முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 27 (Post No.13,189)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,189

Date uploaded in London – –   29 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 27

xxxx

278. பிரமியத்திற்கு

சந்தன மூலம், அதாவது சந்தன மறைத்து வேரின் பட்டையை ஆப்பிளில் அரைத்துக் காய்ச்சி யுண்டுவந்தால் மேகம்- பிரிமியம் தீரும். தேகத்தில் அழகுண்டாகும் .

இதுவுமது

சந்தன மூலத்தைக் கிஷாயம் வைத்து உண்டுவந்தால் மேற்கூறியவியாதிகள் தீரும்.

இதுவுமது

சந்தன அத்தர் முதல் தரமானது அரைக்கால்  ரூபாயிடையெடுத்து ஒரு செவ்விளநீரைக் கண்திறந்து அதில் விட்டு நன்றாய்க்  குலுக்கி சாப்பிடவும். இப்படி மூன்று வேளை சாப்பிட்டால்  கொடூரமான வெள்ளையுடனே  தீரும்..

XXXX

அஸ்தி காங்கை தீர

சதையொட்டி இலையாய்ப் பாலில் அரைத்துக் கலக்கி உண்டு வந்தால் வெட்டை எரிவு காந்தல் இவை தீரும்.

xxx

வண்டு கடி சொறி தேமல் தீர

சரக்கெண்ணெய் மூலத்தைப் பாலில் அரைத்து கலக்கி உண்டு வந்தால் வண்டு கடி சொறி தேமல்  விஷ நீர் முதலியவை தீரும்.

xxxx

பித்த குன்மசாந்தி

சத்திசாரணை மூலத்தை  பால் விட்டரைத்து பில்லை  தட்டியுளர்த்திப் பொடி செய் து கொஞ்ச ம் சீனி கலந்து வைத்துக்கொண்டு திருக்கடிப் பிரமாணம் நெய்யிலாவது தேனிலாது உண்டுவந்தால் பித்த குன்மம் சாந்தியாகும் . பத்தியமில்லை

xxxx

மேக சூட்டுக்குத் தைலம்

சவுரிப் பழம் 2- மிளகு 1 பலம்  இதுகளை பசும்பால் விட்டரைத்து கால்படி நல்லெண்ணெயிற் கரைத்துக் காய்ச்சி  வடித்து  தலை முழுகி வந்தால் மேக சூடு சாந்தியாகும் .

xxxx

மேக வியாதிக்கு

சங்கம் குப்பிச் சாற்றை தனியாயாவது ஆமணக்கெண்ணெய்யுடன் கழண்டாவது  கலந்தாவாவது , காலையில் ஒரே வேளை யாக சுமார் ஓன்றரைப் பலத்திற்கு குறையாமல் கொடுத்துவந்தால் இரண் டொரு  தடவை வலம் உதையும் . கண்டமாலை – மேகவெள்ளையிவை சாந்தியாகும் .

xxxx

நாசிகாபரணம்

சமுத்திராப்பழ த்தைச்  சூரணித்து , மூக்கிலுள்ள ரிணங்களுக்கு நசியம் செய்துவந்தால் மூக்கு  ரிணம் ஆறும். தலை பா ரம் தீரும் .

xxxx

மயிர் வளர

சடாமாஞ்சியை  எண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு தலை முழுகி வந்தால் மயிர் வளரும். சற்று வாசனையுள்ளதா கவுமிருக்கும் .

xxxx

மாந்தங்களுக்கு

சதா ப்பிலையை சித்தாமணக்கெண்ணெயுடன்  காய்ச்சியாவது , மேற்படி இலைச்  சாற்றைத் தனியாயாவது  குழந்தைகளுக்கு உபயோகித்து வந்தால் மாந்தம் அணுகாது .

xxxx

கபம் அல்லது சிரசு நோய்

சதக்குப்பையை சூரணி த்து சக்கரை கூட்டி திருகடியளவுண்டுவந்தால் கபம் – சிரசு  நோய் – செவி  நோய் – பீனிசம் – மூலக்கடுப்பு- இவை சாந்தியாகும்.

xxxx

தாது நஷ்டத்திற்கு

சண்பக மொக்கைக் கிஷாயம் செய்து , பால் சக்கரைபோட்டு உட் கொ ண்டுவந்தால்  அஸ்தி சுரம் – பித்த சுரம் – கண் அழலை – மேகம் இவை தீரும் ; தாது கட்டும் .

xxxx

நாடியிருக

சத்தி சாட்டரணை மூலத்தைச் சூரணித்து சக்கரை கலந்து திருகடியளவு உண்டுவந்தால்மேகம் விப்புருதி தீரும்.

விந்து உண்டாகும் .

xxxx

290. வயிற்று நோவுக்கு

சப்பாத்தி சமூலத்தைக் கொண்டுவந்து எண்ணெயுடன் சேர்த்துக்  காய்ச்சி  பிரசவ வேதனை போன்ற வயிற்று நோவுக்கு க் கொடுக்கப்படும் .

xxxx

தகுந்த ஆகாரம்

சவ்வரிசியை அரை அவுன்ஸுயெடுத்து  நாலு திராம் தண்ணியில் போட்டு 2 மணிநேரம் ஊறிய பின் அடுப்பிலேற்றி கால் மணி நேரம் வேகவைத்து அதன்பின்பு பசும்பாலும் சக்கரையும் கலந்து இறக்கி வாசனைக்காக கொஞ்சம் ஜாதிக்காய் தூளாவது கருவாப்பட்டை தூளாவது கலந்து சாப்பிட்டால்  கொடிய ரோகம் இருமல் இவைகளால் அவஸ்தைப்படும் பலவீனமுடையவருக்கு நல்ல பலனையுண்டுபண்ணும் . கைகால் அசதி நீங்கும். இது எத்தனை தடவை வேண்டுமானாலும் அவ்வப்போது செய்து கொடுக்கலாம்.

xxxx

சக்கரை வேம்பு இலை

காயசித்தியாகும் கட்டிய சிலேஷ்மமறும்

தூயவிந்துநாதமிவை சுத்தியாம் — தூய்வதற்கு

எத்திக்குங் கிட்டும் இலையருந்தில்  வாயெல்லாம்

தித்திக்கும் வேம்பதையே தேடு

பொருள்

சக்கரை வேம்பு — இஃ து தூயவர்களுக்கு எ த்திக்கிலும் கிடைக்கும் .இந்த சக்கரை வேம்புயிலையை விடாமல் மண்டலக்  கணக்காய்த் தின்றுவந்தால்  காயசித்தியாகும்;   இரத்தம் இருகும் . சுக்கில சுரோணிதங்கள் சித்தியாகும். இதைத் தின்றால் வாய் தித்திக்கும்.

xxxx 

காணா வாய்வுகட்கு

சந்திரமல்லி மூலத்தைப் பாலில் அரைத்தருந்தி வந்தால்  தனுர் வாதம் முதலியதும்  உடம்பு வாதிக்கும் காணா வாய்வுகள் யாவும் தீரும்.

xxxx

உந்தி நோவுக்கு

சந்திரகாந்தி சமூலத்தைப் பால் விட்டரைத்து பாலில் கலக்கி யுண்டுவந்தால் நாபியிலுண்டாகும்  தழலெரிச்சல் – நீர்க்கடுப்பு இவை தீரும் .

xxxx

வியாதியுற்பத்தி

சக்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடியுண்டு வந்தால்  வயிற் ம ந்தம் – முளை மூலம் – வயிற்றெ ரிச்சல் – வயற் கடுப்பு – மருந்து முறிவு  இத்தனை துற்குணங்களுண்டாக்கும்

xxxx

296. சொறிகளுக்கு

சரக்கொன்னை பூவை எலுமிச்சம்பழச் சாறு விட்டு  அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி – கரப்பான்- தேமல் – இவை தீரும்.

தொடரும் …………..

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 27 ,சதையொட்டி, சந்திரகாந்தி,சடாமாஞ்சி , சதகுப்பை 

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 2 (Post No.13,188)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.188

Date uploaded in London – — 29 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 2

ச.நாகராஜன்

மேலே கண்ட கடிதத்தில் உள்ள வாசகங்கள் பூரி ஜகந்நாத்திலிருந்து கலிலியில் உள்ள தனது அம்மாவிற்கு ஏசு எழுதியவை. இரு பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதம் நூலில் பக்கம் 184-185இல் அப்படியே தரப்பட்டுள்ளது.

இன்னொரு கடிதத்தில், “ஜோஜப் தனது புத்த போதனைகள் மற்றும் ஹிந்து கொள்கைகள் பற்றிய கல்வியை இந்தியாவில் முடித்த பின்னர்

அவர் திபெத்தில் உள்ள லாஸாவிற்குச் சென்றார் என்கிறது. அங்கு அவர் பிரசித்தி பெற்ற புத்த துறவியான மெங்கெட்ஸேயை (Mengtse) தரிசித்தார் என்றும் கூறுகிறது.

புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கிறிஸ்துவின் கடிதமும் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களும் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அவை பதிவும் செய்யப்பட்டுள்ளது என்கிறார். அவர் குறிப்பிட்ட ஆவணங்களை சரி பார்க்கும் விதமாக ரோஸிக்ரூசியன் ஆர்டரில் உள்ள பழைய ஆவணங்களுடன் ஒப்பிடுகிறார்.

இந்த ஆவணங்கள் மிகப் பழங்கால தேவாலயங்களில் உள்ளன.

Essene Brotherhood – ன் Essene Records (page 178) 1500 ஆண்டுகள் பழமையான குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய ஆவணங்கள் இவை.

சத்திய பிரமாணம் செய்யப்பட்டு வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது என்று ரகசியமாகக் காக்கப்பட்டவை இவை.

இதே போலவே UNKNOWN LIFE OF JESUS CHRIST BY Prof. G.L. Christie of Paris University and V.R.Gandhi (published by Indo American Book Co, Chicago, U.S)  கீழ்க்கண்ட விஷயங்களைக் குறிப்பிடுகிறது:

Notovitech நோடோவிட்ச் என்ற ஒரு ரஷியர் 1880-ல் லடாக்கிற்கும் திபெத்திற்கும் சென்றார். அங்குள்ள லாமாக்கள் மத்தியில் ஜீஸஸ் என்ற பெயர் கூறப்படுவதைக் கண்டு அவர் வியந்தார்.

விசாரித்துப் பார்த்ததில் ஏசு ஆன்மீகக் கல்வியை அங்கு கற்றது பற்றிய விவர்ங்கள் அடங்கிய பதிவுகளை அங்குள்ளவர்கள் அவருக்குக் காண்பித்தனர். இருபதாம் வயதில் அவர் அங்கு இருந்ததையும் பின்னர் இந்தியாவில் 5 அல்ல்து 6 வருடங்கள் இருந்ததையும் அவை சுட்டிக் காட்டின.\

சில பக்கங்களின் போட்டோகாப்பிகளை எடுத்த அவர் தன்னுடன் அதைக் கொண்டு சென்றார். ஹிமிஸ் வம்சத்தைச் சேர்ந்த அந்த ஆவணங்களை தனது புத்தகத்தில் தந்துள்ளார்.

ஹிந்து கொள்கைகளில் அறிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு ஏசு தனது 13-ம் வயதில் இந்தியாவை நோக்கி வந்தார். தத்துவம், ஆன்மீகம், சாஸ்திரங்கள் பற்றி, ஹிந்து மதம் அந்தக் காலத்திலேயே மிக பிரபலமாக இருந்தது. திருமணத்தைத் தவிர்த்து (பக் 64) சிந்து வழியே செல்லும் ஒரு கூட்டத்துடன் சேர்ந்து அவர் பயணப்பட்டார்.

மிகுந்த புத்திகூர்மை உடைய ஏசு பாலி மொழியைக் கற்றார். (பக் 70) அவர் இமயமலைப் பகுதிக்குச் சென்றார்.

நூலில் 58 முதல் 98 பக்கங்கள் முடிய அவர் இந்தியாவில் இருந்தது பற்றிய ஏராளமான விவரங்கள் தரப்படுகின்றன.

பூரி ஜகந்நாத்தில் உள்ள மடாலயத்தில் அவர் ஐந்து வருடங்கள் புத்தரின் போதனைகளை நன்கு கற்றார்.

இதில் பல புத்தகங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

ஏசு ராஜ்கீரிலும் வாரணாசியிலும் கூட கல்வி கற்றார்.

அடுத்து இன்னும் ஒரு முக்கியமான புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்

            ***        தொடரும்

மே 2024 காலண்டர்: மேலும் 31 கருட புராண பொன்மொழிகள் (Post No.13,187)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,187

Date uploaded in London – –   28 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பண்டிகைகள் – 1 மே தினம்; 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்; 10- அட்சய திருதியை; 12 ஆதி சங்கரர் ஜெயந்தி; 22 வைகாசி விசாகம், நரசிம்மர் ஜெயந்தி;  23 புத்த பூர்ணிமா,28 அக்னி நட்சத்திரம் முடிவு

அமாவாசை- 7;  பெளர்ணமி – 23;

ஏகாதசி உண்ணா விரத நாட்கள் – 4, 19

முகூர்த்த நாட்கள் — 3, 5, 6, 13, 19, 26

xxx

மே 1 புதன் கிழமை

வேலைக்காரர்கள் மூன்று விதம்; உத்தமம், மத்யமம், அதமம்; அவர்களுக்கு  தரத்திற்கு ஏற்ப வேலை கொடுக்க வேண்டும் 1.112.1. கருட புராணம்

XXXX

மே 2 வியாழக் கிழமை

தங்கத்தின்  தரத்தை உரை கல்லில் உரசியும், வெட்டியும், தகடாக அடித்தும் , உருக்கியும் 4 விதங்களில் பரிசோதிக்கிறோம். வேலைக்கார்களையும் தோற்றம், நடத்தை, குலம் , செய்யும் வேலைகளைக்கொண்டு பரிசோதிக்க வேண்டும் 1.112.3.

XXXX

மே 3 வெள்ளிக் கிழமை

1.112.4. கஜானாவுக்கு அதிகாரியாக நியமிக்க வேண்டியவருக்கு நல்லொழுக்கம், நேர்மை, நல்ல குணங்கள், அழகு, , இனிமையாக பழகும் சுபாவம் இருக்க வேண்டும் .

XXXX

மே 4 சனிக் கிழமை

1.112.5. நகைகளின் மதிப்பு ஜொலிப்பு முதலியவற்றை அறிந்தவரை நகைகளை மதிப்பிட அதிகாரியாக நியமிக்கிறோம்; அது போல வீரர்களின் பலம், பலவீனத்தை அறிந்தவரைத்தான் தளபதியாக நியமிக்க வேண்டும்.

XXXX

மே 5 ஞாயிற்றுக் கிழமை

1.112.6. கண்காணிக்கும் அதிகாரிக்கு பிறரின் எண்ணத்தை அறியும் சக்தி இருக்க வேண்டும்; ஒருவரின் நடை உடை பாவனைகளைக் கவனித்து உரிய நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

XXXX

மே 6 திங்கட் கிழமை

1.112.8. அரசனின் தூதர் அஞ்சாமல் பேசுபவராகவும் புத்தி சாலியாகவும், குறிப்பறிந்து ஒழுகுபவராகவும் கடுகடுப்பானவராகவும் இருத்தல் அவசியம்.

xxxx

மே 7  செவ்வாய்க் கிழமை

1.112.14. கெட்டவனின்  வாயும் பாம்பின் வாயும் ஒன்றுதான். இருவருக்கும் இரட்டை நாக்குகள். பயங்கர வலியைஉண்டாக்கும் .

XXXX

மே 8 புதன் கிழமை

1.112.15. அறிவாளியாக இருந்தாலும் கெட்டவனை அணுகக் கூடாது; பாம்பின் தலையில் ரத்தினம் இருந்தாலும் யாரும் அணுகுவதில்லையே

XXXX

மே 9 வியாழக் கிழமை

1.113.7. பாம்புப் புற்று, தேன் , நிலவு , பிச்சை இடுதல் இவைகள் வளரந்து கொண்டே வரும் 

XXXX

மே 10 வெள்ளிக் கிழமை

1.113.8. ஒவ்வொரு நாளும் கொஞ்சம்  எடுத்தாலும் கண் மை குறையும்; காலமும் அப்படித்தான் குறைந்து கொண்டேவருகிறது.;ஆகையால் நேரத்தை வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும்

XXXX

மே 11 சனிக் கிழமை

1.113.9. காம எண்ணமுள்ள மனிதன் காட்டுக்குள் சென்று தவம் செய்தாலும் 100 இடையூறுகள் வரும். ஐம்புலன்களை அட்டக்கத் தெரிந்தால் வீடே தபோவனம் ஆகி விடும்

XXXX

மே 12 ஞாயிற்றுக் கிழமை

1.113.10. உண்மை என்பது குணத்தைப் பாதுகாக்கும் ; அறிவு என்பது படிக்கப் படிக்கப் பெருகும்; குடம் என்பது தேய்க்ககத் தேய்க்க மெருகு ஏறும். குடும்பம் என்பது நன்னடத்தையால் பெருமை பெறும்

XXXX

மே 13 திங்கட் கிழமை

1.113.11.சொந்தக்காரர்களிடம் போய் பணம் கொடுங்கள் என்று கெஞ்சசுவதைவிட, விந்திய மலையில் வசிக்கலாம் ; உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்கலாம்; பாம்புகளிடையே வசிக்கலாம் ; நீர்ச் சூழலில் குதிக்கலாம் .

xxxxx

மே 14  செவ்வாய்க் கிழமை

1.112.13. கணக்குப்பிள்ளையோ எழுத்தரோ, தலைமை அதிகாரியோ யாரானாலும் சோம்பேறியாக இருந்தால் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் .

xxxx

மே 15 புதன் கிழமை

1.113.32. பாம்பை விரட்டினால் கிணற்றுக்குள் போய்விடும்; யானையை மரத்தில் கட்டிவிடலாம் ; எலியை விரட்டினால் பொந்துக்குள் போய்விடும்; ஆனால் கர்ம வினை இதைவிட வேகமானது; எங்கும் தப்பித்து ஒளிய முடியாது

XXXX

மே 16 வியாழக் கிழமை

1.113.39. எப்போதும் கெடுதி செய்பவன் கெட்ட எண்ணங்களால் மரத்துப் போய்விடுகிறான். 100 குடம் ஜலத்தால்கூட அவனை சுத்தம் செய்ய முடியாது .

XXXX

மே 17 வெள்ளிக் கிழமை

1.113.34. நியாயமாக சம்பாதித்த பணம் நிலைத்து நிற்கும்; குணத்தால் மேலும் வளரும்; ஆகையால் முதலில் குணத்தை நாடுங்கள் ; உலகப் புகழ் பெறலாம் .

XXXX

மே 18 சனிக் கிழமை

1.113.17. தாய் என்பவள் லட்சுமி; தந்தை என்பவர் விஷ்ணு; அப்படியும்  மகன் கெட்டவனாக இருந்தால் யாரைத் தண்டிக்க முடியும்?

XXXX

மே 19 ஞாயிற்றுக் கிழமை

1.114.19. பொய் சொல்லி நண்பனாக்கிக் கொள்வோரும் பாவங்களைச் செய்து நல்லவன் போல காட்டுபவனும் மற்றவர்களை கண்ணீர் சிந்தவைத்து சம்பாதிப்பவனும் ; கொடுமை செய்து பெண்களை திருமணம் செய்வோரும் புத்திகெட்டவர்கள் .

xxxx

மே 20 திங்கட் கிழமை

1-113-41. சாது என்பவர் யார் ? கோபத்தில் கொடிய சொற்களை உதிர்க்கமாட்டார்; பாராட்டும்போது கர்வம் அடையமாட்டார்; இகழும்போது துன்பம் அடைய மாட்டார்.

xxxx

மே 21  செவ்வாய்க் கிழமை

1.113.20. ஒரு மனிதன், அவன் செய்த செயலிலிருந்து தப்பிக்கவே முடியாது; வானத்தில் தூக்கி எறியமுடியாது; கடலில் மூழ்கடிக்க முடியாது; அவனுடைய அம்மாவே பிடித்து தன்னிடம் வைத்து பாதுகாத்தாலும் விளைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.

XXXX

மே 22 புதன் கிழமை

1.114.18.  சிறுவர்களுக்கு இனிப்பு கொடுப்பவர்கள், நல்லோரிடம் பணிவானவர்கள், பெண்களுக்கு  செல்வம் தருவோர், இறைவனை தவத்தால் போற்றுவோர் , மக்களுக்காக உழைப்போர் — ஆகியோரே அறிவாளிகள்.

XXXX

மே 23 வியாழக் கிழமை

1.114.16. மதில் சுவருள்ள கோட்டையில் பெண்களை அடைத்து வைக்கலாம்.ஆயினும் நீண்ட கூந்தல் இல்லாதவரை அவர்களை யார் கவனிக்கப் போகிறார்கள்; நீண்ட கூந்தலை வைத்தே தப்பித்துவிடுவார்கள் .

XXXX

மே 24 வெள்ளிக் கிழமை

1.114.14. பிராமணன் இலக்கண வித்தகனாக இருப்பதில் அதிசயமில்லை; நல்ல நிர்வாகம் செய்யும் அரசன், குணவானாக இருப்பதில் அதிசயமில்லை; ; அழகான பெண், கற்பிலிருந்து விலகுவதில் அதிசயமில்லை; ஏழைகள் பாவங்களை செய்வதிலும் அதிசயமில்லை;.

XXXX

மே 25 சனிக் கிழமை

1.113.14. பீமன், அர்ஜுனன் முதலியோர் இளவரசர்கள்தான்; சூரியன், சந்திரன் போல பிரகாசமானவர்கள்; கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டவர்கள் ஆயினும் அவர்களை கிரகங்கள் ஆட்டிப்படைத்தன.

XXXX

மே 26 ஞாயிற்றுக் கிழமை

1.114.13 தீ, தண்ணீர், பெண்கள், அரச குடும்பம் ஆகியவற்றை எல்லோரும் உதவிக்கு அணுகுவார்கள்; ஆயினும் அவர்கள் திடீரென்று உயிரைப் பறித்து விடுவார்கள்.

XXXX

மே 27 திங்கட் கிழமை

1.113.19. தீதும் நன்றும் பிறர் தர வாரா; நாமே நமக்கு வருவித்துக் கொள்வதுதான்; யாரிடம் பிறக்கப்போகிறோம் என்பதை தேர்ந்தெடுப்பதும் நாமே (கர்ம வினை).

xxxx

மே 28 செவ்வாய்க் கிழமை

1.113.21. பலசாலி ராவணனும் காலத்தின் கோலத்தால் அழிந்தான்;திரிகூட மலையி ல் கோட்டை; கடலே அவனுக்கு அகழி.சிப்பாய்களோ ராக்ஷஸர்கள்; அவன் பின்பற்றிய சாஸ்திரமோ உசனஸ்/ சுக்ரன் கவி கொடுத்தது. அப்படியும் காலதேவன் அவனை முடித்துவிட்டான்.

xxxx

மே 29 புதன் கிழமை

1.114.10. ஆண்கள் காணப்படாதவரைதான் பெண்கள் கற்புக்கரசிகள் ;ஒரு மனிதனுடன் வசிக்கும்போது வேறு மனிதனை பெண்கள் அன்பாகப் புகழ்வார்கள்

XXXX

மே 30 வியாழக் கிழமை

1.114.22. நம்பத்தகாதவர்களிடம் நம்பிக்கை வைக்காதே; நண்பர்களிடம் கூட ரகசியங்களை சொல்லாதே ; அவனுக்கு கோபம் வந்தால் ரகசியங்களை அம்பலப்படுத்திவிடுவான்.

xxxx 

மே 31 வெள்ளிக் கிழமை

1.114.21. தேவையான பொருள்கள்/ சூழ்நிலை   இருந்ததால் மட்டும் ஒருவன் சந்நியாசி ஆகிவிடமாட்டான்.  மதுபானம் அருந்தும் பெண் கற்புக்கரசியாக இருக்க முடியுமா ?

–subham–

Tags- மே 2024 காலண்டர் , மேலும் 31 , கருட புராண,  பொன்மொழிகள்

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 5 (Post.13,186)


காட்டுப் புகையிலை 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,186

Date uploaded in London – –   28 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Part – 5 

F16. Family: Burseraceae 

66. Boswellia serrata Roxb. ex Colebr.

குடும்பம் பர்ஸிரேசி

பாஸ்வெல்லியா செரராடா

உத்தர பிரதேச சோன்பத்ரா மாவட்ட மக்கள் இந்தச் செடியின் விதைகளை விஷத்தை முறிக்கக் கொடுக்கின்றனர்.

XXXX 

F17. Family: Calophyllaceae 

67. Mesua ferrea L.

குடும்பம் கலோ  பில்லேசி

மெசுவா பெர் ரேரா

மிஜோரம் மக்கள் இலையையும் பூவையும் பாம்புக்கு கடி சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள் .

XXXX 

 F18. Family: Campanulaceae 

68. Lobelia nicotianifolia Roth. ex Schult.

Kattu-p-pukaiyilai (Tamil: காட்டுப்புகையிலை)

குடும்பம்- கம்பனுலேசி

லோபெலியா நிகோடியானி போலியா

கர்நாடகத்தில் சிருங்கேரி, சிக்மகளூர் வட்டார மக்கள் இதன் இலைக் கஷாயத்தை கடித்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள்

XXXX

கப்பாரிஸ் செய்லானிகா /ஆதொண்டை

F19. Family: Capparaceae 

69. Capparis decidua (Forssk.) Edgew.

குடும்பம் கப்பரேஸி

கப்பாரிஸ் டெசிடுவா

உத்தர பிரதேச சோன்பத்ரா மாவட்ட மக்கள் இந்தச் செடியின் விதைகளை விஷத்தை முறிக்கக் கொடுக்கின்றனர்.

XXXX

70. Capparis zeylanica L.

கப்பாரிஸ் செய்லானிகா /ஆதொண்டை

Common name: Ceylon caper, Indian caper • Hindi: Aradanda • Tamil: Adondai ஆதொண்டை  • Konkani: गोविंदफल Govindphal • Marathi: गोविंदी Govindi • Sanskrit: व्याघ्रनखी Vyaghranakhi • Telugu: Palaki • Gujarati: Karrallura • Rajasthani: Gitoran • Kannada: Mullukattari • Nepali: बन केरा Ban kera • Kannada: ಅಂತುಂಡಿ Antundi, ಗೋವಿಂದಫಲ Govinda phala

மேற்கு வங்க புரூலியா வட்டார மக்கள் பாம்பு கடித்தால் இதன் பழங்களைச் சாப்பிட்டு குணமடைகின்றனர்.

XXXX

F20. Family: Celastraceae 

71. Gymnosporia royleana Wall. ex M.A. Lawson

குடும்பம் செலஸ்ட்ரேசி

ஜிம்னோஸ்போரியா ராய் லியா னா

மேற்குத் தொடர்ச்சி மலை மலாண்ட் வட்டார மக்கள் வேரின் மசியலை பசும்பாலுடன் சேர்த்து குடிக்கின்றனர்; வெளியில் பாம்பு கடித்த இடத்தில் அப்புகின்றனர்.

XXXX

72. Parnassia nubicola Wall. ex Royle

பர்னாஸியா நூபிகோலா

உத்தராஞ்சல் பித்தோர்கர் மக்கள் பாம்பு கடித்த ஆடு மாடுகளுக்கு வேரின் மசியலை சாப்பிடக்கொடுத்துவிட்டு , காயம் அடைந்த இடங்களிலும் தடவுகின்றனர்

XXXX

F21. Family: Cleomaceae 

73. Cleome gynandra L.

குடும்பம் க்ளியோ மேசி

க்ளியோம் கைநான்டரா

உத்தர பிரதேச சோன் பத்ரா மக்கள் இதை ஹுல் ஹுல் என்று அழைக்கிறார்கள்;

இலைகளைப் பயன்படுத்தில் சிகிச்சை தருகின்றனர்

XXXX 

F22. Family: Colchicaceae 

74. Gloriosa superba L.

குடும்பம் – கொல்ச்சிரேசி

க்ளோரியோசா சுபர்பா /Karthigaipoo (கார்த்திகைப்பூ) 

தமிழ் நாடு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மக்கள் இதை பாம்பு கடித்தால் கொடுக்கின்றனர்.

கோவை வட்டார பழங்குடி மக்கள் இதை பயன்படுத்துகிறார்கள். உத்தர பிரதேசத்தில் இதன் கிழங்கை உபயோகிக்கிறார்கள் .

XXXX

 F23. Family: Combretaceae 

75. Anogeissus latifolia (Roxb. ex DC.) Wall. ex Bedd.

குடும்பம் – கோம்ப்ரி டேஸி

அனோ கெய்சஸ் லாடிபோலியா

மத்திய இந்தியாவின் கோர்க்கு கோண்ட்  பழங்குடி மக்கள் பாம்பு கடித்த இடத்தில் முழுகி செடியையும் வைத்துக் கட்டுகிறார்கள் .

தொடரும்

சுபம் —-tags-  பாம்புக் கடி,  200  மூலிகை மருந்துகள் , Part 5

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 1 (Post.13,185)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.185

Date uploaded in London – — 28 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 1 

ச.நாகராஜன்

ஏசு கிறிஸ்து இந்தியாவில் இருந்தாரா என்ற சர்ச்சைக்குரிய விஷயம் பற்றி பல்லாண்டுகளாக விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது பற்றிப் பலரும் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்துள்ளனர்; நடத்தில் வருகின்றனர்.

ஜி.எம்.ஜகதியானி (G.M. Jagatiani)  என்பவர் 1983-ம் ஆண்டு ஒரு சிறிய புத்தகத்தை பிரசுரித்தார். அதில் அவர் கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Jesus Christ’s Life in India

By

R.R.Sakesana M.A., LLb, DL, SC

டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் எழுதிய Easterm Religions And Western Thought என்ற நூலில் 165-ம் பக்கத்தில், “புதிய ஏற்பாடு ஏசுவின் வரலாற்றை 13-ம் வயது வரை தருகிறது. ஜான் தி பேப்டிஸ்ட் – ஐ உபதேசிக்கும் வரை அடுத்த 17 ஆண்டுகள் அவர் எங்கிருந்தார் என்பதைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. பல மரபு வழிச் செய்திகள் அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் கிழக்கே விஜயம் செய்தார் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் இவற்றிற்கு ஆதாரம் இல்லை.” என்று எழுதியுள்ளார்.

இந்த எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் பார்வைக்கு கிறிஸ்துவின் பயணங்கள் பற்றியும் அவர் இந்தியாவில் கல்வி கற்றதைப் பற்றியும் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

தனது 25-2-1974 தேதியிட்ட கடிதத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவருக்கு இது பற்றிய ஆய்வுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பல புத்தகங்களில் குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம் :

The Mystical Life of Jesus

By

Spencer Lewis Ph.D.

Published by

The Supreme Grand Lodge of Amore,

San Jose,

California,

USA

அதில் சில பகுதிகள்:

சிறுவனாக இருந்த ஏசு கூட ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் பலருடன் கூட்டமாக ஜகந்நாத்திற்கு மிகக் குறுகிய வழியைத் தேர்ந்தெடுத்துச் செல்லலானார். அது இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்தது. அதன் இன்றைய பெயர் பூரி. பல நூற்றாண்டுகளாக அது புத்த மதத்தின் ஒரு மையமாகத் திகழ்ந்தது.

இந்தப் பயணத்திற்கான காலம் ஒரு வருடம்.

ஏசு பூரியில் ஒரு வருடம் கல்வி கற்கலானார்.  லாமாக்களின் உபதேசங்களில் அவர் நல்ல தேர்ச்சி பெற்றார். அவர்களை ஜெருசலத்திற்கு வருமாறும் அழைத்தார். (பக்கம் 181)

ஏசு கங்கை நதிக் கரையில் உள்ள வாரணாசியில் பல மாதங்கள் தங்கி இருந்தார். ஹிந்து மகானும் பெரிய சிகிச்சையாளருமான உத்ரகர் (Udrka) என்பவரிடம் ஹிந்து மருத்துவ சிகிச்சை முறைகளைக் கற்றார். பின்னர் ஏசு மீண்டும் பூரிக்கு வந்தார், அங்கு மதம் மற்றும் தத்துவம் பற்றி இரு வருடங்களுக்கும் மேலாகப் பயின்றார். அங்கு அவர் ஒரு ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

ஏசுவுக்கு ஒரு துயரமான செய்தி வந்தது. அவரது தந்தையார் கலீலியில் (Galilee) இறந்து விட்டதாகவும் அவரது தாயார் மிகவும் துயருற்று வருந்துவதாகவும் அவரை யாராலும் தேற்ற முடியவில்லை என்றும் வந்த செய்தியால் ஏசு துயரமுற்றார்.

இந்த காலகட்டத்தில் தான் இளம் ஜோசப் முதல் முறையாக தெளிவான வார்த்தைகளால் சொன்னவை ஆவணப் படுத்தப்பட்டது.

அது இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர் ESSENE தூதுவர்களுக்கு ஆறுதல் செய்தியாக அனுப்பிய கடிதம் இது:-

 “அன்புள்ள அம்மா, வருத்தப்பட வேண்டாம். தந்தையும் நன்றாகவே இருப்பார். நீங்களும் நன்றாக இருப்பீர்கள். நான் வரும் வரை பொறுத்திருங்கள். தங்கத்தினாலும் ரத்தினங்களாலும் செய்யப்பட்டவற்றை நீங்கள் பார்த்திருப்பதை விட நான் கொண்டு வரும் சிறப்பான பரிசுகளைப் பார்க்கப்போகிறீர்கள். எனது சகோதரர்கள் உங்களை நன்கு கவனிப்பார்கள் என்றும் உங்கள் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்றும் நம்புகிறேன். உள்ளத்தாலும் உயிராலும் உங்களுடன் எப்போதும் இருக்கும் உங்கள் மகன் ஜோசப்

தொடரும்

One Rupee Coin is sold for Rs.30,000 in London (Post No.13,184)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,184

Date uploaded in London – –   27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

4X75= 300 pounds.

There is an interesting advertisement in London Metro Newspaper about the value of Indian one rupee coin. It was published yesterday. It is a silver coin issued with Edward VII picture in India. It is a pure silver coin with one rupee value. Year 1904.

Now the advertisement says they have recovered Indian coins from the bottom of the sea. SS City of Cairo was the name of the ship that was torpedoed by a German war ship. This passenger ship sank in South Atlantic Ocean. No survivors reported. Recently two thirds of the treasures in the ship were recovered. And One Rupee Silver Coin was part of the treasure, says the Advt. Each coin is sold for £300. As of today’s exchange rate, it will be over Rs30,000.

If you have this coin, you can also make good money.

(see the attached pictures) 

–subham—

Tags- One rupee, silver coin, Edward VII, £300, Metro Advt.

More Quotations from Garuda Purana : May 2024 Calendar (Post No.13,183)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,183

Date uploaded in London – –   27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

FESTIVALS :1 May Day; 4 Agni Nakshatra period begins; 10 Akshaya Trtyai; 12 Adi Shankara Jayanthi; 22 Vaikasi Visakam & Narasimha Jayanthi; 23 Buddha Purnima; 28 Agni Nakshatra period ends.

Amavasai/ New Moon Day 7; Purnima/ Full Moon Day – 23; Ekadasi Fastig Days – 4, 19;

Auspicious Days – May 3, 5, 6, 13, 19, 26.

XXXX

May 1 Wednesday

1.112.7. The chief secretary to the king should be intelligent, clever in conversation, shrewd, truthful in speech, with sense organs under his control, and acquainted with all sastras.

xxxx

May 2 Thursday 

1.112.8. The chief ambassador should be intelligent, sensible, a reader of others’ minds, ruthless and blunt in speaking facts.

xxxx

May 3 Friday

1.112.13. Whether he is a writer, or a reciter, an accountant or a chief executive, if anyone is found to be lazy, he should at once be dismissed.

xxxx

May 4 Saturday

1.112.15. A wicked man should be avoided even if he happens to be a scholar. Is not a serpent terrific though its head is bedecked with a precious gem?

xxxx

May 5 Sunday

1.112.17. If a salaried servant of the king becomes so rich as to vie with him, is of equal competency, knows his inner secrets and vulnerable points, is very industrious and puts up a claim to half of his kingdom there is no harm if the king puts him to death.

xxxx

May 6 Monday

1.113.7. The anthill, honey, the moon in the bright half and alms wax little by little.

xxxx

May 7 Tuesday

1.113.9. A vicious and lustful man shall find hundreds of obstacles even in the forest; but if he can control his five senses he can practice penance even in his house. He who is engaged in activities not censurable and he who is free from passion can make his house a hermitage.

XXXX

May 8 Wednesday

1.113.10. Virtue is protected by truth, knowledge by further acquisition, a pot by frequent cleaning and a family by good conduct.

XXXX

May 9 Thursday 

1.113.11. It is better to stay in the forest of Vindhya, to die without partaking of food; it is better to sleep in a spot infested by serpents or to leap into a well; it is better to plunge into a whirlpool or a dangerous water current than to say “Please give” or beg for a sum of money from one’s own kindred.

XXXX

May 10 Friday

1.114.10. She serves one man but cherishes love for another. In the absence of man a woman can very well be chaste.

xxxx

May 11 Saturday

1.114.11. A mother moved by passion may commit some misdeeds. Though the sons may disapprove of the conduct yet they shall not worry much about them.

xxxx

May 12 Sunday

1.114.12. The body of a courtesan is prized in the world; the body that is held at stake always with the neck torn by the hoofs of debauches and hence always agitated and anxious. Her sleep is dependent on others’ convenience; she has to follow the wishes of others and without a show of sorrow she has to laugh and sport always.

xxxx

May 13 Monday

1.114.13. Fire, water, women, fools, serpents and royal households – these are to be resorted to by others always, yet they take away one’s life all of a sudden.

xxxx

May 14 Tuesday

1.112.14. The mouths of a wicked man and a serpent are sources of distress – since they are double-tongued, causing pain, ruthless and terrific.

xxxx

May 15 Wednesday

1.113.22. Everything happens in the age, time, day, night, hour or moment as is ordained beforehand; not otherwise.

xxxx

May 16 Thursday 

1.113.13. Knowledge is an ornament to a brahmana; a king is the beautifier of the world; the moon is an ornament of the sky; a good conduct is an ornament to everyone.

xxxx

May 17 Friday

1.113.14. Bhima, Arjuna and others were born as princes, they were pleasing and delightful like the moon; they were valorous, truthful, brilliant like the sun and were kindly protected by Lord Krsna. Even they were subjected to abject misery by the influence of evil planets; they had to beg for alms; if fate is adverse who is capable of what? The current of previous actions tosses everyone about.

xxxx

May 18 Saturday

1.114.14. What is there to wonder at, if a brahmana well versed in grammar becomes a great scholar? What is there to wonder at, if a king well versed in polity and administration becomes a virtuous king? What is there to wonder at, if a young woman endowed with beauty and charms errs from chastity? What is there to wonder at, if a poor man begins to commit sins sometimes?

xxxx

May 19 Sunday

1.114.16. Women may be confined to the nether worlds or may be imprisoned with high walls all round. Still if there is no moving glossy tuft of hair who can see them? [Using her long tresses she will escape from these places].

xxxx

May 20 Monday

1.114.18. He is the real scholar who pleases children with sweets, the good people with humility, the women with wealth, the deities with penance and people [by work] for their welfare.

xxxx

May 21 Tuesday

1.113.8. Seeing that collyrium and ink, used though very little every day, become exhausted after some time, and that the anthill flourishes day by day, one should be careful in not wasting one’s time. One should engage oneself in activities of charity or self-study.

xxxx

May 22 Wednesday

1.113.21. Even Ravana perished at the hands of time. Ravana whose fortress was the mountain Trikuta, the moat – the very ocean; soldiers – Raksasas; the action of the highest order; and the sastra propounded by Usanas [Sukra].

xxxx

May 23 Thursday 

1.113.24. The learning of bygone days, the money made over as gift and the actions done before – these run ahead of a person who walks at speed.

xxxx

May 24 Friday

1.113.20. A man can never forsake the action done by him far into the sky, or deep into the sea or high on the mountain; whether he is held by his mother on her head or kept in her lap.

xxxx

May 25 Saturday

1.113.19. The happiness is enjoined by oneself, the sorrow too is enjoined by oneself; even the womb selected by him is in accordance with the action of the previous birth.

xxxx

May 26 Sunday

1.113.18. Man enjoys only the fruits of his previous actions; whatever he has done in the previous births has its reactions now.

xxxx

May 27 Monday

1.113.41. The characteristics of a saintly man are: he is not elated much when honoured, he does not become angry when slighted, he does not speak harsh words in anger.

xxxx

May 28 Tuesday

1.113.17. The mother is goddess Laksmi herself; the father is Lord Vishnu; still if the son (Cupid) were to be of crooked mind, who is to be punished for the same?

xxxx

May 29 Wednesday

1.113.34. Riches acquired virtuously become stable; they flourish still more with virtue. Hence, when you aim at riches, remember this and seek virtue. You thus become great in the world.

xxxx

May 30 Thursday 

1.113.39. A man habitually wicked in deeds, with his conscience benumbed with evil thoughts, cannot be cleansed with a thousand lumps of clay or a hundred pots of water.

xxxx

May 31 Friday

1.113.32. When chased, a serpent escapes into a well, an elephant to the trunk (to which it can be tethered); a mouse to its hole; but who can fly from karma which is quicker than all these?

–subham—

Tags- May 2024, calendar, Garuda Purana, quotes, Quotations

கைகேயி எறும்புப் பெண்! கம்பன் சொல்லும் அதிசயக் கதை!! இந்து மதத்தில் எறும்பு – 2 (Post No.13,182)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,182

Date uploaded in London – –   27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

எறும்பு பற்றிய சுவையான இந்து மதக் கதைகளில் கம்பன் சொல்லும் கதைதான் மிகவும் சுவையானது ; பழைய கட்டுரையைத் திருப்பித் தந்துள்ளேன் .

அதற்கு முன்பாக சங்க இலக்கியத்தில், தமிழ்ப் பழ மொழிகளில் எறும்பினைக் காண்போம்.

சங்க இலக்கியத்தில் எறும்புகள்

அகம். 377-3; (339)குறு -12-1; புறம் – 173-7;பதிற்று  – 30-38

xxxx

கோடை நீடலின், வாடு புலத்து உக்க

சிறு புல் உணவு, நெறி பட மறுகி,

நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த

வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்

பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,–அகநானூறு 377

நீண்ட பயணம் மேற்கொண்ட தமிழ்க் காதலனின் புலம்பல்; எறும்புகள் அழகாக ஊர்ந்து செல்கின்றன. கோடைகாலத்தில் புல் லிருந்து விழுந்த அரிசியைச் சேகரித்துச் செல்கின்றன.

xxxx

இருதலைக்  கொள்ளி இதை நின்று வருந்தி,–அகநானூறு 369

இரண்டு புறமும் எரியும் கொள்ளிக் கட்டையில் இடையே நின்று தவிக்கும் மனநிலையில் தவிக்கிறேன் .

xxxxx

எறும்பி அளையின் குறும் பல் சுனைய

உலைக்கல் அன்ன பாறை ஏறி,

கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்–குறுந்தொகை 12

எறும்புப்புற்று போல் பாறைகளும் அதிலுள்ள ஓட்டைகள் நீர்ச்சுனைகள் போலவும் இருக்கின்றன.

xxxx

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!

……….

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,                   5

முட்டை கொண்டு வன் புலம் சேரும்

சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப,

சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்– புறநானூறு 173

ஒரு தமிழ் டாக்டர் இருக்கிறார்; அவர் பசி என்னும் நோய்க்கு மறுத்து தருகிறார்; அவர் பண்ணன் என்னும் பசிப்பிணி மருத்துவர்; அவரது வீட்டிலிருந்து சிறுவர்கள் சொருகி கவளத்துட ன் செல்லுவது எறும்புகள் முட்டை கொண்டு திட்டை ஏறுவது போல காட்சி தருகின்றது ; அப்படியானால் மழை  வரும்

XXX

பதிற்றுப்பத்தில் 30-38  நள்ளிரவில் கடவுளருக்கு எரியும் செந்நிறச் சோற்று உருண்டை கீழே விழும் காட்சியும் அந்தச் சிதறிய சோ ற்றுப் பருக்கைகளை பேய்களும் எறும்புகளும் கூட அண்டாத காட்சியும் வருணிக்கப்படுகிறது.

XXXX

நீதிநெறி விளக்கம் 37 (குமரகுருபரர்)

வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற்

றூங்குங் களிறோ துயருறா – ஆங்கதுகொண்

டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்

ஆருங் கிளையோ டயின்று.        37

யானையானது தனக்குப் பாகன் ஊட்டும் உணவுக் கவளத்தைத் தன் வாயில் போடும்போது ஒரு சிறுபகுதி தப்பிக் கீழே விழந்தால் அதற்காக யானை வருந்துவதில்லை. மாறாகத் தப்பி விழுந்த சோற்றுப் பருக்கைகள் கோடிக்கணக்கான எறும்புகள் உண்டு வாழும் உணவாக அது அமையும். அப்படி செல்வந்தர்களும்  தன் செல்வத்தின்  ஒரு பகுதியைத் தன் உறவினர்கள் அனுபவிக்கும்  படிச் செய்ய வேண்டும். 

XXXX

எறும்புகள் பற்றி மனு தர்ம சாஸ்திரம்

கருட புராண ஸ்லோகம் ஒன்றில் தர்மம், தேன்கூடு, வளர்பிறைச் சந் திரன் , எறும்புப் புற்று  ஆகியன வளர்ந்துகொண்டே வரும் என்கிறது ; அதற்கு முன்பாகவே 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மனு நீதி நூல் அதைச் சொல்லிவிட்டது

Manu 4-238 எறும்பு போல புண்ணியம் சேர்; சிறுகச் சிறுக சேர் என்று புகல்கிறது

धर्मं शनैः सञ्चिनुयाद् वल्मीकमिव पुत्तिकाः ।

परलोकसहायार्थं सर्वभूतान्यपीडयन् ॥ २३८ ॥

dharmaṃ śanaiḥ sañcinuyād valmīkamiva puttikāḥ |

paralokasahāyārthaṃ sarvabhūtānyapīḍayan || 4-238 || மனு

கறையான்கள் / வெள்ளை எறும்புகள் எப்படி மெதுவாக எறும்புப் புற்றினை (பாம்புப் புற்று) வளர்க்கிறதோ அதுபோல மனிதர்களும் சொர்க்கலோக வாழ்வுக்கு ஆன்மீக பலத்தை , எவருக்கும் தொல்லையின்றி; சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும் ( தவம் செய்யவேண்டும்)– (Manu Smriti 4-238).

XXXX

எறும்புகள் பற்றி மஹாபாரதம்

பூமிக்கடியிலிருந்து தங்கம் கொண்டுவரும் எறும்புகள் பற்றி மஹாபாரதம் சொன்னதை 2600 ஆண்டுகளுக்கு முன்னர் ஹெரோடோட்டஸ் என்ற கிரேக்கரும் உலகெங்கும் பரப்பினார்

Pipīlika (पिपीलिक).—An ant .Pipilikam- A kind of gold (said to be collected by ants); तद् वै पिपीलिकं नाम उद्धृतं यत् पिपीलकैः । जातरूपं द्रोणमेयमहार्षुः पुञ्जशो नृपाः (tad vai pipīlikaṃ nāma uddhṛtaṃ yat pipīlakaiḥ | jātarūpaṃ droṇameyamahārṣuḥ puñjaśo nṛpāḥ) || Mahābhārata (Bombay) 2.52.4.

XXXX

வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில்

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதா என்ற நூலில் எறும்புப் புற்றுகள் மூலம் நிலத்தடி நீரைக் கண்டுபிடிப்பது எப்படி என்று நிறைய ஸ்லோககங்களைத் தந்துள்ளார். எந்த மரம் இருந்தால் எந்த திசையில் கிணறு தோண்டலாம் என்றும் 30, 40 ஸ்லோகங்களில் சொல்கிறார். இந்துக்கள் இயற்கையை எந்த அ ளவுக்குப் பயன்படுத்தினார்கள், ஆராய்ந்தார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்.

XXXX

ராமாயணத்தில் எறும்பின் கதையும் கைகேயி வம்சமும் (Post No.9738)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9738

Date uploaded in London – –15 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்ப ராமாயணத்தின் அயோத்யா கண்டத்தில் ஒரு சுவையான கதை வருகிறது. கோடிப்  பேரில் ஒருவருக்கு மட்டும் பிராணிகள் பேசுவதைக் கேட்கும் அபூர்வ சக்தி இருக்கும். இந்து மத நூல்களில் விக்ரமாதித்தன், கழற்றறிவார் , ஆனாய  நாயனார் ஆகியோர் இவ்வாறு அபூர்வ சக்தி படைத்தவர்கள்  வால்மீகி ராமாயணத்தில் கைகேயியின் தந்தை அசுவபதிக்கும்  இந்த சக்தி இருந்ததாக செய்திகள் உள . கம்பரும் நமக்கு போகிற போக்கில் ஒரே வரியில் சுட்டிக்காட்டுகிறார்.

பிரபஞ்சத்தில் 4 விதமான ஒலிகள் உண்டு என்றும் அவற்றில் மனிதன் கேட்கும் ஒலி ஒன்று மட்டும்தான் என்றும் ஒரு அற்புதத் தகவலை உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் தீர்க்க தமஸ் (RV1-164) என்ற அந்தகக்  கவிராயர் நமக்கு அளிக்கிறார். ஆக நாம் கேட்க முடியாத ஒலிகளில் ஒன்று பிராணிகளின் ஒலி – பாஷை என்பது சொல்லாமலேயே விளங்கும்.

இதோ கம்பன் சொல்லும் கதை

வன்மா யாக்கை கேசி வரத்தால் , என்றான் உயிரை

முன் மாய் விப்பத் துனிந்தாளேனும்  கூனி மொழியால் ,

தன் மாமகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி

என்மாமகனைக்  கான் ஏகு என்றாள் ; எறும்பின் கதையாள்

நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம் , கம்ப ராமாயணம்

பொருள் –எறும்பின் சரித்திரத்தைக் கொண்டவளின் மகளாகிய கைகேயி வஞ்சனையால் ,

கூனியால் தூண்டப்பட்டுத் தன் வரத்தாலே என் உயிரை வாங்கத் துணிந்துள்ளாள். மேலும் தன்னுடைய பெருமை மிக்க மகனும் தானுமாக இவ்வுலகினைப் பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உயர்ந்த  மூத்த மகனையும் காட்டிற்குச் செல்க என்றாள்  என்று கைகேயியின் கொடுமையை கோசாலையிடம் கூறி, தசரதன் வருந்தினான்.

இங்கே ‘எறும்பின் கதையாள்’ என்ற 2 சொற்களின் பின்னால் ஒரு கதை உளது

அது என்ன கதை?

கைகேயியின் தந்தை பெயர் அஸ்வபதி. அவன் கேகய நாட்டின் மன்னன்.அவனுக்கு ஈ , எறும்பு போன்ற உயிர் இனங்கள் பேசும் மொழி தெரியும். இதை அவனுக்கு ஒரு முனிவர் கற்றுக் கொடுத்தார். ஒரு முறை மனைவியுடன் படுக்கையில் படுத்திருந்த போது அஸ்வபதி. திடீரென வெடிச் சிரிப்பு சிரித்தான். மனைவிக்குக்     கோபமும் சந்தேகமும் வந்தது. “ஓய் , என்ன என்னைக் கிண்டல் செய்கிறீர்களா? எதற்காக எம்மைப் பார்த்து இளித்தீர் ?” என்று வினவினாள். அஸ்வபதி சொன்னார்:- “அன்பே, ஆருயிரே, உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நம் படுக்கையின் கீழே போன இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டுச் சிரித்தேன்”  என்றார்.

ஐயா நீவீர் ‘டூப்’ (பொய்) அடிக்கிறீர். அப்படியானால் எறும்புகள் என்ன பேசின என்பதை எமக்கும் செப்பும். பின்னர் உம்  மீதுள்ள ஐயப்பாடு அகலும் என்று புகன்றார்   .

அஸ்வபதி சொன்னார்:- அம்மே; சினம் தணிக !ஐயம் அகல! எனக்கு உயிரின மொழி கற்பித்த முனிவர், அவற்றின் பாஷையை எவருக்கும் நீர் புகலக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அப்படிச் சொன்னால், மரணம் சம்பவிக்கும்; நான் உயிர் வாழ முடியாது என்றான்.

அவளோ அட, நீர் செத்தால் செத்துத் தொலையும் ; எனக்கு எறும்பின் குறும்புப் பேச்சைப்  பகரும் என்றாள். மறு  நாள் முனிவர் அனுமதி பெற்று உரைக்கிறேன் என்றான். முனிவரோ அத்தகைய  கொடியாள் நாட்டில் இருப்பது நல்லதல்ல அவளை நாடு கடத்து என்றார் .

முனிவரின் சொற்படி மனைவியை நாடு கடத்தி விட்டு அஸ்வபதியும் இனிதே அரசாண்டான். அந்தத் தாய்க்குப் பிறந்தவள்தானே கைகேயி! அவள் குணமும் அப்படியே; கணவன் செத்தாலும் ராமன் காட்டுக்குப் போகவே வேண்டும் என்று எண்ணுகிறாள்! என்னும் பொருள் தொனிக்க தசரதன் ஒரு சொல்லைப் போட்டான். அந்தச் சொல்தான் எறும்பின் கதையாள் .

ராமாயணத்தில்தான் எவ்வளவு உண்மைகள்! இதில் மரபணு இயல் என்னும் (Genetics) ஜெனெடிக்ஸ், பிராணிகளின் பாஷை  (Language of Animals) முதலிய அரிய விஷயங்களும் வந்து விட்டன.

தாயைப் போல (பெண்) பிள்ளை!!

நூலைப்  போல சேலை!!

xxxx

தமிழ்ப் பழ மொழிகளில்

தமிழ்ப் பழ மொழிகளில் எறும்பினைக் காணலாம்; தமிழ் மக்களுக்கு இருந்த வானிலை பற்றிய அறிவினையும் எடுத்துக்காட்டுகிறது

எறும்பு ஊர கல்லுந் தேயும்.

(அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போல; முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை விளக்கும் பழ மொழி இது)

xxxx

எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை வரும் ‘

(வானிலை அறிவு.)

xxxx

எறும்பு முதல்  யானை வரை

(எல்லா உயிரினங்களும் இறைவன் படைப்பே )

யானை முதலா எறும்பீறாய- திருவாசகம் 4-11

xxxx

ஈ எறும்பு கூட நுழைய முடியாது

(அதி பயங்கர பாதுகாப்பு )

xxxx

இருதலைக்  கொள்ளி எறும்பு போல

(வழி தெரியாமல் தவிக்கும் நிலை )

இருதலைக் கொள்ளியினுள் எறும்பொத்து  — திருவாசகம் 6-33

xxxx

நெய்க்குடந்தன்னை எறும்பெனவே -திருவாசகம் 6-96

xxxx

எறும்பிடை நாங்க்கூழ் எனப் புலனால் திருவாசகம் 6-97

(அதிக துன்பம்; எல்லா திசைகளிலிருந்தும் தாக்குதல்)

xxxx

பிராமணனும் நாய் தின்னும் புலையனும்

இந்து மதத்தின் உயர்ந்த நிலையில் ஒரு பிராமணன், ஒரு எறும்பு, ஒரு யானை,  நாயை அடித்துத் தின்னும் புலையன் (இது கீதை ஸ்லோகத்தில் உள்ள வரி) ஆகிய அனைவரும் சமமே..நம்முடைய தத்துவங்கள் மிகவும் உன்னதமானவை . அத்தைய உயர்ந்த லட்சியத்தை இன்று நாம் கைவிட்டதால் இன்று சகிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுவிட்டது இந்த மதம் மனிதர்களிடையே மட்டும் சகோதரத்துவத்தைப் போதிக்கவில்லை. உயிர் வாழும் எல்லாம் ஓரினம் என்று போதிக்கிறது — காந்திஜி ; ஹரிஜன் பத்திரிகையில்  (Harijan 28-3-1936)

xxxx

தமிழ் அகராதியில்

எறும்பு என்பதற்கான வேத கால ஸம்ஸ்க்ருதச் சொல் – பிபீலிகா; இதை தமிழ் அகராதிகளிலும் காணலாம் :

Pipīlikā (பிபீலிகா) noun See பிபீலிகை. ((சங்கத்தகராதி) தமிழ்சொல்லகராதி) [pipiligai. ((sangathagarathi) thamizhsollagarathi)]

Xxxx

Pipīlikācantāṉam (பிபீலிகாசந்தானம்) [pipīlikā-cantāṉam] noun < pipīlikā +. Continuity, as of a line of ants; எறும்புகள் தொடர்ந்தூர்வதுபோன்ற தொடர்ச்சி. [erumbugal thodarnthurvathuponra thodarchi.] (மணிமேகலை [manimegalai] 30, 38, கீழ்க்குறிப்பு. [kizhkkurippu.])

Xxxx

Pipīlikāniyāyam (பிபீலிகாநியாயம்) [pipīlikā-niyāyam] noun < pipīlikā +. Nyāya illustrating the principle of judging things correctly like ants; எறும்பு போல முறைப்பட எண்ணித் தவறாதுதுணியும் நெறி. [erumbu pola muraippada ennith thavarathuthuniyum neri.] (W.)

xxxx

இருதலைக் கொள்ளி எறும்பு! அப்பர் பெருமான் தவிப்பு! (Post No.4387)

உள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை

உள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி

எள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற

கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே

–நாலாம் திருமுறை

பொருள்

தன்னை நினைப்பவர்களின் உள்ளத்தில் நின்று அவர்களுடைய உணர்வாக நிற்பவன் இறைவன்.

அவரை நான் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவனாகக் கருதினேன். இரு பக்கமும் நெருப்பு மின்னி எரிய , இடைப்பட்ட எறும்பு போல, என்  உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலை பாய்கின்றது.

xxxx

கல்லுக்குள் தேரைபெட்டிக்குள் எறும்பு: உணவு கொடுப்பது யார்?

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:— 1119; தேதி:—- 20 ஜூன் 2014

 ஒரு முறை பார்வதிக்கும் பரமசிவனுக்கும் இடையே ஒரு காரசார விவாதம்:

பார்வதி:– என்ன இது? இப்படி எப்போது பார்த்தாலும் ‘டான்ஸ்’ (நடராஜன் ) ஆடியே பொழுதைக் கழிக்கிறீர்களே. கொஞ்சம் பசியால் வாடும் உயிரினங்களுக்கு உணவு அளிக்கக்கூடாதா?

பரமசிவன்:- அன்பே! ஆருயிரே ! அதைத்தான் ‘’இமைப்பொழுதும் சோராமல்’ அல்லும் பகலும், அனுவரதமும் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

 பார்வதி:– அப்படியா! எனக்கு என்னமோ நீங்கள் ‘’நடராஜ’’னாகப் பொழுது போக்குவதே கண்களுக்குத் தெரிகிறது!

(கதைச் சுருக்கம் முதல் கட்டுரையிலேயே உள்ளது)

–சுபம்–

Tags- எறும்பு,கைகேயி, பழமொழிகளில், அகராதியில், சங்கத் தமிழில்,பாடல்

சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 2 (Post.13,181)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.181

Date uploaded in London – — 27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 2

மாலைமலர் 17-4-2024 இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 2

ச.நாகராஜன்

நேர்மையே வெல்லும்!

இன்னொரு சம்பவம் இது.

ஒரு சமயம் பகவான் ஶ்ரீ சத்யசாயி பாபா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸுக்கு விஜயம் செய்தார்.

அதனுடைய டைரக்டரும் சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் பகவந்தம் பாபாவின் பக்தராவார்.  அவர் பகவந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த மாடியில் க்ளார்க் வேலைக்காக ஒரு நேர்காணல் பேட்டி நடந்து கொண்டிருந்தது.  அதில் கலந்து கொண்ட ஒரு பையன் சோகமாக ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்த பாபா அவனை அழைத்து, “என்ன விஷயம்?” என்று கேட்டார்.

இண்டர்வியூவில் கலந்து கொண்ட தன்னால் சரியாகப் பதில் சொல்ல இயலவில்லை என்றும் இண்டர்வியூவை நடத்திய பெரும் விஞ்ஞானியான ராமன் தன்னைத் திட்டி அனுப்பி விட்டதாகவும் அவன் வருத்தத்துடன் சொன்னான்.

பாபா, “அது சரி, நீ இங்கு வருவதற்காக அலவன்ஸ் ஏதாவது உனக்குத் தந்தார்களா” என்று கேட்டார்.

அந்தப் பையன், “ ஆமாம். நான் பக்கத்து கிராமத்தில் இருந்து வருகிறேன். வந்து போக அலவன்ஸாக பதினைந்து ரூபாய் தந்திருக்கிறார்கள். போக வர செலவு பத்து ரூபாய். மீதி ஐந்து ரூபா என்னிடம் இருக்கிறது” என்றான்.

உடனே பாபா, “ சி.வி. ராமன் இப்போது மாடியிலிருந்து இறங்கி வருவார். அவரிடம் மீதி இருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு” என்றார்.

பையனும் அதற்கு ஒப்புக் கொண்டு சி.வி,ராமனுக்காகக் காத்திருந்தான்.

ராமன் கீழே இறங்கி வந்து காரில் ஏறும் சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்தார். “நீ இன்னமுமா இங்கு நிற்கிறாய்?” என்றார்.

பையன் அவர் அருகில் சென்று, “கொடுத்த பதினைந்து ரூபாயில் எனக்குச் சேர வேண்டியது போக மீதி ஐந்து ரூபாய் இருக்கிறது. அதை உங்களிடம் தருவதற்காகத் தான் காத்து நிற்கிறேன்” என்றான்.

இதைக் கேட்டவுடம் அளவிலா மகிழ்ச்சி அடைந்த ராமன், “ஆஹா! இந்த வேலைக்கு உன்னைப் போன்ற நேர்மையுடைய ஒருவன் தான் வேண்டும்” என்று கூறி விட்டு அங்கிருந்த நிறுவன அதிகாரியைக் கூப்பிட்டு உடனடியாக அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை அடித்துத் தர உத்தரவிட்டார்.

ஐந்து ரூபாயையும் அவனிடமே திருப்பித் தந்தார்.

பையன் கண்ணீர் மல்க பாபாவிடம் வந்து நடந்ததை எல்லாம் சொன்னான்.

பாபா, “பார்த்தாயா! நேர்மைக்குக் கிடைத்த பரிசை! நேர்மையை எப்போதும் கடைப்பிடி” என்று அருளுரை பகர்ந்தார்.

விருதுகள்

ஏராளமான விருதுகளை சி.வி.ராமன் பெற்றுள்ளார்.

1929-ல் இங்கிலாந்து அரசியார் அவருக்கு சர் பட்டத்தை அளித்துக் கௌரவித்தார்.

1954-ம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது.

1928-ல் அவர் பிப்ரவரி 28-ம் தேதி அவர் தனது மாபெரும் கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் நாளை இந்திய அரசு அதை தேசீய அறிவியல் நாளாகக் கொண்டாட ஆணை பிறப்பித்தது.

பங்களூரில் சி.வி,ராமன் நகர் என்ற பகுதியும் திருச்சியில் சி.வி,ராமன் நகர் பகுதியும் அவர் பெயரால் கௌரவிக்கப்படும் பகுதிகளாகும். பங்களூரில் சி.வி,ராமன் ஹாஸ்பிடல் உள்ளிட்ட பல இடங்கள் அவர் பெயரைச் சொல்லிப் பெருமைப்படுபவை.

மறைவு

1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் நாளன்று தனது 82-ம் வயதில் மறைந்தார். தனது மனைவியிடம் மிக மிக எளிமையாக எந்த வித சடங்குமின்றி தான் எரியூட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

அவர் மறைவினால் தேசமே வருந்தியது. பிரதமர் இந்திரா காந்தி, தேசமும் பாராளுமன்றமும் ஒவ்வொருவரும் இவரது மறைவினால் வருந்துவதாகக் குறிப்பிட்டார். “நவீன இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானியான அவரது மனம் அவர் ஆராய்ந்த வைரம் போல இருந்தது. அவரது வாழ்க்கைப் பணி எங்கும் ஒளியைத் தந்தது” என்று மேலும் அவர் கூறினார்.

ஊக்கமூட்டும் உரைகள்

சர் சி.வி, ராமனின் ஊக்கமூட்டும் பொன்மொழிகள் ஏராளம்.

அவற்றில் முக்கியமான இரண்டு இதோ:

அறிவியல் என்பது சரியான விடைகளைக் கண்டுபிடிப்பது அல்ல; சரியான கேள்விகளைக் கேட்பதே அறிவியல் ஆகும்.

 நாம் ஒரு தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் இன்றையத் தேவை என்னவெனில் அந்த தோல்வி மனப்பான்மையை அழிப்பது தான்!”

 ஆம், தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளிவிட்டு இந்தியர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாக மேலெழுவோமாக! உலகின் தலைமை இடத்திற்கு முன்னேறுவோமாக!

—subham—

இந்துமதத்தில் எறும்பு – 1 (Post No.13,180)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,180

Date uploaded in London – –   26 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இந்துக்கள் வணங்காத பொருள்கள் இல்லை; கோவில் மணி முதல் பக்தர்களின் பாதக்குறடுகள் வரை எல்லாமே வணங்கப்படுகின்றன. அதே போல எறும்பு முதல் யானை வரை உள்ள எல்லா உயரினங்களும் வணங்கப்படுகின்றன. . அவைகளிலுள்ள தெய்வாம்சங்ககளை மட்டுமே அவர்கள் காண்பர்; எல்லோரையும் சமாகக் காணும் போது அவைகள் தீங்கிழைக்காது; ஆதி சங்கரர் முதல் அப்பர் வரை பிராணிகளைக் கண்டு அஞ்சியதில்லை ; ஏனெனில் ஒன்றாகக் காண்பதே காட்சி என்ற கொள்கை யுடையோர் அவர்கள்.

கோலம் போடுவது ஏன் ?

எறும்புக்கு இந்து மதத்தில் தனி இடம் உண்டு. தமிழர்கள் தினமும் வாசல் தெளித்து கோலம் போடுவார்கள்  எதற்காக இந்தக் கோலங்கள் ? அதிலுள்ள மாவு எறும்புக்கு உணவாகப் போகிறது . இது இந்துக்கள் தினமும் செய்யும் ஐவேள்விகளில் — பஞ்ச பூத யக்ஞத்தில் ஒன்று .

ஓடும் எறும்புகளைக் கண்டவுடன் அதை நசுக்கிக் கொல்ல விரைவது குழந்தைகள் சுபாவம்; உடனே தாய்மார்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று எச்சரிப்பார்கள் ; குழந்தைகள் ஏன் என்று வினவும்போது அடுத்த ஜென்மத்தில் நீ எறும்பாகப் பிறப்பாய் ; அப் போது அது மனிதனாகப் பிறந்து உன்னை   நசுக்கும் என்பார்கள் . ஆக இளம் வயதிலேயே மறுபிறப்புக் கொள்கையையும் கர்ம வினைக் கொள்கையையும் கற்பிக்க உதவுவதும் எறும்புகளே!

கட்டெறும்புகளை இந்துக்கள் கொல்ல மாட்டார்கள்; தீங்கிழைக்காத – கடிக்காத– கருப்பு எறும்புகளை பிள்ளையார் எறும்பு என்பார்கள் .

தமிழில் உள்ளது போல எறும்பு விஷயங்கள் சம்ஸ்க்ருதத்தில் கூட இல்லை. நிறைய பழமொழிகள், வசனங்கள், கதைகள், தலங்கள் தமிழில்தான் உள்ளன.

xxxx

திரு வெறும்பூரும் தென்காசியும்

திருச்சிக்கு அருகிலுள்ள திரு எறும்பு ஊர் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு அரக்கன் பிரம்மாவை வரம் கேட்கவே அவர் திருவெறும்பூர் சிவனை வழிபடச் சொன்னார். அந்த அரக்கனை வீழ்த்த  தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர்.; சிவலிங்கத்தின் மீது ஏறிய எறும்புகள் வழுக்கி விழுவதைக் கண்ட சிவனே எறும்புப் புற்றை  உண்டாக்கி அவைகள் சறுக்காமல் ஏற உதவினார் என்பது தல புராணம் ஆகும்.

இதே போல தென்காசிக்கும் எறும்புக்கும் தொடர்பு உண்டு. அந்த வட்டார மன்னரும் ராணியும் காசிக்குச் சென்று வழிபட்டதிலிருந்து தென்காசியில் கோவில் கட்ட எண்ணினர். சிவனே அவர்கள் கனவில் தோன்றி அரண்மனையிலிருந்து வரிசையாகச் செல்லும் எறும்புகளைப்  பின்பற்றிச் சென்றால் அங்கு ஒரு சிலலிங்கத்ததைக் காணலாம் ; அங்கே கோவிலை எழுப்பு என்று கட்டளை பிறப்பித்தார். அதன்படி பெரிய கோவில் எழுந்தது .

பார்வதியும் பரமசிவனும் கதை

பெண்களுக்கு உயிரினங்கள் மீது தாய் போல அன்பு உண்டு.  பார்வதி தேவியும் எல்லையற்ற கருணை உடையவர். ஆனால் சிவனுக்கு இப்படிக் கருணை இல்லையோ என்று சந்தேகப்பட்டார். ஆயினும் சிவனை இது பற்றிக்கேட்ட பொழு து எல்லோருக்கும் உணவு வழங்குவது நான்தான் என்கிறார். இதை நம்பாத பார்வதி ஒரு  சிறிய பெட்டிக்குள் உயிருள்ள எறும்புகளை பிடித்துப் போட்டு மூடி வைத்தார். சிவபெருமான் காணாத இடத்தில் ஒளி த்தும் வைத்தார்.

மறுநாள் காலையில் “அன்பரே நீவீர் எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைத்தீரா?” என்று வினவ, சிவனும் “அன்பே! ஆருயிரே! இதில் என்ன ஐயப்பாடு? நா ன் உணவு படைத்து விட்டேனே” என்றார். சிவன் பொ ய் சொல்கிறார் என்று எண்ணிய பார்வதி,  தான் ஒளித்து வைத்திருந்த எறும்பு டப்பியைத் திறந்து காட்டி இவைகளுக்கு உணவு படைக்கவில்லையே என்று சொல்ல முனைந்தார்; ஆனால் வாயடைத்துப் போனார். ஏனெனில் அந்த டப்பாவுக்குள்ளும் சிவபெருமான் போட்ட உணவுப் பிட்சை இருந்தது. எறும்புகள் அதைச் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக மிச்சம் மீதி வேறு வைத்திருந்தன.

பார்வதி யைப் பார்த்து சிவன் ஏதும் சொல்லாமல் புன்னகை பூத்தார்

எறும்பு முதல் யானை வரை உணவளிப்பவன் இறைவனே என உணர்ந்தார் . இது போல பல கதைகள் உண்டு.

xxxx

வேதத்தில் எறும்புகள் !

உலகிலேயே பழமையான புஸ்தகம் ரிக் வேதம் ; அதிலுள்ள மரணம் தொடர்பான துதிகளில் எறும்பு குறிப்பிடப்படுகிறது; இதே போல அதர்வண வேதத்திலும் விஷக்கடி பற்றிய துதிகளில் எறும்பு பற்றியும் வருகிறது . சம்ஸ்க்ருதத்தில் எறும்பினை பிபீலிகா என்பர். தமிழ் அகராதியிலும் இந்தச் சொல்லைக் காணலாம். ஏனெனில் பழந்தமிழருக்கு ஸம்ஸ்க்ருதமும் தமிழும் இரு கண்கள்; ஆகையால் தமிழ் அகராதி என்ற புஸ்தகம் அனைத்திலும் ஸம்ஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்!

வால் மீகி = எறும்புப் புற்று = பாம்புப் புற்று

வால்மீகி ராமாயணத்தை எழுதிய வேடர் பெயர் எறும்புப் புற்று; அவர் தவம் செய்தபோது அவரைச் சுற்றி புற்று உருவானதால் வேடன் என்ற பெயர் மறைந்து வால்மீகி என்ற பெயரே நிலைத்தது . இதன் பொருள் புற்று 

இதே பெயரில் புறநானூற்றிலும் ஒரு புலவர் இருக்கிறார் !! மஹா பாரதத்திலும் ராமாயணத்திலும்தான் சுவையான கதைகள் உள்ளன. பூமிக்கடியிலிருந்து தங்கத்தைக் கொண்டுவரும் எறும்புகள் பற்றி மஹாபாரதம் கூறுகிறது ; இதனால் தங்கத்தின் பெயரும் பிபீலிகம்; அதாவது எறும்புத் தங்கம் .

இதை வைத்து கிரேக்க இலக்கியத்தில் கதைகள் உண்டு; 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றை எழுதிய ஹெரோடோட்டஸ் என்பார் இந்தியாவில் நரிகள் போல பெரிய எறும்புகள் இருப்பதாகவும் அவைகள் பூமிக்கடியில் சென்று தங்கத்தைக் கொண்டுவந்து கொட்டுவதாகவும் எழுதிச் சென்றார் . பின்னர் வந்தவர்கள் இது எத்தியோப்பியாவில் நடப்பதாக எழுதிச் சென்றனர் .உண்மையில் எறும்பு போல ஊர்ந்து சென்று தங்கம் எடுத்த ஊழியர்களுக்கு எறும்பு மனிதர்கள் என்ற பெயர்  இருந்திருக்கும். மஹாபாரதம் முதலி ய கதைகள் கிரேக்க நாட்டுக்குப் பரவிய போது எறும்புகளே தங்கம் எடுத்து வருவதாக எழுதி விட்டனர் போலும்.

xxxx

Press News

எறும்புகள் கண்டுபிடித்த தங்க சுரங்கம்.. பீகாரில் ஒரு K G F!

கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வந்த பழமையான தங்க வயல்களில் ஒன்றான கோலார் தங்க வயல் (K G F) கடந்த 2001ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட செலவு அதிகம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தங்க சுரங்கத்தை மையமாக வைத்துதான் கேஜிஎப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்றைப் பெற்றது.

கோலார் தங்க வயலை விட மிகப் பெரிய தங்க சுரங்கம் பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது (June 2022) . அதைத் தொடர்ந்து இந்திய புவியியல் துறை நடத்திய ஆராய்ச்சியில் அங்கு 222 மில்லியன் டன் தங்கம் இருப்பதும் இது இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% என்பதும் தெரியவந்துள்ளது.

அங்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி ஜமுயி பகுதியின் செம்மண் நிலத்தில் எறும்பு கூட்டங்கள் புற்று அமைப்பதற்காக குழி தோண்டியுள்ளது. அப்போது அதிலிருந்த மண் தங்கம் போன்று மின்னியுள்ளது.

இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அரசு சார்பில் அந்த இடத்தில் ஆய்வு நடத்தியபோது அங்கு தங்கம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘Ants’ give whereabouts of 230 million tons gold mine in Jamui! Bihar Government on lookout

How was this gold found?

1. No one has ever realised that such a huge gold reserve is hidden under the red soil of the Maoist-dominated Jamui.

2. It has taken 40 years to find the gold reserves here. That’s also possible for ants. 

3. Legend has it that forty years ago, there was a huge banyan tree in the area. To escape the heat and heat of the sun, ants start building nests under the banyan tree. 

4. When the ants began to lift the soil from the bottom, the locals saw tiny particles of yellow shingles mixed in the soil. At that moment, the news spread among the people of the area. That’s the beginning of the search. 

The highest number of gold in India is found in the state of Karnataka. Kolar gold mine in this state is one of the oldest and major gold mines in India. In 2001, however, the gold mine was closed. (June 2022 Press Cutting)

To be continued…………

எறும்பு, பிபீலிகா , இந்து மதத்தில் , வேதத்தில், மஹாபாரதத்தில்,எறும்பு தோண்டும் , தங்கம் , ஹெரோடோட்டஸ், gold digging ants