Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Nineteen Dialogue poems in the Rig Veda spreading over several Mandalas of the Veda shows that Dance and Drama existed at the Vedic period.
Following are the interesting Dialogue poems:
RV.1-165, 170 & 179;
RV.3-33; 4-18, 26/27 &42;
RV.7-33;8-91;9-100
RV.10-10, 28, 51,86,95, 102,108, 124,135
Then we have Vajasaneyi Samhita (Yajur Veda) and Taittiriya brahmana references to Sailusaa which later meant an actor following the tradition of Silaalin, the author of a nata sutra . Sailusaa has the same meaning in the Vedas. Panini referred to nata sutras.
The Natyacharya or the instructor in the theatrical arts was a recognised figure , popular but not approved by the law books. Baudhaayana dharmasutra condemned Natyacharya as a minor defilement.2-25
We have good evidence to state that the drama originated in India during Vedic period. In the beginning dance and drama were inseparable. 100 or 150 years ago drama meant songs with stories. It was easy to memorise them and pass it on to his or her disciples. Later prose was introduced as links between the songs so that one can have a break and start again.
We have evidence in the Tamil epic Silapaadikaram where we have dance and drama elements in the story. Indra festival was the one where the dance of Madhavi was staged. We see in Bharata’s Natya Shastra that the Indra Festival was suggested to enact the dance dramas. More over we read about 11 different dances staged by Madhavi. All those were based on Hindu mythology. Silapaadikaram is dated second century CE . I would date Bharata’s Natya shastra well before this date
Indian drama has no connection with the Greek drama at least in its early stage. We have well defined roles such as a Brahmin as comedian, a director who introduces the drama at the outset. Apart from this we have Bharatavakya (Benedictory Message) at the end. This is the like a national anthem wishing the king a long life and the people and the country a prosperous life. After Alexander’s invasion new elements might have been introduced, because Greeks also had well developed dramas.
Going back in time we have at least 19 dialogue poems in the Rig Veda. Some of the dialogue poems are comparable with the folk dances of the Tamils. During the Holi festival, that is known as Kaman Pandikai in South India, some sexy folk dances were staged in street corners at the dead of night. Tamil epic Silapaadikaram has lot of information about dance dramas . After Rigveda, we have good evidence in Paninis Ashtadhyayi and Kautilya’s Arthasastra. There is a gap of at least three hundred years between the Ashtadhyayi and Arthasastra.
Panini talk about Nata sutras, which scholars think, was a guide book or practical hand book for actors (Ashtadhyayi 4-3-110). We could not expect much from a grammar book like Ashtadhyayi. But Kautilya who came at least 300 years after Panini gives lot of information about dance and drama.
Patanjali , author of Mahabhashya ,refers to the enacted spectacle of Killing of Kamsa by Vasudeva. He refers to actors and fans.
Dance drama did not exist in Krta Yuga. It came only in Treta Yuga gaaccording to Bharata. We see Lava Kusa enacting Ramayana. Later that Kusi Lava become a model for future Kusi Lavas.
The Arthasastra clearly distinguished between actors/Nata, dancers/nartaka, singers/gayakas, instrumentalists/ vadakas, story tellers/vajivana,bards/kusilavas, rope dancers/ plavakas, show men/saubhikas and wandering ministrels/caranas. This shows well developed and differentiated stage of performing arts. This is confirmed by Kautilya’s reference to the diverse arts/ Kala taught to the women who lived by the stage/Rangopajivini.
Kama sutra of Vatsyayana also gave a big syllabus for women with 64 arts. Tamil Sangam Literature mentioned Arya kuuthaadi meaning the pole/rope dancers visiting Tamil Nadu from North India. Silappadikaram also mentioned 64 arts.
Half baked foreigners try to place 1000s of books dealing with subjects from A to Z within four centuries i.e. Second century BCE and second century CE. I is not possible to see such explosion.
But the above information gives us a clear picture of gradual development.
Hindu Music in Panini’s Grammar Book(Post No.7959) | Tamil …
11 May 2020 — Panini called music Silpa, ie.that is an art . Jataka stories called it Sippa in Pali, colloquial form of Sanskrit. In ancient India dance …
Origin of Drama in India, No connection with Greece! (Post No …
12 Mar 2021 — Actually they are all dance dramas enacted after Yagas and Yajnas. Panini and Patanjali say that some yajnas lasted for hundreds of years.
31 Oct 2016 — Krishna danced and played his flute, while women, overcome by his music and his dancing, left home and husband to follow him. Lakshmi, the Hindu …
1 Apr 2015 — It shows that the Vedic society was a happy and prosperous society. Scores of musical instruments are mentioned and scores of ornaments are also …
Panini called music Silpa, ie.that is an art . Jataka stories called it Sippa in Pali, colloquial form of Sanskrit. In ancient India dance and music went …
Paripādal : Suitable for Dance & Music | Tamil and Vedas
24 Feb 2014 — Post No 862 Date: 24 February 2014 By Dr R Nagaswamy Parpādal is a form poetry best suited as a musical composition mainly for dance along …
Rig Veda is a book with over 1000 hymns running to 10,000 mantras running to 20,000 lines; but lot of repetitions are there. But we can expect more from the Rig …
2 Apr 2015 — Dr Nagasamy pointed out also that music and dance are part of Shodasopara (16 Upasaras). The Amarakosa (Sanskrit Thesarus) lists different …
More about Bharatanatya in the Vedas! | Tamil and Vedas
2 Apr 2015 — “I find that almost all forms of classical dances of India like Bharata Natyam, Kathak, Kathakali, Kuchipusdi, Manipuri, Mohini Attam etc are …
15 Jun 2012 — The commentators added wealth of information in their commentaries. … Mohanjadaro points to the antiquity of the classical Bharatanatyam.
7 Oct 2012 — More over it fulfils the desires of the people who practise them. … In the classical dance called Bharatanatyam, there are lot of Mudras …
DIALOGUE POEMS IN THE RIG VEDA (Post No.7737) | Tamil …
24 Mar 2020 — Rig veda is not only the oldest anthology in the world but also it isonly old book with a number of dialogue poems. These conversation poems …
15 Jun 2012 — Silappathikaram is considered the best among the five Tamil epics. Kovalan and Kannaki were the hero and heroine and Madhavi was Kovalan’s …
-subham-
Tags- dance drama, origin, dialogue poems, Rig Veda
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கிலத்தில் ‘பெயில்’ ஆன உலகப் புகழ்பெற்ற இந்திய கதாசிரியர் ஆர்.கே நாராய(ண)ன்
மால்குடி டேய்ஸ் MALGUDI DAYS , ஸ்வாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ் SWAMI AND FRIENDS கதைகள் மூலம் உலகப் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண சுவாமி ஐயர் ஒரு முறை ஆங்கிலப் பரீட்சசையில் தோல்வி அடைந்தார் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா !
தமிழ், கன்னடம் போன்ற இந்திய மொழிகளில் சிந்திப்பதை அப்படியே ஆங்கிலத்தில் அழகு குன்றாமல் நகைச் சுவை ததும்ப எழுதுவதில் மன்னன் ஆர்.கே நாராயண் . உலகப் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர்களை கவர்ந்திழுத்தவர் இவர். கிரஹாம் க்ரீனின் GRAHAM GREENE ஆப்த நண்பர்.
பிறந்த தேதி – அக்டோபர் 1, 1906
இறந்த தேதி – மே 13, 2001
வாழ்ந்த ஆண்டுகள் – 94
சென்னையில் பிறந்த ஆர்.கே.என்., பாட்டியின் கவனிப்பில் வளர்ந்தார். பாட்டியின் கதைகளைக் கேட்டு பிற்காலத்தில் அதே பாணியில் , எளிய நடையில் எழுதினார். சென்னையிலும் மைசூரில் மஹாராஜா கல்லூரியிலும் பயின்றார். பின்னர் ஆசிரியராகப் பணியாற்றினார்.அதற்குப்பின்னர் முழு நேர எழுத்தாளர் ஆனார்.
ராஜம் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார் ; அவர் ஐந்தே ஆண்டுகளில் இறந்தது பெரிய அடியாக விழுந்தது. மறுமணம் செய்துகொள்ள மறுத்தார்.1994-ல் ஹேமா என்ற புதல்வியை இழந்தது இரண்டாவது அடியாக விழுந்தது. பரீட்சைகளில் இரு முறை தோல்வி. அதில் ஓர் முறை ஆங்கிலத்தில்!!
இவருடைய 11 நாவல்கள், மால்குடி என்னும் கற்பனைக் கிராமத்தை தளமாகக் கொண்டது. ஒரு இந்துவுக்கு எவையெல்லாம் மதிப்பும் மரியாதைக்கும் உரியனவோ அவற்றையெல்லாம் மாற்றாரும் மதிக்கும் வகையில் எழுதிய மஹா புருஷன். ஏனைய இந்திய எழுத்தாளர்கள் இந்தியாவைக் கிண்டலும் கேலியும் செய்யும் ஆணவம் மிக்க ஆங்கில அடிவருடிகள்.
வாழ்க்கையின் நிதர்சன உண்மைகள், தார்மீகப் பிரச்சனைகள்/கேள்விகள், மனித நேயம், பழ மைக்கும் புதுமைக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் ஆகியவற்றை இவருடைய படைப்புகள் பிரதிபலித்தன.
இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுடைய இவர் , மறுபிறப்பு, புனர் ஜென்மத்தில் நமிக்கை உடையவர். அவைகளைக் கதைகளிலும் பயன்படுத்தினார். ஒருகாலத்தில் ஆவியுலகத் தொடர்புகளிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
கட்டுரைகள், தன்னுடைய சுய நினைவலைகள், குழந்தைகளுக்கான கதைகள், ஆகியவற்றையும் சிறு கதைகளையும், புதினங்களையும் எழுதி இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
தி கைடு THE GUIDE என்னும் இவருடைய நாவல் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் நகைச்சுவையும் உண்டு; சோகமும் உண்டு. ஒரு மோசடிக்காரன் எப்படி புனிதன் ஆகிறான் என்ற கதை இது.
இவருடைய மால்குடி டேய்ஸ் MALGUDI DAYS கதை டெலிவிஷனில் காட்டப்பட்டவுடன் அதுவரை இவரை அறியாதோரும் இவரை அறிய வாய்ப்புக்கிட்டியது.
ஆர்.கே.என். கதைகளில் அப்பாவி மக்களை சந்திக்கும் அதே நேரத்தில் ஆழமான இந்திய தத்துவத்தையும் அறிய முடியும். அவர் எழுதிய 15 நாவல்களில் மூன்று நாவல்கள் அவரது ஆற்றலின் உச்சத்தை எடுத்துக் காட்டுகின்றன.அவை The Financial Expert (1952), The Guide (1958), and The Man-Eater of Malgudi (1961).
ஏழு சகோதர சகோதரிகளுடன் பிறந்த இவருடைய தம்பி ஆர் கே லக்ஷ்மணன் RK LAXMAN இந்தியாவின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.என். தந்தை ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர். அங்குள்ள புஸ்தகங்களும் , ஆங்கில பத்திரிக்கைகளும் இவருடையய ஆங்கில அறிவை மேம்படுத்தின. வீட்டில் ஆங்கிலம் பேசினால் அதைத் தவறின்றி பேச வேண்டும் என்பது தந்தையின் கண்டிப்பான உத்தரவு .
1930ம் ஆண்டில் பட்டம் பெற்றார். ஆசிரியராக பணியாற்றப்போன ஆர்.கே.என். நாளே நாட்களில் வேலையை விட்டுவிட்டு ஓடிவந்தார்.
1930ம் ஆண்டில் அவர் பாட்டி தேர்ந்தெடுத்த ஒரு நல்ல நாளில் நோட்டுப் புஸ்க த்தைத் திறந்து வைத்துக்கொண்டு மனக் கண் முன்னர் என்ன வருகிறது என்று காத்துக் கொண்டிருந்த நேரத்தில் மால்குடி என்ற போர்டுடன் ஒரு ரயில்வே ஸ்டேஷன் தோன்றியது. அன்று முதல் அதை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டார்.
முதலில் இவர் நண்பர் மூலம் லண்டனில் நாவல்களை வெளியிட பலரை நாடினார் . ஒருவரும் முன்வரவில்லை. அந்த எழுத்துக் காகிதங்களை ஒரு கல்லோடு கட்டி தேம்ஸ் நதியில் மூழ்கடித்து விடுங்கள் என்று நண்பருக்கு எழுதினார். அவரோ கிரஹாம் க்ரீன் GRAHAM GREENE என்ற புகழ்பெற்ற எழுத்தாளரிடம் கொடுக்கவே அவர் ஒரு வெளியீட்டாளர் மூலம் முதல் நாவலை வெளியிட்டார். அப்போது முதல் கிரஹாம் க்ரீன் இவரது குரு ஆனார். எல்லா நாவல்களையும் அவருக்கு அனுப்பி, அவருடைய ஆலோசனைப்படி திருத்தினார். பெயரைக் கூட ஆர். கே. நாராயண் என்று சுருக்கிவைத்தது அவருடைய ஆலோசனையின் பேரில்தான்.
சில முறை இவரது பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அது எட்டாக் கனியானபோதும் உலகப் புகழ் பெற்ற பல இலக்கிய விருதுகளை வென்றார். உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்த நாட்களில் உலகப் புகழ் பெற்ற அத்தனை எழுத்தாளர்களையும் சந்தித்தார். இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்த புகழ்மிகு எழுத்தாளர் ஆர்.கே.நாராயண்
இவருடைய படைப்புகள் –
1935 – SWAMI AND FRIENDS
1937 – THE BACHELOR OF ARTS
1938- THE DARK ROOM
1945 – GRATEFUL TO LOVE AND DEATH
1949- THE PRINTER OF MALGUDI
1958- THE GUIDE
1961- THE MAN EATER OF MALGUDI
1967- THE VENDOR OF SWEETS
1977- THE PAINTER OF SIGHNS
1982- MALGUDI DAYS
1985- THE BANYAN TREE AND OTHER STORIES
1986- THE TALKATIVE MAN
1990- THE WORLD OF NAGARAJ
1992- GRANDMOTHER’S TALES
இந்தியாவின் சாஹித்ய அகாடமி விருது, பத்மபூஷன் விருதுகளால் கவுரவிக்கப்பட்டார். ராஜ்ய சபை மூலம் எம்.பி பதவியும் கிடைத்தது.
-SUBHAM-
tags –ஆர். கே நாராயண் , நாராயணன், மால்குடி, கிரஹாம் க்ரீன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -57
Xxxx
PART 56 POSTED ON 28 JUNE 2021
XXX
PANINI SUTRA 5-4-67
M=B
Though out my posts I have been following the same rules. Here is another example to show B becomes M and vice-versa.
Madra was the word for offering hair to god or in general shaving the hair on head .
Varttika adds Badra for the same. This shows M becomes B in three hundred years time..
I have already given examples:-
Manual -Panual
Mandi -Bandar
Money- Panam
Mare- Pari (horse)
Mare= Vaari, Vaaranam (sea)
Manufacture -Pannu/do/produce
Badra -Madra (happiness)
Xxx
5-4-69
Puja = Pugaz in Tamil
பூஜித்தல் = புகழ்தல்
பூஜ = புக /ழ்
Xxx
5-4-73
Varttika gives Kadga/ knife example
Kadga becomes Kaththi in Tamil
Xxx
5-4-74
Dvipa becomes Theevu in Tamil
P=V
த்வீப = தீவு
Xxx
5-4-75
Bhumi in Sanskrit becomes Puvi
M=V
பூமி = புவி ; புவனம் = புவி
ம=வ
Other examples already given by me:
Maanam -Vaanam
Maari- Vaari
Melaa -Vizaa
Muzi -Vizi
Xxx
5-4-77
Chatura = Square
Xxx
5-4-78
Varchas = Virtues
Xxx
5-4-86
Finger= Angula, inch
அங்குலம்= விரற்கடை ; அங்குலீயம்= மோதிரம்
Xxx
5-4-87
Aha’s becomes Pahal/day time in Tami
Raatri becomes Iravu
அஹஸ் =பஹல் =பகல்
ராத்ரி = ரா = இரா = இரவு
Xxx
5-4-94
Ayas becomes Iron in English
Iron becomes Irumbu/ferrum in Tamil Tamil
உலகில் ஒரே மொழிதான் இருந்தது. அது தமிழ்-ஸம்ஸ்க்ருதத்தின் மூல மொழி என்றும் அதனால்தான் தமிழுக்கு இலக்கணம் எழுத இமய மலை ரிஷியான அகஸ்தியரை சிவன் அனுப்பினார் என்றும் காட்டி வருகிறேன். இதோ மேலும் ஒரு சான்று :
அயஸ் – ஐரன் /அயன் = பெர்ர ம் /லத்தீன் மொழி = இர்ரம் பு /தமிழ்
***
Saras = is stream in English (Saras-vati river)
Xxx
5-4-102
Anjali = iru kai kooppi Vanangu thal
Angel came from this word. ANGELS are depicted on both sides of God or God like person, as if they are worshipping ( In Greek it meant messenger). Greeks borrowed it from the Hindus. Throughout Hindu epics and Hindu puranas we read angels showered Pushpa Anjali . There also it meant God’s messengers.
அஞ்சலி – பரத நாட்டியத்திலும் , கோவிலிலும் இன்றும் பயன்படுகிறது ; புஷ்பாஞ்சலி
Xxx
5-4-129
Jaanu = joint
Xxx
5-4-130
Uurdhva – uyarththiya in Tamil
Uurdhva – uupar – upper in English
ஊர்த்வ = உச்ச= ஊபர் = ஆங்கிலத்தில் அப்பர்
Xxxx
5-4-135
Vaarttika adds
Aapana = shop
In Tamil it becomes Aavana
P=V
ஆபண = ஆங்கிலத்தில் ஷாப்/shop ஆகும்; தமிழில் ஆவணம்/கடை
ப= வ
Xxx
5-4-140
Add ped to denote the number of legs- says PANINI.
In english we have quadraped, millipede, centipede etc
Xxx
5-4-141
Danta = dental; seen already in previous sutras
யானைத் தந்தம் = யானையின் பல்
டென்டிஸ்ட் = பல் மருத்துவர்
Xxx
5-4-150
Suhrut – good hearted
Durhrut – evil minded
Hrut = heart
The expression good hearted s as old as panini’s work
நல்ல மனம் படைத்த , நல்ல இருதயம் உடைய
சம்ஸ்க்ருதத்தில் இது நண்பனுக்கும் பயன்படுகிறது.
Xxx
5-4-154
Commentators add
Bahu – vegu in Tamil ; b= v
Gadva = cot in English
பஹு , பொகு – வெகு
ப =வ
கட்வ= கட்டில் = ஆங்கிலத்தில் காட்
Xxx
5-4-158
Commentators add
Hatha – hit; killed
Xxx
5-4-159
Nadi = naadi = nerve= naar
Like said becomes sari, nadi becomes nar-nerve-naar- naadi
All the parts look like thread in appearance
Panini adds here Tantri – thread
Tamils and sanskritists think in the same way:-
Tantra= book, tantu= thread or sting
In tamil also nuul means thread and book.
Earlier we saw sutra meant book and thread.
This shows the book culture spread from one common source
ட என்பது ர ஆக மாறும்
நாடி= நார்= ஆங்கிலத்தில் நெர்வ்= தமிழில் நரம்பு
****
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்பதைக்காட்ட இங்கு மேலும் ஒரு உதாரணம் / சான்று கிடைக்கிறது.
முன்னர் ‘சூத்திரம்’ என்றால் இரு மொழியிலும் நூல்/thread, புஸ்தகம்/book என்ற இரு பொருள் உள்ளதை பாத்தோம்.
இங்கு பாணினி தந்திரி/thread என்பதை நூலுக்கு பயன்படுத்துகிறார்.
இரு மொழியிலும் இது தைக்கும் நூலுக்கும்/thread, படிக்கும் நூலுக்கும்/book பயன்படுகிறது.
தந்து = நூல், தந்திரம் =புஸ்தகம்/ Tantra Shastras
Books are named with suffix Tantra.
Xxx
To be continued……………………………………
TAGS — PANINI ,TAMIL, SANSKRIT, TAMIL IN PANINI 57
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிருகதீஸ்வர மாஹாத்மியம் நூல் தரும் 16 சோழ மன்னர்கள் பற்றிய விவரமும் ஐம்பதினாயிரத்து நூறு க்ஷேத்ர விவரங்களும்!
ச.நாகராஜன்
பிருகதீஸ்வர மாஹாத்மியம் ஒரு அரிய நூல். தஞ்சாவூர் மஹாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால்- இன் அரிய வெளியீடாக இது 1985ஆம் ஆண்டு வெளியானது. (நூல் வேண்டுவோர் சரஸ்வதி மஹால், தஞ்சாவூரைத் தொடர்பு கொள்ளலாம்). அரிய இந்த நூலைத் தயாரிக்க ஒரே ஒரு சுவடிக் கட்டு மட்டுமே இருந்தது. அதை வைத்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
பிருகதீஸ்வரரின் மாஹாத்மியம் பற்றி அரிய பல தகவல்களை இந்த நூல் தருகிறது. மொத்த அத்தியாயங்கள் 30.
நூலின் இறுதியில், இருபத்தொன்பதாவது அத்தியாயத்தில் சூத முனிவர் 16 சோழ மன்னர்களைப் பற்றிய தகவல்களைக் கூறுகிறார். கடைசி, 30ஆம்- அத்தியாயத்தில் ஐம்பதினாயிரம் க்ஷேத்திரங்களைப் பற்றிய ஒரு அரிய குறிப்பு கிடைக்கிறது.
16 சோழ மன்னர்களைப் பற்றியும் ஐம்பதினாயிரம் க்ஷேத்ரம் பற்றிய குறிப்பையும் மட்டும் இந்தக் கட்டுரை வாயிலாக அனைவருடனும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
16 சோழ மன்னர்களைப் பற்றிய விவரங்கள் :
சூத முனிவர் கூறுகிறார்:
குலோத்துங்கனுக்கு இறைவன் சோழ மன்னன் என்ற பட்டம் கட்டி அவனுக்கு செல்வம் நல்கினான். இவன் மைந்தன் தேவ சோழன்.
தேவ சோழன் பல சிவாலயங்களைக் கட்டினான். இதனால் சிவப்பேற்றையடைந்தான். இவன் மைந்தன் சசிசேகர சோழன்.
சசிசேகர சோழன் : இவன் காவிரியின் இரு மருங்கிலும் கரையை திடமாக எழுப்பினான். மேலும் காவிரியின் குறுக்கே அணை எழுப்பினான். இவன் மகன் சிவலிங்க சோழன்.
சிவலிங்க சோழன் : பல சிவாலயங்களை எழுப்பினான். நீதி வழுவாது பசுங்கன்றினுக்கு தனது மகனைத் தேர்க்காலிட்டு நீதி காத்தவன். இவன் மைந்தன் வீர சோழன்.
வீர சோழன் : காவிரிக்கரையில் பல ஆலயங்களைக் கட்டியவன். இவன் மகன் கரிகால சோழன்.
கரிகால சோழன் : பெருங்கோயிலைக் கட்டியவன். இவன் மகன் பீம சோழன்.
பீம சோழன் : இவன் தஞ்சையில் சங்கரநாராயணர் கோவிலையும் மற்றும் பல ஆலயங்களையும் எழுப்பியவன். இவன் மகன் ராஜேந்திரன்.
ராஜேந்திர சோழன் : இவன் புயவலிமையால் பாண்டியர், சேரர்களை வென்றவன். இவன் மகன் வீரமார்த்தாண்டன்.
வீரமார்த்தாண்ட சோழன் : இவன் பல சிவாலயங்களையும், வைஷ்ணவ ஆலயங்களையும் கட்டுவித்தான். கொங்கணேசர் ஆலயத்தைக் கட்டினான். இவனுக்குப் புகழ்ச்சோழன் பிறந்தான்.
புகழ்ச்சோழன் : இவன் முருக பக்தன். (மேல வீதியில் உள்ள) முருகன் ஆலயத்தைக் கட்டினான். மற்றும் எட்டு சக்திகளின் ஆலயங்களையும் கட்டினான். இவன் மகன் ஜய சோழன்.
ஜய சோழன் : இவன் தனது முன்னோரைப் போல பல ஆலயங்களைக் கட்டினான். இவன் மகன் கனக சோழன்.
கனக சோழன் : இவனது ஆட்சிக் காலத்தில் திருவலஞ்சுழியில் காவிரி நீர் பாதாளத்தில் ஓடி மறைந்தது. இதனால் மக்கள் வருந்தினர். அதற்குரிய பரிகாரங்களைச் செய்தான். திருவலஞ்சுழி விநாயகர் ஆலயம் கட்டுவித்தான். இவன் மகன் சுந்தர சோழன்.
சுந்தர சோழன் : மறையோனைக் கொன்றதால் ஏற்பட்ட “பிர்மஹத்தி” தோஷத்தை திருவிடைமருதூர் என்னும் பதியில் போக்கிக் கொண்டான். இடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலயம், திருபுவனம் பயஹரேசர் ஆலயம் முதலிய பல ஆலயங்களை எடுத்தான். இவன் மகன் கால காலன்.
கால கால சோழன் : திருப்பனந்தாளில் குனிந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தியவன். பல ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தவன். இவன் மகன் கல்யாண சோழன்.
கல்யாண சோழன் : சிதம்பரத்திலுள்ள கோபுரத்தையும், ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டியவன். இவன் மகன் பத்ர சோழன்.
பத்ர சோழன் : இவன் தனது முன்னோர்களைப் போலவே பல ஆலயங்களைக் கட்டினான்.
இப்படியாக பதினாறு சோழ மன்னர்கள் சிவாலயத் திருப்பணியைச் செய்தார்கள். இதனால் இவர்கள் அனைவரும் சிவ கணங்களாக என்றும் திகழ்கின்றனர். அந்த சிவ கணங்களின் சரித்திரமே மேலே கூறியவை. இவர்களின் சரித்திரத்தைக் கேட்டவர்கள் இகத்தில் பல சுகங்களையும் பரத்தில் சிவப்பேற்றையும் அடைவார்கள்.
அடுத்து முப்பதாவது அத்தியாயம் க்ஷேத்திரங்களைப் பற்றி விவரிக்கிறது.
அந்த அத்தியாயம் இதோ:-
சூத முனிவர், ஏனைய முனிவர்களுக்கு காவிரி தென்கரை ஸ்தலங்களையும், சிவ க்ஷேத்திரங்களைப் பற்றியும், புகழ் வாய்ந்த தீர்த்தங்களைப் பற்றியும், முனிவர்களால் பிரதிஷ்டை செய்த ஸ்தலங்களைப் பற்றியும், சுயம்பு ஸ்தலங்களைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறார்.
ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம் மேற்படி ஸ்தலம், தீர்த்தம், யாவை என்று கேட்க, சிவபெருமான் காவிரிக்கும் சேதுக்கரைக்கும் இடையில் உள்ள ஸ்தலங்களைப் பற்றிக் கூறினார் :
சிவ க்ஷேத்ரம் – 23,000
விஷ்ணு க்ஷேத்ரம் – 1,000
முருகன் க்ஷேத்ரம் – 6,000
விநாயகர் க்ஷேத்ரம் – 5,000
காளி க்ஷேத்ரம் – 1,000
நடராஜர் க்ஷேத்ரம் – 100
துர்கை க்ஷேத்ரம் – 3,000
சாஸ்தா க்ஷேத்ரம் – 11,000
ஆயின் இவை அனைத்திலும் நான் வாஸம் செய்கிறேன் என்றும், முக்தி க்ஷேத்திரங்களைப் பற்றியும், தீர்த்தங்களைப் பற்றியும் சிவ பெருமான் பார்வதிக்கு விரிவாகக் கூறுகிறார்.
ஆக இந்தப் பட்டியலில் ஐம்பதினாயிரத்து நூறு க்ஷேத்ரங்களைப் பற்றி அறிகிறோம்.
இந்த நூலைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இன்னொரு கட்டுரை வாயிலாகக் காண்போம்.
***
Index
பிருகதீஸ்வர மாஹாத்மியம்
சரஸ்வதி மஹால் வெளியீடு, 1985
முப்பது அத்தியாயங்கள்
16 சோழ மன்னர் பற்றிய விவரங்கள், அத்தியாயம் 29
ஐம்பதினாயிரத்து நூறு க்ஷேத்ரங்கள் பற்றி சிவன் பார்வதிக்குக் கூறுவது, அத்தியாயம் 30
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில நாவல்களைப் படிப்போருக்கு ஜேன் ஆஸ்டின் JANE AUSTEN என்ற நாவல் ஆசிரியை நன்றாகவே தெரியும். மேலும் அண்மைக்காலத்தில் அவருடைய எம்மா EMMA புதினமும், ப்ரைட் அண்டு ப்ரிஜடீஸ் PRIDE AND PREJUDICE புதினமும்டெலிவிஷன் தொடர்களில் சக்கைப் போடு போட்டதால் அம்மணியின் புகழ் மேலும் பரவிவிட்டது.
பெண் எழுத்தாளர்களில் 200 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ் கொடி நாட்டினார் ஜேன் . சாமான்ய மக்களை , நம்பத் தகுந்த வகையில் வருணித்தவர் இவர்.ஜேன் எழுதிய நாவல்களில் அழகிய இளம் கதாநாயகிகளை சந்திக்கலாம். அவர்கள் தங்கள் சுற்றுவட்டாரத்தில் பீடும் பெருமையும் காட்டி அகந்தையுடன் வலம் வருவதையும் காணலாம். வான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து நடை போடுவதை அவருடைய கதாநாயகிகள் சித்தரிக்கின்றனர்.
ஜேன் ஆஸ்டின் ஒரு பாதிரியாரின் மகள் . தெற்கு இங்கிலாந்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். பெரும்பாலும் வீட்டிலும் கொஞ்சம் பள்ளிக்கூடங்களிலும் கல்வி கற்றார். அக்காலப் பெண்களிடையே இது நல்ல படிப்பு என்றும் சொல்லலாம்.
அவருடைய குடும்பத்தினர் புஸ்தகப் புழுக்கள். வாசிப்பதே அவர்களின் பொழுதுபோக்கு. சர்ச்சிலும் நாடகங்களை நடித்துக் காட்டினார்கள் .
ஜேன் திருமணம் செய்துகொள்ளவில்லை. பெற்றோருடனே வசித்தாள் . அதிகம் பயணம் செய்ததும் இல்லை. லண்டன் மற்றும் பாத் BATH ஆகிய இரு நகரங்களுக்கே சென்றார் .41 வயதில் இறந்தார்.
நண்பர்களுடனும், உறவினர்களுடனும் கொண்ட தொடர்புகள் மூலம், நிலம் வைத்திருக்கும் பணக்காரர்கள், நாட்டுப்புற மதப் பிரச்சாரகர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பற்றி அறிந்ததை புதினங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்.
14 வயதிலேயே லவ் அண்ட் ப்ரண்ட்ஷிப் LOVE AND FRIENDSHIP என்ற நாவலை எழுதினார். சில நூல்கள் வெளியாவதற்கு முன்னரே எதையும் எதிர்பார்க்காமல் நாவல்களை எழுதி முடித்தார். 35 வயது ஆனபோதுதான் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி SENSE AND SENSIBILITY நாவல் அச்சாகியது. தன்னுடைய உண்மைப் பெயரை அப்போது வெளியிடாமல் ரஹசியம் காத்தார். ஏனெனில் அக்காலத்தில் எழுத்து த் தொழில் ஆண்களின் உடைமையாக இருந்தது. ஒரு பெண் எழுதியதாகத் தெரிந்தால் என்ன சொல்வார்களோ ஏது செய்வார்களோ என்ற அச்சம் அவரிடம் குடிகொண்டது.
EMMA எம்மா என்ற நாவலும் ப்ரைட் அண்ட் ப்ரிஜடீஸ் PRIDE AND PREJUDICE என்ற நாவலும் இவருக்கு பெரும்புகழ் சம்பாதித்துத் தந்தன.
ப்ரைட் அண்ட் ப்ரிஜடீஸ் நாவலில் ஒரு யுவதியும் ஒரு இளைஞனும் ஒருவரை ஒருவர் வெறுத்து, பின்னர் காதல் வலையில் விழுகின்றனர். எம்மா என்னும் புதினத்தில் ஒரு கர்வமும் பிடிவாத குணமும் உள்ள இளம்பெண் , இறுதியில் காதல் என்னும் உணர்வினால் கனிவு அடைகிறாள். அவளுடைய கர்வமும் அஹம்காரமும் காதலுக்கு அடிமை ஆகின்றன. எல்லா நாவல்களும் சுபம் ஆகவே முடியும். இறுதியில் கல்யாண மேளம் கொட்டும்.
அவளுடைய நாவல்களை விமர்சிப்பவர்கள் அதிலுள்ள வறட்டு, அறுவை ஜோக்குகளை கவனித்துள்ளனர். ஆனால் உன்னத நடையையும் பாராட்டத் தவறவில்லை. சின்னச் சின்ன தப்பு அபிப்ராயங்கள் எப்படி பூதாகார உருவெடுக்கும் என்பதையும் குடும்பப் பொறுப்புகளுக்கும், மன உணர்வுகளுக்கும் இடையே நடக்கும் மோதல் களையும் அவருடைய நாவல்களில் படித்து ரசிக்கலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருவாசகம் என்னும் தேன்! -2
ஞானமயம் ஆனி மக நாளன்று (13-7-2021) மாணிக்கவாசகரின் குருபூஜை நாளையொட்டி சிவஞான சிந்தனை மணிவாசகர் குருபூஜை தினத்தை உலகளாவிய விதத்தில் சிறப்பாக இணையதள வழியே கொண்டாடியது. இந்த விழாவில் திருவாசகம் என்னும் தேன் பற்றி ஆற்றிய உரை:- Second Part
திருவாசகத்தில் 51 அதிகாரங்களில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்தால் மகிழ்ந்த சிவபிரான் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று கூற திருக்கோவையார் 400 பாடல்களாக மலர்ந்தது. ஆக இந்தப் பாடல்களில் 51 அதிகாரத்தில் உள்ள பதிகங்களில் 21798 சொற்களும் திருக்கோவையாரில் 11805 சொற்களும் ஆக மொத்தம் 33603 சொற்கள் நம்மிடம் இன்று உள்ளன. சிவனே தமிழ் என்பதால் அவனே இதை அருளினான். ஆக இந்த 33603 சொற்களில் உள்ள சொல் ஒவ்வொன்றும் உயிர் காக்கும் அமிர்தத் துளியாகும். ஒவ்வொரு சொல்லும் தேனென இனிக்கிறது.
யஜுர் வேதத்தில் நடு நாயகமாக உள்ளது ஸ்ரீ ருத்ரம். இந்த ஸ்ரீ ருத்ரத்தில் நடு நாயகமாக வகிப்பது நமசிவாய என்னும் மந்திரம். இதைத் தொடர்ந்து உச்சரிப்பவர் சிவனாகவே ஆகிறார். ஸ்ரீ ருத்ரம் ஓதுவது என்பது அனைவராலும் முடியாது. ஆனால் திருவாசகத்தை யார் வேண்டுமானாலும் ஓதலாம். நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று உளமுருகிப் பாடும் போது நெஞ்சில் சிவபிரான் நம்மை விட்டு நீங்காத
நிலை தானே வந்து அடையுமல்லவா!
புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்ன
டிகள் கண்டு இன்று வீடு உற்றேன் என்கிறார் மாணிக்கவாசகர்.
இன்று அறிவியல் ஒத்துக் கொள்ளும் மறுபிறவித் தத்துவம் இந்து மதத்தின் தனிப் பெரும் ரகசியத் தத்துவம் ஆகும். REINCARNATION எனப்படும் மறுபிறவித் தத்துவத்தை ஐயான் ஸ்டீவன்ஸன் நூலில் 20 cases suggestive of Reincarnatin என்பதில் காண்கிறோம். எட்கர் கேஸ் என்ற முற்பிறவி கூறும் திறன் படைத்த அறிஞர், 2000 பேருக்கு அவர்களுடையமுன் பிறப்பு விவரங்களைக் கூறி இருக்கிறார். அதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். அறிவியல் அறிஞர்கள் மறுபிறப்பு உண்டு என்பதை நிரூபித்து விட்டனர். ஆனால் மீண்டும் மீண்டும் பிறக்கிறோமே அந்தப் பிறப்பை அறுக்கும் வழியை மணிவாசகர் ‘மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்’ என்பதால் நமக்குச் சொல்லியருளி நல் வழியைக் காண்பிக்கிறார்.
திருவைந்தெழுத்து – அதாவது நமசிவா
ய – ஓரெழுத்தொரு மொழி ஐந்து சேர்ந்த ஒரு தொடர் மொழி ஆகும்.
இதில் ந என்பது நடப்பு ம என்பது மறைப்பு சி என்பது சிறப்பு வ என்பது வனப்பு. யா என்பது யாப்பு. இதில் யா குறுகி ய என்று ஆனது. வ நீண்டு வா என்று ஆனது.
சிறப்பு வனப்பு ஆகிய இரண்டும் சேர்ந்து சிவ என்று ஆனது.
அருட்பிரகாச வள்ளலார் சிவாய நம என்பதை விளக்கி அருளும் போது சி என்பது பதி என்றும் வா சத்தி என்றும் ய என்பது ஜீவன் என்றும் ந என்பது திரோதை என்றும் ம என்பது மாயை என்றும் குறிப்பிடுகிறார். நமசிவாய என்ற பஞ்சாக்ஷரத்தால் ஏம சித்தியும் தேக சித்தியும் உண்டாகும். ‘சிவாய நம’ எனச் செப்ப, செம்பு பொன்னாயிடும் என்ற திருமூலர் வாக்கையும் ‘சிவாய நம் என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்ற அவ்வையார் வாக்கையும் அவர் பிரமாணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
சிவ நாமத்தின் மகிமையை முற்றிலுமாகச் சொல்லவே முடியாது. நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற சொற்களில் இவ்வளவு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.
மனிதனைப் பாதிப்பவை ஐந்து மலங்கள் அதாவது பஞ்ச மலங்கள் ஆகும்.
ஆணவம் என்பது அறிவை மயக்கும். கன்மம் என்பது ஆன்மாவுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கும். மாயை என்பது தநுகரண புவன போகங்களைத் தோற்றுவிக்கும். மாயேயம் என்பது தநுகரண புவன போகங்களாய் வந்து பொருந்தும். திரோதாயி என்பது மலத்தின் வழி நின்று அறிவை மறைக்கும். ஆக இவையே பஞ்ச மலங்களாகும்.
இவையே பிறப்புக்குக் காரணம். இந்த பஞ்ச மலங்களை நீக்க வல்லது பஞ்சாக்ஷரமே. பஞ்ச மலங்களை நீக்க வல்லான் ஒருவனே. சிவனே அவன். ஆகவே,
‘பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெம்மான்’, ‘பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க’, மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி, என்று போற்றி பஞ்ச மலங்களை அறுத்து பிறப்பை அறுக்கும் மன்னவனை, தென்னவனை, தென்னாடு உடைய சிவனைப் போற்றுங்கள் என்கிறார் அவர். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று உருகிப் பாடுகிறார் அவர்..
திருவாசகம் படிப்பது என்பது அமிர்தத் துளிகளை அன்றாடம் பருகுவது போன்ற ஒரு அரும் செயலாகும்.
மணிவாசகருக்கும் இறைவனுக்கும் நடந்த யார் சதுரர் என்ற ஒரு போட்டி பற்றி அவரே விளக்குகிறார். இருவருக்கும் நடந்த போட்டியில் தானே வென்றதாகவும் அவர் உறுதி கூறி அதை நிலைப் படுத்துகிறார்.
மாணிக்கவாசகர் தர்க்கரீதியாக, ஆணித்தரமாக தன் தீர்ப்பை வாசிக்கிறார் இப்படி:
தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை
‘இது உண்மையா’ என்கிறார் மாணிக்கவாசகர். ‘ஆம் உண்மை தான்; நீ உளம் உருகி என்னைக் கேட்டாய், நான் என்னைத் தந்தேன்’ என்கிறார் சிவபிரான்.
சங்கரா யார் கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது ஒன்று என்பால்
காலமும் கணக்கும் நீத்த காரணன், கற்பனை கடந்த ஜோதி நீ என்னிடம் வந்து விட்டாய்; என்னிடம் இருந்து எதை நீ பெற்றாய்? ஒன்றே ஒன்றைச் சொல் பார்ப்போம்! யார் கொலோ சதுரர்?!
சிவன் புன்னகை மலர்ந்து தலை அசைக்கிறார், உனது நீதி சரிதான் என்று,
தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச் சங்கரா யார் கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே
கடைசி வரியில் நான் வெற்றி பெற்றாலும் உனக்கு என்ன கைம்மாறு என்னால் செய்ய முடியும்? ஜீவ சொரூபம் போகச் செய்து சிவ சொரூபமாக என்னை ஆக்கி விட்டாயே இதற்கு என்னால் பிரதியாக என்ன செய்ய முடியும் என்று உள்ளம் உருகி காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கக் கூறுகிறார்.
இதைப் படிக்கும் போது நமக்குப் புல்லரிக்கிறது. கண்ணீர் மல்குகிறது.
இப்படி ஒரு சுவை மிக்க அமிர்தப் பாடலை வேறெங்கும் பார்க்க முடியுமா? மூன்று இடங்களிலே அவர் சதுர என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இந்த இடத்தில் வரும் சதுரர் என்ற சொல்லை அவர் பயன்படுத்திய விதமும் இடமும் சொல்லும் விதமும் ஒப்புமை காண முடியா ஒரு அற்புதக் கவிச் செல்வமாகும்.
திருவண்டப் பகுதியின் முதல் நான்கு வரிகளைப் பார்ப்போம்:
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.
என்ன அற்புதமான ஒரு காட்சியை அழகான தமிழில் தருகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.
பல கோடி அண்டங்கள்! பால்வீதி மண்டலத்தைப் பற்றிப் பேசும் விஞ்ஞானிகள் அடடா, பல பல கோடி பால் வீதி மண்டலங்கள் உள்ளன. அவைகளைக் கொண்டிருப்பது போல இருப்பது ஒரு பிரபஞ்சம் மட்டும் அல்ல – ஒரு universe அல்ல நாங்கள் கண்டு அறிவதுmultiverse பல் பிரபஞ்சங்கள் என்கின்றனர். இந்த பிரபஞ்சங்களும் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்காக உள்ளன ஒரு மிலிமீட்டர் இடைவெளியில் உள்ளன என்கின்றனர்.
Nature, Scientific American, Live Science ஆகிய அறிவியல் இதழ்களில் இது பற்றிப் படிக்கும் போது வியப்பும் திகைப்பும் பிரமிப்பும் ஏற்படுகிறது. மல்டிவர்ஸ் பற்றி முதலில் கூறிய ஹ்யூ எவரெட் (Hugh Everett) என்ற விஞ்ஞானியை இன்று அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர்.
இவர்கள் இன்று சொல்வதை அன்றே நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்று சுருங்கச் சொல்லி விளக்கி விட்டார் அவர்.இன்று 13-7-2021 LiveScience இதழில் வெளிவந்துள்ள கட்டுரை சுவாரசியமான ஒன்று. மனிதனின் உடம்பில் உள்ள அணுக்களைக் கணக்கிட்ட விஞ்ஞானிகள் அவை மொத்தம் – 7 ஆக்டில்லியன் – 7 octillion, or 7×10^27 (7 followed by 27 zeros), –என்று கணக்கிட்டுள்ளனர். காலக்ஸிகள் மட்டும் நாம் கண்ணால் பார்க்கின்ற பிரபஞ்சத்தில் 10^12 உள்ளனவாம். (10^12 galaxies in the observable universe) சரி, பிரபஞ்சம் அணு மயம் என்றால் எத்தனை அணுக்கள் உள்ளன?
இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய, அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க, ஐயா போற்றி, அணுவே போற்றி என்று இப்படி எல்லாம் திருவண்டப்பகுதியிலும், போற்றித் திருவகவலிலும் கூறுகிறார் மாணிக்க வாசகர்! அதாவது சூரியக் கதிரில் பல துகள்களைப் பார்த்து நாம் ‘சே, இவை தூசி’ என்பது போல அகிலாண்டங்கள் கோடானு கோடியும் சிவபிரானுக்குத் தூசியாம் என்கிறார் இப்படி.
விஞ்ஞானிகள் இன்று தரும் கட்டுரையில் நாம் காண்கின்ற பிரபஞ்சத்தில் உள்ள அணுக்கள் எத்தனை என்றால் அவற்றின் எண்ணிக்கை இது தான் – ஒன்றுக்குப் பக்கத்தில் 82 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று விடையைத் தருகின்றனர். ட்ரில்லியன், ஜில்லியன், ஆக்டில்லியன் என்று சொல்லிக் கொண்டே போக வேண்டியது தான். நாம் பார்க்கின்ற இடத்தில் மட்டுமே இவ்வளவு அணுக்கள் என்றால் கோடானு கோடி பிரபஞ்சங்களில் எத்தனை அணுக்கள்? அறிவியல் அறிஞர்களுக்குத் தலை சுற்றுகிறது. ஆனால் மாணிக்கவாசகருக்கு இறைவன் தரும் காட்சி அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சியாக அமைகிறது.
அளக்க முடியாதது; ஆனால் வளப்பெரும் காட்சி என்கிறார்.
திருவண்டப் பகுதி போல உலகில் இன்னொரு பாவைப் பார்க்க முடியுமா என்ன?
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். திருவாசகம் நம்மை பக்தி சிகரத்தின் உச்சியில் ஏற்றும். சிவஞான அறிவைப் பெருக்கும். ஆயிரக்கணக்கில் அருமையான ரகசியங்களையும், நாம் உய்த்துணர்வதற்கான வழிகளையும அருளும்.
மாணிக்கவாசகரின் பொன்னடி போற்றுவோம். அவர் பெருமை பேசுவோம். திருவாசகத் தேனை அள்ளி அள்ளிக் குடிப்போம். அதன் பயனையும் பெறுவோமாக.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
90,000 கடிதம், 500 புஸ்தகம் — அவர் பெயர் ஐசக் அஸிமோவ்
விஞ்ஞான கற்பனைக் கதைகளை (Science Fiction) எழுதுவதில் உலகில் கொடிகட்டிப் பறந்தவர் ஐசக் அஸிமோவ் ISAAC ASIMOV . ரஷ்யாவில் பிறந்து சிறு வயது முதல் அமெரிக்காவில் வளர்ந்த விஞ்ஞானி.
புதினங்கள் (Novels) பலவகை- காதல் கதைகள், பயங்கரக் கதைகள், பேய்-பிசாசு கதைகள், கொலை- துப்பறியும் கதைகள், சோக வாழ்வுக் கதைகள் என பலப் பல. சமீப காலத்தில் உருவான ஒரு வகை, அறிவியலைப் பயன்படுத்தி என்ன என்ன அதிசயங்கள் நடக்கலாம் , என்ன என்ன குற்றங்கள் நடக்கலாம் என்ற புதிய வகை ஆகும். பெரும்பாலும் வெளி உலக வாசிகள் (E.T.)வருகை, அங்கே நாம் பயணித்தல் (Inter Galactic Travel) , வெளி உலக வாசிகளுடன் போர் (Space War) என்று பல அதீத கற்பனைக் கதைகள் (Science Fiction) . இவற்றில் பெரும் வெற்றி அடைந்தவர் ஐசக் அஸிமோவ் .
ஐசக் அஸிமோவ் பிறந்த தேதி – ஜனவரி 2, 1920
இறந்த தேதி – ஏப்ரல் 6, 1992
வாழ்ந்த ஆண்டுகள் – 72
எழுதிய மற்றும் ‘எடிட்’ செய்த புஸ்தகங்கள் எண்ணிக்கை – 500
எழுதிய கடிதங்கள் – 90,000
விஞ்ஞான புனைக்கதைகளை (Science Fiction) எழுதுவதில் 50 ஆண்டுக் காலத்துக்கு எழுதுவோர் போட்டி இன்றி புகழ் ஈட்டியவர் . ரஷ்யாவில் பிறந்த அவர், மூன்று வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறி எட்டு வயதில் , அமெரிக்கக் குடி மகன் ஆனார்.
சிறுவனாக இருந்த பொழுதே அஸிமோவ் விஞ்ஞான விஷயங்களை ஆர்வத்தோடு பயின்றார். கார்ட்டூன் புஸ்தகங்களை படிப்பதற்கு அவருடைய தந்தை அனுமதி மறுத்தார். ஆனால் ஒரு புஸ்தகத்தில் கதைகளுக்கு முன்னர் விஞ்ஞான (Science Wonder Stories) என்ற சொல் இருந்ததால் அதை தந்தை அனுமதித்தார்.
அந்தப் புஸ்தகம் முழுதும் அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கதைகளே இருந்தன. ஐசக்கும் அவைகளில் மயங்கியனார் . கிட்டத்தட்ட அத்தகைய புஸ்தகங்களுக்கு அடிமை ஆனார்.
17 வயதில் முதல் அறிவியல் கற்பனைக் கதையை எழுதினார். அதைப் படித்த அவருடைய தந்தை பிரபல சஞ்சிகையொன்றுக்கு (Prestigious Magazine) அனுப்பும்படி சொன்னார். அவரும் அவ்வாறே செய்தார் . அனால் பெருத்த ஏமாற்றம்; அந்தக் கதை வெளியாகவில்லை. ஆயினும் அந்த இதழின் ஆசிரியரான ஜான் கேம்ப் பெல் (John campbell) என்பவரைச் சந்தித்துப் பேசினார். அவர் இவருக்கு நல்ல யோசனைகளை வழங்கி நீண்ட காலத்துக்கு வழிகாட்டியாக இருந்தார். பின்னர் பல கதைகளையும் வெளியிட்டார்.
பள்ளிக்கூடத்தில் அசிமோவுக்குப் பிடித்த பாடம் அறிவியல்தான். 1948ம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் (Ph.D) பட்டம் பெற்றார் 1949 முதல் 30 ஆண்டுகளுக்கு பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயோ கெமிஸ்ட்ரி (Bio Chemistry in Boston University) எனப்படும் உயிர் வேதியல் பாடத்தைக் கற்பித்தார்.
முப்பது வயதிலேயே பெப்பிள் இன் தி ஸ்கை (Pebble in the Sky) என்ற முதல் நாவலை வெளியிட்டார். ரோபோ(I, Robot) என்னும் இயந்திர மனிதன் பற்றிய புனைக் கதைகளை அதே ஆண்டில் வெளியிட்டார். 400 புஸ்தகங்களுக்கு மேல் அவர் வெளியிட்டார்.
ஆயினும் பெரும்பாலானவை பாமர மக்களுக்கு விஞ்ஞான விந்தைகளை விளக்கும் புஸ்த கங்கள் தான்.புதினங்கள் எவ்வளவு புகழ் சேர்த்தனவோ அவ்வளவு புகழை விஞ்ஞானப் புஸ்தகங்களும் சேர்த்தன. அவருக்கு அறிவியலென்பது அத்துப்படி ஆனதால் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் அதன் மூலம்
என்னென்ன அற்புதங்கங்கள் நிகழும் என்று அறிவித்தார். படங்கள் மூலம் காட்டினார். பல்வேறு விருதுகளையும் ஐசக் அசிமோவ் வென்றார். அவரது படைப்புகள் பல டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கும் திரைப்படங்களுள்ளும் அடிகோலின .
அவருடைய முக்கிய புஸ்தகங்கள்:
1950- PEBBLE IN THE SKY
1950 – I.ROBOT
1951 – THE STARS , LIKE DUST
1951- 53 – FOUNDATION (3 VOLUMES)
1954- THE CAVES OF STEEL
1957- THE NAKED SUN
1969- NIGHTFALL AND OTHER SSTORIES
1972- THE GODS THEMSELVES
1976- THE BICENTENNIAL MAN
1986- FOUNDATION AND EARTH
–SUBHAM
Tags- ஐசக் அஸிமோவ் , விஞ்ஞான கற்பனைக் கதை, Science Fiction) Isaac Asimov,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்– மீண்டும் ஆய்வு
உலகிலேயே மிகப் பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் சூரிய கிரஹணம் பற்றி அத்ரி முனிவர் பாடியதை பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினேன். இப்போது மேலும் சில விவரங்களைக் காண்போம்.
சூரிய கிரஹணம் பற்றி வரும் குறிப்புகளைக் கொண்டு ரிக் வேதத்தின் காலம் கி.மு.3000, அதாவது சிந்து- சரஸ்வதி நதிக்கரை நாகரீகத்துக்கு முந்தையது என்று உமாபதி சென் நிரூபித்ததை முன்னர் கண்டோம். அதே போல, மஹாபாரதப் போரில் ஜெயத்ரதனுடன் நடந்த சண்டையில் இன்று மாலை சூரியன் மறைவதற்குள் உன் தலை நிலத்தில் சாயும் என்று அர்ஜுனனை சூளுரைக்கவைத்தார் கிருஷ்ணன் ; அன்று சூரிய கிரஹணம் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். மாலையில் பூரண சூரிய கிரஹணம் ஏற்படவே ஜயத்ரதன் சண்டை முடிந்துவிட்டது என்று அசட்டையாக இருந்த பொழுது, அர்ஜுனனை ஏவி, ஜயத்ரதன் தலையைத் துண்டித்து சுக்கு நூறாக சிதற வழிவகுத்தார் கிருஷ்ணன்.
மஹாபாரதப்போர் 18 நாட்கள்தான் நடந்தன. அது அமாவாசையன்று துவங்கியது. சூரிய கிரஹணங்கள் அமாவாசையிலும் சந்திர கிரஹணங்கள் பவுர்ணமியில் மட்டுமே நடக்கும் என்பது உலகறிந்த விஞ்ஞான உண்மை. அப்படியிருக்க ஜயத்ரதன் இறந்த அன்று எப்படி மீண்டும் அமாவாசை வரமுடியும்? என்று கேட்டோருக்கும் விளக்கம் உண்டு.
மஹாபாரதப் போர் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவில்லை. இடையிடையே போருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது . அதாவது போர்ச் சேதங்களை அகற்றவும், காயமடைந்தோரை குணப்படுத்தவும் இடையிடையே ‘லீவு’ எடுத்துக்கொண்டனர். அந்தக் காலத்தில் தர்ம யுத்தம் நடந்ததால் மாலை சூரிய அ ஸ்தமனத்துக்குப் பின்னர் போர் செய்ய மாட்டார்கள். ஆயுதம் இல்லாதவரைத் தாக்க மாட்டார்கள். புற முதுகு காட்டி ஓடுவோரைக் கொல்ல மாட்டார்கள். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் எவரும் வராத இடங்களில் மட்டுமே போர் நடைபெறும். சமயச் சடங்குகள், பண்டிகைகளை அனுஷ்டிக்க இடையிடையே போர் நிறுத்தப்படும் என்பனவெல்லாம் மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றினை ஊன்றிப் படிப்போருக்குத் தெரியும். ஆக, மகா பாரத யுத்தத்தில் இரண்டு அமாவசைகள் வந்ததும் அதில் ஒரு நாள் பூரண சூரிய கிரஹணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரஹணம் என்பதில் வட்டமான சந்திரனோ சூரியனோ நிழலின் கீழ் வருகையில் யாரோ அதை விழுங்குவது போல இருக்கும்; பாமர மக்களுக்கு நிழல் விஷயங்களை விளக்குவது கடினம் என்பதால் “பாம்பு விழுங்குகிறது” என்று சொன்னார்கள். ஆனால் இந்து மத அறிஞர்களுக்கு கிரஹண சாஸ்திரம் அத்துப்படி என்பதை வேதங்களில் வரும் குறிப்பிலிருந்து அறிய முடியும். பூரண சூரிய கிரஹணம் என்பது ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடிக்க முடியாது.
ஓரிடத்தில் அத்ரி முனிவர் நாலு மந்திரம் ஓதி முடிப்பதற்குள் சூரியன் மீண்டும் வெளி வந்ததை எப்படி ரிஷி முனிவர் பாடினார் என்ற அற்புதத்தைக் கீழே காணுங்கள்.
ரிக்வேதம் 5-40-5/6/7/89
பாடியவர் ரிஷி பெளமோ அத்ரி
சூரியனே! அசுரனின் புதல்வனான ஸ்வர்பானு , உன்னை இருளால் போர்த்தியபோது , தான் எந்த இடத்தில் நிற்கிறான் என்பதை அறியாமல் , கலங்கி நிற்கும் ஒருவனைப் போல, உலகங்கள் தோன்றின.
இந்திரனே நீ ஸ்வர்பானுவால் சூரியனின் கீழே பரப்பப்பட்டிருந்த மாயைகளை விலக்குங்கால் அத்ரி, இருளால் மறைக்கப்பட்டு தன் செயல்களில் தடைப்பட்டிருந்த சூரியனைத் தனது துரீய பிரம்மத்தால் கண்டான்.
அத்ரியே துரோகி , பசியால் உணவை விரும்பி, பயங்கரமான இருளோடு உனக்குரிய என்னை புசிக்காமல் இருப்பானாகுக. நீ மித்திரனாய் இருக்கிறாய். உன்னுடைய செல்வம் சத்தியம் ஆகும். நீயும் அரசனான வருணானும் சேர்ந்து என்னைக் காப்பாற்றுங்கள் .
பிறகு பிராமணனான அத்ரி , கற்களை சேர்த்து சோமத்தைப் பிழிந்து, தேவர்களை ஏத்தி வணக்கத்தோடு , அவர்களை போற்றி , சூரியனுடைய கண்ணை வானிலே ஸ்தாபித்தான் . அவன் ஸ்வர்பானுவின் மாயைகளை க் கலைத்தான்.
அத்ரி புதல்வர்கள் , அசுரப் புதல்வனான ஸ்வர் பானுவால் ஏவப்பட்ட இருளால் மறைக்கப்பட்ட சூரியனை மீட்டர்கள். அவைகளை விடுவிக்க வேறு எவராலும் இயலவில்லை
1. COME thou to what the stones have pressed, drink Soma, O thou Soma’s Lord,
Indra best Vrtra-slayer Strong One, with the Strong.
2. Strong is the stone, the draught is strong, strong is this Soma that is pressed,
Indra, best Vrtra-slayer, Strong One with the Strong.
3. As strong I call on thee the Strong, O Thunder-armed, with various aids,
Indra, best Vrtra-slayer, Strong One with the Strong.
ரிக் வேதத்தில் மேலும் பல இடங்களில் சூரிய சந்திர கிரஹணம் பற்றிய குறிப்புகள் உள . சந்திரனுக்கு ஒளி கிடையாது, அது சூரிய ஒளியையே பிரதி பிலளிக்கிறது என்பதையும் வேதகால ரிஷிகள் அறிவர். பிற்காலத்தில் காளிதாசன் முதலிய ஸம்ஸ்க்ருதக் கவிஞர்களும் இதைப் பாடியுள்ளனர்
ரிக் வேதம் 1-84-15ம் சூரியகிரஹணத்தையே குறிக்கும் என்பது ஆன்றோர் கருத்து –
சலனமாகும் சந்திர மண்டலத்தில் மறைக்கப்பட்டுள்ள துவஷ்டாவின் — கற்பிப்பவனின் ஒளியை சூரியனுடைய கதிர்கள் என அவர்கள் இப்போது அறிந்தார்கள் –1-84-15
13. With bones of Dadhyac for his arms, Indra, resistless in attack,
Struck nine-and-ninety Vrtras dead.
14. He, searching for the horse’s head, removed among the mountains, found
At Saryanavan what he sought.
15. Then verily they recognized the essential form of Tvastar’s Bull,
Here in the mansion of the Moon.
16. Who yokes to-day unto the pole of Order the strong and passionate steers of checkless spirit,
With shaft-armed mouths, heart-piercing, health-bestowing?
को अद्य युङकते धुरि गा रतस्य शिमीवतो भामिनो दुर्ह्र्णायून | असन्निषून हर्त्स्वसो मयोभून य एषां भर्त्यां रणधत स जीवात || क ईषते तुज्यते को बिभाय को मंसते सन्तमिन्द्रं को अन्ति | कस्तोकाय क इभायोत राये.अधि बरवत तन्वे को जनाय || को अग्निमीट्टे हविषा घर्तेन सरुचा यजाता रतुभिर्ध्रुवेभिः | कस्मै देवा आ वहानाशु होम को मंसते वीतिहोत्रः सुदेवः || तवमङग पर शंसिषो देवः शविष्ठ मर्त्यम | न तवदन्यो मघवन्नस्ति मर्डितेन्द्र बरवीमि ते वचः || मा ते राधांसि मा त ऊतयो वसो.अस्मान कदा चना दभन | विश्वा च न उपमिमीहि मानुष वसूनि चर्षणिभ्य आ ||
16 Apr 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). பாக்யா … ஆனால் முழு சூரிய கிரகணம் என்பதோ அற்புதமான ஒரு விஷயம்” – நீல் டி க்ராஸ் டைஸன் … 1133 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்று … புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் …
31 Mar 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … சூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி. சூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் … புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் …
2 May 2015 — சந்திரனின் மீது படும் சூரிய ஒளியே அதன் பிரகாசத்துக்கு … ரிக்வேத கால இந்துக்கள் இந்த நாட்டில் தோன்றிய குதிரைகள் … சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வணத்திலும் உள.
8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam …