Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (48)
ராமாயணத்தில் சாபங்கள் (48) ப்ருகு முனிவர் மஹாவிஷ்ணுவுக்குக் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் ஐம்பத்தோராவது ஸர்க்கமாக அமைவது, “பிருகு மஹரிஷியின் சாபம்’ என்ற ஸர்க்கம்.
சுமந்திரரை நோக்கி லக்ஷ்மணர், “ஏன் ராமர் இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறார்” என்று கேட்க சுமந்திரர், “யாரிடமும் சொல்லக் கூடாத ரகசியத்தைச் சொல்கிறேன்” என்று ராமரது சோகத்திற்கான காரணத்தைச் சொல்கிறார்.
முன்னொரு காலத்தில் துர்வாஸ மஹரிஷி வசிஷ்டருடைய ஆசிரமத்தில் வந்து தங்கி இருந்தார். அப்போது அவரை வணங்கிய தசரதர் தனது வம்சத்தைப் பற்றிக் கூறி அருளுமாறு அவரை வேண்டினார்.
உடனே துர்வாஸர் மஹாவிஷ்ணு சாபம் பெற்றதால் ராமராய் அவதரித்த விருத்தாந்தத்தைக் கூறலானார்.
முன்பு நடந்த தேவாசுர யுத்தத்தில் அசுரர்கள் அனைவரும் ஓடி வந்து பிருகு மஹரிஷியின் மனைவியிடம் அடைக்கலம் புகுந்தார்கள். அங்கேயே வசித்தும் வந்தார்கள்.
இதனால் மிகுந்த கோபம் கொண்ட மஹாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் பிருகு மஹரிஷியின் மனைவியின் தலையை அறுத்துத் தள்ளினார்.
இதனால் வெகுண்ட பிருகு மஹரிஷி மஹாவிஷ்ணுவுக்கு இப்படி சாபம் கொடுத்தார்:
பிருகு மஹரிஷி இப்படி மஹாவிஷ்ணுவை சபித்து விட்டாலும் கூட மிகுந்த வருத்தத்தை அடைந்தார்.
மஹாவிஷ்ணுவும் தாபத்தை அடைந்தார்.
பிருகு மஹரிஷி வருந்தி இருக்க சப்த ரிஷிகள் அவரிடம் வந்தார்கள். என்னை இப்படி ஒரு சாபம் கொடுத்ததிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர்களிடம் பிருகு வேண்டினா.
ஶ்ரீமன் நாராயணனையே நீர் சரணம் அடைவீராக என்று அவர்கள் கூறியருளினர்.
அவரும் மஹாவிஷ்ணுவையே பூஜித்து வந்தார்.
மஹாவிஷ்ணு “நீர் சத்தியமாய் சொன்ன வாக்கை உலக உபகாரத்தின் பொருட்டு அது நிச்சயமாய் என்னால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது தான்” என்று கூறி அருளினார்.
அப்படியே அவர் ஶ்ரீ ராமராக அவதரித்துள்ளார்.
என்று இப்படி ராமாவதார ரகசியத்தை சுமந்திரர் லக்ஷ்மணருக்குக் கூற அவர் ‘நன்று, நன்று” என்று கூறி திருப்தி அடைந்தார்.
In the very beginning of this series, I told you I am not approaching VC as a God seeker or Brahman seeker; my approach is secular and not spiritual. I wanted to tell you the scientific, linguistic, natural matters in VC; occasionally I point out the comparative materials from Tamil hymns.
33. Who is versed in the Vedas, sinless, unsmitten by desire and a knower of Brahman par excellence, who has withdrawn himself into Brahman; calm, like fire that has consumed its fuel, who is a boundless reservoir of mercy that knows no reason, and a friend of all good people who prostrate themselves before him; –
34. Worshipping that Guru with devotion, and approaching him, when he is pleased with prostration, humility and service, (he) should ask him what he has got to know:
My comments
VC is full of repetitions; naturally a teacher would repeat umpteen times so that even the lowest in the class can get it in full. Sankara repeats the qualification of Guru with two epithets.
Dayaasindhu= boundless reservoir of mercy; we saw this word earlier as well.
Bandhu = friend of all
If we stop there for a minute and think about the Modern Gurus, very rarely you will find a few Gurus. Even if you tell the world you find a Good Guru, people won’t believe you unless you stayed with that Guru for 10 or 15 years. We can’t blame any Guru, because they also change and move with the time.
In sloka 34, he comes back to the student or disciple or God seeker. Humility is stressed there.
35. O Master, O friend of those that bow to thee, thou ocean of mercy, I bow to thee; save me, fallen as I am into this sea of birth and death, with a straightforward glance of thine eye, which sheds nectar-like grace supreme.
My comments
Two points must be noted. ocean of mercy and sea of birth and death
Sankara repeats ocean of mercy here. This sea of birth and death is in all Tamil and Sanskrit hymns. Samsaara Saagara and crossing the saagara/ocean is in all hymns. We may notice two other things in all Tamil and Sanskrit hymns
1.Snapping or Cutting the cycle (of birth and death) Arukkum in Tamil
2. Both Tamil and Sanskrit hymns describe it as a disease. Punarapi Jananam and Punarapi Maranam is a disease the medicine or doctor to cure this disease is God. This is in Vedas as well (Besajam, Bishak)
36
दुर्वारसंसारदवाग्नितप्तं दोधूयमानं दुरदृष्टवातैः । भीतं प्रपन्नं परिपाहि मृत्योः शरण्यमन्यद्यदहं न जाने ॥ ३६ ॥
36. Save me from death, afflicted as I am by the unquenchable fire of this world-forest, and shaken violently by the winds of an untoward lot, terrified and (so) seeking refuge in thee, for I do not know of any other man with whom to seek shelter.
Here is a beautiful and new description. Forest Fire, Wind.
The world is like a forest with heavy winds. Sankara is the only saint of India who walked through the length of India more than once. The proof lies in the Four Mutts in four directions- Sringeri, Kashmir, Puri, Dwaraka and lastly Kanchi . He personally experienced the forest and monsoon rains. He compares it to family life.
37. There are good souls, calm and magnanimous, who do good to others as does the spring, and who, having themselves crossed this dreadful ocean of birth and death, help others also to cross the same, without any motive whatsoever.
My comments
Sankara tells us about past saints here.
1.They are like spring. Without expecting anything they help all.
2.They reached the goal already
3.They come and tell what they found.
Ramakrishna Paramahamsa explains the types of saints
“There are two kinds of Siddhas (perfect men or God men)
Saadhana Siddhaas and Kripaa Siddhaas ( those who have gained perfection through religious discipline and those who have gained perfection through grace)
To get a good crop, some have to irrigate their fields with great labour by cutting canals or by drawing water. But some others are lucky enough to be saved all this trouble of getting water; for there comes the rain and floods the whole field. Almost all have to perform devotional practices assiduously in order to get freedom from the shackles of Maayaa. But Kripaa Siddhaa are saved from all this trouble; they attain perfection through the grace of god. The number, however, is extremely small”.
38. It is the very nature of the magnanimous to move of their own accord towards removing others’ troubles. Here, for instance, is the moon who, as everybody knows, voluntarily saves the earth parched by the flaming rays of the sun.
My comments
Magnanimous people help voluntarily. Ramakrishna Paramahamsa explains it.
“There are two classes of perfect men in the world.- those who ,on attaining Truth, become silent and enjoy it all by themselves without any thought of others; and those who attain Truth, but finding no pleasure in keeping it to themselves, cry out in a trumpet voice to all- Come Ye and enjoy the Truth with us”
Sun scorches; moon cools down. Moon voluntarily helps.
God also voluntarily helps some.
Tamil saint Manikkavasagar says
It is the God that showers mercy on us and guide us to worship him
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – திருவாசகம்
This is also explained by Sri Ramakrishna Paramahamsa
“The police man with his lantern (bull’s eye) can see everyone on whom he casts the light, but no one can see him so long as he does not turn the light on himself. So does God see everyone; but no man can see Him until He reveals Himself to Him in His mercy”
xxxx
Parallels from Tamil Literature
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
Let the world avail the bliss, I attained
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே- திருமூலர்/Tirumular
xxx
தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்—திருக்குறள் 399
Their joy is joy of all the world, they see; thus more The learners learn to love their cherished lore. Kural 399
xxxx
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்று ஆர்த்தும்- Viashnavite saint ஆழ்வார் பாடல்
xxxx
காகம் உறவு கலந்து உண்ணக்
கண்டீர்; அகண்ட ஆகார சிவ
போகம் எனும் பேரின்ப வெள்ளம்
பொங்கித் ததும்பிப் பூரணமாய்
ஏக உருவாய்க் கிடக்குது, ஐயோ!
இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச்
சேர வாரும் ஜகத்தீரே!—தாயுமானவர்
Meaning of the Song:
You see the crows eat along with the flock.
Alas! The boundless Shivabhoga, the flood of Bliss
is brimming full and available unbroken!
Before the body that we have taken falls,
oh the people of the world,
come and congregate to enjoy It!—Tamil Saint Thaayumaanavar
–subham—
Tags- Types of Siddhas, Types of Gurus, Voluntary help, Research Notes on VC
சென்ற கட்டுரையில் 51 எழுத்து மர்மத்தைக் கண்டோம்.. மேலும் சில பாடல்களைப் பார்த்துவிட்டு திருமூலர் 18 பாஷை பற்றிப் பாடியதையும் காண்போம். பாரதி வரை இந்த 18 மொழிகளைக் பாடுவதால் திருமூலரின் காலத்தையும் நாம் அறியமுடிகிறது. அவர் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வாழ்ந்திருக்கவேண்டும். நிறைய அசட்டுப்பிசட்டுகள் , அரை வேக்காடுகள் அவர் 3000 ஆண்டு வாழ்ந்தார், அவர் கி.மு.வில் வாழ்ந்தார் என்று சொல்வதெல்லாம் பொருளற்றது என்பது விளங்கும்..
வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று சொல்லுவோருக்கும் இந்தப் பாடல் செமை அடி , மிதியடி கொடுக்கும். இமயம் முதல் குமரி வரை என்பது புற நானூற்றிலேயே உள்ளது. அந்த நிலப்பகுதியில் காஷ்மீர் வரை 18 பாஷைகளை பேசியதும் திருமூலருக்கு முன்னமே.யே பாடல்களில் உள்ளது. அந்தச் செய்திகளை அவர்கள் போகிற போக்கில் சமய நூல்களில் செப்பிவிட்டது இன்னும் அதிசயமே. அவர்கள் பூகோளம் அல்லது வரலாற்றுச் செய்திகளை எல்லோரும் அறிந்திருப்பதால் போகிற போக்கில் பாடல்களில் பகர்ந்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள் இதே போல போகிறபோக்கில் 56 தேச ராஜாக்களும் சிவன்- உமை கல்யாணத்துக்கு வந்திருந்தார்கள் என்று பாட்டிமார்கள் பேரக்குழந்தைகளுக்கு வாய் மொழியாக கதை சொல்லும்போதே அந்தக்காலத்தில் இந்தியா 56 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதையும் குழந்தைகள் அறிந்து கொள்ளுவார்கள். அந்தக் கால இந்தியா வில் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பர்மா, நேபாளம் பூடான் வங்கதேசம் முதலிய நாடுகளும் இருந்தன. நிற்க.
xxxx
இதோ மேலும் சில 51 அக்ஷரப் பாடல்கள்:-
898. இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே. 15
898: Letters A and U are Feet of Lord
The peerless Feet of Lord are Letters A and U;
The peerless Feet of Lord are Letters Two and Five;
The peerless Feet of Lord are Letters Fifty and One
The peerless Feet are mantras seven times thousand.
தமிழில் 8 என்பதை அ என்றும் இரண்டு என்பதை உ என்றும் எழுதுவார்கள் . 100 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் புஸ்தகங்களில் பக்க எண்களை இப்படி வெளியிட்டிருப்பதைக் காணலாம்.
xxxxxx
அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே. 11
924: How the 51-Letter Chakra is Formed
In Chambers five and twenty
Enclose letters fifty, two in each;
With letter “A” to begin
And final letter “Ksh” to end;
These with the one letter Om;
Fifty and one in all, the letters fill,
In Chakra’s chambers five and twenty.
இந்தப்பாட்டில் சம்ஸ்க்ருத மொழியின் முதல் எழுத்து அ என்பதையும் கடைசி எழுத்து க்ஷ என்பதையும் தெளிவாகவே சொல்லிவிடுகிறார். அ +க்ஷ= அக்ஷர /எழுத்து ; அக்ஷராப்பியாசம் = முதல் முதலில் குழந்தைகள் எழுத்துப் பயிற்சி பெறும் சடங்கு )
xxxx
தேவியின் உடலில் 51 எழுத்துக்கள்
இறைவியின் உடலில் 51 எழுத்துக்கள் உள்ளன. இதை லலிதா சஹஸ்ர நாம உரைகளிலிருந்து அறியலாம். இதோ அந்த உரைகளின் சுருக்கம்
963. ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே. 50
963: Garland of Fifty-One Letters
With Letter “Aum” are vowels fifteen formed;
To Bindu’s luminous letter “A”
Add Nada letter “U”
With rest of letters thirteen,
They fifteen vowels are;
Together with consonants,
The Primal letters are
As Fifty and one reckoned.
xxxx
964. விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலையதாம்
சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே. 51
964: Sakti Expands as Fifty-One Letters
With Letter “A” that is Bindu,
And curled Letter “U” that is Nada,
When together they upward ascend,
Sakti within beams
With kalas six and ten,
And endless expands,
As neck, hands, legs and body entire;
As Letters One and Fifty , too,
Her Form expands.
xxxxx
லலிதா சஹஸ்ரநாமத்தில் மாத்ருகா வர்ண ரூபிணி என்று அம்பாளை வருணிக்கும் நாமம் 577 ஆவது நாமமாக வருகிறது .பாஷா ரூபா என்ற நாமம் 678 ஆவது நாமமாக வருகிறது
மாத்ருகா என்றால் 51 எழுத்துக்கள்; அதாவது அரிச்சுவடி
ஸ்வரங்கள் – 16/ உயிர் எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்கள் – 25/ உயிர்மெய்
ய முதல் க்ஷ வரை – 10
மொத்தம் 51
இவைகளுக்கு கலர் அதாவது வர்ணம் உண்டு
அகராதி எழுத்துக்கள்– புகை வர்ணம்;
க- முதல் 12 ம் –சிந்தூர வர்ணம்
ட – முதல் 10 எழுத்துக்கள்– வெள்ளை நிறம்
ப- முதல் ஐந்து — அருண நிறம்
ல – முதல் ஸ முடிய – தங்க வர்ணம்
ஹ , க்ஷ இரண்டும் – வெள்ளி/ மின்னல் வர்ணம்
என்று சனத் குமார சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது என்று ஸ்ரீ கணேச ஐயர் எழுதியுள்ளார் .
இந்த 51 எழுத்துக்களே ஸ்ரீ சக்கரத்திலும் உள்ளது. அதையும் திரு மூலர் பாடியள்ளார் . லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் மனோன்மனி என்ற நாமத்தையும் திருமூலர் அப்படியே பாடலில் பயன்படுத்துகிறார் .
இதன் மூலம் சஹஸ்ர நாமத்தின் பழமையும் திருமூலருக்கு அதிலுள்ள புலமையும் தெளிவாகத் தெரிகிறது
இன்னொரு முக்கிய விஷயத்தையும் உரைகாரர்கள் குறிப்பிடுகிறார்கள் . அம்பாளின் கையிலுள்ள அக்ஷ மாலை அ முதல் க்ஷ வரையான 51 எழுத்துக்களைக் குறிக்க 51 ரத்ன மணிகளைக் கொண்டதால் அதற்கு அக்ஷ மாலை என்று பெயர்.
இதனால்தான் மகா கவி பாரதி
எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என்று பாடலில் செப்பியிருக்கிறான். மகா கவி பாரதி , லலிதா சஹஸ்ரநாமத்தை நன்கு அறிந்தவர் என்பதை அவருடைய சக்திதேவி பாடல்கள் காட்டுகின்றன.
xxxxx
திருமூலரின் திருமந்திரம்
1219. ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே. 65
1219: She Created Kala Beings
In the Beginning
Fifty-one the Kala Beings created
She stood as their life and soul;
She stood in the Chakra
Of fifty-one letters inscribed;
And He the Lord stood there
By the Jewelled One’s side.
ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய ஐம்பத்துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடுஅப் பரையவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே. 70
1224: She is Paraparai
She that stands in Eye-brow center is Manonmani,
She one with Fifty Letters becomes;
She is Para Parai and Parai too;
She is of the Acts Five–
Creation, Preservation, Dissolution, Obfuscation and Redemption.
சக்கரத்தில் 51 எழுத்துக்கள், மனோன்மணீ என்ற பதங்கள் திருமூலர் தினமும் ஸஹஸ்ரநாம பாராயணம் செய்ததையும் காட்டுகிறது ஆனால் இன்னொரு பாட்டில் இவை அனைத்தும் ஐந்தெ ழுத்தில் அடங்கிவிடும் என்று சொல்லி சிவனும் சக்தியும் ஒன்றே என்றும் சொல்லிவிடுகிறார்.
2698. ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. 1
2698: Fifty Letters Become Five
The letters Fifty are Vedas all;
The letters Fifty are Agamas all;
When the secret of letters Fifty is known,
The Fifty letters, Five Letters Became.
2699. அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே. 2
2699: Fifty Letters Became Fifty-One
With the letter “A” intoned in commencement,
The letters Fifty, Fifty-One became;
With letter “U” intoned high with letter “A”,
And with letter “M”, it (A&U&M as AUM) ended;
And again with letter “N” rising,
It became Nandi’s name “Aum Nama Sivaya.”
xxxxx
திரு மந்திரத்தில் இன்னும் நிறைய 51-எழுத்துப் பாடல்கள் உள ; இடம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.
பதினெட்டு பாஷை!
அடுத்ததாக கட்டுரையின் முகப்பில் குறிப்பிட்ட 18 பாஷைகளை எடுத்துக்கொள்ளுவோம் .
முதலில் சுவையான மொழியியல் விஷயத்தை/ விடயத்தைக் காண்போம்
ஏன் பாஷை – பாடை ஆகியது?
ஏன் விஷயம் – விடயம் ஆகியது ?
எங்கெங்கெல்லாம் ஷ வந்ததோ அங்கெங்கெல்லாம் ட வரும். இதை ஆங்கிலத்திலும் காண்கிறோம்
TION என்ற ஸ்பெல்லிங் உள்ள சொற்களை எல்லாம் நாம் SION ஷன் என்றே உச்சரிக்கிறோம். ஆங்கிலேயர் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? உலகம் முழுதும் சம்ஸ்க்ருத மொழியும் தமிழ் மொழியும்தான் இருந்தன. அதிலிருந்து பிரிந்த மொழிகளே இன்று உலகெங்கும் உள்ளன என்பதை ஏராளமான கட்டுரைகளில் நான் ஆதாரத்துடன் காட்டியுள்ளேன்; இந்த விதி திருமூலர் காலத்திலும், கம்பன் காலத்திலும் பின்பற்றப்பட்டது . இதே போல உலகில் ஜ- என்ற ஒலி சம்ஸ்க்ருதத்தில் மட்டுமே இருந்தது. அது உலகம் முழுதும் பரவும்போது ய- ஆக மாறியது.
ஜாமம் என்றால் யாமம் என்பார்கள்; ஜாவா என்றால் யவ என்பார்கள் ; யாழ்ப்பாணம் என்றால் ஜாப்னா JAFFNA என்பார்கள் . ஏன் ? அது சம்ஸ்க்ருத மொழி விதி
இனி பாடைக்கு = பாஷை-க்கு வருவோம்
பாஷா ரூபா என்று ஒரு நாமத்தில் தேவியைப் போற்றுகின்றனர். இறைவி மொழி வடிவானவள், அதற்கு அப்பாற்பட்டவளும் ஆவாள் . சிவ சக்தி ஐக்கியத்தைக் காட்டுவதற்காக ரகு வம்சம் என்ற மஹா காவியத்தின் முதல் பாட்டிலேயே பார்வதி பரமேஸ்வரனை சொல்லும் பொருளும் ம் போல என்று காளிதாசன் துதிக்கிறான் . இதை அபிராமி பட்டர் உள்பட ஏராளமானோர் பிற்காலத்தில் பயன்படுத்தினர்
வாகர்த்தாவிவ சம்ப்ருக்தௌவாகர்த்த பிரதிபத்தயே
ஜகதப் பிதரௌ வந்தே பார்வதிபரமேஸ்வரௌ.
இதன் பொருள் பின்வருமாறு :—
” சொல்லையும் , அதன் பொருளையும் எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படி இணைந் திருக்கும் , உலகத்திற்கு தாய்,தந்தையாக விளங்கும் பார்வதியையும், பரமசிவனையும் (சொல், பொருள் இவற்றை அறியும் பொருட்டு) வணங்குகின்றேன் “.
I pray to parents of the world, Lord Shiva and Mother Parvathi, who are inseparable as speech and its meaning (to gain knowledge of speech and its meaning).
ஆக இந்த பாஷை விஷயமும் சஹஸ்ரநாமத்திலிருந்து வந்ததே.
ஒருபுறம் சிவன் உடுக்கையிலிருந்து எழுந்த 14 மஹேச்வர சூத்ரங்களைக் காண்கிறோம்; மறுபுறம் அம்பாளிடமிருந்து எழுந்த 51 ஒலிகளைக் காண்கிறோம். இந்துக்களுக்கு எழுத்தும் எழுதுகோலும் தெய்வம் என்பதில் ஐயமில்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (47)
ராமாயணத்தில் சாபங்கள் (47) ஹனுமானுக்கு ரிஷிகள் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது, “ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்ற ஸர்க்கம்.
ராகுவின் விண்ணப்பத்தைக் கேட்டு இந்திரன் ஹனுமான் குழந்தையாக இருக்கும் சமயத்தில் தனது வஜ்ராயுதத்தால் குழந்தையின் கன்னத்தில் அடித்து விட்டான். வாயு பகவான் குழந்தையை மடிமேல் வைத்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்தார்.
அப்போது பிரம்மா, தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரிடம் வந்து சேர்ந்தனர்.
பிரம்மா அந்தக் குழந்தையைக் கையால் தடவிக் கொடுத்தார். உடனே குழந்தை ஜீவித்திருப்பதைப் பெற்று விளங்கிற்று.
இதனால் வாயு தேவன் திருப்தி அடைந்தார்.
குழந்தைக்கு பிரம்மா, சூரியன், வருணன், குபேரன், பரமசிவன், விசுவகர்மா உள்ளிட்ட அனைவரும் ஆளுக்கு ஒரு வரத்தைக் கொடுத்து அருளினர். குழந்தைக்கு திவ்யமான சஸ்திரங்களும் அளிக்கப்பட்டன.
தான் பெற்ற பலத்தினால் சந்தோஷமடைந்த வாயு குமாரனான ஹனுமான் மஹரிஷிகளின் ஆசிரமத்தில் புகுந்து உபத்திரவம் செய்தான். மரவுரிகள், மான் தோல்கள் ஆகியவற்றை அங்கும் இங்கும் வாரி எறிந்தான்.
ஞானவான்களாகிய ரிஷிகள் அவனை மன்னித்து வந்தார்கள்.
பலர் தடுத்தாலும் அவன் இந்த வழியில் நியாயத்தை மீறி நடந்து வந்தான்.
இதைக் கண்ட பிருகு, அங்கிரஸ் ஆகிய முனிவர்களின் வமிசங்களில் பிறந்த ரிஷிகள் அவனை இப்படிச் சபித்தார்கள் :
பாதஸே யஸ்மாத்ஸ்ரியத்ய பலமஸ்மான்ப்லவங்கம |
ததீர்க்ககாலம் வேத்த்தாஸி நாஸ்மாகம் சாபமோஹித: ||
யதா தே ஸ்மார்யதே கீர்திஸ்ததா தே வர்ததே பலம் |\
ப்லவங்கம – ஹே வானர
யத் – எந்த
பலம் – பலத்தை
சமாஸ்ரியத்ய – ஆஸ்ரயித்து
அஸ்மான் – எங்களை
பாதஸே – உபத்திரவிக்கிறாயோ
தத் – அதை
தீர்ககாலம் – நீண்ட காலம் வரையில்
அஸ்மாகம் – எங்களது
சாபமோஹித: – சாபத்தால் மோஹித்தவனாகி
ந வேத்தாஸி – நீ அறியாதிருக்கக் கடவாய்
யதா – எப்போது
தே – உனது
கீர்தி: – தேஜஸ்
ஸ்மார்யதே – நினைப்பு மூட்டப்படுகிறதோ
ததா – அப்போது
தே – உனது
பலம் – பலம்
வர்ததே – விளங்கும்
இப்படியாக ஹனுமான் ரிஷிகளிடமிருந்து இந்த சாபத்தைப் பெற்றார். அதிலிருந்து தன் வலிமை பற்றிய நினைவை இழந்தார். ஆனால் வலிமை அப்படியே இருந்தது. உரிய காலத்தில் சாபம் நீங்கப்பட்டு ராம காரியத்தில் அது விளங்கியது.
இதைப் பற்றி அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமரிடம் கூறுவது உத்தர காண்டம் 35 வது ஸர்க்கத்தில் (ஹனுமான் உற்பத்தி முதலியது என்ற ஸர்க்கம்) 16வது ஸ்லோகத்தில் இடம் பெறுகிறது:
Mirage simile is used in Sloka 30. Kalidasa used it many times; Sangam Tamil literature also used it. Though South India has no proper desert it has got vast dry land where mirages can be seen
30. Where (however) this renunciation and yearning for Freedom are torpid, there calmness and the other practices are as mere appearances, like water in a desert.
32. Others maintain that the inquiry into the truth of one’s own self is devotion. The inquirer about the truth of the Ātman who is possessed of the above-mentioned means of attainment should approach a wise preceptor, who confers emancipation from bondage.
Here we see Sankara saying the famous Upanishad Quote repeated later by Greek Philosopher Socrates
Know Thyself
Swami Krishnanada says,
“But the Upanishad is a study of yourself. Atmanam vidhi is the great oracle of the Upanishad. Know thyself and be free. It is something astounding to hear that we can be free by knowing our own selves. It is said because of the fact we have a feeling generally in the work-a-day life of the world, that we become free only when we know the world outside.
xxxx
“From his divine power comes forth all this Magical show of name and form, of you And me, which casts the spell of pain and pleasure. Only when we pierce through this magic veil Do we see the One who appears as many.” — Shvtashvatara Upanishad
Tamil Poet Kamban in his Ramayana says the same thing
தன்னைத் தான் உணரத்தீரும் தகையறு பிறவி என்பது
என்னைத் தான் மறையும் மற்றத் துறைகளும் இசைத்த வெல்லாம்
முன்னைத் தான் தன்னை ஓரா முழுப்பிணி அழுக்கின்மேலே
பின்னைத் தான் பெறுவது அம்மா நறவுண்டு திகைக்கும் பித்தோ
–கிட் கிந்தா காண்டம், கம்பராமாயணம்
xxxx
Ancient Egyptian repeated what we find in Tirumanthiram of Tirumular
“There are two parts of the ancient Luxor temple: the outer temple where the beginning initiates are allowed to come, and the inner temple where one can enter only after proven worthy and ready to acquire the higher knowledge and insights. One of the proverbs in the Outer Temple is “The body is the house of God.” That is why it is said, “Man know thyself.”[20] In the Inner Temple, one of the many proverbs is “Man, know thyself … and thou shalt know the gods.”[21]” Luxor Inscription, Egypt
—-SUBHAM—
TAGS- Luxor inscription, Self Knowledge, Tirumular, Kamban Appar, Vivekananda, Socrates, Ramana ,My Research Notes , V. C.- Part 16
Mirage simile is used in Sloka 30. Kalidasa used it many times; Sangam Tamil literature also used it. Though South India has no proper desert it has got vast dry land where mirages can be seen
30. Where (however) this renunciation and yearning for Freedom are torpid, there calmness and the other practices are as mere appearances, like water in a desert.
32. Others maintain that the inquiry into the truth of one’s own self is devotion. The inquirer about the truth of the Ātman who is possessed of the above-mentioned means of attainment should approach a wise preceptor, who confers emancipation from bondage.
Here we see Sankara saying the famous Upanishad Quote repeated later by Greek Philosopher Socrates
Know Thyself
Swami Krishnanada says,
“But the Upanishad is a study of yourself. Atmanam vidhi is the great oracle of the Upanishad. Know thyself and be free. It is something astounding to hear that we can be free by knowing our own selves. It is said because of the fact we have a feeling generally in the work-a-day life of the world, that we become free only when we know the world outside.
xxxx
“From his divine power comes forth all this Magical show of name and form, of you And me, which casts the spell of pain and pleasure. Only when we pierce through this magic veil Do we see the One who appears as many.” — Shvtashvatara Upanishad
Tamil Poet Kamban in his Ramayana says the same thing
தன்னைத் தான் உணரத்தீரும் தகையறு பிறவி என்பது
என்னைத் தான் மறையும் மற்றத் துறைகளும் இசைத்த வெல்லாம்
முன்னைத் தான் தன்னை ஓரா முழுப்பிணி அழுக்கின்மேலே
பின்னைத் தான் பெறுவது அம்மா நறவுண்டு திகைக்கும் பித்தோ
–கிட் கிந்தா காண்டம், கம்பராமாயணம்
xxxx
Ancient Egyptian repeated what we find in Tirumanthiram of Tirumular
“There are two parts of the ancient Luxor temple: the outer temple where the beginning initiates are allowed to come, and the inner temple where one can enter only after proven worthy and ready to acquire the higher knowledge and insights. One of the proverbs in the Outer Temple is “The body is the house of God.” That is why it is said, “Man know thyself.”[20] In the Inner Temple, one of the many proverbs is “Man, know thyself … and thou shalt know the gods.”[21]” Luxor Inscription, Egypt
—-SUBHAM—
TAGS- Luxor inscription, Self Knowledge, Tirumular, Kamban Appar, Vivekananda, Socrates, Ramana ,My Research Notes , V. C.- Part 16
திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் நிறைய பாடல்களில் 51 என்ற எண் வருகிறது பெரும்பாலும் அவர், சம்ஸ் க்ருத மொழியிலுள்ள 51 எழுத்துக்களையே குறிப்பிடுகிறார்.
முதலில் எண் 51 பற்றிய சுவையான சில விஷயங்கள் :
திருவாசகம் எழுதிய மாணிக்க வாசகர் தன நூலையே 51 பிரிவுகளாகவே பிரித்துள்ளார். அதிலுள்ள திருவெம்பாவை, சிவபுராணம் ஆகிய இரண்டும் பலரும் கேட்டறிந்ததே
இன்னுமொரு புதுமை முதல் பிரிவில்– சிவபுராணத்தில், மற்றும் 51 ஆவது பிரிவிலிலும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைக் காணலாம்
.
இதைப் பார்க்கும்போது அவர் 51 என்பதன் சிறப்பை உணர்ந்தே அதிருவாசகத்தை 51 பாடல் பிரிவுகளாக ஆ க்கினார் என்று தோன்றுகிறது .
இரண்டாவது சுவையான விஷயம் ஆதி சங்கரர் முதல் திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் வரை 51 என்ற எண்ணைப் புகழ்கின்றனர் .
மூன்றாவதாக கையில் வைத்து உருட்டும் ஜெப மாலைக்கு அக்ஷ மாலை என்று பெயர். சம்ஸ்க்ருத மொழியில் எழுத்துக்கு அக்ஷரம் என்று பெயர். இந்த இரண்டு சொற்களிலும் அ -க்ஷ – இருப்பதைக் கவனியுங்கள் காரணம் என்னவெனில் சம்ஸ்க்ருத எழுத்துக்கள் அ — வில் துவங்கி , க்ஷ–வில் முடிகிறது. இதனால்எழுத்துக்கள் அக்ஷரம் என்று அழைக்கப்படுகிறது..
நாலாவது சுவையான விஷயம்
விஷ்ணு சஹஸ்ரமநாமத்துக்கு அடுத்ததாகப் புகழப்படும் லலிதா சஹஸ்ரநாமத்தில் 577- ஆவது நாம ம் மாத்ருகா வர்ண ரூபிணி ; இதன் பொருள் 51 எழுத்துக்களின் வடிவமாக இருப்பவளே என்பதாகும். சம்ஸ்க்ருதத்தில் எழுத்துக்களை மாத்ருகா என்று அழைப்பார்கள் .
உலகிலேயே மொழியை இறை வனுடன் சம்பந்தப்படுத்துவது இந்து மதத்தில் மட்டுமே.; ஸம்ஸ்க்ருதத்தையும் தமிழையும் சிவ பெருமான் , தேவி, முருகன் ஆகியோருடன் இணைத்துப் பேசுகிறோம் .
முதலில் பெரியோர்கள் 51 எழுத்துக்களைப் பற்றிச் சொல்லுவதைப் பார்த்துவிட்டுத் திருமந்திர பாடல்களை ஆராய்வோம்.
திருமூலர், அருணகிரிநாதர், பரஞ்சோதி முனிவர் ஆகியோர் 51 அக்ஷரங்கள் பற்றிக் குறிப்பிட்டார்கள்.சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது.
51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை, மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு.
விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்:
“ ஐந்து பூதமும் ஆறு சமயமும்
மந்த்ர வேத புராண கலைகளும்
ஐம்பத்தோர்விதமான லிபிகளும் வெகுரூப ”
என்றும் இன்னுமோர் இடத்தில்
“ அகர முதலென உரை செய் ஐம்பதொரக்ஷரமும்
அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ”
என்றும் பாடுகிறார். இந்தப் பாடல்களுக்கு திரு. கோபாலசுந்தரம் எழுதிய உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மிகவும் தெளிவாக 51 சம்ஸ்கிருத எழுத்துகள் என்றே விளக்குகிறார். ஆக சம்ஸ்கிருத 51 எழுத்துக்களையே தமிழ்ப் புலவர்கள் 51 என்று குறிப்பிடுதல் தெளிவு. ஏனெனில் தமிழில் எக்காலத்திலும் 51 எழுத்துகள் இருந்ததற்கு பழந்தமிழ் நூல்களில் ஆதாரம் இல்லை.
கந்தர் அநுபூதியை 51 பாக்களில் அருணகிரி அமைத்தமைக்கும் ,மாணிக்கவாசகரின் திருவாசகம் 51 பாடல்களில் அமைந்தமைக்கும் இந்த மந்திர எழுத்துக்களே காரணம் என்றும் பெரியோர் கூறுவர்.
திருமந்திரம்
திருமந்திரத்தில் 51 எழுத்துக்கள் என்பதை திருமூலர் பல பாடல்களில் பாடுகிறார். இவைகளுக்கு உரை எழுதியோர் தொல்காப்பிய காலத்துக்கு முன் தமிழிலும் 51 எழுத்துக்கள் இருந்ததாக எழுதியுள்ளனர். பின்னர் அது 33 ஆகவும் முப்பதாகவும் குறைக்கப்பட்டதாகச் சொல்லுகின்றனர். (பக்கம் 366, பாடல் 878க்கு திரு ப ராமநாத பிள்ளை எழுதிய உரையில் இவ்வாறு கூறுகிறார்.) ஆனால் இதற்கு ஆதாரம் எதையும் அவர் காட்டவில்லை. ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை.
“ இணையார் திருவடி எட்டெழுத்தாகும்
இணையார் கழலிணை யீரைந்தாகும்
இணையார் கழலிணை ஐம்பதொன்றாகும்
இணையார் கழலிணை ஏழாயிரமே” (878)
( பாடல் 925,942,944,904, 1195, 1200, 1209, 1726,2650, 2826 ஆகியவற்றிலும் இதை திருமூலர் வலியுறுத்துகிறார்.)
12 உயிர் ,18 மெய், ஒரு ஆயுதம் உட்பட 31 தமிழ் எழுத்துகளே இன்று வரிவடிவத்தில் இருக்கின்றன. இத்தோடு உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஐயும் சேர்த்து 247 எழுத்துகள என்று சொல்லுவது வழக்கம்..
திருவிளையாடல் புராணம்
பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் சங்கப் பலகை தந்த படலத்தில் ,” ஓ வாணியே, உன் சொரூபமான ஐம்பத்தோரெழுத்தில் அகர முதலாக நாற்பத்தெட்டு எழுத்துகளும் நாற்பத்தெட்டு புலவர்களாக உலகத்தில் பிறக்ககடவன. திருவாலவாயானும் ஒரு புலவராகத் தோன்றி 49ஆவது புலவராக சங்கத்தில் அமரட்டும் என்று பிரம்ம தேவன் கூறியதாக உள்ளது.
காஞ்சிப் பெரியவர் 14-10-1932-ல் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு
“அம்பிகையே வாக் ஸ்வரூபமாக இருப்பவள். அம்பாள் உருவம் முழுவதும் அக்ஷரங்கள். நம்முடைய உடம்பில் எல்லாம் நாற்றமுள்ள வஸ்துக்களெ நிரம்பி இருக்கின்றன. இந்த ஆசாபாசங்களுள் அறிவு என்ற ஒரு மணி இருக்கிறது அம்பாள் உடம்போ அகாராதி க்ஷகாராந்தம் இருக்கும் அக்ஷரங்கள்தான. தர்க்கத்தில் முக்தாவளியில் சப்தத்தைப் பற்றி இரண்டு நியாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வீசிதரங்க நியாயம், கதம்பமுகுள நியாயம் என்பவை அவை.
வீசிதரங்க நியாயம் என்பது அலைகளில் இருந்து அலை பிரிவது. அதாவது பெரிய அலைகளில் இருந்து சிறு சிறு அலைகள் பிரிந்து சென்று கடைசியில் சிறிதாகி அடங்குவதைப் போல்வது.
சப்தம் கொப்பளித்து வெவ்வேறு ஒலியாக விழுதல் கதம்ப முகுள நியாயம். இந்த சப்தங்கள் தாம் 51 அக்ஷரங்கள். அவற்றிற்கு மாத்ருகா என்று பெயர். இந்த அக்ஷரங்கள் ஒரு உருவம் எடுத்ததுதான் அம்பிகையின் வடிவம், அக்ஷரமாலிகை, மாத்ருகா ஸ்வரூபம் என்பர். ‘ஸர்வ வர்ணாத்மிகே’ என்று காளிதாசர் சொல்லி இருக்கிறார். எல்லா எழுத்துக்களின் வடிவமாய் இருப்பவளே என்பது அதன் கருத்து.
நாம் ஜபத்தில் அங்கந்யாச கரன்யாசங்கள் செய்கிறோம். அந்த அந்த மந்த்ர தேவதைக்கு அந்த அந்த அக்ஷரம் அந்த அந்த அங்கங்களாக இருக்கின்றன என்பது குறிப்பு”.
ருத்ராக்ஷ மாலா, ஸ்படிகாக்ஷ மாலா என்பனவற்றை விளக்குகையில் அ முதல் க்ஷ வரை உள்ள 51 எழுத்துக்களைக் குறிக்கவே அக்ஷ என்பதைச் சேர்த்திருபதாகவும் பெரியவர் விளக்குகிறார். எழுத்துக்கு வடமொழியில் அக்ஷ—ரம் என்பர். இதிலேயே முதல் அ–வும் கடைசி க்ஷ–வும் இருக்கிறது.
மந்திர சாஸ்திர விளக்கம்
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற பழமொழிக்கிணங்க 51 சக்தி பீடங்களும் தேவியின் 51 மாத்ருகா அக்ஷரங்களைக் குறிக்கும் என்றும் உடலில் ஆறு ஆக்ஞா சக்ர ஸ்தானங்களில் இந்த 51 அக்ஷரங்களும் உள்ளதாகவும் மந்திர சாஸ்திரம் அறிந்தோர் விளக்குவர்.
கொரிய மொழியில் சாமா என்ற 51 எழுத்துக்கள் (27+24) உண்டு.
xxx
இதோ சில திருமந்திரப்பம்பாடல்கள் ,
696. இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே
696: From Ajna Where Sadasiva Nayaki is, Prana Ascends to Sahasrara of Thousand Petalled Lotus
Above the twin-petalled Center
Is the Seat of Sadasiva Sakti;
As breath in double ascends further
There is the Sahasrara of thousand petalled lotus;
And on it are the Letters Fifty and One
That in time became the Letters Five.
XXXXX
99. முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே
699: Prana Merges in Kalaicoursed upwards through Sushumna
Reaches the Kalai Nayaki in Sahasrara;
And there it merges with the letters Fifty and One
And then with the Letters Five
That the final end of Prana art.
லலிதா சஹஸ்ர நாம உரைகாரர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் காண்போம். இதே போல 18 பாஷை பற்றியும் திருமூலர் பாடுகிறார்.
TO BE CONTINUED………..
TAGS–திருமந்திரத்தில் 51 எழுத்து மர்மம் ! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 37 அக்ஷரம் , அக்ஷ மாலை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (46)
ராமாயணத்தில் சாபங்கள் (46) நளகூபரர் ராவணனுக்குக் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் இருபத்தி ஆறாவது ஸர்க்கமாக அமைவது, “நளகூபரன் சபித்தல்’ என்ற ஸர்க்கம்.
ஒரு சமயம் ராவணன் தனது பயணத்தின் போது கைலாய மலையில் இரவு நேரத்தைக் கழிக்க நிச்சயித்தான் சந்திரன் கூடிய இரவு நேரத்தில் அவன் காம வசப்பட்டான்.
அப்போது அப்ஸரஸ் ஸ்த்ரீகளில் ரம்பை அங்கு வந்தாள். அவளது அழகிய மேனியைக் கண்ட ராவணன் அவளைச் சட்டெனப் பற்றி இழுத்து, “மூவுலகத்திந்ன் எஜமானனான இந்த தசக்ரீவன் அதிக ஆசை கொண்டவனாய் கை கூப்பி உன்னை வேண்டுகின்றான். என்னை அங்கீகரி” என்றான்.
நடுநடுங்கிய ரம்பை,” நான் சாஸ்திர நியமப் படி தேவரீரது மருமகளாய் ஆகி விட்டேன். இப்போது நான் தங்கள் மகள்” என்றாள்.
ராவணனது தமையனாகிய குபேரனது புதல்வரான நளகூபரருக்குத் தான் நிச்சயிக்கப்பட்ட விஷயத்தை அவள் பணிவோடு சொன்னாள்.
“ஆனால் அப்ஸரஸ் ஸ்த்ரீகளுக்கு கணவன் என்பவன் ஒருவன் இல்லை” என்று கூறிய ராவணன் அவளைக் கற்பழித்து விட்டான்.
நடுக்கமுற்ற ரம்பை நளகூபரரிடம் வந்து நடந்ததை விவரித்தாள்.
இதைக் கேட்ட நளகூபரர் மிகுந்த கோபம் கொண்டு யோகதிருஷ்டியில் முற்றிலும் முனைந்தார்.
கையிலே ஜலத்தை எடுத்துக் கொண்டார். ஒரு சாபத்தைத் தந்தார் இப்படி:
க்ருஹித்வா சலிலம் சர்வமுபஸ்ப்ருஷ்ய யதாவிதி |
உத்ஸசர்ஜ ததா சாபம் ராக்ஷஸேந்த்ராய தாருணம் ||
ததா – அப்போது
சர்வ – எல்லாவற்றையும்
க்ருஹித்வா – மனதினுள் கவனித்துத் தீர்மானித்து
ராக்ஷஸேந்த்ராய – இராக்ஷஸ மன்னனுக்கு
யதாவிதி – சாஸ்திரோக்தமாய்
சலிலம் – ஜலத்தை
உபஸ்ப்ருஷ்ய – தெளித்து
தாருணம் – பயங்கரமான
சாபம் – ஒரு சாபத்தை
உத்ஸசர்ஜ – இட்டார்
அகாமா தேன யஸ்மாத்த்வம் பலாத்பத்ரே ப்ரதர்ஷிதா |
தஸ்மாத்ஸ யுவதீமன்யாம் நாகாமாமுபயாஸ்யதி |\
பத்ரே – எனது அன்புக்குரிய நல்லாய்
அகாமா – காதல் கொள்ளாத
த்வம் – நீ
தேன – அவனால்
பலாத் – பலாத்காரமாய்
ப்ரதர்ஷிதா – கற்பழிக்கப்பட்டு விட்டாய்
யஸ்மாத் தஸ்மாத் – இது காரணமாய்
ஸ: – அவன்
அகாமாம் – ஆசை கொள்ளாத
யுவதிம் – சிறுமி
அன்யாம் – எவள் ஒருவனையும்
ந உபயாஸ்யதி – அவன் கை தீண்டக் கூடாது
யதா ஹ்ரகாமாம் காமார்தோ தர்ஷயிஷ்யதி யோஷிதம் |
மூர்தா து சப்ததா தஸ்ய ஷகலீபவிதா ததா ||
காமார்த: – காமாதுரனாய்
அகாமாம் – காதல் கொள்ளாத
யோஷிதம் – ஒரு பெண்ணை
யதா – எப்போதாவது
தர்ஷயிஷ்யதி – உல்லங்கனம் செய்கின்றான்
து – என்னும் பட்சத்தில்
ததா ஹி – அந்தக் கணமே
தஸ்ய – அவனது
மூர்தா – சிரம்
சப்ததா – ஏழு பாகமாய்
ஷகலீபவிதா – துண்டம் துண்டமாய் வெடிக்கக் கடவது.
உத்தரகாண்டம், 26-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 43,44,45
இப்படி சாபத்தை நளகூபரர் ராவணனுக்குத் தர, அப்போதே தேவர்கள் அனைவரும் பேரானந்தம் அடைந்தார்கள். வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது.
மயிர்க்கூச்செறியும்படியான இந்த சாபத்தைக் கேட்ட தசக்ரீவன் மனம் கொள்ளாத ஒரு பெண்ணிடம் சம்போகம் கொள்வது என்ற எண்ணத்தையே அப்போதிலிருந்து விட்டொழித்தான்.
There have been lot of discussions on the date of Adi Sankara and a lot have been written on topic. Kanchi Paramacharya (1894—1994) had given a long explanation for dating him in fifth century BCE. But people attached to Sringeri Mutt believes that Shankara lived around 788 CE.
My argument is based on Sangam Tamil literature and Sundara Pandya. I have written about it in Tamil and posted it in this blog on 21st March 2012.
Adi Shankara’s favourite simile is rope mistaken for a snake. He used this allusion umpteen times in all his works. No one has used this like him. Greek Philosopher and founder of scepticism Pyrroh 360-270 BCE used this simile. Famous historian K A Neelakanta Sastri has commented on it saying that it was unusual for a Greek philosopher to use it. I think that he copied it from Adi Shankara. The reason for my conclusion is that he accompanied Alexander the Great. All of us knew Alexander’s unquenchable thirst for Hindu Philosophy. Swami Vivekananda, Paramahamsa Yogananda ,Sathya Sai Baba and many scholars have dealt with this subject.
More over this simile is used by Uuttiyaar, a Sangam Age poet. He used this simile in Akananuru (verse 68).: “A thunderbolt struck the Asoka Tree mistaking the swing rope for a snake”. Another poet Kutavaayir Keerathanaar used a similar comparison in verse Akam.119. This is to show that it is a typical Indian analogy. Sandam Tamil Books are dated between first century CE and Third Century CE.
Sundara Pandya mystery is not solved until this day. He was a great Sanskrit Scholar and written a book on morals like Valluvar. Sankara had taken some slokas from him and used them in his commentaries. This Sundara Pandya and Murthi Nayanar of Periya Puranam are not historically documented. Murthy Nayanar was garlanded by an elephant which is blind folded and made him King of Madurai when the ruling king died suddenly.
I quote these two anecdotes to show that there are gaps in Indian History which are not filled satisfactorily. And Sankara’s age also remains a mystery until this day. I have an unacceptable suggestion for the Sankara Mutts in different parts of India. Since Abi Nava Sankara did exactly what Adi Sankara did, there erose a big confusion. But the Mutts were happy in saying Sankara did this Sankara did that. Their policy was ends justify means. So they did not bother to clarify which Sankara did what. If they come forward boldly and put all Sankara’s writings to Linguistics Test, we will know which Sankara did what.
Now Tamil Scholars admit there were Three to Six Avvaiyars, based on linguistics and language and style.
The reason I am mentioning this issue in this article is my very first page of research notes on V C has list of similes and imageries’
Here is a list I wrote on 5-9-1994 in my V C book:
Dream – waking
The eighth century Tamil Siddha used many images of Adi Sankara
மதுரையை உண்டாக்கிய செட்டியார் பெயரும் தனஞ்ஜயன் ; இது செட்டியார்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் பெயர்.. புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலில் பொற்றாமரைக் குள தூண்களில் ஒன்றில் தனஞ்ஜயன் சிலை உள்ளது.அதை பாண்டவர் சிலை என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் திருவிளையாடல் புராணத்தைப் படிப்போருக்கு அது செட்டியார் சிலை என்பது புரியும்.
முன்காலத்தில் மதுரைக்குப் பக்கத்தில் பாண்டியர் தலைநகர் இருந் தது ; இப்போதைய மதுரை கடம்பவனக்காடாக இருந்தது . தனஞ்ஜயன் என்ற வணிகர் பக்கத்து ஊர்களில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்புகையில் கடம்ப வனம் வழியாக வந்தார். அதற்குள் இருட்டிவிட்டது . பயந்துகொண்டே வந்த அவர் காட்டில் ஒரு அரிய காட்சியைக் கொண்டார். ஒளிமயமான ஓரிடத்தை நாடிச் சென்று மறைந்திருந்து பார்த்தபோது தேவர்கள் வந்து ஒரு லிங்கத்துக்கு பூஜைசெய்வதை பார்த்தார். மறு நாள் பாண்டிய மன்னனைச் சந்தித்து தான் கண்ட அரிய காட்சியைச் சொன்னவுடன் , மன்னனும் பரிவாரம் சூழ காட்டிற்குள் சென்று சிவ லிங்கம் இருப்பதைக் கண்டான்; அதன் மீது கோவிலை எழுப்பி நாற்புறமும் வீதிகளை உருவாக்கி புதிய மதுரையை எழுப்பி, அதைத் தலை நகரமாக்கினான் ; இப்போதும் மீனாட்சி கோவிலுக்குள் ஒரு கடம்ப மரத்தைச் சுற்றி மேடை அமைத்து மரத்திற்கு வெள்ளிக்கு கவசம் பூட்டிருப்பதைக் காணலாம்.அதுதான் மதுரையின் தல விருட்சம். உள்ளூர் பக்தர்கள் மரத்தை வலம் வந்து அடுத்த சந்நிதிகளுக்குப் போவார்கள் .
பகவானை அறிந்த பூர்வாச்சார்யார்களால் ரக்ஷிக்கப்பட்டவர். அவர்களின் ஸம்பிரதாயமின்றி மற்ற எவ்வகையிலும் அறியக் கூடாதவர் .
என் கருத்து
இதே குப்த என்ற பெயருடன் 400 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆண்ட வம்சம்தான் எல்லோரின் பாராட்டையும் பெற்றது. இந்தியாவின் பொற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது; அவர்கள் அடித்த தங்கக் காசுகளை பிரிட்டிஷ் மியூஸியம் முதல் எல்லா காட்சியகங்களிலும் காணலாம். பாஹியான் போன்ற வெளிநாட்டு யாத்ரீகர்கள் வீட்டுக்குப் பூட்டுப் போடாமல் நல்லாட்சி நடந்ததாக புகழ் கின்றனர்.
இன்னும் ஒரு அர்த்தம் சித்ர குப்தன் போன்றது ஒருவர் இறந்துவிட்டால் எம தர்ம ராஜன் தன்னுடைய தூதர்களை அனுப்பி உயிரைப் பறிப்பான் என்றும் யமனின் அக்கவுண்டண்ட் / கணக்குப்பிள்ளை அந்த உயிரின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்புவார் என்றும் சொல்லுவார்கள். இதில் பெரிய ரகசியம் உள்ளது.
சித்ர என்றால் ஓவியம்/ வரைபடம் ;குப்த என்றால் ரகசிய அல்லது மறைவான ;
நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் நினைக்கும், செய்யும், எல்லா பாவ புண்ணியச் செயல்களும் ரிக்கார்ட்/ பதிவு ஆகிறது இதுதான் குப்த சித்திரம். இது சூப்பர் பாஸ்ட் கம்பியூட்டர் போல கணக்கிட்டு யமன் முன்னால் காட்டும். அதற்கேற்ப நமக்குப் பலன் கிட்டும். சித்ர குப்தன் என்பது ஆள் அல்ல. நம் பாவ புண்ணியக் கணக்கு.
சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதற்கும் அதை இயக்கி மீண்டும் பூமிக்குக் கொண்டுவரவும் பல கோடி கணக்குகள் செய்யவேண்டும். இப்போது அதை எல்லாம் கம்யூட்டரே செய்துவிடுகிறது . அது போல நம்முடைய சொல், செயல், சிந்தனை மூன்றையும் மறைவாக- அதாவது நாம் அறியாமல்– கணக்கிடுவதே சித்ர குப்த .
இதையெல்லாம் அறிந்துதான் சந்திர குப்தனும் , சமுத்திர குப்தனும் பெயர் வைத்துக் கொண்டார்கள் போலும் !
xxxx
தாமோதரஹ , தாமன் — நாம எண்கள் – 367
தாம -நாம எண் 211
தாம-211
ஒளியாயிருப்பவர் ; அல்லது விரும்பினவற்றிற்கு எல்லாம் இருப்பிடமாகியவர்..
பரப்ரஹ்ம பரந்தாம பவித்ரம் பரம் பவான் என்று கீதையில் வருகிறது 10-12
தாமம் என்னும் உலகங்களை தன் வயிற்றில் வைத்திருப்பதால் தாமோதரன் – தாமானி லோக நாமானி ஹ்யுதரே யஸ்ய சந்தி ஸஹ
தாமோதர இதி க்யாதோ யசோதா தாம பந்தனாத்.
தாமம் = கயிறு
என் கருத்து
2000 ஆண்டு தமிழ்ச் சங்க பாடல்களை இயற்றியவர்களில் தாமோதரன், கேசவன் பெயர்கள் உள்ளன.
ருத்ர தாமன் என்ற மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்து புகழ்பெற்ற கல்வெட்டை செதுக்கியுள்ளான். அவன் ஆப்கானிஸ்தான் முதல் குஜராத் வரை ஆட்சி செய்தான்.
தாமம் என்பதற்கு கயிறு என்ற பொருளும் உள்ளதால் எல்லோரையும் கட்டுக்குள் வைத்திருப்பவன் என்ற பொருளும் உண்டு.. இப்படியாக 2000 ஆண்டாக புழங்கும் சொல் இது. இன்றும் தாமோதரன் என்ற பெயரை இந்தியா முழுதும் காண்கிறோம்
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்; PART- 10
ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் உருகொண்டா Urukunda is a small village in Andhra Pradesh ஆகும். புகழ்பெற்ற மந்திராலயம் ராகவேந்திரா சுவாமி சமாதி அருகில் இருக்கிறது. மந்திராலயத்திலிருந்து 44 கிலோமீட்டர் தூரம்தான் .
இந்தக்கோவிலை ஈரண்ண அல்லது வீரண்ணா சுவாமி கோவில் என்றும் அழைப்பார்கள்.அங்கு வீரண்ணா என்ற முனிவர் தவம் செய்ததால் இந்தப் பெயர். கோவிலின் சிறப்பு என்ன வென்றால் நரசிம்ம சுவாமி சந்நிதிக்குப் பின்னால் வளரும் அரச மரம் ஆகும். இதனால் கோவிலுக்கு கூரை கிடையாது. மரத்தினையும் அஸ்வத்த நாராயணன் என்ற பெயரில் கிராம மக்கள் வலம் வருகிறார்கள்.
நரசிம்மர் சிலை அருகில் வெள்ளியிலான வீரண்ணா சுவாமியின் விக்கிரகமும் உளது . மஹாசிவராத்ரியின் போதும் ஆவணி மாத மூன்றாவது திங்கள்கிழமையிலும் சிறப்பு ஆராதனைகளை நடக்கும். அப்போது லட்சக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். ராகவேந்திர சுவாமிகளும் இங்கு வந்து தர்சித்ததாக கர்ண பரம்பரைக் கதைகள் இருப்பதால் கோவிலின் மகத்துவம் அதிகரிக்கிறது . சந்நிதிக்கு முன்னர் பெரிய மண்டபம் உளது கோவில் பூட்டப்பட்டபோதும் கோவிலுக்கு கூரை இல்லாததால் மக்கள் கோவிலைச் சுற்றி வரமுடியும்..கோவிலுக்குள் கணபதி சிலையும் இருக்கிறது. வேறு ஒரு மரத்தின் கீழ் நாகர் சிலைகளும் இருக்கின்றன.
அருகிலேயே துங்கபத்ரா நதியிலிருந்து வரும் பெரிய கால்வாய் ஓடுவதால் பக்தர்கள் அதில் குளித்துவிட்டு தாங்களாகவே சமைத்தும் சாப்பிடுகின்றனர் . கோவிலில் அன்னதான திட்டத்தின் கீழ் தயிர்சாதமும், புளியஞ்சாதமும் வழங்கப்படுகிறது . கோவில் தரிசனத்துக்கு கட்டணம் உண்டு.
கார்கள் முதலிய வாகனங்களை நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து உருகொண்ட செல்ல 576 கி.மீ. அங்கிருந்து 44 கி.மீ.யில் மந்த்ராலயம்..
Contact Number: 094910 00738 and 99663 90671
Temple Timing: 6 AM to 10 PM
Distance Between Chennai to Urukunda is 576 Kms
Distance between Mantralayam to Urukunda is 44 Kms
நரசிம்ம சுவாமி கோவில் பற்றி கோவில் வெப்சைட்டில் வீடியோ காட்சியும் உளது. நேரில் செல்ல முடியாதோர் வீடியோவில் தரிசிக்கலாம்.
xxxxx
யாகந்தி உமா மகேஸ்ஸ்வரர் கோவில்
மந்திராலயம் அல்லது கர்நாடகத்திலுள்ள ஹம்பி செல்லுவோர் சுமார் 150 கி.மீ தொலைவிலுள்ள யாகந்தி சிவன் கோவிலுக்கும் செல்லலாம். இது இருப்பது ஆந்திர மாநிலத்தின் நந்தியால் மாவட்டம் ஆகும்.
சங்கம வம்ச மன்னர் ஹரிஹரபுக்க ராயர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோவிலைக் கட்டினார்
கோவிலைப் பற்றி சில கதைகள் இருக்கின்றன. அகத்திய முனிவர் விஷ்ணு சிலையை நிறுவ முயற்சி எடுத்துக் கொண்டார். ஆனால் விக்கிரகம் கொஞ்சம் சிதிலம் அடைந்ததால் மன வருத்தம் ஏற்பட்டது. அப்போது சிவபிரான் தோன்றி இந்த இடம் கயிலாயம் போல இருப்பதால் சிவன் சிலையை நிறுவும்படி கூறினாராம். அகத்தியரும் உமையுடன் இருக்கும் சிவனை வேண்ட, அவரும் அப்படியே அருளினாராம்.
இன்னொரு கதை சிட்டப்பா என்ற பக்தர் கதை. சிவ பக்தரான அவருடைய முன்னே, ஒரு புலி தோன்றவே அவர் சிவனைக் கண்டுவிட்டேன் என்று மீண்டும், மீண்டும் சொல்லி ஆனந்தக் கூத்தாடினாராம். பின்னர் அங்கே சிவன் கோவில் உருவானது.
புஷ்கரிணி
இந்தக் கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு. மலை அடிவாரக் கோவில் இது. மலையிலிருந்து ஓடிவரும் தண்ணீர் ஒரு நந்தியின் வாய் வழியாக வரும்படி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதில் குளித்து சுவாமியை வழிபடுகின்றனர். அந்த நீர் ஒரு புஷ்கரிணியாக தேங்கி நிற்கிறது.
மூன்று குகைகள்
அடுத்த சிறப்புகள் மூன்று குகைகளாகும் . வீர பிரம்மேந்திர சுவாமி குகை, வெங்கடேஸ்வரா குகை, அகஸ்தியர் குகை குறிப்பிடத்தக்கவை.
வீர பிரம்மேந்திர சுவாமி ஆந்திரத்தில் புகழ்பெற்றவர். அவர் எழுதிய கலா ஞானம் என்ற நூலில் இங்குள்ள வெங்கடேஸ்வரா குகையை திருப்பதி போன்றது என்று புகழ்ந்துள்ளார். அந்தக் குகையில் சேதமடைந்த பெருமாள் உருவமும், அகஸ்தியர் குகையில் தேவி உருவமும் உள்ளன. வீர பிரம்மேந்திர குகையில் அமர்ந்துதான் அவர் கலா ஞானம் நூலை எழுதினார்.
வளரும் நந்தி
இங்குள்ள நந்தி சிலை பெரிதாகிக்கொண்டே வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர் . சிலவகைப் பாறைகள் நாளடைவில் பெரிதாகும் என்றும் சொல்லப்படுகிறது .
அகத்திய முனிவரை காகங்கள் தொந்தரவு செய்ததால் அவை குகைக்குள் வரக்கூடாது என்று அகஸ்தியர் சபித்ததால் குகையில் காகங்கள் இல்லை என்றும் சொல்லுவார்கள் .
கோவில் இருப்பிடம்
இது நந்தியால் மாவட்டத்தில் உள்ளது
கர்னூல் நகரத்திலிருந்து யாகாந்தி 100 கி.மீ.
பங்கனப்பள்ளியிலிருந்து 14 கி.மீ.
கட்டுரையிலுள்ள படங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டன. நன்றி.