WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,646
Date uploaded in London – 9 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
GOD IS NOW HERE>
நாஸ்தீகர்களுக்கு திருமூலர் பயங்கர எச்சரிக்கை திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை நிறைவு- Part 50
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்கள் பூனையின் கையில் அகப்பட்ட கிளி போல கிழித்தெறி யப்படுவர்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் அசுரர்கள் அழிந்தார்கள். அது போல, கடவுளை சிறிதளவு எள்ளி நகையாடினாலும் அழிவு நிச்சயம் .
கோவிலை அழித்தாலோ , பூஜைகளை நிறுத்தினாலோ நாட்டுக்கும் தலைவனுக்கும் அழிவுதான் மிஞ்சும்
தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வார்அம ராபதி நாடி
எளியனென்று ஈசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.- திருமந்திரம்
Those who have Jnana attained,
Rid of all doubts in their thoughts
Seek Him in love intense
Shall reach the World of Celestials;
If the low-born think any the less of Him,
Dismal indeed is their fate–
Unto the parrot in cat’s claw.
*****
அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே. -திருமந்திரம்
They defied the Lord,
Devas and Asuras,
And they defied themselves one another
And destruction met;
However little, defy not Lord,
Not even for fun,
They snow-ball, one into ten.
*****
Dangers of Destruction to Temple
கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. -திருமந்திரம்
As they move away,
A single stone from temple wall
That shall spell the Crowned King’s ruin;
Be he a sage, be he one learned in Vedas,
Sure the crisis; certain the ruin;
–So Ordained Lord.
******
Dangers of Skipping Performance of Puja
ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.– திருமந்திரம்
Rains fail; epidemics spread;
The mighty king his prowess loses;
All this sure happens,
If worship in Lord’s temples falters,
–The Lord who spurned the very God of Death.
*****
முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வளம்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.- திருமந்திரம்
Dangers of Puja Ceasing
When in Siva’s temple worship ceases,
Harm befalls the ruler;
Scanty the rains;
Theft and robbery abound in land,
Thus did my Holy Nandi declare
****
“நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு”.– வள்ளலார் பாடல்
வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்:
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் (குறள் 850)
உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்.
மனுவும் தான் எழுதிய சட்ட நூலில் நாத்திகத்தை தாக்குகிறார்.
லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா
யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்
மனு 12-33
பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்.
*****
HE WHO KNOWS NOT
He who knows not and knows not he knows not, he is a fool—shun him;
He who knows not and knows he knows not, he is simple—teach him;
He who knows and knows not he knows, he is asleep—wake him;
He who knows and knows he knows, he is wise—follow him!
(An ancient saying from the Middle East)
அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. — திருமந்திரம்
இது அராபிய பழமொழியுடன் ஒப்பிடக்கூடிய நல்ல பாடல் . மேலும், பஞ்ச தந்திரக் கதைகளில் குரங்கிற்கு உபதேசம் செய்த குருவிக்கு என்ன நேர்ந்தது என்ற கதையையும் நினைவுபடுத்துகிறது.
அறியாமையில் உழல்பவர்களுக்கு அறிவுரை பகராதே; தூங்குகின்றவர்களை தட்டி எழுப்பு. உத்திஷ்டத ஜாக்ரத பிராப்யவரான் நிபோதத எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின் என்ற கடோபநிஷத் வாக்கியத்தையும் நினைவுபடுத்தும். ஆண்டாளும் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! என்று அல்லவா சொல்லி தட்டி எழுப்பினாள்!
Tell Them, Who Know and Yet Know Not
No use telling
Those who are in ignorance steeped;
No use telling
Those who are in Jnana filled;
Tell only them
Who know and yet know not;
Then will they know
And Self-realize.
****
வினைச் சொற்களை திருமூலர் பயன்படுத்தும் முறை நமக்கு ஆழ்வார் பாடல்களை நினைவுபடுத்தும்
நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே
உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.
^^^^
ENGLISH VOWELS A E I O U
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓ ம் என்று அறைந்திடும்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம்ஹ்ரீம்அம் க்ஷம் ஆம்ஆகுமே. 27
Sivaya Nama are of the Life-Vowels Five and Seminal Sounds Five
One the Supreme Bliss,
One the Supreme Bliss,
Thus chant the mantra
You shall have Bliss,
Bliss has its source in Letters Five;
A-I-U-E and Aum the life vowels they are;
They become the Five Letter mantra
And joy that is within joy;
Bliss lies in the seed-letters Five;
Hum-Hrim-Ham-Ksam-Am, are they.
*****
கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே. 4
*****
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே.
The One alone created the worlds seven;
The One alone spanned the worlds seven;
The One alone survived the worlds seven;
The One alone pervaded body and life.
xxxxx
மேலும் விளக்க வேண்டிய, ஆராய்ச்சிக்குரிய திருமந்திரப் புதிர்கள்
பேராயிரம்- 1784
ஏழு கோடி மந்திரம் – 2193
மேல்கீழ் தாமரை – 2179
மந்திர தந்திர உபதேச ஞான 2335
மஹா வாக்கியம் 2287
பஞ்ச லோகம் நவமணி – 1880, 2975, 1880,1690
அஷ்டமாசித்திகள் 598, 620/69, 982, 2514,
2100, 2183– அடடா அண்ணாமலை
கடல் வாணிபம் 2874, 2882, 2888, 89,95, 2984
(கடல் வாழ்வு – 2984 (Marine Trade)
கடல் வாணிபம்- 2874, 2882, 2888, 89, 95 (Marine Trade))
கூத்தி வளர்த்த கோழிப்புள் 2833,
108 சமயம் – 2707 ஆதிசங்கரர் எதிரொலி
மேரு வலம் வரும் தேவர்- 1938
காலத்தை வெல்லும் கருத்து – 564
உரை செய்யா மந்திரம்- 2390
ஊசித்துளை இன்பம்- 805, 2424
அண்டம் பிண்டம் 133, 2761,
இருளற்ற சிந்தை – 2553
நாழிகையால் எமனை அளப்பர் – 854
இராப்பகல் இல்லா இடம் – 318, 558,
வேதப் பகல் ஒளி – 804
தினமலர் – 1807, 1110
திருமந்திரம் – 2676
சக்தி,– நியூட்டனின் விதிகள் 2318
அஷ்டமாசித்திகள், கடல் வாணிபம் பற்றி பற்றி தனியாக எழுதுகிறேன். சில தலைப்புகளை ஆங்கிலத்தல் திருமூலர் பாடல்களுடன் சேர்த்து எழுதுகிறேன். Finito.
–சுபம்—
Tags- நாஸ்தீகர்களுக்கு, திருமூலர், எச்சரிக்கை, திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை ,நிறைவு, Part 50 நாத்திகம் பூனை, கிளி ,