நள தமயந்தி – சுவையான காதல் கதை! (Post No.5215)

Written by S NAGARAJAN

 

Date: 14 JULY 2018

 

Time uploaded in London –   6-49 AM (British Summer Time)

 

Post No. 5215

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

நள தமயந்தி – சுவையான காதல் கதை!

 

ச.நாகராஜன்

ஹிந்து வேதத்தில் வரும் கதை நள-தமயந்தி கதை.

மஹாபாரதம் அதை விரிவாகச் சொல்கிறது.

நளன் பேரழகன். தமயந்தி பேரழகி.

அழகு என்றால் விண்ணவர் வியக்கும் அழகு.

இந்தக் கதையைப் பல கவிஞர்களும் பாடியுள்ளனர்.

நைஷதம் அழகிய வடமொழிக் காவியம்.

அதைத் தமிழில் தந்தார் அதிவீரராம பாண்டியன்.

இவர் இருந்து அரசாண்ட நகர் கொற்கை.

இவருக்கு வல்லபதேவன், பிள்ளைப்பாண்டியன், குலசேகரன், குணசேகரவழுதி, தமிழ் வளர்த்த தென்னவன் எனப் பல பெயர்கள் உண்டு.

சற்று – சற்று என்ன – அதிகமாகவே சிற்றின்பப் பிரியர்.

ஆகவே தான் கொக்கோக முனிவர் வடமொழியில் எழுதிய கொக்கோக நூலைத் தமிழ்ப் படுத்தினார்.

கந்தபுராணத்தில் வரும் இந்திரபுரிப் படலத்தில் கூறப்பட்ட மதனாகமவியல்களைத் தமிழ்ப் படுத்தி மதனக் கோவை என்ற நூலை இயற்றினார்.

ஒவ்வொரு பாடலும் சிருங்காரச் சுவையில் தோய்த்து எடுக்கப்பட்ட பாடல்.

பெண்களின் அங்கங்களை வர்ணனை செய்வதில் இவருக்கு ஈடு இணை கிடையாது.

நளனும் தமயந்தியும் ஒருவர் பால் மற்றொருவர் கொண்ட காதலுக்கு ஈடு இணை கிடையாது.

தமயந்தி நளனையே நினைத்து உருகினாள். நளனோ தமயந்தியையே நினைத்து உருகினான்.

இரண்டே இரண்டு பாடல்களை இங்கு பார்ப்போம்:

தமயந்திக்கு ஒரு பொழுது போக்கு. நளன் எப்படி இருப்பான் என்பதை நினைத்து நினைத்துப் பார்ப்பது தான் அது.

ஒரு நாள் ஓவியத்தில் வல்லவனான ஒருவனை அழைத்தாள். ‘அழகில் சிறந்த பேரழகன் ஒருவன் சித்திரத்தையும் அவனுக்கு இணையான பேரழகியான கன்னி ஒருத்தி படத்தையும் வரைக’ என்று ஆணையிட்டாள்.

ஓவியன் தன் திறமை அனைத்தையும் காட்டி இரு சிறந்த அங்க லாவண்யங்கள் கொண்ட அழகனையும் அழகியையும் வரைந்து காட்டினான்.

அதைப் பார்த்த தமயந்தி ஓவியனை அனுப்பி விட்டு அந்தப் படத்தை எடுத்துக் கொண்டாள். அந்தப் படத்தில் இருந்த அழகனும் அழகியும் நளனுக்கும் தமயந்திக்கும் அழகில் சற்றும் ஈடு கொடுக்க முடியாது என்ற போதிலும் அதை நள தமயந்தியாகப் பாவித்து மெய் சிலிர்த்தாள்.

இதை அதிவீரராம பாண்டியன் கூறுகிறார் இப்படி:

 

ஓவியத் துறைகை போய வொருவனை யுருவின் மிக்க

காவல னொருவன் மற்றோர் கன்னிநீ தீட்டு கென்னத்

தாவரு மெழிலிற் கோட்டத் தானுமந் நளனுமாக

மேவர வினிது நோக்கி மெய்ம்மயிர் பொடிக்கு மன்றே.

(அன்னத்தைக் கண்ணுற்ற படலம், பாடல் 75)

 

 

வெறும் சித்திரத்தைக் கண்டு மெய்ம்மயிர் பொடிக்கும் அளவில் அவள் ஆனந்தப் பட்டாள்.

தங்கள் தலைவி தமயந்தியின் காதலை அனைத்து தோழிகளும் நன்கு அறிவர். அவர்கள் அவளைக் கிண்டல் செய்து  சீண்டி விளையாடுவது வழக்கம்.

அவள் இல்லாதபோதும் நள தமயந்தி காதல் அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு விளையாட்டானது.

தோழிகளில் ஒருத்தி தமயந்தியாகவும் இன்னொருத்தி நளனாகவும் ஆகி இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி மகிழ்வர்.

இந்த ஆலிங்கனத்தோடு கலகலவென்று சிரிப்பொலி எழும்.

இதையும் அதிவீரராமபாண்டியன் அழகுறச் சித்தரிக்கிறார்.

நளனோ மஹா அழகன். அவன் அழகின் வர்ணனையைக் கேட்ட தேவலோக இந்திராணியின் முலை சிலிர்த்ததாம்.

இந்திரனோ தமயந்தியின் அழகை நாரதர் வாயிலாகக் கேட்டு நேரடியாக சுயம்வரத்திற்கே வருகிறான்.

நளன்  அன்னம் வாயிலாக தமயந்தியின் அழகு வர்ணனையைக் கேட்கிறான்.

தமயந்தியிடம் அன்னம் வந்து சொல்கிறது இப்படி:

 

“வேற்படையை உடைய நள மஹாராஜன், ஓவியர்களால் எழுதற்கு அரிய உனது அழகிய வடிவத்தை, தன்னால் சம்பாதிக்கப்பட்ட பலவகையான மணிகளைப் பதித்து எழுதுகிறவன். உன் கனதனங்களை உள்ளதை உள்ளபடியே எழுதுவதற்கு இப்படத்தில் அகலம் போதவில்லை என்றும், பூங்கொடி போன்ற உனது அழகிய இடையைத் தீட்ட தூரிகைக் கோலின் நுனியானது கூர்மை இல்லை என்றும் எண்ணித் திகைக்கிறான். ஆகையால் உன்னை விரும்பி மனத்தில் எண்ணி அவனது நெடிய அழகிய கண்களானவை இமைக்காமல் உன் உருவத்தைப் பார்க்க அதனால் மனம் வருந்துகிறான்.

நைடதம் கூறும் பாடலைப் பார்ப்போம்:

சித்திரக் காட்சி

 

ஈட்டு மணிகள் பலதெளிந்துன் னெழுதற் கரிய திருவுருவம்

கோட்டுங் கிழிதான் முலைகோட்டப் பரப்பின் றென்னுங் கொடிமருங்குல்

தீட்ட வனைகோ நுதிநுண்மை யிலதென் றெண்ணித் திகைக்குமுளம்

வேட்டு நெடுங்கண் ணிமையாம னோக்கித் தளரும் வேல்வேந்தே”

(அன்னத்தைத் தூது விட்ட படலம் பாடல் 254)

 

நளன் பற்றிய வர்ணனையும் தமயந்தி பற்றிய வர்ணனையும் படிப்போரை வியக்கச் செய்யும் வண்ணம் உள்ளன.

தமயந்தியின் கூந்தலிலிருந்து பாதம் வரை உள்ள வர்ணனை சிருங்காரப் பிரியர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்.

 

நைடதம் புலவர்க்கு ஔடதம்.

சிருங்காரப் பிரியர்களுக்கோ தேவாமிர்தம்!

***

 

காதல் முக்கோணத்தில் சிக்கிய புலவன்/அரசன்! (Post No.5214)

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

Written by London swaminathan

 

Date: 13 JULY 2018

 

Time uploaded in London – 7-42 am  (British Summer Time)

 

Post No. 5214

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?”– —பத்ரகிரியார் புலம்பல்

 

பர்த்ருஹரி என்ற பெயரில் புலவர்களும் அரசர்களும் இலக்கிய வித்தகர்களும் இருந்தனர். விக்ரமாதித்தன் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தனர். பத்ரகிரியார் என்ற தமிழ் சித்தரும் பர்த்ருஹரியும் ஒரே கதை உடையவர்கள் அவருடன் பட்டினத்தாரும் சம்பந்தப்படுத்தப் படுகிறார்; ஒரே குழப்பம்!!! ஆனால் இதற்குள் ஒரு சுவையான கதை இருக்கிறது!

 

முதலில் கதையைப் படித்துவிட்டு ஆராய்ச்சியைத் தொடர்வோம்.

 

உஜ்ஜைனி நகரத்தில் பர்த்ருஹரி என்று ஒரு அரசர் இருந்தார். அவரை ஒரு பிராஹ்மணன் சந்தித்து ஒரு அற்புத பழத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடுவோர் நீண்ட காலம் வாழ்வர் என்றார்.

 

பர்துருஹரியின் பல மனைவியரில் இளையவர்தான் அவரது மனதைக் கவர்ந்த பேரழகி; அவள் பெயர் பிங்களா. ஆகையால் அன்புக் காதலி பிங்களாவுக்கு அந்தப் பழத்தைக் கொடுத்து “அன்பே! ஆருயிரே! தேனே! கற்கண்டே! இதை சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று ஒரு பெரியவர் சொன்னார். என் இதய ராணியான உனக்காக இதைக் கொண்டு வந்தேன்” என்று பகர்ந்தார்.

அவர் நாதா! உங்கள் அன்பே உலகில் பெரியது என்று சொல்லி, அதை ஒளித்து வைத்து, அவளது கள்ளலக் காதலன் போலீஸ் அதிகாரி மஹிபாலனுக்கு அளித்தாள். அவனுக்கோ பிங்களாவை விட ஒரு பேரழகி காதலி இருந்தாள் அவள் பெயர் லாகா.

 

“உலகிலேயே நீதான் அழகி” என்று சொல்லி அவளை ஏமாற்றிவிட்டு, அதை லாகாவிடம் கொடுத்தான். அவளுக்கோ மன்னர் மீதூ தீராக் காதல்! ஆறாக் காதல்! ஆகையால் அந்தப் பழத்தைக் கொண்டு வந்து

பர்த்ருகிரியாரே நீர்தான் என் இதய ராஜா; இது ஒரு அற்புத பழம். இதை ஒரு பெரியவர் எனக்குக் கொடுத்தார். இதைச் சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று சொல்லி பர்த்ருஹரியிடம் கொடுத்தாள்.

 

அவர் நொந்து போனார்; வெந்து போனார்; உளவாளிகள் மூலம் முக்கோணக் காதலை அறிந்தார். இந்த உலகில் நிலைத்தது காமமும் அல்ல; நமது உயிரும் அல்ல என்ற ஞானோதயம் பிறந்தது; தனது

சஹோதரனான விக்ரமாதித்யனிடம்  ஆட்சியை ஒப்படைத்து துறவியானார்.

 

இவர்தான் புகழ் பெற்ற 300 ஸம்ஸ்க்ருதப் பாடல் இயற்றிய பர்த்ருஹரியா என்பது அறிஞர்கள் விவாதிக்கும் விஷயம் ஆகும். அந்த பர்த்ருஹரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் நீதி சதகம் 100, ச்ருங்கார சதகம் 100, வைராக்ய சதகம் 100 என்று 300 பாடல்களை ஸம்ஸ்க்ருதத்தில் மழைபோலப் பொழிந்து உலகப் புகழ் பெற்றவர்.

 

இது தவிர வாக்படீயம் முதலிய இலக்கண நூல்களை இயற்றிவர் ஒருவரும் உளர். ஆக  காலத்தால் வேறுபட்ட பர்த்ருஹரிக்கள் யார் யார், அவர்தான் பத்ர்கிரியார் எனப்படும் தமிழ் சித்தரா என்று காலாகாலமாக அறிஞர் பெருமக்கள் விவாதித்து வருகின்றனர்.பல விக்ரமாதித்யன்கள்; பல பர்த்ருஹரிக்கள்; கொஞ்சம் குழப்பம்தான்.

 

எது எப்படியாகிலும் சுவையான கதையுடன் ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிய செய்தியும் கிடைக்கிறது. ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிப் பாடாத தமிழ்ப் புலவரோ ஸம்ஸ்க்ருதப் புலவரோ இல்லை.

xxx

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

 

நாட்டுப் புற பாடல்களில் பர்த்ருஹரி

வட இந்தியா முழுதும், குறிப்பாக ராஜஸ்தான், சட்டிஸ்கர் முதலிய மாநிலங்களில் பிச்சை எடுக்கும் ஆண்டிப் பண்டாரங்கள் இந்த பர்த்ருஹரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டே வருவர். அவரது பெயர் துறவியானவுடன் கோபிசந்த் ஆனது. அவர் கோரக்நாதர் என்பவரின் சீடர் என்றும் செப்புவர்

 

தமிழ் பத்ர கிரியாருக்கு பட்டினத்தார் குரு; வட இந்திய பர்த்ருஹரிக்கு குரு– கோரக் நாத். 500 ஆண்டுக் கால இடைவெளியில் பல பர்த்ருஹரிக்கள் இருந்தாலும் சுவை குறையாமல் பாடிச் சென்றுவிட்டனர்.

 

XXXX

தமிழ் சித்தர் பத்ரகிரியார்

பத்ரகிரியார் ஒரு புகழ் பெற்ற சித்தர். அவர் ஒரு அரசனாக இருந்ததாகவும் பட்டினத்தார் அவரை துறவியாக மாற்றியதாகவும்

ஒரு வரலாறு உண்டு. அவர் எழுதியது பத்ரகிரியார் புலம்பல் எனப்படும்.  சில இடங்களில் திருமூலரின் தாக்கம் தெரியும். இது ஒரு தத்துவப் பாடல் ஆகும்.  இவரது பார்வை ஏனைய சித்தர்களைப் போலத்தான். இவர் சிவ வாக்கியர் போல ஜாதிகளில் நம்பிக்கை அற்றவர்.  சம்த்துவத்தைப் போற்றும், ஜாதிகளை  எதிர்க்கும் கபிலர் அகவலை பத்ரகிரியாரும் குறிப்பிடுவார். அதே போல பத்திரகிரியாரை பிற்காலத்தில், ராமலிங்க சுவாமிகள் முதலானோர் பாடல்களில் போற்றுவர்.

 

இவரது காலம் பட்டினத்தார் காலமாகிய பத்தாம் நூற்றாண்டு ஆகும்.

 

பத்ரகிரியார் பாடலில் சில சுவையான பகுதிகள்

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?

 

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொல்படியே

சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?

 

ஆசாரம் நேயம் அநுஷ்டானமும் மறந்து

பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்றிருப்பது எக்காலம்?

 

மனத்தை வில்லாக்கி வான் பொறியை நாணாக்கி

எனது அறிவை அம்பாக்கி எய்வது இனி எக்காலம்?

 

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தால் போல்

உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம்?

 

–பத்ரகிரியார் புலம்பல்

ஓவியங்கள்

நாடுப்புறப் பாடல்களில் மட்டுமின்றி ஓவியங்களிலும் பர்த்ருஹரியின் தாக்கத்தைக் காணலாம்.

 

மொகலாயர் கால ஓவியங்களில் பர்த்ருஹரி பிச்சை எடுக்கும் காலத்தில் தனது பழைய மனைவியைச் சந்தித்த ஓவியமும் உளது.

 

-subham–

நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 1 (Post No.5213)

Written by S NAGARAJAN

 

Date: 13 JULY 2018

 

Time uploaded in London –   6-51 AM (British Summer Time)

 

Post No. 5213

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 13-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு பத்தொன்பதாம் கட்டுரை

செயற்கை அறிவுடன் கூடிய நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 1

ச.நாகராஜன்

இயந்திர யுகம் முடிவுக்கு வந்து விட்டது. அறிவில்லாத ஜடங்கள் என்று விமானத்தையும், காரையும், ஸ்கூட்டரையும் இதர மெஷின்களையும் ஏசித் தூற்றிய காலம் முடிவுக்கு வந்து விட்டது.

சற்று அறிவுடன் கூடிய இயந்திரங்கள் – ரொபாட்டுகள் உள்ளிட்டவை – இப்போது உருவாக்கப்பட்டு விட்டன. இவை மனிதர்களைப் போல யோசிக்கும்; நிலைமைக்கு ஏற்ப தக்க முடிவுகள் எடுக்கும்.

இவற்றின் பயன்களைச் சொல்லப் போனால அயர்ந்து போய் விடுவோம்.

சாக்கடையில் ஓடும் கழிப்பறை நீரில் அடைப்புகள் ஏற்பட்டு விட்டனவா? அருவருக்கத்தக்கும் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியை சாக்கடையில் இறங்கி ரொபாட்டுகள் செய்து முடித்து விடும் – சில நிமிடங்களில்.

 அடுக்கு மாடிக் குடியிருப்பாக இருக்கும் வானளாவிய கட்டிடத்தில் தீ விபத்தா? உள்ளே பெண்கள், குழந்தைகளை தீ ஜுவாலைகளின் உள்ளே சென்று பத்திரமாக மீட்க வேண்டுமா?

ரொபாட்டுகள் ரெடி. அறிவுடன் கூடிய இவை புகையை விலக்கி, தீயை அணைத்து தனக்கான வழியை உருவாக்கிக் கொண்டு கட்டிடத்தில் சிக்கிக் கொண்டோரை பத்திரமாக மீட்கும்.

ஆழ்கடலில் விபத்தா? நீரில் மூழ்க அச்சமான சூழ்நிலையா? ரொபாட்டுகள் ஆழ்கடலில் மூழ்கி டைவ் அடித்து செய்ய வேண்டிய பணியைச் செய்து முடித்து விடும். இது போல அடர்ந்த காடுகளிலும் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு குறிக்கப்பட்ட பணியை முடித்து விடும்.

இது மட்டுமல்ல, உடல் வலிக்கிறதா? இதமாக மசாஜ் செய்ய உயிருள்ளது போலவே உள்ள ரொபாட் பணியாளர்கள் ரெடி.

பல வீ டுகளில் இப்போது நடைமுறையில் தரையைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் ரோபாட் கிளீனரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சென்ஸர் மூலமாக ஒவ்வொரு இடமாக மூலைமுடுக்குகளில் எல்லாம் தானே சென்று தூசு தும்பை அகற்றி விடும்.

ஆக செயற்கை அறிவு ஊட்டப்பட்ட இவற்றின் எண்ணிக்கையும் பயன்பாடும் இப்போது அதிகரித்து வருகிறது.

ஜப்பானில் ஏராளமான கம்பெனிகள் செயற்கை அறிவுள்ள பல சாதனங்களைச் செய்து விற்கின்றன.

இப்போது ஜப்பானில் உருவாக்கப்பட்ட கே கம்ப்யூட்டர் ஒரு வினாடிக்கு 10,000,000,000,000,000 கணக்குகளைப் போட்டு முடித்து விடுகிறது. ஒரு வினாடிக்குள் இது செய்வதை மனிதர்கள் செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது இப்போது உலகில் உள்ள 700 கோடி பேர்களும் ஆளுக்கு ஒரு கணக்கை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 17 நாட்கள் முயன்றால் கே கம்ப்யூட்டர் ஒரு வினாடியில் செய்வதை முடிக்க முடியும்!

மனித உயிருக்கு அபாயம் ஏற்படும் பணிகளில் செயற்கை அறிவு ஊட்டப்பட்ட சாதனங்கள் ஈடுபட்டு அரிய செயலை ஆற்றி வருகின்றன.

ஆனால் இவற்றின் அறிவு கூடக் கூட, செயல் திறன் கூடக் கூட அது மனிதர்களை விடத் திறம்பட சிந்தித்து, யோசித்து, செயலாற்றும் போது என்ன நடக்கும்?

தன்னைப் படைத்த மனிதனுக்கே சவால் விடுமா? அபாயத்தை ஏற்படுத்துமா?

இப்போதே இண்டர்நெட்டில் உலா வரும் ஜோக் ஒன்று உண்டு. இந்த ஏஐ – ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் – மெஷின்களின் திறன் அதிகரிக்கும் போது மனித குலம் ரொபாட் ஜமீந்தார்களை – ரொபாட் மன்னர்களை அடிபணிய வேண்டி வரும் என்பது தான் அந்த ஜோக்!

எதிர்கால யுத்தங்களில் நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை அனுப்பாமல் ரொபாட் வீரர்களை அனுப்பி யுத்தம் செய்தால்?

 

நினைக்கவே பயமாக இருக்கிறது. செயற்கை அறிவுடன் கூடிய அபாயகரமான ஆயுதங்கள் பல்வேறு நகர்களை நோக்கி வீசப்பட்டால்?

மனித குலமே இல்லாமல் போய்விடும்! இது போன்ற ஏராளமான நியாயமான பயங்கள் செயற்கை அறிவு பற்றி உண்டு!

2001: எ ஸ்பேஸ் ஒடிஸி மற்றும் அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் யூனியன்  (2001: A Space Odyssey – 1968)  (Avengers: Age of Ultron – 2015) ஆகிய இரு திரைப்படங்கள் செயற்கை அறிவு மனித அறிவை மிஞ்சி விட அதை உருவாக்கியவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி, அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி, மனித குலத்தை அழிக்க முயற்சிப்பதைச் சித்தரிக்கின்றன.

இப்போது அமெரிக்காவில் மூன்றாவது சீஸன் தொடங்கி சக்கை போடு போடும் ஹ்யூமன்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட பிரக்ஞையுடன் கூடிய செயற்கை அறிவு படைத்த ஜீவன்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக மனிதர்களுடன் போராடுவதைச் சித்தரிக்கிறது.

கணினி உலகத்தில் விஞ்ஞானிகள் செயற்கை அறிவு சாதனங்கள் உருவாக்கப் போகும் பிரம்மாண்டமான சீர் கேட்டை நினைத்து பயப்படுகின்றனர்.

ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை நிறுவிய இலான் மஸ்க் 2017 ஜூலையில் நேஷனல் கவர்னர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில், “செயற்கை அறிவு என்னும் நவீன தொழில்நுட்பத்தை நன்கு அறிந்து கொண்டிருக்கும் நான் ,

அதைப் பற்றி மக்கள் மிகவும் கவலைப்பட வேண்டும் என்று கருதுகிறேன் என்றார். ‘இப்போதே எச்சரிக்கை மணி அடிக்கிறேன் ‘என்று தொடர்ந்த அவர், “ஆனால் ரொபாட்டுகள் தெருவில் இறங்கி மனிதர்களைக் கொன்று குவிக்கும் வரையில் மனிதர்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்று அறிய மாட்டார்கள். ஏனெனில் இது புலன்களால் உணரப்படாத ஒன்றாக இருப்பதால் தான்! என்றார்.

எல்லோரும் பயப்படுவது ஏன்? சூபர் இண்டெலிஜென்ஸான ‘ஏஐAI-  சாதனங்கள் பிரக்ஞையை அடைந்து சிந்திக்கும் திறன் பெற்று மனிதர்களை தங்களை விட கீழான அற்ப ஜந்துக்களாக மதித்து, இப்போது குரங்குகளை நாம் எப்படி நடத்துகிறோமோ அதைப் போல நம்மை நடத்தி விடக் கூடும் என்பதே விஞ்ஞானிகளின் பயம்!

மனிதர்களாகிய நமக்கு இது தேவையா என்பதே அவர்களின் கேள்வி!

  • தொடரும்

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

 

அறிவியல் ரீதியாக ஏற்றம் இறக்கம் உடைய ஒரு மலைப் பகுதியை சரியாக அளந்து வரைபடம் தயாரிப்பது என்பது பிரம்மாண்டமான ஒரு விஷயம்.

பண்டிட் நயின் சிங் ராவத் (தோற்றம் 21-10-1830 மறைவு 1-2-1882) பத்தொன்பதாம் நூற்றாண்டில் இமயமலை பிராந்தியத்தை அடி அடியாக அளந்த மாபெரும் வீரர் ஆவார். குமாவுன் கிராமத்தில் ஒரு பள்ளியின் ஹெட்மாஸ்டராகப் பணி புரிந்த இவர் பிரிட்டிஷ் அரசால் திபத்தின் வரைபடத்தை உருவாக்க அங்கு அனுப்பப்பட்டார். திபத்தில் வசிப்பவர் போல உடையணிந்து ஒரு யாத்ரீகராகக் கிளம்பிய நயின் சிங் திபத்தை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து அதன் வரைபடத்தைத் தயாரித்தார். திபத்தியரைப் போலவே அவர்கள் மொழியில் இவர் பேசி அங்குள்ள கடும் குளிரையும் தாங்கி தனது பணியைத் திறம்பட முடித்தார்.

லாஸா இருக்கும் இடத்தையும் அது எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதையும் சரியாக நிர்ணையித்தார்.பிரம்மபுத்திரா நதியின் பெரும் பகுதியின் வரைபடத்தையும் 33 இடங்களில் ஆய்வு செய்து தயாரித்தார். காங்டாக்கிலிருந்து லாஸா வரை 31 இடங்களில் ஆய்வு செய்தார். கண் பார்வையை இழந்ததால் வெற்றிகரமான தனது யாத்திரையை  அவர் நிறுத்த நேரிட்டது. ஐரோப்பாவின் பல பூகோள ஆய்வு நிறுவனங்கள் அவரை கௌரவித்தன. பிரிட்டிஷ் அரசு அவருக்கு சி.. விருதை வழங்கியது. இந்திய அரசு 27-6-2004 அன்று அவர் நினைவாக தபால்தலையை வெளியிட்டு அவரை கௌரவித்தது. மலையேறி ஆய்வு செய்யும் உலக வீ ரர்களில் தனி இடத்தை வகிப்பவர் பண்டிட் நயின் சிங்.

***

 

தமிழர் கடிகாரம்! பழந்தமிழர் அறிவியல்! (Post No.5212)

Compiled by London swaminathan

 

Date: 12 JULY 2018

 

Time uploaded in London – 17-31  (British Summer Time)

 

Post No. 5212

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இப்பொழுது பயன்படாது என்பது உண்மைதான். மொபைல் போனில் (mobile phone) கடிகாரம்; ஐ பேடில் (I pad) கடிகாரம்; கம்ப்யூட்டரில் கடிகாரம்!

 

பழங்காலத்தில் நாழிகை வட்டில் (Hour Glass)  மூலம் உலகம் முழுதும் மணி கண்டு  பிடிக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஒரு குச்சியை ஒடித்து அதன் நிழலை வைத்தே மணி கண்டு கொண்டனர். கிராப்புற மக்களுக்கு இது உதவி இருக்கலாம்.

 

இதோ பழைய பாட்டும், விளக்கமும் ‘தமிழ்ப் பொழில்’ பத்திரிக்கையிலிருந்து:–

 

 

–subham–

HINDU BRONZES IN COLOMBO MUSEUM (Post No.5211)

Written by London swaminathan

 

Date: 12 JULY 2018

 

Time uploaded in London – 15-42  (British Summer Time)

 

Post No. 5211

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

COLOMBO MUSEUM IN SRI LANKA HAS GOOD BRONZES OF Lord Nataraja and Tamil saints Appar, Sundarar, Sambandar and Maniikavasagar. Parvati’s statues and Kathirgama Karthikeyan are also remarkable pieces.

 

Following are some good bronzes:

NATARAJA, DANCING SIVA

SIVA WITH FOUR HANDS

SIVA AND VISHNU WITH SRI AND BHU DEVIS

 

SUNDARAMURTHI NAYANAR, TAMIL SAINT

TAMIL SAINT MANIKKAVASAGAR IN THE CENTRE

TAMIL SAINT APPAR IN THE CENTRE

PARVATI

SIVA, SAMBANDAR, PARVATI

KATHIRGAMA DEVA KARTIKEYA

HANUMAN

–subham-

 

Interesting Life Story of Bhartruhari and Bhadragiriyar! (Post No.5210)

Bhartruhari meeting his former wife; Mogul painting

 

Written by London swaminathan

 

Date: 12 JULY 2018

 

Time uploaded in London – 7-46 am  (British Summer Time)

 

Post No. 5210

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

Bhartruhari    is a popular name in Hindu literature. But there were many poets and kings with the same name . One Bhartruhari  was a grammarian. Another Bhartruhari  was a poet and author of 300 verses Niti Catakam, Srngara Catakam and Vairagya Catakam. He lived in fifth century CE

The latest one lived around tenth century who was the contemporary of famous Tamil devotional poet Pattinathar. This Bhartruhari  composed Bhartruhari or BHADRAGIRI pulampal in Tamil, that is lament of Bhartruhari.

Whoever it was there is an interesting story who became the subject of folklore in Chattisgarh and Rajasthan. He was the disciple of Saint Goraknath.

The hero of our story is linked with king Vikramaditya. That name is also confusing. There were many Vikramadityas in India and the most famous one lived 2200 years ago
His wife name was Pingala and she repented for her mistake. Later he came to her on his travel to holy places with his followers. That meeting became the subject of Moghul paintings and folklore. The story changes from place to place.

 

Throughout India the beggar minstrels sing the wistful melodies of with the ever recurring refrain about the impermanence of life. They say neither the body nor the wealth last for long. They very often refer to Bhartruhari. Whether it is the name of the saint or grammarian or the poet who wrote 300 verses on Love, Peace and Renunciation is of historical interest.

 

Tradition says that the happy king or poet was metamorphosed by the inconstancy of his wife Pingala. Two pictures here show that Bhartruhari coming to beg alms from his erstwhile wife. He left her after an incident which showed that she loved someone else who loved someone else. We see a love triangle in the story. After becoming an ascetic, he got the name Gopichand and he met his penitent wife. In the picture, we see Bhartruhari accompanied by some wandering friars and his former wife with half a dozen attendants. They are on the banks of a stream with beautiful natural scenery.

A fruit that which gives long life was presented to Bhartruhari by a Brahmin.

He gave to his youngest wife Pingala

Pingala gave to her secret lover- a police officer- Mahipala

Mahipala passed it to his beloved Lakha

Lakha who fell in love with the king passed it to Bhartruhari, the king.

 

This awakened Bhartruhari and he abdicated the throne to his brother Vikramaditya of Ujjaini.

 

The confusion here is no one knew which Vikramaditya and which Bhartruhari.

 

Any way the message is clear—Impermanence of Life which is a popular theme in all ancient Sanskrit and Tamil hymns.

Here is the Tamil version
His name is Bhadragiri. He met Pattinathar, a merchant turned ascetic. Tamil history says he was a king and became an ascetic. His verses are called Bhadragiriyar lament (pulampal in Tamil). In some places, he imitates Tamil poets Tirumular and Pattinathar. It is a philosophic poem. He was against caste. He quoted Kapilar Ahaval. Bhadragiri was praised by a later poet Ramalinga Swamikal.
 

–subham–

 

அதிசய மஹாபுருஹர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி (Post No.5209)

Written by S NAGARAJAN

 

Date: 12 JULY 2018

 

Time uploaded in London –   6-31 AM (British Summer Time)

 

Post No. 5209

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அதிசய மஹாபுருஹர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி! -1

 

.நாகராஜன்

1

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் அற்புதமான மஹான்களை ஆசார்யர்களாக ஹிந்து தேசத்திற்குத் தந்துள்ளது. ஒவ்வொரு மஹானும் ஒவ்வொரு விதத்தில் அதிசயிக்கத்தக்கவர்கள். அனைவரும் ஸ்ரீ சாரதாம்பிகையை பிரத்யக்ஷமாகத் தரிசித்தவர்கள். உண்மையான பக்தர்களுக்கு உயரிய நிலையை அனுக்ரஹித்து அருள் பாலித்தவர்கள். ஒரு பெரிய என்சைக்ளோபீடியா அளவில் இவர்களின் புனித சரித்திரம் எழுதப்பட்டாலும், கடல் நீரை மையாக வைத்து உலகப் பரப்பைத் தாளாக வைத்து பல நூறு ஆண்டுகள் எழுதினாலும் இவர்களின் மஹிமையைப்  துளிக் கூட எழுதியதாக ஆகாது.

அப்படிப்பட்ட பிரம்மாண்டமான பீடமாகிய ஸ்ரீ சாரதா பீடத்தில் 34வது ஆசார்யராக இருந்து அருள் பாலித்தவர் அதிசய மஹாபுருஹர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி!

இவரது சரித்திரம் திவ்ய சரித்திரம். அனைத்து ஹிந்துக்களும் ஆன்மீக ஹிந்து தத்துவத்தில் ஆர்வம் கொண்ட அனைத்து மதத்தினரும் அறிந்து கொள்ள வேண்டிய திவ்ய சரித்திரம் இந்த மஹானுடையது.

அதில் ஒரு திவலையை இங்கு தருகிறோம். இன்னும் பல துளிகளை சந்தர்ப்பம் நேரும் போது அடுத்தடுத்துக் காணலாம்.

 

2

ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த தேதி 1892ஆம் வருடம் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி. ஞாயிற்றுக்கிழமை. அவர் சந்யாசம் ஏற்ற தேதி  1912ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி. அதற்கு அடுத்த நாள் அவர் சிருங்கேரி பீடத்தில் 34வது ஆசார்யராக ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிஜியாக ஆனார். அவர் தன் உடலை உகுத்த நாள் 1954ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி. ஞாயிற்றுக்கிழமை.

இவரது வரலாறு மஹிமை பொருந்திய ஒன்று.

3

1939-40ஆம் ஆண்டுகளில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி திருவாங்கூர் ராஜ்யத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். காலடியில் சில மாதங்கள் அவர் தங்கியிருந்தார். திருவாங்கூர் அரசு அவருக்கு உரிய சகல மரியாதைகளையும் அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதிப் படுத்தியது. விசேஷ போலீஸ் அதிகாரிகள் அங்கு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் போலீஸ் உடை அணியாமல் சாதாரண உடையை அணிந்து அந்தப் பணிகளை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலிஸாக அப்போது பதவி வகித்தவர் அப்துல் கரீம் என்பவர். அவர் பஞ்சாபில் பதவி வகித்தவர். மிகுந்த நேர்மையான, திறமையான, உறுதியான அதிகாரி என்று அனைவரிடமும் நற்பெயர் பெற்றவர். திருவாங்கூர் சமஸ்தானத்தால் விசேஷமாக அவர் அங்கு வரவழைக்கப்பட்டார் – சில தீய சக்திகளை ஒடுக்குவதற்காக!

அப்துல்கரீம் மஹாஸ்வாமிஜியின் பெருமைகளைப் பற்றி நன்கு கேள்விப்பட்டிருந்தார்.

ஒரு நாள் மாலை மடத்திற்கு வருவதாக அவர் கடிதம் மூலம் தெரிவித்தார்.

மடத்தில் முகாமிட்டிருந்து சகல ஏற்பாடுகளையும் கவனித்து வந்த ஸ்ரீ ஸ்ரீகண்ட சாஸ்திரி திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்ரீ ஆர் கிருஷ்ணசாமி ஐயரை அழைத்து, வருபவர் ஒரு முஸ்லீம் என்றும் அவர் பஞ்சாபிலிருந்து வருவதால் அவருக்குத் தமிழோ மலையாளமோ தெரிய வாய்ப்பில்லை என்றும் ஆகவே அவரை வரவேற்று மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அப்துல்கரீம் வந்தார். அவரை கிருஷ்ணசாமி ஐயர் உரிய முறைப்படி வரவேற்றார்.

இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் கிருஷ்ணசாமி ஐயரிடம்,

“ஸ்வாமிஜியின் பெருமைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு இங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டிய சம்பிரதாயங்கள் எதுவும் தெரியாது. ஆகவே அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அதன் படி நடப்பேன்” என்றார்.

ஐயரோ, “ அப்படி ஒன்றும் குறிப்பிடத்தகுந்த சம்பிரதாயங்கள் இங்கு இல்லை. நீங்கள் உங்களது மதத்தில் உள்ள பெரியவரை எப்படி அணுகுவீர்களோ அப்படி அணுகினால் அதுவே போதுமானது” என்றார்.

உடனே அவர் தனது ஷீக்களைக் கழட்டி விட்டு சாக்ஸுடன் வந்தார்.

மஹாஸ்வாமிகளைச் சந்தித்து முழங்கால் மண்டியிட்டார். அவரை புன்முறுவலுடன்  வரவேற்ற ஸ்வாமிகள், “இங்கிருக்கும் போலீஸார் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து இவர்களது அதிகாரி ஒரு பெரிய கனவானாகவும் பக்திமானாகவும் இருக்க வேண்டும் என்று யாம் எண்ணினோம்” என்றார்.

அதை மொழியாக்கம் செய்ய கிருஷ்ணசாமி ஐயர் முயலுவதற்கு முன்பேயே கரீம் சுத்தமான தமிழில், “மஹாஸ்வாமிகளின் பெருந்தன்மையான குணமே அப்படிப்பட்ட கருத்தை கொள்வதற்கான காரணம். உண்மையில் சொல்லப் போனால்  நான் ஒரு கடுமையான ஆபீசர் என்று பெயர் வாங்கியவன்” என்றார்.

மொழிபெயர்ப்பிற்கு அங்கு வேலை இல்லை என்பதை உணர்ந்த ஐயர் அங்கிருந்து மெதுவாக நகர முயன்றார். ஆனால் ஸ்வாமிஜி அவரை அங்கேயே இருக்கும்படி பணித்தார்.

ஸ்வாமிஜி : நீங்கள் தமிழில் நன்கு பேசுகிறீர்கள். நீங்கள் பஞ்சாபிலிருந்து வருவதாக நாம் அறிகிறோம்.

அப்துல்கரீம் : பஞ்சாபில் நெடுங்காலம் நான் பணியாற்றினேன். ஆனால் எனது சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள கொடியாலம் தான். சொல்லப்போனால் கொடியாலம் வாசுதேவ ஐயங்காரும் எனது தந்தையாரும் நெருங்கிய நண்பர்கள். அவர் வெளியூர் செல்ல வேண்டிய சமயத்தில் எல்லாம் எனது தந்தையாரிடம் அவர் நிர்வகித்து வந்த அங்குள்ள கோவில்களைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்வார். ஆகவே சர்வீஸ் என்னை நெடுந்தூரம் அனுப்பினாலும் உண்மையில் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்.

ஸ்வாமிஜி: அப்படியா? இன்னும் சர்வீஸ் எத்தனை காலம் இருக்கிறது?

அப்துல்கரீம் : ஒரு வருடத்திற்கு மேல் இல்லை.

ஸ்வாமிஜி: உங்கள் மதத்தைப் பற்றி ஆழ்ந்து அறிந்து கொண்டீர்களா?

அப்துல்கரீம் : இல்லை. அதன் அடிப்படை கொள்கைகளை உணர்ந்ததாகவோ  அல்லது அதன் நெறிகளை சரியாகக் கடைப்பிடிப்பதாகவோ கூடக் கூற முடியாது.இளமைக் காலத்திலிருந்தே கடவுள் இருக்கிறார் என்று தீவிர நம்பிக்கை கொண்டிருப்பவன் நான். இறைவன் மிகப் பெரியவன். அவனன்றி ஒன்றும் நடக்காது என்று நம்புபவன்.இந்த நம்பிக்கை தொடர்ந்து என் வாழ்க்கை முழுவதும் இருந்து வருகிறது; நன்னெறியிலிருந்து பிறழாமல் என்னைக் காத்து வருகிறது.

ஸ்வாமிஜி:  எல்லா மதங்களும் அதற்காகத் தான் உள்ளன. மதத்தின் நுணுக்கங்களைக் கற்க வேண்டும் என்ற அவசியமில்லை. எங்கும் இருக்கும் ஒருவனை, எல்லாம் வல்ல கடவுளை, எப்போதும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருவனை, எப்போதும் நமக்கு வழிகாட்டி உதவ இருக்கும் ஒருவனை நினைத்து – அவன் மீது  நம்பிகை கொண்டிருந்தால் அதுவே போதுமானது.

அப்துல்கரீம் : இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்காக உங்களுக்கு மிகுந்த நன்றி. ஆனால் மத சம்பந்தமாகப் பயில  நான் நேரத்தைக் கழிக்கவில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.

ஸ்வாமிஜி : அப்படிப்பட்ட படிப்பு வேண்டுமெனில் நீங்கள் ஓய்வு பெற்றவுடன் நிறைய நேரம் கிடைக்கும். கற்பதில் எப்போதுமே தாமதம் என்பது கிடையாது. புதிதாகப் பயில்வதை விட முதிய வயதானது ஏற்கனவே கற்றதை நடைமுறையில் கொண்டு வர சிறந்தது எனத் தோன்றுகிறது.

அப்துல்கரீம் :  அதுவே தான் எனது கருத்தும். வாழ்க்கையின் பெரும் பகுதியை சர்வீஸில் கழித்து விட்ட நான், இனி படிக்கும் பழக்கத்தைக் கொள்வது இயலாது என்றே நினைக்கிறேன்.

ஸ்வாமிஜி : ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்வது என்பதைப் பற்றி நீங்கள் சிந்த்திருப்பீர்கள் என நம்புகிறோம். மற்றவர்களுக்குப் பயன்படாமல் நேரத்தை வீணே கழிப்பது என்பது இயலாத காரியம்.

அப்துல்கரீம் : ஒரு நாள் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தேன். என் ஓய்வு காலத்தில் பயனுள்ள வழியில் கழிக்க நான் விரும்புகிறேன். பயனுள்ளது என்பதை சாதாரண அர்த்தத்தில் நான் சொல்ல்வில்லை. கடவுள் மிகவும் ஏற்கக் கூடிய ஒன்றாக அது இருக்க வேண்டும். மனித குலம் சேவை செய்யத் தயங்கும் ஒரு பிரிவிடம் நான் சேவை செய்வேன் எனில் கடவுள் நான் சாதாரண தர்ம காரியங்களைச் செய்வதை விட மிக அதிகமாக சந்தோஷப்படுவார். ஆகவே இந்த எண்ணம் என்னை வெகுவாக ஆட்கொண்டதால் தொழுநோயாளிகளுக்கான காப்பகம் ஒன்றைத் திறந்து அவர்களை நானே கவனிப்பது என்று தீர்மானித்திருக்கிறேன். இதை நிறைவேற்ற கடவுள் எனக்கு ஆயுளையும் ஆற்றலையும் தருவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்வாமிஜி : அப்படிப்பட்ட மிகவும் கொடுமையான துன்பத்தைக் கொண்டிருப்போருக்கு சேவை செய்வது கடவுளுக்கு உகந்த ஒன்று என்பதை நீங்களே உணர்ந்திருக்கிறீர்கள். இந்தக் கருத்து மிகவும் உயர்ந்தது; கடவுள் நிச்சயம் இதை நிறைவேற்ற உங்களுக்கு உதவுவார். உங்களின் எளிமையினால் நீங்கள் இதை ஏற்க மறுத்தாலும் கூட நீங்கள் ஒரு உயர்ந்த பக்தியுடைய ஆத்மா என்ற எனது கருத்து வலுவாகிறது.

அப்துல்கரீம் :  கடவுள் என்னை ஏற்குமாறு செய்ய உங்களின் ஆசீர்வாதங்களுக்காக உங்களை நான் வேண்டுகிறேன். உங்களது அருமையான நேரத்தை நிறைய எடுத்துக் கொண்டேன் என நினைக்கிறேன்.

ஸ்வாமிஜி: உங்களைச் சந்தித்ததில் மிகவும் சந்தோஷம்.

அப்துல்கரீம் : கடவுள் அனுக்ரஹித்தால், இன்னும் ஓய்வான நேரத்தில் உங்களை இன்னும் ஒரு முறை தரிசிக்க விரும்புகிறேன். நான் ஒரு முஸ்லீம். ஒரு ஹிந்து மடாதிபதியைச் சந்திப்பதைப் பற்றி தயங்கிக் கொண்டிருந்தேன். ஆகவே தான் இங்கிருக்கும் நேரத்தைச் சற்று குறைத்துக் கொண்டேன். அடுத்த முறை இங்கு வரும் போது உங்களுடன் அதிக நேரம் கழிக்க விரும்புகிறேன். உங்களது சுலபமான அணுகுமுறையும் அளப்பரிய கருணையும் என்னை மிகவும் இயல்பாக இருக்கச் செய்துவிட்டது.

ஸ்வாமிஜி : அப்படியே ஆகட்டும்.

அப்துல்கரீம் : நான் வரும் போது என் மனைவியையும் என்னுடன் அழைத்து வரலாமா?

ஸ்வாமிஜி : அவர் கோஷாவில் இருப்பவர் அல்லவா?

அப்துல்கரீம் : ஆமாம். ஆனால் உங்களுக்கு எதிரில் இல்லை.

ஸ்வாமிஜி: ஆம், அவரை நீங்கள் அழைத்து வரலாம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

(இந்த கனவான் ஓய்வு பெற்ற பின்னர் தொழுநோயாளிகள் காப்பகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.)

ஆதாரம் : The Saint of Sringeri by Sri Jnanananda Bharati – formerly Sri R. Krishnaswami Ayyar of Tirunelveli)

***

 

See You Later, Alligator!(Post No.5208)

Compiled by London swaminathan

 

Date: 11 JULY 2018

 

Time uploaded in London – 14-48  (British Summer Time)

 

Post No. 5208

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Extravagance Anecdotes

 

Poor Benjamin Franklin


After 150 years the truth is out about Benjamin Franklin. The name Poor Richard might easily have derived from his bank account rather than from his almanac, said William Fulton Kurtz after reading early records of the bank of North America, where Franklin and many of his illustrious compatriots kept their money. He was overdrawn at least three days out of every week.

Xxxx

Expense or Will?

When EH Harriman, the railroad magnate and millionaire, was dying, reporters were on the spot for the story. The reporter of one of the metropolitan dailies was notorious for his enormous expense accoun s. After the millionaire’s death, the reporters expense account carefully itemised but out of all just proportions, was handed over to the city editor. He looked it over and handed it back, saying,
“If this is the will, it is worth a story”.

Xxx

Generosity anecdotes

 

Let me Die First.
When Frederic the Great was seized with his mortal illness, he asked whether it was necessary to forgive all his enemies. On receiving the proper answer. He said to the queen,” Dorothy write to your brother that I forgive him all the evil he has done me; but wait till I am dead first”.

Xxx

Vote for my Opponent!

Abe Lincoln was a simple man with honest generous impulses. When he was a candidate for the legislature it was the practice at that date in Illinois for two rival candidates to travel over the district together. The custom led to much good natured raillery between them.

 
On one occasion he had driven out from Springfield in company with a political opponent to engage in joint debate. The carriage, it seems, belonged to his opponent. In addressing the gathering of farmers that met them, Lincoln was lavish in praise of the generosity of his friend.
“I am too poor to own a carriage, he said. But my friend has generously invited me to ride with him. I want you to vote for me if you will but if not then vote for my opponent for he is a fine man.

Xxx

ALLIGATOR OR IMAGINATION!

Imagination anecdotes
Professor Buckland, the distinguished biologist of the early 19th century, gave a dinner one day, after dissecting a Mississippi alligator.
How do you like the soup? asked the doctor after finishing his own plate, addressing a famous gourmand of the day

.
Very good indeed, answered the other; turtle, is it not?
I only ask because I do not find any green fat.
The doctor shook his head.
I think it has some what musky state, said another.
Not unpleasant but peculiar.
“All alligators have”, replied Dr Buckland, “the fellow I dissected this morning, and whom you have just been eating.”
There was a general rout of guests.
Everyone turned pale.

Half a dozen started up from the table and hurriedly left the room.
“See what imagination is!” exclaimed Dr Buckland.

 

“ If i had told them it was turtle or terrapin, or birds nest soup, they would have pronounced excellent”.
Tell me, doctor, was it really an alligator?
Alligator! Laughed the Doctor. Stuff and nonsense — it was nothing but a good calf’s head.
Xxxx Subham xxx

Hindu Treasures in Moscow Museum (Post No.5207)

Compiled by London swaminathan

 

Date: 11 JULY 2018

 

Time uploaded in London – 8-37 am  (British Summer Time)

 

Post No. 5207

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

The following sculptures, paintings, wood carvings are from Moscow Museum; they depict Hitopadesa/ Panchatantra story (Crane and Crab), graceful women from Gujarat, Wayang puppet of Hindu epics Ramayana and Mahabharata, Mahabharata war, Sarasvati from Burma, Mandala from Buddhism, Rama-Hanuman carving in teakwood, Kubera and Urvasi-Pururuvas story of Rig Veda. There are many more treasures from South Asian and South East Asian countries. They are copied from the book.

 

SARASVATI FROM MYANMAR/ BURMA

DREAM OF MAYADEVI ABOUT BUDDHA’S BIRTH

HINDU THEMES IN BALI FOLDING SCREEN

CRANE AND CRAB STORY FROM PANCHATANTRA

 

WOMEN FROM GUJARAT

 

KUBERA- LORD OF TREASURES

MANDALA FROM BUDDHISM

 

RAMA AND HANUMAN ON TEAK WOOD CARVING

 

URVASI AND PURURUVAS- STORY FROM RIG VEDA.

 

WAYANG PUPPETS OF INDONESIA WITH HINDU EPIC CHARACTERS – SUBHAM-

‘வாழிய வேதம் நான்கும்’- கம்பன் பாடல் நயம் (Post No.5206)

Written by London swaminathan

 

Date: 11 JULY 2018

 

Time uploaded in London – 7-34 am  (British Summer Time)

 

Post No. 5206

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கம்ப ராமாயணத்தை இரண்டாவது முறை படித்து வருகிறேன். முதல் முறை படித்து முடித்தது 2004 ஆம் ஆண்டில்! இப்பொழுது ஞாயிறு தோறும் லண்டன் அன்பர்களுடன் மீண்டும் ஸ்கைப் SKYPE CLASS வகுப்பில் படிப்பதால் தொட்டனைத்தூறும் மணற்கேணி போல புதிய சிந்தனை எழுகிறது.

 

ஒரே பாடலில் கம்பன் பல விஷயங்களைச் சொல்கிறான்:

 

வாழிய வேதம்!

வாழிய மநு ஸ்ம்ருதி!

வாழிய பிராஹ்மணர்!

 

அவன் சொல்ல வந்தது இருட்டிப் போச்சு; அதாவது இருள் சூழ்ந்து விட்டது; அதாவது இரவு வந்து விட்டது. அதைச் சொல்லும் போது தனது அரிய பெரிய கருத்துக்களை மல்லிகைப் பூப்போல தெளித்து மணம் பரப்புகிறான்

 

பிராஹ்மணர்களை  — Sorry, Sorry ஸாரி, ஸாரி– அந்தக் கால ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன் கபிலன்’ போன்ற—‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ த்ருண தூமாக்னி– போன்ற பிராஹ்மணர்களை- பூலோக தேவர்கள் — பூ சுரர் என்று அழைப்பர். அதைக் கம்பன் இந்தப் பாடலில் ‘தெய்வ வேதியர்’ என்று போற்றுகிறான்.

முதலில் பாடலைப் பாருங்கள்

 

வாழிய வேதம் நான்கும் மனுமுறை வந்த நூலும்

வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே

ஆழி அம் கமலக் கையான் ஆகிய பரமன் என்னா

ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்

–யுத்த காண்டம், நாகபாசப் படலம், கம்ப  ராமாயணம்

 

பொருள்

“என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு வேதங்கள், மனு தர்ம சாத்திரம் முதலிய அறநூல்கள், யாகங்கள், சத்தியம், தெய்வத் தன்மை பெற்ற அந்தணர்கள் அடைய விரும்பும்பேறு அனைத்தும் சக்கரம் ஏந்திய செந்தாமரை போன்ற கைகளை உடைய அந்தத் திருமாலின் உருவமே என்று உணராத மூடர்களின் மனத்தைப் போலத் திசைகள் யாவும் இருண்டு விட்டன.”

 

மாலையில் சூரியன் மறைந்தது; இரவு வந்து விட்டது- இதுதான் அவன் சொல்ல வந்த விஷயம்; அந்த இருள் எப்படி இருந்தது என்றால் நாஸ்தீக மூடர்களின் மனதைப் போல இருண்டு இருந்ததாம்!

 

நாஸ்தீக மூடர்களுக்கு என்ன புரியாது, என்ன தெரியாது?

 

நாலு வேதம்= மநு ஸ்ம்ருதி= சத்தியம்= யாகம்= தெய்வீக பிராமணனர்களின் நோக்கம்= திருமால் —-

என்பதை அறியாதவன் மூடன்; முட்டாள்.

ஆக இரவு வந்து விட்டது என்று வெறுமனே விளம்பாமல் தனது நம்பிக்கை முழுவதையும், உண்மை முழுவதையும் கொட்டித் தீர்த்துவிட்டான் கம்பன்.

 

சுருக்கமாகச் சொன்னல் கடவுள்தான் வேதம், அறநூல்கள், அதைப் போற்றும் உண்மைப் பிராஹ்மணர்.

 

என்றும் வாழும் வேதம் என்பதில் இன்னொரு தாத்பர்யமும் உண்டு! வேத மந்திரமோ ஸம்ஸ்க்ருதமோ என்றும் அழியாது; இதற்கு என்ன சான்று?

 

ஸம்ஸ்க்ருதம் கலக்காமல் ஐந்து நிமிஷம் கூட ஒருவரும் தமிழ் பேச இயலாது. ஒருவேளை ஆங்கிலச் சொற்களைப் போட்டு நிரப்பினால் அதுவும் ஸம்ஸ்க்ருதமே! ஏனெனில் ஆங்கில-ஸம்ஸ்க்ருதத் தொடர்பு உலகமே ஏற்றுக் கொண்ட உண்மை!

 

கம்பன் வாழ்க; தமிழ் வாழ்க; வேதம் வாழ்க!

 

–சுபம்–