டைரக்டர் திரு
கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வாரம் தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் பாக்யா
இதழ் 31ஆம் ஆண்டில் பெரிய அளவில் மாறி புதுப்
பொலிவுடன் வெளியாகி இருக்கிறது. வார இதழாக இருந்த பாக்யா 1-4-2019 முதல் மாதம் இருமுறை
வெளிவரும் இதழாக மாறியுள்ளது.
2019, ஏப்ரல்
1-15 இதழில் அறிவியல்
துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு ஐந்தாம் கட்டுரை – அத்தியாயம் 421
அதி நவீன F 16விமானத்தை எதிர்கொண்ட இந்திய
விமானப் படை!
ச.நாகராஜன்
உலகெங்கும் இப்போது பரவி வரும் ஒரு ஜோக் இது.
பாகிஸ்தானுக்கு F 16 ரக விமானங்களை அமெரிக்கா சப்ளை செய்தவுடன் அதன் அதி நவீன தொழில்நுட்பத்தைக்
கண்டு பிரமித்த பாகிஸ்தான் பைலட்டுகள் அதை இயக்குவதற்கான பயிற்சி பெற அமெரிக்க பயிற்சியாளரை
அழைத்தனர். அவர் வந்து விரிவாக அனைத்து தொழில்நுட்ப உத்திகளையும் விளக்க அதை பாகிஸ்தான்
பைலட்டுகள் ஆச்சரியத்துடன் கேட்டனர்.இறுதியாக பயிற்சி முடியும் சமயம் ஒரு பாகிஸ்தான்
பைலட், “சார், எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள். ஆனால் அதை எப்படி தரை இறக்குவது
என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.
அதற்கு அமெரிக்க பயிற்சியாளர், “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்; அதை இந்திய விமானிகள் பார்த்துக் கொள்வார்கள்” என்று பதில் சொன்னார்.
சமீபத்திய பாகிஸ்தானின் எல்லை மீறலிலும், தீவிரவாதிகளின் தாக்குதலிலும்
இந்திய விமானப்படையின் சாகஸம் உலகையே வியக்க வைத்து விட்டது.
அதி நவீன F
16 விமானங்கள் நமது
விமானப்படையை அச்சுறுத்த முடியவில்லை.
பழைய கால போரில் பாட்டன் டாங்கிகள் நம்மிடம் வாங்கிய அடியை அமெரிக்காவே
பார்த்து அயர்ந்து போனதில்லையா!
இப்போது F16
காலம்.
F16
பற்றிக் கொஞ்சம் அறிந்து
கொள்ள வேண்டியது நமது கடமை!
அமெரிக்கக் கண்டுபிடிப்பான F16 Fighting Falcon அதி நவீன போர் விமானம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட F16
விமானங்கள்
அமெரிக்காவில் உள்ளன. பாகிஸ்தானில் இப்போது 85 F16 ரக விமானங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.
வானில்
நேருக்கு நேர் சண்டை, தரையில் உள்ளவற்றின் மீது தாக்குதல், மின்னணுப் போர் என இப்படிப்
பல வகையிலும் F16
தனது சாகஸ வேலைகளைக்
காட்ட வல்லது.
இதன்
போரிடும் வட்ட எல்லை மற்ற எல்லா ஃபைட்டர் விமானங்களின் அளவை மீறியது. எல்லா தட்பவெப்ப
நிலைகளிலும் இது பறக்கும்; போரிடும். தாழ்ந்து பறக்கும் விமானங்களைக் கூட இது இனம்
கண்டு காட்டி விடும்.
500 மைல்களுக்கு மேலும் பறக்க வல்ல இது ஆயுதங்களை குறி பார்த்து வீசி இலக்கு தவறாமல் தாக்கும்; எதிரி விமானங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.
இதன் தயாரிப்பில் இதற்கு முன்னர் இருந்த
F15 மற்றும் F111 ரக விமானங்களில் இருந்த அற்புதமான
அம்சங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. பராமரிப்பு செலவைக் குறைத்து, எடையையும்
குறைத்து வடிவமைக்கப்பட்டது இது. எரிபொருள் நிரப்பிய நிலையில் இது ஒன்பது G அளவு தாக்குப்
பிடிக்கும் அதாவது புவி ஈர்ப்பு விசையின் ஒன்பது மடங்கு அளவு தாக்குப் பிடிக்கும்.
இப்போதிருக்கும் இதர விமானங்கள் இந்த நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
பைலட் அமரும் காக்பிட் தெளிவான
பார்வையை பைலட்டுக்கு அளிக்கும். சீட்டின் பின் இருக்கையின் டிகிரி 13 இலிருந்து
30 டிகிரி என்ற பெரிய மாறுதலை அடைந்துள்ளதால் பைலட்டுக்கு அதிக வசதியைத் தரும்.
1981 நவம்பரில் முதன் முதலாகப்
பறக்க ஆரம்பித்த F16
விமானம், இரவு நேரத் தாக்குதலுக்கும் உகந்த ஒன்று.
2001, செப்டம்பரிலிருந்து பயங்கரவாதத்தை எதிர்க்கும்
செயல்களில் F16
வெற்றிகரமாக இயக்கப்படுவது
குறிப்பிடத் தகுந்த ஒன்று.
இப்படிப்பட்ட விமானங்களை எதிர்கொண்டு தான்
நாம் நமது வான் ரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருக்கிறோம்.
2019, பிப்ரவரி இறுதி வாரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு F 16 ரக விமானத்தை நாம் சுட்டு வீழ்த்தியதாக நமது பாதுகாப்புத் துறை தெரிவித்தது. அந்தச் செய்தியின் முழுத் தாக்கத்தையும் உணர இவ்வளவு விவரங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். நமது வீரர்களின் திறமையை உணர்ந்து அவர்களைப் போற்ற வேண்டும்.
இந்த நிலையில், நமது விமானப்படையை வலுப்படுத்த அதி நவீன ரக விமானங்களை
வாங்க வேண்டும் என நமது விமானப்படை தலைமை கூறி வருகிறது.
அதை இந்திய மக்களும் ஆமோதிக்க இப்போது வலுவான
நிலையில் நமது விமானப்படை உருமாற்றம் பெற்று வருகிறது! நம்மை பங்கப்படுத்த முயலும்
தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கத் தயாராக ஆகி வருகிறது.
வாழிய பாரதம்! வெல்க பாரதம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலம் அது. அக்னி II என்ற
Intermediate Range Ballistic Missile எனப்படும் இடைநிலை
வீச்சு எறி ஏவுகணை தயாராகி விட்டது. ஆறு மாதங்கள் ஆகி விட்டன. அதை விண்ணில் ஏவ வேண்டியது
தான் பாக்கி. ஆனால் அதை கலாம் தள்ளிப் போட்டதற்கான காரணம் இயற்கை மீது அவர் வைத்திருந்த
நேசம் தான். ஒரிஸ்ஸா கடற்கரையோரம் இருந்த வீலர் தீவில் (Wheeler
Island) தான் அது ஏவப்பட்டு பரிசோதிக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அங்குள்ள மணல்
திட்டில் தான் மிக மிக அருகி வந்த இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் (Olive Ridley Turtles) தங்கள் இனப்
பெருக்கத்தைச் செய்து முட்டை இட்டு வந்தன. நம்ப முடியாத தொலைவிலிருந்து – அதாவது ஆஸ்திரேலியாவிலிருந்து
அவை இவ்வளவு தூரம் வந்து ஒரு குறிப்பிட்ட இடமான இந்தத் தீவைத் தேர்ந்தெடுத்து வருடம்
தோறும் நவம்பர் முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்து முட்டையிடுவது வழக்கம். ஒரிஸ்ஸாவில்
இருந்த இயற்கை ஆர்வலர்கள் இந்த கடல் ஆமைகளுக்கு ஒருவித இடையூறும் வரக்கூடாதே என்று
கவலைப்பட்டு கலாமை அணுகினர். மிக முக்கியமான பாதுகாப்புப் பணியில் இதை மிக சுலபமாக
தலைமை ஆலோசகரான கலாம் நிராகரித்து விட்டு திட்டமிட்டபடி சோதனையை நடத்த முடியும். ஆனால்
அவர் அப்படிச் செய்யவில்லை. உடனடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.
அந்த உத்தரவின்
படி அந்தத் தீவில் இருந்த சோதனைக்கூட நிலையத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளும்
சுமார் ஐந்து மாத காலம் மிக மெதுவாக எரியும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் தங்கள்
வேலைகளைச் செய்து வந்தனர். ஆமைகளைப் பாதிக்கக்கூடாது என்று மின்சக்தி விளக்குகளையோ
அல்லது அதிக வெளிச்சத்தையோ அவர்கள் ஐந்து மாதம் பயன்படுத்தவே இல்லை.
கடல் ஆமைகளின் இனப்பெருக்க சீஸன் – காலம் – முடிந்தவுடன்,
‘மதிப்பிற்குரிய அந்த ஆஸ்திரேலிய விருந்தாளிகள்’ அனைவரும் புறப்பட்டுப்
போனதை உறுதி செய்த பின்னர் அக்னி II ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது; பெரிய வெற்றியை அடைந்தது.
இந்தியாவில் காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரியத்தை கலாம்
எப்படி அணுவளவும் பிசகாமல் பாதுகாத்தார் என்பதை அனைவரும் அறிந்து அவரை வெகுவாகப் போற்றினர்.
யாருக்கும் நாம் தீங்கு செய்ய மாட்டோம்; வம்புக்கு வந்தவரை சும்மா
விட மாட்டோம் என்பது தான் நமது பாதுகாப்புத் துறையினரின் இலட்சியம்! அதை உரமிட்டு வளர்த்தவர்
அப்துல்கலாம்!
Saadhuunaam hi paropakaarakarane nopaadhyapeksam manah- subhashita
rnaada manjusah
The good hearted unconditionally help others.
The selfless shirk
not from sacrificing their lives for those in dire need–Katha sarit sagaram
Himself without any clothes, the beggar is passionate about giving charity- Kahavatratnakar
XXXX
Who are Demons?
59. Those men are good men who study the good of
others without regarding themselves. Those men are
ordinary men who, while they benefit others, do not
neglect their own interests. Those men are demons who
destroy another’s good for their own profit. What shall
we call those who aimlessly destroy that which is an-
other’s ?
एके सत्पुरुषाः परार्थघटकाः स्वार्थं परित्यजन्ति ये
सामान्यास्तु परार्थम् उद्यमभृतः स्वार्थाविरोधेन ये ।
तेஉमी मानुषराक्षसाः
परहितं स्वार्थाय निघ्नन्ति ये
ये तु घ्नन्ति निरर्थकं परहितं ते के न जानीमहे ॥ 1.59 ॥
The mean find fault with others even if they eat and dress themselves normally – Kural 1079
XXXXX
Friendship of the Good
60. The milk that has been joined to the water has
long since given over to it its own innate qualities. The
water has seen the milk growing hot, and has immediately
made an offering of itself in the fire. The milk
was eager to rush into the fire, but having seen its
friend’s distress, remains still, being joined to the water.
ஏப்ரல் 2019 கோகுலம் கதிர் மாத
இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
தங்கம் தரும் மயக்கம்!
ச.நாகராஜன்
தங்கத்தின் சக்தி தான் எப்படிப்பட்ட சக்தி! தங்கம் என்றவுடன்
அனைவரும் மகிழ்ந்து புன்னகை பூத்து மகிழ்வர்.
உலகம் முழுவதும் நாடு, மதம், இனம், பால், மொழி, அந்தஸ்து ஆகிய
எந்த வித பேதமும் இன்றி அனைவராலும் போற்றப்படும் ஒரு வசீகர சக்தி தங்கம் தான்!
நாம் தங்கத்தைப் பிடித்திருக்கிறோமா அல்லது தங்கம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறதா என்பது தான் தெரியவில்லை என்று பீட்டர் எல்பெர்ன்ஸ்டீன் தனது நூலான ‘தி பவர் ஆஃப் கோல்ட்’-இல் கூறுகிறார்.
தாலிக்கு கொஞ்சமேனும் தங்கம் இல்லா வாழ்க்கை பாரதப் பெண்களைப்
பொறுத்த மட்டில் வாழ்க்கையே இல்லை.
உலகில் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா? பூமியில் உள்ள நிலப்பரப்பு
முழுவதையும் மூடினால் முழங்கால் அளவுக்குத் தங்கம் இருக்கிறதாம்!
இதற்கு மதிப்பு எல்லா நாட்டிலும் இருந்தாலும் நமது நாட்டில்
இதற்கு மவுசு ஒரு படி கூடத்தான்!
இந்தியாவில் எல்லா இல்லங்களிலும் இருக்கும் தங்கம் எவ்வளவு என்று
யாருக்கும் தெரியாது, அவ்வளவு தங்கம்! என்றாலும் கூட ஒரு உத்தேச மதிப்பீட்டின் படி
சுமார் மூன்று லட்சம் டன் தங்கம் இந்தியாவில் இருக்கிறதாம்..
அழகுக்கு அழகு செய்கிறது;ஒரு கம்பீரத்தையும் கௌரவத்தையும் தருகிறது.
பணம் இருக்கிறது என்கிற அந்தஸ்தைக் காட்டுகிறது; ஆபத்துக் காலத்தில் கை கொடுத்து உதவுகிறது;
எப்போது வாங்கினாலும் நாள் செல்லச் செல்ல மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.
ஆகவே தான் தங்கம் சிறந்த முதலீடு என்று கருதப்படுகிறது.
பிக்ஸட் டெபாசிட், ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர், வெள்ளியில் முதலீடு,
ஆங்காங்கே நிலம் அல்லது வீடு வாங்கல் ஆகிய எந்த முதலீட்டை எடுத்துக் கொண்டு பார்த்தாலும்
தங்கத்தில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை என்பது உண்மை தான்!
உலகெங்கும் இதுவரை 1,65,446 டன்கள் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ஒலிம்பிக் அளவிலான இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பி விடலாம். இதில் ஐம்பது சதவிகிதம் சென்ற 50 ஆண்டுகளில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சம் டன்னுக்கு மேல் தங்கம் பூமியில் புதைந்து கிடக்கிறது.
பல விசித்திர குணாதிசயங்களைக் கொண்டுள்ள ஒரு உலோகம் என்பதால்
இதை அறிவியல் அறிஞர்கள் கூட சற்று மயக்கத்துடன் தான் பார்க்கிறார்கள்.
இதன் அடர்த்தி எண் மிக அதிகம்.இது மிக கனமான உலோகமும் கூட! தண்ணீரை
விட 19.3 மடங்கு அதிகம். அதே சமயம் இதை எப்படி வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்; பல்வேறு
வடிவங்களாக அமைக்கலாம். மற்ற உலோகங்களை ஒப்பிடுகையில் இது மிக மிருதுவானதும் கூட! ஒரு
கிராம் தங்கத்தை ஒரு சதுர மீட்டர் தங்கத் தகடாக மாற்றலாம். அந்தத் தகடில் ஒளி ஊடுருவிப்
பாய்ந்து தகதகத்து நம்மை மயக்கும்; மகிழ்விக்கும்!
31 கிராம் தங்கத்தை மெல்லிய கம்பியாக மாற்றினால் அது 100 கிலோமீட்டர்
தூரம் இருக்கும்!
தங்கத்தின் மீது எந்தக் கெமிக்கலும் தன் “வேலையைக்” காண்பிக்க முடியாது.
மிகச் சில இரசாயனங்களே தங்கத்தைத் “தாக்க” முடியும்..
ஆயிரக் கணக்கான ஆண்டுகள் மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும் கூட
அதன் பளபளப்புப் போகாது.
அழகான சிவந்த மங்கையரின் மார்பிலும் தலையிலும் இடையிலும் காலிலும்
வெவ்வேறு ஆபரணமாக மாறி அது தவழும் போது அதன் மதிப்பும் தனி தான்; அதை அணியும் அழகியின்
மதிப்பும் தனி தான்!
ஒரு நாட்டின் பணத்தின் மதிப்பு பண வீக்கத்தால் மாறுபடலாம்; அரசியல்
மாற்றங்களால் செல்லாமல் போய் விடலாம். அரசாங்கம் நோட்டுக்களை ‘டீமானிடைசேஷன்” செய்து மதிப்பிழக்கச்
செய்யலாம்.
நிலம், வீடு போன்றவை இயற்கைச் சீற்றத்தால் அழிந்து படலாம்; மதிப்புக் குறையலாம்.
ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர்கள் நூற்றுக் கணக்கான காரணங்களால் மதிப்பை
இழந்து முதலீட்டு விலையை விடக் குறையலாம், ஏன் ஜீரோ என்ற அளவிற்கு தாழ்ந்து போகலாம்.
ஆனால் தங்கம் ஒன்று மட்டுமே தன்னம்பிக்கை தரும் ஒரு பாதுகாப்பான
இன்வெஸ்ட்மெண்டாக காலம் காலமாக இருந்து வருகிறது. மதிப்பும் குறையாது; மானத்தையும்
இழக்க விடாது!
வீட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் தங்கம் உதவுவதில்லை;
நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் கூட உதவிக்கு ஓடி வருவது தங்கம் தான்!
சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் ஒரு பிரச்சினை எழுந்த
போது அந்த நாட்டின் பிரதமர் மஹாத்திர் முஹம்மது அந்த நாட்டு மக்களிடம் தங்களிடம் உள்ள
தங்கத்தை அரசாங்கத்திடம் தற்காலிகமாக முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக்
கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். மலேசிய மக்களும் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தங்கத்தை
முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டனர். தங்கம் அரசின் பொக்கிஷத்தை
நிரப்பிய போது நிலைமை சீர் திருந்தியது. உடனே மலேசியா அரசாங்கம் தங்கத்தை மக்களிடம்
திருப்பித் தந்தது.
பெரு நாட்டில் ஏராளமான தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அதில் சுரங்க
வேலை செய்யச் செல்வோர் கிளம்பும் போது வீட்டாரிடம், “அல் லேபர் மில் வாய் நோ சே சி
வொல்வேர்” என்று சொல்வார்களாம். அதாவது, “வேலை செய்யப் போகிறேன். திரும்பி
வருவேனோ வரமாட்டேனோ தெரியாது” என்பது இதன் பொருள். இப்படிச் சொல்லி விட்டு சுரங்க வேலைக்குச்
சென்றால் ஒரு வேளை இறந்து விட்டாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏராளமான நன்மை
வந்து சேருமாம்.
தங்கத்திற்காக உயிரை விடக் கூடத் தயார் என்பதையே இது காட்டுகிறது.
பெரு நாட்டில் மட்டுமல்ல; நமது நாட்டிலும் கூட எதை இழந்தாலும்
இழக்கத் தயார்; ஆனால் தங்கத்தை இழக்கத் தயாரில்லை” என்பது தான்
நிலை.
அப்படிப்பட்ட அருமையான மஞ்சள் உலோகத்தை ‘இன்வெஸ்ட்மெண்ட் டாப்’ என்று சொல்வதில்
என்ன தவறு இருக்கிறது?
The great moral satirist, Hogarth, was once drawing in a room
where many of his friends were assembled, and among them a young lady. As she
stood by Hogarth, she expressed a wish to learn to draw caricature.
“Alas! Young lady, said Hogarth, it is not a faculty to be
envied. Take my advice, never draw caricature — by the long practice of it I
have lost the enjoyment of beauty. I never see a face but distorted. I have
never the satisfaction of to behold the human face divine.”
William Hogarth
Painter
Description
William Hogarth
FRSA was an English painter, printmaker, pictorial satirist, social critic, and
editorial cartoonist. Wikipedia
Abraham Lincoln was shown a picture done by a very
indifferent hand, and asked to give a opinion of it.
Why? said Lincoln, the painter is a very good painter and
observes the Lord’s commandments
What do you mean by that, Mr Lincoln?
Why I think, answered Lincoln, that he hath not made to
himself the likeness of anything that is in the heaven above, or that is in the
earth beneath or that is in the waters under the earth.
Xxx
Nature is creeping up
On one occasion a woman said to Whistler,
I just came up from the country this morning along the Thames
and there was an exquisite haze in the atmosphere which reminded me so much of
your little things. It was really a perfect series of Whistlers.
“Yes, Madame, Whistler responded gravely,
Nature is creeping up.”
James Abbott McNeill Whistler
American artist
Description
James Abbott
McNeill Whistler was an American artist, active during the American Gilded Age
and based primarily in the United Kingdom. He was averse to sentimentality and
moral allusion in painting, and was a leading proponent of the credo “art
for art’s sake”. Wikipedia
Degas stopped to look at each canvas, and presently gave a little exclamation of disgust. “To think, he remarked, that not one of these fellows has ever gone so far to ask himself what art is all about!”
“Well, what is all about? “Countered the critic. “I have spent my whole life trying to find out . If I knew I should have done something about it long ago”.
Xxx Thank God, I don’t know my style!
Ambroise Vollard once told Degas of a painter who had come to
him, exclaiming,
“At last I have found my true style!”
“Well, said Degas, I am glad I have not found my style yet. I
would be bored to death.”
Edgar Degas
French artist
Description
Edgar Degas was a
French artist famous for his paintings, sculptures, prints, and drawings. He is
especially identified with the subject of dance; more than half of his works
depict dancers. Regarded as one of the founders of Impressionism, he rejected the
term, preferring to be called a realist.Wikipedia
Just before
boarding the BA flight to London I was clicking pictures near Gate 14 in
Chennai Airport on 3rd April 2019. See the beautiful statues,
pictures and wood works.
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 10-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
சுற்றுப் புறச் சூழலை மேம்படுத்த
எளிய வழிகள்!
ச.நாகராஜன்
நாம் வாழும் இடத்தை மாசற்ற நிலையில்
வைத்துக் கொள்ள எளிய வழிகள் ஏராளம் உள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பதன் மூலமாக
காற்று, நீர், வசிக்குமிடம் ஆகியவை மாசு நீங்கியதாக அமைந்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும்.
எளிய வழிகளைப் பார்ப்போமா?
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கூடியமட்டில்
தவிர்ப்போம். மறுசுழற்சிக்கு உள்ளாகும் பைகளை மட்டுமே பயன்படுத்துவோம். மளிகை சாமான்கள்
வாங்க கடைக்குச் செல்லும் போது நமது துணிப்பைகளைக் கொண்டு செல்வோம்.
அச்சடிப்பதை எவ்வளவு குறைக்க முடியுமோ
அவ்வளவிற்குக் குறைப்போம். பேப்பர் பயன்பாட்டைக் கூடுமானமட்டில் தவிர்ப்போம். எழுத
வேண்டிய தருணங்களில் பேப்பரின் இரு புறமும் எழுதுவோம்.
நீர், ஜூஸ் போன்றவற்றிற்கான பாட்டில்களைப்
பயன்படுத்தும் போது மறுசுழற்சிக்குள்ளாக்கக் கூடிய பாட்டில்களையே பயன்படுத்துவோம்.
கூடுமானமட்டில் மின்சாரத்தைக்
குறைவாகப் பயன்படுத்துவோம்; மின் சக்தியைச் சேமிப்போம்; நமது செலவையும் குறைப்போம்.
நீரைச் சுத்தமாக இருக்கும்படி
மூடி வைத்துப் பாதுகாப்போம். நீரைத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவோம். திறந்த
குழாயில் வரும் நீரைப் பயன்படுத்தி நீரை வீணாக்காது பக்கெட்டுகளில் நீரைப் பிடித்து
வைத்து தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவோம்.அவ்வப்பொழுது குழாய்களைப் பராமரித்து
நீர் ஒழுகாமல் இருக்கும்படியும் நீர் வீணாகாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொள்வோம்.
குறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு
நடந்து செல்வோம் அல்லது சைக்கிளில் செல்வோம்.அவசியம் ஏற்படும் போது மட்டும் கார்களில்
பலருடனும் இணைந்து செல்லும் ஏற்பாட்டைச் செய்து கொண்டு செல்வோம்.
தனி நபருக்கு மட்டும் என்று கார்
எடுத்து ஓட்டும் நிலையைத் தவிர்ப்போம்.
வாகனப் பயன்பாட்டில் வெளிவரும்
புகை நாட்டையே மாசு படுத்தும் என்பதால் அதி நவீன கார் எஞ்ஜின்களை மட்டுமே பயன்படுத்துவோம்.
சிறு அளவில் என்றாலும் எங்கெல்லாம்
சூரிய ஆற்றலைப் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சோலார் எனர்ஜியைப் பயன்படுத்தி மற்றவருக்கு
எடுத்துக்காட்டாகத் திகழ்வோம்.
இது பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து
அனைவருக்கும் ஊட்டுவதை தேசீயக் கடமையாக எண்ணிச் செயலாற்றுவோம்.
நாம் செய்யக்கூடிய அனைத்தையும்
திட்டமிட்டுச் செய்து நமது பகுதியை சுற்றுப்புறச் சூழல் மேம்பட்ட பகுதியாக மாற்றுவோம்.