KARI for Elephant is Not a Tamil Word? Part 2 (Post No.11,285)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,285

Date uploaded in London – 21 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 Elephant is one of the animals mentioned a lot in Tamil literature. There is a special genre called Barani, which is sung only on a hero who killed 1000 elephants. It is an exaggeration, and the real meaning is one who has encountered many elephants in aa battle. Kalingathu Barani in Tamil describe it in detail.

We have also read about the Huna king Mihirakula whose hobby is to drive elephants to the edge of mountain cliff and happily watching their rolling down the hills and broken into pieces.

Another thing mentioned in our literature is kings watching pre -arranged elephant fighting in the vast play ground; he used to sit on a high and safe stage with his paraphernalia and watch it.

Natural fights between elephant and tiger or lion in the dense and thick forest are described in Tamil literature.

Magesthenes’ account of catching the elephants agrees with the present practice. ‘Catching an elephant with an elephant’ is a phrase used by Chanakya and Tiruvalluvar in their books. They use a female elephant to lure a male elephant.

Appolonius of Tyana in the close of the first half of our modern era, has give detailed description of Indian elephants. He found wild elephants from marsh as stupid and idle while those from plains were useful animals, tractable and imitative. The later were taught to dance, to jump to the sound of pipe. He speaks very high about their docile nature, love for their keeper and how they would eat from their master’s hand like a dog and coax him with their trunks. He tells that at night these animals would moan piteously (quite different from their usual roar) to bewail their slavery.

According to Q.Curtius Rufus (41-54 CE) the elephants of India are more tamed than those tamed in Africa and their size corresponds to their strength. Pliny agrees with Curtius and notes that India produced the largest elephants. Arrian describes the modes in which they are hunted. Polybius says that the African elephants would neither endure the smell nor the trumpeting of their Indian congeners….

Xxx

Elephant in Amarakosa

The oldest thesaurus in the world is Amarakosa in Sanskrit. It is at least 2000 year old. It has the following information on elephant:-

२.७.१०००)  दन्ती दन्तावलो हस्ती द्विरदोऽनेकपो द्विपः

(२.७.१००१)  मतङ्गजो गजो नागः कुञ्जरो वारणः करी

(२.७.१००२)  इभः स्तम्बेरभः पद्मी यूथनाथस्तु यूथपः

(२.७.१००३)  मदोत्कटो मदकलः कलभः करिशावकः

(२.७.१००४)  प्रभिन्नो गर्जितो मत्तः समावुद्वान्तनिर्मदौ

(२.७.१००५)  हास्तिकं गजता वृन्दे करिणी धेनुका वशा

(२.७.१००६)  गण्डः कटो मदो दानं वमथुः करशीकरः

(२.७.१००७)  कुम्भौ तु पिण्डौ शिरसस्तयोर्मध्ये विदुः पुमान्

(२.७.१००८)  अवग्रहो ललाटं स्यादीषिका त्वक्षिकूटकम्

(२.७.१००९)  अपाङ्गदेशो निर्याणं कर्णमूलं तु चूलिका

(२.७.१०१०)  अधः कुम्भस्य वाहित्थं प्रतिमानमधोऽस्य यत्

(२.७.१०११)  आसनं स्कन्धदेशः स्यात्पद्मकं बिन्दुजालकम्

(२.७.१०१२)  पार्श्वभागः पक्षभागो दन्तभागस्तु योऽग्रतः

(२.७.१०१३)  द्वौ पूर्वपश्चाज्जङ्घादिदेशौ गात्रावरे क्रमात्

(२.७.१०१४)  तोत्रं वेणुकमालानं बन्धस्तम्भेऽथ श‍ृङ्खले

(२.७.१०१५)  अन्दुको निगडोऽस्त्री स्यादङ्कुशोऽस्त्री सृणिः स्त्रियाम्

(२.७.१०१६)  दूष्या (चूषा) कक्ष्या वरत्रा स्यात्कल्पना सज्जना समे

(२.७.१०१७)  प्रवेण्यास्तरणं वर्णः परिस्तोमः कुथो द्वयोः

(२.७.१०१८)  वीतं त्वसारं हस्त्यश्वं वारी तु गजबन्धनी

Amarasimha, the author of the lexicon, lists the names of elephant, its rut, furiousness, female elephant, and then its temporal juice, water emitted from its trunk. Then he describes its frontal globes, forehead, eye ball root of  ear, corner of its eye, part below the frontal globes, tusks, marks on its face, shoulder, and thigh.

He even goes into the details of pike to drive him, hook to guide him, post to which he is secured, chain for his feet, leather girt, dressing an elephant, its stable etc.

No language has such a unique thesaurus/ lexicon. Tamils followed Amarasimha and composed their so called Tamil Nikandus, but with lot of Sanskrit words.

There are over 100 proverbs on elephants in Tamil.

To be continued………………………

 Tags- Amarakosa, Amarasimha, Elephant, catching, Greek view, Karin, Tamil word

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -7 (இறுதிப் பகுதி)- Post No.11284

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,284

Date uploaded in London – 21 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வால்மீகி ராமாயணத்தில் (வா.ரா) பெண்கள் -7 (இறுதிப் பகுதி)

அபூர்வமாக பெண்ணே வேறு ஒரு ஆடவனுடன் சேர்ந்ததை அஹல்யா- இந்திரன் சம்பவத்தில் காணலாம் . அஹல்யா தெரிந்தே தவறு செய்கிறாள்

பெண்கள் தவறு செய்ததாக வரும் பகுதி மிகமிகக் குறைவு; அப்படி நேர்ந்ததையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுதி அதை இன்றும் புராண , இதிகாசங்களில் நம்மை வாசிக்க வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் . இதில் இரண்டு உண்மை நமக்குத் தெரிகிறது

1.புராண, இதிஹாங்கள் அனைத்தும் உண்மையே. அவர்கள் கசப்பான உண்மைகளைக் கூட மறைக்கவில்லை. அப்படி மறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இதை மறைத்து இருப்பார்கள். அது மட்டுமல்ல. அந்த அ ஹல்யாவும் , தனது தவறுக்கு வருந்தி தண்டனையை ஏற்றுக்கொண்டதால் இன்றுவரை உதாரணமான பெண்மணிகளின் பெயர்களில் அவள் பெயரையும் சேர்த்து போற்றி வணங்குகின்றனர் .

அஹல்யாத்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்

இரண்டாவது உண்மை, இது மற்ற பெண்களுக்கும் ஆண்களுக்கும் எச்சரிக்கை! ஏனெனில் தவறிழைத்த இந்திரனும் தண்டிக்கப்பட்டான் . யானைக்கும் கூட அடி சறுக்கும் என்பது போல பெரியோரும்கூட தவறு செய்ய முடியும். துர்கா சப்த ஸ்லோகீயின் முதல் ஸ்லோகம் இதற்கு உதாரணம். ஞானிகளையும் கூட (அவர்கள் அகந்தை காரணமாக) ஒரு நிமிடத்தில் துர்கா தேவி விழுத்தாட்டிவிடுவாளாம் .ஞானீனாம் அபி சேதாம்ஸி தேவி பகவதி ஹி ஸா

பலாத் ஆக்ருஷ்ய மோஹயா மஹாமாயா பிரயச்சதி

XXX

EVERY SINNER HAS A FUTURE; EVERY SAINT HAS A PAST

ஒவ்வொரு ‘பாவி’க்கும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு

ஒவ்வொரு முனிவனுக்கும் (தவறான) கடந்த காலமும் உண்டு –என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

இந்து மதத்தில் பாவமன்னிப்பு உண்டு என்பதற்கு அஹல்யா, அஜாமிளன் கதைகள் உதாரணம்.

XXXX

அஹல்யா சம்பவம் குறித்து வால்மீகி சொல்வதைக் காண்போம்:

1-48-18/19

ஓ பேரழகியே !ஆசைவயப்பட்டவர்கள் மாதவிலக்கு காலம் முடிவதற்காக காத்திருக்க மாட்டார்கள் ( குழந்தை பெறுவதற்கு உரிய தருணத்துக்காக); அழகிய இடை உடைய பெண்ணே நாம் இருவரும் சேருவதை நான் விரும்புகிறேன் — என்று இந்திரன் கூறுகிறான்.

ऋतुकालं प्रतीक्षन्ते नार्थिनस्सुसमाहिते

सङ्गमं त्वहमिच्छामि त्वया सह सुमध्यमे।।

ருது காலம் ப்ரதீக்ஷந்தே நார்த்தி நஸ் ஸுஸமமாஹிதே

ஸங்கமம் த்வஹம் இச்சாமி த்வயா  ஸஹ ஸுமத்யமே  (வா.ரா) 1.48.18

सुसमाहिते சமமான உறுப்புகளை உடைய அழகியே!, अर्थिन:ஆசை வயப்பட்டவர்கள் , ऋतुकालम् ருது காலம் வரும்வரை , न प्रतीक्षन्ते காத்திருக்கமாட்டார்கள் , सुमध्यमे அழகிய இடை உடையவளே , अहम् I, त्वया सह நான் உன்னோடு  सङ्गमम् இணைவதற்கு , इच्छामि ஆசைப்படுகிறேன்.

XXXX

ரகு நந்தன! இந்திரன்தான் சந்நியாசி வேடத்தில் வந்திருக்கிறான் என்பதை அறிந்தும் அவனுடன் கூட விரும்பினாள்

मुनिवेषं सहस्राक्षं विज्ञाय रघुनन्दन।

मतिं चकार दुर्मेधा देवराजकुतूहलात्।।1.48.19

முனிவேஷம் ஸஹஸ்ராக்ஷம்  விக்ஞாய ரகுநந்தன

மதிம் சகார துர்மேதா தேவராஜ குதூஹலாத் –1.48.19

रघुनन्दन ராமா , दुर्मेधा: தீய எண்ணம் கொண்ட , मुनिवेषम् முனிவர் வேடத்திலுள்ள , सहस्राक्षम् கண்ணாயிரம்/ இந்திரன் , विज्ञाय என்பதை அறிந்தும் , देवराजकुतूहलात् வானுலக வேந்தனின் ஆசைக்கு , मतिं चकार இணங்கிணாள் .

Xxx

விதவையர் வாழ்வு

கணவனை இழந்தோர், விரத வாழ்வு கடைப்பிடித்தனர். தலைவாரி பூச்சூட வில்லை. அணிகலன்களை அணியவில்லை. ஆயினும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர் .பட்டாபிஷேகம், திருமணம், இறுதிச் சடங்கு ஆகிய அனைத்திலும் அவர்களும் பங்கு கொண்டதை வா. வருணிக்கிறார்.

na paryadevanvidhavA na cha vyAlakR^itaM bhayam |

na vyAdhijaM bhayan vApi rAme rAjyaM prashAsati || 6-128-99

ந பர்யதேவன் விதவா  ந ச வ்யாலாக்ரிதம்  பயம்

ந வ்யாதிஜம் பயன் வாபி ராமே ராஜ்யம் ப்ரஷாசதி 6-128-99

99. ராமே = ராமன் ; ப்ரஷஸ்தி = ஆட்சிபுரிகையில் ; ராஜ்யம் – அந்த நாட்டில்  ந விதவாஹா பர்யதேவன் ;  வருத்தம் அடைந்த விதவைகள் எவருமிலர்.;ந பயம் ஆஸீத் -பயம் என்பதே இல்லை ; வ்யாலாக்ரிதம் – வன விலங்குகளிடமிருந்து; ந பயம்- அச்சமே இல்லை. வ்யாதிஜம் -நோய்களிடம் இருந்தும் (பயமில்லை)’

கெளசல்யா தேவிக்கு ராம , லட்சுமண, சுக்ரீவன் ஆகியோர் உரிய மரியாதை செலுத்தும் காட்சி வா.ரா.வில் இருப்பதால் விதவைகள் புறக்கணிக்கப்பட்ட வில்லை என்பதை அறிய முடிகிறது.

–subham—

TAGS- ராமாயணம் , (வா.ரா) ,பெண்கள் ,பஞ்ச கன்யா ஸ்லோகம்

அறிவியல் அறிஞர் வாழ்வில்!-10 (Post No.11,283)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,283

Date uploaded in London – –    21 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில்!  10

ச.நாகராஜன்

19

ஆவி உலகத்தை ஆராய்ந்த விஞ்ஞானி வாலஸ்!

ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ் (Alfred Russel Wallace பிறப்பு 8-1-1823 மறைவு 7-11-1913) பரிணாமக் கொள்கையைக் கண்டுபிடித்ததில் முக்கியமான விஞ்ஞானி. இவர் சார்லஸ் டார்வினின் சம காலத்தவர். பெரிய விஞ்ஞானியாகத் திகழ்ந்ததோடு இவர் ஆவி உலகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். வியக்க வைக்கும் பல அனுபவங்களையும் பெற்றார்.

1869ஆம் ஆண்டு வாலஸை அவரது நண்பரான ராபர்ட் சேம்பர்ஸ் (Robert Chambers) என்பவர், மிகப் பணக்காரப் பெண்மணீயான மிஸ் டக்ளஸுக்கு  (Miss Douglas) அறிமுகப்படுத்தி வைத்தார்.

மிஸ் டக்ளஸ் ஆவி உலகத் தொடர்பில் ஆர்வம் உள்ளவர். லண்டனில் சவுத் அட்லி தெருவில் உள்ள அவரது வீட்டில் இப்படி ஆவி உலக சம்பாஷணைகள் அடிக்கடி நடைபெறும்.

ஒரு நாள் நடைபெற்ற சம்பவம் இது:

ஹாஸ்க்ஸ்பி (Haxby) என்ற ஒரு இளைஞர் தபால் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். அவர் ஒரு சிறந்த மீடியம் – ஆவிகளுடன் பேசுபவர்.

ஒரு நாள் ஆவி ஒன்றிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் திரைச்சீலை நடுவிலிருந்து தலைப்பாகையுடன் பெரிய டர்பன் அணிந்து வெள்ளை வெளேரென செருப்பு அணிந்த கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெரிய உருவம் தோன்றியது. அந்த அறையில் அங்கும் இங்கும் அது சென்றது. சுற்றிச் சுற்றிப் போகின்ற போது பெரிய இசைப்பெட்டியைத் தூக்கியது. தலைக்கு மேல் வைத்துக் கொண்டு ஆடியது. ஒவ்வொருவர் அருகிலும் வந்து வணங்கியது. தனது ஆடைகளையும் கையையும் தொட்டுப் பார்க்கவும் அனுமதித்தது.

அனைவரும் அந்த உருவத்தை கதவு அருகில் நிற்கச் சொன்னார்கள். அந்த உருவத்தின் உயரம் குறிக்கப்பட்டது.

பின்னர் ஹென்ஸ்லீ வெட்ஜ்வுட் (Hensleigh Wedgwood) என்பவர் செருப்பை அளக்கும் ஒரு ஸ்கேலை எடுத்துக் கொண்டு வந்து அந்த உருவத்தை ஒரு நாற்காலியில் அமரச் செய்து செருப்பைக் கழட்டி விட்டு அதன் காலைச் சுற்றி மார்க் செய்தார்.

நெடு நேரம் பேசிய பின்னர் அந்த ஆவி அங்கிருந்து சென்றது.

உடனே அனைவரும் ஆவியுடன் பேசிய மீடியமான ஹாக்ஸ்பியை உட்காரச் சொல்லி அவரது காலைச் சுற்றி மார்க் செய்தனர்.

ஆவியின் காலடிச் சுவடு அளவானது மீடியமாக இருந்த ஹாக்ஸ்பியின் காலடி அளவை விட ஒன்றே கால் அங்குலம் அதிகமாக இருந்ததைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.

அதே போல கதவருகில் குறிக்கப்பட்ட உயரமானது மீடியமான ஹாக்ஸ்பியின் உயரத்தை விட ஆறு அங்குலம் அதிகமாக இருந்தது.

அறையின் கதவும் ஜன்னலும் நன்றாக மூடப்பட்டு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

இவை அனைத்தும் அந்த ஆவி உலகப் பேச்சு உண்மை தான் என்பதை நிரூபித்தது.

என்றாலும் கூட விஞ்ஞானியாக இருக்கும் வாலஸ் இதையெல்லாம் நம்பக் கூடாது என்று அவரது நண்பர்கள் பலர் கூறினார்கள். ஆனால் வாலஸோ தன் நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். அவர் எழுதிய தி ஸயிண்டிஃபிக் ஆஸ்பெக்ட் ஆஃப் தி சூப்பர்நேச்சுரல்’ (The Scientific Aspect of the Supernatural) என்ற புத்தகம் புகழ்பெற்ற ஒரு நூல்!

20 

மனதில் கேட்ட கேள்விகளுக்கு விடையைப் பெற்ற விஞ்ஞானி!

 ஆவி உலகம் என்று ஒன்று உண்டு; ஆவிகளுடன் தொடர்பு கொள்ளலாம் என நம்பிய விஞ்ஞானிகளில் குறிப்பிடத்தகுந்த பலரில் ஒருவர் செயிண்ட் ஜார்ஜ் ஜாக்ஸன் மிவார்ட்! (St. George Jackson Mivart பிறப்பு 30-11-1827 மறைவு 1-4-1900). லண்டனில் பிறந்து வளர்ந்த இவர் ஒரு உயிரியல் நிபுணர். இறை நம்பிக்கை உடையவர்.

மிவார்ட், ‘தி ஸயிண்டிஃபிக் ஆஸ்பெக்ட் ஆஃப் தி சூப்பர்நேச்சுரல்’ (The Scientific Aspect of the Supernatural) என்ற புத்தகத்தை எழுதிய விஞ்ஞானி வாலஸின் நண்பர். அந்த நூலை ரசித்துப் படித்தவர்.

இந்தப் புத்தகத்தால் கவரப்பட்ட அவர் தானே ஆவி உலக ஆராய்ச்சியில் ஈடுபடலானார்.

1878ஆம் ஆண்டு, குளிர்காலம். இடம் : இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரம்.

வாலஸுக்குத் தெரிந்த திருமதி குப்பி ( Mrs Guppy) என்ற ஒரு மீடியம் தனது கணவருடன் அங்கு வாழ்ந்து வந்தார்.

குப்பிக்கு வாலஸ் தனது நண்பரான மிவார்ட் பற்றிய அறிமுகக் கடிதம் ஒன்றையும் கொடுத்து அனுப்பி இருந்தார்.

மிவார்ட் மூன்று முறை குப்பியுடன் ஆவி உலகத் தொடர்பைக் கொண்டார்.

முதல் முறையில் மிவார்ட் பல கேள்விகளை தன் மனதிற்குள் கேட்டுக் கொண்டார். அதற்கான விடைகளை ஆவி உலகிலிருந்து பெற்றார். இது வெகுவாக அவரை ஆச்சரியப்படுத்தியது.

இன்னொரு முறை இந்த ஆவி உலகத் தொடர்பு ஒரு இருட்டறையில் நடைபெற்றது. திடீரென்று அந்த அறையில் மர்மமான முறையில் மலர்கள் தோன்றின.

வாலஸுக்கு எழுதிய கடிதத்தில் மிவார்ட் எழுதினார் இப்படி: “அறைக் கதவு மூடி இருந்தது. அறை நன்றாக சோதனை செய்யப்பட்டிருந்தது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. நான் ஆச்சரியமே படவில்லை. ஏனெனில் உங்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் இது பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நிகழ்வு என்னை வெகுவாகத் திருப்திப்படுத்தியது. ஒரே ஒரு தரம் பார்த்த உண்மை நூறு தடவை பார்த்ததற்குச் சமம்!”

இந்தக் கடிதத்தில் மிவார்ட் தனது பல முடிவுகளை வாலஸுக்குத் தெரியப்படுத்தி இருந்தார்.

அவற்றில் முக்கியமானவை :

“1) எனக்கு இதுவரை தெரியாத,  புலன்கள் மூலமாக உணரத்தக்க பல பொருள்களை எடுத்துச் செல்லும் ஒரு புது சக்தியைப் பார்த்தேன்.

2) நேரில் உதவும் உதவியாளர்களைத் தவிர்த்து அப்படி இல்லாமல் தானே பலவற்றைச் செய்யும் ஒரு அறிவையும் பார்த்தேன்.

3) இந்த ஆவி உலகத் தொடர்பு நிகழ்வுகளில் எனது மனதில் உள்ளதை அறியக் கூடிய ஒரு அறிவார்ந்த சக்தியும் தன்னை எனக்குக் காட்டியது.

சில வருடங்களுக்குப் பிறகு மிவார்ட் பிரான்ஸில் உள்ள லூர்தூஸுக்கு சென்றார். அங்கு நிகழும் கன்னி மேரி நிகழ்த்தும் அற்புதங்களையும் ஆராய ஆரம்பித்தார்.

21

காயத்ரி மந்திரத்தின் பெருமையைக் கூறிய விஞ்ஞானி

இந்திய நாட்டைப் பெரிதும் மதித்து நேசித்த பெரிய விஞ்ஞானி ஜே.பி.ஹால்டேன் (J.B.Haldane பிறப்பு 5-11-1892 மறைவு 1-12-1964).

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டில் பிறந்தவர் ஹால்டேன். ஜாக் என்ற செல்லப் பெயரால் அனைவராலும் அறியப்பட்டவர்.

அவர் உயிரியலில் வல்லுநர். தாவர இயலில் பெரிதும் ஈர்க்கப்பட்டு அதில் தீவிர ஆய்வில் ஈடுபட்டார். 1917ஆம் ஆண்டு முதல் தடவையாக இந்தியாவுக்கு வந்த அவர் இந்தியப் பண்பாடு, ஹிந்து மதம், இந்திய வாழ்க்கை முறை ஆகியவற்றால் பெரிதும் கவரப்பட்டார். இந்தியாவிற்கே போக வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

லண்டன் யுனிவர்ஸிடி காலேஜிலிருந்து தனது பதவியை விட்டு விட்டு 1957ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர் 1964 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் காலமாகும் வரை இந்தியாவிலேயே இருந்தார்.

பிரிட்டனின் அரசியல் கொள்கைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. உலகெங்கும் பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளும் போது கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக் காட்டுவது போல, இந்திய மொழிகளில் உள்ள இலக்கியத்திலிருந்து அனாயசமாக மேற்கோள்களை எடுத்து அள்ளி வீசுவார். கொல்கத்தாவில் ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிடியூட்டில் அவருக்கு பணியாற்ற அழைப்பு வரவே அங்கு அவர் வந்தார்.

400 ஆய்வு பேப்பர்களையும் 24 புத்தகங்களையும் படைத்த அவர், “ஹிந்து  மதம் ஒரு அறிவியல் அணுகுமுறையைக் கொண்டிருப்பது இந்தியர்களுக்கு ஒரு பெரிய வரபிரசாதமாகும்” என்று குறிப்பிட்டார்.

காயத்ரி மந்திரம் பற்றி அடுத்து அவர் சொன்ன கருத்து இந்து மதத்திற்கே பெருமை தரும் ஒன்றாகும்.

“காயத்ரி மந்திரத்தை ஓதுவது புவி, காற்று, வான் ஆகியவை பெருமை வாய்ந்தவை என்பதை நினைவுபடுத்துவதாகும். அவை பற்றி மிகுந்த சக்தியுடன் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நூற்றுக்கு ஒருவர் இதை ஓதினால் கூட போதும், இந்தியா அறிவியலில் உலகிற்கே தலைமை வகித்து நடத்தும்”

(Hinduism enjoins a scientific attitude and this is a great advantage for Indians in their approach to science. The repetition of Gayatri Mantra reminds one that earth, air, and sky are a glory and that it is one’s duty to think about them to the utmost of his power. If one out of hundred persons who repeat it would do the same, India would lead the world in science.

Science and the Enquiring Mind’, ‘The Hindustan Times’, May, 18, 1956)

காயத்ரி மந்திரம் பற்றி அவர் கூறிய பொன்மொழி :-

The Gayatri Mantra should be carved on the doors of every laboratory of the world“.

“காயத்ரி மந்திரம் உலகில் உள்ள ஒவ்வொரு லாபரட்டரியின் கதவுகளில் பொறிக்கப்பட வேண்டும்.”

***

புத்தக அறிமுகம் – 63

வெற்றிக்கலை!

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.வெற்றிக்கலை

 2.குறிக்கோள்

 3.நம்பிக்கை

 4.உற்சாகமே உயிர்

 5.மலர்ச்சி, மகிழ்ச்சி

 6.இனிமையான ஆளுமை

 7.ஒத்துழைப்பு

 8.சேமிப்பு

 9.கற்பனை வளம், மூளையின் நுட்பம்

10.ஒருமுனைப்படுத்தல்

11.சுயயோசனை

12.தலைமைப்பண்பு

13.தோல்வியில் துவளாமை

14.தன்னடக்கம்

15.ஆக்கபூர்வமான சிந்தனை

16.சரியான முடிவு எடுத்தல்

17.உடல் நலமும், ஓய்வும்

18.இறை நம்பிக்கை

19.பிரார்த்தனையின் வலிமை

20.ஊதியத்திற்கு மேல் உழைத்தல்

21.சகிப்புத்தன்மை

22.நேரத்தைப் பயன்படுத்தல்

23.நேரத்தைப் பயன்படுத்தல் -2

24.மறத்தலும், மன்னித்தலும்

25.வெற்றிக்கு உற்ற துணை

26.முடிவுரை

27.படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல்

*

நூல் பற்றிய சிறு குறிப்பு இது :

வெற்றி என்பது என்ன? அதை அடைவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பனவற்றை விளக்கும் நூல்! குறிக்கோளை நிச்சயிப்பது, தன்னம்பிக்கை, உற்சாகம், ஊதியத்திற்கு மேல் உழைப்பது, பிரார்த்தனையின் மகிமை என வெற்றியை அடைவதற்கான வழிமுறைகள பல்வேறு அத்தியாயங்களில் எளிய தமிழில் கூறுகிறது இந்நூல். ஏராளமான செயல்முறை உத்திகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. பெரியோர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதன் மூலம் உத்வேகத்தையும் ஊட்டுகிறார் ஆசிரியர்.

இந்த நூலுக்கு முன்னுரை வழங்கி கௌரவித்திருப்பவர்

பிரபல டைரக்டரும் கதாசிரியரும் பாக்யா இதழின் ஆசிரியருமான திரு கே.பாக்யராஜ் அவர்கள்.

அவர் தனது முன்னுரையில், வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும்பொழுது இந்த நூலாசிரியர் அதை இப்படிப் பிறருக்கும் பயன்படும் வகையில் சீராகவும் சிறப்பாகவும் வெளியிட்டிருப்பதைப் பாராட்டுகிறார். 

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். வெற்றிக்கலை நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

‘Kari’ for Elephant is Not a Tamil Word?-1 (Post No.11,282)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,282

Date uploaded in London – 20 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

WE HAVE AT LEAST 45 WORDS FOR ELEPHANT IN TAMIL NIKANDU/thesaurus (See My Earlier Article)

Since ancient Tamils considered Tamil and Sanskrit two eyes of the same man they never differentiated the two words in dictionaries and thesauruses.  There is no Tamil dictionary or nikandu/thesaurus without Sanskrit words. In fact, my research shows that there are more Sanskrit words in these so-called Tamil dictionaries.it shows Tamils considered both of them their own mother tongues. It is true with Tamil literature as well. They used both  the languages as if their own mother tongues. There is another reason which supports my theory that both the languages came from the same root;  devotees of Siva believe that both the languages came from the sound of kettle drum of Lord Siva

Kari in Tamil means charcoal or elephant. But other meanings such as hand, witness, black pepper, accusation are also there.

In Sanskrit Kaarin and Karin are used for elephant. And Hasti, Ibha, Gaja are also used.

Now the question is KARI  a Tamil word or not?

If we take it chronologically it comes first only in Sanskrit.

Wilson in his translation of the Rig Veda finds it in 4-34-3 of Rig Veda. Most famous Sanskrit lexicon/ thesaurus Amarakosa lists many names for elephant including Kari.

I can interpret it in two ways. The animal which is black (kari in Tamil) is Kari; so it is a Tamil world

The animal which has a prominent hand/trunk (Kara= Hand) is Karin; so it is Sanskrit.

One rare and interesting co incidence is both Kari in Tamil and Ibha in Sanskrit mean ‘Number Eight’ as well!

Kari is found in more ancient literature in Sanskrit. Mahabharata, Kiratarjuniya, Amarakosa etc and the authors used Karin for elephant.

In Tamil, Kari means Charcoal or that which is burnt to ash. For elephant, Sangam poets used Vezam, Yaanai, Kaliru and seldom used Kari.

xxx

Etymology of Elephant from Sanskrit

The English word Elephant is derived from Sanskrit ‘Ibah’, which is found in the Vedas. It changed to Erepa in Phoenician. R/L changes are seen through out the world. Panini was the first one to put it in grammar. Erepa became elepha in Greek and Latin. Elephant is a holy animal for Hindus .All the temples and Mutts do Go Puja (cow worship) and Gaja Puja (elephant worship). The oldest picture of elephant is in the Indus seal. That shows Hindus are the one who took it to different parts of the world. It is part of Chatur Anaga of army and Chaturanga/chess game as well.

Asvaghosa , who came after Kalidasa, also refers to elephants with the names , Gaja, Gajendra, Hasti, Kari, Karin , Kunjara, Kalabha, Vaarana, Naag, Rsabha, Dvipa and Dviipendra. Many names are in the Amarakosa.

Egypt, though  an African country, did not use elephant at all . We cant see it Egyptian Pyramid paintings . Only after contacting with Hindus they learnt to control horses and elephants .

Hastin, Gaja, Karin , Rsabha and Ebha are all found in the Vedic literature

The chess game that was invented by Hindus also made elephant as part of the four fold army. The name of Asvattama, the elephant, was used to defeat the Kauravas. All the elephants have special names in Hindu books.

Asvaghosa says

The elephants are found in the forests of Himalayas. They caught them with the help of elephant catchers. Sometimes they became wild and were controlled with help of Ankusa.

To be continued………………………….

tgs- Elephant, etymology, Ibha, Indus seal, Rig Veda

திருவிளையாடல் புராணத்தில் 32 சாமுத்ரிகா லக்ஷணம்(Post No.11,281)

image of Kenneth Petera, American wrestler

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,281

Date uploaded in London – 20 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பல நூல்கள் 32 சாமுத்ரிகா லக்ஷணம் பற்றிக் குறிப்பிட்டாலும் அவை என்னவென்ன என்று சொல்லுவதில்லை. பரஞ்சோதி முனிவர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் உக்கிர குமார பாண்டியன் திரு அவதார படலத்தில் இது பற்றித் தெளிவாகப் பாடி இருக்கிறார்..

சாமுத்திரிகா லட்சணம் என்ற சாஸ்திரம் 64 கலைகளில் ஒன்று. உடல் உறுப்புகளின் அமைப்பைக் கொண்டு ஒருவனின் குணாதிசயங்களை சொல்லும் அபூர்வ இந்து சமய அறிவியல் உண்மை ஆகும். இதை மேல் நாட்டினர் கூட இன்னும் சரிவர ஆராயவில்லை. அவ்வப்போது வரும் கட்டுரைகள் மூலம் சில செய்திகளை மட்டும் வெளியிடுவார்கள். ஆனால் இந்துக்கள் இதுபற்றி நூல்களே எழுதிவிட்டனர். பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த பழைய தமிழ் நூலின் பல பக்ககங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளேன்.

ராம பிரானை வருணிக்கும் வால்மீகியும்  கம்பனும் அவருக்கு முழங்காலைத் தொடும் அளவுக்கு நீண்ட கைகள் இருந்ததைச் சொல்ல தவறுவது இல்லை. ஆஜானு பாஹு, அரவிந்த லோசனம் (தாமரைக் கண்ணான் உலகு- குறள் )  என்று வருணிப்பர். நீண்ட கண்கள் இருப்பதைத் தாமரை இதழ்க்கண் போன்ற கண் என்பர். வள்ளுவன் கூட அதைச் சொல்லிவிட்டான் (குறள் 1103).

இதை விஞ்ஞான ரீதியிலும் விளக்கலாம். ஆதி காலத்தில் ஈட்டி, வேல் வருவதற்கு முன்னர் மனிதர்கள் வில், அம்பு களைப் பயன்படுத்தி வேட்டை ஆடினார்கள்; பகைவரை மாய்த்தார்கள் ; அதில் வெற்றி பெறுபவன் நீண்ட கைகளை உடையவனா கத்தான் இருப்பான். அம்பினை இழுத்து இழுத்து கைகள் நீண்டுவிடும்; அவனுக்குப் பிறக்கும் சந்ததியினரும் அப்படியே ஆஜானு பாஹு வாகப் பிறப்பர் ; அவர்களே வில் வித்தைக் கலையில் , போரில், சிறந்து விளங்கியிருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். சாமுத்ரிகா சாஸ்திரம் இப்படி அனுபவ ரீதியில் கண்டு பிடிக்கப்பட்டதே.

பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் :

அவயவ உறுப்புகளில் உன்னத உறுப்பு ஆறு , நீண்ட  உறுப்பு ஐந்து, சூக்கும உறுப்பு ஐந்து, குறுக்க  உறுப்பு நான்கு, அகல  உறுப்பு இரண்டு, சிவந்த  உறுப்பு ஏழு,  ஆழ்ந்த  உறுப்பு மூன்று ஆகிய 32  உறுப்புகள் அதற்கான இலக்கண நூலில் சொல்லப்பட்டுள்ளன . அவைகளை விரித்துரைப்பின் ,

வயிறு, தோள் , நெற்றி , நாசி, மார்பு, கையடி இவை (6) ஆறும் உயர்ந்திருப்பின் அவன் இந்திரன் ஆவான்.

ஒளியைக் கிரகிக்கின்ற  கண், கபோலம் , செங்கை, நாசி, நடு மார்பு, இவ்வைந்தும் (5) நீண்டு இருக்குமாயின் நன்மையாம் .

தலை மயிர், உடல், விரற்கணு , நகம், பல் (5)  இவ்வைந்தும் சிரியதாயிருப்பின் ஆயுள் விருத்தி .

கோசம்( ஜனன உறுப்பு), கணைக்கால், நாக்கு, முதுகு, இந்த (4) நான் கும் குறுகி இருக்குமாயின் செல்வப் பெருக்காம்.

சிரம், நெற்றி  இவ்விரண்டும்(2)  அகன்றிருக்குமாயின் இதுவும் நன்றாகும் .

உள்ளங்கால் ,உள்ளங்கை , கண்கள், இதழ்க்கடை, அண்ணம் , நாக்கு, நகம் இவை ஏழும் (7) சிவந்திருக்குமாயின் மிகுந்த இன்பம் உண்டாகும்.

இகல் வலி , ஓசை, நாபி என்று சொல்லுகின்ற இவை மூன்றும் (3) ஆழ்ந்திருப்பின் எவர்க்கும் மேலான நன்மையுண்டாகும் .

xxxx

திருவிளையாடல் புராணம்

உன்னத ஆறு நீண்ட உறுப்பும் ஐந்து சூக்கம் தானும் 

அன்னது குறுக்க நான்காம் அகல் உறுப்பு இரண்டு ஏழ் ஆகச் 

சொன்னது சிவப்பு மூன்று கம்பிரம் தொகுத்த வாறே 

இன்னவை விரிக்கின் எண் நான்கின் இலக்கண உறுப்பாம் என்ப.

960

வயிறு தோள் நெற்றி நாசி மார்பு கை அடி இவ் ஆறும் 

உயிரில் வான் செல்வன் ஆகும் ஒளி கவர் கண் கபோலம் 

புயல் புரை வள்ளல் செம்கை புது மணம் கவரும் துண்டம் 

வியன் முலை நகுமார்பு ஐந்து நீண்ட வேல் விளைக்கும் நன்மை.

961

நறிய பூம் குஞ்சி தொக்கு விரல் கணு நகம் பல் ஐந்தும் 

சிறியவேல் ஆயுள் கோசம் சங்க நா முதுகு இந் நான்கும் 

குறியவேல் பாக்கியப் பேறாம் சிரம் குளம் என்று ஆய்ந்தோர் 

அறியும் இவ் உறுப்பு இரண்டும் அகன்றவேல் அதுவும் நன்றாம்.

962

அகவடி அங்கை நாட்டக் கடை இதழ் அண்ணம் நாக்கு 

நகம் இவை ஏழும் சேந்த நன்மை நாற் பெறுமா இன்பம் 

இகல் வலி ஓசை நாபி என்று இவை மூன்றும் ஆழ்ந்த 

தகைமையால் எவர்க்கும் மேலாம் நன்மை சால் தக்கோன் என்ன.

963

எல்லை இன் மூர்த்தி மைந்தன் இலக்கண நிறைவினோடு 

நல்ல ஆம் குணனும் நோக்கிப் பொது அற ஞாலம் 

                                     காக்க 

வல்லவன் ஆகி வாழ் நாள் இனி பெற வல்லன் என்னா 

அல் அணி மிடற்றான் பின்னும் மனத்தினால் அளந்து 

                                    சூழும்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

முன்னர் வெளியான சாமுத்ரிகா லக்ஷண கட்டுரைகள்

32 சாமுத்ரிகா லக்ஷணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › 32-…

·Translate this page

20 Jul 2018 — WRITTEN by London swaminathan. Date: 20 JULY 2018. Time uploaded in London – 18-29 (British Summer Time). Post No. 5240.

தெய்வீகப் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணங்கள் …

https://tamilandvedas.com › தெய…

·Translate this page

26 Sept 2020 — ஜோதிடம், சகுனம், நிமித்தம், கைரேகை, கால் ரேகை, சாமுத்ரிகா லக்ஷணம் என இப்படிப் …

சாமுத்ரிகா லட்சணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

·Translate this page

((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com … சாமுத்ரிகா லட்சணம்: கம்பன் தரும் தகவல் (Post No.3142).

Missing: லக்ஷணம் ‎| Must include: லக்ஷணம்

You’ve visited this page 3 times. Last visit: 20/09/22

TAGS- திருவிளையாடல் புராணம், சாமுத்ரிகா லட்சணம், 32 உறுப்பு, பரஞ்சோதி முனிவர்

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்- 6(Post No.11,280)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,280

Date uploaded in London – 20 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கணவனுடன் சிதைத்தீயில் பாய்ந்து உடன்கட்டை ஏறும்  “சதி”  (SATI) என்னும் வழக்கத்தை ரிக் வேதமோ, மனு நீதி நூலோ குறிப்பிடவில்லை. வால்மீகி ராமாயணமும்  (வா.ரா. ) இது பற்றிப் பேசவில்லை. இடைச் செருகல் என்று கருதப்படும் உத்தர காண்டத்தில் மட்டும் வேதவதி , அவருடைய தாயார் இப்படி இறந்ததாகக் கூறுகிறார். அந்த ஒரு இடத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை. தசரதன் மனைவியரோ, வாலியின் மனைவியரோ அப்படி இறக்கவுமில்லை.

Xxx

விலை மாதரும் ஆடல் அழகிகளும்

ஆண்களை மகிழ்விக்கும் “கணிகா” மகளிர் (COURTESANS) பற்றியும் வால்மீகி  பாடி இருக்கிறார்.அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகத்துக்கு கணிகா” மகளிர் அழைத்து வரப்பட்டனர்.

ராமர் வனவாசத்திலிருந்து திரும்பி வந்தபோது வரவேற்பு  கொடுத்தவர் அணியில் அவர்களும் இருந்தனர்.

கலைகளில் வல்லவர்களான  அவர்களை அரண்மனை சேவைக்கும் அழைத்தனர் (2-3-17,6-127-3/4, 1-10-5)

சில ஸ்லோகங்களை மட்டும் காண்போம் 

पताकाः च பாவட்டாக்களும் , आबध्यन्ताम् கட்டப்படட்டும் , राजमार्गः च தேசீய நெடுஞ்சாலை முழுதும் , सिंच्यतां च தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்படட்டும்  सर्वे எல்லா , तालावचराः நடிகர், நடிகையரும் , स्वलङ्कृताःநன்கு அலங்கரிக்கப்பட்ட , गणिकाः च ஆடல் அழகிகளும் , नृपवेश्मनःஅரண்மனை , द्वितीयाम् இரண்டாவது , कक्ष्याम् அறைக்கு , आसाद्य அழைத்துவரப்பட்டு , तिष्ठन्तु அமரும்படி செய்யுங்கள்

(ராமர் பட்டாபிஷேகத்துக்காக ) சாலைகள் முழுதும் தோரணம் கட்டுங்கள் ; தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யுங்கள்;நடிகர், நடிகையர், அலங்காரம் செய்துகொண்ட ஆடல் அழகிகளை அரண்மனையின் இரண்டாவது அறையில் அமர்த்துங்கள்

आबध्यन्तां पताकाश्च राजमार्गश्च सिंच्यताम्।

सर्वे च तालावचरा गणिकाश्च स्वलङ्कृताः।।2.3.17।।

कक्ष्यां द्वितीयामासाद्य तिष्ठन्तु नृपवेश्मनः।

ஆபத்யந்தாம் பதாகாஸ் ச  ராஜமார்கஸ்ச்ச ஸிஞ்சயதாம்

ஸர்வே ச தாலா வசரா கணிகாஸ் ச ஸ்வலங்க்ருதாஹா

கக்ஷ்யாம் த்விதீயாமாஸாத்ய  திஷ்டந்து ந்ருபவேஸ்மனஹ 

XXX

गणिकास्तत्र गच्छन्तु रूपवत्यस्स्वलङ्कृता:।

प्रलोभ्य विविधोपायैरानेष्यन्तीह सत्कृता:।।1.10.5।।

கணிகாஸ் ச கச்சந்து ரூப வத்யஸ்வலங்க்ருதாஹா

ப்ரலோப்ய விவிதோ பாயை ரானே ஷ் யந்தீஹ ஸத் க்ருதாஹா

ஆடல் அழகிகளை அனுப்பி ரிஷ்ய ச்ருங்கர் என்னும் கலைக்கோட்டு முனிவரை ஏமாற்றி அழைத்துவர ஏற்பாடு:-

रूपवत्य: அழகான , स्वलङ्कृता: அலங்காரம் செய்துகொண்ட/ மேக் அப் போட்டுக்கொண்ட , गणिका: கவர்ச்சிக்  கன்னிகள்  , सत्कृता: தகுந்த மரியாதையோடு , तत्र அங்கே , गच्छन्तु போகட்டும் , विविधोपायै: பல்வேறு சேஷ்டைகள் செய்து , प्रलोभ्य மயக்கி , इह இங்கே , आनेष्यन्ति அழைத்துவாருங்கள்

அழகிய, அலங்காரம் செய்துகொண்ட ஆடல் அழகிகளை அனுப்பிவையுங்கள் அவர்கள் பலவகையான வழிகளில் ஆசை காட்டி மரியாதையுடன் இங்கே (கலைக்கோட்டு முனிவரை) கொண்டுவரச்செய்யுங்கள்.

இதிலிருந்து அக்காலத்தில் ஆண்களை மயக்கி, சொக்கவைத்து இழுக்கும் ஆடல் அழகிகள் இருந்ததை அறியலாம் ; சிலப்பதிகார மாதவியிடத்திலும் இதைக் காண்கிறோம். சங்க இலக்கியத்தில் அக நானூறு, குறுந்தொகை, நற்றிணை , கலித்தொகை முதலிய நூல்களில் ஏராளமான பரத்தையர் (கவர்ச்சிக் கன்னிகள்) பற்றிய விஷயங்கள் வருகின்றன என்பதையும் குறிப்பிடுதல் பொருத்தம்

காம சூத்திரம் நூல் எழுதிய வாத்ஸ்யாயனரும் வேசியர் 64 கலைகளிலும் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்பார். (காம சூத்திரம் 1-3-20)

XXXX

 ராம- ராவண யுத்தம் முடிந்து ராமருக்குப் பட்டாபிஷேகம் செய்யும் போதும் ஆடல் அழகிகள் பற்றிய குறிப்பைக் காண்கிறோம் : ” புராண கதைகளைச் சொல்லும் , அரசர்களின் வம்ச புகழ்பாடும் பாணர்கள் , இசைக்கலை வல்லுநர்கள், ஆடல் அழகிகள் எல்லோரும் வரட்டும்.ராமனுடைய சந்திரன் போன்ற குளிர்ச்சிமிக்க, ஒளிபொருந்திய முகத்தைக் காண, ராஜமாதாக்கள் , மந்திரிகள் , பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்கள் சங்கத்தினரும் குடும்பத்தினரும் இங்கே கூடட்டும்  என்று வால்மீகி பாடியிருப்பதையும் காணலாம்.

TO BE CONTINUED…………………………………

Tags- வால்மீகி , ராமாயணத்தில், பெண்கள்-6,ஆடல் அழகி, கணிகா

அறிவியல் அறிஞர் வாழ்வில் 9 (Post No.11,279)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,279

Date uploaded in London – –    20 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் – 9

ச.நாகராஜன்

17

இன்ஃபைனைட் ஹோட்டல்!

டேவிட் ஹில்பெர்ட்  (David Hilbert பிறப்பு : 23-1-1862 மறைவு :14-2-1943) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கணித மேதை.உலகின் அனைத்து கணித மேதைகளாலும் மதிக்கப்பட்டவர். இன்ஃபினிடி  செட் (Infinity Set) என்பதை விளக்கும் விதமாக அவர் ஒரு சிந்தனை சோதனையைச் (Thought Experiment) செய்தார். அதன் பெயர் இன்ஃபைனைட் ஹோட்டல் அல்லது ஹில்பர்ட் ஹோட்டல் என்பதாகும். அது அனைவரையும் கவர்ந்த ஒன்று. இன்ஃபினிடி என்பது எல்லையற்ற கணக்கற்ற ஒன்று.

அவரது சிந்தனை சோதனை இது தான்!

மிக நீண்ட ஒரு விமானப் பயணத்தை மேற்கொண்டு அலுத்து களைத்து அவ்வளவாகத் தெரியாத ஒரு பெரிய நகரத்திற்கு நீங்கள் வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் திகைப்பைத் தரும் வண்ணம் அங்கு ஒரு ஹோட்டலிலும் உங்களுக்குத் தங்க அறை கிடைக்கவில்லை. கடைசியாக அங்கு ஒரு மிகப்பெரிய ஹோட்டல் இருப்பதை நீங்கள் அறிகிறீர்கள்.

அதன் பெயர் இன்ஃபைனைட் ஹோட்டல். அங்காவது ஒரு அறை கிடைக்காதா என்று அங்கு நீங்கள் விரைகிறீர்கள்.

பெயருக்குத் தகுந்தாற் போல எண்ணிக்கை கடந்த அறைகள் அங்கு இருக்க வேண்டுமல்லவா!

அங்கு வரவேற்பு டெஸ்கில் இருந்த ரிஸப்ஷனிஸ்டைப் பார்த்து எனக்கு ஒரு அறை வேண்டும் என்கிறீர்கள்.

அவர் சற்று தலையை ஆட்டியவாறே, “மன்னிக்க வேண்டும், எல்லா அறைகளும் புக் செய்யப்பட்டு விட்டன” என்கிறார்!

“என்ன, இது இன்ஃபைனைட் ஹோட்டல் ஆயிற்றே” என்கிறீர்கள்.

“ஆமாம்! அது உண்மை தான்! ஆனால் அறைகள் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன” என்கிறார் அவர்.

சற்று யோசித்துப் பார்த்த உங்களுக்கு ஒரு அருமையான யோசனை உதிக்கிறது.

“எனக்கு நிச்சயமாக ஒரு அறை வேண்டும். நீண்ட பயணத்திற்குப் பிறகு களைத்துப் போய் இங்கு வந்திருக்கிறேன்.  எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்!” என்கிறீர்கள்.

உங்களைப் பார்த்த அவர், “நிச்சயமாக, சொல்லுங்கள் என்ன உதவி?” என்கிறார்.

“ஹோட்டலிலோ எண்ணிக்கை அற்ற அறைகள் இருக்கின்றன. முதலாம் அறையில் இருப்பவரை அடுத்த அறைக்கு மாற்றுங்கள். அடுத்த அறையில் இருப்பவரை அதற்கு அடுத்த அறைக்கு மாற்றுங்கள். காலியாக இருக்கும் முதல் ரூமை எனக்குத் தந்து விடுங்கள். இப்படி மொத்த பேரையும் அடுத்தடுத்த அறைக்கு மாற்றி விட்டீர்கள் என்றால் முதலில் எத்தனை அறைகள் ஒதுக்கி இருந்தீர்களோ அதே எண்ணிக்கையில் தானே மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இருக்கும். எல்லோருக்கும் அறை உண்டு; எனக்கும் உண்டே!” –

என்று முடிக்கிறீர்கள் நீங்கள்!

உங்களது இந்த யோசனை எப்படி?

இது இன்ஃபினிடி என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுவதுமாக விளக்குகிறதல்லவா!

அனைவரும் இதைக் கேட்டு ரசித்தனர்; இன்றளவும் ரசித்துக் கொண்டு இருக்கின்றனர்!

18

டெஸ்கார்டஸின் கடவுள்!

டெஸ்கார்டெஸ் (Descartes) பிரான்ஸின் பணக்கார குடும்பம் ஒன்றில் பிறந்தவர். (பிறப்பு 31-3-1596 மறைவு 11-2-1650).தெய்வ நம்பிக்கை உள்ள கத்தோலிக்கர். ராணுவத்தில் தன்னார்வல படை வீரராக அவர் சேர்ந்தார். ப்ராடஸ்டெண்டுகள் கத்தோலிக்கர்களுடன் சண்டையிட்ட 30 வருட ப்ரேக் (Siege of Prague) முற்றுகையிலும் அவர் கலந்து கொண்டார்.

ஒரு சமயம் தெற்கு ஜெர்மனியில் பயணம் செய்கையில் அவர் பிரபல கணித மேதையும் விஞ்ஞானியுமான ஜோஹன் ஃபால்ஹேபரைச் (Johann Faulhaber) சந்தித்தார். ஜோஹன் விஞ்ஞானி மட்டுமல்லாமல் ஒரு தெய்வீக யோகியும் கூட. அவர் கணிதத்திலும் தெய்வீக யோகத்திலும் தனது சில கொள்கைகளை டெஸ்கார்டஸுக்குக் கற்பித்தார். அதிலிருந்து டெஸ்கார்டஸுக்கு அவற்றில் அதிக ஆர்வம் பிறந்தது.

அவருக்கு கணித மேதையான ப்லெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) சிறந்த நண்பராக விளங்கினார்.

பாஸ்கல் தான் தியரி ஆஃப் பிராபபலிடியைக் (Theroy of Probability) கண்டவர்.

அவருக்கும் தெய்வ நம்பிக்கை உண்டு.

“கடவுளை நம்பு. அவரை நம்பினால் இறப்பிற்கு பின் அவர் நம்மைக் காப்பார்; ஒருவேளை கடவுள் இல்லை என்றாலும் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை; ஆனால் நம்பாமல் இருந்தாலோ நரகத்திற்கு அல்லவா போக வேண்டி இருக்கும் “ என்றார் அவர்.

டெஸ்கார்டஸ் 1628இல் ஹாலந்து சென்றார். 1637ஆம் ஆண்டு தனது பிரசித்தமான “The Discourse on the Method” என்ற நூலை வெளியிட்டார்.அவரது இந்த புத்தகம் ப்ராடஸ்டெண்டுகளுக்கு ஆத்திரத்தைத் தந்தது. அவரை மன்னிப்புக் கடிதம் எழுதுமாறு அவர்கள் வற்புறுத்தினர். இதனால் மனம் வருந்தி அவர் ஸ்வீடனுக்குக் கிளம்பினார். ஆனால் 1650ஆண்டு ப்ளூவினால் பாதிக்கப்பட்டு இறந்தார். ஆனால் அவரது மரணம் பற்றிய மர்மம் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தெய்வ நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் முரண்பாடு இல்லை ஏ என்ற கொள்கையை அவர் கொண்டிருந்தார். இதனால் அனைவராலும் அவர் மதிக்கப்படுகிறார்.

***

புத்தக அறிமுகம் – 62

சம்ஸ்கிருத இலக்கியத்தில் சில புதிர்க்கவிதைகளும் அறிவுரைகளும்!

பொருளடக்கம்

என்னுரை

1. மான் விழியாளுக்கு எது ஆபரணம்?

2. ஆறு கேள்விகளுக்கு பதில் தரும் ஒரு சொற்றொடர்!

3. ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாதா!

4. கணவனைப் பிரிந்த சீதை எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தாள்?

5. மீன்களுக்குப் பிடிக்காத நீர்நிலை எது? எதனால்?

6. கேள்வி பதிலாக உள்ள சில புதிர்க் கவிதைகள்!

7. வளமாக இருக்கும் போது பரிதாபத்திற்குரியது எது?

8. கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர்!

9. கையெழுத்து முதல் தலையெழுத்து வரை!

10. கேள்விகள் பல; பதிலோ ஒரு வார்த்தையில்!

11. சிவனின் உடல் எப்படி இருக்கிறது?

12. 14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில்! சம்ஸ்கிருத விந்தை!!

13. நையாண்டிப் பாடல்கள் – சம்ஸ்கிருதத்தில்!

14. எனக்கு மூன்று மனைவிகள்!

15. கவலையை அகற்றும் ஏழு விஷயங்கள்!

16. உப்பே உத்தமம்!

17. மேலானவன் யார்? மேதாவி யார்?

18. புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் 13 நல்ல விஷயங்களும் சந்தோஷத்தை தரும் எட்டு விஷயங்களும்!

19. வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!

20. மஹாத்மா என்பவர் யார்?

21. இறந்ததற்குச் சமம்!

22. காளிதாஸன் மீது போஜனின் நட்பு!

23. கீதத்தின் பெருமை!

24. படிப்பது எப்படி?

25. பாரதத்தின் பெருமை!

26. சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்!

27. பேராசை பெரு நஷ்டம் – மூன்று சுபாஷிதங்கள்!

28. பெண் அக்னி போல; ஆண் குடத்து நெய் போல!

29. கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்!

30. வாழ்த்துவதிலும் ஒரு அழகு, முறை, ஆசீர்வாதம்!

பிற்சேர்க்கை – 1

பிற்சேர்க்கை – 2

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

பாரதத்தின் அற்புதமான அறிவுச் செல்வத்தைக் கொண்டிருக்கும் மொழிகளில் தலையாய இரு மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமுமே.

இந்த மொழிகளில் உள்ள ஒரு கோடி கைபிரதிகள் இன்னும் படிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்த நூல்கள் ஓலைச் சுவடிகளாக உள்ளன; பாரதத்திலேயே கல்வெட்டுக்களில் இலக்கியச் செல்வம் பொதிந்திருக்கிறது. இன்னும் முறையாக அவை தொகுக்கப்படவில்லை.

சம்ஸ்கிருத இலக்கியமோ ஒரு பெருங் கடல். அதில் தனி ஒரு இடத்தை சுபாஷிதங்கள் பெறுகின்றன.

பல தனிப்பாடல்களைத் தொகுத்து உள்ள தொகுப்பு நூல்களும் ஏராளமாக உள்ளன.

இந்தக் கடலில் சில முத்துக்களை தேர்ந்தெடுத்து அவ்வப்பொழுது தமிழில் கட்டுரைகளாக எழுதி வந்தேன்.

அவற்றை நூலாக வெளியிடும் முயற்சியில் சம்ஸ்கிருதச் செல்வம், சம்ஸ்கிருதச் செல்வம் – 132 நியாயங்கள் பற்றிய விளக்கம், சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் 200 ஆகிய மூன்று நூல்களை அடுத்து இந்த நூல் வெளியாகிறது.

கட்டுரைகளாக வெளி வந்த போது பாராட்டி ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி.

இவற்றை www.tamilandvedas.com ப்ளாக்கில் வெளியிட்ட லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

அழகிய முறையில் இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி
சான்பிரான்ஸிஸ்கோ                         ச.நாகராஜன்
10-9-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

MORE ABOUT STUDY OF BODY FEATURES (SAMUDRIKA LAKSHANA)- Post No.11,278

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,278

Date uploaded in London – 19 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I HAVE WRITTEN THREE ARTCILES ON SAMUDRIKA LAKSHANA FROM 2012. PLEASE SEE THE LINKS AT THE END OF THIS ARTICLE

Samudrika lakshana is the study of body features of a man or woman and interpret his /her characteristics, behaviour etc. on the basis of the features. It is a Hindu science practised by Hindus for thousands of years. 2000 year old Kamasutra of Vatsyayana lists this science as one of the 64 arts. The proof for it lies in the Valmiki Ramayana and Mahabharata. Whenever they describe a heroic type of man the poets will use the Sanskrit words Aajaanu Baahu; the meaning is one who is blessed with long arms which touch one’s knees.    Rama is described Aaajaanu Baahu by Valmiki. Tamils also followed it in Kambaramayana and other books. If we look at the scientific background, before weapons made of iron were made men were using bow and arrow. Naturally if a man who practises archery more ,  his arms grow longer and longer generation after generation. It can be interpreted from another angle as well. One who has longer arms will easily excel in shooting arrows; naturally he becomes a hero.

In Tamil Thiruvilaiyadal Purana we have more information about excellent body parts.

What is Thiruvilaiyadal Purana?

It is a Tamil book written by atleast 300 years ago by Paranjothi Munivar. It tells us the story of Lord Shiva’s miracles in Madurai, the temple town of Tamil Nadu. Most famous Meenakshi Sundareswarar temple is located in Madurai and the 64  leelas/ playings of Lord Siva are in this Purana. They are enacted even today as temple festivals in Madurai. There is an earlier book with the same name written by Perumpatrappuliyurar. Both deal with the same subject

In the chapter about Ukkira Kumara Pandya, there is a good description of commendable or admirable body features. Ukkira kumara was the son of Somasundara Pandya (Lord of Madurai temple). He is said to have 32

Exceptional body features  (Samudrika Lakshana).

One will become an Indra (like Vedic hero Indra) if the following 6 body parts are prominent: stomach, shoulder, forehead, nose,  chest, palm.

Following 5 parts should be longer: eyes, head, hand, nose, chest.

Life span will increase if the following 5 parts are smaller: hair, body, finger nodes, nail, tooth.

Wealth will increase if the following 4 parts are narrower: tongue, back, ankle, genital part

More pleasure will be obtained if the following 7 parts are reddish: sole, palm, eyes, lips, palate, tongue, nail.

It will be good if head and forehead are  broad.

If belly button, ikalvali (meaning is not found for this Tamil word) and Voice are deeper that person will be in the forefront.

OLD ARTICLES

Scientific proof for Samudrika Lakshana – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/05/26 › scientific-pro…

26 May 2012 — A popular Tamil hymn is praising Goddess Saraswati as the one who bestows everyone with these 64 “arts”.

·                    

MORE SCIENTIFIC PROOF FOR SHAMUDRIKA LAKSHAN …

https://tamilandvedas.com › 2020/01/19 › more-scientif…

19 Jan 2020 — It is the study of body parts and their connection to a person’s behaviour and character. It is one of the 64 arts listed in Vatsyayana’s Kama …

·                    

SAAMUDRIKAA LAKSHANA- 5 BODY PARTS SHOULD BE …

https://tamilandvedas.com › saamudri…

·Translate this page

20 Jun 2019 — SAAMUDRIKAA LAKSHANA- 5 BODY PARTS SHOULD BE LONG (Post No.6577) … Scientific proof for Samudrika Lakshana May 262012 In “Science …

Tags- Samudrika Lakshana, Body features, 64 arts, Paranjothi, Thiruvilayatal Purana.

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -5 (Post No.11,277)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,277

Date uploaded in London – 19 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 5


ஓவ்வொரு பெண்ணும் ஆண் மகனைப் பெற்று எடுத்தால் ஆனந்தம் அடைகிறாள். இதை ராமனைப் பெற்றெடுத்த கெளசல்யா,  அவனைக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சியில் காணலாம்

सा चिरस्यात्मजं दृष्ट्वा मातृनन्दनमागतम्।

अभिचक्राम संहृष्टा किशोरं बडबा यथा।।2.20.20।।

ஸா  சிரஸ்யாத்மஜம் த்ருஷ்ட்வா மாது நந்தனம் ஆகதம்

அபிசக்ராம   ஸம்ஹ்ருஷ்டா  கிசோரம் படவா யதா( வா.ரா.2-20-20)

सा அவள் , चिरस्य நீண்ட காலத்துக்குப் பின்னர் , आगतम् வந்த , मातृनन्दनम् தாயை மகிழ்விக்கும் , आत्मजम् அவளுடைய மகனை , दृष्ट्वा பார்த்தபோது , संहृष्टा பேரானந்தத்தில் திளைத்தாள் , बडबा பெண் குதிரையானது , किशोरं यथा ஈன்றெடுத்த குட்டியைப் பார்த்து , अभिचक्राम ஓடுவது போல மகனிடம் ஓடினாள்.

XXX

 .

स मातरमभिक्रान्तामुपसंगृह्य राघवः।

परिष्वक्तश्च बाहुभ्यामुपाघ्रातश्च मूर्धनि।।2.20.21।।

ஸ மாதரம் அபிக்ராந்தாம்  உபஸம்ஹ்ருஹ்ய ராகவஹ

பரிஷ் வக்தஸ்ச பாஹுப்யாம் உபா க்ரதாஸ்ச மூர்த்னி

सः राघवः அந்த ராமன்/ராகவன் , अभिक्रान्ताम् அவளிடம் வந்த போது , मातरम् அன்னையை , उपसंगृह्य மரியாதையுடன் வணங்கினான் , बाहुभ्याम् (அவள்) இரு கைகளாலும் , परिष्वक्तः கட்டி அனைத்து , मूर्धनि உச்சம் தலையில் , उपाघ्रातश्च முத்தம் கொடுத்தாள்.

xxxx

கடும் தவத்தினாலேயே ராமன் போன்ற ஒரு குழந்தை பிறக்க முடியும் என்றும் வால்மீகி காட்டுகிறார் 2-20-48

उपवासैश्च योगैश्च बहुभिश्च परिश्रमैः।

दुःखं संवर्धितो मोघं त्वं हि दुर्गतया मया।।2.20.48।।

உபவாஸைஸ்ச  யோகைஸ்ச  பஹு பி ஸ்ச பரிச்ரமைஹி

துக்கம் ஸம் வர்த்திதோ  மோகம் த்வம் ஹி துர்கதயா  மயா

त्वम् நீ   , दुर्गतया मया  துரதிருஷ்டம் மிக்க என்னால்  , उपवासैश्च நோன் பிருந்தும் , योगैश्च யோகத்தைப் பின்பற்றியும் , बहुभिः பல , परिश्रमैश्च முயற்சிகள் செய்தும்  , दुःखम् கஷ்டப்பட்டு   , मोघम् வீணாகிப் போய்விட்டதே , संवर्धितः வளர்த்ததெல்லாம்

நோன்பு, தவம் மூலம் பெற்று உன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்ததெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல போய்விட்டது என் துர்பாக்கியம்தான் (கெளசல்யாவின் புலம்பல்)

இதையே வள்ளுவனும் எதிரொலிக்கிறான்

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல் எனுஞ் சொல் 70

மகனுடைய குண நலன்களைக் கண்டவர்கள் இவன் தந்தை எந்த அளவுக்கு நோன்பு இருந்து — தவம் செய்து — இவனைப் பெற்று இருக்கவேண்டுமென வியப்பர்.

xxx

பெண் சந்யாசிகள்

ஆண்களைப் போலவே பெண்களும் துறவற வாழ்க்கை வாழ்ந்ததையும் வால்மீகி நமக்குக் காட்டுகிறார். அவர்களை பிக்ஷுணி , தபஸ்வினி ,ப்ரவ்ரஜிதா என்ற சொற்களால் அழைக்கிறார் .

அத்தகைய சன்யாசினிகள் நடுக்காட்டில் ஆஸ்ரமத்தில் வசித்தனர். அவர்களுக்கும் முறையான குரு உண்டு. சபரி போன்ற தவசியர் இலை-தழை உடைகளையும் மான்தோலையும் அணிந்து வாழ்ந்தனர் பம்பா நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்த சபரியின் குரு மாதங்க முனிவர்

2-29-13

3-74-22

कन्यया च पितुर्गेहे वनवास श्शृतो मया।

भिक्षिण्या स्साधुवृत्ताया मम मातुरिहाग्रतः।।2.29.13।।

கன்யயா ச பிதுர்கேஹே வனவாஸ ச்ருதோ மயா

பிக்ஷிண் யாஸ்து வ்ருத்தாயா மம மாதுரிஹ்ரதஹ

पितुः தந்தையினுடைய  गेहे வீட்டில்  कन्यया நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது , मया என்னால் , मम मातुःஎன்னுடைய தாயார்  , अग्रतः முன்பாகவே, साधुवृत्तायाः சாதுவாக வாழும் , भिक्षिण्या ஒரு பெண் சந்நியாசி , इह இந்த உலகில்  वनवासः காட்டில்தான் வாழமுடியும் என்று சொன்னதைக் , श्रुतः கேட்டேன் .

பெண் சன்யாசிகளும் காட்டில் வாழ்ந்ததை இது காட்டுகிறது.

xxxx

पश्य मेघघनप्रख्यं मृगपक्षिसमाकुलम्।

मतङ्गवनमित्येव विश्रुतं रघुनन्दन।।।3.74.21।।

பஸ்ய மேக கண  ப்ரக்யம் ம்ருக பக்ஷி ஸமாகுலம்

மதங்க வனம் இத்யேவ  விஸ்ருதம் ரகுநந்தன

रघुनन्दन ரகு குலத்தில் உதித்தவனே , मेघघनप्रख्यम् கரிய மேகம் போல இருண்டு கிடக்கும் , मृगपक्षिसमाकुलम् fபிராணிகளும் பறவைகளும் நிறைந்த இந்த இடம் , मतङ्गवनमित्येव மதங்க முனிவரின் வனம் /காடு , विश्रुतम् என்ற புகழ் பெற்றது  , पश्य அதைக் காண்பாயாகுக.

அடர்ந்த காடு ; கரிய மேகக் கூட்டம் போல இருண்டு கிடக்கும் காட்டில் மிருகங்களும், பறவைகளும் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இதுதான் மதங்க முனிவரின் வனம் /காடு என்று புகழ்பெற்றுள்ளது

இதிலிருந்து மதங்க முனிவரின் கீழ், அவரைக் குருவாக ஏற்று பெண் சன்யாசினியாகிய சபரி வசித்தது புலனாகிறது

इह ते भावितात्मानो गुरवो मे महावने।

जुहवाञ्चक्रिरे तीर्थं मन्त्रवन्मन्त्रपूजितम्।।   3.74.22

இஹ தே பாவிதாத்மனோ  குரவோ  மே மஹா வனே

ஜுஹ வாஞ் சக்ரிரே தீர்த்தம் மந்த்ர வன் மந்த்ரபூஜிதம்


महावने இந்தப் பெரிய காட்டில் , भावितात्मानः நமக்கு மேலுள்ளவனை நினைந்து  ते அவர்கள்  मे गुरुवः என்னுடைய குருமார்களான , इह இங்கே , मन्त्रवत् மந்திரங்களினாலும் , मन्त्रपूजितम् அந்த மந்திரங்கள் மூலம் , तीर्थम् புனித நீரோடு , जुहवाञ्चक्रिरे யாக்கங்களைத் செய்தனர் .

என்னுடைய குருமார்கள் இந்த பெரிய வனத்தில் பெரிய கடவுளைப் போற்றி மந்திரங்கள் சொல்லி யாக யக்ஞங்கள் செய்தனர்.புனித நீர் கொணர்ந்து யாக திரவியங்களால் பூஜித்தனர்

நடுக்காட்டில் அவர்கள் செய்த யாக யக்ஞங்களை இந்த ஸ்லோகம் வருணிக்கிறது. அது மட்டுமல்ல; ராமாயண காலத்தில் பெண்துறவிகளும் அத்தகைய இருண்ட காட்டில் வசித்தனர் என்பதையும் சொல்கிறது

To be continued…………………………………………..

tags- வால்மீகி , பெண்கள் 5, நிலை, ராமாயணம் 

அறிவியல் அறிஞர் வாழ்வில் … 8 (Post No.11,276)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,276

Date uploaded in London – –    19 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் …   8

ச.நாகராஜன்

                 14

ஆவாகாட்ரோவின் மறுக்கப்பட்ட விதி!

பிரபல விஞ்ஞானியாக இன்று கொண்டாடப்படும் ஆவாகாட்ரோ (Amedeo Avogadro 1776-1856) அவர் வாழ்நாளில் சரியாக மதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயம். சிறந்த கனவானாகத் திகழ்ந்த அவர் ஒரு வக்கீல். பின்னர் பள்ளி ஆசிரியர். பின்னால் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக ஆனார்.

அவர் விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். வெவ்வேறு வாயுக்கள் ஒரே கன அளவைக் கொண்டிருந்தால், உஷ்ணநிலையும் அழுத்தமும் ஒரே அளவாகவும் அவை கொண்டிருந்தால், அவை சமமாக ஒரே எண்ணிக்கையில் அணுத்துகளைக் கொண்டிருக்கும் என்று (Equal volumes of different gages contains an equal number of molecules provided they are at the same temperature and pressure.) அவர் கூறினார்.

ஆனால் அவரது சமகாலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் பலரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதை அவர்கள் நிராகரித்து விட்டனர்.

ஆனால் அவர் மறைந்த பிறகு 1870ஆம் ஆண்டு தான் இது சரி தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

இப்போது அவரது விதி ஆவாகாட்ரோஸ் லா (Avogadro’s Law) என்று அழைக்கப்படுகிறது.

15

மரபணுக் கொள்கையைக் கண்டுபிடித்தவர் :க்ரெகர் மென்டெல் (Gregor Mendel)

விஞ்ஞானத்தில் மரபணுக் கொள்கையை முதலில் கண்டுபிடித்தவர் க்ரெகர் மென்டெல். (காலம் :20-7-1822- 6-1 18841884). இவர் ஒரு உயிரியல் வல்லுநர். காலநிலை பற்றிய அறிவியல் நிபுணர். ஒரு கணித மேதையும் கூட.

இவர் ஒரு துறவி. வம்ச பரம்பரை பற்றிய சரியான விதிகளை இவர் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். இந்த விதிகளே பரம்பரை பரம்பரையாக ஒவ்வொரு தலைமுறைக்கும் உயிரினங்களில் மரபணு அம்சங்களைப் பின் தொடரச் செய்கிறது என்று கண்டுபிடித்தார் அவர்.

ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் பிரபலமாக இது அறியப்படவில்லை. அவர் மறைந்து 16 ஆண்டுகள் ஆன பின்னரே, 1900ஆம் ஆண்டு வாக்கில் தான் இது சிறப்பாகக் கொண்டாடப்பட ஆரம்பித்தது. அவர் தனது ஆய்வை மறைவதற்கு 34 ஆண்டுகளுக்கு முன்பேயே, 1866ஆம் ஆண்டே, பிரசுரித்தார்; உலகிற்கு அறிவித்தார்.

இதை அறிவித்த ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர் தனது மடத்தின் மடாதிபதியாக ஆனார். தனது வாழ்நாள் முழுவதும் மடத்தை நிர்வகித்து வந்தார்.

16

கொண்டாடு என்பதை பிரம்மசாரியாக இரு என்று மாற்றிய கதை!

ஒரு ஆவணத்தை காபி செய்வதில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உயிரியல் விஞ்ஞானிகளின் மாநாடு ஒன்றில் ஒரு விஞ்ஞானி கூறிய ஜோக் இது:

ஒரு மடாலயத்தில் துறவி ஒருவர் புதிதாகச் சேர்ந்தார். அவர் அங்குள்ள துறவிகள் அனைவரும் அங்குள்ள பழைய புத்தகங்களில்  அவரவருக்குப் பிடித்த ஏதோ ஒரு புத்தகத்தைக் காபி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தார்.

புதிய துறவி மடாலயத்தில் கீழே இருந்த நிலவறைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

ஏன் அங்கு போகிறீர்கள் என்று அவரைக் கேட்ட போது புத்தகத்தின் ஒரிஜினல் கையெழுத்துப் பிரதியை நான் பார்க்க விரும்புகிறேன். அதனால் அங்கு போய் அதை எடுத்துப் பார்த்து காபி செய்யப் போகிறேன் என்றா.

சிறிது நேரத்தில் நிலவறையிலிருந்து ‘ஓ’ என்ற கூக்குரலும் அழுகுரலும் கேட்டது.

அனைவரும் அங்கு ஓடிப் போய்ப் பார்த்தனர். புதிய துறவி அலறிக் கொண்டிருந்தார்.

என்ன விஷயம் என்று கேட்ட போது ஒரிஜினல் புத்தகத்தைக் காண்பித்து அவர் கூறினார் : நீங்கள் காபி அடித்து அனைவருக்கும் விநியோகம் செய்வது தவறு. ‘பிரம்மசாரியாக இரு’ என்று சொல்லவில்லை புத்தகம். ‘கொண்டாடு’ என்று அல்லவா சொல்லி இருக்கிறது என்றார். (The Word is CELEBRATE, not CELIBATE)

காபி அடித்த புத்தகத்தைப் பார்த்து பிரம்மசாரிகளாக இருந்த அனைவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.

இதைச் சொன்னவர் உயிரியல் அறிவியலில் பேராசிரியரான மார்க் பாகல் (Professor of biological Sciences, Mark Pages, University of Reading)

ஆகவே, ஆவணத்தைப் படி எடுப்பவர்கள் சரியாக உன்னிப்பாகக் கவனித்து படி எடுக்க வேண்டும்!

**


 புத்தக அறிமுகம் – 61

தனிப்பாடல்களில் தமிழின்பம்!

பொருளடக்கம்

என்னுரை

1. பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி ஔவையார்!

2. பிள்ளையாருக்கு யாரும் ஏன் பெண் கொடுக்க முன்வரவில்லை?

3. மீனாக்ஷி அம்மனைத் தரிசித்தவர் சொர்க்கத்திற்கே செல்வர் : புலவர் உறுதி!

4. துயிலையிலே, பயிலையிலே, அயிலையிலே யார் துணை?

5. சிவபிரான் பாம்பை அணிந்தது ஏன்?

6. மானிடரை விதி விடுமா, என்ன?

7. சரஸ்வதிக்குப் பயன் தான் என்ன? – புலவர்கள் இல்லையேல்!

8. பத்தடியில் சொர்க்கம்; அடுத்த பத்தடியில் மோக்ஷம் வரும்! எப்படி?

9. வள்ளி கொண்டான் மயில் ஏறிக் கொண்டான் – ஏன்?

10. நையாண்டிப் புலவரின் உலகியல் பாடல்!

11. மான் பிடித்தீர், முயலை மிதித்தீர், ஆடெடுத்தீர், உம்மைக் காண கழுக்கள் அல்லவோ வரும், காளத்தி நாதனே!

12. கோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா?

13. உமாதேவிக்கு உள்ள ஒரு குறை பாண்டிமாதேவிக்கு இல்லை!

14. முதலையைக் கொலுசினால் கன்னத்தில் உதைத்த பெண்!

15. மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீரா, பாண்டியரே! மஹாராணியின் கேள்வி!

16. கடனால் நடுக்குற்ற புலவர் போட்ட புதிருடன் கூடிய பாடல்!

17. புலவரின் குறும்பு : திரௌபதி மாமனாரைத் தழுவிய பாட்டை எழுதிய அந்தகக் கவி வீரராகவ முதலியார்!

18. ஏழு மேகம் எட்டாச்சு; நவநிதியம் பத்தாச்சு – எப்போது?

19. ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்!

20. கந்தனைப் பாடாமல் கண்டவனைப் பாடுவேனோ?

21. சனியான தமிழை விட்டு வேறொன்றும் அறிந்தோமில்லை!

22. வள்ளல் சீதக்காதியை இழந்து வருந்திய புலவரின் பாடல்கள்!

23. நாகரத்தினம் தந்த நாகத்தின் அற்புத உண்மை வரலாறு!

24. நட்சத்திரப் பாடல்

25. கொக்கு பறக்கும், புறா பறக்கும், நான் ஏன் பறப்பேன்?

26. கொண்டு வந்து போட்டுக் கொளுத்து!

27. நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

28. சந்திரனுக்குத் தையல் அநேகம்; எனக்கும் தையல் அநேகம்!

29. படிப் பாட்டுக்கள்!

30. தானத்தால் பெருகிய நீரும், துக்கத்தால் பெருகிய நீரும்!

31. அரிகண்டம் ஏறிப் பாடத் தயாரா? யம கண்டமே ஏறிப் பாடுவேன், அதற்குத் தயாரா? அதிசயத் தமிழ்ப் புலவரின் சவால்!

32. யம கண்டம் ஏறிப் பாடிய கவி காளமேகத்தின் அதிசயப் பாடல்கள்! – குடத்திலே கங்கை அடங்கும்!!

33. தொழில்களில் சிறந்தது எது? தண்டபாணி சுவாமிகள் பதில்!

புலவர்களின் பட்டியல் மற்றும் அவர்கள் பாடிய பாடலின் முதற்குறிப்பு அகராதி.

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

உலகின் பழம் பெரும் மொழியாகிய தெய்வத் தமிழ் இறைவனிடமிருந்து தோன்றிய மொழி என்பதை சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் உள்ளிட்டவை தெள்ளத் தெளிவாக விளக்குவதை அனைவரும் அறிவர்.

காலம் காலமாக பல்லாயிரக் கணக்கில் கவிதை மழை பொழிந்து வந்துள்ளனர் தமிழ் வளர்த்த புலவர்கள்.

இவர்கள் ஆங்காங்கே உடனுக்குடன் இயற்றிய தனிப் பாடலகள் பல்லாயிரமாகும்.

அவற்றைத் தொகுத்து வெளியிடும் பல முயற்சிகளும் நடந்துள்ளன.

குறிப்பாக திரு மு,இராகவையங்காரின் பெருந்தொகை, திரு உ.வே.சாமிநாதையரின் தனிப்பாடற்றிரட்டு, திரு மு.ரா. கந்தசாமி கவிராயர் தொகுத்த தனிச் செய்யுட் சிந்தாமணி ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம்.

இவற்றிலுள்ள சில பாடல்களைப் பற்றி அவ்வப்பொழுது www.tamilandvedas.com இணைய தளத்தில் எழுதி வந்தேன்.

அவற்றின் தொகுப்பே இந்த நூல்.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இதை நூலாக அழகுற வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு சமயோசித ஆற்றலை வெளிப்படுத்தும் இந்தத் தனிப்பாடல்கள் அனைவருக்கும் அளவில்லா தமிழ் இன்பத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.

இதை விரும்பி வரவேற்றுப் பாராட்டிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

வாருங்கள் கவிதை உலகில் நுழைவோம்.

சான்பிரான்ஸிஸ்கோ                           ச.நாகராஜன்

26-8-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**