அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம் (Post No.9162)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9162

Date uploaded in London – –19 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 VOICE RECORDING IS IN GNANAMAYAM PAGE; FACEBOOK, YOU TUBE

லண்டனிலிருந்து ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 18-1-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை!

அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம்                                      

  ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம் பற்றி இன்று காண்போம்.

மந்திரம், யந்திரம், தந்திரம் மூலமாக எதையும் அடைய முடியும் என்று ஹிந்து மத சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றனஉரிய வழிகளைக் காட்டுகின்றன!

யந்திரம் என்பது பல்வேறு வடிவங்களை அமைத்து அதில் மந்திரங்களைப் பிரயோகித்து ஒரு சக்தியை உருவாக்கி விரும்புவதை அடைய வழி வகுப்பதாகும்.

உலகில் வாழும் மனிதர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நோக்குடன் அருளாளர்கள் ஆலயத்தில் மூல விக்கிரகத்தின் – பீடத்திலோ அல்லது ஆலயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியிலோ யந்திர பிரதிஷ்டை செய்து வந்தனர். திருப்பதியில் ஜன ஆகர்ஷண, தன ஆகர்ஷண யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாலேயே அங்கு மக்கள் திரள் திரளாகக் குவிகிறார்கள், ஏராளமான செல்வமும் வந்து குவிகிறது என்று பெரியோர் கூறுவர். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவில் யந்திரமும் பிரசித்தி பெற்றது.

யந்திரங்களுள் சிறந்தது அளப்பரிய ஆற்றல் கொண்டது ஸ்ரீயந்த்ரம்

இதை ஸ்ரீசக்ரம் என்று சொல்வது வழக்கம். இது இருக்கும் இடமே மங்களகரமானது.

இதன் மூலமே மஹா சக்தியை மக்கள் பெரிதும் போற்றுகின்றனர். அண்ட சராசரத்தின் அடையாளச் சின்னமே ஸ்ரீசக்ரமாகும். ஸ்ரீசக்ரம் உள்ளிட்ட பல்வேறு யந்திரங்கள் பிரக்ஞையின் பல்வேறு நிலைகளை எட்ட உதவுகின்றன.     ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.

மந்திரத்திற்கு மஹிமை உண்டா என்று ஒலி அலைகளை அறிவியல் பூர்வமாக ஆராய, ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் ஜென்னி (Hans Jenny) (1904-1972) முனைந்தார்.

பொறுமையாக ஒவ்வொரு ஒலி அலையையும் அவர் பத்து ஆண்டுக் காலம் பரிசோதித்தார். க்ளிசரின், பாதரஸம், ஜெல் பவுடர், இரும்பு போன்றவற்றில் ஒலி அலைகள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதை அவர் உன்னிப்பாக ஆராய்ந்தார். குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் (Low Frequency Sound Waves) சாதாரணமான ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்டபோது இந்த சாதாரண படங்கள் சிக்கலான படங்களாக மாற ஆரம்பித்தன!

“ஓ என்ற ஒலி அலை, ஒரு வட்டத்தை உருவாக்கியது. உடனே “ஓம் என்ற ஒலி அலையை அவர் உருவாக்கினார். அதிலே ஸ்ரீசக்ரம் உருவானது!

     ஹான்ஸ் ஜென்னி ஆச்சரியப்பட்டுப் போனார். பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீசக்ரம் வழிபடப்பட்டு வருகிறது. ஓம் உச்சரிக்கப்பட்டு வருகிறது!

ஜென்னி தன் ஆய்வுகளின் மூலம் ஒலி அலைகள் உருவங்களை உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு வந்தார். அத்தோடு மனித உடலில் செல்கள், திசுக்கள், உறுப்புகள் அதற்கு உரித்தான ஒலியைக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கும் அவர் வந்தார். “ஓம் என்று உச்சரிப்பதும் அதைப் போற்றி வழிபடுவதும், ஸ்ரீசக்ர வழிபாடும் உடலுக்கும் மனதிற்கும் எல்லையற்ற சக்திகளையும் இதர நலன்களையும் நல்குகிறது என்று அவரது ஆய்வு சிறப்பான முடிவைத் தெரிவிக்கிறது!

ஸ்ரீசக்ரத்தின் பெருமையைக் கேட்ட உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் இதை ஆராய ஆரம்பித்து விட்டனர். மாஸ்கோ பல்கலைக் கழக இயற்பியல் விஞ்ஞானியான அலெக்ஸி குலைச்சேவ் (Alexie Kulaichev) மற்றும் ரஷிய நாட்டு விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த கோவலான் சென்கோ என்ற இருவரும் ஸ்ரீசக்ரத்தை ஆராயப் புகுந்தனர். அவர்களது ஆராய்ச்சியின் முடிவு அவர்களுக்கு எல்லையற்ற பிரமிப்பையும் வியப்பையும் தந்தது,

கம்ப்யூட்டராலேயே ஸ்ரீசக்ர கோணங்களையும் அமைப்பையும் ஆராய முடியவில்லை என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

“இன்றைய கணினி தொழில்நுட்பத்தால் ஸ்ரீசக்ரத்தை ஆராய முடியவில்லை என்றும் அதை ஆராய்வதற்குச் சிக்கலான அல்ஜீப்ரா சமன்பாடுகள் உள்ளன; அது தற்போதைய கணினியின் செயல்திறனுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது (Their analysis involved a complex system of algebraic equations and a complicated computations which are beyond the capability of the present generation of computers) என்று அவர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த சக்கரத்தை எப்படி முன்னோர்கள் அமைத்தனர், ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டும் போது அதன் பல்வேறு வெட்டுப் புள்ளிகள் ஒரே இடத்தில் சேர்வதை எப்படி அவர்களால் அறிய முடிந்தது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் பொதிந்துள்ளன என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்!

“How did people come to know that nine triangles arranged in such a way intersect each other, their numerous crossing points coinciding!”

ஸ்ரீசக்ரத்தின் மஹிமையைப் பல்வேறு விதமாகவும் அவர்கள் ஆராய்ந்தனர். ஸ்ரீசக்ரம் உளவியல் சம்பந்தமான அனைத்து மனநோய்களையும் போக்க வல்லது என்று அவர்கள் அதிகாரபூர்வமாகக் கூறுகின்றனர், மிக மிக சரியான அளவுகளுடன் அதை எப்படி வரைவது என்று தெரிந்து கொண்டு அந்த முறையில் அமைக்கப்படும் ஸ்ரீசக்ரம் மட்டுமே இந்த விதமான சக்தியைப் பெறுகிறது. அலெக்ஸி குலைச்சேவ் தனது ஆராய்ச்சியில் ஸ்ரீசக்ரம் போன்ற ஒரு போலி யந்திரத்தைச் செய்து அதை ஆய்வு செய்த போது அது எந்த நோயையும் குணப்படுத்தவில்லை. ஆக உரிய அளவுகளுடன் உரிய முறையில் உள்ள ஸ்ரீசக்ரமே சக்தி வாய்ந்தது என்பதைத் தனது ஆய்வின் மூலமாக உறுதிப் படுத்தினார் அவர். அவரது ஆய்வுரையை அங்கீகரிக்க அவரது திட்டத் தலைவருக்கு அது சமர்ப்பிக்கப்பட்ட போது அவரும் இப்படிப்பட்ட பலன்களை உறுதி செய்து கொண்ட பின்னரேயே அந்த ஆய்வை அங்கீகரித்தார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

ஸ்ரீசக்ரத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்துள்ளன. நடுவில் பிந்துவும் (புள்ளி), சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ள அமைப்பு என்று ஒரு வரியில் சுலபமாக ஸ்ரீசக்ரத்தை விவரித்துச் சொல்லி விட்டாலும் எல்லையற்ற பிரபஞ்சத்தின் மர்மத்தை அது உள்ளடக்கி இருக்கிறது என்றே அதன் ஆற்றலை உணர்ந்தோர் கூறுவர்.

ஒன்பது முக்கோணங்களில் மேல் நோக்கிய நான்கும் சிவனையும் கீழ் நோக்கிய ஐந்து முக்கோணங்கள் சக்தியையும் குறிக்கின்றன,

மஹா திரிபுரசுந்தரியின் வழிபாடாக ஸ்ரீசக்ர வழிபாடு அமைகிறது. எல்லையற்ற சக்தி, ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, முக்திப் பேறு என இப்படி இக பர நலன்கள் அனைத்தையும் தரும் அற்புத யந்திரம் ஸ்ரீசக்ரமாகும்!

சௌந்தர்ய லஹரிக்கு விரிவுரை எழுதிய லக்ஷ்மிதரர் பதினொன்றாம் சுலோக விரிவுரையில் ஸ்ரீசக்ரத்தை மதம், இனம், வர்ணம், பால், வயது, அந்தஸ்து, கல்வி பாகுபாடின்றி அனைவரும் வழிபடலாம் என்று உரைக்கிறார்.

அகஸ்திய மாமுனிவர் அம்பாளின் அணுக்க பக்தையான தனது மனைவி லோபாமுத்ராவிடம் திரிபுரசுந்தரியின் அருளைப் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார். அப்படிப்பட்ட லோபாமுத்ராவை “லோபாமுத்ராவால் அர்ச்சிக்கப்படுபவள் என்று லலிதா சஹஸ்ரநாமம் 648வது நாமத்தில் கூறி அவரின் சிறப்பை வெளிப்படுத்துகிறது!

பவிஷ்யோத்தர புராணத்தில் அவர், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு காட்டிலும் சக்தி வழிபாட்டில் ஆர்வமுள்ளோர் இதை வழிபடலாம் என ஆணித்தரமாகக் கூறுவதால் அனைவருக்கும் ஏற்ற வழிபாடு ஸ்ரீசக்ர வழிபாடு என்பது பெறப்படுகிறது.

திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் ஐந்தடி உயரம் உடையவள். அங்கே கோவிலில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப் போன அர்ச்சகர்கள் வீடு திரும்பாமல் அன்றே இறந்து போவது வழக்கமாக இருந்தது. இதை எண்ணி அனைவரும் சொல்ல மாளாத துக்கம் அடைந்தனர். இதைக் கேள்விப்பட்ட ஆதி சங்கரர் அங்கே வந்து நான்கு அங்குலம் உள்ள பூப்ரஸ்தார சக்கரத்தைத் தங்கத்தில் செய்து அதில் வைரம் பதித்து அம்மனின் இரு காதுகளிலும் அணிவித்தார். அம்மனின் கடும் உக்கிரத்தைத் தணிவித்து அம்மனை அர்ச்சிக்க அனுமதியும் தந்தார். அம்மன் அர்ச்சனையை ஏற்றதுடன் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் இதர சௌபாக்கியங்களையும் அருள ஆரம்பித்தாள்.

ஸ்ரீசக்ர ஆராய்ச்சியில் தன் வாழ்நாளை ஈடுபடுத்திய பலருள்ளும் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்வாமி ப்ரணவானந்தர். (14-1-1896 அன்று பிறந்த இவர் தநனது 93ஆம் வயதில் 17-5-1989 அன்று இறைவனுடன் கலந்தார். 1976ஆம் குடியரசு தினத்தன்று பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் அவர்.

பிரபல ஆங்கில எழுத்தாளரான பால் ப்ரண்டன் அவருடனான தனது அனுபவங்களை ‘ஹெர்மிட் இன் தி ஹிமாலயாஸ் என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.

சுமார் 180க்கும் மேலான ஸ்ரீசக்ர பிரதிஷ்டைகளை நேரில் கண்டு ப்ரணவானந்தர் அவற்றை ஆராய்ந்தார். ஸ்ரீசக்ரத்தின் அனைத்து அம்சங்களையும் நலங்களையும் விளக்கும் அவர் ஸ்ரீசக்ர வழிபாடு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது என்கிறார்.

சென்னையில் திருவேற்காட்டிலும் மாங்காட்டிலும் உள்ள ஸ்ரீசக்ரம் மிக்க சக்தி வாய்ந்தவை. மாங்காட்டில் உள்ள கோயில் ஒன்றே பாரதம் முழுவதிலும் ஸ்ரீசக்ரத்திற்காக அமைந்துள்ள ஒரே கோவில் ஆகும். தஞ்சாவூர் அரண்மனையில் மரகதத்தால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.சென்னையில், வேளச்சேரியில் தண்டீஸ்வரர் கோவிலில் அப்பைய தீக்ஷிதர் ஸ்தாபித்த பூப்ரஸ்தார யந்திரம் மிக்க சக்தி வாய்ந்தது.

தமிழகத்தில் சிதம்பரத்தில் கோகிலாம்பா கோவில், காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில் உள்ளிட்ட சுமார் 14 இடங்களில் சக்தி வாய்ந்த ஸ்ரீசக்ரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

யந்திரங்களிலேயே உன்னதமானது என்பதால் இதை ‘சர்வச் ரேஷ்ட யந்திரம் என்பர்.

ஸ்ரீசக்ரத்தை சுவரில் தொங்க விடக்கூடாது. கிடைமட்டமாக வைத்து வழிபட வேண்டும். சரியாக் இதை வழிபடும் முறையை குரு மூலமாகக் கற்று வழிபடுதலே சாலச் சிறந்தது. இதைத் தூய மனதுடன் வழிபடுவோர் செல்வச் செழிப்பு, ஆரோக்கியம், சகல துறைகளிலும் முன்னேற்றம் பெறுவர். தீய நோக்குடன் இதை வழிபட்டால் இது செயலிழப்பதோடு வழிபடுவோருக்குத் தீங்கையே விளைவிக்கும்.

காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மஹா பெரியவாள் ஸ்ரீசக்ரத்தைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். அதில் அவர் கூறுகிறார்:-

“கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்ர ரூபத்தில் அமைந்து, மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு] இருப்பதே யந்த்ரம் என்பது. இந்த மாதரி டிஸைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை க்ரஹித்துக் கொடுக்கும் சக்தி – அபரிமிதமான சக்தி – இருக்கிறது.  Divine Design! கெட்ட சக்திகளைத் துரத்தியடிக்கவும், திவ்ய சக்திகளை ஆகர்ஷித்துத் தருவதற்கும் சக்தி படைத்தவையாக அந்த டிஸைன்கள் இருக்கின்றன.” (தெய்வத்தின் குரல் ஆறாம் தொகுதியில் இந்த விளக்கத்தைப் பார்க்கலாம்). அவர் தரும் எச்சரிக்கையும் ஒன்று உண்டு! :- “இன்னொரு அம்சம், ஜாக்ரதை தேவைப்படும் அம்சம், என்னவென்றால், விக்ரஹம் வைத்துப் பூஜை செய்வதை விடவும் யந்திரத்திற்குச் செய்யும்போது சாஸ்திரோக்தமாகவும், மடி ஆசாரங்களோடும் செய்ய வேண்டும்.” என்கிறார் அவர்.               அனைத்து அதிர்ஷ்டங்களையும் நலன்களையும் ஒருங்கே அள்ளித் தரும் ஸ்ரீசக்ரத்தை அறிவியல் வியக்கும் அதிர்ஷ்ட சக்கரம் என்றே அழைக்கலாம்.  ஸ்ரீசக்ரத்தை உரிய முறையில் வழிபடுவோமாக; இகபர நலன்களைப் பெறுவோமாக; உயர்வோமாக! நன்றி வணக்கம்! 

***

குறிப்பு:-

ஸ்வாமி ப்ரணவானந்தரின் புத்தகம் கிடைக்குமிடம்:-

A Treatise on Sri Chakra

By Swami Pravananda F.R.G.S (Of Holy Kailas Manasarovar)

240 Pages

Publishers : Sri Swami Pranavananda Trust

Yenuulamahal, East Godavari Dt, Andhra Pradesh Pincode: 533233

TAGS- அறிவியல் , ஸ்ரீசக்ர ரகசியம், ப்ரணவானந்த

LONDON CALLING (HINDUS) 18-1-2021 (Post No.9161)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9161

Date uploaded in London – –18 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

GNANA MAYAM BROADCAST

18TH  JANUARY 2021 MONDAY

Maitrim bhajata – SIGNATURE SONG

THE HIGHLIGHT OF TODAY’S BROACAST WAS DR CHITRA’S TALK ON THE IMPACT OF TAMIL CULTURE IN THAILAND. SHE USED PICTURES FROM BOTH TAMIL ANDU AND THAILAND TO SHOW HOW THE FESTIVALS, THE GODS, RITUALS, RELIGIOUS LITERATURE LIKE TIRUVEMBAVAI WERE SIMILAR. THOUGH IT WAS A BUDDHIST COUNTRY STILL BRAHMINS CROWN THE KING BY RECITING TAMIL VERSES. SHE TOLD THAT NOT ONLY THAILAND BUT ALSO KOREA HAS MANY SIMILARITIES. HER COLLECTION OF PICTURES PROVED HER STATEMENTS BEYOND DOUBT

EARLIER PRODUCER LONDON SWAMINATHAN, WHILE INTRODUCING DR CHITRA FROM HONG KONG UNIVERSITY, TOLD THAT THOUGH SHE WAS A COMPUTER PERSONNEL, SHE IS WELL VERSED IN TAMIL AND HELPING TO SPREAD TAMIL CULTURE OVERSEAS.

XXX

Prayer BY MRS SWARNALATHA FROM TIRUPPUR

S Swaminathan’s Tamil Article ‘DOCTOR MURUGAN AND PATIENT ARUNAGIRINATHAR’ –read by MRS VAISHNAVI ANAND

MRS DAYA NARAYAN SANG A   SHIVA HYMN

PRODUCER LONDON SWAMINATHAN INTRODUCED DR CHITRA.

Dr. CHITRA FROM HONGKONG SPOKE ON “IMPACT OF TAMIL CULTURE IN THAILAND”.

MRS LAKSHMI RAMASWAMY —  SONG – UNNAI ALLAAL BY PAPANASAM SIVAN IN KALYANI RAGA.

Mr . S NAGARAJAN’S TALK ON “MYSTERIES OF SRI CHAKRA”

MRS SARASWATHY CHANDRASEKARAN SANG FIRST ASHTAPATHY

Mrs SRI VIDHYA from Dubai –Bharatiyar Episode-5- 

DR KANNAN spoke on ALVARS

XXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- Gnanamayam18121

LONDON CALLING (TAMILS) 17-1-2021(Post No.9160)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9160

Date uploaded in London – –18 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER  , PART OF GNANAMAYAM CHANNEL,  BROADCAST THE FOLLOWING PROGRAMS ON 17TH JANUARY 2021 FROM LONDON.

THE HIGHIGHT OF THE BROADCAST WAS A TALK BY TAMIL WRITER B. KANNAN OF DELHI. HE SPOKE ABOUT THE TIRUVALLUVAR TEMPLE, WITH WHICH HE WAS ASSOCIATED FROM HIS BOYHOOD DAYS. HE GAVE VERY RARE INFORMATION ABOUT THE FESTIVALS, THE VALLUVAR IDOL AND THE PROMINENT VISITORS TO THE TEMPLE IN MYLAPORE, CHENNAI. HE ALSO TOUCHED BREFLY THE HISTORY OF VALLUVAR, HIS FRIEND ELELASINGAN AND THE RARE TREES INSIDE THE TEMPE COMPLEX.

7-1-2021 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் திரு பா.கண்ணன் அவர்கள் மயிலை திருவள்ளுவர் கோவிலைப் பற்றிச் சிறப்புரை ஆற்றினார்.

அவரை திரு ச.நாகராஜன் அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுக உரையைக் கீழே காணலாம்.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம்மிடையே உரையாற்ற பிரபல எழுத்தாளர் திரு பா.கண்ணன் அவர்கள் வந்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் இப்போது புது டில்லியில் வசித்து வருகிறார்.

இவர் எனது இனிய நண்பர். வயதால் மூத்த குடிமகன் என்றாலும் மனதால் ஊக்கமும் உற்சாகமும் கொண்ட இளைஞர்.

மயிலாப்பூரிலே பி.எஸ். உயர்நிலைப்பள்ளியிலும் பின்னர் விவேகாநந்தா மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்த இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

பின் புனே வந்து அங்கு ஒரு கனரகத் தொழிற்சாலையில் 11 ஆண்டுகள்

வேலை பார்த்தார். பின்னர் ஜாம்ஜெட்பூர் சென்று அங்கு டாடா ஸ்டீல் கம்பெனியில் 16 ஆண்டுகள் பணியாற்றினார். 2002ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று தனது மகனுடன் புதுடெல்லியில் துவாரகா பகுதியில் வசித்து வருகிறார்.

1962இல் எழுத ஆரம்பித்த இவர் குமுதம் வார இதழ் நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டார்; இவரது ஒரு பக்கக் கதை தேர்வு பெற்று பிரசுரிக்கப்பட்டது. கல்கியில் நவராத்திரி திரைப்படம் பற்றி இவர் எழுதிய

விமரிசனம் தேர்வாயிற்று. ஆனந்தவிகடன் இதழில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.

பணி ஓய்வு பெற்ற பின்னர் நிறைய ஆன்மீக இதழ்களில் இவர் கட்டுரைகள் பிரசுரமாயின; தொடர்ந்து ஞான ஆலயம் உள்ளிட்ட ஆன்மீக இதழ்களில் பிரசுரமாகி வருகின்றன.

 78 வயதில் அடி எடுத்து வைத்துள்ள இவர் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருத புத்தகங்களை ஊன்றிப் படிக்கும் ஒரு புத்தகப் புழு. தான் படித்து அறிந்து கொண்டதை உலகிற்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர் இதுவே தனது எழுத்தின் நோக்கம் என்கிறார்.

உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக வைத்துப் புத்துணர்ச்சி ஊட்டுவது இந்த எழுத்துப் பணியும் அதற்கு உந்து கோலாக விளங்கும் ஆன்மீகப் பயணங்களும் தான் என்பது இவரது முடிவார்ந்த முடிவு.

எதையும் ஊன்றிப் படித்து ஆய்வு செய்து பின்னரே, ஆய்வுக் கட்டுரைகள் படைப்பது இவரது தனிச் சிறப்பு.

அந்த வகையில் மயிலையில் திருவள்ளுவர் கோவில் தெருவிலேயே வசித்த இவர் பொய்யாமொழிப் புலவரைப் பற்றி நன்கு ஆராய்ந்தார். அந்த ஆய்வின் முடிவாக இவர் கண்ட உண்மைகளையே இப்போது நாம் கேட்கப் போகிறோம். இவரை ஞானமயம் சார்பில் வருக வருக என மனமுவந்து வரவேற்கிறோம். இதோ திரு கண்ணன் அவர்கள்

உரையைக் கேட்போம்..

Vaalka thamil mozi – signature tune

Prayer by Ms Pavithra Prabhu

Mrs Brhannayaki Sathyanarayanan  – Talk on Suryanar Koil Temple –

TIRUPPUGAZ  by Mrs Jayanthi Sundar and Mr Natarajan and Mrs Nirmala Natarajan

WORLD HINDU NEWS ROUNDUP in English and Tamil –

BY MRS SUJATHA RENGANATHAN &

MRS VAISHNAVI ANAND

Pongal song by MRS DAYA NARAYANAN –

Mr B Kannan from Delhi spoke on the topic “Tiruvalluvar Temple, in Mylapore”

Bengaluru Nagarajan introduced the speaker.

Tiruppavai – Notru swargam- BY CHENNAI MRS LAKSHMI RAMASWAMY- 

XXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER? tamil thunder 17121

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- tamil thunder 17121

திருப்பாவை அதிசயம் – விஷ்ணுவுக்கு 56 பெயர்கள் ! (Post No.9159)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9159

Date uploaded in London – –18 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திரு ப்பாவையில்  உள்ள 30 பாடல்களையும் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். ஆயினும் அப்பாடல்களில் விஷ்ணுவுக்கு 56 நாமங்கள் வருவதைக் கவனித்து இருக்க மாட்டோம். இதே போல நப்பின்னைக்கு என்ன அடைமொழி கள் , யசோதைக்கு என்ன பெயர்கள் என்பதையும் திருப்பாவை மாலை என்ற 1957ம் ஆண்டு நூலில் கண்டேன். ஆனந்தம் கொண்டேன். இதோ நீங்களும் படித்து மகிழுங்கள்

tags- திருப்பாவை அதிசயம்,  விஷ்ணு,  56 பெயர்கள், 

காணும் பொங்கல், கணுப்பிடி, கனுப் பிடி! (Post No.9158)

KANUM PONGAL IN CHENNAI MARINA BEACH IN 2020

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9158

Date uploaded in London – –18 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காணும் பொங்கல், கணுப்பிடி, கனுப் பிடி என்று அழைக்கப்படும் பண்டிகை பொங்கலுக்கு மறுநாள் பெண்களால் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஞானமயம் ஒளிபரப்பில் அறிவித்தோம். ஸ்வர்ணலதா என்பவர் ஒரு பாடலை ணைப்பியிருக்கிறார். நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் தமிழ்நாட்டில் கிடைத்த கணேச சாஸ்திரிகள் பிரசுரத்தையும் அனுப்பி இருக்கிறார். இவைகளைப் படலாகப் பாடி எங்களுக்கு அனுப்ப  வேண்டுகிறோம்

கணுப் பண்டிகை பாடல் :

( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )

கணுப் பிடி வெச்சேன்

காக்காப் பிடி வெச்சேன்.

கணுப் பிடியும் 

காக்காப் பிடியும்

கலந்து நானும் வெச்சேன்.

பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்

பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்.

மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்

மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்.

காக்கைக்கும் குருவிக்கும் 

கல்யாணம்னு சொல்லி வெச்சேன்.

கலர் கலரா சாதம் வெச்சேன்

கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்.

வகை வகையா சாதம் வெச்சேன்

வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்.

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்

அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்.

இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்

இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்.

எள் சாதம் எலுமிச்சை சாதம்

ஏகாந்தமாய் நானும் வெச்சேன்.

கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்

கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்.

தூப தீபம் காட்டி வெச்சேன்

தூய மனதோடு நானும் வெச்சேன்.

கற்பூரம் ஏத்தி வெச்சேன்

கடவுளை வணங்கி வெச்சேன்.

ஆரத்தி எடுத்து வெச்சேன்

ஆண்டவனை வேண்டி வெச்சேன்.

கணுப் பிடி வெச்சேன்

காக்காப் பிடி வெச்சேன்.

கணுப் பிடியும் காக்காப் பிடியும்

கலந்து நானும் வெச்சேன்.

காக்கைக் கூட்டம் போல

எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்

SIVA THIRUMATHY SWARNALATHA

THANKS TO MRS SWARNALATHA

TAGS- காணும் பொங்கல், கணுப்பிடி, கனுப் பிடி

காயத்ரி மந்திரத்தின் பத்துப் பகுதிகள்! 24 எழுத்துக்களின் தேவதைகள்!(Post.9157)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9157

Date uploaded in London – –18 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காயத்ரி மந்திரத்தின் பத்துப் பகுதிகள்! 24 எழுத்துக்களின் தேவதைகள்!

ச.நாகராஜன்

மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படும் காயத்ரி மந்திரம் ஏராளமான சிறப்புக்களையும் ரகசியங்களையும் கொண்டது.

ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந:ப்ரசோதயாத் என்பது காயத்ரி மந்திரம்.

இதை மஹாகவி பாரதியார் அழகுற, “செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று தமிழில் தந்துள்ளார்.

அந்த மந்திரத்தைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்து அவற்றிற்குரிய தேவதைகள் நமது சாஸ்திரங்களில் தரப்பட்டுள்ளது.

அதை கீழே காணலாம்.

காயத்ரி பகுதி            தேவதை

தத்                     அனிருத்த

சவிது                   ப்ரத்யும்ன

வரேண்யம்              சங்கர்ஷண

பர்கோ                  வாசுதேவ

தேவஸ்ய               விஷ்ணு

தீமஹி                  தைஜஸ்

தியோ                   துரீய

யோ                    ப்ராஞா

ந:                      புருஷோத்தம

ப்ரசோதயாத்             நாராயண

வேதமாதா காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு தேவதை உண்டு.

அவற்றைக் கீழே காணலாம்:

த                 கேசவ

த்ஸ              நாராயண

வி                மாதவ

து:                கோவிந்த

வ                விஷ்ணு

ரே                மதுசூதன

ணி               த்ரிவிக்ரம

யம்               வாமன

ப                 ஸ்ரீதர

ர்கோ              ஹ்ருஷீகேச

தே               பத்மநாப

வ                தாமோதர

ஸ்ய              சங்கர்ஷண

தீ                 வாசுதேவ

ம                ப்ரத்யும்ன

ஹி               அனிருத்த

தி                புருஷோத்தம

யோ              அதோக்ஷஜ

யோ              நரசிம்ஹ

ந:                அச்யுத

ப்ர                ஜனார்தன

சோ               உபேந்த்ர

த                 ஹரி

யாத்              ஸ்ரீக்ருஷ்ண

ஸ்ரீமத்வரின் தந்த்ர ஸாரத்தில் காயத்ரியில் 24 எழுத்துக்கள் உள்ளது என்றும் இவை வர்ணங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த 24 வர்ணங்களுக்கு உரித்தான தேவதைகள் மேலே கூறியவாறு தரப்படுள்ளன. ஆகவே இவை வர்ண தேவதா என்று அழைக்கப்படுகிறது.

சாதகர்கள் இதை நன்கு அறிந்து காயத்ரி ஜபத்தை மேற்கொள்ள வேண்டும்.

***

tags- தேவதைகள், காயத்ரி மந்திரம், 24 எழுத்துக்கள்

PLEASE JOIN US TODAY MONDAY 18-1-2021

GNANA MAYAM BROADCAST

18TH  JANUARY 2021 MONDAY

Maitrim bhajata – SIGNATURE SONG

Prayer+ ANNOUCEMENT –

Mrs DAYA NARAYAN ‘S HYMN ON LORD SHIVA

S Swaminathan’s Tamil Talk read by Mrs Vaishnavi Anand  –

‘DOCTOR MURUGAN AND PATIENT ARUNAGIRINATHAR’

Dr. CHITRA, HONGKONG UNIVERSITY, ON ‘TAMILS AND  THAILAND ’-

MRS LAKSMI RAMASWAMY’S SONG —

BENGALURU Mr . S NAGARAJAN’S Talk ON SRI CHAKRA –

Mrs SRI VIDHYA from Dubai –Bharati Episode-5  – 

DR  N.  KANNAN on ALVARS –

Appr. 60 mts

XXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

 TAGS- PUBLICITY 18121

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 26 (Post No.9156)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9156

Date uploaded in London – –17 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -26

3-2-96

Saha is Co in English

We have lot of Co prefixed words in English.

Sahayudhwa in Sanskrit is co fighter

Sahakrtwa in Sanskrit is coworker

‘ஸஹ’ என்பது ஆங்கிலத்தில் Co/கோ என்னும் முன்னொட்டு ஆக  வருகிறது

Xxx

3-2-97

Buddhija- born out of knowledge

புத்திஐ = அறிவிலிருந்து பிறந்த

Buddha was enlightened

புத்தா – ஞானம் பெற்றவர்.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புத்தர், மஹாவீரர் என்ற பெரியோர்கள் பற்றிய குறிப்பே கிடையாது !!

ஐந்தாம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் மணிமேகலையில்தான் (Post Sangam Literature) அப்படிப்பட்ட குறிப்புகள் வருகின்றன.

Strangely ancient Sangam literature never mentioned Buddha or Ma-havira by name.

Tamil epics , dated between 5th and 7th centuries only mention them. Silapaadikaram and Manimegalai, twin epics, are dated between those two centuries. But the stories mentioned there happened around Sangam period, that is first three centuries of CE.

Xxx

3-2-99

Prajaah- citizens

Used in all indian languages.

Words used by commentators

பிரஜா- பிரஜைகள் = குடிமக்கள்

Xxx

3-2-101

Ajah- one who has no birth

Dwijah – one who has two births

Ancient Tamil literature called Brahmins with this term.

After initiation, sacred thread ceremony, they are born second time.

In very old days it was applied to first three castes.

அஜஹ = பிறப்பற்றவன்

அஜன் என்பது அயன் என்று தமிழ்மயமாக்கப்படும்.

தமிழில் ஜ- முதலிய சப் தங்கள் இல்லாத குறையே இதற்கு கா ரணம்.; மேலும் ஜ – என்னும் எழுத்து ய- ஆனதையும் காண்கிறோம்.

Another interesting factor is J becomes Y in Tamil, because Tamil has no

J, SH, SHA, SA AND HA

XXX

3-2-104

Jara – old age

ஜரா – மூப்பு , நரை

Gerontology- study of ageing

Jeerana is derived from Jru

‘ஜ்ரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து ஜீரணம், ஜரா  முதலியன பிறந்தன.

Old, gone, dilapidated etc

Jeerana is used in all medical books in Indian language s

Also temple renovations- Jeernodhdhaarana

கும்பாபிஷேகம், திருப்பணியின்போது ‘ஜீர்ணோத்தார’ என்ற சொல்லையும் பயன்படுத்துவர்.

Xx

3-2-110

Awaatsam – wide awake

அவாசம் – விழிப்பு நிலை

Aham atra awaatsam means

I was wide awake

Xxx

3-2-11

Yavana is mentioned by Patanjali

யவன என்பது தமிழ்ச் சங்க இலக்கியத்தில் 6 இடங்களில் வந்த போதிலும் அவை பெரும்பாலும் ரோமானியர்களையே குறிக்கும்.

யவனர்கள், அலெக்ஸாண்டர் படை சென்றபின்னர் , தனித்தனி இந்திய-கிரேக்க ராஜ்யத்தை உண்டாக்கினர். சாகேதம் மாத்யாமிகம் ஆகிய இடங்களை யவனர்கள்/கிரேக்கர்கள் .முற்றுகையிட்டனர் .

Sangam Tamil literature mentioned Yavanas six times. But they were Romans, not Greeks

Patanjali talked about the siege laid by the Greek s around Saketam and Maadhyamikam

Xxx

3-2-112

Abignaa- remembering

Abignjana Sakuntalam made this word know

N to everyone

Also living in Kashmir also remembered

Apignanamintum ninaivupatuththa.

அபிக்ஞானந்த சாகுந்தலம் – நினைவு கூறல்

Xxx

3-2-114

In the commentary of the sutra we come across two words

Lakshya

Lakshana

Tamil Ilakkiyam and Tamil Ilakkanam are derived from these two words

லக்ஷ்ய – இலக்கியம் ஆனது

லக்ஷண  இலக்கணம் ஆனது

Xxx

3-2-117

Prasna- question

PRasna – piracy hanai in Tamil

பிரஸ்ன = பிரச்சனை

Xxx

3-2120

Prati vachana- pathil

Prati becomes Pathi in Tamil.

பிரதி -பதில் வசன

–subham–

tags-tags- Tamil words in Panini-26

உலக இந்து சமய செய்தி மடல் 17-1-2021 (9155 B)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9155-B

Date uploaded in London – –17 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலக இந்து சமய செய்தி மடல் 17-1-2021

இன்று ஜனவரி 17 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

அன்பர்கள் கவனிக்கவும்

சென்ற வாரம் வரை திங்கட்கிழமைகளில்   ஒலி பரப்பப்பட்டு வந்த உலக இந்து சமய செய்தி அறிக்கை இனிமேல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலி பரப்பாகும் .

xxxx

முதலில் நல்ல செய்தியுடன் துவக்குவோம்……..

ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ரூ.5 லட்சம் நன்கொடை அளித்தார்.

உத்தர பிரதச மாநிலம் அயோத்தியில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 5.2 லட்சம் கிராமங்களுக்கு சென்று மக்களிடம் நிதி திரட்டும் திட்டம் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 27-ல் இப்பணிகள் முடிவடையும். இதனை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை கவனிக்கிறது. ரூ.20,000-க்கு மேல் நன்கொடை கிடைத்தால் அவற்றை காசோலையாக பெறுவது என முடிவு செய்துள்ளனர். நன்கொடையாக பெறும் பணத்தை 48 மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதுவரை ஆன்லைன் நன்கொடை மூலமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி சேர்ந்துள்ளது.

இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமான இயக்கத்தின் முன்னணி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர்  அலோக் குமார் தலைமையில் ஒரு குழு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தது. அவர்களிடம் 5 லட்சத்து 100 ரூபாயை தனது பங்களிப்பாக ஜனாதிபதி வழங்கினார்.

உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்ய நாத்  2  லட்சம் ரூபாயும்,

மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் 1 லட்சம் ரூபாயும்

கன்னட, தெலுங்கு, தமிழ் திரைப்பட நடிகை பிரனீதா சுபாஷ்  1 லட்சம் ரூபாயும்

கோவில் கட்ட நன்கொடை அளி த்துள்ளனர்

Xxxxx

பொன்னம்பல மேட்டில் மூன்று முறை காட்சி தந்தது மகரஜோதி

சபரிமலை ஐப்பன் கோவில் மகரவிளக்கு பூஜையின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு விழா ஜனவரி 14ம் தேதி  நடைபெற்றது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்டது.

18-ம்படி வழியாக சோபானத்திற்கு வந்ததை தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து சிலையில் ஆபரணங்கள் அணிவித்தனர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது.

தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகர ஜோதி காட்சி தந்தது. அப்போது சபரிமலையையே அதிர வைக்கும் சரண கோஷம் எழுப்பினர் பக்தர்கள்.

இந்த ஆண்டு பந்தளம் மன்னர் குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளதால், ராஜ பிரதிநிதியாக யாரும் பவனியில் வரவில்லை.முக்கிய திருவாபரண பெட்டியை, குருசாமி கங்காதரன் சுமந்து வந்தார்.
வரும் 18ஆம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. 19ஆம் தேதி வரை யில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். மகரவிளக்கு பூஜை முடிந்து 20ஆம்தேதி காலை 6.30மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. இத்துடன் இந்த ஆண்டிற்காக மண்டல பூஜை, மற்றும்மகர விளக்கு பூஜைக்காலம் முடிவடைகிறது.

Xxxx

ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறப்பு

ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பேருக்கு குறையாமல் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இட வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தை அமைச்சர் சுரேந்திரன் திறந்து வைத்தார்.

Xxxxx

“இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும்” – பிரதமர் மோடி

எக்காலமும் மாறாத அறத்தை எடுத்துரைக்கும் உலகப் பொதுமறை நூலான திருக்குறளை இவ்வுலகிற்கு வழங்கிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தினத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீப காலமாக பிரதமர் மோடி பல்வேறு இடங்களில் பேசும் போது. திருக்குறளின் பெருமைகள் குறித்தும், அதை அனைவரும் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என தான் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குவதாகவும், அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.

Xxxxxxx

பாக்., இந்துகோவில் இடிப்பு வழக்கு; 12 போலீசார் இடைக்காலப் பணிநீக்கம்

பாகிஸ்தானின் கைபர் மாகாணம் பாட்டன்குவா அரசு 12 பாகிஸ்தான் போலீசாரை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஓர் இந்துக் கோவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினரால் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. டெரி என்கிற கிராமத்தில் உள்ள இந்த இந்து கோவில் மிகவும் பழமையானது. இதற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் வருகை தருவர்.

இந்த கலவரத்துக்கு 33 பாகிஸ்தான் போலீசார் உதவிகரமாக இருந்ததற்காக இவர்கள்மீது ஓராண்டுக்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த மாகாணத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கோகட் ரீஜன் இதுகுறித்து விசாரணை செய்துவந்தார். இந்த வன்முறை சம்பவம் நடந்தபோது அதனை தடுக்க முயலாமல் அஜாக்கிரதையாக இருந்த 73 பாகிஸ்தான் போலீசார் மீது விசாரணை கமிஷன் வைக்கப்பட்டது. இதில் 12 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு இடைக்கால பணிநீக்கம் அளிக்கப்பட்டது.

XXX

திருவாவடுதுறையில் பொற்கிழி விழா

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் ஆலய ரதசப்தமி விழாவில், … இறைவன் பொற்கிழி அளித்த புராண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை .நடந்தது

மயிலாடுதுறை -கும்பகோணம் சாலையில் சென்று இத்தலத்தையடையலாம். திருவாவடுதுறை ஆதீனக் கோயில்.. இறைவி பசுவடிவில் வழிபட்ட பதி. ஆதீனமும் கோயிலும் ஒன்றையன்று அடுத்துள்ளன.

  1. ஞானசம்பந்தர், தன் தந்தையின் வேள்விக்காக இறைவனிடம் பொற்கிழி பெற்றது. 2) சுந்தரர் உடற்பிணி தீரப் பிரார்த்தித்தது, 3) திருவிடைமருதூரின் பரிவாரத் தலங்களுள் நந்தித் தலமாக விளங்குவது, 4) தேவர்கள் ‘படர் அரசு’ ஆக விளங்க அதன்கீழ் இறைவன் எழுந்தருளியது, 5) திருமூலர் தங்கியிருந்து தவம்செய்து திருமந்திரம் அருளியது, 6) போகசித்தருடைய மாணவராகிய திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்தியது, முதலிய எண்ணற்ற சிறப்புக்களையுடைய தலம்.

இரண்டாங் கோபுர வாயிலில் பெரிய நந்தியுள்ளது. பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்த இடமாகும்

XXXXX

கோவில்களை ஆன்மிக மையங்களாக மாற்றுங்கள் –சத்குரு ஜக்கி வாசுதேவ்

”அனைவரும் பயன்பெறும் விதமாக கோவில்களை ஆன்மிக மையங்களாக மாற்ற வேண்டும்,” என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கூறினார்.

ஈஷா யோகா மையத்தில் நடந்த மாட்டுப் பொங்கல் விழா நிறைவில் சத்குரு ஜக்கி வாசுதேவ்  நிருபர்களிடம் கூறியதாவது:உயிர் நாடியான காவிரி தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களில் ஓடுகிறது. மூன்று மாநிலங்களும் சேர்ந்து, அறிவியல் குழு அமைத்து, தண்ணீர் பெருக்கெடுப்பதற்கான ஆலோசனை அறிக்கையை ஆறு மாதத்துக்குள் பெற்று தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழகத்தில் நெல் வளர்ந்தால் அண்டைய மாநிலங்களில் விற்கமுடியாது. விவசாயிகளுக்கு இதில் விடுதலை அளித்து, எங்கும் விற்கும் நிலை உருவாக வேண்டும். அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு என்ற நிலை வர வேண்டும்.
கோவில்கள் ஆன்மிக மையங்களாக மாற வேண்டும். ஜாதி, மதம், பாலினம் பாகுபாடின்றி ஆன்மிக நோக்கத்துடன், கற்றுக்கொள்ளும் உணர்வுடன் வருபவர்களுக்கு இந்த மையம் பயனுள்ளாக இருக்க வேண்டும். 36 ஆயிரம் கோவில்கள் தமிழக அரசிடம் உள்ளது.

இதை படிப்படியாக செய்தால், எட்டு ஆண்டுகளில் சாதிக்க முடியும். அரசுதான் கோவில்களை நிர்வகிக்க வேண்டும் என நினைப்பது தவறானது. இவற்றுக்கு உறுதி கொடுப்பவர்களுக்குதான் எனது ஓட்டு. இவ்வாறு, ஜக்கி வாசுதேவ்  கூறினார்.

XXXXXXXXXXXXXXXXXXX

கடைசியில் ஒரு சுவையான செய்தி

கோயில் வாசலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்: வைரலாக பரவும் வீடியோ

மஹாராஷ்டிராவில் விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாய் ஆசி வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் விநாயகரை தரிசித்து விட்டு வெளியே வரும் போது நுழைவு வாசலில் அமர்ந்து கொண்டு நாய் ஒன்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும், சிலரிடம் கை குலுக்குவதுமாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை அருண் லிமாடியா என்பவர் மொபைலில் வீடியோவாக படம் எடுத்து முகநூலில் பதிவேற்றினார். அதன் வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர்.

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

TAGS- உலக, இந்து சமய,  செய்தி மடல் , 17-1-2021 , 

17-1-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post.9155-A)

ACTRESS PRANITHA SUBHASH

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9155-A

Date uploaded in London – –17 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

17-1-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXX

Please Note that

The World Hindu News Roundup is moved to Sundays from this week. Here afterwards the WORLD HINDU NEWS ROUNDUP will be broadcast on SUNDAYS.

HERE IS A SUMMARY FROM INDIAN NEWSPAPERS-

FIRST , NEWS ABOUT RAM TEMPLE IN AYOGHYA

President Kovind donates Rs 5 lakh for Ram temple

President Ramnath Kovind made the first contribution towards the construction of the Ram temple in Ayodhya by donating a sum of Rs 5,01,000. The President made the contribution to the Ram Janmabhoomi Teerath Kshetra Trust, set up by the government to look after the construction and management of the temple.

A delegation comprising Vishva Hindu Parishad’s international working president Alok Kumar, and others had come to DELHI to seek the President’s contribution for the construction to the temple.

“He is the first citizen of the country so we went to him to initiate this drive. He donated a sum of Rs 5,01,000,” ANI quoted VHP’s Alok Kumar as saying.

Uttar Pradesh chief minister Yogi Adityanath donated Rs 2 lakh for construction of the proposed Ram temple in Ayodhya on the inaugural day of the funds-raising drive of Vishwa Hindu Parishad.  

 Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan also handed over a cheque of Rs 1 lakh to VHP as a contribution to the construction of Ram temple. Former Bihar Deputy CM Sushil Kumar Modi also led a fund drive cause in Patna.

Film Actress Pranitha Subhash who predominantly appears in Kannada, Telugu and Tamil cinema has announced an initial pledge of Rs 1 lakh for the construction of the  Ram Mandir in Ayodhya.

Pranitha made this announcement in a twitter video.

The RSS will reach out to 5 lakh villages and ten crore families for collection of funds for Ram Temple in Ayodhya.

The construction of the grand temple of Lord Ram at the ancient city of Ayodhya is estimated to cost around Rs 1,100 crore, of which around Rs 300-400 crore will be the cost of building the main temple structure.

XXX

Kumbh Mela in Haridwar

Hindu pilgrims descended on the banks of the Ganges river in HARIDWAR ON Thursday, shrugging off Covid-19 risks for the start of the Kumbh Mela, a religious festival that regularly attracts millions.

“The pandemic is a bit of a worry, but we are taking all precautions,” said organiser Siddharth Chakrapani, who expected between 800,000 and a million people to attend on FIRST  DAY alone.

“I’m sure Maa Ganga will take care of their safety,” he added, referring to the river considered holy by the faithful.

According to Hindu mythology, gods and demons fought a war over a sacred pitcher containing the nectar of immortality. Drops fell at four different locations, which now alternate as hosts for the immense gatherings. Every four years Mini Kumbha Melas are held in different locations

Maha Kumbh Mela is recognised as a piece of intangible cultural heritage by UNESCO, and its last edition — in Prayag in 2019 — attracted around 55 million people over 48 days. That is held once in 12 years.

This year, beginning Thursday, Haridwar is the host, and several million people are expected to throng the holy city in Uttarakhand state over the coming seven weeks.

Holy men known as ‘sadhus’ are a regular feature at the Kumbh Mela, camping by the river and offering blessings to those who come for the holy immersion.

This week brings several other religious festivals in India, including the Gangasagar in Kolkata where officials expect around 15,000 people.

Madurai in the southern state of Tamil Nadu  hosted a bull-chasing carnival known as Jallikattu, where revellers grab hold of the beasts’ horns as they run through crowds of people.

XXXX

Kamadhenu puja held at Kanaka Durga temple in Vijayawada

Andhra Pradesh Chief Minister YS Jagan Mohan Reddy participated in the Kamadhenu Puja in Guntur district on Friday

The authorities of Sri Durga Malleswara Swamy Varla Devasthanams conducted Kamadhenu puja atop Indrakeeladri on the occasion of Kanuma on Friday.

The ‘go puja’ was simultaneously held at 2,679 temples across the State by Tirumala Tirupati Devasthanams as part of promoting Sanatana Hindu Dharma. 

Speaking to the media, temple executive officer MV Suresh Babu said the gopuja will be conducted daily from now onwards and the devotees can also participate in the ritual. 

The Executive Officer said that Chaturveda Homam will be performed at the temple from January 18 to 25. He also explained the importance of cow worship in the Hindu religion

IN THE MEANTIME……………………………….

Telugu Desam leaders met Governor Biswabhusan Harichandan on Thursday and submitted a representation seeking a CBI probe into the series of attacks on temples in ANDHRA PRADESH in recent days. They also sought removal of the Jagan-led government and imposition of President’s rule in the state.

THEY informed the governor that 140 temples were attacked since the YSR Congress came to power. This, they said, was a violation of fundamental rights of the people and dilution of Articles 25 and 26 providing religious freedom to the people.

 The Telugu Desam leaders alleged allotment of shops in Srisailam temple in violation of GO No. 426 to non-Hindus. The presence of these non-Hindus was affecting the sanctity of the temple as they sold meat, liquor and drugs, it was alleged

HERE IS ANOTHER NEWS ITEM FROM ANDHTRA………………….

 Goda Devi Kalyanam performed

Goda Kalyanam was performed in a traditional manner at Venkateswara Swamy temple in Dokiparru of Krishna district on Wednesday. The celestial wedding was performed to mark the conclusion of Dhanurmasam festivities by temple trustee PV Krishna Reddy and his wife Sudha Reddy. 

Along with Krishna Reddy’s family members, a large number of villagers and people from surrounding villages also participated in the event. The wedding known as Andal Kalyanam in Tamil Nadu,  was performed in a mandap decorated with colourful flowers.

XXXX

Makaravilakku IN Sabari Malai

Lakhs of Ayyappa devotees witnessed ‘Makara  jyothi’ in Sabarimala on 14th January.

Sabarimalai  hill temple, which used to witness a heavy rush on the occasion every year, was thronged by only a few thousand pilgrims due to the strict safety guidelines in place in the wake of the virus outbreak.

As per the government directive, only 5,000 pilgrims were permitted to climb the holy hills to offer prayers on the day, according toTravancore Devaswom Board (TDB) officials .


The portals of the shrine was thrown open after the ”deeparadhana” which was performed to the idol of Lord Ayyappa adorned with the holy jewels, ”Thiruvabharanam”.

The jewels were brought here, moments before the ”arti”, in a ceremonial procession, which started its journey a couple of days earlier from the Pandalam palace, where, according to legend, Lord Ayyappa was born and spent his childhood.

The ”Saranam Ayyappa” chants intensified when the ”makara jyothi”, considered a divine light by devotees, flickered across the eastern horizon above the Ponnambalamedu soon after the arti.

Meanwhile, state Devaswom Minister Kadakampally Surendran earlier said here that the Left government was prepared to extend all support for the developmentof Sabarimala.

Indicating the fall in revenue collection at the hill temple, he said only Rs 16 crore was collected till Tuesday in this season compared to the revenue of Rs 260 crore last year.

The minister also requested devotees to extend all help to the hill shrine.

xxxx

“VRINDAVANA MALIKA” CD Released

Vaishnavite Saint Andal’s ‘Naachiyar Thirumozhi’ Music CD by Vidushi Yamini Ramesh ,was released at Sri Ahobila Matam by His Holiness Srimath Azaghiyasingar. The function was held on 11th evening.

Special guests included U Ve Sri APN swamy.

Padmabushan Sangeetha Kalanidi Madurai TN Seshagopalan.

S Varadharajan (Violin Varadarajan) and Dr Smt Hema Sri Ranganathan

xxxx

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

 tags – Hindu News Roundup, 17121,