பரமஹம்ஸர் கூறிய பொற்கொல்லர் கதை! (Post No. 2488)

 

 

great  master

Written by S Nagarajan

Date: 29 January 2016

 

Post No. 2488

 

Time uploaded in London :–  14-25

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

பரமஹம்ஸரைத் தரிசித்த பங்கிம் சந்திரரிடம் அவர் கூறிய பொற்கொல்லர் கதை!

 

ஹிந்து தேசீயம்

 

 

ச.நாகராஜன்

 

 

 rk parahamsa

ஹிந்து தேசீய கீதம்

 

ஹிந்து தேசீயத்தைத் தட்டி எழுப்பிய மாபெரும் மஹரிஷி பங்கிம் சந்திர சட்டோபாத்யாய. (ஜனனம் 26-6-1838 மறைவு 8-4-1894) வந்தேமாதரம் கீதத்தைத் தந்து தூங்கிக் கிடந்த 30 கோடி மக்களைத் தட்டி எழுப்பினார் அவர்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸரை பெரிதும் மதித்து வணங்கியவர் பங்கிம் சந்திரர்.(பரமஹம்ஸ அவதார தோற்றம் 17/2/1836 அவதார மறைவு 1/1/1886)

 

 

கேள்விகளைக் கேட்ட பங்கிம் சந்திரர்

அவரது சந்திப்புகளில் சுவையான சந்திப்பு ஒன்று இது.

ஒரு நாள் பரமஹம்ஸரை அவரது அணுக்க பக்தரான ஆதார் சந்த்ர சென்னின் வீட்டில் அவர் தரிசித்தார். அவரிடம் சிக்கலான பல கேள்விகளை சந்தேகக் கண்ணோட்டத்துடன் கேட்க ஆரம்பித்தார். அனைத்துக் கேள்விகளுக்கும் பரமஹம்ஸர் பதிலளித்தார்.

 

 

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்த பின் பரமஹம்ஸர் பரிகாசமாக ‘பங்கிம் என்ற வார்த்தையை வைத்து தமாஷ் செய்ய ஆரம்பித்தார்.

 

 

ஏன் பங்கிம் ஆனீர்கள்?

 

‘பங்கிம்என்றால் சந்திரனின் பிரகாசமான பக்கம் என்று பொருள். வங்காள மொழியில் இதற்கு  கூன் போன்று வளைந்த தன்மையைக் குறிக்கும் இன்னொரு பொருளும் உண்டு.

 

பரமஹம்ஸர் பங்கிமை நோக்கி, “ நீங்கள் பெயரிலும் பங்கிம். செயல்களிலும் பங்கிம் என்றார். (கோணலானவர்)

இந்தக் கேலியை ஏற்ற பங்கிம், பரமஹம்ஸரின் பதில்கள் அவரது இதயத்தைத் தொட்டு விட்ட காரணத்தினால், “ நீங்கள் அவசியம் ஒருநாள் எங்கள் கந்தல்பாரா வீட்டிற்கு வர வேண்டும். அங்கே இறைவழிபாட்டிற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும். ஹரி நாமத்தை நாம் எல்லோரும் உச்சரிக்கலாம் என்று சொன்னார்.

 

 

உடனே பரமஹம்ஸர், ஹரியின் நாமத்தை எப்படி நீங்கள் உச்சரிப்பீர்கள்? பொற்கொல்லர் உச்சரித்தது போலவா? என்று கேட்டார்.

 

அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

 

பொற்கொல்ல கதையை அவர்கள் பரமஹம்ஸர் வாயிலாக முன்னமேயேர் கேட்டிருந்தனர்.

 

பங்கிம் சந்திரருக்கும் பொற்கொல்லர் கதையை பரமஹம்ஸர் சொல்ல ஆரம்பித்தார்.

 

 bankim chandrar1

 

பரமஹம்ஸர் கூறிய பொற்கொல்லர் கதை

 

பொற்கொல்லர் ஒருவரின் கடைக்கு சில நண்பர்களுடன் ஒருவர் வந்தார். அவருக்கு ஒரு நகையை விற்க வேண்டியிருந்தது.

 

பொற்கொல்லர் உடம்பு முழுவதும் தெய்வீகமான சந்தனக் கீற்றுகள்.பரம பக்தராக அவர் தோன்றினார். தலையில் குடுமி. கழுத்திலோ ருத்திராட்சம்!

 

வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த அவர் ஹரி நாமத்தை பரம பக்தியுடன் உச்சரித்துக் கொண்டிருந்தார்.

 

வீட்டின் உள்ளே அவரது உதவியாளர்கள் நான்கு பேரும் கூட இதே போலத் தோற்றமளித்தனர். அவர்கள் வெவ்வேறு நகை வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

 

அவர்களின் அற்புதமான இந்த கோலத்தைப் பார்த்து வந்தவரும் அவர் நண்பர்களும், “இந்தப் பொற்கொல்லர் மிகவும் நல்லவர். ஒருவரையும் ஏமாற்ற மாட்டார் என்று எண்ணினர்.

 

தான் கொண்டு வந்த நகையைப் பொற்கொல்லரிடம் தந்த அவர் அதன் சரியான விலையைச் சொல்லுமாறு வேண்டினார்.

வந்தவர்களை முதலில் அன்புடன் உட்கார வைத்தார் பொற்கொல்லர்.தன் சீடன் ஒருவனிடம் அவர்கள் அனைவருக்கும் புகைக்க ஹீக்கா (பைப்) ரெடி செய்யுமாறு உத்தரவிட்டார்.

 

பின்னர் உரைகல்லில் அந்த நகையை உரைத்துப் பார்த்து தங்கத்தின் விலையைக் கூறினார். பின்னர் அதை உருக்குவதற்காக (தங்கம் எவ்வளவு தேறும் என்பதைப் பார்க்க) அவர்கள் அனுமதியைப் பெற்ற பின் வீட்டினுள்ளே அனுப்பினார்.

 

அதை வாங்கிக் கொண்ட சீடன் உடனே அதை உருக்க ஆரம்பித்தான். திடீரென்று பக்தி மேலிட “கேசவா, கேசவா என்று உரக்கக் கூச்சலிட்டான் அவன்.

 

அந்த திவ்ய நாமத்தைக் கேட்ட பொற்கொல்லரும் பக்தி பரவசராகி, “கோபாலா, கோபாலா என்று உரக்கச் சொன்னார்.

உடனே உள்ளேயிருந்த இன்னொருவன், “ஹரி, ஹரி, ஹரி என்று கத்திச் சொன்னான்.

 

அப்போது புகைக்க பைப்பைத் தயாராகக் கொண்டு வந்தவன் “ஹர ஹர ஹர என்று சொல்லியவாறே அவர்களிடம் புகைக்குழாய்களைத் தந்தான்.

 

இதைக் கேட்டவுடன் முதலில் உருக்கிக் கொண்டிருந்தவன் அந்த நகையை நீர் இருந்த பானையில் முக்கி தங்கள் பங்கிற்குத் தேவையான தங்கத்தை ஒதுக்கிக் கொண்டான்.

வந்தவர்கள் அவர்களின் பக்தியை மெச்சிக் கொண்டாடினர். உண்மையில் நடந்தது என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது.

 

நடந்தது இது தான்.

 

கேசவா என்று முதல்வன் இறைவன் நாமத்தை உச்சரிக்கவில்லை.

 

வங்காள மொழியில் அவன், “கே – சவா? என்று கேட்டான். அதற்கான பொருள், “அவர்கள் யார்?

 

அதாவது வந்திருந்தவர்கள் புத்திசாலிகளா அல்லது ஒன்றும் தெரியாத முட்டாள்களா என்பதே அவனது கேள்வி.

 

இதற்கு பொற்கொல்லர் கோ-பாலா, கோ-பாலா என்று பதில் சொன்னார். கோ – பசு, பாலா – பராமரிக்கும் கூட்டம்; அதாவது பசுக்களை மேய்க்கும் முட்டாள்கள் போல என்று அவர் பதில் கூறினார்.

 

உடனே ஹரி என்றவன், அப்படியானால் கொஞ்சம் திருடிக் கொள்ளலாமா (அபகரிக்கலாமா?) என்றான்.

உடனே அதற்கு ஹர  என்று பதில் வந்தது – (அபகரி) திருடிக் கொள் என்று.

 

பரம பக்தர்களிடம் அல்லவா வந்திருக்கிறோம் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்த வந்தவர்கள், உருக்கப்பட்ட தங்கத்தின் எடையைப் போட்டு பொற்கொல்லன் தந்த காசை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

 

தங்கத்தில் சிறிது திருடப்பட்டது அவர்களுக்குத் தெரியாமல் போனது.

 

இந்தக் கதையைப் பரமஹம்ஸர் சொல்ல பங்கிம் சந்திரரும் விழுந்து விழுந்து சிரித்தார்.

 

“ஏன் நீங்கள் பங்கிம் ஆனீர்கள்? என்ற பரமஹம்ஸரின் கேள்விக்கு பரிகாசமாக அவரும். “இந்த இங்கிலீஷ்காரன் தன் ஷூ காலினால் என் முதுகைக் குத்தியதால் நான் பங்கிம் ஆனேன் என்றார்.

 

அனைவரும் கலகலப்புடன் நகைத்தனர்.

 bankim 2

பங்கிம் சந்திரரின் உண்மையான சொரூபம்

பரமஹம்ஸருக்கும் பரமஹம்ஸரின் பிரம்மாண்டமான பெரிய நிலை பங்கிமுக்கும் நன்கு தெரியும்.

 

அவர்களிடம் ஆத்மார்த்தமான நட்பு தொடர்ந்து நிலவியது.

பல சுவையான நிகழ்ச்சிகள் அவர்கள் சந்தித்த போதெல்லாம் நிகழ்ந்தன.!

 

*********

குறிப்பு : ஆங்கிலம் அறிந்தோர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது Swami Saradananda  எழுதியுள்ள Sri Ramakrishna The Great Master  என்ற நூலைப் படிக்க வேண்டும். அதில்  உள்ள நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டே இந்த கட்டுரை உருவாகியுள்ளது. ராமகிருஷ்ண மடத்தில் இந்த நூலைப் பெற முடியும். இது விலை மதிக்க முடியாத  பொக்கிஷம் போன்ற ஒரு புத்தகம்.

 

-Subham-

 

 

திருமூலர் சொன்ன கதை: முதலைக்குப் பயந்து கரடியிடம் அகப்பட்டவன்! (Post No. 2478)

bear_with_cubs_-_original-1 

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 11 January 2016

 

Post No. 2478

 

Time uploaded in London :–  7- 41 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தேவார சுகம்

முதலைப் பாடல்கள் – 2

ச.நாகராஜன்

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

முதலை வாய்ப்பட்ட குழந்தையை மீட்ட சுந்தரர்

 

அவிநாசி தலம் புகழ் பெற்ற ஒரு சம்பவத்தைக் கொண்ட ஆன்மீகத் தலம்.

 

 

இதை அறிவியல்  நோக்கில் பார்த்தால் டைம் மெஷின் என்னும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் சென்று இறந்திருந்த குழந்தை மீட்கப்பட்ட  தலம் என்று சொல்லி அதிசயிக்கலாம்.

 

 

ஆன்மீக நோக்கில் பார்த்தால் அருளாளர் சுந்தரர் இறைவனைத் தொழுது வேண்டி சிவபிரான் அருளால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருந்த குழந்தையை உயிர்ப்பித்த ஆன்மீக அருள் தலம் என்று கொள்ளலாம்.

 

croc, bear

வரலாறு இது தான்.

 

 

சிவ தலங்கள் தோறும் வழிபட்டு வந்த சுந்தரர் அவிநாசி வந்தார். அங்குள்ள தெருவில் ஒரு வீட்டில் விழா ஒலி எழும்ப இன்னொரு வீட்டிலோ அழுகைக் குரல் ஒலித்தது.

ஏழு வயது அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணம் நடந்த

 

வீட்டில் விழா ஒலி.

 

இன்னொரு வீட்டிலோ..

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரு குழந்தைகள் மடுவிலே குளிக்கப் போயிருந்த சமயம் முதலை ஒன்று ஒரு குழந்தையை இழுத்துச் சென்றது.

 

முதலையிடம் பறி கொடுத்த தங்கள் குழந்தைக்கு இப்போது ஏழாம் வயது நடந்து கொண்டிருக்கும். அக்குழந்தைக்கு பூணூல் கல்யாணம் நடத்திப் பார்க்கும் பாக்கியம் நமக்கு இல்லையே என்று குழந்தையை இழந்த தம்பதிகள் இன்னொரு வீட்டில் தவித்து அழுது கொண்டிருந்தனர்.

அந்த அன்பரது வீட்டினுள் நுழைந்த சுந்தரர் காரணத்தை அறிந்து கண்ணீர் சிந்தினார்.

 

 

நேராகக் குளத்திற்குச் சென்றார். அங்கு ‘எற்றான் மறக்கேன்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட ஆரம்பித்தார்.

இரண்டாவது பாடலில் உன்னை வணங்க வந்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் என்ன (புக்கொளியூரில் குளத்து இடை இழியாக் குளித்த மாணி என்னைக் கீறி செய்ததே?) என்று வினவினார். சிவபிரானைத் தோழனாகக் கொண்ட வன்தொண்டர் இல்லையா அவர்!

 

நான்காவது பாடலில், ‘காலனையும் முதலையையும் சிறுவனைத் தருமாறு ஆணையிடுக’ என சிவனை வேண்டி நின்றார்.

 

“உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்   அரைக்கு ஆடு அரவர் ஆதியும் அந்தமும் ஆயினாய்         புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே         கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே

 

 

பாடலின் பொருள் :

“உன்னைத் தோத்திரம் செய்பவர் உரையை உகப்பவனே! உன்னை நினைப்பவர் தலை மேல் இருப்பவனே! அரையில் ஆடும் பாம்பை அணிந்தவனே! ஆதியும் அந்தமுமாய் இலங்குபவனே! சிறந்த முல்லை நிலமும் சோலைகளையும் கொண்ட திருப்புக்கொளியூர் அவிநாசியில் எழுந்தருளியிருப்பவனே!

காலனையும் முதலையையும் பிள்ளையைக் கொண்டுவந்து தருமாறு ஆணையிடுக”

 

connected English article: TIME TRAVEL by TWO TAMIL SAINTS posted in swamiindology.blogspot.com on 14th February 2012.

Five beautiful Stories on Hindu Concept of Time; posted on 16 May 2015 in tamilandvedas.com

 

உடனே மடுவிலிருந்து வெளிப்பட்ட முதலை தன் வாயில் சிறுவனைக் கொண்டு வந்து தந்தது.

அப்போது அவன் (இரண்டு ஆண்டுகள் வளர்ந்த) ஏழு வயதுச் சிறுவனாக உயிர் மீண்டு வந்தான்.

 

 

அவிநாசியப்பர் சந்நிதியிலேயே அந்த அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணமும் நடந்தது. இன்றும் இந்த உற்சவம் அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில், ‘முதலை வாய்ப் பிள்ளை உற்சவம்’ என்று விமரிசையாக நடக்கிறது. அவிநாசியப்பர் கோவிலின் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குளம் உள்ளது. இங்கு சுந்தரரர் பாடல் பாட, முதலை தன் வாயிலிருந்து குழந்தையை உமிழும் விழாவும், சுந்தரர் கோவிலில் உபநயனம் செய்விப்பதும் ஐதீகத்தை விளக்கும் விதமாக நடைபெறுகிறது.

 

விஞ்ஞானிகளின் பார்வையிலும் முக்கியமானதாக விளங்குகிறது இந்தச் சம்பவம். காலத்தில் பின்னோக்கிச் சென்று இறந்தவனை மீட்க முடியும் என்பதை அதிசயமாக நிரூபிக்கும் விழா அல்லவா இது!

 

 

மயிலையில் பூம்பாவையை திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததையும் இங்கு நினைந்து மகிழலாம்.

 crocodile_vs_bear_

முதலைக்குப் பயந்து கரடியிடம் அகப்பட்டவன் கதை!

 

அடுத்து இன்னொரு பாடல் பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தில் இடம் பெறும் பாடல்!

 

ஆற்றிற் கிடந்த முதலைக் கண்டஞ்சிப்போய் 

ஈற்றுக்கரடிகெதிர்ப்பட்ட தன்னொக்கும்                     

நோற்றுத் தவஞ்செய்வார் நூலறியாதவர்      

சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே

(ஆறாம் தந்திரம் தவநிந்தை- பத்தாம் பாடல்)

 

 

ஒருவன் ஆற்றைக் கடக்க எண்ணி ஆற்றில் இறங்கினான். பார்த்தால் எதிரே முதலை ஒன்று ஆவென்று வாயைத் திறந்து இவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. பயந்து போனவன் தலைதெறிக்க காட்டு வழியில் ஓடினான்.

 

ஓடியவனை ஒரு கரடி பிடித்துக் கொண்டது. அதுவோ ஈற்றுக் கரடி, அதாவது குட்டிகளை ஈன்ற கரடி. குட்டிகளை ஈன்ற கரடியின் கோபம் எல்லைக்கடங்காத ஒன்றாக இருக்கும். அது அவன் மீது பாய்ந்தது.

 

 

இது எதைப் போல உள்ளது? ஆகமம் உள்ளிட்ட நூல்களை அறிதல், கடினமாக நோற்றுத் தவம்  செய்தல் ஆகியவற்றிற்கு அஞ்சி பிறப்பு இறப்பு என்ற வலையில் அகப்பட்டு சோற்றுக்கு அலைகின்றவரைப் போல இருக்கிறது!

 

(Written by S Nagarajan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com)

திருமுறைகளில் மட்டுமல்ல, இதர சங்க இலக்கியம் உள்ளிட்ட நூல்களிலும் முதலைப் பாடல்கள் உள்ளன,

 

அவிநாசி மட்டுமல்ல, இதர முதலை ஸ்தலங்களும் தமிழ்நாட்டில் உள்ளன.

 

முதலை வழிபட்ட தலம் திருமுல்லை வாயில்!

 

கொண்டதை விடாத முதலையைப் பற்றி “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்ற பழமொழியும் உள்ளது.

முதலைப் பாடல்கள் சுவையாக அறிவுரை தருவதாக இருக்கிறதல்லவா?

 

contact: swami_48@yahoo.com

 

******

சிவனடியார்கள் பாடிய முதலைப் பாடல்கள் – 1 (Post No. 2475)

sankara croc

Picture: Adi Shankara and Crocodile

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 10 January 2016

 

Post No. 2475

 

Time uploaded in London :–  7- 15 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

தேவார சுகம்

முதலைப் பாடல்கள் – 1

ச.நாகராஜன்

 crocodile-4

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

முதலைகள் ஐந்திடம் மாட்டிக் கொண்டால் ..

 

ஒரு குளம். அதிலே ஒன்பது துறைகள். ஒரு முழக் குளம் அதன் அகலமோ அரை முழம் தான். அதற்குள் ஐந்து முதலைகள்.அவைகள் உங்களை, என்னையும் தான், படாத பாடு படுத்துகின்றன.

 

தப்ப வேண்டுமே, வழி என்ன?

 

என்ன, புதிர் ஏதாவது போடப்படுகிறதா?

விடுங்கள், அப்பரே, “நான் பிதற்றுகின்றேன் என்று சொல்கின்ற பாடலுக்கு நேரடியாகப் போவோம்.

திரு ஏகம்பத்தில் பாடிய ‘நம்பனை எனத் தொடங்கும் பதிகத்தில் இரண்டாம் பாடல் (4ஆம் திருமுறை):

 

 

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறை உடைத்தாய்       

அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து  பெருமுழைவாய்தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன் கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே

 

 

ஒரு முழம் நீளமும் அரை முழம் அகலமும் கொண்டுள்ள உடல் என்னும் குளத்தில் ஐந்து முதலைகள் வாழ்கின்றன. இந்த குளத்திற்கு நீர் வரும் வழிகள் ஒன்பது. அதாவது ஒன்பது துவாரங்கள். இதில் அகப்பட்டுள்ள நான் ஐம்பொறிகளுக்கும் பயந்து பெரிய குகை போன்று காணப்படும் நீர் வரும் வழியைப் பற்றிக் கொண்டு எப்படித் தப்புவது என்ற பயத்தில் வாய்க்கு வந்தபடி பிதற்றுகின்றேன். கருமுகில் தவழ்கின்ற மாடங்களை உடைய கச்சி ஏகம்ம்பத்தில் உறையும் ஏகம்பனே, என்னை ஐந்து முதலைகளிடமிருந்து (ஐம்பொறிகளிலிருந்து) காப்பாற்றுவீராக!

 

 

அப்பரா பிதற்றுகிறார். அவர் அருளாளர். அவர் நமக்கு வழிகாட்டப் பிதற்றுகிறார். ‘

 

‘ஏகம்பம் மேவினாரைக் கையினால் தொழ வல்லார்க்குக் கடுவினை களையலாமே’ என்ற இரகசியத்தை ஐந்தாம் பாட்டில் அறிவித்து நமக்கு உய்யும் வழியைக் காட்டுகிறார்.

ஐந்து  முதலைகள் பிடித்ததை விடாது. அதைப் பிடித்து அகற்ற சிவபிரான் அருள் அல்லவா, வேண்டும். அதைத் தான் சுட்டிக் காட்டுகிறார் அருளாளர்.

 

 

திருமூலர் காட்டும் குளமும் வலை வீசும் சிவனும்

 

இதே கருத்தைத் திருமூலரும் சொல்கிறார்:

திருமந்திரம் பாடல் எண் 2031 (ஐந்திந்திரயம் அடக்கு முறைமை)

 

குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம்

வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன

பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து

இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே

 

திருமூலர் பாடலின் பொருள்: நமது உடல் ஒரு முழம் (தலை

முதல் கழுத்தின் கீழ் இதயம் வரை) அகலம் அரை முழம். காதுக்குக் காது உள்ள அகலம். இந்தக் குளத்தில் ஐந்து மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன. இந்த ஐந்து பொறிகளை வலை வீசிப் பிடிக்க பரவன் (மீனவன்) ஒருவனின் அருளினால் மட்டுமே முடியும். அந்த சிவபிரானின் அருள் கிடைத்தால் துன்பமே இல்லை!

 

மனித முயற்சியால் ஐம்புலன்கள் அடக்குதல் கடினம். ஆனால் அதே முயற்சியால் சிவனை நினைந்து பணிந்தால் அவன் அருள் கிடைக்கும். அப்போது ஐந்து பொறிகளும் அடங்கும்.

croc2

மணிவாசகர் காட்டும் முதலை

 

 

அப்பரைப் போலவே மாணிக்கவாசகரும் முதலை பயத்தைக் கொண்டவர் தான்! ஆனால் இது வேறு விதமான முதலை.

பாடலைப் பார்ப்போம்:

 

முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி   விதலைச் செய்வேனை விடுதி கண்டாய் விடக்கூன் மிடைந்த சிதலைச் செய் காயம் போறேன் சிவனே முறையோ முறையோ திதலைச் செய்பூண்முலை மங்கை பங்காவென் சிவகதியே

(நீத்தல் விண்ணப்பம் பாடல் 41)

 

மகளிரின் காம நீரில் மூழ்கி நடுங்கிய என்னைக் கைவிட்டு விடாதே என இறைஞ்சுகிறார் மணிவாசகர்.

 

முதலைச் செவ்வாய்ச்சியர் – முதலை போலக் கொண்டதை விடாது பற்றி நிற்கும் மகளிர்

 

வெந்நீர் – சுடுகின்ற காம நீர் (இளமைக்காலத்தில் அது விருப்பமாக இருந்தது. இப்போது வெறுப்பாக இருக்கிறது)

வெம்+நீர் = வெந்நீர் என்பதை விருப்பம் மற்றும் கொடுமை ஆகிய இரு அர்த்தங்களில் நோக்க வேண்டும்.

கடிப்ப என்ற வார்த்தைக்கும் இரு பொருள் உண்டு. ஒன்று மணப்ப என்ற பொருளைத் தரும் இன்னொரு பொருள் வெறுக்க என்பதாகும்.

 

விதலை – நடுக்கம்; விடக்கு ஊன் – தசைத் திரள் சிதலை – நோய் திதலை – தேமல்

 

மங்கையர் மயக்கிலிருந்து என்னை விடுவித்து ஆட்கொண்டருள். ஆட்கொண்டு விடாமல் விடுதல் முறையோ முறையோ என வேண்டுகிறார் மணிவாசகர்.

 

இப்படிப் பல முதலைப் பாடல்கள் உண்டு பன்னிரு திருமுறைகளில்.

 

Written by S Nagarajan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com

 

இரண்டைப் பார்த்தோம்; இன்னும் இரண்டை அடுத்துப் பார்ப்போம்!

*******

‘எல்லாம் நன்மைக்கே’- சுவாமி ராமதாஸ் சொன்ன கதை (Post No. 2474)

ramdas

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 9 January 2016

 

Post No. 2474

 

Time uploaded in London :– 12-06

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஒரு நாட்டில் ஒரு மன்னனிடம் மந்திரி ஒருவர் வேலை பார்த்தார். அவர் இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். எது நடந்தாலும் எல்லாம் , ‘இறைவன் கொடுத்த வரம்” என்று நினைப்பார். யாராவது வந்து “எனக்கு அந்தக் கஷ்டம், இந்தக் கஷ்டம்” என்று முறையிட்டாலோ,முனகினாலோ, “கவலைப் படாதே, எல்லாம் நன்மைக்கே, கடவுள் எதையும் யாருக்கும் காரணமின்றி தரமாட்டார்” என்று ஆறுதல் சொல்லுவார். இவ்வாறு இந்த ‘எல்லாம் நன்மைக்கே’ மந்திரியின் புகழ் திக்கெட்டும் பரவியது.

ramdas book

ஒரு நாள் அரசனும் மந்திரியும் வேட்டையாட காட்டுக்குச் சென்றனர். இருள் சூழும் வேலையில், அவர்கள் கூட வந்த பரிவாரம், வேறுதிசையில் போய்விட்டது. மந்திரியும் மன்னனும் தனித்து இருந்தனர். அரசனுக்கு ஒரே பசி. அமைச்சரிடம் சொல்லவே அவரும் ஒரு மரத்தில் பழங்கள் இருப்பதைப் பார்த்து அதைப் பறித்து மன்னைடம் கொடுத்தார்.

மன்னனோ பசி, அவசரத்தில் பழங்களை வெட்டும்போது ஒரு விரலையும் வெட்டிக்கொண்டு விட்டார். ரத்தம் குபுகுபு என்று வழிந்தோடியது. வலியில் துடித்தார். மந்திரியிடம் பொறுக்கமுடியாத வலி பற்றிச் சொல்லி கதறினார். மந்திரியோ, “மன்னரே! கவலைப் படாதீர்கள்; எல்லாம் நன்மைக்கே” என்றார்.

 

அரசனுக்கு அதி பயங்கர கோபம் வந்தது. “நான் துடியாய்த் துடிக்கிறேன். ஆறுதல் சொல்வதற்குப் பதில் எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய்” என்று சொல்லி மந்திரியை ஓங்கி ஒரு உதை விட்டு, இனிமேல் என்முகத்தில் முழிக்காமல் ஓடிவிடு என்றார். மந்திரியோ, அதற்கும்’ எல்லாம் நன்மைக்கே’ என்று காரணம் கற்பித்துவிட்டு அவர்முகத்தை திருப்பிக்கொண்டு, வேறு ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தார். மன்னன் தனது மேலாடையில் ஒரு ஓரத்தைக் கிழித்து கையில் விரல் துண்டித்த இடத்தில் ஒரு கட்டுப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.

 

 

ramdas2

கொஞ்ச நேரத்தில் அந்த வழியே இரண்டு தடியர்கள் வந்தனர். மன்னர்கள் மீது பாய்ந்து அவரைக் கட்டி, அலாக்காகத் தூக்கினர். அவரோ குய்யோ முறையோ என்று கத்தினார். தான் இந்நாட்டு மன்னர் என்றும், யாது காரணத்தாலவர்கள் இப்படிச் செய்கின்றனர் என்று ம் வினவினார். அந்த தடியர்களுக்கு மேலும் சந்தோஷம் வந்தது. உடனே சிரித்துக் கொண்டே சொன்னார்கள்: “நாங்கள் ஆண்டுதோறும் ஒரு ஆடவனை காளிதேவிக்கு உயிர்பலி தருவோம். இந்த தடவை மன்னே உயிர்ப்பலிக்கு கொடுக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது. காளிதேவி எங்களுக்கு கூடுதல் அருள் பொழிவாள்”.

 

மன்னனுக்கு ஒரே துன்பம்! என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

 

காளிதேவியின் பீடத்தில் அவனைக் கிடத்தி பூசாரியை அருவாளுடன் வர அழைத்தனர். அவரும் வந்தார். ஆடைகளையெல்லாம் ஒன்றொன்றாக உருவிவிட்டு வெட்டச் செல்லும் போது அந்தப் பூசாரி, மன்னனின் கையில் ஒரு கட்டு போடப் பட்டிருப்பதைப் பார்த்தான். அது என்னவென்று வினவினான். உடனே விரல் துண்டுப்பட்ட இடத்தை மன்னன் காட்டினான்.

 

“அடக் கடவுளே! முழு உடலிருக்கும் மனிதனைத் தான் காளிக்குப் பலி தரவேண்டும். இவனுக்கோ ஒரு அங்கம் பழுது. இவனை உடனே எடுத்துச் செல்லுங்கள். காளிதேவி கோபித்துக்கொள்வாள்” என்றார் பூசாரி. உடனே இரண்டு தடியர்களும் மன்னரை அலாக்காகத் தூக்கி பழைய இடத்திலேயே போட்டுவிட்டு போய்விட்டனர்.

 

மன்னனுக்கு மந்திரி சொன்னது நினைவுக்கு வந்தது: எல்லாம் நன்மைக்கே – என்று அமைச்சர் சொன்னாரே. கை விரல் வெட்டுப்பட்டதற்கு கோபப்பட்டு அவரை எட்டி உதைந்தேனே. கைவிரல் வெட்டுப்பாடாமல் முழு அங்கத்துடனிருந்தால் இவ்வளவு நேரம் காளிக்குப் பலி கொடுத்திருப்பார்களே என்று எண்ணி வருத்தப்பட்டார். மந்திரியின் பெயரை உரத்த குரலில் சொல்லி அழைத்துக் கொண்டே போனார்.

 

தொலைவில் மரத்தடியில் அமர்ந்திருந்த மந்திரி ஓடோடி வந்து மன்னா! என்ன வேண்டும்? ஏன் அழைத்தீர்கள்? என்றார். மன்னன் முழுக் கதையையும் சொல்லி மந்திரி சொன்னது உண்மைதான். கடவுள் கஷ்டத்தைக் கொடுத்தால் அதுவும் நன்மைக்கே என்றார். மந்திரியிடம் மன்னிப்பும் கோரினார்.

 

மந்திரி சொன்னார்: மன்னரே, மன்னிப்பு கேட்க வேண்டாம். நீங்கள் என்னை எட்டி உதைந்தபோது நானும் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிவிட்டுப் போனேன். நீங்கள் என்னை விரட்டாமலிருந்தால், இவ்வளவு நேரம் அந்தத் தடியர்கள் நம்மிருவரையும் கொண்டுபோய் பூசாரியிடம் ஒப்படைத்திருப்பர். உமக்கு அங்கக் குறைவு இருந்ததால் என்னைத்தான் பலியாக்கி இருப்பர். நீங்கள் என்னை எட்டி உதைத்து விரட்டிவிட்டதும் இறைவன் செயலே. எல்லாம் நன்மைக்கே” என்று சொன்னார். பின்னர் இருவரும் காட்டிலிருந்து நாட்டுக்குப் புறப்பட்டனர்.

bhavan book

நீதி: ஏதேனும் துன்பம் நேரிட்டாலும், அது ஏதோ ஒரு நன்மைக்கே என்று ஆண்டவனை நம்பி வாழ வேண்டும்.

 

“நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு” (பாரதியார் பாடல் வரிகள்).

தமிழ் மொழி பெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்

–சுபம்–

 

 

லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம் (Post No. 2472)

Shri-Kuzhandhaiyanandha-Swamigal

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 9 January 2016

 

Post No. 2472

 

Time uploaded in London :–  5-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஆன்மீக இரகசியம்

 

லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம்

 

ச.நாகராஜன்

 

குழந்தையானந்த ஸ்வாமிகள்

 

பல நூறு ஆண்டுகளாக பாரதத்தில் லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லி வருவது இயல்பான ஒரு பழக்கமாக பல்லாயிரம் குடும்பங்களில் ஆகி விட்டது.

 

ஆனால் இதைச் சொல்லுவதில் உள்ள இரகசியத்தை குழந்தையானந்த ஸ்வாமிகள் தன் பக்தை ஒருவருக்கு அனுக்ரஹித்துள்ளார்.

 

சுவையான அந்த சம்பவத்தின் மூலம் இரகசியம் அனைவருக்கும் வெளிப்பட அனைவரும் அதன் மூலம் பலன் பெறும் பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.

 

1927ஆம் ஆண்டு. புதுக்கோட்டை சீஃப் கோர்ட் வக்கீல் சுவாமிநாத ஐயரும் அவரது மனைவி பாகீரதி அம்மாளும் ஸ்வாமிகளின் அநுக்ரஹத்திற்குப் பாத்திரமான சிறந்த பக்தர்கள். ஸ்வாமிகளின் மீது பரம் பக்தி அவர்களுக்கு.ஸ்வாமிகள் இரு முறை அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்து பல நாட்கள் அங்கு தங்கி இருக்கிறார்.

இரண்டாம் முறை (1927இல்) ஸ்வாமிகள் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது பாகீரதி அம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணி.

ஸ்வாமிகள் வாய் சிறு குழந்தைகள் குழறுவது போலக் குழறிச் சொற்களை வெளிப்படுத்தும்.

‘பாயி’ என்று பாகீரதி அம்மாளை மாடியிலிருந்து விளித்து ஸ்வாமிகள் கஞ்சியோ காப்பியோ கொண்டு வரச் சொல்லுவது வழக்கம்.

 

நிறைமாத கர்ப்பிணி படி ஏறி வருதைப் பார்த்து, “உனக்கு சிரமமாய் இருக்கிறதா?” என்று ஸ்வாமிகள் பரிவோடு கேட்பார்.

“நல்ல காரியங்கள் நடக்கும் போது சற்று சிரமம் கூடவே இருக்கும்.ஆனால் அதைப் பொருட்படுத்தக் கூடாது” என்று அருளுரை வழங்கிய ஸ்வாமிகள்,” ஸ் என்று சொல்லாதே! ஸ் என்று போய் விடும்’ என்று அன்பாகக் கூறினார்.

om tamil

 

கரை கட்டி ஸஹஸ்ர நாமத்தைச் சொல்

 

லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் வழக்கத்தை பாகீரதி அம்மாள் கொண்டிருந்தார்.

 

ஒரு நாள் அவரிடம் ஸ்வாமிகள்,”லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் போது ஆற்றுக்குக் கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னும் பின்னும் பிரணவமாகிய ஓம் என்பதைச் சேர்த்துச் சொல்” என்று அருளினார்.

 

ஸ்வாமிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் வளர்த்த மீனாட்சி அம்மையின் அருள் குழந்தை.

 

தன் அன்னையை எப்படி வழிபட்டால் முழுப் பலனும் கிடைக்கும் என்ற இரகசியத்தை அவர் அருளியது அனைவருக்குமான காலத்திற்கேற்ற உபதேசம்.

 

 om swasik

ஓம் என்னும் உயரிய மந்திரம்

தானம் யக்ஞம் போன்ற சகல காரியங்களையும் ஆரம்பிக்கும் போது ப்ரணவமாகிய ஓம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று சாட்யாயனர் அருளியுள்ளார்.

 

அதே போல காத்யாயனர் ப்ரண்வத்தை சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்று அருளியுள்ளார்.

தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச் சேர்த்துச் சொல் என்றார்.

 

முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

இந்த அரிய இரகசியத்தை ஸ்வாமிகள் பக்தைக்கு அருளினார்.

 

பக்தைக்கு ஆண் குழந்தை பிறக்க அது புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்ததைக் கேட்டு அறிந்த ஸ்வாமிகள், “புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜெகதீசன் என்று பெயர் வை. நன்றாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும் ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

காலம் கலி காலமானதால் நமக்குத் தெரியாத இரகசியங்களை இப்படிப் பெரும் மகான்கள் கூறி அருளுவது வழக்கம்.

ஆக லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வழியை பெரும் மகானான குழந்தையானந்த ஸ்வாமிகள் அருளியுள்ளார். அதைக் கடைப்பிடித்து சஹஸ்ர நாமம் சொல்லி முழுப்பலனையும் அன்னையின் அருளால் பெறுவோமாக!

 

*****

 

விஷ்ணு ஓடி ஒளிந்த இடம்! நாரதர் கேள்வி!!(Post No. 2470)

narshimha1

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 8 January 2016

 

Post No. 2470

 

Time uploaded in London :–  காலை 8-04

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

அசுரர் குல மன்னன் ஹிரண்யகசிபு மூவுலகமும் நடுநடுங்க ஆட்சி செய்தான். ஈரேழு லோகங்களையும் வெல்ல ஆசை கொண்டான். நேரம் கிடைத்த போதெல்லாம் தேவர்களைத் தாக்கி ஓட ஓட விரட்டினான். இவ்வளவு பலம் எப்படி வந்தது? கடும் தவத்தினால் பெற்ற பலம் இது. ஆகையால் தேவர்கள் ஏது செய்வதென்று அறியாது திகைத்தனர். தேவ லோகத்தையும், விஷ்ணு வசிக்கும் வைகுண்டத்தையும் வசப்படுத்த எண்ணினான்.

 

ஹிரண்யகசிபு, ஒரு நாள் வைகுண்டத்தின் மீது தாக்குதல் தொடுக்கவே, விஷ்ணு உள்பட எல்லா  தேவர்களும் ஓடி ஒளிந்தனர். அவன், எப்படியாவது விஷ்ணுவைப் பிடித்து தனது சக்தியைக் காட்டவேண்டுமென்று தேடோ தேடென்று தேடினான். பூலோகம், புவர் லோகம் சுவர்லோகம் – எங்கு தேடினும் விஷ்ணுவைக் காணவில்லை. அவனுக்கு ஒரு புறம் ஏமாற்றம்- மறுபுறம் பெருமிதம்; விஷ்ணுவையே ஓடி ஒளிய வைத்துவிட்ட இறுமாப்பு.

narasimha

விஷ்ணு ஓடி, ஒளிந்த செய்தி ஈரேழு 14  லோகங்களிலும் காட்டுத் தீ போல பரவியது. நாரதர் காதிலும் விழுந்தது. ‘வெறும் வாயையே மெல்லுபவருக்கு அவல் கிடைத்தது போல’ ஆயிற்று. அட, ‘பழம் நழுவிப் பாலில் விழுந்துவிட்டது’. விடக்கூடாது என்று விஷ்ணுவின் இருப்பிடத்தை அறிந்து அங்கே சென்றார். இந்த தடவை, விஷ்ணுவின் குடுமி, தன் கையில் சிக்குவது உறுதி என்ற இறுமாப்புடன நாரதர் சென்றார்.

 

முதலில் உரிய வணக்கங்களைச் செலுத்திவிட்டு, கிண்டல் தொனியில், “ஐயா,பெரியவரே! ஹிரண்யகசிபு படையெடுத்து வந்தபோது, தேவலோகமே, காலியாமே! நீரும் ஓடிப் போய் ஒளிந்தீராமே! ஹிரண்யகசிபு கண்டுபிடிக்கமுடியாத இடத்தில் ஒளிந்து கொண்டுவிட்டு இப்போது நடமாடுகிறீரே! என்ன விஷயம்? எங்கு ஒளிந்தீர்? என்று நக்கல் செய்தார்.

 

நாரதரைப் பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, விஷ்ணு சொன்னார்: “ஐயா, மஹா பக்தர் நாரதரே! நான் எங்கும் ஓடி, ஒளியவில்லை. ஹிரண்யகசிபுக்கு வெகு அருகில்தான் இருந்தேன். அவனுக்குத் தெரியவில்லை!

 

நாரதர்: என்ன? அவனருகில் இருந்தால், எப்படி ஐயா, உம்மைக் கண்டுபிடிக்காமல் போனான்?

 

விஷ்ணு: நான் அவனது இதயத்தில் உட்கார்ந்திருந்தேன். எல்லோர் இதய கமலத்திலும் நான் வீற்றிருப்பதை நீர் அறிவீரே! இதில் என்ன வியப்பு? ஹிரண்யகசிபு, அகந்தையே வடிவெடுத்தவன். அவனது தலைக் கனத்தால், அவன் என்றும் குனிந்ததும் இல்லை; பணிந்ததுமில்லை. ஆகவே அவனால் என்னைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கொஞ்சம் குனிந்து என்னைத் தேயிருந்தால்கூட கண்டுபிடித்திருக்கலாம். அடக்கமும் பணிவும் இருந்திருந்தால் அவனுள்ளேயே நான் இருப்பதை அறிந்திருப்பான் – என்றார்.

 

நாளை காலை பத்திரிக்கைகளுக்குச் சூடான செய்தி தரலாம் என்று ஆர்வத்துடன் போன நாரதருக்கு விஷ்ணுவின் பதில் நல்ல பாடமாக அமைந்தது.

இந்தக் கதையின் நீதி என்ன வென்று இக்கதையை விளம்பிய ஆனந்தாஸ்ரம சுவாமி ராமதாஸ் சொல்கிறார்:- அகந்தையை விட்டால் இதய கமலத்தில் வீற்றிருக்கும் இறைவனை உணரலாம், காணலாம்.

–சுபம்–

 

அக்பரும் சூரிய நமஸ்காரமும் (Post No. 2463)

Emperor-Akbar-Empress-Jodha

Akbar and his wife Jodha Akbar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 6 January 2016

 

Post No. 2463

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

இந்திய சங்கீதம்

 

அக்பரும் சூரிய நமஸ்காரமும்

(Akbar and surya namaskar by Santanam Nagarajan)

ச.நாகராஜன்

 

 

கங்கை ஜலம் அருந்திய அக்பர்

 

அக்பர் ஒரு நல்ல ஹிந்துவுக்கு உரிய பல செயல்களை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.

அவர் எங்கு சென்றாலும் கூடவே கங்கை ஜலம் கொண்டு செல்லப்படும். தன் வாழ்நாள் முழுவதும் கங்கை ஜலத்தைத் தவிர வேறெந்த நீரையும் அருந்தாதவர் அக்பர்.

 

Jodha-Akbar-Mugh

மரியாதையை எதிர்பார்க்காத மன்னர்

 

அவரது அரசவையில் இருந்த ந்வரத்னங்களின் வீட்டுக்கு அவர் செல்வது வழக்கம். அவர்களின் அழைப்பை அவர் எதிர்பார்ப்பதே இல்லை.

 

ஆனால் இதில் ஒரு சங்கடம் அவர்களுக்கு உண்டு. சாதாரணமாக மாமன்னரான அக்பர் ஒருவரது வீட்டிற்கோ மாளிகைக்கோ அரண்மனைக்கோ சென்றால் அவரை மரியாதை செய்ய வேண்டும், அவரது அந்தஸ்துக்குத் தக!

 

 

தங்கத் தட்டில் விருந்து, முத்துக்கள் பதிக்கப்பட்ட குவளைகளில் நீர், ஒன்றே கால் கோடி ரூபாய் தக்ஷிணை ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டிய குறைந்த பட்ச மரியாதைகள்.

ஆனால் ராஜா பீர்பல் இதற்கெல்லாம் எங்கே போவார்? அவர் தன் இல்லம் வந்தமைக்காக மன்னரை வாழ்த்தி ஒரு பாடலைப் பாடுவது வழக்கம்.

 

அக்பரும் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு மகிழ்வார்.

தான்ஸேனும் இது போல தங்கத் தாம்பாளம், வைரக் கோப்பை, வெள்ளிக் குவளைகள், தங்க நாணய தக்ஷிணை ஆகியவற்றை ஒரு போதும் கொடுத்ததில்லை; ஏனெனில் அவரிடம் இவை இல்லை, அவ்வளவு தான்.

 

ஆனால் மன்னர் வந்தவுடன் பாட ஆரம்பிப்பார். அதில் அக்பர் உருகி விடுவார். அவர் தான் தான்ஸேனுக்கு எல்லாவற்றையும் தருவார்.

 

ஏராளமான ஹிந்து அறிஞர்களைத் தன் அருகில் வைத்துக் கொண்டு அவர்களின் முழு அறிவையும் தன்னால் முடிந்த மட்டில் கிரகிக்கப்ப் பார்த்தார் அக்பர்.

surya namaskar by english

 

சூரிய உபாஸனை

 

தினமும் அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன்னர் எழுவது அவர் வழக்கம். சூரிய உபாஸனையில் அவர் மனம் பக்தி சிரத்தையுடன் வெகுவாக ஈடுபட்டது.

 

ஜைன மதத்தைச் சேர்ந்த பண்டிதரான பானுசந்திர உபாத்யாய அவருக்கு சூரிய ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.  ஆயிரம் நாமங்களைச் சொல்லி சூரியனை வழிபடும் வழக்கத்தை தன் வாழ்நாள் இறுதி வரை அக்பர் கடைப்பிடித்தார். அவரது ஆரோக்கிய ரகசியம் சூரிய நமஸ்காரத்தில் இருந்தது.

அக்பரின் இந்த சூரிய வழிபாடு தான்ஸேனை வெகுவாகக் கவர்ந்தது.

சூரியனை நோக்கிப் பிரார்த்தித்த தான்ஸேன், “ஒளிபொருந்தியவராக சிரஞ்சீவியாக அக்பர் ஆட்சி புரிய சூரிய பகவான் அநுக்ரஹம் புரிய வேண்டும்” என்று பாடலை யாத்துப் பாடினார்.

 

“அங்கே சூரியன், இங்கே அக்பர்!

இருவரையும் பாருங்கள்!

 

என்ன பவித்ரம், வந்து வரம் வாங்குங்கள், ஆனந்தம் பெறுங்கள்!

சஹஸ்ர கிரணங்களைக் கொண்டுள்ள சூரியன் போலவே அக்பரும் ஆயிரம் கிரணங்களைக் கொண்டுள்ளார். புத்தி ச்ரேஷ்டர். துக்கம் போக்குபவர் என தான்ஸேன் சொல்கிறேன்” என்ற பொருளமைந்த பாடலையும் யாத்துப் பாடினார்.

சூரிய உபாஸனையை இடைவிடாது அக்பர் செய்து வந்ததால் பவித்திரமான ஒருவராக அவர் இருப்பதாக நினைத்த தான்ஸேன் அக்பர் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வந்தார்.

 

surya deva painting

புனைகதைகளில் தான்ஸேன்

 

ஆனால் ராம தானுவாக இருந்தவர் தான்ஸேனாக மாறியதோடு இஸ்லாமை ஏன் தழுவினார் என்பதை வரலாறு சரியாக விளக்கவில்லை. பல புனைகதைகள் இருப்பதால் அது பற்றிய உண்மை தெரியவில்லை.

 

ஒரு கதையில் மன்னர் ராமச்சந்திரரிடமிருந்து வந்து விட்ட சோகத்தால் தான்ஸேன் பாடுவதையே நிறுத்தி விட்டதாகவும், இதனால் அக்பர் அவரிடம் தன் புத்திரியை அனுப்பிப் பாட்டுச் சொல்லித்தரச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அவளுக்குப் பாட்டுச் சொல்லித் தரவே நாளடைவில் பழைய நிலைக்கு வந்து மீண்டும் பாட ஆரம்பித்ததாகக் கூறும் இந்தக் கதை வெறும் பொய்க்கதை என்பதை சுலபமாக உணரலாம்.

அரியணை ஏறி தான்ஸேனை அழைக்கும் போது அக்பருக்கு இருபதே வயது. அவர் எப்படி தன் மகளை 57 வயதான தான்ஸேனிடம் அனுப்பி இருக்க முடியும்?

 

ஆக தான்ஸேனின் வரலாறு பல மர்ம முடிச்சுகளைக் கொண்டதாகவே விளங்குகிறது.

 

ஆனால் ராகினிகளை  (ராக தேவதைகள்) அவர் உபாஸித்ததும் அந்த தேவதைகள் அவர் நாவில் நர்த்தனம் ஆடியதும் உண்மையே!

 

அக்பர் ஒரு வரலாற்று விசித்திரம் என்றால் அதில் அங்கம் வகிக்கும் தான்ஸேனைப் பற்றிய விவரங்களும் அப்படித்தான்!

*********

 

இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்! (Post No. 2457)

kambaar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 4 January 2016

 

Post No. 2457

 

Time uploaded in London :–  5-40 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

kambar2

இராமாயண வழிகாட்டி

 

இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்: கம்பர் காட்டும் இரகசிய குறிப்பு

 

ச.நாகராஜன்

 

 

மஹாகவி கம்பனின் திறமை

 

மஹாகவிகளின் மனம் ஒரு பெரும் சாகரம் போன்றது. அகன்றது. ஆழ்ந்தது. பல்வேறு நற்பொருள்களைக் கொண்டுள்ள பாற்கடல் போன்றது. அங்கு நாம் விரும்பித் தேடினால் கற்பக மரம் கிடைக்கும் காமதேனு கிடைக்கும்!

மஹாகவி கம்பனின் இராம காதை பாற்கடல் போல அமைந்த சுவை சாகரம்!

சுந்தர காண்டத்தில் ஒரு பாடல்.(நிந்தனைப் படலம் 50ஆம் பாடல்)

 

 

 

மனிசனால் அழிவா?

 

இராவணன் சீதையை அசோகவனத்தில் சந்தித்து தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துகிறான். இதனால் வெகுண்ட சீதை, “உனக்கு அழிவு காலம் வந்து விட்டது. அழியப் போகிறாய்” என்று கூறுகிறாள்.

 

கேவலமான ஒரு “மனிசனால்” தனக்குச் சாவு என்பதை நினைத்தாலே இராவணனுக்குச் சிரிப்பு தான் வருகிறது.

ஆனால் இங்கு சீதை ‘இராவணஜித்’தைப் பற்றிச் சொல்கிறாள்.

இராவணஜித் என்றால் இராவணனை வென்றவன் என்பது பொருள்.

 

இராவணனை வெல்ல இருப்பவன் இராமன் ஆயிற்றே. அப்படியானால் இராவணஜித் யார்?

 

மானுயர் இவர் என மனங் கொண்டாயோ எனின்                

கான் உயர் வரை நிகர் கார்த்த வீரியன்                    

தானொரு மனிதனாற் தளார்ந்துளா எனில்                    

தேனுயர் தெரியலான் தன்மை தேர்தியால்

 

 

பாடலின் பொருள்: இந்த இராமனை மனிதன் என்று அலட்சியமாக நினைத்தாய் எனில் (ஒரு விஷயம் சொல்கிறேன் கேள்!)

 

காட்டில் உயர்ந்து தோன்றுகின்ற மலைகளை நிகர்த்த கார்த்த வீர்யாஜுனன் பரசுராமன் என்னும் ஒரு மனிதனால் வலிமை ஒருங்கினான். அல்லவா? அந்த பரசுராமனின் வலிமையையும் ஒடுக்கிய தேன் நிறைந்த மலர் மாலையை அணிந்த இராமபிரானது தன்மையை ஆலோசித்துப் பார்!

 

இங்கு கார்த்த வீர்யார்ஜுனனைப் பற்றியும் பலராமனைப்பற்றியும் சீதை குறிப்பிடுவதை கவிஞருக்கே உரிய தனித் தன்மை  மூலம் ஒரு இரகசியக் குறிப்பை அறிவிப்பதில் கம்பன் தன் திறமையைக் காட்டுகிறான்.

 

 

கார்த்தவீர்யார்ஜுனனே இராவணஜித்

 

முன்னொரு காலத்தில் நடந்த விஷயம்!

அனைவரையும் வெல்ல வேண்டும் என்ற வெறியில் திக்விஜயம் செய்த இராவணன் மாகிஷ்மதி நகருக்கு வந்தான். அதை ஆண்டு வந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் கொண்ட மாவீரன்.

அந்த நகரத்தில் உள்ளோர்,” எங்கள் மன்னர் தமக்குரிய பெண்களுடன் நீர் விளையாட நர்மதை நதிக்குச் சென்றிருக்கிறார்” என்று கூறினர்.

உடனே இராவணன் நர்மதை நதிக்கு வந்தான். அதில் நீராடி மணலால் சிவலிங்கம் அமைத்துச் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான்.

 

 

நர்மதியின் மேற்குக் கரையில் இருந்த கார்த்தவீர்யார்ஜுனனுக்கு தனது நீர் விளையாடலுக்கு நர்மதை நதி போதுமானதாக இல்லை. ஆகவே ஐநூறு கைகளினால் ஓடுகின்ற நீரைத் தடுத்து அணை கட்டி மீதி இருக்கும் ஐநூறு கைகளைக் கொண்டு பல வித விளையாட்டுக்களைச் செய்து மகிழ ஆரம்பித்தான்.

எதிர்த்து ஓடி வரும் நீரானது இராவணன் பக்கம் வரவே தனது மணலால் ஆன சிவலிங்கம் அழிந்து விடுமே என்று ஆவேசப்பட்ட இராவணன் கார்த்தவீர்யார்ஜுனன் மீது பாய்ந்தான்.

அவனோ இதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லையே.

தன் இருபது கரங்களினால் இராவணனைப் பற்றித் தூக்கினான். இதர 980 கைகளினால் அவனைத் துன்புறுத்தியவாறே மாகிஷமதி நகர் சென்று அங்கு இராவணனைச் சிறையில் அடைத்தான்.

நடந்ததை அறிந்த விபீஷணன் ஓடோடிச் சென்று  பாட்டனாராகிய புலஸ்தியரிடம் நடந்ததைச் சொன்னான்.

உடனே புலஸ்தியர் கார்த்தவீர்யார்ஜுனனிடம் வந்தார். மத்யஸ்த பேச்சு துவங்கியது.

 

 

உனக்கு “இராவணஜித்” என்ற பட்டப்பெயரைத் தருகிறேன். அவனை விட்டு விடு என்றார்.

திக்விஜயம் செய்ய வந்தவனையே வெல்லும் பட்டம் தனக்குக் கிடைக்க இராவணனை சிறையிலிருந்து விடுவித்தான் கார்த்தவீர்யார்ஜுனன்.

 

yakshagana

இராவணஜித்தை வென்ற பரசுராமன்

 

அப்படிப்பட்ட மாபெரும் வீரன் ஒரு சமயம் ஜமதக்னி முனிவரின் ஆசிரமம் சென்று அங்கு விருந்துண்டு மகிழ்ந்தான். அங்கிருந்த பல வளங்களுக்கும் காரணம் அவரிடமிருந்த ஓமதேனு என்பதை அறிந்த அவன் அதைக் கவர்ந்து சென்றான்.

இதை அறிந்த ஜமதக்னியின் புதல்வரான பரசுராமர் வெகுண்டெழுந்தார்.

 

 

அவனுடன் போர் செய்யப் புறப்பட்டார். கார்த்த வீர்யனின் பதினோரு அக்ஷௌகினி சேனையை அழித்தொழித்து அவனது ஆயிரம் தலைகளையும் தோள்களையும் தனது கோடாலியால் வெட்டி வீழ்த்தினார். வெற்றி கொண்டார்.

சீதை இந்த வரலாறை இலேசாக ஞாபகப்படுத்தினாள் இராவணனுக்கு.

 

 

பரசுராமனை வென்ற இராமபிரான்

 

“உன்னை வென்றவனை- இராவணஜித்தை – கார்த்தவீரியனை வென்றானே பரசுராமன், அவனையும் வென்ற மாவிரன் இராமன்.

உன்னை வென்றவனை வென்றவனை வென்றவன் அவன்” – இது தான் சீதை சொன்ன சேதி!

 

 

அழகுற நான்கே அடிகளில் கம்பன் மாபெரும் வரலாற்றைச் சொல்லி தன் நயத்தையும் தான் கருப்பொருளாக எடுத்துக் கொண்ட நாயகன் நயத்தையும் காட்டுகிறான்.

கம்பன் போல் ஒரு கவிஞன் இனிப் பிறப்பானா!

*******

 

அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!(Post No. 2447)

singapore thimithi with amman face

Picture:–Singapore Mariamman Festival Fire walking

 

Written by S NAGARAJAN

 

Date: 1 January 2016

 

Post No. 2447

 

Time uploaded in London :–  7-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாக்யா ஜனவரி 2016 முதல் தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!

.நாகராஜன்

 

 Agni-pariksha-of-sita

Sita Devi’s Fire Walking

“1871ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று அமெரிக்க நகரான சிகாகோவில் ஏற்பட்ட தீ, 24 மணி நேரம் தொடர்ந்து எரிய, நகரில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இல்லங்களை இழந்தனர். 300 பேர்கள் இந்த மாபெரும் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்” – பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயின் கோர தாண்டவம் பற்றி அமெரிக்க வரலாறு

 

 

சீதா பிராட்டியை ராமன் அக்னியில் பிரவேசிக்கச் செய்ததையும் அக்னி ப்ரவேசம் செய்த சீதை கற்புக்கரசி என அக்னியால் புகழப்பட்டதையும் ராமாயணம் விளக்குகிறது.

 

தமிழகத்தில் ஆங்காங்கு மாரியம்மன் கோவில் திருவிழாக்களில்  பல நூறு ஆண்டுகளாக தீ மிதி வைபவம் நடைபெறுவதை நமது சரித்திரம் கூறுகிறது. இதில் கலந்து கொள்வோர் நெருப்புத் துண்டுகள் உள்ள பாதை வழியே பக்தியுடன் செல்வதையும் அவர்கள் கால் உள்ளிட்ட அங்கங்கள் எந்த வித பாதிப்புமின்றி இருப்பதையும் பார்த்து வியக்க முடிகிறது. இதை பூ மிதி திருவிழா என்றும் கூறுவது வழக்கம். அம்மன் தீயைப் பக்தர்களுக்குப் பூவாக மாற்றுவதாக ஐதீகம்.

 

இப்படி “ஃபயர் ஃப்ரூப்” ஆக இருப்பது சாத்தியம் தானா? பல காலமாக அறிவியல் உலகம் இதை ஆராய்ச்சி செய்து வருகிறது.

ஹிந்து இதிஹாஸங்கள் மட்டுமல்ல, உலகின் இதர மதங்களும் பல மகான்கள் தீ மீது நடந்ததைக் குறிப்பிடுகின்றன.

 

செயிண்ட் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் பாலா (1508ஆம் ஆண்டு) பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைத் தன் கைகளில் ஏந்தியவாறே தன்னை வியந்து பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம்,” தூய மனமுடன் இறைவனை வழிபடுவோரின் கட்டளைக்கு அனைத்து உயிரினமும் கீழ்ப்படியும்” என்றார்.

 

சியனா நகரைச் சேர்ந்த செயிண்ட் காதரீன் கொழுந்து விட்டெரியும் இரும்பு உலையில் கரித் துண்டுகளின் மீது முகம் படிந்திருக்க நெடு நேரம் இருந்தார். அந்தப் புனிதப் பெண்மணி நெருப்பில் இருப்பதைப் பார்த்து திகைத்தவர்கள் அவரை அப்புறப்படுத்திய போது அவருக்கு ஒரு தீக்காயமும் ஏற்பட்டிருக்கவில்லை!

 

இந்தியாவில் குற்றமிழைக்காதவன் என்று தன்னை நிரூபிக்க விரும்புவோர் கொதிக்கும் எண்ணெயில் கையை விடுவது, தீ மீது நடப்பது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை கைகளில் ஏந்துவது என இப்படிப் பலவற்றில் ஒன்றைச் செய்து தீயின் பாதிப்பு இன்றி மீண்டு தம்மை நிரபராதி என்று நிரூபிப்பது வழக்கம். இதே போல இடைக்காலத்தில் மேலை நாடுகளிலும் இந்தப் பழக்கங்கள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன.

charity-fire.jpgeast cheshire

Charity Fire Walking in East Cheshire Hospice (UK)

 

1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் மரிஸ்பர்க் என்ற இடத்தில் தீ மிதி விழா ஒன்று நடைபெற்றது. 15 மீட்டர் (அதாவது சுமார் 49 அடி) நீளமுள்ள குழியில் 12 டன் விறகு போடப்பட்டு அக்னி ஜொலிக்க 8 ஹிந்துக்களும் 4 ஆங்கிலேயரும் அந்த தீக்குழியில் வெற்றிகரமாக நடந்தனர். ஒரே ஒரு ஆங்கிலேயர் மட்டும் இரண்டு அடி மட்டுமே குழியைத் தாண்டுவதற்கு இருக்கும் நிலையில் அப்படியே கீழே விழுந்தார். உடனடியாக சமாளித்து எழுந்து நடந்தவரின் கால்களில் தீப் புண்கள் ஏற்படவே அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குழுமிய பத்திரிகையாளர்களிடம் அவர், “கூட்டத்தின் ஆரவாரம் மிகவும் அதிகமாகவே என்னால் உயர் சக்தியின் மீது மனதை ஒருமுனைப்படுத்த முடியவில்லை. அது தான் நான் விழுந்ததற்குக் காரணம்”, என்று கூறினார்.

 

 

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற மீடியமான டி.டி, ஹோம் -டேனியல் டங்ளஸ் ஹோம் – (Daniel Dunglas Home) செய்து காட்டாத அபூர்வமான அதீத உளவியல் ஆற்றல் நிகழ்வுகளே இல்லை எனலாம். அவரது பல நிகழ்ச்சிகளில் அவர், தான் “ஃபயர் ஃப்ரூபாக” இருப்பதை மட்டும் நிரூபிக்கவில்லை,  அடுத்தவரையும் அப்படி தீ பாதிக்காத தன்மையைக் கொண்டவராக அவர் ஆக்கினார், அது தான் ஆச்சரியம்!

“டையாலக்ட்ரிகல் சொஸைடி” (Diaelectrical Society) என்ற அமைப்பின் சார்பில் ஐவர் குழு ஒன்று அவரை நேரடியாக சோதனை செய்தது. ஹோம் பலரது கைகளிலும் தலைகளிலும் எரியும் கரித்துண்டுகளை வைத்தார். ஆனால் அவர்களோ தீயின் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்!

 

Daniel-Dunglas-Home-levitation

Daniel Dunglas

1869ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 17ஆம் தேதி நடந்த ஒரு அதீத உளவியல் அமர்வு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஒரு பெண்மணியின் வெண்மையான மஸ்லின் ஆடையில் ஹோம் பழுத்து எரியும் ஒரு கரித் துண்டத்தை வைத்தார். ஆடை எரியவே இல்லை. பின்னர் அங்கிருந்த மலர்களின் மீது எரியும் கரித்துண்டை வைக்க அங்கு பொசுங்கிய நாற்றம் வந்ததே தவிர மலர்களுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை. அதே அமர்வில் அங்கிருந்த ஹனிவுட் என்ற பெண்மணி மற்றும் லார்ட் லிண்ட்ஸே ஆகியோரது கையில் நன்கு சூடேறிய கண்ணாடி விளக்கைக் கையில் தர அதை அவர்கள் எந்த வித பாதிப்புமின்றி ஏந்தி நின்றனர். அப்போது தன் வாயில் ஒரு தீக்குச்சியை வைத்துக் கொண்டு அதை கண்ணாடியின் மீது ஹோம் உரச அந்தச் சூட்டினால் உடனே தீக்குச்சி பற்றி எரிய ஆரம்பித்தது.

இதே போல அருகில் யார் இருந்தாலும் அவர்கள் கையில் பழுக்கக் காய்ச்சிய நெருப்புத் துண்டுகளை கொடுப்பது அவரது வழக்கமானது.

 

 

இதனால் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் திகைத்து நின்றனர்.

உலகின் அபூர்வ மனிதரான டேனியல் டங்ளஸ் ஹோம் (பிறப்பு 20-3-1833 இறப்பு 21-6-1886) பற்றிப் பல புத்தகங்கள் எழுதுமளவு சுவையான நிகழ்வுகளை அவர் வாழ்வு கொண்டிருந்தது.

 

SirChristopher

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சர் கிறிஸ்டோபர் ரென் என்பவர் (1632-1723) பிரிட்டனின் பிரசித்தி பெற்ற கணிதமேதை, வானவியல் நிபுணர் மற்றும் சிறந்த கட்டிடக் கலை நிபுணர். விண்ட்சார் டவுன் ஹால் கட்டிட்டத்தின் உட்புறத்தை மிகவும் ஆர்வமுடன் அவர் வடிவமைத்துக் கொண்டிருந்தார். அதன் மேற்கூரையை அழகிய தூண்கள் வலுவாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்வையிட வந்த கட்டிட ஆய்வாளர்கள் போதுமான தூண்கள் இல்லை என்றும் ஆகவே கட்டிடத்தில் வலு போதுமானதாக இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் ரென்னுக்கோ தன் திறமையின் மீது அபார நம்பிக்கை. என்றாலும் கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவிக்கவில்லையே! அவர் உடனே நான்கு தூண்களை அழகுற அமைத்தார். கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவித்தனர். ஆனால் உண்மையில் அந்தத் தூண்கள் மேற்கூரையைத் தொடவே இல்லை. அழகுக்காக தொடாமல் அமைக்கப்பட்டிருந்தன. ரென் சிரித்தார். இன்றும் அந்தத் தூண்கள் அந்தக் கட்டிடத்தில் உள்ளன!

 

England, P-381a 50 Pounds, Inv1766(b)(1000)

இதே போல அமெரிக்காவின் கட்டிடக் கலை நிபுணர் ஃப்ராங்க் லாயிட் ரைட் என்பவர் (1869-1956) விஞ்ஞான முறையில் கட்டிடங்களைக் கட்டி வந்தார். அவரை பிரபல தொழிலதிபரான ஹிப்பர்ட் ஜான்ஸன் தனக்கு ஒரு வீட்டைக் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார். ஒரு நாள் அந்த வீட்டில் ஜான்ஸன் தனக்கு மிகவும் வேண்டியவர்களைக் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. மேற்கூரை வழியாகத் தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது. சரியாக ஜான்ஸன் அமரிந்திருந்த இடத்தின் மேலிருந்து சொட்டு சொட்டாகத் தண்ணீர் விழ, அவரது வழுக்கைத் தலை மீது நீர் சொட்ட ஆரம்பித்தது. விருந்தினர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்க கோபமடைந்த ஜான்ஸன் அரிஜோனாவில் இருந்த கட்டிட  ரைட்டைப் போனில் அழைத்தார். “என்ன கட்டிடம் கட்டினீர்கள். மழையில் மேற்புறம் ஒழுக, என் தலை மீதே நீர் ஒழுகுகிறது” என்று அவர் கோபமாகக் கத்தினார்.

 

 

மறுமுனையிலிருந்து அமைதியான குரலில் வந்த பதிலை விருந்தினர்கள் அனைவரும் கேட்டனர்:” அது சரி, உங்கள் நாற்காலியை நீங்கள் ஏன் சற்று நகர்த்திப் போட்டுக் கொள்ளக் கூடாது!”

*******

பிரார்த்தனை செய்வது எப்படி? (Post No. 2443)

Saint-Vallalar-Ramalinga-Adigalar

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 31  December 2015

 

Post No. 2443

 

Time uploaded in London :– 5-50 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

ஆன்மீக இரகசியம்

 

பிரார்த்தனை செய்வது எப்படி?

 

ச.நாகராஜன்

 

 kutty namaskar

மனிதனுக்கே உரித்தானது பிரார்த்தனை

 

பிரார்த்தனை செய்வது என்பது ஹிந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், புத்தம், சமணம், யூதம் உள்ளிட்ட அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் புரியும் ஒன்று.

 

மானிட குலம் முழுமைக்கும் பொதுவாக அமைந்த சிறப்பியல்புகளில் பிரார்த்தனையும் ஒன்று; முக்கியமானதும் கூட.

 

ஆனால் பிரார்த்தனையை எப்படிச் செய்தல் வேண்டும் என்பது மாபெரும் இரகசியம்.

 

எனக்குச் செல்வம் வேண்டும்; நான் புகழ் பெற வேண்டும்; எனக்கு அதிகாரம் வேண்டும்; நான் அமைச்சராக வேண்டும், எனக்கு பிள்ளை பிறக்க வேண்டும், எனக்கு நோய் நீங்க வேண்டும் என்றெல்லாம் பலரும் கோவில் உள்ளிட்ட பிரார்த்தனை ஸ்தலங்களில் பிரார்த்தனை புரிவதை அறிவோம்.

 

அவர்களின் நம்பிக்கைக்கும் பூர்வ கர்மவினைகளுக்கும் தக்கபடியும் வேண்டுகின்ற் ஸ்தலத்தில் அருள் பாலிக்கும் தெய்வத்தின் அருளுக்கும் ஏற்ப பெரும்பாலானோரது பிரார்த்தனை நிறைவேறி விடுகிறது.

 

இதனாலேயே பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாகிறது.

 

 

எப்படிப் பிரார்த்திப்பது

 

ஆனால் அருளாளர்களும் மகான்களூம் பிரார்த்தனையை சரியாகச் செய்வது எப்படி என்று கூறி அருளி இருக்கின்றனர்.

தாயுமானவர் மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்:-

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

 

மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அதுவே அவரது நிரந்தர பிரார்த்தனை.

 

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே எய்தும் பராபரமே

என்றும் அவர் அருளி இருக்கிறார்.

 

மாபெரும் ரகசியங்கள் இரண்டை மிக எளிமையாகச் சொல்லி விட்டார் அருளாளர்.

 

அனைவரின் நலனையும் வேண்டு; அனைவருக்கும் தொண்டு செய் – இதுவே நீ நலம் பெற வழி; உனக்கு நன்மை தரும் வழி.

 

vallalar2

 

வள்ளலார் கூறும் பிரார்த்தனை இரகசியம்

 

இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் ஏராளமான இரகசியங்களை நூல் வடிவிலும் பா வடிவிலும் அருளியுள்ளார். பிரார்த்தனை இரகசியம் பற்றியும அவர் கூறியுள்ளார்.

பிரார்த்தனை என்ற தலைப்பில் அவரது அருள் மொழிகள் இதோ:-

 

“ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்:

 

 

“பாதி இரவி லெழுந்தருளிப் பாவியேனை யெழுப்பியருட்  ஜோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை  ஓதிமுடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே

        (6ஆம் திருமுறை  – பக்கம் 129)

என்பதே பிரார்த்தனையாகும்.

 

 

தான் பெற்ற பெரும் பேற்றை நெடும் பேறு என்று கூறும் அவர் அதை அனைத்து மக்களும் பெற வேண்டுவேனே என்கிறார்.

 

இது தான் உண்மையான பிரார்த்தனை என்னும் மாபெரும் இரகசியத்தையும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றார்.

“சர்வே ஜனா சுகிநோ பவந்து                       

“லோகாஸ் ஸமஸ்தா சுகிநோ பவந்து

 

என்று காலம் காலமாக மகான்கள் சொல்லி வருகின்றனர்.

அனைவரின் நலனுக்குமாக அருள் வேண்டுவதே பிரார்த்தனை; அதைச் செய்யும் போது நமது நலன்களும் தாமாகவே கூடி விடும்.

 

இறைவனின் இந்த அருள் ‘மெக்கானிஸம் இரகசியமான ஒன்று.

 

அதைத் தாயுமானவர், வள்ளலார் போன்றோர் நமக்காக எளிய தமிழில் “உடைத்துப் போட்டுத் தருகின்றனர்.

ஆக உண்மையான பிரார்த்தனை எது என்பதை அறிந்த சந்தோஷத்தில் கூறுவோம்:

 

 

சர்வே ஜனா சுகிநோ பவந்து

 

லோகாஸ் ஸமஸ்தா சுகிநோ பவந்து

 

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

 

********