சம்ஸ்க்ருதம் பற்றிய இரண்டு அரிய செய்திகள்! (Post No.6988)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 19 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 16-25

Post No. 6988

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

பாகிஸ்தானில் பிறந்தவர் பாணினி

உலகமே வியக்கும் வண்ணம் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர் பகவான் பாணினி. இவர் எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலைக் கண்டு உலகமே வியக்கிறது. காரணம் என்னவெனில் ரத்தினச் சுருக்கமான சூத்திரங்கள்! ஒரு எழுத்து கூட வீணாகப் பயன்படுத்தாத நூல். இதை எழுதிய பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் பிறந்தார். அவர் பிறந்த சாலாதுரா இப்போது பாகிஸ்தானில் ராவல்பிண்டிக்கு அருகில் இருக்கிறது 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அது இந்து பூமியாக இருந்தது. அவர் எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்). அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய காத்யாயனர் , பாணினி இலக்கண நூலுக்கு  ஒரு உரைநூல் எழுதினார். அதுவும் ரத்தினச் சுருக்கமான நூல்! அதை வ்யாகரண வார்த்திகா என்று அழைப்பர்.

அந்த உரைகாரர் தென்னாட்டைச் சேர்ந்தவர்.ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினான் என்று உளறுவோருக்கு இது செமை அடி கொடுக்கும். பாகிஸ்தான் பகுதியில் நூல் எழூதியவருக்கு தென்னாட்டுக் காரர் உரை. அதுவும் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்!.

இதைவிட அதிசயம்- இந்த இரு நூல்களுக்கும் மாபெரும் உரை கண்டார் பதஞ்சலி. அந்த நூலுக்குப் பெயர் மஹா பாஷ்யம். உலகிலேயே மிகப்பெரிய உரைநூல்! அவர் பிறந்தது பாட்னா (பீஹார்) என்றும் தென்னாடு என்றும் கருத்து உளது. அவர் வாழ்ந்ததோ 2200 ஆண்டுகளுக்கு முன்னர்.

ஆக எங்கோ ஒருவர் எழுதிய இலக்கண நூலுக்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்தவர்கள் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே உரை கண்டனர் என்றால் ‘ஏக பாரதம்’ என்னும் கொள்கைக்கு மேலும் ஒரு சான்று தேவையா?

2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழி பாகிஸ்தான் உள்ள வடமேற்கு இந்தியா முதல் தென் குமரி வரை பரவி இருந்தது (கோவலன் ஸம்ஸ்க்ருதச் சுவடியைப் படித்து ஒரு பார்ப்பனிக்கு உதவிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.)

பேரழகி தமயந்தியை மணக்கப் போட்டா போட்டி!

இன்னும் ஒரு அதிசயச் செய்தி இதோ! நள தமயந்தி கதையைக் கூறும் நூல் நைஷதீய சரித்ரம். அதை 1100 ஆண்டுகளுக்கு முன்னர் புலவர் ஸ்ரீஹர்ஷ எழுதினார். அதில் பத்தாவது காண்டத்தில் ஒரு அழகான பாடல் வருகிறது. தமயந்தியின் ஸ்வயம்வரத்தை அவரது தந்தை பீமன், தலைநகரான குண்டினபுரத்தில் ஏற்பாடு செய்து 56 தேச ராஜாக்களுக்கும் செய்தி அனுப்பி இருந்தார். மன்னர்கள் மட்டுமின்றி தேவலோக நாயகர்களான இந்திரன் மித்திரன் வருணன், வாயு, அக்னி, யமன் ஆகிய அனைவரும் பேரழகி தமயந்தியை மணக்க ஆசைப்பட்டு மாற்றுருவில் வந்தனர். அவர்களுக்கு மன்னர் பீமன் மாபெரும் வரவேற்பு அளித்தார்.

அப்போது எல்லா மன்னர்களும் ஒருமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நாம் எல்லோரும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் பேச வேண்டும்; நம்முடைய வட்டார மொழியில் பேசினால், தமயந்தி நாம்  யார், எந்த தேசம் என்று கண்டு பிடித்துவிடுவாள். அவள் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்ற பெரிய அறிவாளி. ஆகையால் நாம் ஸம்க்ருதத்தில் பேசுவோம்.”

அக்காலத்தில் நாடு முழுதும் ஸம்ஸ்க்ருதம்தான் பொது மொழி என்பதை இது காட்டுகிறது. வட இமயம் முதல் தென் குமரி வரை ஸம்ஸ்க்ருதம் பரவி இருந்தது. மன்னர்கள் அதைப் பேசினர். ஸம்ஸ்க்ருதம் பேச்சு மொழி இல்லை என்று உளறிக்கொட்டிக் கிளறி மூடும் அறிவிலிகளுக்கு நெத்தியடி, சுத்தியடி, செமை அடி கொடுக்கிறார் புலவர் ஹர்ஷ. இதோ பத்தாம் காண்டம் 34ம் ஸ்லோகம்–

அந்யோன்ய பாஷாணாவபோத பிதே ஸம்ஸ்க்ருத்ரிமாபிர் வ்யவஹாரவஸ்து

திக்ப்யஹ சமதேஷு ந்ருபேஷு வாக்பிஹி சௌவர்க வர்கோ ந ஜனைர் அசிஹ்னி.

இந்த ஸ்லோகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்கூட 56 தேச மன்னர்களும் ஸம்ஸ்க்ருதத்தில் பேசியதைக் காட்டுகிறது.

இந்த இரண்டு அற்புதச் செய்திகளை நான் அடையாறு நூலக டைரக்டர் டாக்டர் ஆர். சங்கர நாராயணன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் படித்தேன்.

–subham–

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்! (Post No.6975)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com


 Date: 4 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –7-11

Post No. 6975

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்திற்கு ச.நாகராஜன் அளித்த பேட்டி

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!

ச.நாகராஜன்

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சுதந்திர தினத்தையொட்டி 14-8-2019 அன்று காலை 10 மணிக்கு ஒரு விசேஷ நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.

இந்தியா குறித்து பெருமிதம் கொள்ளக்கூடிய விஷயங்கள் யாவை என்று பேட்டி எடுத்தவர் கேட்க அதற்கு ச.நாகராஜன் அளித்த பதில் ஒலிபரப்பப்பட்டது.

அன்பர்களுடன் அந்த உரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் :

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். 81.5 கோடி மக்கள் வாக்காளர்களாக இங்கு உள்ளனர்.

உலகின் அதி இளமையான நாடு இந்தியா தான். சுமார் 130 கோடி என்று உள்ள இன்றைய ஜனத்தொகையில் சுமார் 60 கோடி பேர்கள் 25 வயது முதல் 29 வயது வரை ஆன இளைஞர்களே. ஆக இளைஞர்கள் அதிகம் கொண்ட ஒரே நாடாக இந்தியா இலங்குகிறது.

இந்த இளமைத் துடிப்புடன் அறிவியலில் அது பாய்ச்சல் போட்டு முன்னேறுகிறது.

செவ்வாய் நோக்கிய பயணத்தில் தனது முதல் முயற்சியிலேயே அது வெற்றி பெற்றது குறிப்பிடத்தகுந்த ஒரு பெருமையான விஷயம்.

மங்கள்யான் -1 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. ஆசியாவில் முதலாவதாக செவ்வாய்க்குக் கலம் அனுப்பிய நாடு; உலகில் நான்காவதாக அனுப்பிய நாடு என்ற பெருமை நம்மைச் சேர்கிறது.

5-11-2013 அன்று  செவ்வாயை நோக்கி நமது கலம் கிளம்பியது. சோவியத், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று நாடுகளுடன் சேர்ந்து விட்டது இந்தியா இந்த செவ்வாய் பயணத்தின் மூலமாக.

அடுத்து சந்திரயான் – 1 22, அக்டோபர் 2008இல் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. முதன் முதலாக சந்திரனில் நீர் இருக்கிறது என்ற செய்தியை இந்தக் கலத்தின் மூலமா 2009ஆம் ஆண்டு கண்ட நமது விஞ்ஞானிகள் அதை உலகிற்கு அறிவித்தனர்.

இதைச் சரிபார்க்கத் தனது கலத்தை ஏவிய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அது உண்மையே எனக் கண்டு வியந்து அதை உலகிற்கு அறிவித்தது.

சந்திரனுக்குக் கலம் அனுப்பியதன் மூலமாக அமெரிக்கா, சோவியத், சீனா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியா சேர்ந்து விட்டது.

இப்போது சந்திரயான் – 2 விண்ணில் 22 ஜூலை 2019 அன்று ஏவப்பட்டுள்ளது. இதில் உள்ள விக்ரம் என்ற லேண்டர் (Lander)  செப்டம்பர் முதல் வாரத்தையொட்டி தரை இறங்கி அனைத்தையும் சரிபார்த்த பின்னர் ப்ரக்யான் என்ற நமது ரோவர் சந்திரப் பரப்பில் ஊர்ந்து செல்லும்; ஆய்வுகளை நடத்தும். இது பெருமைக்குரிய ஒரு பெரிய விஷயம்.

விண்ணில் பறக்கும் ஒரு விண்கலத்தை மீண்டும் தேவையெனில் தரையிறக்கும் ஸ்பேஸ் காப்ஸ்யூல் ரிகவரி எக்ஸ்பெரிமெண்டையும் (Space Capsule Recovery Experiment) இந்தியா செய்து வெற்றி பெற்றிருக்கிறது.

ஒரே ராக்கெட்டில் 104 சாடலைட்டுகளை விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்திருக்கிறது. பல நாடுகளும் தங்கள் சாடலைட்டுகளை விண்ணில் ஏவ இந்தியாவை நாடி வருகின்றன.

அடுத்து உலகின் பொறியியல் வல்லுநர்களில் அதிகமான பேரை உருவாக்குவது இந்தியாவே என்பது ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம்.

அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் இவர்கள் முன்னணியில் நிற்கின்றனர்.

இதற்குச் சான்றாக மல்டி நேஷனல் கம்பெனிகளையும் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் தலை சிறந்த கம்பெனிகளையும் வழி நடத்தும் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டலாம்.

Microsoft, Google,Pepsico,AdobeSystem, Mastercard உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்க்ள் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கின்றனர்.

இந்தியா உலகின் மூன்றாவது பலம் பொருந்திய இராணுவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் எந்த ஒரு நாட்டையும் அது தோன்றிய காலத்திலிருந்து தாக்கியதில்லை, ஆக்கிரமித்ததில்லை என்பது மனதில் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம்.

தற்காப்புக்கென இருக்கும் நமது ராணுவத்தை ஐ.நாவின் அமைதி காக்கும் படையிலும் நமது நாடு ஈடுபடுத்தியுள்ளது.

அதிக துருப்புகளை ஐ.நாவின் பணிக்கென அனுப்பிய இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இலங்குகிறது.

தகவல் தொடர்பில் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதை நிரூபிப்பது நமது இன்ஸாட் அமைப்பு. (Insat System).

உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு நமது விஞ்ஞானிகள் பெரிதும் காரணமாக அமைந்திருக்கின்றனர்.

சர் சி.வி.இராமன், ஜெகதீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், சீனிவாச இராமானுஜன், எஸ்.சந்திரசேகர், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு அறிவியல் வளர்ச்சியில் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

இந்தியாவின் கும்பமேளா திருவிழா உலகின் ஒரு அதிசயம்.  குறிப்பிட்ட நாட்களில் தாமாகவே ஒருங்கு சேர்ந்து வழிபட்டு அமைதியாகத் தாமாகவே கலைந்து செல்லும் பெரும் மக்கள் திரளை இது போல உலகில் வேறெங்கும் காண முடியாது.

இது மட்டுமல்ல, பொழுது போக்குத் துறையில் உலகில் மிக அதிகமாக திரைப்படங்களைத் தயாரித்து வழங்குவது இந்தியாவே.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட நாடு வெகு விரைவில் வல்லரசாகத் திகழப்பொவது மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் நல்லரசாகவும் திகழப்போகிறது.

இதில் வாழ்வது பெருமைக்குரிய ஒரு விஷயம். வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!!

நன்றி, வணக்கம்.

***

–subham–

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் (Post No.6958)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 31 AUGUST 2019


British Summer Time uploaded in London – 13-53

Post No. 6958

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

தமிழ்நாட்டில் சங்க காலம் முதல் தற்காலம் வரை நடந்த போர்களை 1968ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டு கையேடு பட்டியலிட்டுள்ளது.இதோ விவரங்கள்:–

மன்னர் வருகிறார்! கும்பகோணத்தில் பலத்த பாதுகாப்பு; மதுரையில் 3 நாள் தங்கல் (Post 6947)

WRITTEN  by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 21-50

Post No. 6947

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)

WRITTEN BY  LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 24 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-32 am

Post No. 6925

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

–subham–

கோவில் செங்கலில் வெளிநாட்டுக்காரர் உருவம் (Post No.6919)

Pictures of Heliodorus Pillar in Madhya Pradesh

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 23 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 8-13 am

Post No. 6919

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

brick with foreigner’s face, Singauli, M.P,

foreigner face in Thanjavur Temple

இலங்கைக்கு இலவச சுற்றுலா!- பகுதி 1 (Post No.6917)

COMPILED BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 22 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 21-15

Post No. 6917

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

1951-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ் விழா மலரில் இலங்கைத் தமிழர் பற்றி நல்ல, அருமையான கட்டுரைகள் உள்ளன. அதில் ஒன்று இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலங்கள் பற்றியதாகும். நாற்பதுக்கும் மேலான சுற்றுலாத் தலங்கள் வரிசைக் கிரமத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரையை எழுதியவர்-முதலியார், குல.சபாநாதன்

அவர் குறிப்பிடும் 40+++ இடங்கள்:-

கதிர்காம முருகன் கோவில்

தெய்வந்துறை

முன்னேஸ்வரம்

சீதை தொடர்புள்ள புனிதத் தலங்கள்:-

அசோகவனம்

நுவரெலியா மலைப் பிரதேசம்

ஹக்கல பூந்தோட்டம்

ராவணன் மனைவியின் ஊர் மாந்தை

திருக்கேதீஸ்வரம்

மருத மடு கத்தோலிக்க ஆலயம்

தலைவில்லு சந்தனமாதா கோவில்

இலங்கையின் பழைய தலைநகர் அநுராதபுரம்

மிஹிந்தலை

தம்புல்ல குகைக் கோயில்

சிகிரியா குகை ஓவியம்

பொலன்னருவ

கல்விகாரை

மின்னேரி

ஸ்ரீபாதமலை 7353 அடி உயரம்- எல்லா மதத்தினரும் வணங்கும் மலை.

இரத்தினபுரி

கண்டி திருவிழா

தாலத மாளிகை/ புத்தர் பல்

மட்டக்களப்பு- பாடும் மீன்கள்

அமிர்தகழி

கொக்கட்டுச்சோலை

திருக்கோயில்

கல் ஓயா- கல் முனை

கண்ணகி வழிபாடு

திருகோணமலை

கன்னியாய் வெந்நீர் ஊற்று

யாழ்ப்பாணம்

சிங்கை நகர்

நல்லூர் கந்தசாமி கோயில்

புத்தூர்

வல்லிபுரம்

மாவிட்டபுரம்

வல்வெட்டித்துறை

நகுலேஸ்வரம்

கிழாலி

நயினா தீவு

கொழும்பு (தலைநகர்)

விபீஷணன் ஆலயம், களனி கங்கை

to be continued…………………..

பல்லவராயன் பட்டம் பெற்ற செய்யான்! (Post No.6899)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 19 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-46 am

Post No. 6899

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

all maps are nearly 100 years old.

—– subham—

சுதந்திரப் போராட்டம் பற்றிய சில ரகசியங்கள்! (Post No.6880)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

 Date: 15 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  6-29 AM

Post No. 6880

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சுதந்திரப் போராட்டம் பற்றிய சில ரகசியங்கள்!

ச.நாகராஜன்

இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி வெளி வராத ரகசியங்கள் ஏராளம் உண்டு. அண்ணல் காந்திஜியின் அறவழி நின்று போராட்டம் நடத்திய உத்தமர்கள் தங்களைப் பற்றி வெளியில் சொன்னதும் இல்லை; அவர்கள் விளம்பரத்தை விரும்பியதுமில்லை.

இந்த நிலையில் எனது தந்தையார் தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் எப்படி சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார், அவர் எந்த சிறையில் யாருடன் எப்போது சிறைவாசம் அனுபவித்தார் என்பதெல்லாம் குடும்பத்தினரான எங்களுக்கே ஒன்றும் தெரியாது. கேட்டாலும் ஒரு புன்சிரிப்பு தான் பதிலாக வரும்!

சுதந்திர பொன் விழா ஆண்டு வந்தது. டி.வி.எஸ் நிறுவனத்தின் செய்தி ஏடான ஹார்மனியின் ஆசிரியரும் அந்த நிறுவனத்தின் பொது தொடர்பு அதிகாரியுமான திரு பி.வெங்கட் ராமன் என்னைச் சந்தித்து தந்தையாரைப் பற்றிய கட்டுரை வேண்டும் என்று கேட்டார். இத்துடன் மட்டுமல்லாமல் ராஜாஜி,சுப்ரமண்ய சிவா, வைத்யநாத ஐயர் ஆகியோரின் பேரன்மார்கள், சேலம் சி.விஜயராகவாச்சாரியாரின் கொள்ளுப் பேரன், தினமணி ஜோதிடர் திரு ரெங்கநாத ஜோஸ்யரின் பேத்தி ஆகியோரும் டி.வி.எஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அவர்களிடமும் கட்டுரை பெறப் போவதாகச் சொல்லி ஹார்மனியின் இதழ் சுதந்திர தின பொன்விழா ஆண்டின் சிறப்பு மலராக வெளி வரப் போகிறது என்றும் கூறினார்.

இந்தக் கருத்தை முன் வைத்து என் தந்தையாரை அணுகிய போது அவர் மறுப்புக் கூறாமல் தான் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டதையும் ராஜாஜி, காமராஜர், சங்கு சுப்ரமணியம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோருடன் வேலூர் ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்ததையும் கூறியதோடு அதைத் தன் கைப்பட எழுதியும் கொடுத்தார்.

சிறப்பு மலர் சிறப்பாக அனைத்து வீரர்கள் பற்றி இதுவரை அறிந்திராத ரகசியமாகவே இருந்த செய்திகளுடன் வந்தது.

     1998 ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் வந்தது. மதுரை எல்லிஸ் நகர் மைதானத்தில் கொடி ஏற்றப்பட்டது.

அப்போது எனது தந்தையார் ‘கொடி ஏற்றியாச்சா’ என்று கேட்டார்.

ஆம் என்றவுடன் அவர் ஆவி அமைதியாகப் பிரிந்தது.

சுதந்திரப் போரில் பங்கு கொண்ட சுத்தமான ஒரு வீரரின் முடிவு கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு வீர முடிவுடன் முடிந்தது.

இப்படி எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் ஊட்டும் நூற்றுக் கணக்கான வீரர்கள் பற்றிய சரிதங்கள் தொகுக்கப்பட வேண்டும். நமக்குச் சுதந்திரம் வாங்கித் தர சொல்லொணா துன்பங்கள் பட்ட அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதோடு அவர்கள் நினைவையும் காத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தானே!

ஹார்மனி ஜூலை-ஆகஸ்ட் 1997 இதழில் வெளிவந்த கட்டுரையை கீழே தந்துள்ளேன்:

–subham–

ஆகஸ்ட் 15ம் அரவிந்த மகரிஷியும்! (Post No.6778)

Written by  London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 14 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  18-12

Post No. 6778

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

அரவிந்த மஹரிஷி பிறந்த தினம் ஆகஸ்ட் 15.

ஸ்ரீ அராவிந்த கோஷ் 15-8-1872 – 5-12-1950)

இந்திய சுதந்திர தினத்துக்கு இரண்டு சிறப்பு.

சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம்

இந்திய தத்துவ ஞானி, யோகி, கவிஞர், வேத விற்பன்னர்,சுதந்திரப் போராட்ட வீரர்,

பத்திரிகையாளர், புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரம ஸ்தாபகர்.

அரவிந்த மகரிஷி பற்றி பாரதிதாசன் கவிதை சக்தி மாலரில் வெளியானதை இணைத்துள்ளேன்

Tags அரவிந்தர், ஆஸ்ரமம், புதுச்சேரி, பாரதிதாசன் கவிதை, ஆரோவில், அன்னை

–subham–