
Written by S.NAGARAJAN
Date: 23 September 2017
Time uploaded in London- 4-24 am
Post No. 4236
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
by ச.நாகராஜன்
3
அடுத்தவன்
அடுக்கிறவன்
நான் உன்னைச் சேர்ந்தவனாகிறேன் என்று கூறிச் சரணமடைகிறவன்
ஆகிய இம்மூவரையும் தனக்குக் கஷ்டம் நேரிட்ட காலத்திலும் கூடக் கைவிடக் கூடாது.
4
வரம் பெறுதல்
அரசனாதல் *
மகனைப் பெறுதல்
கஷ்டப்பட்டு எதிரியிடமிருந்து விடுபடுதல்
இந்த நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை.
(* அரசன் என்பதற்கு இந்தக் காலத்தில் முக்கிய் உயரிய பதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.)
அரசன் விலக்க வேண்டிய கர்ரியங்கள் நான்கு.
புல்லறிவினர்
விரைந்து செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதமாகச் செய்கிறவன்
சோம்பேறிகள்
முகஸ்துதி செய்பவர்கள்
இவர்களுடன் ஆலோசனை நடத்தக் கூடாது. இதைப் பண்டிதனானவன் தெரிந்து கொள்ள வேண்டும்.
செல்வத்துடன் கூடிய ஒரு இல்லறத்தான் கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கும் பூரண வசதி அளித்து தன் வீட்டில் தங்கச் செய்ய வேண்டும்.
வயதான ஞாதி (அவன் நமக்குக் குல தர்மங்களை உபதேசிப்பான்)
தற்காலம் கஷ்ட தசையில் இருக்கும் நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் ( அவன் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியர்க்குக் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பான்)
ஏழையான ஒரு நண்பன் (அவன் நமது நன்மைகளை எடுத்துச் சொல்வான்)
குழந்தையில்லாத ஒரு சகோதரி (அவல் நமது சொத்தை நன்கு பாதுகாப்பாள்)
உடனே பலிக்கின்ற நான்கு எவை என்று இந்திரன் கேட்க பிரஹஸ்பது (குரு பகவான்)) கீழ்க்கண்ட நான்கை எடுத்துரைத்தார்.
தேவதைகளுடைய சங்கல்பம்
புத்திமான்களுடைய மகிமை
அறிஞர்களுடைய வினயம்
நாச கர்மம் ( நாசம் விளைவிக்கும் திருட்டு, வெடிகுண்டு வைத்தல், தீவிரவாதிகளின் இதர குற்றச் செயல்கள் என்று கொள்ளலாம்)
ஆகியவை உடனே பலன் அளிக்கும்.
அக்னிஹோத்ரம்
மௌனம்
அத்தியயனம்
யாகம்
ஆகிய் இந்த நான்கும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டால் மோக்ஷம் வரை உள்ள பயனை அளிக்கும்.
இவற்றை கௌரவத்திற்காக முறை தவறி ஆடம்பரமாகச் செய்தால் தீங்கையே விளைவிக்கும்.

PICTURE FROM WIKIPEDIA
5
எப்போதும் போற்ற வேண்டியவர்கள் ஐவர்
தாய்
தந்தை
அக்னி
ஆத்மா
குரு
இந்த ஐவகையினரையும் பூஜிக்கின்றவன் மிகுந்த புகழை அடைவான்
தேவர்கள்
பித்ருக்கள் (முன்னோர்)
பெரியோர்
சந்யாசிகள்
அதிதி (விருந்தினர்)
ஆகிய் இந்த ஐவரையும் கொண்டாட வேண்டும்
நண்பர்கள்
விரோதிகள்
நடு நிலைமையில் உள்ளவர்கள்
உன்னால் போற்றப்பட வேண்டிய குரு
உன்னை அண்டுகின்றவர்கள்
ஆகிய் இந்த ஐவரும் நீ போகும் இடமெல்லாம் கூடவே தொடர்ந்து வருவர்.
கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (மெய்) என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு புலனையும் சரியாகப் பாதுகாக்காமல் இருந்தாலும் அதன் வழியே அவனது புத்தி ஓட்டைப் பாத்திரத்தின் வழியே ஒழுகும் ஜலம் போல அழிந்து விடும்.
ஆதலால் ஒருவனது புத்தி சரியான நிலையில் இருக்க எல்லாப் புலன்களையும் சரியாகப் பாதுகாக்க வேண்டும்.
விதுர நீதி தொடரும்
***