350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! -1 (Post.9937)

350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! -1 (Post.9937)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9937

Date uploaded in London –  5 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 2-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! -1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்!

குழந்தையானந்தரின் அவதார தோற்றம்

மதுரை மீனாட்சியின் அருள் விளையாடல்கள் அன்றும் நிகழ்ந்தன, இன்றும் நிகழ்கின்றன, என்றும் நிகழும்.

அவற்றை உணர்ந்து அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கும் பக்தர்கள் அம்பிகையின் செல்லக் குழந்தைகளே!

ஸ்ரீ குழந்தையானந்தர் என்ற பெயரில்  மதுரையில் உலாவி வந்து ஏராளமானோருக்கு அருள் பாலித்த பெரும் மகானின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு  முன்னர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர். அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப் போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது. குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய அந்த தம்பதியினர்  குழந்தை வரம் வேண்டி அம்பிகையை உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும் செய்து கொண்டனர்.

ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும் நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ராமஸ்வாமி ஐயர் உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப் பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம் இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து, “ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர். “கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.

“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர் நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அவரை அவர்கள் வாழ்த்தினர்.

நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது. நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம் செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை.  கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.

அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி, “எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே நீ தான் அனுப்ப வேண்டும்” என்று  மீனாட்சியம்மனை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி தவிக்க, கோபம் ஆறாத ஐயர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம், பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.

ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்” என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.

ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு  பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று மறைந்து விட்டான். எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை. ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி அது அம்பிகையின் திருவிளையாடலே என்று உறுதி படக் கூறினாள்.

சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது. இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.

இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்

இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது? தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம் சென்றனர்.

அங்கு பட்டருக்கு அருள் வந்து, எந்தக் குழந்தைக்கு காலில் சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம் இருக்கிறதோ அந்தக் குழந்தையை விடு என்று உத்தரவு பிறந்தது.

அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக் குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டன்ர்.

அங்கு குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே மீனாட்சியம்ம்னை நோக்கித் தவழ்ந்து சென்றது.

பிரிய மனமின்றி ராமனை கோவிலில் விட்டு விட்டு தம்பதியினர் வீடு திரும்பினர்.

இரவு வந்தது. குழந்தையை என்ன செய்வது என பட்டர் யோசித்தார். (அந்தக் காலத்தில் பட்டரின் கவனிப்பிலேயே கோவில்கள் இருந்தன) அப்போது அசரீரி ஒன்று குழந்தையை கோவிலிலேயே விடுமாறு உத்தரவைப் பிறப்பித்தது.

அது முதல் ராமன் கோவிலில் வளர ஆரம்பித்தான்.

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலைத் தந்த அம்பிகை குழந்தையானந்தரையும் பால் கொடுத்து வளர்த்தாள்.

ஏழு வயதான போது ராமனுக்கு உபநயனம் செய்விக்க உத்தரவு ஆகவே உபநயனமும் கோவில் பட்டர்களால் செய்து வைக்கப்பட்டது.

பின்னர் 900 ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெரிய சித்தரான ஸ்ரீ கணபதி பாபாவைக் குருவாகக் கொள்ளுமாறு அருள் ஆணை பிறந்தது.

கணபதி பாபாவை கணபதி ப்ரம்மம் என்று கூறுவார்கள். அவரது சமாதி இன்றும் காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது. இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையை அங்கு பார்க்கலாம்.

முதல் சமாதி குருநாதரிடம் சகல சாஸ்திரங்களையும் பயின்ற ராமனுக்கு ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள்  என்ற பெயர் ஏற்பட்டது. இமயமலை பகுதிகளில் சஞ்சாரம் செய்த அவரை ஏராளமானோர் தரிசித்து அருள் பெற்றனர்.

த்ரிலிங்க ஸ்வாமிகளின் முதல் ஜீவ சமாதி காசியில் ஏற்பட்டது. கணபதி பாபா சமாதிக்கு அருகிலேயே இது உள்ளது.

இரண்டாவது சமாதி

பின்னர் அவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே அவர் ஸ்வாமிகளிடம் சரணடைந்தார். அவருக்கு ஸ்வாமிகளின் அருளால் குஷ்டம் நீங்கிற்று. பல காலம் நேபாள அரசரின் அரண்மனையில் அவர் பூஜிக்கப்பட்டார்.

ஸ்வாமிகள் எப்போதும் அணிந்திருந்த மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தவையே. ஸ்வாமிகளின் இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.

ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர்.

மூன்றாவது சமாதி         

நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் ஆந்திர பிரதேசம் வந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏராளமான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்தார்.

பின்னர் தென்காசியில்  மூன்றாவது சமாதியை எய்தினார். இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது.தென்காசியில் சன்னதி மடம் தெருவில் சங்கரன் பிள்ளை என்ற பக்தர் வீட்டில் இந்த சமாதி உள்ளது.

நான்காவது சமாதி

மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரையம்பதிக்கு எழுந்தருளினார். அங்கு அவர் இருபது வருஷங்களுக்கும் மேலாக நடத்திய அருள் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தோர் சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்.

சதா யோகநித்திரையில் இருந்த அவரது திருவாக்கிலிருந்து எழும் அமுத மொழிகள் மூன்று ஆண்டுகளே நிரம்பப் பெற்ற குழந்தை பேசும் மழலை மொழி போல்வே இருந்தது. அத்துடன் மட்டுமன்றி அவர் வாயிலிருந்து அமுதூற்றை ஒத்த சாளவாய் வழிந்து கொண்டிருந்தது. இதனால் குழந்தையானந்தர் என்ற பெயரால் அவர் அழைக்கப்பட்டார்

பருத்த தொந்தி. அருள் பொங்கும் முகம். பத்ம பாதங்களோ மஹாவிஷ்ணுவின்  அம்சத்தைக் குறிக்கும் சங்கு சக்ரங்களைக் கொண்டவை. நிகழ்த்திய திருவிளையாடல்களோ மெய்சிலிர்க்க வைத்தவை.

1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்வாமிகள் சுமார் 300 பவுன்களில் செய்து வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.

எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க மகாலிங்க பண்டாரம் என்பவர் நெய்யை ஸ்வாமிகளுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். ம்காலிங்க்ம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு அவர் அடங்கி விடப் போகிறாரா என்று ராமலிங்கய்யரிடம் கேட்க, குழந்தையானந்தர், “என்னடா சொல்கிறான் திருட்டுப் பயல்! அதெல்லாம் ஒண்ணுமில்லையடா! எல்லாம் நாளன்னிக்கி தான்!” என்று அருளினார்.

சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது மூன்றாம் முறை கண்ணை விழித்துப் பார்த்தார் அவர். ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.

அவர் அடங்கி விட்டாரா? யார் நிர்ணயிப்பது?

அனைவரும் பிரமித்து நின்றனர். பின்னர் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்வாமிகள் சமாதியடைந்ததை நிர்ணயித்து ஊர்ஜிதம் செய்தார்.

இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் அவர் நான்காவது சமாதியை அடைந்தார்.    

  • தொடரும்

                          ***

S NAGARAJAN

tags-  குழந்தையானந்த ஸ்வாமிகள்,

WATCHING DANCE IS EQUAL TO STUDYING VEDAS; SIN WILL RUN AWAY! (Post No.9936)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9936

Date uploaded in London – 4 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Bharata , who wrote the Natyasastra in Sanskrit 2500 years ago , finishes it beautifully. 6000 slokas are there in his 36 chapters. The 36th chapter gives the benefits of Natya/dance and drama (in the olden days dramas were produced with more songs than prose dialogues. Vedic dialogue poems prove it).

While we read this, we must remember that he talks about ‘holy dramas and holy dances’. The best example is available in Tamil epic Silappadikaram. One of the main characters, Madhavi, did 11 types of dances and all of them were from Hindu mythology (see below the link for the 11 types).

Mangala slokas are in 71 to 82 in the last chapter of Natyasastra. It says,

“This sastra is entertaining; it purifies; it is holy; it destroys sin. Those who read it and those who listen to it, those who produce plays in accordance with it, and those who attentively watch the performance, all these  derive the same merit as may be derived by those who study the Vedas, those who perform sacrifices, and those who perform acts of charity and religion. This is the greatest gifts of all the gifts, viz. the giving of an opportunity to watch a performance.  The production of a play is pleasing to the gods as no other form of worship with sandal paste or flowers is.

“Those who enjoy music and dance well in this life, will attain the blessed state of Isvara and Ganesa.

“I have thus far elaborated on many subjects and rules regarding the production of plays. Things which are not stated here should be learnt by attentively watching the talk and behaviour of people and should be used in the performance.

“What more can I say?

May want and disease disappear from the world and may there be plenty of food and riches of every kind. May there be peace and security for cows and Brahmins everywhere. May the kings give protection to the world.”

Thus ends Bharat’s Natyasastra chapter 36 entitled ‘Descent of Drama on Earth’.

xxx

My comments

Like Krishna in Bhagavad Gita, Bharata never forces anyone to do the dance and drama in his way. He gives freedom and scope to improve upon it. He asks the people in the field to watch people and include their interests. In other words, he asks us to act according to times. Even if someone produces a play today against COVID virus or the necessity of getting the jabs against the virus ,it is agreeable and meritorious.

What Bharat said in his last chapter shows that the Natya sastra in the present form is an updated version. But the core remains the same. What Bharata said about the benefits of drama cannot be said about Greek dramas. That shows Indian dance and drama are independent of Greek dramas or any foreign influence. Westerners created a great doubt about Indian ingenuity by saying everything came from Greece to India.

As a brahmin I do Sandhyavadana everyday in the morning and evening in London with Thames water where I recite all the 7 days of the week in the same order found in our calendar- Sunday to Saturday. This is in the same order in Thevaram of Sambandar which is 1400 years old. No one would have inserted some foreign material in Brahmin’s mantras or Sambandars Tamil poems. This is only one example to show Westerners have been always anti Hindu.

Please read my article on Bharatavakyas (National Anthems)  which are said at the end of all Sanskrit dramas. How patriotic our people have been from ancient period!

–subham–

My old articles:-

Matavi’s 11 types of Classical Dance | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/06/15 › matavis-11-t…

15 Jun 2012 — She was the daughter of Chitrapathy. Madhavi learnt dance from the age of five and mastered the art of classical Bharatanatyam at the age of …

Hindus are the Pioneers of National Anthems | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/04/26 › hindus-are-th…

26 Apr 2014 — Bharatavakya is the benedictory address spoken at the close of every Sanskrit drama. We find this in all the dramas of Bhasa and Kalidasa.

Colour Coding of Seats in Ancient Theatres! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/13 › colour-codin…

13 May 2014 — There are two dramatic stages coupled up with green rooms as they were prevalent in the olden days when Sanskrit plays used to be staged.

Missing: bharatvakyas ‎| Must include: bharatvakyas

–subham-

tags-benefits, dance, drama, watching, Bharata, Natyasastra

FEBRUARY 2020 London Swaminathan Articles; Index-87 (Post No.9935)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9935

Date uploaded in London – 4 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

xxxx

FEBRUARY 2020 London Swaminathan Articles Index-87

Wonders in Prakrit Language- 2000 Inscriptions, 7523;1 February 2020

Hindu Discovery Sun is a Star ,7526;2/2

Tarigonda Vengamamba and Madhuravani (Great Women), 7530;3/2

Mega Treasure discovered in Britain, 7533;4/2

Vasantasena, Noble Courtesan s Love Affair with a

Brahmin Merchant,7540;5/2

Great Exodus- Yadavas Migration to Gujarat from

Uttar Pradesh, 7544;6/2

Do you prefer to die in Explosion or Collision? 7548;7/2

Women in Vedas in Bullet Points, 7551;8/2

Are Women Human Beings? Christian Discussion 7555;9/2

Vedic Hindu Women, Greek women and Parsi Women,7559;10/2

God and commonwealth on Different sides- Politics Anecdotes, 7563;11/2

A Rigvedic Hymn with Number Symbolism,7566;12/2

Two Types of Vedic Women,7570;13/2

Marriage Ceremony Mantras In Rigveda 7574;14/2

Greatest Muslim Queen of India, 7576;15/2

Four Tamil Folk Tales, 7582;17/2

Riddle Poem in the Rigveda,8-29;7586;18/2

Miracles done by Hindu Women,7590;18/2

Surya/ Sun God in Indus Valley civilisation,7593;19/2

First English Tamil Etymological Dictionary, 7597;20/2

Beat the dog continuously- Ramakrishna Paramahamsa’s

Advice, 7598;20/2

What is Ati Rudra Sacrifice,7601;21/2

Dad I will treat you the same way you treated your dad, 7602;21/2

Why did the Farmer weep in Jain Temple? 7606;22/2

Oh My God! Ramayana is very  heavy, 7609;23/2

Swami s crossword 2322020;7610

Story of Woman Philosopher Chudala,24/2

Yatha Raja, Thatha Praja, 7616;25/2

Swami s crossword 2522020;7618

Buddha- Anti woman, Anti Disabled, Anti Vegan, 7621;26/2

What is Corona Virus?26/2;7622

On Women, Wine and Vices;31 Quotations from

Jataka Tales 7626;27/2

Swami s crossword 2722020;7627

My Appearance and Disappearance,7630;28/2

Painting while Dying,Singing while Dying, 7635;29/2

How many Mahabharata characters can you find in the Spiral?

7636; 29 February 2020

XXX

பிப்ரவரி 2020 லண்டன் சுவாமிநாதன் கட்டுரைகள்

பிராகிருத மொழி அதிசயங்கள்-2000 கல்வெட்டுகள், 7522, பிப்ரவரி 1, 2020

ஏழு வகை பிராக்ருதத்தில் உள்ள அற்புத நூல்கள்,7525, 2/2

கடவுள் இருக்காண்டா குமாரு, 7528, 3/2

சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பது வேத காலா முனிவர்க்குத் தெரியும் ,7529, 3/2

தேன் ஏன் கெடுவதில்லை?7533, 4/2

செய்தியில் அடிபட்ட புஸ்தகங்கள், 7535, 4/3

புதையலோ புதையல் மஹா  மஹா  மெகா புதையல் , 7532, 4/2

வேப்பமரம் பற்றி சுவையான செய்திகள், 7538, 5/2

சடலங்களை உண்ண கழுகுகள் தேவை, 7539, 5/2

அடங்காதவரை அடக்குவது எப்படி?7542, 6/2

எவரெஸ்ட் சிகரத்தில் நூறு சடலங்கள், 7543, 6/2

கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் , 7546, 7/2

மார்லின் மன்றோ உடைகள் ஏலம், 7547, 7/2

சிலந்தி டாக்டர்! சிலந்தி ஆஸ்பத்திரி! 7550, 8/2

வேத கால பெண் கவிஞர்கள், 7552, 8/2

சாப்பிடக்கூடாத இலைகள் எவை?7554, 9/2

தமிழா, சோதிடத்தை நம்படா! ப்ளிஸ் , வாகடத்தை நம்படா!7557, 10/2

மேலும் ஒரு புதையல் செய்தி, 7558, 10/2

பெண்கள் மனிதப் பிறவிகளா?கிறிஸ்தவர் காரசார விவாதம் 7561, 11/2

கள்ளிவரின் யாத்திரை, 7562, 11/2

மஷ்ரூம், பூண்டு, வெங்காயம் சாப்பிட்டதே! அம்பலவாணர்

அட்வைஸ், 7565, 12/2

சாதனை படைத்த சாதனை நூல் தோன்றிய கதை 7567,12/2

வேதத்தில் இரண்டுவகைப் பெண்கள், 7569, 13/2

22 பிரதம மந்திரிகளைக் கண்டவர், 7571, 13/2

குங்குமப் பூ பாபா  கதை, 7573, 14/2

இந்தியர்களை வியக்கவைத்த முஸ்லீம் ராணி, 7577, 15/2

மாதவையா குடும்பத்தினரின் மகத்தான தமிழ் சேவை ,7578, 15/2

பாம்புச் செடி உண்மையா?7580, 16/2

கடவுள் செய்த ஆறு தவறுகள்- அம்பலவாணர் பட்டியல், 7581,16/2

மனிதர்களில் இந்திரன், பிரம்மா, சிவன் யார்?7584, 17/2

டாக்டர் கடவுள் யார்? புதையல் கடவுள் யார்?ரிக் வேதபி புலவர் புதிர், 7585, 17/2

பரிபாடல், சிலாம்பில் ரிக்வேத வரிகள்,, 7588, 18/2

நமது மொபைல் போன்களுக்காக சூரியனை நோக்கி மேலும்

ஒரு விண்கலம், 7589, 18/2

கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள் , 7592, 19/1

சிந்து சமவெளியில் இருப்பது சூரியனா, இந்திரனா?7595, 20/2

பிராணிகளுக்கு கடிகாரம் பார்க்கத்  தெரியுமா?7600,21/2

பணம் எங்கே நிலைத்து நிற்கும்? 7604, 22/2

தமிழ் குறுக்கெழுத்து போட்டி= த.கு.போ.2422020, 7613

யோகா ஒரு சமுத்திரம்! 5 லட்சம் சுவடிகள், 7612, 24/2

வண்ணாத்தி அழுதது ஏன்? பாடகர் ஓடியது என்?7617, 25/2

நல்லவர்கள் யார்? அம்பலவாணர் தரும் பட்டியல், 7620, 26/2

த.கு.போ.2622020,7623

புத்தர் சொன்ன உணவுகள், மருந்துகள், 7625, 27/2

அப்பா உனக்காக, எல்லாம் உனக்காக ,7629, 28/2

நூறு  எழுத்துக்களில் எத்தனை மூலிகைகள் உள்ளன? 7631, 28/2

துலுக்கன் குதிரை தோற்றது தமிழன் குதிரை வென்றது ,7632, 29/2

31 முக்கிய சித்தர் பாடல்கள் , 7634, 29 பிப்ரவரி, 2020.

-சுபம்-

tags- Index 87, February 2020, London Swaminathan

ஆர். கே. நாராயணனுக்கு உதவிய புகழ்மிகு ஆங்கில நாவல் ஆசிரியர் கிரஹாம் க்ரீன் (9934)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9934

Date uploaded in London – 4 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆர்.கே. நாராயணன், உலகப் புகழ் பெற முதலில் உதவியவர் பிரிட்டனைச் சேர்ந்த சிறுகதை , நாவல் ஆசிரியர் கிரஹாம் க்ரீன் GRAHAM GREENE ஆவார் . பிரிட்டனில் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் இந்தியர் எழுதிய கதைகளில் பாராமுகமாக இருந்த போது கிரஹாம் க்ரீன் ஒருவெளியீட்டாளரைக் கொண்டு ஆர்.கே. நாராயணனின் கதைகளை ஆங்கில உலகில் வெளியிட்டார். பின்னர் அவர் சுயம்பிரகாசமாக ஒளி உமிழ்ந்தார். அப்படி இருந்த போதும் இருவரும் வாழ்நாள் முழுதும் நட்புறவோடு வாழ்ந்தனர்.

கிரஹாம் க்ரீன் GRAHAM GREENE இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர், பத்திரிகையாளர் ஆவார். அவருடடைய நாவல்களிலும் சிறுகதைகளிலும் அறநெறி தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். மேலும் உலகின் பல இடங்களில் நடந்ததாக இருக்கும். அவர் உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று வந்தவர் என்பதால் இப்படி கதையின் இடத்தை மாற்ற முடிந்தது.

க்ரீன் 21 வயதில் லண்டனில் பத்திரிகையில் சேர்ந்து பணிபுரிந்தார். 25 வயதில் அவருடைய முதல் நாவல் அச்சாகியது த மேன் வித்தின் THE MAN WITHIN என்ற அந்த நாவலுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்தவுடன் அவர் பத்திரிகைத் தொழிலை உதறி எறிந்தார்.

இரண்டாவது உலகப் போர் காலத்தில் அவருடைய சேவையை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. பின்னர் அவர் பிரிட்டனின் உளவுத் துறையில் பணியாற்றினார். இதனால் கிடைத்த அனுபவத்தைக் கதைகளில் புகுத்தினார். அரசியல் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் நாவல்களை எழுதினார்.28 வயதில் இவர் எழுதிய உளவாளி கதை STAMBOUL TRAIN சுவைமிக்கது அதற்குப் பின்னர் இவர் எழுதிய திகில் கதைகள் திரைப்படங்களாக உருவெடுத்தன.

1926ல் காதல் மனைவி காரணமாக, க்ரீன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தார். இதனால் கிறிஸ்தவ மதம் போற்றும் உத்தம குணங்களையும் கதைகளில் பயன்படுத்தினார் .ஆங்கில கடற்கரையில் வாழ்ந்த இளம் வயது குற்றவாளி, மெக்சிகோவில் வாழ்ந்த குடிகார பாதிரியார், மத்திய ஆப்ரிக்க நாட்டில் பணியாற்றிய ரோமன் கத்தோலிக்க கட்டிடக் கலைஞர் என்று பன்னாட்டு கதாபாத்திரங்களைப் படைத்தார்.

கிரஹாம் க்ரீன் லண்டனுக்கு அருகில் ஐந்து சகோதர, சகோதரிகளுடன் பிறந்தார் . ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் வரலாறு படித்தார்.அவருக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். 86 வயதில் இரத்தப் புற்றுநோய் கண்டு இறந்தார். சுய வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் கதைகளிலும் பொது வாழ்விலும் ‘ஜோக்’குகளை உதிர்த்தார். பத்திரிக்கைக் காரர்களையும் ஏமாற்றிவிடுவார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன நாவல் கிடைத்துவிட்டது என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றினார். உண்மையில் அது அவரிடமே இருந்தது; தொலையவில்லை. APRIL FOOL ஏப்ரல் ஃ பூல்  போன்றதொரு ஜோக் அது!

67 ஆண்டு எழுத்துப் பணியில் 25 நாவல்களை எழுதினார். பல பரிசுகளை வென்றார்.

இடதுசாரி சிந்தனை உடையவர் என்பதால் இவருடைய நாவல்களில் அமெரிக்க எதிர்ப்பும் இருக்கும் . நோபல் பரிசுக்கு முன்மொழியப்படுவோர் பட்டியலில் இவர் பெயர் இருந்தது; அது எட்டாக்  கனியாகவே போயிற்று. ஆனாலும் ஷேக்ஸ்பியர் விருது, ஜெரூசேலம் விருது போன்ற ஏனைய இலக்கிய பரிசுகளை வென்றார் .

பிறந்த தேதி – அக்டோபர் 2, 1904

இறந்த தேதி – ஏப்ரல் 3, 1991

வாழ்ந்த ஆண்டுகள் – 86

எழுதிய நாவல்கள், கதைகள்:-

PUBLICATIONS

1935- THE BASEMENT ROOM AND OTHER STORIES

1938- BRIGHTON ROCK

1940- THE POWER AND THE GLORY

1948- THE HEART OF THE MATTER

1950- THE THIRD MAN

1951 -THE END OF THE AFFAIR

1955- THE QUIET AMERICAN

1958 – OUR MAN IN HAVANA

1961- A BURNT OUT CASE

1966 – THE COMEDIANS

–SUBHAM–

tags- ஆர்.கே.நாராயணன், கிரஹாம் க்ரீன், Graham Greene 

தமிழ்ப் புலவர்களின் ரஸிக்க வைக்கும் சொல்லாடல்–2 (Post No.9933)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 9933

Date uploaded in London – 4 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ்ப் புலவர்களின் ரஸிக்க வைக்கும் சொல்லாடல்–2                                           பா.கண்ணன், புது தில்லி

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 2-8-2021 அன்று ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

ஞானமயம்-தமிழ் முழக்கம் ஓராண்டு நிறைவையொட்டி, அழகுத் தமிழில் பொதிந்துள்ள மேலும் சில சுவாரசியமானப் பாடல்களைப் பார்க்கலாம்…..

அழகிய மணவாளதாஸர் எனும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய 108 திருப்பதி அந்தாதி நூலை அடியொட்டி திருநின்றவூர் திருமலை அத்தங்கி தாதாரியர் தொண்டன் அதே தலைப்பில் வேறொரு நூல் இயற்றியுள்ளார் ஒரு வித்தியாசத்துடன் .ஒவ்வொரு திவ்யதேசத்துக்கும் உரிய 8 முக்கியச் செய்தி களை ஒவ்வொரு செய்யுளிலும் அதாவது, வழிபட்டோர், தீர்த்தம், விமானம், பிராட்டியாரின் நாமம், திசை, கோலம், திருமால், திருப்பதி ஆகியவற்றை விவ ரித்துள்ளார்.. காப்புச் செய்யுள் 2, & 3-ல் யமகம் கையாளப்பட்டுள்ளது. 2-வது திருமங்கை ஆழ்வார் பற்றியது. 3-வது-எதிராஜர் (ராமாநுஜர்) பிரானைப் போற்றுவது.

  பரகாலன் பாசக் கயத்தார்ப் புணாகருள் பாரெனவம்

  பரகால னாந்திரு மாலவ னெங்கட் படமையினிம்

  பரகால னென்றி யவர்க்குரித் தாமுனைப்பற்றி னஞ்சீர்ப்

  பரகால னான்மறை யாறங்க மோ துமெய்ப் பாவலனே.

பரகாலன்(யமன்), ஆர்ப்புணாது அருள் பார்(பாசக் கயிற்றால் கட்டுப் படாமல் இருக்க அருள்வாய்), அம்பரக் காலனாம் திருமால்(ஆஅகாயத்தை அளந்தப் பாதத்தையுடையத் திருமால்), இம்பர காலன் அன்றி அவர்க்கு உரித்தாம் உன்னை- இவ்வுலகில் அக்காலனுக்கு உரித்தாகாமல் விஷ்ணுவிக்கே உரித் தானப் பரகாலனான உன்னைப் பற்றினேன், நான்மறை ஆரு அங்கம் ஓதும்

(நான்மறைக்குச் சமமான, திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகியவற்றுக்கு 6 அங்கங்கள் போல் அமைந்த பெரிய திருமொழி, திருவெழுக்கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய 6 நூல்களை அருளிச் செய்தப் பரகாலன் என்றத் திருமங்கையாழ்வாரைத் தாள் பணிந்துச் சேவிக் கிறேன், என்கிறார். 

தமிழுக்குத் தொண்டாற்றியப் புலவர்கள் பலருள் இரட்டைப் புலவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாவர். இவர்கள் வாழ்ந்த காலம் ( நூற்றாண்டு என்கின்றனர் வர லாற்று ஆய்வாளர்கள்.

சோழநாட்டில், செங்குந்தர் மரபில் தோன்றினர் என்றும், இருவரும் உறவினர் கள் – அதாவது அத்தை மகன், மாமன் மகன் என்றும், இருவரும் இணைபிரியாத வர் என்பதால் இரட்டையர் எனப் பெயர் பெற்றனர் என்றும் கூறப்படுவது உண்டு

சோழநாட்டில் வாழ்ந்த ஒரு வேளாளர் தம்பதிக்கு, சிவபெருமானின் திருவரு ளால், அஸ்வினி தேவர்களின் அம்சமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ஒருவர் பிறவியேலேயே கண் பார்க்க இயலாதவர். மற்றொருவர் கால் நடக்க இயலாதவர்.இதனால் மனமுடைந்த தம்பதியர்க்கு,‘ஊனம் இருந்தாலும்,ஞானம் மிகப் பெற்று,ஞாயிறு போன்று பிரகாசித்து,ஞாலத்தை வலம் வருவார்கள்’ என்று  பெரியோர்கள் வாழ்த்தினார்களாம்.அதனாலேயே, முன்னவருக்கு முது சூரியர் என்றும், இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெயரிட்டனர்.

சிறு வயதிலேயே இருவரும் தமிழ்ப்பற்று மிகுந்து விளங்கினர். தமிழைக் களங்கமறக் கற்றுச் சிறந்தனர்.

இருவரும் மனமொத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். கால் நடக்க இயலா தவர் முதல் இரண்டு வரிகளைப் பாட, செய்யுளின் தன்மை மாறாமல் அடுத்த இரண்டு வரிகளை கண் பார்க்க இயலாதவர் பாடுவாராம்.

பெரியோர்கள் வாழ்த்தியது போல, ஞாலத்தை (தேசங்களை) வலம் வந்த இரட் டையர்கள் சென்றமிடமெல்லாம் விரும்பிப் பெற்றப் பரிசில் தொகை ஒரு பணம் மட்டுமே!

கண்பார்வை இழந்தவர்  நடமாட முடியாதவரைத் தன் தோளில் சுமந்தவாறு, அவரின் வழிகாட்டுதலில் நடப்பார்.இவர்கள் ஒவ்வொரு தேசமாகச் சென்று பாடல் பாடி வந்தனர். இவர்களுடைய பாடல்களில் சைவப்பற்று

ஓங்கியிருந்தது. .

புராணங்களில் உள்ள மிக நுண்ணியக் கருத்துக்களைத் தம் பாடல்களால் வெளிக்கொணர்வதில் வல்லவர்களாக இருந்தனர்.“கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்” எனும் தொடர் வாயிலாகக் கலம்பகம் எனும் தமிழ் வகைப் பாடல்கள் பாடுவதில் மிகவும் தேர்ந்தவர்களாக இருந்தனர்.

கலம்பகம் என்பது தமிழ் இலக்கண வகைப்படி, கதம்ப மலர் மாலையைப் போன்று, பதினெட்டு உறுப்புகள் அமையப்  பலவகைச் செய்யுள் விகற்பங்களால் பாடப் பெறுவதாகும்.

சிதம்பரம் நடராஜர் மேல் அதீத பற்றுக் கொண்டவர்கள். எழுதாக் கிளவியை (சொற்கள்)வேதம் என்றும், எழுதும் மறையை தேவாரம் என்றும், முனிவர் உபமன்யு வேதம் ஓதியவர் என்றும், கழுமல(சீர்காழி) முனிவர் சம்பந்தர் பெருமான் தேவாரம் பாடி வழிபட்டார் என்றும், இவர்களின் இனியத் திருவடிகள் எங்கள் சிரசின் மீது எக்காலமும் இருக்க வேண்டும் என்று இவ்விருவரும் ஸ்தோத்திரம் செய்துள்ளது மிகச் சிறப்பாகும். தில்லை நடராஜர் மீது அவர்கள் இயற்றியப் பாடல்கள் தில்லைக் கலம்பகம் என்று அழைக்கப்படும். இவர்கள் இரட்டையர்கள் அல்லவா ?இவர்கள் பாடிய தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்றில், இரண்டு பேசும் பொருள்கள் தொடர்ந்து வருவது போல் பாடுகின்றனர்.

 சுருதிக்கும், தாளத்துக்கும் ஒத்து வரும் இசைவண்ணம் நிரம்பியப் பாடல்…

காதில் இரண்டு பேர்; கண்டோர் இரண்டு பேர்;

ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்;

பேதை முலை உண்ணார் இரண்டு பேர்;

ஓங்கு புலியூரருக்குப்

பெண்ணான பேர் இரண்டு பேர்

சிவமஹா புராணத்தில் மிகச் சிறிய அளவில் இடம்பெறும் ஒரு சம்பவம் இது.

நாக அம்சமாகப் பிறந்த இரண்டு பேர், சரஸ்வதி கடாட்சத்தினால் அருமையான இசைஞானத்தைப் பெற்றார்கள். இவர்கள் இருவரும் தங்களின் இசை வல்ல மையை சிவபெருமானிடம் மட்டுமே சமர்ப்பணம் செய்யத் தவமிருந்தார்கள். தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், அவர்களின் வேண்டுதலின் படி, அவர்கள் இருவரையும் தன்னுடைய காதுத் தோடுகளாக அணிந்து கொண்டார். அந்த நாகர்கள் இரண்டு பேர் – கம்பளர் மற்றும் அசுவதரர் எப்போதும் சாமகானம் பாடிய வண்ணம் இருப்பார்களாம்..இந்த இருவரையும் தான், இரட்டைப் புலவர்கள் ‘காதில் இரண்டு பேர்’ என்கின்றனர்.

‘கண்டோர் இரண்டு பேர்’ – தில்லைச் சிதம்பரத்தில் ஆடல்நாயகனின் தாண்டவத்தைக் கண்டு பேறு பெற்றவர்கள் இரண்டு பேர். அவர்கள் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள்.

‘ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்’– அடிமுடி தெரியாவண்ணம் ஜோதி ஸ்வரூபமாக நின்ற சிவபெருமானை – பிரம்மாவும் விஷ்ணுவும் தலை எங்கு, கால் எங்கு என்று தெரியாமல் – திகைத்தனர். ஆகையாலேயே பிரம்மாவும், விஷ்ணுவும் ‘காணோர் இரண்டு பேர்’.

‘பேதை முலை உண்ணார் இரண்டு பேர்’ – பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது மரபு. ஆனாலும், குழந்தையாய் இருந்தாலும் தாய்ப்பால் உண்ணாதவர்கள் இரண்டு பேர். ஒருவர் பிரம்மரிஷி வியாக்ரபாதர்-ஆத்ரேயி

தம்பதியின் மகன் உபமன்யு ஆவார். குழந்தைப் பசியால் அழுத போது மகேசனே அதற்குப் பாற்கடலையேக் குடிக்க வைத்துப் பசியாற்றினாராம்:   மற்றொருவர் பார்வதி தேவியால் குழந்தையாக பாவிக்கப்பட்டு ஞானப்பால் அருளப்பெற்றவர் திருஞானசம்பந்தர் (இளைய பிள்ளையார்).

‘ஓங்கு புலியூரருக்கு பெண்ணான பேர் இரண்டு பேர்’ – சிவபெருமான் கங்கை, உமாதேவி இருவரையும் நாயகியராகக் கொண்டதைக்  குறிக்கின்றனர் இரட்டையர்.

.சாஸ்திரங்கள் இறைவன் உள்ளான் என நிலை நிறுத்தும்; ஆனால் ஸ்தோத்திரங்கள் இறைவனையே நம் மனக்கண் முன் காட்ட வல்லது. அதைத் தான் தில்லைக் கலம்பகம் உறுதிபடுத்துகிறது.

தமிழ் மகாசமுத்திரத்தில் அமிழ்ந்துக் கிடந்து நம்மைப் பிரமிக்க வைக்கும்  இப்படிப்பட்ட இலக்கிய ரசனை மிகுந்த முத்துக்களும், இரத்தினங்களும் ஏராளம், ஏராளம்!

 உயிர் எழுத்துக்களில் ஆரம்பித்தோம் அதிலேயே அழகாய் முடிப்போமே!

இதை நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? ஈசன்-தருமி, யட்சன்-தருமன் கேல்வி-பதில் பாணியில் ஒன்று இதோ…..

“அ” வுக்கு அடுத்து “ஆ” வருவதேன்?*                                                             

*அரியும், ஆண்டியும் (பிச்சாண்டி= அரன்) ஒன்றே என்பதை அறிந்திட!!* 

*”இ” வுக்கு அடுத்து “ஈ” வருவதேன்?*

*இல்லறத்தை நடத்தப் பொருள் ஈட்டி வாழ் என நினைவுறுத்த!”

*”உ” வுக்கு அடுத்து “ஊ” வருவதேன்?*

*உத்தமன் ஊருடன் கூடி வாழ்வான் எனக் கூறிட!”

*”எ” வுக்கு அடுத்து “ஏ” வருவதேன்?*  

*எதையும், ஏட்டிக்குப் போட்டி ஆக்காமல் ஆழ்ந்துச் சிந்தித்துப் பார்க்க!!  அல்லது இப்படியும் சொல்லலாமே.

எரு அடித்து விட்டால் அடுத்து  ஏர் உழ வேண்டியதைக் குறிக்க

*”ஐ” மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?*

*யாருடனும் ஐக்கியமாகாமல் தலைக்கனம் கொண்டிருந்தால் தனிமைப் படுத்தப்படுவாய் என்பதை உணர்த்த!* அல்லது காலத்துக்கு ஏற்ப,

“ஐரேயன் (கள்) குடித்தவன் போல் சுருண்டு, வளைந்துக் குறுகிக் கிடக்காதே!” என்றுச் சுட்டிக் காட்ட!

“ஒ” வுக்குப் பின் “ஓ” வருவதேன்?

*ஒற்றுமைத் தழைக்க ஓரம் சொல்லேல் (ஓருதலைப் பட்சக் கண்ணோட்டம்) என்பதை உணர்த்திட!!!*

“ஔ”வும் தனியாக நிற்பதேன்?  —அடுத்தவர் உயர்வைக் கண்டு ஔவியம் (பொறாமை) பேசி தாழ்த்திக் கொள்ளாதே என்று எச்சரிக்கவே!

 ஆம், முடிவில் இந்த “(அ) ஃக்” எதற்கு?  — அஃகம் சுருக்கேல் “அஃகமும் (தானியம்) காசும் சிக்கெனத் தேடு” என்று உரைத்திட!

*ஆஹா! தமிழ் ஓர் அழகு மொழியே என்பதில் என்ன சந்தேகம்!”.

தமிழ் முழக்கம் ஓங்கி ஒலிக்கட்டும். திக்கெட்டும் நீக்கமற பரவட்டும்! வாழ்த்துக்கள்.

நன்றி, வணக்கம். ஜெய் ஹிந்த்!

       ———————————————————————————————————

tags–தமிழ்ப் புலவர், சொல்லாடல்–2,

அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 2 (Post No.9932)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9932

Date uploaded in London –  4 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஆடிக் க்ருத்திகை சிறப்பு விழா நாளான 2-8-2021 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் ஆற்றிய உரை.

அபகார நிந்தைப் பட்டுழலாதே, அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ இபமாமுகன் தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா, ஜெபமாலை தந்த சற்குருநாதா, திருவாவினன் குடிப் பெருமாளே. முருகன் தனக்கு உபதேசம் செய்ததையும் ஜெபமாலை தந்ததையும் நினைத்து இப்படிப் பாடி உருகுகிறார் அருணகிரிநாதர்.

அவரது திருப்புகழின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்ற தேவி உபாசகன் அரசன் பிரபுட தேவ மஹாராஜனிடம் அருணகிரிநாதர் தான் உபாசிக்கும் மூர்த்தியைச் சபையில் அனைவருக்கும் காட்டினால் அவரே பெரியவர் என்று ஒப்புக் கொள்கிறேன் என்றார். பிரபுடதேவ மஹாராஜன் இந்தப் போட்டிக்கு அருணகிரிநாதரை அழைத்தார். சம்பந்தாண்டான் எவ்வளவு  முயன்றும் தனது உபாசனை தெய்வமான தேவியை அனைவருக்கும் காட்ட இயலவில்லை. அருணகிரிநாதர் ‘அதல சேடனாராட, அகில மேரு மீதாட, அபின காளி தானாட’ என்று பாடத் தொடங்கினார். மதுர வாணி தானாட, மலரில் வேதனாராட மருவு வானுளோராட மதியாட வனச மாமியாராட, நெடிய மாமனாராட மயிலுமாடி நீயாடி வரவேணும் என்று அவர் வேண்ட, முருகப்பிரான் திருக்கையில் வேல் விளங்க மயில் மீது அமர்ந்து ஆடியவாறே வந்து சபையோருக்குக் காட்சி தந்து அருள் பாலித்தார்.  இதை அவரே தனது பாடலில், “சயிலம் எறிந்த கை வேற் கொடு  மயிலினில் வந்தெனை யாட்கொளல், ஜகம் அறியும் படி காட்டிய குருநாதா” என்று குறிப்பிட்டு உருகுகிறார்.

அன்று தொடங்கி இன்று வரை அன்பருக்கு உதவும்  அமுதமாக விளங்குகிறது திருப்புகழ். இந்த முருகனின் புகழைக் கற்று ஓத, ஒரு நூல் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழே.

வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத

நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி

குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்

திருப்புகழைக் கேளீர் தினம்.

ஆம்! திருப்புகழைத் தினமும் கேட்டால், ஓதினால் மற்ற எதுவும் வேண்டாம், ஏனெனில் திருப்புகழில் சகலமும் அடங்கி இருக்கிறது.

திருப்புகழ் அருணகிரிநாதர் வாயிலிருந்து அருள்மொழியாக வெளிப்பட்டிருப்பினும் அதில் உள்ள ஒரு ரகசியத்தை முருகப் பிரானே அதிலேயே அருளி விட்டார்.

‘யாம் ஒதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என்ற கந்தரனுபூதிச் சொற்றொடரால் அருணகிரி வாக்கு முருகன் வாக்கு என்பதையும் அதைத் தாமே பெற வேலவர் அவருக்குத் தந்தார் என்பதும் பெறப்படுகிறது.

திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்க

திருப்புகழை நித்தஞ் செபிக்கத் – திருப்புகழை

அர்ச்சிக்க முத்தியெளிதாகுமே கூற்றை வென்று

கெர்ச்சிக்கலாமே கேடீ

என்பது ஆன்றோர் வாக்கு.

முருகன், ‘அடியவர் வேண்டியபோது வேண்டிய போகம் உடனே தருவான்’ என்பதை கோங்கிள நீர் என்னும் திருவேங்கடப் பாடலில் அவர் கூறி உறுதி செய்கிறார்.

வீர ஜெயத் திருப்புகழ் என்று பெருமையுடன் அழைக்கப்படும் ‘சினத்தவர் முடிக்கும்’ என்று தொடங்கும் திருத்தணிகைத் திருப்புகழில் திருப்புகழின் பெருமையை அவரே கூறுவதைப் பார்க்கிறோம்.

“சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் உயிர்க்குஞ் சினமாக

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்றறிவோம் நாம்

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறைப் புகழ்” என்பதுவே திருப்புகழின் பெருமை.

திருப்புகழைப் படித்தால் தமிழறிவு கூடும். வேத இதிஹாஸ புராணங்களின் அற்புத சம்பவங்களையும் சாஸ்திர தத்துவார்த்தங்களையும் உபநிடத ரகசியங்களையும் அறிய முடியும். இகபர சௌபாக்யம் கிட்டும்.முக்திப் பேறும் கிட்டும்.

திருப்புகழின் பெருமையை பாரெல்லாம் உணரும் வண்ணம் செய்த ஸ்ரீ வள்ளிமலைத் திருப்புகழ் ஸச்சிதானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய பகை நாட்டினர் இந்தியா மீது குண்டு மழை பொழியத் திட்டமிட்டனர். மக்கள் அனைவரும் பயந்து நடுநடுங்கினர். அப்போது ஸ்வாமிகள் திருப்புகழ் பாராயணக் குண்டு என்று அவர்களின் குண்டுக்கு எதிர் குண்டாக திருப்புகழ் பாடல்களைத் தொகுத்து 1942ஆம் ஆண்டு ஜனவரியில் ஒரு நூலாக வெளியிட்டார்; அன்பர்கள் அதை ஓதினர். பயம் தெளிந்தனர். பகை நாடான ஜப்பான் அணுகுண்டால் பாதிக்கப்பட்டு தோற்று அழிந்தது. ஜெர்மனி வீழ்ந்தது.

எவ்வளவு கஷ்டம் வந்த போதிலும் கூட அதை நீக்கும் அரு மருந்து திருப்புகழே என்பதை இந்த ஒரு சம்பவமே நமக்கு உணர்த்துகிறது. நமக்கு அன்றாடம் உதவும் சில பாடல்களை இப்போது பார்ப்போம்:-

அச்சமற்று வாழ, ‘மரண ப்ரமாதம் நமக்கில்லை யாம் என்றும் வாய்த்த துணை’ என்ற பாடல்.

தாழ்வின்றி வாழ, ‘சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை’ என்ற பாடல்.

நோய்கள் வந்தால் அவை தீர ஓத வேண்டிய திருப்புகழ் – ‘இருமல் உரோகம்’ என்ற பாடல்.

தனியே வழி நடக்கும் போது ‘வேலும் மயிலும் துணை’ என்ற கந்தரலங்காரப் பாடல்.

மனதிலே கலக்கம் வந்தால் ‘இதயந் தனிலிருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே’ என்ற பாடல்

ஆபத்துக்கள் வந்தால் ‘நாள் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும்’ என்ற கந்தரலங்காரப் பாடல்

திருமணம் தடைப் பட்டுக் கொண்டிருந்தால் அல்லது தாமதமாகிக் கொண்டிருந்தால் ‘நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே’ என்ற பாடல்

முருகனை தரிசிக்க மலை மீது ஏறும் போது திருப்புகழ் பாடல்களைப் பாடிக் கொண்டே ஏறுதல் மரபு.

முருக நாமம் கூறும் திருப்புகழைப் பாடுபவரின் பெருமை என்ன? ‘வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏத்திய சித்த ப்ரஸித்தரே!’ என்பது தான் பதில்!

தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி திருப்புகழைக் கற்று ஓதினால் அது நமக்கு இகபர சௌபாக்யம் அருளும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த நன்னாளில் உலகெங்குமுள்ள அன்பர்களை இணையதள வாயிலாகக் கூட்டி முருகப் பிரானை வழிபடும் பேற்றை நமக்கு நல்கிய லண்டன் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. இந்த அன்பர்கள் கூட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக்கி சில வார்த்தைகளைப் பேச அழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

“அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில்  ‘அஞ்சல்’ என வேல் தோன்றும் – நெஞ்சில்

ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

முருகா என்று ஓதுவார் முன்!”


நன்றி வணக்கம்!              

    

***

tags- அருணகிரிநாதர் -2, முருகன்

Ten Kinds of Plays in Bharata’s Natyasastra (Post No.9931)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9931

Date uploaded in London – 3 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Chapter 20 of Bharata’s Natyasastra says that there are ten kinds of plays.

(Following is only a summary of the chapter in Natyasastra).

“Just as the musical notes/Svaras constitute scales, so different Vrttis constitute different plays.

Just as the Sadja and Madhyama include all the notes, so Nataka and Prakarana include all the Vrttis.

1.Naataka

That which has as its theme a well known story, a well known hero of exalted nature which concerns the story of a royal sage and his family. In a Nataka there is the story of kings, various Rasas/ emotions.

Xxxx

2.Prakarana

Prakarana is that in which the story, construction and the hero are the original creations of the author. It should have not less than five and not more than ten acts

Xxx

3.Samavakaara

In Samavakaara, the story deals with Gods and Asuras. In its three acts, there are three kinds of deceits, three calamities and three types of Srngara (love).

It should have 12 important characters.

Xxx

4.Iihaamrga

In iihamrga, the characters are divine; the theme is war on account of a divine woman . It is her anger to be developed. Many of the male characters must be bold.

Xxx

5.Dima

The Dima must have a well known story. It should have well known and dignified heroes and sixteen of them. It should have six Rasas except Srngara and Hasya.

xxx

6.Vyaayoga

It should be constructed around a well known hero, with few female characters and events of one day’s duration. The hero must not be a divine person, but a royal sage.

Xxx

7.Anka

It is also called Utsrstikanka.

Here the hero may be well known. Sometimes it may be otherwise. It should have Karuna/ compassion as the predominant Rasa/ emotion.

xxx

8.Prahasana

Prahaasana (Parikaasam in Tamil) is of two kinds Pure /Suddha and Sankirna/mixed.

The pure Prahaasana is a satire on Gurus, ascetics,Buddhist monks,learned Brahmins etc., by ridiculing them. Comic dialogue is in every day language.

The Mixed type is one in which courtesans, menial servants, eunuchs, rogues, the gallants appear in immodest dress and make open (obscene??) gestures.

My comments

Great Pallava Emperor Mahendra Varman wrote the famous comedy ‘Matta vilasa prahasana’ in Sanskrit. It is a good example for this type of drama.

Rigveda has got sixteen dialogue poems , some with obscene gestures. They may come under Sankirna / Mixed type.

Bhasa’s 13 plays, Kalidasa’s three plays and plays of Sudraka, Visakadatta, Madhavi’s 11 types of dances in Tamil epic Silappdikaram may be good examples for all the ten types of plays.

9.Bhaana

Bhana is to be acted by one person.

Either it refers to one’s own experience or  acts of some other person. There are two varieties. Actor can carry on a dialogue with an invisible person by looking up at sky. or himself repeat the other person’s dialogue with suitable gestures.

Here we are reminded of monologues of Shakespearean plays and epic heroes’ lamentations.

Even today we see mimicry shows with both types of acting.

Xxx

10.Viithii

Viithii in one act. There may be one or two characters of high or middle or low status. It can have any rasas. There are thirteen distinguishing features of a Viithii.

Bharata describes them in 20 Slokas.

The above is only a summary of Bharata’s categorisation.

The whole chapter takes 150 Slokas.

My comments

In Sanskrit we have 100s of dramas from ancient days. In addition, we have proto dramas in the Rigveda in the form of dialogue poems.

Unfortunately, we have no Drama in Tamil.

But the above descriptions show that Sanskrit dramas have no connection with the Greek dramas. Our dance, drama and music originated in our own land and grew in Hindu way.

In Greek we have tragedies and comedies and in India we have drams dealing with eight types of emotions (also known as Navarasa in later days by adding one more emotion) . In our dramas we have introduction by the director/sutradhara and National Anthem at the end in the form of Bharata vaakya. All these features are absent in Greek dramas.

In Krta Yuga there was no drama according to Bharata’s Natyasastra. So the Rigvedic dialogue poems were only proto dramas .

Bharata’s approach is amazing. He talks about dramas with ten acts and mono act plays. He talks about one actor mimicrying more people. Unlike Greece, Bharata talks about Eight Rasas/emotions, which is found in later Tamil grammar book Tolkappiam.

If we do a comparative study with Ancient Greek dramas it may bring more light in the field of dramaturgy. They borrowed a lot of things from us. After Alexander’s invasion,we might have borrowed certain features from the Greeks.

— Subham —-

tags- types of plays, Drama types, Bharata, Natyasastra

பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை ! (Post No.9930)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9930

Date uploaded in London – 3 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முன்னொரு கட்டுரையில் பரத நாட்டியம் தோன்றியது எப்படி? அதை பரத முனிவர் 6000 சம்ஸ்க்ருத ஸ்லோக ங்களில் சுருக்கி வரைந்தது எப்படி என்பனவற்றைக் கண்டோம் .அது 36 அத்தியாயங்களைக் கொண்ட  நாட்டிய சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்தில் உள்ள கதை. இப்போது 36ஆவது, அதாவது கடைசி அத்தியாயத்தில் உள்ள சுவை மிகு கதையைக்  காண்போம். இதுவும் பரத முனிவரே சொல்லும் பாணியில் அமைந்துள்ளது.

இதோ ஸ்லோகம் வாரியாக சுவையான கதை—

ஸ்லோகம் 1-15

முனிவர்கள் சொன்னார்கள்- நாட்யவேதம் பற்றி நீங்கள் சொன்னதைக் கேட்டோம். ஒரு சந்தேகம் உளது. அதைத் தெளிவு செய்யுங்கள்; உம்மைத் தவிர வேறு எவருக்கு நாட்யவேதம் பற்றிய அறிவு உளது? உமக்கு சவால் விடுக்கும் தொனியிலோ நக்கல் செயய்யும் பாணியிலோ , விரோதம் காரணமாகவோ நாங்கள் இதைக் கேட்பதாக என்ன வேண்டாம். முன்னரே நாங்கள் கேட்காததற்கு கரணம், உம்மை இடையில் தொந்தர வு செய்யக் கூடாதென்பதற்காகவே. இப்போது எங்களுக்கு இந்த ரஹஸ்யத்தைக் கூறவும் . உலக நடை முறையே நாடகம் என்று நீவீர் சொன்னீ ர் ; இதில் மறைந்துள்ள ரஹஸ்யம் ஏதேனும் உளதோ? பூர்வாரங்கத்தி ல் உள்ள து யாது? சங்கீதம் ஏன் அங்கு வந்தது? அதன் பொருள் என்ன? சூத்ரதாரனே தூய்மையானவனே ! பின்னர் எதற்காக அவர் சுத்திகரிப்பு சடங்குகளை செய்கிறார் ? சொர்க்க லோகத்திலிருந்து நாடிய நாடகம் பூமிக்கு எப்படி வந்தது/? உங்கள் சந்ததியினர் நடிகர்களை அறிந்தது எப்படி? இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடியே விளம்புங்கள்.

((சில பகுதிகளை விட்டு விட்டு நாடகம் பூமிக்கு வந்த கதையை மட்டும் பார்ப்போம்.))

ஸ்லோகம் 32-35

என்னுடைய மகன்களுக்கு செருக்கு ஏற்படவே முனிவர்களையும் ரிஷிகளையும் கிண்டல் செய்து ‘காமடி’ (Prahasana) நாடகம் நடத்தினர். ரிஷிகள் கோபப்பட்டு உங்கள் நாடகம் அழிந்து ஒழியட்டும் என்று சாபமிட்டனர். நீங்களும் உங்கள் சந்ததியினரும் பூமியில் பிறந்து கீழ் ஜாதியினர் போல நடத்தப்படுவீர்களாகுக என்று சபித்தனர்.

இந்திரன் அவர்களிடம் மன்றாடவே நாடகம் அழியாது இருக்கட்டும் ; ஏனைய சாபம் பலிக்கட்டும் என்றனர்

 என் மகன்கள் என்னிடம் வந்து முறையிட்டு கதறவே இதை அழியாது காக்க நாடகமாக நடித்துவிடுவோம் என்று  சொல்லி, ஒரு பிராயச்சித்தமாக அப்சரஸ் பெண்களுக்கு அதைக் கற்பித்தனர் .

ஸ்லோகம் 52-70

காலம் உருண்டோடியது. பூலோக மன்னனான நஹுஷன் என்பான், தனது  திறமையால் சொர்க்கலோக பதவி பெற்றான். அவன் இசையுடன் கூடிய நாட்டியத்தை அங்கே கண்டான். நாம் பூமிக்குத் திரும்புகையில் என் வீட்டிலும் இது நடைபெறவேண்டும் என்று எண்ணினான். தேவர்களைக் கேட்டபோது அப்சரஸ் பெண்கள் பூவுலக மக்களுடன் தொடர்புகொள்ள முடியாது; ஆகையால் உமது கோரிக்கையை ஏற்கமுடியாது என்று பிருஹஸ்பதி சொன்னார். அவர்கள் இந்தக் கலையின் ஆசார்யரான பரத முனிவனைக் கேட்டால் ஒரு வழி பிறக்கலாம் என்றார்  பிருஹஸ்பதி.

நஹுஷனின் பூர்வீக அரண்மனையில் ஊர்வசி தனது தோழிகளுடன் நாட்ய பயிற்சி செய்தபோது . திடீரென்று ஒருநாள் மறைந்தவுடன் அப்போது அங்கிருந்த மன்னன் ஏக்கத்தில் இறந்தான் . பின்னர் நான் பூமியில் இதை நடத்த திட்டமிட்டேன் நஹுஷனும் பல பெண்களின் நளின அபிநயத்துடன் இது அவனது அரண்மனையில் நடக்க வேண்டும் என்று கூறியதால் என்  மகன்களை அழைத்து இதை பூவுலகில் நடத்துங்கள். பிரம்மா உண்டாக்கிய கலையால் அவர் அனுமதித்து விட்டார். ஒரு அபவாதமும் ஏற்படாது. கோகல என்பவர் உங்களுக்கு மேலும் பல உதவிகளை வழங்குவார் என்றேன்.

என் மகன்களும் பூமிக்குச்சென்று நஹுஷனின் அரண்மனையில் நாட்டிய நாடகம் நடத்தி  அங்குள்ள பூலோக பெண்களை மணந்து பிள்ளைகளையும் பெண்களையும் பெற்றுக்  கொடுத்துவிட்டு விண்ணுலகம் வரவே அவர்களை பிரம்மாவும் அனுமதித்தார்.ஆகையால் சாபத்தின் ஒரு பகுதியின்படி, பூமியில் நடிகர் பரம்பரை தோன்றியது இது பிரம்மாவிடமிருந்து தோன்றிய கலை ஆதலால் சர்வ மங்களும் சுபிட்சமும் உண்டாகும்.

இதன் பின்னார் ஸ்லோகம் 71-82ல் மங்களம் கூறுவதுடன்

பரத முனிவர் எழுதிய நாட்டியசாஸ்திர நூல் நிறைவு அடைகிறது

–சுபம்–

tags- பரதநாட்டியம்,  பூமி,  கதை, பரத முனிவர்,  நாட்டியசாஸ்திரம்

மண முறிவு, மன நோயில் சிக்கிய பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜான் ரஸ்கின் (9929)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9929

Date uploaded in London – 3 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எழுத்தாளர்களுள் பலர் உலகப் புகழ் பெறுகின்றனர். ஆனால் அவர்களுடைய சுய வாழ்வோ  சுகப்படுவதில்லை. வறுமை வாட்டும் அல்லது மன வெறுமை வாட்டும். அப்படிப்பட்டவர்கள் பட்டியலில் பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜான் ரஸ்கினும்  (JOHN RUSKIN) ஒருவர். கலைகள் பற்றி எழுதி புகழ் அடைந்தவர் அவர்.

19ம் நூற்றாண்டு பிரிட்டனில் கலை பற்றியும் சமுதாயம் பற்றியும் எழுதி புதிய சிந்தனையை மலர வைத்தவர் ஜான் ரஸ்கின்.

அவர் லண்டனில் மத்திய தரக் குடும்பத்தில் பிறந்தார். அந்தக் குடும்பத்தில் அவர் ஒரே புதல்வர். வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்ற அவர், பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்றார். அங்கு அவர் கவிதை எழுதி ஒரு பரிசும் பெற்றார். அவருக்கு கலை விஷயங்களில் அதிக ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் அவரை அழகான ஆல்ப்ஸ் மலை வாசஸ்தலங்களுக்கு அனுப்பினார்கள். அங்கே இயற்கை அழகில் அவர் சொக்கிப்போனார் .

அவர் தற்கால ஓவியர்கள் (MODERN PAINTER) பற்றி ஐந்து தொகுதிகள் வெளியிட்டார். அதில் முதல் தொகுதி 24 வயதிலேயே வந்தது குறிப்பிடத்  தக்கது. பிரிட்டிஷ் ஓவியர் டர்னர் (TURNER) மற்றும் ரபேலுக்கு முந்திய கால ஓவியர்களின் (PRE-RAPHAELITE)  சிறப்பை வருணிக்கும் புஸ்தகங்கள் இவை.

ரஸ்கினுக்கு கட்டிடக்கலையிலும்  ஈடுபாடு உண்டு. இதனால் மத்திய கால கட்டிடக்கலையின் சிறப்புகளையும் தனி புஸ்தகங்களாக எழுதினார் . ‘கட்டிடக் கலையின் ஏழு ஒளி விளக்குகள்’, ‘வெனிஸ் நகர் கல் ஓவியங்கள்’ முதலியன பலருடைய பாராட்டுதலையும் பெற்றன.

மத நம்பிக்கையால் உந்தப்பட்ட கல் வினைஞர்களும், சிற்பிகளும் மத்திய கால சர்ச்சுகளில் , கதீட்ரல்களில் அற்புதமான கலை வேலைப்பாடுகளை சமைத்தனர் என்பது அவரது துணிபு.

தொழிற்புரட்சியை அடுத்து உருவான நகரங்களின் அவலட்சணத்தை அவர் குறைகூறினார். அவை தவறான கட்டுமானங்கள் என்றும் இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது என்றும் கண்டித்தார். இந்த சிந்தனை அவர் சமுதாய விஷயங்களை எழுதவும் தூண்டின. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும், அவர்களுடைய ஊதியம் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் எழுதினார். கலைகள் பற்றி அவர் எழுதியதால் ஏற்பட்ட புதிய சிந்தனை, சமுதாய விஷயத்திலும் எதிரொலித்தது. இங்கிலாந்தில் தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்து புதிய எண்ணங்கள் உதித்தன.

50 வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நுண் கலை கற்பிக்கும் பேராசிரியர் ஆனார். இவ்வளவு இருந்தும் சொந்த வாழக்கை பூஜ்யமானது; 35 வயதில் திருமணம் குலைந்தது . வாழ்க்கையின் கடைசி நாட்களில் மனத்தொய்வு ஏற்பட்டு முடங்கிப் போனார்.

ஜான் ரஸ்கின் பிறந்ததேதி – பிப்ரவரி 8, 1819

இறந்த தேதி – ஜனவரி 20, 1900

வாழ்ந்த ஆண்டுகள்- 80

அவர் எழுதிய நூல்கள்:–

1843- 1860- MODERN PAINTERS ( FIVE VOLUMES)

1849- THE SEVEN LAMPS OF ARCHITECTURE

1851-53 – THE STONES OF VENICE

1862- UNTO THIS LAST

1865- SESAME AND LILIES

1871- 1884 – FORS CLAVIGERA

1872- MUNERA PULVERIS

1880- A JOY FOR EVER

1885-  1889- PRAETERITA (UNFINISHED )

–SUBHAM–

 tags—மண முறிவு,  பிரிட்டிஷ் எழுத்தாளர் ,ஜான் ரஸ்கின், John Ruskin

தமிழ்ப் புலவர்களின் ரஸிக்க வைக்கும் சொல்லாடல்–1 (Post No.9928)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 9928

Date uploaded in London – 3 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 267-2021 அன்று ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

                                                                                                                                                                                                                                                                                                                                                     பா.கண்ணன்  புது தில்லி

தமிழ் முழக்கம் அன்பு நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து பேசும் கண்ணன் வணக்கம் பல.

ஞானமயம் ஒலிபரப்பு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி அதைச்செவ்வனே முன்னோக்கி எடுத்துச் செல்லும் நிர்வாகக்  குழுவினருக்கு எனது மனங்கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஞானச்சுடர், தமிழ் முழக்கம் பேச்சாளர்களுள் ஒருவனாக இருக்க வாய்ப்பளித்த தற்கு மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு,ஞானச்சுடர் எனும் தலைப்புக்கேற்ப, கொஞ்சுதமிழ் தவழ்ந்து விளையாடும் தமிழ் இலக்கியத்தில் உள்ளச் சில சொல்லாடல்களை  ரஸித்து மகிழலாம், வாருங்கள்…

தமிழ்க் கவிஞர்களும், புலவர்களும் சொற்விளையாட்டில் வல்லவர்கள். ஒரு சொல்லை அது  குறிக்கும் வேறு சில பொருள்களுடன் சம்பந்தப்படுத்திப் பாடல்கள் புனைவதில் புலமைப் பெற்று விளங்கினர். காளமேகப் புலவர் ‘க’கர, ‘த’கர வர்க்கப் பாடல்கள் மற்றும் அவரும்,ஔவையாரும் கணித எண்களைக் கையாண்டுச் சிலேடை மிளிறச் செய்யுட்களை இயற்றி நம்மைப் பிரமிக்கவும் வைத்துள்ளனர். சைவ முதன்மை நாயன்மார்கள் நால்வரும், வைணவ ஆழ்வார்களும், தாங்கள் பாடியப் பதிகங்கள், பாசுரங்களை அணி இலக்கண வகையில், சம்ஸ்கிருதக் காப்பியங்களில் காண்பது போல் மொழி மாற்று, மாலை மாற்று, ஏகபாதம், வழிமொழி, இரதபந்தம் ஆகிய வேறுபல சித்திரக்கவி நடைகளிலும் இயற்றி நம்மை மகிழ்ச்சியுற வைத்துள்ளனர்.

இப்போது நாம் பார்க்கப் போவது நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் ஓர் அங்க மும்,அழகிய மணவாளதாசர் என்றறியப்படும்  பிள்ளை பெருமாள் ஐயங்கார் இயற்றிய, விஷ்ணுவைப் போற்றும் திருவரங்கக் கலம்பகம் நூலில் இடம் பெற் றிருக்கும் ஓர் அழகியப் பாயிரம் தான். பலவகைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை போல், பலவகைப் பாக்களைக் கொண்டு அமைக்கப் பட்டதுதான் கலம் பகம். இத் தமிழ்ப் பாக்கள் தேவாரம், திவ்யப் பிரபந்தத்தின் வாயிலாக வளர்ச்சி யுற்றுக் கம்பனின் ராமாயணத்தில் முழு நிறை வடிவம் பெற்றுள்ளன.வடமொழி இலக்கண மரபைச் சார்ந்துச் செழித்து வளர்ந்துள்ளது எனலாம். தேவர்களைப் போற்ற 100, அந்தணர்-95, அரசன்-90, அமைச்சர்-70,வணிகர்-50, வேளாளர்-30 பாயிரங்கள் என வகைப்படுத்திப் பாடுவது பிரபந்தமாகும். இதைப் படிப்பவர், நல்லொழுக்கம், நல்வாழ்வு, நல்ல பக்தியுடையவர்களாக விளங்குவர் என்பது

நம்பிக்கை. இப்பாயிரம் 37-ன் ஒவ்வொரு அடியும் தமிழ் உயிர் எழுத்துக்களைக் கொண்டு அமைக்கப்பட்டு, அவை சில திவ்யதேசங்களின் பெருமையைஎடுத்துச் சொல்வது இதன் சிறப்பாகும்…அப்பாசுரம் இதோ………

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை

ஆலிமா முகிலை வாலி காலனை                                   

இந்தளூருறை யெந்தைபெம் மானை

ஈசனான் முகன் வாசவன் றலைவனை

உள்ளுவா ருள்ளத் துள்ளுறை சோதியை

ஊரக நின்றரு ணீரகத் தடிகளை

எவ்வுண் மாயனைத் தெய்வநா யகனை

ஏர்மலி சிகரத்து நீர்மலை யாதியை

ஐவா யரவி லறிதுயி லமலனை

ஒருகான் மொழியினு மொழிகுவை நெஞ்சே

ஓதநீர் ஞாலத் துழலும்

ஔவியப் பிறப்பி லழுந்தி வாடுவதே

பொருள்: கடல் சூழ்ந்தப் பூவுலகில் அலைந்துத் திரிந்து, பொறாமை நிறைந்தப் பிறவிக் கடலில் மீண்டும் மூழ்கி வருத்தமடைவதை அறவேப் போக்கிட, ஸ்ரீரங்கத்துக் கரியகடல் நிறத்தவன், திருவாலியில் வீற்றிருந்தக் கோல அழகியசிங்கராக நீர் நிறைந்தக் கரியமேகம் போன்றுச்  சேவைச் சாதிப்ப வன்,வாலியை வதம் செய்தவன், இந்தளூர் வீரசயன பரிமள ரங்கநாதப் பெருமான், ஈசன், பிரமன், இந்திரன் ஆகியோரின் தலைவன்,அடியவர் நினைத்த வடிவில் விரைந்துச் சென்று அவர்களின் உள்ளங்களில் ஒளிர்பவன், திருவூரகம், திருநீரகத்தில் எழுந்தருளியுள்ளப் பெருமாள், திருவள்ளூர் மாயவன், திருநீர் மலை முதல்வன், பாம்பணையில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ளவன் ஆகி யோரின் திருநாமங்களில் ஒன்றையாவது போற்றித் துதித்து, வாழ்வு உய்ய வழி தேடிக் கொள்வாய், மட நெஞ்சே!   என்கிறார்

இங்கு, ஆலி—மழைத் துளி, ஏர்மலி—அழகியச் சிகரம், ஓதநீர்—குளிர்ந்த கடல் நீர், ஔவியம்–பொறாமை என்பதாம்.

இங்கு மணவாளதாசர் தொண்டைநாடு எனும் காஞ்சி உலகளந்தப் பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, திரு நீரகம், திரு ஊரகம், திருக் காரகம், திருகார்வானம் ஆகிய நான்கு திவ்யதேசங்கள் பற்றியும், திருநீர்மலையில் பெருமாள் நான்கு கோலத்தில் சேவை சாதிப்பதையும் — மலையடிவாரத்தில் மகரிஷி வால்மீகிக்கு ராமராகக் காட்சியளித்த நீர்வண் ணப் பெருமாள் நின்றான் திருக்கோலம், நரசிம்மராக இருந்தான் வடிவம், ரங்கநாதராக கிடந்தான் கோலம், உலகளந்த வாமனனாக நடந்தான் கோலம்— என்று கோடிகாட்டிப் பரவசப் படுத் துகிறார். தமிழ் உயிரெழுத்துக்கள் இங்கு உண்மையிலேயே உயிர்ப் பெற்று விளங்குகின்றன என்றால் அது மிகையல்ல!

மற்றொன்று, திருமழிசை ஆழ்வார் உணர்ச்சிப் பொங்கும் ஆற்றல் மிக்கச் சொற்களைப் பாசுரங்களில் பயன்படுத்தி, திருமாலைப் போற்றி 120 விருத்தப் பாக்களைக் கொண்டு அருளிச் செய்த நூல் திருச்சந்த விருத்தமாகும்.

இது நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் பாசுரங்கள் இனிய ஓசை கொண்டுள்ளதால் சந்த விருத்தம் என்று அறியப் படுகிறது. அவர் நாராயணனை (ஆறும் ஆறும் ஆறும் ஓர் ஐந்தும் ஐந்தும்) எண்களால் போற்றியுள்ளார். பர, வ்யூஹ, விபவ, அர்ச்சாவதாரங்களில் திருமால் காட்டியப் பெருமைகளைப் படித்தும், கேட்டும், வணங்கி வழிபடும் பாக்கியத்தை அளித்திருக்கும் நாராயணனின் கருணையைப்  போற்றி, அதன் மூலம் தான் பெற்ற நற்பயன்களை இப்பிரபந்தத்தில் விவரிக்கிறார்.

பாசுரம் 56 முதல் 61 முடிய திருக்குடந்தையில் உறையும் ஆராவமுதனை (சார்ங்கபாணி)ப் போற்றிப் பாடுகிறார். அதில் 57வது பாடல் இலக்கிய நயம் மிகுந்து மிளிர்கிறது.

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்

அங்கமங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்

கொங்கு தங்கு வார்குழல் மடந்தைமார் குடந்தை நீர்

பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே 

சங்க இலக்கியங்களிலும், சம்ஸ்க்ருதக் காவியங்களிலும் முக்கியமாக, காளிதாசனின் மேகசந்தேசம், நாயகன்-நாயகியோரின் பிரிவாற்றலால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புலவர்கள் உணர்த்தியிருப்பதைப் படித்திருப்போம். தலைவனின் சிறிது காலப் பிரிவால் தலைவியின் உடல் மெலிந்து, கைகள் சிறுத்து அணிந்திருந்த வளையல்கள் நழுவி விழுந்துவிடுமாம். அதேசமயம், அவன் வருகிறான் எனக் கேள்விப் பட்டால் உடல் பூரித்து, கைகள் பருத்து மிஞ்சியுள்ள வளையல்கள் கைக்குப் பொருந்தாமல் உடைந்து விடுமாம். இதை ஆழ்வார் இங்குப் பின்புலத்தில் ஓர் உருவகக் கதை மூலம்,’சங்கு தங்கு முன்கை நங்கை’ என நயம்படக் கூறுகிறார்.

ஆனால் இந்நிலை ஆராவமுதன்-ஸ்ரீமகாலஷ்மி தெய்வத் தம்பதியருக்குப் பொருந்தாது என மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். தெய்வத் தம்பதிக்கு விரக தாபம் என்பது தான் கிடையாதே! ஏனெனில் நாராயணனின் மார்பில் எப்போதும் வீற்றிருப்பவள் அல்லவோ, பெரிய பிராட்டியார். ஆனால் மானுட லட்சணங் களுடன் அவதரித்தச் சக்கரவர்த்தித் திருமகன் ஜானகியின் பிரிவால் மனம் அல்லலுற்றார். ‘சங்கு தங்கு முன்கை நங்கை’ சீதா தேவியும் இராவணனால் கவர்ந்துச் செல்லப்பட்டு இலங்கையில் பிரிவாற்றாமையை அனுபவித்தார் என்று மறை முகமாய்க் குறிப்பிடுகிறார்.

மேலும் நாரீமணிகளை அவர் வர்ணிக்கும் விதத்தைப் பாருங்கள்…தங்கள் கூந்தலின் பரிமள வாசனைக் குலையுமென்றும் பாராமல் சார்ங்கபாணியைச் சேவிப்பதற்கு முன் இளம் பெண்கள் காவிரியில் கூட்டம் கூட்டமாக வந்து நீராடுகிறார்களாம். உறுதியான உடல்வாகு கொண்ட மடந்தையர் நன்றாக மூழ்கி, அமிழ்ந்து நீராடுவதால் விலகியத் தண்ணீர் படித்துறை மேல்படி வரை எழும்பி மோதுகின்றதாம். அப்படிப்பட்டத் தடாகங்களை உடைய குடந்தை நகரில் தாமரைப் போன்ற அங்கங்களைக் கொண்ட ஆராவமுதன் சயனித்துச் சேவைசாதிக்கும் பேரழகைக் காணுங்கள் என்கிறார் ஆழ்வார்!

படித்துப் படித்து இன்புற வேண்டிய விருத்தப் பாக்கள் இவை…

நாயன்மார்களும் ஆழ்வார்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்லர். முதன்மைச் சைவக் குரவர்களுள் ஞானப்பால் அருந்தி, உமையம்மையின் அருளைப் பெற்ற ஞானக் குழந்தையாம் சம்பந்தர் பெருமான் இளம்வயதிலேயே தமிழில் சொல் அணிகளைக் கையாள்வதில் பெரும் புலமைப் பெற்று விளங் கினார் என்பதை அவரது திருமுறைப் பதிகங்களிலிருந்தே அறியலாம். பக்தி இலக்கியப் பாடல்களிலும் சொல் ஆட்சிப் புரிய முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிய வைத்தவர் ‘எழுது மொழி தமிழ் விரகன், நற்றமிழ் ஞானசம் பந்தன்’ ஆவார். புதுவகை யாப்புக்களையும்,சந்தங்களையும் தமிழில் புகுத்தி, ஈசனைப் போற்றிப் பாடிப்  பரவியவர் இவரே.

முதலில் மாலை மாற்று அணி. இது ஒரு மிகப் பழையத் தமிழ்ச் சொல் ஆகும். சம்ஸ்க்ருத இலக்கியத்திலும் இது காணப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘பாலிண்ட்ரோம்’ எனப் பெயர். அதாவது முதலிலிருந்து இறுதி வரைப் படித்தால் அமையும் செய்யுளே, முடிவிலிருந்துத் தொடக்க எழுத்து வரைத் திருப்பிப் படித் தாலும் மூலப் பாடலாகவே அமைவது இதன் சிறப்பு. பூச்சரத்தை எப்பக்கம் திருப் பினாலும் ஒரேமாதிரியாகத் தோற்றமளிப்பதை ஒட்டி இவ்வகைச் செய்யுளுக்கு ‘மாலை மாற்று’ எனப் பெயர். விகடகவி, மோரு போருமோ, தேரு வருதேஎன்றச் சொற்றொடர்கள் எளிதானவை.ஆனால் பாடலில் அமைந்துள்ளப் பதங்களைப்

பிரித்துப் பொருள் காண்பது அவ்வளவு சுலபமல்ல. சொற்களைப் பலவாறு மாற்றியமைத்துப் பொருள் அறிய வேண்டிய வகையில் இயற்றியிருப்பது இதன் மற்றொரு சிறப்பாகும். மூன்றாம் திருமுறையில் இவற்றைச் சீர்காழி  தலம் பற்றியப் பதிகங்களில் படித்து மகிழலாம்.

நீவாவாயா காயாழீ கா வாவானோ வாராமே

மேரா வானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ (சீர்காழி, 3.1 பதிகம் 4 )

பொருள்: நீவா—என்றும் மாறாத,வாயா—உண்மைப் பொருளானவனே, கா—தாங்கிய, யாழீ—வீணையை உடையவனே, வான் நோவாராமே—கொடிய பிறவித் துயரம் எங்களை அண்டாமல், காவா—வந்துக் காப்பாயாக,

வான் நோவாவா—தேவர்கள் துன்பம் அடையாமல், மேரா—மேரு மலையை வில்லாக ஏந்தி முப்புரம் எரித்தவனே, காழீயா—சீர்காழி தலத்தில் உறைபவனே, காயா—ஆகாயச் சொரூபியே, வாவாநீ—நீ விரைந்து வந்து  அருள்வாயாக!

வாசமிகு இச்செய்யுள் மாலையில் இடமிருந்து வலமும், வலமிருந்து இடமும் மாறிமாறிப் படித்து ரசிக்கும் வகையில், மகேசன் திரிபுரம் எறித்தச் செயலையும், அவரது மற்றக் குணங்களையும் எப்படிச் சொல்கிறார், பாருங்கள்!

மற்றொரு சொல் அணி திருவியமகம். ஓர் அடியில் வரும் சொல் (அ) சொற்றொ டர் ஒரு குறிப்பிட்டப் பொருளில் வந்து, அடுத்து வரும் அடிகளில் அவை வேறு பொருளைக் குறிக்குமாறு அமைக்கப்படும் பாடல் இவ்வகையைச் சார்ந்ததாகும்.

காதம ரத்திகழ் தோடினனே, கானவனாய்க் கடி தோடினனே,

பாதமதாற் கூற்று உதைத்தனனே, பார்த்தன் உடலம் புதைத்தனனே,

தாதவிழ் கொன்றை தரித்தனனே, சார்ந்த வினைய தரித்தனனே,

போத மமரு முரைப் பொருளே, புகலி யமர்ந்த பரம் பொருளே. (3, 113-116)

பொருள்: காதில் தோடு அணிந்த ஈசன், காட்டில் வேடுவனாக விரைந்தோடித் திரிபவர், மார்க்கண்டேயனைக் காக்க யமனைத் திருப்பாதத்தால் உதைத்த  வர்,அர்ஜுனன் மீது அம்பு எய்து அவன் உடலைக் கவசம் போன்று மறைத்தவர், மகரந்தம் நிரம்பியக் கொன்றை மலர் மாலையை அணிந்தவர், அடியவர்களின் தீவினைகளைக் களைபவர், சிவஞானக் கருத்து அடங்கிய நீதி போதனையின் மூலப் பொருளாக விளங்குபவர், அவரே திருப்புகலி (சீர்காழி) எனும் திருத்தலத் தில் சட்டைநாதராக வீற்றிருக்கும் பரம்பொருள் ஆவார். இங்கு, தோடினனே (காது தோடு, காட்டில் திரிபவர்), உதைத்தனனே (உதைத்தல், உடலை மறைப் பது) , தரித்தனனே ( மாலை அணிதல், தீவினை அகற்றுதல்) என்ற  சொற்கள் இருவேறு செயல்களைக் குறிப்பிடும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன.

பொற்தாளத்தில் நாதமெழுப்பிப் பாட்டிசைக்கும் சின்னஞ்சிறு பாலகன் நாயன் மாரின் சொற்சிலம்ப விளையாட்டில் மனதைப் பறிகொடுக்காமல் இருக்கவே முடியாது! கொம்புத் தேனில் அமிழ்த்தெடுத்த பலாச் சுளைக்கு ஒப்பானவை அவரது பதிகங்கள்!

அடுத்தப் பகுதியில் மேலும் பிற தமிழ் அமுதத்தைப் பருகலாம், வாருங்கள்….

        ———————————————————————————————

tags- தமிழ்ப் புலவர், சொல்லாடல்,