ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம்! (Post No.10,102)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,102

Date uploaded in London – 17 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 இதழில் வெளியான கட்டுரை:

ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம்!

ச.நாகராஜன்

      இது கொரானாக் காலம்! பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த விஷயங்கள் உயிர் காக்கும் விஷயங்கள்! ஆகவே அனைவருக்கும் இதைக் கொண்டு செல்ல வேண்டும்.

உற்றார், உறவினர், நண்பர்கள், ஏனையோர் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளி, கைகளைச் சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல், வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் கை, கால்களைச் சுத்தம் செய்தல், வீட்டிற்குள் வரும் பொருள்களைச் சற்று வெயில் பட வைத்திருந்து பின்னர் உபயோகப்படுத்தல், கண்டிப்பாக இரண்டு கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்ளல் ஆகியவை பற்றி ஏராளமான செய்திகளைக் கேட்டு அவற்றை நடைமுறைப் படுத்தி வருகிறோம்.

நல்லது. ஆக்ஸிஜன் இல்லாமல் சுவாசம் திணற, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை பற்றி நாடெங்கும் பேச்சாக இருக்கிறது.

ஆகவே ஆக்ஸிஜன் சுவாசம் பற்றிச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. இந்த ஆக்ஸிஜன் சுவாசம் என்பது மூளை ஆற்றலை வலுப்படுத்தவும், படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் கூட உகந்த ஒன்று என்பதால் இது காலம் காலமாக அறிவியல் அறிஞர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் இதை ‘க்ரியேடிவ் ப்ரெத்’ (Creative Breath) என்கிறோம்.

      சுவாசத்தை ஒழுங்கு படுத்தினால் அது மனதைச் சாந்தப் படுத்துகிறது. தெளிவான மனமே படைப்பாற்றலுக்கான அடிப்படைத் தளம். பிரச்சினைகளைத் தீர்க்கவும் தெளிவான மனம் வேண்டும். இதற்கான பல வழிகளில் முக்கியமான வழி ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும் சுவாச முறை.

அறிவியல் நோக்கில் மூளையில் உள்ள ஆக்ஸிஜன் அளவு (Levels of Oxygen in the brain) நியூரோ டிரான்ஸ்மிட்டரான செரோடோனின் அளவுடன் (tied to the levels of the neurotransmitter Serotonin) இணைக்கப்படுகிறது.

      இந்த செரோடோனின் அளவை சுவாசத்தைக் கட்டுப்படுத்துவன் மூலம் ஒழுங்கு படுத்தலாம். அதிக அளவில் செரோடோனின் மூளையில் இருந்தால் எரிச்சல், மன அழுத்தம், மன இறுக்கம் உள்ளிட்டவற்றிற்கு நாம் உள்ளாவோம். ஆகவே இந்த செரோடோனின் அளவைக் குறைத்தால் மிகப் பெரிய அளவில் ஓய்வு கிடைக்கும். மூளையின் உள்ளுணர்வு ஆற்றல் கூடும்.நேரிலாச் செயல்கள் அதிக இசைவாகப் பாயும். (Nonlinear activities to flow more smoothly).

யோகா மூலம் பிராணாயாமம் செய்யும் போது ஏற்படும் நன்மைகளைப் பற்றி நன்கு அறிவோம். ஆகவே அது பற்றி மீண்டும் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

      செரோடோனின் அளவில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய, நாம் சுவாசிக்கும் காற்றின் மின் தரத்தைப் (Electrical Quality of the air we breath) பற்றி இங்கு பார்ப்போம்.

காற்றில் உள்ள பாஸிடிவ் அல்லது நெகடிவ் ஐயான்கள் (Positive or negative Ions in the air) தான் காற்றின் மின் தரத்தை அளக்க உதவுகிறது. நெகடிவ் ஐயான்ஸ் என்பது இடம் பெயர்ந்த எலக்ட்ரான்கள் ஆகும். அது அருகிலுள்ள மூலக்கூறுகளுடன் (molecules)  தங்களை இணைத்துக் கொள்பவை. இவை நெகடிவாக சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த நெகடிவ் தன்மை தான் நம்மை வெகுவாகப் பாதிக்கிறது.

        ஒரு நீர்வீழ்ச்சி அருகே – குற்றால நீர்வீழ்ச்சி என்று எடுத்துக் கொள்வோமே – நீங்கள் நின்று கொண்டிருந்தால், பச்சைப் பசுமையான காட்சிகள் இருக்க ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டப்பட்ட உணர்வை அடைகிறீர்கள். இங்கு நெகடிவ் ஐயான் உள்ள காற்றின் விளைவுகளை நீங்கள் உணர்கிறீர்கள். சாதாரணமான நாம் வசிக்கும் ஊர்களில் சுத்தக் காற்று உள்ள இடங்களில் ஒரு  கியூபிக் செண்டிமீட்டருக்கு 2000 முதல் 4000 வரை நெகடிவ் ஐயான்கள் உள்ளன.

இதே நெகடிவ் ஐயான்கள் அருமையான நீர்வீழ்ச்சியின் அருகில் ஒரு கியூபிக் செண்டிமீட்டருக்கு ஒரு லட்சம் நெகடிவ் ஐயான்கள் என்ற அளவுக்கு உயர்கிறது. நல்ல தரமான ஒரு நெடுஞ்சாலையில் இது ஒரு கியூபிக் செண்டிமீட்டருக்கு 100 என்ற அளவில் இருக்கிறது.

     நெகடிவ் ஐயான்களை அதிகப்படுத்துவதானது மூளையில் உள்ள ஆல்பா மூளை அலைகளை அதிகப்படுத்தி மூளை வளத்தைக் (amplitude) கூட்டுகிறது.

இது வேறு விதமான உணர்வை உள்ளத்தில் ஏற்படுத்துகிறது.  இந்த ஆல்பா அலைகள் பல்வேறு மூளைப் பகுதிகளுக்கும் பாய்வதன் மூலமாக தெளிவான மன நிலை ஏற்படுகிறது. நல்ல கவனக் குவிப்பு ஏற்படுகிறது. மொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

     ஆகவே கொரானா காலத்தில் மரம் அடர்ந்த வனப் பகுதி, நல்ல பூங்காக்கள், கடற்கரை, நீர்வீழ்ச்சி உள்ள இடங்களில் சென்று ஆக்ஸிஜனை அதிகம் பெறலாம், ஆனால் லாக் டவுன் என்று இருக்கும் போது வீட்டிலேயே மூன்று விதமான பயிற்சிகளை ஆக்ஸிஜன் அளவைக் கூட்ட நாம் பயன்படுத்தலாம்.

  1. ஆழ்ந்து சுவாசத்தை உள்ளிழுத்துப் பின்னர் விடுவது. மூச்சை சில விநாடிகள் நிறுத்துவது மூளையை ஆக்ஸிஜன் மயமாக்குகிறது. தெளிவான மனத்தைத் தருகிறது. ஆல்பா மூளை அலைகளைப் பரவச் செய்கிறது.
  • இரண்டாவது பழைய கால நாசித் துவார யோகா முறையைப் பயன்படுத்துவது. இதை யோகா மாஸ்டரின் மூலமாக நன்கு கற்ற பின்னரே செய்ய வேண்டும். சூரிய நாடி, சந்திர நாடி (இடை, பிங்கலை பற்றி நன்கு அறிவோம்) ஆகிய இரு நாடிகளில் மாறி மாறி சுவாசத்தைச் செலுத்தலே இந்த வழி. இந்த வழியை தினமும் 10 நிமிடங்கள் மட்டும் செய்து வந்தால் அது அதிகப் பயனைத் தரும்.
  • அடுத்த வழி முடிந்த வரை சுவாசத்தை நிறுத்திப் பின்னர் விடுவது. இதை ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்த ஜப்பானிய அறிவியல் அறிஞரான யோஷிரோ நகாமட்ஸ் (Yoshiro Nakamats) பரிந்துரைக்கிறார்; ஏராளமான தனது கண்டுபிடிப்புகளுக்குக் காரணம் தான் நீச்சலின் போது நீரில் அமிழ்ந்து இருந்து மூச்சை நிறுத்திக் கொள்வது தான் என்பது அவரே கூறியுள்ள காரணம்.

ஆக்ஸிஜன் அளவைத் தெரிந்து கொள்ள ஆக்ஸி மீட்டரை வாங்கி வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் தேவைப்பட்டபோது பார்க்கலாம்.98, 99 என்ற அளவு வந்தால் சரி. ஆனால் 88 என்ற அளவு வந்தால் அது அபாயத்தின் அறிகுறி.85 என்று மீட்டர் அளவைக் காட்டினால் உடனடியாக மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும். 80 என்று அளவு வந்தால் உடலின் முக்கிய அங்கங்கள் அபாயத்தில் இருக்கின்றன என்று அர்த்தம். இந்த Blood Oxygen level chartஐ ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு வீட்டில் வைத்துக் கொள்வது அவசியம். (ஆக்ஸி மீட்டரின் விலை ஆன் லைன் மூலமாகப் பெற சுமார் ரூ 899/)

ஆக்ஸிஜன் அளவை வீட்டில் அதிகரிக்க ஒரு சுலபமான வழி ஜன்னல் கதவுகளைத் திறந்து வைப்பது தான். ஜன்னல் அடைக்கப்பட்டால் காற்றோட்டம் இன்றி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது நிச்சயமாகி விடும். காற்றோட்டமே இல்லாத வீடு என்றால் ஒரு ventஐ நிறுவலாம்.

       மரங்கள் ஆக்ஸிஜனை நல்ல பெரிய அளவில் தருகின்றன. சுற்றுப்புறச் சூழல் மாசுகளை அகற்றுகின்றன. ஆகவே மரம் உள்ள வீடுகள் ஆக்ஸிஜனை அதிக அளவில் காற்றில் தருகின்றன. அமெரிக்க ஆய்வு ஒன்று, ஒவ்வொரு மரமும் 30000 டாலர் அதாவது சுமார் 2100000 ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜனை உருவாக்குகிறது என்று கூறுகிறது.

வீட்டிற்குள் ஆக்ஸிஜன் அளவைக் கூட்ட இன்னொரு சுலபமான வழி அதற்கென உள்ள செடிகளை வளர்ப்பது தான். 1800 சதுர அடி உள்ள ஒரு வீட்டில் 14 முதல் 17 செடிகளை வைத்தால் அதன் பலன் அபாரமாக இருக்கும். என்ன செடிகளை வைப்பது? மணி ப்ளாண்ட் (Money Plant), சைனீஸ் எவர்க்ரீன்ஸ் (Chinese Evergreens) உள்ளிட்ட பல செடி வகைகளைச் சொல்லலாம். சந்தையில் சுலபமாகக் கிடைப்பவை இவை.

   இதையெல்லாம் மீறி 6 லிட்டர் ஆக்ஸிஜன் கேன் இப்போது சந்தையில்  விற்பனைக்கு வந்து விட்டது. (விலை சுமார் ரூ 455/).

தண்ணீர் கேனைப் பார்த்து விட்டோம், இதோ ஆக்ஸிஜன் கேனையும் பார்க்கப் போகிறோம். காலம் கலி காலம், இல்லை இல்லை, கொரானா காலம் அல்லவா!

மொத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகி வருவது வரவேற்க வேண்டிய ஒன்று தான்!

ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 இதழில் வெளியான கட்டுரை:

ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழ் வருட சந்தா ரூ 120/

திருநெல்வேலியிலிருந்து வெளி வருகிறது.

ஆசிரியர் R.C.ராஜா தொலைபேசி எண் 98431 57363

மின்னஞ்சல் முகவரி : editor@tamilhealthcare.com 10, Vaiyapurai nagar, Tirunelveli Town 627006 Tamilnadu, India

கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

***

TAGS-   ஆக்ஸிஜன், மரங்கள், சுவாசிப்போம்,

EINSTEIN IS 50% RIGHT, DARWIN IS 100 % RIGHT – RIG VEDA THROWS MORE LIGHT (Post No.10101)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,101

Date uploaded in London – 16 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

PART TWO OF SOMA- A HALLUCINATIVE DRUG OR ELIXIR?

I POSTED THE FIRST PART HERE YESTERDAY COVERING 30 OUT OF 58 MANTARS IN THE RIGVEDIC HYMN 9-97 ON PAVAMANA SOMA.

EINSTEIN’S PHYSICS TELLS US THAT THE FASTEST OBJECT IN THE UNIVERSE IS LIGHT WHICH TRAVELS AT THE SPEED OF 1,86,000 MILES PER SECOND. ACCORDING TO PHYSICS, WE CAN NEVER REACH THIS SPEED AND THE MAXIMUM SPEED WE HAVE REACHED SO FAR  IS 3 LAKHS MILES PER HOUR (NOT SECOND). IF THERE IS A HUMAN BEING IN THE SPACE CRAFT THEN WE REACH ONLY 26,000 MILES PER HOUR. OUR NEAREST STAR IS 4-25 LIGHT YEARS AWAY. IT MEANS IF YOU HAVE A VEHICLE THAT TRAVELS AT THE SPEED OF LIGHT YOU CAN REACH THE STAR IN 4-25 YEARS.

BUT HINDUS IN THE RIG VEDA SAYS THE FASTEST IS ‘MIND’. BUT ONE MAY ASK CAN I TRAVEL IN THE ‘MIND VEHICLE’? ‘YES’ SAYS RIG VEDIC RISHIS/SEERS. THE MIND CHANGES A PERSON INTO LIGHT AND THEN YOU CAN TRAVEL A LOT MORE FASTER!  WE SEE THIS IN SCIENCE FICTION MOVIES OR TV SERIALS. SOMEONE APPEARS SUDDENLY IN THE FORM OF LIGHT FROM NOWHERE AND SAYS HE OR SHE IS FROM ANOTHER PALNET. THIS IS ACTUALLY FROM THE RIG VEDA. (We believe we can travel to any place in the universe by thought. Your thought will transfer your energy into light and again with the speed of thought you will be there in a fraction of a second. This is repeated umpteen times in Puranic mythology; Deva means light)

DARWIN SHOWED US THE EVOLUTION BEGAN IN WATER/ FISH. WE HAVE MATSYA/FISH AVATARA AS THE FIRST INCARNATION OF VISNHU. NOW RIG VEDA SAYS EVERY LIVING BEING CAME FROM WATER.

WE WILL LOOK AT THE LAST 28 MANTRAS IN THE HYMN RV.9-97. IT IS SUNG BY SEVERAL SEERS. ALL THE NAMES ARE IN THE INDEX OF RIG VEDA.

Soma Filter in Indus Valley seals

First let us discuss whether Einstein is right or Rig Vedic seers are right.

Einstein is PARTLY right in saying light is the fastest. But can we beat it with anything else?

‘Yes’ says the seers. They say Soma (plant) becomes light in one mantra. And in another mantra the rishis/ seers praise its speed as Thought Speed.

What we get from it is one can become light and travels faster than light.

Is it believable?

Yes. If I wanted to travel to the nearest star Proxima centauri, I use my thought and travel. You can also travel to New York from London in a second and comeback in the next second mentally.

But has anyone used it? Hindus use it every day at least three times a day. When a Brahmin does Gayatri mantra thrice a day he invites Gayatri from a faroff mountain and install her in his heart. When he finishes his prayer, he says ‘Good Bye, Mother! Please go back to your mountain abode’. She is nearer and farther to you!

 A Hindu does a ceremony for departed souls over 90 times a year  called Tarpanam or Titi. He invokes the dead people from his father side and mother side. He asks them to come via sky path/route and sit on the Dharba grass spread in front of him. Throughout the Rig Veda we see the same method. All rishis invoke all gods on sacred Dharba grass!

When the TARPANAM OR TITI ceremony is over in 15 minutes or so, they address the departed souls ‘please go by your same sky route to your abode’.

This shows Hindus belief of bringing anyone from any far away place in a second in prayer. I do invoke my forefathers on sacred Dharba grass and invoke Goddess Gayatri thrice a day from her mountain abode. If you believe in it, you believe Einstein is only partly right. He doesn’t know the Mind speed, which is used from Rig Vedic days to Puranic days (Mano Veham).

Falcon in Indus Valley and Rigvedic Fire altar

NOW BACK TO HYMN 9-97

The race of cattle is your gift; when born you made Surya/ sun rich with brightness.

You are bright; you follow the Path of Order. You are Life Eternal.

You are a Heavenly Eagle; you look down from sky. You poured streams at the God’s Feast.

Our hymns and Trushtup songs unite in soma.

Flow for our welfare;

You generate abundance;

Singer of true songs;

Ever watchful;

He by whose dear help men gain all their wishes shall yield the precious ‘madhu’ to a victor.

Soma the bounteous helped us with his lustre.

Our ancient rishis who knew the foot steps found light and stole the cattle from the mountain.

(This is repeated hundreds of times. It may be that miserly merchants Pani/ Phoenicians stole and hid all their treasures in the mountain caves and Vedic Hindus got them back by fighting )

DARWIN THEORY OF EVOLUTION

In the first vault of heaven loud roared the Ocean, King of all being, Generating Creatures.

Soma , Child of Waters chose the Gods , performed that great achievement.

He gave strength to Indra and Generated  Light into Surya/ Sun

(then Varuna, Mitra, Vayu, Maruts , Heaven and Earth etc mentioned).

Gladden the gods; gladden the host of Maruts.

Make heaven and earth rejoice.

Upto 42/58 mantras are covered.

To be continued………………………………………

tags-Soma, Einstein, Speed of Mind, Speed of Light, Darwin, water evolution 

சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் (Post No.10,100)-1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,100

Date uploaded in London – 16 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் (Post No.10,100)- part 1

ரிக் வேத கால இந்துக்கள் அபூர்வ மூலிகையான சோம லதையை (லதா= கொடி) ப்  பிழிந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை இறைவனுக்குப் படைத்தனர். இது ஒரு விதமான ஆனந்தம், சக்தி, உற்சாகம் அளிக்கும் மூலிகை.

வெள்ளைக்காரர்கள் நமது மதத்துக்கு எதிரியானதாலும், நமது மதத்தை நம்பாததாலும், நமது மதத்தைப் பின்பற்றாததாலும் அவர்களுக்கு இது என்னவென்றே தெரியவில்லை. ஆகையால் இதை மயக்கம் ஊட்டும் போதை மருந்து என்று எழுதிவிட்டனர். இதை R TH GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட ரிக் வேத ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்திலேயே காணலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ்  பாடிய 450 புலவர்களுக்கே சோம மூலிகையைப் பற்றித் தெரியாது. யூபம் , வேதம், கங்கை, அமிர்தம், இமயம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் புறநானூற்றில் கூட சோமம் என்ற மூலிகை பற்றிய குறிப்பு கிடையாது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமற்போன இந்த அற்புத மூலிகை பற்றி வெள்ளைக்காரன் உளறிக்கொட்டி கிளறி மூடியதில் வியப்பொன்றுமில்லை . ஆனால் பிற் கால பாண்டியர் கல்வெட்டுகளில் இதைப் பயன்படுத்தியவர்களை மனோ சுத்த சோமயாஜி — மன தைச் சுத்தப்படுத்தும் சோமயாகம் செய்தவர் என்று புகழ்கிறது  காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சோம யாகம் செய்தவர்களுக்கு அரசுக்கு நிகரான வெண்  குடை கொடுக்கப்படும் செய்தியை மொழிகிறார்.

ரிக் வேதத்தில் பல நூற்றுக் கணக்கான இடங்களில் சோம மூலிகை பற்றிய மந்திரங்கள் உள்ளன. பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட ரிக் வேதத்தில்- 6000 ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் – ஒன்பதாவது மண்டலம் முழுதும் ‘பவமான சோம’ என்ற கடவுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . சோம என்பதற்கு பல பொருள் உண்டு. சந்திரன் என்ற பொருளும், மலைகளில் விளையும் சோமம் என்ற மூலிகைக்கும் அதிகமாகப் பயன்படும் சொல். ரிக் வேதத்தில் 9-97  துதியில் உள்ள 58 மந்திரங்களின் மூலம் சோமத்தின் ரஹஸ்யத்தைக் காண்போம் .

அதற்கு முன்பாக வெள்ளைக்காரன் கட்டுக்கதைதையைத் தவிடு பொடியாக்கும் சில விஷயங்களை சொல்கி றேன் .

ஸோமரசத்தை எல்லாக் கடவுளரின் பெயரிலும் ஒரு நாளைக்கு மூன்று முறை தீயில் ஆஹுதி செய்தார்கள்.

காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் இப்படிச் செய்தார்கள்.

அந்த மூலிகையைக் கடவுள் என்று சொல்லி ஆடிப்பபாடி  மந்திரங்களை முழக்கி கற்கள் இடையே வைத்து பிழிந்து ஆட்டு ரோமத்தால் ஆன சல்லடை வழியே வடிகட்டி மரத்தால் ஆன வட்டில்கள், பாண்டங்களில் சேகரித்தார்கள்.

சிந்து சமவெளியில் இதுவரை என்ன என்றே தெரியாத ஒரு சாதனம் காளை மாட்டு முத்திரைகளுக்கு அடியே உள்ளது. இது சோமரச சாதனம்  என்பது பெரும்பாலோரின் கருத்து.

இப்போது நமக்கு நாமே சில தடைகளை எழுப்பி விடை காண்போம்.

இருபதுக்கும் மேலான இடங்களில் சோம மூலிகையை பருந்தும் கழுகும்  கொண்டுவருவதாக ரிக் வேதம் முழுதும் புலவர்கள் பாடுகின்றனர். இதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சந்திரனையும் கருடனையும் அமிர்தம் தொடர்புபடுத்தி புராணக் கதைகள் பேசுகின்றன. அவற்றுடன் தொடர்புடையன போலும் !

போதை ஊட்டும் பொருளானால்  அதை ராத்திரியில் குடித்துவிட்டு கும்மாளம் போடும் வெள்ளைக்காரர்களை நாம் இன்றும் பார்க்கிறோம். எவனாவது அதி காலையில் நதியில்  குளித்துவிட்டு அதைச் சாப்பிடுவானா? அதுவும் மந்திரம் சொல்லி பெரும்பகுதியை கடவுளுக்கு என்று சொல்லி தீயில் ஊற்றி வீணடிப்பானா? சிந்தித்துப் பாருங்கள்.

.’இதுதான் சோமம்’, ‘அதுதான் சோமம்’, என்று 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வெள்ளைக்காரப் பயல்கள் அதை ஏன் இன்று பயிரிடக்கூடாது? கொக்கோ கோலா போல ஒரு மணிக்கு கோடி டாலர் சம்பாதிக்கும் தொழிலிலை ஏன் செய்யவில்லை? இன்று போதை மருந்து விற்பனை நிமிடத்துக்கு பலகோடி டாலர் என்று நாம் பத்திரிகையில் படிக்கிறோமே . ஏன் சோமத்தைப் பயிரிடவில்லை?இது எல்லாவற்றுக்கும் ஒரே பதில்:-

சோமம் ஒரு அபூர்வ குளிகை ; ஒரு அதிசய மூலிகை. அது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டது. அது என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் வருணனை ரிக் வேதத்தில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை உள்ளது . அது உடலுக்கு சக்தி, உற்சாகம், நீண்ட ஆயுள் தரும்; அதை சாப்பிடுவோருக்கு வீரம் மிக்க புதல்வர்கள்  பிறப்பார்கள்; அவர்களுக்கு ஏராளமான செல்வம் கிட்டும்; மனம் சுத்தம் அடையும்  என்பதை பின்வ ரும் 58 மந்திரங்கள்  காட்டுகின்றன . அப்படியே 58 மந்திரங்களையும் கொடுக்காமல் BULLET POINTS புல்லட்  பாயிண்டுகளில் தருகிறேன்.

ரிக் வேதம் – 9-97- 1 முதல் 58 வரை

பல ரிஷிகள் பாடிய கவிதை RV.9-97; மொத்தம் 58 மந்திரங்கள் / செய்யுட்கள்

சோமன், பிழியப்பட்டவுடன் முழக்கத்துடன் செல்கிறான். ரஸத்தை தேவர்களிடம் சேர்க்கிறான்

நீ மஹான், நீ கவிஞன்; நீ மங்கள போர்க் கவசங்களை அணிந்தவன்;

நீ துதிகளைப் போற்றுபவன்; நீ எல்லாம் அறிந்தவன்.

கடவுள் விருந்தில் விழித்திருப்பவன் .

புகழ் உள்ளவர் இடையே மிக்க புகழ் படைத்தவன்

புவியில் பிறந்தவன்; அன்புக்குரியவன்

சோமனைப் பாடுவோம் ; மகத்தான செல்வம் பெற சோமனைப் பாடுவோம்

வழிபடுவோருக்கு மகத்தான செல்வம் கிடைக்க அவன் இந்திரனிடம் செல்கிறான்.

பசுமை நிறத்துடனும் சுத்தமானவனாகவும் பெருகுக

இன்பம் ஊட்டும் உன் ரசம், இந்திரனை போருக்குத் தயார் செய்யட்டும்

(ரிக் வேதம் முழுதும் போர், பகைவன், பசு, குதிரை, செல்வம், தங்கம், வீரப் பு தல்வர்கள் , வீடு ; குகைகளில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டல், தர்ப்பைப் புல்லை பரத்துதல், சோம ரசம்  ஆகியன ஆயிரக்கணக்கான இடங்களில் வருகிறது ; இவைகளில் சொல்லப்படும்  இந்தச் சொற்களுக்கு மறைமுக அர்த்தம் வேறு !!)

சோமன் காட்டுப் பன்றி போல உறுமுகிறான்

பகைவரை மிரட்டும் வாத்தியங்களை நண்பர்கள் வாசிக்கிறார்கள்

சோமன் தனி வழியில் செல்கிறான். அவனை முந்துவதற்கு எவருமிலர்.

கூரிய கொம்புள்ளவன் ; ஒளி வீசுவோன்.

பகலில் தங்க நிற ஒளி வீசுவான்; இரவில் வெள்ளி நிற ஒளி உமிழ்வான்

ஆற்றலின் அரசன்; அரக்கர்களை வீழ்த்துகிறான்.

இந்திரனுக்கு இன்பம் தந்து குஷிப் படுத்துகிறான்

இனிப்பானவன்; சுத்தப் படுத்துபவன்.

பருவத்துக்குப் பொருத்தம் உடைய காந்தி/ஒளி உடையவன்

அவனை பத்து சகோதரிகள் (விரல்கள்) களைந்து அனுப்புகிறார்கள்

பசுக்களைத் தொடர்ந்து செல்லும் காளை போல சோமன் விண்ணிலும் மண்ணிலும் ஓடுகிறான்.

அவனுடைய சப்தம் இந்திரன் சப்தம் போல (இடி முழக்கம்) முழங்குகிறது

சுவைக்க இனியன் ; பாலைச் சொரிபவன் ;

ஒளி நிற ஆடை அணிந்த  சோமனே , மேகங்களை உன் ஆயுதங்களால் வசப்படுத்து.

நாங்கள் நல்ல வழிகளையும் செல்வத்தையும் பெற உதவி  செய்

அரக்கர்களை தண்டாயுதத்தால் அடி .

(இதுவரை 16 மந்திரங்களின் சுருக்கம் கண்டோம்; மேலும் தொடர்வோம்)

TO BE CONTINUED…………………………

XXX subham xxxx

tags – சோம ரசம் , அபூர்வ தகவல்கள்,  RV 9-97, மூலிகை.,பருந்து, கழுகு 

மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன் (Post. 10099)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,099

Date uploaded in London – 16 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன்!

ச.நாகராஜன்

அற்புதமான நாயன்மார்களின் வரலாற்றை அரும் சொற்களால் தமிழ்ப் பாக்களாகப் புனைந்தவர் சேக்கிழார். அதில் மெய்ப்பொருள் நாயனார் புராணம் தமிழகத்தின் இன்றைய அவல நிலையை விளக்குகிறது.

தொண்டை நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் நடுவில் உள்ள நடு நாட்டை ஆண்டு வந்தார் மெய்ப்பொருளார்.

எப்படி ஆண்டு வந்தார்?

“வேத நன்னெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு

காதலால் ஈசர்க்கு அன்பர் கருந்தறிந்தே ஏவல் செய்வார்.”

வேத நெறி வழுவாமல் ஆகமங்கள் பால் பெரும் பற்றுக் கொண்டு சிவனடியார்களைப் போற்றி அவர்கள் இட்ட வேலைகளைச் செய்து திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு அறம் பிறழாது ஆண்டு வந்தார் அவர்.

“மங்கையைப் பாகமாக வைத்தவர் மன்னுங் கோயில்

எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடலாடல்

பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்

தங்கள் நாயகருக் கன்பர் தாளலால் சார்பொன்றில்லார்”

உமையம்மையை தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் திருக்கோயில் அனைத்திலும் நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு ஆகிய அனைத்தையும் குறைவின்றி அவர் நடத்தி வந்தார்.

மெய்ப்பொருளாரை வெல்லக் கருதிய பகைவன் ஒருவனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

என்ன செய்தான் அவன்? நேருக்கு நேர் நின்று வெல்ல முடியாத அவன் அவரது கோயில் பற்றையும் சிவப் பற்றையும் ஆகம விதிகளின் மீது அவர் கொண்ட பக்தியையும் கண்டான்; சதித் திட்டம் தீட்டினான்.பின்னர் என்ன நடந்தது?

சேக்கிழார் அற்புதமாகக் கூறுகிறார் இப்படி:-

“மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்

கையினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி

மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்துப்

பொய்த்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்”

அற்புதமாக விவரிக்கிறார் இப்படி சேக்கிழார் பெருமான்! வஞ்சகனான அவன் மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன். அவன் பெயர் முத்த நாதன்.

தத்தன் என்ற அரசனின் மெய்க்காவலனையும் சிவனடியார் என்ற பொய்வேடத்தால் தள்ளி விட்டு அரசனின் அந்தரங்கப் படுக்கை அறைக்குள் நுழைந்தான் அந்த கபட வேஷதாரி.

படுக்கையில் மன்றலங் குழல் மென் சாயல் மாதேவியான அரசியைக் கண்ட பின்னும் முத்தநாதன் வெளியே போகவில்லை.

அரசனும் எழுந்தான். அவனிடம் ஆகப் பெரிய பொய் ஒன்றைச் சொன்னான் முத்தநாதன். உலகில் வேறெங்குமே இல்லாத ஆகமம் என்னிடம் இருக்கிறது என்றான்.

ஆகமம் வழுவாது அறநெறியுடன் கோவில் பூஜைகளை நடத்தும் மெய்ப்பொருளார் மிகவும் மகிழ்ந்து அவனை தவிசின் மேல் – அதாவது மிகப்பெரிய ஆசனத்தில் – அமர்த்தி அருள் செய்க என்றார்.

அந்த நயவஞ்ககப் பாவி புத்தகத்தை எடுத்துத் திறப்பது போல அதன் உள்ளிருந்த வாளை எடுத்து மெய்ப்பொருளார் மீது தான் செய்ய நினைத்த வேலையைச் செய்து முடித்தான்.

அந்த நயவஞ்சக வேலையைக் கூட அருளாளர் சேக்கிழார் பிரானால் கூற முடியவில்லை. “தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய” என்கிறார்.

மன்னன் வீழ்ந்தான். நயவஞ்சக முத்தநாதனை ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட தத்தன் ஓடி வர அவனை  மெய்ப்பொருளார் தடுக்கிறார்.”அவன் சிவ வேடம் பூண்டதால் அவனை ஒன்றும் செய்யாதே; அவனைப் பத்திரமாக வெளியே கொண்டு விடு” என்றார்.

அரச ஆணை! தத்தன் அப்படியே செய்தான்.

பொய்த்தவ வேடம் கொண்டு புகுந்த முத்தநாதன் தப்பித்தான் அரசனிடமிருந்து.

தெய்வத்திடமிருந்து அவன் தப்ப முடியுமா?

24 பாடல்களில் மெய்ப்பொருள் நாயனார் புராணத்தை வார்த்தை வார்த்தையாக அனுபவித்து பக்தியுடன் அனைவரும் படிக்க வேண்டும்.

இன்று கோவிலில் பொய்த்தவ வேடம் கொண்டு நுழைந்திருக்கும்,  இன்னும் புக நினைக்கும், முத்தநாதன்களை எளிதில் அடையாளம் காணலாம்.

தத்தனாக உள்ளே பாய்ந்து முத்தநாதன்களை மொத்தமாக மொத்தி அனுப்ப முயலலாம்.

கோவில்களையே கொள்ளையிடத் துடிக்கும் இந்த முத்தநாதன்களை மெய்ப்பொருளார் இன்று இருந்தால் மன்னிக்கவே மாட்டார் இல்லையா?

முத்தநாதன்களை இனம் காண வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்!

சிலை திருட்டு, கோவில் நகைத் திருட்டு என்று இன்ன பிற கொள்ளைகளைச் செய்யும் திருடர்களை சிறந்த காவல்துறையான தமிழகக் காவல் துறையிடம் இனம் காட்ட வேண்டுவதும் நம் கடமை; அதே போல சிவ வேடம் தரித்து புதிய ஆகமம் இருப்பதாகக் கூறி உள்ளே வரும் முத்தநாதன்களையும் போலீஸிடம் தான் சொல்ல வேண்டும்!

பக்தர்கள் செய்வார்களா?

***

INDEX

சேக்கிழார் பெருமான், மெய்ப்பொருள் நாயனார் புராணம், ஆகமம் பால் மதிப்புக் கொண்ட அரசனை முத்தநாதன் பொய் வேடம் பூண்டு ஏமாற்றுதல், புதிய ஆகமம் இருப்பதாகக் கூறு கொலை செய்யல், ஆலயம் பாதுகாக்க சிலைத் திருட்டுக்காரர்களை போலீஸிடம் சொல்ல வேண்டும்.

முக்கியக் குறிப்பு:-பகுத்தறிவுகளுக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். மெய்ப்பொருள் நாயனாரும் பிராமணர் இல்லை; இச்சரிதத்தை அழகுத் தமிழில் சொல்லும் சேக்கிழார் பிரானும் பிராமணர் இல்லை! எதையும் தவறாகத் திசை திருப்பும் பல தமிழக ஊடகங்களுக்காகத் தான் இந்த குறிப்பு

EARLIER POST ON MEYPPORUL NAYANAR

பயங்கரவாதிகள் பற்றி வள்ளுவன், சேக்கிழார் (Post …

https://tamilandvedas.com › பயங்…

13 Dec 2018 — மெய்ப்பொருள் நாயனார் சரிதம் மிகவும் உருக்கமானது. … கொண்டிருந்ததால், அவர் பெயரே மெய்ப் பொருள் நாயனார் என்று ஆயிற்று.

–SUBHAM–

tags – மனத்தினுள் கறுப்பு, முத்தநாதன், சேக்கிழார் , மெய்ப்பொருள் நாயனார்

SOMA PLANT – A HALLUCINATIVE DRUG OR AN ELIXIR TO HUMAN BEINGS? (Post No.10098)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,098

Date uploaded in London – 15 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

PLEASE READ THE ATTRIBUTES THE HINDU SEERS GIVE TO SOMA PLANT AND THE BENEFITS THEY TALK ABOUT IN THER MANTARS IN THE RIGVEDA. THEN YOU CAN EASILY DECIDE WHAT IT IS.

IT IS A SHAME THAT WE DON’T HAVE IT TODAY.  SOME HALF BAKED OR FULLY BAKED IDIOTS IDENTIFIED WITH X PLANT OR Y PLANT. HAD THEY REALLY KNOW THE PLANT THEY WOULD HAVE MADE BILLIONS OF DOLLLRS EVERY DAY BY CANNING AND SELLING IT.

I EVEN HAVE A SUSPICION THAT IT IS EQUAL TO AMRITA BECAUSE EAGLE-AMRITA STORY IN LAATER PURANAS IS IN THE RIG VEDA AS FALCON BRINGING IT FROM THE SKY OR MOUNTAIN.

FALACON, EAGLE AND HAWK ARE ASSOCIATED WITH THE SOMA PLANT IN 20 TO 30 MANTRAS.

All he quoted Mantras are from the ninth mandala of the Rig Veda. This Mandala has 114 hymns with 1108 Mantras.

xxx

Here is what the seers say about the Soma Juice:– RV.9-97

You are a mighty SAGE

You are watchful

You are far seeing

You are wearing battle ready raiment.

Let us sing praises to gods loudly and send soma for mighty riches

He has come for our great bliss

You are nobler than the noblest

A prince among us

You preserve us evermore with blessings

Come here with the gods for bounty

You are roaring like a BOAR

The SWANS brought their restless spirit to our dwellings

Friends come and sing in concert praising Soma

Soma appears silvery in night and golden in day light.

Soma has sharp horns and brings forth abundance

Soma bathed in milk excites Indra and make him joyful; Indra slays the demons.

As soma is purified, he pours out treasurers

Soma is GOD and he sprinkles on other gods

Soma / Indu has wearing qualities by seasons

Soma , the RED BULL bellowing to the cattle advances, causing the heaven and earth to roar and thunder

Soma is sweet, meath rich plant

You send us good paths ; show us good path

Pour on us rain from the sky

Let it be healthy

Send us breeze

You are a friend of human beings

Unties me from the knots of sin.

Flow on with thousand streams and give us strength to conquer heroes

Soma flows like unyoked horses

May soma grant us riches sought with longing

Soma gives riches to generous people

Soma is very wise

He who beholds man kind

King supreme of deities and mortals

Treasure lord of riches

Soma is like a speedy HORSE

Give us ample food thousandfold

After you are purified, find out riches

Give us children who will be heroes and give us houses.

Rich in all boons, the best of cheerers

Make heaven and earth well established

You are swifter than thought

You are a LION

Sprung from the gods

You are forerunner of abundant riches

A wise king will not treat his friend unkindly

Like a son following his father’s wishes, grant to this family success and safety.

I have covered only 30 mantras out of 58 in this one hymn (RV 9-97).

To be continued……………………..

tags-  Soma, Elixir, Not drug, 

DECEMBER 2020 London Swaminathan Articles, Index-97 (Post No.10097)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,097

Date uploaded in London – 15 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10000 PLUS POSTS.

DECEMBER 2020 INDEX

TAMIL WORDS IN ENGLISH -38;1/12;8988

TAMIL WORDS IN ENGLISH -39;2/12;8990

TAMIL WORDS IN ENGLISH -40;3/12;8994

TAMIL WORDS IN ENGLISH -41;4/12;8996

TAMIL WORDS IN ENGLISH -42;5/12;9001

TAMIL WORDS IN ENGLISH -43;6/12(LAST PART) 9005

XXX

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-1;9016;9/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-2;9019;10/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-3;9026;12/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-4;9036;14/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-5;9042;16/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-6;9036;17/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-7;9049;18/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-8;9056;20/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-9;9059;21/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-10;9069;23/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO11;9073;24/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO12;9076;25/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO13;9079;26/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO14;9081;27/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO15;9084;28/12

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO16;9093;31 DECEMBER 2020

XXX

7-12-2020 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH;9011B, 8/12

14-12-2020 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH;9039A, 15/12

21-12-2020 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH;9064A, 22/12

28-12-2020 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH;9087A, 29/12

XXX

INDEX 35 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9002; 5/12

NAMASKAR FROM LONDON 6-12-2020 ;7/12

HINDU SPEAKER FROM SOUTH AFRICA IN GNANAMAYAM BROADCAST;9012;8/12

INDEX 36 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9015; 9/12

INDEX 37 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9024; 11/12

INDEX 38 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9032; 13/12

INDEX 39 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9043; 16/12

INDEX 40 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9050; 18/12

INDEX 41 FOR LONDON SWAMINATHAN ENGLISH AND TAMIL ARTICLES;9077; 25/12 (April 2016 Index)

XXX

OBITUARY TO SRI R NANJAPPA 9052-B; 19/12

1173 VEDAS DISAPPEARED; ONLY SEVEN REMAIN; PLEASE SAVE IT- KANCHI SHANKARACHARYA ;9053;19/12

OLDEST SANSKRIT WORD IN INSCRIPTION;9063;22/12

XXX

30-11-2020 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH;8987B, DECEMBER 1,2020

HINDU LONDON CALLING 30-11-2020;8987A;1/12

LONDON(HINDUS) CALLING 13,14 DECEMBER 20; 9039 c;15/12

LONDON (TAMILS) CALLING 20-12-20;9065a;22/12

LONDON (HINDUS CALLING) CALLING 21-12-20;9065b;22/12

LONDON (TAMILS) CALLING 27-12-20;9065b;30/12

LONDON (HINDUS ) CALLING 28-12-20;9091a;30/12

XXX

JANUARY 2021 GOOD THOUGHTS CALENDAR ;9088; 30/12

(quotes on knowledge and wisdom)

XXXXX

TAMIL ARTICLES

உலக இந்து சமய செய்தி மடல் 30-11-2020 ;8987பி; 1/12

உலக இந்து சமய செய்தி மடல் 7-12-2020 ;9011 ஏ ; 8/12

அஸ்ஸாமிலிரு ந்து ஒரு அதிசயச் செய்தி 8991;3/12

ராஜ புருஷன் ஆநய :ராஜாவா, வேலை ஆளா?8997;4/12

பாரதியார் பற்றி 150+ கட்டுரைகள்; 9022;11/12

வேதத்தில் பெரிய புராணத்தில் குங்கிலிய மர்மம் -1;9027;12/12

வேதத்தில் பெரிய புராணத்தில் குங்கிலிய மர்மம் -2;9031;13/12

உலக இந்து சமய செய்தி மடல் 14-12-2020 ;9039பி; 15/12

உலக இந்து சமய செய்தி மடல் 21-12-2020; 9064பி;22/12

; 22/12

உலக இந்து சமய செய்தி மடல் 28-12-2020;9087 b 29/12

மல்லி விலை என்ன? 9000; 5/12

சுக்குமி, ளகுதி, ப்பிலி கதை ;9068;23/12

குரங்கு அணிந்த நகைகள்- கம்பனும் புறநானூற்றுப் புலவனும் ;9072;24/12

ஜனவரி 2021 நற்சிந்தனை காலண்டர்-அறிவு, விவேகம் பற்றிய பொன்மொழிகள் ; 30/12

XXX

சீனிவாசன் கட்டுரைகள்

Written by Kattukuty S Srinivasan

மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ் ;8986; 1/12

மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ்-2 ;8993; 3/12

ஊத்திச்சூடியும் சில இடக்கு மடக்கு விஷயங்களும்,9018;10/12

அடடா தப்பாப் போச்சே -2; 8999; 5/12

வள்ளுவர் வாசுகியைக் கூப்பிட்டா வாளி அப்படியே நிற்கும் !

இப்ப கூப்பிட்டா…. 9004; 6/12

மங்களம் தரும் அ ங்கா ரகன் -1; 9010;8/12

இசையும் இசையின் கதையும் -1 9028; 12/12

இசையும் இசையின் கதையும் -2 9030; 13/12

பல்லுப் போச்சு ! வாழ்க்கையும் போச்சு 9035;14/12

அடங்காத ஆத்திச் சூடியும், 9038; 15-12

சவுபாக்கியம்  அருளும் சுக்கிரன் -1; 9041, 16/12

சவுபாக்கியம்  அருளும் சுக்கிரன் -2; 9045, 17/12

மனைவியிடமிருந்து தப்பிப்பதெப்படி?- 9048; 18/12

டீல ஒரு ஈ இருக்கும்; காப்பில ….???? இருக்கும் ;9060;21/12

அ -க்கு அடுத்து ஆ வருவதேன்?9062;22/12

வேண்டியதும் வேண்டாததும் ; நவீன ஞான மொழிகள் -14;9067;23/12

பெண்களே யோசியுங்கள் எனக்குப் பிடித்த கவிதைகள்-4; 9075;25/12

புத்தி தரும் புதன், 29/12; 9086;

One Tree can make One Lakh Match Sticks. One Negative Thought…… (9071) 24/12

–subham—

 tags- December 2020, Index 97,

வெளிநாட்டில் தமிழ் கற்பது தேவையா? (Post No.10096)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,096

Date uploaded in London – 15 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Written by London Swaminathan for a magazine recently; (Former BBC Broadcaster, University Tamil Tutor & Dinamani Senior Sub Editor)

ஆங்கில  மொழியோ வேறு ஐரோப்பிய மொழியோ பேசும் நாட்டில் வாழும் நாமும் நம் குழந்தைகளும் தமிழ் மொழி கற்பது அவசியமா? வீட்டில் தமிழ் பேசுவது தேவையா? தமிழ் பண்பாட்டைக்  காப்பதற்காக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ‘டிக்கெட்’ வாங்கிப் போக வேண்டுமா ? தமிழ் மொழியைக் கற்கும் நேரத்தில்  வேறு மொழியையோ, புதிய தொழில்களையோ  கற்றால் பணமும் சம்பாதிக்கலாம், புதிய வேலைகளையும் செய்யலாமே! — இவ்வாறு பல வாதப் பிரதிவாதங்கள் நடப்பதை நாம் அறிவோம்.

London University Tamil Department (SOAS)- dr Stuart Blacckburn, Dr John Marrin the Centre, London Swaminathan (Far right) Dr Singvi, High Commissioner (far left). Year 1996

முதலில் ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரையாளர் 43 ஆண்டுகளுக்கு தமிழ் தொடர்பான வேலைகளை மட்டுமே செய்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் வேறு வேலைகளுக்கு மனுப்போட்டும் கிடைக்கவில்லை!! ஆனால் தமிழ் வேலைகள் மட்டும் தேடித் தேடி வந்தன.(பத்திரிகை ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர், பி.பி.சி ஒலிபரப்பாளர் ,தமிழ் சங்க மானேஜர், தமிழ் மொழி பெயர்ப்பாளர்…… என்று) சுருக்கமாகச் சொன்னால் எனக்கும் என் குடும்பத்துக்கும், ‘தமிழ் சோறு போட்டது’. அதுவும் லண்டனில்!!

இது எல்லோர் வாழ்விலும் நடக்க முடியாதல்லவா? ஆகவே பொதுவாக விவாதிப்போம் .

ஒருவர் பிறந்த நாட்டையும், பிறந்த மதத்தையும், பேசும் மொழியையும், சேர்த்த புட் பால் (Foot Ball Club)  அணியையும், கிரிக்கெட் அணியையும் ஆதரிப்பதை எல்லா கலாசாரங்களிலும் பார்க்கிறோம் . நாம் மட்டும் ஏன் நமது மொழியையும் பண்பாட்டையும் விடவேண்டும்?

அது சரி, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி ,கீட்ஸ் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தமிழில் என்ன இருக்கிறது? என்று சிலர் நினைக்கலாம்.

தமிழ் ஒரு கடல். இன்று நாம் படிக்கத் தொடங்கி 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியாது. அதில் பெரும்பகுதி ஆங்கில இலக்கியம்  தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை! தமிழ் பண்பாடோ மற்றவர்கள் முழு அளவு ஆடையின்றி நாகரீகம் இல்லாமல் திரிந்த காலத்தில் இந்தோனேஷியாவரை கொடிகட்டிப் பறந்து இருக்கிறது.

மேலும், எல்லா மரங்களுக்கும் வேர் இருப்பது போல ஒவ்வொருவருக்கும்- ஒவ்வொரு சமுதாயத்துக்கும் – ஒரு வேர் இருக்க வேண்டும். அதற் காகவும் நம் மூலத்தை (மூலம்= வேர்)ப் பிடித்துக் கொண்டு இருக்கவேண்டும்.

சிறு பிள்ளை ஆக இருக்கும்போது விளையாட்டில் கவனம்; இளம் வயதில் வாழ்க்கைத் துணையில் கவனம்; வயதானபோது உடல் நலனில் கவனம்- இப்படி வாழ்நாள் ஓடிவிடுகிறது. இடையே அலுப்பு சலிப்பு தட்டும். அப்போது ஏதாவது ஒரு பொழுது போக்கு தேவைப்படுகிறது அதற்கும் தமிழில் ஆடல், பாடல் என்று நிறைய இருக்கின்றன. பயனுள்ள விஷயங்களை அறிய தமிழில் எல்லாத் துறைகளிலும் கடல் அளவு செய்திகள் இருக்கின்றன. அற்புதங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட 18 சித்தர்கள் வழிகாட்டுவார்கள்.

பல திகில் திரைப்படங்களில் சங்கேத மொழியில் செய்தி அனுப்பி வில்லனை மடக்குவதை பார்த்திருப்பீர்கள்; நமக்கோ சங்கேத மொழியே தேவை இல்லை. நமக்குள் ரகசியமாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள தமிழ் உதவும். அதாவது ஆங்கிலம் போன்ற மொழி புழங்கும் இடங்களில்!

வேலை வாய்ப்புக்கும் தமிழ் உதவும். நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக . இதன் மூலம் கற்கும் கலைகள் நமக்கு பல இடங்களில் சிறப்பான வரவேற்பைத் தருகிறது. சொல்லுவது புரிகிறதா?

தமிழ் இட்டிலி , தோசை, வடை, பொங்கல், சாம்பார், ரசம் பிடிக்காத வெள்ளைக்காரர்கூட இல்லையே. அந்தக் காலத்திலேயே தமிழ் மிளகு ரசமும், கட்டுமரமும் ஆக்ஸ்போர்ட் அகராதியில் நுழைந்துவிட்டதே!.

ஒவ்வொரு ஆண்டும் நான் லண்டன் பல்கலைக் கழகத்தில், தமிழ் வகுப்பில்,  எல்லோரையும்  அறிமுகம் செய்துகொள்ளும்படி சொல்லிவிட்டு ஏன் தமிழ் படிக்க வந்தீர்கள்? என்றும் சொல்லும்படி கேட்பேன். பெரும்பாலோர் தமிழ் பேசும் ஒருவரைக் கல்யாணம் கட்டியதால் தமிழ் தேவைப்பட்டது என்பர். இன்னும் சிலர் மாமியார், மாமனார் பேசுவது (திட்டுவது??) புரியவில்லை என்பதற்காக வந்தேன் என்பர். இன்னும் சிலர் தமிழ் சினிமா, கலை மூலம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பலர் தமிழ் நாடு, இலங்கை தொடர்பான ஆராய்ச்சியில் உதவும் என்று  எண்ணி வந்ததாக இயம்புவர். ஒரு வெள்ளைக்காரர் துணிச்சலாக ஆண்டு தோறும் இட்லி, தோசை சாப்பிடுவதற்காகவே தமிழ் நாட்டுக்குச் செல்வதாகவும் ஹோட்டல்காரக்ளுடன் நன்கு உரையாட தமிழ் படிப்பதாகவும் சொன்னார். அது பொய்யல்ல என்பது அவர் பல ஆண்டுகளுக்கு என்னிடம் தமிழ் படித்ததிலிருந்து தெரிந்தது. இட்டிலி தோசைக்கு அவ்வளவு மஹிமை!

குறைந்தது தமிழ் திரைப்படங்களில் வரும் நகைச் சுவை காட்சிகளையும் பாடல்களையும் ரசிப்பதற்காகவாது தமிழ் கற்க வேண்டும்.

ஆயினும் பழம் பெருமை மட்டும் பேசுவதோடு நில்லாமல் ஆங்கிலம், இந்தி போல பிறமொழிச் சொற்களையும், நமது மொழியின் அடிப்படை கெடாத அளவுக்கு, ஏற்க வேண்டும். ‘தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் தமிழர்கள் கோஷமிடுவது காதில் கேட்கிறது. உலகிலுள்ள புகழ் பெற்ற பிற மொழி இலக்கியங்களோ, அறிவியல் விஷயங்களோ இன்னும் தமிழில் கால்வாசி கூட மொழிபெயர்க்கப்படவில்லை. வெளிநாட்டில் வாழும் நமக்குக் கிடைக்கும் வசதிகள் தமிழ் மொழி வழங்கும் இடங்களில் கிடைப்பதில்லை. அந்த மொழிபெயர்ப்புப் பணியையும் நம்மில் சிலர் செய்யலாம். அதனால்தான் பாரதியும் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றார் . அத்தோடு ‘பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் மேலும் ஒருபடி போய் ‘இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும்’ என்றார் .இந்த மூன்று பணிகளில் முடிந்ததை நாம் செய்யலாமே.

முயற்சி திருவினை ஆக்கும்!

–subham–

tags –வெளிநாட்டில், தமிழ், கற்பது, தேவை, 

நாராயண தீர்த்தர்! (Post No.10095)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,095

Date uploaded in London – 15 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 13-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

நாராயண தீர்த்தர்!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

நாம ஏவ சித்தாந்தா – நாமமே சித்தாந்தம் என்ற நாம மகிமை சித்தாந்தத்தை வலியுறுத்தி ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள், திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் உள்ளிட்ட பல மகான்கள், அந்த சித்தாந்தத்தைப் பரப்பிய காலம் நாம சங்கீர்த்தனத்தின் பொற்காலம்.

இந்தப் பொற்காலத்தில் அவதரித்தவர் ஸ்ரீ நாராயண தீர்த்தர்.

காஷ்மீரிலிருந்து கன்யா குமரி வரை அனைவரும் இசைத்து ஆனந்தப்படும் கிருஷ்ண லீலா தரங்கிணி நூலை இயற்றியவர் ஸ்ரீ நாராயண தீர்த்தரே. இந்த நூலை, அனைவரும் பரவசப்படும் விதமாக நாட்டியமாக வடித்து நூற்றுக் கணக்கான நடனக் கலைஞர்கள் நாட்டியம் ஆடி அனைவரையும் பக்திப் பரவசப்படுத்துகின்றனர். அதே போல நூற்றுக் கணக்கான இசை மேதைகளும் தங்கள் குரல் வளத்தால் கிருஷ்ண லீலைகளை செவி குளிரப் பாடுகின்றனர்.

தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த தல்ல வஜ்ஜல என்ற குடும்பம் ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் பானக நரசிம்மர் உறைந்து அருள் பாலிக்கும் மங்களகிரியின் அருகில் அமைந்துள்ள காஜா என்ற கிராமத்தில் வசித்து வந்தது. அங்கு நீலகண்ட சாஸ்திரி, பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ஸ்ரீ நாராயண தீர்த்தர். இவர்  பிறந்த ஆண்டு 1665. ஜீவ சமாதி எய்திய ஆண்டு 1745.

இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் கோவிந்த சாஸ்திரி. இவர் இளம் வயதிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் மீது எல்லையற்ற பக்தி கொண்டிருந்தார். சம்ஸ்கிருதத்தில் வல்லமை பெற்ற இவருக்கு இசை கை வந்த கலையாயிற்று, சாஸ்திரங்களிம் மிகுந்த தேர்ச்சி பெற்றார். அந்தக் கால நடைமுறைப்படி இவருக்கு இளம் வயதிலேயே திருமணமும் நடை பெற்றது.

ஒரு சமயம் தனது மாமனார் வீட்டிற்குச் செல்வதற்காகப் புறப்பட்ட இவர் கிருஷ்ணா நதியைத் தாண்ட வேண்டியிருந்தது. அப்போது ஆற்றின் வெள்ளப் பெருக்குச் சுழலில் மாட்டிக் கொண்டார். வெள்ளத்தில் மூழ்கி உயிர் போய் விடும் என்ற தருணத்தில் இவர் ஆபத் சந்யாசம் மேற்கொண்டார். அந்த மந்திரங்களைச் சொல்லி சந்யாசம் மேற்கொள்ளவே, வெள்ளச் சுழலிலிருந்து மீண்டார், சந்யாசி ஆனார். தனது மனைவியை அவர் பார்த்த போது, அவரது தெய்வீக முகத்தைக் கண்டு மனைவி நடந்ததை உணர்ந்து கொண்டார். தெய்வீக லீலையை உணர்ந்து கொண்ட குடும்பத்தினர் அவரது சந்யாச தர்மத்தை ஏற்றுக் கொண்டனர். தீர்த்தர், இந்திர சரஸ்வதி, பூரி ஆகிய பெயர்களை சந்யாச நாமத்தில் கொண்டவர்கள் அத்வைத சம்பிரதாயத்தைப் பின்பற்றும் ஆசாரியர்கள் ஆவர்.  காசிக்கு யாத்திரை மேற்கொண்ட கோவிந்தர், அங்கு சிவராமாநந்த தீர்த்தர் என்பவரைக் குருவாகக் கொண்டார். அவர் முறையாக அவருக்கு சந்யாச ஆஸ்ரம தீக்ஷையைச் செய்து வைக்க அவர் நாராயண தீர்த்தர் என்ற நாமத்தை மேற்கொண்டார். அந்தப் பெயராலேயே உலகெங்கும் அறியப்பட்டார்.

 ஒரு சமயம் அவருக்குத் தீராத வயிற்று வலி ஏற்பட்டது. அவரது கனவிலே வெங்கடேசப் பெருமாள் அவரது குரு வடிவில் தோன்றி அவரை பூபதிராஜபுரம் என்ற ஊருக்குச் செல்லுமாறும் அங்கு வயிற்றுவலி தீர்ந்து விடும் என்று கூறி அருள் பாலித்தார். கால்நடையாக யாத்திரையை மேற்கொண்ட அவர் திருவையாறு வந்து பஞ்சநதேஸ்வரரையும் தர்மஸம்வர்த்தனியையும்  தரிசித்தார். அங்கு ஒரு வில்வ விருக்ஷத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் நடு காவேரியை அடைந்தார். அங்கு வலி இன்னும் தீவிரமானது. அவரது கனவில் மீண்டும் தோன்றிய வெங்கடேச பெருமாள் அவரிடம், காலையில் அவர்  பார்க்கும் முதல் பொருளைப் பின் தொடர்ந்து செல்லுமாறு கூறி அருள் பாலித்தார். காலையில் விழித்த நாராயணதீர்த்தர் கண்களில் ஒரு பன்றி தென்பட்டது. அவர் பன்றியைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். பன்றியானது வேகமாக ஓட ஆரம்பித்தது. அது நேராக பூபதிராஜபுரத்தை அடைந்து அங்குள்ள வெங்கடேசர் ஆலயத்தினுள் புகுந்தது, மறைந்தது.  வராக அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவே தன்னை ஆட்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த நாராயண தீர்த்தர், விழிகளில் நீர் பெருக தியானத்தில் அமர்ந்தார். நெடுநாள் அவரை வாட்டிய வயிற்றுவலி ஒரு கணத்தில் அங்கே தீர்ந்தது. அவரது தியானத்தில் கிருஷ்ண தரிசனமும் ஏராளமான திவ்ய காட்சிகளும் தென்படலாயின. பூபதிராஜபுரம் இப்படி பன்றி என்ற வராகத்தின் வருகையால் வரகூர் என்ற பெயரைப் பெற்றது.

அவர் கண்ட தெய்வீகக் காட்சிகள் மளமளவென்று அவரது நா வழியாக பொங்கிப் பிரவாகமெடுத்து வரலாயின. கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற அபூர்வ நூல் பிறந்தது. இந்த நூல் ஒரு இசை நூலாகவும் நாட்டியத்திற்கு ஏற்புடையதான ஒரு நாட்டிய நூலாகவும் அமைந்தது. இதை நாராயண தீர்த்தர் தாமே வடிவமைத்து அங்கு அரங்கேற்றியதாக வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு கீதத்தையும் வெங்கடேசருக்கு அர்ப்பணிக்க அவர் தலை அசைத்து அதை அங்கீகரிக்கவே அனைவரும் பெரு மகிழ்ச்சிக்குள்ளாயினர். இன்னொரு கூற்றின் படி ஆஞ்சநேயர் எவற்றை எல்லாம் அங்கீகரித்தாரோ அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அவரே நிராகரித்து விட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.

கிருஷ்ண லீலா தரங்கிணி ஆன்மீகக் கருத்துகளைத் தன்னுள் கொண்ட ஒரு அற்புதமான காவியமாகும். உபநிடதக் கருத்துக்களை ஆங்காங்கே அவர் பதித்துள்ளார். தனது குருவின் பெயரான சிவானந்த தீர்த்தரை அவர் எட்டாவது தரங்கத்தில் அமையும் தேவதேவம் என்ற கீர்த்தனையின் இறுதியில் குறிப்பிடுகிறார். வழக்கமாக கடைசி சரணங்களில் தனது  முத்திரையை சிவராம தீர்த்தர் என்றும் நாராயண தீர்த்தர் என்றும் வரநாராயண தீர்த்தர் என்றும் தீரநாராயண தீர்த்தர் என்றும் அவர் பதித்துள்ளார்.

கணபதி துதியைத் தொடர்ந்து தேவகி-வசுதேவர் கல்யாணத்தில் ஆரம்பித்து க்ருஷ்ணர் ருக்மிணியை மணம் முடிப்பது வரை இந்த காவியத்தில் பல காட்சிகளை நாம் காணலாம். சம்ஸ்கிருதத்தில் உயரிய பாண்டித்தியம் கொண்டிருப்பதால் அவரது இந்த காவியத்தில் காவிய ரஸனையைக் காணலாம். சிலேடை உள்ளிட்ட பல அணிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஜய ஜய ஸ்வாமிம் ஜய ஜய என்று கம்பீரமாக ஆரம்பிக்கிறது இந்த நூல்.

கிருஷ்ண லீலை என்னும் அலைகள் என்பதே கிருஷ்ண லீலா தரங்கிணி என்பதற்கான பொருளாகும். ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தின் சுருக்கமே இது.  அதில் ஒன்று முதல் 58ஆம் அத்தியாயம் முடிய உள்ள பகுதிகளை இதில் காணலாம். இதில் வசனமும் உண்டு, கவிதையும் உண்டு, நாடகமும் உண்டு. ஆக இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் தரும் அபூர்வ நூல் இது. இதில் அமைந்துள்ள ஜதிகளும் சொல்கட்டுகளும், இவரே அதில் லயித்து ஆடிப்பாடி நடித்ததை அடிப்படையாகக் கொண்டு இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜெயதேவர் இயற்றிய கீதகோவிந்தத்தின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டவர் நாராயணதீர்த்தர். கீத கோவிந்தத்தில் 12 சர்க்கங்கள் அமைந்துள்ளது போலவே கிருஷ்ணலீலா தரங்கிணியிலும் 12 தரங்கங்கள் அமைந்துள்ளன. யக்ஷகான அடிப்படையில் அமைந்துள்ள இந்த காவிய நூலானது  145 கீர்த்தனைகளையும், 267 செய்யுள்களையும் 30 கத்யங்கள் – அதாவது வசன பகுதிகளையும், 30 தருக்களையும் அதாவது விவரண கீதங்களையும் கொண்டுள்ளது.  குறைந்தபக்ஷம் 41 ராகங்களை இதில் காணலாம். த்ரிபுட, ஆதி, ரூபக, சாபு, சம்பா, மத்ய, விளம்ப, ஏகா, அட உள்ளிட்ட தாளங்களை நாராயண தீர்த்தர் பயன்படுத்தினார். சம்ஸ்க்ருத யாப்பிலக்கணத்தில் வல்லுநர் என்பதால்  அரிய விருத்த வகைகளான அனுஷ்டுப், ஆர்யா, இந்த்ரவஜ்ரா, புஜங்கப்ரயாதம், சார்தூலவிக்ரிதம், வசந்த திலகா, ப்ரித்வி உள்ளிட்ட பல சந்த வகைகளை – விருத்த வகைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இந்த சந்த வகை பற்றி யூடியூபில் டிகாராம் கௌசிக் உள்ளிட்ட அறிஞர்கள் விளக்கியுள்ளதைப் பார்த்து மகிழலாம். https://m.youtube.com/watch?v=FTJ617guES4

கடினமான பதங்களைப் பயன்படுத்துவதை தீர்த்தர் தவிர்த்தார். அவருடைய கத்யங்கள் மிக அழகானவை.

கிருஷ்ணலீலா தரங்கிணி மட்டுமல்லாமல் பாரிஜாத அபஹர்ணம், ஹரிபக்தி சுண்டர்னவம் உள்ளிட்ட பதினைந்து நூல்களையும் அவர் படைத்துள்ளார்.

நெடுங்காலம் வரகூரில் இருந்த நாராயண தீர்த்தர் பின்னர் திருப்பூந்துருத்தியை அடைந்தார். அங்கு ஒரு மாமரத்தின் அடியில் அமர்ந்து மாசி மாத சுக்ல பக்ஷ அஷ்டமி திதியில், கார்த்திகை நக்ஷத்திரத்தில் ஜீவ சமாதி எய்தினார்.

நாராயணதீர்த்தரால் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் உள்ளிட்ட மகான்கள் உத்வேகம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. வரகூரில் இன்றளவும் ஜன்மாஷ்டமி அன்று கிருஷ்ணலீலாதரங்கிணியில் உள்ள கீர்த்தனைகள் இசைக்கப்படுகின்றன. அதே போல அவர் ஜீவ சமாதி எய்திய திருப்பூந்துருத்தியில் தியாகராஜ ஆராதனை போலவே அவரது ஆராதனையும் வெகு விமரிசையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரது கிருஷ்ணலீலாதரங்கிணியை இணையதளத்திலிருந்து சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தரவிரக்கம் – டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

பஜனை சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்டோர் யூடியூபில் கிருஷ்ண லீலா தரங்கிணியின் ஆனந்த அலைகளைச் செவி மடுத்து இன்புறலாம்.

அவரது க்ஷேமம் குரு கோபால என்ற கீதத்தின் வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:

Raga:  Mohanam

Tala:    
Triputi

Pallavi (refrain):

क्षेमं कुरु गोपाल   संततं मम  க்ஷேமம் குரு கோபால சந்ததம் மம

क्षेमं कुरु गोपाल||                க்ஷேமம் குரு கோபால |

Anupallavi

कामं तवपाद-कमल भ्रमरी भवतु      காமம் தவபாத-கமல ப்ரமரி பவது

श्रीमन् मम मानसं मधुसूदन      (क्षेमं….)   ஸ்ரீமன் மம மானஸம் மதுசூதன |

Charanam

अक्षीणकरुणानिधे आनन्दघन प्रक्षीण-दोषवारिधे அக்ஷீணகருணாநிதே ஆனந்ததன ப்ரக்ஷீன-தோஷ வாரிதே

शिक्षितासुरगण रक्षितनिजजन  சிக்ஷிதாசுரகண ரக்ஷிதநிஜஜன

कुक्षिस्थितानेक-कोटि-लोक-पालन  (क्षेमं….)  குக்ஷிஸ்திதானேக கோடி லோக பாலன

प्रह्लाद-भय-विदूर परमयोगि-पावन भुवनाधार   ப்ரஹ்லாத பய விதூர பரமயோகி-பாவன புவனாதார

मोहरहित-बोध-मौनि-मानस-हंस    மோஹரஹித – போத-மௌனி மானஸ ஹம்ஸ

सारस जित-वैरि-संघात महोदार      சாரஸ ஜித வைரி சந்தாத மஹோதர
(क्षेमं….)

अजित-विजय-गोपाल अनन्तलील रञ्जित-पदकमल அஜித விஜய கோபால அனந்தலீல ரஞ்சித பதகமல

विजय-द्वारकापुरी-विमल कमला-लोल விஜய த்வாரகாபுரி விமல கமலா லோல

निजनारायणतीर्थ निर्मलानन्द-बाल  (क्षेमं….) நிஜநாராயணதீர்த நிர்மலானனந்த பால (க்ஷேமம்)

நாம சங்கீர்த்தனத்தின் மஹிமையை உணர்த்தி கிருஷ்ண லீலைகளை கிருஷ்ணலீலா தரங்கிணியாக வடித்துத் தந்த நாராயணதீர்த்தரின் பெருமை சூரிய சந்திரர் உள்ளவரை நிலைத்திருக்கும். அவர் காவியம் கிருஷ்ணரின் புகழ் உள்ளவரை ஊழி ஊழி காலம் நிலைத்திருக்கும். நன்றி, வணக்கம்.

*** Tags-   நாராயண தீர்த்தர் , க்ஷேமம் குரு கோபால, கிருஷ்ணலீலா தரங்கிணி

Tamil and English Words 2700 Years Ago- Part 63 (Post No.10094)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,094

Date uploaded in London – 14 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON 9TH  DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -63

Tamil and English Words 2700 Years Ago- Part 63

பாணினி சூத்திர எண்கள்:–

6-2-59

Raja is used by Panini.

Raja becomes

A -rasa -n in Tamil. No Tamil word can begin with R or L in Tamil.

Raja becomes Royal, Regent, Regnal and Regal in English; we have seen the word before.

ராஜா – அரசன் – ராயல் – ரீகல்- ரீஜெண்ட்  ரெக் னல்

Xxxxx

6-2-60

Prathyenas

Next to succeed, ward

Also meant Prathnithi = representative

Prath = repre. ,,,th,,,,nithi

We can see the sound echoing Prathyenas

பிரத்யேனஸ் = வாரிசு = பிரதிநிதி = ரெ -ப்ர-சென்ட்

Xxxx

6-2-62

Grama silpini says Panini

கிராம= காவ்ன் = காம் = ஹாம் ; பர்மிங்ஹாம்; பக்கிங்ஹாம் ; ஈஸ்ட் ஹேம் /ஹாம் (லண்டனின் கிழக்குப் பகுதி)

Grama becomes ham or gham in Europe

We have Birmingham, Nottingham, East Ham in London. Only a few examples from 100s of Ham or Gham towns.

Silpini means worker

Silp becomes Sculpt . Later applied only to wooden or stone sculpture workers.

Silp/ini becomes Sirp/i in Tamil.

கிராம சில்பினி ; சில்பினி = தொழிலாளி; பிற்காலத்தில் சிற்பி

Xxxx

6-2-79

Upamaanam = simile

Uvamai is used by the Tamils throughout their ancient literature.

Xxx

6-2-88

Panini used maalaa for Garland

Tamils use the word until this day.

உபமானம் = உவமை (ப=வ)

தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் முழுதும் உளது

Xxxx

6-2-95

Kumaaryaam vayasi

VRuddha Kumari — Aged unmarried woman

Jarat kumaari = Aging woman who is not Married

V / Age = vayas, = Ayas = aayul.

வயஸ்  என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் எப்படியெல்லாம் உருமாறுகிறது என்று பாருங்கள் :-

வயஸ் = வயது ; மனஸ் = மனது என்பது போல .

வயஜ் = ஆங்கிலத்தில் வ+ ஏஜ்

Age ஏஜ் = ஆய்ஸ் = ஆயுள் age

Xxxx

6-2-98

Sabhaa used by Panini here means Assembly

Until this day Indians use this word in Lok Sabha, Rajya Sabha.

In Tamil Nadu it becomes Avai

Sa , as initial letter , is banned in Tamil .

சபா – ரிக் வேதத்திலும் உளது.

ஸபா = அவை  ; ச என்ற எழுத்துக்கு தொல்காப்பியர் தடை போட்டுவிட்டதால் அவை எல்லாம் அ

என்னும் எழுத்தை முதலில் பெறும் ; சபை = அவை (ப=வ)

சட்ட மேலவை, லோக்சபா, ராஜ்யசபை

Xxx

6-2-120

Veeera is used by Panini

Veera = hero

வீர , சூர என்ற இரண்டும் வேதத்தில் உளது

இது ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளில் ஹீரோ ஆகிறது .

எஸ்  என்றா எழுத்து ஹ – வாக மாறும் என்பது ஆம் அறிந்ததே

சிந்து = ஹிந்து ; சூர = ஹீரோ = வீர ??

Xxxx

6-2-25

Bahu = vehu,

பஹு = வெகு (ப=வ)

!xxxx

6-2-180

Antha = End

அந்தம் = முடிவு;

ஆதியோடு அந்தமாக ; வேதாந்தம்= வேத+ அந்தம்

Xxx

6-2-190

Purushan =Person

புருஷன் = பெர்சன் = பேர் ; எத்தனை பேர் ?= how many  persons?

Xxx

6-2-197

Tri pada = Tri pod

த்ரி பாத = முக்காலி

XXX

TO BE CONTINUED……..

tags- tamil in Panini-63

பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்) -Post No.10093

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,093

Date uploaded in London – 14 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெஞ்சு நாவல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் தூமா(ஸ்)

அலெக்ஸாண்டர் தூமா(ஸ் ) ALEXANDRE DUMAS 19-ம் நூற்றாண்டின் பிரபல பிரெஞ்சு நாடக ஆசிரியர், நாவல் ஆசிரியர். அவர் எழுதிய இரண்டு துணிகர நாவல்களைப் பலரும் படித்திருப்பார்கள் – த்ரீ மஸ்கிடீர்ஸ் THREE MUSKETEERS /மூன்று துப்பாக்கி வீரர்கள் ; THE COUNT OF MONTE CRISTO தி கவுன்ட் ஆப் மா ண்டி கிறிஸ்டோ

தூமா,  பிரான்ஸ் நாட்டில் கிராப்புறத்தில் பிறந்தார். தந்தை ஒரு ராணுவ அதிகாரி; தாய் சத்திரத்தை நடத்தும் ஒரு பெண்மணி.அவருடைய தந்தை நெப்போலியன் போனபர்ட் படையில் பணிபுரிந்தார். சண்டையில் உயிரிழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. பிழைப்பு தேடி தூமா , தலைநகர் பாரிசுக்கு வந்தார். அப்போதுதான் எழுதத் துவங்கினார்.

27 வயதில் மூன்றாவது ஹென்றி Henry III என்ற வரலாற்று நாடகத்தை எழுதி மேடை ஏற்றினார். அப்போது அவருக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. அந்த உத்வேகத்தில் தொடர்ந்து, இடைவிடாது புதிய கதைகள், நாடகங்கள், நாவல்களை எழுதி வந்தார். எப்போதாவது ஒய்வு வேண்டுமென்றால் கிராப்புறத்திற்குச் சென்று ஓய்வு எடுப்பார்.

பிரான்ஸ் நாட்டின் முழு வரலாற்றையும் எழுத வேண்டும் எனது அவருடைய ஆசை. அதன் காரணமாக எழுந்ததுதான் முன்னர் குறிப்பிட்ட இரண்டு நாவல்கள் .

நாவல் , கதைகள் எழுதுவதில் எவ்வளவு வேகம் இருந்ததோ அவ்வளவு வேகம் செலவு செய்வதிலும் இருந்தது. இதனால் எவ்வளவு பணம் வந்தாலும் கடன்காரனானாகி விடுவார். மீண்டும் உழைத்து கடனை அடைப்பார்.

தூமாவுக்கும் அவருடைய காதலிக்கும் பிறந்த மகனின் பெயரும் அலெக்சாண்டர்தான் . அவரும் தந்தை போலவே நாவல் எழுதி புகழ் பெற்றார். அவர் எழுதிய கமீய் Camille என்ற சோகமான காதல்கதை அவரைப் புகழ் பெற வைத்தது. அது 1852-ம் ஆண்டிலேயே பிரான்சில் நடித்து காண்பிக்கப்பட்டது.

தூமா பிறந்த தேதி – ஜூலை 24, 1802

இறந்த தேதி – டிசம்பர் 5, 1870

வாழ்ந்த ஆண்டுகள் – 68

எழுதிய நாவல்கள், நாடகங்கள் –

1829 – HENRY III

1830- CHRISTINE

1831 – NAPOLEON BONAPARTE

1831 – ANTONY

1832 – THE TOWER OF NESLE

1836- KEAN

1844 – THE THREE MUSKETEERS

1844 – THE COUNT OF MONTE CRISTO

1845 – TWENTY YEARS AFTER

1850- THE BLACK TULIP

***

எனது பிளாக்கில் 2015 அக்டோபர் 9ம் தேதி எழுதியது இதோ:-

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–subham—

Tags –  பிரெஞ்சு, நாவல், ஆசிரியர், அலெக்ஸாண்டர் தூமா(ஸ்), Alexandre Dumas