மூளையின் கலர் என்ன?  செட்டியார் வடிவில் முருகன்!- Part 14 (Post.15,404)

Written by London Swaminathan

Post No. 15,404

Date uploaded in Sydney, Australia –  8 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 14

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 14

***

மூளையின் கலர் என்ன?  செட்டியார் வடிவில் முருகன்!

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடல் ஒடு …

சுற்றப்பட்டுள்ள நரம்புகளுடன் எலும்பு பொருந்திய மாமிசம், குடல்

இவற்றுடன்,

அப்புடன் நிணம் சளி வலிப்பு உடன் இரத்த குகை … நீர்,

கொழுப்பு, (மூக்குச்) சளி, இழுப்பு நோய்இருதயம்,

சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் … இந்திரியம்,

விளைகின்ற கிருமிகள், எலும்புகள், அழுக்குகள்,

மயிர் சங்கு மூளை துக்கம் விளைவித்த பிணை … ரோமம், சங்கு

போல் வெளுத்த மூளை, துக்கத்தை விளைவிக்கின்ற சேர்க்கை நோய்,

அல் கறை முனை பெருகு குட்டமொடு … மாதவிடாய் முதலிய

மாசு, அவயவ நுனிகளில் விருத்தியாகும் குஷ்ட நோய்,

விப்புருதி புற்று எழுதல் முட்டு வலி … சிலந்தி, புண் புரை

வைத்தல், முட்டு வலி,

துச்சி பிளவை பொருமல் பித்தம் ஒடு உறக்கம் மிக … புசிக்கின்ற

ராஜப் புண், வயிறு உப்பும் நோய், பித்தம், தூக்கம் மிகுந்து வர,

அங்கம் ஊடே எத்தனை நினைப்பையும் விளைப்பையும்

மயக்கம் உறல் … உடலில் எத்தனை எண்ணங்கள், செய்கைகள்,

மயக்கங்கள்,

எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடற் பெருமை … எத்தனை

வெறுப்பும், பொலிவும், வலிமைப் பெருமையும்,

எத்தனை க(கா)சத்தையும் மலத்தையும் அடைத்த குடில்

பஞ்ச பூதம் … எத்தனை க்ஷய நோய், மலத்தையும் அடைத்துள்ள ஐந்து பூதத்தாலாகிய உடலிலே,

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மன கவலை … எத்தனை

குலுக்கு, எத்தனை மினுக்கு, மனக் கவலை,

எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல் … எத்தனை

கபடம், நடவடிக்கை, உயிரின் சேர்க்கை,

எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில்

மங்குவேனோ … எத்தனை பிறவிகளையும், மரணங்களையும் எடுத்து

(நான்) இவ்வுலகில் வாட்டமுற்று அழிவேனோ?

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை … தத்தனத

னத்தனத னத்தன என்று பறைகள் ஒலிக்கவும்,

ஒத்த முரச(ம்) துடி இடக்கை முழவு பறைகள் சத்தம் அறைய …

ஒரு வகைப் பறை, உடுக்கை, இடக் கையால் கொட்டும் தோல் கருவிகள் பேரொலி செய்யவும்,

தொகுதி ஒத்த செனி ரத்த வெ(ள்)ள மண்டி ஓட … கூட்டமாய்

வருவதை ஒத்துத் தோன்றிய இரத்த வெள்ளம் நெருங்கி ஓடவும்,

சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப … ஆதிசேஷனாகிய

பாம்பு நெளியவும், அசுர்களின் பிணங்கள் (ரத்த வெள்ளத்தில்) மிதக்கவும்,

அமரர் கைத் தலம் விரித்து அர ஹர சிவ பிழைத்தோம் என …

தேவர்கள் கைகளைத் தூக்கி, அரஹர சிவ, பிழைத்தோம் என்று

முழங்கவும்,

சக்கிரி கிரிச் சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா …

சக்ரவாளகிரியின் சுவர்கள் அந்தக் கணத்திலேயே பிளவுபடவும், வெற்றி கொண்ட வேலனே,

சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதித்து உடன் அழித்து …

உனது திருவுள்ளத்தில், எத்தனை உலகங்களைப் படைத்து, உடனே

அழித்து,

கமலத்தனை மணிக் குடுமி பற்றி … தாமரையில் வீற்றிருக்கும்

பிரமனின் அழகிய குடுமியைப் பிடித்து

மலர்ச் சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள்

வேளே … (உனது) அழகிய திருக்கரம் வருந்த பல முறை அவனைக்

குட்டி நடனம் கொண்ட தலைவனே,

செட்டி வடிவை கொடு தினைப் புனம் அதில் சிறு குறப்

பெண் … செட்டி வேடம் பூண்டு, தினைப்புனத்தில் (வாழும்) சிறிய குறப் பெண்ணாகிய வள்ளியின்

அமளிக்குள் மகிழ் செட்டி … படுக்கையில் மகிழும் செட்டியே,

குரு வெற்பில் உறை சிற் பரமருக்கு … சுவாமி மலையில்

வீற்றிருக்கும் ஞானமயமான சிவ பெருமானுக்கு

ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே. … ஒப்பற்ற

குருமூர்த்தி என்று முக்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே.

முருகன் ஒரு வளையல் வியாபாரி!

chetti vadivaik kodu thinaippunam adhiR siRu kuRappeN: In the disguise of a bangle merchant, You went to the millet-field to woo the pretty little damsel of the KuRavAs, VaLLi,

amaLikkuL magizh chetti: and enjoyed her company in her bed, Oh Lord!

(TANSLATION BY SRI GOPALA SUNDARAM IN KAUMARAM.COM)

சங்கப் புலவர்  கலகம் தீர்த்த திருவிளையாடல் புராண நிகழ்ச்சியில் செட்டி வீட்டுப் பிள்ளை  ருத்திரசர்மனாக  முருகனே வந்தார் என்றும் அருணகிரி பாடியிருக்கிறார்

***

பறக்கும் மலைகள் = குட்டி கிரகங்கள்

GEOLOGY IN TIRUPPUGAZ

கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னால்பூமியை பெரிய விண்கற்களும் குட்டி கிரகங்களும் (METEORITES AND ASTEROIDS) தாக்கி பெரிய பள்ளங்களை உண்டாக்கின . ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால்டைனோஸரஸ் என்னும் இராட்சத மிருகங்கள்  அழி ந்ததற்கும் இதுவே காரணம்; இந்தியாவிலும் இப்படி ஒரு பெரிய குட்டி கிரகம் மோதி புனே நகருக்கு அருகில் லோனார் ஏரியை உருவாக்கியது. இன்றும் சுற்றுலாப்பயணிகள் மொய்க்கும் இடம்  இது. இதையே இந்திரன் செய்கையாகப் புராணங்கள் வருணிக்கின்றன அனுமன் இலங்ககைக்குச் சென்றபோது சந்தித்த கடல் அடி  மலைகள் SUB MARINE MOUNTAINS  பற்றிய (மைநாக மலை) கதைகளும் இவைதான்.

Lonar Lake, located in Maharashtra’s Buldhana district, is a unique, 50,000-year-old saline and alkaline crater lake formed by a meteorite impact in basalt rock. It is a renowned eco-tourism spot featuring ancient temples (like Gomukh), diverse wildlife, and a 1.8 km diameter, making it a significant National Geo-heritage Monument.

சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த … கற்பகச் சோலையில் உள்ள பூ இதழால் சக்ரவாள கிரி ஆகிய பெரிய மலைகளின் (சிறகுகளை)* வெட்டித்தள்ளிய

வஜ்ரபாணியர் தொழும் திருக் கை வடி வேலா … வஜ்ராயுதம் கொண்ட கைகளை உடைய இந்திரன் வணங்கும் திருக்கை வடிவேலனே,

சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே. … அச்சத்தை நிரம்பத் தரும் கிரெளஞ்ச மலையையும், கடலிடத்தையும், பகைத்து வந்த சூரனுடைய உடலையும் அழித்த பெருமாளே.

முன்பு ஒரு காலத்தில் மலைகள் எல்லாம் பறவைகள்போல் இறகுகள் உடையவவைகளாக இருந்தனவாம். எங்கும் பறந்து விழுந்துஉயிர்களுக்குத் தீங்கு செய்ததால்இந்திரன் கோபித்து அந்த மலைகளின் இறகுகளை அறுத்துத் தள்ளினான்.

***

முருகன் ஒரு புலவன்

அருமறை தமிழ்நூல் அடைவே … அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக

தெரிந்துரைக்கும் புலவோனே … கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா,

***

தாவரவியல்- ஆறு மரங்கள் Botany in Tiruppugaz

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும் … மூங்கில்,

கற்பக மரம், மகிழ மரம், மாமரம், அத்தி மரம், சந்தன மரம் இவையெல்லாம் சுற்றிலும் சூழ்ந்துள்ள, (சுவாமிமலை)

நானும் நீயும் ஒன்று ஆக வேண்டும் தத் தவம் அசி ;அஹம் பிரம்மம் அஸ்மி – அத்வைதம்

 நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து

     நாலாறு நாலு பற்று …… வகையான

நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி

     நாடோறு நானு ரைத்த …… நெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க

     நேராக வாழ்வ தற்கு …… னருள்கூர

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை

     நீகாணெ னாவ னைச்சொ …… லருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி

     சீராக வேயு ரைத்த …… குருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு

     தீராகு காகு றத்தி …… மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த

     காவார்சு வாமி வெற்பின் …… முருகோனே

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி

     காமாரி வாமி பெற்ற …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

நாவேறு பாம ணத்த … நாவினில் இருந்து வெளிப்படும் பாமலர்களின் நறுமணம் கமழும்

பாதாரமே நினைத்து … பாதத் தாமரைகளையே நினைத்து,

நாலாறு நாலு பற்று வகையான … (4..ஐ 6..ஆல் பெருக்கி வந்த

24..ம் 4..ம் சேர்ந்த) 28* சிவ சம்பந்தத்தை உடையதும்,

நாலாரும் ஆகமத்தின் … சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற

நான்கு பாதங்கள்** பொருந்தினவாயும் உள்ள சிவாகம

நூலாய ஞான முத்தி … நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி

நெறியே

நாடோறு நானு ரைத்த நெறியாக … நாள் தோறும் நான்

அனுஷ்டிக்கும் நெறியாகவும்,

நீவேறெ னாதிருக்க … நீ வேறு என்றில்லாமல்

நான்வேறெ னாதிருக்க … நான் வேறு என்றில்லாமல், ஜீவாத்மாவும்

பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையில்,(ADVAITA)

நேராக வாழ்வதற்குன் அருள்கூர … நேர்பட்டு வாழ்வதற்கு உன்

கிருபை பெருகி,

நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே … பெருமை பொருந்திய ஆறு

ஆதாரங்களையும் கடந்து ஹஸ்ராரத்தில்***

பராபரத்தை நீகாணென … பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய

பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று

ஆவனைச்சொல் அருள்வாயே … அந்த ஐக்கிய வசனத்தை

உபதேசித்து அருள்வாயாக.

சேவேறும் ஈசர் சுற்ற … நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார்

உன்னை வலம் வர,

மாஞான போத புத்தி … சிறந்த ஞான உபதேசத்தை

சீராகவே உரைத்த குருநாதா … செம்மையாகவே சொன்ன

குருநாதனே,

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு … பகைவர்களாம்

தேவர்களின் நாட்டைச் சுட்டழித்த அசுரர்கள் சாகும்படி வெட்டிய

தீரா குகா குறத்தி மணவாளா … தீரனே, குகனே, குறத்தி

வள்ளியின் மணவாளனே,

காவேரி நேர்வடக்கிலே வாவி பூம ணத்த … காவேரி ஆற்றின்

நேர் வடக்கில் தடாகங்களில் மலர்கள் மணக்கும்

கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே … சோலைகள் சூழ்ந்த

சுவாமிமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளே,

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி … கரு மேகத்து

நிற மேனியுடைய மகா காளி, என்றும் இளையாள், சக்தி,

காமாரி வாமி பெற்ற பெருமாளே. … காமனை எரித்தவரின்

இடதுபக்கம் உள்ள பார்வதி பெற்ற பெருமாளே.

***

* 28 சிவாகமங்கள் பின்வருமாறு:

காமிகம் யோசகம்,சிந்தியம்,காரணம்,அசிதம்,தீப்தம்,சூக்ஷ்மம்,சகச்சிரம், ,சுப்ரபேதம்,விஷயம்,நிச்வாசம்,ஸ்வயாம்புவம்,ஆக்னேயம்,வீரம்,ரெளரவம்,மகுடம்,விமலம்,சந்திரஞானம்,முகவிம்பம்,புரோற்கீதம்,லலிதம்,சித்தம்,சந்தானம்,சர்வோக்தம்,பாரமேஸ்வரம்,கிரணம்,வாதூளம்

***

நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்

வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டுபணிதல். இது ‘தாத மார்க்கம் – சாலோகம்‘.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது ‘புத்ர மார்க்கம் – சாமீபம்‘.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது ‘சக மார்க்கம் (தோழ நெறி) – சாரூபம்‘.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது ‘சன்மார்க்கம் – சாயுஜ்யம்‘.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.

***

ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்



மணிபூரகம்



அநாகதம்



விசுத்தி



ஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்



மேல்வயிறு



இருதயம்



கண்டம்



புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே

பூதம்

மண்


அக்கினி



நீர்



காற்று



ஆகாயம்



மனம்





வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்

அக்ஷரம்

ஓம்


ந(கரம்)



ம(கரம்)



சி(கரம்)



வ(கரம்)



ய(கரம்)





தலம்

திருவாரூர்


திருவானைக்கா



திரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்



திருக்காளத்தி



காசி
(வாரணாசி)

திருக்கயிலை



கடவுள்

விநாயகர்


பிரமன்



திருமால்



ருத்திரன்



மகேசுரன்



சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்

—subham—

Tags- அருணகிரிநாதர் சொ, அரிய செய்திகள் , Part 14

திருப்புகழ் , சொல் அழகும், பொருள் வளமும், செட்டியார் , வளையல் வியாபாரி , மூளை

Leave a comment

Leave a comment