TAMIL BRAHMINS IN THAILAND (Post No.5004)

Written by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 13-0 (British Summer Time)

 

Post No. 5004

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Satya Vrat Shastri of Delhi University gives very interesting details of Tamil Brahmins settled in Thailand, probably 1000 years ago. They still recite the famous Tiruppavai of Andal and Tiruvempavai of Manikka vasagar, the Tamil saints who lived 1500 years ago. Though the Brahmins  speak only Thai language now, they still do the Tamil poems. Buddhism is the main religion of Thailand now; but Hinduism and Sanskrit are at all levels of the society.

 

Now I give below some facts about the Brahmins in Thailand from Shastri’s book ‘Sanskrit and Indian culture in Thailand’:-

Thailand Rajaguru with Kanchi Shankaracharya

Rajaguru

Not everyone born in a Brahmin family is called a Brahmin. Those who are initiated i.e. those who have Diksha are called  Brahmins.

Raja guru gives the initiation and he is selected from among the Brahmins. Next to him is Huana Phram. They get a very meagre grant from the king.

 

Annual Worship

It is of two kinds. One is Triyampavaaya and another is Tripavaaya (The first is Thiruvempavai on Lord Shiva and the second Thiruppaavai is on Lord Vishnu; both are popular in Tamil Nadu)

 

Tiruvempavai is celebrated in three stages: Invoking the god, placing the idol in the swing and the third is bathing the idol. Prasad offered to the deities is distributed to the public. An annual festival is held in December. At the time those who want initiation takes a vow. They stay inside the temple, eat vegetarian food and lie on the floor.

During Tiruvempava festival, they worship Ganesh, Uma and Shiva for ten days.

 

Tamil Brahmins wear only white clothes head to foot. Some wear dhotis.

During the Swing ceremony Lord Siva is placed in between two pillars with a cup of water. There is a story behind it. Brahma who created the world asked Isvara (Shiva) to protect it. Siva thought that the earth was not strong enough to support the living beings. To test its strength, he just set one of His feet on it. He then asked the Nagas to shake the mountain at the ends of the oceans. The Nagas did shake it but nothing untoward happened. Siva was pleased. Here the two pillars stand for the two mountains and the cup of water represents the ocean.

 

Tiruppavai in praise of Lord Vishnu is also celebrated in the similar way. People wear new clothes and decorate their houses during the festival period. In Tamil Nadu it is celebrated for 30 days during the Tamil month Markazi corresponding to December/ January.

 

THE PLOUGHING RITE

The Ploughing rite is an ancient Hindu rite practised from the  Vedic days. Tamil literature also has references to this rite. Sita Devi was discovered and received by Emperor Janaka during such a rite. Brahmins play a main role in it.

Brahmins fix a date after consulting the almanac (Panchang). They do the Puja after the Buddhists start it in the Temple of Emerald Buddha (Wat Phra Keao). The king comes at the appointed time and he sends his deputy to act on his behalf. The priest worships Gauri, Ganga and Dharani (earth). Brahmins sprinkle water with the grains. Auspicious things are carried by the women. Bulls are also brought with the plough. The king’s nominee does the symbolic ploughing after worshipping the bulls. When all the ploughing finished, the bulls are sent to its place. In front of them seven things are placed: Paddy, Pulses, Corn, Sesame seeds, Water, Wine and Grass. When they show them to the bulls, naturally they run towards them ; the priests watch what they eat first.

If the bulls eat the corn or paddy or the pulses first, it is believed that the crops would be good the year round. If they eat grass or sesame seeds first, it is said that the crops (harvest) world be moderate. If, however, the bulls take to water first, the belief is that there would be floods and the crops would be damaged. If by chance, the bulls take to wine the belief is that drought conditions would prevail leading o unrest everywhere. After the announcement of the future position of the crops, the ceremony comes to an end.

Temple of Emerald Buddha

There are many more rites the Brahmins perform.

 

— SUBHAM–

தாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்! (Post No.5003)

Written by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 5003

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

தாய்லாந்தில் தமிழ் என்றே தெரியாமல், கோவிலில் ‘டிருவெம்பாவை’ (திருவெம்பாவை, மாணிக்கவாசகர்) ஓதிய கதையை தெ.பொ.மீ. போன்ற அறிஞர்கள் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனர். ஆனால் ஸத்ய வ்ரத சாஸ்திரி (1982) எழுதிய தாய்லாந்து பற்றிய ஆங்கில நூலில் மேலும் பல சுவையான செய்திகளைத் தருகிறார்.

 

தாய்லாந்து இப்பொழுது புத்தமத நாடு. ஆனாலும் இந்துமதத்தின் தாக்கத்தையும் ஸம்ஸ்க்ருதத்தின் செல்வாக்கையும் பண்பாட்டிலும் மொழியிலும் காண முடிகிறது. பல இந்துக் கோவில்களும் உள.

 

இங்கே பிராஹ்மணர்கள் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ‘’தாய்’’ (THAI LANGUAGE) மொழி மட்டுமே பேசுகின்றனர். நடை, உடை, பாவனையில், ஏனைய மக்களிடமிருந்து வேறு பட்டவர்கள். தூய வெள்ளை ஆடை மட்டுமே உடுத்துவர்; வேஷ்டி அணிகின்றனர். காலில் ஷூ, ஸாக்ஸ் அணிந்தாலும் அவையும் வெண்மையே.

 

ஆயிரக்கணக்கில் பிராமணர்கள் இருந்தும் தீக்ஷை எடுத்தவர்களை மட்டுமே பிராஹ்மணர் என்று சொல்லுவர். இப்படிப் பார்த்தால் ஐம்பது, அறுபது பேர் மட்டுமே பிராஹ்மணர். இந்த தீட்சையை வழங்குபவர் ராஜ குரு. அவர் இல்லாவிடில் ஹுவன் ப்ராம் (சுவர்ண பிராஹ்மண) இந்தப் பட்டத்தை வழங்குவார்.

 

ராஜ குரு என்பவரும் பிராஹ்மணரே; அவரை மற்றவர்களைக் கலந்தாலோசித்து மன்னர் தேர்ந்தெடுப்பார்.

மன்னர் கொடுக்கும் மான்யத்தொகை மிக மிகக் குறைவு என்பதால் ஏனைய பூஜைகள் மூலம் அவர்கள் தட்சிணை வாங்கிப் பிழைக்கிறார்கள்.21 வயத்துக்கு மேலுள்ள எந்தப் பிராஹ்மணனும் இதற்குத் தகுதி உடையவரே.

‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’

 

1982 ஆம் ஆண்டு வெளியான இந்த நூலில் சாஸ்திரி மேலும் கூறுகிறார். ராஜ குரு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’ விழா நடத்த வேண்டும். இவை தமிழில் உள்ள திருவெம்பாவை, திருப்பாவை என்பன ஆகும்.

முதலாவது விழாவில் சிவ பெருமானை மூன்று கட்டங்களில் வழிபடுவர். முதலில் இறைவனை ஆவாஹனம் செய்து, பின்னர் ஊஞ்சலில் எழுந்ததருளிச் செய்து, புனித நீரால் அபிஷேகம் செய்து, சாதம் முதலிய பிரஸாதங்களைப் படைப்பர். பின்னர் கடவுளை வழி அனுப்புவர். இது பத்து நாட்கள் நடைபெறும் விழா.

 

இதே காலத்தில் புதிய பிராஹ்மணர்களுக்கும் தீக்ஷை வழங்கப்படும். அவர்கள் ‘பூ சுத்தி’, ‘பூத சுத்தி’ செய்துவிட்டுக் கோவிலிலேயே தரையில் படுத்து உறங்குவர். மரக்கறி உணவை மட்டுமே உண்ணுவர். இந்த விரதம் டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நடக்கும். யார் யார் பிராமணர் பட்டம் பெற விரும்புகிறாரோ அவரவர்களுக்கு ராஜ குரு தீட்சை தருவார். தினமும் கணேசர், உமை, சிவன் வழிபாடு மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெறும்.

 

சிவபெருமான் இந்தப் பத்து நாட்களுக்குப் பூமிக்கு வருவதாகச் சொல்லி, திருவெம்பாவை படிப்பர். நவக்ரக வழிபாட்டுடன் பூஜைகள் துவங்கும். இரவு நேரத்தில் திருவீதி உலா நடக்கும். மக்கள் புத்தாடை அணிந்து வீடுகளை அலங்கரிப்பர்.

 

ஊஞ்சல் திருவிழாவும் உண்டு. இறைவனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவர். இரண்டு தூண்களுக்கு இடையே ஒரு குவளையில் தண்ணீர் வைப்பர். இதுதான் சமுத்திரம்/கடல்.

இதுபற்றிய கதை ஒன்றும் சொல்லுவர். சிவ பெருமான் தன்னுடைய ஒரு காலால் பூமியை அமுக்கி நிலைபெறச் செய்தார். ஆயினும் அது வலிமையுடையதா என்று ஐயப்பாடு எழுந்தது. உடனே நாக தேவதைகளை அழைத்து பூதளத்தை அசைக்கச் சொன்னார். அப்போதும் அசையவில்லை. உடனே இறைவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. ஊஞ்சல் கட்டிய இரண்டு தூண்கள் இரண்டு மலைகள் ஆகும்; நடுவில் குவளையில் வைக்கப்பட்ட நீர் கடல் ஆகும். இவை எல்லாம் இறைவன் கருணையால் எல்லை தாண்டாமல் ஒழுங்காக இருக்கின்றன என்பதைக் காட்டுவதே இதன் தாத்பர்யம்.

 

இதே போல நாராயணணின் புகழ்பாட ‘ட் ரி ப் பாவ்ய’ (திருப்பாவை) விழா நடக்கும் சிவன் சென்றவுடன் நாராயணன் பூமிக்கு வந்ததாக ஐதீகம். இவ்வறு விழா நடத்திய பின்னர் பிராஹ்மணர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் கைகளாலேயே மொட்டை அடிப்பர் அல்லது முடி இறக்கி குடுமி வைப்பர். இப்போதெல்லாம் கொஞ்சம் முடியை மட்டும் அடையாளபூர்வமாக வெட்டுகின்றனர்.

ஏர் உழும் பணி

அந்தக் காலத்தில் ராஜகுருவானவர் வேத முழக்கம் செய்தார். இப்போது அது இல்லையாம்.

 

Thai Rajaguru with Kanchi Shankaracharya

பணி

 

அந்தக் காலத்தில் அரசர்களே முன்னின்று பயிரிடுதலைத் துவக்கினர். இப்படி ஜனக மஹாராஜா ஏர் உழுதபொழுதுதான் சீதா தேவி கண்டு எடுக்கப்பட்டாள். இந்த வேத கால வழக்கம் தமிழ் இலக்கியத்திலும் உண்டு. தாய்லாந்தில்  இது நடத்தப்படும் முறை மிகவும் சுவையானது.

ராஜகுரு பஞ்சாங்கத்தைப் பார்த்து வைகாசி மாதம் நாள் குறிப்பார். முதல் நாள் பௌத்தர்கள், மரகத புத்தர் சிலை முன்னர் ஜபம் செய்வர். மறு நாள் அதிகாலையில் பிராஹ்மணர்கள் கௌரி, தரணி (பூமி), கங்கா (கங்கை நதி) பூஜை துவங்குவர். பலவகை தானியங்களை நீருடன் கலந்து தூவுவர். குறிப்பிடப்பட்ட நேரத்தில் மன்னர் வருவார். அவர் தனது பிரநிதியை அனுப்பி காளைகளை வணங்கி ஏர் உழச் செய்வார். அந்தப் பிரதி நிதி மரகத புத்தர் கோவில் புல்வெளியில் ஏரை முன்னும் பின்னும் இழுப்பார். பின்னர் காளைகள் திரும்பிச் செல்லும்.

 

ஏருழும் பிரதிநிதிக்கு முன்னர் பிராமணர்கள் செல்லுவர். மங்கையர் மங்களப் பொருட்களை ஏந்தி வருவர்.

ஏழு பொருள் சோதனை!

ஏர்  உழுதல்  முடிந்த பின்னர் காளை மாட்டு ச் சோதனை நடக்கும். மது, புல், எள், நெல், தண்ணீர், சோளம், பயறு வகைகளை வைத்து காளை மாட்டிடம் காட்டுவர். அது எதன் மீது பாய்ந்து முதலில் தின்கிறதோ அது அந்த ஆண்டு செழித்து வளரும் என்பது நம்பிக்கை.

 

காளை மாடு நெல்லையோ பயறு வகைகளையோ சோளத்தையோ முதலில் சாப்பிட்டால் அந்த வகை தானியம் அந்த ஆண்டில் அமோக விளைச்சல் பெறும். தண்ணீரை முதலில் சாப்பிட்டால் வெள்ளம் வந்து பயிர்கள் அழியும்; புல்லையோ எள்ளையோ சாப்பிட்டால், தானிய விளைச்சல் அரை குறையாக இருக்கும். மதுவைச் சாப்பிட்டாலோ வறட்சி தாண்டவம் ஆடும். நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று அறிவிப்பர். அத்துடன் ஏர் உழும் விழா இனிதே நிறைவு பெறும்.

இது தவிர பிராஹ்மணர்களின் பங்கு பணி வேறு சில சடங்குகளிலும் உண்டு. அவற்றைத் தனியே காண்போம்.

–சுபம்–

 

 

என்னப் பூ? சொல்லுப்பு! QUIZ (Post No.5002)

Compiled by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 6-19 am (British Summer Time)

 

Post No. 5002

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் நிறைய உள்ளன. ஸம்ஸ்க்ருதத்தில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்துச் சொற்கள் என்று அகராதியே உள்ளது. ஏனெனில் அங்கு இது மிகவும் அதிகம். இதோ ஒரு சிறு தமிழ் ‘சாம்பிள்’. 1958 தமிழ் மலர் ஆண்டு மலரில் இருந்து எடுக்கப்பட்டது.

 

ANSWERS:–

 

–SUBHAM–

 

பாரதி போற்றி ஆயிரம் – 89 (Post No.5001)

Compiled by S NAGARAJAN

 

Date: 12 MAY 2018

 

Time uploaded in London –  5-49 AM   (British Summer Time)

 

Post No. 5001

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 89

  பாடல்கள் 949 முதல் 976

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

20 கவிஞர்கள் இயற்றியுள்ள 28 பாடல்கள்!

பல கவிஞர்கள் பாரதியாரைப் போற்றி எழுதியுள்ளனர். புதுவையில் பாரதியாரின் பிறந்த தினத்தை ஒட்டி 20 கவிஞர்கள் இயற்றியுள்ள 28 கவிதைகள் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு வழங்குகிறோம்

20 கவிஞர்களின் 28 பாடல்கள்

 

பாரதியின் பாட்டுத் திறம்

இயற்றியவர்: கலைமாமணி புலவர் நாகி,
புதுச்சேரி – 9

 

குருதியிட்ட தூவலினால் கொழுகொம் பின்றி

…..கொடிபோலத் துவன்றிட்ட மக்கள் தம்மைக்

குருதிகொட்டப் போராடும் தலைவ னொப்பக்

…..குன்றெனவே நின்றுபெரும் உண்மையான

ஒருமையுடன் வாழ்வதற்கு உணர்த்தும் பாட்டை

…..உலவவிட்ட காரணத்தால் உலகில் நாமும்

பெருமையுடன் வாழுகின்றோம் பிழை யில்லாப்

…..பாரதியின் வீரமிக்கப் பாட்டி னாலே!

***

 

பாரதிபோல்
வித்தாகி வாழ விரும்பு

இயற்றியவர்: தமிழ்மாமணி புலவர் சீனு.இராமச்சந்திரன்
புதுச்சேரி-9

 

ஊருக்கு நல்லது சொல்லி உழைத்தநம்

பாரதியைத் தேருக்குள் ஏற்றியே – பாருக்குள்

தாரணி சூட்டியே தாய்த்தமிழைப் போற்றியே

சாரதியே நீயென்று சாற்று.

 

எத்தனை நாள்வாழ்வோம் இம்மண்ணில் என்றெண்ணி

முத்தான நற்செயல்கள் செய்யாமல் – இத்தரையில்

சத்தாக சாப்பிட்டுப் பயனென்ன, பாரதிபோல்

வித்தாகி வாழ விரும்பு.

***

 

சொடுக்கி விட்ட சாரதி

இயற்றியவர்: கலைமாமணி இலந்தை இராமசாமி
கனடா

 

தொடுத்தெ டுத்த சொல்லிலே

……….சூடு போட்ட நாயகன்

கொடுக்க என்றே தோன்றினான்

……….கோயில் நெஞ்சில் ஊன்றினான்

முடுக்கி விட்ட வார்த்தைகள்

……….மூச்சு விட்டு வாழவே

சொடுக்கி விட்ட சாரதி

……….சுப்ர மண்ய பாரதி

***

சொல்லுடன் கலந்துநின்ற சுப்பிரமணிய பாரதி

இயற்றியவர்: கவியோகி வேதம்
சென்னை

 

காட்டினுள்ளே அடரிருள்போல் சொல்வ ளர்த்த

கவிஞருள்ளே, நெல்வேலிச் சீமை மண்ணைத்

தேட்டையிட்டுப் படருகின்ற பசும்வ யல்போல்

தெவிட்டாத அழகுகொஞ்சும் சொல்லே வேய்ந்த

பாட்டையிட்டுத் தமிழ்நெஞ்சில் “பாட்டைப்” போட்டான்

பாட்டனெங்கள் பாரதி!எச் சொல்லின் உள்ளும்

பாட்டனவன் மீசையில்கை வைத்த வண்ணம்

பார்த்திருப்பான்! அதனால்தான் பாரை யாண்டான்!

***

 

சிந்து வேந்தர் பாரதி

இயற்றியவர்: பாவலர் எஸ். பசுபதி,
கனடா

 

கந்தன் மொழியை வேலன் பேரில்

காக்க வந்த சொல்லயில்;

இந்தி யக்க விஞர் வானில்

என்றுங் கூவும் பூங்குயில்

சிந்து வேந்தர் பார திக்கென்

சென்னி யென்றுந் தாழுமே!

செந்த மிழ்க்க விக்கு முன்பென்

சென்னி யென்றுந் தாழுமே!

 

******

 

பாரதி நமை வளர்த்தான்

இயற்றியவர்: கலைமாமணி கல்லாடன்
புதுச்சேரி

 

பாட்டில் அருளினை அன்பினை ஊட்டியே

பாரதி நமைவளர்த்தான் – தேன்

கூட்டில் இழிதரும் நற்சுவை கூட்டியே

கொள்க எனவுரைத்தான் – நம்

நாட்டில் நிலவிய அடிமை ஒழித்திட

அல்லல் பலவேற்றான் – தன்

பாட்டுத் திறத்தினால் வையம் முழுவதும்

பாலித்திட நினைத்தான்.

 

எட்டுத் திக்கும் வெற்றி கொட்டுமுரசென

யீடில் கவிபடைத்தான் – பகை

வெட்டியே வீழ்த்திட வெற்றியே சூடிட

வீர உணர்வளித்தான் – அன்று

தட்டி எழுப்பிய விடுதலை உணர்வினால்

தாயகம் மீட்டோமே – அவன்

சுட்டிய அருளினை அன்பினைக் கைவிட்டுச்

சுயநலங் கொண்டோமே!

 

***

Picture- Ramanan as Bharati in Bharatiyar Drama, directed by Raman.

பாரதி என்றொரு புலவன்

இயற்றியவர்: பாவலர் அண்ணா. தருமலிங்கம்
புதுச்சேரி

 

பாரதியென் றொருபுலவன் பாரதிரப் பாட்டெ ழுதி

பார்ப்பவனைப் படிக்கவைத்தான் படித்தவனைப் புரிய வைத்தான்.

வீரத்தை எழுத்தாக்கி வீட்டுக்குள் அனுப்பி வைத்தான்

விடுதலையை நாட்டுக்குள் விளையாட வைத்து விட்டான்

வோரத்தில் நடந்தவனும் உரிமைக்குக் குரல்கொ டுத்தான்

ஒற்றுமைதான் வாழ்க்கைக்கு உரியவழி யெனச் சொல்லி

கூறவந்த எண்ணத்தைக் குழந்தைக்குக் கொடுத்து விட்டு

மனிதநேயம் நம்மெதிரில் மலரும்பார் எனச் சொன்னான்.

 

***

 

பாரதியை வாழ்த்துவோம்

இயற்றியவர்: புலவர் செ. இராமலிங்கன்
புதுச்சேரி

 

பாரதியின் பாட்டெல்லாம் சமுதா யத்தைப்

பண்படுத்தும் பாட்டாகும்! தமிழுங் கொஞ்சும்!

சீரதிகம் கொண்டதவன் பாக்க ளெல்லாம்

சீர்திருத்தம், விழிப்புணர்வை எடுத்துக் காட்டும்!

வேரதிர வெள்ளையரின் ஆதிக் கத்தை

வெடிவைத்துத் தகர்த்தவன் வேட்டுப் பாட்டே!

கூரதிகம் கொண்டவன் பாட்டின் சொற்கள்!

கொண்டாடி பாரதியை வாழ்த்து வோமே!

 

***

 

நந்தமிழுக்குத் தூண் பாரதி

இயற்றியவர்: புலவர் துரை. மாலிறையன்
புதுச்சேரி

 

பாட் டெடுத்துப் பாடிநம் பாஞ்சாலி சீர்மிகுத்தார்

கூட் டமிழ்தப் பாட்டால் குயில்புகழைக் – காட்டுகின்ற

வண்ணம் தமிழ்பாடி வாழ்கின்றார் பாரதியார்

கண்ணன்பாட் டாலுங் கனிந்து.

 

வோசை நயங்கொஞ்சும் உணர்வுடையப் பாப்புனைந்தே

ஆசையினால் சான்றோர் அனைவரையும் – பேசவைத்தார்

வாய்மை வழிநின்ற வண்புலவர் பாரதியின்

தூய்மைநலம் நந்தமிழுக்குத் தூண்.

 

***

தந்தையர் நாடெனும் தனிப்புகழ் சேர்த்தவர் பாரதி

இயற்றியவர்: பாவலர் சூரிய விசயகுமாரி
புதுச்சேரி

 

“செந்தமிழ் நாடு” என்று

செப்பிடும் போதே காதில்

வந்துதேன் பாயு மென்னும்

வாய்மையை யெடுத்துக் கூறி

நந்தமிழ்ப் பெருமை தன்னை

நாட்டவர் அறியச் செய்தார்

தந்தையர் நாடென் கின்ற

தனிப்புகழ் தனையும் சேர்த்தார்!

 

ஈடிலாப் புகழும் கொண்ட

பாரதி இந்த நாட்டின்

ஊடெலாம் கலந்து மக்கள்

உளத்தெலாம் கவிதைப் பாய்ச்சிப்

பீடெலாம் பெற்று வாழும்

பேறெலாம் நமக்குத் தந்தார்

ஏடெலாம் வாழ்த்து கின்ற

ஏற்றத்தின் சிறப்பி னாலே!

 

******

 

பாரதியே வணங்குகின்றேன்

இயற்றியவர்: கவிஞர் தே. சனார்த்தனன், 
புதுச்சேரி

 

ஒற்றுமைக்குப் பாடுபட்டாய்! ஒப்பி லாத

உயர்கவிகள் பாடிவிட்டாய்! உரிமை யோடு

பற்றுவைத்தாய் பாரதத்தாய் நாட்டின் மீது!

பாழ்மூடப் பழக்கத்தை வெறுக்கச் செய்தாய்!

கற்றவரும் மற்றவரும் காதல் கொள்ளும்

கருத்தோடு விடுதலையை வேண்டி நின்றாய்!

பெற்றதிரு நாட்டினது பெருமை காத்த

பெரும்புலவன் பாரதியே! வணங்கு கின்றேன்!

 

***

பாழ்நிலை நீக்க வாராய்

இயற்றியவர்: பாவலர் வே. முத்தையன்,
புதுச்சேரி

ஒன்றுபட்டால் வாழ்வுண்டாம் என்று ரைத்த

வோங்குபுகழ் பாரதியே! ஊரார் அந்நாள்

ஒன்றுபட்டே வோரணியாய் நின்ற தாலே

ஒண்டவந்த அயலவரு மோட்டம் பெற்றார்!

பெற்றுவிட்ட விடுதலையை வானு லாவப்

பேசியிங்குப் பெருமைகொள்ளும் நம்மோர் நாட்டுப்

பற்றற்றுப் போயினரே! பாழாய்ப் போகும்

பாரோரின் நிலைநீக்க வாராய் இங்கே!

 

***

 

பாரதியைப் போற்றுகின்றேன்

இயற்றியவர்: பாவலர் கி. பாரதிதாசன்,
பிரான்சு.

 

சாதிமதிச் சழக்குகளைச் சாடி, நல்ல

சமதர்மப் பாதைதனைத் தேடி, வல்ல

நீதிநெறி யோங்கிடவே யோடி, இந்த

நீள்புவியில் தமிழெடுத்துப் பாடி, மண்ணில்

மோதிவரும் அறியாமை மாய, ஏட்டில்

முற்போக்குத் தத்துவத்தை யூட்டி, இங்குக்

கோதில்சீர் பெண்ணினத்தின் பெருமை காக்கக்

குரல்கொடுத்த பாரதியே! போற்று கின்றேன்

 

***

சூழ்பகை துரத்திய பாரதி

இயற்றியவர்: கவிஞர் வ. பழனி,
புதுச்சேரி

 

பாட்டுப் பாடிப் பாரதம் காத்த

நாட்டுக் கவிஞர் நலமிகு பாரதி

அடிமை வாழ்வை அறவே வெறுத்துக்

குடிமை உயரவே குவலயம் காத்தார்.

நாட்டு நடப்பை நரம்பு புடைக்க

ஏட்டில் எழுதி ஏற்றஞ் செய்தவர்.

புவியில் சிற்ந்து புதுமை செய்தே

கவியால் உயர்ந்து கடமை புரிந்தவர்.

தாழ்ந்த மக்கள் வாழ்வில் உயர

சூழ்ந்த பகையை துரத்தினார் இவரே!

 

***

 

பாரதிச் சீரையெண்ணி சிந்தை மகிழ்வோம்.

இயற்றியவர்: கவிஞர் மு. தியாகராசன்,
புதுச்சேரி

 

கல்லார் இல்லா உலகங் காண

இல்லார் இல்லா மக்கள் காண

எல்லா இனமுஞ் சமமென எண்ணப்

பொல்லா மூடப் பொய்மைகள் மாயச்

சொல்லார் பாரதி தோன்றினன் மாதோ!

வீதிகள் தோறும் பள்ளிகள் செய்திட

சாதி பேதச் சழக்குகள் சாய்க்கக்

கொஞ்சுங் குழந்தை கூடியே ஆடிட

செஞ்சொல் குழைத்துச் செப்பினான் பாரதி!

அடிமையில் உழன்றே அல்ல லுற்றநாம்

விடுதலை காண விழைந்தான் பாரதி!

உலகில் தமிழே உயர்ந்தது கண்டான்;

இலகு செம்மொழி ஏற்றம் இந்நாள்

பாரே போற்றும் பாரதிச்

சீரை யெண்ணிச் சிந்தை மகிழ்வமே!

 

***

பாரதி பாவெல்லாம் தேன்

இயற்றியவர்: கவிஞர் இராச.தியாகராசன்
புதுச்சேரி

 

சொல்லுக்கு வேந்தனாம் சுப்ரமண்ய பாரதி

வில்லுக்கு வேந்தன் விசயனெனச் செந்தமிழில்

கொள்ளித் தழலெனவே கும்பினியர் ஆட்சியற

தெள்தமிழில் பாடியதோ தேன்!

 

தேனமுத வாரிதியாய்த் தீந்தமிழின் காவலனாய்க்

காணிநிலங் காளியிடங் கேட்டவனின் பாக்களிலே

காணும் வருங்காலக் கனவென்னுஞ் சிந்தனைதான்

தோன்று மெனதுள்ளச் சொல்!

***

செயல் வடிவம் ஆக்கல் வேண்டும்

இயற்றியவர்: புலவர் மு. இறைவிழியனார்
ஆசிரியர் *நற்றமிழ்* – புதுச்சேரி

 

பாரதிக்கு விழாவெங்கும் எடுக்கக் கண்டோம்

……….பாரதியின் பாடலெங்கும் பாடக் கேட்டோம்

தீரவில்லை சாதிமதப் பூச லிங்கே!

……….தீந்தமிழில் பெயரில்லை ஒப்ப மில்லை

ஊரெல்லாம் பெண்ணடிமை பேசல் கேளீர்

……….உரிமையுடன் உழைப்பாளர் வாழ்கின் றாரா?

பாரதியின் புகழ்பரவ அவரின் கொள்கை

……….பாருணரச் செயல் வடிவ மாக்கல் வேண்டும்!

***

 

பாரைப் புதுக்கிய பாரதி

இயற்றியவர்: பாவலர் சிவ. இளங்கோ
புதுச்சேரி

 

பாட்டினில் புரட்சி செய்தான் பாவையர் உரிமை சொன்னான்

கேட்டினை அடையா வாழ்க்கை கேள்வியிற் சிறந்தா லென்றான்

கூட்டினை திறந்து விட்டுக் குறைவிலாக் களிப்பி லின்பக்

காட்டினில் சுற்றி வந்தான் கடவுள துவென்று சொன்னான்.

 

சாத்திரம் பொய்க ளென்றான் சடங்கின்றி வாழச் சொன்னான்

ஆத்திரங் கொள்க வென்றான் அவனியை வெல்க என்றான்.

கோத்திரங் குலங்க ளெல்லாம் குறுகிய வழிக ளென்றான்

பாத்திறம் காட்டிப் பாரை பாரதி புதுக்கிட் டானே!

 

******

முண்டாசுக்காரன் உண்டாக்கிய குணம்

இயற்றியவர்: கவிஞர் முனைவர் உரு. அசோகன்
புதுச்சேரி

 

முண்டாசுக் காரன் முறுக்கு மிளமீசை

கண்டாலே கூசுமக் கண்ணன் இவந்தானே!

உண்டாக்கி விட்டான் உணர்வை அதனாலே

கொண்டேன் செருக்கு குணம்

 

தலைமேல் விடாது தவழ்கின்ற மேகத்தை

காலை எழுந்த கதிரவனை மாலையில்

காண்கின்ற வெண்ணிலவைக் காணாத காற்றையும்

நாணுவகைச் செய்வேனே நான்.

 

***

பேரினிடை வாழ்கவி பாரதி

இயற்றியவர்: கவிஞர் ந. இராமமூர்த்தி,
புதுச்சேரி

 

இன்பம் பெருக்கும் இனியபல பாவியற்றி

இன்னல் இருளகற்றி ஏந்திழையாள் சீருரைத்து

கன்னல் மொழியெனக் கற்றமிழை வாழவைத்தான்

தன்னந் தனியான கவி!

 

மிக்க புரட்சியதும் மேலான உண்மையதும்

தக்க கவியும் முறைபாடிப் – பக்குவமாய்

ஊர்நலமும் வாழ்முறையும் கூறுகின்ற பாரதியார்

பேரினிடை வாழ்கவிப் பார்!

 

தொகுப்பாளர் குறிப்பு: இருபது கவிஞர்களின் 28 பாடல்களை வெளியிட்டுள்ள இணையதளம்:

 

http://www.pudhucherry.com/pages/makavi.html

 

புதுச்சேரி மின்னிதழான இது பாரதி பற்றிய பாடல்களைத் தொகுத்து வழங்கியுள்ளது. அரிய இந்த பணியை ஆற்றிய பாரதி ஆர்வலர்கள் அனைவருக்கும் நமது நன்றி. இந்த இணையதளத்திற்கும் நமது நன்றி.

 

கவிஞர்களைப் பற்றிய விரிவான குறிப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தமிழின் சுவையும் கவிதைகளின் கருத்தாழமும் இவர்களைப் பற்றி நம்மை நன்கு உணர வைக்கிறது. கவிஞர்கள் அனைவருக்கும் நமது நன்றி.

 

***

 

 

 

BEAUTIFUL HINDU TEMPLE IN THAILAND (Post No.5000)

Written by London Swaminathan 

 

Date: 11 May 2018

 

Time uploaded in London – 19-47 am (British Summer Time)

 

Post No. 5000

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

There is a beautiful temple in Thailand looking like Angkor Wat temple but it is not as famous as Angkor Wat temple of Cambodia or Borobudur temple of Java, Indonesia. Only now Thailand has renovated and protected the temple. There are lot broken statues. It is a Hindu Temple with Shiva, Vishnu and Nataraja.

 

Where is it in Thailand?

It is located in the Buriram ( Ram Puri) province of Thailand.

What is it called?

Phanom Rung Temple; and the full name is Prasat Hin Phanom Rung

How old is the temple?

The construction started around 10th century and finished around 13th century.

Why is it famous now?

It is constructed in the Khmer style like the world-famous Angkor Wat temple.

 

What are the wonders there?

On the Tamil New Year Day (13, 14 April), the sun light travels through all the 15 gates of the temple. A big festival is held annually to coincide with the important date in solar calendar. The sun enters the Mesha Rasi in the month of Chitra. Dance, music and colourful procession form part of the celebrations.

What can we see there?

Vishnu Shiva, Nataraja, Vedic Gods Indra, Agni, Varuna, Brahma, Shiva and others. Ramayana sculptures are remarkable.

Is it same like India?

No. That is where the interesting details are>

Sanskrit scholar of Delhi University Sathya Vrat Shastri  gives the following information in his book on Thailand:-

It is built of sand stone.

There is a carving of two five headed Nagas (Snakes ) held by hands. This helps to compare it with the same statues in Cambodia which are dated around 957 CE.

One of the goddesses is Brahmi carved out of yellow sandstone with four heads.

The main Prang (tower) has interesting stone carvings. The garble on the porch in the eastern side has a massive figure of Nataraja. On the southern side a Rsi (ascetic) in happy mood.

RAMAYANA SCENES

Jatayu fighting with Ravana at Sita’s abduction.

Killing of Marica in the deer disguise.

Man shooting an arrow (partly broken; may be Rama)

Abduction of Sita

Rama returning to Ayodhya on Horse back!

Briging of Indrajit’s head to Mandodari, Wife of Ravana.

Mandodari’s palace with two parrots.

This shows that Ramayana has influenced the South Asian countries more than the Mahabharata.

 

Apart from the Ramayana scenes, we see Narasimha killing Hiranyakasyap, Krishna killing Kamsa etc.

VEDIC GODS

The portrayal of Vedic gods in eight directions is more interesting because it differs widely from Indian sculptures: –

Vedic God Indra is on one headed Airavata. In other countries, we see Four headed Airawata, the white elephant.

Agni is on Rhinoceros!

Agni is on Rhino; in India Agni’s Vahana is a goat.

Varuna is shown on a five hooded Naga; in India Varuna is on a crocodile.

Kubera on lion is also a strange depiction; he always travels on the back of a Yaksha.

Isana is shown on a bull with three swans/hamsas.

Though these statues should occupy different directions, they are lying separately. May be they are part of wooden pillars which might have become rotten in course of time.

All the statues have different jewels, dress, flower motifs etc. Now the Thai authorities have made it a protected monument and an entrance fee is fixed. Thai government has released stamps featuring the monuments. The April festival attracts a good number of tourists.

Many people outside Thailand don’t know that a big Hindu temple exists in Thailand.

 

(Pictures are taken from Wikipedia and google)

–Subham–

 

தாய்லாந்தில் ஒரு அதிசயக் கோவில் (Post No.4999)

Written by London Swaminathan 

 

Date: 11 May 2018

 

Time uploaded in London – 13-40 am (British Summer Time)

 

Post No. 4999

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

முதலிலேயே ஒரு உண்மையச் சொல்லி விடுகிறேன். போகாத இடம் பற்றி நான் எழுதுவதில்லை. ‘கண்ணால் கான்பதே மெய், காதால் கேட்பதெல்லாம் பொய்’- என்ற கொள்கை உடையவன் நான். ஆயினும் இப்பொழுது தாய்லாந்து பற்றி ஸத்ய வ்ரத சாஸ்திரி எழுதிய புஸ்தகத்தைப் படிக்கையில்தான் இப்படி ஒரு இடம் இருப்பதே தெரிந்தது. ஆகையால் அதை தமிழ் கூறு நல்லுலகத்துக்கும் செப்புவோமே என்ற நல்லெண்ணத்தில் எழுதுகிறேன். ஏனெனில் இது அதிசயங்கள் நிறைந்த கோவில்.

 

எங்கே உள்ளது?

தாய்லாந்தில் பூரிராம் (ராம புரி) மாகாணத்தில் உளது.

இடத்தின் பெயர் பனம் ரங். இது க்மேர் (கம்போடிய) கட்டிட பாணியில் அமைந்த கோவில். இந்து சிலைகளும், சின்னங்களும் உள

எவ்வளவு பழமையானது?

பத்தாம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி இருக்கலாம்.

 

அது எப்படித் தெரிந்தது?

கம்போடியாவில் உள்ள அங்கோர்வட் முதலிய ஆலயங்களின் தாக்கம் இதில் இருப்பதாலும் சில கல்வெட்டுகளாலும் தெரிகிறது,

இதன் சிறப்பு ஏன் அங்கோர்வட் (கம்போடியா), போரோ புதூர் (ஜாவ, இந்தோநேஷியா போலத் தெரியவில்லை?

இப்பொழுதுதான் யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் இதைப் பாரம்பர்ய சின்னமாக அறிவிக்க அணுகியுள்ளனர்

தாய்லாந்து அரசும்

தபால்தலைகள் முதலியன வெளியிட்டு இதன் அருமை, பெருமைகளை உலகிற்குப் பறையறிவித்து வருகின்றது.

 

இளம் சிவப்பு மணற்கற்களைக் கொண்டு ஒரு குன்றின் மேல் கோவிலைக் கட்டி இருக்கின்றனர். இது சிவ பெருமான் குடிகொண்டுள்ள கயிலை மலையைச் சிறப்பிப்பதாகும்

அதிசயங்கள் என்ன?

1.ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 13, 14) இந்தக் கோவிலின் 15 வாயில்களையும் சூரிய ஒளி தொட்டுச் செல்லும். அன்றைய தினம் முதல் பனம் ரங் விழா துவங்கும்.

அப்பொழுது சுவாமி திரு வீதி உலா நடக்கும்; நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கும். பழந்தமிழ் நாட்டில் நடந்த இந்திர விழாக் காட்சிகளை நினைவு படுத்தும்

 

  1. கோவிலுக்குச் செல்வதற்கான பாதை 600 அடிக்கும் மேல் நீளமானது. போகும் வழியில் ஒரு மண்டபம் உண்டு; அங்குதான் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் அமர்ந்து அலங்காரம் செய்து கொள்வார். கிட்டத்தட்ட ராஜ ராஜ சோழன் ஆண்ட காலம்.

 

 

இந்த நீண்ட பாதையைக் கடந்தவுடன் இரண்டு நாகர் பாலங்கள் இருக்கும். அவைகள் மேலுலகத்துக்குச் செல்லும் வழிகளாகும். நாக லோகம் என்பது மேலுலக வழிகளைக் குறிக்கும்.

இதற்குப் பின்னரே உட்புறக் கோவில்.

 

அங்கே சிவன், விஷ்ணு சிலைகளைக் காணலாம். உயரமான அமைப்பு மேரு மலை என்றும் சொல்லுவர். சிவலிங்கமும் அங்கே உளது.

  1. இங்கு ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும், தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள ராமாயணச் சிற்பங்களைக் காண்கையில் ஆதிகாலத்தில் மஹாபாரதத்தைவிட ராமாயணமே மக்களை அதிகம் கவர்ந்தது என்று சொல்லலாம்.

 

  1. ஒரு கையிலிருந்து இரண்டு ஐந்து தலை நாகங்கள் இருப்பதால் இது க்மேர் சிலைகளின் பாணியைப் பின்பற்றுவது தெரிகிறது. ஆகை யால் இந்த அமைப்பு பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

 

4.ஒரு கோபுரத்தில் நடராஜர், புன்னகை புரியும் ரிஷி , ஜடாயு, சீதையைக் கடத்தும் காட்சி, மாரீசன் வதை, சீதா ஸ்வயம்வரக் காட்சி, வில்லை முறிக்கும் காட்சி என்பன இருக்கின்றன.

 

இன்னொரு காட்சியில் ராமர் குதிரை மீது பவனி வருகிறார்; இசைக் கலைஞர்கள் முன்னே செல்கின்றனர்.

மண்டோதரி கையில் இந்திரஜித்தின் தயைக் கொடுக்கும் காட்சி, ராவணனுடன் ராமனும் லெட்சுமணனும் சண்டை போடும் காட்சி, ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் காட்சிகளும் காணப்படும்.

 

ரிஷிகள் ஜப மாலையுடன் அமர்ந்த காட்சிகளும் தத்ரூபமானவை.

 

நரேந்திர ஆதித்யன் என்பவன் சிவன் கோவிலைக் கட்டிய செய்தியை ஒரு கல்வெட்டு கூறுகிறது.

 

5.இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால் திசைத் தெய்வங்களின் உருவங்கள் தனித் தனியே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் மரத் தூண்களில் பொருத்தப்பட்டு  கால வெள்ளத்தில் மரங்கள் உளுத்து உதிர்ந்து போய் இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

 

ஒரே தலை உடைய ஐராவதம் மீது இந்திரன் பவனி வரும் காட்சி ஒரு காலத்தில் கிழக்குப் பக்கம் இருந்திருக்க வேண்டும் (சில கோவில்களில் 4 தலைகளுடைய யானை மீது இந்திர உருவம் இருக்கும்)

 

தென் கிழக்கு திக்கிற்கு அதிபதியான அக்னி தேவன் காண்டா மிருகம் மீது பவனி வருவது அதிசயமே; இந்தியாவில் அக்னியின் வாஹனம்– ஆடு.

மேற்குத் திக்கிற்கு அதிபதியான —- வருணன் நாகத்தின் மீது காணப்படுகி             றார். இந்தியாவில் முதலை அல்லது ஹம்ச வாஹனத்தில் வருணன் பவனி வருவார்.

 

குபேரன் சிஙத்தின் மீது இருப்பதும் தென் கிழக்காசிய மக்களின் நூதனக் கற்பனையைக் காட்டுகிறது. இந்தியாவில் அவரை யக்ஷன் மீது காணலாம். அவர் வட திசை அதிபதி.

 

வட மேற்கு திசைக்கு அதி தேவதையான ஈஸானன், சிவன் போல் காளை வாஹனத்தில் த்ரி சூலத்துடன் தோன்றுகிறார்.

 

மேல் திசைக்குரிய பிரஹ்மா நான்கு தலைகளுடன் மூன்று ஹம்ஸங்களுடன் (அன்னம்) வருகிறர். வேறு சிலைகள் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு சிலையிலும் பறவைகள், குரங்குகள், பூக்கள், மூர்த்திகளின் மீதுள்ள ஆடை ஆபரணங்கள் ஆகியவை (KHMER) ‘க்மேர்’ பாணியில் இருப்பது, அங்கோர் வாட்டின்- கம்போடியாவின்— தாக்கத்தைக் காட்டும்.

கோவிலைச் சுற்றி பல குளங்கள் கட்டப்பட்டிருப்பது இமயமலை கயிலையை நினைவு படுத்தும்.

6.இது ஒரு அவிந்துபோன எரிமலைக் குன்றின் மீது அமைக்கப்பட்டிருப்பதும் அதிசயமே.

இது தாய்லாந்தின் புனரமைப்புடன் இப்பொழுது சுற்றுலாப் பயணிகளுக்கான பூங்காவாக நுழைவுக் கட்டணத்துடன் திகழ்கிறது. இவ்வளவு காலமாக வெளி உலகம் இதை அறியவில்லை. உட்புற மூர்த்திகளின் உருவங்களின் புகைப் படங்கள் இன்னும் பிரபலமாகவில்லை.

 

 

 

 

 

 

சுபம்–

வெள்ளையன் ஹாலிடே வியந்த ‘சதி’! (Post No.4998)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 11 MAY 2018

 

Time uploaded in London –  7-37 AM   (British Summer Time)

 

Post No. 4998

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

வெள்ளையன் ஹாலிடே வியந்த சதி!

 

ச.நாகராஜன்

 

ஹிந்துக்களை கேலி செய்வதும் அவர்கள் வரலாறைக் கொச்சைப் படுத்துவதும் ஹிந்து துரோகிகளுக்கு ஒரு வாடிக்கையான பழக்கம்.

 

சமீபத்தில் சித்தூர் ராணி பத்மினியை அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்து எடுக்கப்பட்ட படம் ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது.

 

சஞ்சய் லீலா பன்சாலி எடுத்த பத்மாவதி படம் அக்ரமான வழியில் சரித்திரத்தைச் சிதைத்து மாற்றி எடுக்கப்பட்ட படம்.

மஹா தியாகியான சதி பத்மினியை கொச்சைப் படுத்தியதை எந்த ஒரு ஹிந்துவாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சதியில் உடன்கட்டை ஏறியவர்களை ஹிந்துக்கள் தெய்வமாக மதித்தனர்.

 

அனைவரும் சதியாக வேண்டும் என்று ஹிந்து மதம் ஒரு நாளும் சொல்லியதில்லை. ஆனால் ஈருடல் ஓருயிராக இருந்தோர் கணவனுடன் உடன்கட்டை ஏற விரும்பினால் அதைத் தடை செய்யவும் இல்லை.

 

இந்த சதி பற்றிய நிஜ வரலாறு கூறும் ஆச்சரியமான விஷயங்களைக் கீழே பார்ப்போம்:

 

சதி என்பது அநாகரிகமான ஒரு பழக்கம் என்று தீர்மானித்த கார்ன்வாலிஸ் அதி 1805ஆம் ஆண்டு தடை செய்தான். அப்படி சதியாக விரும்பினால் மாஜிஸ்ட் ரேட்டின் அனுமதி பெற வேண்டும் என்று அவன் சட்டம் இயற்றினான். ஆனால் 1829இல் வந்த லார்ட் பெண்டிங் அதை இன்னும் கடுமையாக ஆக்கி சதி என்பது தற்கொலை என்று சட்டம் இயற்றினான்.

 

In 1805 Marquis of Cornwallis passed a regulation by which no one could become a Sati without the permission of the Magistrate. The law was made stricter in 1829 by Lord William Bentick who enacted Sati as a suicide and all who encouraged Sati in any way were made guilty of culpable homicide.

 

Halliday’s Testimony, 1829 – Buckland in his “Bengal under the Lieutenant Governors” writes: –

 

In 1829 just before the penalizing of Sati, Sir Fredierick Halliday, the first Lieutenant Governor of Bengal was the District Magistrate of Hoogly, on the bank of Ganges, where Sati, was frequent occurrence. The last case of Sati lawfully celebrated in Bengal is thus narrated by him :- “We tried our best to dissuade her, but all to no purpose ….. Seated close to me she looked up at my face with scorn and said,

 

BRING A LAMP”. THE LAMP WAS LIGHTED AND WITH SCORN AND DEFLANCE IN HER EYES, SHE PUT HER FINGER INTO THE FLAME. THE FINGER SCORCHED, BLISTERED AND BLACKENED AND FINALLY TWISTED UP. SHE REMAINED UNMOVED, NOT A MUSCLE TWITCHED AND NOT A SOUND ESCAPED.

 

 

“Are you satisfied?” she asked.

 

“Quite,quite satisfied,” was the reply. She asked my permission and I assented.

 

Cooly and calmly she mounted the funeral pyre and laid herself down beside a part of her husband’s clothing. The husband had died far away. She was covered with light brushwood and fire was set to the funeral pyre.”

 

The following true incident is given in Tavernier’s “Travels” (published in 1677) :-

 

The Raja of Vellore was killed in a battle with the King of Visapur. Eleven of his wives resolved to become Sati. The General of the Visapur army coming to know of it, imprisoned all of them together. They told the keeper at the time, “Imprisonment is futile, we shall die in three hours.”

 

After three hours all of them lay stretched on the floor dead, and were gone with their husband, without any mark of violence on their bodies.

 

ஆக சதியாக விரும்பினோர் உடல் மனம் ஆன்மாவினால் கணவனுடன் ஒன்று பட்டவர்கள்.

 

கண்டவுடன் காதல்; காமம் முடிந்தவுடன் டைவர்ஸ் என்ற நாகரிகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பற்றி எதுவும் புரியாது என்பது தான் உண்மை!

 

ஆதாரம் : Truth, weekly Magazine Volume 86 Issue 1 dated 20-4-2018

நன்றி : ட்ரூத் வார இதழ்

*****

தள்ளாத வயதில் பொல்லாத ஆசை! (Post No.4997)

Compiled by London Swaminathan 

 

Date: 10 May 2018

 

Time uploaded in London – 13-25 (British Summer Time)

 

Post No. 4997

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர், ரோமானிய செனட்டர் (ஆட்சி சபை உறுப்பினர்) கேடோ(CATO) வின் மனைவி இறந்தாள். உடனே கேடோ ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

 

அவரது மகன் கேட்டான்

அன்புள்ள அப்பா! நான் உங்களுக்கு என்ன தீங்கு இழைத்தேன்?

இப்படி ஒரு சின்னம்மாவைக் கொண்டு வந்திருக்கீறீர்களே!

 

கேடோ சொன்னார்

அன்புமிக்க மகனே!  நீ எனக்குப் பேரானந்தம் தருகிறாய்; இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆனந்தம் பெறவே சின்னம்மாவைக் கூட்டி வந்தேன்.

XXXXX

 

மாமியாரைத் தள்ளிவிட அருமையான பள்ளம்!

உலகின் மிக பிரம்மாண்டமான இயற்கை அதிசயம் அமெரிக்காவில் உள்ளது. அதன் பெயர் மாபெரும் ஆற்றுக் குடைவரை (GRAND CANYON). பல லட்சக் கணக்கான ஆண்டுகளாக கொலராடோ நதி ஓடி, ஓடி அறுத்த பள்ளம் அது. அதன் உச்சியில் இருந்து கீழே பார்த்தால் மனிதனின் சிறுமையும் இயற்கையின் மஹிமையும் புரியும்; புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானம் உண்டானதைப் போல, பித்தனுக்கும் கூட தத்துவ ஞானம் பிறக்கும். அப்பேற்பட்ட இயற்கை அதிசயம்.

 

இரண்டு தளபதிகள் அங்கே சந்தித்தனர்; ஒருவர் முதல் உலக மஹா யுத்தத்தில் பிரெஞ்சுப் படைகளின் தளபதி– அவருடைய பெயர் மார்ஷல் போச். (MARSHAL POCH) அவருடன் அமெரிக்க தளபதி கர்னல் ஜான் வைட் (COLONEL JOHAN R. WHITE) இருந்தார். இருவரும் இயற்கை அதிசயத்தின் ஆழ, அகல, உயரத்தைக் கண்ணால் அளந்தனர்.

 

கர்னல் வைட் நினைத்தார். நேச நாடுகளின் மாபெரும் தளபதியிடம் கருத்துக் கேட்போம்; அவர் சொல்லுவதை வருங்கால சந்ததியினர் அறிய பொன்னேட்டில் பொறிப்போம் என்று கருதி

“மார்ஷல், இது பற்றி தாங்கள் எண்ணுவது என்னவோ?” என்றார்.

 

மார்ஷல் சொன்னார்:

“என்ன அருமையான இடம்! மாமியார்களைத் தள்ளிவிட இதை விட ஆழமான பள்ளம் இல்லவே இல்லை!!!

XXXXXXX

அட 2 மனைவியா!! உனக்கு அதிர்ஷ்டமப்பா!

பிரிட்டனில் பிரபுக்கள் சபையில் லார்ட்/பிரபு ரஸ்ஸல் இருந்தார்.

அவரிடம் ஒருவர் ஆலோசனை கேட்டார்.

 

இருதார மணம் புரிவோருக்குக் கடுமையான ஒரு தண்டனையைச் சொல்லுங்கள்.

ரஸ்ஸல் பிரபு சொன்னார்,

அடச்சீ, நீ, தள்ளிப்போ!

 

இரண்டு மாமியார்களை விட பெரும் தண்டனையும் உண்டா?

XXXX

அதிக விசுவாசம் ஆபத்து!

ஒரு நாள் ஒரு பெண்மணிக்கு அதி பயங்கர கோபம்! நள்ளிரவைத் தாண்டியும்  கணவன் வீடு திரும்பவில்லை.

 

உடனே கணவரின் ஐந்து நண்பர்களுக்கும் தந்தி அடித்தார்.

 

ஜாக் (JACK), இன்னும் வீட்டிற்கு வரவில்லை; கவலையாக இருக்கிறது. அவர் இன்றிரவு உங்களுடன் தங்குகிறாரா?

 

இந்த தந்திக்குப் பதில் வரும் நேரத்தில், துரதிருஷ்டம் பிடித்த ஜாக் வீட்டுக்குள் நுழைந்தார்! ஐந்து விசுவாச நண்பர்களும், “ஆமாம், ஆமாம், ஜாக் எங்களுடன்தான் தங்குகிறார்” என்று வெவ்வேறு இடங்களில் இருந்து பதில் கொடுத்தனர் (அவரைக் காப்பாற்றும் முகத்தான்).

 

கணவனுக்கு செமை அடி!!!

 

XXXXXXXXXXXXXXXXXXXXX

ஒரு இளம் பெண் தேவை!

ஒரு மனைவி கணவன் படித்துவிட்டுக் கீழே போட்ட பத்திரிக்கையை எதேச்சையாக எடுத்தார்.

 

“ஏ வில்பர், நீயா பேனாவை வைத்து விளம்பரங்கள் மீது வட்டக் குறி (CIRCLED) போட்டு வைத்திருக்கிறாய்?

 

கணவன்;ஹலோ, டார்லிங்! என்ன விளம்பரம் அது? நினைவில்லையே!

 

“தனிமையில் வாடும் ஒரு ஆணுக்கு, ஒரு இளம் பெண் தேவை” என்ற விளம்பரம் எல்லாம் சர்க்கிள் போட்டு இருக்கிறதே! என்றாள் வயதான மனைவி.

 

கணவன்    -????????????????????

XXXX

மனிதர்கள் அயோக்கியர்கள்!!

ஒரு முறை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல டாக்டர் ரிச்சர்ட் செய்ன் என்பவரிடம் ஒருவர், மனிதப் பிறவிகளைப் பற்றிப் பேசி,  மிகவும் புகழ்ந்து தள்ளினார்.

அவரோ இடை மறித்துச் சொன்னார்

‘த்சு, த்சு த்சு அச்சச்சோ!’

மனிதர்கள் அயோக்கியர்கள். ஓடு காலிகள்; அப்படியில்லாவிடில் இவ்வளவு சட்டங்களும், இவ்வளவு மதங்களும் தேவைப் பட்டிருக்குமா?

 

XXX subham XXXX

 

 

MOTHER IN LAW and WIVES ANECDOTES (Post No.4996)

Compiled by London Swaminathan 

 

Date: 10 May 2018

 

Time uploaded in London – 7-33 am (British Summer Time)

 

Post No. 4996

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

One of the witticisms of Lord Russel of Killowen was his answer to a question from a distinguished counsel who asked what the heaviest penalty for bigamy was.

Two mothers-in-law, said Russel promptly.

xxx

Grand Canyon!

When Marshal Foch visited the Grand Canyon, Colonel John R.White, who spoke French fluently, hung breathlessly on Marshall’s words as he turned to him after a long scrutiny of the depths below.

Now, thought the colonel, I shall hear something worthy of passing along to my children and my grand children.

Observed the Marshal, What a beautiful place to drop one’s mother in law!

xxx

 

Cato, the Elder!

Roman Senator Cato, the Elder (243 BCE) , having buried his wife married a young woman. His son came and to him and said,

Sir, in what have I offended that you have brought a step-mother in to your house?

Nay, son, answered the old man,

Quite the contrary; you please me so well that I should be glad to have more such.

 

xxx

Loyalty is too dangerous!

Loyalty sometimes proves embarrassing. A case in point is that of the wife whose husband was unusually late, who wired to five of his friends,

Jack not home. Is he spending night with you?

The unfortunate Jack arrived home shortly afterwards, and was followed by five telegrams all saying YES!

xxx

No sympathy is needed!

I have no sympathy, bellowed the judge, for a man who beats his wife.

That is right your Honor, said the policeman who stood beside the culprit ,

Any man who can beat his wife don’t need Sympathy.

xxx

Impotent!

A man, being suspected of impotency, met a friend one day, who had railed him on it, to whom he said,

My good Sir, for all your wit, my wife was yesterday brought to bed.

What of that, said his friend, nobody ever suspected your wife.

xxx

Hen pecked Husbands!

Well, said Lincoln, on a certain occasion, I feel about that a good deal as a man whom I will call Jones whom I once knew, did about his wife. He was one, and had the reputation of being badly hen pecked. At last one day his wife was seen switching him out of the house. A day or two after, a man met him in the street and said,

Jone, I have always stood up for you, as you know; but I am not going to do it any longer. Any man who stood quietly and take a switching from his wife deserves to be horseworshipped.

Jones looked up with a wink, patting his friend on the back.

Now, don’t, said he; why it didn’t hurt me any: and you have no idea what a power of good it did Sarah Ann!

xxx Subham xxx

பாரதி போற்றி ஆயிரம் – 88 (Post No.4995)

Compiled by S NAGARAJAN

 

Date: 10 MAY 2018

 

Time uploaded in London –  5-54 AM   (British Summer Time)

 

Post No. 4995

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 88

  பாடல்கள் 919 முதல் 948

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

 

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு  பெண்ணினப் பெருமை என்ற அத்தியாயத்தில் உள்ள 5 பாடல்களையும் கடைசி அத்தியாயமான கடயத்தில் கவிஞன் என்ற அத்தியாயத்தில் வரும் 25 பாடல்களையும் படித்து மகிழலாம். நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

பெண்ணினப் பெருமை – 5 பாடல்கள்

கடயத்தில் கவிஞன் – 25 பாடல்கள்

 

இத்துடன் இந்த நூல் முடிகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி.

***