Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
இந்தப் பாடலும் காகத்தின் கதையும் எல்லோரும் அறிந்ததே. இதோ கடந்த சில தினங்களில் லண்டன் பத்திரிக்கைகளில் வெளியான ஆஸ்திரேலிய புறாத் திருடன் கதை!
பிரிட்டனிலும் ஆஸ்திரேலியா போன்ற காமன்வெல்த் நாடுகளிலும் ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி போர் வீரர் நினைவு தினம் (Remembrance Day, Armistice Day) கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு பொது மக்களும், அரச குடும்பத்தினரும், மாஜி ராணுவ வீரர்களும் அணி அணியாக வந்து அஞ்சலி செலுத்துவர். அப்படி வருகையில் சிவப்பு நிற பாப்பி (Poppy Flowers) பூக்களைக் கொண்டு வந்து வைப்பர். மலர் வளையம் சார்த்துவர்.
போர்க்கால விதவைகளுக்கும், ஓய்வு பெற்ற, அங்கங்களை போரில் இழந்த வீரர்களுக்கும் நிதி திரட்ட சிவப்பு
An Australian pigeon has made a particularly poignant nest this year (Picture: Reuters) The culprit behind a mysterious disappearance of poppies from an Australian war memorial has been unmasked as a broody bird. Staff at the tomb of the unknown soldier in the capital Canberra had been left scratching their heads when they began noticing the poppies disappear in early October. But it turns out the thief was in fact a pigeon, who had built a colourful home near a stained glass window at the Australian War Memorial.
A maintenance worker reportedly clocked the carefully crafted nest in the Hall of Memory in late October. The memorial told the Sydney Morning Herald that the wounded soldier symbolised the quality of ‘endurance’, and that the nest of poppies was a ‘reminder of the powerful bond between man and beast on the battlefield’.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
7 Mar 2014 – யானையை விழுங்கிய மலைப் பாம்புகள்: தமிழ் புலவர் தகவல் … யானையை மலைப் பாம்பு விழுங்க முடியுமா? இதோ முதலில் சில .
6 Oct 2018 – இறக்கும் தருவாயில் ஒரு மலைப் பாம்பு செயலற்றுக் கிடந்தது. அதன் உடலை ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டு கடித்தன.
PYTHON DANGER
Dad keeps 18ft python in his three-bedroom semi Jen Mills (Monday 11 Nov 2019)
Anyone going round for a cuppa at this semi-detached house in Gloucester had better not have a fear of snakes. Marcus Hobbs, 31, lives there with his two young sons and partner Amy – as well as their 18ft Burmese python called Hexxie. The animal is usually curled up in the living room, aside from when it’s feeding time and she eats rabbits, stillborn deer, calves, goats and pigs supplied by local farmers.
IT worker Marcus bought Hexxie from a pet shop eight years ago when she was just eight inches long. Since then, she has grown to weigh 17 stone and needs several people to lift her. She could squeeze a human to death, but Marcus is confident she will never strike – although he doesn’t handle her when the his sons, aged four and one, are nearby.
Marcus Hobbs with partner Amy Leach, sons Benjamin and Joseph (Picture: SWNS) Marcus relaxing with Hexxie (Picture: SWNS) She lives in the living room (Picture: SWNS) He believes she could even be a record holder for the world’s longest Burmese python.
The snake can eat a whole deer in one go and has a mouth full of hundreds of pin shaped teeth like fish hooks. Credit: Mark Watkins/Gloucestershire Live
Are you Hexxie’s neighbour? The 110kg python could be the biggest Burmese python in the world – and she lives in a three-bed terraced house in Tewkesbury.
Owner Marcus Hobbs bought Hexxie nearly eight years ago as a small house pet, but the last time he measured her she had grown to an incredible 18ft long.
The current record for the longest Burmese python is 18ft10in, but Marcus is adamant that Hexxie has grown since he least measured her, and could have broken that record.
A local reptile expert claims she is the biggest he’s ever seen.
Most snakes aren’t measured until they die so experts say it is hard to find out if Hexxie is officially the world’s biggest.
Marcus and Hexxie share their home with wife, Amy and two sons, Benjamin aged four and Joseph aged one.
The dad-of-two admits his beloved pet could not only squeeze a human to death within minutes, but swallow them whole. (As long as they lay on their side so she could get the shoulders in).
Everybody seems to think it’s stupid. They think it’s crazy and ask ‘Why do you like these things?’
My mum desperately wants me to get rid of them. At least out the house.
I’ve had them nearly all my life and pretty much every time I see her she says ‘When are you going to get rid of those stupid snakes?’
– MARCUS HOBBS
(Taken from two news papers)
Marcus Hobbs with partner Amy Leach, Nigel Sligh and Hexxie the Burmese Python (Picture: SWNS)
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் நீண்ட கட்டுரை THE TELEGRAPH தி டெலிகிராப் பத்திரிக்கையில் வெளியானது அதைச் சுருக்கி THE WEEK தி வீக் ( 26-10-2019) வெளியிட்டது. அதையும் சுருக்கி, மொழி பெயர்த்து, நான் கொடுத்து இருக்கிறேன்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
காகம் பற்றி 1992 மே 10ம் தேதியும், கொக்கு பற்றி 1992 நவம்பர் 15ம் தேதியும் தினமணியில் நான் எழுதிய கட்டுரைகளைப் படியுங்கள். காகம் பற்றிய செய்தி இன்று வரை சரியே. லண்டனுக்கு வரும் சுற்றுலாப் பபயணிகள் ‘லண்டன் டவரில்’ இன்றும் இக்கதையைக் கேட்கலாம். செஷைர் பால கொக்குகள் தொல்லை இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. இறுதியில் காகம் பற்றிய முந்தைய கட்டுரைகளுக்கும் தொடர்பு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
காகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது! (Post No.4734).
Date:12 FEBRUARY 2018. Time uploaded in London- 11-26 am. Written by London
swaminathan. Post No. 4734. PICTURES ARE TAKEN from various …
கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்) !!!!!! காகம் பற்றிய பழமொழிகள்: நாங்கள்
பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள்
புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்:
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் …
5
May 2017 – 5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை). 6.எல்லோருடனும் பாடிப் பேசி
மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக்
காணலாம்). காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல். மாலை குளித்து மனை புகுதல் – சால.
27
Feb 2015 – காகம் என்னும் பறவை குறித்து
இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன்
பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க
இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி
பாடிய காக்கை, குருவி …
5
May 2017 – எல்லோருடனும்
பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக்
காணலாம்). … பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு
ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது …
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
எரிமலை மீது குண்டு வீச்சு என்ற தலைப்பில் நான் தினமணியில் மே3, 1992ல் ஒரு கட்டுரை எழுதினேன்.
27 ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த எரிமலை இன்னும் அவ்வப்போது பொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
கடைசியாக மவுன்ட் எட்னா எரிமலையின் சீற்றம் 2018 டிசம்பரில் நடந்தது. சிசிலி தீவில் பெரிய பூகம்பம் ஏற்பட்டு கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த முறை எரிமலையின் சிகரத்தில் தீச்சுவாலை பீறிட்டு எழாமல், பக்க வாட்டு மலையைப் பிளந்து கொண்டு எரிமலை சீறியது. இப்படி பக்கவாட்டில் வெடிப்பது பத்து ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் நடந்துள்ளது
Dinamani article written by London Swaminathan in 1992.DINAMANI NEWSPAPER 3rd May 1992Mount Etna Volcanosubham
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஹெல்த்கேர்
மருத்துவ மாத இதழ் R.C.ராஜா அவர்களை
ஆசிரியராகக் கொண்டு 10, வையாபுரி நகர், திருநெல்வேலி டவுன் – 627006 (போன் :
9843157363) -லிருந்து வெளிவருகிறது. வருட சந்தா ரூ 120/. நவம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள
கட்டுரை இது:
ஏராளமான இரகசியங்களைத் தெரிவிக்கும்
பாடல்களை தமிழ்ச் சுவடிகள் கொண்டிருப்பதை பல கட்டுரைகளின் வாயிலாகச் சுட்டிக் காட்டி
இருக்கிறேன்.
மாயச் சதுரம் பற்றியும், சதுரங்க
பந்தம் போன்ற சித்திரத் தமிழ் பற்றியும் ஒரு சின்னப் பாடல் மூலமாக அருமையான ரகசியத்தை
அறிகிறோம்.
இந்த வகையில் அன்பர் மாரிமுத்து, அவனியாபுரம், மதுரை அனுப்பியுள்ள பாடல்
மூலிகைப் பாட்டாக, அருமையான ஒன்றாக அமைகிறது. அதைக் கீழே தருகிறேன்.
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள்,
எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து
எடுக்கப்பட்டது
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!
இதே போல அருமையான பாடல்களை தஞ்சையில் உள்ள சரஸ்வதி
மஹால் சுவடிகளில் காணலாம். சரஸ்வதி மஹால் வெளியீடுகளும் அற்புதமானவை.
நோயில்லா நெறி என்ற புத்தகம் ஒவ்வொரு நதியின் நீர்
பற்றிய அருங்குணங்களைத் தருகிறது. வைகை, காவிரி, தாமிரபர்ணி ஆகிய நதிகளின் நீருக்கு
இவ்வளவு சக்தியா என வியக்கிறோம். அத்துடன் நோயில்லாமல் வாழ்வதற்கான நெறிகளையும் அது
தருகிறது.
பழைய பாடல்களைத் தேடி எடுத்து அதை வல்லாரிடம் கொடுத்து
அதன் மெய்ப்பொருளைக் காண்பதுவே அறிவு.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் 2-11-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
முத்தான முத்து, கடவுள் தந்த சொத்து!
ச.நாகராஜன்
ஆணி முத்து
வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே!
பூமித் தாய் இயற்கையில் நமக்கு நிலத்தில் தந்துள்ள
தாதுக்கள், உலோகங்கள் உள்ளிட்ட விலை மதிக்கமுடியாத
பொருள்களைப் பற்றிச் சற்று நாம் அறிவோம்; ஆனால் கடலில் உள்ள செல்வத்தில் ஒரு சிறிதேனும்
கூட இதுவரை நாம் முழுவதுமாக அறியவில்லை. அப்படி ஒரு அற்புத வளத்தைக் கடல் கொண்டுள்ளது.
அந்தக் கடல் வளத்தில் இயற்கையாக ஒளிரும் ஒன்று தான் நவரத்தினங்களில் ஒன்றான முத்து.
மிகப் பழைய காலம் தொட்டு பாண்டிய நாடு, ‘முத்துடைத்து’ என்ற பெரும் புகழைப் படைத்த நாடாக
இருந்து வந்திருக்கிறது.
தாலமி,பெரிப்ளஸ் ஆகியோர் கொற்கை
முத்துக்களைப் பற்றியும் இதை வாங்க போட்டி போட்டுக்
கொண்டு வெளிநாட்டார் வந்ததையும் பதிவு செய்திருக்கின்றனர். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில்
ஸ்ரீ வைகுந்தம் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமாக கொற்கை இன்றும் புகழுடன் திகழ்கிறது.
ஆழ்கடலில் மூழ்கி மூச்சைப் பிடித்து முத்தை எடுத்து
வருவது ஒரு அபூர்வமான தனித்துவம் வாய்ந்த கலை; பயிற்சி.
இதில் கொற்கையைச் சார்ந்த பகுதி வாழ் மக்கள் ஏராளமானோர்
நிபுணர்களாக இருந்தனர்.
சிறிய அளவிலிருந்து பெரும் அளவிலான ஒளிரும் அரிய முத்துக்களை அவர்கள் கொண்டு வர மாபெரும் மன்னர்கள் அதை வாங்கி அணிவது மரபாக இருந்து வந்தது.
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே
மொய்த்து
வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம் அருள்
வேண்டுவது மேற்கரையிலே
என்று மஹாகவி பாரதியார் நம் முத்தை வாங்க வரும் வெளிநாட்டார்
அதைத் தந்து ‘அருள் புரிய வேண்டும்’ என்று வேண்டுவதைச்
சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.
முத்தைச் சிறப்பிக்காத கவிஞர்களே இல்லை. முத்தன்ன
வெண் நகையாள் என்று பாவையரின் பளீரென்ற சிரிப்பில் ஒளிரும் பற்கள் முத்துப் போல் ஒளிர்வதைச்
சொல்லாத கவிஞர் யார்?
ஆணி முத்து
வாங்கி
வந்தேன்
ஆவணி வீதியிலே
அள்ளி
வைத்துப்
பார்த்திருந்தேன்
அழகு கைகளிலே,
(பாமா விஜயத்தில் கவிஞர் கண்ணதாசன்),
பச்சைக் கிளி முத்துச் சரம் முல்லை கொடி யாரோ (உலகம்
சுற்றும் வாலிபனில் கவிஞர் வாலி),
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ (நெஞ்சில் ஓர் ஆலயத்தில் கவிஞர் கண்ணதாசன்) என்பன போன்ற நூற்றுக் கணக்கான திரைப்படப் பாடல்களிலும், ஆயிரக்கணக்கான தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தம் மற்றும் இதர பாடல்களிலும் முத்தின் சிறப்பு போற்றப்படுகிறது.
ஜோதிடத்தில்
முத்து!
முத்து சந்திரனுடன் தொடர்பு கொண்ட ரத்தினம். எண் கணிதத்தில்
இரண்டு என்ற எண்ணிற்கும் இதற்கும் தொடர்பு உண்டு. கடக ராசிக்காரர்களும் சந்திர தசை
நடப்பவர்களும் முத்து அணிவது நலம் பயக்கும்.
பரல்,நித்திலம், ஆரம்,தரளம், மூரி வஞ்சி, தூலகம்,
சுக்கிரன், ஆதித்தன், சோதி, ஆழிவித்து,கத்தலம்,மௌத்திகம்,முக்தா, மஞ்சரி என்று இப்படி
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் முத்திற்குப் பல பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் பரவலாக
பெண்களுக்கு இருக்கும் பெயரான மார்கெரட்டுக்கு முத்து என்பதே பொருள். முத்துக்கான பெர்சிய வார்த்தை மர்கரிடா. இந்த பெர்சிய
வார்த்தை மஞ்சரி என்ற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து தோன்றியது.
ஆயிஸ்டர் (Oyster) எனப்படும் ஒரு வகை கடல் வாழ் சிப்பிகளின் உடலுக்குள்
புகும் மண் அல்லது கிருமி போன்ற ஏதேனுமொரு துகளைச் சுற்றி சிப்பி சுரக்கும் திரவம்
அடுக்கடுக்காகப் படியும். தனது உடலுக்குள் புகுந்த பொருள் தன்னை உறுத்தாமலிருக்க முத்துச்
சிப்பி இப்படி திரவதத்தைச் சுரக்கிறது. இந்த திரவம் அடுக்கடுக்காக ஒன்றின் மீது ஒன்றாகப்
படிந்து முத்தாக உருவாகிறது.
ரசாயன முறைப்படி இதைப் பகுத்துப் பார்த்தால் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருள் ஆகும்.
செயற்கை முத்து!
கடந்த நூறாண்டிற்கும்
மேலாக முத்தைப் “பயிர் செய்து அறுவடை செய்வது” நடந்து வருகிறது. ஆம் ஜப்பான் தான் இதற்கு முன்னோடி.
இயற்கையில் கிடைக்கும் முத்துச் சிப்பிகள் எல்லாவற்றிலும் முத்து கிடைப்பதில்லை;
அப்படியே கிடைப்பதில் அனைத்துமே நல்ல முத்துக்கள் தான் என்று சொல்லவும் முடிவதில்லை.
ஆகவே கடலிலுள்ள முத்துச் சிப்பிகளைப்
பிடித்து வந்து அவற்றின் உடலில் செயற்கையாக மண் துகளைப் புகுத்தி மீண்டும் கடலுக்குள்
இறக்கி விடுகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் அவற்றில் முத்து உருவாகி விடும்.
இப்படி செயற்கை முறையில் வளர்த்து
உருவாக்கப்படும் முத்துக்கள் ‘வளர்ப்பு முத்துக்கள்’ (Cultured Pearls) என்று அழைக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களில் ஏராளமான வகை முத்துக்கள் இன்று கிடைக்கின்றன.
செயற்கை முறையில் முத்தைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் ஜப்பான், ஆண்டுக்கு சுமார் 20 டன் என்ற அளவில் முத்தை உற்பத்தி செய்கிறது. ஜப்பானில் உள்ள அகோ வளைகுடாவில் முதன் முதலில் செயற்கை முத்து 1893ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது அகோயா முத்து (Akoya pearl) என அழைக்கப்பட ஆரம்பித்தது.
நல்ல முத்தை
எப்படிக் கண்டுபிடிப்பது?
செயற்கை முறையிலும் இயற்கை வடிவிலும் முத்துக்கள்
இன்று கிடைப்பதால் ஒரு நல்ல முத்தை இனம் காண்பதற்குள் நமக்குப் போதும் போதும் என்று
ஆகி விடுகிறது.
செயற்கை முத்துக்கள் பல்கிப் பெருகி இருப்பதாலும்
அதன் விலையும் இயற்கை முத்தை விடக் குறைவாக இருப்பதாலும் அதில் செய்யப்படும் மாலைகளின்
டிசைன் எனப்படும் வடிவமைப்பு ஏராளமாக உருவாகி விட்டன. ஒவ்வொரு ஹாரத்திற்கும் – நெக்லெஸிற்கும்
ஒவ்வொரு பெயர் – பார்த்தாலே வாங்க வைக்கும் கவர்ச்சி மாலைகள் இவை!
நமது சாஸ்திரங்கள் சொல்லும் பலன்கள் இயற்கை முத்திற்குத்
தான்; அதை மனதில் கொண்டே முத்தை அணுக வேண்டும்.
நல்ல முத்தை எப்படி இனம் காண்பது?
சுலபமான வழிகள் இருக்கின்றன.
எக்ஸ்-ரேயின் உதவி கொண்டு இயற்கை முத்து எது, செயற்கை
முத்து எது என்று கண்டுபிடித்து விடலாம். முத்தின் உட்பகுதியில் உள்ள கருவைக் கொண்டு
இயற்கையையும் செயற்கையையும் எக்ஸ்-ரே இனம் பிரித்து விடும்.
எண்டோஸ்கோப் (Endoscope) என்னும் கருவியின் மூலமும் இயற்கை
முத்தைக் கண்டுபிடித்து விடலாம்.
அடர்த்தி எண்ணைக் காண அடர்த்தி
எண் சோதனை (Specific Gravity test) வேறு இருக்கிறது.
முத்தின் ஒப்படர்த்தி 2.60 முதல் 2.85 வரை இருக்கும்.
ப்ரோமோபார்ம்(Bromoform) ஆல்கஹால் (Alcohol) கலந்த கரைசலை 2.74 அடர்த்தி
எண்ணுக்குக் கொண்டு வந்து அதில் முத்துக்களைப்
போட்டால் வளர்ப்பு முத்து மூழ்கி விடும். இயற்கை முத்து மிதக்கும்.
போலி முத்துக்களை எப்படிக் கண்டுபிடிப்பது?
மிகவும் சுலபமான வழி ஒன்று இருக்கிறது.
முத்தை எடுத்து பல்லின் தட்டையான
பகுதியின் மீது உரசிப் பார்க்க வேண்டும். அப்படி உரசும் போது முத்தின் மேற்பரப்பு வழுவழுப்பாக
இருந்தால் அது போலி முத்து. அதாவது முத்துப் போல இருக்கும் ஒரு பொருளை மேல் பூச்சாகக்
கொண்டிருக்கும் போலி முத்து அது. ஆனால் பல்லில் உரசும் போது அது சற்று சொரசொரப்பாக
இருக்குமானால் அது நல்ல முத்து. இயற்கை முத்தின் மேலோடு சற்று கரடு முரடானது தான்.
ஆகவே தான் இந்த எளியை வழியைக் கடைப்பிடித்து போலிகளை இனம் கண்டு ஒதுக்கி விடலாம்.
ஆனால் இப்படிக் கண்டுபிடிப்பதற்கு அனுபவமும் பயிற்சியும் தேவை என்பதால் ஒரு நிபுணரை அணுகுவதே நல்லது.
ரத்தினங்களின் ராணி!
உயிர்வாழும் ஒரு பிராணியிடமிருந்து
கிடைக்கும் ஒரே ரத்தினம் முத்து தான். பத்தாயிரம் சிப்பிகளில் ஒன்றில் தான் அரிய முத்து
கிடைக்கிறது.
‘ரத்தினங்களின் ராணி’ என்று செல்லமாக அழைக்கப்படும்
முத்து பெண்களைப் பெரிதும் கவரும் அரிய சொத்து.
முத்தின் கடினத் தன்மை ‘மோ அலகின்’ படி 2.5 முதல் 4.5 முடிய இருக்கும்.
முத்தின் விலை மிகச் சிறிய தொகையிலிருந்து ஆரம்பித்து மலைக்க வைக்கும் பல கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.
முத்து வட்ட வடிவமானதால் அதன் குறுக்களவை வைத்துத்
தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 3 மில்லிமீட்டர் முதல் 9 மில்லிமீட்டர் வரை சாதாரணமாக
முத்து கிடைக்கிறது. குறுக்களவு அதிகமாக ஆக அதன் விலையும் கூடிக் கொண்டே போகும்.
பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முத்தின் விலை
நூறு மில்லியன் டாலர். (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூபாய் 70; ஒரு மில்லியன்
என்பது பத்து லட்சம்) 28 அங்குல நீளமுள்ள இது 75 பவுண்ட் எடை கொண்டது. இது தான் உலகின்
பெரிய அரிய முத்து.
முத்தின் மீதான கவர்ச்சி தான் ஜூலியஸ் சீஸரை இங்கிலாந்தின்
மீது பார்வையைப் பதிக்க வைத்தது. பிரிட்டனில் வேல்ஸ் பகுதியில் கான்வே என்னும் நதியில்
அழகிய முத்துக்கள் கிடைக்கவே சீஸர் இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். சீஸர் அரசாங்கத்தில்
உயரிய நிலையில் இருக்கும் பிரபுக்கள் மட்டுமே முத்தை அணிய வேண்டும் என்று சட்டமே கொண்டு
வந்தார்.
முத்தின் பயன்கள்!
ரத்தினங்களைப் பற்றி விளக்கிக் கூறும் ரஸ ஜல நிதி
தரும் சுவையான தகவல்கள் நமக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக அமைகிறது.
முத்து குளிர்ச்சியானது. கண்ணுக்குப் பெரிது பலனளிக்கும்
ஒன்று! அது வலிமை தரும்; உடலுக்கான சக்தியைக் கூட்டும். பெண்களின் கவர்ச்சியைக் கூட்டும்;
பெண்கள் அதை அணியும் போது அவர்களின் மீது அன்பு அதிகரிக்கும்; மோகமும் கூடும்.
ஒருவர் உடலில் இருக்கும் அதிகமான வாயு மற்றும் பித்தத்தை
அது சமனாக்கும். இருமல், ஆஸ்த்மா, ஜீரண சக்தி குறைந்திருத்தல் போன்றவற்றை நீக்கும்.
அழகு, வலிமையுடன் ஆயுளையும் அது நீட்டிக்கும். வீக்கத்திற்கும் விஷத்திற்கும் அதுவே
மருந்து.
கடலிலிருந்து கிடைக்கும் முத்து ஜீரண சக்தியை அதிகரித்து
ஜீரண மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோளாறுகளையும் போக்கும்.
முத்தின் பயன்களாக பண்டைய நூலான ரஸஜலநிதி தரும் தகவல்கள் இவை.
பிரமிக்க வைக்கும் பல வகை முத்துக்கள்!
சிப்பியில் வளரும் முத்துக்களைத் தவிர பல பிரமிக்க
வைக்கும் முத்துக்களைப் பற்றியும் இந்த பழைய நூல் பல விவரங்களைத் தருகிறது.
முத்தின் ரகங்கள் : யானை, தவளை, சங்கு, மீன், சிப்பி
மற்றும் மூங்கில். இப்படி முத்தை இனம் பிரித்துக் காட்டுகிறது இந்த நூல்!
யானை முத்து : இந்த ரகம் அளவில் பெரியது. வெவ்வேறு
அமைப்பு உடையது. ஐராவதம் போன்ற யானையின் நெற்றியில் தோன்றும் அபூர்வ முத்து. இதற்கு
விலை என்று ஒன்றை நிர்ணயிக்கக் கூடாது; நிர்ணயிக்கவும் முடியாது. இது புத்திர பாக்கியம்,
நோயற்ற வாழ்வு, வெற்றி ஆகியவற்றை நல்கும்!
அரவ முத்து : அரவம் என்றால் பாம்பு. அரவ முத்து அழகுடையது; நீல ஒளி உடையது.
இது மூன்று அளவுகளில் கிடைக்கும். இதை எப்படி
சோதனை செய்வது? திறந்தவெளியில் ஒரு வெள்ளிக் குடத்தில் இதை வைத்தால் உடனடியாக வானத்திலிருந்து
நீர்த்துளிகள் விழும். அப்படி விழவில்லை எனில் இது நிஜமான அரவ முத்து இல்லை.
மீன் முத்து
: ஆழ்கடலில் வாழும் ஒரு அரிய வகை திமிங்கிலத்தில் உருவாகும் முத்து இது. இலேசாக இருக்கும்
இது. மீன் முத்து மீனின் கண்களைப் போல இருக்கும்.
மூங்கில் முத்து : மூங்கிலிலிருந்து கிடைக்கும் முத்து
இது. பச்சையுடன் கூடிய வெள்ளை வண்ணம் உடையது இது. வலிமையுடன் கூடிய இது கனமாக இருக்கும்.
சங்கு முத்து : சங்கு கிளிஞ்சலிருந்து கிடைக்கும்
இந்த முத்து சந்திரனைப் போல வெள்ளை வெளேரென இருக்கும். உருண்டையாகவும் ஒளியுடனும் அழகுடனும்
இருக்கும் புறா முட்டை அளவு இருக்கும்!
தவளை முத்து : தவளையின் தலையில் உருவாகும் முத்து
இது.
கடல் சிப்பியில் உருவாகும் முத்து : ஸ்வாதி நட்சத்திரத்தில்
சூரியன் இருக்கும் போது சிப்பி வானிலிருந்து விழும் மழைத்துளியை ஏற்கும்; அது நாளடைவில்
முத்தாக மாறும். இதுவே சிறந்த முத்து.
மேலே கூறியவற்றில் கடல் சிப்பியில் அல்லாது இதர வகை முத்து கிடைக்கப் பெற்றால் அதுவே மிகமிகச் சிறந்தது.
அழகிய முத்து கடவுள் தந்த சொத்து!
முத்தின் வண்ணத்தைப் பொறுத்து அது வகைப்படுத்தப்படுகிறது.
சிறந்த முத்து என்பது தெளிவாக, வெண்மையாக ஒளிரும்
தன்மையுடன் இருக்கும். சற்று மஞ்சள்பழுப்பு வண்ணத்தில்
இருக்கும் முத்து இரண்டாம் ரகத்தது. மூன்றாவது ரகம் என்பது சிறிதே மஞ்சள் கலந்த வெண்மை
நிறத்துடன், பிரகாசமாக, எண்ணெய் பசையுடன் இருப்பது போல இருக்கும்.நான்காவது ரகம் சிறியதாக,
வெண்மை நிறத்துடன் கறுப்பு ஒளியுடன் இருக்கும்.
ஒளியற்ற, தாமிர நிறமுடைய, மங்கலான, முடிச்சுடன் கூடிய முத்துக்கள் அணியக் கூடாதவை.
இந்தத் தகவல்கள் அனைத்தும் ரஸ
ஜல நிதி தரும் தகவல்கள்.
ஆனால் இந்த
நூல் கூறும் பல வகை முத்துக்களில் முத்துச் சிப்பியில் தோன்றாத யானை முத்து, அரவ முத்து
போன்ற இதர வகைகள் இலக்கியத்தில் மட்டுமே காணப்படுகிறது; இயற்கையில் லட்சத்தில் ஒருவருக்கேனும்
இவை கிடைத்திருக்குமா, தெரியவில்லை!
மனதை அமைதிப் படுத்தி இன்ப உணர்வைத் தரும் வானத்துச்
சந்திரனைப் போல, நம் உடலிலேயே தவழ்ந்து உன்னத மகிழ்ச்சி தரும் முத்துக்கு இணை உண்டோ?
முத்தான முத்து – கடவுள் மனித குலத்திற்கு அளித்த
சொத்து!
8 Jan 2017 – Tagged with முத்து தோன்றும் இடங்கள். முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post
No.3524). Research Article … https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Vitamin Tablets to Students
1992ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நான் எழுதிய கட்டுரை மாணவர்
அறிவு வளர வைட்டமின் (விட்டமின் என்றும் உச்சரிக்கலாம்) மாத்திரைகள் உதவுமா என்று
பிரிட்டனில் நடந்த ஒரு சுவையான வழக்கு பற்றியதாகும்.
சுவையான
வழக்கு இது. படியுங்கள்
London Swaminathan’s Articles in 1992 Dinamani–subham–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஆடுகள்
பற்றிய 30 பழமொழிகள் இந்த மாத காலண்டரில் இடம்
பெறுகின்றன.
பண்டிகை
நாட்கள்:–
நவம்பர்
2- சூர
சம்ஹாரம்/ கந்த சஷ்டி; 9- துளசி விவாகம்; 12- குருநானக் ஜயந்தி, அன்னாபிஷேகம்
(வட நாட்டில் கார்த்திக் பௌர்ணமி; தென்னாட்டில் டிசம்பர் 10 கார்த்திகை பௌர்ணமி; 16 — கோபி அஷ்டமி; 18- சகல சிவாலயங்களிலும் சங்காபிஷேகம்; 23- சத்ய சாய் பாபா பிறந்த தினம்; 24- சீக்கிய குரு தேஜ் பஹாதூர் உயிர்நீத்த
தினம்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் 28-10-2019 இதழில்
வெளியாகியுள்ள கட்டுரை
ரிஷிகள் தவம் புரியும் தலம்
ரிஷிகேசம்; மோட்சத்தின் வாயில் ஹரித்வார்!
ச.நாகராஜன்
கங்கோத்ரி
பாரத தேசத்தின் தெய்வீக மலை
இமாலயம்.
தெய்வ நதி கங்கை.
கங்கையை முதலில் தரிசிக்கும்
இடம் கோமுகி!
கங்கை பிரதேசத்தில் கங்கை எப்படித் தோன்றுகிறாள்
என்பதைத் துல்லியமாகக் கண்டவர் யாருமில்லை.
இமயமலையில் 14000 அடி உயரத்தில்
ஒரு குகை! இந்த குகையின் தோற்றம் பசுவின் வாய் போல் இருக்கிறது. இது கோமுகி என்று அழைக்கப்படுகிறது.
இதிலிருந்து கங்கை வெளிப்படுகிறாள். இந்த இடம் கங்கோத்ரி எனப்படுகிறது.
சுமார் இருபத்திரண்டடி உயரத்திலிருந்து
நான்கு அடி அகலம் உள்ள நீர்த்தாரை விழ அதுவே பொங்கிப் பல்கிப் பெருகும் மாபெரும் தெய்வீக
நதியாக மிளிர்கிறது.
கங்கை கங்கை என்று எவன் ஒருவன் சொல்கிறானோ அவனது பாவங்கள் அனைத்தும் நசிந்து அவன் விஷ்ணு லோகம் அடைகிறான் என்ற ஸ்லோகம் கங்கையை நினைத்தாலே பாவம் போகும் என்கிறது.
ஹரித்வார்
கங்கோத்ரியிலிருந்து கிளம்பும்
கங்கை உத்தரகாசி வழியே தேவப்ரயாக் என்னுமிடத்தை அடைந்து ஹரித்வாரத்தை அடைகிறாள்.
ஹரித்வார் என்றால் மோட்சத்தின்
வாயில் என்று பொருள்.
கங்கோத்ரியிலிருந்து 365 மைல்
தூரம் யாத்திரை செய்து பக்தர்கள் ஹரித்வாரை அடைவது பெரிதும் போற்றுதற்குரிய கங்கா யாத்ரா
என அழைக்கப்படுகிறது.
புண்ணியசாலிகளே இந்த யாத்திரையை
மேற்கொண்டு ஹரித்வாரை அடைகின்றனர்.
இரு மலைத் தொடர்களுக்கு இடையே கங்கை பாய்ந்து வருகிறாள்; பக்தர்களைப் பரவசம் அடையச் செய்கிறாள்.
ரிஷிகேசம்
இங்கிருந்து பதிநான்கு மைல்
தூரத்தில் உள்ளது ரிஷிகேசம். ஹரித்வாரிலிருந்து இறங்கி ரிஷிகேசம் வரும் போது கூடவே
கங்கையும் துணைக்கு வருவாள்.
ரிஷிகேசம் என்றால் ரிஷிகள் வசிக்கும்
இடம் என்று பொருள்.
இந்த இமயமலைப் பகுதி மட்டும்
ஆயிரக்கணக்கான ரிஷிகளால் அன்றும் இன்றும் சூழப்பட்டு தியானத்திற்குரிய தெய்வீக இடமாக
அமைகிறது.
பியர்ஸ் ஜெர்விஸ் என்ற மேலைநாட்டு
எழுத்தாளர் கங்கைக்கு இடையில் அமைந்துள்ள தீவிற்கு (பூர்வ புண்ணியவசமாக) சென்று பல
ரிஷிகளைப் பார்த்ததையும் அவர்களின் வயது நூறிலிருந்து ஆயிரம் வருஷங்கள் வரை இருக்கும்
என்றும் தனது நூலான நேகட் தே ப்ரே
நிர்வாணமாகவே அவர்கள் பிரார்த்திக்கிறார்கள் – (Naked They Pray) – என்ற புத்தகத்தில் எழுதி அதிசயிக்கிறார்.
ரிஷிக்கு இலக்கணம் என்ன?
ரிஷி என்றால் யார்?
சுயநலமின்றி பிறருக்காக வாழ்பவரே
ரிஷி. சத்தியத்தின் வழி நடந்து சத்தியமே உருவாக ஆகி இருப்பவர் ரிஷி!
ரிஷி என்பவர் சூட்சும திருஷ்டியின்
மூலம் ஒருவரின் வாழ்க்கையின் நுட்பங்களைக் காண்கிறார்.
அந்தர் திருஷ்டி மூலம் ஒருவரின் அந்தக்கரணத்தை அறிந்து
அவரது நடத்தையை அறிந்து அதற்கான ஆதி காரணத்தை அறிகிறார்.
திவ்ய திருஷ்டி மூலம் ஒருவரின்
இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிகிறார்.
இப்படிப்பட்ட ரிஷிகளின் இருப்பிடம்
தான் ரிஷிகேசம்.
வெளிப்படையாகவும், பெரும்பாலான
சமயம் தங்களை மறைத்துக் கொண்டும் இன்றும் இவர்கள்
ரிஷிகேசம் சார்ந்த பகுதியில் தவம் புரிந்து வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக திருக்கடையூரில் அபிராமி பட்டர் தியானத்தில் மூழ்கி இருந்த போது அமாவாசையை பௌர்ணமி என்று அரசனிடம் கூற அன்று இரவு முழு நிலா எழுந்த உண்மை வரலாறை இங்கு நினைவு கூரலாம்.
லட்சுமண ஜூலாவும் ராமர் பாலமும்
சலசலத்து ஓடும் கங்கை நதியைக்
கடந்து செல்ல இங்கு அற்புதமான ஒரு பாலம் அமைந்துள்ளது.
அதன் பெயர் லட்சுமண ஜூலா. ஜூலா
என்றால் ஊஞ்சல் என்று பொருள்.
இலேசாக அசைந்து ஆடும் இந்தப்
பாலத்தில் நடந்து மட்டும் போகலாம்; அக்கரை சேரலாம். கீழே பொங்கிப் பிரவாகித்து ஓடும்
கங்கை நதியை ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் பயத்துடனும் தரிசித்து அக்கரை செல்வோர்
படகில் மீண்டும் இக்கரை வருவது வழக்கம்.
இந்தப் பகுதியில் தான் லட்சுமணர்
தவம் செய்தார்.
லட்சுமணருக்காகத் தனிக் கோவில்
அமைந்துள்ள இடம் இது ஒன்று தான்.
இங்கு வந்து இந்த இடத்தில் பூஜை
செய்த சூரத்மல்தாஸ் என்ற அரசன் இங்கு ஒரு கயிற்றுப் பாலத்தை அமைத்தான். ஆனால் கும்பமேளா
சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இதைப் பயன்படுத்தியதால் அது அறுந்து போயிற்று. ஆகவே
பிரிட்டிஷ் அரசை வேண்டிக் கொள்ள 1927ஆம் ஆண்டு கான்க்ரீட் அமைப்புள்ள ஒரு தொங்கு பாலம்
அமைக்கப்பட்டது.
1986ஆம் ஆண்டு கும்பமேளா நடந்த
சமயம் இன்னொரு பாலம் இங்கு அமைக்கப்பட்டது.
இதை ராமர் பாலம் என்கின்றனர்.
இந்த இரு பாலங்களின் மீது நடப்பதை பாவம் தீர்க்கும் புண்ணிய நடையாக பக்தர்கள் கருதுகின்றனர்.
ரிஷிகேசத்தில் உள்ள கோவில்கள்
இராமாயணத்துடன் தொடர்பு கொண்டுள்ள
இந்தத் தலத்தில் தான் ராமரும் லட்சுமணரும் ராவணனை வதம் செய்த பின்னர் வந்து தவம் செய்து
தங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்டனர்.
அத்துடன் பரதரும், சத்ருக்னரும்
கூட இங்கு தான் வந்து தவம் செய்தனர்.
ரிஷிகேசத்தில் உள்ள பரதர் ஆலயம்
மிகவும் புகழ் பெற்றது. இது ரிஷிகேஷ் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. சத்ருக்னர் ஆலயம்
ராமர் பாலத்தின் அருகில் உள்ளது.
லட்சுமண்ஜூலாவைக் கடந்து சென்றவுடன்
அமைந்து இருப்பது கைலாச நாதர் ஆலயம்.
இந்த ஆலயத்தில் திரிபுரசுந்தரி,
மஹிஷாசுரமர்த்தனி, காயத்ரிதேவி ஆகிய மூன்று தேவியரின் சந்நிதிகள் உள்ளன. தத்தாத்ரேயர்,
விநாயகர் சந்நிதிகளும் இங்கு உள்ளன.
இந்த ஆலயத்தை அடுத்துள்ள சுவர்க்கநிவாஸ்
மந்திரில் உள்ள பத்ரிநாதரை வழிபட்டால் சுவர்க்க பதவி உண்டு என அனைவரும் நம்புகின்றனர்.
சுற்றிலும் அழகிய சாந்தி தவழும்
மலைப் பகுதி; பிரவாகம் எடுத்து ஓடும் தெய்வீக கங்கை நதி; தியானத்திற்கும் யோகப் பயிற்சிகளுக்கும்,
ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உகந்த இடம்! இங்கு இந்த ஆலயத்தை பாபா காளிகம்லிவாலா என்ற
மகான் அமைத்தார் என்று கூறப்படுகிறது.
பகவத் கீதையைப் பரப்பும் பெரும்
நிறுவனமான கீதா பவனும் லட்சுமண் ஜூலாவை அடுத்து அமைந்துள்ளது.
ரிஷிகேசத்தின் உள்ளேயே அமைந்துள்ள
இன்னொரு ஆலயம் பத்ரிநாதர் ஆலயம். பத்ரிநாத்திற்குப் போக முடியாதவர்கள் இங்கு வந்து
தரிசித்தால் அதே பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ரிஷிகேசத்தில் சிவானந்த ஆசிரமம்,
ஸ்வர்க்காசிரமம், காஞ்சி மஹாபெரியவர் அமைத்த சங்கர மடம் உள்ளிட்ட 72 ஆசிரமங்கள் உள்ளன.
ரிஷிகேசம் யோகாவின் உலகத் தலைநகரம்
என்று
கொண்டாடப்படுகிறது.
ரிஷிகேசம் டில்லியிலிருந்து
சுமார் 150 மைல் தூரத்தில் உள்ளது. யாத்ரிகர்களின் பயணத்திற்காக ஏராளமான பஸ்கள் உள்ளன.
ரயில் வசதியும் உண்டு. டேராடூனுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து ரிஷிகேஷை அடையலாம்.நவம்பர்
முதல் மே வரை கடும் குளிர் காலம் என்பதால் யாத்ரீகர்கள் மே முதல் வரத் தொடங்குகின்றனர்.
ஏராளமான தர்மசாலாக்களும், ஆயிரம் அறைகள் கொண்ட இலவச தங்குமிட வசதியும் பக்தர்களுக்கென இங்கு உண்டு; ஏராளமான ஹோட்டல்களும் உள்ளன.
ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று ஹரித்வார்
அயோத்யா, மதுரா, மாயா, காசீ,
காஞ்சி, அவந்திகா, புரீ, த்வாராவதீ ஆகிய ஏழு தலங்களும் மோக்ஷபுரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஹரித்வார் என்பது மோட்சம் தரும்
இந்த ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று. பழைய காலத்தில் மாயாபுரி என்று அழைக்கப்பட்ட திவ்ய
பூமியே இன்றைய ஹரித்வார்.
இது தான் தக்ஷப்பிரஜாபதி யாகம்
செய்த இடம்.மாயையின் வசமாகி அவன் அகம்பாவம் தலைக்கேறி சிவபிரானை அவமதித்தான். இதனால்
கோபமுற்ற தாக்ஷாயணி தேவி அங்கேயே உயிரை மாய்த்துக் கொண்டாள்.
இதனால் கோபமுற்ற சிவபிரான் தட்சனை
மாய்த்து தாக்ஷாயணியைக் கையில் தூக்கிக் கொண்டு தாண்டவமாடினார். இப்படி தாக்ஷாயணி உயிர்
நீத்த இடமாதலால் தேவிக்கு இங்கு ஒரு கோவில் உண்டு. அது கனகல் கோவில் என்று புகழ் பெற்று
விளங்குகிறது.
தட்சன் செய்த வேள்வியின் பலனாக அவன் நற்கதியே
பெற்றதால், அவனுக்கென ஒரு கட்டமும் கோவிலும் இங்கு உள்ளன.
ஹரித்வார் கோவில்கள்
ஹரித்வாரில் இன்னும் பல முக்கியமான
கோவில்கள் உள்ளன.
மன்சா தேவி ஆலயத்தில் உள்ள மரத்தை
தரிசித்து தங்கள் பிரார்த்தனையைச் சொன்னால் இஷ்டங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின்
அனுபவம்.
கங்கா மாதாவிற்கென உள்ள கோவில்,பிரம்ம
குண்டத்தைச் சுற்றி இராமர் கோவில்,விநாயகர் கோவில், ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்கள்
உள்ளன.
பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்ததாக
வரலாறு உண்டு. ஆகவே அவர்களுக்கும் திரௌபதிக்கும் இங்கு கோவில்கள் உண்டு.
இங்குள்ள குளத்தில் பீமன் தன்
காலை ஊன்ற உடனே அதிலிருந்து நீர் சுரந்ததாக வரலாறு கூறுகிறது.
ஹரித்வாரிலிருந்து சுமார் இரண்டு
கிலோ மீட்டர் தூரத்தில் கங்கை ஏழு பிரிவுகளாகப் பிரிகிறது. இது சாத் சரோவர் – ஏழு துவாரங்கள்
– என்று சொல்லப்படுகிறது.
கண்வ ஆசிரமம்
ஹரித்வாரிலிருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் மாலினி நதிக் கரையில் அமைந்துள்ளது கண்வ ஆசிரமம்.
கோட்துவா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள இந்த இடத்தில் தான் கண்வ மஹரிஷி வாழ்ந்து வந்தார்.
அவர் வளர்த்த சகுந்தலையால் எழுந்த
மஹா காவியம் தான் காளிதாசர் இயற்றிய சாகுந்தலம்.
சகுந்தலை வளர்ந்த இடம், சகுந்தலை
துஷ்யந்தனைச் சந்தித்த இடம் உள்ளிட்ட அனைத்தையும் இங்கு பார்த்து மகிழலாம்; பயபக்தியுடன்
வணங்கலாம்.
ஹரித்வார் கும்பமேளா
ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை நடக்கும் கும்ப மேளா உலகில் மிக அதிகமாக பக்தர்கள் கூடும் ஒரே உலகத் திருவிழாவாகும்.
சூரியன் மேஷ ராசியிலும் குரு பகவான் கும்பராசியிலும் இருக்கும்போது ஹரித்வாரில் கும்பமேளா
நடக்கும்.
அமிர்தத்தைப் பெற வேண்டி பாற்கடலை
தேவர்களும் அசுரர்களும் கடையும் போது கலசத்திலிருந்து சில துளிகள் நான்கு இடத்தில்
விழுந்தன.
பிரயாகை, ஹரித்வார், உஜ்ஜயினி,
நாசிக் ஆகியவையே அந்த நான்கு இடங்கள்.
இந்த நான்கு இடங்களில் அமிர்தத்
துளிகள் விழுந்த புனித சம்பவத்தை நினைவு கூர்ந்து புண்ணியம் அடைய கும்பமேளாவில் பக்தர்கள்
கூடுகின்றனர்;
1903இல் நான்கு லட்சம் பேர்
இந்தத் திருவிழாவில் கூடினர். 2010இல் நடந்த கும்பமேளாவில் நான்கு கோடி பேர் கலந்து
கொண்டு நீராடி புண்ணியம் அடைந்தனர்.
சாமான்யனில் ஆரம்பித்து காடுகளில்
தவம் செய்யும் முனிவர்கள் ரிஷிகள் மகான்கள் முடிய கும்பமேளாவிற்கென அனைவரும் வருகின்றனர்.
பக்தர்கள் நீராடுவதோடு இப்படிப்பட்ட ரிஷிகளை ஒருசேர தரிசிப்பதால் இரட்டை புண்ணியத்தை
அடைகின்றனர்..
இன்னும் இமயமலைக் காடுகளிலும்
கங்கை நதிக் கரையோரப் பகுதிகளிலும் ஆங்காங்கே அமைந்துள்ள நகர்களிலும் ஏராளமான அதிசயக்
கோவில்கள் உள்ளன; அந்தப் பகுதியில்
நிஜமாக நடந்த ஆயிரக்கணக்கான பிரமிக்க வைக்கும் வரலாறுகளும்
உள்ளன!.
இப்போதும் தொடரும் பல அதிசய
சம்பவங்கள் ஊடகங்கள் வழியே உடனுக்குடன் பரவி உலகினரை பிரமிக்க வைக்கின்றன.
ரிஷிகள் தவம் புரியும் ரிஷிகேசமே
மோட்சத்திற்கு வழி காண்பிக்கும் ஹரித்வாரை அடையச் செய்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல!
***
Gangotri Himalaya Pictures by Radhika Balakrishnan