ENGLISH CROSS WORD FOR 5 -12-18 (Post No.5740)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 5 December 2018


GMT Time uploaded in London – 17-28

Post No. 5740


Pictures shown here are taken from various sources including google, Wikipedia,Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FIND SIX WORDS IN THE SQUARE.

1.HUSBAND OF DAMAYANTI

4. ANOTHER NAME OF SUN

5.HINDU LAW GIVER

DOWN

2.TWIN DEVAS OFRIG VEDA

3.MEANING IN SANSKRIT

4.BEING, ALONG, WITH IN SANSKRIT

ANSWERS AREGIVEN AT THE END

  * N A L A
*   * S * R
S     A   V   I   T  
  A   * I * *
M A N U *

Answers

ACROSS

1.NALA, 4.SAVIT, 5.MANU

DOWN

2.ASVIN, 3.ART, 4.SAM

—SUBHAM–

தமிழ் குறுக்கு எழுத்து 5-12-2018 (Post No.5739)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 5 December 2018


GMT Time uploaded in London – 14-33

Post No. 5739


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள தமிழ் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; விடையும் கீழேஉளது.

குறுக்கே

3.ஏகாதஸி முதலிய விரத நாட்களில் உண்டு மகிழலாம்

5.யானைக்கும் பிடிக்கும்;பக்தர்களுக்கும் பிடிக்கும்;கார்ல் மார்க்ஸுக்கு மட்டும் அபினி.

6.துவாதஸிக்கு அகத்திக்கீரை வாங்கிப் போட்டால் நல்லதாம்

கீழே

1.முருகனின் வாஹனம்

2.இவர் —- — ஆக பணக்காரர்

4.யுவர்களுக்கும் யுவதிகளுக்கும் பிடித்தது

ANSWERS

குறுக்கே

3.பலகாரம், 5.மதம், 6.கோயில் பசு

கீழே

1.நீல மயில், 2.பரம்பரை, 4.காதல்

குறுக்கே

3.பலகாரம்– ஏகாதஸி முதலிய விரத நாட்களில் உண்டு மகிழலாம்

5.மதம்- யானைக்கும் பிடிக்கும்;பக்தர்களுக்கும் பிடிக்கும்;கார்ல் மார்க்ஸுக்குமட்டும் அபினி.

6.கோயில் பசு- துவாதஸிக்கு அகத்திக்கீரை வாங்கிப்போட்டால் நல்லதாம்

கீழே

1.நீல மயில்- முருகனின் வாஹனம்

2.பரம்பரை- இவர் —- ஆக பணக்காரர்

4.காதல்- யுவர்களுக்கும் யுவதிகளுக்கும் பிடித்தது

    நீ   ப    
ப   கா ம்
    ம்  
  கோ யி ல் ப   சு
    ல்   ரை  

TAGS– தமிழ் குறுக்கு எழுத்து, 5-12-2018

–subham–

‘நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’– வள்ளுவன் ,பர்த்ருஹரி பொன்மொழி (Post No.5738)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 5 December 2018


GMT Time uploaded in London – 11-14 am

Post No. 5738


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்களைத் தொடர்ந்து காண்போம்

நீதி சதகம் 37

அரசனுக்கு ஆபத்து கெடு மதி உடையவரின் ஆலோசனை;

சந்யாசிக்கு ஆபத்து பந்தங்கள் (மடம், சொத்து, சுகம்);

புதல்வனுக்கு  ஆபத்து அதிக செல்லம்;

அறிவாளிக்கு ஆபத்து தொடர்ந்து படியாமை;

குடும்பத்துக்கு ஆபத்து கெட்ட மகன்/ மகள்;

நற்பெயர்க்கும் மரியாதைக்கும்  ஆபத்து கெட்டவர் சஹவாசம்;

புத்திக்கு ஆபத்து கள் குடித்தல்;

விவசாயத்துக்கு ஆபத்து நிலத்தைக் கவனியாமை/ பராமரிக்காது இருத்தல்;

அன்புக்கு ஆபத்து உறவினரை விட்டு வெளிநாடு செல்லல்;

வளத்துக்கு ஆபத்து விவேகமின்மை;

செல்வத்துக்கு ஆபத்து மெத்தனம்.– நீதி சதகம் 37

ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தேன்; ஒருவேளை, வள்ளுவனை பர்த்ருஹரி மிஞ்சிவிடுவானோ என்று. உண்மைதான் வள்ளுவன் ஈரடியில் ஏழுக்கும் மேலான சொற்களில் சொல்லுவதை பர்த்ருஹரி மிகச்சொற்பமான சொற்களில் சொல்கிறான்.

Bhartruhari Nitisataka 37

दौर्मन्त्र्यान्नृपतिर्विनश्यति यतिः सङ्गात्सुतो लालनात्
विप्रो‌உनध्ययनात्कुलं कुतनयाच्छीलं खलोपासनात् ।
ह्रीर्मद्यादनवेक्षणादपि कृषिः स्नेहः प्रवासाश्रयान्
मैत्री चाप्रणयात्समृद्धिरनयात्त्यागप्रमादाद्धनम् ॥ 1.42 ॥

த்ரௌர் மந்த்ர்யான் ந்ருபதிர் விநஸ்யதி யதிஹி சங்காத் ஸுதோ லாலனாத்

விப்ரோ அனத்யயனாத் குலம் குதநயாத்சீலம் கலோபாசனாத்

ஹ்ரீர்மத்யாதனவேக்ஷணாதபி க்ருஷிஹி ஸ்நேஹக  ப்ரவாஸாஸ்ரயான்

மைத்ரீ சா ப்ரணயாத் ஸம்ருத்ததிரனயா த்யாகப்ரமாதாத்தனம்

சில எடுத்துக் காட்டுகளைக்  காண்போம்;

ஒரு ஆட்சியாளரிடம் கெட்ட ஆலோசனை வழங்கும் ஒரு அதிகாரியோ, மந்திரியோஇருந்தால் போதும்; அவ்வளவுதான் அந்த    அரசனோஆட்சியாளனோ அஸ்தமித்து விடுவான்.

வள்ளுவன் சொல்லுவான்,

நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்பதாகும் அறிவு – 451

நல்ல மழை நீர் எந்த நிலத்தில் விழுகிறதோ, அதன் குணத்தை அடையும்; அது போல நல்லவர்கள் யாருடன் சேருகிறார்களோ அந்த குணத்தையே அடைவர் என்பான் வள்ளுவன்

இன்னொரு குறளில் இதை அடிக்கோடிட்டுக் காட்டுவான்

நல்லினத்தினூங்குந் துணையில்லை  தீயினத்தின்

அல்லற்  படுப்பதூஉம் இல்- 460

நல்லவர்கள் துணக்கு இணையான துணை வேறில்லை

தீயவர்கள் தொடர்பு போல துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை

ஆக வள்ளுவனும் பர்த்ருஹரியும் உரைப்பது ஒரே உண்மையையே!

வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்காதே!

கள் குடிப்பது பற்றி இந்துக்கள் அறைவது போல வேறு எவரும் பறைந்தது இல்லை. வள்ளுவனுக்குத் தெரியும்- தமிழர்கள் குடியால் அழிவர் என்று; ஆகையால் பத்துக் குறள்களில் பிட்டுப் பிட்டு வைக்கிறான். பர்த்ருஹரி ஒரே வரியில் சொன்னான்.

கள்ளுக் குடிப்பவன் ஒளியிழப்பர் (921)- அதாவது முகத்தில் தேஜஸ் போய்விடும்; மதிப்பும் மரியாதையும்  அழிந்து விடும்

‘உண்ணற்க, உணில் – சான்றோர் இல்லை’ –என்பான் (922) அடுத்த குறளில்

வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்காதேடா தமிழா என்று ஒரு குறளில் செப்புகிறார்

‘பொருள் கொடுத்து மெய்யறியாமைகொளல்’ (925)

‘கள்’ என்பது விஷத்தை குடிப்பதற்குச் சமம்-

‘நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’- 926; என்ன அழகான வாக்கியம்; வள்ளுவனுக்கு இணை வள்ளுவனே! அவர்கள் நடைப்பிணங்கள் என்றும் அதே குறளில் சாடுகிறார்.

கள்ளுண்ணாமை என்னும் பத்து குறட்பாக்களையும் எல்லா இடங்களிலும்போர்டு எழுதி ஒட்ட/கட்ட வேண்டும்.

ஒருவனை வஞ்சிப்பது பந்தபாஸம்

அஞ்சுவதோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்பதோரும் அவா-366

துறவறவியலில் அவா அறுத்தல் என்ற அதிகாரத்தில் அழகாகச் சொல்கிறான். ஒருவனைக் கெடுப்பது ஆசைதான். ஆகையால் ஆசைக்கு அஞ்சி வாழ்வதே அறம்; எந்தவித பந்த பாசம் இருந்தாலும் அவன் சந்யாஸி இல்லை.

ஏனெனில் துறவு என்னும் அதிகாரத்தில்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின்  அதனின் இலன்- 341

ஒருவனுக்கு எந்தெந்தப் பொருளில் ‘அட்டாச்மெண்ட்’ attachment இல்லையோ அநதந்தப் பொருளால் அவனுக்குத் துன்பம் இல்லை.

எதில் நமக்கு விருப்பம்- இணைப்பு- பாசம்- பந்தம் உண்டோ அதனால் துன்பம்தான்.

ஒருவனுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் விவேகமோ, சுறு சுறுப்போ இல்லாவிடில் பணம் அழிந்து போகும்.

‘குந்தித் தின்றால் குன்றும் கரையும்’ என்பது தமிழ்ப் பழமொழி.

குன்று போல தானியமோ, பணமோ இருந்தாலும் உழைக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அது

கரைந்து விடும்.

கூரை மீது ஏறி கொள்ளி வைப்பவனே நல்ல பிள்ளை

மகன் பற்றி வள்ளுவன் சொன்னதை எல்லோரும் அறிவோம்,

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல் எனுஞ் சொல் – 70

இவன் தந்தை என்ன என்ன விரதம் இருந்து, எந்தெந்தக் கோவிலுக்குப் போய், சாமியை வேண்டி இந்தப் பிள்ளையைப் பெற்றானோ என்று உலகம் விஅயக்க வேண்டும்; அப்படிப்பட்ட குண நலன்களுடன் இருப்பவ்னே மகன்; இதுவே மகன் செய்யும் உதவி.

இதற்கு நேர் மாறாக இவன் தந்தை இவனை ‘ராகு காலத்தில் பெற்றானோ, அல்லது கெட்ட காலத்தில் பெற்றானோ’ என்று ஊரே தூற்றும்படி இருக்கக்கூடாது.

அடேய், உன் மகன்களில் எவனடா நல்ல பிள்ளை? என்று ஊரே பதறியபோது,கதறியபோது,

‘அதோ கூரை மீது ஏறி கொள்ளி வைக்கிராறானே, அவன்தான் இருப்பதற்குள் நல பிள்ளை’— என்ற கதை ஆகி விடும்.

கணவனோ, மகனோ நீண்ட காலம் பிரிந்து வெளிநாட்டிற்குப் பயணமானால் அந்த வீட்டுப் பெண்மணியோ, மகனோ மகளோ எளிதில் கெட்டுப்போக வாய்ப்பும் உண்டு. அன்பும் மறைவதுண்டு. இதையும் பர்த்ருஹரி செப்புகிறான்.

மொத்தம் 100 ஸ்லோகங்கள்; இன்னும் வரும்.

tags–வள்ளுவன் ,பர்த்ருஹரி, கூரை மீது ஏறி கொள்ளி ,வேண்டாத சனியனை விலை, ‘கள்’, நீதி சதகம் 37

தொடரும்……………………..

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு கேள்விகள்! – 5 (Post No.57)

Written by S Nagarajan

Date: 5 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 38 am


Post No. 5737

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 5

பாண்டிய மாதேவிக்கு மனமகிழ்ச்சி எல்லை கொள்ளவில்லை. மன்னர் தந்த ஓலை சோழமாதேவியிடமிருந்து வந்திருந்தது. அங்கு விஜயம் செய்திருக்கும் சேரமாதேவியுடன் சேர்ந்து வள்ளுவரைத் தரிசிப்பதற்காக மதுரை நோக்கி வர வேண்டும் என்ற தன் ஆசையைத் தமக்கைக்கு எழுதுவதாக அவள் எழுதியிருந்தாள்.

‘தங்கையே! உடனே அருமை சேரமாதேவியுடன் இணைந்து வருக! எல்லையில் வரவேற்கக் காத்திருப்பேன்’ என பதில் ஓலை அனுப்பினாள் பாண்டிய மஹாராணி.

செய்தி தெரிந்தவுடன் மக்களும் இரு பெருந்தேவியரை வரவேற்கக் காத்திருந்தனர்.

மக்கள் சோழ, சேர நாடுகளிலிருந்து யார் வந்தாலும் தங்கள் தங்கள் இல்லத்தில் தங்கலாம் என விரும்பிச் சொன்னதால் சோழ, சேர நாட்டு விருந்தினருக்கென அதிக ஏற்பாடுகளைச் செய்யும் அவசியம் பாண்டியனுக்கு ஏற்படவில்லை. மக்கள் தாங்களே வீதியெங்கும் தோரணமும் கொடியும் கட்டித் தங்கள் மகிழ்ச்சியையும் விருந்தோம்பும் பண்பையும் தெரிவித்தனர்.

அவரவருக்கு உரிய மரியாதையுடன் அற்புத அரண்மனைகளை அவர்களுக்கு ஒதுக்கி இருந்தார் மந்திரி.

தேவியர் வர, வரவேற்பு முடிய அவ்விருவரும் தங்கள் அரண்மனைக்குச் சென்று இளைப்பாறினர்.

சபை ஆரம்பிக்கும் போது அவர்கள் சரியான நேரத்திற்கு வரவே மக்கள் துள்ளிக் குதித்து நடனம் ஆடினர்.

வள்ளுவரை அனைவரும் முறைப்படி வணங்கியவுடன் சபை தொடங்கியது.

முதல் கேள்வியே விறுவிறுப்பாக இருந்ததால் மக்கள் அமைதி காத்து சபை நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தனர்.

ஒருவர் எழுந்தார்.

“ஐயனே! வணக்கம். விதியா, மதியா எது வெல்லும்? என் கருத்துப் படி விதி தான் வலியது” என்று கூறினார்.

வள்ளுவர் புன்முறுவல் பூத்தார்.

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்றுபவர்”

வள்ளுவர் கூறியதைக் கேட்டவுடன் மக்கள் ஆரவாரிக்க கேள்வி கேட்டவர் அமர்ந்தார்.

ஆனால் புலவர் குழு இரண்டாகப் பிரிந்தது. ஒரு குழு  மதியே என்று முழங்க இன்னொரு குழு விதியே என்றது.

வள்ளுவரின் குறளுக்கு பொருளை விரித்துச் சொல்ல மதி என்ற குழுவினருள் ஒருவர் எழுந்தார்.

“ஐயனே! மதி அல்லவா ஜெயிக்கும். சரியாகச் சொன்னீர்கள். விதியே முற்றிலுமாகக் கிடையாது என்பது எனது எண்ணமும் கூடத்தான்! சரிதானே!”

என்றார்.

வள்ளுவர் புன்முறுவல் மாறாது கூறினார்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான் முந்துறும்

கேட்டவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. மக்களும் திடுக்கிட்டனர். ஊழ் கட்சியின் புலவர் குழாம் ஆரவாரம் செய்தனர்; விதி பற்றி விளக்க ஆரம்பித்தனர்.

ஊக்கமுடைய ஒரு வீரன் எழுந்தான்.

ஐயனே! அப்படியானால் முயற்சிக்குப் பலனே இல்லையா?

வள்ளுவர் உடனே முழங்கினார்:

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

உடனே அவன்  மகிழ்ந்து கூவ, மதி கட்சியைச் சேர்ந்த புலவர் கூழாம் முயற்சி பற்றி விளக்க ஆரம்பித்தனர்.

பாண்டியன் எழுந்தான். வள்ளுவரை நோக்கிக் கரம் கூப்பினான்:

“ஐயனே! முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். ஆயின் மற்றொன்று சூழினும் ஊழ் தான் முன்னால் வரும். முன்னால் மட்டும் தான் வருமா? வெற்றியும் பெறுமா? தெளிவு படுத்த வேண்டும். ஊழா, முயற்சியா?”

பாண்டியன் கேள்வியை முடிக்குமுன்னரே வள்ளுவர் கூறினார்:

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.

பாண்டியன் இதன் பொருளுணர்ந்து மகிழ்ந்தான்.

மக்கள் புலவர்களைப் பார்க்க அவர்கள், “கைப்பொருள் வர வேண்டுமெனில் நல்ல ஊழ்வினை காரணமாக – ஆகூழால் – சோர்வில்லாத முயற்சி உண்டாகும். ஆயின் செல்வம் போவதற்குக் காரணமான போகூழ் இருப்பின் சோம்பல் ஏற்படும். முயற்சியே இருக்காது” என்று விளக்கினர்.

விதியே மதியாகும் அதிசயத்தைப் பற்றிப் புலவர் பெருமக்கள் விவாதித்து வள்ளுவரின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆழ்ந்த அர்த்தம் இருப்பதைச் சொல்ல ஆரம்பித்தனர்.

 நல்ல வினைகள் நல்ல ஊழைத் தரும். நல்ல விதி முயற்சியைத் தரும் என்று புலவர்கள் விரித்துரைக்க வள்ளுவரை நோக்கி, முயற்சிக்குப் பலனே இல்லையா என்று முதலில் கேட்டவர் எழுந்தார்.

“ஐயனே! என் எண்ணம் பலிக்குமா, பலிக்காதா?” என்று வலியுறுத்திக் கேட்கவே

வள்ளுவர் கூறினார்:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

பகீரதன் கதையை புலவர் ஒருவர் கூற முயற்சி வெற்றி தருவதை மக்கள் உணர, இன்னொரு புலவர் நளன் கதையைக் கூற அவன் ஊழின் வசத்தால் துன்பம் அனுபவித்ததை மக்கள் உணர்ந்தனர்.

“ஆக முயற்சி நிச்சயம் வேண்டும்; முயற்சி உள்ளவனுக்கு ஊழ் உறுதுணையாக இருக்கும். ஆகூழ் உள்ளவனுக்கு முயற்சி ஏற்படும். அதில்லாமல் போகூழ் உள்ளவனுக்கு சோம்பலே ஏற்பட்டு அவனை அழித்து விடும்.” – என இப்படி புலவர்கள் விவாதிக்க பாண்டியன் எழுந்து வள்ளுவரை நோக்கி, “முடிந்த முடிபாக தாங்கள் அருளுவது என்ன?” என்று வினயத்துடன் கேட்டான்.

வள்ளுவர் மென்மையாகக் கூறினார்:

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்”

“ஆஹா! அவரவரே தம்மை மதிப்பீடு செய்து கொள்ளலாம். கட்டளைக் கல்! ஆஹா! கர்மமே கட்டளைக் கல். அவரவர் வினைப் படி அவரவர் தம்மைத் தாமே உருவாக்கிக் கொள்கின்றனர்! ஊழையையும் முயற்சியையும் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிகிறது” என்று பாண்டியன் கூறவே அறிஞர்கள்,

“எந்த ஒருவனும் தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்ளலாம்” என்று முடிவு  கூறினர்.

முப்பெரும் தேவியரும் இந்த அறிவு சால் விவாதங்களைக் கேட்டுப் பிரமித்தனர்.

ஒருவர் எழுந்தார்.

“ஐயனே! இப்படி விளக்கிக் கூறும் தாங்கள் எதைச் செய்யக் கூடாது என்பதையும் சொல்லி அருளுங்கள்” என்று வேண்டினார்.

வள்ளுவர் கூறினார்:

“எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று”

மற்றவர் வருந்தும் காரியங்களை ஒரு போதும் செய்யாதீர்கள்; ஒரு வேளை தவறி ஒரு முறை செய்து விட்டால் அதை மீண்டும் செய்யவே வேண்டாம்.

அடடா! என்ன கருணையுடன் இப்படி ஒரு வாழ்வியல் ரகசியத்தை எளிதாகக் கூறுகிறார் என அனைவரும் மகிழ்ந்த போது வள்ளுவர் தொடர்ந்தார்:

“ஈன்றாள் பசி காண்பான் ஆயினுச் செய்யற்க 

சான்றோர் பழிக்கும் வினை”.

தாய் பசியினால் வாடித் துடித்தாலும் சான்றோர் செய்யக் கூடாது என்று சொல்லிய செயல்களை ஒரு போதும் செய்யாதீர்கள்!

அற நூல்கள் செய்யக் கூடாதவை என்று சொல்லி இருக்கும் செயல்களை ஒவ்வொரு புலவரும் விளக்க ஆரம்பித்தார்.

வள்ளுவர் இன்னும் கூறினார்:

“இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து”.

வறியவன் என்று தீயவனவற்றைச் செய்யாதே; செய்தால் இலனாகவே ஆகி விடுவாய் – புலவர்கள் அப்படித் தீயவை செய்பவன் எதை எதை இழப்பான் எனப் பட்டியலிட்டு முடிக்க வள்ளுவர் தொடர்ந்தார்:

“தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்”.

தனக்கு தீமையானவை வரக்கூடாது என்று எண்ணும் ஒருவன் பிறருக்குத் தீயன செய்யக் கூடாது. – வள்ளுவர் வலியுறுத்தலை அனைவரும் புரிந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்தார்:

“தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை”.

எந்த உயிரையும் கொல்லாதே – தானே சாக வேண்டிய சூழ்நிலையிலும் கூட – வள்ளுவர் கூறிய கொல்லாமை அறத்தை அனைவரும் புரிந்து கொண்ட போது அவர் மந்திரியையும் மன்னனையும் பார்த்துக் கூறினார்:

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை

மறைவாக ஒற்றன் தரும் செய்தியைக் கேட்டவுடன் அவனுக்கு அனைவருக்கும் தெரியும் படி பரிசைத் தர வேண்டாம்; செய்தால் அவன் கொண்டு வந்த இரகசியத்தைத் தானே வெளிப்படுத்தியதாகும்.

ஒற்றர்கள் புன்முறுவல் பூத்தனர். ஏன் அரசன் ஊரார் அறியத் தம்மைப் புகழ்ந்து அனைவருக்கும் எதிரே பரிசு தருவதில்லை என்பதை அவர்கள் இன்று காரணத்துடன் தெரிந்து கொண்டனர்.

செய்யற்க என்று வள்ளுவர் கூறிய அறவுரைகளை ஓலையில் எழுதிக் கொண்டனர் பலரும்.

மாலை நெருங்கியது. மக்கள் மனமகிழ்ச்சியுடன் வீடு செல்ல ஆயத்தமாயினர்.

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 620,380,619,371,494,505, 655,656,205,206,327,590

TAGS– நூறு கேள்விகள்! – 5

Swami’s English Cross word- 4 Dec.2018 (5736)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 4 December 2018


GMT Time uploaded in London – 19-38

Post No. 5736


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FIND SIX WORDS FROM THISSIMPLE CROSS WORD SQUARE.

ANSWERS ARE ALSO GIVEN AT THE END.

1.SANSKRIT WORD FOR LOTUS; VERY COMMON NAME FOR HINDU BOYS AND GIRLS

2.GREATEST COMPILER, COMMENTATOR, CONSIDERED AVATAR OF VISHNU

3.POETICAL WORK LIKE RAGHUVAMSA

4.GODDESS OF SPEECH, WORD

5.MOTHER GODDESS

6. SANSKRIT WORD FOR PROTECT; FROM WHICH ROOT DEMON’S NAME IS DERIVED.

ANSWERS

    K   V  
K   A V Y A
    M A A  
R   A K S A
    L   A  

–SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 4-12-2018 (Post No.5735)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 4 December 2018


GMT Time uploaded in London – 15-48

Post No. 5735


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இந்தக் கட்டத்தில் குறைந்தது ஆறு தமிழ்ச் சொற்கள் உள.

கண்டுபிடித்து இன்புறுங்கள்.

இதோ உதவிக் குறிப்புகள்

1.வானுலக மாக்கள் பாடும் இசை

3.விஷ்ணு அடிக்கடி எடுப்பது

2.வாழையடி வாழையாக

6.மனம், தொண்டு, தொண்டர்

4.தண்ணீர் குடித்தால் தீரும்

5.பாடினால், இதனுடன் பாட வேண்டும்

ANSWERS

    தே    
    தா        ம்
    ரா ம்  
  ம் டி
    ம்   ரை  

1.தேவராகம்–வானுலக மாக்கள் பாடும் இசை

3.அவதாரம்- விஷ்ணு அடிக்கடி எடுப்பது

2.பரம்பரை- வாழையடி வாழையாக

6.அகம்படி- மனம், தொண்டு, தொண்டர்

4.தாகம்- தண்ணீர் குடித்தால் தீரும்

5.ராகம்- பாடினால், இதனுடன் பாட வேண்டும்

1.தேவராகம்

3.அவதாரம்

2.பரம்பரை

6.அகம்படி

4.தாகம்

5.ராகம்

tags– குறுக்கெழுத்துப் போட்டி 4-12-2018 

–subham–

VISIT TO SISTER NIVEDITA’S HOME TOWN (Post No.5734)

Written by Santanam Srinivasan (brother of Londonswaminathan)


Date: 4 December 2018


GMT Time uploaded in London – 14-02

Post No. 5734


Pictures shown here are taken from various sources including google, Wikipedia,Facebook friends and newspapers. This is a non- commercial blog.

I went to Dungannon, the birth place of Sister Nivedita, disciple of Swami Vivekananda. The Mayor of the town Councillor Seam McPeake  gave us (myself, my wife )a warm welcome. As soon as he heard that we came all the way from India to see Sister Nivedita’s birth place, he called his assistants and asked them to take us to all the places of interest in the area. He himself explained in great detail the story of his town and Sri Ramakrishna Mutt’s interest in the development of Nivedita’s home. A swamiji from the Mutt came and opened this place Mayor gave his business cards and asked usto contact him for any help. He was very kind.

We travelled by car from Dublin (capital of Ireland) and entered Northern Ireland (Part of United Kingdom) without any border posts or border checks. It was a great surprise for us.

We went around the place, but to our disappointment that there is only one board referring to Sister Nivedita. There is a big pharmacy in the place. Any way we had the satisfaction of visiting a place of great social worker, patriot, educationist and Hindu Brahmacharini.

The place must be developed into a religious centre. It would be a fitting memorial to Sister Nivedita.

India has issued a postage stamp in commemoration of Sister Nivediata.

I give belowsome details about her life from Wikipedia page on Sister Nivedita:

Name at Birth –Margaret Elizabeth Noble

Place of Birth – Dungannon, County Tyrone, Northern Ireland (part of United Kingdom)

Date of Birth – 28 October 1867

Date of Death- 13 October 1911 (in Darjeeling ,India)

Age at Death -43

Fields of her work: -writer, educationist, orator, social worker, Founder of Schools, Hindu Brahmacharini

When did she become Nivedita?

on 25 March 1898, Swami Vivekananda initiated her into the vow of a Brahmacharya. he gave her the name Nivedita.

Nivedita was very close to SaradaDevi, wife of Sri Ramakrishna Paramahamsa.

What Nivedita said about Swami Vivekananda :-

Nivedita wrote in 1904 to a friend about her decision to follow Swami Vivekananda as a result of her meeting him in England in November 1895:

“Suppose he had not come to London that time! Life would have been a headless dream, for I always knew that I was waiting for something. I always said that a call would come. And it did. But if I had known more of life, I doubt whether, when the time came, I should certainly have recognized it.

Fortunately, I knew little and was spared that torture … Always I had this burning voice within, but nothing to utter. How often and often I sat down, pen in hand, to speak, and there was no speech! And now there is no end to it! As surely I am fitted to my world, so surely is my world in need of me, waiting – ready. The arrow has found its place in the bow. But if he had not come! If he had meditated, on the Himalayan peaks! … I, for one, had never been her”.

Two Miracles in her life:-

Miracle 1

Sister Nivedita saw Swami Vivekananda for the last time on 2 July 1902 at Belur Math.[38] Vivekananda was observing the Ekadashi fasting on that day. However, when his disciples took their meal, he himself served them joyfully. After the meal, Vivekananda poured water over Nivedita’s hands, and dried them with a towel. Nivedita recorded it in The Master As I Saw Him in the following words:

“It is I who should do these things for you, Swamiji! Not you, for me!” was the protest naturally offered. But his answer was startling in its solemnity — “Jesus washed the feet of His disciples!”

Something checked the answer “But that was the last time!” as it rose to the lips, and the words remained unuttered. This was well. For here also, the last time had come.[39]

SwamiVivekananda died at 9:10 p.m. on 4 July 1902. On that night, Niveditadreamed Sri Ramakrishna was leaving his body asecond time.[40] Onthe next morning, Swami Saradananda from Belur Math sent a monk with aletter to Sister Nivedita and conveying the message of Vivekananda’s death.

Miracle 2

In the afternoon of 5 July, Swami Vivekananda’s body was taken for cremation. Vivekananda’s body was wrapped in a saffron cloth. Nivedita wished to take a small portion of that cloth so that she could send it as a memento to Josephine MacLeod. Understanding the mind of Nivedita Swami Saradananda asked her to cut a small portion of the Swami’s cloth. But, Nivedita was unsure whether the act would be proper or not and decided not to take it. When Vivekananda’s body was being cremated she sat all the while looking at the burning pyre. Around six o’clock in the evening, the burning flame was about to go out. Suddenly Nivedita felt somebody had pulled her sleeve. She turned around and found a small piece of saffron cloth which had somehow come out of the pyre during cremation. Nivedita lifted and took the cloth considering it as a message from the Swami. In her letter to Josephine MacLeod on 14 September 1902, Nivedita wrote:

…But your real message came at the burning pyre itself… At 6 o’clock… as if I were twitched by the sleeve, I looked down, and there, safe out of all that burning and blackness, there blew to my feet the very two or three inches I had desired out of the border of the cloth. I took it as a Letter from Him to you, from beyond the grave.[41]

Books written by Nivedita

Her works included The Web of Indian Life, which sought to rectify many myths in the Western world about Indian culture and customs, Kali the MotherThe Master as I Saw Him on Swami Vivekananda, Notes of Some Wanderings with the Swami Vivekananda on her travels from Nainital, Almora and other places with Swamiji,[63] The Cradle Tales of Hinduism on the stories from PuranasRamayana and MahabharataStudies from an Eastern HomeCivil Ideal and Indian Nationality, Hints on National Education in IndiaGlimpses of Famine and Flood in East Bengal—1906.

A newly annotated edition of The Ancient Abbey of Ajanta, that was serialized in The Modern Review during 1910 and 1911, was published in 2009 by Lalmati, Kolkata, with annotations, additions, and photographs by Prasenjit Dasgupta and Soumen Paul. Another collection of essays relating to Buddhism has been published by New Age Publishers of Kolkata titled Studies in Buddhism, that has been compiled and annotated by Prasenjit Dasgupta and Soumen Paul.

–For more details please go to Wikipedia.

–subham–

நான் எடிஸன் இல்லையே- விஞ்ஞானி வாக்கு மூலம் (Post No.5733)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 4 December 2018


GMT Time uploaded in London – 10-24 AM

Post No. 5733


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பிரபல கண்டு பிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு எதிராக ஒரு பேடன் ட் (PATENT SUIT ABOUT SUB DIVIDING ELECTRIC CURRENT) வழக்கு வந்தது. அயர்லாந்தில் பிறந்து பிரிட்டனில் புகழ் பரப்பிய விஞ்ஞானி ஜான் டிண்டாலை (JOHN TYNDALL) சாட்சியாக அழைத்தனர்.

டிண்டால் சாட்சிக் கூண்டில் நின்றார்.

வாதம் தொடர்ந்தது.

ஐயா, டிண்டால் அவர்களே எடிஸனின் இந்த கண்டு பிடிப்பை நீங்களும் செய்து பார்த்தீரா?

ஆமாம். அது உண்மைதான்.

இதில் நீவீர் எந்த அளவுக்கு முன்னேறினீர்?

நானும் எடிஸனும் கண்டு பிடித்தது ஒன்றேதான். ஆனால்……,,,,, அந்த மின் சக்தியை ‘சப் டிவைட்’ செய்வதில் நான் கடைசி படியை மட்டும்- கடைசி உத்தியை மட்டும் – செய்யவில்லை.

ஐயா, இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்தீர்களே! ஏன் அந்த கடைசி   படியை (LAST STEP) நீவீர் செய்யவில்லை?

‘டக்’ கென்று பதில் சொன்னார் டிண்டால்,

“நான் எடிஸன் இல்லையே”.

இந்த வாக்குவாதம் பெரிய உண்மையைப் புலப்படுத்துகிறது. நம்மில் பலருக்கும் பல ஐடியா (IDEAS) க்கள் இருக்கின்றன. ஆனால் நாம் ஏன் புகழ் பெற முடியவில்லை? நாம் இறுதிவரை முயற்சி செய்வதில்லை. அல்லது செயலிலேயே இறங்குவதில்லை.    இன்றைய இன்டெர்நெட், ஐ பேட், மொபைல் போன், பேஸ்புக், ஈ மெயில் எல்லாம் யாரோ ஒருவர் சிந்த்தித்து, சிறிய அளவில் துவக்கினர். உலகமே இன்று அதில் மூழ்கி விட்டது. இன்னும் எத்தனை கண்டு பிடிப்புகள் வரப்போகிறதோ யார் அறிவார்?

50 அல்லது 75 ஆண்டுகளுக்கு முன்னர் யாராவது  உலகில் இவை வரப்போவதை அறிவித்தனரா? விஞ்ஞான புனைக் (Science Fiction) கதைகளில் எவ்வளவோ விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. அவை எல்லாம் கற்பனையே (Fiction) அன்றி கண்டுபிடிப்புகள் ஆகா. எவன் ஒருவன் செயல்முறையில் கொண்டுவருகிறானோ அவனே கண்டுபிடிப்பாளன் (Inventor).

நமக்கும் எவ்வளவோ கவிதை ஐடியாக்கள், கதை ஐடியாக்கள் பிறக்கின்றன.ஆனால் நாம் ஏன் பாரதியார் ஆக முடியவில்லை? நாம் ஏன் கல்கி ஆக முடியவில்லை?

முதலில் எழுத உட்கார வேண்டும். பின்னர்தான் எப்படித் துவங்குவது? எப்படிமுடிப்பது என்ற திணறல் வரும்? முதலில் எல்லோரும் ஏசுவர்; முயன்றால், பின்னர்  எல்லோரும் நம் புகழ் பேசுவர்.

முயற்சி திருவினை ஆக்கும்!

xxxx

கிராம போன் கண்டுபிடித்த கதை!

எடிஸன் கிராமபோன் கண்டுபிடித்த கதையை அவர் சொற்களிலேயே வடித்துத் தருகிறார்:

“நான் டெலிபோன் ஆராய்ச்சித் துறையில் வேலை செய்து வந்தேன். அப்போது கார்பன் பட்டன் ட் ரான்ஸ்மிட்டரை (Carbon Button Transmitter) உருவாக்குவதில் இறங்கியிருந்தேன். எனக்கோ காது சரியாக கேட்காது. எப்படியாவது சப்தம் கேட்கும் வழிமுறை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். நான் கண்டுபிடித்த ஒரு கருவியில் ஒரு ஊசியை வைத்து விரலால் அழுத்தினேன். எவ்வளவு அதிர்வுகள் வருகின்றன என்று காட்டியது

திடீரென ஒரு ஐடியா தோன்றியது. இந்த அதிர்வுகளையே ஒலியாக மாற்ற முடியுமா என்று. அதற்கு இடையில் ஒரு பொருளை வைக்க வேண்டும். அதைப் படமாகவும் வரைந்தேன். உடனே என்னிடம் வேலை பார்த்த தலைமை மெக்கானிக் ஜான் க்ரூஸேயை அழைத்தேன். இதோ பார். இப்படி ஒரு எனக்குக் கருவி தேவை. இந்தக் கருவியை செய்து தர எவ்வளவு

பணம் தேவை?.

முப்பது டாலர் கொடுங்கள்.

சரி உடனே வேலையைத் துவக்குங்கள்.

போகிறபோக்கில் எடிஸனைப் பார்த்து ஜான் கேட்டார்.

அது சரி, எதற்காக இந்தக் கருவி?

நான் பேசும் பேச்சை ஒலியாகக் கேட்பதற்குத்தான்.

எடிஸன் ஜோக் அடிக்கிறார் என்று நினைத்துக்கொண்டு ஆஹாஹா என்று சித்துக்கொண்டே போய்விட்டார் ஜான் க்ரூஸே.               .

பின்னர் அந்தக் கருவியையும் செய்து கொண்டு வநதார். அதை ஜான் க்ரூஸே முன்னிலையிலேயே சரியாக வேலை செய்கிறதா என்று சோதித்தார்

‘மேரி ஹாட் ஏ லிட்டில் லாம்ப் Mary had a Little Lamb’ என்ற நர்சரி பாடலைப் பாடிவிட்டு புதிய கருவியை இயக்கினார்.

அது உடனே அவர் சொன்னதை அப்படியே சொன்னது.

ஜான் க்ரூஸே அதைப் பார்த்துவிட்டு மயக்கமே போட்டுவிட்டார்.

என்னுடைய கண்டுபிடிப்புகளிலேயே முதலிலிருந்து கச்சிதமாக அமைந்த கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று. அதை வணிகரீதியில் உற்பத்தி செய்தபோது ஒரு மாற்றமும் தேவைப்படவில்லை- என்றார் எடிஸன்.

இது போனோ கிராப் (Phonograph) என்று அழக்கப்பட்டு கிராம போன் (Gramophone) என்ற உருவத்தில் உலகத்தினரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

இப்போதோ எடிஸனுக்கும் மேலான கில்லாடிகள் பல நூதன உபகரணங்களைக்கண்டுபிடித்து நம்மை வருடந்தோறும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

அலெக்ஸா ALEXA என்ற கருவி வீட்டில் இருந்தால் போதும்; நீங்கள் என்ன கட்டளை இடுகிறீர்களோ அதைச் செய்யும். உங்களுக்கு வேண்டிய பாடலைப் பாடச் சொல்லலாம். இன்றைக்கு மழை பெய்யுமா என்றால்

பெய்யுமா பெய்யாதா என்று சொல்லும். நேரம் கேட்டால் அதையும் செப்பும்.

‘உலகம் போகும் போக்கைப் பார்த்தால் டிங்கிரி டிங்காலே’ என்று பாடலாம், ஆடலாம்.

TAGS– போனோ கிராப், கிராம போன், டிண்டால், முயற்சி திருவினை ஆக்கும், எடிஸன்

-சுபம்–

கண்ணீர் சிந்த வைத்த கண்டுபிடிப்பு! (Post No.5732)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 4 December 2018


GMT Time uploaded in London – 6-56 AM

Post No. 5732


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ராபர்ட் புல்டன் (Robert Fulton) என்பவர் கன்டுபிடித்த நீராவிப் படகு உலக வரலாற்றையே மாற்றியது. பிரம்மாண்டமான போர்க் கப்பல்களும் பிரயாணிகள் கப்பல்களும் உலகக் கடல்களில் பவனி வர, அவரது சிறிய நீராவிப் படகுதான் உதவியது. அவர் பரம ஏழையாக இருந்தவர். அவரது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவரைச் சந்தித்தவர் எழுதுகிறார்.

நியூ யார்க் நகரிலிருந்து ஆல்பனி பகுதிக்கு ஏதோ ஒரு விநோதமான வாகனம் வந்து இருப்பதாக நகர் எங்கும் பரபரப்பு. அனைவரும் வேடிக்கை பார்க்க அணிதிரண்டு கடற்கரைக்கு வந்தனர். அதை ஓட்டி வந்த ஆள், அதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார். நானும் அவரது பெயரைக் கேட்டுக் கொண்டு அவரை சந்திக்க விரைந்தேன். அதோ அந்த படகு கேபின் (Cabin Room)  அறையில் இருக்கிறாரே அவர் தான் இதைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பெயர் புல்டன் என்றனர்.

நான் படகின் கேபின் அறைக்குச் சென்றேன். எளிமையே உருவான ஒருவர் தனிமையில் அமர்ந்துகொண்டு ஏதோ  எழுதிக்கொண்டு இருந்தார்.

ஐயா, தாங்கள்தான் திருவாளர் புல்டன் என்று நினைக்கிறேன்.

ஆமாம், நான் தான்; நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?

இல்லை, நீங்கள் இதே படகில் நியூயார்க் நகருக்குத் திரும்பிச் செல்லப் போகிறீர்களா………?

அப்படித்தான் திட்டம்.

நானும்  உங்கள் கூட பயணம் செய்து நியூயார்க் செல்ல விரும்புகிறேன்.

அதற்கென்ன? வாருன்களேன்.

எவ்வளவு கட்டணம்?

ஆறு டாலர் கொடுங்கள், ஐயா.

உடனே நான் அவருடைய கைகளில் ஆறு டாலர்களை எண்ணிப் போட்டேன்.

அப்படியே பேச்சு மூச்சு நின்று போய் திகைத்து நின்று விட்டார்.முகத்தில் ஒரே திகைப்பு.

ஐயா, ஏதேனும் தப்பாகக் கொடுத்து விட்டேனா? எண்ணிப் பாருங்களேன். கூட வேண்டுமானால்…..

புல்டனின் கண்களில் மள மளவென்று கண்ணீர்த் துளிகள் பெருகின .புல்டன் சொன்னார்:

ஐயா உங்கள் மீது ஏதும் பிசகு இல்லை. அந்த நாள் ஞாபகம் வந்தது. எவ்வளவு கஷ்டப்பட்டு நீராவி சக்தியை கடல் பயணத்துக்கும் பயன்படுத்த முடியும் என்று கண்டு பிடித்தேன். இன்று எனக்குக் கிடைத்த இந்த சிறிய காணிக்கை என் மனதை நெகிழ வைத்துவிட்டது. நான் பட்ட பாட்டுக்குக் கை மேல் கிடைத்த பலன் இது. இந்த தருணத்தை ஒரு ஒயின் ( a bottle of wine) பாட்டிலுடன் கொண்டாடி மகிழ ஆசை. ஆனால் என் செய்வது? இப்போது நான் பரம ஏழை!”

பிற்காலத்தில் அமெரிக்கா முதலிய நாடுகள் அந்த அமெரிக்க எஞ்சினீயர் ராபர்ட் புல்டனைப் பாராட்டி, அஞ்சல்தலைகளும் நாணயங்களும் வெளியிட்டன.

பெரிய நதிகள் மலைகளில் விழும் சிறிய நீர்த்துளிகளால் உண்டகின்றன. பெரிய கண்டுபிடிப்புகள் அறிஞர்களின் சிறிய சிந்தனைத் துளிகளால் மிளிர்கின்றன.

வாழ்க புல்டன்; வளர்க அறிவியல் கண்டுபிடிப்புகள்!

TAGS– 
அறிவியல் கண்டுபிடிப்புகள், 
ராபர்ட் புல்டன்

–சுபம்–

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய முதல் 36,500 பாடல்கள்!(Post No.5731)

Written by SNagarajan

Date: 4 DECEMBER 2018


GMT Time uploaded in London –5- 44 am


Post No. 5731

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய முதல் 36,500 பாடல்கள்!

ச.நாகராஜன்

தமிழனாய்ப் பிறக்க மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும். அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் அடங்கியுள்ள நூல்கள் ஏராளம்.

அறம், பொருள், இன்பம், முக்தி ஆகிய நால்வகைப் பேறுகளையும் தரவல்ல நூல்கள் தமிழில் உள்ளன.

இவற்றில் ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய 36492 (மிகைப் பாடல்கள் எட்டையும் சேர்த்தால் -முப்பத்தாறாயிரத்து ஐநூறு) பாடல்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மேலோங்கி வரும் இந்த நாளில் இவற்றை http://www.projectmadurai.org போன்ற இணைய தளங்களில் படிக்கலாம்; இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு நூறு பாடல்கள் மட்டுமே படிப்பது என்று வைத்துக் கொண்டாலும் ஒரு வருடத்தில் 36500 பாடல்களைப் படித்து முடித்து விடலாம்.

இதன் அளப்பரிய பயனைப் படிப்பவர்களே அறிந்து கொள்ளலாம்.

இந்த தொடர் வரிசையில் அடுத்து இன்னொருமுப்பதினாயிரம் பாடல்களையும் கூடப் படிக்கலாம். அவ்வளவு பெரியது தமிழ்ச் செல்வம்!

பாடல் பட்டியலைக் கீழே பார்ப்போம்.

திருக்குறள்   திருவள்ளுவர் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் 1330

ஆத்திசூடி     ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள்  கடவுள் வாழ்த்தும் 109 பாடல்களும்  – ஆக மொத்தம் 110

கொன்றைவேந்தன் ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள்  கடவுள் வாழ்த்தும் 91 பாடல்களும் – ஆக மொத்தம் 92

மூதுரை ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள்  கடவுள் வாழ்த்தும் 30 பாடல்களும் – ஆக மொத்தம் 32

நல்வழி ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள்  கடவுள் வாழ்த்தும் 40 பாடல்களும் – ஆக மொத்தம் 41

பன்னிருதிருமுறைகள்

இந்த நூல் தொகுப்பில் 12 திருமுறைகள் உள்ளன.

முதல், இரண்டாம், மூன்றாம் திருமுறைகளை அருளியவர் திருஞானசம்பந்தர். இவற்றில் உள்ள மொத்தப் பாடல்கள் 4147.

நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளை அருளியவர் திருநாவுக்கரசர். இவற்றில் உள்ள மொத்தப் பாடல்கள் 3067.

ஏழாம் திருமுறையை அருளியவர் சுந்தரர். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 1026.

எட்டாம் திருமுறையில் திருவாசகம், திருக்கோவையார் இடம் பெற்றுள்ளன; இவற்றை அருளியவர் மாணிக்கவாசகர்.  இந்த எட்டாம் திருமுறையில் அடங்கியுள்ள மொத்தப் பாடல்கள் 1056.

ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றை திருமாளிகைத் தேவர், சேந்தனார், கரூவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோர் அருளியுள்ளனர். இந்த ஒன்பதாம் திருமுறையில் அடங்கியுள்ள மொத்தப் பாடல்கள் 301.

பத்தாம் திருமுறை திருமந்திரம் ஆகும்.திருமந்திரத்தை அருளியவர் திருமூலர். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 3047.

 பதினொன்றாம் திருமுறை பிரபந்தம் ஆகும். இதில் 41 பிரபந்தங்கள் உள்ளன. இவற்றை திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார்,  சேரமான் பெருமாள்,நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பி ஆண்டார் நம்பி ஆகிய பன்னிருவர் அருளியுள்ளனர். இந்த பதினொன்றாம் திருமுறையில் உள்ள மொத்தப் பாடல்கள்  1419.

பன்னிரெண்டாம் திருமுறை பெரிய புராணம் ஆகும். இதை இயற்றி அருளியவர் சேக்கிழார். இந்தத் திருமுறையில் உள்ள மொத்தப் பாடல்கள் 4286.

இந்தப் பன்னிரு திருமுறைகளையும் வானத்தில் ஜொலிக்கும் 27 நட்சத்திரங்கள் போல 27 அருளாளர்கள் அருளியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

பன்னிரு திருமுறைகளிலும் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 18349.

நாலாயிர திவ்ய பிரபந்தம்.

பன்னிரெண்டு ஆழ்வார்கள் அருளப் பெற்றது நாலாயிர திவ்ய பிரபந்தம். பெயரே சுட்டிக் காட்டுவது போல இதில் உள்ள பாடல்கள் 4000.

நாலடியார்     400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.

அக நானூறு  400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.

புற நானூறு   400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.

திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் 1338 பாடல்கள் உள்ளன.

கம்ப ராமாயணம்

கம்ப ராமாயணத்தில் 10000 பாடல்கள் உள்ளன.

ஆக மேலே கூறிய நூல்களில் உள்ள பாக்களின் மொத்த எண்ணிக்கை 36492 ஆகும்.

மிகைப் பாடல்கள் என ஒரு எட்டையும் சேர்த்தால் மொத்தம் வருவது 36500 பாடல்களாகும்.

ஒரு நாளைக்கு 100 எனப் படிக்க ஆரம்பித்தால் ஒரு வருடத்தில் முடித்து விடலாம்.

வீட்டில் ஒரு புனித இடத்தைத் தேர்ந்தெடுத்து – Sacred Corner – பூஜை அறையில் இவற்றைச் சேர்த்து வைக்கலாம். (புத்தகங்கள், சி.டிக்கள், கணினி, அச்சுப் பதித்த தாள்கள் – எந்த வடிவமாக இருந்தால் என்ன)

பூஜை அறை வசதியாக இல்லாதவர்கள் இந்த நூல்களுக்கானதனி ஒரு அலமாரியைக் கொண்டு அதை சுலபமாக அணுகும் இடத்தில் வைக்கலாம்.

அன்றாடம் மனதைக் கவரும் – மனதை நெகிழ வைக்கும் சொற்றொடரைக் குறித்துக் கொள்ள பேப்பர்,பேனாவையும் கொண்டிருத்தல் நல்லது.

இதற்கான  உரைகளும் இணைய தளத்தில் உள்ளன.

ஆகவே பொருள் புரியவில்லை என்று சொல்ல இடமே இல்லை.

நல்லதைப் படிப்போம்; நாளும் உயர்வோம்!

tags– ஒவ்வொரு தமிழனும்,படிக்க வேண்டிய,பாடல்கள்

***