3 கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து! (Post No.4519)

Date: 20  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-54 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4519

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

15-12-17 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 43வது) கட்டுரை

மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து!

ச.நாகராஜன்

அமெரிக்காவில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் போஸ்டன் நகரில் மிகவும் பிரபலமான நைட் கிளப்பாகத் திகழ்ந்தது கோகனட் க்ரோவ் என்னும் க்ளப்.

 

இதில் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி கோரமான தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதன் காரணம் அதிகாரபூர்வமாக இன்று வரை யாருக்கும் தெரியாது. ஆனால் பல ஊகங்கள் இது பற்றி உண்டு. தப்பான வயரிங் தான் இதற்குக் காரணம் என்றும் ஒரு பல்பை மாற்றும் போது ஏற்பட்ட மின்கசிவினால் இந்த மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது என்றும் சிலர் கூறுவர்.

 

தீ விபத்து ஏற்பட்ட நாளில் அதிலிருந்த ஹாலில் அதில் இருக்கக் கூடிய நபர்களுக்கு மேல் மிகவும் அதிகமாகக் கூட்டம் இருந்தது. ஹாலின் பக்கவாட்டில் கதவுகள் இருந்த போதும் அவை வெளிப்புறத்தில் தாளிடப்பட்டிருந்தன. ஆகவே உள்ளிருப்போர் கதவுகளைத் திறக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

 

இன்னொரு காரணம் தீ பற்றிய் எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் அவசர வழி வழியாக அனைவரும் தப்ப முயன்றனர்.

 

ஆனால் கிளப்பில் இருந்த ஒரு முட்டாள் அவசர வழி கதவுகளைத் திறக்க முடியாதபடி அடைத்து விட்டான். அதன் காரணம் தீ என்ற சாக்கில் கிளப்பிற்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் எல்லோரும் ஓடி விட்டால் என்ன செய்வது என்று அவன் முட்டாள்தனமாக எண்ணியதே காரணம்.

ஹாலில் இருந்தவர்களில் 492 பேர்கள் தீயினால் கருகி மாண்டனர். அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரும் தீ விபத்து இது தான்.

 

(28-11-2017 அன்று நடந்த) இதன் 75வது நினைவு தினத்தை ஒட்டி  இந்த ஹாலில் தீ விபத்தில் அகப்பட்டும் கூட அதிர்ஷ்டவசமாகத் தப்பி மீண்ட 91 வயதான மார்ஷல் கோல் என்பவர் இதைப் பற்றி நினைவு கூர்ந்து பேசுகையில், “கோரமான அந்த விபத்தில் பிழைத்து மீண்டதிலிருந்து எங்கு போனாலும் முதலில் வெளியேறும் வழிகள் எங்கு உள்ளன கதவுகள் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்வதைத் தவறாமல் செய்வது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது” என்றார்.

இந்தத் தீ விபத்தின் கோரமான இழப்பு ஒரு புறம் இருக்க, இதனால் மூன்று பெரிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தது.

600 பேர்கள் இருக்கக் கூடிய ஹாலில் ஆயிரம் பேருக்கு மேல் அன்று குழுமி இருந்தவர்களில் பெரும்பாலோர் தம்பதிகளாக ஜோடி ஜோடியாக வந்திருந்தனர்.

திடீரென்று தீப்பொறிகள் தென்பட்டன. அது என்னவென்று உணருவதற்கு முன்னர் ஹாலே தீ ஜுவாலைகளால் பற்றி எரிய ஆரம்பித்தது.

 

492 பேர் இறந்ததோடு 150 பேர் தீக்காயத்தினால் பீடிக்கப்பட்டனர். போஸ்டன் சிடி ஹாஸ்பிடலில் தீ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 300 பேர் அட்மிட் செய்யப்பட்டனர். மசாசுசெட்ஸ் ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு இன்னொரு நூறு பேர் எடுத்துச் செல்லப்பட்டனர்.

 

அங்கிருந்த பிளாஸ்டிக் சர்ஜன் ப்ராட்ஃபோர்ட் கானான் (Bradford Cannon) என்பவர் தீக்காயங்களுக்கு ஒரு நவீன சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தார். சாதாரணமாக தீக்காயங்களுக்கு டைகள் மற்றும் டேனிக் ஆசிட் ஆகியவையே உடனடி சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும். அதற்கு பதில் அவர் காஸ்  (gauze)-  உடன்  பெட்ரோலியம் ஜெல்லியை போரிக் ஆசிட் மீது தடவி அதைப் பயன்படுத்தினார். அவர்கள் தீயினால் வெந்திருந்த சதைப் பகுதிகளை அகற்றி தோலை ஒட்டும் புது முறையைக் கையாண்டார். கானான் இந்த சிகிச்சை முறையை பிலடெல்பியாவிலும் பின்னர் வேலி ஃபோர்ஜ் ஜெனரல் ஹாஸ்பிடலில் கையாண்டார்.

 

அது மட்டுமின்றி அந்த 500 பேர்களும் தவித்த தவிப்பு உளவியல் ரீதியாக அவர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தது. அந்த வழிமுறைகள் உலகெங்கும் இன்று தீ விபத்துக் காயம் ஏற்பட்டவரிடம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் இந்த நவீன சிகிச்சை முறையால் பிற்காலத்தில் நலம் அடைந்தனர்.

 

 

இதைத் தொடர்ந்து இரண்டாவது கண்டுபிடிப்பு உளவியல் ரீதியில் அமைந்தது.

இந்தப் பெரிய தீ விபத்தில் உயிர் பிழைத்தோரையும் , போரில் தீக்காயம் பட்ட இராணுவத்தினரையும் உளவியலாளர் எரிச் லிண்டிமான் (Erich Lindemann) முறையாக பேட்டி எடுத்து விவரங்களைச் சேகரித்தார். இப்படி ஒரு துயரமான சம்பவத்தில் அகப்பட்டோரின் துக்கம் எப்படி இருக்கும், அதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது தான் மணமுடித்திருந்த ஒரு இளம் வயதுப் பெண் தன் கணவனை அந்தத் தீவிபத்தில் இழந்திருந்தார். அந்தக் கணவன் அவளுடன் ஒரு சண்டையைப் போட்டு விட்டு அந்த கிளப்புக்குச் சென்றிருந்தான். இன்னொருவரோ தன் இளம் வயது மனைவியை அந்த விபத்தில் இழந்திருந்தார். அவளைக் காப்பாற்றுமுன்னர் அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார்.

இப்படிப் பல துயரகரமான நிகழ்வுகளையும் அதையொட்டிய மனித உணர்வுகளையும் தொகுத்த லிண்டிமான் உளவியல் துறையில் துக்கம் அடைந்தோருக்கான உளவியல் சிகிச்சை முறையைக் கண்டார். அதற்கு இந்த தீ விபத்து தான் வழி வகுத்தது.

 

மூன்றாவது கண்டுபிடிப்பாக ஒரு  விபத்தில் காயம்பட்டோர்  அது நடந்து முடிந்தவுடன் எப்படி தீராத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பதை தீவிபத்தில் உயிர்பிழைத்தவர்களைச் சந்தித்து அலெக்ஸாண்ரா ஆட்லர் (Alexandra Adler) என்ற பெண்மணி ஒரு ஆய்வு நடத்தினார். இப்படிப்பட்ட ஒரு ஆய்வை முதலில் செய்த உளவியலாளர் இவர் தான். கோகனட் கிளப் தீ விபத்தை வைத்து இவர் செய்த இவரது உளவியல் ஆய்வு பெரிய மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆய்வுப் பேப்பர்களைக் கொண்டிருந்தது. 2001ஆம் ஆண்டில் டாக்டர் ஆட்லர் மறைந்தார். அவர் மறைவை ஒட்டிய இரங்கல் செய்தியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் உல்ப்கேங் சாக்ஸன் என்ற நிபுணர், “490 பேருக்கு மேல் கொல்லப்பட்ட விபத்தில் அங்கிருந்து மீண்ட பலருக்கு மூளை நிரந்தரமாக சேதம் அடைந்திருந்தது. அவர்கள் அனைவரையும் சோதனை செய்த ஆட்லர் மன அழுத்தமும், கவலையும் எப்படி ஒரு விபத்தைத் தொடர்ந்து பலரையும் நிரந்தரமாக பாதிக்கிறது, அதை எப்படிப் போக்குவது என்பதையும் ஆராய்ந்தார். அதன் பலனாகவே இரண்டாம் உலகப் போரில் காயம்பட்டிருந்த பல வீரர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடிந்தது” என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

 

 

இந்த மாபெரும் தீ விபத்து உலகினருக்குத் தரும் செய்தி என்ன?

ஜனசந்தடி அல்லது கூட்டம் அதிகமுள்ள ஒரு இடத்திற்குப் போகும் போது அங்கு எங்கெல்லாம் வெளியேறும் வழிகள் உள்ளன, எப்படி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது ஆகியவற்றைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில், இது பெண்களையும், குழந்தைகளையும், முதியோரையும் தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து செல்வோர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்பதைச் சொல்ல தேவையே இல்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு உடை விஷயத்தில் எப்போதுமே அக்கறை இல்லை.

 

அவர் மனைவிக்கு இதில் பெரிதும் வருத்தம்.

நன்றாக உடை உடுத்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி அவர் சொல்வார்.

 

“எதற்காக? என்னை எல்லோருக்கும் அங்கே நன்றாகத் தெரியும்” என்று சொல்லி மனைவியின் வாயை மூடி விடுவார் ஐன்ஸ்டீன்.

 

ஒரு சமயம் பெரிய மாநாட்டிற்கு மனைவியுடன் அவர் செல்ல வேண்டியிருந்தது.

 

வழக்கம் போல அவர் மனைவி, “நன்றாக உடை உடுத்திக் கொண்டு போக வேண்டும்” என்று ஆரம்பித்தார்.

வழக்கம் போல ஐன்ஸ்டீனும்,” எதற்காக? அங்கே எல்லோருக்கும் என்னைத் தெரியும்” என்றார்.

உடனே அவர் மனைவி, “ என்னை அங்கே யாருக்கும் தெரியாதே!” என்று பதில் சொன்னார்!

 

ஐன்ஸ்டீன் சிரித்தார். நல்ல ஆடைகளை அணிந்து கொண்டார்!

***

 

 

ரிஷிகள் ‘க்விஸ்’, கேள்வி-பதில் (Post No.4518)

Written by London Swaminathan 

 

Date: 19 DECEMBER 2017 

 

Time uploaded in London-  21-49

 

 

Post No. 4518

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உங்களுக்கு ரிஷிகள் பற்றித் தெரியுமா? இதோ இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்:-

 

1.வசிஷ்டர் வாயினால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கிய ரிஷி யார்?

 

2.குள்ளமான ரிஷி யார்?

 

3.கோபத்துக்குப் பெயர்பெற்ற ரிஷி யார்?

 

4.நாராயணா என்ற கோஷத்துடன் த்ரிலோக சஞ்சாரம் செய்பவர் யார்?

 

5.சப்த ரிஷிகள் யார், யார்?

 

6.காலில் கண்ணுடைய ரிஷி யார்?

 

7.கொம்புள்ள ரிஷி யார்?

 

 

8.காமதேனுவின் சொந்தக்கார ரிஷி யார்?

 

 

9.லோபாமுத்ராவின் கணவர் (ரிஷி) யார்?

 

10.கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு- என்ற மொழி எந்த ரிஷியினால் ஏற்பட்டது?

 

11.ரிக் வேதத்தின் 2,3,4,5,6,7 மண்டலங்களுக்குரிய ரிஷிகள் யார்?

 

12.அனசூயையின் கணவர் (ரிஷி) யார்?

 

13.அஹல்யாவின் கணவர் (ரிஷி) யார்?

 

  1. கடலைக் குடித்த ரிஷி யார்?

15.ஆஜ்மீர் என்ற நகரம் எந்த ரிஷியின் பெயரில் உள்ளது?

 

16.கடலில் தோன்றும் வடவைத் தீக்கு காரணமான ரிஷி யார்?

 

17.வியாசர் 4 வேதங்களையும் எந்த 4 ரிஷிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்?

18.த்ரிமூர்த்திகளின் உருவம் உடைய ரிஷி யார்?

19.மருத்துவத்தின் தந்தை எனப்படும் ரிஷி யார்?

20.புற்றிலிருந்து தோன்றிய ரிஷி யார்?

 

xxxx

 

விடை:

1.விஸ்வாமித்ரர், 2.அகஸ்தியர், 3.துர்வாசர், 4.நாரதர் 5. சப்த ரிஷிகள்:அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரஸர் 6.ப்ருகு, 7.ரிஷ்ய ச்ருங்கர், 8.வசிஷ்டர், 9.அகஸ்தியர் 10.பரத்வாஜர் (மூன்று ஜன்மங்கள் வாழ்ந்து 3 வேதங்களைக் கற்றர். ஆயினும் அது கைமண் அளவே), 11. ரிக் வேத மண்டல ரிஷிகள்–இரண்டாம் மண்டலம்- க்ருத்சமடர்/ப்ருகு, மூன்றாம் மண்டலம்-  – விஸ்வாமித்ரர் , நான்காம் மண்டலம்- வாமதேவ கௌதம-  , ஐந்தாம் மண்டலம்-  -அத்ரி, ஆ றாம் மண்டலம்- – பரத்வாஜர் ஏழாம் மண்டலம்-  – வசிஷ்டர்: 12. அத்ரி மஹரிஷி. 13.அஹல்யாவின் கணவர் கௌதம ரிஷி 14.அகஸ்தியர் 15.அஜாமீடர் (கண்வ மஹரிஷியின் தந்தை), 16. ஔர்வ மஹரிஷி 17.நான்கு வேதங்களை வியாசரிடம் கற்ற ரிஷிகள்- வைஸம்பாயனர்(யஜூர்), ஜைமினி (சாமவேதம்), பைலர் (ரிக்), சுமந்து (அதர்வண), 18. தத்தாத்ரேய மகரிஷி 19.தன்வந்திரி மஹரிஷி, 20. வால்மீகி ரிஷி

 

–subham–

 

நிகழ்காலத்தில் வாழுங்கள்: சாணக்கியன் புத்திமதி (Post No.4517)

Written by London Swaminathan 

 

Date: 19 DECEMBER 2017 

 

Time uploaded in London-  20-05

 

 

Post No. 4517

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதியும் சாணக்கியனும் ஒரே கருத்துக்களை சொல்லுவதைப் படிக்கும் போது இனிக்கிறது. இந்திய சிந்தனை 2300 ஆண்டுகளுக்கு முன்ன்ரும் ஒன்றே; பாரதி காலத்திலும் ஒன்றே.

 

சென்றது மீளாது

 

சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்றுவிளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தீமையெலாம் அழிந்துபோம் திரும்பிவாரா — பாரதி பாடல்

 

 

சாணக்கியன் சொல்லுகிறான்:-

கடந்தகாலத்தை எண்ணி வருந்தாதே;

எதிர்காலத்தை எண்ணி கவலைப் படாதே

புத்திசாலிகள் நிகழ்காலத்துக்கு ஏற்ப நடப்பார்கள்

 

கதே ஸோகோ ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத்

வர்த்தமானேன காலேன ப்ரவர்தந்தே விசக்ஷணாஹா

–சாணக்ய நீதி 13-2

சீன தத்துவ ஞானியான லாவோட்ஸி கிட்டத்தட்ட புத்தர், மஹாவீரர் ஆகிய ஞானிகளின் சம காலத்திய ஞானி. அவர் மிகவும் அழகாகச் சொல்கிறார்:

நீ மனத்தொய்வுடன் காணப்பட்டால் நீ கடந்த காலத்தில் வாழ்கிறாய்;

 

நீ கவலையுடன் காணப்பட்டால் நீ எதிர்காலத்தில் வாழ்கிறாய் என்று அர்த்தம்;

 

நீ அமைதியுடன் காணப்பட்டால் நீ நிகழ் காலத்தில் வாழ்கிறாய் என்று தெரிகிறது.

ஆக அறிஞர்கள் சொல்லுவது இதுதான்:

 

கடந்த காலத்தில் நிகழ்ந்தனவற்றை எண்ணி எண்ணி வருந்தாதே; மனக் கலக்கம் அடையாதே.

எதிர்காலத்தில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று கவலை தோய்ந்தமுகத்துடன் இராதே.

கிடைத்த பொழுதை, கண் முன்னால் நிற்கும் நிகழ் காலத்தை, எப்படி நன்கு பயன்படுத்துவது, எப்படி இன்பமாகப் பயன்படுத்த முடியும் என்று சிந்திக்கவும்; அப்படி இருந்தால் மகிழ்ச்சி பொங்கும்; கவலை மறையும்; மனத் தொய்வு நீங்கும்.

 

பாரதி, சாணக்கியன், சீன தத்துவ ஞானி லாவோட்ஸீ ஆகிய மூவரும் சொன்ன பிறகும் நமக்கு என்ன தயக்கம்?

 

நிகழ் காலத்தில் வாழ்வோம்!

 

–சுபம்-

 

Part 2 of Tirukkural and Gita compared by Rev G U Pope and VRR Dikshitar (Post No.4516)

 

Tirukkural and Bhagavad Gita compared by Rev G U Pope and VRR Dikshitar -Part 2

 

Compiled by London Swaminathan 

 

Date: 19 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-53 am

 

 

Post No. 4516

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Following is from the book STUDIES IN TAMIL LITERATURE, V R RAMACHANDRA DIKSHITAR, LECTURER IN INDIAN HISTORY, UNIVERSITY OF MADRAS, YEAR 1936)

 

KURAL 53

There is no lack within the house, where wife in worth excels;

There is no luck within the house, where wife dishonoured dwells

 

Manu gives expression to similar sentiments:

Where women are honoured, there the God dwells; in the houses where they are not honoured, everything done become fruitless- Manu 3-56 also 9-26

xxx

Kural 57

Of what avail is watch and ward?

Honour is a woman’s safest guard.

Similar ideas are found in Manava Dharma Sastra.

Those women who are bound by restraints by her won devoted kinsmen are not truly protected; those who guard themselves are well protected- Mnau 9-12

xxxx

Kural 58

If wife be wholly true to him who gained her as his bride,

Great glory gains she in the world where gods in bliss abide.

Manu furnishes a parallel:

She who will not abuse her rights either by mind, speech or body, attains the world of Pativratas (holy chaste women) and is styled Saadhvi or the good by the righteous- Manu5-165

xxx

Kural 82

Though food of immortality should crown the board,

Feasting alone, the guests without unfed, is thing abhorred.

Similar ides are found in the Dharmasastra:

A householder is to partake of the food remaining after he has fed the gods, sages, guests, manes, and household deities. He who prepares food for the sake of self, simply eats sin—Manu 3-117, also 118, 106

(Also in Bhagavad Gita 3-13)

xxx

Kural 91

Pleasant words are words with all pervading love that burn;

words from his guileless mouth who can the very truth discerns.

The same ideas occur in Manu Smrti:

Speak the Truth; speak pleasant things.

Do not speak unpleasant and false words; speak pleasant and truthful words- Manu 4-138

xxx

Kural 121

Self Control places a man among gods; the want of it sends him to the hideous darkness of hell.

Manu says that the indulgence of sense organs leads to evil without doubt; having controlled them, one attains salvation- Manu 2-93

xxx

Kural 134

Though he forget, the Brahmin may regain his Vedic lore;

Failing in ‘decorum due’, birthright is gone for evermore.

In the Laws of Manu, it is said that a Brahmin who is devoid of decorum will not attain the fruits of the study of the Vedas. On the other hand, one who observes decorum will reap the full reward—Manu 1-109

 

xxx

Kural 144

How great so’ver they be, what gain have they of life,

Who not a whit reflecting, seek a neighbour’s wife?

Manu’s remarks are appropriate:

There is no other thing which results in diminution of life than the fact of a person’s criminal intimacy with the neighbour’s wife- Manu 4-134

xxx

 

V R R Dikshitar gives 85 more comparisons. I will list all of them.

——to be continued

–SUBHAM–

 

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின்…………….(Post No.4515)

Date: 19  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-37 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4515

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அனுபவத்தின் மதிப்பு!

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும்!

 

.நாகராஜன்

 

1

அனுபவத்தைப் போன்ற சிறந்த ஆசான் கிடையாது என்பது முதுமொழி.

நிறையப் படித்தவனை விட அனுபவத்தால் தன் அறிவைப் பகிர்ந்து கொள்பவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி மதிப்பு உண்டு.

காஞ்சி பெரியவாள் கண்ணதாசனைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியதாக கவிஞரிடம் சொன்ன போது ஓடோடி வந்து அவரைத் தரிசித்தார்.

அவரிடம் பெரியவாள் பல விஷயங்களைப் பேசினார்.அப்போது அவர் கூறிய ஒரு முக்கிய விஷயம்: “என்னைப் போன்றவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்வதை விட உங்களைப் போன்றவர்கள் அனுபவத்துடன் அதைக் குழைத்துச் சொன்னால் அது பெரிதும் வரவேற்கப்பட்டு நலம் பயக்கும்” என்றார் பெரியவாள்.

கண்ணதாசனின் இந்தச் சந்திப்பு பற்றித் தனியே படித்தால் பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கண்ணதாசன் தன் அனுபவத்தை அப்படியே உலக மக்களுடன் ‘சத்திய சோதனை’ வழியில் பகிர்ந்து கொண்டார்.

திராவிடப் பிசாசுகளின் கூட்டத்தில் தவறி விழுந்தவர் – பன்றிகளின் கூட்டத்தில் தவறி விழுந்த புள்ளி மான் போல விழுந்தவர் – பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மீண்டார்.

அர்த்தமுள்ள இந்து மதத்தைக் கண்டார்.

அவர் பிறந்த தேதி : 24-6-1927.

மறைந்த  தேதி : 17-10-1981

ஆக, அவர் வாழ்ந்த காலம் ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே!

இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர்!

திராவிடப் பிசாசுகளின் ‘சங்காத்தம்’ அவர் ஆயுளின் மீது ‘கை வைத்து விட்டது’.

1976ஆம் ஆண்டு ஜூன் மாத ‘கண்ணதாசன்’ இலக்கிய மாத இதழில் அவர் தனது ஐம்பதாம் ஆண்டை இப்படி வரவேற்கிறார்:

50

இறந்த நாள் அனைத்தும் எண்ணி

இனிவரும் நாளை எண்ண

பிறந்த நாள் காணு கின்றோம்

பிழை இலை: ஆயின் வாழ்வில்

சிறந்த நாள் கணக்குப் பார்த்துத்

தேர்ந்து கொண் டாடல் வேண்டும்

பறந்த நாள் இனிவ ராது

பாக்கி நாள் நன்னா ளாக!

 

50

ஐம்புலன் ரசித்த வாழ்வு

    அறம்மறம் நிறைந்த வாழ்வு

ஐம்பொறி துடித்த வாழ்வு

     ஆயிரம் படித்த வாழ்வு

ஐம்பதை நெருங்கும் போது

     அகம்புறம் கணக்குப் பார்த்து

பைம்புகழ் இனியும் காண

      பரமனே அருள்வா னாக!

50

ஆண்டுகள் ஐம்ப தாகும்

     ஆரம்பம் திருநா ளாகும்

ஆண்டுகள் அறுபதா னால்

      அந்தியில் நன்னா ளாகும்

ஈண்டுயான் ஐம்ப தாண்டை

      இனிதுற வரவேற் கின்றேன்

நீண்டநாள் வாழ ஆசை

   நிமலன் என் நினைக்கின் றானோ!

 

நீண்ட நாள் வாழ ஆசைப் பட்டார் கவிஞர்! ஆனால் நிமலனோ அவருக்கு இன்னும் ஒரு நான்கு ஆண்டுகள் மட்டுமே கொடுத்தான்!

பின்னாளில் அவர் மிகவும் வருந்திப் பாடினார் இப்படி:

சேராத கூட்டத்தில் என்னை மறந்து நான்

     சேர்ந்தேன் அந்த நாளே

செறிவான புத்தியை தவறான பாதையில்

      செலுத்தினேன் அந்த நாளே

பாராத பூமியைப் பார்க்கிறேன் இப்போது

     பார்த்தனைக் காத்த நாதா

பதிநினது கதை புகல உடல் நிலையை நீ கொஞ்சம்

      பார்த்தருள் கிருஷ்ண காந்தா!

கண்ணனை நினைந்து மனமுருகிப் பாடிய கவிஞரின் பாடலை அழியாமல் காக்கிறான் கிருஷ்ணகாந்தன். அவரது புகழுடல் நிற்கப் பொய்யுடல் போய் விட்டது கால வெள்ளத்தில்!

என் வாழ்வைப் பார்க்காதே; என் பாடலைப் பார்த்து அதன் படி நட என்பது அவரே கூறிய அன்புரை.

ஆக, வனவாசத்தில் அவர் பார்த்த பிசாசுகளை நாம் படித்துப் புரிந்து கொள்ளலாம். அவர் மனவாசத்தில் கண்ட சத்தியத்தில் அவர் வாழ்வு புனரமைக்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம்.

அனுபவம் பேசியதால், அருந்தமிழில் அதைக் குழைத்துக் கொடுத்ததால் அதை நாம் படிக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

ஆக கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் அனுபவத்தின் அடிப்படையிலான அற்புத உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்; இனி,  காலத்தில் சற்றுப் பின்னோக்கிப் போனால் நம் முன் வருவது இன்னொரு அனுபவஸ்தர். அருணகிரிநாதர்!

2

வாழ்வின் முற்பகுதியில் பெண்களின் மையலில் மனதையும் உடலையும் இழந்தவர் அருணகிரிநாதர். ஆனால் அனுபவம் தந்த பாடத்தால் மனம் வருந்தி, திருந்தி வேலனின் அருளை வேண்டினார்.

சும்மா இரு சொல் அற என்றவுடன்அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே என மயங்கிப் பின் தெளிவு பெற்றார்.

முருகனின் புகழைப் புதிய தமிழ் நடையில், புத்தமுதமாகக் கொட்டினார்.

ஆனால் தன் அனுபவங்களை ஆங்காங்கே கொட்டத் தவறவில்லை.

வேசியரின் விளையாட்டுக்களைப் பிட்டுப் பிட்டு வைத்து விட்டார்.

குலமகளிரின் புகழையும் கொண்டாடிப் பாடினார்.

நமக்குக் கிடைத்திருக்கும் ஏறத்தாழ 1311 பாடல்களில் எங்கு தொட்டாலும் அவர் தன்னிரக்கப்பட்டு புலம்பும் புலம்பலைப் பார்க்கிறோம்:

கொள்ளை யாசைக் காரிகள் பாதக

     வல்ல மாயக் காரிகள் சூறைகள்

     கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள்   விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்

      வெல்லும் மோகக் காரிகள் சூதுசொல்

      கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு மவர்போலே

உள்ள நோவைத் தேயுற வாடியர்

       அல்லை நேரொப் பாமன தோஷிகள்

       உள்வி ரோதக்காரிகள் மாயையி     லுழல்நாயேன்

உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு

       கையு நீபத் தார் முக மாறுமுன்

       உள்ள ஞானப் போதமு நீதர        வருவாயே

             (சிதம்பரத்தில் அருளிய பாடல் இது)

மதனச் சொற் காரக் காரிகள் பவளக் கொப்பாடச் சீறிகள்

    மருளப் பட்டாடைக் காரிகளழகாக

   மவுனச் சுட்டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக்காரிகள்

    வகைமுத்துச் சாரச் சூடிகள்               விலைமாதர்

குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்

     குசலைக்கொட் சூலைக் காலிகள்     மயல்மேலாய்க்

    கொளுவிக் கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை

     குமுதப் பொற் பாதச் சேவையி லருள்வாயே!

        (சீர்காழியில் அருளிய பாடல் இது)

இப்படித் தோட்ட தொட்ட இடம் எல்லாம் தனது பழைய வாழ்வை நினைத்து வருந்தி முருகனின் அருள் நிரந்தரம் வேண்டி உய்யவே அருள் தாராய் என அவர் பாடும் பாடல்களைப் பார்க்கிறோம்.

திருப்புகழ் தரும் செய்தியைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.

 

இனி, இதே போல வாழ்வின் முற்பகுதியில் சேரக் கூடாதோருடன் சேர்ந்து சீரழிந்து பின்னர் சிவபிரானின் அருளால் தெளிவு பெற்ற அப்பரைப் பார்ப்போம்.

3

 

சமணர் தம் கூட்டத்தில் சேர்ந்து தன் இளமைக் காலத்தை வீணாக்கியதை நினைத்து பல இடங்களில் நாவுக்கரசர் தம்மை நொந்து கொள்கிறார்.

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்

சேல் உலாம் பழன வேலித் திருக் கொண்டீச்சுரத்து உளானே

என்று இப்படி, ‘குறிக்கோள் இலாது கெட்டேனே என்று மனம் வருந்திப் பாடுகிறார்.

பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர்தங்கள்

மொழிவழி ஓடி முடிவேன் முடியாமைக் காத்துக் கொண்டாய்

என்றும்,

 

மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும்

  மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும்

சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்

   மெய் என்று கருதாதே போத நெஞ்சே

என்றும் அமணர் தம் சேர்க்கை பற்றிப் பாடுகிறார் அப்பர்.

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர்

  சொல் கேட்டு துவர் வாய்க் கொண்டு

என்னாகத் திரிதந்து ஈங்கு இருகை

   ஏற்றிட உண்ட ஏழையேன் நான்

பொன் ஆகத்து அடியேனைப் புகப்

    பெய்து பொருட்படுத்த ஆரூரரை

என் ஆகத்து இருத்தாதே ஏதன்

 போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே

என்று வருந்துகின்றவர்

சிவபெருமானின் அருளைப் பெற

வம்மின், வம்மின், பணிமின், பணிமின். தொழுமின், தொழுமின் என்று பல முறையும் பற்பல பாடல்களில் கூறுகிறார்.

தன் அனுபவத்தைக் கூறி நம்மை நல் வழிப்படுத்த அவர் பாடி அறைகூவல் விடுக்கும் பாங்கு நம்மை நெகிழ வைக்கிறது.

அப்பரின் அனுபவ வாக்கால், அதில் இருக்கும் சத்திய ஒளியால், அவர் அதில் குழைத்துத் தரும் சிவபக்தியால் சிவனின் அருளைப் பெற முயல்கிறோம்.

 

4

 

இங்கு நாம் பார்க்கும் மூவரிடமும் அனுபவம் பேசுகிறது. அதை உண்மையில் குழைத்துத் தரும் போது நாம் சற்று பிரமித்து உண்மையை உணரத் தலைப்படுகிறோம்.

கண்ணதாசன் திராவிட மாயையில் சிக்கிச் சீரழிந்தார். சீரழிக்கப்பட்டார்.

தமிழா, ஜாக்கிரதை மோசம் போய் விடுவாய்; அவர்களை கனவிலும் நினைக்காதே என்று நமக்கு விழிப்புணர்ச்சி ஊட்டுகிறார்.

அவர்களின் கள்ள விளையாட்டை எல்லாம் தனது கவிதையிலும், கட்டுரையிலும், கதையிலும் கூறி நம்மை எச்சரித்தார்.

கண்ணதாசனின் கதறல் அர்த்தமுள்ள கதறலாக மிளிர்ந்தது.

அருணகிரிநாதர் தன் அனுபவத்தைக் கூறி வேசையரைத் திட்டித் தன் இழிந்த வாழ்க்கையையும் சுட்டிக் காட்டி நம்மை எச்சரித்துக் காக்கிறார்.

அவரது புலம்பல் பொருள் பொதிந்த புலம்பல் ஆயிற்று.

அடுத்து அப்பர் பிரான் தன் வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தில் கூடாதோருடன் சேர்ந்து கூத்தடித்தேனே என்று வருந்திக் கூறி, எழுமின், வம்மின், சிவனைத் தொழுமின் என்று அறைகூவல் விடுக்கும் போது அவரது சொல்லெல்லாம் பொருள் பொதிந்த அருள் சொல்லாக ஒளிர்கிறது.

அவரது அறைகூவல் அர்த்தமுள்ள சிவன்கூவலாக மிளிர்கிறது.

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும் அனுபவத்தின் விளைவு.

அதைப் பற்றி, காஞ்சிப் பெரியவர் கூறியது சத்திய வாக்கு.

     சாதாரணமாக சாசுவத உண்மைகளை எவ்வளவு பெரியவர் கூறினாலும், அதற்கான மதிப்பை விட, அதை அனுபவப்பட்டோர் தம் அனுபவத்துடன் குழைத்துக் கொடுத்தால் அதன் மதிப்பே தனி தான்.

இது தான் உண்மை. அன்றும் என்றும்.

அப்பரின் காலமானாலும் சரி, அருணகிரிநாதரின் காலமானாலும் சரி, கவியரசு கண்ணதாசனின் காலமானாலும் சரி அதுவே உண்மை!

அவர்களின் அனுபவத்தால் நமது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம், இல்லையா!

****

 

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 9, நாமக்கல் கவிஞர் பாடல்கள் (Post No4514)

Date: 19  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-58 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4514

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 9

  பாடல்கள் 52 முதல் 61

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 52 முதல் 61

 

 

பாரதி பாட்டு

 

அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்

அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்

பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,
‘நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை

நீக்காமல் விடுவதில்லை!’ எனமுன் வந்து
துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்

தூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.

படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்

பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்

துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,
‘எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை

இப்பொழுதே இக்கணமே!’ என்றென் றார்த்திங்(கு)
அடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்

அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்!

புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்

புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்
சக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே

தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி
எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி

‘இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!’ என்று
பக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்

பண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.

எத்தாலும் பணந்தேடி இன்பம் நாடி

உண்டுடுத்தே இறப்பதனை இகழ்ந்து தள்ளிப்
பித்தாகித் தான்பிறந்த பரத நாட்டின்

பிணிவீட்டல் ஒன்றினுக்கே பாடிப் பாடி
முத்தாதி மணிகளெனும் சொற்க ளோடு

முப்பழத்தில் சுவைகூட்டி முனிவி லாது
சத்தான வீரத்தின் சாறும் சேர்த்துக்

கவிசமைத்த பாரதியின் தகைமை என்னே!

நடித்தொழுகித் துதிபாடி நலங்கள் நாடி

நரைத்திறந்து மறைந்திடும்நா வலர்போ லன்றி
வெடித்தெழுந்த பக்தியோடு பரத நாட்டின்

விடுதலைக்குப் பாடுவதே வெறியாய்க் கொண்டான்
இடித்தெழுந்து தேன்பொழியும் சொற்க ளோடும்

இளங்கதிரும் முழுமதியும் இணைந்தா லென்னப்
பொடித்துடலம் புளகமுற அச்சம் போக்கிப்

புகழ்புரியும் பாரதியின் புலமை தானே.

‘மேனாட்டுப் புதுமொழிகள் வளர்ந்து நாளும்

மிகக்கொழுத்துப் பளபளத்து மேன்மை மேவ

மிக்கசுதைப் பழந்தமிழ்த்தாய் மெலிந்தா’ளென்றும்
தாய்நாட்டைத் தமிழ்மொழியை மறந்தீர் ஐயோ!

தமிழர்களே! தளதளத்து மூச்சு வாங்கித்

தலைவணங்கி உடல்சுகித்தீர் தவத்தால் மிக்க
வானாட்டுத் தேவர்களும் அறிந்தி டாத

வளமிகுத்துச் செழுசெழுத்து வாழ்ந்த நாட்டை

வறுமைதரும் அடிமையினில் வைத்தீ ரென்று
பாநாட்டிப் பலவழியிற் பாடிப் பாடிப்

படித்தவுடன் பதைபதைக்க வீர மூட்டும்

பாரதியின் பாடல்களின் பண்தான் என்னே!

“பாலொழுகும் சிறுகுதலை மகனைப் பார்த்துப்

‘படையெடுத்தார் பகையாளர்; மகனே! நீபோய்
வேலொழுகும் போர்களத்தில் வெல்வா யன்றேல்

வெம்படையை மருமத்தில் வாங்கென்’ றேவும்
சீலமிகும் பெண்மணிகள் திகழ்ந்த நாட்டைச்

சிற்றடிமைக் கொப்பிவிற்றுத் தின்றீர்!” என்று
தாலுழுது பறைசாற்றித் தமிழ்ப்பா வோதித்

தட்டியெழப் பாரதிதான் கவிசெய் தானே!

‘அருமகனைத் தேர்க்காலில் அரைத்த வேந்தும்

பழியஞ்சித் தன்கையை அரிந்த கோனும்
தருமமிலை கோவலனைக் கொன்ற தென்று

தானறிந்த அக்கணமே சவமாய் வீழ்ந்த
பெருமையுள்ள திறல்வேந்தர் பின்னே வந்தீர்

பித்தடிமைக் குற்றேவல் பிழைத்தீர்’ என்றே
உருகிமனம் விரிந்துயரும் கவிக களாலே

உணர்வளித்த பாரதியின் உரைதான் என்னே!

பாரிமுதற் சடையப்ப வள்ள லென்று

பாவலர்கள் நாவிலுறை பலபேர் வாழ்ந்து
சீரிலகும் தமிழ்மொழியின் இனிய ஓசை

திசையனைத்தும் போயலிக்கச் செய்த நாட்டில்
ஊறியநற் சுவையழுகும் கவிக ளாலே

ஊக்கமிகத் தமிழ்நாட்டிற் குணர்வைத் தந்த
பாரதியார் மிகக்கொடிய வறுமை மேவப்

பார்த்திருந்த தமிழுருற்ற பழிதான் என்னே!

சோற்றினுக் கறிவை விற்றுத்

தூர்த்தரைப் புகழ்ந்து பாடிச்
சோம்பரைச் செல்வ ரென்று

தொழுதுடல் சுகித்து வாழ்ந்து
கூற்றினுக் குடலம் போகக்

குப்பையிற் கவிகள் சோரக்
குறிவிடா திறந்து போகும்

கவிகளின் கூட்டம் சேரார்
வேற்றவர்க் கடிமை நீங்கும்

விடுதலை வரமே வேண்டி
வீரமும் ஞானம் பொங்கச்

சக்தியின் வேள்வி பாடி
நாற்றிசைத் தமிழ ரெங்கும்

நாட்டினைப் பணியச் செய்த
நாவலர் சுப்ர மண்ய

பாரதி நாமம் வாழ்க!

நாமக்கல் கவிஞர்: நாமக்கல் கவிஞர் என்று நாடறிந்த கவிஞரின் இயற்பெயர் வெ.ராமலிங்கம் பிள்ளை (தோற்றம் 19-10-1888 மறைவு 24-8-1972. பழைய சேலம் மாவட்டத்தில் மோகனூரில் பிறந்தவர். சிறந்த காந்தியவாதி. 1932இல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர். ஏராளமான நூல்களை இயற்றியவர். இவரது கவிதைகள் எளிமையாகவும் சுவையாகவும் பொருள் தெளிவுடனும் இருக்கும். ஆரிய-திராவிட வாதம் பொய் என்று நிறுவிய மாபெரும் தமிழர்.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

Tirukkural and Bhagavad Gita compared by Rev G U Pope and VRR Dikshitar (Post No.4513)

Tirukkural and Bhagavad Gita compared by Rev G U Pope and VRR Dikshitar (Post No.4513)


WRITTEN by London Swaminathan 

 

Date: 18 DECEMBER 2017 

 

Time uploaded in London-  21-18

 

 

Post No. 4513

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

In 1886 Rev G U Pope published the translation of Tamil Veda Tirukkural. Before Dr Pope, Ellis has published a translation. Father Beschi translated it into Latin before them. Dr Pope has compared the Bhagavd Gita and Tiukkural. In our time C Rajagopalachari did compare both Gita and Kural.

 

Dr G U Pope in his appendix with notes gives the following comparisons:

Tirukkural couplet No.1 = Bhagavad Gita 10-33

Chapter 2 Rain= B G 3-14

Chapter 4 = B G Chapter 18

Tirukkural 35= BG 16-21

Tirukkural 126 = BG 2-58

Tirukkural 133= BG 3-35, 18-47

Tirukkural 341-350= BG II chapter

Tirukkural 360= B G II -62,63

Tirukkural 605 = BG 14-8

Tirukkural 622 = 18-70/74

 

Did Valluvar copy Manu, Gita and Kamasutra?

V R Ramachandra Dikshitar (lecturer in Indian History, University of Madras) says that Tiruvalluvar might have used several materials from Manu Smrti, Bhagavad Gita and Vatsayana’s Kamasutra, in his book Studies in Tamil Literature in 1936

 

Dikshitar says,”If Parimelalagar’s views could be adopted, then the author of Kural must have been familiar with Sanskrit literature, especially the Dharmashastra and the Arthshastra literature. If this position can be accepted, it is reasonable to assume that Tiruvalluvar follows mainly in his Arathupal the most popular Dharmashaastra of Manu, in his porutpal, the well known Arthashaastra of Kautilya, and in his Kamathu pal, The Kamasutra of Vatsyayana. To these may be added Ramayana and Mahabharata and allied literature. Whether Valluvar’s Muppaal (another name for Tirukkural) is an independent growth or is indebted to Sanskrit literature, it is for future research to determine conclusively. As it is there is a remarkable Parnellism between the Kural and the Sanskrit books above referred to

 

He had dealt with this more elaborately than DR G U Pope. Here is the list according to Dikshitar:

 

Kural 1

A, as is first of letters, every speech maintains;

The Primal Deity is first through all the world’s domains

The Bhagavad Gita (10-33) expresses similar ideas; ‘I am the letter A among the alphabets’ (10-33)

 

xxx

Kural 4

His feet, who over the full blown flower hath past, who gain

In bliss long time shall dwell above this earthly plain.

The Gita (18-61) says, ‘Arjuna! The Lord lives in the hearts of all creatures, making them move about machine like Maya.

xxx

Kural 11

By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.

The Bhagavad Gita (3-14) furnishes a parallel: Man depends for his existence on food, and the source of foodstuff is rain.

 

xxx

Kural 24

He who controls his five senses by his will

gains heavenly bliss

The Gita furnishes a parallel (2-61): Having restrained the five senses and brought them under control and having fixed one’s mind on me, one attains the divine knowledge.

xxx

Kural 34

To be of pure, spotless mind is real virtue; all else is of no avail.

The Gita (16-1) has the following: Fearlessness, spotless purity, stability of knowledge and yoga gift, peace of mind, sacrifice and learning constitute real tapas/penance.

 

xxx

Kural 41

The men of household virtue, firm in way of good, sustain

The other orders three that rule professes maintain

The Manu Dharma Shastra says: As the members of the three asrmas are maintained by one householder everyday by Janna and food, the asrama of the householder is said to be the best. Manu 3-78 and 6-89.

 

xxx

Kural 43

 

The paramount duty of a house holder is to cherish daily the manes, God, guests, kindred, self.

In the Manusmrti (3-72), ‘he who does not cherish the God, guests, servants, manes and self, is dead  though he physically  lives.

 

xxx

 

Kural 51

A wife of excellent virtues who is capable managing the household within the means of her husband is a real household help in home life.

 

The Dharmashastra has the following idea: A wife should always be joyous, skilled in domestic duties, helpful and economic in expenditure.

 

to be continued…………………

 

சாணக்யன் சொன்ன பெண்மணி கதை (Post No.4512)

WRITTEN by London Swaminathan 

 

Date: 18 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-34

 

 

Post No. 4512

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பெண்களைத் தவறான எண்ணதுடன் நெருங்கும் ஆண்களுக்கு, பெண்கள் பலவகைகளில் பதில் சொல்லுவர். சில நேரங்களில், அவர்கள் குறிப்பால் உணர்த்துவர். இன்னும் சில நேரங்களில் நேரடியாகவே சொல்லுவர். இதெல்லாம் பழங்கால இந்தியாவில்.இப்போதெல்லாம் இதற்குத் தேவையே இல்லை; முதலில் எச்சரிப்பர்; அத்துமீறினால் காலில் போட்டிருப்பதைக் கையில் எடுத்துக் காட்டுவர்; தேவையானல் போலீஸாரையும் அழைப்பர். அந்தக் காலத்திலோ ஆண்களுக்கு முன் நிற்கவே கூசிய பெண்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். இருந்த போதிலும் அழகாக எண்ண

த்தைத் தெரிவித்தனர். இதை விளக்க சாணக்ய நீதியின் ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுகிறேன்.

 

சாணக்கிய நீதி நூலின் 17 ஆவது அத்தியாயத்தில் கடைசி ஸ்லோகம் இதோ:

 

அதஹ பஸ்யஸி பாலே பதிதம் தவ கிம் புவி

ரே ரே மூர்க்க ந ஜானாஸி கதம் தாருண்ய மௌக்திகம்

பொருள்:

ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்த ஒரு இளைஞன், அவளை வசப்படுத்த எண்ணினான். நடுத்தர வயது என்று அவள் ‘முகத்தில் எழுதி ஒட்டியிருந்தபோதிலும்’, புன்னகைத்த முகத்துடன் அவளை அழைத்தான்.

 

” ஓ இளம் பெண்ணரசியே, எதையோ தேடுகிறாய் போலும்? எதைக் குனிந்து பார்த்துக்கொண்டு தேடுகிறீர்கள்?” என்றான்

அவளுக்கு இவன் எண்ணம் புரிந்தது. உடனே நேரடியாகவே பதில் சொல்லிவிட்டாள்.

“ஆமாம், அன்பரே! என்னுடைய இளமை என்னும் முத்து உதிர்ந்துவிட்டது அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்”- என்றாள்.

 

இளைஞனுக்குப் புரிந்தது; ஏமாற்றத்துடன் திரும்பினான்.

 

xxxx

இதே போல பிராக்ருத மொழியில் உள்ள காதா சப்த சதியில் ஒரு ஸ்லோகம் உள்ளது. புது மணத் தம்பதிகள் புகுந்த வீட்டில் குடியேறினர். அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பம். எல்லோரும் சேர்ந்து வாழ்ந்தனர். புதுக் கணவன் வணிகம் காரணமாக வெளியூர் செல்ல நேரிட்டது.

 

 

 

 

புதுமணப் பெண்ணை, புகுந்த வீட்டில் கொழுந்தன் ஒருவிதமான பார்வையில் பார்த்தான். அதை எப்படி கண்டிப்பது அல்லது நிறுத்துவது என்று தவியாகத் தவித்தாள்.  அதைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கஷ்  டப்பட்டாள். கணவனிடம் சொன்னாலோ குடும்ப உறவுகள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள்.

 

நல்ல வேளையாக அந்த வீட்டுச் சுவரில் ஒரு ராமாயண ஓவியம் இருந்தது. இந்தக் காலத்தில் நாம் காலண்டர் அல்லது ஓவியங்களை கண்ணாடி போட்டுச் சுவரில் மாட்டிவைக்கிறோம்; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லார் வீட்டுச் சுவரிலும் தெய்வத்தின் படங்கள் வரையப்பட்டிருந்ததை சங்கத் தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. அது போல இந்த வீட்டில் ராமனும் லெட்சுமணனும் சீதையும் காட்டில் செல்லும் காட்சி வரையப்பட்டிருந்தது.

 

லெட்சுமணன், அண்ணன் மனைவியான சீதையின்  முகத்தைக் கூடப் பார்க்க மாட்டான்.அவள் காலில் அணிந்திருந்த மெட்டி மட்டுமே அவனுக்குத் தெரியும். அந்தப் படத்தைக் காட்டி அவள் லெட்சுமணனின் பெருமையை கதை சொல்லுவது போலச் சொல்லுகிறாள். இலட்சுமணன் போல அண்ணியை நீயும் தாயாக மதிக்க வேண்டும் என்று சொல்லாமற் சொன்னாள்.

 

இதைச் சொல்லும் பிராக்ருத மொழி ஸ்லோகத்தை மு.கு.ஜகந்நாத ராஜா அழகாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது சாலிவாஹநன் என்ற மன்னன் எழுதியது:

கோதுறு மனமுடைக் கொழுந்தனை நோக்கி

மாதவள் தினமும் போதனை செய்தாள்

இராமனுடன் செலும் இலக்குவன் சரிதம்

சுவரில் வரைந்த சுடரோவியத்தே

–சாலிவாஹனன் (ஹாலன்) 1-35, காதா சப்த சதி

 

கோது= குற்றம்

 

எங்கள் மதுரையில் அந்தக் காலத்தில் கணவன் பெயரைக்கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். கணவன் பெயர் சொக்கன் , சுந்தரம், சுந்தரேஸ்வரன் என்றிருந்தால், ‘அதான் இந்த ஊர்க்கடவுள் பெயர்’ என்பார்கள். ராமன், கிருஷ்ணன் என்றிருந்தால் சுவற்றில் மாட்டி இருக்கும் படத்தைக் காண்பிப்பாள் அல்லது சுற்றி வளைத்து ஏதேனும் ஒரு வகையில் விளங்க வைத்துவிடுவாள்.

பெண்கள் கெட்டிக்காரிகள்!

 

–சுபம்—

 

ஒரு ஜீவனுக்கு 3 தேகங்களினால் பயன் என்ன? (Post No.4511)

Date: 18  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-45 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4511

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 5

முதல் மூன்று கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

 

 

ஒரு ஜீவனுக்கு 3 தேகங்களினால் பயன் என்ன?

 

ச.நாகராஜன்

 

அத்வைத விளக்கத்தில் ஞான வகைகளைப் பற்றிப் பார்த்தோம். இனி ஒரு ஜீவனுக்கு மூன்று தேகங்களினால் என்ன பயன் என்பதைப் பார்ப்போம். அத்துடன் இலக்ஷணா விருத்தி பற்றியும் தெரிந்து கொள்வோம்.

 

அத்வைத சாரத்தில் வரும் பதங்களை மாற்றாமல் அப்படியே கொடுத்துள்ளோம்.

 

இதைப் பற்றித் தீமாக அறிய விரும்புவோர் ப்ரம்ம சூத்திரங்கள், பகவத் கீதை, ஞான வாசிட்டம், கைவல்யம், விவேக சூடாமணி, சீதாராமாஞ்சனேய சம்வாதம், ராமஸ்தவ ராஜ்யம், வேதாந்த சாரசங்ரஹம், நிஷ்டானுபூதி ஆகிய நூல்களைப் படித்திருக்க வேண்டும் அல்லது கூடவே அவற்றையும் பயில வேண்டும்.

இனி தொடர்வோம்.

*

பரமாத்மாவுக்கு மூன்று சரீர உபாதியினால் ஈஸ்வரத்துவம் சித்தியான விவரத்தைச் சொன்னீர்கள். இனி, பரமாத்மாவுக்கு  வியஷ்டியாகிற மூன்று சரீரத்தினால் ஜீவத்துவம் சித்தியாவது எப்படி?

 

வியஷ்டி காரண சரீரத்துடன் கலந்திருக்கும் பரமாத்மா, பிராக்ஞன் – பராமார்த்திகன் – வித்தியவசின்னர் – என்றும் ,

வியஷ்டி சூக்ஷ்ம சரீரத்தோடு சேர்ந்திருக்கும் பரமாத்மா, தைஜஸன் –

ஸ்வப்ன கற்பிதன் – பிராதிபாஸிகன் என்றும்,

வியஷ்டி ஸ்தூல சரீரத்தோடு சேர்ந்திருக்கும் பரமாத்மா, விசுவன் –

வியவகாரிகன் – சிதாபாசன் என்றும் சொல்லப்படும்.

 

இந்த ஜீவனுக்கு இந்த மூன்று தேகங்களால் என்ன பிரயோஜனம்?

அந்தக்கரண பிரதிபிம்பன் ஜீவன்;

 

ஆகவே ஜீவனுக்கு சூக்ஷ்ம சரீரம் அவசியம்.

 

பிறகு கர்மம் செய்ய ஸ்தூல சரீரம் அவசியம்.

இக்காரிய காரணங்களுக்கு காரண சரீரமும் அவசியம்.

 

இப்படி மூன்று சரீரமுடைய ஜீவனுக்கு அபிமானம் உண்டோ?

உண்டு. அபிமானம் இல்லாவிட்டால் கர்மம், கருத்திருத்துவம் ஆகியவை பொருந்தாது.

ஆத்மாவுக்கே அவித்தை, மாயா உபாதிகளினால் ஜீவேஸ்வரத்துவம் விளங்குவதற்கு ஏதாவது உதாரணம் உண்டா?

ஒரே அக்கினியானது பெரிய பந்தத்திலிருந்து கொண்டு விஸ்தாரமான இடங்களுக்கு வெளிச்சத்தைத் தருவதும்,

அதுவே அற்பமான ஒரு திரியிலிருந்து கொண்டு ஒரு வீட்டுக்கு மட்டும் வெளிச்சத்தைத் தருவதும் போல

ஆத்மாவுக்கு மாயோபாதியாகிய பெரிய காரணத்தினால் சர்வக்ஞத்துவமும்,

 

அவித்தையாகிய அற்ப காரியோபாதியினால் கிஞ்சிக்ஞத்துவமும் வந்தன.

 

இதனால், சர்வக்ஞாத்மா, கிஞ்சிக்ஞாத்மா என இரண்டு ஆத்மா இல்லை.

 

இதைப் பற்றி வேதாந்தங்கள் என்ன போதிக்கின்றன?

தத் பதத்திற்கும், த்வம் பதத்திற்கும் சம்பந்த திரயத்தினால் அகண்ட  தத்துவத்தைப் போதிக்கிறது.

 

 

சம்பந்த திரயமா? அப்படி என்றால் என்ன?

அதாவது இது மூன்று வகைப்படும்.

இரண்டு வாக்கியங்களுக்கு ஸாமனாதி கரண்ணிய சம்பந்தம்

இரண்டு பதார்த்தங்களுக்கு விசேஷண விசேஷிய பாவ சம்பந்தம்,

இரண்டு பதங்களுடனாவது பதார்த்தங்களுடனாவது பிரதி ஏகாத்மாவுக்கு

லக்ஷிய  லக்ஷண சம்பந்தம் என இப்படி மூன்று விதம் உண்டு.

 

 

இவைகளைச் சற்று திருஷ்டாந்தங்களுடன் விளக்கிச் சொல்லுங்களேன்.

‘அந்த’, ‘இந்த’ தேவதத்தன் என்றால், அந்த, இந்த ஆகிய பதங்களுக்கு தேவதத்தன்

பிண்டமே ஸமானாதி கரணம்.

அதாவது அந்த தேவதத்தன் தான் இவன் என்று சொன்னதாக ஆயிற்று.

 

 

இந்த தேவதத்தன் இருக்கும் தேசம், காலத்தை அனுசரித்து  விசேஷன விசேஷிய  பாவ சம்பந்தமாகிறது.

அன்றியும், அவன், இவன் என்ற பதங்களுக்காவது, அவைகளின் அர்த்தங்களுக்காவது அகண்டார்த்தமாகிய  தேவதத்த பிண்ட மாத்திரத்தை எடுத்துக் கொள்வதால் விரோதாம்ஸ்தத்தைத் தள்ளி – அதாவது விரோதமில்லாத தேவதத்தன் என்பது மாத்திரம் லக்ஷியத்தினாலே , லக்ஷிய லக்ஷணா பாவ

சம்பந்தமிருக்கிறது.

 

இந்த லக்ஷணம் எத்தனை வகைப்படும்?

பாக தியாக லக்ஷ்ணம் என்றும்  ஜகத் ஜக லக்ஷணமென்றும்  இரு வகைப்படும்.

 

 

அதெப்படி?

சாஸ்திரங்களில் வாக்கியத்தினுடைய அர்த்தத்தை கிரஹிக்கும் விஷயத்தில்  முக்ய விருத்தி, குண விருத்தி , லக்ஷணா விருத்தி  என மூவகை உண்டு.

 

இந்த முக்கிய விருத்தி, குண விருத்தி ஆகியவற்றை  உதாரணங்களுடன் விளக்க முடியுமா?

இரத, கஜ, துரக, பதாதிகள் போவதைப் பார்த்து , இதோ ராஜா போகிறார்  என்று சொல்கிறோம் அல்லவா, அது முக்கிய விருத்தி.

நீலோத்பலம் என்றால் நீல புஷ்பம்  என்பது குணவிருத்தி ஆகும்.

 

ஆஹா, இனி லக்ஷணா விருத்தி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை. தொடர்ந்து கேட்கலாமா?

கேளுங்கள், சொல்கிறேன்.

****            தொடரும்

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 8 (Post No.4510)

Date: 18  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-32 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4510

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 8

  பாடல்கள் 43 முதல் 51

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாடல்கள் 43 முதல் 51

மகா கவி

பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர். மற்றும்
வீரர்அவர்! மக்களிலே மேல்கீழ் என்று
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்பார்!
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற
செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்.

அகத்திலுறும் எண்ணங்கள், உலகின் இன்னல்
அறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம்
திகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார்
தெளிவாக, அழகாக, உண்மையாக!
முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை
முனை முகத்தும் சலியாத வீரராகப்
புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்
புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்.

பழையநடை, பழங்கவிதை, பழந் தமிழ்நூல்,
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை;
பொழிந்திடுசெவ் வியஉள்ளம் கவிதை யுள்ளம்
பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள்
அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தென்றே
ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்.
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்!

கிராமியம்நன் னாகரிகம் பாடி வைத்தார்
கீர்த்தியுறத் தேசியம் சித்த ரித்தார்
சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.
தங்குதடை யற்றஉள்ளம் சமத்வ உள்ளம்;
இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்!
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்!
தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த
தமிழ்ப் பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி!

ஞானரதம் போலொருநூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேனினிப்பில் தருபவர்யார்? மற்றும் இந்நாள்
ஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்!

“பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்
சே”யென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி
போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்
வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்;
வீணாக உலககவி அன்றென் பார்கள்.
ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவ னைப்போய்
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள்.

“சாதிகளே இல்லையடி பாப்பா” என்றார்
“தாழ்ச்சிஉயர்ச் சிகள்சொல்லல் பாவம்” என்றார்.
சோதிக்கின் “சூத்திரர்க்கோர் நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி”
ஓதியதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில்
ஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார்.
பாதிக்கும் படி”பழமை பழமை என்பீர்
பழமைஇருந் திட்டநிலை அறியீர்” என்றார்.

தேசத்தார் நல்லுணர்வு பெரும் பொருட்டுச்
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.
காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி,அதைக் கனிவாய் உண்டார்.
பேசிவந்த வசைபொறுத்தார். நாட்டிற் பல்லோர்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற
மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்
முரசறைந்தார்; இங்கிவற்றால் வறுமை ஏற்றார்.

வையத்து மாகவிஞர் மறைந்து போனார்;
வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்
செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்;
சில நாட்கள் போகட்டும் எனஇ ருந்தார்.
உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
உலககவி அல்லஅவர் எனத் தொடங்கி
ஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பிக் கின்றார்
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?

[ இது அந்நாளில் ஆனந்த விகடனில் “ரா.கி” (கல்கி)யால் பாரதி உலககவி அல்ல  என்றும், அவர் பாடலில் வெறுக்கத் தக்கன உள்ளன என்றும், எழுதியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

*****