ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று. இது பல மஹரிஷிகள் போற்றிய சாஸ்திரமும் கூட.
கிருஷ்ணனுக்கும் சிசுபாலனுக்கும் யுத்தம் ஆரம்பிக்கும்போது பல நிமித்தங்கள் ஏற்பட்டன.
அப்போது யுதிஷ்டிரர் பல உற்பாதங்களையும் அபசகுனங்களையும் கண்டார். இவற்றைப் பற்றி அவர் நாரத முனிவரிடம் கேட்க நாரதர் அளித்த பதிலை ஸபா பர்வம் அறுபத்தொன்பதாவது அத்தியாயத்தில் காணலாம்.
இது ஜோதிட சாஸ்திரம் பற்றியும் துர்நிமித்தங்கள் பற்றியும் நாரதர் கூறிய பகுதியாகும். நாரதர் மரங்களை வெட்டக் கூடாது என்பது பற்றிக் கூறுவது குறிப்பிடத்தகுந்தது. சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நாம் பாதித்தால் அது நம்மை வெகுவாக பாதிக்கும் என்பதை நாரதர் தெளிவாக விளக்குகிறார்.
மஹரிஷி நாரதர் கூறுவதன் ஒரு பகுதியை இங்கு பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரம் கற்றுணர்ந்தவன் கிரகங்களின் வலிமையையும் செல்லும் வழியையும், சேருதலையும், உச்சத்தையும், ஆரோஹணத்தையும் – அதாவது அபிவிருத்தியையும் – ஒன்றையொன்று எதிர்த்துச் செல்வதையும், கிரணங்கள் சேருவதையும், முயற்சியோடிருப்பதையும், நிலைகுலைதலையும், காணக்கூடிய கிரஹங்கள் காணப்படாதிருத்தலையும், காணக்கூடாத கிரகங்கள் காணப்படுதலையும், நீசம் அடைதலையும், ஏற்றக்குறைவுகளையும், நிறத்தையும், இடத்தையும், பலாபலன்களையும், முழுவதுமாக பரீக்ஷிக்க வேண்டும்.
இவ்வுலகில் தெய்வீகமாக உண்டாக்கப்பட்ட உற்பாதங்கள், பூமியைச் சார்ந்தவை முதலிலும், ஆகாயத்தைச் சார்ந்தவை பிறகும் உண்டாகின்றன. சூரியன் மேற்குத் திசையில் இருக்கும் போது எல்லாப் பொருள்களின் நிழலும் கிழக்கே திரும்பாமல் இருந்தால் அது தோல்விக்கு ஒரு அடையாளமாகும்.
எப்போது கிராமங்களிலுள்ள தலைமையான மரங்களின் நிழல் (வெயில் இல்லாமல் இருக்கும் போது) பிரதிபிம்பம் போலத் தெளிவாகக் காணப்படுகிறதோ அப்போது பெரிய அச்சத்தை அறிய வேண்டும்.
கிராமங்களின் தலைமையான மரங்கள் இலைகள் உதிர்ந்தும், இலைகளும் தளிர்களும் (அகாலத்தில்) உதிர்ந்தும் துளிர்கள் கெட்டும் போமாயின் அப்போது நாசத்தைச் சொல்ல வேண்டும்.
கிராம விருக்ஷங்கள் செழித்த இலைகளும் தளிர்களுமுள்ளவையாகவும், விருத்தி அடைகின்றவையாகவும் காணப்படுமாயின் அப்போது க்ஷேமத்திற்குச் சந்தேகமே இல்லை.
பூவின் மேல் பூவும், காயின் மேல் காயும் சேர்ந்து உண்டாகுமாயின் அப்போது ராஜாவாயினும் ராஜாவைப் போன்றவனாயினும் மரணமடைவான்.
கார் காலம், சரத் காலம், பனிக் காலம், வஸந்த காலம் ஆகிய எல்லாக் காலங்களிலும் அவ்வக்காலத்திற்குரியவை அல்லாத மலர்களும் கனிகளும் உண்டாகுமாயின் தேசத்தில் கலக்கத்தை உரைக்க வேண்டும்.
சிலாக்கியமான மரமானது பூஜிக்கப் பெற்றதாயினும், பெறாததாயினும் காற்றினால் முறிக்கவாவது அல்லது பெயர்க்கவாவது அல்லது சாய்க்கவாவது படுமாயின் அக்னி பயத்தையாவது, வாயு பயத்தையாவது அறிய வேண்டும்; சிறந்த மனிதனாவது அழிந்து போவான். திசைகள் எல்லாம் எரியுமாயின் ராஜாக்களுக்கு மாறுதல்கள் உண்டாகும்.
வெட்டித் தள்ளப்பட்ட மரம் சப்தம் செய்யுமாயின் அதனுடன் கூட அந்த ராஜ்யமே விழுந்து போகும். ஆதலால், மரத்தை வீழ்த்தல் கூடாது.
மரத்தை ஒருவன் வெட்டுவிப்பானாயின் அந்த மரம் அவன் மேல் அதற்காகக் கோபிக்கும். வெட்டினவனும், பெயர்த்தவனும், அம்மரத்திற்கு உடையவனும் உடனே அழிவர்.
தேவதா விக்கிரஹங்கள் விழுவதும், மண்டபங்கள் இடிவதும், மலைகள் அசைவதும் தோல்விக்கான அறிகுறிகள்.
இரவில் வானவில்லைக் கண்டாலும் அதனால் பெரும்பயம் உண்டு. ஆனால், அதைக் கண்டவனுக்கு மட்டுமே பயம் உண்டாகுமே தவிர மற்றவருக்கு இராது. இரவில் வானவில்லைக் கண்டவன் உடனே அந்த தேசத்தை விட்டு அகல வேண்டும்.
எங்கே தேவதா விக்ரஹங்கள் ஆடவும், கூவவும், நகைக்கவும், கண் திறக்கவும், மூடவும் செய்கின்றனவோ அந்த தேசத்தில் கலக்கத்தைச் சொல்ல வேண்டும்.
கற்களிலிருந்து நீர்க்கசிவுகளும் மற்ற எவ்வகையான மாறுதல்களும் உண்டாகுமாயின் அவை பயத்திற்கான அடையாளங்கள்; பெரிய மனிதர்களாயினும், பரிஜனங்களோடு கூடிய அரசனாயினும் இறந்து போவார்கள். நகரத்தில் வியாதியாவது உண்டாகும்; ராஜ்யத்திலும், தேசத்திலும் கலக்கங்களாவது உண்டாகும்.
தேவதைகளின் ஆலயங்களிலும், ராஜாக்களின் அரண்மனைகளிலும், பூஷண சாலைகளிலும், ஆயுத சாலைகளிலும் தேன்கூடு கட்டப்படுமாயின் அப்போது அந்தத் தேசமே மேலான பலவானால் அழிக்கப்படும். அந்த தேசத்தில் திடீரென்று பயம் உண்டாகும் என்று சொல்ல வேண்டும்.
மரத்திலிருந்தும், யானை தந்தத்து நுனியிலிருந்தும், காளை மாட்டின் கொம்பிலிருந்தும் சிவந்த ரத்தம் பெருகுமாயின், மரத்தில் பெருகுவதால் தேசம் போகும்; யானை தந்தத்தில் பெருகுவதால் அரசு மாறும்; மாட்டுக் கொம்பில் பெருகுவதால் பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் நாசமுண்டாகும் என்று சொல்லலாம்
“அரசனே! ராஜாவின் குடை தரையில் விழுமாயின் அவ்வரசனும், அவன் ராஜ்யமும் உடனே அழிந்து விடும். தேவாலயங்களிலும், ராஜ கிருஹங்களிலும், யானை கட்டுகிற இடங்களிலும் வேறுபாடு காணப்படுமாயின் அந்த தேசத்திற்கும், ராஜாவுக்கும், ஊருக்கும் பீடையுண்டாகும்.
கொடிய அனாவிருஷ்டியால் (அதாவது மழையில்லாததால்) பயத்தையும், பெரும் பஞ்சத்தையும் சொல்ல வேண்டும்.
தேவதா விக்ரஹங்களின் கைகள் ஒடிவதால் கிருஹஸ்தர்களுக்குப் பயம் உண்டாகும். (அவற்றின்) ஆயுதம் ஒடிந்தால் சேனாபதி இறப்பான் என்று அறிய வேண்டும்.
புதிதாக வந்த தேவதா விக்ரஹம் ஆறு மாதத்திற்குள் இடத்தில் நிலை பெறுத்தப்படாமல் போமாயின் அந்த நகரத்தை விட்டு ராஜா அகலுவான்.
பூமி வெடித்தாலும், சப்தம் செய்தாலும், இடிந்து விழுந்தாலும் அந்த தேசத்து அரசன் இறப்பான்; தேசமும் கெடும்.
ஏணீபதம், ஸர்ப்பம், டுண்டுபம், தீப்யகம் என்னும் பாம்பு ஜாதிகளைத் தவளை விழுங்குமாயின் அங்கே ராஜ நாசம் உண்டாகும்.
அன்னமானது ஒன்று சேர்க்கப்படாமலும், சமைக்கப்படாமலும், அதிகப்படுமாயின் அந்தத் தேசத்தார் நோயுற்று இறந்து போவர். அந்த அன்னத்தை அவர்கள் புசியார்.
தடாகம் முதலிய ஜலாசயங்களில் நீர் பொங்கினாலும், மரம் முதலிய ஸ்தலங்களில் தண்ணீர் உண்டானாலும், அங்கிருந்து வெளிப்பட்டாலும், பெண்கள் காலில்லாமலாவது மூன்று கால்கள், இரண்டு தலைகள், நான்கு கைகளோடு கூடவாவது இருக்கும் குழந்தையைப் பெற்றாலும் அந்த தேசத்திற்குத் தோல்வியைச் சொல்ல வேண்டும்.
வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும், பெண்களும், பசுக்களும் மற்றுமுள்ள பல ஜாதிகளும் இயற்கைக்கு மாறான சந்ததிகளைப் பிரசவித்தால் அந்தத் தேசத்தில் தோல்வி நிச்சயம்.
நதியானது கலங்கிய ஜலமாக எதிர் நோக்கிச் சென்றாலும் திசைகள் ஒளியில்லாமல் போனாலும் அவை தோல்விக்கான் அறிகுறிகளாகும்.
இவையும் பூமியையும், ஆகாயத்தையும் சேர்ந்த மற்றுமுள்ள சகுனங்களும் கிருஷ்ணனாலேயே உண்டாகின்றன.
சந்திர சூரியர்கள், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள், காற்று, நீர், நிலம் இவையனைத்தும் கிருஷ்ணனிடமிருந்து உண்டானவை. எந்தத் தேசத்துக்குக் குறைவையாவது விருத்தியையாவது கிருஷ்ணன் செய்ய விரும்புகிறாரோ அந்தத் தேசத்தில் அதற்குரிய சகுனங்களை இவரே உண்டு பண்ணுகிறார்.
“இதோ பார், பூமி அசைகிறது. கெட்ட காற்று வீசுகிறது. பருவமில்லாத காலத்தில் ராகு சந்திரனைப் பிடிக்கிறான். இடிகளோடு எரிகொள்ளிகள் விழுகின்றன. இருள் மிகுதியாக உண்டாகிறது.”
இவ்வாறு நாரதர் தர்மபுத்திரரிடம் கூறும் போது இன்னும் பல துர்நிமித்தங்கள் ஏற்பட்டன.அதன் பின்னர் சிசுபாலனின் வதம் நிறைவேறியது.
இந்தப் பகுதி தரும் நிமித்தக் குறிப்புகள் ஆழ்ந்து ஊன்றிக் கவனிக்கத் தக்கவை. இயற்கை மனிதர்களுடன் பேசும் ஒரு பாஷையே நிமித்தமாகும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Panini, world’s first grammarian and linguist wrote a book named ‘Eight Chapters’. In Sanskrit it is called ‘Ashtadhyayi.’ Famous Sanskrit scholar Goldstucker dated him around eighth century BCE. It contains 3995 sutras/ rules. Three centuries after him, came Katyayana Vararuchi. He made 4263 notes/remarks on his 3995 sutras. Some notes have three or four points. Definitely he added over 10,000 notes. These are called Vartikas. Though he made over 10,000 omissions, additions, commissions and objections , world praised Panini as the greatest grammarian. The reason for 10,000 +++++ correction or objections is that he lived 300 years after Panini and so made some changes. So he is not praised like Panini. A few centuries later came the greatest commentator the world has ever seen. His name was Patanjali. He lived in 150 BCE. Everybody agrees on his date. His commentary on Panini’s Sanskrit grammar is called Maha Bhasya meaning great commentary. It is really great in contents and size. 1000 years after Patanjali came two gentlemen named Vamana and Jayaditya. Both of them sat in Kasi, the holiest city for Hindus, and wrote a new commentary with latest examples. Since they wrote it from Kasi/ Varanasi/Benares, the commentary is called Kaasikaa.
Though all the above mentioned books are grammar works, they are encyclopaedic in contents. They deal with Astronomy to Zoology. Panini gives interesting details about brahmins of North India. He twice uses the Vedic term Varna 5-2-132 and 6-3-84 (dharma sila varnach cha ).
The Brahmanas formed the highest caste. Katyayana mentioned Chaturvarnya ((5-1-124). The order is also given by Patanjali ‘Brahmana- Kshatriya- Vit- Sudrah ( Bhasya 1-436)
Panini in a sutra 51-124 refers to the Bhava (nature) and Karma (conduct) which should characterise a Brahmin. Katyayana applies this rule to all the four castes. Tamil Veda Tirukkural also repeated what Panini and Katyayana said in Kural couplets 972, 973. Manu also said it 2-168
“Alike is birth to all; but in their greatness they are not alike owing to the divergence of their actions” -972
“The ignoble are low though placed high by birth; noble souls are not low though born low”. -973
Manu also says 2-168
“A twice born man who does not study the Vedas but exerts himself doing something else quickly turns into a (Sudra) servant, even while he is alive ,and his descendants too”.
xxxx
Panini also knew brahmins were called after their native regions 5-4-104
A degraded Brahmana was called ‘Ku-brahman’a (5-4-105) while a Brahmin who is pre eminent in his duties is called Maha Brahmana (5-4-105)
Pali texts say Bodhisatva Narada as being the Maha Brahma in a particular epoch. The Matanga Jataka tale refers to the superior position of a Maha Brahma . The Pali texts use Maha Brahma to mean a Super Brahmana.
xxx
Arya Brahmana, Arya Kshatriya and Arya Vaisya
The term Arya Vaisya is used in Tamil Nadu even today
In Panniniyam Arya Brahmana meant Kings Chief Counsellor
Arya Kumara meant Crown Prince.
Arya Vaisya meant business people with high status. Even Tamil Epic Silappadkikaram called Maha Nayakan and Maha Sattuvan, the business leaders of marine trade and land trade , parents of hero and heroine Kovalan and Kannaki. They belonged to Super Vaisya category.
Panini mentioned Arya Vaisya in 3-1-103 (Aryah svaami – vaisyayoh)
Xxx
Many Types of Sudraas – Yavana Sudras, Saka Sudras, Funeral Service Sudras
Not all the sudras were degraded in Panini- Patanjalis time.
Patanjali mentioned the condition that prevailed 2200 years ago.
Sudras who lived within Aryavarta.
Foreign Sudras- outside Arya Varta – Yavanas were foreign Sudras.
Even Sangam Tamil literature mentioned them as Mlechas (who doesn’t speak Tamil) and men of harsh , unintelligible words (Van Sol Yavanar).
The foreign Sudras were:- Kishkindha- Gabdikam
Saka- Yavanam
Saurya- Krauncham (KRAUNCHA birds)
Of these Kishkindha Sudras make interesting reading. We read about tribes with Monkey totems on their bodies called Vanaras who ruled Kishkndha in Karnataka. But Patanjali’s Kishkindha was near Gorakpur in Uttar Pradesh. One has to probe more to find out about two Kishknidhas in Hindu scriptures; it is a rare Sanskrit word.
Bird Migration 2700 years ago!
Krauncha dwara is also an interesting term; Lord Kartikeya is also called Krauncha Bedanar. It is a natural pass in the Garhwal Himalayas through which Siberian birds migrate o India from Europe. The natural mountain pass is linked with Skanda mythology. Kalidasa also mentioned Krauncha Pass in Megadutam in verse 59. Our forefathers were keen observers of Bird Migration and named the Bird Migratory route after Krauncha birds It is also called Niti Pass and Parasurama is also linked to it.
Undertakers (funeral service) and Chandalas were the lowest category among the Sudras. These untouchable Sudras had to take food in their own utensils.
Carpenters, Metal workers, Weavers were sudras but allowed to do Yaga, Yajna (Fire Sacrifice) works.
So we know from different literary works that not all Sudras were untouchables. But the grammatical works cover periods of 1500 years—from Paniniyam to seventh century Kasika!!
One can get lot of information about ornithology, zoology , astronomy, botany, legal system etc. Innumerable references are there about stars which shows their great advancement in astrology and astronomy. Even different colour lightnings are scientifically interpreted showing their interest in meteorology.
–subham–
tags – super brahmins, Yavana, Shudra, Arya Vaisya
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகின் முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’. இதன் பொருள் ‘எட்டு அத்தியாயம்’. இதை ‘அஷ்டகம்’ என்றும் அழைப்பர் . இதை பாணினி எழுதியதால் ‘பாணினீயம்’ என்றும் அழைப்பர். இந்த இரண்டு உத்திகளையும் தமிழர்கள் கடைப்பிடித்தனர். ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து என்று சங்க நூல்களுக்கு ‘நம்பர்’ Numbers களை பயன்படுத்திப் பெயரிட்டனர். அஷ்டகம் போலவே எடுத்த தொகை என்ற தொகுப்பையும் உருவாக்கினார்கள் . பாணினீயம் போலவே தொல்காப்பியர் எழுதிய நூலுக்குத் தொல்காப்பியம் என்று பெயரிட்டனர்.
பாணினி எழுதியது வெறும் இலக்கண நூல்தான். அதிலுள்ள விஷயங்களையும் அதன் மீது எழுந்த வார்த்திகம் , மஹா பாஷ்யம் , காசிகா ஆகிய உரைகளையும் படித்தால் இந்திய சரித்திரத்தையே அறியலாம். இலக்கணத்தில், மொழி இயலில், இவ்வளவு முன்னேற்றத்தை சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த மொழியிலும் காண முடியாது. பாணினி தோன்றி 2700 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பது மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த கோல்ட்ஸ்டக்கரின் (Goldstucker) வாதம் .
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள கபிஸ்தலம் போலவே பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஒரு கபிஸ்தலம் இருப்பது பற்றி சில தினங்களுக்கு முன்னர் எழுதினேன். இப்பொழுது இன்னும் ஒரு மர்மம் பற்றி துப்பு துலக்குவோம்.
ராமாயணத்தில் கிஷ்கிந்தா பெயரில் ஒரு காண்டமே இருப்பதால் உலகம் முழுதும் கிட்கிந்தையை அறியும். இந்தப் பெயரே ஒரு வினோதமான பெயர். சம்ஸ்க்ருதத்தில் இது போன்று ஒலிக்கும் பெயர்கள் அதிகம் இல்லை. .மேலும் கிஷ்கிந்தா என்பது கர்நாடகத்தில் ஹம்பி நகரம் இருந்த பகுதி என்பதே ஆராய்ச்சியாளர்களின் துணிபு.
பதஞ்சலி முனிவர் கி.மு 150-ல் வாழ்ந்ததை உலகமே ஒப்புக்கொள்கிறது . அவர் பாணினி நூலுக்கு உரை எழுதினார். அதன் பெயர் ‘பேருரை’ சம்ஸ்க்ருதத்தில் ‘மஹா பாஷ்யம்’ . பதஞ்சலியும் இந்த விநோதப் பெயரைக் குறிப்பிடுவதும் அதை நாட்டின் வடமேற்கு மூலையில் காட்டுவதும் வியப்பை ஏற்படுத்தும்.
அவர் சொல்கிறார்.
பல வகை சூத்திரர்கள் ஆர்யவர்த்தத்துக்கு வெளியே வசித்தனர் . அவர்களில் கிஷ்கிந்த -காப்திகம் , சக-யவனம், சவுர்ய- க்ரவுஞ்சம் ஆகியோரை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.
இதை விளக்கும் அக்ரவாலா தனது புஸ்தகத்தில் சொல்கிறார் –
இவர்களில் கிஷ்கிந்தா என்பதை பாலி மொழியிலுள்ள குகுந்த்தோ என்று சொல்லலாம். அது கோரக்பூரில் உள்ளது. கோரக்பூர் என்பது தற்போதைய உத்தரபிரதேசத்தில் இருக்கிறது.அயோத்தி நகரிலிருந்து 135 கிலோமீட்டர்.
ராமாயண கிஷ்கிந்தையோ துங்கபத்ரா நதியின் வடகரையில் — கர்நாடகத்தில் இருக்கிறது. எப்படி தொ லை தூரத்தில் இப்படி அதிசய பெயர் வந்தது ? ராமாயணம், பாணினி காலத்திற்கு வெகு முன்னர் நடந்தது . பதஞ்சலியும் பிற்கால சமண சமய நூல்களும் செப்புவது போல வடக்கில் ஒரு கிஷ்கிந்தை இருந்ததா னால் அது வட-தென் நாட்டின் தொடர்பைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
சமண மத நூல்களிலும் கிஷ்கிந்தா இடம்பெறுகிறது ஒன்பதாவது தீர்த்தங்கரர் புஷ்பதந்த ஆவார். அவர் பிறந்த ஊர் காகந்தி. ; இதன் மற்றோரு பெயர் கிஷ்கிந்தா. அவருடைய தந்தை பெயர் சுக்ரீவன் தாயார் பெயர் ராமா . இதிலும் ராமாயண கிஷ்கிந்தா தொடர்பு தெரிகிறது. சம்ஸ்க்ருதத்தில் ராம என்ற குறில் ஒலி இராம பிரானைக் குறிக்கும்; ராமா என்று நெடில் ஒளி பெண்ணைக் குறிக்கும்.
இதில் இன்னும் ஒரு சுவையான விஷயமும் வருகிறது. காகந்திதான் கிஷ்கிந்தா என்று சமண நூல்கள் இயம்பும் தருணத்தில், அது பூம்புகார் நகரின் மற்றொரு பெயர் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்
இந்த மர்மத்துக்குச் சுலபமான விடை :–
மலைகள், ஆறுகள், நகரங்கள் முதலிய பல இடங்கள் இந்தப் பெயரைக் கொண்டிருந்தன என்பதேயாம்.
Hampi
xxx
யவனர்கள் சூத்திரர்கள் !
யவனர்கள் என்பது எல்லா ‘வெள்ளைத்தோல் படைத்த’ வெளிநாட்டினரையும் குறிக்கும் என்பதை தமிழ் சம்ஸ்க்ருத இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இத்தாலி நாட்டின் தலைநர் ரோம். அங்கிருந்து கப்பலில் வந்தவர்களை சங்கத் தமிழ் இலக்கியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களை வன்சொல் யவனர் என்றும் சாடுகிறது .அவர்கள் காமதேனுவின் ஆசன வாய்ப் பகுதியிருந்து வந்த பல இன மக்களிலில் ஒரு இனம் என்று ராமாயண மஹாபாரத இதிகாசங்கள் வருணிக்கின்றன. இது பற்றி முன்னர் எல்லாக் குறிப்புகளையும் பல கட்டுரைகளில் தந்து விட்டேன். காளிதாசரோ பாரசீக ‘தாடிவாலா’க்களை யவனர்கள் என்று கூறுகிறார். சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த தமிழ் நூல்கள் ‘யவனத் தச்சர்’ என்று இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் வசித்த கலைத்திறன் வல்ல தச்சர்களைக் குறிப்பிடுகிறது. ‘யவன, தச்ச’ ஆகியன எல்லாம் சம்ஸ்க்ருதம் சொற்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
அலெக்ஸ்சாண்டர் படையெடுப்புக் காலத்திலிருந்து யவனர்கள் என்பது ‘கிரேக்கர்’களைக் குறித்தது. குதிரை விற்ற அராபியர்களை சில இடங்களில் யவன என்றும் பெரும்பாலான இடங்களில் யோன/ ஜோன என்றும் குறிப்பிட்டனர்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
5-10-2020 அன்று ஞானமயம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட கேள்வி-பதில்
YOU MAY LISTEN TO S NAGARAJAN ON FACEBOOK.COM / GNANAMAYAM
விரத காலங்களில் ஏன் அசைவ உணவை உண்ணக் கூடாது?
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்?
QUESTION ASKED BY MURUGADAS, CHENNAI.THANKS.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
நமது முன்னோர்கள் இயற்கை மாறுதல் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப நம் வாழ்க்கை முறையை வகுத்தவர்கள்.
திருமணமான ஒரு மணப்பெண்ணை ஆடி மாதம் வந்தால் பெண் வீட்டார் அழைத்துச் சென்று ஒரு மாதம் வைத்துக் கொள்வர்; பின்னர் திருப்பி மணமகன் வீட்டிற்கு அனுப்புவர். ஆடி மாதம் கர்ப்பமுற்றால் தலைப் பிரசவன் கொடுமையான கோடைக் காலமான சித்திரையில் ஏற்படுவதைத் தடுக்கவே இப்படி ஒரு ஏற்பாடு.
இதே போல உணவுத் திட்டத்திலும் அதை உண்ணும் முறைகளிலும் பல விதிகளை நம் முன்னோர் ஏற்படுத்தியுள்ளனர்.
நம் மனதிற்கும் நாம் உண்ணும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நம் அறநூல்களும் வைத்திய நூல்களும் கூறுகின்றன. இதை அப்படியே நவீன விஞ்ஞானமும் ஆமோதிக்கிறது.
விரத காலங்களில் ஒருமுனைப்பட்ட மனதுடன் நாம் ஏற்றுக் கொண்ட விரதத்தின்படி இறைவனை தியானிக்க சத்வ உணவு பெரிதும் உதவுகிறது. தியானத்தின் போது மேலாம் நிலையை அடைய சத்வ உணவு பெரிதும் உதவுகிறது. ஆகவே விரத காலங்களில் சத்வ குணத்தைத் தரும் சைவ உணவு பரிந்துரைக்கப்படுகிறது. ஊன்றிய மனதுடன் விரதத்தை அனுஷ்டித்து சிறப்பான பலனைப் பெற இது உதவும்.
குறிப்பாக புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கும் காரணங்கள் உண்டு.
Idli and Idli with Chilly Powder
12 ராசிகளில் ஆறாவது ராசியாக அமைவது கன்னி ராசி. அதாவது மேஷ, ரிஷப, மிதுன, கடகம், சிம்மம் கன்னி – இது ஆறாவது ராசி. கன்னி ராசி புரட்டாசி மாதத்திற்குரிய ராசி. இதுவே இதன் அதிபதியான புதனுக்குரிய ராசி. புதன் விஷ்ணுவின் சொரூபம் என்பதாலும் சைவ கிரகம் என்பதாலும் இந்த மாதத்தில் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என நமது அற நூல்கள் கூறுகின்றன. மாதம் முழுவதும் பல விழாக்கள் வரும் மாதம் புரட்டாசி தான். ஆகவே புரட்டாசியில் அசைவ உணவைத் தவிர்த்தல் மரபாகு̀ம்.
பருவ மாறுதல்களால் புரட்டாசி மாதம் மழைக் கால ஆரம்ப மாதமாகும். இந்தக் காலத்தில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் காரணத்தினால் நாம் உண்ணுகின்ற உணவானது லகு உணவாக அதாவது எளிதில் ஜீரண்மாகத் தக்க விதத்தில் இருக்க வேண்டும். ஆகவே அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என நமது நூல்கள் பரிந்துரைக்கின்றன.
எல்லாக் காலத்திலும் சைவ உணவு மேற்கொண்டிருப்பவனை எல்லா உயிரும் தொழும் என வள்ளுவர் கூறுவதும் இங்கு நோக்கத் தக்கது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்று குறள் எண் 260 கூறுகிறது. ஆகவே அவரவர் மனப் பக்குவத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப தம் தம் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ளலாம்; அசைவ உணவைத் தவிர்க்க முடியாதவர்கள் விரத காலத்திலும் புரட்டாசி மாதத்திலும் அதைத் தவிர்க்கலாம்!
Tamarind bath- Puliyodarai in Tamil
அடுத்து இன்னும் ஒரு கேள்வியில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘Arya’ meant a cultured or a civilised person in Vedic literature. Arya meant saints in the northern Himalayan region or those who speak Sanskrit in Sangam Tamil literature. In other words, those who speak a cultured language or a language by cultured people. Nowhere we find a racial connotation or a negative connotation. But Max Muller and Caldwell Company used it with a racial connotation because of their ‘barbarian knowledge’ in Greek.
in Greece
Kautilya who wrote Arthashastra 2400 years ago gives some interesting new definition.
Panini applies the epithet ‘Aarya’ to a Brahmana to denote the king’s chief counsellor- Aarya brahmana and Aarya kumara to denote the crown prince 6-2-58
The use of the term Aarya in the expression Aarya-krita in sutra 4-1-30 ( feminine Aarya-kriti , terms which were also Vedic words ) had a specific meaning in current speech. The meaning of these terms is best explained by Kautilya ( daasa kalpa chapter). Kautilya takes Aarya to mean a free man as opposed to Daasa who had lost his freedom.
e.g. the offspring who has sold himself off as a slave shall be an Aarya on paying the value – for which one is enslaved. A slave shall regain his ‘Aaryahood’. The regulations contained in that chapter aims at humanising the institution of Daasya and restoring to the Daasas the privileges of an Aarya or free citizen.
The linguistic form of ‘aaryakrita ‘– i.e Aarya with root kri is also implied in Kautilya’s expression ,
Meaning is ‘12 panas is the fine for not making a slave a free man (Aarya) even after receiving the proper ransom ‘ .
The feminine form Aaryakritii would denote the woman similarly made free or her daughter who had obtained the status of an ‘adaasa’ or either through payment of ransom or birth.
Panini uses ‘dhaasi-bhaara’ in sutra 6-2-42 as a word with specific meaning. The Kaasikaa explains it as daasya bhaarah i.e. the burden of a Dhaasi to be borne by her master.
Kautilya states , if a pregnant female slave is sold or pledged without any provision for her confinement , her master is punishable . This probably explains the nature of the burden implied in the term daasi – dhaasi bhaara of Panini
Source book – India as known to Panini by V S Agrawala, 1953,University of Lucknow
xxx
in Rome
My comments: –
All the ancient cultures had slavery as an institution. In Greece they were treated as low class people. In Modern America, they were treated as animals. Abraham Lincoln and others had to fight for their freedom. In Egypt, Moses revolted against the slavery and led them out of Egypt. In Rome, they were thrown to animals and they had to fight them till one of them dies. Huge crowd watched the cruel gladiators. But in India even before 2400 years, they were treated as humans. They can be liberated by paying back the amount to which the persons were bought.
***
In Tamil Nadu
Sundaramurthy Swamikal story in Periya Puranam and other literatures shows that the slavery was in Tamil country 1200 years ago. A Brahmin came running saying that Sundarar cannot get married without his permission because he was the son of a slave. It shows that slavery existed even among high class Hindus in Tamil Nadu and they need permission from their masters to get married.
நாக்கு பற்றிய 7 பழமொழிகளைக் கட்டத்தில் காணுங்கள்; விடைகள் இறுதி யில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படும் .
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
5-10-2020 அன்று ஞானமயம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ((Facebook.com/Gnanamayamஒளிபரப்பப்பட்ட கேள்வி – பதில்
மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா?
ச.நாகராஜன்
QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN; THANKS
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? என்ற கேள்வி வந்துள்ளது.
பதில் : தவறாக உச்சரிக்காமல் உரிய முறைப்படி ஓதினால் நிச்சயம் அதற்குரிய பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது தான்.
விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
மந்திரம் என்றால் என்ன?
மனனாத் த்ராயதே இதி மந்த்ர: மனத்தினால் மீண்டும் மீண்டும் சொல்லி அதாவது ஜபித்து உய்வைப் பெறுகின்ற ஒன்றே மந்திரம் ஆகும்.
சில மந்திரங்கள் பிரார்த்தனை மந்திரங்கள். சில பலன்களை எதிர்பார்த்து ஓதப்படும் மந்திரங்கள்.
இவற்றை குரு மூலமாகக் கற்று ஓதுவதே சிறப்பாகும்.
ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஆறு பகுதிகள் உண்டு.
மஹரிஷி – குறிப்பிட்ட ஒரு மந்திரத்தைக் கண்டவர்.
ஸ்வரம் – அந்த மந்திரத்திற்கான குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது இசை அமைப்பு
தேவதா – அந்த மந்திரத்தின் அதி தேவதை
பீஜம் – மந்திரத்தின் வித்து போன்ற ஜீவ ஒலி.
சக்தி – மந்திரத்திற்கான திவ்ய சக்தி
கீலகம் – கீலகம் என்றால் தூண் என்று பொருள்படும். அதை ஓதுபவர் இடைவிடாது முயன்று மந்திரத்தை அப்யசிப்பதை இது குறிக்கிறது.
இவை அனைத்தையும் அறிந்தவரே குரு. குறிப்பிட்ட மந்திரத்தை அப்யசித்து சித்தி பெற்று, உரிய சீடர்களுக்கு அவர் வழங்குவார்.
உச்சரிப்பு என்பது மிக முக்கியம். வேதங்களை ஓதுவதற்கென்று குறிப்பிட்ட மரபு, வரைமுறை உள்ளது.
உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் ஆகிய இந்த நான்கும் உச்சரிப்பில் கையாளப்படுகின்றன.
உதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்தில் உச்சரிப்பதாகும்
அனுதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும்.
ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை ஏற்றி உச்சரிக்க வேண்டும்.
தீர்க்க ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து இரண்டு மாத்திரைகள் ஏற்றி உச்சரிக்க வேண்டும்.
மந்திரத்தில் ஒலி அதாவது உச்சரிப்பு மிக முக்கியமானது என்பதை உணர்த்த யஜூர் வேதத்தில் வரும் ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
ஒரு சமயம் இந்திரனைக் கொல்ல எண்ணிய விருத்ராஸுரன் என்னும் அசுரன் தவம் செய்து இறைவனின் தரிசனத்தைப் பெற்றான்.
‘இந்த்ர சத்ரு வர்தஸ்வ’ என்று இந்திரனைக் கொல்ல வேண்டி அவன் கோரியது, ஸ்வர பேதத்தால் – அதாவது ஒலியை மாறுபட்டு உச்சரித்ததால் – இந்திரன் கொல்லும்படியான சத்ரு என்று ஆகியது; அவன் இந்திரனால் கொல்லப்பட்டான்.
இன்னும் ஒரு சம்பவம்.
தேவர்களை இல்லாமல் செய்வதற்காக பிரம்மனை நோக்கி கும்பகர்ணன் ஒரு பெரும் யாகம் செய்தான். பிரம்மா தரிசனம் தந்தார். அவரிடம் அவன் கேட்க நினைத்தது நிர்தேவத்வம் – அதாவது தேவர்கள் இல்லாத நிலை. ஆனால் அவன் கேட்டதோ நித்ராவத்வம். எப்போதும் தூங்குவது என்பதை! பிரம்மா அவன் கேட்டதைத் தந்தார்.பின்னர் அவன் வேண்டுதலின் பேரில் எப்போதும் தூங்காமல் ஆறு மாத தூக்கம், ஆறு மாத விழிப்பு என்ற நிலையைப் பெற்றான்.
ஆகவே சொல்லுக்கு சொல் தனித் தனியே பொருள் உண்டு.
ஓம் என்ற பிரணவ மந்திரத்தை 170 விதமாக உச்சரிக்க முடியும் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னிபெஸண்ட் அம்மையாரோ இந்த பிரணவ மந்திரத்தை 250 விதமாக உச்சரிக்க முடியும் என்று கூறுகிறார். ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் பலன் வெவ்வேறாக இருக்கும். அதாவது அடையக் கூடிய சித்திகள் வேறு வேறாக இருக்கும்.
மந்திரத்தில் பிரதானமாக இருப்பது ஒலி. ஒலிக்குச் சக்தி உண்டு என்பதை க்ளாட்னி என்ற விஞ்ஞானி நிரூபித்திருக்கிறார்.
ஒரு தகட்டின் மீது நுண்ணிய மணலைப் பரப்பி அதன் ஓரத்தில் வில் ஒன்றை இணைத்து வில்லை அதிரச் செய்வதன் மூலம் மணல் துகள்கள் அசைந்து அதிர்விற்கு ஏற்பப் பல்வேறு வடிவங்கள் உருவாவதை அவர் நிரூபித்துக் காட்டினார். இந்த வடிவங்களுக்கு க்ளாட்னி சித்திரங்கள் என்று பெயர். Chladni Patterns என்று youtubeஇல் பதிவிட்டால் இவற்றை நீங்கள் பார்க்க முடியும்.
சரி அப்படியானால் மந்திரங்களை உச்சரிக்கவே முடியாதோ என்று யாரும் பயப்படத் தேவை இல்லை. இறைவன் திருமுன்னர் மனமும் நம் உணர்ச்சியுமே முக்கியம். எளிய உச்சரிப்பை யார் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்ல முடியும். ராம, நமசிவாய, நாராயணா, ஹரே கிருஷ்ணா போன்றவற்றை யார் வேண்டுமானாலும் உச்சரிக்க முடியும்.
மந்திரத்தை ஒருமுனைப்பட்ட மனதுடனும் ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் சொல்ல வேண்டும் என்று பெரியோர் சொல்கின்றனர்.
மந்திர ஹீனம் கிரியா ஹீனம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம் ஒன்றை பூஜை முடிவில் சொல்வது மரபு.
அதாவது மந்திரத்தைத் தவறாக உச்சரித்தல், அல்லது பூஜை கிரியைகளில் சிலவற்றை விட்டு விட்டிருப்பது ஆகியவற்றை மன்னித்து எனது பிரார்த்தனையை ஏற்று அருள்க என ஒவ்வொரு பூஜையும் முடிவிலும் நாம் சொல்வது பாரம்பரிய மரபாகும்.
ஆகவே குரு மூலமாக மந்திரத்தை உச்சரிப்புடன் கற்று மனதை ஈடுபடுத்தி ஓதுவதால் நல்ல பலன் ஏற்படும் என்பது உறுதி. அதே சமயம், இறைவனது நாமங்களை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அவையும் நலம் தரும் மந்திரங்களே என்று கூறி வாய்ப்பளித்த ஞானமயம் குழுவினருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.