CARTOONS UPTO 1192024

CARTOONS FROM DECCAN CHRONICLE UP TO 11-9-2024.

THEY ECHO CURRENT AFFAIRS.

THEY RECORD HISTORY

ONE PICTURE GIVES YOU 1000 WORDS.

U WILL REMEMBER THEM BETTER THAN WORDS.

THEY MAKE YOU LAUGH.

THEY R MILD AD POLISHED ATTACKS.

THEY VOICE PEOPLE’S OPINION.

EVEN OPPOSITION ENJOYS IT, BECAUSE IT IS FUNNY.

SUPPORT ALL CARTOONISTS.

DON’T IMPOSE CENSORSHIP ON CARTOONS.

— LONDON SWAMINATHAN

தீபாவளி, மனித மிருகங்கள்,  தமிழபிமானி பற்றி சுப்பிரமணிய பாரதி (Post No.13,653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,653

Date uploaded in London – 11 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

பாரதியின் கருத்தில் மனித மிருகங்கள்

ஒரு புதிய உண்மை வெளிவரும்போது அதை ஆசையோடு ஏற்காமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக்க கண்டும் அஞ்சும்) ஆந்தை

 தன்  காரியத்தில் விருப்பம் இல்லாமல் பிறருக்குப் பிரியமாக நடந்துகொண்டு , அவர்கள் கொடுத்ததை வாங்கி  வயிறு வளர்ப்பவன் நாய்

கண்ட விஷயங்களுக்கெல்லாம் திடீர் திடீரென்று கோபம் அடைகிறவன் வேட்டை நாய் .

பிறன் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும்  அக்கிரமத்தை ஹாரி முடியாமல் மந்தமாகப் பொறுத்திருப்பவன் கழுதை

வஞ்சனையாலும் , தந்திரத்தாலும்  சமயத்துக்கேற்பப் பலவித  கபடங்கள் செய்து வாழ்பவன் நரி .

ஆர்வம் இல்லாமல் எதையாவது நினைத்து  ஏங்கிக் கொண்டு , மனஞ்சோர்ந்து , தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. —பாரதி

தொகுத்தவர் மரியா ஜான்

நன்றி – மஞ்சரி , நவம்பர் 1968

xxxx

தமிழபிமானி யார் ?

தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்திலேஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.

பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி. தமிழராகப் பிறந்தோர் கூடியிருக்கும் சபைகளிலேயும் , தமிழராகப் பிறந்தோர் ஒருவருக்கொருவர் பேசும்போதும் , இதர பாஷைகள் பேசாமல் தமிழே பேசும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி.

தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி தமிழபிமானி ஹிந்து தர்மத்தைக்  கைக்கொண்டு நிற்பவன். தேவாரத்திலும், திருவாய் மொழியிலும்,  அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை.– பாரதி

நன்றி- மஞ்சரி டிசம்பர் 1968

xxxxxx

தீபாவளி

“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.

சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்.

 “தற்காலத்திலே ஹிந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.”

“நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான்.

பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.

நாம் எ ல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து,  நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.”

ஆனால் “சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையானது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்வதாக  வேண்டும்.”

 “எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராக்ஷஸர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.

அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தானத்தை ஐந்து

 அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.  “தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் ப்படி அ ழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?”

மகாவீரத்தன்மை பெற்று  அஷ்டலக்ஷ்மிகளுக்கும் இருப்பிடமாக விளங்குவதற்குரிய  வழிகளைத் தேடுங்கள் உங்களுக்கெல்லாம் சர்வாபீஷ்டமும் சித்தியடைவதாக.— பாரதி

வந்தே மாதரம் (இந்தியா )

நன்றி மஞ்சரி, 1968T

—subham—

AGS- தீபாவளி,  மனித மிருகங்கள், தமிழபிமானி, சுப்பிரமணிய பாரதி

மஹாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள்! (Post No.13,652)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.652

Date uploaded in London – 11 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மஹாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள்! 

ச.நாகராஜன்

 மஹாகவி பாரதியாரின் கவிதா இலக்கியம் உலகில் பரவி பாராட்டப்படும் அளவில் அதிகமாகப் பேசப்படாதவை அவரது அற்புதமான கதைகள்!

இவற்றில் ஒன்று நவதந்திரக் கதைகள்.

கதைக்குள் கதை சொல்லும் பாணி தொன்று தொட்டு பாரத நாட்டில் இருந்து வரும் ஒரு பாணி. பஞ்ச தந்திரக் கதைகள்,விக்கிரமாதித்தன் கதைகள் போல மஹாகவி அமைத்திருக்கும் ஒரு தொடர் கதை நவதந்திரக் கதைகள்.

சுதேசமித்திரன் இதழில் 10-8-1916 முதல் தொடராக இது வந்தது. சில சமயம் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை.

மிக நீண்ட தொடராக அமைய வேண்டிய இது முற்றுப் பெறவும் இல்லை. 26-2-1918 இதழுடன் இது நின்று விட்டது.

இந்தக் கதைகள் பாரதி பிரசுராலயத்தாரால் 1928-ம் வருடம் நூலாக வெளியிடப்பட்டது.

இதற்கு தினமணியில் க.நா.சு. அவர்கள் ஒரு விமரிசனத்தையும் எழுதி இருந்தார்.

வேதாரண்யத்தில் விவேக சாஸ்திரி என்ற பிராமணருக்கு மூன்று குமாரர்கள். அவர்களுக்கு  உலகியல் ஞானம் இல்லை என்று குறைப்பட்ட சாஸ்திரி தனது ஆயுள் முடிய இன்னும் ஒரு வருடமே இருப்பதால் கவலை மிகக் கொண்டார்.

தன் குமாரர்களை லௌகீக ஞானம் பெறும் பொருட்டு சில கதைகளைக் கூறலானார்.

அதுவே நவதந்திரக் கதைகள்.

இந்தக் கதைகளில் நுட்பமான செய்திகள் மஹாகவியால் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன.

கதைகளில் மனிதர்களோடு பறவைகளும், விலங்குகளும் கதாபாத்திரங்களாக வருகின்றன.

எளிய நடை, ஆங்காங்கே தனக்கே உரித்தான நகைச்சுவை, படிக்கத் தூண்டும் கதை அமைப்பு ஆகியவற்றால் இது சிறந்து விளங்குகிறது.

தெய்வ பக்தி எதையும் சாதிக்கும். விவேகம் வெற்றி தரும். துரோகம் செய்வது பாவம். தன் தவறை உணர்ந்தவனை மன்னிக்கலாம். நேர்மை, அன்பு, விவேகம், இறை பக்தி இவை அனைத்தும் நல்லனவற்றை நல்கும் என்பன போன்ற நீதிகளை இந்தக் கதைகளை ஊன்றிப் படித்து அறியலாம்.

விவேக சாஸ்திரி தனது பிள்ளைகளுக்குக் கூறுவது போல மஹாகவி அனைத்து மக்களுக்கும் நீதிகளைச் சொல்கிறார்.

ஆனால் மிக பிரம்மாண்டமாக அமைய வேண்டிய இந்தத் தொடர் டக்கென்று முடிந்தது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டமே!

கதையின் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம். இவை முழுக் கதையையும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும்.

இந்தக் கதைகளை இணைய தளத்தில் இப்போது படிக்கலாம்; தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

1

ஆராய்ந்து காரியத்தில் இறங்கு!

கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப்படுவான்?

2

மானி அய்யன் மாணிக்கஞ் செட்டியிடம் கூறுவது:

மானி அய்யன் : “கதையில்லை, செட்டியாரே, காரியம்.

இனி மூன்றாவது விஷயம் யாதெனில் இந்த வியாபாரிகளுக்குக் குமாஸ்தாக்களிடம் சரியாக வேலை வாங்கத் தெரியவில்லை. ஏனென்றால், முதற் காரணம், சம்பளம் நேரே கொடுக்க மனம் வருவதில்லை. ஒரு மனிதனால் நாம் லாபமடைய விரும்பினால் அவனுக்கு வயிறு நிறையச் சோறு போட வேண்டும். வெளியிலிருந்து வரும் புத்திசாலியைக் காட்டிலும் குடும்பத்தைச் சேர்ந்த மூடனே விசேஷமென்று நினைக்கக்கூடாது. மூடனிடம் உன்னுடைய காரியத்தை ஒப்புவித்தால் அவன் அதைக் குட்டிச்சுவராக்கிப் போடுவான். தவிரவும், முகஸ்துதி செய்பவனையும், பொய் நடிப்புக் காட்டுவோனையும், தலையிலே வைத்து, சாமர்த்தியமுள்ளவனையும், யோக்கியனையும் கீழே போடக் கூடாது. ஒரு நாளில் இத்தனை நாழிகைதான் வேலையுண்டு என்ற கட்டுப்பாடிருக்கவேண்டும். அதிக நேரம் வேலை வாங்குவதும், நினைத்த பொழுதெல்லாம் ஆள்விட்டு அழைப்பதும் குற்றம். இன்னும் சொல்லவா?”

3

ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவான்!

சாமி : இப்போது ஒரு ஸூத்ரம் மாதிரியாகச் சொல்லி விட்டுப் போகிறேன். திருவாரூருக்குப் போய் திரும்பி வந்தவுடனே அதை விளக்கிச் சொல்லுகிறேன். அதற்கு முந்தி உமக்கே பொருள் விளங்கினாலும் விளங்கிப் போகும் அந்த ஸூத்ரம் எப்படி என்றால்:- “ம யே ம ஏ” . இவ்வளவுதான். இது கிரந்தம். எழுதி வைத்துக்கொள்ளும்.”

நான் தங்களிடம் சொல்லிய ஸூத்திரத்துக்குத் தாத்பர்யம் என்னவென்றால்,
“மற்றவனை யேமாற்றியவனை
மற்றவன் ஏமாற்றுவான்” 

4

பக்தியுடன் விவேகம் சேர்ந்தால் வெற்றி! 

விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: “தெய்வபக்திக்கு நல்ல பயனுண்டு. ஆனால் அதனுடன் விவேகம் சேர்ந்திருக்க வேண்டும். விவேகமில்லாதவனுடைய தெய்வபக்திக்கு உறுதி கிடையாது. தெய்வத்தினிடம் ஒருவன் வரங்கேட்கப் போகையிலே முதலாவது விவேகம் கேட்கவேண்டும். விவேகமே இந்த உலகத்தில் எல்லாவிதமான செல்வங்களுக்கும் ஆரம்பம். விவேகமில்லாதவன் குருடன். விவேகத்துடன் சேர்ந்த தெய்வபக்தியே உண்மையானது. அவ்விதமான தெய்வ பக்தியினால் ஒருவன் எடுத்த காரியத்தில் ஜயமடையலாம். இதைக் குறித்து ஒரு கதை சொல்லுகிறேன்” என்றார்.

 5

தெய்வ பக்தி மேன்மையான பலன்களைத் தரும்!

இதுவரை சொன்ன பகுதி ‘பயனறிதல்’ எனப்படும். இனிமேலே சொல்லப் போகிற பகுதிக்கு ‘நம்பிக்கை’ என்று பெயர். உங்களுடைய வினாவிற்கு விடை கதை மூலமாகச் சொல்லாமல் நேரே சொல்லி விடுகிறேன். மூடனுக்குச் சங்கடமுண்டாக்கி வேடிக்கை பார்ப்பவன் பாவி. அவனுக்கு இந்த ஜன்மத்தில் பலவிதமான தீங்குகள் விளையும். விவேகமில்லாதவன் கூட தெய்வபக்தி செய்வதனால் அவனுக்கு நன்மை ஏற்படாமல் போய்விடாது. ஆரம்பத்திலே பலவித இடையூறுகளுண்டாய், அவற்றிலிருந்து கடைசியாக விவேகம் உண்டாகும், பிறகு தெய்வபக்தி மேன்மையான பயன்களைத் தரும்” என்றார். 

6

பக்தியும் கர்மமும்

“பக்திமான் பிழைகளும் செய்வானோ?”

விவேக சாஸ்திரி: “மனதறிந்து செய்யமாட்டான். கர்ம வசத்தால் பிழைகள் ஏற்படலாம்.”

ஆஞ்சநேயன்: “கர்மம் பக்தியை மீறிச் செல்லுமோ?”

“விவேக: “பக்தி பரிபூரணமான பக்குவம் பெறும் வரையில், கர்மத் தொடர் மனிதனை விடாது. பழஞ்செய்கை பயன் விளைவிப்பதை அழிக்க வேண்டுமானால், பக்தியாகிய கனல் அறிவாகிய வேதிகையிலே புகையில்லாதபடி எரிய வேண்டும். 

இது போன்ற ஏராளமான அருமையான அறநெறி உபதேசப் பகுதிகளை இந்த நவதந்திரக் கதைகளிலிருந்து நாம் பெறுகிறோம். 

பாரதியார் இலக்கியத்தை மூன்று வகையாக அணுகலாம்.

கவிதை

கட்டுரை

கதைகள்.

இதில் கவிதை பற்றி ஏராளமான நூல்கள் வெளி வந்து விட்டன.

கட்டுரை மற்றும் கதைகள் பற்றி அவ்வளவாக நூல்கள் வெளியாகவில்லை.

இனி வரும் காலத்தில் இவை குறித்தும் அதிக நூல்கள் வெளிவரும் என்று நம்புவோம்!

***

Shakespeare’s Othello and Valmiki Ramayana: Rt Honourable Srinivasa Sastri’s Talk (Post No.13,651)

Desdemona was killed by Othello

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,651

Date uploaded in London – 10 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Hindus got two great epics Ramayana and Mahabharata because of jealously of two characters; both Duryodhana and Kaikeyi were embodiments of envy. They caused two wars which led to the destruction of Ravana gang and Kaurava gang.

****

Right Honourable Srinivasa Sastri delivered 30 discourses on Valmiki Ramayana at Sanskrit Academy in 1944. Here is what he says about jealousy and Othello comparing characters in Ramayana.

“ It is extraordinary how great poets have treated the subject of  jealousy nearly the same way as they analyse the progress of  this feeling and study it, as it advances from step to step corrupting  the soul and making it capable of black thoughts, black plots and black deeds. The progress of this jealousy in the human heart is the same, and great poets not only have shown  the same sentiments but they have sometimes used the same language. I just want you to see how another Dhiratidhira character in tragedy feels. What if he comes from the West and from English literature? All first-class literature is human literature and belongs to the whole of mankind.  In this great play of Othello where Shakespeare depicts the passion of jealousy in its worst form, how it degrades the great character Othello, for he was a big fellow, brave on the field of battle, unsuspicious generally speaking. This is from the soliloquy of Iago.

Iago has played on the heart of Othello, has put suspicion, confirmed it by various tricks, fanned the flame until it burns violently and threatens to consume everybody. Then speaking of jealousy, he says himself,

Kaikeyi with Dasaratha 

Trifles light as air

Are to the jealous  confirmations strong

As proofs of holy writ.

Othello III.iii.322-4

 When we deal with this great passion of jealousy as worked out by Valmiki in his great epic, it would be useful, it would be helpful, in fact, it would facilitate  a better understanding of our nature if we see how in another great man’s character similar things happened  then he goes on to say what is true of Rama himself. Othello at least had something, a handkerchief; he had heard something, seen something. Rama had nothing at all. Alltat he could say is ,

You are an angel and Ravana is a wicked person. When you were in his control, how is it possible for things to have been right? that was all he could say, a kind of negative attitude. In the case of Othello ,

326   Dangerous conceits are, in their natures, poisons.


327   Which at the first are scarce found to distaste,
328   But with a little act upon the blood


329   Burn like the mines of sulphur.

—Othello III iii. 326-9

Then Lodovico asks Othello at the last moment , when everything is over and Desdemona has been choked and all is found out and the trugh has come out.

What shall be said to thee? And listen to the answer. How true, how natural, how exactly a parallel to what Sri Rama says,

Othello :-

Why , and thing:

An honourable murderer, if you will?

For nought I did in haste, but all in honour

Othello V ii 293-5

Then at the end, at the very end Othello says taking leave as it were not only of Lodovico but of the others also, of the world, instructing the world as it were, as to the havoc wrought by jealousy

342   Speak of me as I am; nothing extenuate, 

343   Nor set down aught in malice: then must you speak
344   Of one that loved not wisely but too well;
345   Of one not easily jealous, but being wrought

346   Perplex’d in the extreme; of one whose hand,

347   Like the base Indian, threw a pearl away

348   Richer than all his tribe; of one whose subdu’d eyes,

349   Albeit unused to the melting mood,
350   Drop tears as fast as the Arabian trees
351   Their medicinable gum

—Othello V ii. 342-351

Othello, the great warrior, a stern man, who has seen men falling round him and yet not moved an inch, that man says,

“I have never cried in my life. I do not know what tears are”.

“of one whose subdued eyes

Albeit unused to the melting mood,

Drop tears as fast as Arabian trees

Their medicinal gum”

Now I must take your leave- I hope it is not too late – to show you the reverse side of the human character. We have jus now seen, ladies and gentlemen, how jealousy corrupts our nature, makes us see things that are not there, shuts our eyes to clear evidence, makes beast of us – yes, that is what it does.

Then Sastri compared Lord Tennyson’s King Arthur of the Round Table………………………

****

My comments

Before the quoted paragraphs given above,  Sastri said Rama also , under the influence of jealousy, abandoned Sita. Not many people would agree with Mr Sastri I don’t Think Valmiki ever said Rama sent Sita to the forest because of jealousy. He heard what the dhobiwala et al thought about Sita’s stay in Asokavana. He wanted to prove to the world that she was pure  and acted as a king. Even in Tamil Puranas we see Manu Neethi Choza crushing his own sun under the chariot, because a cow complained that king’s son crushed her calf by rash driving. The moral behind the story is a king should apply the laws of the land to all equally. Even Rama’s killing of Vali from behind a tree is justified Vali himself. If Valmiki wanted to hide it, he could have easily cut that part. So, my point is, in Valmiki’s Ramayana, Rama never acted under jealousy towards Sita. But Kaikeyi did something out of envy.

xxxxxx

Queen Kaikeyi’s mind was poisoned by her wicked hunchbacked maid, Manthara;  a seed of suspicion planted in the queen’s mind led to Ram’s exile from Ayodhya and wreaked havoc in the royal family. In Othello, Iago acted like Manthara.

The manipulation game in Othello, one of William Shakespeare’s four great tragedies, is like that in Kaikeyi’s story from the Ramayana. The contexts are very different, though. In the play, Iago plants a seed of suspicion in Othello’s mind about the fidelity of his wife, Desdemona. So masterful is Iago’s psychological manipulation and his exploitation of sexual jealousy that Othello is driven to strangling his wife.

–subham—

Tags – Jealousy, Envy, Othello, Shakespeare, Valmiki Ramayana, Rt Honourable Srinivasa Sastri, Talk, Iago, Wicked Manthara, Kaikeyi, Desdemona

கார்ல் கிரவுல்- தமிழனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்! (Post No.13,650)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,650

Date uploaded in London – 10 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

கார்ல் கிரவுல்- தமிழனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்! (Post No.13,650)

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் கார்ல் கிரவுல் 1814-1864. ஐம்பது ஆண்டுகளே வாழ்ந்த இந்த ஜெர்மானியர் தமிழுக்கு பெரிய சேவை செய்தார். இந்து மத நூல்களை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தொல்காப்பியரும் நன்னூல் பவணந்தி முனிவரும் சொல்லாத இலக்கணத்தை நமக்கு சொல்லிக்கொடுத்தார்  திருக்குறளை ஜெர்மானிய மொழியில் ஆக்கினார்.

தமிழனுக்கு தமிழ் தெரியாது !

கல் – கற்றான் ; வில்- விற்றான் ; சொல் …………….. சொற்றான் ?????? தப்பு தப்பு !

தா – தந்தான் , வா- வந்தான் ; போ …………………… போந்தான் ???????????? தப்பு தப்பு !

சா — சாத்தான் ………………………..???????????? தப்பு தப்பு !

ஆடு- ஆடினான் ; பாடு -பாடினான் ; கொடு — கொடினான் ???????????? தப்பு தப்பு !

*****

அப்பா , ஏம்பா இப்படிச் சொல்றோம் ? என்று பையன் அப்பாவிடம் கேட்டால் ,

போடா நாயே ! வீட்டுப்பாடத்தை எழுதினாயா ? வாத்தியார் சொல்லும்போது நல்லா கவனி என்று விரட்டி விடுவார் .

தமிழ் வாத்தியாரிடம் போய்க்கேட்டால் அவருக்கும் தெரியாது  கல்தோன்றி , மண் தோன்றாக் காலத்தே வாளுடன் முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி ; நாம்தான் உலகம் முழுதும் இருந்தோம் ; உனக்கு போகப் போக தமிழ் புரியும் ; போ –என்று சொல்லி தமிழ் வாந்தி எடுப்பார் ; உண்மையில் அவருக்கும் பதில் தெரியாது! பாவம் அவர் படித்த தொல்காப்பியத்திலோ நன்னூலிலோ இது இல்லை ;

அங்குதான் வருகிறார் உதவிக்கு — நமது கதா நாயகர் — லுத்தரன்  பிரிவு கிறிஸ்தவ பிரசாரகர் கார்ல் கிரவுல் .

தமிழ் வினைச் சொற்களை (VERBS) ஆராய்ந்து வகைப் படுத்தினார் ; குறிப்பாக கடந்த காலத்தைச் (PAST TENSE) சொல்லும்போது வினைச் சொற்கள் ஏழு விதமாக நடந்து கொள்கின்றன; அந்த ஏழு வகைகளிலும் அடங்காத– அடங்காபிடாரிகள்– உண்டு; அந்த முறை தவறிய வினைச் சொற்களை ஒழுங்கற்ற — அதாவது விதிகளைப் பின்பற்றாத – IRREGULAR VERBS இர்ரெகுலர் வெர்ப்ஸ் — என்போம்.

நிகழ்கால PRESENT TENSE தமிழ் வினைச் சொற்கள் மிக எளிது ; வரு:+ கிறான் அல்லது கின்றான்

இரண்டே வகைகள் !

எதிர்கால  அல்லது வருங்கால FUTURE TENSE வினைச் சொற்கள் மிக எளியவை :

இரண்டே வகைகள் ! அவன் வருவான் ; அவன் பார்ப்பான் .

வ் + ஆன் அல்லது ப் +ஆன்

ஆனால் கடந்த காலம் PAST TENSE பற்றிச் சொல்வதானால் பல வகை (CLASSIFICATION OF TAMIL VERBS)

(எனது யூ ட்யூப் தமிழ் பாடங்களிலும் , இதே பிளாக்கில் வெளியான தமிழ் பாடங்களிலும் முழு விளக்கங்கள் உள ; அது மட்டுமல்ல 20 ஆண்டுகளுக்கு வினைச் சொற்களை பட்டியலிட்டு சார்ட்/ அட்டவணை போட்டு மாணவர்களுக்கு விநியோகித்தேன் ; 750 தமிழ் வினைச் சொற்களை ஆராய்ந்து மூன்றாவது வகை THIRD CLASS TAMIL VERBS  வினைச் சொற்கள்தான் தமிழில் அதிகம் என்றும் கண்டுபிடித்தேன் ( இந்த வகையில் ஆடு, பாடு , தேடு, விளையாடு ஆகியன வரும். இதையெல்லாம் வேறு எங்கும் யாரும் அப்போது—1992 களில்— செய்யவில்லை.

கிரவுல் செய்த பணிகள்

வெளிநாடுகளில் நான்கு ஆண்டுகள் சுற்றிய பின்னர் எகிப்து பாலஸ்தீனம் வழியாக கிழக்கிந்தியா தேச பயணம் என்று ஐந்து தொகுதி புஸ்தகத்தை ஜெர்மன் மொழியில் எழுதினார். 1854-1856ல் வெளியான இந்த 5 தொகுதிகளில் நிறைய பூகோள, மானுடவியல், சமூகவியல், வரலாற்று, கிறிஸ்தவ மதச் செய்திகள் உள்ளன.

முதல் வால்யம் – பாலஸ்தீனம், இரண்டாவது- எகிப்து, சினாய், மூன்றாவது இந்தியாவின் மேற்குப்பகுதி, நாலாவது-தென் கிழக்கு இந்தியா, ஐந்தாவது- இலங்கை பற்றியவை

இதே காலத்தில் பிப்லோதீகா டமுலிகா /தமிழிகா / என்ற நான்கு தொகுதி புஸ்தகத்தையும் எழுதி முடித்தார்.

முதல் தொகுதியில் கைவல்ய நவநீதம், பஞ்சதஸ ப்ரகரணம் , ஆத்ம போத பிரகாசிகா ஆகிய மூன்று நூல்களை  ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து, இந்து சமய வேதாந்தத்தை விளக்கினார்.

இடண்டாவது தொகுதியில் கைவல்ய நவநீதத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் தந்தார். அத்தோடு இணைப்பில் வேதாந்த சொற்களுக்கு விளக்கம் தந்தார். 100 சம்ஸ்க்ருத வேதாந்த சொற்களுக்கு பொருள் கொடுத்தார்.

மூன்றாவது, நான்காவது வால்யம்களில் திருக்குறளை மொழிபெயர்த்து வழங்கினார். திருக்குறளை தமிழ் மொழியின் ரத்தினம் என்று புகழ்மாலை சூட்டினார். அகப்பொருள் விளக்கம் மற்றும் அருள் நந்தி (அருணந்தி)  சிவாசுசார்யாரின் சிவஞான சித்தியார் நூலின் பகுதிகளும் இவரது மொழிபெயர்ப்பில் அடக்கம்.

*****

லைப்சிக் நகரில் தமிழ் நூலகம்

ஜெர்மனியில் லைப்சிக் நகரில் தமிழ் நூலகம் ஒன்றை அமைத்ததும் இவரது பாராட்டத்தக்க செயல் ஆகும். இரண்டு எழுத்தர்களை வேலைக்கு அமர்த்தி எல்லாவற்றையும் நகல் எடுத்து எழுத வைத்தார்.150 நூல்களை எடுத்து கேட்டலாக் தயாரித்தார். அந்த நகரில் இதற்காக ஒரு தமிழ் அச்சகத்தை நிறுவினார்.. பிரபல பத்திரிகைகளில் இந்து மத கடவுளர், ஜாதிகள், இந்தியப் பழமொழிகள், கிழக்கிந்தியாவில் உள்ள (THUGS) கொள்ளைக்காரர்கள் ஆகியன பற்றி கட்டுரைகள் எழுதினார்.

1855ஆம் ஆண்டில் தமிழ் இலக்கணம் என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார் இதில் மொழியின் நுணுக்கங்கள், வினைச் சொற்களின் வேறுபாடுகளை விளக்கினார். அவைகளை அட்டவணை போட்டுக்காட்டினார். இந்தியாவுக்கு கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வருவோருக்கு லைப்சிக் நகரில் தமிழ் மொழியைக் கற்பித்தார்.

அவர் செய்த பணிகளுக்காக எர்லங்கன் பல்கலைக்கழகம்  1854ம் ஆண்டில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.. அதே ஊருக்கு குடியேறி சொற்பொழிவுகள் ஆற்றினார். பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்து அதில் சமயத்துடன் பிற மத ஒப்பீடு, மொழியியல் ஆகியவற்றையும் சொல்லிக்கொடுக்க வைத்தார். அவர் சொன்னபடி துறை ஒன்று பல்கலைக்கழகத்தில் உருவானது. 10-11-1864 ம் ஆண்டில் இறக்கும் வரை அவர் சமயப் பணியையும் கல்விப் பணியையும் செய்துவந்தார்

தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த அளப்பற்ற பற்று வியப்புக்குரியது

(கால்டு வெல் , மாக்ஸ்முல்லர் போன்றோர்  இரண்டு மொழிகளையும் கற்காமல் ஒரே மொழி மட்டும் கற்றதால் , அவர்களது படைப்புகளில் நிறைய உளறல்களளைக் காணமுடிகிறது.)

கிரவுல் ஸம்ஸ்க்ருதத்தையும் தமிழையும் கற்றார். சமயம் தொடர்பான கல்வியைக் கற்று இத்தாலியில் தனிப்பட்ட முறையில்  பாடம் சொல்லிக்கொடுத்தார். அவர் பிறந்ததோ ஜெர்மனியில் .  பின்னர்  ஜெர்மனியில் டெஸ்சாவ் என்னுமிடத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறந்தது வொர்லிட்ஸ் 6-2-1814.

அவர் லைப்சிக் மிஷன் சொசைட்டியின் டைரக்டராகவும் இருந்தார். சர்ச்சுகள் சுய ஆதிக்கம் பெற்ற, சுதேசி அமைப்புகளாக இருக்கவேண்டும் என்பது அவரது குறிக்கோள்; ரோமன் கத்தோலிக்கர் போல ஒரே போப்பாண்டவர் ஆதிக்கத்தில் லுத்தரன் சர்ச்சுகள் இருக்கக்கூடாது என்பது அவரது அவா.

*****

பழைய கதை!

எனக்கு தமிழ் தெரியாது என்பது 1992–ம் ஆண்டில்தான் தெரிந்தது. அப்போது பிபிசி தமிழோசையில் ஆறு ஆண்டுக்கால  ஒலிபரப்புப் பணியை முடித்து உட்கார்ந்திருந்தேன். லண்டன் பல்கலைக்கழக த்தில் தமிழ் ஆசியராக இருந்த Dr STUART BLACKBURN டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னைப் போய்ப்பாருங்கள் ; செந்தமிழ் பேசும் ஒரு தமிழர் வேண்டும் என்றார் ; உங்கள் பெயரைச் சொல்லியிருக்கிறோம் என்று பிபிசியிலுருந்து போன் வந்தது . டாக்டர் பிளாக்பர்ன் நாட்டுப்புறவியலில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அமெரிக்கர். பாஸ்டன் நகரைச் சேர்த்தவர். நன்றாகத் தமிழ் பேசுபவர் மதுரைக்கு அருகிலிலுள்ள மேலூர் முதலிய இடங்களில் தங்கி கோடாங்கி அடிப்பது, கேரளத்தில் நடக்கும் தோல் பாவைக்கூத்து ராமாயணம் முதலியவற்றை ஆராய்ந்து நூல்கள் இயற்றியவர். நாட்டுப்புறக் கதைகளை மொழிபெயர்க்கையில் சில புரியாத இடங்கள் வந்தால் என்னைக் கேட்பார். நான் எனது விளக்கத்தைத் தருவேன் . கமலாம்பாள் சத்திர நாவலை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் சந்தேகம் வரும் இடங்களை அவர் என்னிடம் கேட்பார்; அதில் உதவி செய்ததை புஸ்தக முன்னுரையில் என் பெயரை எழுதி நன்றி தெரிவித்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக நானும் அவரும் சேர்ந்து லண்டனில் SOAS பல்கலைக்கழக வளாகத்தில் (MAY 13, 1996) திருவள்ளுவர் சிலையை நிறுவும் பணியைச் செய்தோம். அந்த போட்டோ SOAS பல்கலைக்கழக மாதப் பத்திரிக்கையில் வெளியானது . சுவாமிநாதன், இதோ உன் போட்டோ என்று அந்தப் பத்திரிகையை 1996-ம் ஆண்டில் கொடுத்தார். அந்த சிலையின் 25-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகையில் யாரிடமும் சிலைத்திறப்பு பற்றி ஒரு தகவலும் இல்லை. என்னிடம் இருந் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் தந்தேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொன்ன இந்திய ஹை கமிஷன் , லண்டன் பல்கலைக்கழகம், ஜெயலலிதா அரசு ஆகியவற்றிடமும் தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை!

அவர் வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு மாணவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க என்னையும் அழைத்தார். அந்தப் பகுதி நேர வேலை சிறிது சிறிதாக பெரிதாகி மாலைக் கல்லூரியிலும் தமிழ் சொல்லிக்கொடுத்தேன். 20 ஆண்டுக் காலத்துக்குப் பின்னர் 2014-ல் ஓய்வு எடுத்தேன். நாங்கள் பயன்படுத்திய தமிழ் பாடப் புஸ்தகம் அமெரிக்காவில் ஆறு பல்கலைக்கழகங்களில் பயன்படுத்திய TAMIL FOR BEGINNERS BY KAUSALYA HART கெளசல்யா ஹார்ட்டின் தமிழ் பார் பிகின்னர்ஸ் புஸ்தகம் ஆகும். வெளிநாட்டுக்காரர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க, தொல்காப்பியமும் நன்னூலும் உதவாது; கிரவுல் கண்டுபிடித்த வினைச்சொல் வகைகள் தேவை என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது ! தமிழன், தமிழ்க் குழந் தைகளுக்கு தமிழ் கற்பிப்பது எளிது; தமிழ் தெரியாத வெளிநாட்டுக்காரர்களுக்கு சொல்லிக்கொடுக்க கிரவுல் கண்டு பிடித்த பிரிவுகளை அறிய வேண்டும் ; அவருக்கு முன்னதாக சில  மிஷனரிகள் — கிறிஸ்தவ பிரசாரகர்கள் — முயன்ற போதும் கிரவுல் தான் வெற்றி பெற்றார்.

EXAMPLES

CLASS ONE VERBS

1 A SEY- SEYTHEN செய்- செய்தேன்

1 B KOL – KONDEN கொள் – கொண்டேன்

1C VEL – VENDREN வெல் – வென்றேன்

CLASS TWO

UTKAR – UTKARNTHEN

உட்கார் – உட்கார்ந்தேன்

CLASS THREE

VANGU – VANGINEN

VANGU – VANGINEN

வாங்கு- வாங்கினேன் தமிழிலுள்ள ஏழுவகை வினைச் சொற்களில் மூன்றாவது வகை வினைச் சொற்கள்தான் அதிகம் 

ஆடு, பாடு, விளையாடு போல பல சொற்கள் இதில் அடக்கம்.

AND IN THE NEUTER GENDER  WE HAVE THREE FORMS

VANGIYATHU, VANGITRU, VANGINA

அஃறிணையில்  வாங்கியது, வாங்கிற்று , வாங்கின என்றெல்லாம் வரும்

CLASS FOUR

SAAPPIDU – SAPPITTEN

சாப்பிடு – சாப்பிட்டேன்

PERU – PETREN

பெறு – பெற்றேன்

CLASS FIVE

5 A. UN – UNDEN உண் – உண்டேன்

5 B.THIN – THINDREN தின் – தின்றேன்

5 C.KEL – KETTEN கேள் – கேட்டேன்

5.D. VIL- VITREN வில் – விற்றேன்

CLASS 6

PAR- PARTHTHEN

பார்- பார்த்தேன்

CLASS 7

NADA – NADANTHEN

நடந்தேன்

APART FROM THESE SEVEN CLASSES RARE VERBS LIKE

SAA – SETHTHEN  ARE ALSO THERE IN

IF YOU CONJUGATE

SAA – SARTHTHEN

SAA – SAATHTHEN

SAA- SAANTHEN FOLLOWING ONE OF THE SEVEN CLASSES IT WOULD BE WRONG.

‘சா’ என்னும் வினைச் சொல்லை, இறந்த காலத்தில்  ‘செத்தேன்’ என்போம்.

முன்னர் சொன்ன எவ்வகையிலும் இது அடங்காது .

‘கா’ என்றால் காத்தேன் என்று சொல்லி விடலாம்

சா- சாதேன் ,சார்த்தேன், சாத்தேன் , சாந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது.

ஆக, மொத்தத்தில் எல்லா வினைச் சொற்களையும் பட்டியலிட்டால் இப்படி ஏழு முறையில் இறந்தகாலச் சொற்கள் வரும். தமிழைத் தாய் மொழியாகக்கொண்டோர் இயல்பாகவே பேசிப் பழகி விடுவதால் இப்படி பலவகைகளில் நாம் இறந்த காலச் சொல்லை உருவாக்குகிறோம் என்று அறியாமலேயே இயல்பாகப் பேசிவிடுகிறோம். வெளிநாட்டினர் தவறில்லாமல் பேச வேண்டுமானால் நாம் அவர்களுக்கு இதைக் கற்பித்தே ஆக வேண்டும்.

வாழ்க தமிழ்!  வளர்க தமிழ்!!

–சுபம்—

TAGS- கார்ல் கிரவுல், தமிழ் வினைச் சொற்கள், ஜெர்மானியர், தமிழ் இலக்கணம், லண்டன் பல்கலைக்கழகம், திருக்குறள் , ஜெர்மன்  மொழிபெயர்ப்பு, திருவள்ளுவர் சிலை, கைவல்ய நவநீதம், பஞ்சதஸ ப்ரகரணம் , ஆத்ம போத பிரகாசிகா

S Nagarajan Article Index for August 2024 (Post No.13,649)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.649

Date uploaded in London – 10 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

S Nagarajan Article Index August 2024

1-8-24 13497 ராமாயணத்தில் சாபங்கள் (59) சுக்ராசாரியர் தண்ட ராஜனைச் சபித்தது!                                                                                                                                      2-8-24 13500 ராமாயணத்தில் சாபங்கள் (60) சுக்ராசாரியர் தண்டக வனம் அழியுமாறு சபித்தது!                                                                                                              3-8-24 13504 ராமாயணத்தில் சாபங்கள் (61) துர்வாஸ முனிவர் சாபம் கொடுப்பதாக லக்ஷ்மணரிடம் கூறுவது!                                                               4-8-24 13508 இதயக் கோளாறுகளையும் கான்ஸர் அபாயத்தையும் தடுப்பது சைவ உணவே! – ஹெல்த்கேர் ஜூலை 2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                                                                                                      5-8-24 13512 S Nagarajan Article Index July 2024.                                                                     6-8-24 13515 உலகை ஒளிமயமாக ஒளிர வைத்த நிகோலா

டெஸ்லா! – 1 (மாலைமலர் 3-7-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)                                   7-8-24 13518  உலகை ஒளிமயமாக ஒளிர வைத்த நிகோலா

டெஸ்லா! – 2 (மாலைமலர் 3-7-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)                                    8-8-24 13522 உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற ஹெலன் கெல்லர்! – 1 ஜூலை 10, 2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                                                                                                                                           9-8-24 13526 உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற ஹெலன் கெல்லர்! – 2  ஜூலை10, 2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                                                              10-8-24 13530   அதிரடி மன்னன் ஜாக்கிசான்! – 1 17-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.                                 11-8-24 13533   அதிரடி மன்னன் ஜாக்கிசான்! – 2  17-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                                12-8-24 13536 இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். – 1  24-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.                                   13-8-24 13539 இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். – 2  24-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.                                                                                            14-8-24 13542 பலகோடி பேரின் பசியைப் போக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்! – 1.  (31-7-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)                                                                                                                              15-8-24 13546 லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘அன்னா கரீனா’ வெ.சந்தானம் மொழிபெயர்ப்பு                                      16-8-24 13549  பலகோடி பேரின் பசியைப் போக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்! – 2 (31-7-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை) 17-8-24 13551 ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்!                                   18-8-24 13554 கவலையூட்டும் செய்தியா? ‘ஜோக்’ படியுங்கள்!                                       19-8-24 13557 ராமாயணத்தில் வரங்கள் – 1.                                                                   20-8-24 13560 நீங்களும் நினைவாற்றல் ‘புலி’ ஆகலாம்!                                    21-8-24 13564 வளமான வாழ்க்கைக்கு நிர்வாக இயல் கதைகள் இரண்டு! 22-8-24 13568  வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! –1      

                             (7-8-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.)

23-8-24 13572 வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! –2     

                             (7-8-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.)

24-8-24 13576 ஆறு நூறு கோடியில் ஒருத்தியம்மா நீ!                                       25-8-24 13581 ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன் – 1   (14-8-24 மாலைமலர்இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.).                                                   26-8-24 13586 ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன் – 2   (14-8-24 மாலைமலர்இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.)                                                           27-8-24 13590   உங்கள் கூடவே நிரந்தரமாக இருக்கும் இரண்டு டாக்டர்கள்!                                                                                                                         28-8-24 13596 நீங்கள் முன்னேற ஏ.கே. 47 மிரட்டல் தான் வேண்டுமா?                                                                                                                                              29-8-24 13601  உங்கள் வீட்டு ஐன்ஸ்டீன்கள்!                                                          30-8-24 13607 உணர்வு’பூர்வமாக வாழுங்களேன்!                                           31-8-24 13611 இட்லி சாப்பிடுவது’ போல விழுங்குங்கள்! 

**

தமிழ்  சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்:  பொறாமை-2 (Post No.13,648)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,648

Date uploaded in London – 9 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

இந்தியாவின் இரு பெரும் இதிஹாசங்கள் பொறாமையால் உருவானவை ஆகும்.

திருதராஷ்டிரன் -துரியோதனன் பொறாமையால் உருவானது மஹாபாரதம்;

கைகேயியின் பொறாமையால் உருவானது ராமாயணம்

பொறாமை அல்லது அழுக்காறு அல்லது மாத்சர்யம் அல்லது தொல்காப்பியர் பாஷையில் நிம்பிரி பற்றி ஷேக்ஸ்பியர் மற்றும் தமிழ் சம்ஸ்க்ருதப் புலவர்கள் உரைப்பதை ஒப்பிட்டுப் பார்ப்போம் .

பொறாமை பற்றி ஒரு அதிசய விஷயம் தொல்காப்பியர் ‘நிம்பிரி’ என்னும் சொல்லை பயன்படுத்துகிறார். இது ஸம்ஸ்க்ருதத்திலும் இல்லை; தமிழிலும் வேறு எங்கும் இல்லை!

வள்ளுவன் ஒருவன்தான் பொறாமை பற்றி பத்துக் குறள்கள் பாடி முதலிடம் பிடித்தான் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கும் முன்னதாக, அதர்வண வேதப் புலவன் பாடிவிட்டான்.

அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191

தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்

1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று  எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்

2.பொறாமை மனம் படைத்தவனின் மனது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .

3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்- அதர்வண வேதம்

XXXX

அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் மேலும் இரண்டு சுவையான விஷயங்களைச் சொன்ன பிறகு அதர்வண  வேதத்துக்குள் நுழைவோம்.

வள்ளுவன் அதி மேதாவி; சம்ஸ்க்ருத மொழியைக் கரைத்துக்குடித்தவன். அதி தீவிர ஹிந்து. ஆகையால் இங்கே ‘பாவி’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் (செய்யவள்/லக்ஷ்மி அக்காள்) மூதேவியையும் குறிப்பிடுகிறான்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168

பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.

****

இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.

 பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

‘’அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.

****

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும் – குறள் எண் 167

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டிவிட்டு விலகி விடுவாள்.

****

ஷேக்ஸ்பியர் ஒதெல்லோ நாடகத்தில் இது பற்றி விரிவாகக் கதைக்கிறார்.

ஆங்கிலத்தில் பொறாமைக்கு ஒரு கலரும் ஒதுக்கியுள்ளார்கள். பச்சை என்பது அழுக்காறு envious or jealous என்பதைக் குறிக்கும்.

Green eyed jealousy

Merchant of Venice 3-2-110

****

O, beware, my lord, of jealousy; It is the green-ey’d monster, which doth mock The meat it feeds on.

William Shakespeare

‘Othello’ act 3, sc. 3, l. 165

****

I am a true laborer: I earn that I eat, get that I wear, owe no man hate, envy no man’s happiness, glad of other men’s good, content with my harm.

William Shakespeare

‘As You Like It’ (1599) act 3, sc. 2, l. [78]

நான் ஒரு உண் மை உழைப்பாளி; நான் சம்பாதிப்பதை வைத்து உண்ணுகிறேன் ; உடுக்கிறேன் யாரையும் கண்டு பொறாமைப்படுவதில்லை மற்றவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறேன் ; பரம திருப்தி — ஆஸ் யூ லைக் இட் நாடகம்

****

The venom clamours of a jealous woman poison more deadly than a mad dog’s tooth.

வெறிபிடித்த நாயின் விஷப் பல்லை விட பொறாமை பிடித்த பெண்ணின் விஷமானது ஆளைக் கொன்றுவிடும் – ஷேக்ஸ்பியர் கவிதை

William Shakespeare (1833). “The plays and poems of William Shakespeare”, p.294

****

How many fond fools serve mad jealousy?
The Comedy of Errors (2.1)

பொறாமை பைத்தியத்துக்கு எத்தனை முட்டாக்கள் சேவகம் செய்கிறார்கள்?

****

When envy breeds unkind division

There comes the ruin, thee begins confusion

Henry VI 4-1-193

கருணையற்ற பிளவுகளை பொறாமை  உண்டாக்குகையில்

அங்கே படு நாசமும் வரும்; குழப்பமும் கூத்தாடும் –

ஹென்றி Vi நாடகம்

****

Jealous souls will not be answered so:

They are not ever Jealous for the cause

But Jealous for they are Jealous. It is a monster

Begot upon itself, born on itself

‘Othello’  act 3, sc. 4, l59


பொறாமைப் பேர்வழிகளுக்கு விளக்கமே இல்லை;

அதற்கு காரணம் என்பதே தேவை இல்லை;

பொறாமை என்பது தானாகவே உதிக்கிறது;

பசப்புக்கு காரணம் கற்பிப்பர்; அந்த பூதம்

தாமாகவே தோன்றி தாமாகவே வளர்கிறது

அதாவது ஒதெல்லோவின் பொறாமைக்கு அதுவே தீனி போடும்.

(துரியோதணனை ஒப்பிட்டுப் பார்க்கலாம் )

இதே போல வால்மீகி ராமாயணத்தில் உள்ள பொறாமை பற்றி ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரி நீண்ட உரை ஆற்றி இருக்கிறார் .

****

Lust or desire for sensual pleasure – काम – Kama காமம்

Anger – क्रोध – Krodha கோபம்

Greed – लोभ – Lobha பேராசை

Attachment – मोह – Moha அதிகப்பற்று

Ego – मद – Mada அஹங்காரம்

Envy or Jealousy – मत्सर्य – Matsarya பொறாமை

இந்து மதத்தில் ஆறு தீய குணங்களின் பட்டியலில் பொறாமையும் ஒன்று ; இது மனிதனை மிருகம் ஆக்குவதோடு இறைவனை நாடாமல் தடுத்துவிடும்.

–subham—

My old article with two stories on Envy

எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும்

Tamil and Vedas

https://tamilandvedas.com › என…

·Translate this page

5 Sept 2015 — பொருள்:பொறாமை உடையார்க்கு அழிவினைத் தருவதற்கு வேறு எதிரியே தேவை இல்லை. அவன் கொண்டுள்ள பொறாமையே அந்த ஆளை அழித்துவிடும். தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘எனக்கு ஒரு கண் போனாலும் சரி, எதிரிக்கு இரண்டு கண்களும் போகட்டும்‘ என்று.

–subham—

Tags- தமிழ்  சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் , பொறாமை- 2, அவ்வியம், அழுக்காறு, ராமாயணம், மகா பாரதம், ‘எனக்கு ஒரு கண் போனாலும் , அதர்வண வேதம்

Mind and Moon; Shakespeare and Hindu Scriptures (Post No.13,647)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,647

Date uploaded in London – 9 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Not many people know the Vedic Moon Goddesses Sinivali, Kuhu and Anumathi. People know only Chandra, the moon, in Hindu astrology. Not much research has been done about the Vedic Moon Goddesses.

But moon’s connection to mind is confirmed by Hindu scriptures and Shakespeare.

Hindu scriptures say four important things about moon. Science has confirmed a few Hindu predictions.

1.Hindus said Moon came from Ocean when it was churned by the Devas and Asuras. Science agreed with Hindus. There are a few theories about the origin of moon such as Sister Theory, Daughter Theory and Lover theory. Daughter theory agrees with Hindu literature. We said that moon came from earth, i.e from the ocean on earth. The diameter of Pacific Ocean and moon are almost same; So, it looks like a big chunk was thrown out of earth billions of years ago due to big collision of heavenly bodies.

Abja is one of the 20 Sanskrit words for moon in the Amarakosa, oldest thesaurus in the world.

Abja: =One who came out of water
One of the 14 objects or people that came out of the ocean when Demons and Devas churned the ocean is Moon. One scientific explanation is that moon went out of the earth during a big collision on earth. The scientists proposed this theory because the diameter of moon and Pacific Ocean are approximately same. So we can fit moon into the earth jigsaw puzzle.

****

2.Second point made by the Hindus about the mind and the moon. Purushasuktam verse in the Rig Veda, the oldest book in the world, linked Moon with Mind and Sun with Eyes. There is a belief all over the world that moon causes madness in people’s mind. English word Lunatic came from Lunar/Moon.

Chnadrama manaso jatah chaksor Suryo ajayata

चन्द्रमा मनसो जाताश्चक्षो सूर्यो अजायत।– Rig Veda

Shakespeare also says it in

Emilia

But now, my lord.109

Othello

It is the very error of the moon,110

She comes more nearer earth than she was wont,111

And makes men mad.112

Emilia

Cassio, my lord, hath kill’d a young Venetian113

Call’d Roderigo.

Othello V -ii-110/2

Hindu astrology says moon is in charge of Mind.

Words such as Month/Maatha in Sanskrit/Mind are cognate words. Tamils also use the Sanskrit words Maatha, Manathu etc.

****

Hindus made two more predictions. Western astronomers may confirm it soon:

3.Mercury is the son of Moon: It is in Navagraha Stotra; a hymn on Nine heavenly bodies

4.Moon helps plants to grow.

It is in all Tamil and Sanskrit poems. Westerners think sun only helps the plants to make food and grow.

Hindus are superior to western astronomers, because Tamil and Sanskrit poets described the billions of galaxies and Black hole before the scientists knew about it.

So Hindu predictions will be confirmed by westerners soon

****

BBC Article –The mood-altering power of the Moon

The idea that the lunar cycle can influence people’s behaviour dates back thousands of years, but has been largely dismissed by modern medicine. But new research suggests there may be some truth to these ancient theories.

Here are a few points highlighted in the BBC article:

One recent study suggested that outdoor criminal activity may be higher when there is more moonlight

In theory, the light of a full Moon might disrupt people’s sleep, which could influence their mood

When people were exposed to magnetic field changes – equivalent to those we experience as we move around our local environment – they experienced decreases in brain alpha wave activity

Another possibility is that patients are responding to the Moon’s gravitational pull in the same way the oceans do: through tidal forces  —By Linda Geddes31st July 2019 

***** 

Following is from my old article on Moon

1.It has influence over the growth of plants. Science has yet to approve it.

2.Moon has influence over human mind. Purusha Sukta of the Tenth Mandala of the Rig Veda links sun to eyes and moon to mind. Science has accepted it fifty- fifty. The word ‘lunatic’ for mad behaviour came from Lunar for moon. Some statistics prove strange behaviour among mentally sick patients.

3.Hindu hymns say that the Mercury (Budha) is the son of Moon (Soma). It is again a cosmological event. That is Mercury was formed because of Moon or from the Moon. Mercury is one of the smallest planets.

4.Hindus have used the word SOMA for a mysterious, rejuvenating, unknown plant and the Moon. The word confused everyone in the Vedas. It is still a mystery where they used it for moon and for the plant. Soma plant purifies a person’s mind where as narcotic drugs and alcoholic drinks spoil a person’s mind. Since Westerners have been using only the spoiling, bad drinks and drugs they couldn’t see anything good in the Soma plant. I have already explained about the Tamil Inscription’s description of a Brahmin as Mano Suddha Somayajee (More information is in my earlier post). Probably this is the reason Hindus linked moon with plant’s growth.

5. Rig Veda clearly said moon’s light is borrowed from the sun. So they knew it was the reflection of sun light like a mirror.

6.Hindus believe that moon came of milky ocean when it was churned by the Devas (angels) and the Asuras (demons). I have already explained the link between the Pacific Ocean and the Moon.

7. Vedic Hindu Schools don’t hold Vedic classes on New Moon, Full moon and Ashtami (eighth day from full or new moon) days. So do the Buddhists. Moon’s effect on sea on those days is well known. Since our body has 70% water they believed that the moon has same effect on human body.

—Subham—

Tags – Moon, Mind, Shakespeare, Hindus, Rig Veda, Lunatic, BBC Article

நாஸ்தீகர்களுக்கு பயங்கர எச்சரிக்கை:  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை நிறைவு- Part 50 (Post No.13,646)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,646

Date uploaded in London – 9 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

GOD IS  NOW  HERE>

நாஸ்தீகர்களுக்கு திருமூலர் பயங்கர எச்சரிக்கை திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை நிறைவு- Part 50

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்கள் பூனையின் கையில் அகப்பட்ட கிளி போல கிழித்தெறி யப்படுவர்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் அசுரர்கள் அழிந்தார்கள். அது போல, கடவுளை சிறிதளவு எள்ளி  நகையாடினாலும் அழிவு நிச்சயம் .

கோவிலை அழித்தாலோ , பூஜைகளை நிறுத்தினாலோ நாட்டுக்கும் தலைவனுக்கும் அழிவுதான் மிஞ்சும்

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வார்அம ராபதி நாடி

எளியனென்று ஈசனை நீசர் இகழில்

கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.- திருமந்திரம்

Those who have Jnana attained,
Rid of all doubts in their thoughts
Seek Him in love intense
Shall reach the World of Celestials;
If the low-born think any the less of Him,
Dismal indeed is their fate–
Unto the parrot in cat’s claw.

*****

அப்பகை யாலே அசுரரும் தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர்

எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்

பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே. -திருமந்திரம்

They defied the Lord,
Devas and Asuras,
And they defied themselves one another
And destruction met;
However little, defy not Lord,
Not even for fun,
They snow-ball, one into ten.

*****

Dangers of Destruction to Temple

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்

வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை

முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்

வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. -திருமந்திரம்


As they move away,
A single stone from temple wall
That shall spell the Crowned King’s ruin;
Be he a sage, be he one learned in Vedas,
Sure the crisis; certain the ruin;
–So Ordained Lord.

******

Dangers of Skipping Performance of Puja

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்

போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்

கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்

சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.– திருமந்திரம்


Rains fail; epidemics spread;
The mighty king his prowess loses;
All this sure happens,
If worship in Lord’s temples falters,

–The Lord who spurned the very God of Death.

*****

 முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வளம்குன்றும்

கன்னம் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத் தானே.- திருமந்திரம்

 Dangers of Puja Ceasing
When in Siva’s temple worship ceases,
Harm befalls the ruler;
Scanty the rains;
Theft and robbery abound in land,
Thus did my Holy Nandi declare

****

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு

சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு”.– வள்ளலார் பாடல்

வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்: 

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்.

மனுவும் தான் எழுதிய சட்ட நூலில் நாத்திகத்தை தாக்குகிறார்.

லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா

யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்

மனு 12-33

பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்.

*****

HE WHO KNOWS NOT

He who knows not and knows not he knows not, he is a fool—shun him;
He who knows not and knows he knows not, he is simple—teach him;
He who knows and knows not he knows, he is asleep—wake him;
He who knows and knows he knows, he is wise—follow him!

(An ancient saying from the Middle East)

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்

அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்

அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே

அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. — திருமந்திரம்

இது அராபிய பழமொழியுடன் ஒப்பிடக்கூடிய நல்ல பாடல் . மேலும், பஞ்ச தந்திரக் கதைகளில் குரங்கிற்கு உபதேசம் செய்த குருவிக்கு என்ன நேர்ந்தது என்ற கதையையும் நினைவுபடுத்துகிறது.

அறியாமையில் உழல்பவர்களுக்கு அறிவுரை பகராதே; தூங்குகின்றவர்களை தட்டி எழுப்பு. உத்திஷ்டத ஜாக்ரத பிராப்யவரான் நிபோதத எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்  என்ற  கடோபநிஷத் வாக்கியத்தையும் நினைவுபடுத்தும். ஆண்டாளும் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! என்று அல்லவா சொல்லி தட்டி எழுப்பினாள்!

Tell Them, Who Know and Yet Know Not

No use telling

Those who are in ignorance steeped;

No use telling

Those who are in Jnana filled;

Tell only them

Who know and yet know not;

Then will they know

And Self-realize.

****

வினைச் சொற்களை திருமூலர் பயன்படுத்தும் முறை நமக்கு ஆழ்வார் பாடல்களை நினைவுபடுத்தும்

நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே
உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.

^^^^

ENGLISH VOWELS A E I O U

ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓ ம் என்று அறைந்திடும்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம்ஹ்ரீம்அம் க்ஷம் ஆம்ஆகுமே. 27

 Sivaya Nama are of the Life-Vowels Five and Seminal Sounds Five

One the Supreme Bliss,

One the Supreme Bliss,

Thus chant the mantra

You shall have Bliss,

Bliss has its source in Letters Five;

A-I-U-E and Aum the life vowels they are;

They become the Five Letter mantra

And joy that is within joy;

Bliss lies in the seed-letters Five;

Hum-Hrim-Ham-Ksam-Am, are they.

*****

கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்

கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்

வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்

கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே. 4

*****

 ஒருவனு மேஉல கேழும் படைத்தான்

ஒருவனு மேஉல கேழும் அளித்தான்

ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்

ஒருவனு மேஉல கோடுயிர் தானே.

The One alone created the worlds seven;

The One alone spanned the worlds seven;

The One alone survived the worlds seven;

The One alone pervaded body and life.

xxxxx

மேலும் விளக்க வேண்டிய, ஆராய்ச்சிக்குரிய திருமந்திரப் புதிர்கள்

பேராயிரம்- 1784

ஏழு கோடி மந்திரம் – 2193

மேல்கீழ் தாமரை – 2179

மந்திர தந்திர உபதேச ஞான 2335

மஹா வாக்கியம் 2287

பஞ்ச லோகம் நவமணி – 1880, 2975, 1880,1690

அஷ்டமாசித்திகள் 598, 620/69, 982, 2514,

2100, 2183– அடடா அண்ணாமலை

கடல் வாணிபம் 2874, 2882, 2888, 89,95, 2984

(கடல் வாழ்வு – 2984 (Marine Trade)

கடல் வாணிபம்- 2874, 2882, 2888, 89, 95 (Marine Trade))

கூத்தி வளர்த்த கோழிப்புள் 2833,

108 சமயம் – 2707 ஆதிசங்கரர் எதிரொலி

மேரு வலம் வரும் தேவர்- 1938

காலத்தை வெல்லும் கருத்து – 564

உரை செய்யா மந்திரம்- 2390

ஊசித்துளை இன்பம்- 805, 2424

அண்டம் பிண்டம் 133, 2761,

இருளற்ற சிந்தை – 2553

நாழிகையால் எமனை அளப்பர் – 854

இராப்பகல் இல்லா இடம் – 318, 558,

வேதப் பகல் ஒளி – 804

தினமலர் – 1807, 1110

திருமந்திரம் – 2676

சக்தி,– நியூட்டனின் விதிகள்  2318

அஷ்டமாசித்திகள், கடல் வாணிபம் பற்றி  பற்றி தனியாக எழுதுகிறேன். சில தலைப்புகளை ஆங்கிலத்தல் திருமூலர் பாடல்களுடன் சேர்த்து எழுதுகிறேன். Finito.

–சுபம்—

Tags- நாஸ்தீகர்களுக்கு, திருமூலர், எச்சரிக்கை, திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை ,நிறைவு, Part 50 நாத்திகம் பூனை, கிளி ,

உங்கள் குழந்தைகளை சாதனையாளர் ஆக்குவது எப்படி?(Post.13,645)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.645

Date uploaded in London – 9 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

உங்கள் குழந்தைகளை சாதனையாளர் ஆக்குவது எப்படி? 

ச. நாகராஜன் 

இளம் தாய்மார்களும் நடுத்தர வயது பெண்மணிகளும் தங்கள் குழந்தைகளையும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியரையும்,, ‘படம் வரையாதே, கதை கேட்காதே! டி.வி. பார்க்காதே, படி, படித்து முன்னேறு’ என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதால் குழந்தைகளை எரிச்சலடையச் செய்வதுடன் அவர்களே தங்கள் குழந்தைகளின் வளமான எதிர்காலத்தைத் தடுப்பதை அறியாமல் இருக்கிறார்கள்!

கற்பனை என்பது அற்புதமான ஒன்று! இளம் வயதிலேயே அவர்கள் போக்கில் மனச் சித்திரங்களை உருவாக்க விட்டுவிட்டால் அவர்கள் சிறந்த சாதனையாளர்களாக பிற்காலத்தில் உருவாவதோடு வகுப்பில் முதன்மை பெற்றவராகவும் வருவார்கள் என்பது கிரியேடிவிடி பற்றிய அறிவியல் ஆய்வுகளின் முடிவு!

பேப்பரையும், வண்ணத்தூரிகையையும், வண்ணங்களையும் தந்து குழந்தைகளை அவர்களின் படைப்புலகில் விட்டுவிட்டு அகன்று விட வேண்டும். நிஜத்தில் நாம் பார்க்கும் உருவங்களையும், விலங்குகளையும் போடுமாறு அவர்களை வற்புறுத்தக் கூடாது. தங்கள் கற்பனைக்கேற்ப உருவங்களையும், இயற்கைக் காட்சிகளையும் வரையும் அவர்கள் பிற்காலத்தில் பல்வேறு நிஜங்களைப் பார்க்கும் போது தங்கள் அனுபவத்தில் மெருகேற்றிக் கொள்வார்கள்.

‘கதை சொல்வது’ என்பது படைப்பாற்றலை மேம்படுத்தும் ஒரு அற்புத உத்தி! பல்வேறு நாடுகளுக்குச் சென்ற வீரர்களைப் பற்றிய வரலாறுகள்

எல்லா நாகரிகங்களிலும் உண்டு. அர்ஜுனனின் யாத்திரை, கலிவரின் யாத்திரை என கற்பனையைத் தூண்டிவிடும் வரலாறுகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. மகாபாரதமும் ராமாயணமும் சுட்டிக் காட்டாத கற்பனையே இருக்க முடியாது!

அதேபோல ‘தொல்லைக்காட்சி’ என்று செல்லமாகத் திட்டப்படும் தொலைக்காட்சியில் விலங்குகள் பற்றியும், பல்வேறு நாகரிகங்கள், கண்டுபிடிப்புகள் பற்றியும் காண்பிக்கப்படும் டிஸ்கவரி சானல் நிகழ்ச்சிகளை, சீரியலை ஒதுக்கிவிட்டு குழந்தைகளுக்குப் போட்டுக் காண்பிக்க வேண்டும். திரைப்படங்களிலும் சாகஸம், துணிச்சலைக் காட்டும் அற்புதப் படங்கள் ஏராளம் உள்ளன. அவற்றைப் பார்க்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்.

எந்த ஒரு தீமையிலும் ஒரு நன்மை இருக்கும். அதைக் கண்டு அதில் குழந்தைகளை ஈடுபடுத்தி விடலாம். தாழ்வு மனப்பான்மையை அகற்றி சாதனையாளர்களாகத் தங்கள் குழந்தைகளை உருவாக்குவது இளம் தாய்மார்களின் கையிலேயே உள்ளது.

கிரியேடிவிடி எனப்படும் படைப்பாற்றலையும், கல்வியையும் பற்றி ஆய்வு செய்துள்ள ஆய்வாளர்கள் சாண்ட்ரா டபிள்யூ ரஸ் மற்றும் ஜனஸ் சால்க் ஆகியோர் “குழந்தைகளின் கற்பனையும், அவர்களின் மனச் சித்திரங்களுமே அவர்களின் வருங்காலத்தை நிர்ணயிக்கின்றன” என்கிறார்கள்.

சினேகிதி மாத இதழில் 2005, ஜூன் மாதம் வெளியான கட்டுரை.

****