Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும்
இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல்
10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன.
இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத்
தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 3-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட மூன்றாம் உரை இங்கு
தரப்படுகிறது.
பசுமைக் கட்டிடம் அமைப்போம்!
இன்று
உலகமெங்கும் வெப்பமயமாதல் என்ற ஒரு பெரும் அச்சுறுத்தல் நிலவி வரும் வேளையில் கட்டிடக்
கலையில் வரவேற்கத்தக்க ஒரு மா பெரும் புரட்சி
ஏற்பட்டுள்ளது.
Green
Bulding எனப்படும் பசுமைக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் என மக்களிடையே
பொதுவான கருத்து வலுவாக உருப்பெற்று விட்டது.
இயற்கையான சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடின்றி மறுசுழற்சிக்கு
உள்ளாக்கப்பட்ட பொருள்களைக் கட்டிடம் கட்டப் பயன்படுத்துதல் இன்று ஒரு நல்ல பழக்கமாகி
வருகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு முயற்சி. அத்துடன் Sustainablity
எனப்படும் நீடித்துத் தாங்கும் தன்மையுள்ள கட்டிடங்களாகவும்
புதிதாக அமைக்கப்படும் கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமான கருத்தாகும்.
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயர் தொழிற்பாட்டுக் கட்டிடங்கள் இன்று அமைக்கப்படுகையில்
அவற்றில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவது, சக்தித் திறனைச் சேமிப்பது, Water
efficienty எனப்படும் நீர் செயல் திறனை அதிகரிப்பது ஆகியவையும் கருத்தில்
கொள்ளப்படுகின்றன.
உலகளாவிய அளவில் பெரும் கட்டிடக் கலை நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சிக்கென
ஒரு தனிக் குழுவை அமைத்துச் செயல்படுவதோடு நல்ல ஒரு ஆக்கபூர்வமான கருத்தை முன் வைப்போருக்கு
பரிசுகளும் வழங்கி வருகின்றன.
கழிவு நீரை வெளியேற்றப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது,
மாசுள்ள புகையை வெளிப்படுத்தும் வாகனங்களைக் கட்டுப்படுத்துவது, இயற்கைச் சூழ்நிலைக்கேற்ப
வாழ்விடங்களை அமைப்பது இந்தப் பசுமைத் திட்டத்தில் இடம் பெறும் முக்கிய அம்சங்களாகும்.
கட்டிடத்தை புனருத்தாரணம் செய்வோரும், புதிதாகத் தன்னளவில் கட்டிடம்
கட்ட நினைக்கும் மத்திய தர வர்க்கத்தினரும் இந்த நவீன கருத்தின் அடிப்படையை உள்வாங்கிக்
கொண்டு அதன் படி தங்கள் இல்லங்களை அமைத்துக் கொண்டால் சுற்றுப்புறச் சூழல் பெரிதும்
மேம்படும்.
மரங்கள் வெட்டப்படக் கூடாது, படிம எரிபொருள் எனப்படும் பெட்ரோல்
உள்ளிட்டவற்றைத் தேங்க விடக்கூடாது போன்ற மிக முக்கியமான விதிகளைப் பசுமைக் கட்டிடங்களை
அமைப்போர் கொண்டுள்ளனர்.
பசுமைக் கட்டிடங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் இன்னும்
அதிக அளவில் பரப்பினால் எதிர்கால நகரங்கள் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நகரங்களாக
உருப்பெறும், இல்லையா?!
சென்னை அரசினர் அருங்காட்சியக வளாகம் பல அதிசய மரங்களைக் கொண்டுள்ளது.
இங்கு கல்லாக மாறிய (படிம fossil tree அச்சு ) மரம் ஒன்றுள்ளது.
திருவெள்ளக்கரை வரை சென்று படிம அச்சுப் பூங்காவைப் பார்க்க முடியாதவர்கள் இங்கு
பல கோடி ஆண்டுகளில் கல் போல மாறிவிட்ட மரத்தைக் கண்டு களிக்கலாம்
வளாகத்தைப் பின்புறமாகச் சுற்றி
வந்தால் மிகப் பெரிய பழம்தின்னி வௌவால்கள் Fruit eating bats நூற்றுக் கணக்கில் ( ஆயிரக் கணக்கில்??) பறப்பதையும் காணலாம்
ஆனைப் புளியங்கொட்டை மரம்????
ஆனால் பாவோபாப் (Baobab Tree) என்னும் மரத்துக்கு ஆனைப்
புளியங்கொட்டை என்று பெயரிட்டுள்ளனர். அது தவறு என்று நினைக்கிறேன். மதுரைக்
கல்லூரி தாவரவியல் சுற்றுலாவின்போது நானே ஏர்க்காடு சென்று ஆங்குள்ள ஆனைப்
புளியங்கொட்டை மரத்தைப் பார்த்துள்ளேன். அதன் காய் தோற்றத்தில் புளியங்காய் போல
இருக்கும். ஆனால் ஆறு அடி நீளம் வரை காய் இருக்கும். இதை யானைக் கொழுஞ்சி என்று
கூறுவர் என விக்கி பீடியா கூறுகிறது . ஆனால் சென்னை வளாகத்தில் உள்ள மரம் அது
அல்ல.
சென்னை வளாகத்திலுள்ள மரத்திற்கும் பொந்தன் புளி, ஆனைப் புளி என்று பெயர் உள்ளது.
ஆயினும் இந்த மரத்தின் காய்கள் அரை அடி
முதல் ஒரு அடி வரை மட்டும்தான் வளரும். ஆனால் ஏர்க்காட்டில் நாங்கள் பார்த்து, மதுரைக் கல்லூரி தாவரவியல்
சோதனைக்கூடத்துக்குச் சேகரித்த புளியங்காயோ 5 அடி முதல் 6 அடி வரை இருந்தது. ஒரு வேளை இரண்டு
மரத்துக்கும் ஒரே பெயர் (பாமர மக்கள் அளவில்) இருந்தாலும் வியப்பில்லை. நல்ல
வேளையாக தாவரவியல் (Botanical
name) பெயர் வேறு.
மற்றொரு மரம் சிவலிங்கப் பூ அல்லது
நாகலிங்கப் பூ மரம் ஆகும்.
இது தவிர நங்கூரம், பீரங்கி முதலியனவும் வெளிச் சுவரை அலக்கரிக்கின்றன (படங்களைக் காண்க)
5 Oct 2012 – வியப்பூட்டும் அதிசய மரங்கள். Picture shows Udumpara Tree (Aththi
in Tamil, Ficus glomerata or Ficus racemora). உலகில் மரத்தின் பெயரை நாட்டின் …