பாரதி மீது (நாராயணன்) கவிதைகள் (Post No.10066)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 10,066

Date uploaded in London – 7 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டன் ஞானமயம் ஒலி பரப்பு கொண்டாடிய பாரதி நினைவு நூற்றாண்டு விழாவில் லண்டன் ராணி சீனிவாசன் வாசித்த லண்டன் நாராயணன் எழுதிய பாரதி கவிதைகள் ; (தேதி 6-9-2021)

பாரதிரும் பாரதி

தேன் மதுரத் தமிழில்

தெளிவானக் கவிதையில்

தேரோட்டிய கவிஞன் பாரதி பாரத

தேசத்தின் விடுதலை இயக்கத்தில்

தேயாத புகழ் பெற்ற சாரதி !

 வேதிய  குலத்தோ னாயினும்

சாதியெனும் பிரிவில் சரியாது

சந்தனம் பூசி அறவணைத்தானோ

அந்தண ரல்லாரையும்  சாதி

இரண்டொழிய  வேறில்லையென்று

வறுமை இவன் வாழ்வில் அதிக

உரிமை கொண்டாடினும் விலகாதோ

நேர்மை யெனும் இவன் போர்வை

போறாமையிலும் பொறுமை நகையாக

எளிமையிலும் என்றும் இன்புற்றான்

கவிதையெனும் கடலில் கப்பலோட்டிக் கரை

கண்டானோ பக்தி புரட்சிக்விதை நாட்டுப்பற்று

ஆன்மீகமெனும் துறைகளாகக் காவியங்ள் படைத்துக்

கலங்கரை விளக்காக ஏற்றி வைத்த ஈடில்லாக் கவி

கலங்காமல் கலக்கினானோ நாடாண்ட அன்னியனை!

எழுத்தென்னும்  ஏவுகணையை கவிதை

எனும் வில்லில் பொருத்தி  வைத்த இலக்கோ

என்று தணியுமிந்த சுதந்திர தாகம்

என்றுமடியுமெங்கள் அடிமையில் மோகம்

ஐய்யோ! தாகம் தீரா மரணமோ இக்கவிக்கு

வந்துதித்து வளர்ந்த  நாடோ பரதேசியாதிக்கமாக

வறுமையே வாழ்க்கை வாக்கே அவன் செல்வமாக

வருந்தியதோ அன்னியனாதிக்கமும் சமூகக்கேடுமாக

வாழிய பாரதம் வாழிய சுதந்திரமென வாழ்ந்த தமிழன்

வீடடைந்தானோ விடுதலை வேட்கையிலே

நாராயணன்,

(Dr A.Narayanan, London)

பாரதிரும் = பார் + அதிரும்

XXXX

பாரதிக்கோரஞ்சலி

தீக்குள் விரலை விட்டுக் கரி எடுத்துப்

பாரதிரும் கவிதை தீட்டியோனே பாரதி

போருணர்ச்சிப் பொழிவ தவன் மொழி

சமூகக் கூச்சலே அவன் கவிதையின்

பேரிரைச்சலாய் சாதி இரண்டொழிய

வேறில்லையெனப் பறைச் சாற்றிக்

கோத்திரம் கேட்டாலாத் திரமடைந்து

முப்புரி நூலோ மூவர்ணத் துரிமை

யென சரித்திரம் படைத்தோனுக்கு

தரித்திரமே உதாரமென வறுமைக்கு

வருமானம் புலவன் வறுமையே என

வருத்தமடையா இவனே புலவர்களில்

புரவலன், ஐய்யோ! என்னே!கொடுமை

காலனின் கணிசம் இவன்

கொண்ட ஆயுளிலும் வறுமை!

நாராயணன்

(DR A. NARAYANAN, LONDON)

Xxx

Other Poems written by Dr A Narayanan

உதிரும் இலைகள்

வீசிய தென்றலில் விழுமோ இலைகள்

பசுமையோ பழுத்ததோ வெனத்  தருவோ

உணரா இலையி னிழப்பை காற்றோ

அறியா இலையின் நிலையை

உடைமையில் உரிமை இலைக் கில்லை

கடமையில் பார பட்சம் காற்றுக் கில்லைப்

போன்றோ ஆத்மா உடலுக்கும் உயிருக்கும்

ஒப்பந்தம் முடிய ஒண்டுமோ வெங்கோ கண்டு

கொள்ளாது துய்த்தது மரணவாய் முதியோனோ

இளையோனாக இருப்பதுமில் லாததும்

இயற்கையை இறைவ னியக்கும் வழி

நாராயணன்

xxxx

                           அறுபடும் அறம்

அவரவர் அறம் அவரவர் நிலைக்கேற்ப

அதனினு மினிதோ இருப்பதைப் பகிர்வது

வழிந்தோடும் ஏரி வாய்க்காலாய்ப் பாய்வது போலோ

வரம்புக்கு விஞ்சிய செல்வன் வாரிக் கொடுப்பது

வறுமையிலு மிருந்ததைப் பகிர்ந்தின்புறுவோனையோ 

வானவரும் வையகத்தோரு மென்றும் வாழ்த்துவர்

நிறைவான செல்வன் பறை சாற்றிச் செய்யுமறம்

தரை மட்ட நிலையில் வளரும் புல்லாகும்

குறை செல்வமுள்ளோன் மறைவாய் செய்யுமறம்

உறைவிடமோ இறைவனின் பாதமே

நாராயணன் 

XXX

  மாலனோ மாயனோ

ஒன்றோ பலவோ

ஒன்றினின்று பலவோ

பலகூடி ஒன்றோ

படைப்பில் பலவும்

ஒன்றுமாய் நின்று

மாயையில் மக்களை

மேய்ப்பவன் மாலனே

நாராயணன்

-subham–

tags –  பாரதி , நாராயணன் கவிதைகள், 

Leave a comment

Leave a comment