மெல்லின எழுத்துப் பாட்டு! (Post.10,793)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,793

Date uploaded in London – –     30 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

மெல்லின எழுத்துப் பாட்டு!

ச.நாகராஜன்

சித்திர கவியில் இனவெழுத்துப் பாட்டு  வகையில், மெல்லின

எழுத்துப் பாடலை இப்போது பார்க்கலாம்.

மெல்லினம் என்பது ங, ஞ, ண, ந, ம, ன ஆகிய ஆறு எழுத்துக்களின் இனம் ஆகும்.

இந்த மெல்லினம் மட்டுமே வரும் பாடல் மெல்லின எழுத்துப் பாட்டு எனப்படும்.

எடுத்துக்காட்டாக ஒரு பாட்டு:

நன்மனமு நாணமு முன்னினு நான்முன்னே

னின்மனமு நின்னாணு மென்னென்னோ- நன்மனமு

நண்ணுமே நன்மாமை நண்ணுமா மெண்ணுமினோ

மண்ணின்மேன் மானன்ன மா

இது யாப்பருங்கலவிருத்தி தரும் பாடல்.

இதற்கான மாறனலங்காரம் தரும் சூத்திரம் இது:

“மெல்லினமுழுதுறன் மெல்லினப் பாட்டே”

மாறனலங்காரம் தரும் எடுத்துக்காட்டுப் பாடல் இது:-

மனமேநினைஞானமன்னாமைமீன

மனமேனமெங்ஙனெனினங்ஙன் – முனமானா

னேமிமான்மாமானினிநீண்மனமான

நேமிமானன்னாமநீ

பாடலின் பொருள் :

மனமே! மீனமும் அன்னமும் ஆமையும் ஏனமும் எப்படியே இருக்கும் என்னில் அப்படியே முன்னர் திருவவதாரமானவன்,

பூமி தேவியாகிய மான் போலும் விழியை உடையாளுக்கும் திருமகளாகிய பெண்ணுக்கும் அவர்கள் மனம் எப்படியோ அப்படி யான ஞான மன்னன், சக்கரத்தை உடையவன், அவனது நல்ல திரு நாமங்களை இடை விடாது நீ நினைப்பாயாக.

இந்த நினைவே ஆன்ம லாபத்தைத் தரும் என்று சொல்ல வரும் மெல்லினப் பாடல் இது.

இப்படிப்பட்ட மெல்லினப் பாடல்கள் தமிழில் ஏராளம் உள்ளன.

தொகுப்பார் தாம் இல்லை!

***

Tags-   மெல்லின , பாட்டு, 

Leave a comment

Leave a comment