Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. – (8 எழுத்துக்கள்) ஐந்து உபாயங்கள், சிறுவர் கதைகளும் இதே தலைப்பில் உண்டு
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
வெங்காயம் ரிகார்டும் 2014-ல் மாறிவிட்டது . ஒருவர் 18 பவுண்டுக்கு மேல் எடையுடைய வெங்காயத்தை உற்பத்தி செய்துள்ளார்.
British gardener grows Guinness World Record breaking onion
A GREEN-fingered Brit has planted himself in the Guinness World Records book with the largest ever onion.
Tony Glover has smashed the existing record for his whopping vegetable, which weighs an eye-watering 18lbs and 11oz and measures 32 inches around its widest part.
When recipes call for a large onion, on average they mean around 12 ounces. But Mr Glover’s whopper was almost 25 times that size.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
1.குப்பையில் கிடந்தாலும் பயனுள்ள மூலிகை . அது என்ன?
2.வல்லாரை வல்லவராக்கும் நினைவாற்றலை வழங்கும் .மூலிகை . அது என்ன?
3. மேனியை பொன்னக்குமாம் .மூலிகை . அது என்ன?
4காமக்கண்ணி என்னும் சங்கப் புலவர் காமாட்சி என்பதை அறிவோம்.
கறுப்புக் கண்ணி மூலிகை எது ?
5.சின்னப் பெண் என்னும் மூலிகை எது ?
6.மஞ்சள் காமாலைக்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?
7.நப்பசலை என்ற சங்கப் புலவரை அறிவோம் . அவர் பெயரில்
என்ன தாவரம் உளது?
8.கை இல்லாதவன் பெயரில் ஒரு மூலிகையா ?
9.ஸ்யவனப் பிராஸ் எனும் லேகியத்தின் முக்கிய தாவரம் என்ன?
10.காலையில் சுகமாக பேதியை உண்டாக்கும் காய் எது?
11. இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்க்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
அட்லாண்டிக் கடல் கடந்த வீராங்கனையின் சுவையான அனுபவம் பற்றி 1992-ம் ஆண்டில் எழுதிய கட்டுரை இது
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
மாலைமலர் நாளிதழில்
23-11-2019 அன்று வெளியாகியுள்ள கட்டுரை!
அச்சம் அகற்றும் பவளம்!
ச.நாகராஜன்
தெய்வீக மணி பவளம்
தெய்வீக மணி பவளம் நவ ரத்தினங்களுள்
ஒன்று. முக்கியமானதும் கூட!
சிவபிரானும் தமிழ்த் தெய்வமான
முருகனும் பவள நிற மேனியர் ஆவர்.
‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்’ என்று சிவபிரானின் தோற்றத்தை
வர்ணித்த அப்பர் பிரான் இப்படிப்பட்ட உருவத்தைத் தரிசிக்க ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே’ என்று நெகிழ்ந்து
உருகுகிறார்.
குறுந்தொகை என்ற சங்க நூலில்
அதன் கடவுள் வாழ்த்தைப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனார் ‘பவளத்தன்ன மேனித் திகழொளி’ என்று முருகனின் பவள மேனியைப்
போற்றிப் பாடுகிறார்.
முத்துகுமாரசுவாமி பிள்ளைத்
தமிழை அருளிய குமரகுருபரர் முருகன் ஆடி வரும் அழகை வர்ணிக்கையில்,
“கம்பி விதம்பொதி குண்டலமுங்குழை
காதும் அசைந்தாட
கட்டிய சூழியு முச்சியுமு முச்சிக் கதிர் முத்தொடும்
ஆட
அம்பவழத் திருமேனியும் ஆடிட
ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை”
என்று போற்றித் துதிக்கிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரோ “பச்சை மாமலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்” என்று திருமாலின் உருவைக் கண்டு பரவசம் அடைகிறார்.
பவளத்தின் இதர பெயர்கள்
பிங்கல முனிவர் பவளத்தின் வேறு
பெயர்களாக துப்பு, பிரவாளம், துவர், துகிர், வித்துருமம், அர்த்தம் எனப் பல பெயர்களைத்
தருகிறார்.
ஜோதிடத்தில் பவளம்
இப்படிப்பட்ட பவளம் ஜோதிடத்தில்
செவ்வாய் தோஷம் தரும் அச்சமூட்டும் தீய பலன்களைப் போக்கும் ஒரு அரும் சக்தியாக விளங்குகிறது.
மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள்
செவ்வாயின் நற்பலன்களைக் கூட்டவும், சில சமயங்களில் ஜாதகத்தில் செவ்வாய் நற்பலன் தராத
இடங்களில் இருந்தால் அச்சமூட்டும் தீய பலன்களைப் போக்கவும் பவளம் அணிய வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.
ஒன்பது எண் செவ்வாயுடன் தொடர்பு
கொண்டது என்பதால் ஒன்பது எண் பிறந்த தேதியாகவோ அல்லது கூட்டு எண்ணாகவோ அமைபவர்களுக்கு
உரியதும் பவளம் தான். ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தந்து சரீர சம்பந்தமான வியாதிகளை
இவர்களுக்கு பவளம் போக்கி விடும்.
மருத்துவத்தில் பவளம்
வம்புச் சண்டைகளையும், வந்த
சண்டைகளையும் தீர்ப்பது பவளமே.
உஷ்ண சம்பந்தமான அனைத்து வியாதிகளையும்
போக்குவதும் பவளமே.
பவளத்தைக் கலந்து தயாரிக்கப்படும் பல மருந்துகளை நமது பண்டைய சித்த மருத்துவ நூல்கள் விளக்குகின்றன.
பவழம் தாவரமா அல்லது விலங்கினமா!
கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாடிலும்
அவரது சீடரான தியோப்ரெஸ்டஸும் தங்களது ‘கற்கள்’ என்ற புத்தகத்தில் பவளத்தைக்
குறிப்பிடுகின்றனர். பவளம் ஒரு தாவரமா அல்லது கடல் வாழ் உயிரினத்தால் உருவானதா என்பதைப்
பற்றிய சுவையான சர்ச்சை அந்தக் காலத்திலேயே எழுந்துள்ளது. பெர்ஸிய அறிஞரான அல்பெருனீ பவழத்தை விலங்கினத்தோடு சேர்த்து அதைத் தொடும் போது
அது உணர்கிறது என்று அதற்கான காரணத்தையும் கூறினார். வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி
ஒரு மைக்ராஸ்கோப்பின் உதவி கொண்டு விலங்குகளுக்கே உரித்தான மெல்லிய
சவ்வுத் திசு பவழத்தில் காணப்படுவதால் அது விலங்கினத்தைச் சேர்ந்ததே என்று இந்த
சர்ச்சைக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தார்.
பவளத்தின் வகைகள்
ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்
பவளத்தைப் பற்றிப் பல உண்டு.
பவளத்தில் சிறந்த வகை சிவப்புடன் வெண்மை கலந்த வண்ணத்துடன் இருக்கும். குழிமுயலின்
இரத்த வண்ணத்தில் இது இருக்கும். பவளம் மிருதுவானது.அழகானது. மேலே எண்ணெயப்
பூச்சைக் கொண்டது போல இருக்கும். மிக சுலபமாகத் துளை போடக் கூடியபடி இருக்கும்.
பவளத்தின் அடுத்த வகை சிவப்பாக – குங்குமச் சிவப்பாக
– இருக்கும். பந்தூக மலர் அல்லது மாதுளம் பூ நிறத்திலிருக்கும். இந்த வகைப் பவளம்
சற்றுக் கடினமானதாக இருக்கும். பள பளப்பான எண்ணெய்ப் பூச்சைக் கொண்டிருக்காது.
இதில் துளையிடுவது சற்றுக் கடினமாக இருக்கும்.
மூன்றாவது ரகம் மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் கொண்டதாக
இருக்கும். பலாச புஷ்பம் போல நிறத்தில் இருக்கும். அழகிய இந்த வண்ணம் இருந்தாலும்
பளபளப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
நான்காவது வகை பவளம் கறுப்பு கலந்த சிவப்பு
வண்ணத்துடன் இருக்கும். ரோஜா மலர் இதழ்கள் போல இருக்கும். அது கடினமாக இருக்கும்.
அதன் ஒளி பல நாட்கள் நீடிக்காது. அதில் துளை போடுவது மிகவும் கடினமாக இருக்கும்.
நல்ல பவளத்தை எப்படி அறிவது?
ஒரு நல்ல பவளமானது
1) சிவப்பு வண்ணம் 2) பளபளப்பான எண்ணெய் பூசப்பட்டது போன்ற தொற்றம் 3) சுலபமாகத் துளையிடக்
கூடியது 4) உருண்டை வடிவம் 5) நீடித்த காலம் இருக்கும் ஒளி 6) கனமானது 7) மேல் பரப்பு
மிருதுவானது ஆகிய இந்தக் குணங்களைக் கொண்டிருக்கும். இதுவே நல்ல பவளம்.
வெளுத்துப் போன
வெண்மை, சாம்பல் வண்ணம், சிறியது, கரடு முரடான மேற்பரப்பை உடையது, ஏராளமான பள்ளங்கள்
அல்லது குழிகளைக் கொண்டது, மிகவும் இலேசானது, தாமிர நிறமுடையது – இவை யாவும் விலக்கத்
தக்க பவளங்கள் ஆகும்.
நவரத்தினங்கள்
அனைத்தையும் எடுத்துக் கொண்டால் ஒரு இரும்பினால் கீறல் போடப்படும் தன்மை உடையவை முத்தும்
பவளமும் மட்டுமே.
பவளத்தின் பயன்கள்
பவளம் உடலை உருக்குகின்ற க்ஷய ரோகத்தைத் தீர்க்கும்.
இரத்தப் போக்கைப் போக்கும்.
இருமலைத் தீர்க்கும்.
கண் வியாதிகளைப் போக்கும்.
விஷத்தை முறிக்கும்.
தீய திருஷ்டியாலும் பிசாசு போன்ற தீய சக்திகளினால் ஏற்படும் தீமைகளைப் போக்கும்.
இது இலேசானது. ஜீரணத்தை அதிகரிக்கும்.
இவையே
ரஸ ஜல நிதி தரும் அற்புதத் தகவல்கள்.
பல்வேறு
வடிவங்களிலும் நிறங்களிலும், அளவுகளிலும், வடிவமைப்புகளிலும் பவளம் கிடைக்கப் பெறுகிறது.
கடலின்
சில பகுதிகளில் மட்டுமே பவளப் பாறைகள் இருக்கின்றன. (பாலிப் என்ற) ஒரு அரிய வகைக் கடல்
வாழ் உயிரினத்தின் கழிவே பவளம். ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு செண்டிமீட்டர் என்ற
குறைவான அளவில் பவளம் வளர்கிறது.
150
அடி என்ற குறைந்த பட்ச ஆழம் இருந்தால் தான் பவளம் வளரும்; 900 அடி ஆழத்திலும் அது காணப்படுகிறது!
அதே
போல உஷ்ணநிலையும் அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று. 70 முதல் 85 டிகிரி பாரன்ஹீட்
உஷ்ணம் அதற்குத் தேவை. தெளிவான கடல் நீரில் மட்டுமே பவளம் வளரும். பசிபிக் மற்றும்
இந்து மா கடலில் பவளங்கள் காணப்படுகின்றன.
ஆழமில்லாத
கடல் நீர்ப்பரப்பு மிகவும் சுலபத்தில் சூரியனின் வெப்பம் பட்டு வெப்பமாவதால் பவளம்
வளர வாய்ப்பில்லை. அதிக ஆழத்தில் தான் அது வளர முடிகிறது.
ஒரு
முக்கியமான விந்தையான விஷயம் நிலப் பரப்பின் கிழக்குப் பக்கம் உள்ள கடல்நீரில் தான்
பவளம் தோன்றுகிறது. உஷ்ணம் இந்தப் பக்கம் குறைவாக
இருப்பதால் இப்படி ஏற்படுகிறது என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடற்கரை
மணல் திட்டில் பவளம் கிடைத்து விட்டது என்று கொண்டாட நினைப்போர் அது பாலிப் என்ற ஒருவகை
கடல்வாழ் உயிரினத்தின் ஓடு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடல்
அலைகள் வலிமையுடன் வேகமாக இருக்கும் இடங்களிலும் அலைகள் ஆவேசம் அடையும் இடங்களிலும்
பொதுவாக பவளத்தின் வளர்ச்சி நன்கு காணப்படுகிறது.
ஏனெனில் அங்கு கடல்வாழ் உயிரினங்களுத் தேவையான உணவுப் பொருள்கள் கிடைப்பதால்
தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரும் பவழப்பாறை எனக் கூறப்படுவது ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதை விண்ணிலிருந்தும் பார்க்க முடியும். 1,33,000 சதுர மைல் பரப்பில் அமைந்துள்ள இது 2900 தனிப்பட்ட பவழப்பாறைகளையும் 1400 மைல் நீளத்தில் பரந்துள்ள 1050 தீவுகளையும் கொண்டிருக்கிறது!
பவளப்
பாறைகளை நம்மால் நேரில் பார்த்து மகிழ முடியும்.
அந்தமான்
– நிகோபர் பகுதியில் உள்ள ஏராளமான தீவுகளின் கடல் பகுதியில் பவளப் பாறைகள் உள்ளன.
அந்தமானிலிருந்து
மிக அருகிலுள்ள ஜாலி பாய், பவளத் தீவு, ரோஸ் தீவு ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளுக்காக
விசேஷ படகுகள் இயக்கப்படுகின்றன. இந்தப் படகின் கீழ்ப்புறத்தில் கண்ணாடி பதிக்கப்பட்டிருப்பதால்
படகில் இருப்போர் இந்தக் கண்ணாடி வழியே கடலின் அடியில் இருக்கும் பவளப் பாறைகளைப் பார்த்து
பிரமிக்க முடிகிறது.
இப்படிப்பட்ட
பவளங்கள், வளர்ந்த நிலையில் வெட்டி எடுக்கப்பட்டு சிறிய் அளவுகளில் பட்டை தீட்டப்பட்டு
சந்தைக்கு விற்பனைக்காக வருகின்றன.
‘மோ
அலகின்’ படி பவளத்தின்
கடினத் தன்மை 3.5 முதல் 4 வரை உள்ளது.
பவளத்தின்
வளர்ச்சிக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவை.
அறிவியல் ரீதியாக பவளம் எய்ட்ஸ், கான்ஸர், தீராத வலி
ஆகியவற்றிற்கான நிவாரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீன நாகரிகத்தில் சீனர்கள் பவள மாலையை அணிவது சாதாரணப்
பழக்கமாக இருந்து வந்திருக்கிறது.தெய்வீகத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள பவளம் ஆயுளை
நீட்டிக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை.
ஆயுர்வேதத்தில் பவள பஸ்மம் எலும்பு சம்பந்தமான நோய்களைத்
தீர்க்கவும், கால்சியம் குறைபாடுள்ளவர்களுத் தரப்படும் மருந்தாகவும் உபயோகப்படுத்தப்பட்டு
வருகிறது.
சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பில்ஜெர்
(Professor Bilger)
ஆஸ்திரேலியாவில் உள்ள ட்ரீ ஐலேண்டில் (Tree Island)ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். இங்குள்ள பவளங்களை ஆராய்ந்ததில்
அவர் பவளம் பற்றிய ஒரு அரிய உண்மையைக் கண்டுபிடித்துள்ளார். “மற்ற உலோகங்களில் ஐயான்
தாதுக்கள் (Mineral Ions) கடத்தப் படுவதை விட பவளத்தில் பத்து மடங்கு வேகத்துடன் இந்தச் செயல் நடைபெறுகிறது.ஆனால்
இது ஏன் என்பது புரியாத மர்மமாக இருக்கிறது” என்கிறார் அவர். பவளம் தனித்துவம் வாய்ந்த ஒன்று என்பது இதிலிருந்து புலனாகிறது.
பிரபலங்கள் போற்றும் பவளம்!
உலகின் ஏராளமான பிரபலங்கள் பவழத்தைத் தாங்கள் அணிவதை
உறுதிப்படுத்துகின்றனர். உலகமே பார்த்து வியந்து மயங்கிய ஸ்டைல் ராணியான எலிஸபத் டெய்லரின்
நவரத்தின ஆபரணக் குவியலில் பவளம் பதிக்கப்பட்ட அணிகள் உண்டு. இவை அனைவரையும் கவர்ந்ததில்
வியப்பில்லை.
ஹிந்தி திரைப்பட நடிகையான கரீனா கபூர், டி.வி. பிரபலமான
ஏகதா கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பவளம்
பதிக்கப்பட்ட மோதிரம் மற்றும் ஆபரணங்களை அணியத் தவறுவதே இல்லை என்பதற்கான காரணம் பவளத்தின்
மகிமை தான்!
பவளத்தில் உயரிய ரகம் 1000 டாலரிலிருந்து 6000 டாலர்
வரை விற்கப்பட்டு (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 70 ரூபாய்) உலக மக்களை ஆச்சரியப்பட
வைத்துள்ளது.
மணியாய் ஒளியாய் வருவாய்!
அருணகிரிநாதர் திருப்புகழில் ஏராளமான இடங்களில் பவளத்தைப்
பற்றிக் குறிப்பிடுகிறார்.
முருகனின் பவள மேனி கண்டு உருகிய அவர் கந்தர் அனுபூதியில், இறுதிப் பாடலில், ‘உருவாய் அருவாய்’ என ஆரம்பித்து ‘மணியாய் ஒளியாய்’ எனத் துதித்து ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!’ என்று முடிக்கும் போது பவள மணியின் ஒளி நம் இதயத்தில் புகுந்து தெய்வீக உணர்வை எழுப்புகிறது இல்லையா!
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
உலகில்
எவ்வளவோ இயற்கை அதிசயங்கள் உள்ளன. அதில் ரஷ்யாவிலுள்ள பைகால் (Lake
Baikal)
ஏரிக்கு சிறப்பிடம் உண்டு. ஆழமான, பழமையான
ஏரி என்பதோடு 1500 உயிரினங்களை உடைய ஏரி இது. ஆனால் மற்ற
ஏரிகளைப் போல இதுவும் புறச் சூழல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இது அளவில்
சுருங்கி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது பற்றி 1992 ஆகஸ்ட் 8ம் தேதி நான் தினமணியில் எழுதிய
கட்டுரையைப் படியுங்கள்
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t
use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
by ச.நாகராஜன்
அவன் ஒரு பிராமணன்.
வேதம் படித்தவன்.
உபநிஷதம் படித்தவன்.
இதிஹாஸ புராணம் படித்தவன்.
கை நிறையக் காசுள்ளவன்.
தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் கை நிறையப்
புரண்டன.
Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
டால்பின்கள்
மீன் போலத் தோன்றினாலும் அவை குட்டி போட்டுப் பாலூட்டும் மிருகங்களின் வகையில்
சேரும். அவைகள் மிகவும் அறிவும் மனிதர்களிடத்தில் அன்பும் கொண்டவை. அவைகளை வைத்து
நோய்களைத் தீர்க்கும் எனது 1992ம்
ஆண்டுக் கட்டுரை பழுப்படைந்து வருகிறது. பழைய பேப்பர்களைக் குப்பைத் தொட்டிக்குள்
போடுவதற்கு முன்னர் இங்கேயும் போட்டு விட்டால் யாருக்காவது பயன்படட்டுமே ட் என்ற
அற்ப ஆசை. இதோ எனது 16-2-1992
தினமணிக் கட்டுரை
உண்மையா? பொய்யா?
கடந்த
சில ஆண்டுகளில் வந்த விஞ்ஞான சஞ்சிகைக் கட்டுரைகளைப் புரட்டிப் பார்த்தேன். அவை
எல்லாம் டால்பின் சிகிச்சையில் விசேஷ பலன் எதுவும் இல்லை என்றே செப்புகின்றன. ஒரு
சிறுவன் நாயுடன் விளையாடும் போது கிடைக்கும் பலனே இதிலும் கிடைக்கிறது. ஆகையால்
பெருஞ் செலவு செய்து டால்பின் சிகிச்சைக்குப் போக வேண்டாம் என்று அவை சொல்லாமல்
சொல்கின்றன. புதிய செய்திகள் வந்தால் வெளியிடுகிறேன்.
ஆனால் இன்று வரை டால்பின் சிகிச்சை அளிக்கும் நிலையங்கள் இருப்பதும் தெரிகிறது.
Dolphin therapy is any kind of intervention (treatment or
service) which involves dolphins. … The more
complex therapies, such as Dolphin-Assisted Therapy (DAT), are
based on structured programmes which are designed to meet the needs of the
individual child.
24 Jul 2012 – The purpose of this
paper is to review and critique studies that have been conducted on dolphin-assisted therapy for children
with various …
Pictures are taken from
various sources; beware of copyright rules; don’t use them without permission;
this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000