Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நேற்றைய முதல் பகுதியில் கீரி -பாம்பு பற்றி சாயனர் கூறியது, 21 பெண்மயில்கள் பாம்பு விஷத்தை இறக்குவது, அதிசய விஷம் உறிஞ்சசும் பறவை, ரிக் வேத பாம்புக்கடி மந்திரம் கொரோனாவைத் தீர்க்க உதவும் என்பதைப் பார்த்தோம்.. முழு மந்திரம் இதோ :-
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொண்டைமண்டல சதகம் பாடல் 16
பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சிபுரம்!
ச.நாகராஜன்
படிக்காசுப் புலவர் இயற்றிய நூல் தொண்டைமண்டல சதகம்.
தென்களத்தூரில் பிறந்த இவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர்.
நூறு பாடல்கள் கொண்ட இந்த சதக நூலில் தொண்டை மண்டலத்தின் அனைத்துச் சிறப்புகளும் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று பரிமேலழகர் வாழ்ந்த இடம் தொண்டைமண்டலம் என்பது.
சதகத்தின் 16வது பாடல் இது:
வள்ளற்சிலைப்பெரு மாணச்சர்சாத்தர் வழுதிமுதற்
றள்ளுவனார்க்குந்த் தலையானபேரையுந் தன்னுரையை
விள்ளுவனார்க்குத் திருக்காஞ்சிவாழ்பரி மேலழகன்
வள்ளுவனார்க்கு வழிகாட்டினான்றொண்டை மண்டலமே
பாடலின் பொருள் :-
தனது கல்விப் பெருக்கத்தின் பயனாகிய நூல்களுக்கு உரை செய்கின்ற திறத்தால், வள்ளல்சிலைப்பெருமாள், நச்சர், சாத்தர், வழுதி முதலிய உரையாசிரியர்களை வென்றவனாகிய காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பரிமேலழகன் என்னும் உரையாசிரியர் திருவள்ளுவரின் நூலின் பொருளை உலகத்தினர் கண்டெடுத்து உய்யும் பொருட்டுச் சிறந்த உரையாகிய ஒரு வழியை ஏற்படுத்தினார். அப்பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சீபுரமும் தொண்டைமண்டலத்தில் உள்ள நகரேயாகும்.
திருவள்ளுவரின் திருக்குறளுக்குச் சிறந்த உரைகளை எழுதியவர்கள் பத்துப் பெரும் உரையாசிரியர்கள்.
தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்
பரிலேழகர் பருதி – திருமலையர்
மல்லர் கவிப் பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்.
தருமர் 2) மணக்குடவர் 3) தாமத்தர் 4) நச்சர் 5) பரிமேலழகர் 6) பருதி 7) திருமலையர் 8) மல்லர் 9) கலிப்பெருமாள் 10) காளிங்கர் ஆகிய பத்துப் பேரே திருக்குறளுக்கு உரை எழுதிய பேராசிரியர்கள் ஆவர்.
இந்தப் பத்துப் பேருடைய உரையில் பரிமேலழகர் உரையே சிறந்ததாக அமைகிறது என்பதை அனைவரும் உணர்ந்து அதைப் பாராட்டியுள்ளனர்.
இவர்களில் காலத்தால் பிற்பட்டவர் பரிமேலழகர். பரிமேலழகரின் உரை வந்த பின்னர் மற்ற ஒன்பது உரைகளும் அவ்வளவாகப் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை.
“பரித்த உரை எல்லாம் பரிமேலழகன்
தெரித்த உரையாமோ தெளி”
என்ற தெளிவு மொழி இதைச் சுட்டிக் காட்டுகிறது.
ஒவ்வொரு உரையாசிரியரும், அதிகார முறை வைப்பிலும் கூட மாறுபடுகின்றனர். சில பாட பேதங்களும் ஓலைச் சுவடிகளில் உண்டு.
ஆனால் பரிமேலழகர் உரை தெளிவான ஒரு பார்வையைக் காட்டுகிறது.
பரிமேலழகர் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பரிபாடலுக்கும் சிறந்த உரையை இவர் எழுதியுள்ளார். பரிமேலழகர், காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் அர்ச்சகராக இருந்த வைஷ்ணவர்.
தனது திருக்குறள் உரையில் ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்ற நம்மாழ்வார் பாசுரத்தை இவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். அத்துடன் கடவுள் வாழ்த்தில் வரும் ‘எண்குணத்தான்’ என்ற தொடரை இது சைவ ஆகமத்தில் கூறப்பட்டிருக்கிறது என்று கூறுவதால் இவர் சைவம், வைணவம் உள்ளிட்ட அனைத்து சமயப் பிரிவுகளையும் சமமாகக் கருதுவது குறிப்பிடத் தகுந்தது. உமாபதி சிவாச்சாரியாரும் பரிமேலழகரைப் பாராட்டியுள்ளார்.
மு.இராகவையங்கார் தனது ஆராய்ச்சிப்படி கி.பி. 1272இல் இவர் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்.
திருக்குறளைப் படிக்க பரிமேலழகர் உரை பெரிதும் உதவும். தற்கால உரைகளை (குறிப்பாக 1967க்கு பிற்பட்டு வந்த பெரும்பாலான உரைகள், உரை எழுதியவர் தனது முகத்தைத் திருக்குறள் என்னும் கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்து மகிழ்ந்து எழுதியது என்றே கூறி அவற்றை) விலக்கி விடலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON
FOLLOWING PROGRAMME WAS BROADCAST ON 3-5- 2021 MONDAY
Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS
OPENING ANNOUNCEMENT & PRAYER
SONG BY MISS SAHANA RAJNARAYANAN FROM PONDICHERRY— 7
XXX
TALK BY Dr HARIHARA SREENIVASA RAO ON TEMPLE ARCHITECTURE IN ENGLISH-12 mts
Dr. Harihara Sreenivasa Rao , Bengaluru
D.O.B: 01-07-1948
Born in Harihara in Davanagere district, Karnataka. Hailing from a family who is devoted to taking care of rituals and various operations of Shri Harihareshwara Temple in Harihara for generations.
A Science graduate, having a Diploma in Civil Engg., done M.A. in Inscriptions and finally PhD. in Hydrology based on Inscriptions and Literature.
DR HARIHARA SREENIVASA RAO SAYS,
“Throughout my sessions on this platform, I will speak about various aspects of temple architectures, idols, inscriptions, acoustics, yoga, effects of lullaby with respect to their relation and effects in terms of spirituality and various religious aspects. Later I will touch upon a few aspects and traits of Hydrology and explain how throughout the passage of time it has given shape to various religious thoughts, spirituality, and literature”.
XXX
SONG BY MRS ANNAPURANI PANCHNATHAN from London- 5
SHANMATHA TALK SERIES- KAUMARAM- MURUGAN WORSHIP– BY TIRUCHY MR K GANESAN-12 MTS
Ashtapathi 12 by London Balasubramanyam – 7 mts
BENGALURU MR .S. NAGARAJAN’S TALK ON “YOGA VASISTHAM”- 10 MINUTES
DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -6
MANGALAM
TOTAL TIME- APPR. 65 MINUTES
INTRODUCTION TO GNANAMAYAM
WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .
LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.
TIME OF BROADCAST- TWO PM LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;
DAYS- MONDAYS AND SUNDAYS
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
FORMER BBC BROADCASTER,
SENIOR SUB EDITOR, DINAMANI,
FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL
PLUS
FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;
MANAGER, LONDON TAMIL SANGAM,
HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;
HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &
CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)
***
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ரிக் வேதத்தில் உள்ள பாம்பு கடி மந்திரம் மிகவும் பிரபலமானது . இது முதல் மண்டலத்தின் கடைசி மந்திரம் ஆகும் (1-191). இது அகஸ்தியர் பெயரில் உள்ள மந்திரம். அதாவது அவர் ‘கேட்ட மந்திரம்’. வேதங்களுக்கு ‘கேள்வி’ என்று பெயர். அதாவது மானசீகமாகக் கேட்கப்பட்டவை. இதை சம்ஸ்க்ருதத்தில் ‘ச்ருதி’ என்பர்.
துதியிலுள்ள 16 மந்திரங்களையும் இறங்கு வரிசையில் விளக்கியுள்ளேன்.
அகஸ்தியர் கேட்ட இந்த பாம்பு, தேள் கடி மந்திரத்தில் பல சுவையான செய்திகள் உள்ளன. இதிலுள்ள வரிகளைப் பார்க்கையில் இது கொரோனா (Anti Corona Virus) முதலிய வைரஸ் நோய்களையும் தீர்க்கும் என்றே தோன்றுகிறது. இந்த 191ஆவது துதியில் மொத்தம் 16 மந்திரங்கள் இருக்கின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
The Rigveda has a mantra against snake bites and other poisonous creatures including scorpions. The mantra or the spell has some lines against unseen germs as well. I personally think that this mantra can be used as anti COVID-19 spell by those who have faith in the Vedic mantras. Hindus believe that Vedic sound effect is more important than the literal meaning.
There are more interesting details coming out of the commentaries on these mantras. It talks about anti dotes to poison and the anti-dotes are peacock/peahen, mongoose, a bird identified as Francolin partridge , herbs, sun and the hymn Mantra itself.
This Rigvedic hymn 1-191 has 16 mantras or stanzas in it. It is attributed to seer Agastya.
RTH Griffith, who translated it gives us the following information,
My additional interpretation is that it may be used against all viral attacks because it talks about invisible and unseen poison attacks as well.
Since the hymn is at least 3500 years old, we lost some of the original meaning..
in the second part i will give the full mantra………….
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதிசயமான நூல்- யோகவாசிஷ்டம்
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 3-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
உலகில் மிக அதிசயமான நூல் எது என்று யாரேனும் ஒருவர் கேட்டால் தயங்காமல் விடையைக் கூறி விடலாம் – அப்படிப்பட்ட மிக அதிசயமான நூல் யோகவாசிஷ்டம் என்று!உலகில் மனித மனதில் சிக்கலான பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அறிஞர்களாலும் கூட சரியாகப்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Though I didn’t agree with all the views in the editorial, I enjoyed the last two paragraphs. I kept this paper cutting for 27 years and I now happily throw it in the dustbin.
Here is the editorial:-
Beyond Hobson -Jobnson
There are few things more Indian than English.
As our Delhi correspondent reports today ,prickly Indian nationalists are at war with the English language . The advertisements of Pepsi Cola and other Western companies are accused of causing all that is corrosive of Indian moral and spiritual substance. This problem has existed, in some form or other, for many centuries: Macaulay’s robust Minute of 1835 averred that ‘English is better worth knowing than Sanskrit or Arabic ‘and who could challenge him? But the modern cavalry charge, led by Hindi speaking politicians from the north of the country, is a piece of cultural vandalism that could endanger the economy too.
English, as spoken as a first language by over 40 million Indians at a conservative estimate, has taken root in the soil like a venerable banyan tree. The novelist Raja Rao wrote in ‘Kantharupa’ – a century after Macaulay— that Indian English’ has to be a dialect which will someday prove to be as distinctive and colourful as the Irish and the American. it has proved that distinctness resoundingly and is India’s intellectual vehicle today.
India and English have a symbiotic relationship. If India has a cast iron asset in the rugged world of commercial intercourse, it is its pool of skilled English speaking people. This gives the country its greatest competitive advantage; its technicians enjoy a mobility unhampered by language and foreign investors have not the headache of teaching their own nationals a formidable new tongue.
The juggernaut of English viewed with paranoia by the French and others , works entirely in India’s favour.The English language , too has profited from its adoption by the Indian sub-continent, Indians, with more than one language and culture, have woven a complex cloth with English thread. Grammatical forms and usage are often unique to Indian speakers of the language. But it is in the area of vocabulary and idioms that the surest mark has been made. English will be forever grateful for jungle and shampoo; and there are a thousand others. Numerous, too are the words intelligible to Indians alone; there are dacoiits, eve teasers and four twenties galore in mofussil areas , who if nabbed by the jawans, will be thrashed with lathis. And the jawans will only be doing the needful.
Yet nothing is more distinctive about Indian English than the manner of its pronunciation. That it is rhotic and syllable timed, and it’s speakers tend to geminate voiceless inter vocalic obstruents is not important. As proprietors of their own tongue. They are entitled to mould it to Indian cadences English is an Indian language, and English is richer for it. Those who wish to rid their country of it are three hundred years too late.
——The Times Editorial, May 20, 1994
Xxx
Language Quotations
Language is an ever evolving entity. There are rules, but the rules bend and break, depending on usage. New words are created through abbreviation, conflation,misunderstanding and poetic invention.
Richard Herring , Metro, 25-1-2013
Xxxx
English language is a mongrel !
The English language is a mongrel created by thousands of years of invasion and immigration. Most of our words are appropriated from other languages. So to complain about us adopting a few American words, after giving them so many, is plane stupid.
Richard Herring , Metro, 25-1-2013
Xxxx
Horrible Hand writing of Byron and Charles Dickens
The Royal collection in Britain is held in various Royal buildings such as
Buckingham Palace, Windsor Castle and palace in Scotland
There are lots of letters and manuscripts, often written in a semi -illegible hand. A page by the novelist Charles Dickens is almost impossible to read, but the most abominable hand writing is undoubtedly that of the romantic poet Lord Byron, who tended to have a few drinks to spur on creative imagination and who then sat down to write fast and furiously through the night.
The Royal collection also has an essay written by the Queen when she was 11 year old. The essay by the present queen was written in 1937, when she was eleven , and describes the coronation of her parents in London Westminster abbey.
Source – a museum of the British monarchy BBC topical report 7-3-1990
Xxx subham xxx
Tags- Indian English, Times Editorial, Mongrel, Byron, Dickens’ handwrining.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
உபநிஷத்துகளில் மிகப்பழமையானது பிருகதாரண்ய உபநிஷத். மேலைநாட்டினரும் கூட இதை கி மு 800 என்று தேதி குறிப்பிடுகின்றனர். அதில் வரும் கதை இதோ: பிரஜாபதிக்கு தேவர், மனிதர், அசுரர் மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூவரும் பிரம்மசர்யத்தை அனுஷ்டித்து தந்தையிடமே
tags –த த த கதை, ஐ.நா சபை , காஞ்சி சுவாமிகள் ,மைத்ரீம் பஜத பாடல்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று May 2-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
XXXX
கும்ப மேளா நிறைவு-பிரதமர் வேண்டுகோளை ஏற்று அமைதியாக நடந்தது
கும்பமேளாவில் கடைசி புனித நீராடல் ஏப்ரல் 27 ம் தேதி
நடந்தது. பிரதமர் வேண்டுகோளை ஏற்று வெறும் சம்பிரதாய மாக நடத்தப்பட்டது
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கொரோனா தாக்கம் காரணமாக, இதன் நாட்கள் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது. ஏப்ரல் 30 ம் தேதி
முடிவடைந்தது. கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கங்கை நதியில் குவிந்து புனித நீராடினர்.
கும்பமேளாவில் கடைசி புனித நீராடல் ஏப்ரல் 27 ம் தேதி
மதியம்வரை, பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சுமார் 700 மடாதிபதிகள் புனித நீராடினர். எந்த ஆரவாரமும் இல்லாமல் வெறும் சம்பிரதாய அளவில் புனித நீராடல் சடங்கை மேற்கொண்டனர்.மற்ற படித்துறைகளில் பக்தர்கள் கூட்டமும் மிகக்குறைவாகவே காணப்பட்டது.. மடாதிபதிகளின் ஒத்துழைப்புக்கு கும்பமேளா அதிகாரி தீபக் ராவத் நன்றி தெரிவித்தார்.
XXXX
23 ஆண்டுக்கு பிறகு வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தன்வந்திரிசுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
செவ்வாய் பரிகார தலமாகவும், நோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு
ஏப்ரல் 29 ம் தேதி வியாழக்கிழமையன்று கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்ரல் 29 காலை புனிதநீர் அடங்கிய கடங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட புறப்பட்டு கோயிலை வலம் வந்து கற்பக வினாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் மூலவர் விமானங்கள், 6 கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னியிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.
கோவிலை சுற்றியுள்ள வீடுகளில் இருந்த பக்தர்கள் மாடிகள் மீது ஏறி குடமுழுக்கை தரிசனம் செய்தனர்.
XXXX
திருப்பதி ஏழுமலையானுக்கு ‘இன்னோவா‘ கார் நன்கொடை
திருமலைபாலாஜி வெங்கடாசலபதி கோவிலுக்கு , 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘இன்னோவா‘ கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருப்பதியில் உள்ள ஹர்ஷா டயோட்டா நிறுவனத்தினர், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா காரை, நேற்று நன்கொடையாக வழங்கினர். காருக்கு மாவிலை, சந்தன குங்குமம் இட்டு, அலங்கரித்து பூஜை செய்து, பழங்கள் படைத்து வழிபட்டு, அதிகாரிகள் அதன் சாவியை பெற்றுக் கொண்டனர்.
அசோக் லேலண்ட் நிறுவனம் பாலாஜி வெங்கடாசலபதி கோவிலுக்கு ஒரு மினி பஸ்ஸை நன்கொடையாக கொடுத்தது
XXXX
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.94½ லட்சம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் சமீபத்தில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்த விழாவில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த நிலையில் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது காணிக்கையாக கோவில் உண்டியலில் பணம், தங்கநகை, வெள்ளிநகை போன்றவற்றை செலுத்தினார்கள். கடந்த 34 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.
கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.96 லட்சத்து 51 ஆயிரத்து 200 செலுத்தி இருந்தனர். மேலும் 560 கிராம் தங்கம், 4 கிலோ 900 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
XXXX
திருவண்ணாமலையில் ஸ்டாலின் மகள் கிரிவலம்
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, தடையை மீறி, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அவர்களை போலீசார் தடுக்கவில்லை என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவலால், 14வது மாதமாக, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சித்ரா பவுர்ணமி திதி நேரத்தில் கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் சந்தீப் நந்துாரி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும், தி.மு.க., மருத்துவ அணி மாநில துணைத் தலைவருமான கம்பன் உள்ளிட்ட மூன்று பேர், முக கவசம் அணிந்து, கிரிவலம் சென்றனர்.
இவர்கள் மூவரும், இரவு, 8:50 மணியளவில், கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தை கடந்த போது, ‘இவர்களை மட்டும் எப்படி கிரிவலம் செல்ல அனுமதித்தனர்’ என, உள்ளூர்வாசிகள் கேள்வி எழுப்பினர். அந்த பகுதியில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், கிரிவலப் பாதையில் ஆங்காங்கே இருந்த போலீசாரும், இவர்களை கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து, கலெக்டர் சந்தீப் நந்துாரியிடம் கேட்க முயன்றபோது, மொபைலில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பி.ஆர்.ஓ., முத்தமிழ் செல்வன் கூறுகையில், ”மாவட்ட நிர்வாகத்திடம், ஸ்டாலின் மகள் கிரிவலம் செல்ல அனுமதி கேட்கவில்லை; அனுமதியும் தரவில்லை,” என்றார்.
XXXXX
தங்ககுதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர்
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் .27 நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக செயற்கையாக வைகை ஆறு செட் அமைக்கப்பட்டு அழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி நடத்தப்பட்டது. இந்தாண்டும் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்கு ஆடி வீதியில் செயற்கையாக வைகை ஆறு செட் அமைக்கப்பட்டு, காலை ஆண்டாள் மாலை சாற்றுதல் முடிந்த பின், ஆடி வீதியில் காலை 8:30 மணிக்கு குதிரை வாகனத்தில் வைகையில் இறங்குவதாக கருதி அழகர் புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பச்சை பட்டுடுத்தி அழகர் அருள்பாலித்தார்.
7-ம் நாள் விழா காலையில் கோவில் ஆடி வீதியின் வடக்கு பகுதியில் ஏற்கனவே மாதிரியாக அமைக்கப்பட்ட வைகை ஆறு பகுதியில் கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.
அங்கு மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக கடலூர் மாவட்டத்தில், கைவினைக் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட 3 அடி உயர புதிய மண்டூக முனிவர் சிலை அங்கிருந்து அழகர்கோவில் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்து, விழாவில் வைக்கப்பட்டது. XXXX
சட்ட விதிகளின்படி கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா? அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
சட்ட விதிகளின்படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்களை நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு வனப்பகுதியில், யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானையைப் பாகன் அடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகளைக் கோயில் நிர்வாகங்கள் முறையாகப் பின்பற்றுகின்றனவா என, இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழக வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படும் வகையில், புதிய கொள்கை வகுப்பது தொடர்பாக யானைகள் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கடந்த 23-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டு, அரசுக்குப் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்..ஜூன் மாதத்துக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
XXXXXX
கொரோனா மையம் அமைக்க ஈஷா பள்ளிகள் ஒப்படைப்பு
: ஈஷா யோகா மையம் சார்பில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படும் எட்டு பள்ளிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்துவதற்காக, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தன், ‘டுவிட்டர்’ பதிவில், ‘ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழக அரசுக்கு ஒப்படைக்கிறோம். ‘இந்த சவாலில் இருந்து வெளிவர, நம் சமூகம் ஒன்றிணைந்து, அரசு நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயது நோயாளியை காப்பாற்ற தன் மருத்துவமனை படுக்கையை தியாகம் செய்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்த 85 வயது முதியவர் வீட்டில் இறந்தார்.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் நாராயண் தபோல்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். கொரோனாவுக்கு நாக்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 40 வயது கணவருக்கு மருத்துவமனையில் படுக்கை வேண்டி பலரிடம் அவரது மனைவி கெஞ்சினார்.
இதையறிந்த தபோல்கர் டாக்டரிடம் ‘எனக்கு 85 வயது. வாழ்ந்து முடித்துவிட்டேன். பெண்ணின் கணவரை காப்பாற்றுவது தான் முக்கியம். என்னை ‘டிஸ்சார்ஜ்‘ செய்து அவருக்கு படுக்கையை வழங்குங்கள்‘ எனக் கூறினார்.
‘உங்கள் நிலை ஆபத்தாக உள்ளது. வீட்டுக்கு செல்வது நல்லதல்ல‘ என டாக்டர்கள் கூறியும் தபோல்கர் தன் படுக்கையை பெண்ணின் கணவருக்கு வழங்கிவிட்டு வீடு திரும்பினார். அதன்பின் மூன்று நாட்களில் தபோல்கர் இறந்துவிட்டார். தபோல்கர் செய்த உதவியால் பெண்ணின் கணவர் பிழைத்துவிட்டார் .தபோல்கர் தியாகத்தை பலரும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
Xxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………