பேயை விரட்ட ஈயம்! நோயை ஒழிக்க ஈயம்! அதர்வ வேதம் சிபாரிசு! (10,261)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,261

Date uploaded in London – 26 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் மிகப் பழமையானது; யஜுர் வேதம் ,சாம வேதம் அதைத் தொடர்ந்து வந்தன. கடைசியாக அதர்வண வேதம் வந்தது என்பது வெள்ளைக்காரன் கணக்கு. ஆனால் இந்துக்களோ , வேதங்கள் நான்கையும் நமக்கு வகுத்து, தொகுத்துத் தந்தவர் வேத வியாசர் என்பதில் ஒருமித்த கருத்துக்  கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல அந்த வேத வியாஸருக்குப் பின்னர்தான் கலியுகம் உதித்தது என்று சொல்லி பஞ்சாங்கமும் வெளியிட்டு அதில் கி.மு 3102-ல் கலியுகம் தோன்றியதையும் வருஷம் தோறும் எழுதி வருகின்றனர். இதை மாயன்  நாகரீகம், சுமேரிய நாகரீகம், எகிப்திய நாகரீகம் ஆகியனவும் முக்கியமாகக் கருதுகின்றன. மாயா நாகரீக காலண்டரும் அப்போதே துவங்குகிறது. மற்ற இரண்டு  நாகரீகங்களில் முதல் மன்னன் மனு அப்போது ஆண்டதாக எழுதுகின்றன. மனு என்பதைக் கொஞ்சம திரித்து மெனஸ் (Menes)  என்றெல்லாம் எழுதுவார்கள். ஆகவே நான்கு வேதங்களும் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன என்பதுதான் இந்துக்களுடைய கருத்து.

வெள்ளைக்காரர்கள் இந்து மத விரோதிகள்; இந்து மதத்தைப் பின்பற்றாதவர்கள். அதை நம்பாதவர்கள். ஆகையால் அவர்களை ஒதுக்கி விடுவோம்.

சங்க காலம் முதல் தமிழ் இலக்கியம் முழுதும் நான்மறைகள் – ‘4 வேதங்கள்’ – என்றே பகரும்; ஏனெனில் அவை 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுந்த படைப்புகள். அவற்றுக்கும் முந்திய உப நிஷத்துக்கள் புத்தருக்கும் முந்தியவை. அவற்றில் மூன்று வேதங்கள் என்ற சொற் றொடர் பெரும்பாலும் வரும். காரணம் என்னவெனில் யாக யக்ஞங்களில் அதர்வண வேதத்துக்கு அதிகம் வேலை இல்லை. ஆயினும் அதில்தான் ஏராளமான ரகசியங்கள், மருத்துவ விஷயங்ககள் , எதிரிகளை மாய மந்திரத்தால் ஒடுக்கும் விஷயங்கள் உள்ளன. அதுமட்டுமல்ல; ஆன்மீக விஷயங்களைக் கூறும் முண்டக , மாண்டூக்ய உப நிஷதங்களும் அதர்வண வேதகக்காரர்களால் உருவாக்கப்பட்டனவே.

ஈயத்தின் (Lead) மஹத்துவம்

 அதர்வண வேதத்தின் இரண்டு துதிகளில் ஈ யம் பற்றிய அதிசயக் குறிப்புகள் வருகின்றன. அவற்றைச் சொல்லிவிட்டு எனது விமர்சனத்தையும் தருகிறேன்.

xxx

முதல் காண்டம்  16ஆவது துதியின் தலைப்பே ஈயம் (Lead) !

“1.சக்தி வாய்ந்த அக்னீ , ஓங்கி வளர்ந்து அமாவாசையில் யாதுதானர்களையும் எங் களைத் தின்பவர்களையும் அழிக்கிறான் அவன் எங்களுக்கு பாதுகாப்பு தருவான்

2.வருணன் ஈயத்தைப் புகழ்கிறான். அக்கினி அதை பலப்படுத்துகிறான். இந்திரன் எனக்கு ஈயத்தை அளித்தான் ; அது பேய்களை விரட்டும்.

3.இது விஷ்கந்தத்தை ஜெயிக்கும்.; இது பகைவர்களைப் பாழாக்கும் இதைவைத்து நான் பிசாசுகளையும் அவற்றின் இனத்தையும் அழிப்பேன்.”

இங்கே யாதுதானர்கள் என்போர் அரக்கர்கள். அத்தோடு மனிதர்களை உண்ணும் காட்டுமிராண்டிகள். அமாவாசையன்று நள்ளிரவில் வரும் பேய்களைப் பற்றியும் மந்திரம் பேசுகிறது 

சம்ஸ்க்ருதத்தில் ஸீசம் என்று ஈயத் க்கு பெயர். லத்தீன் மொழியில் ப்ளம்பம் Plumbum  என்று பெயர். சம்ஸ்க்ருதத்தில் இருந்து ஈயம் என்ற சொல் வந்திருப்பதை ஒலிக்குறிப்பு மூலம் நாம் அறிய முடிகிறது . ஆங்கிலத்தில் LEAD (லெட்).

இது பற்றி அடிக்குறிப்பு எழுதிய கிரிப்பித் (Ralph T H Griffith)  என்ற வெள்ளைக்காரர் இதை குதிரை லாடத்துடன் (Horse shoe) தொடர்பு படுத்துக்கிறார் . இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில், குறிப்பாக ஐ ரிஸ்காரர்கள் வசிக்கும் வீடுகளின் கதவுகளில் குதிரை லாடம் ஆங்கில எழுத்து U போல மேல் நோக்கி பொருத்தப்பட்டிருக்கும். சில இடங்களில் ஆணி அடித்தும் சில இடங்களில் தொங்கவிட்டும் இருப்பர். இது ஈயமோ  இரும்போ  ஏதோ ஒரு உலகத்தில் இருக்கும் இதற்குப் பேயை விரட்டுமாற்றல் உண்டு; மேலும் சூன்யம், மாயாஜாலம் ஆகியன எவரையும் பாதிக்காமல் தடுக்கும். ஆரோக்கியத்தைத் தரும் என்பது அவர்களுடைய மத நம்பிக்கை . அந்த வகையில் மேற்சொன்ன அதர்வண வேத மந்திரத்துடன் ஒத்துப் போகிறது

விஷக்கந்தை என்பது பற்றி எங்கும் முழுவிளக்கம் இல்லை. ஆனால் இந்த வேதத்தில் பல இடங்களில் வருகிறது. இதன் விளக்கத்தை பார்க்கையில் இது கீல் வாதம், மூட்டு வலி என்று உரைகாரர்கள் கூறுவார்கள்..

இந்திய இலக்கியங்களில் குதிரை லாடம் பற்றிய  மாயாஜால  மந்திர நம்பிக்கை எதுவும் இல்லை.

Xxxx

தமிழ் இலக்கியத்தில் பேய், பிசாசு

கடைசியாக, பிசாசுகள் பற்றிப் பார்ப்போம். பிசாசு, பைசாசம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் கலித்தொகை முதலிய சங்கஇலக்கிய நூலிலும் உளது. பேய் என்பது சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களிலும் வருகிறது இது தவிர பேய் என்பதற்குத் தமிழில் உள்ள அலகை , கூளி , கழுது முதலியனவும் ஆங்கிலம் உளபட பல மொழிகளில் இருக்கிறது. திருக்குறளில் வரும் அலகை – ஒளி மாறும் ஆல்கால்  (Algol- Double Star System) நட்சத்திரம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

XXX

இதோ இன்னும் ஒரு மந்திரம்

12 ஆவது காண்டத்தில் 21-33 (எண் .475) மிருத்யு தேவதைக்கானது . முதல் மந்திரத்தில் ‘இந்த ஈயம் உன்னுடையது வா’ என்று அழைக்கிறார் ரிஷி.

20, 21, 53 மந்திரங்களுக்கு அந்தக் காலத்தில் உரை எழுதியோர் இது தலைவலியை நீக்கும் டி.பி (TB= Tuberculosis) என்னும் காச நோயைப் போக்கும் மந்திரம் என்று எழுதியுள்ளனர்

“ஈயத்திலே மாசைத் துடைத்து விடுங்கள்” என்று மந்திரம் சொல்கிறது (மாசு = அழுக்கு). 53 மந்திரங்கள் உள்ள இந்த துதியில் பொருத்தமில்லாத, தொடர்பில்லாத விஷயங்கள் வருவதாக வெளிநாட்டார் எழுதிகியுள்ளனர்.

xxx

என் கருத்து

பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இதை படிப்பதால் பொருத்தம் இல்லாதது போலத் தோன்றுகிறது

அந்தக் காலத்தில் இதைப் பயன்படுத்தியோருக்கு இதில் சொல்லாமல் விடுபட்ட விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.

U letter in Indus Valley Script

நான் லண்டனில் என் வீட்டிலிருந்து தினமும் ரயிலைப் பிடிக்க, ஸ்டேஷனுக்கு நடக்கும்போது, பல வீடுகளில் ‘u’ வடிவ லாடம் அடித்திருப்பதைப் பார்த்து வியப்பேன் . இப்போதும் லாட நம்பிக்கை இருக்கிறது.

குதிரை லாட தாயத்து அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொணரும் என்றும் நம்புகின்றனர். குதிரை லாயத்திலும் இதைக் கதவில் அடித்து வைத்திருப்பார்கள்.

இறுதியாக ஒரு விஷயம். சிந்து சமவெளி எழுத்துக்களில் ‘U’ வடிவ எழுத்துக்களே அதிகம். அவைகளுக்கும் வெளி நாடுகளில் கதவில் பொருத்தப்படும் குதிரை லாடங்களுக்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் ஆராய்ச்சிக்குரியது

ஆக,  ஈயம் பற்றிய துதியில் நோய் விரட்டலும்,  பேய் விரட்டலும் வருகிறது .

நோய்க்கிருமிகளையே இவர்கள் பேய் பிசாசு என்று சொல்கிறார்களோ என்று நினைக்கிறேன். கிரஹணம் என்பது விண்வெளில் உலவிவரும் சூரியன், சந்திரன்,  பூமி தொடர்பான நிழலே என்று தெரிந்தபோதும் பாமர மக்களுக்காக  சூரியனையோ சந்திரனையோ பாம்பு விழுங்குகிறது என்று சொன்னார்கள். அது போலநோய்க் கிருமிகள் என்று சொல்லாமல் இப்படி பேய் பிசாசு என்று சொல்லியிருக்கலாம். எங்கெல்லாம் பேய், பிசாசு என்ற சொல் வருகிறதோ அங்கெல்லாம் வைரஸ் அல்லது பாக்டீரியா என்ற சொல்லை பிரயோகித்தான் போதும் ! அப் போது நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு பளிச்சென விளங்கும்

–Subham —

tags- குதிரை லாடம், ஈயம், பேய், பிசாசு நோய், விரட்டும்

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் – 1 (Post No.10,260)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,260

Date uploaded in London – 26 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 25-10-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

மாபெரும் தீக்ஷிதர் பரம்பரையில் வந்துதித்த ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்தவரும் சிறந்த சிவ பக்தரும் அற்புதமான பல நூல்களை இயற்றியவரும், திருமலை நாயகரின் அமைச்சராக இருந்து சிறப்புற அவருக்கு ஆலோசனை தந்தவருமான பெரும் மகான் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆவார். இவர் அப்பைய தீக்ஷிதரின் தம்பியான ஆச்சான் தீக்ஷிதரின் பேரனாவார். இவரது தந்தையார் மிக பிரசித்தி பெற்ற அறிஞரும் கவிஞருமான நாராயணத்வாரி ஆவார். நாராயணத்வாரிக்கு ஐந்து மகன்கள்; அவர்களில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் நீலகண்ட தீக்ஷிதர். இளவயதிலேயே பெற்றோரையும் பாட்டனாரையும் இழந்த காரணத்தால் இவரை அப்பைய தீக்ஷிதரே வளர்த்து வந்தார். 1582ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் நீலகண்ட தீக்ஷிதர் அவதரித்தார். திருமலை நாயக்க மன்னர் திருச்சியிலிருந்து மதுரையைத் தன் தலைநகரமாக அமைத்துக் கொண்டது 1640இலிருந்து 1644க்குள் என்று நிர்ணயிக்கப்படுவதால் 1644க்குப் பின்னரே நீலகண்ட தீக்ஷிதர் மறைந்திருக்கக் கூடும் என்பது தெளிவு. ஆகவே, அவர் 62 வயதுக்கு மேல் வாழ்ந்தவர் என்பது பெறப்படுகிறது. அவரது இறுதிக் காலம் பற்றிய தகவல்கள் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

அப்பைய தீக்ஷிதர் தனது கடைசி காலத்தில் சிதம்பரம் சென்று வசித்தார். அப்போது குடும்பத்தில் சொத்து சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போது நீலகண்ட தீக்ஷிதர் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும் அப்பைய தீக்ஷிதரின் அன்பும் ஆசியும் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். 12 வயதான நீலகண்டரின் இந்த உரையைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த அப்பைய தீக்ஷிதர் அவருக்கு தான் பூஜை செய்து வந்த பஞ்சலிங்கங்களையும் தந்ததோடு தன்னிடம் இருந்த தேவி மாஹாத்மியத்தையும் ரகுவம்ச நூலையும் தந்து ஆசீர்வதித்தார்.

கல்வி கேள்விகளில் வல்லவரான நீலகண்டர் அப்பைய தீக்ஷிதரின் மறைவுக்குப் பின்னர் தஞ்சை சென்றார். அங்கு ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரின் மகனான ஸ்ரீ வேங்கடேஸ்வரமகீ என்னும் மகானிடம் சீடனாகச் சேர்ந்தார். பின்னர், கீர்வாணேந்திரர் என்பவரிட்ம ஸ்ரீ வித்யா உபதெசம் பெற்றார்.

இவரது புத்திகூர்மையை அறிந்த மன்னர் திருமலை நாயக்க மன்னர் இவரைத் தனது அமைச்சராக்கிக் கொண்டு அவ்வப்பொழுது ஆலோசனைகள் பெற்றுத் திறம்பட மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டு வந்தார். ஏராளமான அறப்பணிகளை மேற்கொண்டவர் திருமலை நாயக்க மன்னர். அவர் மண்டபம் ஒன்றை நிர்மாணிக்க எண்ணம் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கிழக்கு கோபுரத்திற்கு எதிர்த்தாற் போல அந்த மண்டபத்திற்கான வேலையை ஆரம்பித்தார். 1626ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மணபம் புது மண்டபம் என்று இன்றளவும் அழைக்கப்பட்டு வரும் அற்புதமான மண்டபம். இது 1633ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இத்துடன் இணைந்து மீனாக்ஷி அம்மன் கோவில் திருப்பணியும் சேர்ந்து நடைபெற்றது. இந்த மண்டபத்தை அழகுற அமைத்தவர் சுமந்திர மூர்த்தி ஆசாரி என்னும் சிறந்த சிற்பி ஆவார். இவர் ஏகபாத மூர்த்தியின் சிலை ஒன்றைச் செதுக்கிய கல்தூணை முடித்து அதை நிறுவ ஒரு நல்ல நாளையும் பார்த்து வைத்தார். இந்த சிலை நிறுவுவதற்கு நீலகண்ட தீக்ஷிதர் பெரிதளவும் ஆலோசனை தந்திருந்தார். ஆனால் இந்த சிலை பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனிடமிருந்து உண்டாயினர் என்பதைச் சித்தரிக்கும் மூர்த்தி என்பதால் இந்தத் தூண் நிறுவப்படுவதை வைஷ்ணவர்கள் விரும்பவில்லை. அவர்கள் திருமலை நாயக்கரை அணுகி இது நிறுவப்படக்கூடாதென்று தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தனர். மன்னரோ எப்போதும் நடுநிலை வகிப்பவர். ஆகவே இது பற்றி விசாரிக்க ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். இரு தரப்பினரும் விவாதத்திற்குத் தயாராயினர். ஆறுமாத காலம் இந்த விவாதம் நீடித்தது. சைவர்களுக்கு நீலகண்ட தீக்ஷிதரும் வைணவ்ர்களுக்கு அப்பா தீக்ஷிதர் என்பவரும் தலைமை வகித்து வாதத்தை நடத்தினர். விவாதத்தின் முடிவில் சிவனின் மேன்மை நிறுவப்பட்டது. ஏகபாதமூர்த்தியின் ஸ்தம்பமும் ஸ்தாபிக்கப்பட்டது, இன்றைக்கும் ஏகபாதமூர்த்தியை புதுமண்டபத்தின் வாயிலில் நாம் பார்க்கலாம்.

அந்த மண்டபத்தின் நடு வரிசைத் தூண்களில் மதுரை நாயக்கர்களின் சிலைகள் அமைக்கப்படலாயின. திருமலை நாயக்கருக்கு ஏழு பத்தினிகள். சிற்பி பட்டத்து மகிஷியின் சிலையை வடிக்கும் போது இடது தொடையில் ஒரு சில்லு பெயர்ந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்பி என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நிற்க, அப்போது அங்கு சிற்ப வேலையை மேற்பார்வை இட வந்த நீலகண்ட தீக்ஷிதர் நடந்ததை அறிந்தார். தனது தவ வலிமையால் உண்மையை உணர்ந்த அவர், சிற்பியிடம், “வேறு ஒரு சிலையைச் செய்ய வேண்டாம். எத்தனை முறை செய்தாலும் இது வந்தே தீரும். மஹாராணி உத்தம ஸ்திரீ. ஆகவே அந்த சாமுத்திரிகா லக்ஷண தர்மத்திற்கு ஏற்ப அவருக்கு இடது தொடையில் அந்த இடத்தில் ஒரு மச்சம் இருக்க வேண்டும். அதை உனது சிலை ஈசன் அருளால் பிரதிபலிக்கிறது” என்றார். தூண்களின் வேலையைப் பார்க்க வந்த திருமலை நாயக்கருக்கு ராணியின் சிலையில் உள்ள பின்ன விவரமும் சிற்பியிடம் தீக்ஷிதர் அதை அப்படியே விடுமாறும் கூறியதும் தெரிய வந்தது. இதனால் வருத்தமும் கோபமும் உற்ற மன்னர் மறுநாள் காலை தீக்ஷிதரை உடனே அழைத்து வருமாறு உத்தரவிட்டார். தீக்ஷிதர் பூஜை செய்து கொண்டிருந்த சமயம் படை வீரர்கள் வந்தனர். அவர் தனது தவ வலிமையால் நடந்ததை ஒரு கணத்தில் உணர்ந்தார். அரசன் தன் மீது சந்தேகப்படுவதை அறிந்த அவர் கற்பூர ஆரத்திக் காட்டும் சமயத்தில் அதை தன் கண்களில் வைத்து கண்களின் பார்வையை இழக்கச் செய்தார். வீரர்களிடம் “அரசர் கொடுக்க நினைத்திருந்த தண்டனையைத் தானே தீக்ஷிதர் நிறைவேற்றிக் கொண்டார்” என்று சொல்லுங்கள் என்றார். திகைத்துப் போன வீர்ர்கள் அரசரிடம் நடந்ததைச் சொல்ல திருமலை நாயக்கர் தனது தவறையும் தீக்ஷிதரின் மேன்மையையும் உணர்ந்து அவரைச் சந்திக்க ஓடோடி வந்தார். அவர் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார்.

                               *                    தொடரும்

tags– நீலகண்ட தீக்ஷிதர் – 1, ஏகபாதமூர்த்தி, , திருமலை நாயக்கர்,

LEAD AND HORSESHOE IN ATHARVA VEDA- GHOST BUSTER! (Post No.10,259)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,259

Date uploaded in London – 26 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

It is very interesting to see the belief of the Vedic Hindus on the effects of metal Lead. The word SIISA for lead occurs in many verses of Atharva Veda. It is equally interesting to see the connection between HORSE SHOE lucky charms on doors of many houses in Western countries. Ralph T H Griffith himself highlights this point.

Let us look at Atharva Veda (AV) hymn 16 in the first Canto i.e.  Book 1.

1.May potent Agni who destroys the demons bless and shelter us.

From greedy fiends who rise in troops at night time when the moon is dark.

2.Varuna’s benison has blessed the lead , and Agni strengthens it.

Indra has given me the lead; this verily repels the fiends.

3.This overcomes Vishkandha, this drives the voracious fiends away 

By means of this have I, overthrown all the Pisachi’s demon brood

(fiend- demon; benison- blessing or benediction)

xxx

My comments:-

Here we see ghosts are active on Amavasya (new moon day) nights. But Lead would drive them away!

Griffith himself links it with the horseshoes hung in the doors of several houses. I see them in London houses while I walk to the station/ underground from my house.

xxx

Griffith summarises the commentary from other commentators with his views:

The lead — A piece of this metal employed as a charm against demons and sorcery. See Book 12-2-1, 19, 20, 53

So in England a horse shoe was in former times generally regarded as a protection  against witches and is still sometimes nailed  on or over the door of a house or a stable. Iron in other forms also used was used as a charm for stables .

‘Hang up hooks and shears to scare

hence the hag that rides the mare 

till all they be wet with the mire

and the sweat. This observed, the manes shall be

Of your horses, all knot-free- Herrick’

—–Charms and ceremonies

Vishkandha

From ‘vi’ apart and ‘skandha’ shoulder, drawing asunder or or racking the shoulders; apparently acute rheumatism in the shoulders and neck. Vishkandha is frequently mentioned in the AV, but nowhere clearly defined . the commentator attributes its attacks to the malice of fiends and evil spirits.

The Pisachi’s demon brood – Pisachii is the feminine form of Pisachi (RV 1-133-5) or Pisacha, the name of a  class of fierce  and malignant imps  or goblins Pisach in Hindi and Pisachu in Tamil are in still common use as general terms for goblins or fiends. The feminine in Hindi is Pisachinii.

Xxx

In the 12th Book hymn two has references to lead in mantras 1, 19, 20, 53.

Griffith says

Lead used in incantations as charm to drive away malevolent charms.

My comments

Though metal talismans are known and discovered in so many countries, lead is not linked with demons and diseases. But AV prescribes lead as an anti-dote to demons and diseases. This hymn , is about funeral rites. Westerners struggle to find the full meaning and they escape easily by saying these x, y, z mantras are out of place here!

Pisaasu or Pisachi is a common Sanskrit word and found in the Rig Veda. Until this day it is sued in Tamil. We find it in Sangam Literature book Kalittokai . All Tamil words for ghosts and fiend are also in other languages. Goblin, Ghoul , Algol are in Tamil as Kuuli, Kazuthu, Alagai.

Bhutham and Pisachu are also in Tamil Literature.

I have written  research article to show the connection between the double star system Algol and Alagai in Tirukkural.

I think that anything unseen that affects you mentally or physically is called a demon or devil. For instance, if you include one word in dictionary for all these things either Virus or bacteria, that would bring sense, clear meaning.

Even when they knew that an eclipse is called by the shadow of heavenly bodies and calculated hem precisely for thousands of years, they wrote a snake is devouring either moon or sun for the sake of illiterates. That is Sangam Tamil literature and Sanskrit literature. They were not idiots.

In the same way instead of writing bacteria or virus they simply said that a disease or depression was caused by Pisach or ghost (unseen microscopic organism). And at the same time, they used the concept of Placebo and proper Ayurvedic or Siddha medicines. Rig Veda talks about 107 herbs in one hymn and in other hymns, about herbs, water therapy , un light therapy etc.

Above all, God is called Mr Doctor  and Mr Medicine (Bhishak and Besajam ) only in Hinduism. The origin of Ayurveda is in Rig Veda, the oldest book in the world.

INDUS VALLEY

We have to do more research to see whether this U shape has any connetion to Indus Valley script with numerous U letters.

Xxx subham xxxx

tags – norseshoe, lead, Atharva veda, Ghost buster

PROTEST LETTER TO WOLVERHAMPTON UNIVERSITY (Post No.10,258)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,258

Date uploaded in London – 26 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒல்வர்ஹாம்ப்டன் பல்கலைக் கழகத்திற்கு ஒரு கடிதம்!

ச.நாகராஜன்

கீழ்க்கண்ட கடிதம் என்னால் இன்று ஒல்வர்ஹாம்ப்டன் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கண்டனக் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:  castefree@wlv.ac.uk.

ஹிந்துக்கள் “ரொம்பவும் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ராக்ஷஸர்களை சில சமயம் எதிர்த்துப் போரிடத் தான் வேண்டும் – பல லட்சம் கொலைகளைத் தடுக்க!

“வெற்றியேயன்றி வேறெதும் பெறுகிலேம் “தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; மறுபடி தர்மமே வெல்லும்!

இதோ கடிதம்:-

Request to cancel the proposed online “ Anti-caste Thought : Theory, Politics and Culture Conference by your esteemed University

Dear Madam Meena Dhanda,

Greetings to you.

  1. The proposed two day online conference titled “ Anti-caste Thought : Theory, Politics and Culture” to be held on October 29th and 30th 2021, sponsored by your esteemed institution Wolverhamption University, is highly deplorable and unwanted. The reasons are sited out in this letter. If you are misinformed,  this is right time to take corrective action.

2. I introduce my self as a writer. I have written 5000 articles (4750 in Tamil language and 250 in English) in about 46 magazines for the past 51 years. I have published 27 printed books. My 61 digital books are also well received by the general public throughout the world.

3.The caste difference never existed in India. I have shown this in my articles numbering about 300 with literature evidence/proof, quoting original lines from Sangam Tamil literature till date that there was no such difference at all. The difference was artificially created by Mogul invaders and later by British to have their own advantage and to promote their vested interests.

4. Every religion has got ‘caste’ difference. Chrisitianity which boasts of itself that it has no caste difference, has differences too. The converted Christians are allowed to enter only in some allotted churches and they are prohibited to enter into other churches in the coastal area of Tamilnadu. The converted Christians are having umpteen no of caste differences. They have divisions such as Catholics, Protestants, Fatima etc etc. also. The Islam also has such differences and they have Rauthar, Shia,Sunny, Ahmadia etc.  They can’t enter into other mosques other than the allotted mosques for them. Especially in Islam  no woman is  allowed to enter into the any of the mosque.

Why you have not highlighted the above points in any of the topics, one wonders!

As such, it seems, the conference is targeting only Hinduism and its practices and especially Brahmins.

5. E.V.Ramasamy Naicker (periyar) is 100% Brahmin hatred. He carried his caste name Naicker always with his name Ramasamy . He insisted that 3% of the Brahmins are to be wiped out even if they have to sacrifice 3% non brahmins in this cause so that the remaining 97% non brahmins will survive in this battle. This means that he induced people to kill 3% of Brahmins, physically. He is so inhuman.

He was against India’s Independence and begged British not to leave the country. He was all against the Father of Nation Mahatma Gandhiji. He was so notorious and makes one feel Hitler is good. His 3500 pages writings (lectures and articles) are all available. He has written that Tamil is a Barbaric language. He also propagated that there is no GOD and who worship GOD is a rascal.

E.V.Ramasamy Naicker was against all women. He insisted that the womb of every woman should be cut/removed and they must be allowed to live (to have sex) with all. He also wanted father to marry his own daughter or mother his own son. He married one Maniyammai, a young girl, who was very very younger to him by age. He consulted Rajaji, the veteran freedom fighter of India, as to how a father could marry his daughter!

The proposed conference is projecting E.V.Ramasamy Naicker. And hence the proposed conference must have, we suspect, ulterior motives. The speakers are all, it seems one sided. Why this biased conference? Is it to misuse/use the funds to degrade Hinduism and to spread hatred?

6. The proposed conference will cause your esteemed University an irrepairable damage. So I request you to withdraw your proposal and cancel the forthcoming conference.

If not we will be forced to put E.V.Ramasamy Naicker,Robert De Nobile etc  in their right perspectives quoting  their own writings. So far, people like me, kept quiet, considering that we should not throw stones on mud which will spread hatred against hatred.

But we may have to reconsider our stand because conference like yours may cause millions and millions of people die/suffer as was done by Hitler during 1939-1945.  We will publish their original writings with date and source.

You are welcome to clarify on any of the above points.

Cancelling  the conference will avoid an embarrassment to you because every article will start with your University’s name as the cause of such article/s.

Thanking you and with regards

S. Nagarajan

Bangaluru                                                                        Dated 26-10-2021

 tags- caste conference, Wolverhampton University ,protests

பகவத்கீதை சொற்கள் Index 11 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -11 (Post No.10,257)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,257

Date uploaded in London – 25 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அபி ஜானந்தி 9-24 அறிகிறார்கள்

அபி ஜானாதி  4-14  அறிகிறான்

அபி ஜாயதே 13-1  தோன்றுகிறது, பிறக்கிறது

அபி த: 5-26  இரு வகையிலும், இம்மையிலும், மறுமையிலும்

: இரண்டு புள்ளிகள் விசர்கம் எனப்படும். அதற்கு முந்தைய சப்தத்தை நீட்டிக்கவேண்டும். அபி த: 5-26 என்பதை அபிதஹ என்று உச்சரிக்கவும்).

அபி தாஸ்யதி 18-68 போதிக்கிறானோ

அபி நந்ததி  2-57  மகிழ்தல்

அபி ப்ரவ்ருத்த: 4-20  ஈடுபட்டாலும்

அபி பவதி  1-40 பரவி நிற்கும், சூழ்கிறது

அபி பூய 14-10 அடக்கி

அபி முகா: (அபி முகாஹா ) 11-20

அபி ரக்ஷந்து  1-11 காக்கவேண்டும்

அபி ரத: 18-45 இன்புறுகின்ற

அபி  விஜ்வலந்தி  11-28 எங்கும் ஜொலிக்கின்ற

அபி சந்தாய  17-12 எதிர்பார்த்து, விரும்பி

அபி ஹிதா 2-39  சொல்லப்பட்டது

அப் யதிக: 11-43  உம்மிலும்  மேலானவர்

அப் யர்ச்ய 18-46 அர்ச்சித்து, வழிபட்டு

அப் யநுனாத்யன்(??)  1-19  எதிரொலிக்கிற

அப் யசூயகா: 16-18 அவமதிப்பவர்கள்

அப் யசூயதி 18-67 நிந்திக்கிற, இகழ்கிற

அப் யசூயந்த: 3-32  இகழ் பவர்களாய்

அப்ய ஹன்யந்த: 1-13  முழங்கின

அப்யாஸ யோக யுக்தேன 8-8 இடைவிடாத யோகப்பயிற்சியினால் நிலைப்படுத்தப்பட்டது

அப்யாஸ யோகேன 12-9  பயிற்சி என்னும் யோகத்தால்

அப்யாஸாத் 12-12  அப்பியாசத்தைக் காட்டிலும்

அப்யாஸே 12-10  அப்பியாசத்தில் / பயிற்சியில்

அப்யாஸேன  6-35  பழக்கத்தால் , பயிற்சியால்

அப்யுத்தானம் 4-7  எழுச்சி

அமலான் 14-14  குற்றமற்ற

29 WORDS ARE ADDED FROM BHAGAVAD GITA WORD INDEX IN TAMIL- PART 11

TO BE CONTINUED……………………………………

 tags — gita word index11

கூத்தனூர் ஸ்ரீ  சரஸ்வதி தேவி! (Post No.10,256)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,256

Date uploaded in London – – 25 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 17-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி தேவி!

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள், இங்கு வாராது இடர்!

கவிச் சக்கரவர்த்தி கம்பர் வாழி!


ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது தமிழகத்தில் சரஸ்வதி தேவிக்கென உள்ள ஒரே ஆலயம் அமைந்துள்ள கூத்தனூர் ஆகும். இந்தத் தலம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் ஊரின் அருகில் அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு ஹரிநாதேஸ்வரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளும் அரிசிலாற்றில் பாய்வதாக ஐதீகம்.


இங்கு அருள் பாலித்து வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடையுடன் நான்கு கைகளுடனும் வெண்தாமரை மலரின் மேல் பத்மாஸனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறார். அவர் கையில் வீணை இல்லை. வலது கீழ்க்கையில் சின் முத்திரையும் இடது கீழ் கையில் புஸ்தகமும், வலது மேல் கையில் அக்ஷரமாலையும் இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி கிழக்கு நோக்கி அமர்ந்து ஞான சரஸ்வதி அருள் பாலிக்கிறார்.


இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இடைக்காலச் சோழர்கள் அரசாண்ட காலத்தில் விக்கிரம சோழனுக்கும் அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கும் ஒட்டக்கூத்தர் என்னும் மாபெரும் புலவர் ஆசிரியராக விளங்கினார். இவர் கலைமகளை வழிபட, அவள் தன் தாம்பூலத்தை இவருக்குத் தர பெரும் கவிஞராகிப் பெயர் பெற்றார் இவர். இவர் மூன்று உலாக்கள், இரண்டு பரணிகள், ஒரு பிள்ளைத் தமிழ், இராமாயணத்தில் உத்தரகாண்டம் உள்ளிட்ட ஏராளமான அரும் நூல்களை இயற்றியுள்ளார். இவர் மூன்று தலைமுறைகள் வாழ்ந்து நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என வரலாறு கூறுகிறது. இவர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் காலத்தவரும் கூட!

சைவ சமயத்தவரான இவருக்கு நடராஜப் பெருமானாகிய சிதம்பரக் கூத்தரின் பெயரையொட்டி, கூத்தர் என்ற பெயர் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது. இன்னொரு செய்தியின் படி ஒரு சமயம் விக்கிரம சோழனின் விருப்பப்படி நயம் பொருந்திய கண்ணியை ஒட்டி, ஒரு வெண்பா பாட, அதனால் மகிழ்ந்த விக்கிரமன் இவரை ஒட்டக்கூத்தர் என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு செய்தியின் படி இவர் ‘ஈட்டி எழுபது’ என்ற பாடல்களின் மூலம் வெட்டுண்ட தலைகளை முண்டங்களுடன் ஒட்டச் செய்ததால் இவருக்கு அப்பெயர் எற்பட்டது எனத் தெரிய வருகிறது.


இப்படி கவித்வம் பெற்றதற்கான காரணம் இவர் இங்கு வழிபட்ட ஞான சரஸ்வதியின் அருளே ஆகும். தீயவர்களிடம் அகப்பட்ட ஒட்டக்கூத்தரை பரணி பாட வைத்து தன்னைத் தப்பிக்க வைத்த தேவியை ஒட்டக்கூத்தர் ‘ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே’ என்று போற்றிப் புகழ்ந்து துதித்தார். சோழ மன்னன் தானமாக அளித்த இடத்தில், இவரே, தன் வழிபடு தெய்வமாகிய கலைமகளுக்கு இந்தக் கோவிலை அமைத்தார்.இந்த ஊரிலேயே பல ஆண்டுகள் அவர் வாழ்ந்தார். ஆகவே இந்த ஊர் கூத்தனூர் என்ற பெயரைப் பெற்றது.

இந்தக் கோவிலில் ஒட்டக்கூத்தருக்கு ஒரு சிலையும் இருக்கிறது. இந்த சரஸ்வதி தேவியே கம்பனுக்காக கிழங்கு விற்றதாகவும் மோர் விற்றதாகவும் வரலாறு உண்டு. இன்னொரு சுவையான வரலாறும் உண்டு. கும்பகோணத்தைச் சேர்ந்த சாரங்கபாணி தீக்ஷிதர் என்பவரின் புதல்வரான புருஷோத்தமனுக்குப் பேசும் திறன் வரவில்லை. அவன் இங்கு வந்து சரஸ்வதியை வழிபட தேவியானவள் தாம்பூலத்தைத் தன் வாயில் தரித்து அவனுக்குத் தந்தாள். சரஸ்வதி அருளால் விஜயதசமி முதல் பேசத் தொடங்கிய அவர் புருஷோத்தம பாரதி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

முன்புறத்தில் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது இந்தக் கோயில். கோபுரத்தில் ஐந்து கலசங்கள் உண்டு. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. நவராத்திரி நாட்களில் சிறப்பான விழா நடைபெற, இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து குழுமுகின்றனர். கல்வி அறிவைப் பெற இதுவே சிறந்த இடம் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வித்யாரம்பத்திற்கும் மற்ற நாட்களிலும் அழைத்து வந்து புத்தகம் பேனா உள்ளிட்டவற்றை கர்பக்ருஹத்தில் வைத்து சரஸ்வதியின் அருளைப் பெறுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. அத்துடன் இத்தலத்தில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோமீட்டர் நீளமுள்ள அரசலாற்றுக் கரையில் தர்ப்பணம் முதலான பித்ரு கர்மங்கள் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அவரவர் பாபங்களிலிருந்து விடுபட திரிவேணி சங்கம நீராடலுக்கும், கணவன் மனைவி பிரிவிலிருந்து மீள்வதற்குமான பிராத்தனைத் தலமாகவும் இது ஆகிறது. காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஞான் சரஸ்வதி தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அருள் வாக்கு இது :

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடி கமழ் பூந்தாமரை போல் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி?!
நன்றி வணக்கம்!


tags — கூத்தனூர் ,ஸசரஸ்வதி தேவி, ஆலயம் ,அறிவோம்

LONDON CALLING GNANAMAYAM 25-10-2021 (Post No.10,255)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,255

Date uploaded in London – 25 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

25 -10– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER –  MISS RAJA PRAGATHI

SPECIAL TALK-

SPECIAL TALK- TAMIL WRITER Mr. P A KRISHNAN’S VIEWS ON SEMINAR ABOUT CASTE IN WOLVERHAMPTON UNIVERSITY, UK -20 MTS

&

SPECIAL TALK

Mr.BALAJI RAJU, TRUSTEE, GNANALAYAM,PONDICHERY

INTRODUCES GNANALAYAM IN PONDICHERY AND THEIR SERVICE-20 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT NEELAKANTA DIKSHITAR-15MTS

 -12 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 10 MTS

APPR. 70 MINUTES

XXXXX

tags- broadcast251021

LONDON CALLING THAMIL MUZAKKAM 24-10-2021 (Post No.10,254)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,254

Date uploaded in London – 25 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

24-10-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –  MRS NITHYA SOWMY

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   MYLAPORE KAPALEESWARAR TEMPLE 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND MISS DIKSHA Mrs CHITRA MURALI–  10 mts

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES

Talk by Thirukkudal Mukuntharajan on Alvar Charithram

APPR. 60 MINUTES

Tags – broadcast241021

PLEASE JOIN US TODAY MONDAY 25-10-2021

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

25-10-2021 MONDAY PROGRAMME

25 -10– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER – 

SPECIAL TALK-

SPECIAL TALK- TAMIL WRITER Mr. P A KRISHNAN’S VIEWS ON SEMINAR ABOUT CASTE IN WOLVERHAMPTON UNIVERSITY, UK -20 MTS

&

SPECIAL TALK

Mr.DHANANJAYAN RAJAMANI, GNANALAYAM,PONDICHERY

INTRODUCES GNANALAYAM IN PONDICHERY AND THEIR SERVICE-20 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT NEELAKANTA DIKSHITAR-15MTS

 -12 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 10MTS

APPR. 70 MINUTES

XXXXX SUBHAM XXXX

TAGS- Publicity251021

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! (Post No.10,253)

WRITTEN BY B KANNAN

Post No. 10,253

Date uploaded in London – 25 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


தமிழா கவனி, தமிழகம் ஒப்பற்றது!                                                                                           பா.கண்ணன், தில்லி

அன்பார்ந்த ஞானமயம் தமிழ் நெஞ்சங்களுக்குத் தில்லியிலிருந்து கண்ணன் வணக்கம் பல.

தமிழ் மொழி மீது இணையிலாப் பற்று கொண்ட நம் “முண்டாசுக் கவிஞர்” பாரதியாரின் நினைவு நூற்றாண்டைப் போற்றும் வகையில் இக் கட்டுரையை எழுத முனைகிறேன்..


சமீபத்தில் செந்தமிழ்ச் செல்வர் திரு. பெரியசாமித் தூரன், பாரதியின் எண்ணங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள் ஆகியவற்றைத் தொகுத்தளித்துள்ள இரு புத்தகங்களில் ஒன்றான “பாரதியும் தமிழகமும்” என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. மற்றொன்று “பாரதியும் உலகமும்” என்பது. அதிலுள்ள ஒரு அத்தியாயம் ” தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்” என்பதாகும். சுவாரசியமிக்க அதன் சாராம்சத்தையே இங்குத் தரவிருக்கிறேன்.

தூரன் அவர்கள் இந்நூலில் பாரதியார் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆற்றிய இணையற்ற சேவையை எடுத்துக்காட்ட முனைந்துள்ளார். தாழ்வு உணர்ச்சியில் மூழ்கி, வீழ்ந்துக் கிடந்த தமிழர்களை, அவர்களின் பெருமையை உணர்ந்து வீறுகொண்டு எழுவதற்கு பாரதி ஓங்கி குரல் கொடுத்தது நன்றாகப் புலப்படுகிறது. அதனால் அல்லவோ தமிழர்கள்


தங்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்தெழுந்து முழு வீச்சில் விடுதலை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

தமிழர் கும்பகர்ணனைப் போல் தூங்கிக் கொண்டிருந்தனர். கையாலாகாத்தனமும், வருமுன் காப்பது எப்படி என்றுத் தெரியாமலும், வருவதைச் சமாளிப்பது எப்படி எனச் சோர்வுற்று, குனிந்த தலை நிமிராமல் உறங்கிக் கொண்டிருந்தனர். தமிழகத்தின் அருமைப் பெருமைகளை உணராதது போல், தமிழ் மொழியின் உயர்வையும் அறிந்துக் கொள்ளவில்லை. அந்நிய
மொழியின் ஆதிக்கத்தில் மகுடி நாதத்துக்குக் கட்டுண்டிருக்கும் நாகம் போல் கிடந்தனர். அன்றாட நடை, உடை பாவனை, பழக்க வழக்கங்களில் ஆங்கில மோகம் இழையோடிற்று. அவர்களை எப்படி எழுப்புவது, தமிழ் எங்கே? என்று அங்கலாய்ந்துப் போகிறார் கவிஞர்.

இப்படிப்பட்டச் சூழ்நிலையில் ஆங்கில மோகத்தில் உழன்று அதற்கேற்ப பி.ஏ.படித்துத் தேர்ச்சிப் பெற்ற ஓர் இளைஞனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் பாரதி. அவனுக்கும், அவன் சந்திக்கும் ஒரு புலவனுக்கும் இடையேநடக்கும் வாதப் பிரதிவாதம் நம்மைச் சிந்திக்கவும், செயலாற்றவும் வைக்கிறது. தன்னையே அந்தப் புலவனாக உருவகப் படுத்திக் கொள்கிறார் பாரதி….
உரையாடல் இப்படி ஆரம்பமாகி முன்னேறுகிறது…..
 
இளைஞன் : ஐயா, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத மொழி உண்டென்றால் அது தமிழ் தான்! அது அழிந்தால்தான் நம் நாடு பிழைக்கும்
 
புலவர்: அப்பனே, தமிழின் மேல் உனக்கு ஏன் அப்படியோர் வன்மம், வெறுப்பு? அது என்ன செய்தது?
 
“நவீன நாகரிகத்தின் போக்கைப் பற்றி உமக்குத் தெரியாது போலிருக்கிறது, பாவம் அய்யா, நீங்கள்!. பரிணாம வளர்ச்சியில் காட்டு மனிதன்  உபயோகித்தக் காட்டுமிராண்டி பாஷை தமிழ். இப்போதோ உலகம் விஞ்ஞான ஆராய்ச்சியால் பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அத்தகைய அரிய உத்திகளை உமது பண்டைக்காலத்துத் தமிழிலே கொண்டு நுழைப்பதுப் பிரம்மப் பிரயத்தனமாய் இருக்கிறது. ‘நாம்’ நாகரிகப் பாதையில் பயணிக்க வேண்டுமானால் தமிழ் மொழியை முழுவதும் கைவிட வேண்டியது மிகமிக அவசியம்”.

“ஆமாம், ‘நாம்’ என்று யாரைச் சேர்த்துச் சொல்கிறாய்? உன்னைப் பார்த்தால் தான் ‘அப்பாவி’ போல் தோன்றுகிறது! ஏதோ எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்த மேதாவி என்ற எண்ணத்தில் மிதக்கிறாய் போலிருக்கிறது. உன்னைப் போன்று ஆங்கிலம் படிக்காத ஜனங்கள் உள்ளூர் மொழியானத் தமிழில் தானே பேச முடியும். காலங்காலமாய் அவர்கள் பேசி வரும் தமிழ் பாஷை அவர்களின் உயிருடன் ஒன்றிவிட்டது. மனிதர்களின் அறிவு வளர்ச்சிக்கு பாஷை என்பது ஒரு கைக்கண்ணாடி போன்றது. நாட்டு மக்களின் அறிவுத் திறன் உயர அதற்குத் தகுந்தாற்போல் அந்நாட்டின் மொழியும் தேர்ச்சிப் பெறுகிறது. அந்நிய ஆதிக்கத்தினால் சுணங்கிப் போயிருக்கும் தமிழர்களால் வேற்றுத் தேசத்தவர்களுக்கு இணையாக முன்னேற முடியவில்லை என்பது உண்மை தான். அதற்குப் பாஷையை மட்டுமே குற்றம் காண்பது எவ்விதத்தில் நியாயம்? ‘ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல் என்றாளாம்’ என்பது போலல்லவோ கதைக்கிறாய்!”

“ஐயா, சாமி! போகாத ஊருக்கு ஏன் வழி தேடிக் கொண்டிருக்கிறீர்? விஷயத்துக்கு, வாரும்! ஐரோப்பிய விஞ்ஞானிகள் மனிதகுலத்துக்குத் தேவைப்படும் பற்பல புது இயந்திரங்களையும், புதியக் கருத்துக்களையும் கண்டுப்பிடித்துக் கொண்டி ருக்கிறார்கள். அதுக்கெல்லாம் தமிழில் பெயரும் கிடையாது ஒரு மண்ணும் இல்லை! என்ன அவலம்! இதற்கு என்ன சொல்கிறீர், மகானுபாவரே?”

“ஆகா, சாதுரியமாகப் பேசுவதாக நினைப்போ? நீ சொல்லும் கருத்துக்கள் எல்லாம் மக்களிடையே அறிமுகமாகி, வழக்கத்தில் வந்த பிறகல்லவா தமிழில் இடம் பெறும்? அந்நிய ஆதிக்கத்தில் நம்மவற்குப் படிப்பறிவு கிடைப்பதே குதிரைக் கொம்பாய் இருக்கிறதே! அறிவு சுருங்கிப் போயிருக்கிறார்கள். ஆனாலும்,தந்தி மூலம் அனுப்பும் செய்திகளுக்கு வார்த்தைகளை அமைத்துக் கொள்ளவில்லையா? ஆடை அணியாத அநாகரீக மக்களின் பாஷையில் பட்டுத்துணிக்குப் பெயர் இல்லை யென்றால் அவர்களின் மொழியைக் குற்றம் சொல்ல முடியுமா? அதற்குக் காலம் பிடிக்கும். கண்களில் கோளாறு என்றால்
மருந்தினால் சரி செய்துக் கொள்ளாமல் அதற்குப் பதில் ஓர் அயல்நாட்டுக் கண்ணைப் பொருத்திக்கொள்வேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?”

“ஐயா, நிறுத்தும்! ஏன் இப்படிக் கதை அளக்கிறீர்? தமிழ் பாஷைக்கு இயற்கையிலேயே நவீன விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதே உண்மை. விஞ்ஞானம் எதற்கு, கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள். பிரபல கவிகள் பிரபு டென்னிசன், மில்டன் எங்கே, ஆங்கிலப் புலமையற்ற உங்கள் தமிழ்ப் புலவர்கள் எங்கே,ஒப்பிடவே முடியாதே?” பாவம், அவனுக்கு எங்கே தெரியும், அந்தப் புலவருக்கும் ஆங்கிலக் கவிஞன் பி.சி.ஷெல்லிக்கும் இடையேயுள்ள கவிதை ரசனை?



இப்போது நிஜமாகவே புலவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விட்டது. “அப்பனே! ஏன் இப்படி ஒரு புரிதலுமின்றி உளறுகிறாய்? தற்போதையச் சூழ்நிலையில் நம் மக்களின் உடல், மனம் எல்லாம் துவண்டுப் போய்க் கிடக்கிறது. மரம் ஒன்றில் பற்றியுள்ள நோயைத் தீர்த்தப் பிறகுதானே அதன் பழம் ருசிக்கச் செய்யும்? முதலில் அதைச் செய்ய வேண்டும். தமிழ்ப் புலவர்களான இளங்கோ அடிகள், கம்பர், திருத்தக்க தேவர் ஆகியோரது அருமையானப் பாடல்களைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்க ஞாயமே இல்லையே!”

“சும்மா தமிழ், தமிழ் என்று இந்தப் ‘பெனிடிக்டரி வெர்ஸ்’ எல்லாம் என்னிடம் பாடிக் காட்டாதீர்கள். கம்பன்,டம்பன் எல்லாம் கொஞ்சம் காலேஜில் படித்திருக்கிறேன் நானும்!”

“அவர்கள் சொல்லிக் கொடுத்து, நீ அறிந்துக் கொண்டதைத் தான் கண்கூடாகப் பார்க்கிறேனே! அதனால் தான் உனக்குத் தமிழ், தமிழ் பேசும் மக்கள் மீது இப்படியொரு காட்டம்! நீ போற்றும் ஆங்கிலக் கவிஞர்களுள் அலெக்சாண்டர் போப் மற்றும் பல வித்துவான்கள் தமிழ்ப் புலவர்களின் கவித் திறமைகளைப் பற்றி வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள் என்பதாவது தெரியுமா?”

இந்தப் பித்தனிடம் வாய் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்று இளைஞன் நினைத்துவிட்டான், போலும். மௌனியாகி விட்டான். அதற்காகப் புலவரும் ஓயவில்லை.

“கம்பனைப் பற்றிப் படித்திருக்கிறேன் என்கிறாயே, கம்பராமாயணத்தின் மகிமையை அறிவாயோ? சொல்கிறேன், கேள்… சீதா தேவி அசோகவனத்தில் வைக்கப் பட்டிருந்த சமயம், ராமபிரானைப் பற்றியபழைய நினைவுகளில் மூழ்கி வருத்தப்படுவதாகச் சில பாடல்களைக் கம்பர் இயற்றியிருக்கிறார். அவற்றுள் ஒன்றை விளக்கிக் கூறுகிறேன், கேள். அரியாசனம் ஏறி, ராஜ்ஜியப் பாரத்தை ஏற்றுக் கொள் என்று கட்டளை இடப்பட்டச் சமயத்திலும், அயோத்தியை விட்டு காட்டுக்குச் செல் என்றுச் சொல்லப்பட்ட போதும், ஒரே மாதிரி மலர்ந்த முகத்துடன் விளங்கினான் என்பதை ஜானகி நினைத்துப் பார்க்கிறாளாம்.

அந்தப் பாடல் இதோ….
 மெய்த் திருப்பதம் மேவு’ என்ற போதினும்,
 ‘இந்திருத் துறந்து ஏகு’ என்ற போதினும்,
 சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
 ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். 20  (சுந்தர காண்டம். காட்சிப் படலம்)

அப்பனே! இதில் ஓசை, சொல் நயம், பொருள் இன்பம் எல்லாம் பொதிந்திருப்பதைக் காணலாம். இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இதுபோல் இன்னும் பல பாடல்கள் நூல் பூராவும் விரவிக் கிடக்கின்றன. மேலும் ஒன்று, கேளப்பா! ( இது அந்தப் புலவன் குறிப்பிடாததுதான். இருந்தாலும் அந்த இளைஞனுக்கு உறைக்கும் “வண்ணம்” மறைமுகமாகச் சொல்லியிருக்கலாம் எனும் அனுமானத்தில் இந்த இடைச் செருகலை நேயர்களின் ரசனைக்காக முன் வைக்கிறேன்).

கவி புனையும் கம்பரிடம் தமிழ்ச் சொற்கள் ஓடி வந்து எம்மையும் கவிதையில் சேர்த்து விடு, சேர்த்து விடு என்று கெஞ்சுமாம். இவ்வாறு ஒரு நாட்டுப்புற வழக்கு உண்டு. கம்பரின் கவிதையில் சொற்சேர்க்கை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இடத்திற்கும், சூழலுக்கும், காலத்திற்கும் தக்கவாறு சொற்கள் கவிதையில் அமைந்த விதம் படித்து இன்பம் அடைவதற்கு உரியது, நண்பரே!

கம்பர் வண்ணம் என்ற சொல்லை வேறுவேறு பொருள்களில் கையாண்டு ஒரு கவிதையைப் புனைந்துள்ளார். இச்சொல்லை வைத்தே பாதி இராமாயணக் கதையைக் கூறி முடித்து விடுவதாக அறிஞர்கள் கூறுவர்.   அப்பாடல் வருமாறு:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
     இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
     துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
     மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
     கால்வண்ணம் இங்குக் கண்டேன்

(கம்ப. பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

(இவ்வண்ணம் = இப்படி; நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்தபடி; உய்வண்ணம் = நற்கதி பெறும் வழி; துயர்வண்ணம் = துன்பம்; மைவண்ணம் = கருநிறம்; மழைவண்ணம் = மேக நிறத்தை ஒத்த கரிய நிறம்; கைவண்ணம் =கையின் திறமை; கால் வண்ணம் = காலின் திறம்)

இராமனுடைய திருவடி பட்ட அளவில் கல்லாகக் கிடந்த அகலிகை உயிர் பெற்ற பெண்ணாக மாறுகிறாள்; சாப விமோசனம் பெறுகிறாள். அதனைக் கண்ட விசுவாமித்திர முனிவர் இராமனைப் புகழ்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. “கரிய நிறத்தை உடைய இராமனே! இனி இந்த உலகிற்குத் துன்பம் உண்டோ? நின் வில் ஆற்றலால் தாடகை என்ற அரக்கி மாண்டாள். உன் கைத்திறமையை அங்குப் பார்த்தோம். உன் பாதம் பட்டவுடன் அகலிகை உயிர் பெற்று எழுந்தாள். உன் காலின் திறமையை இங்குப் பார்த்தோம்” என்று விசுவாமித்திரர் இராமனைப் புகழும் பாடலில் வண்ணம் என்ற ஒரு சொல் நிறம், திறம்  (திறமை)
என்னும் இரு பொருளில் திரும்பத் திரும்ப வந்து கவிதையைச் சிறப்படையச் செய்துள்ளதைப் படித்து மகிழலாம். கம்பரின் வர்ணனையைப் படிக்கையில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் உனக்கு ஞாபகம் வரவில்லை என்பது துரதிருஷ்ட வசமானது!

சாப்பிட்ட ஓரு மாம்பழம் அழுகிய நிலையில் இருந்தால் அவ்வகை மாங்கனியே உண்ண அருகதை அற்றது என ஒதுக்கிவிடுவாயோ? தமிழ் பாஷையும், தமிழ் மக்களும் தாழ்மையுற்றிருக்கும் நிலை அறிந்தும் ஒரு மொழியையே குற்றம் கூறுவது எவ்விதத்தில் நியாயம்? கோபாலகிருஷ்ண கோகலே, பால கங்காதர திலகர் ஆகியோரின் வழிகாட்டுதலில் நம் பாரத தேசம் அந்நியரின் பிடியிலிருந்துச் சுதந்திரம் பெற்று, அனைத்துச் செல்வங்களையும் அடைந்த பிறகு, நம் தமிழ் மொழிக்கு கிடைக்கும் மேன்மையைப் பார்க்கத்தான் போகிறாய். அப்போது ஆச்சரியப்பட்டுப் போவாய் என்பது சர்வ நிச்சயம்!” என்று மடைதிறந்த வெள்ளம் போல் சீறிப் பாய்ந்தார்.

அதுதான் எத்தனை நிதர்சனமான உண்மை! அதைத்தான் கண்கூடாகப் பார்க்கிறோமே!

அந்தப் புலவர் உரைத்த அறிவுரையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் வீண்தானோ? ஆங்கில மோகம் பீடிக்கப்பட்ட இளைஞனோ எதற்கும் கவலைப்படாமல்,’இழந்த சொர்க்கம்’, ‘மீண்ட சொர்க்கம்’ கனவுகளில் ஆழ்ந்து தனி ஆளாக மனதில் ஆங்கிலக் கவிதைகளை அறுவடை (THE SOLITARY REAPER) செய்து கொண்டிருந்தான் !

 “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
 இனிதாவ தெங்கும் காணோம்
 யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
 வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்
 பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
 உண்மை ஒன்றும் புகழ்ச்சியில்லை!” என்ற பாரதியின் முழக்கம் நம் காதுகளில் ரீங்காரமிட்ட வண்ணம் உள்ளது!

 தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!

 ஓம் பராசக்தி!   ஜெய்ஹிந்த்!

tags – தமிழன் , சொல்லடா, தலை, தமிழா கவனி