான்:- ஒரு தவறு நடந்து விட்டது என்றால் அந்த வேதப் பகுதியைத் திருப்பிச் சொல்வதால் பரிகாரம் கிடைத்துவிடுமா? அல்லது ஏதேனும் யாகம் செய்ய வேண்டுமா?

 

ஜாதுகர்ன்யா சொன்னார்:- அந்தப் பகுதியைத் திருப்பிச் சொல்ல வேண்டும்

 

புரோகிதர் தலைவர் கேட்டார்:-ஆரம்பம் முதல் இறுதிவரை எதையும் சொல்ல வேண்டுமா?

 

ஜாதுகர்ன்யா சொன்னார்:- தவறு நடந்த பகுதி வரை திருப்பிச் சொல்ல வேண்டும் அது ஒரு முழு பாடலாக இருக்கலாம்; அரைப் பாடலாக இருக்கலாம்; ஒரு வரியோ, ஒரு சொல்லோ, ஒரு எழுத்தோ– பிழை நடந்த இடம் வரை சொல்ல வேண்டும்.

உடனே கௌஷிதகி சொன்னார்:

அந்தப் பகுதியைத் திருப்பிச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை; பரிகார யாக யக்ஞங்கள் செய்ய வேண்டியதும் இல்லை; யாகம் செய்பவர் ஒரு தவற்றைத் தெரியாமல் செய்தால் அது தவறே இல்லை. தெய்வீக புருஷனான அக்னிதேவன் அதைத் திருத்தி நிறைவு செய்துவிடுவான் இதை ரிக் வேத துதியும் உறுதி செய்கிறது

–கௌஷிதகி பிராமணம் 6-11

 

எனது கருத்து:

வேதத்தில் இலக்கணப் பிழைகள் இருந்தால் அதைத் திருத்த எவருக்கும் உரிமை இல்லை என்பது வேத அறிஞர்களின் கருத்து. அங்கு தவறே, “சரி” என்று ஆகிவிடும். இதே போலத்தான் பக்தன் தவறு செய்தாலும் கடவுள் அதைப் பொருட்படுத்தார். ஆனால் பக்தனுக்கு யாரேனும் தவறிழைத்தால் கடவுளாலும் ஒன்றும் செய்ய இயலாது. அவரே பக்தனிடம் போய் மன்னிப்பு கேள் என்று அனுப்பிவிடுவார். கடவுளே கூட கொடுத்த வரத்தையோ சாபத்தையோ மாற்ற முடியாது. அதற்கு பரிகாரம் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் சொன்ன சொல்லை மாற்ற யாராலும் முடியாது.

 

இந்து மதம் சத்தியத்தின் அடிப்படையில் அமைந்தது. வேதங்கள் ‘ருதம்’, ‘சத்யம்’ என்று இதைச் சொல்லும். இதூதான் இந்து தர்மத்தின் அடிப்படை; கடவுளும் அந்த சத்தியத்துக்கும் வேதம் சொல்லும் ‘ருத’த்துக்கும் கட்டுப்பட்டவர். இந்த சொற்களும் ஆங்கிலத்தில் Tறூத், ரிதம் (Truth and Rhythm) என்று இன்றும் வழங்குகின்றன.

 

–Subham–

THREE INTERESTING STORIES FROM THE BRAHMANAS (Post No.4042)

THREE INTERESTING STORIES FROM THE BRAHMANAS (Post No.4042)

Compiled by London Swaminathan
Date: 1 July 2017
Time uploaded in London-15-59
Post No. 4042

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Vedic literature has four parts: 1.Samhita/hymns, 2.Brahmanas, 3.Aranyakas and 4.Upanishads; following are some stories taken from the Brahmanas:-

 

How Bharadvaja studied Vedas!

There is a story in the Taittiriya Brahmana (3-10-11-3) about  Bharadvaja studding the Vedas

Bharadvaja lived through three lives in the state of a religious student (brahmachari). Indra approached him when he was lying old and decrepit and said to him,

“Bharadvaja, if I give you a fourth life how will you use it?”

Bharadvaja said, I will be a Brahmachari studying the Vedas”

Indra showed him three mountain like objects, as it were unknown. From each of them he took a handful, and, calling to him, Bharadvaja!

“these are the three Vedas. The Vedas are infinite. This is what you have studied in your three lives. Now there is another thing which you have not studied. Come and learn it. This is universal science. He who knows this conquers a world as great as he would gain by the triple Vedas.

 

Tamil has a saying “What you have learnt is a handful of sand and what you have not learnt is the size of the earth” This must have come from the Bharadvaja episode, though there is verse attributed to Tamil poetess Avvaiyar. There Sarasvati, Goddess of Learning, says what she has learnt is only a handful…. etc.

 

xxx

 

Name Aitareya!

Sayana in his introduction to Aitareya Brahmana gives the reason for the name of the  Aitareya Brahmana. An ancient Rishi (seer) had among his many wives one who has coaled Itara. She had a son Mahidasa Aitareya by name. The rishi preferred the sons of other wives to Mahidasa, and went even so far as to insult him once by placing all his other children in his lap, except Mahidasa.

His mother felt very sad and prayed to her family goddess, who appeared in her celestial form in the assembly of people, placed him on a throne, and gave Mahidasa, as a token of honour, a boon which had the appearance of a Brahmana. This was given to him because he surpassed all other children in learning. The boon having been received a Brahmana, consisting of 40 sections, came through the mind of Mahidasa, and its Aranyaka was revealed in the shape of the vow of a hermit. Hence these books are named after him, Aitareya Brahmana and Aitareya Aranyaka.

 

According to Hindu scriptures, vows, curses and blessings can assume visible forms as stated in the story. But the real meaning is that Mahidasa was inspired and he poured out this Brahmana. In short divine inspiration created this Brahmana.

xxx

How to Deal with a Mistake?

The following story from the Kaushitaki Brahmana, declaring how to deal with a mistake, is not given in the Aitareya Brahmana:–

“King Pratardana sat down in the presence of the Rishis of Nimisha and asked the question,

“If the Sadasya should make known a past blunder, how would you be free from sin?”

The priests were silent. Their Brahman said, “ I do not know this, alas! Let us ask our teacher of our fathers, the elder Jatukarnya.

He asked him, “How the blunder could not become a blunder? by saying the passage again, or by an offering?

Jatukarnya said, “The passage must be said again.

The Brahman asked him again, “Should he say again the Shastra.. or whatever else it may be, from beginning to end?

Jatukarnya said, “As far as the blunder extends, so far let him say it agai., whether a verse or a half verse, a foot, a word, or a letter.

Then said Kaushitaki, “Let him not say the passage again, nor let him perform a penance offering”

“it is not a blunder”, so said Kaushitaki; for whatever blunder the Hotris commit at the sacrifice without being aware of it, all that Agni, the divine Hotri, makes whole; and this is confirmed by a verse from the Rig Veda” – Kaushitaki Brahmana 6-11

 

My Comments:

King Pratardana is in Mitanni civilization dated around 1400 BCE; the name Pratardana is in Vishnu Sahasranama as well. Since we find the King Pratardana name in Turkey inscription (1400 BCE), all the Aryan migration theory gets exploded. In fact, the Hindus from India migrated to different parts of the world including Turkey and Iran before 1500 BCE; that is why we find archaeological evidence in Turkey (Bogazkoy inscription) and Dasaratha letters in Egypt (Amarna letters).

There is another interesting point; in the Vedas, if someone finds a grammatical mistake no one should or could correct it. It is taken as a true statement. Such is the sacredness and infallibility attributed to the Vedas.

 

It is same in the field of religion. If a wrong is done to a devotee, not even god can interfere in it. God advise the wrong doer to fall at the feet of his devotee. The underlying thread in all these stories is “Truth”, in Sanskrit Rtam; English words Truth and Rhythm are derived from Sanskrit. Hinduism believes in Order and Truth. Not even God can go back in his words whether it is a curse or boon. He can only prescribe an exit strategy but could not go back on his words.Hindu Gods must obey the Vedic order i.e. Rtam and Satyam That is how all the Asura and Rakshasa Hindus got boons and curses form the Gods. This explodes another myth concocted by the foreigners that Asuras and Rakshasas are Non Aryans. They are part and parcel of Hindu society. That is why they prayed to Hindu Gods and got all the boons. The deeper you study the Vedas, the more you know the foreigners’ conspiracy against Hinduism.

One must read a Hindu scripture  in its original; foreigners take one or two passages and misinterpreted it according to their whims and fancies and mislead us.

 

-Subham–

 

செரிங்கட்டி விதிகள்! – 1 (Post No.4041)

Written by S NAGARAJAN

 

Date: 1 July 2017

 

Time uploaded in London:-  6-11 am

 

 

Post No.4041

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

பாக்யா 2-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

செரிங்கட்டி விதிகள்! – 1

ச.நாகராஜன்

“பாலூட்டி இனங்களின் வகைகளிலும் எண்ணிக்கையிலும் ஆப்பிரிக்கா குறிப்பிடத்தகுந்த இடத்தை வகிக்கிறது… ஆனால் இங்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது? – ஜூலியன் ஹக்ஸ்லி

 

 

வாழ்க்கை எப்படி இயங்குகிறது? இயற்கையானது எப்படி சரியான எண்ணிக்கையில் சிங்கங்களையும் வரிக்குதிரைகளையும் இதர இனங்களையும் ஆப்பிரிக்க காடுகளில் படைக்கிறது? மீன்கள் சரியான எண்ணிக்கையில் எப்படி உலகின் பெருங்கடல்களில் உருவாகின்றன?

இவை அனைத்தும் ஏதோ தற்செயலாகப் படைக்கப்பட்டு உயிர் வாழ்வன அல்ல. இயற்கை எல்லாவற்றிற்குமே சரியான ஒரு அளவுகோலை வைத்துக் கொண்டே இயங்குகிறது; புவியை இயக்குகிறது.

இதை ஆராயப் புகுந்தார் பிரபல விஞ்ஞானி சீன் கரோல். (SEAN B.CARROL) தான் கண்டுபிடித்தவற்றை அழகுற ‘தி செரிங்கட்டி விதிகள் (THE SERENGETI RULES) என்ற நூலில் விளக்கியுள்ளார்.

அணுத்துகள் முதல் பெரிய சுற்றுப்புறச் சூழல் அமைப்பு வரை அனைத்துமே ஒரு தர்க்கரீதியான வகையில் இயற்கையால் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை!

இந்த இயற்கை மர்மத்தை விடுவிக்கவும் புரிந்து கொள்ளவும் ஏராளமான விஞ்ஞானிகள் தங்கள் ஆயுள் காலம் முழுமையும் அர்ப்பணித்து நமது சுற்றுப்புறச் சூழலை ஆராய்ந்து வந்துள்ளனர்.இப்படிப்பட்ட விஞ்ஞானிகளின் சரிதத்தை தொகுத்திருக்கிறார் சீன் கரோல்.

இயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராயத் தகுந்த இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான்! சுமார் 12000 சதுர மைல்கரிள் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.

உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.

1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு வந்து சேர்ந்த பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அசந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அசந்து போனது!

கொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.

செரிங்கட்டி என்றால் ஆப்பிரிக்க மொழியான மாசாய் மொழியில் முடிவற்ற சமவெளி என்று பொருள். ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களுள் இதுவும் ஒன்று. உலகின் பத்து இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் இது ஒன்று. இங்கு தான் அதிகமாக சிங்கங்கள் உலவுகின்றன.

70 அரிய வகை பிராணிகளும் 500 பறவைகளின் அரிய இனமும் செரிங்கட்டியில் உள்ளன.

செரிங்கட்டியை நன்கு ஆராய்ந்த விஞ்ஞானிகள் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

முதல் இரண்டு விதிகள் ஜனத்தொகை பற்றியது. இந்த மிருகம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது, அது கூட இருக்கிறது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள். இயற்கைக்கு எதையும் நன்றாகவே சம அளவில் இருக்க வைக்கும் அபூர்வ சக்தி உள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.

முதல் விதி : எல்லா உயிரினங்களும் சம அளவில் படைக்கப்ப்டவில்லை.

எவ்வளவு தேவையோ அந்த அளவில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் உயிரினங்களை இயற்கை படைத்துள்ளது.

இரண்டாம் விதி: சில முக்கியமான உயிரினங்கள் தொடர்கூட்ட அளவில் மற்றவற்றின் மீது மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

அதாவது குறிப்பிட்ட சில முக்கிய உயிரினங்களை மட்டும் கண்காணித்தால் போதும். அது ஏற்படுத்தும் மறைமுக விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.

மூன்றாவது விதி: சில உயிரினங்கள் பொதுவான ஆதார வளங்களுக்காகப் போட்டி போடுகின்றன.

ஒவ்வொரு உயிரினமும் தமக்கென ஒரு இடத்தையும் ஆதார வளத்தையும் கொண்டுள்ளது. உயிரினங்களுக்கு இடையே உள்ள போட்டியானது அதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது. அந்த இனங்களின் பல்வேறு வகைகளையும் கட்டுப்படுத்துகிறது.

ஆக இயற்கை தனக்கென ஒரு கட்டுப்பாட்டை நியமித்துக் கொண்டு அதை யாருமோ அல்லது எதுவுமோ மீறாத வகையில் காத்தும் வருகிறது.

மற்ற விதிகளை அடுத்துப் பார்ப்போம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அமெரிக்க விஞ்ஞானியான தாமஸ் மிட்ஜ்லி (Thomas Midgely)  சென்ற இருபதாம் நூற்றாண்டில் தான் ஒருவராகவே அபாயகரமான இரண்டு கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர். ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியில் அவர் கெமிகல் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். கார்களின் எஞ்சின் அடிக்கடி ஸ்டார்ட் ஆகாமல் திணறவே அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வேலை அவருக்கு வந்தது. டெட்ரா எதில் லெட்-ஐ பெட்ரோலுடன் கலந்தால் எஞ்சின் சரியாக இயங்கும் என்பதை அவர் கண்டுபிடிக்கவே கம்பெனிக்கு ஏக லாபம். ஆனால் அந்த காரீயம் விஷம் என்பதால் அவர் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுப்புறச் சூழலின் கேட்டிற்கும் அந்தக் கண்டுபிடிப்பே காரணமாக அமைந்தது.

கம்பெனியின் துணைத் தலைவராக ஆன அவருக்கு அடுத்த ஒரு சவால் எழுந்தது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் ரெப்ரிஜரேட்டரில் விஷமுள்ள வாயுக்கள் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. அது கசியும் போது பலர் இறக்க நேர்ந்தது. அமெரிக்காவில் உள்ள ஓஹையோவில் க்ளீவ்லேண்ட் நகரில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் ரெப்ரிஜரேட்டரில் கசிவு ஏற்படவே நூற்றுக்கு  மேற்பட்டோர் இறந்தனர்.

விபத்து ஏற்பட்ட மூன்றே நாட்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வைக் கண்டார் மிட்ஜ்லி. அவர் கண்டுபிடித்த வாயு தான் ஃபிரியான். ரெப்ரிஜரேட்டர்களில் ஃபிரியான் வாயு பயன்பாட்டிற்கு வந்தது.

விஞ்ஞானிகளுக்கு முன்னால் தானே அதை அவர் சுவாசித்துக் காண்பித்தார். அத்தோடு மட்டுமின்றி அது எரியாது என்பதை விளக்க எரியும் மெழுகுவர்த்தி மீது அதை ஊதிக் காட்டினார்

அவ்வளவு தான், உலக கம்பெனிகள் அனைத்தும் ஃப்ரியான் வாயுவுக்குத் தாவினர். என்றாலும் கூட சமீபத்தில் தான் ஃப்ரியான் வாயுவும் கூட ஓஜோன் படலத்திற்கு தீங்கு விளைவிப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இது மட்டுமல்ல, இன்னும் 117 அபூர்வ கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்துள்ளார். ஆனால் அவரது கண்டுபிடிப்புகளில் ஒன்றால் அவர் போலியோ நோய்க்கு இலக்காகி கால்கள் விளங்காமல் படுத்த படுக்கையானார். அங்கும் சும்மா இருக்கவில்லை அவர்! தன்னைப் படுக்கையிலிருந்து சுலபமாக எழ வைக்க தன்னைத் தூக்கும் ஒரு கருவியைக் கண்டு பிடித்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு நாள் அந்தக் கருவியில் இருந்த இரண்டு கயிறுகளில் சிக்கி அவர் இறந்தார்.

அபூர்வமான விஞ்ஞானிகளுள் ஒருவர் தாமஸ் மிட்ஜ்லி!

***