தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

Compiled by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 6-37 am (British Summer Time)

 

Post No. 5009

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழேயுள்ள புகழ் மிகு, அருள் மிகு, கவின் மிகு, திரு மிகு சொற்றொடர்களை நுவன்றோர் யாவர் என்று செப்புக!

 

1.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

xxxx

 

2.உள்ளம் பெருங்கோயில்

ஊன் உடம்பு ஆலயம்

xxxx

 

3.ஆயநான் மறையனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்

 

xxx

4.தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்

xxxx

 

5.தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.

xxx


6.மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே

xxxx

7.நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடு இயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்

 

xxx

8.ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமுமம்

அரச குமரரும், பரத குமரரும்

xxx

9.திருமாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்

xxxx

10.அன்பின் வழியது உயிர்நிலை

xxx

11.தமிழ்நாடெங்கும் தடபுடல்! அமளி!

பணமே எங்கணும் பறக்குது விரைவில்

குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!

xxx

12.புகழும் நல் ஒருவன் என்கோ?

பொருவில் சீர்ப் பூமி என்கோ?

திகழும் தண் பரவை என்கோ?

தீ என்கோ? வாயு என்கோ?

நிகழும் ஆகாசம் என்கோ?

நீள் சுடர் இரண்டும் என்கோ?

 

xxxx

ANSWERS

1.பாரதி, பாரதியார் பாடல்கள், 2.திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. மாணிக்கவாசகர், திருவாசகம், 4.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 5.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 6.பட்டினத்தார் பாடல், 7. கம்பன், கம்ப ராமாயணம், 8.இளங்கோ, சிலப்பதிகாரம், 9.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் பாடல்கள், 12.நம்மாழ்வார் திருவாய்மொழி

 

–SUBHAM–