Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பூமியிலுள்ள 118 மூலகங்களில் இதுவரை 32 பற்றி எழுதினேன். இன்று 33-ஆவதாக குளோரின் (CHLORINE) என்னும் வாயு பற்றி சுவையான செய்திகளைச் சொல்கிறேன். நாம் தினமும் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவது உப்பு. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது தமிழ்ப் பழமொழி. அது மட்டுமல்ல. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது ஆன்றோர்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 16-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத்
துன்னிய ஜோதி ஆகிய ஈசன் தொல் மறை
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே.
திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள இந்தத் தலம் மதுரைக்கு தென்மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது,
இந்தத் தலம் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. தேவர்களின் துயர் தீர்க்க, சூரபத்மனை வதம் செய்தார் ஸ்ரீ சுப்ரமண்யர். அதனால் மனம் மிக மகிழ்ந்த தேவேந்திரன் தனது மகளான தெய்வயானையை முருகனுக்கு மணம் முடித்துத் தர எண்ணினான். தெய்வயானையை முருகன் திருமணம் செய்து கொண்ட தலம் இதுவே ஆகும். வடக்குப் பார்த்து முருகபிரான் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார்.
இன்னொரு முக்கிய புராண வரலாறும் உண்டு. சிவபிரான் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை பார்வதி தேவிக்கு உபதேசிக்கும் போது அதை முருகன் பார்வதி தேவியின் மடிமீது அமர்ந்து கேட்டார். முருகப்பிரான், பிரம்மனுக்கு பிரணவத்தை உபதேசம் செய்தாலும் கூட, அவர் சாஸ்திரப்படி குருவிடமிருந்து பிரணவத்தை முறையாக உபதேசம் பெற்றுக் கொள்ளவில்லை. இது சாஸ்திரத்திற்கு முரணானது. ஆகவே பரிகாரமாக முருகன் இங்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தார். இதனால் மகிழ்ந்த அம்பிகையும் சிவபிரானும் இங்கு தோன்றி முருகனின் தவத்தைப் பாராட்டினர். சிவன் பரங்கிநாதர் என்றும் அம்பிகை ஆவுடைநாயகி என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் திருப்பரங்குன்றத்தில் உள்ளது. இங்கு சென்று இவர்களை வழிபடுதல் ஐதீகமாகும்.
சுமார் 170 மீட்டர் உயரம் கொண்ட திருப்பரங்குன்றம் சிறிய மலையாகும். இந்த மலையே சிவலிங்கம் போல அமைந்திருப்பதால் மலையைத் தொழுவதே சிவபிரான் வழிபாடாக ஆகிறது.
இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை. வேலுக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. கோவிலின் நுழைவாயிலில் இடதுபுறம் உள்ள கருப்பணசாமியை தரிசனம் செய்து விட்டுப் பின்னர் முருக தரிசனம் செய்வது மரபாகும். சரவணபொய்கையில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பின்னர் கோவிலில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியே கர்பக்ருஹத்தை அடைய வேண்டும். இது ஒரு குகைக் கோவில் அதாவது மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில் இது. ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி, துர்க்கை, கற்பக விநாயகர், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
கோவிலின் நுழைவாயிலில் பத்து பெரிய கல் தூண்கள் உள்ளன. இங்கு அன்னபூரணி குகைக் கோவிலும் ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன. ஏராளமான அற்புத சிற்பங்களும் இங்கு உள்ளன. மலையின் மீது ஜாக்கிரதையாக ஏறிச் சென்றால் அங்குள்ள காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம்.
இங்குள்ள வைத்தியன் கிணறு என்னும் தீர்த்தம் சிறப்பான புராண வரலாற்றைக் கொண்டதாகும். சுடுகாட்டில் வேலை செய்ததால் ஏற்பட்ட வெண்குஷ்டத்தை நீக்க வேண்டி அரிச்சந்திர மஹாராஜன் சிவனை நோக்கி வழிபட, திருப்பரங்குன்றத்தில் உள்ள பஞ்சாக்ஷர பாறையில் தவம் செய்யும் பராசர மஹரிஷியை தரிசிக்கும் படி, சிவன் கூறி அருள் பாலிக்கிறார். அதன்படியே பராசர மஹரிஷியை தரிசித்த அரிச்சந்திரன் அவரது சொல்படி இங்குள்ள வைத்தியன்கிணற்றில் நீராட தனது வெண்குஷ்டம் மறைந்து மகிழ்ச்சி அடைந்தார். இன்றும் கிரிவலம் வருவோர் இதில் நீராடி வருகின்றனர்.
திருவிளையாடல் புராணமும் திருப்பரங்குன்ற புராணமும் விவரிக்கும் சுவையான வரலாறு ஒன்று உண்டு. சங்கப் புலவர்களுள் தலையாய புலவரான நக்கீரர் சிவனையன்றி வேறு ஒருவரையும் பாடமாட்டேன் என்ற விரதம் கொண்டவர். அவருக்கு அருள் பாலிக்க நினைத்த முருகப்பிரான் தனது பூதகணங்களான உக்கிரன் மற்றும் அண்டாபரணன் ஆகியோரை அழைத்து, “நக்கீரர் தினமும் மதுரையிலிருந்து வந்து இங்கு சரவணப் பொய்கையில் நீராடி நம்மை தரிசிக்காமல் செல்கிறார். அவரை மலையின் முன்புறம் உள்ள குகையில் வைத்து கதவை மூடி விடுங்கள்” என்று உத்தரவிட்டார். ஒருநாள், நக்கீரர், சரவணப்பொய்கையில் நீராடி தீர்த்தக் கரையில் வழக்கம் போல சிவபூஜை செய்து கொண்டிருந்தார். நக்கீரரின் தபோ பலத்திற்கு அஞ்சிய பூதகணங்கள் ஒரு சிறிய உபாயத்தைக் கையாண்டனர். அங்கிருந்த அரசரமரத்தின் இலை ஒன்றைப் பாதி தண்ணீரிலும் பாதி கரையிலும் இருக்கும்படி அவர்கள் விடுத்தனர். அந்த இலையோ தண்ணீரில் விழுந்த பக்கம் மீனாகவும் தரையில் விழுந்த பக்கம் பக்ஷியாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த நக்கீரர், ‘இது என்ன அதிசயம்’ என்று எண்ணி,சிவபூஜையைப் பாதியில் விட்டு விட்டு மீனும் பக்ஷியும் படும் வேதனையைத் தீர்க்கக் கருதி, அவ்விரண்டையும் பிரிப்பதற்காக அவற்றை இணைத்திருந்த நரம்பைக் கிள்ளினார். ஆனால் அவையோ துடிதுடித்து இறந்து விட்டன. உடனே பூதகணங்கள் அவரைப் பிடித்துக் குகையில் அடைத்தனர். செய்வதறியாது திகைத்த நக்கீரர் சிந்தித்தார். முருகப்பெருமானை பாடாததே இதற்கான காரணம் என்பதை அறிந்து கொண்டார். உடனே ‘உலகம்’ என்று ஆரம்பித்துக் ‘கிழவோனே’ என்று முடித்து திருமுருகாற்றுப்படையை இயற்றினார். இதனால் மகிழ்ந்த முருகன் தனது வேலால் அவர் இருந்த பாறையைக் கீறி அவரை விடுவித்தான். இந்தப் பாறைக்கு வேலெறி பாறை என்று பெயர். வைகாசி விசாகம் முருகன் அவதரித்த நன்னாள். இங்கு வைகாசி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் 10 நாள் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான காவடிகளை எடுத்து வழிபடுகின்றனர்.
இங்குள்ள மலையின் பின்புறம் சென்றால் வேறெங்குமே எளிதில் காண முடியாத வெள்ளை நிற மயில்களைக் காணலாம். காலையும் மாலையும் முருக பக்தர்கள் அவற்றிற்கு உணவு அளிக்கும் காட்சியும் மயில்கள் நடம் புரியும் காட்சியும் இன்றும் பார்க்க முடியும் கண்கொள்ளாக் காட்சியாகும். திருஞானசம்பந்த்ரும் சுந்தரரும் இங்கு வந்து முருகனை தரிசித்து ஒவ்வொரு பதிகம் பாடியுள்ளனர். இங்கு அருணகிரிநாதர் 14 திருப்புகழ் பாடல்களைப் பாடி முருகனைத் துதித்து மகிழ்கிறார். காலம் காலமாக லக்ஷக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வரும் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பிரான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய், கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! நன்றி, வணக்கம்!
திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியாரின் விருந்தோம்பும் பண்பு உலகமறிந்த ஒன்று. தன் கையில் இருந்த அனைத்தையும் வருவோர்க்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கியதால் அவர் செல்வ வளம் குறைந்தது. யாருக்கும் இல்லை என்று சொல்லாத அவர் தனக்கு அந்த நிலை வந்தது கண்டு மனம் வருந்தினார். ஆகவே தனது மனைவியாருடன் அயலூர் சென்று விடலாம் என்று புறப்பட்டார். செல்லும் வழியில் ஓரிடத்தில் தூக்கம் வராமல் படுத்திருந்தார். அப்போது இரட்டையர் என்று புகழப்படும் புலவர்களும் அவருடன் இதர புலவர்களும் அதே இடத்தில் தங்கி இருந்தனர். அவர்கள் தமக்குள் பசி மிகுதியாக இருப்பதையும் சடையப்ப வள்ளலிடம் சென்றால் பசி போகும் என்பதையும் பேசிக் கொண்டனர். எப்போது விடியப் போகிறதோ என்று பேசியவாறே அவர்கள் இருப்பதைப் பார்த்த சடையப்பர் தனது பெயரைச் சொல்லி அவர்கள், ‘பசி தீர எப்போது பொழுது விடியும்’ என்று சொல்வதைக் கேட்டு வருந்தினார். ஆனால் உடனே தன் மனைவியோடு தன் கழனிக்குச் சென்றார். அங்கு விதைத்திருந்த நெல் முளையை அப்படியே வாரி அலம்பி வீட்டிற்குக் கொண்டுவந்தனர் இருவரும்.
அடுப்பில் தீமூட்டி, பதப்படுத்தி குத்தி அரிசியாக்கி அன்னம் முதலியவற்றை அருமையாகச் செய்தார் மனைவியார். புலவர் கூட்டம் அவர் இல்லத்திற்கு வர அனைவருக்கும் அமுது படைத்தார் சடையப்பர். இப்படிப்பட்ட புண்ணியச் செயல் உடைய சடையப்பர் வாழ்ந்தது தொண்டைமண்டலமே என்று புகழ்ந்து கூறுகிறது தொண்டைமண்டல சதகம் தனது 53ஆம் பாடலில்
பாடல் வருமாறு:-
மீனவனாட்டினுஞ் செம்பியனாட்டினும் வில்லவர்கோ
னானவனாட்டினு மிக்கதென்பார்க ளதிசயமோ
கோனவனாட்டின் முளையதமுதாகிற் குலவமுதார்
வானவர்நாட்டினு மிக்கதன்றோ தொண்டை மண்டலமே
பாடலின் பொருள்:-
மீன் கொடியை உடைய பாண்டியனது நாட்டைக் காட்டிலும், சோழனது பொன்னி நாட்டைப் பார்க்கிலும் வில் கொடியை உடைய சேரனது நாட்டைப் பார்க்கிலும் இந்த தொண்டை மண்டலம் சிறந்தது என்று ஆன்றோர் கூறுகின்றனர். இது ஒரு புதுமை அல்ல; ஏனெனில் நள்ளிரவில் வந்த அரிய விருந்தினர்களுக்குக் கழனியில் முளைத்த நெல் முளை அமுதமாகுமானால் பாற்கடல் அமிர்தத்தைக் கொள்கின்ற தேவரது சுவர்க்க நாட்டினும் சிறந்தது அல்லவோ இந்த தொண்டை மண்டலம்!
இந்த சடையப்ப முதலியார் மரபில் அவதரித்தவரே மெய்கண்ட தேவர் ஆவார். அவருக்கு பரஞ்சோதி முனிவர் உபதேசித்து அருளினார். அது முதலாக மெய்கண்ட தேவர் மடம் திருவாவடுதுறை மடாதீனம் கொண்ட பரம்பரை ஆனது.
காஞ்சிபுராணத்தில் வரும் பாடல் இது.
கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணெய்
குயிலாரும் பொழிற்றிரு வாவடுதுறை வாழ் குருநமச்சிவாய தேவன்
சயிலாதி மரபுடையோம் திருமரபு நீடூழி தழைக மாதோ
பொருள் : திருக்கைலாய மலையிலே அருள் வடிவாகிய கல்லால மரத்தின் நீழலிலே தக்ஷிணாமூர்த்தியாக எழுந்தருளியுள்ள சிவபிரானிடம் ஆகமங்களை எல்லாம் கேட்டருளிய நந்திப் பெருமான், அவரை வணங்கி காமிக முதலிய சைவ ஆகமங்களின் ஞான பாதப் பொருளின் உண்மையைப் போதித்தருள வேண்டுமென்று வேண்ட, ரௌரவாகமத்து பன்னிரென்று சூத்திரத்துள் சிவஞான போதம் என்ற ஒரு படலத்தை நந்திப் பெருமானுக்கு சிவபிரான் அருளிச் செய்தார். நந்தி தம் மாணாக்கரான சனத் குமார முனிவருக்கு அருள, அவரும் அவரது சத்திய ஞான தரிசிகளுக்கு அருளினார். அவர் மூலம் பரஞ்சோதி முனிவருக்கும் அது அருளப் பெற்றது.
பரஞ்சோதி முனிவர் திருக்கைலாய மலையிலிருந்து இறங்கி தமிழ் நாட்டில் திருவெண்ணெய் நல்லூரில் சடையப்ப முதலியார் மரபிலே வந்து அவதரித்தார். இரண்டு வயதிலேயே மெய்யுணர்வு பெற்ற சுவேதனப் பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாமம் கொண்ட மெய்கண்ட தேவர் பால் வந்து சிவஞான போதத்தை, தான் சத்தியஞான தரிசிகள் பால் கேட்டவாறே வகுத்து அருளிச் செய்தார். மெய்கண்ட தேவர் சகலாகம பண்டிதர் அருள் நந்தி சிவாசாரியாருக்கும் அவர் பெண்ணாகடத்தில் அந்தணர் மறைஞான சம்பந்த சிவாசாரியருக்கும், அவர் திருக்கொற்றங்குடியில் வசித்து, சம்ஸ்கிருதத்தில் இருந்த பௌஷ்கராகமத்துக்கு வியாக்யானம் முதலிய எட்டு சைவ சித்தாந்தம், கோயிற்புராணம், திருத்தொண்டர் புராண சாரம், சேக்கிழார் நாயனார் புராணம், திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை உள்ளிட்ட பல நூல்களை இயற்றிய உமாபதி சிவாசாரியருக்கு அருளினார். உமாபதி சிவாசாரியர், நமச்சிவாய தேவருக்கு உபதேசித்து அருளினார். அவர் நவகோடி நித்தவாசபுரம் என்னும் திருநாமத்தை உடைய திருவாவடுதுறையில் சித்த மூர்த்திகளாக எழுந்தருளியிருந்த சித்தர் சிவப்பிரகாச தேசிகருக்கு உபதேசித்து அருளினார். அவரோ திருமூலனூரிலே பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே பிறந்து பிரமசாரி ஆசிரமத்திலேயே துறவறத்தை மேற்கொண்ட நமச்சிவாய மூர்த்திகளுக்கு உபதேசித்து அருளினார். அது முதல் திருவாவடுதுறை மடாதீனம் கைலாய பரம்பரை என்ற பெயர் கொண்டு புகழடைந்து விளங்கி வருகின்றது.
இப்படி திருவெண்ணெய்நல்லூரில் சடையப்ப முதலியார் மரபிலே தொடங்கி, வந்தது இந்த சைவாதீனம். இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் சடையப்ப முதலியார் வசித்த திருமாளிகை சடையப்பர் மடம் என்றும் மெய்கண்ட தேவர் மடம் என்றும் பிரசித்தமாக வழங்கி வரப்படுகின்றது.
***
tags- சடையப்ப முதலியார் , விருந்தோம்பும் பண்பு, திருவாவடுதுறை , மடம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
compiled from popular newspapers of Tamil Nadu
உலக இந்து சமய செய்தி மடல் 16-5-2021
இன்று May 16 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல்
2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
கங்கோத்ரி கோவில் திறப்பு
உத்தரகண்ட் மாநிலத்தலுள்ள பிரசித்தி பெற்ற கங்கோத்திரி கோவில் நேற்று திறக்கப்பட்டது. வைரஸ் நோய் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
‘சார் தாம்’ என்று அழைக்கப்படும் கோவில்களில் யமுனோத்ரி நேற்று முன்தினம், திறக்கப்பட்டது.
கேதார்நாத் கோவில் நாளை மே 17-ஆம் தேதியும்,
பத்ரிநாத் கோவில் மே 18-ம் தேதியும் திறக்கப்படுகிறது. பனிக்காலத்தில் இந்த 4 கோவில்களும் மூடப்படுவது வழக்கம்.
கங்கோத்திரி கோவில் திறப்பட்டவுடன் முதல் அர்ச்சனை நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியின் பெயரில் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது
XXX
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்கள் சார்பில் அருகில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு உத்தரவின்பேரில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது
கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
xxxx
ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் நியமன
தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டார். அதே போன்று திருநெல்வேலி கமிஷனர் அன்பு உள்பட, ஐந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
xxxx
கடும் எதிர்ப்பு எதிரொலி: ஸ்ரீரங்கம் ஜீயர் பதவி நியமன அறிவிப்பு ரத்து
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயர் 51-வது பட்டத்துக்கு விண்ணப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு விடுத்த நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராமானுஜ மடத்தின் 50வது பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் 2018 ஜூலை 11ம் தேதி ஆச்சார்யன் திருவடியை அடைந்தார்.
அதன்பின் ஜீயர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி,
‘திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயர் 51வது பட்டம் காலியாவுள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, இந்து தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராகவும், கோவிலின் பழக்க வழக்கங்களையும் அனைத்துவித பூஜைகளையும் ஆகமம் மற்றும் அனைத்து சம்பிரதாயங்களையும் அறிந்தவராகவும், திருவிழா மரபுகள், நாலாயிர திவ்யபிரபந்தம், வேதபாராயணம் மற்றும் திருவாராதன கிரமங்கள் தெரிந்தவர்கள் தகுதிவாய்ந்தவர்கள்.
இவர்கள், ஜூன் 8ம் தேதி மாலை 4:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்’ என, இந்து சமய அறநிலையத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சியினரும், சமயத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஜீயர் நியமனம் என்பது அரசுப் பணி அல்ல. ஜீயர் நியமனத்தை அந்த மடத்தின் சீடர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் அரசுத்துறை தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இந்த அறிவிப்பினை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.
xxxxx
ஸ்ரீ சத்யசாய் அமுதம்‘ திட்டத்தில் இலவச உணவு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தியுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள்
சார்பில், ‘ஸ்ரீசத்ய சாய் அமுதம்’ என்ற திட்டத்தில், வீடு தேடிச் சென்று, ஏழு நாட்கள் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
‘உலகில் வாழும் அனைவரும் சகோதர, சகோதரிகளாக வாழுங்கள். அன்பை மட்டும் தவறாமல் செலுத்துங்கள். நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தும்போது, இறைவன் உங்களிடத்தில் அதைவிட பல மடங்கு அதிகமாக அன்பு செலுத்துகிறார். தேசத்தின் மீது பாசம் செலுத்துங்கள்’ என்பது, பகவான் ஸ்ரீ சாய்பாபா அறிவுரை
xxx
திருப்பதியில் ஊரடங்கால் தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் தேதியை மாற்றிக் கொள்ளலாம்
திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கோவில் உண்டியல் வருமானமும் வெகுவாக சரிந்துள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக ஆன்லைனில் ரூ.300 டிக்கெட்டில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் வர முடியாத
சூழல் நிலவி வருகிறது.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
xxx
ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார்., திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவருக்கு தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி ஆசிர்வதித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில்
வேத பண்டிதர்கள், ஸ்டாலினின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்தனர்.
Xxxx
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி ரத்து
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மே14-ந் தேதி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து.வைத்தார் .19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் கேரள அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
சபரிமலை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
xxxx
ஆர்.எஸ்.எஸ்.சொற்பொழிவு நிகழ்ச்சி
கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும் மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சமூக ஊடகங்களில் முக்கிய பிரபலங்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்துகிறது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.,ன், கொரோனா எதிர்ப்புக் குழு அமைப்பாளரான, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் கூறியதாவது:
மக்களிடம், கொரோனா பயங்கர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்மறையான எண்ணங்களையும் நம்பிக்கையற்ற மனோபாவத்தையும் உருவாக்கியுள்ளது.இவற்றை போக்கி மக்களிடம் தன்னம்பிக்கை, தைரியத்தை ஏற்படுத்த, ‘நேர்மறை எல்லையில்லாதது‘ என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி, ஆர்.எஸ்.எஸ்.,ன் அங்கமான விஷா சம்வாத் கேந்திராவின் ‘பேஸ்புக், யுடியூப்‘ ஆகியவற்றுடன், நுாற்றுக்கும் மேற்பட்ட வலைதளங்களில் உலகம் முழுதும் ஒளிபரப்பாகும்., ‘விப்ரோ‘ நிறுவனர் அசீம் பிரேம்ஜி, சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘வாழும் கலை‘ ரவிசங்கர் ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்துவர்.
இரண்டாவது அலை பரவல் ஏன்? மோகன் பாகவத் விளக்கம்!
”கொரோனா முதல் அலை பரவல் குறைந்த பின், அரசு நிர்வாகமும், மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டதால் தான் இரண்டாவது அலை பரவியது,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும், மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், ‘நேர்மறை எல்லையில்லாதது‘ என்ற தலைப்பில், ‘ஆன்லைனில்‘ தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: கொரோனா முதல் அலை பரவிய போது, அதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை, மக்கள் முழுமையாக பின்பற்றினர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதை அரசு நிர்வாகமும் கண்காணித்து உறுதி செய்தது. முதல் அலை பரவல் குறைந்ததும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில், மக்கள் மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் அலட்சியம் காட்டியது. இதனால் தான் இரண்டாவது அலை தீவிரமாக பரவியுள்ளது.
மூன்றாவது அலை பற்றியும் பேசப்படுகிறது. இதற்கு நாம் பயப்படக் கூடாது. நாம் ஒற்றுமையாக எழுந்து நின்றால் கொரோனா சவால்களை முறியடித்து விடலாம். நம்பிக்கையுடன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், கொரோனாவை வென்று விடலாம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வதை விடுத்து, தொற்றிலிருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும். தைரியத்தை கைவிடாமல் உறுதியாக இருந்தால் நெருக்கடியிலிருந்துவிரைவில் மீள்வோம்.இவ்வாறு அவர் பேசினா
XXXXX
தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்
தேனி வேதபுரீ சித்பவானந்த ஆஸ்ரமத்தின் பீடாதிபதியும், சுவாமி தயானந்த சரஸ்வதி பீடத்தின் கீழ் நிறுவப்பட்ட தர்ம ரஷண ஷமிதி இயக்க மாநிலத் தலைவருமான
ஓங்காரநந்த ஸ்வாமி சென்ற திங்கட்கிழமை மாரடைப்பால் மகா ஸித்தி அடைந்தார். இவரது மறைவு ஹிந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். அவருக்கு வயது 62.
கோவை பேரூரை சேர்ந்தவர் மனோகரன். அங்கு பள்ளிப்படிப்பை முடித்த இவர் பின்னர் வேதங்களை கற்றுத்தேர்ந்தார். ஸ்ரீசித்பவானந்தனரின் இறுதி சீடர் ஆனார். 27 ஆண்டுகளுக்கு முன் தேனி வேதபுரீயில் சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். பின் ஓங்காரநந்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். சனாதன தர்மத்தின் வழிகாட்டிகளில் தற்காலத்தில் மிகப்பெரும் பங்காற்றியவர். ‛திருக்குறளும் கீதை’யும் என்ற தலைப்பில்
அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பிரசித்தி பெற்றவை. தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிய ‛தர்ம ரஷண சமிதி’யின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று, எண்ணற்ற பணிகள், குறிப்பாக ஏராளமானோரை தாய் மதத்திற்கு திரும்ப வைத்த பெரும்பங்கு இவருக்கு உண்டு.
ஓங்காரநந்த ஸ்வாமிகளுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட சீடர்கள் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் உள்ளனர். மாரடைப்பு காரணமாக அவதியுற்றவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மகா ஸித்தி அடைந்தார்.
பகவத் கீதை, உபநிடதங்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமாவனர், பாரதியார் பாடல்களின் அர்த்தங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி விளக்கினார். திருக்குறளின் சிறப்பை அடிக்கடி குறிப்பிடுவார்.
ஜாதி, மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கடந்து அனைத்து மக்களிடம் அன்பாக பழகினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவிய பூஜ்ய ஸ்ரீ பரமார்த்தானந்தாவிடம் சன்னியாசம் பெற்றார். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சேவா சமிதி, வேதாந்தா சாஸ்திர பிரசார அறக்கட்டளை மூலம் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொண்டார்.
இரவில், தேனி ஆஸ்ரமத்திற்கு, சுவாமிகளின் புனித உடல் வந்தது. புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவில், தேனி குரு தட்சிணாமூர்த்தி கோவிலைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின், உடல் சப்பரத்தில் ஏற்றப்பட்டு, ஆஸ்ரமத்தை சுற்றி, குருதட்சிணாமூர்த்தி கோவில் எதிரே, நித்ய ஆன்ம சாந்திக்கான சமாதிக்கு கொண்டு வரப்பட்டது. ஆஸ்ரம நிர்வாகி பரசுராமன் இறுதி சடங்குகள் செய்ய, சுவாமிகளின் சீடர்கள், வேத விற்பன்னர்கள், ஆஸ்ரம நிர்வாகிகள் வேத மந்திரங்கள் முழங்க, ஆன்ம நித்ய சாந்தி பூஜைகள் நடந்தன.
‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பக்தர்கள் ஒத்துழைத்து, வீட்டிலிருந்தே வழிபட்டு கொள்ளலாம். ஸித்தி அடைந்த சுவாமிகளுக்கு, தொடர்ந்து, 16 நாட்கள் பூஜைகள் நடக்கும்’ என, ஆஸ்ரம நிர்வாகி நாராயணன் தெரிவித்தார்.
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ,
ஆர்.எஸ்.எஸ்., மாநிலத் தலைவர் (தென்தமிழகம்) ஆடலரசன் ஆகியோர் இரங்கல் செய்திகளை வெளியிட்டனர்
லண்டனிலிருந்து நேற்று சனிக்கிழமை ஒரு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது ; சுவாமிகளின் பக்தர்கள் புகழஞ்சலி செலுத்தினர்
Xxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………
While the Yamunotri temple opened on May 14, Kedarnath will open on May 17 and Badrinath on May 18.
XXXXXXXXXXXXXX
Om Namah Shivaya’: Israelis show solidarity with India amid raging Covid wave
As India continues to battle the second wave of the Covid-19pandemic, many countries have come forward to show solidarity and offer help. Amid the aid and wishes pouring in from around the world, a video of people in Israel chanting ‘Om Namah Shivaya’ for the well-being of the country has gone viral on social media.
The video was shared by Pawan K Pal, an Indian diplomat in Israel, on his Instagram page, along with
a caption that read, “When whole Israel unites to give you a ray of hope.” In the clip, which has now garnered over one lakh views, hundreds of people are seen sitting at Habima Square in Tel Aviv and chanting the mantra.
Once shared online, it did not take long for the clip to go viral and be flooded with people commenting on the post. “Thank you, Israel 🇮🇱💗 This is a beautiful gesture 🥺. Good to see Israel is covid free,” read one
of the many comments on the viral clip.
xxxxx
RSS launches campaign to counter Covid ‘Dooms Dayers’
People, Government Became Negligent After First Covid Wave”: RSS Chief
Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat said today that amid these testing times of the Covid pandemic, society must remain hopeful.
Taking part in a webinar — “Positivity Unlimited” — organised in the context of the pandemic, Bhagwat said,
“The pandemic is testing our patience and character. We will come out triumphant.” He said India had
come out of many difficult situations in the past. “We should forget our differences. It is not the time for fault-finding,” said the Sangh chief. Pitching for helping the needy, he said, “We have to ensure poor people get food.”
Bhagwat called for caution and adherence to Covid-appropriate behaviour. He said the present situation arose as “we took things lightly after the first wave”. “Experts had cautioned about the second wave, but we became lax,”
he said.
On experts predicting a third wave, he urged people to be prepared for a good fight. “We have to win,” he said.
Rashtriya Swayamsevak Sangh (RSS) has launched a massive nationwide campaign to provide relief to victims as well as counter an atmosphere of “negativity”.
The RSS’ Sar Karyavah (general secretary) Dattatreya Hosabale had recently cautioned that anti-Indian elements could take advantage of the prevailing situation in wake of the second Covid-19 wave that has brutally impacted the country.
Thus the RSS has decided to consciously promote and propagate positive developments and success stories around Covid-19.
This talk series is the first of its kind. Before the finale it would be preceded by a series of addresses by a number of spiritual gurus and well-known personalities such as Jaggi Vasudev, Sri Sri Ravi Shankar.
The talk is being organised under the banner of a newly formed forum called Covid Response Team (CRT), which is headed by Retired Lt Gen. Gurmeet Singh.
XXXX
HINDU LIVES MATTER- DEMONSTRATIONS AROUND THE WORLD
Indian-American diaspora hold rallies against post-poll violence in West Bengal
Protestors carried placards reading “Hindu Lives Matter”, “Protest Against Hindu Genocide” to draw attention to the killings that followed soon after the poll results.
Non-resident Indians, including the Bengali diaspora, have staged protests in more than 30 American cities, condemning the post-poll result violence in West Bengal.
Several incidents of violence were reported in West Bengal after the announcement of assembly poll results
on May 2.
Protestors carried placards reading “Hindu Lives Matter”, “Protest Against Hindu Genocide” to draw attention to the killings that followed soon after the poll results.
Judhajit Senmazumdar, a technology entrepreneur from Silicon Valley who frequently travels to Bengal, said
“After the results were announced, my friends and I got frantic calls for help from people facing targeted
attacks; shops were being looted and bombs were being thrown inside houses,”
The anguish coalesced into a spontaneous protest in the major cities of the US, the UK and many other locations.
The protestors demanded “justice and a probe” into the widespread violence in West Bengal.
“My mind recoils at the manner in which Hindu women have been dragged by the hair, flung on the floor, battered and raped,” said Houston-based author Sahana Singh.
The TMC, however, has denied the charges.
Chief Minister Banerjee had earlier asked people to show restraint and not be involved in any form of violence.
Saffron flags and posters appeared in Basingstoke in the United Kingdom with ‘Demonstration against the
genocide of Hindus’ and ‘Hindu Lives Matter’.
XXXX
Blow conch shells to keep Covid at bay say Yoga experts
THIS IS A NEWS REPORT FROM ASSAM TRIBUNE NEWSPAPER.
Yoga experts are now advising people to blow conch shells in order to strengthen the respiratory system.
The age-old practice of blowing conch shells, known as ‘shankha’, after prayers, is said to help in fighting
Covid by enhancing the lung power.
Yoga expert, Ratan Sinha of Prayagraj, said, “Blowing a conch shell is a part of Hindu and Buddhist tradition. Our elders blew the ‘shankh’ regularly and their lungs were strong. They rarely suffered from respiratory problems.
On Sinha’s advice, people in three Lucknow neighbourhoods at Stanley Road, Darbhanga and Civil Lines area have started blowing conch shells on a regular basis.
“At 6.a.m every day, we start blowing the ‘shankh’ in our houses and everyone joins in form the confines of their homes, said G.P. Singh, an octogenarian who lives on Stanley Road.
He insisted that the blowing of conch shells also dispels all the negative energy in the surroundings.
The members of the group admit that there is NO scientific evidence to prove that blowing conch shells helps prevent Covid-19 but they say it definitely helps one in lung exercise.
XXXX
Leicestershire crematorium is first in Britain to have a dedicated shrine to Shiva
A Leicestershire crematorium is believed to be the first in the country to have a dedicated shrine to
Shiva as part of its commitment to serve the diverse local community. Great Glen Crematorium is part of Westerleigh Group, the UK’s biggest independent owner and operator of crematoria and cemeteries,
with 35 sites nationwide. The white marble statue of Shiva was donated by local businessman Sailesh Raja.
“Most crematoriums have temporary shrines, but I believe this was the first to have a permanent one. Everyone who has heard about this is very appreciative; people have told me that because of this, their first approach for cremation will be Great Glen Crematorium, said Sailesh Raja.
xxxx
Swami Omkarananda, Vedic scholar attains Siddhi
Vedic scholar Swami Omkarananda , an authority on Thirukkural and many other Tamil scriptures and
founder of Sri Swami Chidbhavananda Ashramam at Theni, passed away on Monday at a private hospital at Madurai. He was undergoing treatment for coronavirus infection. Swami Omkarananda has also been
the pontiff of Sri Bhuvaneswari Avadhuta Vidyapitham at Pudukottai.
Swami’s mortal remains were laid to rest in front of his Ashramam at Theni according to Sastras on Monday
night itself.
According to the Ashramam sources, Swami Omkarananda, when he was alive, chose the place for his
Samadhi and gave directions to his disciples on how he should be laid to rest. Special poojas and other
rituals will be arranged in the coming 10 days, they said.
Born as Manoharan alias Goshteswara Sharma to Vaidyanatha Ganapadi and Alamelu Ammal near Porur, Coimbatore in 1956, he was attracted to the works of Swami Vivekananda, Bhagavad Gita, Upanishads and other scriptures at a very young age.
Born in a family steeped in tradition and culture, he adopted the Vedic lifestyle from an early age. An erudite scholar par excellence, he was well versed in both the Vedas. His eloquence and mastery, both in Tamil and
Sanskrit, have earned accolades and words of praise, from learned Pandits across the country.
In 1979, he left home and remained in meditation for 21 days in a hillock near Karamadai near Coimbatore.
During this period, he took a firm decision to become a monk. Swami had the Sanyasa Diksha (initiation into spiritual life) from Swami Chidbhavananda, founder of the Sri Ramakrishna Tapovanam, Thirupparaithurai who gave him the name Swami Omkarananda.
Later, Swami Omkarananda studied Vedanta under Pujyasri Swami Paramarthananda, one of the foremost
disciples of Swami Dayananda Saraswati. For over the past 30 years, he has been spreading the Vedantic
teachings, in spiritual camps held across the globe.
Swami has established Vedanta Sasthra Prachara Trust, through which he trains his students and devotees, on the spiritual ways of life. He expounded the essence of some of the sacred texts in Tamil, such as Thevaram, Thiruvachakam, Thirumandiram, Thayumanavar’s hymns, Bharatiyar’s songs and Thirukkural, in particular.
Devotees of Swamiji in London and abroad paid homage in a special programme held yesterday via zoom
and face book.com
xxxxx
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்!
ச.நாகராஜன்
துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் தமிழ் மீது அளவற்ற காதல் கொண்ட சிவபக்தர். இவரைப் பற்றிய சுருக்கமான வரலாறு இங்கு தரப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் வேளாளர் மரபில் குமாரசாமி தேசிகர் என்பவர் குருவாக விளங்கி வந்தார். இவருக்கு சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர், ஞானாம்பிகை என நான்கு மக்கள் பிறந்தனர். சிவப்பிரகாசரின் இளமைப் பருவத்திலேயே அவரது தந்தையாரான குமாரசாமி தேசிகர் மறைந்தார்.
அதன் பின்னர் அவர், தமது சகோதரர்களோடு திருவண்ணாமலை சென்றார். அங்கு தெற்கு வீதி திருமடத்தில் இருந்து கற்க வேண்டிய அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். இயற்கையிலேயே கவி பாடும் ஆற்றல் அவருக்கு அமைந்திருந்தது.
பின்னர், பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம் சென்று அங்கு சிவ பூஜையைச் சிறப்பாகச் செய்து வந்தார். அந்த ஊரின் பிரமுகரான அண்ணாமலை ரெட்டியார் அவரிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டார். அங்கேயே இருக்குமாறு அவர் வேண்ட அப்படியே சில காலம் அங்கிருந்தார் சிவப்பிரகாசர்.
பின்னர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சிந்துபூந்துறையில வாழ்ந்து வந்த தருமபுர ஆதீன வெள்ளியம்பல சுவாமிகளிடம் இலக்கண இலக்கியம் கற்க வேண்டும் என்ற ஆசையுடன் அவரை அணுகினார். அவரது தமிழறிவை சோதிக்க எண்ணிய ஆதீனம் ஒரு பரிட்சையை வைத்தார்.
“‘கு’வில் ஆரம்பித்து ‘கு’ என்ற எழுத்தில் முடிய வேண்டும். இடையில் ‘ஊருடையான்’ என்ற சொல் வர வேண்டும். இறைவனைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடுக” என்றார் அவர்.
உடனே சிவப்பிரகாசர்,
“குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு – வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னும் உலகு” என்னும் வெண்பாவை இயற்றிக் காட்டினார்.
இதனால் பெரிதும் மகிழ்ந்த ஆதீனகர்த்தர் அவருக்கு முறையாக இலக்கண பாடங்களைக் கற்பித்தார்.
இதற்கிடையில் அவரது குருவான வெள்ளியம்பல சுவாமிகளை அவமதித்த புலவரை திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி பாடி, வாதில் வென்று அவரை அடிமையாக்கித் தன் குருநாதரிடம் அழைத்துக் கொண்டு வந்து ஒப்படைத்தார்.
அண்ணாமலை ரெட்டியார் அவரை மணமுடிக்குமாறு வேண்டினார். ஆனால் அதற்கு சிவப்பிரகாசர் உடன்படவில்லை.
ஆனால் அவரது தம்பிகள் திருமணம் செய்து கொள்ள இசைந்தனர். அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்.
இவர் இயற்றிய நூல்கள் ஏராளம். சுமார் 34 நூல்கள் பற்றி நமக்குத் தெரிய வந்துள்ளது.
கற்பனைக் களஞ்சியம் என்றும் கவி சார்வ பௌமா என்றும் நன்னெறிப் பிரகாசர் என்றும் இவர் போற்றிப் புகழப்படுகிறார். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து சிவபதம் அடைந்தார். வாழ்வின் இறுதிக்காலத்தில், புதுச்சேரிக்குமேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ளநல்லாற்றுாரில்தங்கியிருந்து அங்கேயே அடக்கமுற்றார்.
இந்த நூல் பற்றிய கட்டுரை தனியே வெளியிடப்பட்டுள்ளது. அதைக் காணவும்.
இயேசு மத நிராகரணம்
இந்த நூல் கிறிஸ்தவ மதக் கொள்கைகளை ஆதாரங்களுடன் மறுக்கும் நூல். இது இப்போது கிடைக்கப் பெறவில்லை. சிவப்பிரகாசர், ராபர்ட் டி நோபிளுடன் வாதம் புரிந்ததாகச் சிலர் கூறுவர்; இல்லை வீரமாமுனிவருடன் அவர் வாதம் புரிந்தார் என்று மாறுபட்ட கருத்தும் கூறப்படுகிறது.
நால்வர் நான்மணி மாலை
சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரைப் போற்றி எழுதப்பட்ட நூல் நான்மணி மாலை. காப்புச் செய்யுள், திருஞானசம்பந்தரைப் போற்றி 10 நேரிசை வெண்பாக்கள், திருநாவுக்கரசரைப் போற்ரி 10 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள், சுந்தரரைப் போற்றி 10 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள், மாணிக்கவாசகரைப் போற்றி 10 நேரிசை ஆசிரியப்பாக்கள் ஆகியவற்றைக் கொண்டது இந்த நூல். எடுத்துக்காட்டிற்கு கீழே 4 பாடல்கள் தரப்படுகின்றன.
என்ற கடவுள் வாழ்த்துடன் இன்னும் 40 நேரிசை வெண்பாக்களைக் கொண்டது இந்த நூல். எடுத்துக்காட்டிற்கு ஒரு வெண்பாவைப் பார்ப்போம். (36வது வெண்பா)
முதல் இரண்டு அடிகளில் தான் கூற வந்த கருத்தைக் கூறும் இவர் அடுத்த இரு அடிகளில் அதற்கான தக்க உவமை ஒன்றைக் கூறித் தன் கருத்தை விளக்குவது படிப்போர்க்கு இன்பம் பயக்கும்.
இந்த நூல் 25 கதிகளைக் கொண்டது. 1158 பாடல்கள் இதில் உள்ளன. கற்பனை வளம் நிரம்பிய இந்த நூல் அரிய பல உண்மைகளைத் தெளிவுற விளக்கும் நூல். அனைவரும் விரும்பிப் படிக்கும் நூல் இது.
சோணசைல மாலை
திருவண்ணாமலையில் இருந்த போது இயற்றப்பட்ட நூல் இது.
சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சுவிடுதூது,
நெஞ்சு விடு தூது என்பது 96 பிரபந்த வகைகளில் தூது பற்றிய நூல் ஆகும். உமாபதி சிவம் உள்ளிட்ட பெரியோர் பலரும் நெஞ்சைத் தூதாக விட்டு நூல்கள் இயற்றியுள்ளனர். சிவபிரகாசரும் தூது நூல்களில் ஒன்றாக அமையும் இந்த சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சு விடு தூது என்னும் நூலை இயற்றியுள்ளார்.
இவர் இயற்றிய இதர சில நூல்கள்
சிவநாம மகிமை
அபிடேக மாலை
நெடுங்கழி நெடில்
குறுங்கழி நெடில்
நிரஞ்சன மாலை
கைத்தல மாலை
சீகாளத்தி புராணத்தின் கண்ணப்பச் சருக்கம்
நக்கீரச் சருக்கம்
கூவப்புராணம்,
பழமலைஅந்தாதி,
பிட்சாடன்நவமணிமாலை,
பெரியநாயகியம்மைவிருத்தம்,
பெரியநாயகியம்மைக்கட்டளைக்கலித்துறை,
வேதாந்தசூடாமணி,
சிவஞானபாலையதேசிகர்தாலாட்டு,
தர்க்கபரிபாஷைசதமணிமாலை,
சிவப்பிரகாசவிகாசம்,
திருவெங்கைஅலங்காரம்,
திருவெங்கைக்கலம்பகம்,
திருவெங்கையுலா,
திருவெங்கைக்கோவை,
சிவத்தொண்டில் சிறந்து விளங்கி பல தமிழ் நூல்களை இயற்றித் தமிழுக்கும் சைவத்திற்கும் ஏற்றமளித்த சிவப்பிரகாசர் பொன்னடி போற்றுவோம்; அவர் புகழ் வளர்ப்போம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Pranams to Swami Omkarananda Ji
சுவாமிஜியின் அன்பர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பல அன்பர்கள் இந்நிகழ்ச்சியில் ZOOM, FACEBOOK.COM வழியாககலந்து கொண்டு சுவாமிகளுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
லண்டனிலிருந்து சனிக்கிழமை மே 15-ம் தேதி ஒளி பரப்பான ஸ்ரீ ஓம்காராநந்தா அஞ்சலி நிகழ்ச்சியில் எனது இரண்டு பழைய கட்டுரைகளை வாசித்தேன் (இணைப்பில் காண்க)
லண்டனில் நான் கற்ற பாடம் – என்ற தலைப்பில் 2017-ம் ஆண்டில் இந்த பிளாக்கில் எழுதிய விஷயத்தையும் ZOOM (Z சூம்) ஒளிபரப்பில் சொன்னேன் .
லண்டனில் நான் கற்ற பாடம்………..
“பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாவட்டம் தேனியில் இருந்து சுவாமி ஓம்காரானந்தா வந்தார். அவர் இரு முறை லண்டனுக்கு வந்த போதும் நான் சார்ந்திருந்த அமைப்புகள் மூலம் பல இடங்களில் கூட்டங்கள் ஏற்பாடு செய்தேன் அவர் பெரிய தத்துவ வித்தகர். உண்மைச் சாமியார்; நான் கூட்டம் ஏற்பாடு செய்த கோவில்களில் ஒன்று லூயிஷாம் என்னும் இடத்திலுள்ள சிவன் கோவில்; இலங்கைத் தமிழர்களால் சிறப்பாக நடத்தப்படும் கோவில்.
ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தால் அதற்கு முதல் நாள் அவர்களுக்கு நினைவுபடுத்தி “எப்போது அழைத்து வரலாம், எவ்வளவு நேரம் பேச வேண்டும், என்ன வயதுக்கார ர்கள்? எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்? என்றெல்லாம் விசாரித்து பேச்சாளர்களுக்கு சொல்லுவது என் வழக்கம். அதன்படி சிவன் கோவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளரை டெலிபோனில் அழைத்து விசாரித்தேன்.
“தம்பி நாளை காலை பத்து மணிக்கு சுவாமிகள் பேசலாம். பின்னர் கேள்விகள் கேட்டால் பதில் சொல்லட்டும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் இருந், தால் போதும்; அப்புறம் கோவில் நிர்வாகிகளும் குருக்கள்களும் மரியாதை செய்வார்கள் என்றார். யார் வருகிறார்கள் என்று கேட்டேன்.
“அதுவா, நம்ம தமிழ் ஸ்கூல் பிள்ளைகள்தான். ஆரம்ப வகுப்பு முதல் பள்ளி இறுதிப் படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர். ஆனால் பெருமளவு சின்னக் குழந்தைகள்தான்” என்றார்.
எனக்கு தூக்கிவாரி போட்டது. டெலிபோனில் அதைக் காட்டவா முடியும்? பெரிய பதட்டத்துடன் “அடக் கடவுளே, அவர் பெரிய அறிஞர். வேதங்கள், உபநிஷத்துகள், கீதை பற்றி பெரியோர்களுக்காக பேசக்கூடியவர். அரிய வாய்ப்பை நழுவவிடுகிறீர்களே” — என்றேன்.
அவரோ நிதானமாக ,
“தம்பி; நீங்கள் அவர் ஒரு நல்ல , உண்மையான சந்யாசி என்று சொன்னதால்தான் இப்படி செய்திருக்கிறேன். எங்கள் பிள்ளைகள் பார்ப்பது எல்லாம் சினிமாவில்—தெய்வீகத் திரைப்படங்களில்வரும்நடிப்புசந்யாசிகளைத்தான்பார்த்திருக்கிறார்கள்; நிஜ வாழ்விலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. நாங்கள் சொல்லினால் விளக்கி புரியவும் வைக்க முடியாது. ஆகையால் கூப்பிட்டுக் கொண்டு வாருங்கள் அவரைப் பார்த்தால் போதும். அவர் எதுவும் பேசலாம்; ஆசியைகளுக்கும் கோவிலுக்கு வரும் மற்ற பெரியோர்களுக்கும் அறிவித்திருக்கிறோம் அவர்களும் வருவார்கள்” என்றார்.
என் கண்களில் நீர் வராத குறைதான். அவருடைடய அணுகுமுறை என் உள்ளத்தை உருக்கிவிட்டது. நானும் ஒரு பாடம் கற் றேன். ஒரு தனி மனிதன் நல்லவனாக இருந்தால், ஆன்மீக வாதியாக இருந்தால் அவருடைய தோற்றம் எத்தனை இளம் உள்ளங்களின் அடி மனதில் — பிஞ்சுப் பருவத்தில் – பதியும் என்று அந்த கோவில் நிர்வாகிக்கு இருந்த அனுபவ அறிவு எனக்கு இல்லாததை உண ர்ந்தேன்.
சுவாமிகளும் எல்லா வயதினரையும் வசப்படுத்தும் — பரவசப்படுத்தும் — அருளுரை வழங்கினார்.
–SUBHAM–
tags- Sri Omkarananda, in London, ஓம்காராநந்தா ,அஞ்சலி,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -50
Xxxx
Panini Sutra 5-1-122
Pruth = Tamil Perithu = English Big
Mradimaa = mruthu, meththu, meththai/ mattress
தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் மூலம் ஒன்றே என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் கூறுகிறார். அவருக்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர் ஆகியோரும் அதையே செப்பினர். நான் இவ்விரண்டு மொழிகளிலிருந்துதான் உலக மொழிகள் தோன்றின என்று நூற்றுக்கும் மேலான கட்டுரைகள் எழுதியுள்ளேன். இதோ மேலும் ஒரு சான்று
ப்ருத் என்பதை பெரிது என்ற பொருளில் பாணினி இந்த சூத்திரத்தில் கொடுக்கிறார் .
Fernandes who caught 10,000 snakes in the past, died of Covid Virus in a few days!
xxx
5-1-124
Panini says Guna Vachana, Brahmana, Karma
All these words are used in Tamil until this day
Guna, Karma are in Sangam literature and Tirukkural.
Valluvar, author of Tirukkural, was a great Sanskrit scholar.
He was bold enough to use the Sanskrit word Gunam as the initial word in a Kural.
It is used in other ancient Tamil literature too.
Please see the list below for full details.
Varttika adds here an example
Chaatur varnyam- though we have the reference to the four castes in Purusasukta of Rigveda , the grouping Four Castes = Chatur varnyam is in Bhagavad Gita and Sangam Tamil literature and later epics Silapaadikaram and Manimegalai
பாணினி சூத்ரம் 5-1-22
5-1-24
குண வசன ப்ராஹ்மண கர்ம — ஆகிய 4 சொற்கள் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பட்டது. இன்றும் நாம் அதை உபயோகிக்கிறோம்.
தமிழ்ப் புலவர்களில் திருவள்ளுவர் மஹா மேதை. மாபெரும் ஸம்ஸ்க்ருத பண்டிதன். வள்ளுவன் துணிச்ச்சலாக தானம் தவம் என்ற பகவத் கீதை சொற்களை குறளில் முதல் சொற்களாக பயன்படுத்துவான்
தானம் தவமிரண்டும் ………………………….
அதே போல துணிச்சலாக
குணம் என்னும் குன்றேறி நின்றார் ……………………………..
என்று பாடுகிறான்.
பாணினியும், பகவான் கிருஷ்ணனும் பயன்படுத்தும் கர்ம என்ற சொல்லையும் மஹா சம்ஸ்க்ருத மேதையான திருவள்ளுவன் பயன் படுத்துகிறான். நாமோ தினமும் சினிமா வசனம் பற்றிப் பேசுகிறோம்.
என்ன ஆச்சர்யம், 2700 ஆண்டுகளாக நம் நாக்கிலும் வள்ளுவன் நாக்கிலும் ஸம்ஸ்க்ருதம் நடமிடுகிறது.
இந்த சூத்திரத்தில் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வார்த்திக நோட்ஸ் / குறிப்புகள் எழுதிய காத்யாயன வரருசி ஒரு முக்கியமான வரியை மேலும் ஒரு இலக்கண ஈடுத்துக்காட்டாக விளம்புகிர்றார். அதுவும் பகவத் கீதை வரியே.
சாதுர் வர் ண்யம் = 4 ஜாதிகள்
இது பாணினிக்கும் காத்யாயனருக்கும் உள்ள கால இடைவெளியைக் காட்டுகிறது. பாணினி இப்படி ஜாதிகளை சேர்த்து குறிப்பிடுவதில்லை. ஆனால் தனித்தனியே மொழிகிறார்.
இந்த நால் வகை ஜாதிகள் புறநானூற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உளது. புற நானூற்றில் ஜாதி –183
நால் வகை வருணம் – சிலம்பு 6-164, , 14-183; மணி .6-56
நால் வேறு தெரு – மது. 522; சிலம்பு- 14/212, 22/110