Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-5-2026 கல்கி ஆன்லைன்இதழில் வெளியான கட்டுரை!
மரணத்தைக்கண்டுஅஞ்சாதே –
புருஷனும்புருஷோத்தமனும் – ஶ்ரீசத்யசாயிபாபா
அருளுரை!
ச. நாகராஜன்
22-10-1963 அன்று பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய அருளுரை!
வயதான ஒரு மனிதன் மரணப்படுக்கையில் இருந்தான். அவன் கன்னட
தேசத்தைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறேன். கடைசி தருணம் வந்த போது
அவனால் ஏதோ வார்த்தைகளை உளறத்தான் முடிந்தது. அவனது மகன்களால்
அதை அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் உடனே ஒரு டாக்டரை
அழைத்து கொஞ்சம் ஆக்ஸிஜனைக் கொடுத்து அவர் பேசுவது என்ன என்பதைப்
புரிந்து கொள்ள வையுங்கள் என்று வேண்டினர். தான் சம்பாதித்த பணைத்தை
எங்கே வைத்திருக்கிறேன் என்பதை அவன் சொல்ல முயல்வதாக அவனது
பிள்ளைகள் அனுமானித்தனர். ஆகவே அவனது வார்த்தைகளைத் தெளிவாக
அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களால் ஒரே ஒரு
எழுத்தை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த எழுத்து ‘க’. ‘க’ என்றால் என்ன?
‘க’ என்றால் கனகாவா? அதாவது தங்கமா? அல்லது ‘கரு’வா? அதாவது
கன்றுக்குட்டியா? அல்லது ‘க’ என்பது கஞ்சாவா? அல்லது கஸப்ரிகாவா அதாவது விளக்குமாறா?
விளக்குமாறை அவர்கள் கொண்டு வந்து காண்பித்தபோது அவன் தலையை
அசைத்தான். இறந்தும் போனான். அவன் விளக்குமாறாகவே பிறப்பு எடுக்க
நேர்ந்தது!
அவனைப் போல் நீங்கள் இறக்கக் கூடாது. நீங்கள் பீஷ்மரைப் போல மரணம் அடைய வேண்டும். சாந்திபர்வத்தை அவர் பாண்டவர்களுக்கு உபதேசிக்கும் போது அவர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். கிருஷ்ணர் முன்னால் இருக்க அவர் மரணம் அடைந்தார். கிருஷ்ணரின் இதயத்தில் புகுந்தார். மரணம் என்பது
பயப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நல்ல சந்தோஷமான தருணங்களில் பேசக் கூடாத விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரணம் என்பது நல்லதோ
அல்லது கெட்டதோ இல்லை. உங்களுக்கு அதைப் பற்றிய விருப்பத் தேர்வே
கிடையாது. நீங்கள் அதை வரவேற்றால் அதைச் சீக்கிரம் பெற முடியாது. அதைக் கெட்டது என்று நினைத்துத் திட்டினால் அதைத் தவிர்க்கவும் முடியாது.
அது பிறந்து விட்ட தருணத்திலேயே தவிர்க்கமுடியாததாக ஆகி விட்ட ஒன்று.
பிறந்த தருணத்திலேயே சுடுகாட்டை நோக்கிய பயணமானது ஆரம்பித்து
விட்டது. சிலர் அதை சீக்கிரம் அடைகின்றனர். சிலர் சுற்றுப்பாதை வழியாகச்
சென்று சற்று தாமதமாக அடைகின்றனர். மனிதனுக்கு மனிதன் இது ஒன்று தான் வித்தியாசம். ஆனால் மனிதனோ மரணம் என்பது தூரத்தில் இருக்கும் ஒரு துயரம் என்று நினைத்து நடக்கிறான்.
அண்டைஅயலாரில் ஒருவரின் குழந்தை இறக்கும் போது அவரிடம் சென்று அது ஒரு கனவு என்றும், குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் அவர்கள் நமது கொடுப்பினை என்றும் பழைய ஜென்ம கடன்களை உணரும் தருணம் அது என்றும் கூறித் தேற்றுகிறோம். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையை இழந்து
தவிக்கும் போது இதே வாதங்களால் உங்களைத் தேற்றிக் கொள்ள
முடியவில்லை. இந்த ஆறுதல் மொழிகள் எல்லாம் மற்றவருக்கு மட்டுமே தான்!
அர்ஜுனன் கிருஷ்ணரை புருஷோத்தமா என்று அழைத்தான். ஏனென்றால் அவரே புருஷர்களில் உயர்ந்த புருஷராவார். புருஷா என்றால் உடல் என்ற – புரா- என்ற நகரிலே – உள்ளவன் என்று அர்த்தம். ஒவ்வொரு உடலிலும் புருஷன்
இருக்கிறான்.
பிரபஞ்சம் அனைத்துமே புருஷோத்தமனைத் தன்னுள் கொண்டிருக்கிறது.
ஆகவே இறப்பது எது என்றால் உடல் மட்டுமே தான்! அதன் உள்ளே இருக்கும் புருஷன் அல்ல. புருஷன் உங்களின் உள்ளே இருக்கிறான் என்ற நம்பிக்கை உங்கள் தீய எண்ணங்களையும்,தீய நாட்டங்களையும் புலன்களையும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எனது பிளாக்குகளில் இலவசமாகப் படிக்கலாம்
முதலில் தலைப்புகளை மட்டும் படியுங்கள் ; எவ்வளவு சுவையானவையென்பது புரியும் ; 1300௦++ திருப்புகழ் பாடல்களை படித்து எடுத்த குறிப்புகள் இவை ; கட்டுரைகளை எழுதப் பிடித்த நாட்கள் 81; கட்டுரைகளை எழுதப் பிடித்த நேரம் 81X3 மணி நேரம்!
***
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1 (Post.15,362) 26/1
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 2 (27/1)
திருமாலுக்கு சிவன் கொடுத்த சக்ராயுதம்! அருணகிரி சொல்லும் அதிசயச் செய்திகள்! 28/1
நக்கீரர் கதை: அருணகிரிநாதர் சொல்லும் அரிய தகவல்கள் (Post.15,371) 29/1
அருணகிரிநாதர் கண்டுபிடித்த அணு விஞ்ஞானம் ! (Post No.15,375)30/1
ராவணன் ஒரு முட்டாள்! திருப்புகழில் அரிய செய்திகள்- Part 6 (31-1-26)
அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 7 (Post.15,382)1/2/2026
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் -Part 8 (Post No.15,385)
நோய்கள், காசு பறிக்கும் டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்- Part 10 (Post.15,393)
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 11 (Post.15,396)
அருணகிரி நாதர் பாடலில் முஸ்லீம் ஸலாமும் ஆதி சங்கரரின் அத்வைதமும்!-Part 12 (Post.15,398)
கனவுகள், எட்டுவகைப் பறவைகள், முருகன் கொடிகள் பற்றி முக்கிய செய்திகள்-13 (Post.15,401)
மூளையின் கலர் என்ன? செட்டியார் வடிவில் முருகன்!- Part 14 (Post.15,404)
திருப்புகழில் பங்களாதேஷ் கோவில்; காகத்துக்கு ஏன் ஒரு கண்? Part-15 (Post.15,407)
திருப்புகழில் வாளை மீன் ! யாதவர்கள் அழிந்த கதை – Part 16 (Post.15,410)
முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் ! திருத்தணி என்ற பெயர் எப்படி வந்தது ?- 17 (Post.15,413)
அளவிட முடியாதவை எவை? அருணகிரி தரும் பட்டியல்! – Part 18 (Post No.15,416)
திருப்புகழில் புஸ்தகப் பித்தர்கள் மீது தாக்குதல்! எட்டு அபூர்வ சக்திகளை அடைய உதவும் துதி!—Part 19 (Post.15,419)
பறவை ஞானிகள் ‘பரமஹம்சர்’ பற்றி அருணகிரிநாதர் (Post.15,423)
சரஸ்வதியின் சகோதரன் முருகன்! திருப்புகழில் மேலும் ஒரு புதிர்!- Part 21(Post No.15,425)
திருப்புகழில் திருமால் அவதாரங்கள்! விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை! -22 (Post No.15,428)
முருகனின் யானை வாகனம்- திருமால்! திருப்புகழில் பஞ்ச பாண்டவர்கள்!- Part 23 (Post No.15,430)
அருணகிரி நாதர் சொன்ன நான்கு கதைகள்! ஐந்து கோசம்!காந்த ஊசி!– 24 (Post No.15,433)
முருகன் ஒரு மாலுமி! அவன் ஓட்டும் கப்பல் பற்றி அருணகிரிநாதர்!-Part 25 (Post.15,436)
திருமாலை முருகன் அடக்கிய கதை! வேதத்தின் ஆறங்கம்! மதுரையின் பெருமை-Part 26(Post.15,438)
20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள்; திருப்புகழில் சொல் அழகும் பொருள் அழகும்! -27 (Post No.15,442)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திவ்யதேசம் திருச்சேறை / பஞ்சஸார க்ஷேத்திரம்
மூலவர்- ஸாரநாதன்
உத்ஸவர் – மாமதலைப்பிரான்
தாயார் – ஸாரநாயகி /ஸார நாச்சியார் / பஞ்ச லக்ஷ்மி
திருக்கோலம்- நின்ற
திசை – கிழக்கு
பாசுரங்கள் — 12
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 12
சாரநாதன் என்ற எம்பெருமான், சாரநாச்சியார் என்ற தாயார், சார புஷ்க்ரணி, சாரவிமானம் மற்றும் சார க்ஷேத்திரம் என்ற ஐந்தும் சேர்ந்து பஞ்ச சார க்ஷேத்திரம் என்று ஆயிற்று.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, சார நாச்சியார் என்று ஐந்து தேவிகளுடன் எம்பெருமான் காட்சி அளிக்கிறார். இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கு ஓப்பானதாகும்.
எம்பெருமான் காவிரி தாய்க்கு ப்ரத்யக்ஷம். குளக் கரையில் காவிரியம்மனுக்கு சன்னதி உள்ளது. காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது, அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார்
ராஜகோபாலன் சன்னதி உள்ளது. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம் தரிசிக்க வேண்டிய சன்னதி.
குடவாசலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை அமைந்துள்ளது .
கும்பகோணத்திற்கு குடத்தின் மூக்கு என்று சொல்வதை ஒட்டி, குடத்திற்கு வாசல், குடவாசல் என்ற அருகில் உள்ள ஊர். இந்த திவ்யதேசம், குடத்தின் சாரம், அதாவது மத்திய பாகம்.
மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது
திருச்சேறை, சாரநாதப் பெருமாள் (பஞ்சஸாரக்ஷேத்ரம்) மற்றும் செந்நெறியப்பர் (சிவன்) ஆகிய இரு முக்கிய கோவில்களைக் கொண்ட தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த (13 பாசுரங்கள்) மற்றும் தேவாரப் பதிகங்கள் (சம்பந்தர், அப்பர்) பாடியுள்ள சிறப்புமிக்க தலம்.
திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானை பற்றி பாடும் போது, இந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கும் எல்லா பக்தர்களையும், ஆழ்வார் தன்னுடைய தலையில் தாங்குவதாக கூறி உள்ளார். “செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே” (பெரிய திருமொழி 7.4.1)
கண்கள் சுழன்று சோரவும், வெப்பக் குருதி வெள்ளம் வெளிப்படவும், தீத்தழல்போல் சிவந்த கூந்தலுடைய பூதனையின் முலைப்பாலை குடித்து மடியச்செய்த பச்சிளம்பிள்ளையே ! வானவர் தலைவனே ! வானில் திரியும் இளம்பிறை வயிற்றைத் தொடும் மணி மாளிகைகள், செல்வம் வாய்த்ததுமாகிய திருச்சசேறை எம் பெருமானைத் தோழுவர்தம் திருவடிகளைத் தலைமேல் ஏற்பேன்.
1579
அம் புருவ வரி நெடுங்கண்
அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து
மல்லல் கொம்புருவ விளங்கனி மேல்
இளங் கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை
வண்சேறை வானுந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார்
எப்பொழுதும் என்மனத்தே இருக்கின்றாரே
அழகிய புருவத்துடன் நீள்விழிகளும் உடைய மலர்மகளைத் தனது திருமார்பில் வைத்தவன், தழைத்த கிளைகளில் விளங்கனிகளின் மேலே இனங்கன்றைக் குறுந்தடியாக எறிந்தவன், மணம் பரவியும் குளிர்ந்த சோலைகள் சூழும் திருச்சேறை திருக்கோயிலில் வாழ்கின்ற பெருமானுடைய திருவடிகளைத் தொழுவார்கள் எல்லோரும் எப்போதும் என் மனத்தில் வாழ்கின்றார்கள்.
தோ் நடத்த வல்லவனும் வாளை ஏந்தியவனுமான இராவணனின் இலங்கையைக் போரில் வில்லை ஏந்திக் கொடிய அம்புகளை ஏவி அழித்த இராமனே ! திருத்துழாய் மாலையுடன் விளங்கும் திருமார்புடையவனே, மேலுலங்களையும் காக்கும் பெருமையுடைய திருச்சேறை எம்பெருமானுடைய திருப்பெயர்களை ஓதிப் போற்றும் பெரியோர்களைக் கணப்போதும் நான் பிரியமாட்டேன்.
1582
வந்திக்கும் மற்றவர்க்கும்
மாசுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி உருவாய்
இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச்சோலைத்
தண்சேறை எம்பெருமான் தாளை
நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே
இரணியன் வலிமையை அழித்த பெருமானுக்கே நான் உரியவன். வலிந்து வாது செய்யும் சமணர்க்கும், மற்றும் பெளத்தர்கட்கும் நான் உரியேன் அல்லேன். சந்தனமலர்ப் பொழில்கள் சூழந்த திருச்சேறை எம்பொருமானுடைய திருவடிகளை நாள்தோறும் எண்ணுவார்க்கு என் உள்ளம் தேன் அடர்ந்தது போல எல்லாக் காலமும் இன்புறுகின்றது.
1583
பண்டேனமாய் உலகை அன்றிடந்த
பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணையல்லால்
துணையிலேன் சொல்லுகின்றேன்
வண்டேந்தும் மலர்ப்புறவில்
வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மை
கண்டேனுக்கு இது காணீர்
என் நெஞ்சம் கண் இணையும் களிக்குமாறே
முன்னர் வராகமாய் உலகைக் குத்தியெடுத்த நீர்மையனே ! உன்னை துதித்துத் தொண்டானேன் நான் : தேவரீர் திருவடிகளே எனக்குக் காப்பு . இவை தவிர வேறு புகலிடம் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன். வண்டுகளைக்கொள்ளும் மலர்ச் சோலை சூழ்ந்த நிலங்களுடைய திருச்சேறையில் உறையும் எம்பெருமானின் அடியார்களைக் கண்ட இப்பேறு, என் கண்களையும் நெஞ்சையும் களிக்கச் செய்கிறது.
1584
பைவிரியும் வரியரவில்
படுகடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல்
மாயவனே என்றென்றும் வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்
திருவடியைச் சிந்தித்தேற்கு
என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம்
என் அன்புதானே
திருப்பார்கடலிலே திருவனந்தாழ்வான் மேல் கண்வளரும் எளியோனே! என்றும் அருள் படர்ந்த நீலமணி மலை போல் திருமேனித் திருமாலே! பலகாலும் வண்டுகள் அமரும் கருநெய்தல் கழனிகளிலே மலரும் தண்சேறை எம்பெருமானை சிந்திக்கின்றேன். என் ஐம்பொறிகளால் விளையும் அறிவூற்றிப் பெருமானை தனக்கே ஆக்கிக்கொண்டு அடிமைப்பட்டவர்பால் என்னுடைய அன்பும் அடிமைப்படும்.
வயல்களில் முளைத்துள்ள நெய்தல் மலர்களைக் களைந்ததால் மணம் பரவும் திருச்சேறைப் பெருமானது திருவடிகளை நாள்தோறும் மனத்தில் வைத்து நினைப்பவரை எனது மனம் நெகுழும். இப்பேறு எவ்வாறு எனக்குக் கிடைத்தது. நான் இறைவனுக்குரிய உள்ளுயிரை எனது என்று நினைக்கும் கள்வன், வஞ்சக நெஞ்சினன், ஆதலால் துன்பப் பெருங்கடலில் அழுந்தியிருப்பவன். எனக்கும் இப்பேறு கிட்டும்.
1587
பூமாண்சோ் கருங்குழலார் போல் நடந்து
வயல் நின்ற பேடையோடு
அன்னம் தேமாவின் இன்னிழலில் கண்துயிலும்
தண்சேறை யம்மான் தன்னை
வாமான் தோ்ப் பரகாலன்
கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர்
தூ மாண்சோ் பொன்னடிமேல் சூட்டுமின்
நும் துணைக்கையால் தொழுது நின்றே
பூச்சூடிய கருங்கூந்தல் பெண்கள் போல் வயல்களிலே அன்னம் பெடையோடு உலாவி, தேமா மரத்தின் குளிர்ந்த நிழலில் உறங்குகின்ற திருச்சேறையில் உறையும் பெருமானைத் தாவிப்பாயும் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, பகைவர்களை வெல்லும் கலிகன்றி ஆழ்வார் பாடிய பாடல்களைப் பாடும் பக்தர்களை அழகு மிக்க தூய பெருமானதுத் திருவடிகளின் மேலே கைகளைக் குவித்து வணங்குவீர்.
விசேஷங்கள் – பெருமாளுக்கெதிரே நதிதேவதைகள் வணங்குகின்றனர். இங்கேதான், ஸ்ரீமந்நாதமுனிகள் “ஆராவமுதே” என்று தொடங்கும் திருவாய்மொழிகளைக் கேட்டு, திவ்யப்ரபந்தத்தையே தொகுக்க ஆரம்பித்தார். ஆழ்வார்கள் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும் நிலைநிறுத்திய ஸ்ரீ ஆராவமுதப் பெருமாளுக்கு, ஸ்ரீ மந்நாத முனிகள், “ஆராவமுதாழ்வான்” என்ற திருநாமம் சாற்றியருளினார்.
ஹேமரிஷியின் புத்ரியாகத் தோன்றித் தவம் புரிந்த கோமளவல்லித் தாயாரை மணந்ததாக ஐதீஹம்.
பெருமாளின், அழகிய, பெரிய சித்திரைத்தேர் ப்ரஸித்தி பெற்றது. பெருமாள் ஸந்நிதியே தேர் சக்கரங்களுடன் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. தாயாரை மணந்து கொள்ள இத்தலத்துக்கு சுவாமி தேரில் வந்ததால், சுவாமியின் சந்நிதி தேர் அமைப்பில் உள்ளது. ஆயிரம் இதழ் கொண்ட பெற்றாமரை குளத்தின் அருகில் கண்டெடுக்கப்பட்டதால் கோமலவல்லி என்று பெயர் சூட்டினர். திருமால், ஆராவமுதன் என்ற திருநாமத்துடன் யானைகள், குதிரைகள் பூட்டிய தேரில் வைகுண்டத்தில் இருந்து வந்து தாயாரைத் திருமணம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
ராமஸ்வாமி கோவிலும் சக்ரபாணி கோவிலும் இவ்வூரில் உள்ளன. சக்கரபாணி அஷ்ட புஜங்களுடன் விளங்குகின்றார். இவருக்கும் இவரது தமையனாரெனக் கருதப்படும் சாரங்க பாணிக்கும் சேர்ந்து பல உத்ஸவங்கள் நடக்கின்றன.
சக்ரபாணி மற்றும் சாரங்கபாணி ஆகிய இரு கோவில்களும் அருகருகே அமைந்து, குடந்தையின் (கும்பகோணம்) புகழைப் பாடுகின்றன.
பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இக்கோவில் கருவறையில் கோமளவல்லி தாயார் மற்றும் மகாலட்சுமியுடன் சாரங்கபாணி பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மதேவர், தலைப் பகுதியில் சூரிய பகவான் உள்ளனர். கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
கையில் சாரங்கம் என்னும் வில்லினை ஏந்தி வந்ததால் இவருக்கு சாரங்கபாணி (சாரங்கம்- விஷ்ணுவின் வில்; பாணி- கை) என்ற பெயர் உண்டாயிற்று.
மத்திய ஆலயம் எனப்படும் கருவறை, 100 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாக அணுகப்படுகிறது. தேரின் வடிவத்தில் உள்ள உள் கருவறை வெளிப்புற நுழைவாயிலை எதிர்கொள்ளும் துவார பாலகர்களால் பாதுகாக்கப்படுகிறது.
கோயிலின் மைய ஆலயத்தில், சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. இங்கு சாரங்கபாணி தலையைத் தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தட்சிணாயன வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்குத் திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை, உத்தராயண வாசல் திறக்கப்படுகிறது. அதே போல, தட்சினாயண வாசல் ஆண்டின் பிற்பாதியில் திறக்கப்படுகிறது.
கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில் இக்கோவில் மிகப் பழமை வாய்ந்ததாகும். கலைநயம் மிக்க சிற்பங்கள், தூண்கள், மண்டபங்கள், ராஜ கோபுரங்கள், சோழர்களால் கட்டப்பட்டுள்ளன.
கோவிலின் ராஜகோபுரம் 11 நிலைகளுடன், 173 அடி (53 மீ) உயரம் கொண்டது. மேலும் 5 சிறிய கோபுரங்கள் உள்ளன. பொற்றாமரைக் குளம் மேற்கு நுழைவாயிலுக்கு வெளியே அமைந்துள்ளது.
பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்: லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தைக் கட்டியவரும் இவரே. அவருக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடி அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்குத் தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.
இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்தபோது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன் பக்தனுக்கு ஈமக்கிரியை செய்து வைத்து கருணைக்கடலாக விளங்கினார்.
தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது.
மறைந்து போயிருந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ஸ்ரீ நாதமுனிகள் இந்தத் தலத்தின் பெருமாளை வேண்டி, அவரது அருளால் பிரபந்தங்களை மீட்டெடுத்தார்.
.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்! என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், அப்படியே காட்சி கொடு! என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர்.
நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை ஓராயிரத்துள் இப்பத்தும் என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா! என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி – தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ****.
பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன் :
திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், பாதாள சீனிவாசர் சன்னதி என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(ENGLISH VERSION OF Prostitution in Ancient Tamil Nadu; Parattaiyar or public women in Narrinai (Post No.15,663) WAS POSTED YESTERDAY)
உலகில் விபச்சாரமும் விலை மகள்களும் இல்லாத எந்த சமுதாயமும் இல்லை; கலாசாரமும் இல்லை ; எல்லா மத நூல்களிலும் இது குறித்த எச்சரிக்கைகள் உள்ளன . எனினும் சங்கத் தமிழ் பாடல்களிலும் அருணகிரிநாதர் யாத்த திருப்புகழ் பாடல்களிலும் இது சற்று தூக்கலாகக் காணப்படுகிறது . இதனால் இது குறித்து தமிழ் அறிஞர்கள் கதைக்கவே பயப்படுகிறார்கள் ; கே கே பிள்ளை எழுதிய ஆங்கில நூலில் நற்றிணையில் உள்ள விலைமாதர்கள் பாடல்களை எழுதி இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்கிறார் . எங்கள் குடும்ப நண்பரும் மதுரை வடக்கு மாசிவீதியில் எங்கள் வீட்டுக்கு அடுத்து வசித்தவரும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் (எஸ் ஆர் கே ) இது குறித்து மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் :
“அகத்தினை இலக்கியம் உலக இயல் வாழ்வின் படப்பிடிப்பு இல்லை என்பதை இன்னும் ஒரு வகையிலும் ஊகிக்கலாம். சங்க காலத்தில் பரத்தையர் இருந்தனர் என்பதும் , மேல்வருக்க இளைஞர் பலர் பரத்தையர்களை நாடி இழிவுற்றனர் என்பதும் மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் முதலியவற்றால் விளங்குவது மெய்யே . ஆனால் பரத்தைமை என்பது சிறுபான்மையோரைப் பிடித்த நோயே. மக்கட் தொகையுடன் ஒப்பிடும்போது விலைமகளிர் சிலரே . அவர்களும் பெரும்பாலும் புகார், மதுரை முதலிய பெரு நகரங்களிலே வாழ்ந்தனர் . ஆனால் அகத்திணை இலக்கியத் தலைவர்கள் மனைவியரை நீங்கி பரத்தையரை நாடிச் செல்வோராகக் காட்சி தருகின்றனர் . 966 கற்பியர் பாக்களில் 279 பரத்தையர் பிரிவுக்குரியனவாக உள்ளன. இது உண்மை வாழ்வின் வெளியீடு எனில் , குல மகளிர் பாதி, விலை மகளிர் பாதியாகப் பெண்குலம் அமைந்திருந்தது என்று தோன்றும். அத்தகைய இழிநிலை சமுதாயத்துக்கு ஒருபோதும் வாய்க்கவில்லை என்பது வெளிப்படை . எனவே அகத்திணை கற்பனையை சமுதாய வாழ்வின் சித்திரமாகக் கொள்வது பிழையே “.
— இந்தியப் பண்பாடும் தமிழரும் – எஸ் இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை , 1971
தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கூட இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழர்களை எச்சரிக்கின்றனர் .
***
இனி நற்றிணையில் வரும் பாடல்களில் விலைமகளிர் பற்றி வரும் இடங்களைக் காண்போம்.
எல்லாப் பாடல்களும் மருதத் திணையில் உள்ளவை ; அந்த திணையில் இப்படிப்படுவது ஒரு மரபு; ஒரு பாணி ; அதிலும் குறிப்பாக பரணர் பாடல்கள் மிகுந்திருப்பதையும் கவனிக்க வேண்டும் . இவை தவிர ஒரே ஆணுக்குப் பல விலைமாதர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவனை இழுத்த விஷயமும் , விபச்சகாரிகளிடையே ஆட்களை பிடிக்க நடந்த சண்டைகளும் ஒரு விலைமாதர் சேரி க்குள் வேறு ஒருவள் வாடிக்கையாளரைப் பிடிக்க வந்த போது விரட்டிய செய்திகளும் ஏனைய அகப்பாடல்களில் கிடைக்கின்றன
***
நற்றிணை 30 ஒரே ஆண்மகனைச் சுற்றி பல விலைமாதர்கள் இழுபறி
கடலில் செல்லும் பாய்மரக் கப்பல் கவிழ்ந்ததால் மனம் கலங்கி, அதிலிருந்த ஒரே ஒரு மிதக்கும் பலகையைப் பலர் அவரவர் பக்கம் இழுப்பது போல உன்னை பரத்தையர் பலர் அவரவர் அணைப்புக்கு இழுத்துத் துன்புறுவதைப் பார்த்தேன்.
30. மருதம்
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தோழி சொல்லியது.கொற்றனார் பாடல்
பரத்தை சொல்கிறாள்: அவன் என் கூந்தலையும் கையையும் பிடித்து இழுத்தான். உன் மனைவியிடம் சொல்லிவிடுவேன் என்றேன். அவன் நடுங்கிப் போனான். அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது.
பாடல் 100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் 5
சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்” என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் 10
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.
***
நற்றிணை 20 பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தலைவி சொல்லியது; ஓரம்போகியார் பாடல்.
மனைவி சொல்கிறாள் ,“ஐய, நீயா ஒன்றும் தெரியாதவர்?
அவளா ஒன்றும் தெரியாத மடந்தை? அவளை நான் என் கண்ணால் பார்த்தேனே.உன்னுடைய மார்பிலே அவள் படுத்துக்கிடந்தாள். அதனால் உன்னுடைய பூ மாலையின் மணம் அவள் கூந்தலில் கமழ்ந்தது.
அந்தக் கூந்தலை அவள் உலர்த்திக்கொண்டு ஆடையையும் ஆட்டிக்கொண்டு ,.வளையல் ஓசை கேட்கும்படி கையை வீசிக்கொண்டு தெருவில் நடந்துவந்தாள். கண்களை விரித்து அங்குமிங்கும் (உன்னைத்) தேடிக்கொண்டு வந்தாள்.
ஆமாம். அவள் உன்னைத் தழுவவே இல்லை? (தழுவியவள் என்னும் ஏளனக் குறிப்பு).
மருதம்
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில், 5
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,
சென்றனள் வாழிய, மடந்தை! நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,
பழம் பிணி வைகிய தோள் இணைக் 10
குழைந்த கோதை, கொடி முயங்கலளே.
***
நற்றிணை 380 Natrinai 380பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.;கூடலூர்ப் பல்கண்ணனார் பாடல்
பரத்தை வீட்டிலிருந்து மீளும் தலைவன் ,தன் வீட்டிற்குள் நுழைய முனைகிறான். பாணன் அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறான் அப்போது தோழி சொல்கிறாள் “பயன் இல்லாத சொற்களைப் பேச வேண்டாம். சமையல் செய்த எண்ணெய் (தாளிக்கும்போது சிதறிய) பட்டு என் தலைவியின் ஆடை அழுக்காக உள்ளது. பால்
பருகும் குழந்தையின் வாயும் பட்டு, நாற்றம் வீசுகிறது. தேரில் சென்று சிறந்த அணிகலன்களுடன் சேரியில் பகட்டும் மகளிருடன் வாழும் உன் தலைவனுக்கு என் தலைவி தகுந்தவள் இல்லை. அவனைக் கூட்டிக்கொண்டு ஒடி விடு” .
திணை மருதம்
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
வால் இழை மகளிர் சேரித் தோன்றும் 5
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;
கொண்டு செல் பாண! நின் தண் துறை ஊரனை,
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் 10
புரவியும் பூண் நிலை முனிகுவ;
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!
***
உன்னைத் தொட்டால் எச்சில்கலையைத் தொட்டதற்குச் சமம்; இங்கிருந்து ஒடு
நற்றிணை 350 Natrinai 350தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.பரணர் பாடல்
நீ என்னை அணைக்காமையால் என் நலம் தொலையும்.
அப்படித் தொலைந்தாலும் தொலைந்துவிட்டுப் போகட்டும்.
நீ என்னை நெருங்க விடமாட்டேன். அப்படி உன்னை என்னிடம் நெருங்க விட்டால், என் கை என்னை அறியாமல் உன்னைத் தழுவிவிடும். அதனைத் தடுக்கும் வலிமை எனக்கு இல்லை.
உன் மார்போ, பரத்தை முலையைத் தழுவிய சந்தனத்தையும்,
தழுவியதால் வாடிய மாலையையும் உடையது. அது
பரத்தை உணவு உண்ட எச்சில் வட்டி போன்றது. என்னிடம் வராதே.
அவளைத் தழுவிய தோளுடன் என்னிடம் வராதே.
திணை மருதம்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,
பழனப் பல் புள் இரிய, கழனி
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்
தொல் கவின் தொலையினும் தொலைக! சார 5
விடேஎன்: விடுக்குவென் ஆயின், கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை; வாடிய கோதையை;
ஆசு இல் கலம் தழீஇயற்று;
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே!
***
பக்கத்தில் வராதே, போ, போ !
நற்றிணை Natrinai 260 ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.பரணர் பாடல்
என்னை விரும்புபவன் போல நடித்துக்கொண்டு என்னை அணைத்துக்கொண்டு உறங்கும் பகைவன் நீ.
நான் உன் பழைய செயலை மறக்கமாட்டேன்;
அரசன் வயவன், பகைவர்களைப் போர்முனையில் அழித்தவன்.
அவன் தலைநகரம் இரும்பை. அது நீர்வளம் மிக்க ஊர்.
அந்த ஊர் போலத் தழைத்த என் கூந்தலில் சூடிய பூக்களை வாடச்செய்த பகைவன் நீ. அதனை நான் மறக்கமாட்டேன்.
இவ்வாறு பரத்தையிடம் சென்று வந்த தலைவனிடம் தலைவி கூறுகிறாள்.
திணை மருதம்
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி: முனை எழத் 5
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!
***
நற்றிணை Natrinai 225 பரத்தை தலைமகள் கேட்கும்படி சொல்லியது; கபிலர் பாடல்
முருகக் கடவுள் போன்ற வலிமையோடு தன் சினத்தால் போரிட்ட யானையின் வெள்ளைக் கொம்பு கரை படிந்து சிவப்பாக காணப்படுவது போலவும், வாழைப்பூ மொட்டு போலவும், மகளிரின் ஓதிக் கொண்டை போலவும், தோன்றும் முலை உடையவர் யாரேனும் ஆசைதீரத் தழுவியவர் உண்டோ, தோழி! என்னிடம் அன்பு இல்லாதவனாக அவன் இருக்கிறானே, என்று காமக்கிழத்தி தன் தோழியிடம் கலங்கிக் கூறுகிறாள்.
திணை குறிஞ்சி
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை 5
இரந்தோர் உளர்கொல் தோழி! திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?
வன்புறை எதிர் அழிந்தது;
***
நற்றிணை 320 Natrinai 320தெருவில் பொது மகளிர் நடமாட்டம்; குடும்ப்பப்பெண்கள் அச்சம்
பரத்தையின் காதில் விழும்படி சொல்லியது. கபிலர் பாடல்
துணங்கை விழா முற்றுப்பெற்றது. விழாவில் முழக்கிய முழவு மாட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. என்ன நோக்கத்தோடு இவள் தன்னை அழகு படுத்திக்கொள்கிறாள், என்று கேட்கிறாயா? (தலைவனுக்குத் தோழி சொல்கிறாள்)
தழை அணிந்த அல்குலை உடைய ஒருத்தி (பரத்தை)
தெருவில் நடந்து சென்றாள். அதற்காக, ஊரில் உள்ள மகளிர் அனைவரும் தன் கணவனுக்கு வைத்திருக்கும் காவலை
அதிகப்படுத்தினர். அவர்கள் நல்ல அழகிகள் தான் என்றாலும் தம் கணவன்மாரின் கவனம் தம்மிடம் திரும்புமாறு தம்மை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.
காரி அரசன் ஓரி அரசனைக் கொன்றுவிட்டு
தன் பகையாளி ஓரி நகரில் நடந்துசென்றபோது
ஊரே ‘கல்’ என்று ஆள் நடமாட்டம் இல்லாமல் கிடந்தது போல்
இந்த ஊரின் நிலைமை ஆயிற்று.
திணை மருதம்
”விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்?” என்றி ஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், 5
காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.
***
நற்றிணை 340 Natrinai 340 பரத்தை வீட்டிலிருந்து திரும்பிய தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.நக்கீரர் பாடல்
மகிழ்ந! நீ உன் உடலுறவுக்காரி வீட்டிலிருந்து வந்துள்ளாய்.
அதனால் உன்னை நான் தழுவமாட்டேன். அதற்காக உன்னை நான் சினந்துகொள்ளவும் மாட்டேன். செழியன் ஊர் போல் வளமுடன் திகழ்பவள் நான். என் வளையல்களைக் கழலச் செய்தவன் நீ .என்னைப் பிரிந்து உன் பரத்தையோடு வாழுங்காலத்து என் வளையல்கள் உன்னை நினைந்து கழன்றன.அப்படிப்பட்ட உன்மீது சினம் கொள்வேனா? மனைவி தன் கணவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.
திணை மருதம்
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங்குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, 5
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன, என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!
***
போ போ நீ யார்கிட்ட வேணுமானாலும் போ !
நற்றிணை 360 Natrinai 360
விழாவில், விறலிப் பெண்பாவை ஆடுவாள். அவள் போன்ற ஒருத்தியை, நேற்று இழுத்துப் புணர்ந்து அவளது புத்தழகைத் துய்த்தாய். இன்று இன்பம் தரும் மெல்லிய தோள் கொண்ட மகளிரைப் பெறுவதற்காகச் சென்றுகொண்டிருக்கிறாய். பெருமானே!
உன் பரத்தைமை சிறக்கட்டும்.
அங்குசத்தால் குத்தி யானைக் குருதியைப் பலக்குவோர் சோறு கொடுத்தால் அது அதைத் திண்ணாமல் வாரி இறைக்கும்; அந்தச் சோற்றுக் கவளம் பயனற்றுப் போவது கண்டு பாகர் வருந்துவது போல, நீ சில பெண்களுக்கு கொடுத்த செல்வம் பயன் இல்லாமல் போவது கண்டு நீ வருந்துகிறாய். அது எனக்கு மகிழ்வாக இருக்கிறது.இந்த இல்லத்தில் இன்பத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.இப்போது நீ விரும்பியவளிடம் செல். உன் பரத்தமை வாழ்க.
(தலைவி சொல்வது போலத்
தோழி தலைவனிடம் சொல்கிறாள்.)
திணை மருதம்
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல,
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி,
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,
சென்றீ பெரும! சிறக்க, நின் பரத்தை! 5
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென்; 10
மற்றும் கூடும், மனை மடி துயிலே.
பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; ஓரம்போகியார் பாடல்
***
பொது மகளிர் பற்றித் திருக்குறள்
வரைவின் மகளிர்
அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.1
கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.2
பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.3
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார்.4
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.5
அழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.6
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொதுமகளிரின் தோளைப் பொருந்துவர்.7
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.8
ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.9
இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.10
–subham—
Tags-
சங்க காலத்தில், விலைமாதர்களும் விபச்சாரமும் , பொது மகளிர் , நற்றிணைப் பாடல்கள் , உண்மை நிலை என்ன?பொது மகளிர் பற்றித் திருக்குறள்
அன்றிலங் கிரி … அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்ட
மலையை
இரு பிளவாக … இரண்டு கூறாகப் பிளக்குமாறு
ஒரு வேல் விடுத்தனை … ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய்.
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த … காவிரியின் வட பாகத்தில் விளங்கும் சுவாமிமலையில் இருக்கும்
ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற … சரவணபவ என்னும்
உன் ஷடாக்ஷர மந்திரத்தை ஓதும் அந்தணர்கள் உனது பாத
கமலங்களைப் போற்ற,
ஏரகத்து இறைவன் என இருந்தனையே. … திருவேரகத்தின்
இறைவன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய்.
குறிப்பு:
இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல்
அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாடல்.
1
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
இடையில் தேர் தட்டு
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
1
சில தமிழ்ச் சொற்கள் இரு பொருள் படும்படி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மூவாதாயினை என்ற சொல்லுக்கு இரு பொருள் ..
(மூவா = மூன்று மற்றும் மூவா = வயதாகாமல் இளமையாக).
* முருகனுக்காக வள்ளியை பயமுறுத்த விநாயகர் கிழ யானையாகி மதம் பெருக வந்தார். அப்படி வந்த யானை முருகனுக்குப் பின்பு தோன்றியதால், முருகன் இங்கு மூத்தவன் ஆகிறான்.
DEVI- GODDESS WORSHIP IN HARAPPA, MOHANJADARO சிந்து சமவெளியில் தேவி வழிபாடு
Written by London Swaminathan
Post No. 15,628
Date uploaded in London –17 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
HUMAN SACRIFICE IN INDUS VALLEY; சிந்து சமவெளியில் ஒரு தெய்வத்துக்கு நர பலி; கீழே சப்த மாதர்கள்
கடவுளைக்க கல்லிலோ, உலோகத்திலோ, படத்திலோ ஓவியத்திலோ உருவமாக வழிபடுவது இந்து மதத்தில் மட்டுமே உள்ளது ; வேதத்தில் உருவங்கள் வருணிக்கப்பட்டாலும் சிந்து சமவெளியில்தான் ஆதாரங்கள் கிடைத்தன . ஒருவர் தேவியின் முன்னால் குனிந்து வணங்கி ஒரு (மனிதனின்) தலையை காணிக்கையாக சமர்ப்பிப்பதைக் காண்கிறோம். கீழே சப்த மாதர்கள் (ஏழு கன்னிமார் ) இருப்பதையும் காண்கிறோம். சிவலிங்கங்கள் கண்டுபிடித்ததாக வெள்ளைக்காரர்கள் முதல் நாளிலேயே சொன்ன தெல்லாம் தவறு என்று பிற்கால ஆராய்ச்சியாளர்கள் சொல்லிவிட்டனர் ; அவைகள் லிங்கம் அல்ல யோனிகள் அல்ல என்றும் தாயக்கட்டடத்தில் வைத்து விளையாடும் காய்கள் GAMESMEN என்றும் சொல்லிவிட்டார்கள் ; பிராணிகள் சூழ்ந்த உருவத்தை பசுபதி முத்திரை என்று வெள்ளைக்காரர்கள் சொன்னதை மறுக்கும் விதத்தில் அயர்லாந்திலும் பஹ்ரைன் தீவிலும் பிராணிகள் சூழ்ந்து நிற்கும் தெய்வங்களின் முத்திரைகள் கிடைத்தன ; ஆகையால் அது பசுபதி அல்ல ; பொதுவாக இறைவன் என்ற கருத்தும் உருவானது . ஹரப்பா, மொஹஞ்சசதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட தேவியர் சிலைகள் பாகிஸ்தான் மியூசியங்களில் உள்ளன. எது எப்படியாகிலும் யஜுர் வேதத்தில் சிவ பெருமானை வருணித்ததை அப்படியே புறநானூற்றிலும் தேவார திருவாசகத்திலும் காண்பதோடு நில்லாமல் சோழர்காலச் சிற்பங்களிலும் காண்கிறோம்; கோயில் வழிபாட்டு விக்கிரககங்களிலும் காண்கிறோம். ரிக்வேதத்திலேயே சிவ பெருமானின் உருவம் வருணிக்கப்பட்டதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார் .
DEVI WOSHIP IN INDUS VALLEY
வேத காலத்தில் துவங்கி சிந்து சமவெளியில் வணங்கி இன்று பாரத நாடு முழுதும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் உள்ள இந்த உருவ வழிபாடு இன்றுவரை இந்து மத்தில் மட்டுமே உள்ளது .ஒரு காலத்தில் இந்த உருவ வழிபாடு உலகம் முழுதும் இருந்ததை முகமது நபிக்கும் முன்னதாக உள்ள காபா (மெக்கா) உருவத்திலும் கிறிஸ்தவ மத கன்னிமேரி சிலைகளிலும் காணலாம் ; ஆயினும் அவர்கள் உருவ வழிபாட்டினைப் போற்றுவதில்லை .
இதற்குப்பின்னர் சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் கடவுள் உருவங்களை பெருமளவில் உற்பத்தி செய்து விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று அரசாங்கத்துக்கு சாணக்கியர் யோஜனை தந்ததையும் காண்கிறோம் .
சங்க இலக்கியத்தில் பரிபாடலில் தெளிவான குறிப்பு ஒன்று கிடைக்கிறது ; ஒரு பட்டிக்காட்டான் திருப்பரங்குன்றத்துக்கு வந்தபோது ஒரு சமய ஓவியத்தில் பூனை இருப்பது வினோதமாக இருக்கிறதே என்று கிராமத்தானின் மனைவி கேட்கவே அவளது கணவன் “அடியே! உனக்கு இது தெரியாதா ? அஹல்யாவை மானபங்கப்படுத்திவிட்டு இந்திரன் பூனை போல சென்றானே” என்கிறான். அங்கே இந்திரனின் புராணக்கதை சித்தரிக்கப்பட்டது தெரிகிறது .
SO CALLED PASUPATI IN INDUS VALLEY
காதா சப்த சதி என்னும் பிராகிருத மொழி காதல் தொகுப்பில் ராமாயண ஓவியம் வருகிறது; அண்ணன் மனைவி வீட்டில் தனியே இருக்கும் பொது தம்பியானவன் தவறான பார்வையில் அண்ணியைப் பார்த்தவுடன் அவள் ராமாயண ஓவியத்தைக் காட்டுகிறாள். “அதோபார் லட்சுமணன், அண்ணியின் (சீதையின்) கால்களை மட்டும் பார்த்த வண்ணம் நடக்கிறான்” என்று ; இந்த பிராகிருத நூல் சங்க காலத்தில் எழுந்ததே ; ஆனால் ஓவியம் இருந்த இடம்- ஆந்திரத்தில் கோதாவரி நதிக்கரை ஊரில்.
பதஞ்சலி முனிவர் , உலகப் புகழ்பெற்ற முதல் இலக்கண நூலான பாணினீயத்துக்கு உரை எழுதினார்; அதை மஹா பாஷ்யம் / பேருரை என்றே அழைப்பார்கள் . அதிலும் அர்த்த சாஸ்திரம் போல பல குறிப்புகள் கிடைக்கின்றன
2200 ஆண்டுகளுக்கு முன்னர் கருட ஸ்தம்பங்கள் நிறுவப்பட்டதை கரிகால் சோழன் யூப ஸ்தம்ப பாடலிலும் ககிரேக்க தூதன் மத்திய பிரதேச விதிஷா நகரில் நிறுவிய தூணிலும் காண்கிறோம்
புத்த மதத்தினர் கற்களில் உருவத்தை சமைக்கும் வரை இந்துக்கள் களிமண்ணையும் பட ஓவியங்களையும் மட்டுமே பயன்படுத்தினர் இதனால் புத்தரின் காலத்துக்கு முந்திய ஓவியங்களோ உருவங்களோ கிடைக்கவில்லை; குஷானர் வெளியிட்ட நாணயங்களில் இந்து தெய்வங்கள் உள்ளன; அதற்கு முன்னர் வடமேற்கு இந்திய கிரேக்க மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் கிருஷ்ணன் பலராமன் உருவங்கள் உள்ளன . இந்தப் பின்னணியில் பார்க்கையில் அடுத்து வந்த சங்க காலத்தில் உருவ வழிபாடு இருந்ததை இல்லுறைத்தெய்வம் என்ற குறிப்புகளில் காண முடிகிறது.
குஷான மன்னர்களுக்கும் முன்னதாக யாதேயா வெளியிட்ட நாணயங்களில் முருகனின் ஆறுமுகங்களையும் ஆறு புள்ளிகளாக வடித்துள்ளனர் .
GHOSTS IN INDUS VALLEY SEALS
சங்க கால குறிப்புகளைக் காண்போம்:
நடுகல் வழிபாடும் உருவ வழிபாடே ; இதைப்பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் நிறைய உள்ளன ; உலகம் முழுதும் நடுகற்கள் அல்லது இறந்தோரின் சின்னங்கள் இருந்தாலும் அவைகளை அவர்கள் பூத்தூவி வழிபட்ட செய்தி இல்லை ; தமிழ் நாட்டிலோ தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வரை அதுபற்றிய ஆகம விதிகளை பார்க்கிறோம்.
சேர்ன் செங்குட்டுவன் இந்த விதி முறைகளைப் பின்பற்றி புனித இமய மலையில் கல்லெடுத்து புனித கங்கையில் நீராட்டி பத்தினிக்கு / கண்ணகிக்கு சிலை எடுத்தையும் அது அந்த பத்தினி வழிபாடு இலங்கை முழுவதும் பரவியத்தையும் சிலப்பதிகாரத்திலும் இலங்கை நூல் குறிப்புகளிலும் காணலாம் .
நடுகல் வழிபாடு, பத்தினி வழிபாடுகள், காலப்போக்கில் அழிந்துவிட்டன; ஆனால் அந்தக் காலத்தில் இருந்த கோவில்களின் நீண்ட பட்டியலை சிலப்பதிகாரம் தருகிறது .அந்தக்கோயில்கள் இந்திரன் முதலான தேவர்களுக்கும் கூட எழுப்பப்பட்டன. கந்தழி வழிபாடு
BALARAMA, KRISHNA IN INDO-GREEK COINS
தொல்காப்பிய சூத்திரம்
“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.
கொடிநிலை = சூரியன்
கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)
வள்ளி = சந்திரன்
(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).
மேலும் சிலர் கந்து என்பது கம்பம் போன்ற கல் என்றும் இதுவே சிவ லிங்க வழிபாடு ஆனதாகவும் கூறுகின்றனர் ; பிற்காலத்தில் கந்தழி என்று தெய்வீகப் பாடல்களில் இல்லாததால் இந்தச் சொல் மர்மமானதாவே இருக்கிறது.
SIVA ON KUSHANA COIN; SKANDA/MURUGA ON YAUDHEYA COIN
இல்லங்களில் உறையும் கடவுள் பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த, பிரார்த்தனை அறையில் இருந்த , படங்களையோ களிமண் வடிவங்களையோ குறித்தாகக் கொள்ளலாம் . கல் கத்தா காளி /துர்கா பூஜையானாலும் சரி , மஹாராஷ்டிரா கணேஷ் சதுர்த்தி ஆனாலும் சரி, தமிழ் நாட்டு கிராம தேவதை கோவில்களானாலும் சரி மண்ணினால் உருவத்தைச் செய்து, வழிபாடு முடிந்தவுடன் ஆற்றில் கரைப்பதை இன்று வரை காண்கிறோம் . ஆகவே நிரந்தரமாக வழிபடுவதற்கு சுவர் ஓவியமும் விழாக்காலங்களில் வழிபடுவதற்கு களிமண் உருவங்களும் செய்யப்பட்டன எனலாம்; விஷ்ணுவின் ஓண விழா முதல் சிவனின் ஆதிரை விழா , கார்த்திகை தீப விழாக்குறிப்புகள்சங்க இலக்கியத்தில் இருப்பதால் உருவங்கள் இல்லாமல் இவை நடந்திராது .
TIGER GODDESS IN HARAPPA, MHANJADARAO IN PAKISTAN
இல்லத்து உறையும் தெய்வங்கள்
அணங்கு வழங்கும் அகல் அங்கண் என்ற மதுரைக்கு காஞ்சி 164 வரிக்கு இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் பொருள் கண்டுள்ளார் .
கோவிலில் உள்ள உருவங்களின் வீதி உலா என்று நான் கருதுகிறேன் ; இப்போது இதை நாம் சாமி/ பெருமாள்/ அம்மன் புறப்பாடு என்கிறோம் .
கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேவிய,
மணம் புணர்ந்து ஓங்கிய , அணங்குடை நல் இல் – மதுரைக் காஞ்சி 577-578 வரிகளின் பொருள்
“வளம் மிக்க குடிப்பிறந்த செல்வரும் அவர் வழிச் சார்ந்த பிற செல்வர்களும் வாழும் இல்லங்கள் தெய்வங்களை உடையனவாக இருக்கின்றன” என்பதைக் காட்டுகிறது
இல்லத்தின் வாயில் நிலைகளிலும் தெய்வம் நிலைபெற்றிருப்பதாகக் கொண்டாடினர்.
“வீட்டின் வாயிலில் தெய்வம் உறைவதைக்குறிப்பிட்டு அதற்கு நெய், ஐயவி என்னும் வெண்கடுகு சமர்ப்பிக்கப்பட்டதையும் உரைகாரர் நச்சு. குறிப்பிடுகிறார்.
இன்றுவரை அரண்மனைக் கதவுகளில் , செட்டியார் வீட்டுக் கதவுகளில் கஜ லெட்சுமி உருவம் பொறித்திருப்பதைக் காணலாம் . மைசூர் அரண்மணிக் கதவுகளில் உள்ள கஜலட்சுமி உருவத்தைப் புகைப்படமும் எடுத்தேன் ; குபேரனின் நவ நிதிகளில் சங்கம் பதுமம் என்ற இரண்டை மட்டும் கதவில் பொறிக்கும் வழக்கமும் உள்ளது
மாலை நேரத்தில் இரும்புத் தகளிகளில் விளக்கேற்றி மலர் தூவி வழிபட்டதை நெடுநல்வாடை வரிகள்
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,
மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்,
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,
அவ்இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர (36 – 44)
கருத்துரை
வெண் சங்கினால் செய்யப்பட்ட வளையல் கையினையுடைய பெண்கள், மூங்கிலைப் போன்ற தோளினை உடையர், மென்மையான மேனியுடையர், முத்துப் போன்ற பல்லுடையர், காதிலே அணிந்துள்ள அழகிய காதணிக்குப் பொருந்த மிக்க அழகுடன் கூடிய குளிர்ச்சியான கண்களையுடையர், பெண்மைக்குரிய பேதைமைத் தன்மையுடையர், இப்பெண்கள் பூந்தட்டில் இட்டு வைத்த மலரும் காம்பினையுடைய பிச்சி மலரின் அரும்புகள் இதழ் விரித்து மணம் வீசின. அவை மலர்வதைக் கொண்டு மாலைக் காலம் வந்துவிட்டதை அறிந்தனர், இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நுண்ணிய திரியினைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவிக் கைகளால் தொழுது தெய்வத்தை வணங்கினர்.
பெண் ஒருத்திக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவளுடைய தோழி, “வா, மனையில் உறையும் தெய்வத்தை வணங்கி பலியையும் செலுத்துவோம் என்கிறாள்
செவிலித்தாய் இவ்வாறு சொல்லிப் புலம்புகிறாள். மகளே!
என் நிலைமையை எண்ணிப் பார். வளையல் அணியந்த மகளிர் முறை முறையாக வந்து உன்னைப் பாராட்டுவர். அவர்கள் இப்போது தவிக்கின்றனர். நீ ஊட்டாததால் நீ வளர்த்த கிளி பால் உண்ண மறுக்கிறது. மயில் போல் நடக்கும் உன் தோழிமாரும் விளையாடவில்லை. நீ நீர் ஊற்றாததால் நீ தாழியில் வளர்த்த செடிகளும் பூக்கவில்லை. அழகு தவழ வயிரம் பதித்து வைதிருக்கும் உன் சுவர் ஓவியத் தெய்வத்துக்கும் படையல் செய்யப்படவில்லை. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் வருந்திக் கொண்டிருக்கிறேன். அத்துடன் பழைய நினைவுகள் பல என் நினைவுக்குச் சரியாக வரவில்லை”..
***
உலகப்புகழ் பெற்ற இலக்கணமான பாணினீயத்துக்கு, 2200 ஆண்டுகளுக்கு முன்னர் உரை எழுதிய பதஞ்சலி யானை குதிரை ஒட்டகம் போன்ற பொம்மைகளை பிரகிருதி என்றும் வழிபடக்கூடிய உருவங்களை அர்ச்சா என்றும் எழுதியுள்ளார் . இவைகளை புரோகிதர்கள் பயன்படுத்தினர் . அவர்கள் வீடு வீடாக இவைகளை எடுத்துச் சென்றோ கோவில் போன்ற ஒரே இடத்தில் வைத்தோ சம்பாத்தித்தனர்; வாழ்வூதியம் பெற்றனர் . இவை தவிர தனிப்பட்டவர் வழிபாட்டிலும் அர்ச்சா என்னும் உருவங்கள் இருந்தன. சிவன், ஸ்கந்த/ விசாகன் ஆகியோரை அவர் குறிப்பிட்டுள்ளார் .
சாணக்கியன் யோசனையின் பேரில் மெளரிய மன்னர்கள் வணிக ரீதியில் கடவுள் உருவங்களை செய்து, விற்று அரசாங்கத்துக்குப் பணம் ஈட்டித்தந்தனர் . ஆனால் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இந்தக் கடவுள் பொம்மைகளின் பெயர்களுடன் க என்னும் பின்னொட்டைச் சேர்த்தனர் ‘சிவக’. ‘விசாகாக’ .
PUNCH MARKED COINS
பாணினியின் , 6-3-26; 8-1-15 சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஸ்கந்த- விசாக ஜோடி மிகவும் வரவேற்றைப் பெற்றன என்கிறார். ஆக, முருகனின் இரண்டு உருவங்கள் ஜோடி ஜோடியாக விற்கப்பட்டது தெரிகிறது.
இன்னொரு சுவையான விஷயத்தையும் பதஞ்சலி தருகிறார் பாணினி சூத்திரம் 1-2-64 க்கு உரை எழுதுகையில் காஷ்யபரின் உருவங்களையும் மக்கள் வழிபட்டது தெரிகிறது ; வர்ணன், விஷ்ணு ஆகிய இருவருக்கும் காஷ்யபர் என்ற பெயர் உண்டு.
க்ஷத்ரியர்கள் கொட்டத்தை அடக்கிய பின்னர் பரசுராம அஸ்வமேத யாகம் செய்து, இந்த பூமியை காஷ்யபரிடம் கொடுத்தார் . இதனால் பூமாதேவிக்கு காஷ்யபி தேவி என்ற பெயரும் இருக்கிறது
தனபதி /வைஸ்ராவண /குபேர வழிபாடு, ராமர் /கேசவர், பலராமர்/ கிருஷ்ணர் வழிபாடும், பதஞ்சலி காலத்தில் நடந்தது
தெய்வம் தொடர்பான விழாக்களை மஹஸ், சம்சத் என்ற சொற்களால் பதஞ்சலி குறிப்பிடுகிறார் .இந்திரன் , கங்கா , ராம கேசவ , தனபதி (குபேரன்) விழாக்கள் கோவில்களில் நடந்த போது சங்கு, மிருதங்கம், பணவ வாத்தியங்கள் ஒலித்தன . இந்த விஷயம் தேவாரம், திவ்யப் பிரபந்த பாடல்களிலும் வருகின்றது.
சுமார் 4000 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக உருவ வழிபாடு இருந்ததற்கான இலக்கிய, தொல்பொருட் துறை சான்றுகள் நம்மிடம் உள்ளன; இந்து மதத்துக்கு சனாதன மதம் என்று பெயரிட்டது பொருத்தமே!
–SUBAHM—
TAGS-சங்க காலம், தமிழ் நாடு, உருவ வழிபாடு , ஹரப்பாவில் நரபலி , தேவி வழிபாடு , சிந்து சமவெளி நாகரீகம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Mantras are taken from wisdomlib.org; Thanks.
ரிக் வேதம் போலவே பாரதி பாடல்கள் முழுதும் ஆக்கபூர்வ எண்ணங்களையும், சிந்தனையையும் தூண்டும் வரிகளையும், சொற்களையும் அடைமொழிகளையும் காணலாம் . அவரே வேதம் பற்றி அக்னி என்ற நூலையும் எழுதியுள்ளார். ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே, வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுகிறார்.
“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே—மிக
நன்று பல் வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக் கை” —தேசிய கவி சுப்ரமண்ய பாரதி.
இதில் கடவுள் ஒருவரே என்பதை ஏராளமான பேர் ரிக் வேத மந்திரத்தை மேற்கோள் காட்டி எழுதிவிட்டனர் ;
“ஏகம் சத் விப்ராஹா பஹுதா வதந்தி” (Ekam Sat Vipra Bahudha Vadanti) என்பது ரிக் வேதத்தின் மிகப்பிரபலமான மந்திரமாகும். இதன் பொருள், “உண்மை (இறைவன்) ஒன்றே, ஆனால் அறிஞர்கள் (ஞானிகள்) அதை பல பெயர்களில் அழைக்கிறார்கள்” ரிக் வேதம் (1.164.46 ) .
‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டும்’
‘நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டும்’
என்ற பாரதியார் வரிகளுக்கும் வேதங்களில் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.
ஆனால் உலகு இன்பக் கேணி என்றும் வேதம் சொல்வதாக பாரதியார் பாடியதற்கு ஆதாரம் எங்கே? என்ற கேள்வி எழுகிறது ; அதர்வண வேத பூமி சூக்தம், யஜுர் வேத சாந்தி மந்திரம் போன்றவற்றில் பூமியை, இயற்கையை, நற்குணங்களை எல்லாம் போற்றிப் பாடினாலும் உலகு இன்பக் கேணி என்ற வரிகளைக் காணமுடியவில்லை! கீழ்கண்ட வேத மந்திரங்கள் பாரதியாரின் கூற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.
வேத கால இலக்கியம் என்பது நான்கு பகுதிகளைக்கொண்டது ; அவையாவன :
1.சம்ஹிதை – மந்திரங்கள் உடைய பகுதி ;
2.பிராமணங்கள் – மந்திரங்களை விலாக்கும் பகுதிகள் ; அவற்றின் பிரயோகமும் உண்டு;
3.ஆரண்யகங்கள் – கானக வாழ்க்கையில் எழும் தத்துவ சிந்தனைகள் உள்ள பகுதி;
4.உபநிஷத்துக்கள் – முழுக்க முழுக்க தத்துவம், வேதாந்தம் உள்ள பகுதி ; வேத + அந்தம் = வேதாந்தம் என்றாலேயே, இவைதான் வேதங்களின் துணிபு , கண்டுபிடிப்பு என்ற பொருள் தரும் .
நாம் காணப்போகும் பகுதிகள் வேதத்திலிருந்தும் மற்றும் பிராமணங்கள் என்னும் நூல்களிலிருந்தும் வருகின்றன ; வேத சம்ஹிதை செய்யுள் வடிவில் உள்ளன ; பிராமணங்கள் பெரும்பாலும் உரை நடை வடிவில் உள்ளன ; செய்யுளுக்கு அடுத்த காலத்தில்தான் உரை நடை வரும் என்பதை உலக இலக்கியங்களின் வரலாறு காட்டுகிறது ஆகையால் பிராமணங்களை 1000 BCE என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முத்திரை குத்துகிறார்கள் . இதோ சில மேற்கோள்கள் :
நாங்கள் ஆனந்தமாக , மகிழ்ச்சி தரும் மந்திரங்களோடு எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பவனும் தூய்மைப்படுத்தும் ஒளியோடு வேள்வியில் இருப்பவனுமான அக்கினியைப் போற்றுகி ன்றோம் –ரிக் வேதம் 8-43-31
இதைப் பாடிய ரிஷியின் பெயர் விரூப ஆங்கிரசன் ;
We venerate with cheerful hearts the cheerful Agni , dear to all,
இந்த மந்திரம் ஐதரேய பிராமண நூலிலும் அரணிக்கட்டைகளைக் கடைந்து தீயை உருவாக்கும்போது சொல்லப்படுவதை வேத உரைகாரர் சாயனர் சுட்டிக்காட்டுகிறார்.
****
மரணத்துக்குப் பின்னர் ஒருவர் மேலுலகம் செல்வதும் அங்கே சொர்க்கத்தில் எப்போதும் ஒளிவீசும் என்றும் எதுவும் வாடாது, அழியாது என்றும் , அந்த இடத்தில் ஆனந்தம் தவிர வேறு எதுவும் இல்லை என்பதும் ரிக்வேதத்திலேயே உள்ளது; இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது!
ரிக் வேதத்தில் வரும் இந்த காஸ்யப மாரீசன் ரிஷி பாடிய மந்திரம்,
“ஓ பவமான சோமனே
எந்த இடத்தில் சொர்க்கத்தின் ஒளி நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, எந்த இடத்தில் எப்போதும் ஒளிமயமுள்ளதோ அந்த மரணமற்ற, அழியாத உலகத்தில் என்னை நிறுத்து ; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக.
விவஸ்வானுடைய மகன் அரசனாக இருக்கும் இடத்தில் என்னை அழியாதவன் ஆக்குக;
சொர்க்கத்தின் மர்மமான கோயில் எங்குள்ளதோ,
புதிய நிர்மலமான நதிகள் துள்ளிக்குதித்து ஓடுகின்றனவோ அங்கே என்னை நிறுத்து; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக”
–RV 9-113-7/8
7. O Pavarnana, place me in that deathless, undecaying world
Wherein the light of heaven is set, and everlasting lustre shines. Flow, Indu, flow for Indra’s sake.
8. Make me immortal in that realm where dwells the King, Vivasvan’s Son,
Where is the secret shrine of heaven, where are those waters young and fresh. Flow, Indu, flow for Indra’s sake.
இந்திரன் என்றால் அரசன், தலைவன் என்று பொருள் ; இது ஒரே தேவனுடைய பெயர் அல்ல என்பதைக் காஞ்சி பரமாசார்யார் (1894–1994) தெளிவு படுத்தியுள்ளார் ; வெள்ளைக்காரர்களோ வெனில் இது இயற்கைக் சக்திகள் என்றும் அல்லது ஒரே நபரின் பெயர் என்றும் பிதற்றியுள்ளனர்
ரிக் வேதத்தில் இந்திரன் ஏறத்தாழ முப்பது அசுரர்களைக் கொன்றதாக வருகிறது; அதாவது தீமையை அல்லது தீயவர்களை அழிப்பவன் . பகவத் கீதையின் பரித்ராணாய ஸ்லோகத்திலும் இதே கருத்து காணக்கிடக்கிறது
ரிக் வேதத்தில் இரண்டு மந்திரங்களில் தீயவர்கள், சொந்தக்காரர்களாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே என்று சொல்கிறது.
அர்ஜுனன், சொந்தக்காரர்களையும் குருமார்களையும் எப்படிக் கொல்வேன் என்று கேட்டபோது கிருஷ்ணன் சொன்ன பதிலையும் பாரதியார் அழகாகக் கொடுத்துள்ளார்; முதலில் ரிக் வேத மந்திரம் ,
எங்களைக் கொல்ல வருபவன் நட்பில்லாத சொந்தக்காரனாக இருந்தாலும் அந்நியனாக இருந்தாலும் அவனை எல்லாத் தேவர்களும் அழிக்கட்டும்; பிரார்த்தனையே (பிரம்மமே) என்னுடைய சிறந்த கவசம். RV 6-75-19
yo naḥ svo araṇo yaś ca niṣṭyo jighāṃsati | devās taṃ sarve dhūrvantu brahma varma mamāntaram ||
English translation:
“Whoever, whether an unfriendly relative or a stranger, desires to kill us, may all the gods destroy him; prayer is my best armour” – RV 6-75-19
சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது– பாரதியார்
இது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்படம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு. இதையே வள்ளுவனும் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்று பாடினான்.
“முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் காதலின் நண்பர் கலைதரு குரவரென்று
“அஸ்மாந்வதீ நதி ஓடுகிறது ; நண்பர்களே , ஜாக்கிரதை; உயரமாக எழுந்து நின்று கடப்போம்; வருவதற்கு விருப்பமில்லாதவர்களை விட்டுச் செல்வோம் ; அப்போதுதான் மங்களமான செல்வங்களைப் பெறுவோம் (நல்ல உணவினைப் பெறுவோம்).” 10.53.8
अश्मन्वती रीयते सं रभध्वमुत्तिष्ठत प्र तरता सखायः । अत्रा जहाम ये असन्नशेवाः शिवान्वयमुत्तरेमाभि वाजान् ॥Rig Veda 10.53.8
aśmanvatī rīyate saṃ rabhadhvam ut tiṣṭhata pra taratā sakhāyaḥ | atrā jahāma ye asann aśevāḥ śivān vayam ut taremābhi vājān || Rig Veda 10.53.8
English translation:
“The aśmanvatī flows along; be alert; rise up, cross over, may friends; here let us leave those who are unhappy, so that we may cross over to auspicious sacrificial viands.” Rig Veda 10.53.8
***
கர்மவினைக் கொள்கை
சதபத பிராமண 2-2-27 நூலில் கர்ம வினை பற்றிய தெளிவான குறிப்பு வருகிறது ,
முந்தைய பிறப்பில் ஒருவன் செய்த செயல்களுக்கு ஏற்ப உலகத்தில் பிறக்கிறான் .
according as he acts and according as he behaves, so will he be;
a man of good acts will become good, a man of bad acts, bad;
he becomes pure by pure deeds, bad by bad deeds;
And here they say that a person consists of desires,
and as is his desire, so is his will;
and as is his will, so is his deed;
and whatever deed he does, that he will reap.
— Brihadaranyaka Upanishad,
ஜனகர் கூட்டிய அறிஞர்கள் கூட்டத்தில் யாக்ஞவல்க்ய ரிஷிக்கும் ஏனைய அறிஞர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் உள்ளன. அங்கே ஜரத்கார்வ ஆர்த்தபாக கூறுகிறார் ,
“ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய சொற்கள் அக்கினியில் கலந்து விடுகின்றன; அவனுடைய மூச்சுக் காற்று , காற்றினில் கலந்து விடுகின்றது. கண்கள் சூரியனுக்குள்ளும், மனது சந்திரனுக்குள்ளும் புகுந்து விடுகிறது.”
இப்படி அவர் சொன்னவுடன் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு யாக்ஞவல்க்ய ரிஷி கேட்கிறார் ,
பின்னர் மனிதன் என்ன ஆகிறான்?
இதற்கு ரிஷி கொடுத்த பதில்,
இதை நாம் இருவரும் தனியாக விவாதிப்போம்; இதை பொது இடத்தில் விவாதிக்கக்கூடாது .
இதற்குப்பின்னர் அவர்கள் இருவரும் பேசியது என்ன என்ற முழு அறிக்கை இல்லை. ஆனால் அவர்கள் சொன்னது கர்மம்; அவர்கள் புகழ்ந்தது கர்மம் என்று மட்டும் இருக்கிறது. பின்னர் வந்த உபநிஷத்துக்குக்கள் இன்னும் கூடுதலான விவரங்களைத் தருகின்றன .
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் வேத காலத்திலேயே மரணத்துக்குப் பின்னர் உள்ள மறுவாழ்வு பற்றிய சிந்தனை எழுந்து அதற்கு முடிவும் கண்டனர் என்பதாகும். வேதங்களை ஆழமாகப் படித்தால் இதற்கான வித்துக்கள் வேதங்களிலேயே இருப்பதையும் அவை மறை பொருளில் உரைக்கப்பட்டதையும் அறியலாம் .
—subham—
Tags- உலகு இன்பக் கேணி, பாரதியார் கூற்றுக்கு, ஆதாரம் எங்கே?, Mantras , wisdomlib.org, மறுபிறப்பு, கர்ம வினை, மரணத்துக்குப் பின்னர், மறு வாழ்வு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(ஆர், சேஷாத்ரிநாதன்)
PART TEN
ஹனுமனைப் பற்றி இராமன்
ஹனுமனின் வீரத்தைக் கண்ட இராமன் ஹனுமனைப் புகழ்ந்து இலக்ஷ்மணனிடம் பேசுகிறான்.
HANUMAN IN BATU CAVES, MALAYSIA; PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN.
हाथिनसोंहाथीमारे, घोरेसोंसँघारेघोरे,
रथनिसोंरथबिदरनिबलवानकी।।
चंचलचपेट, चोटचरनचकोटचाहें,
हहरानीफौजेंभहरानीजातुधानकी।।
बार–बारसेवक–सराहनाकरतरामु,
‘तुलसी’ सराहैरीतिसाहेबसुजानकी।
लाँबीलूमलसत, लपेटिपटकतभट,
देखौदेखौ, लखन! हनुमानकी।40।.
“இலங்கையின் போர்க்களம் முழுவதிலும் அவர் பார்க்கும் ஒரே ஒரு வீரன் மட்டுமே இருந்தான்.அவன் அரக்கக் காளையின் கொம்புகளைப் பிடித்து இழுத்தான், அந்த வீரன் வேறு யாருமல்ல, ஹனுமன்தான். அவனது வாலைப் பார். அந்த அழகான வாலில் அரக்கர்களை சுருட்டி தரையில் ஓங்கி அடிக்கிறான். யானைகள், குதிரைகளுடன் மோதுகிறான்.” இது கோஸ்வாமி துளசிதாசரின் கவிதாவளி ராமாயணத்தில், லங்கா காண்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,.
இது மட்டுமல்லாமல், இராமன் ஹனுமன் மீது தனது பாசத்தை பகிரங்கமாகக் காட்டினான்.அவர் ஹனுமனை அன்புடன் கட்டிப்பிடித்து, என்றென்றும் கடமைப்பட்டிருப்பதாக அறிவித்தான் .இது சுந்தர காண்டத்தில் வருகிறது
सुनुकपितोहिसमानउपकारी।नहिंकोउसुरनरमुनितनुधारी॥
प्रतिउपकारकरौंकातोरा।सनमुखहोइनसकतमनमोरा॥3॥
सुनुसुततोहिउरिनमैंनाहीं।देखेउँकरिबिचारमनमाहीं॥
இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு கிஷ்கிந்தை வந்து இராமனிடம் சீதையைப் பார்த்த விவரங்களையும் சீதை படும் துன்பங்களையும் ஹனுமன் இராமனிடம் தெரிவிக்கிறான். இராமனின் கண்களில் கண்ணீர் துளிர்கிறது. ஹனுமன் இராமனைச் சமாதானப்படுத்தி. “அங்குள்ள அரக்கர்கள் உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தாங்கள் அவர்களை எல்லாம் வென்று வருவீர்கள்” என்று சொல்கிறான். அதைக் கேட்ட இராமன் “ஹனுமனே! உன்னைப் போல் எனக்கு உதவி செய்தவர் தேவரோ, மனிதனோ, முனிவரோ, உடல் பெற்ற ஒருவர் கூட இல்லை. நான் உனக்கு பதில் உதவி என்ன செய்து விட முடியும்? என் மனது கூட உனது எதிரில் நிற்க முடியாது. உனது கடனைத் தீர்ப்பது முடியாத காரியம்” என்று கூறுகிறான்.
புராணங்களில் ஹனுமனின் வரலாறு
புராணங்களின் (புராண வரலாறுகள்) படி, ஹனுமனின் தாயாரின் பெயர் அஞ்சனா. அவள் குரங்கு மன்னன் கேசரியின் மனைவி. ஹனுமன் கடவுளின் அருளாகப் பிறந்தான்.காற்றுக் கடவுள், மருத் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே, அனுமன் ‘ஆஞ்சநேயர்’ அல்லது ‘மாருதி’. இருப்பினும், அவரது மிகவும் பொதுவான பெயர் ‘ஹனுமன்’ என்பது. ஒரு முறை அவர் தேவர்களின் அரசனான இந்திரனின் கடுமையான ஆயுதமான ‘வஜ்ரத்தால்’ தாக்கப்பட்டார்.. அதன் காரணம் என்ன?
பிறந்த சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தை ஹனுமனுக்கு அதிகமான பசி எடுத்தது/, சூரியன் உதிப்பதைப் பார்த்தான், அது ஏதோ பழுத்த சிவப்புப் பழம் வானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்தான். உடனே ஒரே பாய்ச்சலாக அதைப் பிடிக்க ஆகாயத்திற்குத் தாவினான். தற்செயலாக, அது சூரிய கிரகணத்தின் நேரம். புராணங்களின்படி, இராகு சூரியனை விழுங்கச் சென்று கொண்டிருந்தான். ஹனுமன் விரைந்து வருவதைக் கண்டான்.. ஹனுமன் ஏதோ போட்டியாளன் என்று நினைத்துப் பயந்து ஓடிவிட்டான்.. உடனே இராகு தேவர்களின் ராஜாவான இந்திரனிடம் தனது வழக்கமான உணவு மறுக்கப்படுகிறது என்று புகார் செய்தான். உடனே இந்திரன் இந்த விஷயத்தில் தலையிட எண்ணி தனது ஐராவதம் என்ற வெள்ளை நிற கம்பீரமான யானையின் மீது ஏறி விரைந்தான் .
உடனே ஹனுமன் அந்த அந்த யானையை ஏதோ வெள்ளைப் பழம் என்று நினைத்து சூரியனை விட்டு விட்டு அந்த யானையின் மீது குதித்தான். இந்திரன் அதிர்ச்சி அடைந்து ஹனுமனைத் தடுக்க வலிமை மிகுந்த தனது வஜ்ரா என்ற ஆயுதத்தை ஹனுமன் மீது ஏறிய அது அவனது கன்னத்தைத் தாக்கியது. அதனால் ஹனுமனது தாடை வீங்கியது. ஹனு என்றால் கீழ் தாடை என்ற பொருள் மான் என்றால் அடிப்பது என்று பொருள். இதன் காரணமாகவே ஹனுமன் என்ற பெயர் வந்தது.
ஆனால் வாயு பகவன் தனது அருளால் பிறந்த ஹனுமனுக்கு நிகழ்ந்ததைக் கண்டு கோபமுற்றான். உடனே தனது இயக்கத்தை நிறுத்தினான். இந்த பிரபஞ்சமே மூச்சு விடமுடியாமல் திணறியது. அனைத்து கடவுள்களும் மூச்சுத் தினறலின் விளிம்பில் இருந்தனர். அவர்களும் ஹனுமானுக்கு பல வரங்கள் அளித்து ஹனுமனை யாராலும் வெல்ல முடியாத நிலையை உருவாக்கி வாயு பகவானை சமாதானப்படுத்தினர்.
ஹனுமனின் முகம் சிகப்பாக இருப்பதைப் பற்றி இரண்டு கதைகள் உண்டு. ஒன்று அவர் குழந்தையாய் இருக்கும் சமயம் சூரிய வெப்பத்தினால் அவரது முகம் சிவந்து போயிற்று என்று சொல்வர். இரண்டாவது அன்னை சீதை அவரது வகிட்டில் சிந்தூரம் அணிந்து கொள்வாள். அது அவரது சிவந்த முகத்திற்கு இன்னும் அழகைக் கூட்டிற்று. ஹனுமான் அந்த சிந்தூரம் அணிவதற்கான காரணத்தைக் கேட்டபோது அது ஒரு மங்கலமான குறி என்றும் சீதை என்றென்றும் இராமனின் மனைவி என்பதைக் கட்டுவதற்காகவும் சீதையை இராமனிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது என்பதைக் காட்டுவதையும் சொல்லப்பட்டது. வகிட்டில் உள்ள சிறிய போட்டு போன்ற சிந்தூரம் சீதையை இராமனுக்கு அதி ப்ரியமானவளாக செய்யுமானால் முகம் முழுவதும் அந்த சின்தூரத்தைப் பூசிக்கொண்டால் நாம் இராமனுக்கு எவ்வளவு பிரியமானவனாக ஆவோம் என்று நினைத்து முகம் முழுவதும் சிந்தூரம் பூசிக்கொண்டதாக ஒரு கதையும் உண்டு.
சிறிய வயதில் ஹனுமன் மிகவும் குறும்புக்காரனாக இருந்தான். முனிவர்களின் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மரங்களை உடைத்தும், இலைகளை உதிர்த்தும், மரங்களின் பழங்களைத் தின்றும் கொட்டமடித்து அந்த இடங்களையே குப்பை மேடக்கினான். அதனால் யாராவது ஒருவர் நினைவூட்டும் வரை அவன் தனது சக்தியை மறந்து விடுவான் என்று முனிவர்கள் சபித்தனர். சீதையைத் தேட இலங்கை செல்வதற்காக வானரங்களும் கரடிகளும் கடற்கரையை அடைந்த போது எல்லோருமே அந்தக் கடலைத் தாண்டும் சக்தி தங்களுக்கில்லை என்று சொன்னபோது முதியவரான ஜாம்பவான் ஹனுமனுக்கு அவனது சக்திகளை நினைவூட்டி கடலைத் தாண்டிச் செல்லும் சக்தி அவனுக்கு உள்ளது என்ற நம்பிக்கை அளித்தார். அதனால் ஹனுமான் கடலைத் தாண்டிச் சென்று சீதையைக் கண்டதுமல்லாமல் இலங்கையையும் தீக்கிரையாக்கினார்.
சிரஞ்சீவி ஹனுமன்
ஹனுமன் இராமனுக்கு மிகப் பிரியமானவன். ன் நெருக்கமானவன். இந்த உலகை விட்டுச் செல்லும்போது ஹனுமனும் இராமனுடன் வர விரும்பினான். ஆனால் இராமன் ஹனுமனை இந்த உலகிலே தங்கச் செய்து தனது மகிமை மங்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினான். மேலும் இராம நாமத்தை விடாமல ஜபிப்பவர்களைப் பதுகாக்கும்படியும் கூறினான். ஆத்யாத்ம இராமயணத்தின் உத்திர காண்டம் ஒன்பதாவது சர்கத்தில் இதைப் பற்றி குறிப்பு உள்ளது.
नर्कर्ञ्चदुत्तरोंवायोंत्वयामत्कृतकारणात्।
एवोंर्वभीषणोंतूक्त्वानूमन्तमथाब्रवीत्॥३४॥
मारतेत्वोंर्चरञ्जीवममाज्ञाोंमामृषाकृथाः।
जाम्बवन्तमथप्रार्तष्ठत्वोंिापरान्तरे।३५॥
இராமன் விபீஷணனிடம் “விபீஷணா! உன்னை இந்தப் பூமி உள்ளளவும் இராஜ்ய பரிபாலனம் செய்யும்படி முன்பே வாக்களித்துள்ளேன். நீயும் அதற்கு உடன்பட்டிருக்கிறாய். ஆதலால் உன் நகரத்திலேயே இருந்து ஆட்சி செய் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த ஹனுமனை நோக்கி “ஓ ஆஞ்சநேய! நீ என்றும் சிரஞ்சீவி என்று வரமளித்தோம். ஆகையால் நீயும் உனது விருப்பமான இடத்தில் இருக்கலாம்? என்றான்.
வால்மீகி இராமாயணம் உத்தர காண்டத்திலும் இந்தப் பகுதி 108 வது சர்கத்தில் வருகிறது.
இராமன் பூமியில் தனது கடமைகளை முடித்துவிட்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெறுகிறான். முதலில் விபீஷணனிடம் வந்து “விபீஷணா! எவ்வளவு காலம் இப் பூமியில் ஜனங்கள் வாழ்கின்றனரோ அவ்வளவு காலம் நீயும் இலங்காபுரியில் உயர்வு பெற்று வாழ்வாய். சந்திர சூரியர்கள் எவ்வளவு காலம் ப்ரகாசிக்கின்றனரோ. இப் பூமி யெவ்வளவு காலம் அழியாதிருக்கின்றதோ, என்னுடைய கதை இப் பூமியில் எவ்வளவு காலம் மேன்மை பெற்று விளங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ அழியாது அரசு செலுத்தி வருக. விபீஷணா! இந்த்ராதி சகல தேவதைகளாலும் எப்பொழுதும் ஆராதிக்கப் படுகின்றவரான இக்ஷ்வாகு குலதேவதையான ஸ்ரீஜகந்நாதனை ஆராதித்து வரக்கடவது’ என்று சொல்ல, விபீஷணனும் திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கின்றேன், என ஒப்புக் கொண்டான்.
பிறகு ராமன் மாருதியைப் பார்த்து ஆஞ்சநேயா!! நீ சிரஞ்சீவி யாயிருக்க ஆசை கொண்டவன். இவ்வுலகத்தில் எனது காதை எவ்வளவு காலம் வழங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ இப்பூமியில் புகழுடன் வாழ்க” என்று சொல்ல, வாயுகுமாரன் உள்ளம் மகிழ்ந்து சுவாமி திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கிறேன் என்றான்.
இதுவரை யுத்தகாண்டத்தில் அளிக்கப்பட்ட வரம் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இனி உத்தரகாண்டத்தில் வரும் வரம் பற்றிய விவரங்களைக் காண்போம்.
உத்தரகாண்டத்தில் 110 ஸர்க்கங்களில் 3276 ஸ்லோகங்கள் உள்ளன.
உத்தரகாண்டத்தில் 32 வரங்களைப் பற்றிய விவரங்களை வால்மீகி முனிவர் தந்துள்ளார்.
மூன்றாவது ஸர்க்கமான, “குபேரனது உத்பத்தியும் லங்கை முதலியனவற்றை அடைவதும்’ என்ற ஸர்க்கத்தில் வைஸ்ரவணனின் தவத்தை மெச்சி பிரம்மா கொடுத்த வரம் பற்றிய விவரங்களைக் காண்கிறோம்.
புலஸ்திய மஹரிஷியினுடைய புத்திரரான விச்ரவஸ் என்பருக்கு பரத்வாஜ மஹரிஷி தனது புத்திரியை விவாகம் செய்து வைத்தார். அந்த தம்பதியருக்கு வைஸ்ரவணன் என்ற மகன் பிறந்தான். வைஸ்ரவணன் இளமையிலிருந்தே தவம் புரிவதில் ஆர்வம் கொண்டிருந்தான்.
ஆயிரம் வருடங்கள் ஜலத்தை மட்டும் ஆகாரமாகவும் பின்னர் காற்றை மட்டும் ஆகாரமாகவும் பின்னர் ஆகாரமே இல்லாமலும் கடும் தவத்தைப் புரிந்தார் வைஸ்ரவணன். பிரம்மா இதனால் மகிழ்ச்சியுற்று வைஸ்ரவணன் முன் தோன்றி, “நீ வரம் பெற உரியவனாகி விட்டாய். உனக்கு வேண்டியதைக் கேள்” என்று அருள்கிறார்.