ரிக் வேதத்தில் மிஸ்டர் கண்ணாயிரம் (Post No.10,184)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,184

Date uploaded in London – 7 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குறு மாணக்குடி கண்ணாயிரநாதர் , சஹஸ்ர நேத்ர ஈஸ்வரர்

1097       முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்

பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்

தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்

கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. 1.101.7

—Tevaram, Sambandar

நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ( 1954-1986) வசித்த மதுரை மாநகரில் கண்ணாயிரம் என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரை மறக்க முடியாமல் போனதற்கு இந்த நிகழ்ச்சி காரணம். எங்கள் வீட்டில் மாலை நேரத்தில் அரட்டை அடிக்க கூடும் கூட்டம் மிகப்பெரிது. சில நேரங்களில் ஆளுக்கு ஒரு தகர டப்பா , கையில் கிடைத்த குச்சிகளை வைத்து அடித்து சினிமாப் பாட்டுகளைப் பாடுவோம். சிலர் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள். மதுரை வடக்கு மாசி வீதி 20-ம் எண் வாடகை வீட்டில் இது நடக்கும். திடீரென்னு நிறுத்திவிட்டு வேதம் கீதை, சீன கம்யூனிஸ்ட், நேருஜி, காந்திஜி பற்றி விவாதிப்போம். இந்த அறைக்கு ‘பகுத்தறிவுப் பாசறை’ என்று பெயர் வேறு !!

நாலு வீடு தள்ளி வசித்த ரஷ்ய கம்யூனிஸ்ட் (அக்கட்ச்சிக்கு வலது கம்யூனிஸ்ட் என்று பெயர்) டாக்டர் எஸ்.ஆர்.கே வருவார். (கம்பனும் மில்டனும் ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் Dr S Ramakrishnan. முற்காலத்தில் கம்யூனிஸ்ட் பிரசாரம் செய்ததற்காக மதுரைக் கல்லூரி பேராசிரியர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்). அவரும் எங்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவார், திடீரென்று சேதுபதி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்வி.ஜி.சீனிவாசன் , கி.வா .ஜகந்நாதன் போன்ற தமிழ்ப் பேரறிஞர்களை க் கூட்டிக்கொண்டு உள்ளே நுழைவார். எல்லோரும் ‘கப் சிப்’ என்று அடங்கி நைசாக நழுவி விடுவோம்.

என் தந்தை வந்து அவர்களுடன் பேசுவார் . சிருங்கேரி மஹாஸன்னிதானம் விஜயம் செய்தவீடு. புதுக் கோட்டை  கோபால கிருஷ்ண பாகவதர் பஜனை செய்த வீடு. காஞ்சி  பரமாசார்ய சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரத காலத்தில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தங்கி இருந்ததால், எங்கள் வீட்டின் வழியாக மீனாக்ஷி  கோவிலுக்கு நடந்து செல்லுவார்.

ஓ, இதுதான் சந்தானம் ( V Santanam, Editor in Chief, Dinamani, Madurai) வீடா?  என்று கேட்டுவிட்டு ஒரு சில வினாடிகள்  நின்று ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போவார். இப்படிப்பட்ட லக்கி lucky  வீட்டின் வாடகை மாதத்துக்கு 60 ரூபாய்தான். அந்த வீட்டுச் சொந்தக்காரரான பைரவ பிள்ளையும் தினமணியில் என் அப்பாவின் கீழ் ‘சப் எடிட்டரராக’ இருந்ததால் வாடகையை உயர்த்த முடியாமல் தவித்தார் . இப்பேற் பட்ட புகழுடைய வீட்டுக்கு நிறைய பேர் ‘ஓஸி’க் காப்பி சாப்பிடவும் வருவார்கள். என் அம்மா போடும் காப்பி அவ்வளவு பிரசித்தம்!!

தினமும் வரக்கூடிய ராவ் என்ற இளைஞருக்கு மாலைக் கண் நோய்; மாலை வந்துவிட்டால்  மெதுவாக ‘நான் போய்ட்டு வரேன்’ என்று கிளம்பிவிடுவார். கண் தெரியாதபோதும் அவருக்கு ஒரு அபூர்வ சக்தி உண்டு. மதுரையில் அந்தக் காலத்தில் கார் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு. ‘அவரிடம் கார்கூட இருக்கிறது’ என்று சொன்னால் அவர் லட்சாதிபதி- குபேரன் – ன்று பொருள். மேலே குறிப்பிட்ட ராவ்ஜி, எந்தக் கார் போனாலும் அதன் owner ஓனர் / சொந்தக்காரர் பெயரைச்  சொல்லி விடுவார். இறைவனின் கருணைதான் என்னே!! ஒரு அங்கத்தின் சக்தியைக் குறைத்தால் மற்றோரு உறுப்பின் சக்தியை அதிகரித்து விடுவார். அந்த ராவ்ஜி சொல்லும் ஒரு காரின் ஓனர் owner பெயர் கண்ணாயிரம். மதுரையில் ஒரு சினிமா கொட்டகையின் சொந்தக்காரர்.

xxxx

மிஸ்டர் கண்ணாயிரம் Mr One Thousand

அவர் சொல்லும் மிஸ்டர் கண்ணாயிரம் பற்றி நான் வியக்கும் விஷயம் கண்ணாயிரம் என்றால் நல்ல பெயர் இல்லையே? இந்திரன் பற்றிய கதையில் அவருக்கு ஆயிரம் கண் கிடைத்த கதை அசிங்கமாக இருக்கிறதே. எப்படி இப்படியெல்லாம் பெயர்கள் வைக்கிறார்கள்? என்று. இப்பொழுது ரிக் வேதத்தில் உள்ள பத்தாயிரம் மந்திரங்களில் 9300 படித்தவுடன் புது அர்த்தம் விளங்குகிறது. அதாவது இந்திரன் பின்னால் மன்னிப்புக் கேட்டு நல்லவர் ஆகிவிட்டார். அவருக்கு நல்ல கண்- ஞானக் கண்- கொடுத்த இறைவனின் பெயரும்- சிவ பெருமானின் பெ யரும் கண்ணாயிரம்தான். இதோ விவரம்

இந்திரன், அஹல்யா என்ற அழகி வீட்டுக்குப் போனான். நடுக்காடு . அவருடைய கணவர் கௌதம ரிஷி ஆற்றில் குளிக்கப் போனார். இந்திரனுக்கு சபலம் தட்டியது. அவள் மீது பாய்ந்தான். அவளும் மறுப்பு தெரிவிக்கவில்லை; கணவர் வரும் நேரத்தை அறிந்து  பூனை போல நைசாக நழுவிச் சென்றான். இதை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை அருகில் ஓவியமாக தீட்டிய செய்தி பரிபாடலில் உள்ளது. ஒரு பட்டிக்காட்டு பெண், கணவனிடம் இது என்ன அய்யர் ஆஸ்ரமத்தில் ஒரு பூனை பயந்து கொண்டே ஓடுகிறது ? என்று கேட்க, பட்டிக்காட்டான் பதில் சொல்கிறான்-  அட மூமே, இந்திரன் -அஹல்யை கதை உனக்குத் தெரியாதா என்று. அவ்வளவுக்கு தமிழர்களுக்கு புராணம் அத்துப்படி! 2000 வருஷங்களுக்கு முன்னரே.

xxx

கவுதம ரிஷி திடீரென்று வீட்டுக்குள் வந்தார். மனைவியின் நிலையைக் கண்டார். விஷயம் புரிந்தது. மனைவியை அதட்டினார். அவளுக்கு சித்தப் பிரமை பிடித்தது; கல் போல உட்கார்ந்தாள். மானஸீகமாக மன்னிப்புக் கேட்டாள் ; கெளதம ரிஷியும் மனம் இரங்கினார் ; மன்னிப்பு கொடுத்தார். ‘உலக மஹா உத்தமன், இந்த இப்பிறவியில் சிந்தையாலும் வேறொரு பெண்ணைத் தொடேன் என்று வீர சபதம் செய்த இராம பிரான் ,காலடி உன் மீது படும்போது உன் மன நோய் அகலும். நீ மீண்டும் அழகி ஆவாய்’ என்கிறார் கவுதம ரிஷி.

இதைக்  கம்பன் ‘உன் கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்’ என்று பாட அதைக் கண்ணதாசனும் சினிமாப் பாட்டில் நுழைத்த கதையும்  நாம் அறிந்ததே. ‘அதே நேரத்தில் இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றுக’ என்றும் முனிவர் சாபம் இட்டார் . அவன் உடம்பில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றின. பின்னர் பல கோவில்களுக்குச் சென்று மன்னிப்பு கேட்கவே சிவன் , அந்த இந்திரனின் கண்களை சாதாரணக் கண்களாக மாற்றியதாக கதையும் தல வரலாறும் உண்டு.

Xxxx

1000 கண்கள்!!

இந்த இடத்தில் 1000 கண்கள் பற்றி சில சுவையான விஷ்யங்களைக் காண்போம். (ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே, குற்றால அழகை நாமும் கண்பதற்கு வண்ணக் கிளியே!என்று  சிவாஜி கணே சன் பாடிய சினிமாப்பாட்டைச் சொல்லவில்லை )

அஹல்யா கல் ஆனாள் என்று சொல்லுவது புராண ஸ்டைல் Purana Style. அதாவது அந்த இன்சிடென்ட் incident  காரணமாக அவள் மன நோயாளி ஆனால் ; ராம பிரான் போன்ற புருஷோத்தமன் பாத துளி பட்டவுடன் புனிதை ஆனாள் . இது போலவே இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்புகள் வந்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு கண்ணாயிரம் என்ற பெயர் இருந்தது உண்மையே. ஏனெனில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞான சம்பந்தரும் முதல் திருமுறையில் கண்ணாயிரேஸ்வரர் கோவிலில் பாடி இருக்கிறார்.. ஆயினும் பெண் உறுப்பு போன்ற கதைகளை பிற்காலத்தில் உபன்யாசம் சொல்லும் பவுராணிகர்கள், சுவையை அதிகரிக்க சேர்த்துவிட்டார்கள்.

இதற்கு ஒரு எடுத்துக் காட்டும் தருகிறேன். ரிக் வேதத்தில் அத்ரி முனிவர் சூரியகிரகணப் பாடல் உளது; மஹாபாரதத்தில் அர்ஜுனன், ஜெயத்ரதனை  வீழ்த்திய சம்பவத்தில் கிருஷ்ணன், சாதுர்யமாக சூரிய கிரஹணத்தைப் பயன்படுத்திய சம்பவமும் உள்ளது (விவரங்களுக்கு என் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க.)

கிரஹணத்தைத் துல்லியமாக கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்தபோதும், ராகு என்னும் பாம்பு சந்திர சூரியர்களை விழுங்குவதாக 2000 ஆண்டு பழமை உடைய  காளிதாசன் காவியத்திலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் எழுதிவைத்தனர். அதாவது விஞ்ஞான உண்மைகளை பாமரர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்; அதற்காக இப்படி கதை ரூபத்தில் சொல்லி விடுவார்கள். இதே போல இந்திரன் உடம்பில் ஏதேனும் பச்சை குத்தி இருப்பார்கள். எங்கள் லண்டனில் யாரேனும் செக்ஸ் சில்மிஷம் செய்து தண்டிக்கப்பட்டால் அவரை REGISTER OF SEXUAL OFFENDERS செக்ஸுவல் அஃ ப்பண்டர் — செக்ஸ் குற்றவாளிகள் – பட்டியலில் வெளியிடுவார்கள் அதே போல அக்காலத்தில் குற்றவாளிகள் உடலில் செம்புள்ளி- கரும்புள்ளி குத்தி, மொட்டையடித்து , கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விடுவார்கள். இப்படி இந்திரனுக்கும் உடலில் நிறைய பச்சை குத்தி இருப்பார்கள் போலும்.

இதை நான் சொல்லுவதற்கு ரிக் வேதத்தில் ஆதாரம் உளது. ஆயிரம் போன்ற  எண்களை அவர்கள் ‘நிறைய’ என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். வருணனுக்கு 1000 கண்கள் உண்டு. அவன் மறைவாக மனிதர்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டுவிடுவான் என்று ரிக் வேதம் இயம்புகிறது. அக்கினி பகவானுக்கு 1000 கண்கள் உண்டு என்று ரிக் வேத மந்திரம் கூறுகிறது.

எல்லோரும் அறிந்த தினமும் கோவில் களிலும் பிராமணர்  வீடுகளிலும் ஒலிக்கும்

புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரத்தில் (10-90) இறைவன் என்னும் மஹா புருஷனை 1000 கண்கள் உடையவன், 1000 கைகள் உடையவன், 1000 பாதங்கள் உடையவன் என்று ரிஷிகள் பாடுகின்றனர். அதே பத்தாவது மண்டலத்தில் இந்திரனின் வாயில் 1000 ஓநாய்கள் இருப்பதாக ஒரு ரிஷி பாடுகிறா ர் ; ஓநாய் என்பதை 1000 கழுதைப் புலிகள் என்று கிரிப்பித் மொழிபெயர்க்கிறார். அதே மண்டலத்தில் ரிஷிகளுக்கு அக்கினி பகவான் 1000 பசுக்களை அளிப்பதாகச் சொல்கிறார். சுருங்கச் சொல்லின் சஹஸ்ர என்ற 1000 ‘நிறைய’ என்ற பொருளில் வருகிறது. இதை நூற்றுக் கணக்கான ரிக்வேத துதிகளில் காணமுடிகிறது. ஆகவே ‘1000= நிறைய’ என்பதே பொருள். தசரதனுக்கு 60,000 பொண்டாட்டிகள் என்று புராணிகர் உபன்யாசத்தில் சொல்லும்போதும் அவனுக்கு ‘அதிகம்’ பெண்கள் மனைவியாகவும் அந்தப்புர அழகிகளாகவும் இருந்தனர் என்பதைக் குறிப்பதே.

XXX

கண்ணாயிரேஸ்வரர் கோவில்

மாயவரம்- வைத்தீஸ்வரன் கோவில் பாதையில் கண்ணாயிரேஸ்வரர் கோவில் உளது. இங்குதான் இந்திரனுக்கு நார் மல் கண்கள் கிடைத்தன; பெண் உறுப்பு அடையாளங்கள் மறைந்தன என்று தல புராணம் கூறும்; நின்ற சீர் நெடுமாறன் காலத்தில், மஹேந்திர பல்லவன் ஆட்சிக் காலத்தில்  1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருஞான சம்பந்தர் 1000 கண்கள் பற்றிப் பொதுவாகப் பாடுகிறார் :-

குறு மாணக்குடி கண்ணாயிரநாதர் , சஹஸ்ர நேத்ர ஈஸ்வரர்

1097       முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்

பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்

தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்

கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.    1.101.7

காம வயப்பட்டு அகலிகையை நாட , அதனால் கெளதம முனிவரின் சாபம் பெற்ற இந்திரன், அது தீரும் வண்ணம் பூஜித்து வேண்ட , அந்த சாபத்திரிலிருந்து விடுவித்துக் கண்ணாயிரம் என்ற பெயரையும் ஈ ந்த , ஈசன் வீற்றிருப்பது, கன்னிப் பெண்கள் ஏற்றித் துதிக்கும் கண்ணார் கோயில் ஆகும்

இது போல ஆயிரம் தாமரைகளால் பூஜித்த திருமாலுக்கு ஒரு தாமரை போதாமல் போகவே கண்ண்ணையே  சிவபெருமானனுக்கு திருமால் கொடுத்த  கதைகளும் உண்டு .

திருக்காரவாசல் ; திருக்காறாயில்

இதே போல அஹங்காரத்தினால் சிறிது கா ல த்துக்கு  படைப்புத் தோளிலிருந்து சஸ்பெண்ட் செய்துவைக்கப்பட்ட பிரம்மதேவன் மன்னிப்பு கேட்கவே அவருக்கு ஆயிரம் கண்களுடன் தோன்றி பதவியை மீண்டும் கொடுத்த கதை திருக்கார் வாசல் தல் த்துடன் தொடர்புடையது

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் – கண்ணாயிரநாதர், தேவியார் – கயிலாயநாயகியம்மை.

 இங்கு சிவனுக்கே ஆயிரம் கண்ணன் என்ற பொருளது.

ஆகவே ஆயிரம் என்பதன் பொருளை உணர்ந்து நாம் வணங் குவோமாகுக

–SUBHAM—

 tags – ரிக் வேத,  கண்ணாயிரம்,கண்ணாயிரநாதர், கண்ணாயிரேஸ்வரர்

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 3 (Post No.10,183)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,183

Date uploaded in London – 7 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 3

  •  

தனது வயதான காலத்தில் அவர் எட்டயபுரம் வந்தார். அப்போது எட்டயபுரம்  மழையின்றி மரங்கள் காய்ந்து போய் நிலம் வெடித்து பஞ்ச நிலையில் இருந்தது. மக்கள் தவி தவித்தனர். இந்த நிலையைக் கண்டு மனமிரங்கிய அவர், அம்ருதவர்ஷிணி ராகத்தில் வர்ஷய வர்ஷய வர்ஷய – மழை பொழியட்டும், மழை பொழியட்டும், மழை பொழியட்டும் என்ற கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தார். உடனே இடியும் மின்னலும் தோன்ற மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஜனங்கள் ஆச்சரியப்பட எட்டயபுர மஹராஜா அவரை ஓடோடி வந்து வழியிலேயே சந்தித்து கௌரவித்தார். தனது ஆஸ்தானத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று அவரது இறுதி காலம் வரை அவரை போஷித்து வந்தார்.

தனது ஒரு கீர்த்தனையில் கூட அவர் மானுடனைப் பாடவில்லை. இறைவனையே பாடினார். ஒருவர் தஞ்சையில் சென்றால் பணம் கிடைக்கும் என்று அவரிடம் கூற, ‘பணம் வேண்டுமெனில் லக்ஷ்மியை அல்லவோ துதிக்க வேண்டும்,  மனிதனை ஏன் பாட வேண்டும் ‘ என்று கேட்டு விட்டு, ‘ஹிரண்மயீம் லக்ஷ்மீம் பஜாமி என்று ஆனந்தமாகப் பாடினார். திருவாரூரில் அவர் இருந்த போது குழிக்கரையில் மிராசுதாரராக இருந்த வைத்யலிங்க முதலியார் தீக்ஷிதரிடம் தன்னைப் பற்றிப் பாட வேண்டுமென்று வேண்டினார். தீக்ஷிதரோ, ‘உமக்கு விஸ்வநாதர் அருள் புரியட்டும் என்று பாடுகிறேன் என்று கூறி  பதினான்கு ராகங்களில் விஸ்வநாதர் மேல் கீர்த்தனை பாடினார்.

அவ்வப்பொழுது பணமின்றி தீக்ஷிதர் வறுமையை எதிர்கொண்டதும் உண்டு. அப்படி ஒரு சமயத்தில் அவரது சிஷ்ய  கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரான தாசி கமலம் என்பவர் தன் நகைகளை அடகு வைத்துப் பணம் தருவதாகக் கூறினார். அதை மறுத்தார் தீக்ஷிதர். தியாகராஜம் பஜரே என்ற கீர்த்தனையைப் பாடினார்.  மறுநாள் தஞ்சை அரசாங்கத்திலிருந்து ஓர் உயர் அதிகாரி வரப்போகிறார் என ஏராளமான சாமான்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. ஆனால் திடீரென்று அவர் பயணம் ரத்தானது. அவர் வரவில்லை என்ற செய்தி வந்தது. அதனால் வாங்கிய சாமான்களை என்ன செய்வது என்று யோசித்த சத்திரத்தின் அதிகாரி அதற்கு பாத்திரமானவர் தீக்ஷிதரே என்று நிர்ணயித்து அனைத்துப் பொருள்களையும் அவரிடம் சமர்ப்பித்தார். அனைவரும் இறைவனது அருளையும் தீக்ஷிதரது மஹிமையையும் எண்ணி அதிசயித்தனர்.

ஒரு சமயம் கீவளூருக்குச் சென்றார் தீக்ஷிதர். அக்ஷய லிங்க ஸ்வாமியை தரிசித்து ஒரு பாடல் பாட வேண்டும் என்று சங்கல்பம் கொண்டிருந்தார் அவர். ஆனால் குருக்களோ தரிசன நேரம் முடிந்து விட்டது என்று கதவை மூடித் தாழ்ப்பாளிட்டார். தீக்ஷிதர் எவ்வளவோ வேண்டிக் கொண்டு பார்த்தார். நாளை வந்து தரிசனம் செய்யலாமே என்றார் குருக்கள். குருக்கள் அங்கிருந்து அகன்றதும் தீக்ஷிதர் அக்ஷய லிங்க விபோ என்ற கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தார். உடனே கதவு படீரென்று திறந்தது. அனைவரும் மெய்மறந்து இந்த அதிசயத்தைப் பார்த்து சிலிர்த்தனர்.

இப்படி ஏராளமான அபூர்வமான சம்பவங்கள் அவர் வாழ்வு முழுவதும் நடந்து கொண்டே இருந்தன. அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள் உருவாயினர். தீக்ஷிதருக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. ஆகவே தனது சகோதரரின் பெண்ணின் பிள்ளையை ஸ்வீகாரம் செய்து கொண்டார். அவர் தான் சுப்பராம தீக்ஷிதர். சுப்பராம தீக்ஷிதரைப் பற்றி மகாகவி பாரதியார், ‘கன்னனொடு கொடை போயிற்று, உயர்கம்பநாடனுடன் கவிதை போயிற்று, உன்னரிய புகழ்ப் பார்த்தனொடு வீரம் அகன்றதென உரைப்பார் ஆன்றோர்; என்னக நின்றகலாதோன் அருட் சுப்பராமனெனும் இணையிலா விற்பன்னனொடு சுவை மிகுந்த பண்வளனும் அகன்றதெனப் பகரலாமே என்று பாடி இரங்கினார். சுப்பராம தீக்ஷிதரின் க்ருதிகள் தீக்ஷிதரின் க்ருதிகளை விட அழகானவை என்ற அளவு பெயரைப் பெற்றவர் சுப்பராம தீக்ஷிதர்.

     முத்துசாமி தீக்ஷிதரைப் பற்றிக் கூறுகையில் மஹாகவி பாரதியார், “தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பச்சை சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை. இவை கம்பீரமான கங்கா நதியைப் போல நடை உடையவை என்கிறார்.

எட்டயபுரத்தில் தனது அந்திம காலத்தில் ஆறேழு வருடங்களை அவர் கழித்தார். ஒரு நாள் அவர் தன் சிஷ்யர்கள் பாட அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் மீனாக்ஷி என்ற கமகக்ரியை  கீர்த்தனத்தைப் பாடிக் கொண்டிருந்தனர். அதில் மீன லோசனி பாசமோசனி என்ற இடம் வந்தது. அப்போது தீக்ஷிதர் தனது பாசங்கள் அனைத்தையும் தேவி போக்குவது போல உணர்ந்தார். உடனே பாசம் நீங்கிற்று, தீக்ஷிதர் அம்பிகையுடன் கலந்தார். அந்த நாள் தீபாவளி தினம். ஆண்டு 1835. அக்டோபர் 21ஆம் நாள்.

அப்போது ஒரு அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டயபுரம் அரண்மனையில் இருந்த காங்கேயன் என்ற யானையை யானைப் பாகன் தீபாவளி தினத்திற்காக, குளிப்பதற்காக தெப்பக்குளத்துப் படித்துறைக்குக் கொண்டு வந்தான். எப்போதும் அமைதியாகக் குளிக்கும் யானை அன்று குளிக்க மறுத்தது. வீதிகளில் ஓட ஆரம்பித்தது. அது நேராக மயானத்தில் சென்று படுத்துக் கொண்டது. சோகத்துடன் இருந்த யானை பின்னர் மெதுவாக தன் இருப்பிடம் மீண்டது. உடனே ஓடோடி வந்து இது பற்றிக் கேட்ட எட்டயபுரம் மன்னருக்கு, “நீங்களும் மக்களும் க்ஷேமமாக இருப்பீர்கள், பயப்பட வேண்டாம் என்றார் தீக்ஷிதர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறைவனுடன் கலந்ததை அறிந்த மன்னர், ‘எங்களைப் பற்றிக் கூறினீர்களே, உங்களைப் பற்றிச் சொல்லவில்லையே, நானும் கேட்கவில்லையே என்று அழுது புலம்பினார். தீக்ஷிதரின் பூதவுடல் வைதிக முறைப்படி எரியூட்டப்பட்டது.

தீக்ஷிதரின் அஸ்தி அட்டக்குளம் கரையில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது. அது எட்டயபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கிறது. தீக்ஷிதரின் நினைவைப் போற்றி மரியாதை செய்ய விழைவோர் அனைவரும் அங்கு செல்வர். ஆயின் மிக பிரம்மாண்டமான  மஹா மேதையான அவருக்கான மரியாதை இன்னும் சிறப்புறச் செய்யப்பட வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. அதற்கு அம்பாள் அருள் பாலிப்பாளாக.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் சரிதத்தை கவியோகி சுத்தானந்த பாரதியார் அழகுற எழுதியுள்ளார். அதில் தியாகராஜரை சங்கீதத் தென்றல் என்றும் சியாமா சாஸ்திரிகளை இசைச் சூறாவளி என்றும் ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரை சங்கீதக் கடல் என்றும் கூறி வர்ணிக்கிறார். ‘கடலுக்கு உவமை கடலே என்று வால்மீகி முதல் 1935இல் வெளி வந்த ரத்னாவளி சினிமா பாடல் வரை நாம் கேட்டிருக்கிறோம்; சங்கீதக் கடலான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதருக்கு உவமை ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரே தான்!

நன்றி வணக்கம்.

xxx subham xxxxxx

tags-  முத்துசாமி தீக்ஷிதர்! – 3

June 2021 London Swaminathan Articles, Index-103 (Post No.10,182)

SARASVATI , DACCA MUSEUM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,182

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10,000 PLUS POSTS.

June 2021; Index 103

OLDEST HISTORIAN IN THIS WORLD-5; 9677; JUNE 1, 2021

OLDEST HISTGORIAN- 6; 9687; 4/6

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS  -51; 5/6

ORIGI OF ANIMAL FABLES AND SIGNATURES IN KRITIS/SONGS; 9692; 5/6

40,000 SANSKRIT WORDS IN WEBSTERS ENGLISH DICTIONARY, 9694; 6/6

SARASVATI (FOR SCHOOL CHILDREN)9701; 7/6

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 52; 8/6; 9707

TAMIL FOOD IN THE RIG VEDA;9710;9/6

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 53; 9716;10/6

MAN BECOMES GOD- TAMIL VEDA AND RIG VEDA AGREE;9725;13/6

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 54; 9726;13/6

STORY OF TWO ANTS IN RAMAYANA; 9739;15/6

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 55; 9752;19/6

EVERYTHING IS IN THE RIG VEDA; 9766;22/6

WONDERS NEVER STOP; EVERYTHING IS IN THE RIGVEDA-2;9769

WONDERS ONTINUE; EVERYTHING IS IN THE RIG VEDA-3; 9772;24/6

RIVERS IN THE RIG VEDA AND PANINI’S ASHTADHYAYI-1; 9776; 25/6

RIVERS IN THE RV…..2; 9779;2/7

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 56; 9788;28/6

QUOTES FROM THE RIG VEDA; JULY 221 GOOD THOUGHTS CALENDAR;9793;29/6

ATTITUDE IS EVERYTHING BY TIRUCHI GANESAN

INDEX 74; JANUARY 2019;11/6; 9719

INDEX 75; FEBRUARY 20; 9732;14/6

INDEX 76; MARCH 2019; 9744; 17/6

INDEX 77; APRIL 2019; 9748; 18/6

WORLD HINDU NEWS ROUNDUP 6-6-2021; 9696; 6/6

WORLD HINDU NEWS ROUNDUP 13-6-2021; 9727

WORLD HINDU NEWS ROUNDUP 20-6-2021;9760

WORLD HINDU NEWS ROUNDUP 27-6-2021;9786

LONDON CALLING (HINDUS) 31-5-2021

LONDON CALLING (TAMILS) 30-5-2021

LONDON CALLING (HINDUS) 7-6-2021;9705

LONDON CALLING (TAMILS) 6-6-2021;9706

LONDON CALLING (HINDUS) 14-6-2021;9734

LONDON CALLING (TAMILS) 13-6-2021;9733

LONDON CALLING (HINDUS) 21-6-2021;9765

LONDON CALLING (TAMILS) 20-6-2021;964

LONDON CALLING (HINDUS) 28-6-2021;9792

LONDON CALLING (TAMILS) 27-6-2021;9791

INDEX-72 (NOV.2018) ; 9681;2/6

XXXX

ஜூன் 2021 கட்டுரைகள்

அமெரிக்கக் கவிஞர் டி .எஸ்.எலியட்; 9674; ஜூன் 1, 2021

ஜெர்மானியக் கவிஞர் கெத்தா 9680;2/6

உலகின் முதல் வரலாற்று …….5; 9679; 2/6

சோகக் கதை மன்னன் தாமஸ் ஹார்டி; 9681;3/

உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் -9684;3/6

(இறுதி பகுதி)

அமெரிக்க நாவலாசிரியர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே ;9688; 4/6

கிரீஸ் நாட்டின் புலவர் ஹோமர்; 9690;5/6

பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்சாக்; 9695; 6/6

இதாலிய கவிஞர் பொகாஸியோ ; 9700; 7/6

பாரதியாருக்கு சம்பந்தருக்கு ஐடியா கொடுத்த ரிக் வேதம்; 9702;7/6

ஸ்பானிய நாவலாசிரியர் மிகேல் டெ  செர்வான் டிஸ் ;9704; 8/6

தமிழ் உணவு பற்றிய  ரிக்வேதப்  பாடல்; 9709; 9/6

லத்தின் மொழிக்கு கவிஞர் வர்ஜில் ;9711; 9/6

ஆங்கிலக் கவிஞர் டென்னிஸன் ; 9714;; 10/6

பிரெஞ்ச் எழுத்தாளர் வால்டேயர் ,9718; 11/6

ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த் ;9721;12/6

ஆங்கில எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விப்ட் ;9724;13/6

மனிதனும் தெய்வமாகலாம் – குறள் , ரிக்வேதம்

9722;13/6

நான் மறை பற்றிக்  குழப்பம் வேண்டாம்;;9715;10/6

அமெரிக்க நாவலாசிரியர் மார்க் ட்வெய்ன்;9731;14/6

ஆங்கில நாவலாசிரியை வர்ஜீனியா வூல்ஃ ப் ; 9737;15/6

ராமாயணத்தில் எறும்பின் கதையும் கைகேயி வம்சமும் ,9738;15/6

அந்தணர் பற்றி கம்பன் எச்சரிக்கை ; 9741; 16/6

குடிபோதையில் இறந்த கவிஞர் டிலன் தாமஸ் ; 9742; 16/6

நாடக ஆசிரியர் பெர்னார்ட் ஷா ;9745;17/6

இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை -1; 9746; 17/6

இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை -2;9749;18/6

அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மன்; 9737;18/6

பிரெடெரிக் நீட்ஸே – God is Dead — கடவுள் பற்றி இப்படிச் சொல்லலாமா?

உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி; 9754; 20/6

உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி-2; 9758; 21/6

நகைச்சுவை நாடக ஆசிரியர் ஷெரிடன்; 9755; 20/6

ரோமானிய பழநங் கவிஞர் ஹோரஸ் ; 9759;211/6

மர்மக்  கதை மன்னன் ; உலகில் முதல்

துப்பறியும் கதை எழுதிய போ ; 9763;22/6

அமெரிக்க கவிஞர் லாங்ஃ பெலோ 9771; 24/6

கூன்முதுகுக்  கவிஞர் அலெக்சாண்டர் போப் 9768; 23/6

இந்திய பற்றி நாவல் எழுதிய ஆங்கில நாவல் ஆசிரியர்

ஈ எம் பார்ஸ்டர் ; 9775;25/6

ஆங்கில நாவல்களின் தந்தை டேனியல் டீ ஃ போ 9778; 26/6

2000 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானிய எழுத்தாளர் சிசரோ ; 9781;27/6

தமிழர்கள் ஏன் ரிக்வேத பெயரிடும் முறையைப் பின்பற்றினர்?9782; 27/6

ஆங்கிலக் கவிஞர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்; 9785; 28/6

சோக நாடக மன்னன் யூரிபிடீ ஸ் ; 9790; 29/6

31 ரிக்வேதப் பொன்மொழிகள் ஜூலை 2021 நற்சிந்தனை

 காலண்டர் ;9797; 30 ஜூன் 2021

உலக இந்து சமய செய்தி மடல் 6-6-2021; 9697;

உலக இந்து சமய செய்தி மடல் 13-6-2021; 9728

உலக இந்து சமய செய்தி மடல் 20-6-2021; 9761;

உலக இந்து சமய செய்தி மடல் 27-6-2021;9787

–subham–

tags- Index 103; June 2021 Index

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,181

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

xxx

RV.10-16-4

இது தகனம் செய்யும் மந்திரம் / சுடுகாட்டில்

“அக்கினியே, தேகத்தில் பிறப்பில்லாத ஒரு பாகம் /ஆன்மா இருக்கிறது. அதை தூய்மை செய்க;. நீ எரித்து அழித்த  உடல் உறுப்புகளுடன் அவனை புனிதர்கள் வாழும் இடத்துக்கு அழைத்துச் செல்க”.

RV.10-16-5

“அக்கினியே உனக்கு அளிக்கப்பட்ட பொ ருட்களுடன் வருபவனை பிதாக்களிடம்/ முன்னோரிடம் அழைத்துச் செல்க. அவன் ஜீவனை அடைந்து சந்ததியை வளர்ப்பான் ஆகுக. ஜாத வேதசனே/ அக்கினியே அவனை மீண்டும் தேகத்துடன் சேர்த்து வைப்பாயாகுக”.

இதில் இறந்து போனவர் மீண்டும் பிறந்து சந்ததியை வளர்க்க வேண்டும் என்ற கருத்து தொனிக்கிறது. எப்போது??

 புனித உலகத்தில்/ சொர்க்கத்தில் வாசம் முடிந்தவுடன் என்பதும் தெளிவாகிறது .

இந்தக் கருத்துக்கள் இந்திய மதங்களைத் தவிர ஏனைய செமிட்டிக் மதங்களுக்கு Semitic Religions  (யூத, கிறித்தவ, இஸ்லாமிய) எதிரானவை. ஆகவே வெள்ளைக்காரப் பயல்கள் இது பற்றி பிரஸ்தாபிப்பதில்லை. மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல்கள் வாய் மூடி மௌனியாகி விடுவார்கள்!!!

Xxx

ரிக்வேதம் RV. 10-54 முதல் Rv.10-60 துதிகள்

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஏராளமான ஈமக்கிரியை விஷயங்கள் (Funeral Rites) வருகின்றன. அவற்றை விளக்க வெள்ளைத் தோல் வெளிநாட்டனாலோ மார்க்சீய கும்பலினாலோ முடியாது. இதை இன்றும் சுடுகாட்டிலும் , வீட்டில் நடக்கும் திவச திதிகளை செய்வோரும் மட்டுமே விளக்க முடியும். குறிப்பாக ஞான திருஷ்டி உடைய சாது சன்யாசிகள் மூலமே அறியமுடியும். இங்கே அசுநீதி , அசமாதி , அனுமதி, உஸீநாரணி   ஆகிய புதிய பித்ருலோக தேவதைகள் பற்றி ரிஷிகள் பாடுகின்றனர்.

xxx

ஒரு சில குறிப்புகளை மட்டும் காண்போம்

RV. 10-56-1; 10-56-2

மூன்று ஒளிகள் இருக்கின்றன; இங்கே தகன அக்கினி; மேலே ஒரு வெளிச்சம்; அதையும் தாண்டி உள்ள ஒளியுடன் கலப் பாயாகுக

அது தேவர்களின் பிறப்பிடம். அன்பு செழிக்கும் இடம்.

நீ வானத்திலுள்ள ஒளியிலும், சூரியனுடைய ஒளியிலும், உன்னுடைய சொந்த ஒளியிலும் நுழைவாயாகுக.

ரிக் வேதத்தின் 56ஆவது துதியின் அடிக்குறிப்பு இறந்தவர்கள் ஒளி ரூபத்தில் சென்று மஹத்தான ஒளியுடன் கலப்பார்கள் என்று சொல்கிறது .

XXXX

RV.10-56-7

“புவியின் பல திசைகளுக்குச் செல்ல கப்பலில்  நீரின் மீது சென்று எல்லாக் கஷ்டங்களையும் கடந்த மனிதர்களைப் போல பிருகதுக்தன் , தன்  பலத்தால் தன்  புதல்வனை — வாஜிநனை — இங்கு அக்கினி முதலியவற்றில் – அங்கு சூ ரியன் முதலியவற்றில் ஸ்தாபித்தான்” .

இப்படி ரிக் வேதத்தை தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் எழுதியபோதும் இதைப் பாடிய ரிஷியின் பெயர், புதல்வர் பெயர் எல்லாம் உண்மைப் பெயர்கள் அல்ல; அடையாள பூர்வ பெயர்களே என்ற கருத்தும் தொனிக்கிறது.

xxxx

RV.10-58-12

58-ஆவது துதி மனம் பற்றிப் பேசுகிறதா , இறந்தவரின் ஆவி பற்றிப் பேசுகிறதா என்று எவருக்கும் தெளிவாகவில்லை. ஆகையால் இரண்டு பெயர்களையும் (MIND/SPIRIT)  எழுதிவிட்டார்கள் .

எமனிடம் சென்றுள்ள உன்னை மீண்டும் இங்கு வசிக்கச் செய்கிறோம் என்பது பல்லவி போல  12 மந்திரங்களிலும் வருகிறது. இதில் 12ஆவது மந்திரத்தை ஜம்புநாதன் மொழிபெயர்க்கத் தவறிவிட்டார்.

இதோ மந்திரம்  எண் 12

“உன்னுடைய ஆவி இருக்கும் மற்றும் இருக்கப் போகும், தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

மந்திரம் எண் 7

“உன்னுடைய ஆவி நீரிலும் தாவரங்களிலும் , தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

இது கல், மண், புல் முதலிய எல்லாவற்றுமாக மனிதன் பல பிறவிகள் எடுப்பதும் தொனிக்கிறதது . மாணிக்கவாசகர் போலத் தெளிவாகப்படுகிறார் ரிஷி.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

………… மாணிக்கவாசகர், திருவாசகம்

xxx

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

இந்த  12 மந்திரங்களிலும் இறந்த ஆவியை மீண்டும் இங்கு வசிக்க அழைப்பது மறுபிறப்பை வலியுறுத்துகிறது

Xxxx

ஈமக்  கிரியையில் படகு வைத்ததை என் அம்மாவின் இறுதிச் சடங்கிலே  எழுதினேன் ; எகிப்திலும் இது உள்ளது .

இதோ மேலும் ஒரு கப்பல் மந்திரம் ; இதையும் எதோ ஒரு காரணத்தினால் ஜம்புநாதன் மொழி பெயர்க்கவில்லை. 10,000+++ மந்திரங்களில் அவர் விட்டுப்போன மந்திரங்கள் சுமார் பத்துதான் ; அதில் ஒன்று இங்கே –

RV.10-135-4

“பாலனே , நீ ரிஷிகளிடமிருந்து இங்கே வரச்செய்த தேர் , சாமனால்  பின்தொடரப்பட்டது. ஆகையால் இரண்டையும் கப்பலில் வைத்துள்ளோம்”. (இங்குள்ள 7 மந்திரங்களும் எமனை நோக்கிச் சொல்லும் மந்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. )

RV.10-135-1

“நல்ல இலைகளுள்ள மரத்தின் அருகே எமன் தேவர்களோடு பருகுகிறான். எமன் மனையின் தலைவன் . அவன் நம்முடைய பழைய மனிதர்களை விரும்பும் தந்தையாக இருக்கிறான்” .

(இதன் அடிக்குறிப்பில் ‘நல்ல இலைகளுள்ள மரத்துக்கு , இறந்து போன நல்ல ஆத்மாக்கள் இளைப்பாறும் இடம்’ என்று எழுதப்பட்டுள்ளது).

XXXX

ரிக் வேத துதி RV.10-154, யமி , புதிய ஜீவனை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது . இறந்தவர்களின் ஆன்மா , பித்ருக்கள் வசிக்கும் லோகத்துக்குத் செல்கிறது. (முதல் மந்திரத்தின் அடிக்குறிப்பு இறந்தோருக்கு அதர்வவேதிகள் தேனையும், சாமவேதிகள் நெய்யையும் அளிப்பதாகாச் சொல்கிறது .)

xxx

எனது வியாக்கியானம்

நான் படிக்கும்போது எனது கருத்துக்களை புஸ்தகம் முழுதும் எழுதுவதும், கடைசி பக்கத்தில் நானாக ஒரு இன்டெக்ஸ்INDEX  தயாரித்து எழுதுவதும் வழக்கம். அதில் மறுபிறப்பு என்று நான் எழுதிய குறிப்புகள் —

RV.10-55-5

நேற்று இறந்தவன் இன்று உயிரோடு இருக்கிறான்

இதைப்பாடிய புலவரே அடுத்த 4 துதிகளில் இறந்தவர்கள் பற்றிப்பாடும் பின்னணியில் இதைக் காண்க.

RV.10-30-9

இந்த மந்திரத்தில் இருமை என்ற சொல்லுக்கு இம்மை, மறுமை என்று சாயனர் விளக்கம் சொல்கிறார். அதையே ஒப்புக் கொள்ளும் வள்ளுவனும் மறுபிறப்பை ஒப்புக்கொள்கிறான் (குறள் 23)

இம்மை, மறுமை, அமிர்தம்; இறவாத தன்மை, பிறவாத தன்மை , எமலோகம், சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பாடல்களை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இந்துக்கள் இன்று கொண்டுள்ள கருத்துக்களையே ரிக் வேத காலத்திலும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்று ஈமக்ரியைப் பாடல்களில் உள்ளன.

இந்துக்கள் இது பற்றி படிப்பதோ பேசுவதோ ‘அபசகுனம்’ என்று கருதுவதாலும் , மார்க்சீய மாக்ஸ்முல்லர் கும்பல்களுக்கு இது அவர்கள் கொண்டுள்ள கொள்கைகளுக்கு விரோதமானது என்பதாலும் இந்த விஷயங்கள் அதிகமாக வெளியே தெரிவதில்லை. மரணத்துடன் தொடர்புள்ள நிர்ருதி என்ற தேவதையை ரிக் வேதம் நிறைய இடங்களில் குறிப்பிடுகிறது. அது மட்டுமே இன்று புரோகிதர்களுக்குத் தெரியும்; பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற தேவதைகள் அந்த மந்திரங்களில் மற்றும் பேசப்படுவதால் இந்தப் புஸ்தகத்திலும் அவைகளுக்கு விளக்கம்  இல்லை. இது தவிர ‘மர்ம நாமம் (ரகசியப்  பெயர்கள்) பற்றியும் இது போன்ற துதிகளில் வருகிறது ; ரகசிய நாமங்கள் பற்றிய விளக்கமும் இல்லை.

தேவார , திருவாசக, திருமந்திர, திவ்வியப் பிரபந்த பாடல்கள் இவைகளுக்கு விளக்கமாக அமைகின்றன.

பவுத்த, சமண மதங்களுக்கு முந்தைய உபநிஷதங்களில் மிகத்தெளிவாக உள்ளன ; பகவத் கீதைப்  புஸ்தகத்துக்கு நூற்றுக்கணக்கில் உரைகள் உள்ளன. அவைகளில் மறு ஜென்மம் பற்றிய பாடல்களுக்கு எல்லோரும் உபநிஷதக் கருத்துக்களையே மேற்கோள் காட்டுகின்றனர்.

–சுபம்–

tags- வேதத்தில்,  புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை, கருத்துக்கள்

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 2 (Post No.10,180)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,180

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 2

பின்னர் தெற்கு நோக்கி வந்த தீக்ஷிதர் திருத்தணியில் முருகப் பிரானை தரிசித்தார். தனது தந்தையார் அங்கு ஒரு மண்டலம் உபவாஸம் இருந்ததைப் போலவே தானும் ஒரு மண்டலம் உபவாஸம் இருந்தார். அப்போது அங்கே அவருக்கு தெய்வீக உள்ளொளி கிட்டியது. ஸ்கந்தாக்க்ஷரியை அவர் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு முதியவர் அவரிடம் வந்தார். அவர் பெயரைச் சொல்லி அழைத்தார். அவரது வாயில் ஒரு கல்கண்டுத் துட்டை இட்டார். தீக்ஷிதர் கண்ணைத் திறந்து பார்க்கும் போது அவர் முன் முதியவர் இல்லை மறைந்திருந்தார். வள்ளி தெய்வானை ஸமேத முருகப் பிரான் மயில் மீது வர முருகனின் தரிசனம் அவருக்குக் கிட்டியது. முருகனே முதியவர் உருவில் வந்து தனக்கு அருளியிருப்பதை தீக்ஷிதர் உணர்ந்தார். கல்கண்டை ஊட்டி முருகனே தனக்கு ஞானத்தை ஊட்டியதையும் அவர் உணர்ந்து கொண்டார். உடனே இசை வெள்ளம் அவர் நாவிலிருந்து வெளி வந்து கரை புரண்டோடியது.

ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதிஜயதி என்ற கீர்த்தனையை மாயாமாளவகௌள ராகத்தில் முதல் கீர்த்தனையாகப் புனைந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாடிய ஏராளமான கீர்த்தனைகளில் குரு குஹ என்று அவர் தனது முத்திரையைப் பதித்து வந்தார். இன்ன ராகம் என்றும் கூட கீர்த்தனைகளில் அவர் குறிப்பிடுவதுண்டு. சுமார் இருபது கீர்த்தனைகளை அவர் முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். ஆனந்தபைரவி ராகத்தில் உள்ள மானஸ குரு குஹ ரூபம் பஜரே, பூர்வியில் உள்ள ஸ்ரீ குரு குஹஸ்ய தாஸோஹம் உள்ளிட்ட பல கீர்த்தனைகள் பிரபலமானவை.

திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் வந்த தீக்ஷிதர் காமாக்ஷியை தரிசித்தார். மனோஹரியில் அமைந்துள்ள கஞ்சதளாயதாக்ஷி என்ற கீர்த்தனை, ஹிந்தோளத்தில் அமைந்துள்ள நீரஜாக்ஷி உள்ளிட்ட பல கீர்த்தனைகளை ஆனந்தமாகப் பாடினார். பின்னர் திருவாரூரை அடைந்த அவர் அங்கேயே தங்கலானார். ஏராளமான கீர்த்தனைகளைப் புனைந்து இறைவனின் புகழைப் பாடினார். இடையிடையே தீர்த்தஸ்தல யாத்திரையை அவ்வப்பொழுது மேற்கொண்டார்.

பஞ்சலிங்க கீர்த்தனைகளாக ப்ருத்வீ, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாயம் ஆகியவற்றைக் குறிக்கும் ஐந்து புண்ய ஸ்தலங்களான காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய ஸ்தலங்களில்  பைரவி ராகத்தில் சிந்தய மாகந்த மூல கந்தம், யமுனா கல்யாணி ராகத்தில் ஜம்பூபதே, ஸாரங்காவில் அருணாசல நாதம், உசேனியில் ஸ்ரீகாளஹஸ்தீசம், கேதாரத்தில் ஆனந்த நடன ப்ரகாசம் ஆகியவற்றை இயற்றி இசைத்துப் பாடினார். நவக்ரஹங்களில் ராகு கேது கிரகங்களை நீக்கி விட்டு ஏழு கிரகங்களுக்கும் ஏழு கீர்த்தனைகளை இசைத்துப் பாடினார். இவை இன்றளவும் பிரபலமாகி மேடைக் கச்சேரிகளில் இசைக்கப்படுகின்றன. மாயூரம் அடைந்த அவர் அங்கு அம்பிகையின் பேரில் ஸ்ரீ வித்யோபாஸனை முறையின் கீர்த்தனைகளை இயற்றி அருளினார்.

சம்ஸ்க்ருதத்தில் விற்பன்னர் என்பதால் அதில் உள்ள எட்டு வேற்றுமைகளுக்கும் எட்டு கீர்த்தனைகள் இயற்றினார். அவர் இயற்றியுள்ள நவாவரண கீர்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது; பிரபலமானது. சாக்த, ஆகம் தந்திரங்களில் சொல்லப்பட்டுள்ள மந்திரம், யந்திரம், மூர்த்தி முதலிய ஆவரணங்களை எல்லாம் கம்பீரமான பாவங்களுடன் ஒப்பற்ற உரிய ராகங்களில் அவர் கிருதிகளாக அமைத்து  ஸ்ரீ கமலாம்பிகை மீது நவாவரண கீர்த்தனைகளாக இயற்றினார்.

இப்படி அவர் இயற்றியுள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள், அவருக்கு மந்திர சாஸ்திரம், யோகம், ஸ்ரீ வித்யை, ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் அவர் ஒரு அபார மேதை என்பதை விளக்குபவையாக அமைந்துள்ளன.

  • தொடரும்

tags- முத்துசாமி தீக்ஷிதர்! – 2

‘Mr One Thousand’ in Rig Veda and Tamil Literature (Post No.10,179)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,179

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

In Tamil Nadu you may find men named ‘ Mr One Thousand’ (Kan Ayiram in Tamil). But there is an awkward story behind this name in later Puranas and even in Mahabharata. I argue in this article that it was a false and funny story and it was developed later by the Pauranikas/Upanyasakas, i.e. people who delivered discourses. It was the style they followed even in explaining occurrences of solar and lunar eclipses. Hindus calculated the eclipses precisely and yet they kept on saying ‘the snake dragon devouring the moon or sun’. Even Kalidas and Sangam Tamil poets repeated this 2000 years ago. This shows that all scientific things were simplified in the way of popular and funny stories.

Rig Veda says very clearly that a solar eclipse finished before Atri finished reciting his verse/hymn. His disciples praised him for this feat. They did not know that Rishi Atri was an astronomer. No total eclipse can lost more than seven minutes. That too is very rare.

In the Mahabharata also, Krishna knew the day of solar eclipse. Jayadratha put down his bow and arrow thinking that the sun has already set, and he could take rest now. But Krishna asked Arjuna to shoot him down when the sun was out after the eclipse.

xxx

Here is a funny story about Indra.

According to the Mahabharata, Indra seduced or tried to seduce Ahalya, wife of Gautama Rishi. And the sage’s curse impressed upon him a thousand marks resembling the female organ, so he was called Sa-yoni; but these marks were afterwards changed to eyes and hence he is called Netra Yoni and Sahasraksha, the thousand eyed (Yoni is female organ). But there is no support for this story in the  Rig Veda, the oldest book in the world .

Rig Veda called Agni, Varuna and Indra 1000 eyed. The meaning was they are all ‘omni scient’. They know everything and they could see everything. Even if human beings did something secretly, they would know.

But Tamils also believed the story of Indra with Thousand Eyes. We have a proof in Tamil Hymn Tevaram. Tiru Jnana Sambandar who lived 1400 years ago during the reign of Mahendra Pallava and Pandyan Nedumaran composed a poem in the village Tirukkannanar Temple near Vaitheeswaran koil in Tamil Nadu. Sambandar himself refers to 1000 eyes of Indra. After Indra’s prayer Lord Shiva changed his 1000 Yoni signs into 1000 eyes.

In Tiruvarur area there is another Kannayiranathar temple in Tirukkaravasal where Siva is said to have appeared with 1000 eyes before Brahma and gave him back his power of creation. Brahma who oversees Creation in Hinduism briefly lost it due to his arrogance.

xxx

In the Rig Veda tenth Mandala 10-79-5 Agni is said to have 1000 eyes.

“This man who quickly gives him food, who offers his gift of oil and butter and supports him

Him with his 1000 eyes he closely looks on; thou showest him thy face from all sides, Agni”.

Moreover, we should not take the number 1000 literally. In 10-73-3 , Indra is said to have 1000 wolves or hyenas in his mouth.

“Thousand hyenas in thy mouth thou holdest, O Indra , mayst thou turn the Asvins hither”.

In 8-45-26

Indra is said to have 1000 arms.

In battle of a thousand arms Indra drank Kadru’s soma juice;

There he displayed his manly might.

In another hymn Varuna is said to have 1000 eyes.

In the most famous

Purushasukta hymn RV.10-90-1

“A thousand heads, a thousand eyes, a thousand feet;

On every side pervading earth He fills a space ten fingers wide”.

All these hymns show that 1000 means many or several or a lot of.

In Indra’s story also, I guess that he was given the tattoos on his body to show that he is in the register of sex offenders. Indian literature gives details about giving tattoos to criminals. In all the stories of the olden days they say ‘ the person was taken on a donkey after impressing his body with black dots and red dots’. This shows that such a tattooing custom was prevalent in the olden days. Indra might have got such tattoos after the Ahalya incident. At one stage it was removed after Indra apologising publicly in temples.

tags- Indra, thousand eyes, Signs, Rig Veda

LONDON CALLING (HINDUS) 4-10-2021 (Post No.10178)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,178

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

4-10-2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER – PRAYER – Ms.Sobhika Murugesan

Talk on Saundarya lahari of Adi Shankara by Professor S.Padmanabhan, Senior Lecturer, Sanskrit Department, University of Jaffna, Sri Lanka – 25 minutes

(also trustee of two famous temples in Sri Lanka)

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT  AND COMPOSER SRI MUTHUSWAMI DEEKSHITAR-12 mts

Muthuswami Dikshitar Composition – song by Mrs Ranjani Dasarathi, Chennai -7 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

APPR.70 MINUTES

XXXXX

 tags- broadcast4102021

LONDON CALLING (TAMILS) 3-10-2021 (Post No.10,177)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,177

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

3-10-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –  Ms. NANDHINI ARUNRAJ, Madurai

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON  DAKSHINESWAR KALI TEMPLE IN KOLKATA –  10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

Mrs Durga viswanathan 

Mrs Harini Natarajan 

Mrs Srividhya Sriram 

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS

NITHYA SOWMY

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY JEYASHRI

–25 MINUTES

Talk by Thirukkudal Mukuntharajan on Alvar Charithram

–subham–

tags- broadcast3102021

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2 (Post.10,176)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,176

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2 (Post.10,176)

இன்னொரு ‘சுவையான’ விஷயத்தைச் சொல்லிவிட்டு ரிக் வேதம் பற்றிச் சொல்லுகிறேன். எகிப்திய கலாசாரம் பற்றி இருபது முப்பது நூல்கள் என் வீட்டில் (லண்டனில்) இருக்கிறது அதில் THE BOOK OF DEAD ‘தி புக் ஆப் டெட்’ இறந்தோர் பற்றிய புஸ்தகம் வெள்ளைக்காரர்களுக்கு அத்துப்படி. அதில் சொன்ன பல விஷயங்களை இறந்தவர்கள் வீட்டில் வாசிக்கும் கருட புராணத்துடன் ஒப்பிடலாம். இறந்தோர் ஆவி பாதாள உலகத்துக்குச் செல்லுவது, ஒரு ஆற்றைக் கட்டப்பது, முதலிய விஷயங்கள் அதில் வருகின்றன.

திருக்குறளில் பிறவிப் பெருங்கடலை நீந்துவது பற்றி வள்ளுவர் பத்தாவது குறளில் பாடுகிறார். ஆனால் சம்ஸ்கிருதம் முழுவதும் பிறவிப் பெருங்கடலை கப்பலிலோ அல்லது படகிலோ கடப்பது பற்றியே பாடுகின்றனர் ; வள்ளுவன் ‘பக்கா’ நீச்சல் பேர்வழி போலும்!

என் அம்மா இறந்து போன செய்தி, நான் லண்டனில் இருந்தபோது வந்தது. எல்லாக் கிரியைகளையும் வழக்கமான நாட்களில் முடியுங்கள்; நான் மூன்றாவது நாள் கிரியை முதல் கலந்து கொள்கிறேன் என்று டெலிபோனில் சொல்லிவிட்டு, விமானத்தில் பறந்தேன். எனக்காக அங்கேயுள்ள பிராமணர்கள் மூன்று நாள் கிரியைகளை மீண்டும் ஒரு முறை சுருக்கமாக செய்துவைத்தார்கள் . பெரும் வெளிநாட்டுத் தலைவர்கள் டில்லியில் வந்து இறங்கியவுடன் நமது தேசீய கீதத்தை முழு க்கவும் இசைக்காமல் சுருக்கமாக இசைப்பார்கள் ABRIDGED VERSION OF NATIONAL ANTHEM  ; அது போல எனக்கு சுருக்கமான மந்திரம்.

 13 நாள் கிரியைகளில் எந்த நாள் என்று நினைவில்லை. ஈமச் சடங்கு  செய்யும் இடத்தில் ஒருநாள் அந்த புரோகிதர்கள் வாழை இலை , அதன் மட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு சிறிய கப்பலை , படகை செய்து வைத்திருந்தார்கள். துக்கமான ஒரு நிகழ்ச்சியிலும் என ஆர்வமும் ஆராய்ச்சியும் வெளிக்காட்டின .

சுவாமிகளே ! இது என்ன ஈமச் சடங்கில் கப்பல் பொம்மை எதற்காக? என்று கேட்டேன். அம்மாவின் ஆவி நதியைக் கடந்து போக வேண்டும் இல்லையா ? என்றார் புரோகிதர். இப்படி எகிப்திலும் சில விஷயங்கள் வருவது கண்டு வியந்தேன். அதை விட  வியப்பு .ரிக் வேதத்தில் நேற்று அந்த கப்பல் விஷயத்தை படித்தபோது ஏற்பட்டது:-

வேள்விக் கப்பல் உவமை – 10-44-6;

இறந்தவனுக்கான  கப்பல் 10-56-7; 10-58-5

விண்கப்பல் – 10-63-10;

புறநானூறு சொல்லும் வலவன் ஏவா வானவூர்தி PILOTLESS PLANE OR DRONE  ; கண்ணகியை ஏற்றிச் செல்ல கோவலன் கொண்டுவந்த விண்கப்பல் (காண்க- வஞ்சிக் காண்டம் -சிலப்பதிகாரம் ; ALSO வனபர்வம் -மஹாபாரதம் PILOTED SPEACE SHIP )

XXXX

10-59-7; 10-58-5;

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் பிராமணர்கள் ஈமச் சடங்கில் ஓதும் மந்திரங்களில் 3 விஷயங்கள் வருகின்றன.

1.இறந்தவர்களின் ஆவி ஒளி ரூபத்தில் பயணம் செய்வது

2.கப்பலில் சென்று கரைகடப்பது ; சில நேரங்களில் விண்கப்பல்- சில இடங்களில் கடல்- கப்பல்

3.மீண்டும் வருக என்று ஆவியை அழைப்பது (மறு  பிறப்பு)

அர்ஜுனனை மாதலி என்பற பைலட் / PILOT OF SPACE SHIP விண்வெளி விமானி , இந்திரலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் காட்சி மஹாபாரத வன பாவத்தில் வருகிறது. அங்கு ஒளி ரூபத்தில் பலர் உலவுவதைக் கண்டு அர்ஜுனன் ஆச்சர்யத்துடன் வினாத் தொடுக்கிறான்.

அதற்கு அர்ஜுனனுக்கு PILOT OF SPACE SHIP MR MATHARI/ LI ஸ்பேஸ் ஷிப் பைலட் மாதரி பதில் கொடுக்கையில் “இவர்களைத்தான் நீங்கள் பூமியில் நட்சத்திரங்களாகப் பார்க்கிறீர்கள்” என்கிறான். இதை என்னால் விஞ்ஞான பூர்வமாக விளக்க முடியாது. ஆயினும் இந்த பிரபஞ்சத்தில் வாழும் நாம் எல்லோரும் நடசத்திரத் துகல்களில் இருந்து பிறந்ததை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர். (WE ARE ALL STAR DUST)  இதை பி பி.சி ஸ்கை அட் நிகழ்சசியில் பிரிட்டிஷ் ஆஸ்தான விண்வெளி அறிஞர் பாட்ரிக் மோர் (PATRICK MOORE , SKY AT NIGHT, BBC) சொன்னபோது நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அடக்கடவுளே ! இது மஹாபாரத  வன பர்வத்தில் உள்ளதே என்று  (இது பற்றி முன்னரே இங்கு நிறைய எழுதியுள்ளேன் )

XXXX

பிராமணர்  வீட்டில் நடுகல்

எனக்கு மிகவும் சின்ன வயது; அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டது மட்டும் காதில் விழுந்தது; கொஞ்சம் நினைவுக்கு வருகிறது. தாத்தா இறந்து போனார், அவருடைய ஆவிக்கு இருட்டுப் பாதையில் வழி    காட்டுவதற்காக, நாங்கள் பேரப் பிள்ளைகள், நெய் பந்தத்தை ஏந்தி நிற்க, கோவிந்த கோவிந்த என்ற முழ க்கத்துடன் XXXXXX தூக்கினர் (அமங்களச் சொற்களை எழுதக் க கூடாது); சுடுகாட்டுக்கும் அப்பாவுடன்  போனேன்; தகனக் கிரியை முடிந்தது. வயதான தாத்தாதான். அப்படியும் என் அப்பாவின் கண்ணில் சிறு துளிகள் வழிந்தன. அந்த துக்ககதர நிகழ்ச்சியில் அந்த வெட்டியான் சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன.

“சாமி, ஒரு கவலையும் இல்லாமல் போங்க சாமி. நாளைக்கு காலைல வாங்க; மல்லி கைப் பூப் போல சாம்பல் (அஸ்தி) தரேன்”. என்ன தொழில் சுத்தம் பாருங்கள். அவன் தொழில் சடலத்தை எரிப்பது; சாம்பல் தருவது ; அதிலும் அவன் 100 சதவிகித பெர்பெக்ஷன் CENT PERCENT PERFECTION IN HIS JOB பற்றிப் பேசுகிறான் !!

மல்லிகைப்  பூ போல தாத்தா சாம்பல் !!!

சப்ஜெக்டுக்கு வருகிறேன். எங்கள் அம்மாவும் அப்பாவும் பேசியது :

கல்லை எங்கே புதைப்பது?

என்ன கல் ? என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. நாங்கள் வசித்ததோ மதுரை வடக்கு மாசி வீதியில் 20ம் எண் வீடு; பைரவப் பிள்ளைக்குச் சொந்தமானது; நாங்கள் பணக்காரர் அல்ல. வாடகைவீட்டில் எங்கே கல் புதைப்பது? என்று அவர்கள் கவலைப்பட்டது நினைவுக்கு வருகிறது. இதற்கு எப்போது அர்த்தம் புரிந்தது தெரியுமா?

லண்டனிலிருந்து பறந்து சென்று என் அம்மாவின் ஈமக்ரியைகளில் கலந்து கொண்டது பற்றிச் சொன்னேன் அல்லவா? அங்கும் ஒரு கல்லை வைத்து பல நாள் மந்திரங்கள் சொல்லி அந்த சடங்குகள் நடந்த இடத்திலேயே என் அண்ணனை கொண்டு புதைக்கச் சொன்னார் சாஸ்திரிகள் (வீட்டுப் புரோகிதர்); அதுவரை நான் நடுகல் (HERO STONES)  புதைக்கும் வழக்கம் பழந்தமிழர் இடையே மட்டும் இருந்தது என்று எண்ணி இருந்தேன். நடுகல் பற்றி இரண்டு தொல் பொருட் துறை புஸ்தகமும் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த நடுகல் நம் இந்துக்கள் எல்லோருக்கும் பொதுவானது- அதை கிறிஸ்தவர்கள் (EPITAPH IN BURIAL GROUNDS) , முஸ்லீம்களும் பின்பற்றி இறந்தோர் இடத்தில் கல் புதைக்கின்றனர் என்பது இப்போது புரிகிறது..

XXX

ரிக் வேதத்தில் உள்ள குறிப்புகளை மட்டும் காண்போம்:

10-15-3

நான் கருணைமிக்க பிதாக்களை (இறந்து போன முன்னோர்கள்) – அடைந்தேன் . நான் விஷ்ணுவிடமிருந்து புதல்வனையும், வம்ச விருத்தியையும் பெற்றேன்; சோம ரசத்தைக் குடித்து இன்புறும் அவர்கள் இங்கே –  பூமிக்கு– அடிக்கடி வருகிறார்கள்; இந்த தர்ப்பைப் புல்லின் மீது அமர்கிறார்கள்.

திருக்குறள்

10-15-6

இங்கே கால்களை மடித்து தெற்குப் பக்கத்தில்  உட்கார்ந்து கொள்ளுங்கள் இந்த அவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் . பிதாக்களே ; மனிதர்களின் பலவீனம் காரணமாக நாங்கள் ஏதேனும் பிழைகள் செய்திருந்தால் அத்தற்காக எங்களைத் தண்டித்துவிடாதீர்கள் .

இறந்தோர் தென் திசையில் வாழ்வதை வள்ளுவரும் தென்புலத்தார் என்று குறிப்பிடுகிறார்.(குறள் 43)

அவி /ஹவிஸ் HAVIS  என்பதையும் 259, 413 குறள்களில் பயன்படுத்துகிறார்.

ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச்  சொற்களை முதல் 50 குறள்களில் வள்ளுவர் அள்ளித் தெளிக்கிறார். பிற்காலத்தில் சில திராவிடங்கள் உளறிக்கொட்டி கிளறி மூ டும் என்பதை அறிந்து ரிக் வேதச்  சொற்களான ஹவிஸ், தென்புலத்தார், அமிர்தம், தெய்வம்  ஆகியவற்றையும் வள்ளுவர் பயன்படுத்தினார்.

மேற்கூறிய குறிப்புகள் மறு  உலகம் ஒன்று உண்டு, அது தென் திசையில் இருக்கிறது; அங்குள்ள நம் முன்னோர்கள், நாம்  அழைக்கும்போது பூமிக்கு வந்து நெய் கலந்த சோற்று உருண்டை/ ஹவிஸ், எள் , நீர் ஆகியவற்றை ஏற்பது தெரிகிறது. பிராமணர்கள் ஆண்டுக்கு குறைந்தது 24 முறை- அதிகமாக 94 முறை – இப்படி இறந்துபோன முன்னோர்களை வீட்டுக்கு அழைத்து  எள்ளும் நீரும் இறைப்பதைக் காணலாம். (நான் லண்டனிலும் இதைச் செய்கிறேன்; ஹவிஸ் மட்டும் திதி என்று வருடத்துக்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது. முற்காலத்தில் இதை மக்கள் தினமும் செய்தனர் என்பது குறள் 43ல் வரும் பஞ்ச யக்ஞம் மூலம் வெளிப்படுகிறது.

தொடரும்…………………….

tags– புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை ,

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 1 (Post No.10,175)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,175

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 4-10-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

பாரத பூமி இசை பூமி; சங்கீத பூமி: நமது வேதங்களிலேயே இசை பற்றிய விவரங்கள் ஏராளம் உண்டு. சாம வேதம் கூறும் நுட்பங்களை நாம் நன்கு அறிவோம். இந்த இசையை ஓங்கி வளரச் செய்ய மூன்று மூர்த்திகள் பாரதத்தில் சமீப காலத்தில அவதரித்தனர். சங்கீத மும்மூர்த்திகள் என்று உலகம் கொண்டாடும் அவர்கள் தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசாமி தீக்ஷிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆவர்.

இவர்களுள் ராகத்திற்கு தியாகராஜ ஸ்வாமிகளையும்  பாவத்திற்கு முத்துசாமி தீக்ஷிதரையும் தாளத்திற்கு சியாமா சாஸ்திரிகளையும் கூறி சங்கீத உலகம் புகழ்ந்து கொண்டாடும்.

தீக்ஷிதர் அவதரித்த குடும்பம் இசை ஞானத்தில் மேன்மையான ஒரு குடும்பமாகும்.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் வீணை வாசிப்பதில் வல்லுநர். தீக்ஷிதர் உபயோகப்படுத்திய வீணை இன்றும் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு வீட்டில் அழகுறப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல கீர்த்தனைகளில் அவருக்கு விசேஷமாகப் பிடிக்கும் வீணையும் இடம் பெறுவதில் வியப்பில்லை.

இந்தச் சிறிய வீணை மீது சம்ஸ்கிருதத்தில் ராம என்ற எழுத்துக்கள் உள்ளன. இந்த வீணை அவருக்குக் கிடைத்தது பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. அதை இந்த உரையின் பின்னால் காண்போம்.

அவர் ஸ்ரீபுரம் என்றும் ஹ்ருத் கமலாபுரம் என்றும் சிறப்புற அழைக்கப்படும் திருவாரூரில் 1775ஆம் ஆண்டு மன்மத வருடம் பங்குனி மாதம் 24ஆம் நாள் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார். அன்று திருவாரூர் தியாகராஜாவின் வஸந்தோத்ஸவ தினம்! கர்நாடக சங்கீதத்திற்கான க்ஷேத்திரம் என திருவாரூரை சிறப்பித்துக் கூறுவர்.

வடக்கே முகலாயர் ஆட்சி சொல்லொணாத் துன்பத்தை மக்களுக்கு ஏற்படுத்தவே ஏராளமான குடும்பங்கள் புலம் பெயர்ந்து தெற்கு நோக்கி வந்தன. அப்படிப்பட குடும்பங்களில் ஒன்று காஞ்சிபுரத்திற்கு அடுத்த விரிஞ்சிபுரத்திற்கு வந்தது. அங்கிருந்து அது திருவாரூருக்குக் குடியேறியது. அந்தக் குடும்பத்தில் ராமசாமி தீக்ஷிதர் என்ற பெயருடன் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்தக் காலத்தில் முத்து வேங்கடமகி என்பவர் சங்கீதத்தில் மேன்மை பெற்றிருந்தார். அவரிடம் ராமசாமி தீக்ஷிதர் நன்கு பயின்று நல்ல வித்வான் ஆனார். இவரே ஹம்ஸ்த்வனி என்று அனைவராலும் அறியப்படும் ராகத்தை உருவாக்கியவர் ஆவார். வேங்கடகிருஷ்ண என்ற முத்திரையை வைத்து 44 ராகங்களில் அன்னை  மீனாட்சியம்மன் பேரில் ஒரு ராகமாலிகை கீர்த்தனையையும் இவர் செய்துள்ளார்.

ராமஸ்வாமி தீக்ஷிதருக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற மனக்குறை இருந்தது. அவர் வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்கு வாலாம்பிகா, வைத்தீஸ்வரன், முத்துக்குமரன் ஆகிய மும்மூர்த்திகளின் சந்நிதியில் நாற்பது நாள் உபவாசமிருந்து வந்தார். உபவாசம் முடிந்த நாளன்று வாலாம்பிகா அவரது கனவில் தோன்றி முத்துமாலை ஒன்றைக் கொடுத்து விட்டு மறைந்தாள். முத்து முத்தாக முத்துமாலையாய் கீர்த்தனங்கள் தொடுக்கப் போகும் ஒரு குழந்தையை அவருக்குத் தந்து அருள் பாலிப்பதாக அம்பிகை அந்த முத்து மாலை மூலம் தனது சூசகக் குறிப்பைச் சொன்னாள் போலும்! அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு முத்துஸ்வாமி என்ற பெயரைச் சூட்டினார். அதற்குப் பிறகு அவருக்கு  சின்னஸ்வாமி, பாலுஸ்வாமி என்று இருவர் அவருக்குப் பிறந்தனர்.

மணலியிலிருந்து முத்து கிருஷ்ண முதலியார் என்று ஒருவர் ஒருசமயம் திருவாரூருக்குத் தரிசனத்திற்காக வந்தார். அவர் திரும்பும் போது தன்னுடன் ராமஸ்வாமி தீக்ஷிதரின் குடும்பத்தை மணலிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வேங்கட கிருஷ்ண முதலியாராலும் அவரது தம்பி சின்னையா முதலியாராலும் ராமஸ்வாமி குடும்பத்தினர் நன்கு ஆதரிக்கப்பட்டு வந்தனர். சின்னையா முதலியார் மீது தனது நூற்றெட்டு ராகதாள மாலிகையைப் பாடி ராமஸ்வாமி தீக்ஷிதர் கனகாபிஷேகம் பெற்றார் என்ற ஒரு செய்தியும் உண்டு.

#

ஒரு சமயம் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் தம்பியான சின்னஸ்வாமிக்கு கண் பார்வை மங்கிப் போக ராமஸ்வாமி தீக்ஷிதர் திருப்பதி சென்று வேங்கடாஜலபதி முன்பு நின்று வேகவாஹினி ராகத்தில் ஆரம்பித்து நாற்பத்தெட்டு ராகங்கள் பாடி சின்னஸ்வாமிக்குப் பார்வையை மீண்டும் பெற்றார். இப்படிப்பட்ட பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் தீக்ஷிதர் வளர்ந்து வரும் போது ஒரு நாள் சிதம்பரநாத யோகி என்பவர் தீக்ஷிதரைப் பார்த்து அவரைத் தன்னுடன் காசிக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அவரை குருவாகக் கொண்டார் முத்துஸ்வாமி தீக்ஷிதர்.

சிதம்பரநாத யோகியுடன் வாரணாசிக்குச் சென்ற முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவரிடமிருந்து ஸ்ரீ வித்யா உபதேசம் பெற்றார். அத்துடன் யோகா, வேதாந்த சூத்ரங்கள், இசை நுட்பங்கள் ஆகியவற்றையும் சிதம்பரநாத யோகி அவருக்குப் போதித்து வந்தார். ஒரு நாள் அவர் தீக்ஷிதரை கங்கையில் குளிக்குமாறு கூற தீக்ஷிதரும் கங்கையில் மூழ்கினார். அவர் வெளியே வந்த போது கங்கையிலிருந்து அவர் எடுத்து வந்த அழகிய வீணை ஒன்று அவர் கையில் இருந்தது. அதில் இருந்த ராம என்ற அக்ஷரங்களைப் பார்த்த குரு மனம் மிக மகிழ்ந்தார். தீக்ஷிதரை அவர் ஆசீர்வாதம் செய்தார். பின்னர் அவர் கங்கையில் மூழ்கினார். வெளியே வரவில்லை. கங்கையில் அடித்துச் செல்லப்பட்டு கங்கையுடனேயே கலந்தார் அவர்.  

– தொடரும்

tags – முத்துசாமி தீக்ஷிதர்