Interesting Titbits about Asvamedha Yajna- Part 1(Post No.3159)

gupta-empire-samudragupta-i-c-330-70-av-dinar-7-70g

Written by London swaminathan

Date: 16 September 2016

Time uploaded in London: 15-45

Post No.3159

Pictures are taken from various sources; thanks.

 

Asvamedha Yajna means Horse Sacrifice. It was performed by the Hindu Kings of India. We have good references to this sacrifice in historical as well as Vedic records. It took two years to complete it.

 

Mysterious number 4 and 400 are connected with this Asvamedha. It is a very interesting coincidence that Tamils also gave very much importance to number 4, 40 and 400. Tamil Sangam Literature which is 2000 year old compiled most of the books in 400 verses. Even after the Sangam period this custom continued and important works of 18 minor didactic book are also in 4, 40 and 400. (Please read y article about Tamils fascination with 4, 40 and 400).

 

The second mystery is about the gold and pearls. Horses were decorated with gold and 1000 pearl jewellery! Where did the pearls come from? If it is from Pandya country whose pearl is even praised by Kautilya/Chanakya or even if it is from Gujarat coast, it will explode all the foreign bluffing about Vedic geography. Still I see some foreign jokers writing that Vedic society did not know sea! Asvamedha horse decorated with pearls- is a slap on their face.

Another mystery is about sacrifice of the horse. This horse had 34 ribs according to Rig Veda, the oldest book in the world. This explodes the half-baked foreign clowns’ account that Aryans came from Central Asia with their horses. Those horses have 36 ribs!

kumara-4842-1bv-344-31

Another mystery is horse is equated with the Sun. It is a symbol of Sun according to Rig Veda. There the number 34 (ribs) is interpreted as 27 stars+ five planets+ Sun +Moon. This explodes the foreign half-baked jokers’ account of our astrology and astronomy. They say we imported them from the Greeks! Greeks started writing 1000 years after the Vedas!

 

When kings performed Asvamedha Yajna, they released coins as mementoes. We have beautiful gold coins issued by the Gupta kings. Even a Tamil Pandya king by name Peruvazuthi performed this Yajna and released a coin with horse image. This explodes the myth of foreign invaders’ account that Tamils have a separate culture. There is at least one Hindu reference per every ten lines in Sangam literature!

Another great mystery is that Indus Valley Civilisation alias Sarasvati Valley civilisation! They never used Cow or Horse on their seals. Probably they considered them too sacred to wear or use in business. Horse bones and lot of seals with bulls are recovered!

Rig Veda even got a prince named Asvamedha (RV 5-27-4/6; 8-68-15)

 

Horses from Indus and Sarasvati river areas were of special value according to Vedic literature (It is in Brhadaranyaka Upanishad and Sankyayana Aranyaka). Atharva Veda praises white horses with black ears. They are priced high.

Lepers were used and honoured in Asvamedha! Prisoners were released from prisons on the day of Asvamedha!

 

609 Animals!

609 different creatures representing animal kingdom were collected and released after the sacrifice. And the wild animals were released into forest. So much protection for the forest animals!

Those who said Aryans came from outside India couldn’t show anything similar to Asvamedha, Rajasuya, and Vajapeya sacrifices in Europe or Central Asia! They struggled very hard to compare some killings outside India but did not succeed. This explodes the theory of Aryans coming from outside India. Now these Yajnas prove that they were the sons of the soil. They are in Vedic literature, epics and Puranas and Sangam Tamil literature! They went outside to spread culture. But those people only learnt our languages and some customs.

Huge gifts were given to the priests; thousands of cows and hundreds of horses!

 malayalam-coin

Symbolism

Yajur Veda describes

Morning as Horse’s head

Sun as its eye

Vayua as its breath

Moon as its ear

Asvamedha was a symbolic ritual.

 

It was believed that the performance of 100 such Yagas would enable a mortal king to overthrow the throne of Indra, and to become a ruler of the universe and sovereign of the Gods. Indra would spoil their attempts by tempting them to fall for money or women.

There are lot of riddles used in the Asvamedha Yajna mantras! This shows the high standard of life at Vedic times and higher level of literacy. Obscene dialogue was also used. No one knew why and what they really meant in a big sacrifice like this.

 

Manu and Valluvar

 

Manu says vegetarian food is better than 100 Asvamedhas! Tamil Poet Tiruvalluvar repeated this in his Tirukkural but multiplied100 by 10 and said it is better than 1000 sacrifices: –

“The man who offers a horse sacrifice  every year for a hundred years , and the man who does not eat meat, the two of them reap the same fruit of good deeds”– Manu 5-53

 

“More meritorious than a thousand sacrifices is to give up

The practice of killing a living creature, and eating its carcass” – Kural 259

In this couplet Tiruvalluvar uses the Sanskrit word avi (Havis) which stands for boiled rice and ghee.

Parasurama organised Vajapeya and one hundred Asvamedha sacrifices at Ramatirtha.

Indra performed 100 Asvamedha Yajnas under the supervison of Brihaspati.

 

After any sacrifice, the one who organised it,  for instance the king in the Asvamedha Yajna,  must give the Brahmins whatever they ask. Even if his kingdom or half of his kingdom is asked he must give it. But Brahmins were not greedy in those days and they never asked stupid things. When Parasurama conducted Asvamedha he gave honorarium to every participant. But Drona was not a participant. Being a Brahmin, Drona made a demand at the end of the Yajna. Parasurama accepted his demand and taught him Dhanurveda as Yajna Dakshina (fees for the priest).

 

 

I will give more interesting details of the Horse yajna (fire sacrifice) in the second part.

 

To be continued……………………………

 

 

 

 

சூத்திரன் யார்? பிராமணன் யார்? ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 2 (Post No.3158)

brahmin2

Written by London swaminathan

Date: 16 September 2016

Time uploaded in London: 9-52 AM

Post No.3158

Pictures are taken from various sources; thanks.

 

நேற்று வெளியான முதல் பகுதியைப் படித்துவிட்டு கீழேயுள்ள இரண்டாம் பகுதியைப் படித்தால் பொருள் நன்கு விளங்கும்.

 

மஹாபாரதத்தில் பல இடங்களில் ஜாதிகள் பற்றிய குறிப்புகள் உள. சில முக்கியமான விஷயங்களை மட்டும் காண்போம்:-

 

 

சத்யம் தானம் க்ஷமா சீலம் ந்ருசம்ஸ்யம் தமோ க்ருணா

த்ருஷ்யந்தே யத்ர நாகேந்த்ர ச ப்ராஹ்மண இதி ஸ்ம்ருத:

ஆரண்ய பர்வன் 177-16

 

வாய்மை, கொடை, பொறுமை, ஒழுக்கம், கருணை, தன்னடக்கம், நல்லெண்ணம் முதலியன எவனிடத்தில் காணப்படுகிறதோ அவனே பிராம்மணன்

 

சூத்ரே ச ஏதத் பவேத் லக்ஷ்யம் த்விஜே தத் ச ந வித்யதே

நவை சூத்ரோ பவேத் சூத்ரோ ப்ராஹ்மணோ ந ச ப்ராஹ்மண:

ஆரண்ய பர்வன் 177-20

 

இவை சூத்திரனிடத்தில் காணப்படுமானால் அவன் சூத்திரனும் இல்லை; இவை பிராமணனிடத்தில் காணப்படாவிடில் அவன் பிராமணனும் இல்லை.

 

 

ஆக நற்குணங்கள் எங்கு இருக்கிறதோ அவனே பிராமணன்:

இதைத் திருவள்ளுவனும் சில குறள்களில் அழகாகச் சொல்லுவான்:–

மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (குறள் 134)

 

ஓதும் வேதத்தை மறந்தால் கூட ஐயர்கள் பிறகு கற்றுக்கொள்ளலாம்; ஆனால் ஒழுக்கம் ஒருமுறை கெட்டாலும் அவன் கெட்டவனே.

 

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டு ஒழுகலான்  (குறள் 30)

 

எல்லா உயிர்களிடத்திலும் அருளைப் பொழிவதால் அறவோரே அந்தணர்.

 

இன்னொரு இடத்தில் செப்புவான்:-

ஆ பயன் குன்றும் அறு தொழி லோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் (குறள் 560)

 

நல்ல ஆட்சி நடக்காவிடில், பசு மாடுகள் பால் கறக்காது; ஐயர்கள் எல்லாம் வேதங்களை மறந்து  விடுவார்கள்.

வள்ளுவனுக்குப் பிராமணர்கள் பற்றி அவ்வளவு அக்கறை என்பதை இக்குறள்கள் மூலம் அறியலாம்.

 

மாஹாபாரத ஆரண்யக பர்வத்தில் மேலும் பல பாடல்கள் உள:–

யதி தே வ்ருத்ததோ ராஜன் ப்ராஹ்மண: ப்ரசமீக்ஷித:

வ்யர்த்தா ஜாதி ததா ஆயுஷ்மன் க்ருதி யாவத் த்ருஷ்யதே

 

சர்வே சர்வாசு அத்யானி ஜனயந்தி யதா நரா:

வாக் மைதுனம் அத ஜன்ம மரணம் ச சமம் ந்ருணாம்

 

பொருள்:-

ஒருவர் பிழைப்புக்காக பிராமணனாக இருந்தால் ஜாதி வீண்; எதுவரைக்கும் செயலில் பிராமணனாக இல்லையோ அது வரை ஜாதி என்பதே வீண்.

 

எல்லா மனிதர்களும் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்; உணவு, புணர்ச்சி, பிறப்பு இறப்பு இவை எல்லாம் எல்லோருக்கும் பொதுவானவையே.

 

ஆக ஒருவனுடைய குண நலன்களே அவனை வேறுபடுத்தி காட்டுகின்றன.

 

 

மூன்றாவது பகுதியில் பாரதியின் கருத்துகளைக் காண்போம்.

 

My old articles on the same subject:–

Caste Divisions in Ancient Tamil Nadu

Posted on July 4, 2014

 

Eighteen groups of Indians!

Research paper written by London Swaminathan
Research article No.1390; Dated 4 November 2014.

 

 

–சுபம்–

வாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல் (Post No.3146)

hanuman-bomai

Written by london swaminathan

Date: 12 September 2016

Time uploaded in London: 6-27 AM

Post No.3146

Pictures are taken from various sources; thanks.

 

 

கம்பன் போகிற போக்கில் சில புதுத் தகவல்களை உதிர்த்துவிட்டுப் போவான்; அத்தனையும் முத்துக்கள்; வைரங்கள்; அவைகளைச் சேகரித்துப் பாதுகாப்பதும், படித்து சுவைத்து ருசிப்பதும் நம் கைகளில் உள்ளது.

 

அனுமனிடம், அவன் தந்தையான வாயு பகவான் இரண்டு முக்கிய விஷயங்களைச் சொல்லுகிறான். அதை அனுமன், சுக்ரீவனிடம் சொல்லி ராமனை நம்புங்கள் என்கிறான். அப்படியும் நம்ப முடியாவிட்டால் ராமனுக்கு ஒரு டெஸ்ட் TEST (குட்டித் தேர்வு) வைக்கலாம் என்கிறான். ஏழு மராமரங்களில் ஒன்றை அவனுடைய அம்புகளால் துளைக்கச் செய்வோம் என்கிறான்.

 

இதோ வாயு பகவான் சொன்ன ரகசியம்:-

 

 

என்னை ஈன்றவன் இவ்வுலகு யாவையும் ஈன்றான்

தன்னை ஈன்றவர்க்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே

உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான்

இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய்

 

பொருள்:-

 

தலைவா (சுக்ரீவா)! என்னைப் பெற்ற வாயுதேவன், இந்த உலகங்களை எல்லாம் படைத்த பிரம்மாவை தனது கொப்பூழிலிருந்து தோற்றுவித்த விஷ்ணுவுக்குப் பணி செய்; அதுதான் சிறந்த தவம்; அப்படி நீ செய்தால் எனக்கும் நல்ல நிலை கிட்டும் என்றான். இந்த இராமந்தான் அந்தத் திருமால்/விஷ்ணு

 

கடவுள்  என்பது எப்படித் தெரியும்?

 

உடனே அனுமன் கேட்டான்; அப்பா (வாயுதேவனே); விஷ்ணுவை நான் எப்படிக் கண்டு பிடிப்பது; எனக்குத் தெரியாதே; ஏதேனும் அடையாளங்கள் சொல்லுங்கள்;

 

(அனுமன் மனதில் எழுந்த சந்தேகங்கள்: –  அவர் என்ன கலர் சட்டை போட்டுக் கொண்டு வருவார்? கைகளில் பை (suitcase) கொண்டுவருவாரா? கண்ணாடி (Spectacles) போட்டிருப்பாரா? மீசை வைத்த ஆளா? என்ன உயரம்? குட்டையா? நெட்டையா?)

96910-kkish1

வாயுதேவன் சொன்னான்:

யாராவது கஷ்டப்பாட்டால் ஓடி வந்து உதவி செய்வான்; இது முதல் அடையாளம்.

 

அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே உன் உடலில் அன்பு சுரக்கும்; அளக்கமுடியாத காதல் உருவாகும். இது இரண்டாவது அடையாளம்

 

இதோ கம்பன் சொற்கள்:-

 

துன்பு தோன்றியபொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும்

முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் இயம்ப

அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை

என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ

 

பொருள்:-

 

நீ கூறிய அவனை அறிதற்கு என்ன வழி? – என்று நான் தந்தையான வாயுதேவனிடம் கேட்டேன். அதற்கு அவன், “அப் பெரியோன் எல்லார்க்கும் துன்பம் உண்டாகும் போது உடனே தோன்றுவான். மேலும் அவனைக் கண்ட அளவில் உனக்கு மனதில் அன்பு உண்டாகுவதே சான்றாகும்”- என்று கூறினான். அவன் சொன்ன படியே இந்த இராம பிரானைப் பார்த்த மாத்திரத்தில் என் உடல் எலும்பும் காணாதவாறு உருகிவிட்டது. இதற்கு மேலும் சந்தேகம் வருமா?

 

ஒருவருக்குத் துன்பம் வந்தால் கடவுளை நாடுவதை கிருஷ்ணனும் பகவத் கீதையில் சொல்கிறான். அதிலிருந்து துன்பப் பட்டோருக்கு கடவுள் உதவுகிறார் என்பது தெளிவு.

 

கண்ணன் சொல்லுகிறான்:-

1.துன்பம் அடைந்தவர்கள்

2.ஞானத்தைத் தேடுவோர்

3.செல்வத்தை விரும்புவோர்

4.ஏற்கனவே ஞானியானவன்

ஆகிய நாலு வகையான மனிதர்கள் என்னை வழிபடுகின்றனர் (பகவத் கீதை 7-16)

 

பாண்டவர்களின் தாயான குந்தீ சொல்கிறாள்:-

துன்பக் கண்ணீரைத் துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் எனக்கு அடிக்கடி துன்பம் வரட்டும்; இதுவே என் பிரார்த்தனை– (பாகவதம்)

 

விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் இறுதியில் “சங்கீத நாராயண

சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து” என்று சொல்லப்படுகிறது. நாராயண என்ற சப்தம் கேட்ட மாத்திரத்தில் துன்பம் பறந்தோடிப் போய்விடும்; சுகம் தழைக்கும்.

 

–சுபம்–

வேதத்தில் சுவையான குதிரைக் கதை! (Post No.3134)

horsehead

Translated by London swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 9-36 AM

 

 

Post No.3134

 

Pictures are taken from various sources; thanks.

 

வேதம் என்பதற்கு மறை என்று பொருள்; அதை வெளிநாட்டுக்காரர்கள் -மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்திருக்கிறரார்கள். இவர்களில் 5 வகை உண்டு:–

 

1.மதத்தைப் பரப்ப வந்தவர்கள்

  1. நாடு பிடிக்க வந்தவர்கள்

3.குறைகூறுதல் மூலம் பெயர் பெற விரும்புவோர்

  1. அறியாமையில் ஆராய்ச்சி செய்யும் அரை வேக்காடுகள்

5.சர்வதேச நிறுவனங்கள், புத்தகம் வெளியிடும் கம்பெனிகளிடம் பணம் வாங்குவோர்; அதாவது கூலிக்கு மாரடிப்போர்.

 

ஆகையால் இவர்கள் எழுதிய புத்தகங்களை முதலில் படிக்காதீர்கள். இந்தியர்கள் எழுதிய நூல்களை — திராவிட/மார்கஸீய பேத்தல்  — இல்லாதோர் நூல்களை முதலில் பயிலுங்கள்.

 

பகவத் கீதையையே படிக்காமல், எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்கத் துவங்காதீர்கள்!

 

ராமாயணத்தையே படிக்காமல் வாலியை ராமன் கொன்றது சரியா? – என்று பட்டிமன்றம் பேசாதீர்கள்!

 

சங்கத் தமிழ் இலக்கியத்தையே கற்காமல் தமிழின் பெருமையை, தமிழர்தம் பெருமையைப் பேசாதீர்கள்!

 

எந்த ஒரு விஷயத்தையும் அதன் முழுப் பொருளில், அது வந்த கால கட்டத்தில், அதே காலத்தில் மற்றவர் இருந்த நிலையில் வைத்து எடை போட வேண்டும்.

 

polands

இதோ மறை பொருள் உடைய ஒரு வேதக் கதை:–

சுபாஷ் கக் என்பவர் ஆங்கிலத்தில் அஸ்வமேத யக்ஞம் பற்றி எழுதிய புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்த குதிரைக் கதை:–

 

அதர்வணனின் மகன் தத்யாங்க் (பிற்கால இலக்கியத்தில் ததீசி). அவரைப் பற்றி ரிக் வேதத்தில் 1-117-22, 1-84 துதிகளில் செய்திகள் உள.

அவருக்கு யாகத்தின் ரஹசியம்- உட்பொருள்– மறை பொருள் தெரியும்.

 

சதபதப் பிராமன்ணத்தில் (14-1-18/24) இந்தக் கதை வருகிறது:-

 

“தத்யாங்கனுக்கு ஒரு ரகசியம் தெரியும் யாகத்தின் தலையை எப்படி மீண்டும் வைப்பது, எப்படி அதன் மூலம் யாகம் நிறைவு பெறும் – என்பது தெரியும்’

 

இந்திரன் சொன்னான்: “இந்த ரஹசியத்தை நீ யாருக்காவது சொன்னால் உன் தலையை வெட்டி விடுவேன்”  என்று

 

அஸ்வினி தேவர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்

 

அவர்கள் தத்யாங்கனிடம் சென்று, எங்களை மாணவர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் -என்றனர்

 

அவர் கேட்டார், எதைக் கற்க வந்திருக்கிறீர்கள்?

 

அஸ்வினி தேவர்கள் இருவரும் சொன்னார்கள்:- அதுதான்; யாகத்தின் தலையை எப்படி மீண்டும் வைப்பது, அதன் மூலம் யாகம் எப்படி நிறைவு பெறும்– என்ற ரஹசியம்.

 

தத்யாங்கன் சொன்னார்: இதை நீ வேறு யாருக்காவது கற்பித்தால் உன் தலையை வெட்டிவிடுவேன் என்று இந்திரன் சொன்னான் ; எனக்கு பயமாக இருக்கிறது. என் தலை போய்விடும்; ஆகையால உங்களை நான் மாணவர்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது.

 

அஸ்வினிதேவர்கள் சொன்னார்கள்: நாங்கள் இருவரும் உங்களைக் காப்பாற்றுவோம்

எப்படிக் காப்பாற்றுவீர்கள்?

எங்களை நீங்கள் மாணவர்களாக ஏற்றுக் கொண்டவுடன் உங்கள் தலையை வெட்டி ஒளித்து வைத்து விடுவோம். ஒரு குதிரையின் தலையைக் கொண்டுவந்து பொருத்துவோம்; ஆதன் மூலம் கற்பியுங்கள்; இந்திரன் வந்து குதிரைத் தலையை வெட்டுவான். பின்னர் உங்களுடைய பழைய தலையை எடுத்து வந்து பொருத்தி விடுவோம்”;அதை ஏற்று தத்யாங்கன் அவர்கள் இருவருக்கும் கற்பித்தார்.

அவரும் கற்பித்தார்; உண்மைத் தலை போய் குதிரைத் தலை வந்தது; இந்திரன் வந்தான்; தலையை வெட்டினான்; பின்னர் நிஜ தலையை தத்யாங்கனுக்கு அஸ்வினி தேவர்கள் பொருத்தினர்.

 

island-horse

தத்யாங்கன் சொல்கிறார் (சதபத பிராமன்ணம் 6-4-2-3:

 

யாகத்தின் முக்கிய வாஹனம் “பேச்சு”; சொற்களுக்குதான் மாற்றம் செய்யும் சக்தி உண்டு; அது பேசுபவரையும் மாற்றிவிடும்; ஒருவர் பேசியவுடன் அதே ஆளாக இருப்பதில்லை.; யாகமானது ஒருவரின் தலையை இழக்கச் செய்துவிடும்; குதிரைத்தலை என்பது இந்த அபூர்வ ஞானத்தின் ஆதாரம் ஆகும்.

 

அதாவது குதிரைத்தலை என்பது அடையாளம்தான். குதிரைத் தலை மாறி உண்மைத் தலை வரும் என்பது பேசுபவர் , மற்றவர்களை மாற்றுவதோடு தானும் மாறிவிடுவார் என்பதாகும். யாகம் என்பது ஒருவர் “தலையை” இழக்கச் செய்துவிடும்.

 

–சுபம்–

வாதாபி கணபதிம் பஜே ஹம் ; புதிய பிள்ளையார் புராணம் – பகுதி 4

mumbai-ganesh-8

Written by London swaminathan

 

Date: 6 September 2016

 

Time uploaded in London: 19-16

 

 

Post No.3128

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வாதாபி கணபதிம் பஜே ஹம்

வாதாபி கணபதிம் பஜே

 

ganesha

முதல் மூன்று பகுதிகளில் பல புகழ்பெற்ற பிள்ளையார்களைக் கண்டோம்; பிள்ளையார் பற்றி ஏராளமான வியப்பான, அதிசயமான செய்திகள் உண்டு. கணேசனைப் பற்றி ஒரு என்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியமே தேவை; இதுவரை அது இல்லாதது ஒரு குறையே. எல்லாப் பிள்ளையார்களையும் விட அதிக வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் வாதாபி கணபதி; முத்து சுவாமி தீட்சிதரின் அற்புதமான சம்ஸ்கிருத கீர்த்தனையில் இடம் பெற்றவர் வாதாபி கணபதி; நரசிம்மவர்மனின் வெற்றிக்குக் காரணமானவர் வாதாபி கணபதி.

 

சுருக்கமாக காண்போம்:– இரண்டாவது புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னன் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திலிருந்து ஆண்ட மகேந்திர பல்லவ வர்மனைத் தோற்கடித்தான். அவனது மகன் பெயர் நரசிம்ம வர்மன். பெயருக்கு ஏற்ற நர சிங்கம்தான் அவன். தந்தையைத் தோற்கடித்த புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி என்ற  கமாண்டரின் (படைத் தளபதி)

தலைமையில் ஒரு படையை கர்நாடகத்திலுள்ள பாதாமிக்கு (வாதாபி) அனுப்பினான். அவர் சாளுக்கியப் படைகளைச் சிதறடித்தார். அங்கே பல்லவர்களின் கொடி பறக்கத் துவங்கியது. அப்போது அந்த நகரிலிருந்த கணபதியையும் எடுத்து வந்து தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். அதற்கு வாதாபி கணபதி என்று பெயர்.

stamps-on-ganesh

ஆயினும் நரசிம்ம வர்மனின் காலத்துக்கு முன்னரே கணபதி வழிபாடு பிரபலமானது சம்பந்தரின் தேவாரப் பாடலாலும் (பிடி அதன் உரு உமை  கொள மிகு கரி அது), சா. கணேசனின் பிள்ளையார்பட்டி ஆய்வாலும் (பகுதி மூன்றில் காண்க), காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் திருவாரூர் கணபதி பற்றி ஆற்றிய சொற்பொழிவாலும் தெளிவாகிறது.

 

எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.

வாதாபியை எப்படி அகத்தியர் வெற்றிகண்டாரோ அப்படி நரசிம்ம வர்மன் வாதாபியை வென்றான் என்று பல்லவர் கல்வெட்டுகள் புகழாரம் சூட்டுகின்றன (வாதாபி ஜீர்ணோ பவ: கதையை தனியாக முன்னரே கொடுத்துள்ளேன்) இந்த வாதாபி கணபதி கதையை முத்துசாமி தீட்சிதரும் தனது ஹம்சத்வனி ராக கீர்த்தனையில் சொல்லுவது சிறப்புக்குரியது.

 

எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.

 

திருவாருருக்கு அருகில்தான் திருச்செங்காடங்குடி உளது. நரசிம்மவர்மனின் படைத் தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனாராகத் தோன்றுகிறார். அவருடைய சிவபக்தியை அறிந்த பல்லவ மன்னன் அவரைப் போற்றி வணங்கி படைப் பொறுப்புகளிலிருந்து விடுவித்து இறைப்பணியைத் தொடர வேண்டுகிறான். அவருடைய ஊருக்கு கணபதீச்வரம் என்றும் பெயர்.

 

வெள்ளை விநாயகர்

 

திருவலஞ்சுழி என்னும் தலத்தில் இவர் கோவில் கொண்டுள்ளார்.

 

வெள்ளை என்பதை சம்ஸ்கிருதத்தில் ஸ்வேத என்பார்கள். இதிலிருந்துதான் WHITE ஒய்ட் (SWHITE= white) என்ற ஆங்கிலச் சொல்லும் உதித்தது. இந்த வெள்ளை விநாயகர் வழக்கத்திற்கு மாறான பொருளால் செய்யப்பட்டதால் அபிஷேக ஆராதனை யின்றி சிறப்புச் சாத்துமுறையுடன் வழிபடப்படுகிறார். சிற்ப வேலைப்படுமிக்க பலகணி வழியாக இவரைத் தரிசிக்கலாம்.

 ganesh-chaturthi-01-jpgfp

Final touches given to Ganesh in Mumbai

படிக்காசு விநாயகர்

பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும் சம்பந்தரும், திருவீழிமிழலையில்

 

“வாசி தீர வே காசு நல்குவீர்” — என்று சிவ பெருமானை நோக்கிப் பதிகம் பாடினர். நாள்தோறும் கோவில் படியில் ஒரு தங்கக் காசு வீதம் வந்தது. அங்கிருக்கும் பிள்ளையார் படிக்காசு பிள்ளையார் ஆவார்.

இவர் பேரளத்திலிருந்து நாலு மைல் தொலைவில் கோவில் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் துதிக்கப் பெற்றவர்:-

 

கடிக்காசு மதியொரு அணி

கடவுள் எங்கள்

குடிக்காசு தவிர்த்து அருள்

செய் படிக்காசு மழகளிற்றை

குறித்து வாழ்வாம்

எனப் போற்றப்படுவார்.

vyasaganesasivaraman

ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவில் உள்ள எல்லாப் பிள்ளையார்களின் கதைகளைத் தொகுத்தால் ஒரு கலைக் களஞ்சியம் வெளியிடலாம். இதே போல மஹராஷ்டிரத்திலும் எட்டு புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள் உள. அவைகளைப் பின்னொரு சதுர்த்தியில் தரிசிப்போம்.

 

–சுபம்–

 

 

 

ராமன்-சுக்ரீவன் நட்புறவு ஒப்பந்தம்! கம்பன் தரும் சுவைமிகு தகவல்

sugreeva

Written by London swaminathan

 

Date: 6 September 2016

 

Time uploaded in London: 9-42 AM

 

 

Post No.3127

 

Pictures are taken from various sources; thanks.

 

 

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னர் பல ராணுவ உடன்பாடுகள் ஏற்பட்டன. எல்லோருக்கும் நன்கு தெரிந்தது நேட்டொ (North Atlantic Treaty Organisation)  எனப்படும் மேலை நாடுகளின் கூட்டணியாகும். இதில் முக்கியமான விதி கூட்டணியிலுள்ள ஒரு நாட்டை ஏதாவது ஒரு நாடு தாக்கினால் உடனே இந்தக் கூட்டணியும் தலை யிடும். அங்கே தர்ம, நியாயம் என்பதெல்லாம் கிடையாது. என் நண்பனை நீ தாக்கினாய், ஆகையால் நான் உன்னத் தாக்குவது சரியே என்பது அவர்தம் கொள்கை.

 

இதே போல அரசியல் கட்சிக் கூட்டணிகள் பல அமைகின்றன ; போகின்றன. இ வைகளுக்கெல்லாம் மூலம் ராமாயணத்தில் உள்ளது! கம்பன் ஒரு பாட்டில் சொல்வது நமக்கே வியப்பைத் தரும். இதோ பாருங்கள்:–

 

 

என்ற அக் குரக்கு வேந்தை இராமனும் இரங்கி நோக்கி

உந்தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன் நாள்

சென்றன போக மேல்வந்து உறுவன தீர்ப்பல் அன்ன

நினறன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா

 

மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு

உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது காதல்

சுற்றம் உன் சுற்றம் நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்.

 

பொருள்:-

 

நட்புறவு ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள் (அம்சங்கள்):-

1.இனி உனக்கு வரக்கூடிய துன்பங்களைத் தவிர்க்க உதவுவேன்

2.இதற்கு முன் உனக்கும் எவருக்கும் பகைமை, சண்டை சச்சரவுகள் இருந்தால் அதில் எனக்குப் பொறுப்பில்லை

3.இனி உனக்கு இன்பம் வந்தால் அதில் 50 சதவிகிதம் உனக்கு; மீதி 50 சதவிகிதம் எனக்கு; அதே போல துன்பம் வந்தாலும் இருவரும் சமமாக பங்கு போடுவோம்

4.உன்னை யார் தாக்குகின்றனரோ அவர் என்னையே தாக்கியதாகக் கருதப்படுவார்

5.கொடியவரே என்றாலும் உன்னுடன் நட்புடையவர் எமக்கும் நண்பரே

6.உன் உறவினர் யாவரும் என் உறவினர்; அன்புகாட்டும் எம் உறவினரும் உனக்குச் சொந்தம் (யாதும் ஊரே, யாவரும் கேளிர்).

7.நீ இன்றுமுதல் என் ஆருயிர்த் தோழன்

 

எவ்வளவு தெளிவான பேச்சு. இக்காலப் பத்திரிக்கைகள் கூட இப்படி இரண்டே பாடலில் — எட்டே வரிகளில் இப்படிச் சுருக்கி வரைய முடியாது!

ram lak

வாலியை, இராம பிரான் மறைந்திருந்து கொன்றதை, இந்த சமாதான உடன்பாட்டின் பின்ன்ணியில் நோக்கினால் தர்ம- நியாயம் விளங்கும்!

 

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஐந் தா வது எண்ணாகும். கொடியவரே என்றாலும் உன் நண்பன் எனக்கும் சிநேகிதனே. அதாவது நட்புறவு ஒப்பந்தம் வந்துவிட்டதால் அங்கே தர்ம நியாயம் கிடையாது! இது இன்றும் இன்டெர்நேஷனல் பாலிடிக்ஸில் INTERNATIONAL POLITICS கடைப்பிடிக்கும் கோட்பாடு.

 

இராக் அதிபர்  சதாம்ஹுசைனையும், லிபியா அதிபர் கர்னல் கடாபியையும் அநியாயமாகக் கொன்றது அமெரிக்கா. ஏன்? பெட்ரோல்

 

தர மறுத்தனர். உடனே அமெரிக்கவுக்கு வால் பிடிக்கும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி , பிரான்ஸ் போன்ற நாடுகள் படை அனுப்பி உதவி செய்தன. இன்று அதன் காரணமாக புதிய முஸ்லீம் பயங்கரவாதம் தலை தூக்கி இருக்கிறது.

 

ஹிட்லருக்குத் துணை போனதற்காக அப்பாவி புத்த மதத்தினர் மீது — பொது மக்கள் மீது – அணுகுண்டு போட்டு லட்சக் கணகானோரை அமெரிக்கா கொன்று குவித்தது ; யாரும் கண்டிக்கவில்லை; கா ரணம் நட்புறவு ஒப்பந்தம்!

 

ஆப்கனிஸ்தானத்துக்குள் ரஷ்யப் படைகள் புகுந்து நீண்ட நெடுங்காலம் நிலை கொண்டிருந்தன. அதை அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆதரித்துக் குரல் கொடுத்தார். எத்தனை வெளிநாட்டு நிருபர்கள் எத்தனை முறை  கேள்வி கேட்டாலும் ரஷ்யா செய்தது நியாயமே என்றார். காரணம்? ரஷ்யா என்பது, இந்தியாவின் நீண்ட நெடுங்கா ல நட்புறவு நாடு. அதை விட்டுக்கொடுக்க முடியாது.

 

ஆனால் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி கட்டு ரையை முடிப்பேன். ராமன் சொன்ன சொல் தவறாதவன்! சத்ய தர்ம பராக்ரமன்! ஆனால் மேலே குறிப்பிட்ட மேலை நாடுகளும் அரசியல் கூட்டணிகளும் தம் நிலையை மாற்றிக் கொண்டே இருப்பர்.

இந்த சத்தியத்தினால்தான் ராமனை இன்றும் வழிபடுகிறோம். அரசியல் கங்கை என்னும் தர்மப் பிரவாகத்தில் அரசியல் கட்சிக் கூட்டணிகள்அடித்துச் செல்லப்படும்.

 

-Subham–

புதிய புராணம் பகுதி-3 வலஞ்சுழி,இடஞ்சுழிப் பிள்ளையார்கள் (Post No.3124)

ganesh dinamalar

Written by London swaminathan

 

Date: 5 September 2016

 

Time uploaded in London: 9-33 AM

 AM

 

Post No.3124

 

Pictures are taken from various sources; thanks.

 

pillayarpatti

Picture: Pillayarpatti Ganesh

முதல் இரண்டு பகுதிகளில் புகழ் மிகு பிள்ளையார்களையும் அவர்கள் பற்றிய ஸ்தல புராணக் கதைகளையும் அறிந்தோம். பிள்ளையார் சிலைகளை உற்று நோக்குவாருக்கு துதிக்கை வலமாகச் சுழிக்கப்பட்டுளதா அல்லது இடமாகச் சுழிக்கப்பட்டுளதா என்பதை யும் காண்பர். அதிலும் ஒரு தனி மகிமை உண்டு.

 

முதல் இரண்டு பகுதிகளில் புகழ் மிகு பிள்ளையார்களையும் அவர்கள் பற்றிய ஸ்தல புராணக் கதைகளையும் அறிந்தோம். பிள்ளையார் சிலைகளை உற்று நோக்குவாருக்கு துதிக்கை வலமாகச் சுழிக்கப்படுளதா அல்லது இடமாகச் சுழிக்கப்பட்டுளதா என்பஹையும் காண்பர். அதிலும் ஒரு தனி மகிமை உண்டு. பெரும்பாலும் இடமாகச் சுழிக்கப்பட்டிருக்கும்.

 

புகழ்பெற்ற, மிகப் பழமையான பிள்ளையார்பட்டிக் கோவிலில் விநாயகர் துதிக்கை வலமாகச் சுழித்திருப்பதைக் காணலாம். இது ஒன்பது நகரத்தார் கோவில்ல்களில் ஒன்று. சுமார் 1600 ஆண்டுப் பழமையுடையது. திருச் செங்காட்டங்குடி வாதாபிக் கணபதிக்கும் முந்தையவர் இவர் என்பதற்கு அங்கே இருக்கும் கல்வெட்டுகள் சான்று பகரும். இது பாண்டியர் காலக் குடைவரைக் கோவில்.

 

காரைக்குடி- திருப்புத்தூர் வழித்தடத்தில் குன்றக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. ஏனைய சிவன் கோவிலகளில் பிள்ளையார் ஒரு துணைச் சந்நிதியில் அமர்ந்திருப்பார். ஆனால் இங்கோ பிள்ளையார்தான் முதலிடம். ஊரின் பெயரும் பிள்ளையாரின் பெயரில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இந்த ஊரின் பழைய பெயர் எருக்காட்டூர். பிள்ளையாரின் உயரம் ஆறு அடி.

 

பிள்ளையார்பட்டி குடைவரையில் உள்ள பெருபரணன் கல்வெட்டைக் கொண்டு ஆராய்ந்தால் இது பல்லவர் காலத்துக்கும் முன்னர் அமைந்த கோவில் என்பது விளங்கும் என்பார் கம்பன் அடிப்பொடி சா. கணேசன்.

 

இந்தப்பிள்ளையரை தேசி விநாயகப் பிள்ளையார் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடும்.

 

இவர்தான் பழைய பிள்ளையார் என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் காட்டும் சான்றுகள்:–

துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்தது

நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரத்துடன் விளங்குவது

அங்குச பாசங்கள் காணப்படாமை

வயிறு ஆசனத்தில் படாமல் அர்த்தபத்ம ஆசனம் போலக் கால்கள் மடிந்திருப்பது.

வலக்கரத்தில் மோதகம் வைத்திருப்பது

இடக்கரத்தை கடிக ஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் கொண்டிருப்பது.

வலது தந்தம் நீண்டும் இடது தந்தம் குறுகியும் காணப்படுவது.

 

வலஞ்சுழிப் பிள்ளையார்தான் ஓம்கார ஸ்வரூபமென்பதையும், சிலைகளாகப் பிள்ளையார் உருப்பெருமுன், ஓம்கார சொரூபமாக அவர் வணங்கப்பட்டார் என்பதற்கும் இது சான்று ஆகும்.

ganesh in drama

சேண்பாக்கம் ஏகாதச (11) ஸ்வயம்பு கணபதி மூர்த்தங்கள்

 

இங்குள்ள 11 கணேச மூர்த்திகளும் ஓம்கார வடிவில் அமைந்திருக்கின்றன. 1865 ஆம் ஆண்டு மந்திரி துக்கோஜி ராவ் வண்டியில் வந்துகொண்டிருந்தபோது, பூமியில் சிறு அளவில் வளர்ந்திருந்த பிள்ளையார் சிலை மீது இடித்தவுடன் ரத்தம் வந்ததாகவும் உடனே வண்டி நகரவில்லை என்றும் சொல்லுவர். துக்கோஜிராவ் அன்றிரவு முழுவதையும் அங்கேயே செலவிட நேரிட்டது. அவரது கனவில் தோன்றிய கணபதி தமக்குக் கோவில் எழுப்புமாறு சொன்னவுடன் அவர் ராஜ மான்யங்களோடு ஒரு கோவிலை எழுப்பினார்.

 

இதே போல காஞ்சிப் பெரியவர் அங்கு சென்றபோதும் ஒரு அற்புதம் நடந்தது. அவர் வேலூர் விஜயம் மேற்கொள்ள இருந்தபோது சேண்பாக்கம் கணபதிக்கு 108 சிதறு தேங்காய்கள் உடைக்கும்படி கூறி இருந்த போதும் சிஷ்யர்கள் அதை மற ந்துவிட்டனர். அவ்வழியே பெரியவர்களுக்குப் பின்னால் யானை மீது புதுப் பெரியவர் வந்து கொண்டிருந்தார். நெடுஞ்சாலையிலிருந்து சேண்பாக்கத்துக்கு பிரிந்து செல்லும் இடத்துக்கு யானை வந்தபோது, இருந்த இடத்திலேயே சுற்றத் துவங்கியது. இது ஏன் என்று மடத்து நிர்வாகிகள் யோசித்துக் கொண்டிருந்தபோது பெரியவர் 108 தேங்காய் உடைக்கச் சொன்னதும் அதைத் தாங்கள் மறந்ததும் மடத்து நிர்வாகிகளுக்குந் நினைவுக்கு வந்தது. உடனே 108 தேங்கய்களைக் கொண்டுவந்து சிதறுகாய் போட்டதும் யானை நகரத் துவ ங்கியது. பெரியவர்கள், அதையடுத்து சேண்பக்கத்துக்கு விஜயம் செய்து அங்கு ஒரு நாள் முழுதும் தங்கி அபிஷேக ஆராதனைகளை நடத்தினார்.

 

வடஆற்காடில் இது தவிர திருப்பத்தூர் மாயப்பிள்ளையார்,திருவலம் வந்த விநாயகர் ஆகியோரும் பிரபலமானவர்கள்.

திருப்பத்தூர் மாயப் பிள்ளையார் திடீரென்று பூமியிலிருந்து தோன்றியதாக பக்தர்கள் கூறுவர்.

திருவலம் என்னும் தலம் நம்பியாண்டார் நம்பியால் பாடப்பெற்ற இடம் ஆகும். பொன்னை நதிக்கரை யில் அமைந்த ஆலயத்தில் அம்மை அப்பனை வலம் வந்து மாங்கனி பெற்ற பிள்ளையாருக்கு தனி சந்நிதி ஒன்று உள்ளது.

GINGER GANAPATHY  ganesh pepper

Picture of Ganesh shaped vegetables

ஏனைய பிள்ளையார் கதைகளை 4-ஆவது பகுதில் பார்ப்போம்.

 

Source Books:

பிள்ளையார் பட்டி தல வரலாறு -சா.கணேசன், 1983

காணாபத்யம்- செந்தில் துறவி, 1968

 

 

 

 

 

 

பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா??!! (Post No.3123)

ganesh laddu

Written by S NAGARAJAN

 

Date: 5 September 2016

 

Time uploaded in London: 5-05 AM

 

Post No.3123

 

Pictures are taken from various sources; thanks.

 

ச.நாகராஜன்

 

ganapathy, mysore

இணைய தளம் வந்து விட்ட காலத்திலிருந்து எல்லோரும் அறிஞர்களே!

மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதி இணையத்தில் “போடுவதைக்” கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக் கொண்டு விட்டு விடலாம்.

ஆனால் நச்சுக் கருத்துக்களைப் பரப்புவர்களை மன்னிக்க முடியாது!

 

 

தீய சக்திகளின் கொள்கை பரப்பாளர்களுக்கு இணைய தளம் ஒரு வேடிக்கையான விளையாட்டுக் களம்

ஆரியர், ஐயர் என்று திட்டுவது, பிள்ளையாரில் ஆரம்பித்து கிராமத்து ஐயனார் வரை எல்லாக் கடவுளரையும் (இயேசு அல்லா நீங்கலாக – இவர்களைத் திட்டினால் தீட்டி விடுவார்களே) திட்டுவது – இதுவே இவர்களுக்குப் பொழுது போக்கு.

 

 

இவர்களின் எழுத்துக்களில் கருத்துக்களை விட ஆபாசமான வார்த்தைகளுக்கே முதலிடம் தருவது வழக்கம்.

இப்போது விநாயக சதுர்த்தி வருவதை  முன்னிட்டு பிள்ளையார் தமிழர் தெய்வமே இல்லை, பிள்ளையார் வழிபாடு பிற்காலத்தில் புகுத்தப்பட்ட வழிபாடு என்று ஒரு புரளியை தீய சகதியின் ‘அறிஞர்’ ஒருவர் இணையதளத்தில் பதிய விட்டிருக்கிறார்.

 

 

ஆனால் அது பதிய விட்ட போதே வாடி வதங்கி விட்டது.அந்தக் கருத்து பதிய விட்ட போதே அதைத் தமிழர்கள் அபார்ஷன் செய்து விட்டார்கள்!

 

ஏனெனில் பிள்ளையார் தமிழரின் தெய்வம் இல்லை என்றால் வேறு யார் தான் தமிழர் தெய்வம்!

 

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது தமிழர்களின் முழக்கம்.

 

சிவன் அமைத்த தமிழ்ச்சங்கத்தை இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்டு மகிழலாம்.

 

புலவர்கள் புடை சூழ இறையனார் அமர்ந்திருக்கும் கம்பீரமே கம்பீரம். அங்கு முழக்கமிட்ட தமிழ் மொழியே உண்மையில் தெய்வ மொழி.

 

 ganapathy swastik

சிவனின் அருமை மகனான பிள்ளையார் அல்லவா சங்கத் தமிழ் மூன்றையும் தருபவர். அவரது தம்பியான முருகன் அல்லவா தமிழ் முருகன்! அப்பனுக்கு மந்திரத்தின் பொருள் விளக்கம் சொன்ன தகப்ப்ன் சாமி தமிழுக்கும் அல்லவா பொருளுக்கும் பொருளானவர்!

 

ஆக இந்தப் பிள்ளையாரை தமிழர்களாகிய நாம் கும்பிடவே இல்லை என்பது தீய சக்திகளின் இமாலயப் பொய்!

 

திருமுருகாற்றுப்படை என்பது சங்க இலக்கியத்தில் பழமையான நூல். இதன் காலம் குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளுக்கு  முந்தையது.இதில் கடைசியில் உள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பாவில் “ஒரு கை முகன் தம்பியே” என்று விநாயகர் குறிப்பிடப்படுகிறார்.

 

 

தமிழ் மூதாட்டியும் உலக அறிஞர்களில் ஒருவருமான ஔவையார் யாரிடம் சங்கத் தமிழைத் தனக்குத் தந்து அருளுமாறு வேண்டினார்?

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            

சங்கத் தமிழ் மூன்றும் தா!”

 

 

அடடா, என்ன ஒரு வணிக நேர்த்தி!

 

நான்கு தருகிறாராம், ஆனால் மூன்று கொடுத்தால் போதுமாம்!

பாகும் தேனும் பாகும் பருப்பும் ஆகிய நான்கையும் பெற்ற பிள்ளையார் முத்தமிழையும் அள்ளித் தராமலா இருப்பார்!

அருளினார்! ஔவையைப் பாட வைத்தார்! இறவாப் புகழை அளித்தார்.

 

 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்               

நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு                       

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்                

தப்பாமல் சார்வார் தமக்கு!

 

 ganesa shrine,thailand

ஔவையின் வாக்கைக் கடைப்பிடித்து பூக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று தப்பாமல் பிள்ளையாரை வணங்குவோம்!

தீய சக்திகள் அழிந்து தமிழ் நாடு நல்ல சக்திகளின் இருப்பிடமாக ஆக வேண்டுவோம்!

*********

விநாயகப் பெருமானின் 16 நாமங்கள் (Post No.3122)

ganesh muslim

COMPILED by London swaminathan

 

Date: 4 September 2016

 

Time uploaded in London: 18-20

 

Post No.3122

 

Pictures are taken from various sources; thanks.

 

(நாமம் = பெயர்)

 

மங்களம் வாய்ந்த ஸுமுகன்

ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தன்

கபில நிறம் வாய்ந்த கபிலன்

யானைக் காதுகள் உள்ள கஜகர்ணன்

பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்

குள்ளத் தோற்றமுள்ள விகடர்

சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்

தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்

நெருப்பைப்போல ஒளிவீசும் தூமகேது

பூத கண ங்களுக்குத் தலைவரான கணாத்யக்ஷன்

நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிய பாலசந்திரன்

யானை முகத்தையுடைய கஜானனன்

வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டன்

முறம் போன்ற காதுகள் உடைய சூர்ப்பகர்ணன்

தம்மை வணங்கி நிற்கும் பக்தகோடிகளுக்கு அருள்புரியும் ஹேரம்பன்

கந்தப் பெருமானின் அண்ணனான ஸ்கந்தபூர்வஜன்

–இவ்வாறு சொல்லப்படும் பிள்ளையாரின் 16 நாமங்களையும்

கல்வி கற்கும் போதும், வீட்டைவிட்டுப் புறப்படும்போதும்,

போர்க் காலத்திலும், இன்னலுற்றபோதும்

யாராவது வாசித்தாலும், கேட்டாலும் அவர்களுக்கு

எந்த இடையூறும் வராது.

–கந்த புராணம்

 

எளிதில் நினைவிற்கொள்ள ஸ்லோக வடிவில்

 

ஸுமுகைஸ்சேகதந்தஸ்ச கபிலோகஜகர்ணக:

லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:

தூமகேதுர்கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானன:

வக்ரதுண்ட ஸூர்பகர்ண ஹேரம்பஸ்கந்தபூர்வஜ:

 

32 வகைப் பிள்ளையார்

 

 

–SUBAHM–

புதிய பிள்ளையார் புராணம்- பகுதி-2; நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்! (Post No 3119)

ganesh lanka

புதிய பிள்ளையார் புராணம்- பகுதி-2; நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்! (Post No 3119)

 

Written by London swaminathan

 

Date: 4 September 2016

 

Time uploaded in London: 5-55 AM

 

Post No.3119

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பகுதி ஒன்றில் மதுரை முக்குறுணி விநாயகர், கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார் கதைகளை  அறிந்தோம். நம்பியண்டார் நம்பியின் உணவை உண்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்திய பொல்லாப் பிள்ளையார் திருநாரையூரில் வெள்ளாற்றங்கரையிலே வீற்றிருக்கிறரர்.

ganapathy rangoli

அவர் கதையையும் கேளுங்கள்!

சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் திருநாரையூர் இருக்கிறது. ஆனந்தேச சிவாச்சாரியார் இங்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் அவரால் பூஜைக்குச் செல்ல முடியாததால், தனது மகன் நம்பியாண்டார் நம்பியை அழைத்து, கணபதிக்குப் பூஜை செய்துவிட்டு இறைவனுக்கு அமுதும் படைத்து வா என்று அனுப்பிவைத்தார். கள்ளமில்லா உள்ளம் படைத்த நம்பி, பூஜையை முறைப்படி செய்துவிட்டு, பிள்ளையாருக்கான நைவேத்தியத்தைப் படைத்துவிட்டு பிள்ளையார் உண்ட பின் வீடு திரும்புவோம் என்று காத்திருந்தான். நெடு நேரம் ஆகியும் கல்லுப் பிள்ளையார் கல்லாகவே காட்சிதந்தார். ஒரு அங்குலம் கூட நகரவில்லை; வாயையும் திறக்கவில்லை.

 

தான் செய்த பூஜையில் தவறு இருந்ததால்தான், கணேசன் வாய் திறக்கவில்லை என்று அருகிலுள்ள கருங்கல்லில் தலையை மோதிக்கொள்ளத் துவங்கினார். தனது “தவற்றுக்கு” தானே தண்டனை கொடுத்தபோது, பிள்ளையார் அவர் முன் தோன்றி உணவு வகைகளை வாங்கி வயிறு புடைக்கத் தின்றார். பொல்லாப் பிள்ளையார் அல்லவா!! அந்தப் பிள்ளையாரின் அருளால்தான் சிதம்பரத்தில் இருக்கும் தேவாரப் பதிக ரகசியமும் அவருக்குத் தெரிய வந்தது.

தேவாரத் திருமுறைகளைத் தமிழ்கூறு நல்லுலத்துக்குக் காப்பாற்றிக் கொடுத்த பிள்ளையாரை நல்ல பிள்ளையார் என்றே சொல்ல வேண்டும்.

உச்சிப் பிள்ளையார்

தமிழ்நாடு முழுவதும் குன்றுதோராடுவது குமாரக் கடவுள்தான். ஆனால் திருச்சியில் மட்டும் மலை உச்சிக்குப் போய்விட்டார் குமரனின் அண்ணனான பிள்ளையார். ஆகையால் அவர் உச்சிப் பிள்ளையார் ஆகிவிட்டார்.

 ganesh making2

பாரதியார் பாடிய மணக்குள விநாயகர்!

 

சொற்தேரின் சாரதியாம் பாரதியின் வாயினால் வாழ்த்தப் படாத தெய்வம் இல்லை. ஆனால் அவை எல்லாம் பொதுவான பிரார்த்தனைகள். புதுச்சேரியிலுள்ள மணக்குள விநாயகர் மட்டும் ஊர்ப்பெயருடன் பாடப் பெற்றார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

 

புதுவை கடற்கரையில் கோயில் கொண்டுள்ள இந்தப் பிள்ளையாரைத் தரிசிக்க வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, கோபம் கொண்ட அந்நிய ஆட்சியாளர்கள், விநாயகர் சிலையை அகற்றி கடலில் போட்டுவிட்டனராம். ஆனால் மறு நாளே பிள்ளையார், இருந்த இடத்துக்கே வந்துவிட்டார். இதைக் கண்டு வியந்த அந்நிய ஆட்சியாளர் அவருக்குக் கோயிலும் எழுப்பிச் சிறப்பித்தனரம்.

 

இதோ பாரதியின் பாடல்:-

 

வாழ்க புதுவை மணக்குளத்து

வள்ளல் பாத மணி மலரே;

ஆழ்க உள்ளஞ் சலனமிலா

தகண்ட வெளிக்கண் அன்பினையே

சூழ்க; துயர்கள் தொலைந்திடுக;

தொலையா (இன்பம் விளைந்திடுக)

வீழ்க! கலியின் வலியெல்லாம்!

கிருத யுகந்தான் மேவுகவே.

vinayaka girls

மாற்றுரைத்த பிள்ளையார்

விருத்தாசலம் (திரு முதுகுன்றம்) மாற்றுரைத்த பிள்ளையார், சுந்தரர்- பரவை நாச்சியார் வாழ்வுடன் தொடர்புடையவர். பரவை நாச்சியாருக்கென வேண்டி சுந்தரர், சிவ பெருமானிடமிருந்து பொற்காசுகளைப் பெற்றார். அவற்றை மணிமுத்தாற்றில் இடுவ்தற்கு முன் அப்பொன்னை மாற்றுரைத்து, அதற்கு இப்பிள்ளையாரைச் சாட்சியாக வைத்ததால், அவர் மாற்றுரைத்த பிள்ளையார் எனப் பெயர் பெற்றார்.

 

To be continued…………………………………………………….