தொல்காப்பியத்தில் வட திசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?–1 (Post.8760)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8760

Date uploaded in London – –1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியம் என்னும்  பழந்தமிழ் நூலுக்கு — முதல் தமிழ் நூலுக்கு– பாயிரம் எழுதியவர் பனம்பாரனார் .

“வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுல   கத்து

வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்

…………………………”

இந்தப் பாயிரம் நமக்கு அரிய பெரிய செய்திகளை வழங்குகிறது.

முதல் செய்தி —

தமிழனுக்கும் சிந்து-ஸரஸ்வதி  நதி தீர நாகரீகத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. ஏனெனில் தமிழ் பேசிய பகுதிகள் தென்  குமரி முதல் வடவேங்கடம் வரைதான். திருப்பதிக்கு அப்பால் வேறு மொழிகள் வழங்கின. இதைப் பனம்பாரனார் மட்டும் சொல்லவில்லை; தொல்காப்பியத்துக்குப் பின்னர் 2000 ஆண்டுகளாக வந்த அத்தனை உரைகாரர்களும் சொல்கின்றனர் . அதுமட்டுமல்ல. 30,000 வரிகளைக் கொண்ட சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலும் கங்கை, இமயம், அருந்ததி, சப்த ரிஷிக்கள் முதலிய குறிப்புகள் உள . ஆனால் சிந்து நதி , சமவெளி பற்றிய குறிப்பே இல்லை. சிலர் இந்தியாவின் வடமேற்கில் வசித்த யவனர் பற்ரிய குறிப்புள்ளதே எனலாம். யவனர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆயினும் இஃது ரோமானியர்களையே குறிக்கிறது என்பதை பல அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

இரண்டாவது செய்தி

வடதிசை புனிதமானது !

கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் முதலியோர் வட திசை நோக்கி அமர்ந்து, உண்ணா விரதம் இருந்து, உயிர் துறந்ததை புறநாநூறு செப்பும்.

பாண்டவர் ஐவரும்  வட திசை நோக்கி பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர் துறந்ததை மஹாபாரதம்  செப்பும்.

வடதிசை கயிலை நோக்கி சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தி சுவாமிகள் சென்றதை பெரிய புராணம் செப்பும்.

பனம்பாரனாரும் ‘வட’வேங்கடம் என்ற சொல்லை முதலில் வைத்ததற்கு அதன் புனிதத் தன்மையே காரணம் என்று உரைகாரர்கள் புகல்வது படித்து இன்புறத்த தக்கது. அதில் இந்தியாவை அரச இலையின் வடிவத்துக்கு ஒப்பிடுவதும் இமயம் முதல் குமரி வரை புனித நிலப்பரப்பு என்று நவில்வதையும் படிக்கையில் ஆனந்தம் பொங்கும். வெள்ளைக்காரன் வந்து இந்திய ஒருமைப்பாட்டினை நமக்குக் கற்பித்தான் என்று உளறும் அரை வேக்காடுகளின் தலையின் பாறை இடி கொடுக்கும்.

இதோ உரைகாரர்களின் விளக்கம். சிவஞான முனிவரின் ‘தொல்காப்பிய விருத்தி’ நூலுக்கு திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் எழுதிய விளக்கவுரையிலிருந்து எடுக்கப்பட்டது —

1

தமிழ் நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையும்  உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . அகத்தியனார்க்குத் தமிழைச் செவி அறிவுறுத்த செந்தமிழ் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி என்பது . தெற்கட்  குமரியாறாகலின் , அதுவே எல்லையாயிற்று . கிழக்கு, மேற்கு கடல் எல்லையாகலின் , வேறெல்லை கூறா ராயினர் .

“வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்

தென்திசை யுள்ளிட்  டெஞ்சிய மூன்றும்

வரைமருள் புணரியொடு பொருதுகிடந்த

நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண்

யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே”

என்று சிறுகாக்கைப்பாடினியார் தெற்குங் கடலெல்லை கூறியது , குமரியாறு கடல்கொண்ட பிற்காலத்துச் செய்ததென அறிக

ஈண்டு வடக்கை முற் கூறியதற்கும் , வேங்கட முதலிய இடங்களைக் குறித்தமைக்கும் ஆசிரியர்களால் காரணங்கள் தனித்தனியே  கூறப் பெறுகின்றன–

சிவஞான முனிவர் —

வேங்கடம் வடக்கின் கண்ணுள்ளது என்பதும்  குமரி தெற்கின்  கண்ணுள்ளது என்பதும் உலகறிந்ததொன்று . அவற்றைத் திசையுடன் சேர்த்து வடவேங்கடம் தென் குமரி என்றதற்குக்  காரணம் திசை கூறி எல்லை கூறுதலே முறைமையாதலின் என்க.

நச்சினார்க்கினியர் —

மங்கல மரபிற் காரியஞ் செய்வார்  வடக்கும் கிழக்கும் நோக்கியும் சிந்தித்தும் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசை முற் கூறப்பட்டது என்பர் .

(இங்கே நமக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கிறது; சுப காரியங்களை முடிவு செய்கையில் நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்ய வேண்டும்.)

அரசஞ்சண்முகனார் —

வடக்கு எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தன்னோடு ஏனைத்திசையையும் உணர்த்தற்குத் தானே காரணமாய்நிற்கும் மங்கலத் திசையாகலின்  தம்பாயிரமும் நூலும் நின்று நிலவுதல் வேண்டி முற்கூறப்பட்டது . மற்றும் என்றும் மாறாத துருவ நட்சத்திரத்தை அடையாளமாகக் கொண்டு அறியப்படுத்தலானும் இற்றைய விஞ்ஞான திசையறி கருவி எ ஞஞான்றும் வடக்கையே காட்டலானும் கூறினார்  எனவும் உரைப்பர் .

உலக வழக்கில் தென்வடல் , கீழ்மேல் எனவே எல்லை கூறும் வழி ஆடசியுண்மையானும் யாண்டும் வடக்குத்தெற்கு -மேல் கீழ் என்ற வழக்காறிண்மையானும்

“இரு திசை புணரின் ஏயிடைவருமே “

என்னும் சூத்திரத்தினும் ‘தெற்கே வடக்கு கிழக்கே மேற்கு’ என்ற வழக்குண்மையே எடுத்துக் காட்டப் பெறுதலானும் , இக்கூறிய இவைகளேயன்றிப் பிற காரணங்களும் உளவாதல் வேண்டும். . அவை – திசைகளுள்  வடக்கும் தெற்கும் பெருந்திசைகளாக, இமயம் முதல்  குமரி வரையுள்ள  நிலப்பரப்பைக் கொண்டு உணரப்பெற்று வந்தன .

‘திரிபு வேறு கிளப்பின் ‘ என்னுஞ் சூத்திரத்துக்குப் பெருந்திசைகளோடு கோணத்  திசைகள் புணரின்  என்று உரையெழுதப்பெறுவதும்  ‘பெருந்திசை’ என்ற வழக்குண்மையை வலியுறுக்கும் .

அரச இலை = இந்தியா !

இமயமுதல் குமரி வரையுள்ள நிலப்பரப்பு ஓரரசிலைபோல்வது .அதன் அடிப்பகுதி வடக்கு; அகன்று பரந்து கிடப்பது. அதன் நுனி போல நீண்டு ஒடி வளைந்த பகுதி தெற்கு. ஆதலால் அகன்று பந்த வடபகுதியை முற்கூறி , நீண்டு பரந்த தென் பகுதியைப் பிற்  கூறினார் எனலுமாம். . காந்த மலையும் வடவைத் தீயும் இருத்தலிற் கூறினார் என்றலுமாம் .

புறநானுற்றில்  இமயம் !

இங்ஙனமே புறத்தினும்

‘வடா அது பனி படு நெடுவரை வடக்கும் – தெனாஅது  உருகெழு குமரியின் தெற்கும்’  எனவும், சிகண்டியார்

‘வேங்கடங்குமரி   தீம்புனற் பவ்வமன்று – இந்நான் கெல்லை  தமிழது வழக்கே ‘ எனவும் , காக்கைபாடினியார்

‘வடக்குந் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடங் குமரி கீழ் புனற் பவ்வமமென் – றன் நான்கெல்லை  யகவயிற் கிடந்த நூல் ‘ எனவும் வழங்குதலான் உணர்க.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் நச்சி. சொல்லும் ஒரு அரிய செய்தி எகிப்திய நாகரீகத்திலும் உள்ளதைக் காண்போம்.

To be continued…………………………………

tags– வட திசை, வடவேங்கடந் தென்குமரி,

தலையாய ஹிந்து மகனை, முன்னணித் தலைவரை இழந்தோமே! (Post.8759)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8759

Date uploaded in London – – 1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தலையாய ஹிந்து மகனை, முன்னணித் தலைவரை இழந்தோமே!

ச.நாகராஜன்

இன்று 30-9-20 மாலை கிடைத்த செய்தி மனதையும் உடலையும் வெகுவாக பாதித்து நோகவைத்து செயலற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டது.

மானனீய கோபால்ஜி நம்மிடையே இல்லை என்ற செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் நினைவுகள் அலை அலையாய் நினைவில் வந்து மோதுகின்றன.

ஒன்றா, இரண்டா ஒரு நூற்றுக்கும் மேற்பட்ட அற்புத நிகழ்வுகள்.

வருடம் 1968.

சந்திரசேகர் என்ற நண்பர், ‘இராம கோபாலன் எனது வீட்டில் இருக்கிறார், வருகிறீர்களா’ என்று கேட்டார்.

கரும்பு தின்னக் கூலியா, ஆர் எஸ் எஸ் இயக்க பிரசாரக் என்றால் பார்ப்பதற்கு கேட்கவா வேண்டும், உடனே புறப்பட்டோம்.

அவரைச் சந்தித்த முதல் சந்திப்பே காந்தத்தால் இரும்புத் துளிகள் இழுப்பது போல இருந்தது. இழுக்கப்பட்டோம்!

முதல் சில நிமிடங்களில் அவர் பேசியதையே நாங்கள் உடனடியாக வீட்டில் வந்து ‘கமெண்ட்’ அடித்த போது விவேகானந்தரைப் பார்த்தது போல இருக்கிறது என்று பேசினோம்.

பின்னர் ‘சங்க வேலையாக’ அவருடன் நெடுங்காலம் தொடர்பு ஏற்பட்டது.

எங்கள் வீட்டில் அவருக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு என்ற நிலை ஏற்பட்டது.

இறுதியாக நான் அவரைத் தொடர்பு கொண்டது சில நாட்களுக்கு முன்னர்.

மதுரையில் உள்ள பெருமாள் தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்ரமிக்கப்பட்டிருந்த கடைகள் இடிக்கப்பட்டன என்ற செய்தியை உடனே அவருக்குத் தெரிவிக்க போன் செய்தேன். அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில் அவரது உதவியாளரிடம் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.ஏனெனில் இதற்காக உற்சாகமும் உத்வேகமும் அவரிடமிருந்தும் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு கமிட்டியின் செயலாளர் திரு எம்.ராமசாமியிடமிருந்தும் பெற்றிருந்தேன்.

மதுரையில் ஆத்திக சமாஜங்களை ஒன்றிணைத்து ஊர்வலம் நடத்தினோம்.

ஆலயப் பாதுகாப்பு மாநாட்டின் மதுரை செயலாளராக இருந்து எட்வர்ட் ஹாலில் பெரிய மாநாடு நடத்தினோம். அதில் முக்கிய தீர்மானமாக இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருந்தோம்.

இதற்கு முன்னர் சில மாதங்களுக்கு  முன்னதாக அவரே என்னை அழைத்தார் போனில்.

மாலைமலரில் வெளியான எனது கட்டுரை ஒன்றை அவர் பாராட்டினார்.

ஏன் பேசவில்லை என்று அவர் என்னைக் கேட்ட போது அவருக்குள்ள இடைவிடாத பணியில் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை என்றேன். ‘இல்லை பேசு’ என்று அவரது தனி செல் நம்பரைத் தந்தார்.

பாராட்டத் தயங்காத பெரிய உள்ளம் கொண்டவர் அவர். அவரது உடலில் உள்ள ஒவ்வொரு திசுவும் ஹிந்து சிந்தனை கொண்டதே.

மகா தைரியசாலி.

கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறையை சில விஷமிகள் தகர்க்க  முயன்ற போது கடல் நீச்சுக்காரர்களுடன் படகில் சென்று விஷமிகளை எதிர் கொண்டு அவர்களை எச்சரித்தது யாரும் அறிந்திராத ஒன்று. விளம்பரத்தை விரும்பாதவர் அவர்.

காலையில் 4  மணிக்கு எழுந்து காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பல யோகாசனங்களைச் செய்வது அவர் பழக்கம். நாள் தவறாமல் இதைச் செய்யும் அவர் உடனடியாக சஙகப் பணிக்கு ஆயத்தமாவார். இரவு நெடு நேரம் வரை பணி தொடரும்.

இடைவிடாத பயணத்தை மேற்கொண்ட அவர் தமிழ்நாட்டில் செல்லாத ஊரே இல்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவு நெருங்கிய தொடர்பை அனைத்து சங்க ஸ்வயம்சேவகர்களுடனும் அவர் கொண்டிருந்தார்.

பெரிய எழுத்தாளர். நல்ல மொழிபெயர்ப்பாளர். பல்மொழி வல்லுநர்.

எழுமின் விழிமின் என்ற புத்தகத்தை அவர் தான் அற்புதமாக மொழிபெயர்த்தவர் என்பதை வெகு சிலரே அறிவர். விவேகானந்தரின் அற்புதமான உத்வேகமூட்டும் உரைகளைக் கொண்டது இந்த நூல். இது ARISE! AWAKE என்று ஆங்கிலத்தில் ஏக்நாத்ஜி ரானடே அவர்களால் தொகுக்கப்பட்டது.

 தொட்டதெல்லாம் தங்கமாகும் என்ற மொழிக்கேற்ப அவர் தொட்ட ஒவ்வொருவரும் ஹிந்து சிந்தனை கொண்ட பெரும் தொண்டராக மாறினர்.

பலர் கவர்னராக ஆகி உள்ளனர். பலர் தேசியத் தலைவர்களாக பாரத நாட்டுத் தொண்டில் இன்று ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் அவலமான அரசியல் நிலையைப் போக்க் அவர் ஹிந்து முன்னணியைத் தொடங்கினார்.

ஹிந்து முன்னணி ஆற்றிய, ஆற்றி வரும் அற்புதப் பணிகள் மகத்தானவை.

இன்று தலையாய ஒரு ஹிந்து மகனை, முன்னணித் தலவரை இழந்து வாடுகிறோமே!

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைவதாக. அவரது நினைவே நமக்கு உத்வேகம் ஊட்டி நமது பணியைத் தொடரச் செய்யுமாக!

***

tags- ஹிந்து முன்னணி, இராம கோபாலன், கோபால்ஜி

மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 2 (Post No.8758)

மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 2

ச.நாகராஜன்

ஆபஸ்தம்பரைப் பற்றி பிரம்ம புராணம் கூறும் இன்னொரு சம்பவம் இது :

ஒரு முறை அகஸ்திய மஹரிஷி ஆபஸ்தம்பரின் ஆசிரமத்திற்கு வந்தார்.ஆபஸ்தம்பர் தன் சிஷ்யர்களோடு கூட அகஸ்தியரை நன்கு வரவேற்று உபசரித்தார்.

பின்னர் அவரிடம் கேட்டார்: “ஓ! மஹரிஷியே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய இந்த மூவரில் எவர் மிகவும் பூஜிக்கத் தகுந்தவர்? எவரிடமிருந்து சுகானுபவத்தையும் முக்தியையும் அடைய முடியும்? எவர் அன்ன தாதா? எவர் அழிவற்றவர்? எவர் தேவர்களுக்கெல்லாம் தேவர்? எவர் யாகங்களால் பூஜிக்கப்படுகிறார்? வேதங்கள் யாருடைய புகழை விசேஷித்துச் சொல்கின்றன? எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சந்தேகங்களைத் தயவுசெய்து தீர்த்தருள்வீராக.”

அகஸ்தியர் உடனே அவரை நோக்கிப் பின்வருமாறு நீண்ட பதிலை உரைத்தார்:” அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய இந்த நான்குமே உலகில் உலகியல் பிரமாணமாகச் சொல்லப்படுகிறது. இந்த நான்கு சப்தங்களை விட வேத சப்தமே முக்கியமான பிரமாணமாகச் சொல்லப்படுகிறது. வேதத்தால் எவர் துதிக்கப்படுகிறாரோ அவரே பராத்பரர்.

அபரர் என்பது யார் என்றால் ம்ருதர் – அதாவது அழியை அடைபவர்.

பரர் என்பது யார் என்றால் அம்ருதர் – அதாவது அழிவை அடையாமல் என்றும் இருப்பவர்.

எவர் சரீரம் இல்லாதவரோ அவரே பரர்.

சரீரமுள்ளவர் அபரர்.

அபரன் என்பது குணம், ரூபம், வியாபகம் ஆகிய இவற்றின் வேறுபாடுகளினால் – அதாவது பேதங்களால் – மூன்று விதங்களாக மாறுகிறது. ஒருவரே பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று விதமாகச் சொல்லப்படுகிறார். இம்மூன்று பேர்களில் அறியத்தக்கதான பதார்த்தம் ஒன்று தான். அது தான் பரம் என்று சொல்லப்படும். அந்தப் பரம் என்ற பொருளே உலகத்தின் நன்மையின் பொருட்டு வியாபகம், குணம், செயல் ஆகிய பேதங்களாக இப்படி மூன்று ரூபங்கள் உள்ளதாக ஏற்படுகிறது.

இதுவே முக்கியமான உண்மை.

இதை எவன் ஒருவன் அறிகிறானோ அவனே வித்வான். (கற்றறிந்தவன்)

இந்த விஷயத்தில் எவன் ஒருவன் பேதத்தைச் சொல்கிறானோ அவன் லிங்கபேதி என்று சொல்லப்படுகிறான்.

அப்படிப்பட்டவனுடைய பாவத்திற்குப் பிராயச்சித்தமே கிடையாது.

இந்த மூன்று தேவர்களுடைய மூர்த்தி பேதமானது வேதத்தில் தனித்தனியே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரீரம் இல்லாமல் இருக்கும்படியான அந்த ஒரே பதார்த்தமாகிய பரம் மேற்சொன்ன மூன்றிலும் மேலானதாகும்.”

என்று இப்படி முடித்த அகஸ்தியரை நோக்கி ஆபஸ்தம்பர் கேட்டார்:” நீங்கள் கூறிய இந்த பதிலில் எனக்கு எந்த வித நிச்சயமும் ஏற்படவில்லை. என்றாலும் கூட அதற்குள் ரகசியமாய் இருக்கும் விஷயத்தை எனக்குச் சொல்வீராக!”

அகஸ்தியர் உடனே, “ இந்த மூன்று உலகங்களிலும் ஒருவருக்கொருவர் பேதம் என்பதே கிடையாது. என்றபோதிலும் மங்கள ரூபமாய் இருக்கின்ற சிவனிடமிருந்தே  எல்லா சித்திகளும் உண்டாகின்றன. அவரே இந்த ஜெகத்திற்குக் காரணம். அவரே ஜோதி ரூபமாக விளங்குகிறார். ஆகவே தண்டகாவனத்தில் உள்ள கௌதமி நதிக்கரை ஓரத்தில் சேவிப்பவர்களின் பாவத்தைப் போக்கும் பரமசிவன் இருக்கிறார். அங்கு சென்று மிகுந்த பக்தியுடன் அவரை பூஜித்து வாரும்” என்றார்.

இதைக் கேட்ட ஆபஸ்தம்பர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.

நேராக கங்கை நதிக்குச் சென்று அங்கு ஸ்நானம் செய்து பரமசிவனை நோக்கி இப்படித் துதித்தார்:-

“ கட்டைகளில் நெருப்பும், மலர்களில் வாசனையும், விதைகளில் மரமும், கற்களில் தங்கமும் போல  எல்லாப் பிராணிகளிலும் எவர் மறைந்திருக்கிறாரோ அப்பேர்ப்பட்ட சோமநாதரை நான் சரண் அடைகிறேன்.

எந்த பரமசிவன் விளையாட்டினால் ஜெகங்களை சிருஷ்டித்து காப்பாற்றி வருகிறாரோ, எவர் விஸ்வரூபரோ, எவர் ஸத்துக்கும், அஸத்துக்கும் மேலானவரோ, எந்த ஒருவரை நினைத்த மாத்திரத்தில் ஒருவன் தரித்திரம், பாபம், சாபம், ரோகம் ஆகியவற்றின் கொடுமைகளிலிருந்து பாதிக்கப்படாமல் இருக்கிறானோ எவரால் ஆதியில் பிரம்மா முதலியவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட தர்மத்தை அறிந்து அதில் ஆசை கொண்டார்களோ, யாரால் இவ்விதம் இரு சரீரங்களை அடைந்தார்களோ, மந்திரத்தினால் பரிசுத்தமாயிருக்கிற நமஸ்காரமும் அக்னியில் ஹோமம் செய்யப்பட்ட பதார்த்தமும் எவரைச் சென்று அடைகிறதோ, எவரைக் காட்டிலும் வேறொரு பிரசித்தமான வஸ்து இல்லையோ, எவரைக் காட்டிலும் பெரிது, சிறிது வேறொன்றும் இல்லையோ, எவரது ஆணையால் இந்த உலகம் ஆச்சரியகரமாகவும், பெரிதாகவும் இருக்கிறதோ, எவரிடத்தில் ஐசுவரியம், கர்த்தத்வம், மகத்துவம், அன்பு, கீர்த்தி, சுகம், சாஸ்வதமான தர்மம் ஆகிய அனைத்தும் இருக்கின்றனவோ, யார் எல்லோரையும் காக்கிறாரோ, சரணம் அடைந்தவர்களிடம் யார் ஒருவர் பிரியமுடன் இருக்கிறாரோ அந்த சோமேஸ்வரரை நான் சரணடைகிறேன்.”

இந்த ஸ்தோத்திரத்தினால் மகாதேவர் சந்தோஷமடைந்து ஆபஸ்தம்பர் முன் தோன்றினார்.

ஆபஸ்தம்பர் மகாதேவரிடம், “ யார் ஒருவர் இவ்விடத்தில் ஸ்நானம் செய்கிறார்களோ, அவர்கள் இஷ்டப்படி அனைத்தையும்  அடைய வேண்டும்” என்று தனக்காகவும் மற்ற அனைத்து மக்களுக்காகவும் இப்படி வேண்டினார்.

பரமசிவனும்,” அப்படியே ஆகுக” என்று கூறி அனுக்ரஹித்தார்.

அது முதல் அந்த தீர்த்தம் ஆபஸ்தம்ப தீர்த்தம் என்ற பெயரில் பிரஸித்தம் அடைந்தது.

அதில் ஸ்நானம் செய்பவர்கள் வெகு காலம் தன்னைத் தொடர்ந்து வரும் அஞ்ஞான இருளிலிருந்து நீங்கி ஞான ஒளியைப் பெறுவான் என்ற நிலை உருவானது.

மஹரிஷி ஆபஸ்தம்ப சூத்ரத்தை அனுஷ்டிப்போர் இன்றும் ‘ஆபஸ்தம்ப சூத்ர:’ என்று தங்கள் சூத்ரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது.

***  (முற்றும்)

tags —ஆபஸ்தம்பர்! –2

அன்னம்/ உணவு பற்றிய 7 பழமொழிகள் என்ன? (Post 8757)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8757

Date uploaded in London – –30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

அன்னம் இட்டாரைக் கன்னம் இடலாமா

அன்னமயம் பிராண மயம்

அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்

அன்னம் மிகக் கொள்வானும் ஆடை  அழுக்கு ஆவானும் பதர்

அன்னம் முட்டானால் எல்லாம் முட்டு

அன்னம் இறங்குவதே அபான வாயுவால்

அன்னத்தில் புத்தி கூர்மையேயன்றி வித்தையில் புத்தி கூர்மையில்லை

tags– அன்னம்/ உணவு , பழமொழிகள்

SWAMI CROSS WORD 30920 (Post No.8756)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8756

Date uploaded in London – –30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1 2 3 456 7
      8    
9     10    
           
11     12    
    13      
      14.    
15          
16     17    
18          

ACROSS-

1. –11letters—FOUNDER OF HINDU FRONT IN TAMIL NADU

8.—5—CAPITAL OF KUBERA AS PER SIVA PURANA

9 — 6—FIRST AND FOREMOST GOD IN HINDU PANTHEON

10.—4—WHERE JAIN TIRTHANKARA MAHAVIR DIED IN UTTAR PRADESH

11.—5—FASTING IN HINDUISM; VOW

12.—5—NAIL IN SANSKRIT AND OTHER INDIAN LANGUAGES

13.—4—WORLD’ S FIRST LAW GIVER

14.—5—CHILD, BABY

15.—6—UNTRASLATABLE  HINDU WORD FOR ALL GOOD THINGS

16—6—FAVOURITE STAR OF MOON

17.—5—LOWER CASTE PEOPLE OF MAHARASHTRA

18.—9—HALF SIVA, HALF GODDESS FORM

*******

DOWN—

1.—11—MANTRALAYA MAHAN

2.—8—ONE WHO CHURNS  OUR MIND

3.—6—SLOGAN, RECITATION  SOUND

4.—9—ONE WHO DESTROYS PAPA, TWO TOWNS  ARE IN TAMIL NADU

5.—5—MELODY IMPROVISATION,

6.—8—TWINS IN RAMAYANA

7. – – 10—HAND GESTURES IN BHARATA NATYA DANCE

founder of Hindu Front

tamilandvedas.com, swamiindology.blogspot.com

crossword, 30920,

–SUBHAM–

தகுதி, திறமை பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.8755)

அக்டோபர் 2020 நற்சிந்தனை காலண்டர்

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 8755

Date uploaded in London – –30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – 2-காந்தி ஜெயந்தி , 17-நவராத்ரி ஆரம்பம், துலா விசு புண்ய காலம்; 

25-சரஸ்வதி பூஜை,  26-விஜய  தசமி, தசரா .

பவுர்ணமி -1, 31;  அமாவாசை -16; ஏகாதசி விரதம் – 13, 27

முகூர்த்த தினங்கள் – 18, 26, 29, 31

கடந்த எட்டு ஆண்டுகளில் 3000 தமிழ் பொன்மொழிகளையும் 3000 ஆங்கிலப் பொன்மொழிகளையும் ஸப்ஜெக்ட் -வாரியாக SUJECT WISE தமிழ், ஸம்ஸ்க்ருத புஸ்தகங்களிலிருந்து கொடுத்துள்ளேன். எனக்கே வியப்பு; எல்லாம் இறைவன் செயல்.

அக்டோபர் 1 வியாழக்கிழமை

அயோக்ய புருஷோ நாஸ்தி , யோஜகஸ் தத்ர துர்லபஹ – சுபாஷித ரத்ன பாண்டா காரம்

உலகில் உதவாக்கரை என்று எவருமிலர் ; அவரவர் திறமையைக் கண்டு உபயோகிக்கும் ஆட்கள் தான் இல்லை .

***

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை- GANDHI JAYANTI

அதி ப்ரவ்ருத்தா சால்மலி வாரணஸ்தம்போ  ந பவதி – சாணக்கிய நீதி சாஸ்திரம்

இலவம் பஞ்சு மரம் எவ்வளவு உயர வளர்ந்தாலும் யானையைக் கட்டிப்போட உதவாது.

****

அக்டோபர் 3 சனிக்கிழமை

அயோக்யாய பதம் தத்தம் ஸர்வதா ஹானிக்ருத் பவேத் – கே ஆர்

தகுதியற்றவனிடம் பொறுப்பை ஒப்படைப்பது எல்லாவகையிலும் ஆபத்து

***

அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை

குருட்டுப் பூனை விட்டத்தில் பாயும்

***

அக்டோபர் 5 திங்கட்  கிழமை

தக்கார் தக்கவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும் – திருக்குறள் 114

ஒருவன் இறந்தபின்னர் நிற்கும் புகழோ வசையோ அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் .

***

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை

இதனை இதனால் இவன் முடிக்கும்  என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல் – திருக்குறள் 517

யார் எதை திறமையாக செய்வார் என்று சிந்தித்து அந்த வேலையை அவனுக்குக் கொடு.

***

அக்டோபர் 7 புதன்  கிழமை

அங்கணம் சம்ஸ தே வக்ரம் நர் தனே குசலோ ஜனஹ

ஆடத் தெரியாத தேவடியாள் தெருக்கோணல் என்றாளாம்

***

அக்டோபர் 8  வியாழக்கிழமை

யோக்யம் யோக்யாய தாதவ்யம் – ஸதோபதேச ப்ரபந்த

தகுதியுள்ளவருக்கு தகுதியானதைத் தாருங்கள்

***

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை

யோக்யேனார்த்தஹ  கஸ்ய ந ஸ்யாஜ்ஜனேன – சிசுபால வதம்

தகுதியுள்ள மனிதர்களால் பயன் அடையாதோர் உண்டா

***

அக்டோபர் 10 சனிக்கிழமை

யோ யஸ்மின் கர்மணி குசலஹ ஸ தஸ்மின் நியோக் தவ்யஹ- சாணக்கிய நீதி

யாருக்கு எந்த வேலையில் திறமை இருக்கிறதோ  அவரிடம் அந்த வேலையை ஒப்படை

***

அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை

சகடம் ச்வா ந கர்ஷதி – கே ஆர் கஹாவத் ரத்னாகர்

வண்டியை இழுக்க நாய் உதவாது

***

அக்டோபர் 12 திங்கட்  கிழமை

மந்தார மாலா மாலோக்ய மாலத்யாம் கோ ஹி  சாதரஹ –  ப்ருஹத் கதா மஞ்சரி

தேவ லோக மந்தார மலர் மாலை கிடைத்த பின்னர் , மல்லிகையை நாடுவோமா

****

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை

கையில் வெண்ணெய் இருக்கையில் நெய்க்கு அலைவாருண்டா ?- தமிழ் பழமொழி

****

அக்டோபர் 14 புதன்  கிழமை

சிறு துரும்பும் பல்குத்த உதவும் (யாரையும் ஒதுக்காதீர்கள் )

****

அக்டோபர் 15  வியாழக்கிழமை

ஹேம் நஹ சம்லக்ஷ்யதே ஹயக்நெள விசுத்திஹி ஸ்யாமிகாபி – ரகு வம்சம் 1-10

தங்கத்தின் தூய்மையை நெருப்பில் பரிசோதிப்போம்

(ஒருவரின் தன்மை/தகுதி  கஷ்டம் வரும்போது தெரிந்து விடும்)

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை

பாரிஜாத லதாபருங்கொ ந ஹி  ஜாதிஷு சாதராக -ப்ருஹத் கதா மஞ்ச ரி

பாரிஜாத மலரை மொய்க்கும் வண்டு, மல்லிகைப்  பூவுக்கு மதிப்பு தராது

அக்டோபர் 17 சனிக்கிழமை- NAVARATRI BEGINS- DOLL DISPLAY IN SOUTH INDIAN HOMES

தன்  முதுகு தனக்குத் தெரியாது (தன்னைப் பற்றி மற்றவர் கருத்தைக் கேட்கவேண்டும் )

அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை

வெளவிய கருமம் எண்ணித் துணி – தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 19 திங்கட்  கிழமை

வீர சூரனானாலும் முன்படை வேண்டும் (டீம் ஒர்க் team work அவசியம்) தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் ; முயற்சி திருவினை ஆக்கும் —தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 21 புதன்  கிழமை

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ—நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?– பாரதி பாடல் (Good Things/People are available from unexpected places)

XXX

அக்டோபர் 22 வியாழக்கிழமை

“முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே-

அப்பர் தேவாரம் – பழமொழிப்பதிகம்

அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

“கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே-

அப்பர் தேவாரம் – பழமொழிப்பதிகம்

அக்டோபர் 24 சனிக்கிழமை

சுகஹ ஸ்லோகான் வக்தும் ப்ரபவதி ந காகஹ க்வசிதபி – ஸுபாஷித ரத்னாவளி

கிளிதான் ஸ்லோகங்களைத் திரும்பச் சொல்லும்   காகத்தினால் ஒருபோதும் செய்ய முடியாது

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை- Sarasvati Puja

தலைவனை நம்பாதே ; தத்துவத்தை நம்பு –தமிழ்ப் பழமொழி (YOU DON’T NEED TO IMITATE YOUR BOSS; BUT STICK TO PRINCIPLES/ RULES)

அக்டோபர் 26 திங்கட்  கிழமை- Vijaya Dasami

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்- தமிழ்ப் பழமொழி

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் PRACTICE MAKES PERFECT

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை

புராண மித்யேச்வ ந சாது சர்வம் –மாளவிகாக்னி  மித்ரம்

பழமை என்பதால் மட்டும் பெருமை சேர்ந்துவிடா து

அக்டோபர் 28 புதன்  கிழமை

வ் ருதா வ்ருஷ்டிஹி ஸமுத்ரேஷு – சாணக்கிய நீதி 11-12

கடலில் பெய்யும் மழை எல்லாம் வீண் (தகுதியற்றவருக்கு பதவி கொடுப்பது வீண் )

*****

அக்டோபர் 29 வியாழக்கிழமை

ந பேகஹ கோகநதிநீ கிஞ்சல்கா வாத கோவிதஹ – கதா சரித் சாகரம்

செந்தாமரையின் மகரந்தத் தாதுக்களை அனுபவிக்க தவலைக்குத் தகுதி இல்லை

****

அக்டோபர் 30  வெள்ளிக்கிழமை

ந ஹி  தாபயிதும் சக்யம் சாகராம்ப ஸ் த்ருனோ நுகயா – ஹிதோபதேசம்

கடல் நீரை வைக்கோல் தீப்பந்தத்தைக் கொண்டு  சூடுபடுத்த முடியாது

அக்டோபர் 31 சனிக்கிழமை

வினைக்கண் வினையுடையான்  கேண்மை வேறாக

நினைப்பானை நீங்கும் திரு – Tirukkural 519

நன்றாக வேலை செய்பவனின் நட்பை இழந்தால் , உள்ளதும் போய்விடும்

TAGS– தகுதி, திறமை, பொன்மொழிகள் ,அக்டோபர் 2020 காலண்டர்

—SUBHAM–

மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 1 (Post No.8754)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8754

Date uploaded in London – – 30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி ஆபஸ்தம்பர்! – 1

ச.நாகராஜன்

கீர்த்திமானும், புத்திமானுமான ஒரு மஹரிஷி இருந்தார். அவர் பெயர் ஆபஸ்தம்பர்.

அவருக்கு மிக்க பதிவிரதையான அக்ஷசூத்ரை என்ற மனைவி இருந்தாள். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் கற்கி.

ஒரு பிரார்த்தனையையும் இரு மந்திரங்களையும் கொண்ட ‘க்ருஹ்ய சங்க்ரஹசூத்ரா’ என்பதை அருளியவர் ஆபஸ்தம்பர்.

ஸ்மிருதி கர்த்தாக்களில் ஒருவரான ஆபஸ்தம்பர் க்ருஹ்ய சூத்திரத்தை இயற்றியதோடு ச்ரௌத சூத்திரமும் இயற்றியுள்ளார்.

க்ருஹ்ய சூத்திரங்களை இயற்றியுள்ள மஹரிஷிகள் இருப்பத்தைந்து பேர்கள் உள்ளனர்.

எதிர்காலத்தில் வருகின்ற சிஷ்ய ஜனங்கள், காலத்தின் கோலத்தினால் புத்திக் குறைவு ஏற்பட, அதனால் அந்தந்த கிரியைகளுக்கு உரிய மந்திரங்களை அந்தந்த காலத்தில் எடுத்து உபயோகிக்கத் தடுமாறுவர் என்பதை உணர்ந்து சிறந்த யுக்தியுடன் சூத்ரத்தை இவர் அமைத்துச் சிறந்தவரானார்.

ஜாதகர்மம் முதல் அக்னி ஹோத்ரம் வரை உள்ள பூர்வ சம்ஸ்காரங்களுக்கும், பிராணோத் க்ரமண சமய முதல் பிதுர் லோக பிராப்தி வரையிலான அபர சம்ஸ்காரங்களுக்கும் உரிய வேத மந்திரங்களைக் கோர்வையாக எடுத்து மந்த்ரப் ப்ரச்னம் என்று இரு ப்ரச்னங்களை இவர் நன்றாக செய்து அருளியதால் ஸூத்ரகாரர்கள் பலர் இருப்பினும் இவருக்கே ஸூத்ரகாரர் என்ற பெயர் அமைந்து விட்டது.

இவருக்கு ஆபஸ்தம்பர் என்ற பெயர் வந்த வரலாறு சுவையான ஒன்று.

அதை பிரம்மபுராணம் விவரிக்கிறது.

வேதங்களை நன்கு கற்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் ச்ரௌத ஸ்மார்த்த கர்மங்களில் சிரத்தை உடையவராக இருந்து அவற்றை நல்ல முறையில் அனுஷ்டித்து வந்தார். சிரார்த்த காலங்களில் வேதங்களை நன்கு உணர்ந்த உத்தமமான அந்தணர்களையே அவர் அழைப்பது வழக்கம்.

ஒரு சமயம் சிரார்த்தம் செய்ய விழைந்த போது அவர் எண்ணியபடி ஒரு பிராமணர் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆகவே சகடம் என்று சொல்லப்பட்ட ஒரு விதியைக் கடைப்பிடிக்க எண்ணினார். அந்த விதியின் படி கூர்ச்சத்தில் பிராமணர்களை ஆவாஹனம் செய்து சிரார்த்தம் செய்ய எண்ணினார்.

அவரது இந்த எண்ணத்தை மஹரிஷி ஆபஸ்தம்பர் அறிந்தார். உலக க்ஷேமத்தை மனதில் எண்ணிய அவர் மிகுந்த அறிவைக் கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் பிரம்ம காயத்ரியை எவன் ஒருவன் முறையாக உபதேசம் பெற்று ஜபிக்கிறானோ அவன் யோக்கியனாகிறான் என்றும் படிப்படியாக அவனும் கற்றறிந்தவர் அடையும் நிலையை அடைகிறான் என்பதையும் உலகத்தாருக்கு உணர்த்த எண்ணினார்.

தானே ஒரு பிராமணர் வேடம் பூண்டு மேற்சொன்ன சிரார்த்தம் செய்ய விழைந்த பிராமணர் வீட்டுக்கு வந்தார்.

ஆபஸ்தம்பரைக் கண்ட பிராமணர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவரை நன்கு வரவேற்று அர்க்ய பாத்திரம் முதலியவற்றால் உபசரித்து அவரை சிரார்த்தம் செய்யும் படியும் போஜனத்திற்கும் அழைத்தார்.

சிரார்த்தம் முறையாக நன்கு நடந்தேறியது. பிறகு போஜனமும் நடைபெற்றது.

உணவு உண்டு முடித்த பின்னர் சிரார்த்த காலத்தில் கடைசியில் கேட்க வேண்டிய முறைப்படி பிராமணர் ஆபஸ்தம்பரை நோக்கி, “அன்னமும், திரவ பதார்த்தங்களும் நன்றாக இருந்ததா, தங்களுக்கு திருப்தி தானா?” என்று கேட்டார்.

இதற்கு சாதாரணமாக போஜனம் கொண்டவர் திருப்தி என்று சொல்வது வழக்கம்.

ஆனால் ஆபஸ்தம்பரோ வழக்கத்திற்கு மாறாக, “சற்று அன்னமும், தயிரும் கொண்டு வாரும்!” என்றார்.

இதைக் கேட்ட சிரார்த்த கர்த்தா, “இப்படி கேட்பதானது தர்மத்திற்கு விரோதமாயிற்றே. செய்த சிரார்த்தம் வீணாகி விட்டதே” என்று எண்ணி கோபம் அடைந்தார். கையில் ஜலத்தை எடுத்து சபிப்பதற்காக பூமியை நோக்கி விட்டார்.

அதைக் கண்ட ஆபஸ்தம்பர் புன்சிரிப்புடன்  அந்த தண்ணீரை கீழே விழாமல் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்தார். நீர் அப்படியே நின்றது.

இந்த அதிசயத்தைக் கண்ட சிரார்த்த பிராமணர் இவர் ஒரு மஹாத்மா என்பதை உணர்ந்து அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். தனது சாப பிரயோகம் தன்னை வந்து சாராமல் இருக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினார்.

அந்த பிராமணர் மீது இரக்கம் கொண்ட ஆபஸ்தம்பர் அவரை மன்னித்து அருளியதோடு, தான் யார் என்பதை அவருக்குத் தெரிவித்தார். பிறகு தான் அங்கு வந்த காரணத்தையும் சொன்னார்.

சிரார்த்தத்திற்கு வரும் பிராமணர்களை அதிக பரிசோதனையில்லாமல் அவர்களை ஆதரிப்பதே உத்தமம் என்றும், கூர்ச்சத்தில் பிராமணர்களை ஆவாஹித்து சிரார்த்தம் செய்வது மத்திமம் என்று கூறினார்.

அன்று முதல் சிரார்த்தத்திற்கு வரும் பிராமணர்களை யாரும் அதிக சோதனை செய்வதில்லை என்ற வழக்கம் ஏற்பட்டது.

குலம், கோத்திரம் விசாரித்து காயத்ரி சொல்லும் பிராமணர் தானா என்பதை மட்டும் பார்த்தால் போதும் என்ற வழக்கம் ஏற்பட்டது.

ஆபஸ்தம்பர் பிராமணரால் உபசரிக்கப்பட்டு தன் ஆசிரமம் சென்று சேர்ந்தார்.

தண்ணீரை அப்படியே ஸ்தம்பித்து நிற்க வைத்த இந்த சம்பவத்தால அவருக்கு ஆபஸ்தம்பர் என்ற பெயர் ஏற்பட்டது.

அடுத்து இன்னும் ஒரு சம்பவம்.

          ***  தொடரும்

tags- ஆபஸ்தம்பர்

சிரிப்பு பற்றிய 6 பழமொழிகள் என்ன? (Post No.8753)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8753

Date uploaded in London – –29 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விடைகள்  கீழே  உள்ளன . ஒரு சொல் மீண்டும் மீண்டும் பழமொழிகளில் வரக்கூடும் .

ஆனால் கட்டத்தில் ஒரு முறை மட்டுமே இருக்கும் .

விடைகள்

1.சிரித்துச் சிரித்துக் கழுத்தறுக்கிறது

2.சிரித்தாயோ, சேலை அவிழ்த்தாயோ ?

3.சிரித்துச் சிரித்துத் தின்ற தோசைக்கு காசில்லையா ?

4.சிரித்தையோ சீரைக் குலைத்தையோ ?

5.சிரிப்பாணிக் கூத்துச் சிரிப்பாய்ச் சிரித்துச் சீலைப்பேன் குத்துகிறது

6.சிரிப்பார்  சிரித்துத் தெருவிலே நிற்கிறது

உதவிய நூல் – கழகப்  பழமொழி அகர  வரிசை

tags-   சிரிப்பு , பழமொழிகள்

–subham–

31 QUOTATIONS ON INDIA (Post No.8752)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 8752

Date uploaded in London – –29 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FESTIVAL DAYS – OCT.2- GANDHI JAYANTI ; 15-WORLD STUDENTS DAY; 17- NAVARATRI BEGINS; 17-TULA VISHU PUNYA KALA; 25-SARASVATI PUJA; 26-VIJAYA DASAMI/ DASARA

NEW MOON/ AMAVASYAI- 16; FULL MOON/ PURNIMA -1 AND 31; EKADASI/ FASTING DAYS -13 AND 27

MUHURTA/ AUSPICIOUS DAYS – 18, 26, 29, 30

31 QUOTATIONS ON INDIA BY SWAMI VIVEKANANDA

OCTOBER 2020 GOOD THOUGHTS CALENDER

OCTOBER  1 THURSDAY

The present want of India is the Kshatriya force 5-316

OCTOBER  2 FRIDAY- GANDHI JAYANTI

What India wants is a new electric fire to stir up a fresh vigour in the National veins-5-57

OCTOBER  3 SATURDAY

India’s potentialities are great and will be called forth 5-199

OCTOBER  4 SUNDAY

None can resist her any more; never is going to sleep anymore; no untoward power can hold her back anymore;

for the infinite giant is raising to her feet 3-146

OCTOBER  5 MONDAY

India must conquer the world and nothing less than that is my ideal 3-316

OCTOBER  6 TUESDAY

We, of all the nations of the world, have never been a conquering race,

and that blessing is on our head, and therefore we live-3-106

OCTOBER  7  WEDNESDAY

We are destined by the Lord to do great things in India 5-13

OCTOBER  8 THURSDAY

I see in my minds eye the future perfect India is rising out of this chaos and strife, glorious and invincible, with Vedanta brain and Islam body 6-416

OCTOBER  9 FRIDAY

Religion is the one and sole interest of the people of India-3-178

OCTOBER  10 SATURDAY

Each nation has a main current in life; in India it is religion.

OCTOBER  11 SUNDAY

Renunciation, that’s the flag of India, floating over the world, the one undying thought

which sends India again and again as a warning to dying races, as a warning to all tyranny,

as a warning to wickedness in the world-3-344

OCTOBER  12 MONDAY

We have no quarrel with any religion in the world whether it teaches

men to worship Christ or Buddha or Mohammed or any other prophet-3-132

OCTOBER  13 TUESDAY

All orthodox systems of Indian philosophy have one goal in view, the liberation of the soul through perfection-1-122

OCTOBER  14  WEDNESDAY

There is only one country in the world which understands religion— it is India – vol.8-322

OCTOBER  15 THURSDAY

The gift of India is the gift of religion and philosophy and wisdom and spirituality.-3-273

OCTOBER  16 FRIDAY

Here alone the best ideal for mankind 3-138

OCTOBER  17 SATURDAY

The talk of brother hood of man becomes in India the brother hood of universal life, of animals, and of all life down to the little ants- all these are our bodies 3-126

OCTOBER  18 SUNDAY

The ideal woman in India is the mother , the mother first , and the mother last 8-57

OCTOBER  19 MONDAY

In India father and mother are living gods to their children- 2-158

OCTOBER  20 TUESDAY

Gratitude and hospitality are the peculiar characteristics of indian humanity 5-122

OCTOBER  21  WEDNESDAY

Here in India, every body wants to become a leader, and there is nobody to obey 5-216

OCTOBER  22 THURSDAY

What our country now wants are muscles of iron and nerves of steel, gigantic wills which nothing can resistance , which can penetrate into the mysteries and secrets of the universe  and accomplish their purpose in any fashion even if it meant to going to down to the bottom of the ocean and meeting death face to face. -3-190

OCTOBER  23 FRIDAY

A nation in in India must be a union of those whose hearts beat to the spiritual tune. 3-371

OCTOBER  24 SATURDAY

Modern India belongs to the spiritual part of the Vedas.3-536

OCTOBER  25  SUNDAY- sarasvati puja

India dies not-3-444

OCTOBER  26 MONDAY- vijaya dasami

Political greatness or military power is never the mission of our ra CE race; it never was and Mark my words, it never will be 3-19

OCTOBER  27 TUESDAY

If we want to regenerate India, we must work for the masses 5-223

OCTOBER  28   WEDNESDAY

To Europeanise India is therefore an impossible and foolish task 5-198

OCTOBER  29 THURSDAY

Religion in India culminates in freedom.

OCTOBER  30 FRIDAY

Priest craft is the bane of India 4-327

OCTOBER  31 SATURDAY

Here in India the first and foremost duty of our lives is to be spiritual first, and then, if there is time, other things come. 3-371

tags – October 2020, quotes on India, Vivekananda

Xxxxxx

சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானது? (Post .8751)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8751

Date uploaded in London – – 29 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.

28-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானதாக இருக்கிறது என்ற கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானதாக இருக்கிறது?

ச.நாகராஜன்

QUESTION

ஐயா தங்களுக்கு சிரம் தாழ்ந்த பணிவான வணக்கம் . Tamil and vedas ல் வரும் தங்களின் பல கட்டுரைகளை படித்துள்ளேன் . எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . உங்கள் கட்டுரைகள் மூலம் தமிழ் இலக்கியங்களை ஆழமாகவும் தெளிவாகவும் விரிவாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது . உங்களுக்கு அனந்த கோடி நன்றி . சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானதாகவும் , தெளிவானதாகவும் , தவறான கருத்தான திராவிட இயக்க சிந்தனைகளாகிய துர்வாடை கலக்காததாகவும் இருக்கும் ? அப்படிப்பட்ட இந்த நூல்கள் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் ? தயவுசெய்து முகவரி சொல்லுங்கள் ஐயா?

P. D . , AYYAMPALAYAM
(POST), MANACHANALLUR (TK)

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்!

இன்று நமக்கு முன் இருக்கும் கேள்வி சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விளக்கவுரை சரியானதாக இருக்கிறது?

இதே போல சங்க இலக்கியம் மட்டும் அல்லாது பொதுவான தமிழ் இலக்கியம் பற்றியும் கேள்விகள் பல எழுகின்றன.

கேள்வியில் தவறாக இல்லாமல், திரிதல் இல்லாமல் இருக்கும் நூல்களைக் குறிப்பிட வேண்டுகிறார் தமிழ் அன்பர்.

திருக்குறளின் கடவுள் வாழ்த்து என்பதற்கே பொருளை மாற்றியும் திரித்தும் எழுதப்பட்ட ஏராளமான நூல்களை அன்பர் கண்டதால் தான் இப்படி ஒரு கேள்வியையே அவர் எழுப்ப நேரிட்டுள்ளது.

ஆகவே பதிலைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் சங்க இலக்கிய நூல்கள் என்பதைச் சொன்னவுடனேயே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும் ஒரே பெயர் மஹாமஹோபாத்யாய உ.வே.சாமிநாதையர் -உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சுவாமிநாதன் -அவர்களின் பெயர் தான்.

தன் வாழ் நாள் முழுவதையும் தமிழுக்கு அர்ப்பணித்த பெருந்தகையாளர் -தமிழ்த் தாத்தா – அவர்.

ஓலைச் சுவடிகளைக் கண்டால் அவர் பெறும் ஆனந்தம் பேரானந்தம். ஊர் ஊராக அவர் பழைய நூல்களைத் தேடிச் சென்றதை அவரது என் சரித்திரம, நினைவு மஞ்சரி உள்ளிட்ட நூல்களில் காணலாம். 3000க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் அவர் சேகரித்தார். தீர ஆராய்ந்து அர்த்தம் கண்டு அவற்றைப் பதிப்பித்தார். நலிந்து கிடந்த தமிழுக்குப் புதுவாழ்வு தந்தார்; தமிழர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டினார்.  புறநானூறு, பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட நூல்களை அவர் பதிப்பித்தார். சென்னை பெசண்ட் நகரில் உ.வே.சா. நூலகம் அமைக்கப்பட்டு இன்றும் செயல்பட்டு வருகிறது. ஐயர் அவர்களின் பல நூல்களைப் பதிப்பிடும் அரும்பணியையும் செய்து வருகிறது. கம்பராமாயணம் முழுவதற்கும் ஐயர் அவர்களின் குறிப்புரையைப் படித்தால் அதை விட தமிழ் ஆனந்தம் வேறொன்றும் இருக்க முடியாது.

ஆகவே தயங்காமல் செய்ய வேண்டிய முதல் பணி உ.வே.சா அவர்களின் நூல்களைப் படிப்பது தான்!

அடுத்து பன்னிரு திருமுறைகளை பாரம்பரியம் கெடாமல் பழைய உரையை உள்ளது உள்ளபடி அளிக்கும் மாபெரும் பணியைச் செய்து வரும் தருமபுர ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் ஆகிய ஆதீனங்களைப் போற்றிப் புகழ வேண்டும். ஏராளமான நூல்களை மரபு கெடாதபடி விளக்கவுரையுடன் இவர்களின் வெளியீடுகளில் படித்து மகிழலாம்.

சைவ நூல்களை திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் மரபு கெடாமல் விளக்கவுரையுடன் வெளியிட்டுள்ளது.

இவையும் குறிப்பிடத்தகுந்த நூல்களே!

கம்பராமாயணம் மற்றும் வில்லி பாரதத்திற்கு வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் இயற்றிய உரை ஆழ்ந்த ஞானத்துடனும் பல்வேறு மேற்கோள்களுடனும் அமைந்துள்ளது.

மஹாபாரதத்தைத் தமிழில் முழுவதும் உள்ளது உள்ளபடி படித்து அனுபவிக்க ஸ்ரீ மஹாபாரதம் பிரஸ், கும்பகோணம் வெளியிட்ட ம.வீ.இராமானுசார்யரின் விளக்கவுரையே சிறந்த உரையாக அமைந்துள்ளது. அற்புதமான விளக்கங்களை ஆங்காங்கே இவர் தந்திருப்பது நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.

திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கவுரையை நாட வேண்டுமானால் நாம் நாட வேண்டியது கிருபானந்தவாரியார் அவர்களின் உரைகளைத் தான்.

தணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை அவர்களும் திருப்புகழ் ஆராய்ச்சி, தேவார ஒளி நெறி போன்ற மிக நல்ல நூல்களைத் தமிழுக்கு அர்ப்பணித்துள்ளார். தமிழர்கள் போற்றிப் படிக்க வேண்டிய நூல்கள் இவருடையவை.

வைணவ இலக்கிய உரைகளை வேண்டுவோர் வியாக்கியான சக்கரவர்த்தி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் நூல்களைப் படிக்கலாம். நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் உள்ள நான்காயிரம் பாடல்களின் சுவையை அறிந்து பரவசமடையலாம். ஈட்டு உரைகளும் இன்று கிடைக்கின்றன; அவற்றையும் படித்து மகிழலாம்.

தற்காலத்திற்கு ஏற்றவாறு பல நல்ல நூல்களை அளித்துள்ளது சென்னை புத்தகப் பதிப்பு நிறுவனமான லிப்கோ.  லிப்கோவின் நூல்கள் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக வைணவ இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்தவையாகும். இவற்றின் விலை அனவராலும் வாங்கக் கூடிய அளவில் இருப்பது இவற்றின் தனிச் சிறப்பாகும்.

தமிழ் என்பதே தெய்வத் தமிழ் தான்! இதில் ஆன்மீக இலக்கியம் என்று எடுத்துக் கொண்டோமானால் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை – 4 வெளியிட்டுள்ள எண்ணிலா நூல்களைச் சொல்லலாம். எந்த நூலானாலும் அது சிறந்ததே. வேத சூக்தங்கள், 108 உபநிடதங்களின் உரை உள்ளிட்டவற்றை வேறு எங்கும் காண முடியாதபடி அற்புதமாக வெளியிட்டுள்ளது மடம். அண்ணா அவர்கள் தந்துள்ள  ஏராளமான நூல்களின் உரைகளை இங்கு வாங்கலாம். அனைத்துமே அழகான பதிப்பு; குறைந்த விலை தான்.

விவேகானந்தர் இலக்கியம் தனி. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அன்னை சாரதா தேவியார் பற்றிய நூல்கள், பரமஹம்ஸரின் தலையாய சீடர்களின் நூல்கள் என்று பெரிய பட்டியல் இங்கு கிடைக்கும்,

ஆன்மீக இலக்கியத்தில் பெரும் தொண்டு ஆற்றியவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர். இவரது திருவாசக உரை மற்றும் தாயுமானவர் அருளிய பாடல்களுக்கான உரை குறிப்பிடத்தகுந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடுகளாக சுவாமி சித்பவானந்தரின் அருமையான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் ஆன்மீக அரசோச்சிய பகவான் ரமண மஹரிஷியின் நூல்களும் அவர் பற்றிய நூல்களும் திருவண்ணாமலை ரமணாசிரமத்திலும் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பெறலாம்.

மிக அற்புதமான ஆன்மீக நூல்களை காஞ்சி காமகோடி பீடத்தின் வெளியீடுகளில் காண முடியும். காஞ்சி பெரியவாள் பரமாசார்யரின் உரைகளை தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் பல்வேறு தொகுதிகளில் படிக்கலாம்.

கலைமகள் காரியாலயம் வெளியிட்டுள்ள நூல்கள் பாரம்பரியம் தவறாதவை. கலைமகளின் ஆசிரியராகப் பணியாற்றிய திரு கி.வா.ஜ. அவர்களின் ஏராளமான நூல்கள் உள்ளத்திற்கு உவகை ஊட்டுபவை.

சிருங்கேரி பரமாசார்யர்களின் உரைகளையும் ஆன்மீக நூல்களையும் தமிழில் சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ளது.  ஆழ்ந்த ஞானம் தரும் அற்புத நூல்கள் இவை; அழகான பதிப்பு; ஆனால் விலையோ குறைவு.

    ஸ்ரீ சத்யசாயிபாபா அவர்களின் ஏராளமான நூல்களை Sri SathyaSai Books and Publications Trust  வெளியிட்டுள்ளது. புட்டபர்த்தி பிரசாந்தி நிலயத்திலிருந்து ப்ரேம வாஹிணி, உபநிஷத் வாஹினி, ராமகதா ரஸ வாஹினி உள்ளிட்ட அனைத்து நூல்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெறலாம். அவர் தெலுங்கில் ஆற்றிய உரைகளையும் தமிழில் இன்று பெற முடிகிறது.

இன்னும் அரவிந்த ஆசிரம் பாண்டிச்சேரி வெளியிட்டுள்ள அன்னை மற்றும் மஹரிஷி அரவிந்தரின் நூல்கள் ஏராளம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளன.

     தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் வள்ளலார் பற்றி எழுதியுள்ள நூல் அதிகாரபூர்வமான ஆவண நூலாகும். வள்ளலார் பற்றி ஊரன் அடிகள் எழுதியுள்ள நூல்களை சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், சமயபுரம், திருச்சி மாவட்டம் வெளியிட்டுள்ளது. இவரது நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

     தற்காலத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த கவிஞர் மஹாகவி பாரதியார். இவரது கவிதைகள் எங்கும் கிடைக்கின்றன. இவர் பற்றிய நூல்களில் செல்லம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி, வ.ரா., சிட்டி, அமுதன், யதுகிரி அம்மாள், ரா.அ.பத்மநாபன், பெ.தூரன் உள்ளிட்டவர்களின் நூல்களைப் படித்தால் பாரதி பற்றியும் அவர் தம் கவிதையின் திறன் பற்றியும் அறியலாம்.

இப்படி தமிழ் வளர்க்கும் நல்ல நூல்கள் ஏராளம் உள்ளன; விரிப்பின் பெருகும்.

   ஆகவே நல்லோர்கள் விளக்கவுரையுடன் பதிப்பித்திருக்கும் நூல்களை மட்டும் வாங்கிப் படிப்போம்; இவை அல்லாத நூல்களைத் தவிர்ப்போம்; பாரம்பரியமாகப் பெரியோர் காட்டிய வழியில் முன்னேறுவோமாக!

நன்றி, வணக்கம்.

tags — சங்க இலக்கிய,  விளக்கவுரை,