CHANAKYA ON VEDIC INTERPRETATION (Post No.4809)

Compiled by London Swaminathan 

 

Date: 4 MARCH 2018

 

Time uploaded in London – 7-57 am

 

Post No. 4809

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Chanakya’s views on Vedas in Chanakya Niti,

 

Interpreting the scholarship in Veda in a different manner, as also the conduct prescribed in Sastras, speaking bad words for no reason to a peaceful person, people needlessly subject themselves to torment.

–Chanakya Niti 5-11

 

Success, Accomplishment

 

The study of the Veda has no meaning without the performance of the sacrifices, the sacrifice has no meaning without the gifts, without intent there is no success or accomplishment. Hence intent is the root cause of all types of success or accomplishments.

8-10

 

The homes that do not have the mud caused by the washing of the feet of the Brahmins, where there is no roaring sound of the Vedas and Sastras (Vedic recitation), nor are the sounds of Svaahaa and Svadhaa, are like cremation grounds.

12-10

 

Numbers

Penance is performed by all by oneself, study by two together, singing by three in the same way, travel by four in the same manner, cultivation likewise with five and battle with so many put together.

4-12

 

–SUBHAM–

 

 

சங்கப் புலவர்களும் சாணக்கியனும்! (Post No.4808)

Written by London Swaminathan 

 

Date: 4 MARCH 2018

 

Time uploaded in London – 7-36 am

 

Post No. 4808

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரத நாடு இமயம் முதல் குமரி வரை ஒன்றாக இருந்ததோடு அதன் பண்பாடும் நம்பிக்கைகளும் ஒன்றாகவே இருந்துள்ளது. இன்று நேற்றல்ல. 2500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனையுடன் இருந்து வருவது சாணக்கிய நீதி நூல் மூலமாகத் தெரிகிறது. வெளிநாட்டார் வந்து நம்மை இமயம் முதல் குமரி வரை ஒன்றாக்கினர் என்பதெல்லாம் பொய் என்பதற்குப் பல சன்றுகளில் ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

 

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் என்னும் மஹா மேதை இயற்றியது சாணக்கிய நீதி. அதற்கு சுமார் 300 முதல் 500 ஆண்டுகளுக்குகள் தோன்றியது சங்கத் தமிழ் இலக்கியம்.

 

இதோ சாணக்கிய நீதி ஸ்லோகம்:-

தர்ச த்யான ஸம்ஸ்பர்ப்சைர்  மத்ஸீ கூர்மி ச பக்ஷிணீ

சிசும் பாலயதே நித்யம் ததா ஸஜ்ஜன ஸம்கதிஹி

-சாணக்கிய நீதி 4-3

 

மீன்கள், பார்வையின்  மூலமே எப்படித் தன் குஞ்சுகளை வளர்க்கின்றனவோ, ஆமைகள் எப்படி நினைப்பதன் மூலமே தன் குட்டிகளை வளர்க்கின்றனவோ, பறவைகள் எப்படித் தொடுவதன் முலமே தன் குஞ்சுகளை வளர்க்கின்றனவோ அப்படியே நல்லோர் சேர்க்கையின் மூலம் பலன் கிடைக்கும். அதாவது அவர்களுடைய நினைவும், பார்வையும் ஸ்பர்சமும் நமக்கு நற்பலன்களைத் தரும்.

ஆமைகளும், மீன்களும் தன் குஞ்சுகளை வளர்க்கும் இந்த விநோத நம்பிக்கை உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது.  மதுரை மீனாட்சி தேவிக்கு இதே போல அருள்புரியும் சக்தி உண்டு என்பதலேயே அவள் மீன்+ அக்ஷி என்று அழைக்கப்படுகிறாள்; தமிழில் அம் + கயல்/மீன் + கண்ணி= அங்கயற்கண்ணி  என்று அழைக்கப்படுகிறாள்; அதாவது மீன் எப்படித் தன் குஞ்சுகளைக் கண் பார்வையில் காப்பாற்றுகிறதோ அதே போலக் கடைகண் பார்வையாலே பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள் என்பது இதன் பொருள். ஆக  சாணக்கியன் ஸ்லோகத்தில் கண்டதை சங்கம் வளர்த்த மதுரைக் கோவிலிலும் காண்கிறோம்.

 

ஆமைகள் தன் பார்வையில் குஞ்சுகளைக் காப்பது பற்றி சங்கப் புலவர்களும் பாடினர்; இதோ சில பாடல்கள்:

 

குறுந்தொகையில் (152) கிள்ளிமங்கலங்கிழார் பாடுகிறார்,

யாவதும் அறிகிலர், கழறுவோரே

தாய் இல் முட்டை போல, உட்கிடந்து

சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே

யாமைப் பார்ப்பின் அன்ன

காமம் காதலர் கையற் விடினே

பொருள்

தாய் முகம் நோக்கி வளரும் தன்மையை உடைய ஐங்குறு நூறு யின் பார்ப்பைப் போலத் தலைவரைக் காண்பதால் வளரும் தன்மையுடையது காமம். அந்தக் காமம், தலைவர் நம்மைப் பிரிந்து கைவிட்டதால் தயில்லாத ஆமை முட்டை மண்ணுக்குள் கிடந்து அழிவது போல உள்ளத்துள்ளே கிடந்து மெலிவதன்றி வேறு என்ன பயனை உடையது? இடித்துரைப்போர் இதனைச் சிறிதும் அறிந்திலரே.

 

ஐங்குறு நூறு என்னும் இன்னொரு சங்க தமிழ் நூலில்,

யாமை இளம்பார்ப்புத்

தாய்முகம் நோக்கி வளந்தி சிணாங்கு (ஐங்குறு நூறு -44) என்று தாய் முகம் நோக்கி வளரும் ஆமை  பற்றிப் பாடுகிறார் புலவர் ஓரம்போகியார்.

 

பெண் ஆமை இட்ட முட்டையை ஆண் ஆமை பாதுகாப்பது பற்றி அகநானூற்றில் (160) நப்பசலையாரும் பாடியுள்ளார்.

இது போன்ற நம்பிக்கைகளும் நாகப்பாம்பின் தலையில் நாகரத்னம் இருக்கிறது என்பதும், தோற்றுப்போன மன்னனின் நிலத்தை கழுதை ஏர் பூட்டி உழுவது என்பதும், கிரகணம் என்பது ராகு, கேது பாம்புகள் சந்திர சூரியனை விழுங்குவது என்பதும் ஸம்க்ருத நூல்களிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது.

 

ஆக இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்து!.

 

வாழ்க பாரதம்! வளர்க தமிழ்!

–சுபம்–

கஷ்டம் போக்கும் 100 அஷ்டகங்கள்! (Post No.4807)

Date: MARCH 4,  2018

 

 

Time uploaded in London- 7-14 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4807

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் திருமதி மஞ்சுளா ரமேஷை ஆசிரியராக் கொண்டு சிறந்த கட்டுரைகளைத் தாங்கி சென்னையிலிருந்து வருகிறது.(வருடச் சந்தா ரூ 300/) மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

 

 

கஷ்டம் போக்கி இஷ்ட பூர்த்தி அருளும் (100) அஷ்டகங்கள்!

 

ச.நாகராஜன்

 

1

வேக யுகத்தில் வாழ்கிறோம் நாம். காலையில் எழுந்து குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி வேலைக்குப் போகும் ஆண், பெண் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி,வெளியே செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது.

இந்த நிலையிலும் பாரம்பரிய பழக்கத்தை விடாது ஒரு சின்ன நமஸ்காரத்தைச் (சைனீ ஸ் நமஸ்காரம் – வளைந்து ஒரு சின்னக் கும்பிடு) செய்து விட்டு ஓட வேண்டிய நிலை.

இந்தக் ‘கலி கஷ்டத்தை’ எல்லாம் உணர்ந்து தான் நம் முன்னோர் எந்தக் கஷ்டத்தையும் போக்கி தேவையான இஷ்ட பூர்த்தி அருளும் விதத்தில் அஷ்டகங்களை அருளியுள்ளனர்.

அஷ்டகம் என்றால் எட்டுத் துதிப் பாடல்கள் என்று பொருள்.

சிவபிரானிலிருந்து ஆதி சங்கரர் வரை பல்வேறு ரிஷிகள், அருளாளர்கள் முடிய அருளிய அற்புதமான அஷ்டகங்கள் ஏராளம் உள்ளன.

நமக்கு எந்தக் கஷ்டம் இருக்கிறதோ அதைப் போக்க வல்ல அஷ்டகங்களைச் சொல்ல இரண்டு நிமிடங்களே ஆகும். இதைச் சொல்ல நேரம் இல்லை என்று சொல்லவே முடியாது.

 

சற்று நேரம் இருப்பவர்களுக்கோ மெய்மறந்து இனிய இசையுடன் சொல்லும் போது ஒரு இனிமையான உலகமே தனியாகத் தோன்றும். அன்னம் கிடைக்க, வியாதி போக, செல்வம் செழிக்க, படிப்பு வர, படைப்பாற்றல் மேம்பட, உயர் பதவி கிட்ட, எதிரிகள் அழிய, ஆன்ம லாபம் பெற, முக்தி அடைய என்று ஒவ்வொருவரின் இஷ்டத்திற்கும் தக, அது பூர்த்தியாக அருளாளர்கள் அருளியுள்ள அஷ்டகங்களை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குரு மூலமாக உபதேசமும் பெறலாம்.

எத்தனை அஷ்டகங்கள் உள்ளன? ஒரு ரெடி ரெஃபரன்ஸாக – உடனடி பார்வைக்காக – 100 + அஷ்டகங்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. படிக்கலாம்; பயன் பெறலாம்.

சில முக்கிய அஷ்டகங்களைப் பற்றி இங்கு பார்ப்போம். அனைத்து அஷ்டகங்களுமே தேர்ந்தெடுத்த மந்திரச் சொற்கள் கொண்டவை; ஓசை நயம் உடையவை!

 

2

சூர்யாஷ்டகம் : சிவபிரான் அருளியது. கண் ரோகம் உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்க வல்லது.

ஆதி தேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர |

திவாகர நமஸ்த்ப்யம் ப்ரபாகர நமோஸ்து தே ||

என்று ஆரம்பிக்கும் இது (காரண்டியுடன்) ஆரோக்கியத்தை நல்கும் அஷ்டகம் என்று சொல்லலாம்.

 

தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்: தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் என்று பிரபலமாகக் கூறப்படும் இந்த அஷ்டகம் பிரம்மாண்டமான சக்தியைத் தன்னுள் அடக்கி இருக்கும் ஒரு அஷ்டகம். ஆதி சங்கரர் அருளியுள்ள இதற்கு சுரேஸ்வராசாரியர் மாநஸோல்லாஸம் என்ற அற்புதமான உரையினை இயற்றி அருளியுள்ளார். இவர் சாரதா பீடத்தை (சிருங்கேரி பீடம்) முதன் முதலாக அலங்கரித்தவர். தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் ஒவ்வொரு மூல ஸ்லோகத்திற்கும் அவதாரிகையுடன் 365 ஸ்லோகங்களால் 10 உல்லாஸங்களில் விளக்கவுரையை  சுரேஸ்வரர் அருளியுள்ளார். அற்புதமான இந்த நூலில் சூன்யவாதம், ஸமுதாயவாதம் உள்ளிட்டவை அலசப்படுகிறது; ஆத்ம இயல்பு மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. எட்டு ஸ்லோகங்களில் பிரபஞ்ச மர்மத்தை விளக்கும் இந்த அஷ்டகம் எல்லா அஷ்டகங்களிலும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்று.

 

மஹாலக்ஷ்மி அஷ்டகம்: பாரத நாட்டில் எல்லோராலும் தினமும் சொல்லப்பட்டு வரும் அஷ்டகம் இது. செல்வம் பெருக,தரித்திரம் தொலைய, பல்வேறு நலங்களைப் பெற இந்த அஷ்டகத்தைச் சொல்லலாம்.

தோடகாஷ்டகம்: குருபக்தியை விளக்கும் தோடகாசார்யரின் வரலாறு மிகவும் சுவையானது. ஆதி சங்கரரின் நான்கு முக்கிய சிஷ்யர்களில் ஒருவர் ஆனந்தகிரி. குரு கைங்கரியத்தைச் செய்வது ஒன்றே அவருக்குப் பிரதானமாக இருந்தது. ஒருநாள் தனது சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போது அதை ஆரம்பிக்காமல் ஆனந்தகிரியின் வருகைக்காகக் காத்திருந்தார் சங்கரர். மற்றவர்கள், ‘ஆனந்தகிரிக்கு என்ன தெரியும்? அவர் வரவில்லை என்றால் ஒன்றும் பாதகம் இல்லை’ என்று சொல்லிக் கேலி செய்தனர். ஆனந்தகிரியின் ‘குரு சேவா’ பெருமையை சங்கரர் அனைவருக்கும் உணர்த்த அருள் பாலித்தார். ஆனந்தகிரி அங்கு  பாடம் கேட்க வரும் போதே தோடகம் என்னும் விருத்தத்தில்,

“விதிதாகில சாஸ்திர ஸுதா ஜலதே

மஹோதோபநிஷத் கதிதார்தநிதே |

ஹ்ருதயே கலயே விமலம் சரணம

பவ சங்கர தேசிக மே சரணம் ||

என்று ஆரம்பித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறினார், இது தோடகாஷ்டகம் என்று பெயர் பெற்றது. ஆனந்தகிரி அன்றிலிருந்து தோடகாசார்யார் என்னும் பெயரை அடைந்து புகழ் பெற்றார். குரு பக்தி சகல ஞானத்தையும் க்ஷண நேரத்தில் அருளும் என்பதற்கு எடுத்துக் காட்டு தோடகாஷ்டகம். கடைசி ஸ்லோகத்தில் செல்வமோ படிப்போ இல்லாத எனக்கு குருவே உங்களது கருணையை அருளுங்கள் என்று அவர் கூறுவது உளத்தை உருக்கும். இதை அனுதினமும் சொல்பவர்களுக்கு குருவின் கிருபையால் சகல நன்மைகளும் உடனே சித்திக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

 

நடேசாஷ்டகம்:  மிக அருமையான இந்த அஷ்டகத்தை காஞ்சி பெரியவாள் பிரபலப்படுத்தினார். இந்த அபூர்வமான அஷ்டகம் பிறந்த வரலாறு சுவையான ஒன்று. பதஞ்சலி என்ற பெயருடைய மஹரிஷி உடலில் இடுப்புக்கு மேலே மனித உருவமும் அதற்குக் கீழே பாம்பின் அமைப்பையும் பெற்றவர். புலியின் கால்களைப் போன்ற கால்களைப் பெற்றவர் வியாக்ரபாதர் என்னும் ரிஷி. இவர்கள் இதர தேவர்களுடனும் ரிஷிகளுடனும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தைச் சிதம்பரத்தில் கண்டு களித்தவண்ணம் இருந்தனர். ஒரு சமயம் வியாக்ரபாதர், பதஞ்சலி ரிஷியைப் பார்த்து, “உமக்கு காலுமில்லை, கொம்புகளும் இல்லை. நடராஜ பெருமானின் நடனத்தை உம்மால் எப்படி ரசிக்க முடியும்?” என்று கேலி செய்தார். இதற்கு பதஞ்சலி முனிவர் பதிலேதும் கூறவில்லை. நடராஜரைத் தியானித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறி அவரைத் துதித்தார். இந்த அபூர்வமான ஸ்லோகங்களில் ஒன்றில் கூட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை.

 

அதாவது கா, மா, சா போன்ற எழுத்துக்களுக்கு கால் போட்டு எழுத வேண்டும். கோ மோ, சோ போன்ற எழுத்துக்களுக்கு கொம்பு போட்டு எழுத வேண்டும். பதஞ்சலி ரிஷி அருளிய ஸ்லோகங்களில் இப்படிப்பட்ட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை. இப்படிப்பட்ட அருமையான ஸ்லோகங்களைக் கேட்ட நடராஜ பெருமான் அவருக்கு அருள் பாலிக்க அனைவரும் பதஞ்சலி ரிஷியின் பக்தியின் பெருமையை உணர்ந்தனர். இந்த அஷ்டகம் சம்பு நடன ஸ்தோத்திரம் என்றும் கூறப்படும்.இதை ஓதுபவர்கள் சிவபிரானின் பாதத்தை அடைவர். துக்கத்தைத் தரும் பிறவிக் கடலிலிருந்து மீள்வர் என்று இதன் பலனைப் பற்றி கடைசி ஸ்லோகம் அருளுகிறது.

நடேசாஷ்டகத்தின் முதல் ஸ்லோகம் இது:

ஸதஞ்சிதம் உதஞ்சித நிகுஞ்சிதபதம்

ஜலஜ்ஜலஞ்சலித மஞ்ஜூகடகம்

பதஞ்சலி த்ருகஞ்ஜநம் அநஞ்ஜனம்

அசஞ்சலபதம் ஜனன பஞ்சநகரம் |

கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத

கதம்பக விடம்பக கலம்

சிதம்புதமணிம் புத ஹ்ருதம்புஜ ரவிம்

பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

இந்த ஸ்லோகத்தில் காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் இல்லாததையும் சொற்கள் நடம் புரியும் அற்புதத்தையும் பார்க்கலாம்!

 

சரஸ்வத்யஷ்டகம்: சரஸ்வதி தேவியின் அருள் பெற்று நல்ல படிப்புடன் கல்வி மேன்மை பெற சொல்ல வேண்டிய அஷ்டகம் இது.

லிங்காஷ்டகம் : சிவ லோக ப்ராப்தியை அடைய விரும்புவோர் சொல்ல வேண்டிய அற்புதமான இந்த அஷ்டகத்தை பல்லாயிரக் கணக்கானோர் சொல்லி வருவது கண்கூடு.

 

ஸ்ரீ ராகவாஷ்டகம் : ராகவம் கருணாகரம் முனி ஸேவிதம் என்று ஆரம்பிக்கும் இந்த அஷ்டகம் இனிய இசையுடன் பாடும் போது உளத்தை உருக்கும்; மன நிம்மதியைத் தரும்.  இதே போல கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம் உள்ளிட்டவை குறிப்பிட்ட அவதாரங்களைப் போற்றித் துதிக்கப்படுபவை.

 

மதுராஷ்டகம்: ஸ்ரீ வல்லபாச்சார்யார் இயற்றி அருளியுள்ள பிரசித்தி பெற்ற அஷ்டகம் மதுராஷ்டகம். இனிமையான கண்ணனை மதுரமாக வர்ணிக்கும் அற்புத இனிய சொற்களைக் கொண்டது இது.

அதரம் மதுரம் வதனம் மதுரம்

நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்

ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்

என்ற சொற்கோவையில் மயங்காதோர் இருக்க முடியாது. கிருஷ்ண பக்திக்கான அஷ்டகம் இதுவே

 

பவானி அஷ்டகம் : ஆதி சங்கரர் அருளியது இது. பவன் என்பது சிவபிரானின் எட்டு முக்கிய நாமங்களில் ஒன்று. பவனின் பத்தினி பவானி. ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் பவானித்வம் என்ற (22வது) ஸ்லோகம் பொருள் பொதிந்த ஒன்று. பவானி என்று பக்தை/பக்தன் ஆரம்பிக்கும் போதே – பவானி த்வம் – பவானி நான் உனது அடிமை என்று சொல்வதற்கு முன்னாலேயே – ‘பவானித்வம்’ என்ற ச்ரேஷ்ட நிலையை அனுக்ரஹிக்கிறாள்.  அந்த பவானியைத் துதிக்கும் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட பவானி அஷ்டகம் மிகவும் பிரபலமானது. பவானியாகவே ஆகும் தன்மையை நல்கும் இது தீர்க்க சுமங்கலி பாக்யத்துடன் இதர அனைத்து பாக்யங்களையும் தர வல்லது.

ந தாதோ ந மாதா ந பந்தூ ந தாதா

ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்த்தா

ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமை வ

கதிஸ்த்வம் கதி ஸ்த்வம் த்வமேகா பவானீ |

என்று ஆரம்பிக்கும் பவானி அஷ்டகம் சகல சௌபாக்யம் தரும் அஷ்டகம் ஆகும்.

முத்தான பத்து அஷ்டகங்களைப் பார்த்தோம்.இன்னும் நவக்ரஹ மங்களாஷ்டகம் போன்றவை நவகிரக தோஷங்களையும் இதர தோஷங்களையும் நீக்க வல்லவை!

 

3

அஷ்டகங்களின் பெருமையை வார்த்தைகளால் விளக்க முடியாது.

ஏராளமான அஷ்டகங்களில் நூறு அஷ்டகங்களின் பட்டியல் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. இவற்றின் பெருமையை அறிந்து தங்களுக்குத் தேவையான அஷ்டகத்தை ஓதி இஷ்ட சித்தி அடையலாம். அனைத்து அஷ்டகங்களும் பெரும்பாலும் இணையதளத்தில் கிடைக்கிறது. கீழே ஒரே அஷ்டகத்தின் பெயர் இருமுறை குறிக்கப்பட்டிருந்தால் இரு வேறு மகான்கள் துதி செய்து அருளிய அஷ்டகம் அது எனக் கொள்ள வேண்டும்.

100 அஷ்டகம்

 

 

சூர்யாஷ்டகம்

ராகவாஷ்டகம்

தோடகாஷ்டகம்

நடேசாஷ்டகம்

மஹாலக்ஷ்மி ஷ்டகம்

கணேச அஷ்டகம்

கிருஷ்ணாஷ்டகம்

சரஸ்வதி அஷ்டகம்

துர்காஷ்டகம்

லிங்காஷ்டகம்

 

பவானி அஷ்டகம்

ரங்கநாதாஷ்டகம்

காளிகாஷ்டகம்

ராமாஷ்டகம்

ராமாஷ்டகம்

அச்யுதாஷ்டகம்

ஸ்ரீ வேதவ்யாஸ அஷ்டகம்

விஸ்வநாதாஷ்டகம்

நவக்ரஹ மங்களாஷ்டகம்

சுதர்ஸனாஷ்டகம்

 

வில்வாஷ்டகம்

துளஸி அஷ்டகம்

ஸ்ரீமத் மங்களமூர்த்யஷ்டகம்

ராஜபுர கங்காஷ்டகம்

நிர்வாணாஷ்டகம்

ஸ்ரீ லக்ஷ்ம்யஷ்டகம்

ஸ்ரீ வில்வநாதாஷ்டகம்

கங்காதாராஷ்டகம்

ஹம்ஸாஷ்டகம்

பகவந்நாம ரத்னமாலாஷ்டகம்

ஹரிஹராஷ்டகம்

மனோரதாஷ்டகம்

ஸ்ரீ ஹரிசரண அஷ்டகம்

சிவராமாஷ்டகம்

ப்ரஷ்டாஷ்டகம்

நர்மதாஷ்டகம்

புஷ்கராஷ்டகம்

ஸ்ரீ மணிகர்ணகாஷ்டகம்

ஹனுமத் அஷ்டகம்

கங்காஷ்டகம் –

கங்காஷ்டகம் – வால்மீகி

கங்காஷ்டகம்

யமுனாஷ்டகம்

யமுனாஷ்டகம்

வித்யார்த்திதாஷ்டகம்

ந்ருஸிம்ஹபாரத்யஷ்டகம்

சங்கராசார்ஷ்டகம்

விஹாரிணோஷ்டகம்

குர்வஷ்டகம்

ஜகன்னாதாஷ்டகம்

 

ஸ்ரீ கோவிந்தாஷ்டகம்

ஸ்ரீ கோபாலாஷ்டகம்

ஸ்ரீ பிந்துமாதவாஷ்டகம்

பாண்டுரங்க அஷ்டகம்

ரகுநாதாஷ்டகம்

ராமசந்த்ராஷ்டகம்

 

 

சாரதாஷ்டகம்

ஷீதலாஷ்டகம்

பகவத் அஷ்டகம்

சங்கடா நாமாஷ்டகம்

அம்பாஷ்டகம்

சரஸ்வத்யஷ்டகம்

தேவியஷ்டகம்

பாதாவ்ஷாஷ்டகம்

வாராஹிநிக்ரஹாஷ்டகம்

தாராஷ்டகம்

ஸ்ரீ காலாந்தகாஷ்டகம்

சிவாஷ்டகம்

சந்த்ரசூடாலாஷ்டகம்

காலபைரவாஷ்டகம்

விஸ்வரேஷ்வராஷ்டகம்

மஹாதேவ்யாஷ்டகம்

வைத்யநாதாஷ்டகம்

பசுபத்யஷ்டகம்

சிவநாமாவல்யஷ்டகம்

ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம்

ரமாபத்யாஷ்டகம்

விஷ்ணோரஷ்டகம்

ஸ்ரீ ஹரிநாமாஷ்டகம்

ஸ்ரீ ஹரிஸ்மரணாஷ்டகம்

 

ருத்ராஷ்டகம்

மதுராஷ்டகம்

கணநாயகாஷ்டகம்

சௌர்யாஷ்டகம்

நடராஜாஷ்டகம்

சிவநாமாவளியஷ்டகம்

அகஸ்த்யாஷ்டகம்

ஜம்புநாதாஷ்டகம்

ஸதாசிவாஷ்டகம்

சோணாத்ரிநாதாஷ்டகம்

பரமாத்மாஷ்டகம்

கோஷ்டேஸ்வர அஷ்டகம்

சாஸ்தா அஷ்டகம்

தேவராஜ அஷ்டகம்

யமாஷ்டகம்

அமிலாஷ்டகம்

ஸ்வர்ணாகர்ஷண பைரவா

ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்

சாரதாபுஜங்காஷ்டகம்

அட்டால சுந்தராஷ்டகம்

****

 

பாரதி போற்றி ஆயிரம் – 61 (Post No.4806)

Date: MARCH 4,  2018

 

 

Time uploaded in London- 6-51 am

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4806

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 61

  பாடல்கள் 430 முதல் 441

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது

இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி

19 முதல் 30 வரை உள்ள பாடல்கள்

 

 

மூவர்ணம் கொண்டயென் கொடிபோ லென்றும்

    முக்கொள்கை இந்தியா இதழின் மூச்சாய்

மேவரும் சுதந்திரம் தன்னோ பாங்கு

    மேன்மையுள சமத்துவம் சகோத ரத்வம்

ஆவலுற ஏற்றதனை நடத்த லானாய்

    அச்சமுற் றிருந்தோர்க்கு வலிமை தந்தாய்

எவருளர் எனைத்தடுக்க எனத்து ணிந்தே

    எழுச்சிமிகு விடுதலைக் கவிகள் வார்த்தாய்

 

கவிமட்டும் போதாமல் களமும் கண்டாய்

    கடற்கரையில் பலகூட்டம் நடத்த லானாய்

செவிமடுக்க வந்தோரின் உடல்கொ திக்க

    செந்தணலாய்ப் பாடல்களைப் பாடச் செய்தாய்

நவில்விபின் சந்திரரை அழைத்து வந்தாய்

    நாடும்போ ராட்டமெல்லாம் பங்கு கொண்டாய்

எவர்பேச வரினுமதில் உந்தன் பாட்டு

    இல்லாமல் கூட்டமில்லை எனும்பேர் கொண்டாய்

 

ஆரவார முடனுலகை ஆட்சி செய்த

    ஆங்கிலப் பேரரசே மிரட்சி கொண்டு

பாரதியார் பாட்டொன்றௌக் கேட்டு விட்டால்

    பாரினிலே பிணங்கூட உயிர்த் தெழுந்து

வீரமுடன் விடுதலைப் போர்தொ டுக்கும்

    விரைவாக சுதந்திரத்தை மீட்கக் கூடும்

தீரமுள அவர்பாட்டைப் பாடல் தேசத்

    துரோகமென சட்டமே இயற்றிட் டாரே!

 

இந்தியா பத்திரிகை வீழ்ந்திட்டால்தான்

    இந்தியாவில் நாம்வாழ்தல் இயலும் என்றே

சிந்தித்த ஆங்கில ஆதிக் கம்தான்

    சீறியதை அழித்திடற் காக வென்றே

விந்தையச்சுச் சட்டத்தைக் கொண்டு வந்து

    விரைவாகச் செயல்படுத்தி நசுக்கி விட்டார்

அந்தநாள் அன்றாங்கு நின்ற துந்தன்

    அரியஇத ழல்லஉந்தன் மூச்சை யன்றோ?

 

 

இனியும் பிரிட்டிஷ் ஆதிக் கத்தில்

    இருப்பது சரிதானா? – அதனால்

எதையும் செய்திட இயலா நிலைமை

    ஏற்படல் முறைதானா?

தனியே சிலநாள் மறைந்தே பணிகளைத்

    தொடர்வதில் தவறேது? – இப்படித்

தலைமறைவாகுதல் கோழைத் தனமென

    தாழ்வுற லாகாது

 

அந்தநாள் ராமன் தருமன் கூட

    அடவி புகுந்தாரே எனினும்

அற்புதச் செயல்கள் பலவும் புரிந்து

    அரும்புகழ் கொண்டாரே

இந்நாள் நீயும் வனவா சமென

    இருப்பாய் புதுவையிலே என்றே

இயம்பிய தோழர்கள் கருத்தினை ஆய்ந்தே

    ஏற்றாய் தெளிவுறவே

 

 

அவ்வித மாங்கே சென்றபின்னும்

அந்நியர் கொடுமை தொடர்ந்ததுவே

எவ்வித மெங்கே சென்றாலும்

எங்கும் நிழல்போல் வந்த னரே..

 

பற்றின கால்களை வறுமையெனும்

பாம்புக ளென்றே தவிக்கையில்

ஒற்றர்கள் என்னும் கழுகுகளோ

உந்தன் தலைமேல் சுற்றினவே

 

தலக்கு வரல்தலைப் பாகையுடன்

தான்போ யிற்றெனும் பழமொழிதான்

நிலைக்க உந்தன் தலைப்பாகை

நிரூபித் ததுவே பலமுறை தான்..

 

எதுவரி னுஞ்சிறு கலக்கமின்றி

இலக்கியப் பணிகளை நீபுரிந்தாய்

புதுவை வாழ்வினில் தானேநீ

புதுமைப் படைப்புகள் பலதந்தாய்..

 

அரவிந்தருன் வ.வே.சு

அய்யர் வந்தே இணைந்தாரே

உரமாய் சுதந்திர உணர்வலைகள்

ஓயா மலதில் திளைத்தீரே

 

 

கடலுக்கடியில் ஒளிந்திருந்த

கனலென மறைந்தே இருந்தாயே

வடமு காக்கினி தீப்போல

வெளிப்பட் டொருநாள் எழுந்தாயே

 

பாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

If you sing Ahiri Raga, You won’t get Food! (Post No.4805)

Written by London Swaminathan 

 

Date: 3 MARCH 2018

 

Time uploaded in London – 21-23

 

Post No. 4805

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

A lot of strange beliefs are there about Indian Ragas. Musicians believe that a particular raga will bring rain and another will produce fire. I have already given the incident about Tansen. In South India there is a popular story about Ahiri Raga ( a particular tune).

 

What is a Raga? Melodic framework; the network of ascending and descending scale of notes which give or determine the melody; a tune

 

One Thanjavur musician was very fond of Ahiri raga. He had mastered that Raga. Thanjavur is a town famous for Carnatic musicians.  This person was told that he should not sing Ahiri Raga in the day time and if he violates that rule he wouldn’t get food for the day. He wanted to prove that the belief about Ahiri was false. So he was waiting for an opportunity. The news came that there was a big music festival in the nearby village and so he proceeded towards the village by walk. In those days, there were no restaurants. So he packed his lunch in a basket and carried it with him. Halfway through he felt very tired and so he wanted to take a nap. He tied the food basket in a bamboo tree which was bent towards the ground.

The bamboo trees bend during night time or in the cold and then slowly straightens up when the sun is shining bright. The singer did not know that. When he woke up he couldn’t see the food basket. After a while he looked up and then saw the food basket was 30 to 50 feet above him. In the middle of the woody area he couldn’t get any help and so he walked towards the nearby village to get some help. Now he started to doubt about the Ahiri Raga. But he was determined to prove that the belief about Ahiri and food was wrong.

 

When he went into the nearby village he saw group of people in front of a house where from good smell of fresh food was coming out. He came to know that it was a wedding celebration and all the villagers were fed there. So he also went there sat among the locals. Batch by batch the feast was served. When his turn came he went into the dining hall and wanted to show his talent and at the same time wanted to prove his belief about Ahiri Raga. The food was on the plantain leaf and the parents of the bride were serving the sweets to every one. It is customary to serve the sweet first in Hindu weddings. When the bride’s mother was serving the sweet this person made an announcement:

“Friends Ahiri is very good; who said that it was not a suitable one. I like Ahiri; everyone likes Ahri; Ahiri is beautiful and I am going to ………….”

 

Before he completed the sentence, people started beating him severely. He was taken out and shown the doors. Bride’s father came out and scolded him: How dare you talked about my wife in public?

 

He was blinking and said apologetically, “ Sir,I never talked about your wife. I only praised Ahiri in public because I like…….”

Before he completed the sentence more blows came on his face and the back. Then the people nearby told him ‘Don’t you know his wife’s name is Ahiri and you sad that you liked Ahiri very much”. Then only it dawned upon him that they mistook it for the lady of the house instead of the Raga.

 

He explained what he meant and proved his innocence. Then he was allowed to take food. But he decided  never to sing Ahiri during day time!!!

 

–Subham–

 

 

 

 

கல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், வள்ளுவன் ஒரே கருத்து! (Post. 4804)

Written by London Swaminathan 

 

Date: 3 MARCH 2018

 

Time uploaded in London – 13-18

 

Post No. 4804

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மேல் ஜாதி கீழ் ஜாதி பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், சாணக்கியன் ஒரே கருத்து! (Post. 4804)

 

நான்கு வருண (ஜாதி) மக்களில், கீழ் ஜாதியைச் சேர்ந்தவன் கற்றால் அவனையே எல்லோரும் வணங்குவர், போற்றுவர் என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றிலும், வள்ளுவன்  திருக்குறளிலும், சாணக்கியன் சாணக்கிய நீதியிலும், மனு அவரது தர்மசாஸ்திரத்திலும் உரைக்கின்றனர்.

 

மேல்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409)

 

பொருள்

உயர் குடியில் பிறந்திருந்தாலும் கல்லாதவராக இருந்தால், கீழ்க்குடியில் பிறந்து கல்வி கற்றுச் சிறந்து விளங்கும் கற்றாரைப் போலப் பெருமை பெற முடியாதவர்களே.

 

 

xxx

எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு சாணக்கியன்

“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் ஜாதி மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்

நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16

xxxx

 

மனு தர்ம சாஸ்திரத்தில்

மனு தர்ம சாஸ்திரத்தில் ஒரு அழகான பொன்மொழி உள்ளது. கீழ் ஜாதி மேல் ஜாதி பற்றியெல்லாம் கவலைப் படாதே.

 

“விஷத்திலிருந்தும் அமிர்தம் கிடைக்கும்;

குழந்தையிடமிருந்தும் புத்திமதி கிடைக்கும்;

எதிரியிடமிருந்தும் நற்குணத்தைக் கற்கலாம்;

தூய்மையற்ற பொருள்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கலாம்”

மனு ஸ்ம்ருதி 2-239

“பெண்கள், நகைகள், கல்வி, நீதி/சட்டம்,

தூய்மைபெறுதல், நல்ல அறிவுரை, கைவினைப் பொருட்கள்

ஆகியவற்றை எவரிடமிருந்தும் ஏற்கலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-240

 

“அரிய சந்தர்ப்பத்தில், பிராமணர் இல்லாதவரிடத்தும் வேதத்தைக் கற்கலாம். அவ்வாறு கற்கும் வரை, அவரைக் குருவாகக் கருதி அவர் பின்னால் கைகட்டி, வாய் புதைத்து மரியாதையுடன் செல்லலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-241

xxx

புற நானூற்றில் நெடுஞ்செழியனும்

இதையே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் புற நானூற்றில் சொன்னார் (183)

 

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!

பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே

 

 

 

பொருள்:-

“நான்கு ஜாதிகளில்,  கீழ் ஜாதிக்காரன் ஒருவன் கற்றறிந்த மேதாவியானால் மேல் ஜாதிக்காரனும் அவனிடம் போய்க் கற்கலாம்” (புறம்.183)

 

அதாவது 4 ஜாதிகளில், கற்றுத் தேர்ந்தவனை, பிராமணனும் வணங்குவான்.

 

 

மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் …

https://tamilandvedas.com/…/மேல்-ஜாதி-கீழ்-ஜா…

16 Apr 2017 – மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது! … இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) … என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன.

 

–subham–

 

 

 

பூமி தினக் கொண்டாட்டங்கள் (Post No.4803)

Date: MARCH 3, 2018

 

 

Time uploaded in London- 6-50 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4803

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் பத்தாவது உரை

 

  1. விழிப்புணர்வை ஊட்டும் பூமி தினக் கொண்டாட்டங்கள்

 

ச.நாகராஜன்

 

உலகெங்கும் 192 நாடுகளில் ஏப்ரல் 22ஆம் தேதியை எர்த் டே (Earth Day)ஆக – பூமி தினமாகக் கொண்டாடுகிறோம்.

எப்படி பூமி தினம் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா என்ற இடத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு 10000 கடல் பறவைகளை அழித்தது. 30 லட்சம் காலன் என்ற பெரிய அளவில் ஏற்பட்ட இந்த எண்ணெய்க் கசிவு மனித குலத்தைச் சிந்திக்க வைத்தது. இதனால் மனம் நொந்த அமெரிக்க செனேடர் கேலார்ட் நெல்ஸன் (Gaylord Nelson)  பூமியைக் காக்க விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் முதல்  பூமி தினத்தைக் கொண்டாடினார்.

இதனால் உலகெங்கும் ஏராளமானோர் விழிப்புணர்வு பெற்றனர்.

பல்வேறு நாடுகளிலும் கடந்த 47 ஆண்டுகளில் சுற்றுப்புறச் சூழலைக் காக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மனித குலத்திற்கே தீங்கு விளைவிக்கும் பல இரசாயனப் பொருள்களின் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

 

நீரைக் காக்க வேண்டிய அவசியத்தையும் காற்றைச் சுத்தமாகக் காக்க வேண்டிய அவசியத்தையும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் இந்த தினத்தில் விழிப்புணர்வூட்டும் பிரச்சாரம் நடைபெறுகிறது.

 

நூறு கோடி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் தீவிர இயக்கமாக பூமி தினக் கொண்டாட்டம் இன்று ஆகி  விட்டது.

இதில் நாமும் பங்கு கொண்டு நம் பங்கிற்கு உரியதை ஆற்றுவது நமது கடமையாகும்.

ஆற்றிலிருந்து மண் வளம் சுரண்டப்படாமல் இருத்தல், நீரைச் சேமித்தல், பாதுகாத்தல், அசுத்தப்படாமல் வைத்திருத்தல், ஒளி மாசை அகற்றல், வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அவற்றை அறவே இல்லாமல் ஆக்குதல், ஒலி மாசைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், இயற்கை வளமான காட்டுச் செல்வத்தைக் காத்தல், அரிய விலங்குகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அருகி வரும் இனமாக ஆகி விட்ட திமிங்கிலங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு நலம் பயக்கும் திட்டங்களை ஏற்படுத்தவும் செயல்படுத்தவும் பூமி தினம் உதவுகிறது.

ஒவ்வொருவரும் இதில் இணைந்து வளம் வாய்ந்த பூமியை உருவாக்குவோம்; நிலை நிறுத்துவோம்!

***

 

 

 

 

 

STRANGE BELIEFS OF SANGAM TAMIL POETS AND CHANAKYA (Post No.4802)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 16-56

 

Post No. 4802

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

India is one country; Indian culture is one culture from Himalayas to Kanyakumari. India has been united for several thousand years. Even before the foreign invaders came, it was one country with one culture. It is amazing to see the people in the north and the south shared the same beliefs about fish, tortoise and crocodile for over 2000 years. What Chanakya said in a sloka/verse 2300 years in Bihar (Magada Samrajya) is in  2000 year old Sangam Tamil literature. And this belief is unique to India!

Chanakya said in Chanakya Niti

“Just as a female fish rears its offspring by sight, a female tortoise by thinking about it and a female bird by touching it, so does contact with good people (the human beings)”

The message is that good people’s thought, contact and sight influence a person. It helps a person.

darsana dyaanasam sparsair matsii kuurmii ca pakshnii

sisum paalayate wityam tathaa sajjanasangatih

4-3

 

In south India goddess Meenakshi of Madurai is called Fish eyed goddess. She protects her devotees like the fish. Sangam Tamil literature say that the tortoises and turtles always think about the eggs they have laid and this only hatches them.

Sangam Poets say,

The hero’s love is as essential to the life of the heroine as is the tender care of the mother turtle to the growth of its young ones.

-Kuruntokai 152

 

Like the young ones of turtles  looking towards their mother’s faces.

–Ainkurunuru 44, Akam.160

In several places around the world, the turtles lay eggs in thousands in the coastal areas and when the turtle eggs are hatched they swim towards their mother turtles by instinct. Probably this led to the belief that the turtle and its young one always think about each other.

Fish Eyed Goddess Meenakshi of Madurai Temple.

 

xxx

Education

(I have already given part of the following passage)

 

“One should accept nectar even from poison, gold even from filth, knowledge even from a lowly person and a jewel of a woman even from a lowly family”

Chankaya niti, chapter 1, sloka/verse17

Vishaadapyamrutam graahyamedhyaadapi kaancanam

Niicaadapyuttamaam vidhyaam striiratnam dushkulaadapi

Tamil Poet Tiruvalluvar says,

Men with learning, even of lower birth, are of greater worth,

Than ignorant men though high born (Kural 409)

Parimel Azakar, the most famous commentator of Tirukkural says,

“This means that the superiority of the understanding born of learning, which gets attached to the soul for ever, is greater than the superiority of one’s caste which dies along with one’s body” (K M Balasubramaniam’s translation of Parimel Azakar’s comment)

 

Tamil king Nedunchezian in Purananuru  verse 183 says that the king would call for service one from the lowest of the four Varnas if he is more educated.

Manu says that a person can learn from the lowest caste and treat him like Guru. He also says women can be married from any caste if they are good. Vasistha’s wife Arundhati is shown as an example.

 

Manu Smrti says in second chapter

2-238. He who possesses faith may receive pure learning even from a man of lower caste, the highest law even from the lowest, and an excellent wife even from a base family.

2-239. Even from poison nectar may be taken, even from a child good advice, even from a foe (a lesson in) good conduct, and even from an impure (substance) gold.

(This verse is in Chanakya  Niti as well)

2-240. Excellent wives, learning, the knowledge of the law, the rules of purity, good advice, and various arts may be acquired from anybody.

2-241. It is prescribed that in times of distress a student may learn the Veda from one who is not a Brahmana; and that he shall walk behind and serve (such a) teacher, as long as the instruction lasts. (This shows Vedas were memorised by other castes as well; Brahmins, Kshatriyas and Vaisyas wen to Guru Kula to learn the Vedas)

Great Men Think Alike!

 

–Subham–

 

 

 

 

 

தமிழ் வணிகர்களின் பரிபாஷை (Post No.4801)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 7-49 AM

 

Post No. 4801

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு “யோக்கியர்களையும்” எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

 

முன்னால் நிற்கக்கூடிய வாடிக்கையாளருக்குதெரியக்கூடாது என்பதற்காக தமிழ் வணிகர்கள், விநோதமான பரிபாஷையைப் பயன்படுத்துவர். இது குறித்து செட்டியார்கள் கதை ஒன்றை பிரசுரித்தேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த ஒரு நூலில் ஒரு பட்டியலே கொடுத்துள்ளார் ராஜகோபால பூபதி.

நூலின் பெயர் – மதிமோச விளக்கம் (115 விதமான தமிழ் மோசடிகளைக் கொண்ட நூல்)

எழுதியவர்- தூசி. இராஜகோபால பூபதி, வெளியிட்ட ஆண்டு-1907

எதிர்கால மொழி ஆராய்ச்சியாளருக்குப் பயனுள்ள குறிப்பு இது. இதோ அந்தப் பட்டியல்

 

 

 

பத்து செட்டியார்கள், மூன்று …

swamiindology.blogspot.com/2018/01/post-no-4664.html

26 Jan 2018 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. … முதலில் இருந்த செட்டி சொன்ன கருத்தை மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள்; ஆனால் பத்து திருடர்களும் ஏதோ பாட்டு என்று நினைத்து … Labels: திருடர்கள் செட்டியார்கள்பரிபாஷை பூனை யானைக்கு …

வைஷ்ணவ பரிபாஷை | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/வைஷ்ணவ-பரிபாஷ…

Written by S NAGARAJAN. Date: 30 May 2017. Time uploaded in London:- 6-44 am. Post No.3954. Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks. contact: swami_48@yahoo.com. தமிழ் இன்பம். வள்ளுவர் குறளில் கையாண்ட வ்டமொழிச் சொற்கள் என்ற கட்டுரையில் (கட்டுரை எண் 3873, வெளியான தேதி : 3-5-2017). வைஷ்ணவபரிபாஷை …

 

மயிர் நீப்பின் வாழாக் கவரி மான்! (Post No.4800)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 6-37 AM

 

Post No. 4800

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

 

வள்ளுவனும் சாணக்கியனும் ஒரே கருத்தை பல உவமைகளால் அழகுபட வர்ணிப்பது பாரதீய சிந்தனைப் போக்கு — தென் குமரி முதல் வட இமயம் வரை ஒன்றே — இன்றும் அன்றும் ஒன்றே– என்பதைக் காட்டி நிற்கிறது. இதோ மேலும் சில அரிய கருத்துக்கள்.

 

மானம் இல்லாமல் வாழ்வதை விட சாவதே மேல் என்பதில் இருவரும் ஒரே குரலில் பேசுகின்றனர். தற்காலத்தில் தற்கொலைகளை ஆதரிப்பதில்லை. ஆனால் முக்காலத்தில் மானம் போனால் உயிர் போச்சு என்று கருதினர். கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் தண்ணீர் கொண்டுவர தாமதித்தவுடன், சிறைச்சாலையில் உயிர் நீத்த சம்பவத்தைக் கண்டோம்.

 

இதோ சாணக்கியன் கூற்று:-

 

வரம் ப்ராண பரித்யாகோ மானபங்கேன ஜீவனாத்

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம் மானபங்கே தினே தினே

சாணக்கிய நீதி 16-16

 

அவமானத்துடன் வாழ்வதை விட இறப்பதே மேல்; சாகும்போது அந்த நேரத்தில் மட்டுமே வலிக்கும்; அவமானத்துடன் வாழ்ந்தாலோ தினமும் துயரம்தான்.

 

இதோ வள்ளுவன் இயம்புவது:–

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா  அன்னார்

உயிர்நீப்பின் மானம் வரின் (குறள் 969)

 

உடம்பில் இருந்து ஒரு முடி நீங்கினாலும், கவரி மான் உயிரிழந்து விடும்;

அதுபோல மானம் போகுமாயின், உயிரையே விட்டு விடுவர் (உயர்ந்தோர்).

 

xxxx

கனியிருப்பக் காய் கவர்வது ஏனோ?

 

இனிய சொற்களைச் சொன்னால் எல்லோருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது;

ஆகையால் ஒருவர் அதைத்தான் பயன்படுத்த வேண்டும்;

பின்னர் ஏன் இனிய சொற்களை இயம்புவதில் கருமித்தனம்?

 

ப்ரிய வாக்யப் ப்ரதானேன ஸர்வே துஷ்யந்தி ஜந்தவஹ

தஸ்மாத்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா

சாணக்கிய நீதி – 16-17

இதோ வள்ளுவன் செப்புவது:-

 

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவது (குறள் 99)

 

இனிய சொற்கள் இன்பம் தருவதைக் கண்ணால் கண்ட  பின்னும், ஒருவன் கடுஞ் சொற்களைப் பயன்படுத்துவது ஏனோ!

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள் 100)

 

நல்ல பழம் இருக்கும்போது யாராவது புளிச்சுக் கொட்டும் காய்களைத் தின்பார்களா?  இன்பம் பயக்கும் இனிய சொற்கள் இருக்கையில் கடும் சொற்களைப் பயன் படுத்துவானா?

 

ப்ரஸ்தாவஸத்ருசம் வாக்யம் ப்ரபாவஸத்ருசம் ப்ரியம்

ஆத்மசக்திஸமம் கோபம் யோ ஜானாதி ஸ பண்டிதஹ

சாணக்கிய நீதி 14-15

ஒருவன்  தன் புகழுக்கேற்ற இனிய சொற்களையும், இடத்துக்கு ஏற்ற காலத்துக்கேற்ற சொற்களையும், தன் வலிமைக்கு ஏற்ற கோபத்தையும் கொண்டிருந்தால் அவன் புத்திசாலி

 

xxxx

யாகாவா ராயினும் நாகாக்க

 

யதீச்சஸி வசே கர்தும் ஜகத் ஏகேன கர்மணா

பராபவாதஸஸ்யேப்யோ காம் சரந்தீர் நிவாரய

சாணக்கிய நீதி 14-14

ஒரே செயல் மூலம் உலகை வெல்ல ஆசையா? மற்றவர்களைக் குறை சொல்லாதபடி நாக்கை அடக்குங்கள். ( உலகே உங்கள் வசமாகிவிடும்)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

 

எதை அடக்காவிட்டாலும் நாவை (பேச்சு)/ நாக்கை அடக்குங்கள்; அல்லது சொன்ன சொல்லே பெரும் துன்பத்த உண்டாக்கும்.

 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர் (711)

அவைக்கு ஏற்ற சொற்களைச் சொல்லுக; அந்தச் சொற்களின் ஆழத்தையும் தாக்கத்தையும் அறிந்து பேசுக

 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)

 

சொல்ல வந்த விஷயங்களை  இனிதாக, அழகாகத் தொகுத்துக் கூறும் ஒருவனுடைய சொல்லைக் கேட்டு உலகமே அதன்படி உடனே செயல்படும்

 

xxx

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி 

 

யதா கனன் கனித்ரேண பூதலே நிந்ததி

ததா குருகதாம் வித்யாம் சுஸ்ருஷுர் அதி கச்சதி

சாணக்கிய நீதி   13-16

ஒருவன் நிலத்தடி நீரை எப்படி மண்வெட்டி, கோடரி மூலம் தோண்டி எடுக்கிறானோ, அதே போல ஆசிரியரிடம் உள்ள அரிய செல்வத்தை மாணவன் (கேள்விக் கணைகளால் தோண்டி) எடுத்துக் கொள்ளவேண்டும்

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு – குறள் 396

 

மணலைத் தோண்டி இறைக்க இறைக்க நீர் சுரந்து கொண்டே இருக்கும்; அதுபோல கற்கக் கற்க அறிவு வளரும்

 

 

xxxx

தலை விதி துரத்தி அடிக்கும்

யதா தேனுஸ்ஹஸ்ரேஷு வத்ஸோ கச்சதி மாதரம்

ததா யச்ச க்ருதம் கர்ம கர்தாரம் அனுகச்சதி

13-14

 

ஆயிரம் பசுமாடுகள் இருந்தாலும் அதனதன் கன்றுக்குட்டி எப்படி அதன் தாயாரிடம் செல்கிறதோ அப்படியே அவனவன் செய்த கர்ம வினை அவனிடம் வந்து சேரும்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந்   தான்முந்  துறும் (380)

 

விதியைவிட வலியது உண்டா? விதியை மாற்ற ஒரு வழி கண்டு பிடித்தாலும் அங்கும் அதுதான் முன்னே நிற்கும்

 

xxx

Rain water used in Thiruppullani; Facebook picture.

நீர் இன்றி

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் ஸுபாஷிதம்

மூடைஹி பாஷாணகண்டேஷு ரத்ன ஸம்க்ஞா விதீயதே

14-1

 

 

பூவுலகில் மூன்று ரத்தினங்கள் உள; தண்ணீர், உணவு, சான்றோரின் பொன்மொழிகள்; இதை அறியாத மூடர்கள் கற்களை ரத்தினம் என்று சொல்கின்றனர். (அதாவது உண்மையான ரத்னக் கற்களைவிட இவை மூன்றும் உயர்ந்தவை)

 

 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு (20)

நீர் இல்லாமல் வாழ முடியாது; மழை இல்லாவிடில் தர்ம நியாம் இராது.

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூவும் மழை (12)

உணவை உண்டாக்குவது மழை நீர்; உணவை உண்பார்க்குத் தானும் உணவு ஆவது மழை நீர்.

வள்ளுவன் வாழ்க! சாணக்கியன் வாழ்க!

 

–சுபம், சுபம்—

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு அயோக்கியர்களையும் எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)