CANAKYA- MEGASTHENES MEETING (Post No.4549)

Compiled by London Swaminathan 

 

Date: 26 DECEMBER 2017 

 

Time uploaded in London-9-54 am

 

 

Post No. 4549

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

Canakya’s austere living is an indicator of his dislike for power and pelf and his incorruptibility. That made him an embodiment of high moral values.  a popular legend about him will bear it out. On taking up the assignment of Greek envoy at Pataliputra, Megasthenes expressed his wish to meet Canakya The appointment was fixed late evening. Canakya at that time was looking through some official papers. A lamp was on. As Megasthenes entered his chamber it was put out and another one in its place was lit. When Megasthenes wanted to know as to why this was done, C told him that when the earlier lamp was on he was looking through official papers. The oil in it was at state expense. Now that he was receiving him as a personal guest, the oil in it has to be at his personal expense. Hence the earlier lamp was put out and the new one was lit in its place. This was Canakya’s character. it is for no reason, therefore, that he was able to, in spite of being a poor Brahmin with no material resources, set up one of the greatest of the empires of the time.

 

Canakya is said to have continued, even after the installation of his protégé on the throne with his austere living in consonance with the Brahmin class to which he belonged, denying himself all comforts and the luxuries that the state power could have provide him.

This is how the chamberlain of Candragupta Maurya on reaching his house describes it:

Aho Rajadhirajamantrino vibhuthih:

uplasakalametad bhedakam gomayanam

bahubirupahrutanam barhisham stupametat

saranamapi samidibah sushyamanabirabi

virnamita patalatam drusyate jirnakudyam

III-15

 

“O the affluence of the minister of the king of kings!

Here is seen a piece of stone to break the cow-dung cakes with; there appears a heap of Kusa grass collected by young disciples; the shed too is seen with dilapidated walls and the corners of the roof are borne down with yonder sacrificial fagots that are drying”

Source:Canakyaniti by Satya Vrat Shastri

–subham–

DARA’S HEAD LAUGHED AT AURANGAZEB! ITALIAN TRAVELLER STORY!! (Post No.4548)

Written by London Swaminathan 

 

Date: 26 DECEMBER 2017 

 

Time uploaded in London- 6-56 am

 

 

Post No. 4548

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

Moghul emperor Aurangazeb and his elder brother Dara Shukoh fought for their father Shah Jehan’s throne. There was a heavy fighting. At the end a messenger brought the news that Dara was defeated outside the walls of the city, but had escaped. The vengeful usurper made a vow that he would catch his brother Dara and cut off his head and send it to his old father Shah Jehan in his prison in Agra. Aurangazeb was lucky to capture Dara alive. He took him hand cuffed in a procession and then ordered the soldiers to cut his head off.

 

Niccolao Manucci, an Italian traveller, who worked for several Moghul kings and Hindu kings wrote some interesting stories about Dara Sukoh’s last days. When Aurangazeb received Dara’s head he gave it three thrust with his sword and shouted, ‘Take it out of my sight’. Manucci added that the head was sent to Shah Jehan at Agra prison at the instigation of Aurangazeb’s sister Roshanara Begum. She gave a banquet the same evening to celebrate the event.

 

Shah Jehan was at the dinner when Dara’s head arrived and on seeing it he cried loud and fell on the dinner table in a swoon. Another story says that the head laughed Ha! ha! Ha! when it was struck by Auranazeb.

 

Francois Bernier, French traveller and physician, also wrote about the incident. One version says that Aurangazeb instructed to his officials to say that it was a present from him to Shah Jehan. When the officials told him so Shah Jehan was very happy and remarked, ‘At last my son remembered me’ and opened the box. As soon as he saw the blood stained head of his eldest and favourite son Dara Sukoh he fainted.

There are conflicting stories about his burial as well. According to Manucci, the head was sent by Aurangazeb’s order to be buried in the sepulchre of Taj Mahal in Agra. Bernier says that the head, after being struck off by Aurangazeb’s executioners in the garden of Khijirabad in Old Delhi, was taken to Aurangazeb, who ordered it to be buried in Humayun’s tomb a few miles off.

 

Many ballads were current in the bazars at that time; and a popular ballad was sung about Dara’s tragic fate, which Aurangazeb vainly tried to suppress.

 

Dara Sukoh’s death was a great loss to intellectuals. He was a great scholar and a friend of the Seventh Sikh Guru Har Dayal. Dara translated the Hindu Upanishads into Persian. Aurangzeb was a quite different man. He was a religious bigot and gave lot of troubles to the Hindus. He was against all forms of art.

–Subham–

 

சாணக்கியன் பற்றிய சுவையான கதைகள் (Post No.4547)

Written by London Swaminathan 

 

Date: 26 DECEMBER 2017 

 

Time uploaded in London- 6-36 am

 

 

Post No. 4547

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

சாணக்கியன் ஒரு பெரிய சிந்தனையாளர்; திட உறுதி பூண்டவர்; வெற்றி பெறுவதற்கு சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களையும் பயன்படுத்தத் தயங்காதவர். இந்தியாவில் தோன்றிய மிகப் பெரிய அரசியல்வாதி அவர்தான் என்றால் மிகையல்ல. பெரிய ராஜ தந்திரி; ராஜதந்திரம் உடையோருக்கு எல்லாம் முன்னோடி என்பதால் எந்த திறமையான அரசியல் வித்தகரையும் ‘சாணக்கியன்’ என்ற அடைமொழியோடு அழைக்கும் அளவுக்கு முன்னுதாரணமானவர். சூழ்ச்சிமிக்கவர்.

 

நரியின் தந்திரமும் யானையின் பேருருவமும், சிங்கத்தின் பராக்ரமும், புலியின் பாய்ச்சலும் உடையவர். ஆயினும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவி; செல்வத்தையும் பதவியையும் துச்சமாக மதித்தவர். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை — அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த பிரம்மாண்டமான படையை– உருவாக்கிய – சாணக்கியன் இருந்ததோ ஒரு சிறு குடிலில்; இதனால்தான் அவருக்கு மதிப்பு; பற்றற்ற வாழ்க்கையில் பற்றுக் கொண்டதால் எதைக் கண்டும் அஞ்சவில்லை.

 

சிறந்த நிர்வாகியான சாணக்கியனை நிறைய புராதன எழுத்தாளர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். நீதி நூல்களும் கதைகளும் அவர் பெயரை மொழிகின்றன. தண்டியின் தச குமார சரிதம், விஷ்ணு ஸர்மனின் பஞ்ச தந்திரம் அவர் பெயரைப் போற்றுகின்றன. பாணனும், வராஹமிஹிரரும், சோமதேவரும், நீதி சாஸ்திரத்தின் ஆசிரியர் காமந்தகியும் முதல் அத்தியாயத்திலேயே அவருக்கு முதல் வணக்கம் செலுத்துகின்றனர். விஷ்ணு புராணம் அவரைக் கௌடில்யர் என்ற பெயரில் குறிப்பிடுகிறது. பாகவத புராணம் நந்தர்களை முறியடிக்கும் பிராமணன் என்று மட்டும் சொல்லும்.

 

உயர்ந்த சிந்தனை, பரந்த அறிவு, எளிய வாழ்க்கைக்கு முன்னுதாரணம் சாணக்கியன். அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் போன்ற பொருளாதார நூல் பழங்கால உலகில் எங்குமே இல்லை.

 

சந்திரகுப்த மௌர்யன் என்னும் பேரரசனின் அதிகாரி அவர் வீட்டிற்குள் சென்றபோது கண்ட காட்சியை வருணிக்கிறார்:-

 

அஹோ ராஜாதிராஜ மந்த்ரிணோ விபூதிஹி–

 

உபலஸகலமேதத் பேதகம் கோமயானாம்

படுபிருபஹ்ருதானாம் பர்ஹிஷாம் ஸ்தூபமேதத்

ஸரணமபி சமிதிபஹ ஸுஸ்யமாணாபிராபி

விர்னமிதபடலாந்தம் த்ருஸ்யதே ஜீர்ணகுட்யம் (3-15)

 

பொருள்:

மன்னாதி மன்னனின் மந்திரியின் செல்வத்தைப் பற்றிக் கேளுங்கள்:-

பசுஞ்சாண விரட்டிகளை உடைக்க ஒரு கல்லைக் கண்டேன்; அதோ இளம் சிறார்கள் — சிஷ்யப் பிள்ளைகள் — சேகரித்த தர்ப்பைப் புல் இருக்கிறது; அவருடைய குடிலின் சுவர்கள் பாழடைந்து இருக்கின்றன; மேல் கூரையில் காயப்போட்டுள்ள யாகத்துக்கான மரக்  குச்சிகளின் பாரம் தாங்காது கூரை சரிந்து நிற்கிறது.

 

 

முதல் கதை

 

பாடலிபுத்திரத்தில் கிரேக்க தூதர் பதவி ஏற்ற மெகஸ்தனீஸ் சாணக்கியனைப் பார்க்க வந்தார். அது இரவு நேரச் சந்திப்பு. ஆட்சி சம்பந்தப்பட்ட ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருந்தார் சாணக்கியன். ஒரு மூலையில் தீப ஒளி பிரகாஸித்துக் கொண்டிருந்தது. மெகஸ்தனீஸ் உள்ளே நுழைந்தவுடன் அந்த விளக்கை அணைத்துவிட்டு, சாணக்கியன் வேறு ஒரு தீபத்தை ஏற்றினார். மெகஸ்தனீசுக்கு பெரும் வியப்பு!

 

ஐயன்மீர்! ஏன் ஒரு விளக்கை அனைத்து இன்னும் ஒரு விளக்கை ஏற்றினீர்? இதன் தாத்பர்யம் என்னவோ? என்றார் மெகஸ்தனீஸ்.

 

சாணக்கியன் சொன்னார்:

நீவிர் வரும் வரை எரிந்த தீபம் அரசங்கப் பணி நிமித்தம் ஆட்சி நிர்வாக வேலைகளுக்காக, அரசு செலவில் ஏற்றப்பட்டது. இப்போது நாம் சந்திப்பது அரசுப் பணியல்ல நீவிர் எனது விருந்தாளி; ஆகவே இது என் செலவில் எரிக்கப்படும் தீபம் ; ஆகையால்தான் இதை ஏற்றினேன்.

 

இதுதான் சாணக்கியனின் குணாதிசயங்களைக் காட்டும் நிகழ்ச்சி. தன்னலம் கருதாத் தகைமையாளராக இருந்தும் அரசுப் பணி இது, சுய வாழ்வு இது என்று வரம்பு கட்டிய மாமனிதன்.

 

அவலட்சணப் பிராமணன்; இரண்டாவது கதை

 

சாணக்கியன் பல நீதி நூல்களுக்கும் ஆசிரியன்; அவனுக்கு விஷ்ணுகுப்தன் கௌடில்யன் (கௌடல்யன்) என்ற பெயர்களும் உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் மகத சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் நவநந்தர்கள் எனப்படும் ஒன்பது பேர் ஆவர். மஹா பத்ம நந்தன் தலைவன். அவர்களுக்கு ராக்ஷஸன் என்ற திறமையான அமைச்சன் உதவினான்.

 

சாணக்கியன் பற்றி அதிகத் தகவல் கிடைக்கவில்லை. ஆனால் விஸாக தத்தன் எழுதிய முத்ரா ராக்ஷஸம் என்ற நாடகத்திலிருந்து வாழ்க்கைச் சரிதத்தை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. அவர் ஒரு முறை சாப்பாட்டுப் பந்தியில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தாராம். அறிவின் சிகரத்தை எட்டிய அவருக்கு ஆண்டவன் அழகைக் கொடுக்கவில்லை.

யார் இந்த அவலட்சணமான பிராமணன்? முதல் வரிசையில் இவன் எதற்கு உட்கார்ந்தான்? என்று மன்னன் மஹா பத்ம நந்தன், சாணக்கியனை தர, தர வென்று இழுத்துச் சென்று வெளியே விட்டானாம். காரணமின்றி தன்னை அவமானப் படுத்திய நந்த வம்ஸத்தை வேர் அறுக்காமல் என் ஸிகையை முடிய மாட்டேன் என்று குடுமியை அவிழ்த்துவிட்டு அவரும் வெளி ஏறினாராம். அன்று முதல் அவர் திட்டம்போட்டு நவ நந்தர்களை ஒழித்ததோடுமில்லாமல் மயில் வளர்க்கும் முரா வம்ஸத்தைச் சேர்ந்த சந்திரகுப்தனைப் பேரரசனாக்கினார்.

 

முத்ரா ராக்ஷஸ நாடக வசனத்தில் வரும் காட்சி:

என்னை அன்று தர தர என்று வெளியே இழுத்ததை வேடிக்கை பார்த்த மக்கள் இன்று நவ நந்தர்களை அரசுக் கட்டிலில் இருந்து நான் விழுத்தட்டியதையும் பார்த்தார்கள்; ஒரு மலை உச்சியின் மீதுள்ள யானையை சிங்கம் மலை உச்சியில் இருந்து இழுத்துப் போட்டதைப் போல நான் செய்துவிட்டேன்.

 

‘நந்த வம்ஸத்தை விழுத்தாட்டியது இருக்கட்டும்; என் புத்தி மட்டும் என்றும் குறைந்து விடக்கூடாது’ என்று வேண்டியதாகவும் ஸம்ஸ்கிருத நாடக வசனம் செல்கிறது. நவ நந்தர்களின் திறமை மிகு அமைச்சன் ராக்ஷஸன் போட்ட ஒவ்வொரு திட்டத்துக்கும் சாணக்கியன் வேட்டு வைத்ததை ஸம்ஸ்கிருத நூல்கள் சித்தரிக்கின்றன.

 

வேறு சில சுவையான கதைகளும் உள. அவற்றைத் தனியே மொழிவேன்.

 

–சுபம்–

லக்ஷணா விருத்தி விளக்கம்! (Post No.4546)

Date: 26  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-04 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4546

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 6

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

லக்ஷணா விருத்தி விளக்கம்!

ச.நாகராஜன்

 

மூன்று விருத்திகளில், முக்கிய விருத்தி, குணவிருத்தி ஆகியவை பற்றிப் பார்த்தோம். இனி லக்ஷணா விருத்தி பற்றிப் பார்ப்போம்.

*

லக்ஷணா விருத்தி என்றால் என்ன? அது எத்தனை வகை? உதாரணங்களுடன் விளக்குங்கள்.

ஜஹல் என்றால் விட்ட என்று பொருள்.

அஜஹல் என்றால் விடாத என்று பொருள்.

ஜஹல் லக்ஷணை, அதாவது விட்ட லக்ஷணை, அஜஹல் லக்ஷனை, அதாவது விடாத லக்ஷணை ஜஹதஜஹல் லக்ஷணை, அதாவது விட்டும் விடாத லக்ஷணை என்று இப்படி லக்ஷணை மூன்று வகைப்படும்.

விளக்கமாகப் பார்ப்போம்.

விட்ட லக்ஷணை என்றால் என்ன என்று பார்ப்போம்.

சொன்ன வார்த்தை ஒன்றின் உண்மையான (வாஸ்தவமான) அர்த்தத்தை விட்டு விட்டு வேறு ஒரு அர்த்தத்தைக் கிரஹிப்பது விட்ட லக்ஷணையாகும்.

கங்கையில் கோஷம் (இடைச்சேரி) இருக்கிறது என்று சொன்னால்,கங்கையின் பிரவாகத்தோடு கூட கங்கையின் கரையில் இடைச்சேரி இருக்கிறது என்பதை கிரஹித்துக் கொள்ள வேண்டும்.

இனி விடாத லக்ஷணை என்றால் என்ன என்று பார்ப்போம்.

சிவப்புக் குதிரையும் வெள்ளைப் பசுவும் ஓடுகின்றன என்று சொல்லும் போது,

சிவப்பு ஓடுகிறது என்றால் சிவப்புக் குதிரை ஓடுகிறது என்று அர்த்ததைக் கிரஹித்துக் கொள்ள வேண்டும்.

இனி விட்டும் விடாத லக்ஷணை என்றால் என்ன என்று பார்ப்போம்.

அந்த, இந்த தேவதத்தன் என்றால், முன்னொரு நாள் காசியில்  பார்த்த தேவதத்தனே, இப்போது காஞ்சிபுரத்தில் கண்டேன் என்று சொல்வதாகும்.

அந்தக் கால தேசம், இந்தக் கால தேசத்தோடு சமப்படுத்துவது அசாத்தியம் என்று கிரஹிப்பதாகும்.

 

நல்லது, ‘தத்துவம்’ என்ற இரண்டு பதங்களில் வாச்சியார்த்தம் எது? லக்ஷியார்த்தம் எது?

சொல்கிறேன்.

  • மாயை, 2) மாயாபிரதிபிம்பன், 3) மாயைக்கு இருப்பிடமாகிய பிரம்மம் ஆகிய இந்த மூன்றும் சேர்ந்ததே ‘தத்’ பதத்திற்கு வாச்சியார்த்தம் ஆகும்.
  • பிரம்மம் மட்டும் ‘தத்’ பதத்திற்கு லக்ஷியார்த்தம் ஆகும்.

 

‘த்வம்’ பதத்திற்கு வாச்சியார்த்தம்  எது?

சொல்கிறேன்.

  • அவித்தை, 2) அவித்தியாபிரதிபிம்பன், 3) அவித்தைக்கு இருப்பிடமான சாக்ஷி சைதன்னியம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்ததே ‘த்வம்’ பதத்திற்கு வாச்சியார்த்தம் ஆகும்.
  • சாக்ஷி கூடஸ்த சைதன்னியம் மாத்திரம் ‘த்வம்’ பதத்திற்கு லக்ஷியார்த்தம் ஆகும்.இது ஜீவேஸ்வரர்களுக்கு விரோதமானபடியால், அவர்களுக்கு உள்ள விருத்தாம்சத்தைத் தள்ளி, அவிருத்தாம்சமான பிரம்ம சைதன்னியமும், கூடஸ்த சைதன்னியமும் ஒன்றானபடியினால் பிரம்மம், கூடஸ்தன் இவர்களை லக்ஷியார்த்தமாகச் செய்தது அகண்டார்த்தமாகிய ஐக்கியமே. அதாவது மாயை, அவித்தை இந்த உபாதியைத் தள்ளுவதால், சச்சிதானந்த ஸ்வபாவ ஆத்ம வஸ்து ஒன்றே மிஞ்சும்.

 

 

பரமாத்மா, முன் சொன்ன சரீர த்ரய லக்ஷணன் என்றும் அவஸ்தா த்ரய சாக்ஷி என்றும் , பஞ்ச கோச வியத்ரிக்தன் என்றும் ,சச்சிதானந்த ஸ்வரூபன் என்றும் ஆக இப்படி நான்கு வித லக்ஷணைத்தைச் சொல்லுவானேன்? இதற்கான விளக்கமும், விவரமும் என்ன?

சரீர த்ரய விலக்ஷணமும், பஞ்ச கோச வியத்ரிக் தத்துவமுமே அதத்வியா விருத்தி லக்ஷணம், அவஸ்தா த்ரய சாக்ஷித்வம், தடஸ்த லக்ஷணம் சச்சிதானந்த ஸ்வரூப லக்ஷணம்.

 

அதத்துவிய விருத்தி லக்ஷணம் என்றால் என்ன?

ஆகாயம் முதல் சரீரம் வரையில் காணப்படும் வஸ்துக்களை ‘இதல்ல’, ‘இதல்ல’ என்று தள்ளி விட்டு மிஞ்சிய வஸ்து எதுவோ அதுவே ஆத்மா.

 

ஆத்ம வஸ்து எது?

இந்த பிரபஞ்சத்திற்கு இருப்பிடமாக எது இருக்கிறதோ அதுவே!

 

ஸ்வரூப லக்ஷணம் எது?

தடஸ்த லக்ஷணம் சச்சிதானந்தம் பூரணம், நித்தியம் ஆத்ம வஸ்துவே

 

சரீர த்ரயம் எவை?

(த்ரயம் என்றால் மூன்று என்று பொருள்)

1)ஸ்தூல 2) சூக்ஷ்ம 3) காரணம் என்பவையே!

 

ஸ்தூல தேகம் எது?

எல்லோருக்கும் ப்ரத்யக்ஷமாயும் (காணப்படுகிறவராயும்), அவயவங்களோடு கூடியதாயும் இருப்பதே ஸ்தூல தேகம் ஆகும்.

 

சூக்ஷ்ம தேகம் எது?

பதினேழு அவயவங்கள் கூடியதே சூக்ஷ்ம தேகம் ஆகும்.

 

காரண தேகம் (சரீரம்) எது?

அஞ்ஞானமே!

 

சரீரம் என்றால் என்ன?

நசிக்கிற வஸ்துக்களே!

 

ஸ்தூல தேகம் தான் அன்னபனாதிகள் இல்லாவிட்டாலும், வியாதி முதலிய ஸமயாதிகளில் நசிக்கும்.

 

சூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் ஆகியவை எப்படி நசிக்கும்?

சூக்ஷ்ம தேகத்திற்கு இராக, த்வேஷாதி அந்தக்கரண விருத்தியினால் விரிதலும் அல்லது வளர்தலும், சுருங்குதலும் உண்டு.

இப்படி ஆவதே நசித்தல் ஆகும்.

காரண சரீரத்திற்கு ‘நான் ஜீவன்’ என்பதே விருத்தி.

நானே பிரம்மமாய் இருக்கிறேன் என்பது சுருங்கல். அதுவே நசித்தலாகும்.

 

சரீரம் என்பதற்கு இந்த விதமாகப் பொருள் செய்கிறீர்கள். சிலர் இதை தேகம் என்கிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

தஹிக்கப் படுவது எதுவோ, அதாவது எரிக்கப் படுவது எதுவோ அதுவே என்று சொல் இலக்கண அர்த்தமாகிறது.

 

சரி, ஸ்தூல தேகத்தை அக்னி எரிப்பதை நேரடியாகப் பார்க்க முடிகிறது. சூக்ஷ்ம, காரண தேகங்களை அக்னி எப்படி எரிக்கும்?

தாப த்ரயம் என்னும் எரிச்சலினால்!

 

தாப த்ரயம் என்றால் என்ன?

மூன்று வித தாபம், எரிச்சல், துன்பம் ஆகியவையே

 

அந்த மூன்றும் எவை? சற்று விவரமாகச் சொல்லுங்கள்.

அத்யாத்மிகம்,

ஆதி தெய்வீகம்,

ஆதி பௌதிகம்

ஆகிய இந்த மூன்றில்  அத்யாத்மிகம் என்பது ஜுரம், தலைவலி போன்றவை.

ஆதி தெய்வீகம் என்பது தெய்வச் செயலால் உண்டாகும் இடி, புயல் போன்றவை.

ஆதி பௌதிகம் புலி போன்றவற்றால் ஏற்படும் துன்பம் போன்றவையாகும்.

 

சூக்ஷ்ம தேகத்திற்கு  பதினேழு அவயவங்கள் உண்டு என்று சொன்னீர்கள்? அவை என்னென்ன?

காது, மெய், கண், நாக்கு, மூக்கு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்து.

சப்தம், ஸ்பரிஸம்,  ரூபம், ரசம், கந்தம் ஆகிய கர்மேந்திரியங்கள் ஐந்து.

புலன்கள் ஐந்து.

மனம், புத்தி ஆகிய இரண்டு.

ஆக இந்த அனைத்தும் சேர்ந்ததே பதினேழு அவயவங்களாகும். இதுவே சூக்ஷ்ம சரீரம்.

 

நன்றி, ஐயா, நன்றி! இனி, பிராணன், மனம்,புத்தி ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கேள்விகளைக் கேட்கலாமா?

தாராளமாக! கேளுங்கள் உங்கள் கேள்விகளை!!

 

***

பாரதி போற்றி ஆயிரம் – 16 (Post No.4545)

Date: 26  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-53 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4545

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 16

  பாடல்கள் 102 முதல் 107

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

 

அமரகவி (பாரதி)

 

ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்

ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்,

ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்

அமரகவி யென்றெவரும் புகழப் பெற்றோன்,

சீருயரும் தமிழ் மக்கள் செய்த வத்தால்

தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய

பாரதியார் பெயர்போற்றி ஏத்துவோமே.

பாமாலை புனைந்தவற்குச் சாத்துவோமே.

 

வேறு

உள்ளக் கருத்தையெல்லாம் உள்ளபடி யானிந்த

வெள்ளைக் கவியில் விளம்பினேன் -தெள்ளுதமிழ்

வெண்பாப் புலியும் விகடகவியுமெனக்

கண்பார்த்துக் காத்தல் கடன்

 

வேறு

பாட்டுக் கொருபுலவன் பாரதி அடா! -அவன்

பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான் அடா

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா – அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய் அடா!

 

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா!கவி

துள்ளும் மறியைப் போலே, துள்ளும் அடா!

கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா!- பசுங்

கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

 

குயிலும் கிளியும்பாட்டில் கூவுமே, அடா! – மயில்

குதித்துக் குதித்துநடம் ஆடுமே, அடா!

வெயிலும் மழையுமதில் தோன்றுமே, அடா! – மலர்

விரிந்து விரிந்துமணம் வீசுமே,அ டா!

 

 

அலைமேலே அலைவந்து மோதுமே, அடா! – அவை

அழகான முத்தையள்ளிக் கொட்டுமே, அடா!

மலைமேலே மலைவளர்ந் தோங்குமே, அடா!

வனங்கள் அடர்ந்தடர்ந்து சூழுமே, அடா!

(நீண்ட பாடல் தொடரும்)

 

அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி இதழில் (12-10-1947) வெளி வந்த பாடல்.

பாட பேதம்- வரி 4 – பாரதியார் – பாரதியின்

பாமரன் ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற அமைப்பை உடையவை. இவை எல்லாமே ஆரம்ப காலக் ‘கலைம்களில்’ வந்தவை. (1944)

 

 

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (தோற்றம்: 27-7-1876 மறைவு: 26-9-1954) குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்தவர். பல்சுவைப் பாடல்களைப் பாடியுள்ள இவர் தொடாத துறைகள் இல்லை எனலாம். குழந்தை இலக்கியப் பாடல்களை ஏராளமாகப் புனைந்துள்ளார். பல நூல்களுக்கு ஆசிரியர்.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

ஜனவரி  2018 காலண்டர், சதபதப் பிராமணப் பொன்மொழிகள் (Post No.4544)

Nataraja Picture posted by Veda

 

முக்கியப் பண்டிகைகள்: ஜனவரி 1- புத்தாண்டு தினம், 2-ஆருத்ரா தரிஸனம்,  13- போகிப் பண்டிகை, 14- மகர ஸங்கராந்தி, பொங்கல், 15- மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், 24-ரத ஸப்தமி 26- குடியரசு தினம், 30- காந்திஜி நினைவு நாள், 31-தைப்பூஸம்

 

அமாவாசை- 16

பௌர்ணமி- 2, 31 சந்திர கிரஹணம்,

ஏகாதஸி உண்ணாவிரத நாட்கள்- 12, 27/28


Compiled by London Swaminathan 

 

Date: 25 DECEMBER 2017 

 

Time uploaded in London- 9-04 am

 

 

Post No. 4544

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

2018 ஜனவரி  நற்சிந்தனைக் (ஹே விளம்பி மார்கழி/தை) காலண்டர்

ஜனவரி 1 திங்கட் கிழமை

திவம் எனப்படும் ஆகாயத்திலே நுழையும்  பொழுது

சிருஷ்டிக்கப்பட்டவர்களுக்கே தேவர்களெனப்  பெயர் 11-1-6-7

 

ஜனவரி 2 செவ்வாய்க் கிழமை

சுவாசத்தை மித்திரன் என்பார்கள்; ஏனெனில் அவன் எல்லாருடைய நண்பனாகும் (நண்பன்= மித்திரன்)- சதபத பிராமணம் -4

 

ஜனவரி 3 புதன் கிழமை

வருஷத்திற்கு துரிதம் என்று பெயர்; ஏனெனனில் அவனே அனைத்தையும் துரிதமாக்குவான் 8-4-1-4  துரிதம்= சீக்கிரம்

 

ஜனவரி 4 வியாழக் கிழமை

தேவர்கள் சிருஷ்டிக் காலத்தில் பகல் ஒளி போல் மின்னியபடியால் அவ்வொளிக்கே தேவர்கள் எனப் பெயர்- 10-1-1-67

 

ஜனவரி 5 வெள்ளிக் கிழமை

சந்திரனிடமிருந்து அவன் ஒளியை எடுத்துக்கொண்டபடியால் (ஆ-தா) சூரியனுக்கு ஆதித்யன் என்று பெயர் (திதிகள் ஏற்படுவதைக் குறிக்கிறது)

ஜனவரி 6 சனிக் கிழமை

எது உலகத்தை எல்லாம் சுற்றி வளைத்திருக்கிறதோ (ஆப்த) அதற்கு ஆபம் அல்லது ஜலம் எனப் பெயர் 2-1-1-4

 

ஜனவரி 7 ஞாயிற்றுக் கிழமை

சிக்கிமுக்கி அடிக்கட்டை மேல் கட்டைக்கே ஊர்வசி- புரூருவன் எனப்பெயர். நெய்ப் பாண்டமே ஆயு என்னும் அவர்கள் பிள்ளையாகும்-3-4-1-22

ஜனவரி 8 திங்கட் கிழமை

புவியிலுள்ள எல்லா பொருள்களிலும் வீசி அவைகளை எல்லாம் எதையும் செய்யச் செய்வதால் வாயுவிற்கு விசுவ கர்மன் எனப் பெயர் -8-1-17

ஜனவரி 9 செவ்வாய்க் கிழமை

செவி எல்லாப் புறமும் செவியுறுவதால் அதற்கு எல்லாத் திசையின் சிநேகிதன் (மித்திரன்) எனப் பெயர்; இதனால் செவியை விசுவாமித்ரன் என்பர் 8-1-2-6

ஜனவரி 10 புதன் கிழமை

தேவர்களுக்கு மர்மமாய் மொழிவதிலேயே பிரியமுண்டு -6

ஜனவரி 11 வியாழக் கிழமை

ஒருவன் விரதமுடன், பட்டினி கிடந்தால   அ க்கினி முதலிய தேவர்கள் அவன் மனத்தால் அனைத்தையும் பார்த்து அங்கு வசிப்பதால் அப்படி இருப்பதற்கு உப வாசம் எனப் பெயர் 1- 1- 1 -7

 

ஜனவரி 12 வெள்ளிக் கிழமை

அசுரர்கள் ரோஹிணி என்னும் நெருப்பால் சுவர்க்கம் செல்லலாம் என நினைத்தார்கள். இந்த ரோஹிணி நெருப்பிற்கே ரோஹிணி நட்சத்திரம்  என ஜனங்கள் சொல்லுவார்கள். அற்புதமாயுள்ள நெருப்பிற்கே கிருத்திகை எனப் பெயர் 2-1-2-16

 

 

ஜனவரி 13 சனிக் கிழமை

சிரஸ் என்பது சிறந்ததைக் காண்பிப்பதாகும். தலையே சிறந்தது. ஆதலால் அதையும் குறிக்கும். இதனாலேயே சமூகத்தில் சிறந்தவனாய் உள்ளவனையும் சிரேஷ்டன் என அழைப்பது 1-4-5-5

 

ஜனவரி 14 ஞாயிற்றுக் கிழமை

விருத்திரன் கொல்லப்பட்டவுடன் துர்க்கந்தம் வீசி சலத்தில் நுழைந்தான். சலத்திற்கு இது பிடிக்கவில்லை; அதனால் விருத்திரன் எழுச்சியாகி புதரானபடியால் இதுவே தர்ப்பை என்னும் புல்லாயிற்று 7-2-3-2

 

ஜனவரி 15 திங்கட் கிழமை

நேர்வழியை சுவர்கம் என்று சொல்லுவார்கள் 13-12-15

ஜனவரி 16 செவ்வாய்க் கிழமை

பக்தி என்றால் தியாகத்திற்குப் பெயர் 7-2-2-4

 

ஜனவரி 17 புதன் கிழமை

புளித்த தயிரும் தேனும் சிறந்த உணவாகும் 5

 

ஜனவரி 18 வியாழக் கிழமை

சத்தியக்ஞர் சொல்லுவதாவது இப்புவி முழுவதும் எந்த இடமும் தெய்வீகமாகும் 3-1-1-4

 

ஜனவரி 19 வெள்ளிக் கிழமை

சுவர்க்கம் என்பது பூமியின் பொய் வடிவமாகும்

 

ஜனவரி 20 சனிக் கிழமை

தேசத்திலே தலைமைப் பதவி ஒருவனுக்கே அளிக்க வேண்டும் 8-3-2-7

ஜனவரி 21  ஞாயிற்றுக் கிழமை

சோமபான ரசம் பிழிவதென்பது அசுரர்களை அறைத்துக் கொல்லுவதாகும் 3-9-4-2

 

ஜனவரி 22 திங்கட் கிழமை

தாமரை இலை ஜலத்தில் மிதப்பது போல பூமி ஜலத்திலே மிதக்கின்றது

 

ஜனவரி 23 செவ்வாய்க் கிழமை

தேகத்திற்கு அவசியமான உணவு திருப்தியை அளிக்கும்; அதிகமான உணவு தீமையை அளிக்கும் 10-4-1-4

 

ஜனவரி 24 புதன் கிழமை

வெண்மை ஆகாச வடிவம்; கருப்பு பூமி வடிவம்; சிவப்பு வான வடிவம் 3-2-1-3

ஜனவரி 25 வியாழக் கிழமை

 

ஆதியிலே எத்தனை தேவர்கள் உண்டோ அத்தனை தேவர்கள் இப்பொழுதும் உண்டு 8-7-1-9

ஜனவரி 26 வெள்ளிக் கிழமை

தேகத்திலுள்ள அழுக்கே பொய் எனப்படும் 3-1-2-10

ஜனவரி 27 சனிக் கிழமை

அக்கினி பிராமணன் ஆகையால் அவனுக்கு பிராமணன் என்று பெயர்.அவன் பிராணன் ஆகிப் பிரஜகளைப் பாது காப்பதால் அவனுக்கு பரதன் எனப் பெயர். அவனுக்கே ஆதி புரோஹிதன் ஹோத்திரம் எனப் பெயர். அவன் ரதத்தைப்போல்   எதையும் எடுத்துச் செல்வதால் அவனூக்கு ரதி என்றும் பெயர் 1-4-2

 

ஜனவரி 28 ஞாயிற்றுக் கிழமை

ஆட்சி புரிவது புகழாகும்- 6-7-3-7

 

ஜனவரி 29 திங்கட் கிழமை

சூரியன் என்னும் கொக்கியில் ஜகமெல்லாம் தொங்கும்

 

ஜனவரி 30 செவ்வாய்க் கிழமை

நிலத்தில் உழத் தெரிந்தவனே அறிஞனாகும்  7-2-2-9

ஜனவரி 31 புதன் கிழமை

ஸ்திரீ ஒருவருக்கும் தீங்குமை புரிவதில்லை 6-1-3-2

xxxxxx

உதவிய நூல்: யஜூர் வேதக் கதைகள், எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004

 

–subham–

31 Golden Sayings from Tamil Poetess Avvaiyar (Post No.4543)

Compiled by London Swaminathan 

 

Date: 25 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-06 am

 

 

Post No. 4543

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

January 2018 Good Thoughts Calendar

Festival Days :-  January 1 New Year, 2 Arudra Darsanam, 13-Bogi Pandikai, 14 -Makara Sankaranti/Pongal, 24- Ratha Sapthami, 26- Republic Day, 30 -Gandhi’s death anniversary, 31- Thai Pusam, LUNAR ECLIPSE (Chandra Grahanam)

31 Golden Sayings from Tamil Poetess Avvaiyar’s books Muthurai and Nalvazi are given in this month’s calendar.

New Moon/Amavasai –16

Full Moon/Purnima– 2, 31+Lunar Eclipse

Ekadasi Fasting Days– 12, 27/28

 

January 1 Monday

Coconut tree sucks water from the ground and gives sweet water (at top) in tender coconut (fruit). If one does good to another, he would get in return something good – Muthurai 1

January 2 Tuesday

Gift given to good will be like a carving on a stone; Good done to ungrateful will vanish like writing on the water – Muthurai verse 2

January 3 Wednesday

Painful is adversity in youth and painful is prosperity in old age like the tree blossoming out of season and beautiful woman without a partner- Muthurai 3

 

January 4 Thursday

Though the conch shell is burnt, it remains white; though the milk is boiled it is tasty; Even when good people have difficulties they remain noble. verse 4

January 5 Friday

All the towering trees do not bear fruits but in due season; One’s tireless efforts won’t be successful until the time of fortune arrives- Verse 5

 

January 6 Saturday

Water lily grows as long as the water level is; one’s intelligence is up to the level of their studies. One’s accession of wealth depends upon the good deeds one did in previous births – verse 7

January 7 Sunday

To see good people is good; to listen to good words is good; to speak the virtues of good people is good; to associate with them is also good- verse 8

 

January 8 Monday

To see the bad people is bad; to listen to the rude words is wicked; to speak about the bad people is evil; to associate with them is sinful- verse 9

January 9 Tuesday

The water fed to the paddy fields benefits the grass in those fields as well; In the same way even if one person is on earth it rains benefitting all- verse 10

 

January 10 Wednesday

The screw pine has large leaves and has no scent; the Mahila has small petals but has got good smell; the sea is large but the water is not usable; though a spring is small it serves all- verse 12

 

 

January 11 Thursday

Good trees are not that grow in the forest; men who stand in the assembly and unable to read or interpret are the trees (wooden logs)- verse 13

January 12 Friday

The turkey, on seeing the peacock spreading its wings and dance, is spreading its ugly wings thinking it can do it; it is like men of ignorance showing off- verse 14

January 13 Saturday

A healer fell a victim to the tiger he tried to save; so is the help rendered to the ignoble; it breaks like a pot that fell on a rock – verse 15

January 14 Sunday

Don’t think that the patient people are ignoramuses; they are like the stork which waits for the right fish to come and fall in the trap- verse 16

January 15 Monday

Those who forsake you in crises are not relations; they are like the water birds that desert when the tank is dry; relations are the ones who stick to you even at the time of distress like the edible root and flowering plants that stick to the tank in dry season. – verse 17

 

January 16 Tuesday

Though a gold pot breaks it is still gold; what would be the worth of a mud pot that breaks? Great people are like the gold pots even when they are fallen – verse 18

January 17 Wednesday

Though you dip a measure in the deep sea water, it wont take four measures; though you get riches and husband , the happiness depends on destiny or fate – verse 19

 

January 18 Thursday

congenital diseases can kill though they are born with you; but herbs growing in far off mountains can heal the sick; don’t depend on people who are born with you; there are people like the medicinal plants somewhere- verse 20

January 19 Friday

When there is a good wife, the house has everything; if the wife is not good it’s like a tiger infested forest- verse 21

January 20 Saturday

Action follows fate or pre -written; Nothing happens as one wish for. Even Kalpaka tress will give you bitter nox vomica due to past karma- verse 22

 

January 21 Sunday

The wrathful vulgar are un weldable like the split or broken stones; but the good ones join like broken golden pots; the anger of righteous people disappear like the cut in water made by an arrow- verse 23

 

January 22 Monday

The learned are enamoured by the society of scholars. They are like the swans that swim together in a tank; the illiterates are like the crow that feasts on the dead bodies in the cremation ground- verse 24

January 23 Tuesday

Poisonous cobras hide in the holes fearing human beings; non-poisonous water snakes lie in the open field; they don’t fear an attack from humans. Those who are cunning at heart keep themselves aloof; those with open heart will never skulk- verse 25

 

January 24 Wednesday

A king is respected in his own country only; a learned man is respected wherever he goes; so, a scholar commands more respect than a monarch- Muthurai verse 26

January 25 Thursday

To a plantain tree, its own baby plant does harm; the woman who does not behave is a yama/god of death to her own husband- verse 27

 

January 26 Friday

With the Lady of Fortune comes wealth, great beauty and noble birth to us; they will vanish when she goes out- Muthurai verse 29

January 27 Saturday

Shun evil, Do good- all religions preach- Nalvazi verse 1

January 28 Sunday

There only two castes in the world; those who give are great; those who don’t give are base born- Nalvazi verse 2

January 29 Monday

This body is a bag of miseries; don’t take this false body as real; if you do charity you attain liberation- Nalvazi verse 3

January 30 Tuesday

It is hard to do anything good unless the past merits favour it; it is like a blind man using his walking stick to get down fruits from a mango tree; unless the right time comes it is a futile action- Nalvazi verse 4.

 

January 31 Wednesday

The life of sages is like water on lotus leaf. water is on the leaf but aloof, never wets it; the sages are in the world and out of it at once – Nalvazi verse 7

–subham–

 

 

 

 

ஒரு கவிதை பிரபலமாவது எப்படி? (Post No.4542)

Date: 25  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-33 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4542

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

அறிவியல் துளிகள் ஏழாம் ஆண்டு 44வது கட்டுரை

ஜிமிக்கி கம்மலின் பிரபலம்! ….. ஒரு கவிதை பிரபலமாவது எப்படி?

ச.நாகராஜன்

 

“கவிதை என்பது சக்தி வாய்ந்த உணர்ச்சிகளின் தன்னியல்பான வெளிப்பாடு!” – வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்

இலக்கிய உலகில் சில கவிதைகள் மிகவும் பிரபலமாகி அனைவராலும் பாராட்டப்படுகின்றன. சில கவிதை நூல்களைப் படிக்க ஆளே இருப்பதில்லை.

பிரபலமான கவிஞர்கள் அப்படி என்ன ஒரு மாயப்பொடியைத் தம் கவிதைகளில் சேர்க்கிறார்கள்?

ஆராயக் களமிறங்கியிருக்கிறது அறிவியல். ஆம், சமீ பத்தில் நியூயார்க் பல்கலைக்கழகமும் மாக்ஸ் ப்ளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பிரிகல் அஸ்தடிக்ஸ் நிறுவனமும் சேர்ந்து ஒரு கவிதை எப்படி படிப்போரிடையே கலை நயத்துடன் மகிழ்ச்சியைத் தருகிறது என்று ஆராய ஒரு ஆய்வை நடத்தியது. 2017, நவம்பரில் ஆய்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

இந்த ஆய்வில் 400 கவிதா ரஸிகர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் 111 ஹைகூக்களும் 16 சானெட்டுகளும் ( 14 வரியுள்ள ஆங்கிலக் கவிதை) கொடுக்கப்பட்டன.

இந்த கவிதைகளை வரிசைப் படுத்தித் தர அவர்களிடம் கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

 

  • இந்தக் கவிதையில் உள்ள கற்பனையின் தெளிவு எப்படி இருக்கிறது?
  • இந்தக் கவிதை உணர்ச்சி பூர்வமாக எப்படிப்பட்ட கிளர்ச்சியை அல்லது மன ஓய்வைத் தருகிறது?
  • இந்தக் கவிதையின் உள்ளடக்கம் உடன்மறையானதா அல்லது எதிர்மறையானதா? அதன் உணர்ச்சிப் பிணைப்பு எப்படி உள்ளது?
  • இந்தக் கவிதை கலைநயத்தில் எப்படிப்பட்ட ரசிப்பைத் தருகிறது?

ஆய்வின் முடிவில் அனைவரிடமும் சில பொதுவான ஒற்றுமைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

“தனிநபரின் ருசி மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்பது உண்மை. இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருப்பினும், ஒரு கவிதையை அனைவரும் ரசிக்க சில காரணிகள் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளன”, என்று ஆய்வுக் குழு தலைவர் அமி பெல்ஃபி (Amy Belfi) கூறுகிறார்.

இந்த ஆய்வின் முடிவு நடப்பு ‘சைக்காலஜி ஆஃப் அஸ்தடிக்ஸ், க்ரியேடிவிடி அண்ட் தி ஆர்ட்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது.

ஒரு கவிதையில் அனைவரும் முதலில் எதிர்பார்ப்பது கற்பனா தெளிவு தான்.

அடுத்தது ஒரு சிறந்த கவிதை, உடன்மறையான உள்ளக் கிளர்ச்சியைத் தூண்ட வேண்டும்.

சந்தோஷமான உணர்வுகளைக் கிளப்பும் கவிதைகள் முதலிடத்தைப் பிடிக்கின்றன.

இந்த உரைகல்லில் பாரதியாரின் இரு பாடல்களைப் பார்த்தால் ஆய்வு உண்மை தான் என்று நம்மை நம்ப வைக்கும்.

மங்கியதோர் நிலவினிலே, கனவில் இது கண்டேன், வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை –பாரதியார்;

காற்று வெளியிடை கண்ணம்மா, உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் – பாரதியார்

 

‘தி செகண்ட் கமிங்’ என்ற ஈட்ஸின் (Yeat’s “The Second Coming” )  கவிதை போல பிற கவிதைகள் யாரையும் கவரவில்லை.

ஹைகூவில் அனைவரையும் கவர்ந்த ஹைகூ : “மலர்கள் மலர்ந்து தீ போல பரவுகிறது.”

மிக மோசமான ஹைகூ என்று மதிப்பிடப்பட்ட ஹைகூ:

“குடித்து விட்ட பெண் வாந்தி எடுக்கிறாள்.”

மிகவும் மோசமான மதிப்பெண்களைப் பெறும் கவிதைகள் எதிர்மறை உணர்ச்சிகளை ஊட்டுவதாக உள்ளன. அதில் கற்பனைத் தெளிவும் இல்லை.

இந்த ஆய்வானது கவிதைகளுக்கென்றே எடுக்கப்பட்டது என்று கூறும் ஆய்வாளர்கள், ஆனால் இது பாடல்கள், கதைகள் மற்றும் ஸ்கிரிப்டுகளுக்கும் பொருந்தும் என்று கூறுகின்றனர். ஆய்வுக் களத்தை விரிவு படுத்தி இன்னும் ஆராயப் போகிறது ஆய்வுக் குழு.

இந்த ஆய்வு, பாடல்களுக்கும் பொருந்தும் என்று ஆய்வு முடிவு கூறும் போது தான், ஐந்து கோடி பேர் பார்த்து ரஸித்த ஜிமிக்கி கம்மல் எப்படி பிரபலமானது என்பது புரிகிறது!

பாருங்கள் ஆய்வின் முடிவை! கற்பனைத் தெளிவு வேண்டும்.

உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் உள்ளத்தில் ஏற்படுத்தி ஆடச் செய்ய வேண்டும்.

ஜிமிக்கி கம்மல் அவரவர்கள் மனோரஸனைக்கு ஏற்றபடி கற்பனா தெளிவைக் கொடுத்து உள்ளக் கிளர்ச்சியை உற்சாகத்தையும் ஏற்படுத்தி நாடு விட்டு நாடு, பட்டி தொட்டி எங்கணும் பரவி விட்டது. அவரவர்களுக்கு அவரவர் மனோபாவப்படி ஒரு ஜிமிக்கி கம்மல்!

மேலை நாட்டு ஆய்வுகள் ஒரு புறம் இருக்க நம் நாட்டுக் கவிஞர்கள் கவிதை பற்றிய இலக்கணத்தை எப்படி வரையறுத்திருக்கிறார்கள்?

மஹாகவி பாரதியார், “உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்கிறார். வாக்கின் ஒளி அற்புதங்களை உருவாக்கும் என்பது அவரது முடிவு,

அதன் பயனையும் அவர் தெளிவுற விளக்குகிறார்:-

“வெள்ளம் போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார்!”

எப்படி ஒரு அற்புதமான வரையறுப்பு?

கவிச் சக்கரவர்த்தி கம்பனோ பெருகி வரும் கோதாவரியைக் கண்ணால் கண்ட மகிழ்ச்சியில் கவிதைக்கு இலக்கணம் வகுத்து விடுகிறான்.

‘புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து  புலத்திற்றாகி அவியகத்துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளவில்       சவியுறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தாங்கிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்”

நல்ல ஒரு கவிஞனின் கவி புவியினுக்கு அணியாக இருக்கும்; ஆன்ற பொருளைத் தரும். தேவர் தம் உணவுக்கொத்த சுவைப் புலங்களில் படிந்ததாக இருக்கும். அகன்ற பிரவாகம் போலப் பெருக்கெடுத்து ஓடி இன்பம் தரும்.(கோதாவரியைப் போல).

கவிதை என்றால் என்ன என்பதை மிக எளிமையாக விளக்குகிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஆனால் அது ஆழ்ந்த பொருளைத் தரும் ஒன்று:

 

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்                       உருவெடுப்பது கவிதை                                     தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை                தெரிந்துரைப்பது கவிதை.

இப்படி கவிதை பற்றிய வரையறுப்புகள் ஆயிரம் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கவிஞர் சொன்னதே! அனைத்தும் உண்மை! இதற்கு அப்பாலும் விளக்க முடியாமல் இருப்பதே நல்ல கவிதை!

அறிவியல் கவிதைக் களத்திற்குள் இறங்கியது என்றால் கவிதை மட்டும் சும்மாவா இருக்கும். அதுவும் அறிவியலுக்குள் இறங்கி விடும்; விளையாடும்!

அதையும் எதிர்காலத்தில் ரஸிக்கத் தானே போகிறோம்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1911ஆம் ஆண்டு ஸ்காட் மேற்கொண்ட சாகஸம் நிறைந்த தென் துருவப் பயணம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே பயணத்தில் இன்னும் மூன்று பேர் உயிரைப் பணயம் வைத்து தனியாக ஒரு குட்டிப் பயணம் மேற்கொண்டனர்.

1911 ஜூன் மாதம் ஸ்காட் குழுவினர் 25 பேர்கள் கேப் இவான்ஸ் என்ற இடத்தை அடைந்த போதிலும் நிஜமான தென் துருவக் கடைசிப் பயணம் அக்டோபரில் தான் ஆரமபிக்க முடிந்தது.

அவரது உதவியாளரான வில்ஸன் என்பவர் பவர்ஸ் என்பவரையும் செர்ரி கராட் என்பவரையும் அழைத்துக் கொண்டு பெங்குயின் முட்டைகளைச் சேகரிக்க ஜூன் 27ஆம் தேதியன்று ஒரு பயணம் மேற்கொண்டார்.

130 மைல் பயணம். கண்ணே தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. உறைய வைக்கும் குளிர். கற்பனைக்கும் அப்பாற்பட்ட மைனஸ் 75 டிகிரி பாரன்ஹீட்! என்றாலும் கூட உயிரியல் துவக்கத்தின் பரிணாமத்தை ஆராய பெங்குயின் முட்டைகள் உதவும் என்று வில்ஸன் நம்பினார்.

 

அவர்கள் கொண்டு சென்ற ஸ்லெட்ஜ் வண்டிகள் 400 பவுண்ட் எடையின் பாரத்தைத் தாங்க முடியாமல் நெளிந்தன. கடுமையான காற்று. கும்மிருட்டில் ஒவ்வொரு ஸ்லெட்ஜையும் அடுத்த கட்டத்திற்கு கடைத்தேற்ற வேண்டியதாகப் போயிற்று.

திடீரென ஒரு பனிப்புயல். அவர்களது கூடாரம் பறந்தே போனது. பிஸ்கட் தான் உணவு. ஸ்லீப்பிங் பேக்கில் தான் தூக்கம்.

19 நாட்கள் இப்படித் தவியாய்த் தவித்தனர். கடைசியில் பெங்குயின் காலனி என்று வர்ணிக்கப்படும் பெங்குயின் இருப்பிடத்தை அடைந்தனர்.

200 அடி உயர சிகரத்திலிருந்து பனிக் கடலோரம் இறங்கி முட்டைகளைச் சேகரித்து மீண்டும் மேலே ஏற வேண்டும்.

 

செர்ரி கராட் கண் தெரியாமல் சிகரத்தில் ஏற இரண்டு முட்டைகள் உடைந்து சிதறின. நல்ல வேளையாக இன்னும் மூன்று முட்டைகள் பத்திரமாக இருந்தன!

மறு நாள் தங்கள் கல் வீட்டை அவர்கள் செப்பனிட்டனர். இரு நாட்கள் கழித்து காற்று வீச்சு குறைந்தது. பவர்ஸ் இன்னும் ஒரு முறை பெங்குயின் காலனி போகலாமா என்றார், துணிச்சலுடன்.

ஆனால் வில்ஸனோ, “போதுமப்பா! போதும்! போகலாம் நம் காம்பை நோக்கி” என்றார்.

உலகின் மிகத் துணிச்சலான, அபாயகரமான, மோசமான பயணங்களுள் இதுவும் ஒன்று என்கிறது வரலாறு!

***

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 15, அழ.வள்ளியப்பா பாடல்கள் (Post No.4541)

Date: 25  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-06 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4541

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 15

  பாடல்கள் 97 முதல் 101

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

அழ.வள்ளியப்பா அவர்களின் பாடல்கள்

பாரதியார்

பாப்பாப் பாட்டைப் பாடித்தந்த
பாரதி யாரைப் போற்றிடுவோம்.
கேட்போம், அவரது வார்த்தைகளை
கேட்ட படியே நடந்திடுவோம்.

குன்றெனத் தலைநிமிர்என்றிடுவார்,
கொடுமை தொலைந்திட வேண்டுமென்பார்.
ஒன்றுபட் டாலே வாழ்வுஎன்பார்.
உலகிலே யாவரும் ஒன்றுஎன்பார்.

சண்டை சச்சரவை மூட்டிவிடும்
சாதி ஒழிந்திட வேண்டும்என்பார்.
பண்டைப் பெருமை வளர்ந்திடவே
பற்பல உண்மைகள் கூறிடுவார்.

பெண்ணுக் குரிமைகள் வேண்டுமென்பார்.
பேச்சொடு செய்கையும் வேண்டுமென்பார்.
கண்ணிற் சிறந்த விடுதலையைக்
கண்டிட வழிதனைக் காட்டிவந்தார்.

தமிழை வளர்த்திடப் பாடுபட்டார்.
தாய்மொழி ஆசையை ஊட்டிவிட்டார்.
அமுதாம் அவரது வார்த்தைகளை
அறிந்து செயலிலே காட்டிடுவோம்.

 

 அழ.வள்ளியப்பா: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இராயவரத்தில் 1922இல் பிறந்தார். (தோற்றம் 7-11-1922 மறைவு:16-3-1989) நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞரான இவர், 2000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர். குழந்தை இலக்கியத்தில் இவரது சாதனை மிகவும் அரிதான ஒன்று. எளிய தமிழ், இனிய சந்தம் கூடிய பாடல்களை குழந்தைகள் இன்றும் விரும்பிப் பாடுகின்றனர்.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

அண்ணன் தலையைக் கண்டு ஆனந்தம் அடைந்த அவுரங்கசீப் (Post No.4540)

Image of Shah jahan

Written by London Swaminathan 

 

Date: 24 DECEMBER 2017 

 

Time uploaded in London- 12-42

 

 

Post No. 4540

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

மொகலாயர் வரலாறு கொலைகார வரலாறு; அப்பாவை மகன் கொல்வது பரம்பரையாக நடந்தது; சஹோதர்களை சஹோதரர்கள் தீர்த்துக்கட்டுவதும் தொடர்ந்து நடந்தது.

 

நிக்கலோ மனூச்சி (Nicolao Manucci  1638- 1717) என்பவர் இதாலிய பயணி; அவர் இந்தியாவுக்கு வந்து மொகலாய மன்னர்களிடம் வேலை பார்த்தார். தாரா சிகோஹ், ஷா ஆலம், ராஜா ஜெய் சிங், கிராட் சிங் ஆக்யோர் சபைகளில் வேலை பார்த்தார். அவர் நிறைய சுவையான — சோகமான- விஷயங்களை எழுதிவைத்துள்ளார். இதோ ஒரு சோகக் கதை.

Image of Aurangazeb

ஷாஜஹானின் மகன் தாரா சிகோஹ்; அவருடைய தம்பி மதவெறி பிடித்த அவுரங்கசீப்.

 

மொகலாய மன்னன் ஷாஜஹானுக்கு பல புதல்வர், புதல்வியர் உண்டு. அவருக்கு அடுத்தாற்போல அரசு கட்டிலைப் பிடிப்பது யார் என்பதில் அவருடைய புதல்வர் தாரா ஷிகோஹுக்கும் அவுரங்கசீப்புக்கும் இடையே பெரிய போட்டி நடந்தது போட்டி அல்ல; யுத்தமே நடந்தது. ஷாஜஹானைச் சிறைப்பிடித்து ஆக்ரா  சிறையில் வைத்தனர். இங்கிருந்தவாறே தாஜ் மஹலைப் பார்த்துக்கொண்டு செத்துப்போ என்று விட்டனர்.

 

 

தாரா சுகோஹ், தோற்கடிக்கப்பட்ட செய்தியை ஒரு தூதன் அவுரங்கசீப்பிடம் தெரிவித்தான். ஆனால் தோற்றுப்போன தாரா ஓடிவிட்டதாகவும் சொன்னான். உடனே அவுரங்கசீப் ஒரு சபதம் செய்தான். அண்ணனைச் சிறைப்பிடித்து தலையை வெட்டி அவர்களுடைய தந்தையான ஷாஜஹானுக்கு அனுப்பிவைப்பேன் என்று வீர சபதம் எடுத்தான். இதை இதாலிய பயணி மனூச்சி அப்படியே எழுதி வைத்துள்ளான்.

அவுரங்க சீப்பின் துஷ்ட ஆசையும் நிறைவேறியது. தாராவின் தலையை அவன் முன்னால் கொண்டு வந்தனர். ஒரு கத்தியை எடுத்து மூன்று வெட்டு வெட்டினான் . இதை கண் முன் காட்டாமல் தூக்கிக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான்.

 

அவுரங்கசீப்பின் சஹோதரி (தாராவுக்கும் சஹோதரிதான்) ரோஷநாரா பேஹம் இந்தத் தலையை நமது தந்தை ஷாஜஹானிடம் கொண்டு காட்ட வேண்டும் என்று அவுரங்கசீப்பைத் தூண்டிவிட்டாள். அவள் அன்று மாலையே ஆக்ரா கோட்டையில் ஒரு விருந்தும் ஏற்பாடு செய்தாள்; தாரவைக் கொன்றதற்காக.

 

 

தலை வந்தபோது சிறைச் சாலையில் ஷாஜஹான் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தாரவின் தலையைப் பார்த்தவுடன்  ‘ஓ’ என்று கதறி ‘டின்னர் டேபிள்’ மீதே மயக்கம் போட்டு விழுந்தான்.

 

அவுரங்க சீப் அந்த தலையை மூன்றுமுறை வெட்டியபோது அந்தத் தலை ஹா, ஹா, ஹா என்று சிரித்ததாகவும் சொல்லுவர்.

 

ஆக்ராவில் தாஜ்மஹல் உள்ளேயுள்ள கல்லறையில் அந்தத் தலையைப் புதைக்குமாறு அவுரங்கசீப் கட்டளை இட்டதாக மனூச்சி எழுதியுள்ளார்.

அதே காலத்தில் இந்தியாவுக்கு வந்த பெர்னியர் என்ற மேல்நாட்டு யாத்ரீகரும் இதே சம்பவம் பற்றி எழுதிவைத்துள்ளார்.

 

 

தாராவின் மரண தண்டனையை நிறைவேற்றிய அவுரங்க சீப்பின் ஆட்கள், அவன் தலையை அவுரங்க சீப்பிடம் கொண்டுபோனபொது அதை ஹுஆமாயூன் கல்லறையில் புதைக்கச் சொன்னானாம்.

 

தாராவின் புகழைப் பாடும் பல பாடல்களை மக்கள் நாட்டுப் புறக் கதைப் பாடலாக பாடியதாகவும் அதைத் தடுக்க அவுரங்கசீப் முயன்றும் முடியவில்லை என்றும் அக்கால வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

 

தாராவின் தலையை ஒரு அழகான பெட்டியில் வைத்து உங்கள் மகன் உங்களுக்கு அனுப்பிய பரிசு என்று படைவீரர்களிடம் சொல்லச் சொன்னானாம். அவர்கள் அப்படிச் சொன்னபோது ‘அட, என் மகன் என்னை ஞாபகமாவது வைத்துக் கொண்டிருக்கிறானே என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்தானாம். தாராவின் தலை ரத்தவெள்ளத்தில் இருந்ததைக் கண்டு மூர்ச்சை அடைந்தானாம்.

 

தாராவின் தலையை சீவுவதற்கு முன்னர் அவனை விலங்கு மாட்டி யானை மீது வைத்து ஊர்வலமும் விட்டானாம் அவுரங்கசீப்.

 

தாராவின் மரணம் இந்துக்களுக்கு ஒரு பெரிய இழப்பு. அவன் ஏழாவது சீக்கிய குருவின் நண்பன். இந்து மத உபநிஷத்துகளை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவன்

 

–சுபம்–