AKKADIAN-SUMERIAN LINK குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை -2 (Post No.10,809)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,809

Date uploaded in London – –    4 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

குரீர என்ற ரிக் வேத சொல்லின் பொருளை நேற்று கண்டோம். இன்று ‘வடு மற்றும் ‘திமில்’ ஆகிய சொற்களின் அர்த்தத்தை ஆராய்வோம்

‘வடு’ என்றால் உடம்பில் ஏற்படும் தழும்பு அல்லது காயம் என்ற பொருளே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. ஆனால் ஐங்குறு நூறு என்னும் சங்க இலக்கிய நூலில் இரண்டு இடங்களில் வடு என்பதற்கு சிறுவன், பிரம்மச்சாரி என்ற பொருள் வருகிறது. அக நானுற்றில் முலையின் முகடு என்பதற்கும் ‘வடு’ பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனந்த விகடன் தமிழ் அகராதி (1935) தரும் பொருள்:-

இளங் காய், பிரம்மச்சாரி, வாலிபன் , வண்டு முதலிய பொருள்களைத் தருகிறது

பிராமணர்கள் பூணுல் கல்யாண பத்திரிகை அடிக்கையில் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து வடுக்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டுகிறோம் என்று அழைப்பார்கள்.

இது படு என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லில் இருந்து வந்த சொல். சம்ஸ்க்ருத அகராதியில் இந்தப் பொருள் வருகிறது.

மோனியர் வில்லியம்ஸ் அகராதி ‘இளைஞன், பையன்’ (Youngster, Lad) என்பதற்கு ‘வடு’ என்றே கொடுத்திருக்கிறது  ஆனால் ‘BADU படு’ என்ற சொல்லும் பயன்படுத்தப்படுவதால் ப= வ மாற்றத்தையும் காண்கிறோம்

இது சங்க இலக்கியத்திலும் இதே பொருளில் வருவது சங்க நூலில் மேலும் ஒரு ஸம்ஸ்க்ருத்ச் சொல் இருப்பதைக் காட்டுகிறது. பலரும் இதைப் பட்டியலிடத் தவறிவிட்டனர்.

வடு – ஐங்குறு நூறு பாடல் 14, 213

பிற்காலத்தில் ‘மா’வடு’ என்னும் சொல்லுடன் இது இணைந்து வருகிறது- இளம் பிஞ்சு .

மாவடு வகிரன்ன கண்ணி பங்கா’ என்று உமா தேவியின் கண்களை வருணிக்கும் பாடல் திருவாசகத்தில் உளது. தேவாரப்பாடல்களிலும் இதைக் காணலாம்

அப்பர் பாடல்

ஏவடு சிலையி னானே புரமவை யெரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாண் மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே யைவரா லாட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய் கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

அம்பை இணைத்த வில்லைக் கொண்டு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவனே ! மாவடுவின் பிளப்பைப் போன்ற கண்களை உடைய பார்வதி பாகனே ! ஆவடுதுறையில் உறைபவனே ! கோடிகா உடைய தலைவனே ! ஐம்பொறிகளாலும் யான் அவை விரும்பியவாறு செயற்படுத்தப்பட்டுள்ளேன் . பசுக்கொலைக்கு ஒப்பாகிய என் குற்றங்களைப் போக்குவாயாக .

தமிழில்  பிற்காலத்தில் மட்டும்  ‘வடு’ அதிகம்  புழங்குவதால் இது ஸம்ஸ்க்ருதத்திலிருந்து கடன் வாங்கப்பட்ட சொல் என்பதைக் உறுதி செய்கிறது

XXXX

AKKADIAN LINK

இதில் வியப்பான விஷயம் பதுலு / படுலு BATUULU  OR BADUULU  என்றால் அக்கடியன் AKKADIAN LANGUAGE மொழியிலும் இளைஞன் என்பதாகும்

படுசு BATUSSU என்றால் இளம் நங்கை. YOUNG WOMAN

மராத்தி மொழியில் படகி என்றால் வேலைக்காரி SERVANT MAID

இதிலிருந்து பெரிய உண்மைகள் வெளிப்படுகின்றன

ப= வ B= V மாற்றம் சங்க இலக்கியம் முழுதும் உளது (Eg. தபஸ் =தவம் )

அஸ்வ- அஸ்ப என்ற அவஸ்தன் (AVESATAN) மொழியில் இருப்பதையும் முன் ஒரு கட்டுரையில் கண்டோம் .

இப்பொழுது அதற்கு முந்தைய அக்கடியன் (AKKADIAN) மொழியிலும் காணுகிறோம்.

ஆக ப= வ மாற்றம் ஈரான் முதல் கன்யாகுமரி வரை 3000 ஆண்டுகளுக்கு முன்னரே உளது. யார் இதற்கான இலக்கண புஸ்தகத்தை உருவாக்கினார்?

யாரும் உருவாக்க வில்லை. இது இயற்கையானது .

கால்டுவெல்களையும் , பர்ரோக்களையும், எமனோக்களையும் (CALDWELL, BURROW, EMENAU )  புரட்டிப் புரட்டி அடிக்கும் உண்மை.

பதுலு என்பதன் பெண்பால் சொல் (VATHUVAI ) ‘வதுவை’ (மணப்பெண்) ஆக வந்திருக்கலாம். இந்த ரிக் வேத சொல்!! சங்க இலக்கியம் முழுதும் விரவிக்கிடக்கிறது .

இலங்கையில் பொடியன் YOUNGSTER  என்பர் . அதுவும் படுலு , வடு என்ற மூலத்திலிருந்து வந்திருக்கலாம்

Xxx

SUMERIAN LINK

திமில் என்பது மிகவும் ஆராய்ச்சிக்குரிய சொல்.

அகராதியில் இதன் பொருள்-

திமி – சமுத்திரம் , திமிங்கிலம் WHALE

திமிங்கிலம் – யானையை விழுங்கக்கூடிய மீன் BLUE WHALE

திமிதிமிங்கிலம் – திமிங்கிலத்தை விழுங்கும் மீன் KILLER WHALE

திமில் – தோணி, மரக்கலம், படகு, கப்பல் BOAT, SHIP

திமிலர்- நெய்தல் நிலக்காரர் FISHERMEN

திமிலை – கடல் மீன் வகை, திமிங்கிலம்

எல்லா சொற்களும் கடல், படகு, திமிங்கிலம் தொடர்பானவை

xxx

சங்க இலக்கிய நூல்களில் அகநானூறு , புறநானூறு, நற்றிணை உள்பட பல நூல்களில் முப்பதுக்கும் மேலான இடங்களில் வருகிறது . சில இடங்கள்-

புறம் – 24, 60, 303

அகம் .10, 60, 65, 70, 190, 210, 240, 260, 330, 340, 350

XXX

SUMERIAN CONNECTION

இதற்கெல்லாம் மூலம் 2700 ஆண்டுகளுக்கு முன் பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் இலக்கண நூலில் உளது 6-3-70.

அதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுந்த வார்த்திகாவில்  கிலகில , திமிங்கில விளக்கங்கள் உள.

இதில் வியப்பான விஷயம்  சுமேரிய மொழி TIAMATA தைமத- வுடன் உள்ள தொடர்பு ஆகும். அது அதர்வண வேதத்தில் TAIMAATA உள்ள சொல் !!

இதோ அதன் விளக்கம் :—–

தொடரும்……

அக்கடியன், சுமேரியன், தமிழ், சம்ஸ்க்ருதம், வடு , மாவடு, திமில், திமிங்கிலம்

இடையின எழுத்துப் பாட்டு! (Post No.10,808)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,808

Date uploaded in London – –     4 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

இடையின எழுத்துப் பாட்டு!

ச.நாகராஜன்

சித்திர கவியில் இனவெழுத்துப் பாட்டு  வகையில், இடையின

எழுத்துப் பாடலை இப்போது பார்க்கலாம்.

மெல்லினம் என்பது ய, ர, ல, வ, ழ, ள ஆகிய ஆறு எழுத்துக்களின் இனம் ஆகும்.

இந்த இடையினம் மட்டுமே வரும் பாடல் இடையின எழுத்துப் பாட்டு எனப்படும்.

எடுத்துக்காட்டாக யாப்பருங்கல விருத்தி தரும் ஒரு பாட்டு:

வில்லாள ருள்ளாரேல் வாளிலர் வாளாளர்

வில்லாள ருள்ளாரை வெல்வாரேல் – வில்லாளர்

வல்லாள ருள்ளாரை வைவ ரவர்வயின்

வல்லாள ருள்ளார் வலி

இதே போல இன்னொரு பாடலையும் யாப்பருங்கல விருத்தியில் காணலாம்:

வயலுழுவார் வாழ்வாருள் வாழ்வா ரயலுழுவார்

வாழ்வாருள் வாழா தவர்

உழவர் பெருமையைப் பற்றிக் கூறும் இந்தப் பாடலின் பொருளை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

மாறனலங்காரம் இதற்காகத் தரும் சூத்திரம் இது:

“இடையினமுழுதுறலிடையினப் பாட்டே”

இடையினப் பாடலுக்கு எடுத்துக்காட்டாக மாறனலங்காரம் தரும் பாடல் இது:

வேயாவலையால்வில்வேளாலயலவரால்

யாயாலுயிர்வாழ்வார்யாவரே -யோய்விலராய்

வாழ்வாருயிர்வழியேவாழ்வாரருளாள

ராழ்வாரருளிலரேயால்

இந்தப் பாடலின் பொருள்:

ஒழிவில்லாத வாழ்வினை உடையார், உயிரின் கண் நீங்காது வாழும் வாழ்வினை உடையார்.

கிருபையை ஆட்சியாக உடையார்

அவர் யார்?

எனில்,

ஆழ்வார் என்னும் திரு நாமத்தை உடையார்

(எமக்குத் தாரும் மார்பும் தர வேண்டும் என்னும்) கிருபை இல்லாதவர்.

ஆகவே   தோழீ!

வேய்ங்குழல் முதலான பகைவர்களால் புமான்களை எய்தாது

தனி இருந்தவருள் உயிர் வாழ்வார் ஒருவருமில்லை.

இந்தப் பாடலின் திணை : பெண்பால் கைக்கூற்றுக் கிளை

துறை : மெலிவொடு கூறல்

இப்படிப்பட்ட மெல்லின எழுத்துக்கள் மட்டுமே வருமாறு உள்ள மெல்லினப் பாடல்கள் ஏராளம் தமிழில் உள்ளன.

முயன்று ஒருவர் தொகுக்க வேண்டும்!

இதுவரை வல்லின எழுத்துப் பாடல், மெல்லின எழுத்துப் பாடல், இடையின எழுத்துப் பாடல் ஆகிய மூவகை எழுத்துப் பாடல்களையும் பார்த்து விட்டோம்.

தமிழ் என்னும் விந்தையில் இன்னும் பல விந்தைகளை அடுத்துக் காண்போம்!

***

tags- மாறனலங்காரம், மெல்லினப் பாடல்கள் , இடையின எழுத்து

RIG VEDIC ‘KURIRA’ IN SANGAM TAMIL LITERATURE (Post No.10,807)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,807

Date uploaded in London – –    3 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

  swamiindology.blogspot.com))

Scholars were debating about the meaning of the word Kuriira found in the Rigveda. They were not sure whether it is an ornament on the head or a hair style of ancient Hindu women. Sangam literature and Tamil Dictionary give the meaning .That means one more Sanskrit word is in found Sangam Literaure.

First let us look at what A.B.Keith and A.A.Macdonell say about it in their VEDIC INDEX (Vol.1):_

Kuriira

“Like Opasa and Kamba, Kuriira denotes some sort of female head ornament in the description of the bride’s adornment in the wedding hymn of the RV.10-85-8 and in the Atharva Veda (6-38-3). According to the Yajur Veda Samhitas the goddess Siniivaali is described by the epithets Su-kapardaa, Su-Kuriira, Su-opasaa as wearing a beautiful head dress.

According to Geldner, the word originally meant a horn; but this is uncertain, as this sense is not required in any passage in which the term occurs”.

Bhagawan Singh in his book ‘The Vedic Harappan’ says,

Kurira could be identified in the hornlike device for headdress in the mother goddesses (of Harappan Civilization).

But a similar word occurs in Sangam Tamil literature and old Tamil Dictionary. Scholars have missed it.

In Kalittokai, a Sangam Tamil work, ‘Kural’ Koonthal is found. It means combed and raised in the head (may be horn like or fringe like)

But actual translation of the most famous wedding hymn in the Rigveda means Chandas (metre)

RV 10-85-8 (wedding Hymn)

“Hymns were the cross bars of the pole, KURIIRA- metre decked the car;

The brides men were the Asvin pair; Agni was the leader of the train”.

This is the beautiful description of the chariot procession in which the bride was taken.

Now the question is whether it was the decorative balls or tassels hanging in front of the Chariot or such fringe hair on women’s fore head or horn like hair style or horn ornament.

Nowadays we see women wearing both. The ornament that hangs on a girl’s forehead is Sutti in Tamil. Horn like ornaments are rarely worn. Fringe hair style is also seen in young girls.

Tamil literature also talks about with the word Kurala (L=R change is universal) . They use it for mane of a horse or woman’s hair. But when they use Kurala they don’t mean just ordinary hair, they talk about a particular style of hair dress. May be I is used for both.

Here is the dictionary meaning of similar sounded TAMIL words:-

Kurakulai குரங்குளை -Mane (Curly hair at the back of the neck)

Kurappam குரப்பம் – Mane

Kuralam குரலம் – The hair hanging loose on fore head .(fringe)

Kurala can be Kurara (R=L);  so I will take this meaning for Rig Vedic Kuriira.

. it may be used for decorative tassel or fringe in the chariots or women. It may be a woman’s  hair or forehead ornament (In Tamil Netrih Sutti)

Another interesting thing is in Tamil Horse is ‘Kuthirai’; is there a link between Kuthira and Kuriira? We have to do more research using other languages.

Apart from Kalittokai, another work Akananuru use this. Post Sangam work Manimekalai used ‘Kural Kuunthal Kottu’ together.

Conclusion

Tamil literature  has Kuriira sounded word with almost same meaning

Kuriira was the fringe hair or tassels and decorative balls in the font of wedding chariot or woman’s forehead.

It is found both in the Rig Veda and Tamil literature.

–Subham–

tags–  Kurira, Hair style, Fringe, Mane, Tamil, Rig Veda 

குரீர, வடு, திமில் – சொல்  ஆராய்ச்சிக் கட்டுரை -1 (Post 10,806)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,806

Date uploaded in London – –    3 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

குரீர KURIIRA என்ற ரிக் வேத சொல் புதிராக இருந்தது. இந்தப் புதிரை தமிழ் அகராதி விடுவிக்கிறது.வேறு ஒரு சொல்லுக்குப் பொருள் காண்பதற்காக 1935 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியைப் புரட்டிக்கொண்டு இருந்தேன்.அப்போது ரிக் வேத புதிருக்கு விடை கண்டேன்

‘குரீர’ என்பதற்கு கீத் & மக்டொனால்ட் எழுதிய வேத இலக்கிய சொல்லடைவில் VEDIC INDEX by A A Macdonell and A B Keith ‘மணப்பெண்ணின் தலையை அலங்கரிக்கும் ஒரு ஆபரணம்’ என்று ரிக் வேத 10-85-8 , அதர்வண வேத 6-138-3 மந்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்

பின்னர் யஜுர் வேதத்தில் வேத கால பெண் தெய்வமான சினீவாலி(Siniivaali)யை வருணிக்கும் போது ‘சு-குரீர’ என்று வர்ணிக்கப்பட்டதைக் காட்டி இது ஒரு தலை அணி என்கிறார்.கெல்டனர் (Geldner) என்பவரோ இதன் பொருள் கொம்பு என்பதாகும், ஆனால் இச் சொல் பயன்படுத்தப்பட்ட இடங்களில் ‘கொம்பு’ என்தற்குத் தேவையே இல்லை என்கிறார்.

பகவான் சிங் எழுதிய வேத கால ஹரப்பன் மக்கள் The Vedic Harappans by Bhagawan Singh என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் குரீர என்பது கொம்பு போன்ற தலை ஆபரணம் என்றும் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் தெய்வத்தின் தலையில் கூட இது காணப்படுகிறது என்றும் எழுதியுள்ளார்.

இதற்கு சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் விடை இருக்கிறது மருதக் கலியில் ‘குரற்கு’ என்பதற்கு ‘க ந்தலுக்கு’ என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அதுவும் முல்லைப்பூக்கள்  கூந்தலை அலங்கரிக்கட்டும் என்ற பொருளில் எழுதப்பட்டுள்ளது

ரிக்வேத கல்யாண மந்திரம் உலகப்பிரசித்தி பெற்றது. இன்றும் பிராமணர் மற்றும் உயர்ஜாதி  வடக்கத்தியர் வீட்டுக் கல்யாணங்களில் இந்த மந்திரத்தைக் கேட்கிறோம். அதில் வரும் பொருள்

ரிக்வேதம் 10-85-8

“மணமகள் ஏறிய தேருக்கு துதிப்பாடல்கள் தேரின் குறுக்குச் சட்டங்களாக இருந்தன; குரீர சந்தம் தேரை அலங்கரித்தது. அஸ்வினி தேவர்கள், மணமகனுடைய தோழர்களாக இருந்தனர்  அக்கினி தேவன் திருமண ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி நடந்து வந்தான்”

4000 முதல் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வேத கால இந்துவின் திருமண ஊர்வலத்தின் அற்புதமான வருணனை இது.

கலித்தொகையிலும் கூந்தல் அலங்காரத்துக்கு முல்லைப்பூக்கள் பயன்படட்டும் என்ற வரியில் குரல் வருகிறது மருதக் கலி (72-20) பாடலிலும் ‘குரல் கூந்தல்’ என்ற வரி இருக்கிறது. கூந்தலை அள்ளி முடிந்து அலங்க   ரம் செய்யும் பொருள் தொனிக்கிறது

மணிமேகலை முதலிய இன்னும் பல பாடல்களிலுமிதைக் காணலாம்

மணிமேகலையில் குரல் தலைக் கூந்தல் என்ற சொற்றொடர் வருகிறது .

அகநானூறு நாலாவது  (4 & 376) பாட்டில் குரங்கு உளை என்பது குதிரையின் பிடரி  மயிர் என்று வருகிறது

xxxx

அகராதி கொடுக்கும் பொருள்

குரங்குளை – சுருண்ட பிடரி மயிர்  (Mane)

குரப்பம் – குதிரை மயிர்

குரலம் – நெற்றியில் அசையும் சுரி மயிர்

இதிலிருந்து பெறப்படும் பொதுவான பொருள் —

இது தலை முடி பற்றியது.

நெற்றியில் அழகாகப் புரளும் பெண்ணின் முடி அல்லது கூந்தலை வாரி முடிந்து அலங்கரித்தல்

xxx

ஆகவே ஆராய்ச்சி முடிவு,

ரிக் வேத சொல் குரீர சங்க இலக்கியத்தில் உள்ளது.

அது முடி அலங்காரம் பற்றியது.

ரிக் வேத கல்யாண மந்திரத்தில் வரும் மணப் பெண்ணின் தேரிலும் இப்படி அலங்காரக்  குஞ்சம் தேரின் முன்னால் தொங்கியது

குரீர=  தேரின் முன்பக்க குஞ்சம் = மணப்பெண்ணின் முன் பக்க அலங்கார முடி அல்லது  ஆபரணம் (சுட்டி )= இதுவேத கால சினீவாலி பெண் தெய்வத்துக்கும் இருந்தது.

கட்டுரையின் அடுத்த பகுதியில் மேலும் சில சுவையான சொற்களைக் காண்போம்

To be continued……………………………..

tags-  குரீர, முடி அலங்காரம், தலை முடி

கல்லுக்குள் இருக்கும் வடிவங்களை சிற்பியே அறிவார்! (Post.10,805)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,805

Date uploaded in London – –     3 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகவாசிஷ்டம்

கல்லுக்குள் இருக்கும் வடிவங்களை சிற்பியே அறிவார்!

ச.நாகராஜன்

சித் பூஜை பற்றியும் மூர்த்தி பூஜை பற்றியும் சிவபிரானின் அருளுரையை ராமருக்குக் கூறிய வஷிஷ்ட முனிவர் பின்னர் வில்வப் பழத்தைப் பற்றி விவரிக்கலானார்.

வில்வப் பழத்தின் சாறு மற்ற ஆறு ரஸங்களையும் விட அதிகச் சுவையானது.

அதை மருந்தாகவும் பயன்படுத்த முடியும்.

இந்தப் பழத்தில் எப்படி ருசியும் ஆரோக்கியமும் கலந்திருக்கிறதோ அது போலவே இந்த பிரபஞ்சம் முழுவதும் சுத்த பிரக்ஞையினுள்ளேயே அடங்கி இருக்கிறது.

ஒரு கல்லை எடுத்துக் கொள்வோம். அதனுள் சிற்பி வடிக்கும் எல்லா விதமான வடிவங்களும் அடங்கி உள்ளன.

மிகப் பெரும் சிற்பியானவர் அந்த அனைத்து வடிவங்களையும் அறிவார்.

ஆனால் ஒரு சாதாரண மனிதனுக்கு இவ்வளவு வடிவங்களும் கல்லுக்குள் இருப்பது தெரிவதில்லை!

வடிவங்கள் அனைத்தும் கல்லை விட வேறானவை அல்ல.

அதே போலவே வெவ்வேறான அனுபவங்களைக் கொண்டுள்ள ஆத்மாவும் உலகமும் சித்தில் உள்ளடங்கி உள்ளன.

வெவ்வேறு சிற்பங்கள் கல்லின் சுஷுப்தி நிலையில் உள்ளன.

சிற்பி அவற்றைப் பார்த்து உளியால் செதுக்கும் போது அவை தமது வடிவங்களுடன் வெளிப்படுகின்றன.

இந்த வடிவங்கள் அனைத்தும் எப்படி ஒரு கன்னிப் பெண்ணின் மனதிலே காதலன் உருவம் பதிந்து கிடக்கிறதோ அல்லது வில்வப் பழத்தில் பழச் சாறு அடங்கி இருக்கிறதோ அதே போலவே கல்லில் அடங்கியுள்ளன.

இதைப் போலவே அனைத்து விகாரங்களும் கூட ‘சித்’தில் உள்ளன. பின்னர் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொள்கின்றன. “எல்லாமே அங்கு இருக்கும்” மாயை ஏற்படுத்தப்படுகிறது.

ஆகவே நம்மால் உணரப்படும் அனைத்து வடிவங்களும் பிரம்மன் அல்லது ‘சித்’தில் இருப்பது உணரப்பட வேண்டும்.

தமக்காகவே அவற்றிற்கு ஒரு உண்மைத் தன்மை இல்லை.

அவை நீரில் காணப்படும் பிரதிபிம்பங்கள் போன்றவை.

பொருள்கள், காலம், ஸ்பேஸ் எனப்படும் வெளி,  எண்ணங்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் பிரக்ஞையின் உருவாக்கங்களே.

ஆகவே அவை உண்மையற்றவை என்பதில்லை. அதே சமயம் அவை நிலையானவை என்பதுமில்லை.

கல்லில் இருக்கும் வெளிப்படுத்தப்படாத வடிவங்கள் அவை எனலாம்.

அவை வெறும் தோற்றங்களே!

வசிஷ்டர் மயில் ஒன்றின் முட்டையை உவமையாக எடுத்துக் கூறலானார்.

பல்வேறு விசித்திர வண்ணங்களைக் கொண்ட மயிலின் தோகைகள் இந்த உண்மையை எளிதாக விளக்கி விடும்.

இந்த அற்புதமான வண்ணங்கள் கொண்ட தோகைகள் அனைத்தும் மயிலின் முட்டையினுள்ளேயே உள்ளன. எல்லா வண்ணங்களும் அதிலேயே உள்ளன.

அதைப் போலவே, ‘சித்’தானது பல்வேறு உலகங்களையும் அதன் வெவ்வேறான வேறுபாடுகளையும் கொண்டுள்ளது.

இப்படி விவரித்த வசிஷ்டர், ராமரிடம் அனைத்தும் பிரம்மனே என்பதை உணர்வாயாக என்று கூறினார்.

இன்னொரு உதாரணத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

நூற்றுக் கணக்கான வடிவங்கள் கொண்ட மண் பானைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே மண்ணினால் உருவானவையே.

அதைப் போலவே ஆத்மனும் ப்ரக்ருதியும் வேறல்ல என்பதை உணர வேண்டும்.

எப்படி மண் ஆனது குடமாகத் தோன்றுகிறதோ அதே போலவே ஆத்மனானது ப்ரக்ருதியாகத் தோன்றுகிறது.

வெளியில் தோற்றமளிக்கு வேறுபாடுகளைக் கண்டு ஒருவன் ஏமாந்து விடக் கூடாது.

அனைத்திற்குள்ளும் அடங்கியுள்ள ‘உண்மைத் தன்மையை’ ஒருவன் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த விளக்கத்தைக் கேட்ட ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

புன்முறுவல் பூத்த அவர் தனது அடுத்த சந்தேகத்தை வசிஷ்டரிடம் கேட்க ஆரம்பித்தார்.

***

tags-கல் , சிற்பி, யோகவாசிஷ்டம்

Number Symbolism in Tirumular—2 (Post No.10,804)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,804

Date uploaded in London – –    2 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Story of Tirumular

In the sacred hills of Kailasa, there were many followers of Nandi and Lord Shiva. One of them travelled to Podiya Hill to see sage Agastya . Having passed many a place of pilgrimage, he reached Tiru Aduthurai in Tamil Nadu. There he heard the sad bellowing of cattle continuously for a long time. He went to the place and found the cowherd Muula by name dead on the ground, surrounded by the faithful cows and calves, bemoaning the loss of their master. This sight aroused his sympathy and in order to bring solace to the afflicted animals, he entered into the dead body of the cowherd Muula and gave life to it. The cattle were pleased and went about grazing and returned home at nightfall as usual followed by Tiru Mula. The animals had gone to their sheds.

Hindus believe that Siddhas can do Eight Types of Miracles. One of the eight supernatural powers they have is ‘Para Kaaya Pravesa’. It means entering another’s body. That is how Tirumular entered the body of the cowherd. By the time Tirumular returned to the cowshed, the body of the original Mula was cremated. So Tirumular stayed in the new body. When cowherd Mula’s wife saw Tirumular, she was surprised and shocked. She called him to come into the house mistaking him as her husband. Tirumular refused to enter the house saying there was no relationship between him and the woman. She informed her relatives, and they came to see him the next day. By the time they came he went into temporary Samadhi in the nearby Mutt. It is said that the duration of the Samadhi was 3000 years and he composed one stanza every year and thus we got 3000 verses in his book Tiru Manthiram . It means Sacred Mantra. He composed the Tirumanthiram in four parts Cariai, Kiriyai, Yogam and Jnaanam

Hindus add the number 1000 to mean an unusually longer period. So we should not take it literally. Rig Veda also use the number 1000 without rhyme or reason. When we hear from a religious speaker that Dasaratha had 60,000 wives, what we understand is he had unusually a large number of women in the harem.

Tirumanthiram has the impress of a work of knowledge or a compilation of certain prevailing ideas about ethics, doctrines of Saiva Agamas and the occult science of Yoga based mainly on the Yogasastras and the Mantra Sastras found in Sanskrit literature and on his personal experience.

A V Subramania Ayyar in his book The Poetry and the Philosophy of The Tamil Siddhars (year 1957)  says the following,

“In dealing with the Ashta Ma siddhis, eight fold supernatural powers, and the Ashtanga Yogam, the eight fold discipline of the body and mind to gain yogic powers, Tirumular had freely drawn on Patanjal’ s Yoga Sutras. He has used materials from some of the commentaries on Upanishads.

“The truths about the science of Yoga have been expressed in a symbolism, a part of which only has been standardised and made intelligible. There is an obscurity in certain portions which has not been removed, by different meanings put on the symbolism of the poet.

“This obscurity arises partly from the frequent use of mere numerals such as one, two, three,……… ten etc to denote facts or ideas or allusions, which is a favourite device of the Tamil mystical poets. In the very first stanza of the Tirumanthiram itself, this has been adopted. When number five is used it may mean the five senses or the five elements or the five Prananans or the five sacred letters or the five Murtis and so on . The meaning has to be inferred from the context. Similarly for every numeral there are several meanings”.

Number Seven and Number Three are used through out the Rigveda and we fully depend upon Sayana’s commentary to understand them.

xxx

Yesterday we saw some verses with symbolism. Here are some more verses,

Tirumular is against the control of the senses to the point of causing harm to the body and the spirit. Excessive control of the senses will, according to him, make this body inert matter. He thereby implies that the mind can have an active and fruitful existence in this life only if it is inseparable from the working of the senses. For the higher life, however, senses have to be controlled as pointed out in the following stanza . Here he plays on number five.

Linguistic Scholars see a lot of Sanskrit words and strange expressions and idioms in his work. They believe that he belongs to Kashmir Saivite school. In more than one place he addresses Lord Siva as the ‘Aryan’ and his consort as ‘Aryin’i or ‘Arya Nangai.’ Though we see Aryan for Shiva in Thevaram and Tiruvasagam, Aryini or Aryanangai aren’t found anywhere else. We knew for sure that Tirumular lived before Sundaramurthy Nayanar of eighth century CE . Sundarar’s Tiruthonda thogai mentions Tirumular. The account given of his life and work in the Periapuranam is purely legendary.

xxxx

For number symbolism one more example from the RIGVEDA

RV 4-72-7

The seven milk a single cow; the two set other five to work

On the stream’s loud sounding bank

RV 4-72-8

Entreated by Vivasvan’s ten, Indra cast down the water jar

With three fold hammer from the sky

RV 4-72-9

Three times the newly kindled flame proceeds around the sacrifice

Xxxx

Now from Tiru manthiram:–

அஞ்சும்  அடக்கு அடக்கு என்பர்  அறிவிலார்

அஞ்சும்  அடக்கும் அமரரும் அங்கில்லை

அஞ்சும்  அடக்கில் அசேதனமாம் என்றிட்டு

அஞ்சும்  அடக்கா அறிவு அறிந்தேனே

–திருமந்திரம் 2033

ஐந்தில் ஒடுங்கில் அகல் இடமாவது

ஐந்தில் ஒடுங்கில் அருந்தமாவது

ஐந்தில் ஒடுங்கில் அரன் பதமாவது

ஐந்தில் ஒடுங்கில் அருளுடையாரே

–திருமந்திரம் 2035

— SUBHAM —

tags- Tirumular, Tirumanthiram, Siddha, Mula, cowherd, symbolism, Rig Veda

March 2022 London swaminathan’s Articles; Index 112 (Post No.10803)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,803

Date uploaded in London – –    2 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

March 2022 London swaminathan’s Articles; Index 112

F U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ENGLISH ARTICLES

QUOTATIONS FROM KALHANA: MARCH 2022 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.10,702); 1/3

MYSTERY OF TWO KALI YUGAS EXPLAINED (Post No.10,707); 2/3

KALKI AVATAR IN SRI LANKA? – Part 1 (Post No.10,710); 3/3

KALKI AVATAR IN SRI LANKA? – Part 2(Post No.10,713); 4/3

WOMEN AS GIFT TO RISHIS ! GOTRAS IN TAMIL SANGAM LITERATURE (Post No.10,716);5/3

FEBRUARY 2022 LONDON SWAMINATHAN ARTICLES INDEX No.111 (Post No.10,719); 6/3

STARS SHOW INDIA’S  LINK WITH GREECE AND IRAN IN VEDIC PERIOD (Post No.10,722);7/3

STRANGE INFORMATION ABOUT SEVEN SUNS IN VEDIC LITERATURE (Post No.10,729)

STRANGE INFORMATION ABOUT SEVEN SUNS IN VEDIC LITERATURE (Post No.10,729); 9/3

ANCIENT TAMILS’ AMAZING HISTORICAL SENSE ! (Post No.10,732); 10/3

DID TAMIL HINDUS DISCOVER EARTH IS ROUND ? (Post No.10,735)- part 1; 11/3

DID TAMIL HINDUS DISCOVER EARTH IS ROUND? -part 2 (Post No.10,737); 12/3

STORY OF VEDIC SUNAHSEPHA IN GREECE AS CYNOSURE! (Post 10.743)

Panini’s Mysterious 83 words show he is close to Vedic Period – Part 1 (Post No.10,757);18/3

PANINI’S MYSTERIOUS 83 WORDS- PART 2 (Post No.10,760); 19/3

PANINI’S 83 MYSTERIOUS WORDS- PART 3 (Post No.10,763); 20/3

PEACOCK MYSTERY HINDU BIRD IN TURKEY SYRIA-PART 2 (Post No.10,769); 22/3

PEACOCK MYSTERY: HINDU BIRD IN TURKEY/SYRIA AROUND 1400 BCE- Part 1 (Post No.10,767)[21/3

WHAT MADE LINGUISTS GO WRONG? (Post No.10,753);17/3

COTTON PLACES RIG VEDA BEFORE HARAPPAN CIVILIZATION (Post No.10,773); 23/3

SANSKRIT WORDS IN FINNISH, HUNGARIAN LANGUAGES (Post No.10,775);24/3

TAMIL- PERSIAN LANGUAGE LINK 2000 YEARS AGO (Post No.10,778);25/3

WEAVING IN VEDAS AND SANGAM TAMIL LITERATURE- 1 (Post No.10,781);26/3

WEAVING IN VEDAS AND SANGAM TAMIL LITERATURE- 2 (Post No.10,785); 27/3

WEAVERS IN THE RIG VEDA (Post No.10,789); 28/3

TAMIL ENCYCLOPAEDIA OF WEAVING AND WEAVERS-1 (Post No.10,792); 29/3

TAMIL ENCYCLOPAEDIA OF WEAVING AND WEAVERS-2 (Post No.10,793); 30/3

QUOTATIONS FROM RIG VEDA- APRIL 2022 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.10,794);30/4

XXXX

TAMIL ARTICLES

இலங்கையில் கல்கி அவதாரம்: கல்கி புராணம் கூறும் அதிசய விஷயம்- Part 1 (Post.10,703);1/3

காற்று, மழை பற்றிய 31 பழமொழிகள் – மார்ச் 2022 காலண்டர் (Post10,704); 1/3

பிள்ளை தமிழ் சொல் இல்லை? (Post No.10,709);3/3

திராவிட “அறிஞர்கள் ” எழுதிய நூல்கள் பற்றி எச்சரிக்கை ! (Post No.10,715);5/3

பகவத் கீதையில் சுவையான சொற்கள் – ‘முத்து மாலை’ (Post No.10,712) ;4/3

சங்க இலக்கியத்தில் பார்ப்பனர் கோத்திரங்கள் (Post No.10,718);6/3

இந்திய ‘ரிஷி’ கிரீஸில் ‘கரடி’ ஆன கதை!- Part 1 (Post No.10,724); 8/3

இந்திய ரிஷி கிரீஸில் கரடி ஆன கதை!- Part 2 (Post No.10,728);9/3

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -47; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post No.10,731); 10/3

தமிழ்ப் பெண்ணின் மஹத்தான 2 கண்டுபிடிப்புகள்- part 1 (Post No.10,738);12/3

தமிழ்ப் பெண்ணின் மஹத்தான 2 கண்டுபிடிப்புகள் – 2 (Post No.10,741);13/3

வரலாறு தெரிந்தவன் தமிழன் !!! (Post No.10,734); 11/3

புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட மதிப்பு மிக்கது! (Post.10,748) 15/3

புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட……. PART 2 (Post No.10,750);16/3

தொல்காப்பியம் பற்றி கருணாநிதி விட்ட ‘கப்ஸா’! (Post.10,721); 7/3

தமிழ்- அவஸ்தன் மொழி (கி.மு.1000) தொடர்பு TAMIL-AVESTAN LINK (Post No.10,770);22/3

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -48; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,772);23/3

குதிரை, பரி, புரவி, இவுளி  தமிழ்ச் சொற்களா? (Post No.10,776);24/3

பிரசாந்த,  பிரசன்ன:  பகவத் கீதையில் சுவையான சொற்கள்! (Post No.10,779);25/3

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -49; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,782),26/3

நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra’ ‘ப்ரா’ -1 (Post.10,786); 27/3

எலி மயிரில் ஆடை: தமிழர் கண்டுபிடிப்பு!! (Post No.10,788)/28/3

எலி மயிரில் ஆடை: தமிழர் கண்டுபிடிப்பு!! -part 2 (Post No.10,791)29/3

30 ரிக் வேத மேற்கோள்கள்; ஏப்ரல் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post No.10,797)/31/3

XXXX

ரிக் வேத ரிஷிகள் பட்டியல் – பகுதி 1 (Post No.10,744); 14/3

400 ரிக் வேத ரிஷிகள் பட்டியல்-2 (Post No.10,747); 15/3

400 ரிக்வேத புலவர்கள் பட்டியல்- 3 (Post No.10,751); 16/3

400 ரிக் வேத ரிஷிகள் ,புலவர்கள்  பட்டியல்-4 (Post No.10,754) 17/3

400 ரிஷிகள் புலவர்கள் பட்டியல் – 5 (Post No.10,756); 18/3

400 ரிக்வேத கால புலவர்கள் பட்டியல்-6 (Post No.10,759)

400 ரிக்வேத ரிஷிகள் பட்டியல் – 7 (Post No.10,762); 20/3

400 ரிக்வேத புலவர்கள், ரிஷிகள் பட்டியல்– 8 ; .10,766; 21/3

–subham–

ரிக் வேதத்தில் நெசவாளர்கள் துணிமணிகள் – 2 (Post No.10,802)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,802

Date uploaded in London – –    2 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அதர்வண வேதத்திலும் (10-7-42/43)   நெசவு, நெசவாளர் பற்றிய மந்திரங்கள் உள்ளன.

இது ஏற்கனவே ரிக்வேத 10-130-ல் கண்ட விஷயம்தான்

42. தன்னந் தனியாகவுள்ள இரண்டு இளம் பெண்கள் வெவ்வேறு வர்ணப் பெண்கள், ஆறுபகுதிகளில் நெசவு செய்கிறார்கள் . ஒருவன் இழைகளை இழுக்கிறான்; மற்ற ஒருவன் பரத்துகிறான்  அவர்கள் அறுப்பதில்லை; இறுதிவரை உழைக்கிறார்கள்

அவர்கள் இருவரில் யார் யார் என்று எனக்குத் தெரியாது; ஒரு புருஷன் நெசவு செய்கிறான்; மற்றவன் நீக்குகிறான்

இதிலும் ரிக் வேதம் போலவே பெண்களே நெசவு வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

XXX

ரிக்  வேதத்தில் துணி சம்பந்தமுள்ள சொற்கள்  நிறைய உள்ளன.

சொற்களும் அவை வரும் மண்டலங்களும், துதியின் எண்ணிக்கையும் பின் வருமாறு:-

அட்க – போர்த்தும் துணி  (RV.5-74-5; 6-29-3; 8-41-9)

அதிவஸ்  (RV.1-140-9; 1-162-16; 10-5-4)

ஊர்ன ம்ருதா  – கம்பளம் போல மென்மையான  (5-5-4; 10-18-10

ஓட – பாவு  (6-9-2/3)

காந்தாரி அவிக  –  காந்தார ஆடு  (Afghanistan) RV 1-126-7

சித்ர ரஸ்மி – வர்ண நூல் (1-134-4)

தந்து – நூல் (i-12-1; 2-3-6)

தந்திர – தறி  (10-71-9)

தமிழ், ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்கலாம்

தசரா – நூலைக் கொண்டு செல்லும் கருவி SHUTTLE? (10-130-2)

தசராணி – தரையிலுள்ள துணி  (10-130-2)

த்ரிகா  – மும்மடங்கு  (10-59-9)

த்ரிதந்து – முப்புரி

பூணுலை முப்புரி நூல் என்று சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன

தம்ச ரஸ்மி – அற்புத நூல்; மிகவும் சன்னமான நூல்  (1-134-4)

தீர்க்க தந்து – நீண்ட இழை  – ( 10-69-7)

தனுத்ரி – நெசவுக் கருவி carding bow? Quick  (3-31-6; 9-93-1)

த்ராபி – போர்வை   (1-25-13; 1-116-0;  4-53-2)

பேச – பூ வேலைப்பாடுமிக்க / எம்ப்ராய் டரி துணி

 (2-3-6; 4-36-7; 7-34-11)

வயன்  – நெசவு வீவ் WEAVE என்னும் ஆங்கிலச் சொல்லின் மூலம்   (5-47-6)

வார – கம்பளி நூல் ; வூல் WOOL என்ற ஆங்கிலச் சொல்லின் வேர்  (1-128-6; 5-16-2)

வாச  – உடை  (1-34-1; 10-26-6)

வஸ்திர- வேஷ்டி, ஆங்கிலத்தில் VEST வெஸ்ட்

வாஸோவாய   – நெசவாளி  WEAVER (10-26-6)

வேமன – lதறி (Yajur Veda 19-83)

வேசி – ஊசி  (7-18-17)

சீப்ரா – தலைப் பாகை  (2-2-3; 4-37-4; 10-96-4)

சுக்ர வாச  – வெள்ளை ஆடை  (1-113-6)

சிரி – தறியிலுள்ள கருவி shuttle (1-71-9) also weaver

தறியில் குறுக்கு நூல் இழையை  ங்கிச் செல்லும் ஊடை

சூசி – ஊசி  (2-32-4)

தமிழ்ச் சொல்லின் வேர்

சப்த தந்து – ஏழு புரி கயிறு  (10-52-4; 10-124-1)

சுவாசன் – நல்லுடை தரித்த  (6-51-4; 9-97-50)

பகவான் சிங் என்பவர் வேத கால ஹரப்பன் நாகரீகம் என்ற நூலில் இந்தப்பட்டியலைக் கொடுத்துள்ளார் (Bhagawan Singh- The Vedic Harappans)

Xxx

ஆங்கிலத்திலோ தமிழிலோ சில ரிக் வேத சொற்கள் இருப்பது குறிப்பிடததக்கது .

நீல நிறை உடை அணிந்த பலராமனை நீலாம் பரரதாரி என்றும் மஞ்சள் பட்டாடை தரித்த கிருஷ்ணனை பீதாம்பரதாரி என்றும் வண்ண உடைகளால் அழைத்தோம். சமணர்களின் வெள்ளாடை தரித்த ஸ்வே தாம்பரரையும் உடையின் வர்ணத்தின் அடிப்படையில் அழைக்கிறோம். விநாயகர் துதியில் சுக்லாம்பரதர = வெள்ளாடை தரித்த என்றும் பாடுகிறோம்.

Xxxx

சீவக சிந்தாமணியில் எலி மயிர் ஆடை

சிலப்பதிகாரம் ஊர் காண் கதையில் மதுரை நகர கடைத்தெருக்கள்  வருணிக்கப்படுகின்றன . அதில் ஜவுளிக்கடை பற்றிய வருணனையில் மயிரும் என்ற வரிக்கு எலி மயிர் ஆடைRAT HAIR DRESS என்று அடியார்க்கு நல்லார் எழுதியதை முன்னர் ஒரு கட்டுரையில் சொன்னேன். அதற்கான அடிக்குறிப்பில் உ.வே.சாமிநாதையர் சீவக சிந்தாமணியில் 2686 பாடலிலும் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதோ அந்த பாடல்

செந் நெருப்புணுஞ்  செவ்வெலிம் மயிர் 

அந்நெருப்பளவாய்  பொற்கம்பலம்

மன்னருய்ப்பன மகிழ்ந்து  தாங்கினார்

என்னரொப்புமில்லவர்க லெளன்பவே

–சீவக சிந்தாமணி 2686

பொருள்

கண்ணால் காண முடியாத  மிக மெல்லிய  செந்நிறத் துகில் அணிந்த அல்குலையும் , அழகிய ஒளி வீசும் மணிப் பூண்களையும்  உடைய மகளிர் , சிவந்த நெருப்பின் நிறம் போன்ற – எலி மயிரால் செய்த — அந்நெருப்பைப் போலவே குளிருக்கு வெப்பம் தரத்தக்கதென மன்னரால்  ஆராய்ந்து அனுப்பப்பட்ட — கம்பளிகளை  விரும்பி அணிந்தது கொண்டு,  எவரும் ஒப்புவமை கூற இயலாதபடி  இருந்தனர்

சிலப்பதிகாரத்தில் ஆடை வகைகளில் மயிர் என்று மட்டும்தான் இருந்தது. திருத்தக்க தேவரோ சிவப்பு நிற எலி மயிர் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்!

XXXX

ஆர்ய தரங்கிணி ARYA TARANGINI BY A.KALYANARAMAN என்ற ஆங்கில நூலில் அ.கல்யாணராமன் (1968) மேலும் பல புதிய தகவல்களைத் தருகிறார்.

“இந்திய ஆடைகள் சுமேரியாவிலும் எகிப்திலும் காணாப்படுகின்றன கர்ப்பாச / பருத்தி என்ற சொல், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மொழிகளிலும் உள்ளன. பருத்தி என்பது இந்திய தாவரம் என்பதையும் எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். அது பசிபிக் சமுத்திரத் தீவு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து சென்றது .

கிரேக்கர்களும் ரோமானியர்களும் எழுதிய நூல்களில் இந்தியர்களின் பூ வேலைப்பாடுமிக்க, ரத்தினம் பதித்த கம்பளி மற்றும் பட்டு ஆடைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

பாணினி எழுதிய இலக்கண நூலில் பட்டு (கெளசேய ) கம்பளி (ஒளர்ண), பருத்தி (கர்ப்பாச ), லினன் (ஒளமக ) உடைகள் குறிப்பிடப்படுகின்றன. ARRIAN அரியன் எழுதிய நூலில் இந்தியர்களின் மேலாடை, உள்ளாடை பற்றி குறிப்பிடுகிறார். பாணினியும் ‘ஆப்ரபாதின’ என்ற உள்ளாடை முழங்கால் வரை செல்வதைக் கூறுகிறார். இடுப்பில் ஒரு கச்சை /பெல்ட் மூலம் அது இறுகக் கட்டப்பட்டுள்ளது . மெளரிய கால சிற்பங்களிலும் இதைக் காண்கிறோம்.

பாணினி ‘பிருஹத் ஆச்சாதன’ என்னும் பெரிய போர்வை பற்றிப் பேசுவதால் தையல் கலை பற்றியும் அறிய முடிகிறது . இதற்கு ‘ப்ரவர’ என்று பெயர்.

இது 24 அடிக்கு 12 அடி அகலம் உடையது. ரோமானிய TOGA டோகா போன்றது.யுதிஷ்டிரர் பட்டாபிஷேகத்துக்கு ரிஷிகள் கஞ்சுகம் , தலைப்பாகை அணிந்து வந்ததாக மகா பாரதம் கூறுகிறது

பகவான் சிங் எழுதிய வேதிக் ஹரப்பன் ஆங்கிலப் புஸ்தகம் வருவதற்கு முன்னரே அய்யாசுவாமி கல்யாண ராமனின் ஆர்ய தரங்கிணி அச்சிடப்பட்டது. அவர்தரும் வேத கால ஸஸ்க்ருதச் சொற்களின் பட்டியல் இதோ :

அட்க – மேலங்கி

உபநஹ – காலணி

உஸ்னிஸ – தலைப்பாகை, டர்பன்

தரப்ய – பட்டு ஆடை

த்ராபி – மேலங்கி

நிவி – உள்ளாடை

பரிதன – உடை, துணி

பண்டவ – சாயம் ஏற்றாத துணி

பேசஸ் – எம்ப்ராய்டரி / பூ வேலைப்பாடு மிக்க துணி

வாதபன – காற்றைத் தடுக்கும் துணி

சமுல – கம்பளிச் சட்டை

சமுல என்பதும் கம்பளம் ஆக வாய்ப்பு உண்டு பாய்மரக் கப்பல்களில் பிரமாண்டமான துணிகள், காற்றைத் தடுக்கப் பயன்பட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கப்பல்கள் கரிகாலன் காலத்தில் இருந்ததாக சங்கப் புலவர்கள் பாடுகின்றனர்.  (புறம். 66, வெண்ணிக் குயத்தியார்).

எனது ஆராய்ச்சி

ப்ரவர= தமிழில் போர்வை ஆனது

ஆச்சா தன =   தமிழில் ஆடை  ஆனது ; ஆங்கிலத்தில் ATTIRE அட்டைர் ஆனது

டியூனிக்TUNIC – என்பது தமிழ் துணி- யின் மரூஉ

டோகா TOGA – என்பது தோகை போன்ற ஆடை அல்லது தொங்கல் .

திரைச் சீலை போன்றதையும் தொங்கல் என்போம்

சட்டைSHIRT/SKIRT என்ற தமிழ் ச் சொல் காட்டன் COTTON என்ற சொல்லுடன் தொடர்புடையது.

காட்டன் /பருத்தி/ பஞ்சு அரேபிய மொழித் KATN தொடர்புடையது.

சூசிக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் தமிழில் ஊசி ஆனது

வாய என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் ஆங்கிலத்தில் WEAVE வீவ் ஆனது நெய் / நெசவு என்ற சொல் எகிப்திய நெசவுத் தெய்வம் NEITH நெய்த் – உடன் தொடர்புடையது.

கம்பளம் /கம்பலம் சீவக சிந்தாமணியில் வருகிறது

படாம்  (யானையின் முக படாம் ) = பட்டு என்பன ஒரே மூலத்தில் இருந்து பிறந்த சொற்கள்.

பருத்தி = பட்டு (TTH= TT) என்பதையும் கூட மொழியியல் ரீதியில் தொடர்பு படுத்த முடியும்.

கத்திரி SCISSORS என்ற மயிர் குறைக் கருவி பற்றி சங்க இலக்கியத்தில் படிக்கிறோம். இதே கருவி தையலிலும் பயன்பட்டி   கும் என்பதில் ஐயமில்லை . தையல் = TAILOR டெய்லர் என்ற சொற்களில் உள்ள ஒற்றுமையும் ஒப்பு நோக்கத்தக்கது.. சுருங்கச் சொன்னால் தமிழ்- சம்ஸ்க்ருத மூலச் சொற்களே உலக மொழிகளில் காணப்படுகினறன.

‘கண்டம் துண்டம்’  என்பது சம்ஸ்க்ருதம்- பாணினியின் நூலில் கூட உள்ளது. ‘துண்டு’ போடப்பட்ட துணிதான் துண்டு / முண்டு ஆகியதா என்பதையும் ஆராய வேண்டும்.

தந்திர – தறி  (10-71-9)

தமிழ், ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்கலாம்

-சுபம் —

tags- தறி, கத்திரி, கம்பளம், நெசவு, ஆடை, துண்டு,  எம்ப்ராய்டரி, நெசவாளர்

பெரிய நகரங்களில் சூழல் கேடுகள்! (Post No.10,801)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,801

Date uploaded in London – –     2 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 29-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய எட்டாவது உரை

8

பெரிய நகரங்களில் சூழல் கேடுகள்!

ச.நாகராஜன்

சமீபத்தில் க்ளாஸ்கோவில் நடந்த சூழல் மேம்படுத்தும் மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவுகளை மனதில் கொண்டு நமது நாட்டில் உள்ள பெரிய நகரங்களை முதலில் நம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

தலைநகரமான டில்லியில் மட்டும் ஒரு நாளைக்கு 8000  முதல் 9000 டன்கள் வரை கழிவுப் பொருள்கள் உருவாகின்றன.

இதன் Air Quality Index திகைப்பூட்டும் 999 என்ற அளவை எட்டியுள்ளது.

காற்றுத் தரக் குறியீட்டு எண் எனப்படும் ஏர்  க்வாலிடி இண்டெக்ஸில் பூஜ்யம் முதல் 300க்கும் அதிகம் என

ஆறு மட்டங்கள் உள்ளன.

இதில் 50 என்ற எண் அளவு உலகளாவிய விதத்தில் ஏற்புடைய அளவாகும்.  இந்த குறியிட்டில் ஒவ்வொரு 50 எண்ணும் கூடுதலாக ஆக ஆக அது மிக மோசமான அளவைக் குறிப்பதாகும். 350 என்ற அளவு காற்றின் மிக மிக மோசமான நிலையைக் குறிப்பதாகும்.

400க்கு மேற்பட்ட நிலையில் ஆரோக்கியமான ஒருவர் கூட சுவாசக் கோளாறை அடைவர். ஆக 999 என்ற எண் அளவு நச்சு நிரம்பிய அறையில் இருப்பது போலாகும்,

ஆக இதே போல காற்றின் தரம் குறைவு பட்டு மாசுபட்ட நிலையைப் பல நகரங்களிலும் காண்கிறோம்.

இந்த அபாயகரமான நிலையை மாற்ற பெரிய நகரங்களில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும்.

பெரிய நிறுவனங்களும், சூழல் மேம்பாட்டு அமைப்புகளும் இணைந்து தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரை சுத்திகரித்து வெளியேற்றச் செய்தல் இன்றியமையாதது.

காற்றை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட நச்சுப் புகை வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்த வாகனப் பயன்பாட்டை குறைத்தல் வேண்டும். கூட்டு முயற்சியாக ஒரு வாகனத்தில் இணைந்து செல்வது, பேருந்துகளை அதிகம் பயன்படுத்துவது, குறுகிய தூரம் செல்ல சைக்கிளில் செல்வது அல்லது நடந்து செல்வது உள்ளிட்ட ஏராளமான வழிகள் உள்ளன.

பிளாஸ்டிக் கழிவை தவிர்ப்பதோடு, திடக் கழிவை முடிந்த அளவில் குறைத்தல் வேண்டும். இதற்கான முயற்சியை ஒவ்வொரு இல்லமும் மேற்கொண்டால் நகரத்தின் சூழ்நிலை காக்கப்படும்.

பசுமைப் பூங்காக்களை ஆங்காங்கே அமைத்து அவற்றை உரிய முறையில் பாதுகாப்பது, மரங்களை வீட்டளவிலும் கூட வளர்ப்பது போன்ற எளிய வழிகள் ஏராளம் உள்ளன.


சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக ஒவ்வொருவரும் மாறி குழுக்களை அமைத்து போர்க்கால அடிப்படையில் சூழலை மாசுபடுத்தும் அனைத்து விவரங்களையும் சேகரித்து அவற்றைத் தவிர்க்கவும் குறைக்கவும் உள்ள வழிகளை இனம் கண்டு பரிந்துரைத்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நகரமும் காற்றுத் தரக் குறியீட்டு எண்ணில் லட்சிய அளவான 50 என்ற எண்ணை எட்ட வேண்டும்.

நச்சுப் புகை வாழ்விலிருந்து நல்ல வாழ்விற்கு மாறுவது நம் ஒவ்வொருவரின் கையிலும் தான் உள்ளது என்பதை உணர்வோமாக. உயர்வோமாக!

**

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 30-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய ஒன்பதாவது உரை

9

இமயம் முதல் குமரி வரை பாதிப்பு!

ச.நாகராஜன்

புவி வெப்பமயமாதலால் இமயம் முதல் குமரி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

வெப்ப அலைகளால் பாதிப்பு ஒரு புறம் என்றால் திடீர் திடீரென ஏற்படும் வெள்ள அபாயம் இன்னொரு புறம்; அத்துடன் மழை பெய்வதில் சீரற்ற தன்மை உருவாவது ஒரு புறம் என இப்படி பல வழிகளிலும் தீவிர பாதிப்புகள் வரவிருப்பதை அறிவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

வெளியிடங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அதிக வெப்ப நிலையில் வேலை பார்ப்பது இயலாது என்பதால் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல வேலைகள் தடைப்படுகின்றன.

ஆக இப்படி ஒரு ஆண்டுக்கு இந்தியா இழக்கும் மனித மணி நேரங்கள் (Man hours) மலைக்க வைக்கும் 100 பில்லியன் மணிகள் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகும். ஆக நூறு நூறு கோடி மதிப்புவாய்ந்த மனித மணி நேரங்களை நாம் இழக்கிறோம்.

ஆகவே இந்த வெப்ப உயர்வைப் பல்வேறு வழிகளாலும் முனைப்புடன் தடுக்க வேண்டும் என்பதே இன்றைய நிலை.

பசுமைக் கட்டிடங்களை அமைப்போம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் இலட்சிய கோஷமாக ஆக வேண்டும்.

பசுமைக் கட்டிடங்கள் கார்பன் டை ஆக்ஸைடு ஏற்படுத்தும் நச்சைத் தடுக்கும். மழை நீர் சேகரிப்பு மூலம் நீர் வளத்தைச் சீராக்கும். நிலத்தடி நீரைச் சேமிக்கும்.

வீட்டில் LED  விளக்குகளைப் பொருத்துவதால் பெருமளவு ஆற்றல் சேமிக்கப்படும். Incandescent எனப்படும் வெண்சுடர் குமிழ் விளக்குகளுக்குப் பதிலாக LED விளக்குகளைப் பொருத்தும் போது நாம் 75 விழுக்காடு அளவு ஆற்றலைச் சேமிக்கிறோம். செலவும் குறைக்கப்படுகிறது.

அத்துடன் வீட்டிற்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும் போது VOC   – Volatile Organic Compounds – எனப்படும் துரிதமாக ஆவியாகும் கரிமச்சேர்மங்களினால் ஆன வண்ணங்களை ஒரு போதும் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தல் கூடாது. குறைவாக உள்ள VOC அல்லது அறவே VOC இல்லாத வண்ணங்களை வீட்டிற்கெனப் பயன்படுத்தல் வேண்டும்.

இவை மிக எளிதில் ஆவியாகி சுற்றுப்புறச் சூழலில் கலந்து சுற்றுப்புறத்தை நச்சுத் தன்மை வாய்ந்ததாகச் செய்து விடுகிறது.

சில வண்ணங்கள் தலைவலி, மயக்கம் ஆஸ்த்மா ஆகியவற்றை உருவாக்குகின்றன. இந்தச் சூழ்நிலையில் நீடித்து இருந்து வந்தால் ஆரோக்கியத்திற்குக் கேடு ஏற்படும். ஆகவே VOC அளவைப் பார்த்து வண்ணங்களை வாங்கிப் பயன்படுத்தல் வேண்டும்.

பெரிய கட்டிடங்களில் சோலார் எனப்படும் சூரிய ஆற்றல் விளக்குகளைப் பொருத்தலாம்.

பசுமைக் கட்டிடம் கட்டுவதற்கான பொருள்கள் என்றே ஒரு பெரும் பட்டியல் இருப்பதால் அவற்றை வீடு கட்ட விழைவோர் முதலில் அறிந்து அவற்றைப் பயன்படுத்தலாம்.

இவை எல்லாம் புதிதாக வீடு கட்டுவோருக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய குறிப்புகள் மட்டும் அல்ல:

இப்போது வாழ்கின்ற வீட்டில் கூட இந்தக் குறிப்புகளையும் வழிகளையும் மேற் கொள்ளலாம் என்பதும் முக்கியமான ஒன்று.

மொத்தத்தில் இந்தியாவெங்கும் உள்ள கட்டிடங்கள் இயற்கைச் சூழலுக்கு உகந்த கட்டிடங்களாக மாற்றப்பட்டால் பெருமளவு வெப்பமயமாதல் என்னும் அபாயம் குறையும் அல்லவா!

இந்தச் சூழ்நிலையை ஏற்படுத்துவது இல்லங்களில் வாழும் ஒவ்வொருவரது கடமையாகும்!

**

Number Symbolism in Tamil Tirumular’s Tirumanthiram and Rigveda-1 (Post No.10,800)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,800

Date uploaded in London – –    1 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Tirumular is one of the Saivite Saints who lived around ninth century CE. He is the author of Tirumanthiram. The book has 3000 stanzas in Tamil dealing with many spiritual matter including yoga. He is one of the 18 Siddhas. Tirumular used number symbolism like the Rigveda. Here are a few examples

V R Ramachandra Dikshitar of Madras University says in his book ‘Studies in Tamil Literature’ (year 1930),

“The name of this great author stands perhaps unrivalled in the domain of Tamil writers in general, and of mystic ones in particular. His work Tirumanthiram is a masterpiece in itself dealing with a variety of subjects numbering over 400 themes. It speaks of both possible and the impossible, the practicable and the impracticable, great as well as trivial things.

The following out of many could be quoted as typical illustrations of its mystical tendencies. In what is known as Sunya sampasanai chapter of  Tirumanthiram it is said that when the brinjal/aubergne seed was planted, pakal /bitter gourd of bitter taste, grew out of it

When the earth was dugout, a poosani/pumpkin appeared. The gardeners ran to fetch them. But it was a banana that was fully ripe. This is the literal meaning of a stanza.

But what underlies this is of enormous importance. The brinjal/aubergine in Tamil is Kaththiri which also means a pair of scissors. According to the Hindu Yoga treatises, there are two main tubes through which the life breath passes in and out, running diagonal wise down from the toe of the foot to the nostril. By controlling and regulating the passage of air through these tubes by means of Praanaayaama, a man is enabled to attain the state of Vairagya. That is when the mind ceases to function, and is at rest, it is easy to realise God. The banana fruit refers to the salvation of the soul or Moksha in Sanskrit.

Xxx

Another stanza says,

There are five cows in the Brahmin’s house. They roam astray. If they are controlled by a proper herdsman, then all the five would furnish plenty of milk. The mystic interpretation is that a person who wishes to attain the eternal enjoyment of bliss, should keep his five senses under strict control and watch.

xxx

Again it is said that

The boat is taken to the shore by the steersman for commercial purposes. If in the middle of the way, the keel gives way, the consequence is easily imaginable. This poem expounds the great truth contained in what is known in Sanskrit philosophy ‘Thou Art That’ . Here the body is the vessel on which the Jivatman or the Individual Soul travels to the place where the Paramatman or the universal soul is, there to become united with it. In plain words the body is the vehicle for the attainment of salvation.

Thus a careful examination of these three stanzas manifests clearly that the mysticism here is not only formal, but also material. The language is obscure, and the matter also not easily intelligible.

Xxx

My comments

Rig veda is full of such enigmatic mantras. Foreign translators were not practising Hindus. So whenever some enigmatic or mystic matter came in the mantras , they said the meaning is obscure, perhaps some other stanzas got jumbled or may be interpolation from other sources.

Let us compare it with one mantra in RV 1-164

This hymn is full of number symbolism

1-164-20

Two birds with fair wings, knit with bonds of friendship, in the same sheltering tree have found a refuge

One of the twain eats the sweet fig tree’s  fruitage; the other eating not regardeth only

(Mundaka Upanishad and Svetesvatara Upanishad repeat this; full details are in my article THREE APPLES THAT CHANGED THE WORLD written in 2011)

It is about two birds sitting on a tree and one eating the fruit and the other being a passive observer. The same matter comes in Upanishad as well. Kanchi Paramacharya (1894-1994) was the one who pointed out the philosophical meaning behind it. It is the basis of Adam/Atma and Eve/Jeeve Atma story in the Bible. When they ate the apple, they committed a sin. That apple story is from the Rig veda and later Upanishad. Atma, with swapping of letters became Adam. Jeeve Atma became Eve. No one else saw this story in the Rigveda or Upanishad.

Number symbolism is found through out the Vedas. Without commentaries or explanations given by great people like Shankaracharya we would also struggle to get the real meaning.

Here are two stanzas from the Rigveda

Four are his horns, three are the feet that bear him; the heads are two, his hands are seven in number

Bound with a triple bond the steer roads loudly; the mighty god has entered into mortals

R V.4-58-3

Savitar thrice surrounding with his  mightiness mid-air, three regions and the triple sphere of light,

Sets the three heavens  in motion and the three fold earth, and willingly protects us with his triple law

R V.4-53-5

Xxx

Tamil verses from Tirumular’s Tirumanthiram


”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”–  2868.

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்

பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே” – திருமந்திரம் 2883

தோணி யொன்றுண்டு துறையில் விடுவது

வாணி மிதித்து நின் றைவர் கோலூன்றலும்

வாணிபஞ் செய்வார் வழியிடை யாற்றிடை

யாணி கலங்கி னதுவிது  வாமே

“Three Apples that Changed the World” | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2011/11/16 › three-apples-…

16 Nov 2011 — Adam and Eve’s apple story is actually a Hindu Upanishad story. … recognise the transformation of Atma into Adam And Jeeva into Eve.

To be continued………………………

tags-  Tirumular, Tirumanthiram, Number symbolism, Rigveda, Tamil verses