Two Stories: Get the same ‘pleasure’ like me! (Post No 5014)

Let others also get the same ‘pleasure’ like me! Two Stories (Post No 5014)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 May 2018

 

Time uploaded in London – 18-17 (British Summer Time)

 

Post No. 5014

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Good associations provide the greatest of help

Bad company is productive of the worst evil- Tirukkural 460

Great saints prayed to God for others getting the same pleasure they received by worshipping him. In the same way, there are cut throats who derive pleasure when others suffer like them. There are two folk tales in the Telugu country to illustrate this point.

There was a vendor in a village in the Andhra country. One day he went to a temple where he saw a hole in the idol. Normally people used to place coins there. With the intention of taking that coin he checked with his finger to locate the coin.

 

There was a scorpion waiting to sting. He was stung by the scorpion. He was a very cunning vendor. So without showing the pain he took his finger nearer to his nose and pretended enjoying the smell. Not only that he shouted, Oh! What a smell; what a fragrance! I have never experienced such a thing in y life!

 

Hearing this other vendors who accompanied him also put their fingers one by one. Every one said the same thing about good fragrance. All of them were stung by the scorpion in succession and each one tried to fool the others!

Great men think alike; great cheats behave alike or pretend alike!

xxx

Thrashed by Thieves

 

Purity of mind and purity of actions

Spring from purity associations – Tirukkural 455

 

One day vendor went to the village market with a plate full of eatables for selling. A couple of wily thieves met him half way to the market, gave him a severe beating and walked away with the snacks. He returned to his village quickly.

 

Another vendor was surprised to see him return that quickly. He asked him how was the demand for the snacks in the market. He was also carrying a plate full of eatables for sale. He coolly replied to him, “Why go to the market, when half way up people come demanding for them?” The unsuspecting vendor rushed towards the market and was interrupted by the same rogues. They thrashed him and took away all the snacks. He returned quickly to the village and behaved as if nothing happened!

That is why wise people advise everyone to have good and honest people as companions.

 

–Subham–

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு (Post No.5013)

RANI PADMAVATI; CHITTOOR RANI PADMINI

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 May 2018

 

Time uploaded in London – 10-23 AM (British Summer Time)

 

Post No. 5013

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழர்கள் வீரத்துக்குப் பெயர் எடுத்தவர்கள். புற நானூற்றில் காணப்படும் வீரத்தாய் வேத காலம் முதல் இருந்து வருவதை முந்தைய கட்டுரைகளில் மொழிந்தேன். வீர மாதா என்பதே ஸம்ஸ்க்ருதச் சொல். வீரம் என்பதும் ஸம்ஸ்க்ருதமே இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஹீரோ (VEERA=HERO) வந்தது. நிற்க.

 

இக்கட்டுரையில் யாம் உரைக்க வரும் விஷயம் காஷ்மீரப் புலவன் கல்ஹணன் உரைத்தது தமிழில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருப்பதைக் காட்டுவதாகும்.

 

கல்ஹணன் ராஜ தரங்கிணியில் சொல்கிறான்:

Courage
The heroic think an object attainable by courage, the timid by caution; otherwise between them there could be little difference. Rajatarangkini of Kalhana 6-363

 

துணிந்து செய்தால் எதையும் அடையலாம் என்று வீரன் எண்ணுகிறான்; கோழையோ எதிலும் உஷாராகப் போகவேண்டும், கவனமாகச் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் நினைத்ததைப் பெறலாம் என்கிறான். இதுதான் வீரனுக்கும் கோழைக்கும் உள்ள வேறுபாடு.

 

இதிலுள்ள தாத்பர்யம் என்ன?

 

துணிந்தவர்களுக்கே உலகம் கிடைக்கும். நின்று நிதானித்து அசைபோட நினைப்பவனை காலம், வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல அடித்துச் சென்றுவிடும். ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த வீர சிவாஜி, தென்னகத்தில் முஸ்லீம்களை வேரறுத்த விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் இத்தகைய வீரர்கள்.

 

பழந்தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மாவீரர்களாகத் திகழ்ந்தனர். இதனால் சுமார் 1500 ஆண்டுகளுக்கு தமிழர்கள் ஆட்சி நடந்தது. இது ஒரு சாதனையே! அவர்கள் 1500 ஆண்டுகளுக்குத் தங்களுக்குள் போரிட்டு அழிந்ததும் ஒரு சாதனையே. அதாவது ரிக்கர்ட் புஸ்தகத்தில் (BOOK OF RECORDS)  இடம் பெறும் சாதனை. தமிழ் அரசர்கள் போல நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் உலகில் எவருமிலர்; உட் சண்டை போட்டவர்களும் எவருமிலர். இதற்குக் காரணம் வீரம்.

KITTOOR RANI CHANNAMMA

 

‘துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை’ என்று எண்ணியதால்தான் வீர் பாண்டிய கட்ட பொம்மன், மருது சஹோதர்ரகள், சுக தேவ், ராஜகுரு, பகத் சிங், தாந்தியா தோபே முதலிய வீர ர்களைக் கண்டது இந்நாடு.

பெண்களும் வாள் எடுத்து போரிட்டதற்கும் இதுவே காரணம்.

ஜான்ஸி ராணி, துர்கா தேவி, ருத்ராம்பாள், ராணி மங்கம்மாள், கங்காதேவி, சம்யுக்தை எனப் பல வீராங்கனைகளைக் காண்கிறோம்.

 

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ – என்பதை அறிந்து போரிட்டவர்களுக்கே வெற்றி கிட்டியது. அப்படி வெற்றி கிட்டாவிட்டாலும் காலத்தால் அழியாத புகழ் கிடைத்தது. அத்தனை வீர ர்களையும் பட்டியலிடுவது கட்டுரையின் நோக்கம் அன்று. கல்ஹணனின் கருத்து இமயம் முதல் குமரி வரை — குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் இருப்பதைக் காட்டவே எழுந்தது இக்கட்டுரை.

 

Death devours lambs as well as sheep

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

RANI LAXMIBHAI

‘க்லைப்யம் மா ஸ்ம கமஹ’ (2-3) (கோழைத்தனத்தை விட்டு எறி) என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் ஸ்லோகம், ஸ்வாமி விவேகாநந்தருக்கு மிகவும் பிடித்த ஸ்லோகம். வீரனுக்கு உதவாத ஆண்மையின்மை உனக்கு எங்கிருந்து வந்தது? என்று அர்ஜுனனைத் தட்டி எழுப்புகிறான் கிருஷ்ணன். ‘உத்திஷ்ட’ (எழுந்திரு) என்று கட்டளையிடுகிறான்.

 

திரு வள்ளுவன் சொல்கிறான்:

 

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக்கெடும் (குறள் 763)

பொருள்:

பகைவரின் படை ஒரு எலிக்கூட்டம்;  அது எவ்வளவு சப்தம் போட்டு என்ன பயன்? பாம்பு மூச்சுவிட்டாலேயே அவை ஓடிவிடும் (763)

 

கூற்றுடன் மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும்

ஆற்ற லதுவே படை (765)

 

எமதர்மனே எதிர்த்து வந்தாலும் அஞ்சாமல் நிற்பதுவே படை எனப்படும்

 

கான முயல் எய்த அம்பினில் யானை

பிழைத்த வேல் ஏந்தல் இனிது (772)

 

முயல் மீது வேலை எறிந்து வெற்றி பெறுவதைவிட யானை மீது வேல் எறிந்து தோற்பது மேல். (வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் இருக்க வேண்டும்; பெரிய வீரனையும் விழுத்தாட்ட முயற்சிக்க வேண்டும்; சின்ன ஆளை அடித்து விட்டு மார் தட்டுதல் வீரம் அன்று.)

 

ஆக, கல்ஹணன் சொன்னதை வள்ளுவனும் அழகாகச் சொல்கிறான். அவனுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னான்.

 

புற நானூற்றில் உள்ள வீரத் தாய் முதலிய எழுச்சி மிகு பாடல்களை வீரத்தாய் பற்றிய என் கட்டுரையில் காண்க.

 

வீரத் தாயும் வீர மாதாவும் | Swami’s Indology Blog

https://swamiindology.blogspot.com/2012/09/blog-post_23.html

இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி …

 

September | 2012 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/09

All posts for the month September, 2012. … வீரத் தாயும் வீர மாதாவும் . … வீரத் தாய், வீர …

 

மேவார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மேவார்

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) ராஜஸ்தானில், … அவள் ஒரு வீரத்தாய்!

 

–சுபம்–

சதி – சதியா, சரியா? (Post No.5012)

Written by S NAGARAJAN

 

Date: 15 MAY 2018

 

Time uploaded in London –  5-58 AM   (British Summer Time)

 

Post No. 5012

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சதி  – சதியா, சரியா?

 

ச.நாகராஜன்

1

சமீபத்தில் வந்த நீதி மன்றத் தீர்ப்பு வயதுக்கு வந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை என்று கூறுகிறது.

மணமாகாமல் சேர்ந்து வாழலாம்; பின்னர் பிரியலாம்!

கண்டதும் காமம்; தினவு தீர்ந்ததும் பிரிவு!

நினைத்தாலே சற்று திகைப்பாக இருக்கிறது. இது எதில் கொண்டு போய் விடுமோ என்று!

நீதிமன்றத் தீர்ப்பை விமரிக்கக் கூடாது. மூச்!

2

 

கணவன் இறந்தவுடன் உயிர் வாழ விரும்பாமல் உடன்கட்டை ஏறி சதியாக விரும்பியோர் நமது சரித்திரத்தில் ஏராளம் பேர் உண்டு.

இதைத் தீய பழக்கம் என்று ஆங்கில அரசு தடை செய்தது.

சதி ஒரு பெரிய சதி. தேவையற்றோர் அதைப் பயன்படுத்தி கணவன் இறந்து விட்டால் அனைத்து விதவைகளையும் – கொலை செய்கிறார்கள் என்பது அவர்களின் வாதம். இப்படிச் செய்யப்பட்டால் அது கொலை தான்! ஆனால் அப்படி நடக்கவில்லை!

உண்மையில் கணவன் இறந்த பின்னர் கைம்மை நோன்பு என்பதையே பெண்களில் பெரும்பாலானோர் அனுஷ்டித்து வந்தனர்.

இதைத் தமிழில் சங்க இலக்கியம் பல பாடல்களில் விரிவாகக் கூறுகிறது.

உடன்கட்டை ஏறுதலைப் பற்றி ஒரு பாடலும் கைம்மை நோன்பைப் பற்றிப் பல பாடல்களும் தெரிவிக்கின்றன.

இதே போல பாரதத்தின் இதர மொழி இலக்கியங்களும் விரிவாகக் கைம்மை நோன்பைப் பற்றி விவரிக்கின்றன.

ஆகவே சதி என்பது ஒரு சதி இல்லை.

“பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட

யானோ அரசன்? யானே கள்வன்

மன்பதைக் காக்கும் தென்புலம் காவல்

என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”

என்று வருந்தி உரைத்து, பாண்டியன் உயரமான சிம்மாசனத்திலிருந்து விழுந்து உயிர் துறந்ததை சிலப்பதிகாரம் விளக்குகிறது. உடனடியாக பாண்டிமாதேவியும் அந்தக் கணமே

உயிர் துறந்ததை

“கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று

இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி”

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

தலையாய கற்பு என்று இது போற்றப்படுகிறது.

 

 

3

சங்க இலக்கியத்தில் அகநானூறு காதலைப் பற்றி மிக அருமையாக விளக்குகிறது.

செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்பதால் இரு மனம் ஒன்றி சாகும் வரை சேர்ந்து வாழ்வதே உண்மைக் காதல் என்பதை அறிகிறோம்.

1923ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அகநானூறு (மூலமும் பழைய உரையும் ) என்ற நூலை ஆராய்ந்து அதைச் சரிவர பிரசுரிக்க உதவி செய்து அதற்கு முன்னுரையும் வழங்கியவர் ஸேது சமஸ்தான வித்வானான ரா.இராகவையங்கார் ஆவார்.

அவர் அந்த நூலில் தனது முன்னுரையில் கூறுவதில் ஒரு பகுதி இது:

“இந்நூலில் கூறப்படும் அகத்திணையொழுக்கம் நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணவும் இக்காலத்துச் சிலர் வதுவை போலாது எப்படியானுந் தணப்பரியதோர் கூட்டம் என்பது

“யாக்கைக், குயிரிடத் தன்ன நட்பி னவ்வுயிர்

வாழ்தலன்ன காதல்

சாத லன்ன பிரிவரி யோனே” (பாடல் 334)

எனவும்,

“பிரிவின் றியைந்த துவரா நட்பி

னிருதலைப் புள்ளி னோருயி ரம்மே” (பாடல் 12)

எனவும் வருமிடங்கள் நோக்கி உய்த்துணர்ந்து கொள்ளலாம்.”

 

முன்னுரையில் இன்னொரு பகுதி இது:

“இன்னும் ஆண் பெண் இருவரும் இல்வாழ்க்கை நடாத்தற்கண் ஒத்த பண்பு இன்றியமையாதென்பது இந்நூலுள்,

“அன்பு மடனுஞ் சாயலு மியல்பு

மென்பு நெகிழ்க்குங் கிளவிய பிறவு

மொன்றுபடு கொள்கையோ டோராங்கு முயங்கி” (பாடல் 225)

என வருதலால் அறியப்படும். ஈண்டு அன்பு என்பது ஒருவரை ஒருவர் இன்றியமையாமை. மடன் என்பது ஒருவர் குற்றம் ஒருவர் தெரியாமை. சாயல் என்பது மென்மைத் தன்மை. இயல்பு என்பது ஒருவரை ஒருவர் ஒளித்தொழுகாமை. என்பு நெகிழ்க்குங் கிளவி என்பது உடலின் வலிதாகிய என்பையும் நெகிழ்விக்கும் ஆர்வ மொழி. இவையும் பிறவும் இருவர்க்கும் ஒரு தன்மைப்பட்ட கொள்கையுடன் இருவரும் ஒருவராகவே சேர்ந்திருத்தலைக் கூறுதலான் பண்டைக் காலத்து இல்வாழ்க்கை இயல்பு ஒருவாறு தெரியப்படும்.”

 

அருமையான மேற்கண்ட உரையால் பண்டைக் காலத்தில் தமிழகத்தில் காதல் எப்படி உணரப்பட்டது, இல்லறம் எப்படி நடத்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

உடல் மட்டும் இரண்டு; உயிர் ஒன்று என்ற நிலையில் ஒரு உடல் போய் விட்ட நிலையில் இன்னொரு உடலும் தன் விருப்பத்தால் போக அனுமதிப்பதே சதி.

இது கொச்சைப்படுத்தப் பட வேண்டிய ஒரு விஷயமல்ல.

ஆங்கிலேயரின் கல்யாண ஒழுக்கம், “நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணவும் இக்காலத்துக்” கல்யாண ஒழுக்கம்! இது காதல் அல்ல; கீழ்த்தரக் காமம். இதன் படி ஒருவனுக்குப் பல பெண்களும் ஒருத்திக்குப் பல கணவன்களும் இருக்கலாம்! இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் வளர்ப்பு சூழ்நிலைக்கு ஏற்ப இருக்கும்.

ஆக சதி பற்றிய ஆங்கிலேயரின் நோக்கு கோணல் நோக்கு!

4

ஒருவன் கொலை செய்கிறான். அவனை விசாரித்த நீதிபதி அவன் கொலை செய்தது உறுதி என்பதை அறிந்து கொண்ட பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறார்.

அவனும் ஒரு உயிரைப் பறித்தான்.

நீதிபதியும் ஒரு உயிரைப் பறிக்கிறார்.

செயல் ஒன்று தான்.

ஆனால் கொலைகாரனைப் பழிக்கிறோம்; நீதிபதியைப் புகழ்கிறோம்.

போர் நடக்கிறது. நமது படைவீரன் ஒருவன் எதிரியால் கொலை செய்யப்பட்டு விட்டான்.

அவனுக்கு உரிய மரியாதை தரப்படுகிறது. நாடே துக்கத்தில் பங்கு கொள்கிறது.

அதே சமயம் நமது வீரர்கள் எதிரிகளைக் கொல்கின்றனர். உயிர் பறிக்கும் அந்தச் செயலை போற்றிக் கொண்டாடுகிறோம். எதிரிகளை வெட்டி வீழ்த்தியவர்களை வீராதி வீரர்கள் என்று கொண்டாடுகிறோம்.

செயல் ஒன்று தான் என்றாலும் நோக்கத்தின் அடிப்படையில் ஒரு செயலை இனம் காண்கிறோம்.

சதியில் ஒரு உயிர் போகிறது என்றாலும் நோக்கத்தின் அடிப்படையில் அது  ஹிந்து சரித்திரத்தில் புகழிடம் பெற்றது.

அலாவுதீன் கில்ஜியின் அந்தப்புர அழகியாகத் திகழ்வதை விட -அளப்பரிய செல்வத்துடன் ஆசைநாயகியாகத் வாழ்வதை விட -தீக்குளித்து உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முடிவெடுத்த சித்தூர் ராணி பத்மினி மங்கையரில் மாண்புமிக்க திலகம் அல்லவா?

பாரத நாட்டில் உள்ள ஆண்களும் பெண்களும் அந்தக் கற்புக்கரசியைக் கொண்டாடுவது சரி தானே!

அந்த மங்கையர் திலகத்தை கொச்சைப்படுத்தும் ஒரு திரைப்படத்தைக் கண்டிப்பது சரி தானே!

5

சதியைப் பற்றி அலசி ஆராய்ந்து, ஆங்கில வார இதழான Truth தனது 20-4-2018 (தொகுதி 86 இதழ் 1) இதழில், சில கேள்விகளை முன் வைக்கிறது.

அதை அப்படியே ஆங்கிலத்தில் இங்கு தருகிறோம்:

“If Sati is savage, barbaric and inhuman what about war? Is it not infinitely more so? Why not the whole army, with its generals and officers incarcerated for an attempt  of  suicide? Why are not expeditions for climbing the Himalayas and for Poles penalized? What about abortion, medical and non medical? What about wholesale and universal slaughter to fill the belly? Is it savage or human? What is hunger-strike? What is fast unto death? What is the  onslaughts through Satyagraha? What is birth – control? What is family – planning, a fine euphemy for diabolical foeticide? Is it because these are sinner’s paradise and Sati is not?”

 

இந்தக் கேள்விகளுக்கு ஹிந்து மதப் பழக்கங்களை மட்டும் எள்ளி நகையாடி எதிர்க்கும் பகுத்தறிவுச் செல்வங்கள் பதில் சொல்வார்களா?

“திராவிடத் தம்பிகள்” தவறான கொள்கைகளுக்காகவும் தங்களின் முக்கியத்துவம் குன்றி விடக் கூடாது என்பதற்காகவும் அவ்வப்பொழுது போராட்டங்கள் நடத்தி அப்பாவிகளைத் தூண்டி விட்டு உணர்ச்சி வசப்பட வைத்து தீக்குளிக்க வைத்து, அவர்களைத் தியாகிகளாகச் சித்தரிக்கும் கேவலத்தையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும்!

சிந்தித்தால் ஒன்றுபட்டு இருக்கும் பாரத சமுதாயத்தைப் பல பிளவுகளாக்கி அதைச் சிதைப்பதே இவர்களின் தீய நோக்கம் என்பது தெரிய வரும்!

இந்தத் தீய நோக்கம் நிறைவேறாது என்பதைக் காலம் உணர்த்தும்.

 

***

 

 

 

 

JAIN MONK KALAKACHARYA DEFEATED KING GARDABILLA (Post No.5011)

 

 

JAIN MONK KALAKACHARYA DEFEATED KING GARDABILLA (Post No.5011)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 19-47 (British Summer Time)

 

Post No. 5011

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Kalakacharya was a Jain monk in Ujjain which was ruled by Gardabilla at that time. Gardabilla went to the Jain ashram and abducted Kalakcharya’s sister Sarasvati.

 

Though most of the Jains at that time were Kshatrias (warrior caste),they followed non- violence. So Kalakacharya went to the king and asked him to return his sister but he refused like Ravana. He even insulted him.

In the Ramayana we see that Rama sends messengers to Ravana to return Sita but he refused and brought his own destruction.

 

Angered by the king’s insult,  Kalakacharya went to a nearby kingdom and asked him to invade Gardabilla’s kingdom. The neighbour king  was a ruler from Saka race. He told Kalakacharya that he had not got enough strength or army to invade Gardabilla. Then Kalakacharya himself took over as the commander of the army and invaded the kingdom of Gardabilla. This brought down Gardabilla’s rule. But Kalakacharya pardoned him. The defeated Gardabilla went to the forest to spend rest of his life where he was killed by a tiger. His son Vikramaditya had to live with the animals.

 

Later Vikaramaditya gathered enough soldiers and invaded his father’s kingdom and defeated the Saka ruler. This victory was celebrated by starting a new era called Vikrama era from first century BCE.

 

Manu, author of the first Law Book in the world and Tiruvalluvar, author of the Tamil Veda Tirukkural say that one must not estrange good people or saints. If they do that then their kingdoms will perish along with them. Manu gives the examples of Nahusa, Sumuka, Vena and other bad kings.

Tiruvalluvar in his Tamil Veda says,

Even kings, who rest on solid supports, will not be saved,

if men of spiritual power frown upon them – (Kural 900)

If principled men of lofty spirituality and penance are angered

Even a king will be ruined and destroyed (Kural 899)

The story of Kalakacharya’s victory over Gardabilla is found in Jain and Hindu literature of tenth and 12th Centuries, i.e. 1000 or 1500 years after Emperor Vikramaditya. So we don’t know the full story. But the miniature paintings of Kalakacharya are found in many museums around the world including Brooklyn museum in the US.

–Subham–

 

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 11-14 am (British Summer Time)

 

Post No. 5010

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலு ளெல்லாம்  தலை (குறள் 891)

பொருள்

தாம் எடுத்த காரியத்தை எண்ணியவாறே முடிக்க வல்லாரை இகழாமல் இருப்பது, தம்மைக் காத்துக் கொள்ளும் செயல்களில் மிகவும் முக்கியமானதாகும்.

 

 

விக்ரமாதித்தன் தொடர்பாக சமண மத நூல்களில் ஒரு கதை உண்டு. அவனைப் பற்றிய பல கதைகளில் ஒன்று இது. ஆனால் எல்லாக் கதைகளும் காலப்போக்கில் ஒரே விக்ரமாதித்தன்  தலையில் கட்டிவிடப்பட்டது. விக்ரமாதித்தின் என்றால் ‘வீரத்தில் சூரியன்’ என்று பொருள். வீரத்தில் சூரியனைப் போல ஒளி உள்ளவன், தஹிப்பவன், புகழ் பெற்றவன் என்று பல பொருள் உள்ளதால் ஆதித்தன் (சூரியன்) என்ற பெயர் பல மன்னர்களின் பெயரில்  — சோழ மன்னர்கள் – உள்பட சேர்க்கப்படும்.

 

வேதாளமும் விக்ரமாத்தித்தனும் என்ற கதையில் வரும் மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். அவனைப் பற்றிய ஒரு சுவையான கதை இதோ:

 

உஜ்ஜைனியை தலைநகராகக் கொண்டு கர்த்தபில்லா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது உஜ்ஜையினி நகரில் இருந்த மடத்தில் காலகாசார்யா என்ற சமண மதத் துறவி தலைவராக இருந்தார். அவருக்கு ஸரஸ்வதி என்ற பெயருள்ள அழகான ஸஹோதரி இருந்தாள். அவளை மடத்திலிருந்து மன்னன் கர்த்தபில்லா கடத்திச்  சென்றான். உடனே காலகாசார்யாவுக்கு கோபம் வந்தது.

 

பொதுவாக சமணர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள். ஆகவே அவர் முறையாக மன்னனைச் சந்தித்து சகோதரியை விட்டுவிடும் படி இறைஞ்சினார். ஆனால் மன்னனோ, ராவணன், சீதையை விடுதலை செய்வதற்கு மறுத்தது போலவே ஸரஸ்வதியை விடுதலை செய்யவும் மறுத்தான். அத்தோடு காலகாசார்யாவை இகழ்ந்தான். அவமானப்படுத்தினான்.

 

 

காலகாசார்யா, அருகிலுள்ள சக மன்னன் ஒருவனை அணுகி உதவி கேட்டார். அவனிடமோ குறைவான படைகளே இருந்தன. காலகாசார்யா சொன்னார்: நானே பயிற்சி கொடுத்து, நானே தளபதி பதவி ஏற்று படை நடத்துவேன் என்று. அவ்வாறே செய்தார். கர்த்தபில்லாவை வென்று ஸஹோதரியை மீட்டார். அந்த மன்னனையும் மன்னித்தார். மன்னன் காட்டில் சென்று வசித்தான்.  அவனை ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. அவனது மகனே விக்ரமாதித்யன். அவன் பெரியவன் ஆனவுடன், பக்கத்து தேசத்தில் படை திரட்டி உஜ்ஜைனி மீது படை எடுத்தான். அவன் வெற்றி பெற்ற வருடத்தில் இருந்து விக்ரம சகாப்தம் என்ற புது ஆண்டுத் தொடக்கம் ஏற்பட்டது.

 

இந்தக் கதைகள் எல்லாம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப் பட்டன. இது தொடர்பான குட்டி ஓவியங்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வரையப்பட்டன. ஆக, எது உண்மை, எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.

 

பெரியாரைப் பகைத்தால் ஆட்சிகள் முறியும் என்பது கர்த்தபில்லாவின் கதையில் தெரிகிறது.

காலகாசார்யா கதையைக் கூறும் ஓவியங்கள் பல மியூசியங்களில் உள்ளன. அமெரிக்காவில் ப்ரூக்ளின் மியூசியத்திலும் பல குட்டி ஓவியங்கள் இருக்கின்றன.

 

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

 

உயர்ந்த கொளகைகளை உடைய பெரியார்கள் கோபம் அடைந்தால், பெரிய வேந்தர்களும் ஆட்சியை இழந்து கெட்டுப்போவர்.

 

–சுபம்–

 

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

Compiled by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 6-37 am (British Summer Time)

 

Post No. 5009

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழேயுள்ள புகழ் மிகு, அருள் மிகு, கவின் மிகு, திரு மிகு சொற்றொடர்களை நுவன்றோர் யாவர் என்று செப்புக!

 

1.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

xxxx

 

2.உள்ளம் பெருங்கோயில்

ஊன் உடம்பு ஆலயம்

xxxx

 

3.ஆயநான் மறையனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்

 

xxx

4.தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்

xxxx

 

5.தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.

xxx


6.மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே

xxxx

7.நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடு இயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்

 

xxx

8.ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமுமம்

அரச குமரரும், பரத குமரரும்

xxx

9.திருமாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்

xxxx

10.அன்பின் வழியது உயிர்நிலை

xxx

11.தமிழ்நாடெங்கும் தடபுடல்! அமளி!

பணமே எங்கணும் பறக்குது விரைவில்

குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!

xxx

12.புகழும் நல் ஒருவன் என்கோ?

பொருவில் சீர்ப் பூமி என்கோ?

திகழும் தண் பரவை என்கோ?

தீ என்கோ? வாயு என்கோ?

நிகழும் ஆகாசம் என்கோ?

நீள் சுடர் இரண்டும் என்கோ?

 

xxxx

ANSWERS

1.பாரதி, பாரதியார் பாடல்கள், 2.திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. மாணிக்கவாசகர், திருவாசகம், 4.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 5.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 6.பட்டினத்தார் பாடல், 7. கம்பன், கம்ப ராமாயணம், 8.இளங்கோ, சிலப்பதிகாரம், 9.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் பாடல்கள், 12.நம்மாழ்வார் திருவாய்மொழி

 

–SUBHAM–

பாரதி போற்றி ஆயிரம்- 90 (Post No.5008)

Compiled by S NAGARAJAN

 

Date: 14 MAY 2018

 

Time uploaded in London –  5-47 AM   (British Summer Time)

 

Post No. 5008

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 90

  பாடல்கள் 977 முதல் 1000

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

6 கவிஞர்கள் இயற்றியுள்ள 24 பாடல்கள்!

பல கவிஞர்கள் பாரதியாரைப் போற்றி எழுதியுள்ளனர். அவர்களுள் 6 கவிஞர்கள் இயற்றியுள்ள 24 கவிதைகளை  இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

 

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்!

இயற்றியவர் : ஹா.கி.வாலம் அம்மையார்

 

வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்!
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்!
கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்! ‘
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி                                      ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்                                         போருக்கு ரகுராமன்! புலமைக்கு வாணி!
பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்…..சுப்ரமணிய பாரதியின் பெருமையை என்னென்று சொல்வேன்…                என்று கவிதை தொடர்கிறது.

***

பாரதி கீதமே பாடுவோமே நிதமே

இயற்றியவர்: ப.ஜீவானந்தம்

 

பாரதிதாசன் நடத்தி வந்த “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்” எனும் இதழில் 1935இல் ஜீவா அவர்கள் எழுதிய “பாரதி கீதம்” எனும் தலைப்பிட்ட பாடலை இங்கு தரப்படுகிறது.

இந்தப் பாடலை ஸ்ரீ தியாகையர் சுவாமிகள் இயற்றிய “ஸ்ரீ ராம பாதமா” எனும் பாடலமைந்த ராகத்தில் பாடவேண்டும் என்ற குறிப்பையும் அவர் கொடுத்திருக்கிறார். அந்த பாடல் வருமாறு:–

 

பல்லவி

பாரதி கீதமே பாடுவோம் நிதமே

பயன் தரும் போதமே.

 

அநுபல்லவி

வீரமுங் காதலும் வீறுடன் வாழ்தலும்

வெற்றிதேச பக்தியூட்டும் முற்றிலும் விநோதமே

 

சரணங்கள்

வீழ்ந்த நற்றமிழர் வாழ்ந்திட அமிழ்தம்

விரும்பி யளிக்குமே நிதம்

சூழ்ந்த நற்பொருளே சொல்லிய தெருளே

சுத்தமெய்ச் சுதந்திரம் சமத்துவம் விதைத்திடும்

 

பாரததேச பக்த ராவேசம்

பரிவுடனே வாசம்

சேரிதத் தூண்டுகோல் சீர்கவி வேண்டுகோள்

ஜீவானந்தன் தோத்திரப்பா மேவும் ஸ்ரீசுப்ரமண்ய

 

ப.ஜீவானந்தம் நாடறிந்த நல்ல பாரதி ஆர்வலர். பல கூட்டங்களிலும் பாரதி பற்றிப் பேசி வந்தவர்.

 

***

 

என் நாவினிலே குடி கொள்வாய்!

இயற்றியவர் : தேனம்மை லட்சுமணன்

 

பாரதத்தின் விடுதலைக்காய்

பா ரதத்தில் உலா வந்தவர்.
பெண் விடுதலை மண் விடுதலை

பெண் கல்வியைப் பாடியவர்
சமத்துவமற்ற சமுதாயத்தையும்

சாதி பேதங்களையும் சாடியவர்.
இளைய சமுதாயத்தின் முன்னேற்றம் நாடியவர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய

அந்த நெருப்புக் கவிஞன்
நாற்பதாண்டுகள் கூட வாழாமல்

நாலாயிரம் ஆண்டுகளுக்கான பாடல்கள் பாடியவன்..
மகா கவியே நின்னைச் சரணடைந்தேன்
என் நாவினிலே குடி கொள்வாய்.

 

9-11-2017 காரைக்குடி பாரதி தமிழ்க் கழகம் பாரதி விழா – கவியரங்கத்தில் தேனம்மை லட்சுமணனின் பாடல்களில் இரண்டு பாடல்கள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.

***

வளங்கள் பெருகவென்று பாடியவன்!

இயற்றியவர்: கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி

 

அறிவு ஓங்கி வையம் தழைக்கப் பாடியவன் – உலகில்

ஆணும் பெண்ணும் ஓர் நிகரெனப் பாடினான் – அடிமைச்

சிறுமை வாழ்வுச் சிதைவுறுமெனப் பாடினான் – நாட்டின்

திறமை மேவும் தொழில் வளங்கள் பெருகவென்று பாடினான்’’

 

நாடறிந்த திரைப்படக் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. நாடகத்துறை, திரைப்படத் துறை, படைப்பிலக்கியம் என பல்வேறு துறைகளிலும் கட்டாயத்திற்காக எழுதாமல் மனோதர்மத்தின் படி எழுதிய படைப்பாளி. அவரது ஒரு பாடல் மேலே தரப்பட்டுள்ளது.

***

நம் பாரதி மூலமே

இயற்றியவர் : மன்னை பாஸந்தி

 

எழுச்சி கண்டோம் அவர்தம் முறுக்குமீசை மூலமே

ஏற்றம் கண்டோம் அவர்தம் தலைப்பாகை மூலமே

சமநீதி கண்டோம் அவர்தம் கருப்புக்கோட்டு மூலமே

சமத்துவம் கண்டோம் சகலரும் நம் பாரதி மூலமே

 

பாரதியின் பாஞ்சாலி சபதம் காவியம் மூலமே

பாரதியின் கண்ணன் பாட்டு கவிதைகள் மூலமே

பாரதியின் தேசியப் புரட்சி பாடல்கள் மூலமே

பாரதம் முன்னேறிய பாதையும் நம் பாரதி மூலமே

 

பாரத அடிமைச்சங்கிலி தகர்ந்திடக் கண்டோமே

பாரதத்தாயின் மணிக்கொடி பறந்திடக் கண்டோமே

பாரத சுதந்திரக் கனவு பலித்திடக் கண்டோமே – நாம்

பாரத தேசப்பற்று மிகுந்தோம் நம் பாரதி மூலமே

 

பிறப்பு உதயமாவது அன்னை தந்தை மூலமே

பிறந்தபின் அறிவு உதயமாவது ஆசானின் மூலமே

இறந்தபின் பலனடைவது நம் நற்செயல் மூலமே – நாம்

பிறவிப் பயனை அடைந்ததும் நம் பாரதி மூலமே

 

எத்துணை இடர்களை வாழ்வினில் சந்தித்தாலும் – அன்று

பித்தனே என்று பலபேர் அவரை பழித்துரைத்தாலும்

நித்தமும் தன்வழிநின்று இளவயதில் மறைந்தாலும் -இது

சத்தியம் நல்வழிப்பாதை தமிழுக்கு நம் பாரதி மூலமே

***

தேசிய மகாகவி பாரதி

இயற்றியவர் மன்னை பாஸந்தி

 

பார்த்தனுக்கு சாரதி பார்த்த சாரதி

பாரினில் தமிழுக்கு சாரதி நம்பாரதி

பாரதிபோல் தேசியமகாகவி பார்தனில் எவருமுண்டோ?

ஏர்பிடிக்கும் உழவன் முதல் செல்வந்தர்கள் வரை வணங்கிடும்

 

காவியங்கள் பலவும் உதித நம் தாய்த்திருநாடு – திருக்

கோயில்கள் பலவும் அமைந்த நல் தவத்திருநாசு – பல

தலைவர்கள் பிறந்த பெருமை மிகுந்த பொன்னாடு

அன்னியரும் போற்றிடும் பலம்வாய்ந்த இந்தியநாடு

 

வீ ரதீரத்தைப் போதித்த எட்டயபுர சுப்ரமணிய மகாகவி

அபாரன்  மஹாதீரன் அதிசுந்தர ரூபன் புரட்சிக்கவி

போர்முழக்கமிட்டு வீ ரர்களைத் தட்டி எழுப்பிய எழுச்சிக்கவி

பாரத மக்களுக்கு சுதந்திரதாகம் ஊட்டிய தேசியமகாகவி

 

சிறியோர் பெரியோர் எல்லோர்க்கும் சிறந்த அபிமானி

ஒருவருக்குமே அஞ்சாத சுதந்திர வீரத்திருமேனி

வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் அருள்ஞானி

திருவல்லிக்கேணியில் வாழ்ந்த நற்பெரும்ஞானி

 

எத்துணை சிறந்த பாடல்கள் கவிதைகள் படைத்தான்

உத்தமனாய் விளங்கியே நம் துயர்தனைத் துடைத்தான் – கவி

வித்தகனாய் நம் இந்திய மக்களுக்காகவே உயிர்நீத்தான்

பக்தியுடன் பராசக்தி அருளுடன் தேசிய மகாகவியானான்

மன்னை பாஸந்தி சென்னையைச் சேர்ந்த நிதித்துறை கம்பெனியில் வேலை பார்த்து வந்ததோடு அவ்வப்பொழுது கதை,கட்டுரை ஆகியவற்றை எழுதி வருபவர். பல் துறை சான்ற விற்பன்னர்களுக்குத் தனது டிரஸ்ட் மூலமாக விருது அளித்து வருபவரும் கூட.

***

 

பாட்டிற்கோ பாரதியே தான்

இயற்றியவர் : ச.நாகராஜன்

செய்யு(ள்) நலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்
உய்யு(ம்) நலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு
கூட்டிற்கோ தேன் கூடு கொட்டு தமிழ்ச் சந்த மொழிப்
பாட்டிற்கோ பாரதியே தான்

வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தை வாழவைக்கத்

தந்துயரம் பாராத சான்றோருள்இந்தியமா

நாட்டிற்கோ காந்தியெனில் நாமெழவே கூவிட்ட

பாட்டிற்கோ பாரதியே தான்

 

வீட்டிற்கோ குலமகளிர் வீதிக்கோ நல்லோர்பள்ளி

காட்டிற்கோ உயிர்தருமொரு சஞ்ஜீவனிஇந்தியமா

நாட்டிற்கோ வேதரிஷிகள் கவிதையெனில் தமிழ்ப்

பாட்டிற்கோ பாரதியே தான்

வேறு

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

********

 

 

அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

 

இயற்றியவர் : ச.நாகராஜன்

 

 

இருளகற்றும் இனிய தமிழ் பெருமையினை நிலை நாட்டினாய்

மருளகற்றும் விதமெனவே வெள்ளையரை விரட்டி ஓட்டினாய்

****

நல்லோர்கள் புகழ்தம்மை நாளும் சொல்லிக் கவி பாடினாய்

அல்லோர்கள் அரக்கர்தமை இனம் காட்டிச் சாடினாய்

**                        தெய்வ பக்தி தேசபக்தி இரு கண் என இனிய மொழி கூறினாய்

செய்வதறியா மக்களுக்கோர் வழிகாட்டிப் புகழேணியில் ஏறினாய்

***

தமிழ்க்கவியே! சொற்கள் எனும் தேர் ஓட்டும் சாரதியே!

அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

***

கற்க கசடற!

இயற்றியவர் : ச.நாகராஜன்

 

கற்க கசடற பாரதி பாக்களை

நிற்க அதற்குத் தக

 

பல்பொருளும் பாரிதனில் பார்க்க வேண்டின்

நல்கவிஞன் பாரதியை நாடு

 

தெய்வபக்தி தேசபக்தி இவ்விரண்டும் முன்வைத்த

தெய்வகவி பாரதி யே

 

போற்றுமின் பாரதியை போற்றுமின் பொற்கவியை

போற்றுமின் பா-ரதியை பாடுமின் பாடல்களை

ஏற்றுவந்தே இனிது வாழ்க!

 

ச.நாகராஜன்இந்த பாரதி போற்றி ஆயிரம் தொடருக்கான கவிதைகளைத் தொகுத்தவர்.

3500 கட்டுரைகள் எழுதியவர். பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். http://www.tamilandvedas.comஇல் தொடர்ந்து இவரது படைப்புகள் வெளியாகி வருவதை அன்பர்கள் அறிவர். இவரது 52 புத்தகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

 

தொகுப்பாளன் முடிவுரை:

பாரதி போற்றி ஆயிரம் தொடரைத் தொடங்கும் போது பாரதியைப் போற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களில் ஒரு ஆயிரத்தைத் தொகுப்பது சுலபம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் கவிதைகளைத் தேடி எடுப்பது, கவிஞர்களைப் பற்றிய குறிப்புகளை சேகரிப்பது, பிரசுரகர்த்தாவிடமிருந்து அனுமதி பெறுவது, கவிஞர்களின் அனுமதியைப் பெறுவது, இணையதளத்தில் வெளியிட்டோரின் அனுமதியைப் பெறுவது போன்ற விஷயங்கள் அசாத்தியமான காரியம் என்பதை உணர்ந்து கொண்டேன். பலரும் பதிலே போடவில்லை. காரணங்கள் பலவாக இருக்கலாம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

சுமார் எழுபது வருட காலத்தில் வெளியான கவிதைகளைத் தொகுப்பதும் அக்கவிதைகளுக்கான அனுமதியைப் பெறுவதும் சாதாரணமான விஷயமல்ல என்பதை எனக்கு இந்தப் பணி உணர்த்தியது.

என்றாலும் ஆரம்பித்த பணியை பாரதி ஆர்வம் என்ற ஒரே உந்துகோல் வழி நடத்திச் சென்று முடித்து வைத்தது.

இதனை வெளியிட்ட http://www.tamilandvedas.com இணையதளத்தை நடத்தி வரும் திரு ச.சுவாமிநாதனுக்கு எனது நன்றி. பல்வேறு பதிப்பகங்கள், கவிஞர்கள், இணையதளங்கள், ப்ளாக்குகள் அவற்றிற்கான உரிமையாளர்கள் மற்றும் படைப்பாளிகள், கவிஞர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைத் தொடர்ந்து படித்து ஊக்கமூட்டிய அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

பாரதி நாமம் வாழ்க!

அன்பன் ச.நாகராஜன்

பெங்களூரு

7-5-2018

இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.

***

WIFE BEATING HUSBANDS AND POLYGAMY ANECDOTES (Post No.5007)

Compiled by London Swaminathan 

 

Date: 13 May 2018

 

Time uploaded in London – 15-47 (British Summer Time)

 

Post No. 5007

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Henry William Anglesea, a British peer and soldier who died in 1854, was angrily beating his wife. She pointed to a house maid and cried out,

“How much happier is that wench than I am?”

Her husband immediately kicked the maid downstairs and then said,

“Well, there is at least one grievance removed”.

 

xxx

Late one night a drunken husband, after spending his whole time at his cub, set out for home.

“Well”, said he to himself, “if I find my wife up I will scold her; what business she has to sit up, wasting fire and light, eh? and if I find her in bed, I will scold her; what right she has to go to bed before I get home?”

 

xxx

A Mormon acquaintance once inveigled Mark Twain into an argument on the issue of polygamy. After he had been beaten about the ears with long and tedious expositions justifying the practice, the climax was capped by the Mormon’s demand that he cite any passage of scripture expressly forbidding polygamy.

“Nothing easier”, Mark replied.

“No man can serve two masters”.

xxx

In his old age, after he quit the war path, Quanah Parker, the famous chief of the Comanches, adopted many of the Whiteman’s ways. But in one respect he clung to the custom of his fathers. He continued to be a polygamist.

He was a friend and admirer of Theodore Roosevelt and on one occasion when Roosevelt was touring Oklahoma, he drove out to Parker’s camp to see him. With pride Parker pointed out that he lived in a house like a white man, that his children went to a white man’s school, and he himself dressed like a white man.

 

Whereupon Roosevelt was moved to preach him a sermon on the subject of morality. “See here chief, why don’t you set your people a better example? A white man has only one wife, he is allowed only one at a time . Here you are living with five squaws. Why don’t you give four of them and remain faithful to the fifth?”

 

Parker stood still a moment, considering the proposition. Then he answered: You are my great white father, and I will do as you wish – on one condition.”

 

“What is the condition?” Roosevelt asked.

“You pick out the one I am to live with and then you go and kill the other four.”

–Subham–

 

 

 

லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்? (Post No.5006)

லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்? (Post No.5006)

 

Written by London Swaminathan 

 

Date: 13 May 2018

 

Time uploaded in London – 14-21 (British Summer Time)

 

Post No. 5006

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

லண்டன் க்ரோய்டன் தமிழ்க் கழக (பள்ளி) மூன்றாவது ஆண்டு விழாவில் (Croydon Tamil Kazakam) பேசுவதற்கு என்னை நேற்று (May12, 2018) அழைத்திருந்தார்கள். நானும் க்ரோய்டன் டெபுடி மேயர் மைக்கேல் செல்வநாயகமும்,  க்ரோய்டன் எம். பி. சாரா ஜோன்ஸுல் (Sara Jones, M. P.) பேசினோம். எங்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நினைவுப் பரிசுகளும் அளித்தனர்.

Shawl to london swaminathan

நான் ஆற்றிய உரையின் சுருக்கம்

 

(முதலில் தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்களை வைத்து— அ, க,

ஆ, பை, கை, மை, வை, வா, போ, தீ, பூ– ஒரு விளையாட்டு விளையாடினேன். தமிழை சுவைபடக் கற்பிக்க   இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. இது போல தினமும் மாணவர்களுக்கு விளையாட்டு, விடுகதை முதலியன சொல்லி சுவையுடன் வகுப்பை நடத்துங்கள்;  மாணவர்களை ஈடுபடுத்தும் இன்டெர் ஆக்டிவ் கேம்ஸ் (Inter Active Games) இருந்தால் ஆர்வத்துடன் தமிழ் படிப்பார்கள் என்றேன்.

 

பின்னர் சொற்பொழிவைத் துவக்கினேன்:-

எல்லோருக்கும் முதற்கண் வணக்கம்.

நான் ஈராண்டுகளுக்கு முன்னர் உங்கள் ஆண்டு விழாவுக்கு வந்தபொழுது 40 மாணவர்கள் இருந்தனர். இன்று அது எண்பது மாணவர்களாக உயர்ந்து விட்டது என்பதைக் கேட்டு மகிழ்ந்தேன்.

 

ஒவ்வொரு முறையும் எல்லோரும் தமிழ் கற்கச் சொல்லும் காரணங்கள்:–

தமிழ் பழைய மொழி, வளமான மொழி, தாய் மொழி, இனிமையான மொழி என்றெல்லாம் சொல்லுவர். நான் இன்று உங்களுக்கு- இங்குள்ள பெரியோர்களுக்கும்தான்.      — ஒரு புதிய காரணத்தையும் சொல்கிறேன்.

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி என்னும் (British Library) பழைய நூலகம் உள்ளது. 20,000 க்கும் அதிகமான நூற்றாண்டுக்கும் முந்தைய பழைய — தமிழ்ப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இது அதிசயமான விஷயம். இவைகளைப் படிக்க- பயன்படுத்த, கட்டணம் ஏதுமில்லை; நீங்கள் முகவரியுடன் கூடிய 2 யுடிலிட்டி பில்கள் (two utility bills) , கையெழுத்துடைய ஒரு பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசென்ஸுடன் போனால் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச பாஸ் பெறலாம். நான் மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி சென்று புஸ்தகங்களை விளம்பரப்படுத்தி வருகிறேன்.

 

‘300 ராமாயணங்கள்’– என்று ஒருவர் புஸ்தகம் எழுதினார். ஆனால் பழைய புஸ்தகங்களைப் பார்த்தபோது அது தவறு; 3000 ராமாயணங்கள் இருக்கும் என்று தெரியவந்தது. எவ்வளவு கவிதைகள், நூல்கள், நாடகங்கள் – ராமாயணத்தை வைத்தே! அது மட்டுமல்ல; ஏரளமான பெண்கள் 100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நூல்களை   எழுதியுள்ளனர் . அவர்கள் பெயர்களை நாம் கேட்டதே இல்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மொழி பெயர்த்துள்ளனர். இது தவிர, ஏராளமான தமிழ்  நாடகங்கள் உள்ளன.

 

இவைகளை எல்லாம் யாருக்காக சேமித்து வைத்தனர்? எழுதியோரும் இவைகளை எல்லாம் யாருக்காக எழுதினர்? பல புஸ்தகங்களைக் கைகளில் எடுத்தால் அவைகள் உளுத்துப்போன நிலையில் உதிர்ந்தே போகின்றன. இவைகளைப்  படிக்கவாவது நாம் தமிழ் கற்க வேண்டும்’

 

 

 

தமிழால் இணைவோம்

சமீப காலமாக  ஒரு வாசகம் பிரபலமாகி வருகிறது – ‘தமிழால் இணைவோம்’ — அதன் பின்னாலுள்ள அரசியலை மறந்து விட்டு வாசகத்தை மட்டும் கவனியுங்கள். தமிழுக்கு அபாரமான இணக்கும் சக்தி இருக்கிறது. நான் பத்து நிமிட சொற்பொழிவுக்காகவா (மூன்று + மூன்று) ஆறு மணி நேரப் பயணத்தை இன்று செய்கிறேன்; இல்லை. தமிழ் என்று சொன்னவுடன் நாம் ஆர்வம் அடைந்து சிரமத்தைப் பார்க்காமல் வருகிறோம். ஜல்லிக்கட்டு போன்ற கிளர்ச்சிகளின் போது தமிழர்கள் ஒன்றுபட்டதைக் கண்டோம்.

 

தமிழில் இன்னும் என்ன செய்ய வேண்டும்?

 

‘தமிழ் வாழ்க’ என்று கோஷம் போடுகிறோம். தமிழில் எல்லாம் உளது என்கிறோம். ஆனால் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. பாரதியார் பாடல் போன்ற பல நூல்களுக்கு இன்டெக்ஸ் (INDEX) தேவைப்படுகிறது.

 

பாரதியார் ‘காக’த்தைப் பற்றி எங்கெல்லாம் பாடி இருக்கிறார் என்றால் அதைக் கண்டுபிடிக்க, நமக்கு நேரம் பிடிக்கிறது;

அவர் ‘காக்கைச் சிறகினிலே நந்த லாலா’, என்றும் ‘எத்தித் திருடும் அந்தக் காக்கை’ என்றும், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றும் பல இடங்களில் பாடுகிறார். ஒரு இண்டெக்ஸ் இருக்குமானால் இது போன்ற விஷயங்களை விரைவில் கண்டு பிடிக்கலாம்.

 

இது போலத் தமிழ்ப் பழமொழிகள்  தொகுப்பு. நூறு ஆண்டுகளுக்கு முன் மதத்தைப் பரப்ப வந்த மூன்று வெள்ளையர் 20, 000 பழமொழிகளைத் தொகுத்து புஸ்தகங்களாக வெளியிட்டனர். ஆனால் இன்னும் 10, 000 பழமொழிகளாவது தொகுக்கப்படாமல் உள்ளன.

 

அவைகளை எல்லாம் ஸப்ஜெக்ட் (Subject wise) வாரியாக ‘ஆல்பபெட்’ வாரியாக (alphabetical order) வகைப்படுத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் நான்சென்ஸ் ரைம்ஸ் (Nonsense Rhymes ) உள்ளது போல தமிழில் நிறைய உள்ளன.

சூரியன் தங்கச்சி

சுந்தர வள்ளிச்சி

நாளைக் கல்யாணம்

மேளக் கச்சேரி

ஈக்கையாம் பிரண்டையாம்

ஈயக்காப்பு திரண்டையாம்

…………

 

இது போன்ற பல பொருளற்ற பாடல்களைத் தொகுக்க வேண்டும்.

 

இதோ பாருங்கள் சென்னையில் இருந்து வெளிவரும் கிரியா (creA) தமிழ் அகராதி. உங்கள் தமிழ் பள்ளிக்குக் கொடுப்பதாற்காக கொண்டு வந்துள்ளேன். இதில் பல புதிய தமிழ் சொற்களையும் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் வழக்குகளையும் காணலாம். இது போல ஆக்கபூர்வமான பணிகள் நிறைய உள்ளன. தமிழ் கற்கும் நாம் இவற்றைப் பிற்கால சந்ததியனருக்காக update ‘அப்டேட்’ செய்யலாம். புதிய சொற்களைச் சேர்க்க உதவலாம்.

எனக்குக் கொடுக்கப்பட்ட நேரம் பத்தே நிமிடங்கள் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

 

என்னை இங்கு அழைத்தமைக்கு அனைவருக்கும் நன்றி; வணக்கம்.

 

(( நான் எழுதிச்சென்ற குறிப்புகளில் இருந்தும், நேரம் போதாமையால் சொல்லாமல் விட்ட விஷயம்:

Member of Parliament Sarah Jones addressing the gathering

பழந்தமிழ் புத்தகங்களும் புதிய அகராதிகளும் தேவையா? எல்லாம் கூகிள் GOOGLE  செய்தால் கிடைக்குமே என்று பல நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.அது ஓரளவே உண்மை. நான் காயத்ரீ மந்திரத்தைத் தேடி ‘காயத்ரி’ என்று போட்டால் கடவுளுக்குப் பதிலாக ஒரு அரை நிர்வாணப் பெண் படம் தான் வருகிறது; அவள் பெயர் காயத்ரீயாம்! ‘மந்தரா’ என்று போட்டாலுமொரு நடிகையின் படம் வருகிறது. அவள் ஒரு நடிகையாம்! ஆக, சரியான ‘ஸ்பெல்லிங்’ போடாவிட்டால் கூகிள் google விபத்தில் முடியும். மேலும் தமிழில் 10,000 பிளாக்குகள் இருக்கின்றன. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல பேனா கிடைத்தவன் எல்லாம் எழுதத் துவங்கி விட்டான்; தமிழ் தட்டச்சு தெரிந்தவன் எல்லாம் பிளாக் BLOG கட்டுரை எழுதுகிறான். அதில் எது சரி, எது தவறு என்பதை விஷயம் அறிந்தவரே வேறுபடுத்த இயலும். நிறைய தவறுகள் — சொற் குற்றம், பொருட் குற்றம், எழுத்துப் பிழைகள்— மலிந்துள்ளன. சில காலம் அதை மட்டுமே படித்தால் நாமும் ‘தமிழ்க் கொலை’யில் பங்கு கொண்ட பாவம் வந்து சேரும்.

london swaminathan speaking; Deputy Mayor of Croydon Michael Selvanayakam standing behind.

ஆகவே, முறையாகத்  தமிழ் பயில, ஆசிரியரைக் கலந்தாலோசிக்க இத்தகைய பள்ளிகள் தேவை)

 

–சுபம்–

இந்தியாவில் உலகின் உயரமான சிலை! (Post No.5005)

Written by S NAGARAJAN

 

Date: 13 MAY 2018

 

Time uploaded in London –  9-15 AM   (British Summer Time)

 

Post No. 5005

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 11-5-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு பத்தாம் கட்டுரை

இந்தியாவில் அமைக்கப்படும் உலகின் உயரமான சிலை!

.நாகராஜன்

 

 

இந்தியாவின் முதல் துணை பிரதம மந்திரியாக இருந்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு (தோற்றம் 31-10-1875 மறைவு 15-12-1950) குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

 

597 அடி உயரமுள்ள இந்தச் சிலை தான் உலகின் உயரமான சிலை. இந்தச் சிலையை அமைப்பதன் மூலம் இந்தியாவின் கௌரவம் உலக அரங்கில் உயர்கிறது.

 

 

சிலையின் அஸ்திவாரத்தையும் சேர்த்தால் மொத்த உயரம் 790 அடி ஆகும்!

இந்தச் சிலைக்கு ஏகதா சிலை அல்லது யூனிடி சிலை (Unity Statue) என்று பெயர்.

 

இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சிறந்த நிர்வாகியான சர்தார் வல்லபபாய் படேல் இந்தியாவில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஓரிழையில் பிணைத்து பலமான இந்தியா உருவாகக் காரணமாக இருந்தார்.

 

அவரது எளிய இனிய பேச்சுத் திறன் ஒரு புறமும், தேவைப்பட்டால் ராணுவத்தை இறக்கி ஏக இந்தியாவை உருவாக்குவேன் என்ற அவரது திட மனதும் அவரைச் சாதனையாளராக்கி நமது இந்திய சரித்திரத்தில் அழியா இடம் பெறச் செய்து விட்டது.

இந்தச் சிலையை அமைக்கப் பெரிதும் காரணமாக இருப்பவர் நமது பிரதமர் நரேந்திர மோடி.

 

31-10-2013இல் அவர் குஜராத் முதல் மந்திரியாக் இருந்தபோது இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

 

சர்தார் படேலின் 143வது  பிறந்த தினமான 31-12-2018 அன்று இதைத் திறக்க வேண்டும் என்ற முனைப்புடன் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மைக்கேல் க்ரேவ்ஸ் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன் என்ற நிறுவனம் இதன் வடிவமைப்பு மற்றும் நிர்மாணிப்பை மேற்பார்வையிட்டு வருகிறது.

ராம் வி.சுதார் என்பவர் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார்.

வரலாறு காணும் மிகப் பெரிய கலைப் பொக்கிஷம் என இது இப்பொழுதே புகழப்படுகிறது.

 

குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தீல் சர்தார் சரோவர் அணை அருகே சாது பெட் என்ற பெரிய தீவில் இது அமைக்கப்பட்டு வருகிறது. இதை அமைக்கும் நிபுணர்களில் ஒருவரான ஜேம்ஸ் விஸ்னியூஸ்கி (James Wisneewski)  ‘இந்தச் சிலை முடிந்த பின்னர் இதைப் பார்க்கும அனைவரும் பிரமித்துப் போவர். இந்தச் சிலை தண்ணீரில் நடப்பது போல இருக்கும்’ என்று கூறுகிறார். இந்தத் தீவில் ஒரு மியூஸியம். ஒரு தோட்டம், ஒரு ஹோட்டல், வருவோரை வரவேற்க ஒரு வரவேற்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இடம் பெறும்.

 

சிலை அமைக்கப்படும் இடத்தின் பரப்பளவு சுமார் 20000 சதுர மீட்டர்.

இதைச் சுற்றி 12 கிலோமீட்டருக்கு ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்படும்.

இந்த அற்புதமான சிலையை அமைக்க ஆகும் உத்தேச செலவு ஆரம்பத்தில் 2083 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறைந்த பட்ச தொகையாக 2989 கோடி ரூபாயில் இதைக் கட்ட லார்ஸன் அண்ட் ட்யூப்ரோ அமைப்பு ஒத்துக் கொண்டு டெண்டரைப் பெற்றது.

 

இந்தப் பணத்தில் பெரும் பங்கை குஜராத் அரசே ஏற்கிறது.

சிலைக்குத் தேவையான ரெய்ன்ஃபோர்ஸ்ட் சிமெண்ட் மட்டும் 75000 கியூபிக் மீட்டர் ஆகும்.

5700 மெட்ரிக் டன் ஸ்டீல், 185000 டன் ஸ்டீல் கம்பிகள், 22500 டன் வெங்கலத் தகடுகள் சிலை அமைக்கத் தேவைப்படுகிறது.

ஸ்டீலினாலும் ரெய்ன்ஃபோர்ஸ்ட் கான்கிரீட்டினாலும் அமைக்கப்படும் சிலையின் மீது வெண்கலப் பூச்சு இருக்கும்.

 

அறிவியல் வியக்கும் ஒரு சிலையாக அமையும் இந்தச் சிலை இருக்கும் இடத்திற்கும் பிரதான நகர் பகுதிக்கும் இடையே ஒரு பாலமும் அமைக்கப்படும். சிலையை அடைய 5 கிலோ மீட்டர் படகு சவாரி செய்ய வேண்டும்.

 

சிலையில் 500 அடி உயரத்தில் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியாக ஒரு மையம் இருக்கும். அங்கு ஒரே சமயத்தில் 200 பேர் இருந்து அழகிய காட்சிகளைக் கண்குளிரக் காணலாம்.

 

இங்கிருந்து சாத்புரா, விந்த்யாசல மலைத் தொடரைப் பார்த்து மகிழலாம்.

உலகின் உயரமான சிலை அமைக்கப்படுவதைப் பார்த்து வியக்கும் வெளிநாட்டின் பிரபல பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இது பற்றிய செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

 

ராஷ்ட்ரீய ஏகதா திவஸ் – தேசிய ஒருமைப்பாடு தினம் – என்று படேலின் பிறந்த தினத்தை இந்திய அரசு 2014ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறது. வருகின்ற 2018, அக்டோபர் 31ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தினமாக அமையப் போகிறது!

 

கடுமையான சோதனைகளை எதிர்த்து இந்தியாவை ஓரிழையில் இணைத்துச் சாதனை புரிந்த சாதனை மனிதருக்குச் சரியான நினைவுச் சின்னமாக அமையும் இது உலகின் அதி உன்னதமான உயரமான சிலை என்ற பெருமையைப் பெறுவது சரிதானே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஃப்ராங்க் நெல்ஸன் கோல் (Frank Nelson Cole 1861-1921) அமெரிக்க கணித சங்கத்தில் நெடுங்காலம் செயலாளராக இருந்தவர். பெரிய கணித மேதை. சங்கத்தின் பத்திரிகையையும் அவரே நிர்வகித்து வந்தார். தீர்க்கவே முடியாத கணித சிக்கல்களை அவர் தீர்த்ததால் அவருக்கு கணித வரலாற்றில் தனிப் பெயர் உண்டு.

1903ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூயார்க்கில் அமெரிக்க கணித கழகத்தில் ஒரு ஆய்வுப் பேப்பரை கோல் சமர்ப்பிக்க இருந்தார். சிக்கலான பேப்பர் அது. தலைவர் கோலை தனது பேப்பரை சமர்ப்பிக்க வருமாறு அழைத்தார். கோல் அதிகம் பேசாத மனிதர். சில வார்த்தைகளே எப்போதும் பேசுவார். தனது ஆய்வுப் பேப்பரைப் படிப்பதற்கு பதிலாக நேராக போர்டுக்குச் சென்று எழுதலானார். 2 என்ற எண்ணை அதன் 67வது மடங்கிற்குக் கொண்டு சென்று அதை எழுதிய கோல் அதிலிருந்து கவனமாக ஒன்றைக் கழித்தார். பார்ப்பவர்கள் ஆர்வத்துடன் என்னதான் அவர் செய்கிறார் என்று பார்த்த வண்ணம் இருந்தனர்.

பின்னர் கோல் மீக நீண்ட எண்கள் இரண்டை எழுதி அதைப் பெருக்கலானார். எண்கள் இது தான்:  193,707,721 X 761,838,257,287

இதன் விடையும் 2இன் 67வது மடங்கில் வரும் எண்ணில் ஒன்றைக் கழித்தால் வரும் விடையும் ஒன்றாக இருந்தது.

இதைப் பார்த்த கணித அறிஞர்கள் கரகோஷம் செய்து கோலைப் பாராட்டினர். ஆய்வுப் பேப்பரைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று.

இதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்ட போது மூன்று வருடங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையாக உழைத்தேன் என்று அவர் பதில் கூறினார்.

அவரது மேதா விலாசம் வெளிப்பட்ட தருணங்களில் இது மகத்தான தருணம்!

***