ஆறுமுக நாவலர் – அருட்பிரகாச வள்ளலார் மோதல் (Post No3448)

Written by London swaminathan

 

Date: 14 December 2016

 

Time uploaded in London:- 11-34 am

 

Post No.3448

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

சைவ மறுமலர்ச்சியின் தந்தை ஆறுமுக நாவலர்; அவர் பணி செய்திராவிடில் இலங்கைத் தமிழர் ஏராளமானோர் கிறிஸ்தவர்களாக மதம் மாறி இருப்பர். இதே போலத் தமிழ் நாட்டில் அருட்பிரகாச ராமலிங்க அடிகள் செய்த பணி மகத்தானது. எளிய தமிழில், பாரதிக்கும் முன்னோடியாக நல்ல கவி புனைந்தவர். ஆறுமுக நாவலரும் வள்ளலாரும் பிராமணர்கள் அல்ல. இருவருக்கும் இடையேயும் வேண்டாத மோதல் ஏற்பட்டு (ஏற்படுத்தப்பட்டு) கோர்ட் வரை சென்று விட்டது. இறுதியின் ஏனோ தானோ என்று அந்த சண்டை முடிந்தது. நல்ல வேளை, இந்து மதத்துக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை. இருவர் புகழும் வாழ்க.

 

நான் மதுரையில் வடக்கு மாசிவீதியில் யாதவர் பள்ளியில் (யாதவா ஸ்கூல்) ‘ஐந்தாப்பு’ வரை (மதுரை பாஷை- ஐந்தாம் வகுப்பு) படித்தேன். தினசரி பிரார்த்தனை வள்ளலாரின் பாடல்தான்: “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே……………..”

 

பின்னர் வீடு வீடாகச் சென்று நான் பஜனை செய்த காலங்களில் பாடியதும் வள்ளலார் பாடலே- “அம்பலத் தரசே அருமருந்தே, ஆனந்ததேனே அருள் விருந்தே”. என் தந்தைதான் இதைச் சொல்லிக் கொடுத்தார். அவரே எனக்கு “முன்னவனே யானை முகத்தவனே” — என்ற வள்ளலாரின் பிள்ளையார் பாட்டையும் சிறுவயதில் சொல்லிக் கொடுத்தார். 60 வருடங்களுக்கும் மேலாக இதை தினமும் சொல்லி வருகிறேன்! பள்ளிக்கூடத் தமிழ் நூலில் மனப்பாடப் பகுதியில் வள்ளலாரின் பாடல் “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்…………”. இவ்வாறு வள்ளாலார் எம் வாழ்வில் கலந்தவர்.

 

சின்ன வயதில் சிவாஜி கட்சி — எம்.ஜி ஆர். கட்சி என்று பிரிந்து பள்ளிக்கூடங்களில் சண்டை போடுவோம். பெரியவன் ஆனபோது காஞ்சி சங்கராச்சார்யார் கட்சி- சிருங்கேரி ஆச்சார்யாள் கட்சி என்று மதுரையில் சண்டை போட்டார்கள்; என் தந்தையோ பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையில் இருவரையும் ஆதரித்தவர்..

     

அதுபோலத்தான் இந்த வள்ள்லார்- நாவலர் மோதலும் என்பது எனது கணிப்பு. கீழேயுள்ள தகவல் நாவலரின் தமையானார் புதல்வர் எழுதியது. மறுதரப்பு வாதம் இருந்தால் விமர்சனப் பகுதியில் தெரிவியுங்கள்:–

 

 

 

 

–subham–

 

பாரதி பாட்டில் மாணிக்கவாசகர்! (Post No.3441)

Research Article Written by London swaminathan

 

Date: 12 December 2016

 

Time uploaded in London:-11-26 am

 

Post No.3441

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உருகார், வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார்.

 

பாரதியின் பாட்டில் மகிழார், வேறு ஒரு பாட்டிலும் மகிழார்.

தெவிட்டாத இன்பம்தரும் பாரதி பாடல்!

 

பாரதி பாடல்களில் தேவார மூவரையோ, திருவாசகம் தந்த மாணிக்கவாசகரையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆயினும் சைவத் திருமுறைகளில் திருவாசகமே அவரது உள்ளத்தைக் கொள்ளைகொண்டது என்பதற்குப் பல சான்றுகள் உள.

 

மாணிக்கவாசகர் என்னென்ன செய்தாரோ அதை இவரும் செய்துள்ளார்.

 

ஓம்காரம்

 

திருவாசகத்தின் முதல் பாடலிலும் (சிவபுராணம்), கடைசி பாடலிலும் ஓம்காரம் ஒலிக்கும்

 

இதே போல பாரதியின் பாஞ்சாலி சபதமும் ஓம் காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்

 

1.உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே (சிவபுராணம்)

 

2.உய்யுநெறிகாட்டுவித்திட்

டோங்காரதுட்பொருளை (அச்சோபதிகம்)

 

இனி பாரதியார், பாஞ்சாலி சபதம் நூலைத் துவக்கி முடிக்கும் முறையினைக் காண்போம்:

 

1.ஓமெனப் பெரியோர்கள்- என்றும்

ஓதுவதாய் வினை மோதுவதாய்

தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்

தேய்ப்பதுவாய், நலம் வாய்ப்பதுவாய்

–பாஞ்சாலி சபதத்தின் துவக்கப்பாடல்

 

2.ஓமென்றுரைத்தனர் தேவர்- ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்

–பாஞ்சாலி சபதத்தின் முடிவுப்பாடல்

xxxx

 

மாணிக்க வாசகர் குயில்பத்து பாடினார்

பாரதியார்  குயில்பாட்டு பாடினார்.

xxxx

 

மாணிக்கவாசகர் அச்சோபதிகத்தில்

சாதல், காதல் என்று பாடுவது போலவே, பாரதியும் குயில்பாட்டில்

காதல் காதல் , காதல்

காதல் போயின் சாதல் என்று பாடுகிறார்.

 

ஆண்டவன் மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் மாணிக்கவாசகர்.

 

பாரதமாதா மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் பாரதியார்.

 

 

xxx

திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் — எண்ணற்ற பலகோடி நட்சத்திர மண்டலங்களிருப்பது பற்றி பாடி வியக்கிறார்:

 

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன

திருவாசகம்

 

பாரதியும் ,

 

நக்கபிரானருளால் இங்கு

நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்

தொக்கன அணடங்கள் வளர்

தொகைபல கோடிபல் கோடிகளாம்

இக்கணக்கு எவர் அறிவார் – புவி

எத்தனை உளதென்பது யார் அறிவார்

என்று பாடி வியக்கிறார்.

 

xxxx

 

திருத்தசாங்கம் பாடினார் மாணிக்கவாசகர்.

 

பாரதியும் திருத்தசாங்கம் பாடினார்

 

 

இருவரும் கிளியிடம் பேசுவதாகப் பாடியிருப்பதால் சொற்களிலும் அதிக ஒற்றுமை கானப்படுகிறது

xxxx

 

மாணிக்கவாசகர்  போற்றித் திரு அகவல் பாடினார்.

 

பாரதியும் “போற்றி அகவல், கபிலர் அகவல்” முதலியன பாடினார்.

 

இவையெல்லாம் மேம்போக்கான ஒற்றுமைகள். இன்னும் சொல்லாராய்ச்சியில் இறங்கினால் எந்த அளவுக்கு மாணிக்கவாசகரும் அவர்தம் திருவாசகமும் பாரதி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அறியலாம்.

 

–Subham–

 

பாம்புகள் காத்த பைரவர் ஆலயம்!(Post No.3425)

Picture: Anand Bhairav Temple, Haridwar

Written by S NAGARAJAN

 

Date: 7 December 2016

 

Time uploaded in London: 5-31 am

 

Post No.3425

 

 

Pictures are taken from various sources; thanks

 

contact; swami_48@yahoo.com

 

 

ஹரித்வார் பற்றிய உண்மை நிகழ்ச்சி

பாம்புகள் காத்த பைரவர் ஆலயம்!

 

ச.நாகராஜன்

 

இந்திய வரலாற்றின் பழைய ஏடுகள் அதிசயிக்கத்தக்க செய்திகளைத் தரும் ஒன்றாகும். இவற்றை முறையாகத் தொகுப்பார் இல்லாததால் அனைவரும் இந்த அதிசயச் செய்திகளை அறிய முடியாமல் போகிறது. வரலாற்று ஏடுகளிலிருந்து ஹரித்வாரைப் பற்றிய ஒரு உண்மை சம்பவம் :

பிரிட்டிஷார் நம்மை ஆண்டு வந்த காலத்தில் சர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இந்திய தொல்லியல் பிரிவின் டைரக்டர் ஜெனரலாக இருந்தார். 1870-71ஆம் ஆண்டுகளில் தன்னால் இயன்றவரை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைச் சேகரித்தார். அவரது அறிக்கையில் ஹரித்வார் ஸ்தலம் பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்தது என்றும் அப்போது அங்கு கோவில் கட்டப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 

 

பின்னால் வந்த தொல்லியல் நிபுணர்களும் அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் இந்த தலம் மிகப் பழமையானது என்றும் சுமார் 3750 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

 

 

கி.பி,1206ஆம் ஆண்டில் குத்புதீன் ஐபக் அடிமை வம்சத்தை இந்தியாவில் நிறுவினான்.1320இல் கயாசுதின் துக்ளக் தனது துக்ளக் வம்சத்தை நிறுவினான். இதில் வந்த அமிர் ஜாஃபர் தைமூர் 1398இல் ஒரு பயணத்தை மேற்கொண்டான்.

 

 

யமுனை நதிக் கரையோரம் படைகளுடன் சென்ற அவன் வழியில் இருந்த கோவில்களை இடித்தான்.டெல்லி, பீஜானூர் வழியே கங்கைக் கரையோரமாக முன்னேறிய அவன் ஹரித்வார் நகரை அடைந்தான்.

அங்கிருந்த யாத்ரீகர்களை அடித்து விரட்டிய அவன் நேராக மாயாதேவி கோவிலுக்கு அருகில் இருந்த பைரவர் ஆலயத்தை நோக்கிச் சென்றான்.

அதை இடித்துத் தள்ள ஆணையிட்டான். ஆனால் உடனே அவன் கண்ட காட்சி அவனை நடுநடுங்க வைத்தது.

 

 

ஏராளமான பாம்புகளும் தேள்களும் அங்கு தோன்றின. அவனது படைகளுக்கு சரி நிகர் சமானமாக பாம்புப் படைகளைக் கண்ட அவனது படைவீரர்கள் அலறிப் பின் வாங்கி ஓடினர்.

 

நடுநடுங்கிய தைமூர் சமர்கண்ட் நோக்கிச் சென்று விட்டான். ஹரித்வாரும் பிழைத்தது. பைரவர் ஆலயமும் பாம்புப் படையினால் காப்பாற்றப்பட்டது!

தைமூருடன் சென்ற வரலாற்றாசிரியன் ஷர்ஃபுடீன் ஹரித்வாரைப் பற்றியும் அங்கு நடந்த நிகழ்ச்சிகளையும் தன் நினைவுக் குறிப்புகளில்  பதிந்து வைத்துள்ளதால் நடந்த நிகழ்ச்சிகளை நம்மால் அறிய முடிகிறது!

 

Haridwar Temples

*******

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 19 (Post No.3411)

Picture of Buddha’s foot print

Written by S NAGARAJAN

 

Date: 3 December 2016

 

Time uploaded in London: 6-28 am

 

Post No.3411

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 19

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 78.

மரகத புத்தர் வசந்த காலத்தில் பயணத்துக்கு ஆயத்தப்படுத்தப்பட்டார். எட்டு கூலியாட்கள் மரகத புத்தரை சுமந்து செல்ல அமர்த்தப்பட்டனர். காக்ஃபுட் மவுண்டனைச் சேர்ந்தவுடன் அவர்களுக்குத் தருவதற்காக ஒரு பெரிய தொகை நிர்ணயிக்கப்பட்டு அது அவர்களிடம் சொல்லப்பட்டது.

மோசமான குண்டும் குழியும் நிறைந்த மலைப்பாதை வழியே பல வாரங்கள் அவர்கள் பயணப்பட வேண்டும்.

 

 

மவுண்ட் யேரனுக்கு மரகத புத்தர் நெருங்கிய போது கூலியாட்கள் தங்கள் பயணத்தை திடீரென்று நிறுத்தினர்.

மரகத புத்தரினுள்ளே ஏராளமான பணமும் இரத்தினக் கற்களும் ஒளித்து வைத்திருக்கப்பட்டிருப்பதாக சந்தேகப்பட்ட அவர்கள் புத்தர் மிகவும் கனக்கிறார் என்று கூறி இன்னும் ஒரு பெரிய தொகையை கூடுதலாகக் கேட்டனர்.

 

 

இது முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை விட  பல மடங்கு அதிகம் என்பதால் ஸு யுன் அவர்களை சாந்தப்படுத்த முயன்றார்.ஆனால் அவர்களோ கூச்சல் போட்டனர். அவர்களை பேசிச் சமாளிக்க முடியாது என்று தோன்றிற்று ஸு யுன்னுக்கு.

அவர் அவர்களை அருகே அழைத்தார்.

அங்கே சாலையின் ஓரத்தில் இருந்த மிக பிரம்மாண்டமான ஒரு பாறாங்கல்லைச் சுட்டிக் காண்பித்தார்.

 

Old picture of Sanchi Stupa

 

“சொல்லுங்கள்,இதோ இந்தப் பாறை கனமா அல்லது மரகத புத்தரின் சிலை கனமா” – ஸு யுன் அவர்களிடம் கேட்டார்.

“சந்தேகமில்லாமல் அந்தப் பாறை தான் கனமானது. இரண்டு அல்லது மூன்று ம்டங்கு அந்தப் பாறை அதிக கனமுடையது” –அவர்கள் சொன்னார்கள்.

 

உடனே ஸு யுன் அந்தப் பாறை அருகே சென்று அதை அலாக்காக அப்படியே பூமியிலிருந்து ஒரு அடி மேலே தூக்கினார்.

 

அதைப் பார்த்த் கூலியாட்கள் பிரமித்து நின்றனர்.

ஒரு பேச்சும் பேசாமல் மரகத புத்தரைத் தூக்கிக் கொண்டு காக்ஃபுட் மவுண்டனை அடைந்தனர்.

ஸு யுன் பேசியதற்கு மேலாகவே அவர்களுக்கு அதிகத் தொகையைக் கொடுத்தார்.

 

 

ஸு யுன்னுக்குத் தெரியும், அவ்வளவு பெரிய பாறையைத் தூக்கக் கூடிய வலிமை அவருக்கு இல்லை என்பது.

தெய்வீக அருளே அதைத் தூக்க வைத்தது, அவ்வளவு தான்!

நாட்கள் நகர்ந்தன.

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 79.

கவர்னர் டாங் ஜி-யாவ் ஸு யுன்னுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.அதில் அவரை தலைநகருக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

ராணுவத்தினர் மரியாதையுடன் அவரை அழைத்துச் செல்வதை மறுத்த ஸு யுன், தானே தனது சீடர் ஸு யுவானுடன் நடந்தே வருவதாக கூறி விட்டார்.

 

வழியில் சூசியாங் என்ற இடத்தில் சில கொள்ளைக்காரர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர்.

அவருக்கு அடி மேல் அடி விழுந்தது.

“என்னை அடிக்காதீர்கள். உங்கள் தலைவனிடம் என்னை அழைத்து செல்லுங்கள்” என்றார் ஸு யுன்.

அவர்களது தலைவன் பெயர் வூ ஸு ஸியான். தனது ச்கா ஒருவருடன் அவன் இருந்தான்.

 

 

ஸு யுன்னைப் பார்த்த வூ உரத்த குரலில் “யார் நீங்கள்” என்று கத்தினான்.

“காக் ஃபுட் மவுண்டனில் உள்ள மடாலயத்தில் இருப்பவன் நான்”, என்றார் ஸு யுன்.

“உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் ஸு யுன்”

“ஏன் நீங்கள் தலை நகர் நோக்கிச் செல்கிறீர்கள்?”

“புத்த தரமத்தில் உள்ள சடங்குகளைச் செய்வதற்காக.”

“எதற்காக?”

 

Picture of Buddha

“அனைத்து மக்களும் நலமுற வாழ வேண்டும் என்பதற்காக”

“கவர்னர் டாங் ஒரு  கொள்ளைக்காரன். அவன் ஒரு மோசமான பேர்வழி. அவனுக்கு உதவ நீங்கள் செல்வதால் நீங்களும் ஒரு மோசமான ஆள் தான்!”

“ஒரு மனிதனை மோசமான பேர்வழி என்று அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட முடியாது”

“ஏன்?”

 

 

:”ஒரு மனிதனைப் பற்றிய நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அவன் நல்லவனே. அவனது தீய குணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அவன் தீயவனே!”

“இதற்கு என்ன அர்த்தம்?”

 

 

“நீங்களும் டாங்கும் இணைந்து மக்கள் நலனுக்காகப் பணி ஆற்றினீர்கள் என்றால் உங்கள் ஆணைப்படி நடக்கும் படை வீரர்களும் அப்படியே பணியாற்றினால் நீங்கள் அனைவருமே நல்லவர்கள் ஆகி விட முடியாதா? மாறாக நீங்களும் டாங்கும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டு சண்டையிட்டு மக்களைத் துன்புறுத்தினால் நீங்கள் அனைவருமே மோசமான பேர்வழிகள் என்று ஆகி விடாதா? ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் ஒன்று உங்களைப் பின்பற்ற வேண்டும். அல்லது டாங்கைப் பின்பற்ற வேண்டும். அப்போது அனைவருமே கொள்ளைக்காரர்கள் தானே! அடடா, எல்லோரும் பரிதாபத்திற்குரியவர்கள் தானே!”

இதைக் கேட்டவுடன் வூவும் அவனது சகாவும் கடகடவென்று சிரித்தனர்.

 

 

“நீங்கள் சொல்வது சரிதான்! அதற்கு நான் என்ன செய்யமுடியும்?”

 

“எனது ஆலோசனை என்னெவெனில் நீங்கள் சண்டை இடுவதை நிறுத்த வேண்டும். சமாதானமாகப் போக வேண்டும்”

“அதாவது நான் சரண் அடைய வேண்டும், அப்படித்தானே?”

“இல்லை, அப்படியில்லை. உங்களைப் போல இருக்கும் ஒத்த மனத்தினருடன் இணைந்து நீங்கள் சமாதானத்திற்காக பணியாற்ற வேண்டும். நமது நாட்டிற்காகவும் மக்களின் நலனுக்காகவும் உங்கள் கர்வத்தைச் சற்று விட்டு விடுங்கள் என்கிறேன்”

வூ கேட்டார் –“ சரி அதை எப்படி நான் ஆரம்பிப்பது?”

“டாங்குடன்!”

 

 

என்ன என்று பிரமித்தார் வூ. டாங்குடன் நான் பேசுவதா?

“அவர் எனது வீரர்கள் ஏராளமானோரைக் கொன்று  குவித்தவர். ஆக இது பழி வாங்கும் நேரமே தவிர சரணாகதி அடைவதற்கான காலம் இல்லை”

 

வூ அழுத்தம் திருத்தமாகக் கூறி நிறுத்தினார். அங்கு அமைதி நிலவியது.

-தொடரும்

 

மன்னனின் பிரச்சினையும் ஆனந்தரின் தீர்வும்! (Post No.3405)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 1st December 2016

 

Time uploaded in London: 5-50 AM

 

Post No.3405

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

புத்தரின் சீடர் ஆனந்தர் வாழ்வில்!

 

மன்னனின் பிரச்சினையும் ஆனந்தரின் தீர்வும்!

ச.நாகராஜன்

 

புத்தரின் சீடரான ஆனந்தர் மிக அபாரமான அறிவும் சிறந்த பண்புநலன்களும் உடையவர்.

எந்த சிக்கலான பிரச்சினைக்கும் யாருக்கும் துன்பம் இல்லாதவாறு தீர்வைக் காண்பவர்.

இதை விளக்கும் ஒரு சம்பவம் உண்டு.

ஒரு முறை மன்னன் பசநாடி மிகுந்த கோபத்துடனும் துக்கத்துடனும் இருந்தான். காரணம், அந்தப்புரத்தில் இருந்த போது அவன் மகுடத்தில் இருந்த ஒரு இரத்தினக் கல்லைக் காணோம் என்பது தான்.

அந்தப் புரத்தில் இருந்த அனைவரையும் நன்கு சோதிக்குமாறு மந்திரியிடம் அவன் உத்தரவு பிறப்பித்தான்.

ஆனால் பயன் ஏதுமில்லை.

 

 

அந்தப்புரப் பெண்மணிகளும் அங்கு வேலை பார்த்தோரும் மிகுந்த துன்பத்துக்கு ஆளானார்கள்

கவலையுடன் அவர்கள் அனைவரும் ஆன்ந்தரை நாடினார்கள்..

என்ன விஷயம் என்று கேட்டார் ஆனந்தர்.

அவர்கள் நடந்ததை விளக்கினர். ஆனந்தர் நேராக  மன்னனிடம் வந்தார்.

மன்னா! கவலைப்பட வேண்டாம். இந்தப் பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாம் என்றார்.

மன்னன், “பூஜ்யரே, அது எப்படி சாத்தியம். அனைவரையும் நன்கு சோதித்து விட்டோமே. இனி என்ன வழி?” என்று கேட்டான்.

:”மன்னா! அங்குள்ள ஒவ்வொருவரிடமும் சிறிது வைக்கோலையும் களிமண் உருண்டையும் கொடுத்து அவர்கள் விரும்பிய இடத்தில் அவற்றை வைக்கச் சொல்” என்றார் ஆனந்தர்.

 

அதன்படியே உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டது. அனைத்து களிமண் உருண்டைகளும் சேகரிக்கப்பட்டன. ஆனந்தர் அவற்றைக் கவனமாகச் சோதித்தார். திருடியது யாராக இருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி களிமண் உருண்டைக்குள் இரத்தினக் கல்லை வைத்து விடுவார் என்று அவர் எண்ணினார். ஆனால் அந்த உருண்டைகள் எதிலும்இரத்தினக்கல் இல்லை.

ஆனந்தர் யோசித்தார். தன் திட்டத்தைச் சற்று மாற்றினார்.

“மன்னா! ஒரு அறைக்குள் பெரிய குடம் நிறையத் தண்ணீரை வை. அந்த அறைக்கு முன்னால் திரை ஒன்று தொங்கட்டும். அனைவரையும் அங்கு சென்று குடத்தின் நீரால் கையை அலம்பச் சொல்” என்றார்.

அனைவரும் அறைக்குள் சென்று திரைக்குப் பின்னால் இருந்த குடத்து நீரால் கையை அலம்பி விட்டு வந்தனர்.

பின்னர் ஆனந்தர் மன்னனுடன் அந்த அறைக்குள் நுழைந்தார்.

குடத்திலிருந்த நீரைக் கொட்டினார். குட்த்தின் உள்ளே இரத்தினக்கல் இருந்தது.

மன்னன் மிகவும் மனம் மகிழ்ந்தார்ன். அவரது கூர்மையான அறிவையும் பிரச்சினையை யாருக்கும் பாதகமில்லாமல் அணுகி உடனே அதைத் தீர்த்ததையும் வெகுவாகப் போற்றினான்.

அவரைப் பணிந்து ஆசியை வேண்டினான்.

ஆனந்தர் தன் வாழ்நாள் முழுவதும் புத்தரின் போதனைகளின் படி வாழ்ந்து காண்பித்தார்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, உடனடியாக யாவருக்கும் இசைந்த முறையில் தீர்வைக் காண்பார்.

புத்தருக்கு  உகந்த சீடர் அவரே என்பதைக் காட்டும் ஏராளமான சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்தன. அனைத்துமே அருமையானவை!

*******

 

42 திருவாசகப் பொன்மொழிகள் (Post No.3404)

டிசம்பர் 2016  காலண்டர்

Compiled by london swminathan

 

Date: 30 November 2016

 

Time uploaded in London: 22-09

 

Post No.3404

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

December 2016  ‘Good Thoughts’ Calendar

டிசம்பர் 12 : கார்த்திகை தீபம், 13- சர்வாலய தீபம், 13- மிலாடி நபி,  25- கிறிஸ்துமஸ்; ஏகாதசி- 10, 24/25; பௌர்ணமி -13;  அமாவாசை-28; முகூர்த்த தினங்கள்–1, 4, 5, 9

 

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தமாக்கியதே – எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் எனும் தேன்

xxx

டிசம்பர் 1 வியாழக்கிழமை

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க

 

xxx

டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை

உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

xxx

டிசம்பர் 3 சனிக்கிழமை

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ச்சுடரே

 

xxx

டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை

 

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே

xxxx

டிசம்பர் 5 திங்கட்கிழமை

 

சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே அவந்தாள் வனங்கி

xxxx

 

டிசம்பர் 6 செவ்வாய்க்கிழமை

 

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி

………. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

—சிவபுராணம்

 

xxx

 

டிசம்பர் 7  புதன்கிழமை

 

மன்னு மாமலை மகேந்திரமதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

–கீர்த்தித் திரு அகவல்

xxxx

டிசம்பர் 8 வியாழக்கிழமை

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன

–திருவண்டப்பகுதி

 

xxx

டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை

சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க

சித்தமும் செல்லாட் சேட்சியன் காண்க

பக்தி வலையிற் படுவோன் காண்க

–திருவண்டப்பகுதி

xxxx

டிசம்பர் 10 சனிக்கிழமை

 

ஆறுகோடி மாயா சக்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின

ஆத்தமானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்

–போற்றித் திரு அகவல்

xxx

 

டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை

சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்

மிண்டியமாயாவாதம் என்னும்

சண்டமாருதஞ் சுழித்தடித்தார்த்து

உலோகாதயனெனும் ஒண்டிறர்பாம்பின்

கலாபேதத்த கடுவிடம் எய்தி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 12 திங்கட்கிழமை

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 13 செவ்வாய்க்கிழமை

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏனக் குருளைக்கருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 14  புதன்கிழமை

 

புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி

அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி

 

கருங் குருவிக் கன்றருளினை போற்றி

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 15 வியாழக்கிழமை

நாடகதாலுன்னடியார்

போனடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப்பெரிதும் விரைகின்றே

–திருச்சதகம்

xxxx

 

டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை

 

யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

மேவினோம் அவனடியாரடியாரோடு

மேன்மேலுங் குடைந்தாடி ஆடுவோமே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 17 சனிக்கிழமை

பட்டிமண்டபமேற்றினை யேற்றினை

எட்டினோடும் இரண்டும் அறியேனையே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 19 திங்கட்கிழமை

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

–திருவெம்பாவை

xxx

டிசம்பர் 20 செவ்வாய்க்கிழமை

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்

பெண்ணாளும் பாகனைப்பேணு பெருந்துறையில்

–திருவம்மானை

xxx

 

டிசம்பர் 21  புதன்கிழமை

தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித்

திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி

–திருப்பொற்சுண்ணம்

xxxx

டிசம்பர் 22 வியாழக்கிழமை

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்காயிரம்

திருநாம் பாடி நாம் தெள்ளெணங் கொட்டாமோ

–திருத்தெள்ளேணம்

xxx

டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை

 

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடீ

–திருச்சாழல்

xxx

டிசம்பர் 24 சனிக்கிழமை

மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்

தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட

புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

–திருப்பூவல்லி

xx

டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை

பாலகனார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட

கோலச் சடையற்கே உந்தீ பற

குமரன்றன் தாதைக்கே உந்தீபற

–திருவுந்தியார்

xxx

 

டிசம்பர் 26 திங்கட்கிழமை

 

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே

—–திருத்தோணோக்கம்

xxxx

டிசம்பர் 27 செவ்வாய்க்கிழமை

தேன்பழச் சோலை பயிலுஞ்

சிறுகுயிலேயிது கேள் நீ

வான் பழித்திம் மண்புகுந்து

மனிதரை  யாட்கொண்ட வள்ளல்

—குயிற்பத்து

xxxx

டிசம்பர் 28 புதன்கிழமை

தந்ததுன் றன்னைக் கொண்டதென்றன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்

அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றது என்பால்

–கோயில் திருப்பதிகம்

xxxx

டிசம்பர் 29 வியாழக்கிழமை

பவளத் திருவாயால்

அஞ்சேலென்ன ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே

–ஆசைப்பத்து

xxxx

டிசம்பர் 30 வெள்ளிக்கிழமை

 

சொல்லும் பொருளும் இறந்த சுடரை

நெல்லிக்கனியைத் தேனைப் பாலை

நிறையின் அமுதை அமுதின் சுவையை

–புணர்ச்சிப்பத்து

xxxx

 

டிசம்பர் 31 சனிக்கிழமை

 

பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்பா

பரகதி கொடுத்தருள் செய்யும்

சித்தனே

–அருட்பத்து

xxx

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அந்தமிலா ஆனந்தம் அணிகொடில்லை கண்டேனே

–கண்டபத்து

xxxx

சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும்

ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு

–கண்டபத்து

xxxx

பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ

பிறைசேர் சடையாய் முறையோவென்

றழைத்தால் அருளா தொழிவதே

அம்மானேயுன் அடியேற்கே

–குழைத்தபத்து

 

xxx

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்டமுழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற் கரியோய் நீ

வேண்டியென்னைப் பணி கொண்டாய்

–குழைத்தபத்து

xxx

 

மற்றுமோர் தெய்வந்தன்னை

உண்டென நினைந்தெம் பெம்மாற்

கற்றிலாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சுமாறே

–அச்சப்பத்து

xxx

ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்

பிரான் தன் அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே

–திருப்பாண்டிப் பதிகம்

xxxxx

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் ச்சூலப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே

—திருப்புலம்பல்

xxx

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த

தேவரும் காணாச் சிவபெருமான்

–திருவெண்பா

xxxx

இன்பம்பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்

துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் – அன்பமைத்து…….

–திருவெண்பா

xxxxxxxxxxx

முன்னை வினை இரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்

–திருவெண்பா

 

xxx

உய்யுநெறி காட்டுவித்திட்

டோங்காரத் துட்பொருளை

ஐயனெனக் கருளியவா

றார்பெறுவார் அச்சோவே

—அச்சோப்பதிகம்

 

 

 

—subham—

நல்ல கர்மங்களும் தீய கர்மங்களும் (POST NO.3402)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 30 November 2016

 

Time uploaded in London: 4-56 AM

 

Post No.3402

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

புத்த தரிசனம்

 

நல்ல கர்மங்களும் தீய கர்மங்களும் – அரசனின் கேள்வியும் ஆனந்தரின் பதிலும்!

 

ச.நாகராஜன்

 

நல்ல கர்மங்கள் எவை? தீய கர்மங்கள் எவை?

கோசல நாட்டு அரசன் பசநாடிக்கு சந்தேகம் வந்தது. அவன் புத்தரின் சீடரான ஆனந்தரின் காலில் அடி ப்ணிந்து விழுந்து கேட்டான்.

 

மன்னன்: பூஜ்யரே! முட்டாள்களும் புத்தியற்றவர்களும்  மற்றவர்களைப் புகழ்கின்றனர் அல்லது இக்ழ்கின்றனர். அவர்கள் சொல்வதை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. பண்டிதர்களும் புத்திசாலிகளும்  மற்றவர்களைப் புகழும் முன்னர் அல்லது விமரிசிப்பதற்கு முன் எதையும் ந்னகு ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்க்கின்றனர். அவர்கள் சொல்வதை நான மதிக்கிறேன். பூஜ்யரே! எந்த கர்மங்கள் அல்லது செயல்கள் துறவிகளாலும் பிராமணர்களாலும் இகழப்படுகின்றன? அதை எனக்குச் சொல்லி அருளுங்கள்!

 

ஆனந்தர்: மன்னனே! உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவைஎவை திறமையற்று இருக்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்.

 

மன்னன்: எந்தச் செயல்கள் உடல் வாக்கு, மனம் ஆகியவற்றால் திறமையற்ற செயல்கள் என்று கருதப்படுகின்றன?

 

ஆனந்தர்:  உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவைஎவை தீமை விளைவிக்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்

 

மன்னன்: எந்தச் செயல்கள் உடல் வாக்கு, மனம் ஆகியவற்றால் தீமை விளைவிக்கும் செயல்கள் என்று கருதப்படுகின்றன?

 

 

 

ஆனந்தர்:  உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவைஎவை அடக்கி ஆளும் கொடுமையைச் செய்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்

 

மன்னன்: எந்தச் செயல்கள் உடல் வாக்கு மனம் ஆகியவ்ற்றால் அடக்கி ஆளும் கொடுமையைச் செய்வதாகக் கருதப்படுகின்றன?

 

ஆனந்தர்: உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவை எவை துன்பத்தை விளைவிக்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்.

 

 

மன்னன்: எந்தச் செயல்கள் உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் துன்பத்தை விளைவிப்பதாகக் கருதப்படுகின்றன?

 

ஆனந்தர்: உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எந்தச் செயல்கள் தன்க்கோ அல்லது பிறருக்கோ கடும் தொல்லையைக் கொடுக்கிறதோ அல்லது தனக்கும் பிறருக்கும் சேர்ந்து தொல்லை கொடுக்கிறதோ எது திறமையற்ற செயல்களைக் கூட்டி திறமையுள்ள செயல்களைக் குறைக்கிறதோ அவையே அந்தச் செயல்களாகும். மன்னா!இவையே துறவிகளாலும் பிராமணர்களாலும் வெறுத்து ஒதுக்கப்படுகின்றன.

 

 

பின்னர் மன்னன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் போதனையின் சாராம்சத்தை ஆனந்தர் சுருக்கமாக இப்படி விளக்கி அருளினார்:

 

“எந்தக் கருமங்கள் உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் சந்தோஷத்தைத் தருகிறதோ, எவை ஒருவருக்கும் கடும் தொல்லையை உருவாக்காமல் இருக்கிறதோ எவை திறமையுள்ள செயல்களைச் செய்ய வைக்கிறதோ  அவையே துறவிகளாலும் பிராமணர்களாலும் விரும்பப்ப்டுகிறது. வெறுக்கப்படுவதில்லை!

 

நல்ல கர்மம் எது, தீய கர்மம் எது என்ற ஐயத்திலிருந்து மன்னன் தெளிந்தான். அன்றிலிருந்து பிறருக்கு துன்பம் தருவதை உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் தவிர்த்தான். சந்தோஷம் தருவதை ஊக்கமுடன் செய்தான்.

 

புத்தரின் போதனையை மற்றவர்களுக்குச் சொல்ல ஆனந்தர் கோசல நாட்டை விட்டுக் கிளம்பினார்.

*****

 

திருவாசக வெளியீடு: டாக்டர் போப் தரும் அதிசயத் தகவல்! (Post No.3399)

Written by London swaminathan

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 8-43 AM

 

Post No.3399

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

“திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு டாக்டர் ஜி.யூ. போப். வெளிநாட்டினராகப் பிறந்தும், கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு வாழ்நாளை அர்ப்பணித்தும் கூட திருவாசகத்தாலும் தமிழாலும் ஈர்க்கப்பட்டு அதில் கரைந்தவர் அவர். மாக்ஸ்முல்லர் எப்படி சம்ஸ்கிருதக் கடலில் சங்கமித்தாரோ அதே போல தமிழ்க் கடலில் சங்கமித்த்வர் ரெவரெண்ட் ஜி.யூ. போப் (Rev G U Pope). இருவரும் வேறு உள்நோக்கத்தோடு இந்துமதக் கடல் பார்க்க வந்தனர். அதிலுள்ள முத்துக்களையும் கொஞ்சம் எடுப்போமே என்று கடலில் நுழைந்தவர்கள் கரைந்து விட்டனர். ராம கிருஷ்ண பரம ஹம்சர் சொன்ன உப்பு பொம்மை கதைதான் நினைவுக்கு வருகிறது. கடலின் ஆழத்தைக் காணப் புறப்பட்ட உப்பு பொம்மை, சில அடி ஆழத்துக்குச் செல்வதற்குள் கரைந்து விட்டது. யாரே இந்து மதக் கடலின் ஆழத்தை அறியவல்லார்?

 

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு. போப், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்ட் நகரைச் சேர்ந்தவர். அவர் 1900 ஆம் ஆண்டில் திருவாசகப் புத்தகத்ததை எப்படி வெளியிட்டார் என்ற அதிசயச் செய்தியை அவரே அப்புத்தகத்தின் முன்னுரையில் எழுதியுள்ளார். இதோ அந்த முன்னுரை:–

“இன்று என்னுடைய எண்பதாவது பிறந்த தினம். நான் எழுதி வைத்த குறிப்புகளைப் பார்க்கப் போனபோது நான் 1837 ஆம் ஆண்டில் தமிழ் கற்கத் துவங்கினேன் என்பது தெரிந்தது. நீண்டகாலத்துக்கு தமிழ் அன்னையின் பக்தனாக இருந்தேன்; அது முடிவுக்கு வருகிறது என்றே தோன்றுகிறது. என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான இலக்கியப் படைப்பை சமர்ப்பணம் செய்து இப்பணியை முடிக்கும்போது மிகவும் உணர்ச்சி வசமாகி விட்டேன்.

 

பல ஆண்டுகளுக்கு முன், நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அப்போது இப்படி ஒரு புத்தகம் வெளியிடும் திட்டம் என் மனதில் இல்லை. ஒரு நாள் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தவுடன், என் கல்லூரித் தலைவருடன் (பாலிலோல் கல்லூரி மாஸ்டர்) நடந்து கொண்டிருந்தேன். எக்களுடைய சம்பாஷனை திடீரென்று தமிழ் வரலாறு, இலக்கியம், தத்துவம் பற்றித் திரும்பியது. நீண்ட உரையாடலின் நடுவே ஒரு இடைவெளி நேரிட்டது. என்னுடைய மாஸ்டர் எப்போதுமே வேகமாகப் பேசக்கூடியவர். திடீரென்று ‘அதை நீ அச்சிட்டே ஆகவேண்டும்” என்றார்.

 

நான் 80 வயதுக்காரன் என்ன பதில் சொல்லுவானோ அதையே அவரிடம் சொன்னேன்: மாஸ்டர் நான் என்ன சாகாவரம் வாங்கி வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டீர்களா? இதை வெளியிடத் துவங்கினால் அதை முடிக்க நீண்ட காலம் ஆகும். இப்போது அவர் முகத்தை பார்த்தேன்; அவர் என்னை நோக்கித் திரும்பினார். அவருடைய வெண்தாடி மீதும் அன்பே உருவான முகத்தின் மீதும் நிலவொளி பட்டொளி வீசிப் பரவியது. அவர் அன்போடு என் தோளின் மீது கைகளைப் போட்டார் — ஒரு நீண்ட பணியை எடுத்துக்கொண்டுவிட்டால் அது முடியும் வரை நீ மரணம் அடைய மாட்டாய். இது நீண்டகாலம் வாழவுள்ள ஒரு வழி! அது நிறைவடையும் வரைக்கும் நீ வாழ்வாய்” என்று சொல்லி முடித்தார்.

இதை அவர் சொன்னபோது எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் சொன்ன சொற்கள் மட்டும் என் மனதில் அசரீரி போல எதிரொலித்துக் கொண்டே இருந்தது. நான் களைபுற்றபோதெல்லாம் அந்த ஆரூடச் சொற்கள் எனக்கு உத்வேகம் ஊட்டின. அவர் இப் பூவுலகில் இருந்து மறைந்துவிட்டார். ஆனால் அவர் சொன்ன காரியம் நிறைவேறிவிட்டது.

 

அந்த அன்பான ,சிறந்த, பொறுமை மிக்க பெஞ்சமின் ஜோவெட் அவர்களை இன்று நன்றியுடன் நினைவுகூறுகிறேன். இது எல்லாம் அவருக்கே சமர்ப்பணம். என்னுடைய நன்றியையும் மரியாதையையும் தெரிவித்து வணங்குகிறேன்.

 

குற்றம் குறையுள்ள இந்தப் புத்தகத்துக்கு என்னுடைய, அவருடைய, தலைவன் (GOD) ஆசி கூறட்டும்”.

 

பாலிலொல் கல்லூரி

ஏப்ரல் 24, 1900                                                   ஜி யூ போப்

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 18 (Post No.3386)

Written by S NAGARAJAN

 

Date: 25 November 2016

 

Time uploaded in London: 5-53 AM

 

Post No.3386

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 18

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 77..

உபாசகர் காவ் சில வருடங்களுக்கு முன் கொடுத்த மரகத புத்தரை சீனாவுக்குக் கொண்டு செல்ல எண்ணம் வந்தது ஸு யுன்னுக்கு.

அதைக் கொண்டு வர தென் கடலுக்குச் செல்ல விருப்பம் கொண்டு பயணத்துக்கு அவர் ஆயத்தமானார்.

வழியில் உள்ள பழங்குடியினர் அனைவரும் புத்த மதத்தில் மிகவும் பற்றுள்ளவர்கள். ஆகவே அவர்கள் வாழ்ந்த இடங்களின் வழியே அவர் பயணப்பட்டு ரங்கூனை அடைந்தார்.

 

அவர் மாபெரும் தங்க பகோடாவுக்கு விஜயம் செய்தார். பின்னர் உபாசகர் காவுக்கு தன் வருகை பற்றித் தெரிவித்தார்.

அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணப்பட்டார்.

சிங்கப்பூரை அடைந்தவுடன் பயணிகளிடம் ஒரு போலீஸ் அதிகாரி வந்தார்.

“நமது நண்பரான ரிபப்ளிக் ஆஃப் சைனாவின் ப்ரஸிடெண்ட் தன் முடியாட்சியைத் திருப்பிக் கொண்டு வந்து விட்டார்.ஆகவே புரட்சியாளர்கள் அனைவரையும் கைது செய்கிறோம்.

கரை இறங்குமுன்னர் உள்நாட்டில் வசிக்கும் சீனர்கள் அனைவரையும் விசாரணை செய்த பின்னரே கரை இறங்க அனுமதிக்க முடியும்” என்றார் அவர்.

சில நூறு பேர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.

ஸு யுன்னும் அவரைச் சேர்ந்தவர்களும் மட்டும் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டனர்.

 

அவர்களை இடதுசாரி புரட்சியாளர்கள் என்று போலீஸ் சந்தேகப்பட்டது.

ஆகவே அனைவரும் கயிறால் கட்டப்பட்டனர். சரியான அடி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் நகர விடாமல் செய்யப்பட்டனர். நகர்ந்தால் மீண்டும் அடி!

உணவோ அல்லது தண்ணீரோ தரப்படவில்லை.  காலை ஆறு  மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இந்த சித்திரவதை தொடர்ந்தது.

 

சிங்கப்பூரை அடைந்த அகதிகளுள் ஒருவராக ஹாங் ஜெங் ஜியாங் என்ற் பெயர் கொண்ட ஸு யுன்னின் சீடரும் இருந்தார். கூடவே அவருடன் டாங் என்ற பெயர் கொண்ட நிறுவன மேலாளரும் இருந்தார்.

இருவரும் காவல் நிலையம் சென்று ஸு யுன் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தந்து அவருக்கு தாங்கள் காரண்டி என்று கூறினர். 5000 டாலர் தொகையை பெய்ல் தொகையாக அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும்  தந்தனர்.

 

அனைவரது கை ரேகைகளும் எடுக்கப்பட்ட பின்னர் ஒருவழியாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஜெங்-ஜியாங்கின் சரக்கு கிடங்கில் அனைவரும் சென்று தங்கினர்.

புது வருடம் பிறந்தது.

ஜெங்-ஜியாங்கும் அவரைச் சேர்ந்தவர்களும் மரகத புத்தர் எடுத்துச் செல்லப்பட உதவினர்.

ஒரு வழியாக மரகத புத்தர் யூனானுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

***********

 

குறுந்தொகை, கலித்தொகையில் அந்தணரும் வேதமும்! (Post No.3377)

Written by S NAGARAJAN

 

Date: 22 November 2016

 

Time uploaded in London: 5-55 AM

 

Post No.3377

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 11

இந்தக் கட்டூரையில் எட்டுத்தொகையில் உள்ள குறுந்தொகை, கலித்தொகை  ஆகிய நூல்களில் வேதம், அந்தணர் பற்றி வரும் சிறப்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன

 

  குறுந்தொகை, கலித்தொகையில் அந்தணரும் வேதமும் !

 

                      ச.நாகராஜன்

குறுந்தொகை

எட்டுத்தொகை நூல்களில் இரண்டாவது நூலாக அமைவது குறுந்தொகை. இதில் 401 பாடல்கள் உள்ளன. 206 புல்வர்கள் இப்பாடல்களைப் பாடியுள்ளனர்.  நான்கு முதல் எட்டு அடிகள் வரை கொண்டுள்ள இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் பல்வேறு உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இதில் 156ஆம் பாடலைப் பாடியுள்ளவர் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். ஒரு தலைவன் ஒரு அந்தணனிடம் சொல்வது போல அமைந்துள்ளது இந்தப் பாடல்.

 

பார்ப்பன மகனே பார்பன மகனே                          

செம்பூ முருக்கின் நல் நார் களைந்து                                  

தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்                                

படிவ உண்டிப் பார்ப்பன மகனே                                      

எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்                                   

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்                                

மருந்தும் உண்டோ மயலோ இதுவே

 

ஏழே அடிகள் உள்ள இந்தப் பாடல் தலைவன் தன் நண்பன் கேட்கும் படியாக அமைக்கப்பட்டுள்ள ஒரு பாடல்.

ஒரு அந்தணன்!

அவன்  வேதம் விதித்த முறைப்படி தனது அன்றாட ‘நித்ய கர்மங்களை’ நன்கு செய்பவன்.

எழுதாக் கிளவி என்பது வேதம். அதை யாரும் எழுதவில்லை. ஆகவே இந்தச் சிறப்புப் பெயர் எழுதாக் கற்பு எனப்படும் அந்த அரிய நூல் பிரிந்தவர் சேரும் ம்ருந்து எதையாவது சொல்கிறதா என்பதே தலைவனின் கேள்வி.

ஓ! அந்தணனே! ஓ அந்தணனே (பார்ப்பன மகனே பார்ப்பன மகனே)

முருக்கம் மரத்தின் நார் களைந்து சிவப்பான பூக்களுடன் இருக்க, அதில் தொங்குகின்ற கமண்டலத்துடன் (செம்பூ முருக்கின் நல் நார் களைந்த தண்டொடு பிடித்த பிடித்த தாழ் கமண்டலத்து)

 

படிவ  உண்டி, பார்ப்பன மகனே (முறைப்படியான உணவை உண்டிருக்கும் பார்ப்பன மகனே)

(உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்)

நீ படித்து ஓதும் எழுதாக் கற்பு என்னும் வேதத்திலோ அல்லது உனது சொற்களிலோ (எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்)

பிரிந்தவர்கள் ஒன்று சேர ஏதேனும் மருந்து உண்டோ?

அல்லது இது ஒரு மயக்கம் தானா -சிறிய குழப்பம் தானோ!! (மயலோ இதுவே?)

எத்துணை அழகிய பாடல்! அனைத்தும் இருக்கும் வேதத்தில் தலைவனும் தலைவியும் பிரிந்திருக்கும் பிரிவு நோய் போக ஏதேனும் ஒரு மருந்து இருக்கிறதா, பார்ப்பன மகனே! நீயோ வேதத்தில் கரை கண்டவன். ஒரு வழியைச் சொல்லு!

 

புல்வர் வாயிலாக அந்தணனின் சிறப்பையும் எழுதாக் கற்பின் சிறப்பையும் காணும் போதே பிரிவின் வேதனையையும் உணர்கிறோம்.

 

கலித்தொகை

அடுத்து எட்டுத் தொகை நூல்களில் ஆறாவதாக அமைவது. கலித்தொகை.

கலித்தொகையில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன.

இதில் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பார்ப்போம். இதை இயற்றியவ்ர் ந்ல்லந்துவனார். இதில் சிவபிரான் தனது ஜடாமுடியில் கங்கையைத் தரித்ததும் திரிபுரம் எரித்ததும் ஆகிய அரும் செயல்கள் உரைக்கப்படுகின்றன.

 

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து                            தேறு நீர் சடைக் கரந்து திரிபுரம் தீ மடுத்து  (முதல் இரு வரிகள்)

 

ஆறு அங்கங்களை அறிந்துள்ள அந்தணர்க்கு (ஆறு அறி அந்தணர்க்கு)

நான்கு வேதங்களையும் பகர்ந்து (அருமறை பல பகர்ந்து)

கங்கையைத் தலையில் ஒளித்து (தேறு நீர் சடைக் கரந்து)

திரிபுரங்களை எரித்து (திரிபுரம் தீ மடுத்து)

ஆனந்த நடனம் ஆடுபவர் சிவ பிரான்

பாடலை முழுதுமாகப் படிக்கும் போது சிவபிரான், உமையம்மை பற்றி உளமுருகப் பாடும் புலவ்ரின் பக்தியும் தமிழின் அழகிய சொற்சேர்க்கை அதற்கு உதவுவதும் தெரியும்.

அந்தணர், அரு மறை பற்றியும் அதைக் கேட்டு மகிழும் சிவபிரானைப் போற்றியும் இந்தக் கடவுள் வாழ்த்து அமைகிறது; கலித்தொகைக்குக் கட்டியம் கூறுகிறது!

சங்க கால சிவ பக்தியும் நமக்குப் புரிகிறது.

 

****