அக்பரின் மந்திர சக்தியும் அவர் நிகழ்த்திய அற்புதங்களும் (Post No.5243)

WRITTEN by London swaminathan

Date: 21 JULY 2018

 

Time uploaded in London – 16-48  (British Summer Time)

 

Post No. 5243

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மொகலாய மன்னன் அக்பர் வாழ்க்கையில் சுவையான நிகழ்வுகள்!

 

அபுல் பாசல் (1551 – 1602 பொது ஆண்டு) என்பவர் அக்பர் என்ற மொகலாய மன்னரின் அரசவையில் உயர் அதிகாரியாக இருந்தவர். அவர் அக்பரின் வாழ்ககையை மூன்று புஸ்தகங்களாக எழுதினார். அந்தப் புஸ்தகத்தின் பெயர் அக்பர் நாமா; அதன் மூன்றாவது புஸ்தகத்துக்கு அயினி அக்பரி என்ற பெயரும் உண்டு.

அவருடைஅய முழுப் பெயர் அபு இல் பாசல் இபின் முபாரக். அவர் அக்பர் அரசவையின் நவரத்னங்களில் ஒருவர். அவருடைய சகோ தரர் பைஜி (Faizi), அக்பரின் ஆஸ்தானப் புலவர். அவர்கள் புஸ்தகங்களை பாரஸீக மொழியில் யாத்தனர்.

 

இத்துடன் நூற்றாண்டுக்கு முன்னர் அரும்பொருட் திரட்டு என்னும் புஸ்தகத்தில் மதுரை எம்.கோபாலய்யர் மொழிபெயர்த்த கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

 

கட்டுரையின் முக்கிய அம்சங்கள் இதோ!

 

  1. அக்பர், மக்களை சந்தோஷப்படுத்துபவனே ராஜா என்னும் கொள்கை உடையவர். எப்போதும் சந்தோஷமாக இருப்பவர். ஈஸ்வரனுக்குத் திருப்தியுடைய காரியங்களையே செய்பவர்.

 

2.அகம்பாவமோ கோபமோ இல்லாதவர்; ஆனால் பேரறிவு உடையவர். அவரைப் பார்ப்பவர்கள் சூரியனுக்கு முன்னால் நாம் மின்மினிப்பூச்சி போல என்று நினைப்பர்.

 

3.இரவு தூங்குவதற்கு முன்னர், விநோதக் கதைகள் சொல்லச் சொல்வார். எந்த மதத்தையும் தூஷிக்க மாட்டார். கேலி கூட பேச மாட்டார்.

 

4.நான்கு நேரங்களில் ஆத்ம சோதனை செய்து கொள்ளுவார். சூரிய உதயத்துக்கு முன்னால், சூரியன் உச்சிக்கு வரும் வேளை, படுகடலில் சூரியன் பாயப்போகும் நேரம், நள்ளிரவு 12 மணி ஆகிய நேரங்களில் தான், செய்வது சரியா இல்லையா என்று சிந்திப்பார்.

 

5.அவர் பெரும்பாலும் மாம்ஸ போஜனத்தைத் தவிர்ப்பார்; பல மாதங்களுக்கு மாம்சத்தைப் பார்க்காமலும் இருப்பார். தீபங்களை இறைவனின் ஜோதி வடிவம் என்று கருதி வழிபடுவார்

 

6.பெரும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அளிக்கக் கூசுவார்.

 

7.அவருக்கு சிற்றின்பத்திலும் ஸ்த்ரீலோலனத்திலும் விருப்பமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு முறை மட்டுமே உணவு உண்பார்.

 

8.நித்திரை செய்யும் காலம் வெகு அற்பம்; இராப்பகலாக ராஜ்ய காரியத்திலும் பகவத் தியானத்திலுமே காலம் கழிப்பார்

 

9.தத்துவ சாஸ்திர விற்பன்னர்களும் மகமதிய சூபி (sufi) மஹான்களும் தங்கு தடையின்றி உள்ளே நுழைவர். அவர்க ளை மரியாதையுடன் ஆஸனத்தில் அமர்த்தி விவாதிப்பார்.

 

10.பழைய சம்பிரதாயங்களை முரட்டுத்

தனமாகப் பின்பற்றாமல் நூதனமாக மாற்றுவார்; இளைஞர்களும் அவற்றைப் பின்பற்றுவர். அதற்குத் தக புதிய சட்டங்களை இயற்றுவார்.

 

11.இராக்கலத்தில் இலாகா வாரியாக உத்தரவுகளைப் போடுவார். விடிவதற்கு ஒரு ஜாமம் இருக்கையில் சகல வாத்ய விற்பன்னர்களும் வந்து இன்னிசை விருந்து அளிப்பர். அதைக் கேட்டுவிட்டு சூர்யோதய காலத்தில் சன்மானம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்வார். அவருடன் கூர்னிஷ் தொ   ழுகையில் ஈடுபட்டுவிட்டுப் போவர்

12.பின்னர் பத்தினிமார்களும், மங்கள விலாஸ காதலிகளும் வந்து தண்டம் சமர்ப்பிப்பார்கள். அன்போடு எல்லோருடைய நலத்தையும் விசாரிப்பார்.

 

13.ஒவ்வொரு நாளும் இரண்டு முறை மக்களுக்கு தரிசனம் கொடுப்பார்; காலைக் கடன்களை முடித்தவுடன் ‘ஜரோகா’வில் அமர்ந்து எல்லா திகாரிகள், துருப்புகளையும் சந்தித்து நலன் விசாரிப்பார்.

 

  1. காலை ஒன்பது மணிக்கு ‘தவலத் கானா’வில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார். யாரும் சிபாரிசு இல்லாமல் நேரே சென்று மனுக் கொடுக்கலாம். உடனே படித்து குறை தீர்க்க உத்தரவிடுவார்.

 

15.சக்கரவர்த்தி கொலு கூட்டுவதானால் பேரிகை மூலம் அறிவிப்பர். அப்போது எல்லோரும் கூடுவர்; தோட்டி முதல் தொண்டைமான் வரை வந்தவுடன் அந்தஸ்துக்கு ஏற்ப வரிசையில் நிற்பர். தட்டார், கொல்லர், நெசவாளர் எல்லோரும் கூர்னீஷ் தொழுகைக்கு தயாராக இருப்பர். உயர் அதிகாரிகள் அறிக்கை சமப்பிப்பர்.

 

  1. மல்யுத்தம், சிலம்பம் முதலியன நடக்கும்; கூர்னீஷ், தஸ்லீம் என்ற இரண்டு வகையில் மக்கள தொழுவர்.
  2. தஸ்லீம் என்பது தன் பிதா முன்னிலையில் தான் தெரியாமல் செய்த வணக்கம் என்றும் அதைத் தன் பிதா பாராட்டியவுடன் அதுவும் வழக்கத்தில் வந்தது என்றும் அக்பர் கூறுவார்.

 

18.அக்பரின் தத்துவ நம்பிக்கையை அபுல் பாஸல் விவரிக்கிறார்

 

19.அக்பருக்கு சிறு வயது முதலே அற்புத சக்திகள் உண்டு என்றும் இது அனைவரும் அறியும்படி வெளிப்படும் என்றும் அபுல் பாஸல் கூறுகிறார்.

 

20.சிலருக்கு தத்துவ விசாரம் சொல்லி கை தூக்கி விடுவார். சிலருக்கு அவர் கொள்கைக்கு விரோதமாகப் பேசுவார். சிலருக்கு அவரவர் இஷடப்படி பாடம் சொல்லுவார்.

 

21.சக்ரவர்த்திக்கு பல சிஷ்யர்கள் உண்டு; ஒரு மண்டலம் சநயாசிகளுக்கு சுஷ்ருசை செய்து கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் இவருடைய சந்நிதி விஷேஷத்தாலும், ஸ்பர்சத்தாலும், போதனா முறையாலும் உடனே ஞானம் பெறுவர். இவரை சந்திக்கும் நானாவித தொழிலாளர்களும் பரவித்தை ஞானத்துடன் திரும்புவர்.

 

22.பலரும் தெய்வத்துக்குப் பதிலாக இவருக்கு பிரார்த்தனையை சமர்ப்பிப்பர். அவர்கள் காணிக்கையாக வைத்திருந்த பொருள்களை இவர் முன் வந்து கொட்டுவர். மன்னர், ராஜ்யத்தைப் பார்க்கவும் வேட்டையாடவும் செல்லுகையில்  அதுவரை மன்னருக்குக் காணிக்கையாக வைத்திருந்த காணிக்கைகளை, தொலை தூர கிராம மக்கள் அவரிடம் சமர்ப்பிப்பர்.

 

23.சக்ரவர்த்தி ஒரு மஹான்; அவர் சித்த புருஷர்; வியாதி உடையோர் இவரைப் பிராத்தித்து சுமகமடைவர்; பிள்ளைப்பேறு இல்லாதோர் அக்பரிடம் பிராத்தித்து மகப்பேறு அடைந்தனர். விரோதிகள் இவர் முன்னிலையில் வந்து பரஸ்பர மித்திரர் ஆயினர். யார் யார் என்ன வேண்டினரோ அவற்றையெல்லாம் அடைந்தனர்.

 

24 அவர் அற்புத சக்திகள் உடையவர். ஆகையால் மக்கள், ஜலத்தைக் கொண்டு வந்து மந்திரித்துத் தர வேண்டுவர். அவர் அந்த நீர்க்குடத்தை வாங்கி, சூரிய புடமிட்டு, மூன்று முறை வாயால் ஊதிக் கொடுப்பார். அகபர் மந்திரித்துக் கொடுத்த ஜலத்தால் பலனடந்தோர் பலர். ஆனால் ஞான த்ருஷ்டியால் பார்த்து யாருக்கு ஊதித் தர வேண்டுமோ அவருக்கு மட்டுமே அளிப்பார்.

 

  1. ஒரு முறை ஒரு துறவி வந்து மஹாத்மாவே என் இதயத்தில் ஏதேனும் நல்ல பொருள் இருக்குமானால் அதை வெளிக் கொணர்ந்து எனக்கருள் புரிக என்று வேண்டினான். அகபரும் அப்படியே செய்தார். அவன் வாயில்படிக்குச் செல்லுகையிலேயே மூர்ச்சையாகி சமாதி ஆகி விட்டான்.

 

26 யாரேனும் உபதேசம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்? நானே கற்க வேண்டி உளதே என்பார். அதையும் மீறி அவன் போகாமல் காத்திருந்தால் சூரியன் உச்சிக்கு வருவதற்குள் அவனுக்கு உபதேசம் சொல்லி கடைத் தேற்றுவார்.

 

27.அக்பரின் அற்புத சக்திகளைக் கண்டவர்கள் அவரைத் தெய்வமாகக் கருதி வணங்கினர்.

 

  1. இவரிடம் உபதேசம் பெற வருபவன் தலைப் பாகையைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என் அகம்பாவம் தீய குணங்களையெல்லாம் விட்டுவிட்டேன் எனக்கருள்க என்றவுடன் அவரே தலைப் பாகையை அவன் தலையில் வைத்து ஒரு தங்க காசைக் கையில் கொடுத்து உனக்காக பகவானைப் பிரார்த்தித்து விட்டேன் என்பார்.

 

29.அவர் வெகு வினயத்தோடு தத்துவ சாஸ்திரங்களைப் பெரிய ஞானிகளோடு விவாதிப்பார். அக்பருடைய அத்தனை தெய்வீக லீலைகளையும் எழுத இங்கு இடமில்லை. நான் மட்டும் உயிருடன் இருந்தால் அவைகளை தனி புஸ்தகமாகவே எழுதுவேன்.

 

30.பல ஒழுக்க விதிகளையும் அக்பர் போதித்தார்; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ‘பகவானே பெரியவர்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்ல வேண்டும் அதைக் கேட்பவன் ‘பகவானின் மஹிமையே மஹிமை’ என்று பதில் சொல்ல வேண்டும்; ஒவ்வொருவனும் பிறந்த நாளன்று விருந்து கொடுக்க வேண்டும்; சக்திக் கேற்ப பிச்சையிட வேண்டும்

 

  1. ஒவ்வொருவரும் மாமிசம் புசிப்பதைக் கைவிட வேண்டும் அல்லது புனித தினங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும் (இப்படித் தவிர்த்தால் எவரும் 45 நாட்களுக்கு மேல் மாமிசம் சாப்பிட முடியாது)

 

  1. தானே கொன்ற எந்தப் பிராணியையும் யாரும் சாப்பிடக்கூடாது. வேடர்கள், கசாப்புக் கடைக்காரர்களுடன் யாரும் உண்ணனக் கூடாது. கர்ப்ப ஸ்த்ரீக்கள், மலடிகள், பருவமடையாத கன்னிப் பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படிப் பல ஒழுக்க விதிகளை அக்பர் பிரபலப் படுத்தினார்”.

இவ்வாறு அபுல் பாஸல்,  அயினி அக்பரியில் செப்புகிறார்.

 

 

 

 

 

 

 

 

 

–சுபம்–

 

Durga, Agastya, Tamil and Sanskrit in Indonesia! (Post No.5239)

COMPILED by London swaminathan

Date: 20 JULY 2018

 

Time uploaded in London – 13-30  (British Summer Time)

 

Post No. 5239

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

I have collected some interesting details from three research books about

1.Durga in Indonesia

2.Agastya in Indonesia

3.Sanskrit, Tamil & Javanese inscriptions

4.Pandava hero Bhima

5.rare pictures from 100 year old book

Statues of Goddess Durga and sage Agastya are found more in Indonesia than any other country in South East Asia.

 

All towns with the Candi in its name are actually Durga shrines.

Goddess Durga is found in two forms in Java and Bali Island. She is portrayed as Mahisasura- mardini (Durga slaying the Buffalo Demon) and Durga in bas-reliefs in temples.

 

Historical places in Central Java are

Candi Borobudur

Dieng Plateau

Mount Lawu

Mount Merapi

 

Sites with Durga Statues are

Gedong Songo Complex

Candi Prambanan

Candi Sambisari

Candi Sukuh

Durga Sites are dated from Fifth Century CE CE to 1527 CE. Durga worship was there for 1000 years till Muslim invaders occupied the places.  Now Hindus are isolated in Bali.

 

 

Beginning of Vedic Religion in Indonesia

Earliest inscriptions show Brahmins presence in Indonesia from 350 CE.

According to seven Kutai (Borneo) inscriptions of Mulavarman, he performed a yaga called Bahu-Suvarnaka (gold Donation in great measure). He gave the brahmins gold and 20,000 cows. This happned in the sacred ground of Vaprakesava. The Brahmins who participated in the fire sacrifices immortalized the occasion by setting Seven Yupa Pillars (sacrificial Posts). 2000 year Sanagm Tamil literature also refer to Yupa pillars during Pandya, Choza and Chera periods in Tamil Nadu.

 

Mulavarman’s father was Asvavarman. Mulavarmans Sanskrit inscriptions are in ‘anustubh’ and ‘arya’ metres. They are in Pallava script. So the Brahmins must have travelled from Tamil Nadu.

 

Purna Varman’s Inscription in West Java

The evidence of the Kutai inscriptions is followed by evidence from West Java in the form of  the inscriptions of Purnavarman.  He founded a kingdom vcalled Tarumanagara (Dharma Nagar). It is the earliest known kingdom in Java dated to 5th century CE. Archaeological records show that he had his capital near Jakarta. His name is inscribed on a number of stones, one of which was found in a stream. The kings foot prints were engraved on a boulder and it indicated he ruled or conquered that area. In the text of the inscription he compared his foot prints to those of Vishnu. He was considered one of Vishnu’s incarnations according to Javanese sources. He was not only the saviour of the world, but also as the world sustainer.

 

Chinese traveller Fa – Hsien also confirmed that Hinduism was more prevalent than Buddhism in Indonesia. On his return to China by trip from India,  he had to wait in Java in 414 CE for the trade winds. (Once the wind blows in the favourable direction, the ships will sail towards China). He wrote that ‘heresies and Brahmanism were flourishing, while the faith of Buddha was in a very unsatisfactory condition.’

 

In Central Javanese inscriptions, Durga is used in the curses. If any one violated the orders of the king in the donated lands, Durga will punish that one. The purpose  of the curse was to protect the ownership.

Agastya in two forms

The iconographical representation of the Goddess Durga of Candi Singhasari features a prominent skull ornament in her crown. It occupies the North chamber of the shrine.

The image of Agastya occupied the south chamber of the shrine, and so also follows the standard of the Central Javanese pantheon. However his head dress has undergone some changes compared to the image at Prambanan. In Central Java the sage waesr the Jatamukuta associated with ascetics devoted to Shiva in Indian tradition, whereas in the East Javanese period the sage wears a turban like head dress which is also found very prominently on priestly figures in the narrative reliefs of East Java, and in Ketu headdresses of priests depicted in the wayang style of painting in Bali.

 

Agastya was sent to south b Lord Shiva in the Himalayas. A star is named after him in the Southern Direction and it is called Canopus- Agastya Nakshatra.

Hindu images of Mahadeva, Agastya, Nandisvara and Ganesa are found in the valley of River Pontun in East Borneo.

XXXX

 

DURGA IN INSCRIPTIONS

Pre Majapahit inscriptions mentioned Durga as Bhattari Arcarupa (Terep Inscription dated 1032 CE of King Airlangga)

The Camundi inscription (Of King Kertanagara 1292 CE) decribed Goddess Durga as a granter of victory. We see Durga as a curse giving deity in early inscriptions.

 

27 Inscriptions of AnakWungsu

27 inscriptions are issued during the reign of Anak Wungsu, the youngest son of Mahedradattaa and Udayana. The were issued between 1050-1070 CE. Many of these inscriptions refer to Anak’s parents as Bhatara (male) and Bhatari (female), which mean deity or defied ancestor.

From the historical point of view the marriage of Balinese prince Udayana and Mahedradattaa brought with it radical changes to Balinese culture. They had a son by name Airlangga and he went on to regain power in East Java. At that time Dharmawangsa was ruling. He was very much interested in literature and arranged several Sanskrit works translations into old Javanese.

‘Bharatayuddha’, ‘Arjunawivaha’ and ‘Ghatotkacasrya’ were some of the literary productions of this period.

 

Another famous son of Udayana-Mahendradatta was Dharmawangsa Marakata.

 

One of the 27 inscriptions refer to a Durga statue in Kurti.

The image of Durga Mahisasuramardhani at Kurti stands 2-2 meters high. It portrays the Goddess as having six arms. Her right arms are carrying a javelin, an arrow and a flaming disc, while her left arms are carrying a winged and flaming conch, a bow and a shield. She is standing on a buffalo with her legs spread apart. Durga was identified with Rangda in Bali in later periods.

Bhima and Bhairava Statues

 

Bhima cult is also prevalent in Bali. There is a statue of Bhima at Kebo Eda temple, Pejeng, Gijanyar District in Bali. The gigantic statue is often referred to as Bhima since he wears a head dress as Supiturang or lobster claw head dress which is typical head dress of Bhima in East Java.

 

The typical form of Bhima in the East Java culture of supernatural power can be found in massive figures of Bhima visible in reliefs at Candi Sukuh, located on the slopes of Mount Lawu, on the border of East and Central Java.

 

Since the statue at Kebo Edan temple is standing on a corpse some people consider it a Bhairava statue. The large dangling penis insert of this statue is shown protruding from  between the folds of his loin cloth. Several penis inserts are found in different temples in statues.

 

Another important feature of the Bhairava image at Pura Kebo Edan in Bali is that this gigantic figure, over 3-5 meters high, appears to be wearing a mask. Bhairava is called Ugra, Bhairava and Bhima by local people.

Three Tamil inscriptions

 

Tamil’s maritime trade is known from the three Tamil inscriptions in South East Asia and a bell in New Zealand. Some inscriptions are found in China as well; but all these are later than 1000 BCE. Though Pallavas, Pandyas and particularly Cholas were active in the sea front we don’t find many inscriptions; only literary sources give us the details.

 

Three Tamil inscriptions are found in South East Asia. Of these two have been found in Malaysia. One is the Thakupa inscription which refers to a powerful Tamil guild. This inscription is dated to ninth century.

The second Tamil inscription from Malaya is a damaged stele from Malaya is a damaged stele from the Choza period; it has been now preserved in a temple in Nakhon Sri Dhammarat.

The third Tamil inscription is from Sumatra, Indonesia. This one is from Loba Tuva and dated 1088 CE

 

OTHER INTERESTING INSCRIPTIONS

Long afterwards we come across an epigraphic record, usually called Grahi inscription, dated 1183. It records the orders of Maharaja Srimat Trilokya Raja Mauli Bhusana Varma deva for casting of a statue of Buddha.

 

Of more historical importance is the Caiya (Jaya) inscription of King Candrabhanu, also called Dharmaraja who has been designated Tambralingesvara.

Tambralinga was located on the former site of Grahi, and the details of the misadventure in Sri Lanka have been recorded in the chronicles of that island and records of South India.

 

Seven Buddhist inscriptions were found in Batu Pahat, near the springs of Sungai Tekarek.

Gold objects discovered in Limbangare preserved in Brunei Museum. Vestiges of Tantric shrine and other materials excavated at Bonkissam, Santubong, in Sarawak river delta are remarkable. The Santubong discoveries include a man made structure of stone. gold objects including a Linga. They belong to 11th or 12th centuries.

Sumatra Inscriptions

There are three from the Palembang region:-

Kedukan Bukit dated 682 CE

Talang Tuvo 684 CE

Telaga Batu – undated

and three more

Krang Brahi dated686 (located on the upper course of Batang Hari

Kota Kapur in the Bangka Island.

King Adityavarman Inscription found in Manangkabau Area

 

(Sumatran Tamil Inscription detail already given)

 

Thirty more inscriptions are available from Sumatra.

Inscriptions from Bali Island

Ten inscriptions before Anak Wungu (1050 CE)

One of them is in Old Balinese and Sanskrit languages. It is a bilingual inscription.

 

Reign of Anak Wungu (1050-1078)

52 inscriptions are listed

King Jayasakti (1113-1150) and King Ragajaya – 14

King Jayapangus- 37

Adiknteketana (1204)

His son Paramesvara

 

 

— subham–

 

 

மயங்குகிறாள் ஒரு மாது! (Post No.5232)

 WRITTEN by London swaminathan

 

Date: 18 JULY 2018

 

Time uploaded in London – 8-10 am (British Summer Time)

 

Post No. 5232

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பிரான்ஸிலும் நீலாம்பரிகள் உண்டு; சமயம் பார்த்து பழிவாங்கி  விடுவாள். வாட்களை  விட சொற்கள் வலிமையானவை — WORDS ARE SHARPER THAN SWORDS. இதோ பிரான்ஸில் நடந்த உண்மைச் சம்பவம்!

 

பாலின் போனபர்ட் (PAULINE BONAPARTE 1780-1825) என்பவள் இதாலிய பிரபுக்கள் குடும்பப் பெண்மணி; பிரெஞ்சு இளவரசியும் கூட. நெப்போலியனின் சகோதரி.

அவள் ஒரு முறை விருந்தில் கலந்து கொண்டாள். எப்படி?

 

ஒய்யாரி, சிங்காரி; அன்ன நடை, சின்ன இடை! கிளி மொழி! குயில்பாட்டு சகிதம்!

பாரிஸ் நகரில் விருந்து நடந்தது.

விருந்தில் எல்லோரையும் அசத்த வேண்டும் என்னும் அளவுக்கு ஆடை, அணிகலன்கள்!

 

தாமதமாகப் போனால்தானே அனைவரின் பார்வையும் அவள் மீது விழும் ஆகையால் அனைவரும் வந்த பின்னர் ஒய்யரமாக உள்ளே வந்தாள்; அவளைக் கண்டு அசந்து போன பாண்டு வாத்யக் கோஷ்டி அவளையே பார்த்துக் கொண்டு வாசிப்பதை நிறுத்திவிட்டனர். எல்லோரும் ஏன் என்று திரும்பிப் பார்த்தால், பேரழகி அங்கே நிற்கிறாள்.

 

அழகான மஸ்லின் துணியிலான கவுன்; தங்க நிற பார்டர். மார்பு வளையத்திலும் தங்க பார்டர். அதில் நடுவில் ரத்தினக் கல்; இவ்வளவு அலங்காரத்துக்கு அவள் சில மணி நேரமாவது கண்ணாடி முன் நின்றிருப்பாள்! ஆனால் அவளது முயற்சிகள் வீண் போகவில்லை. உண்மையிலேயே அசத்திவிட்டாள்.

 

பெண்கள் பொறாமைக்காரிகள் அல்லவா? எல்லோருக்கும் பற்றி எரிந்தது. அதில் ஒருவள் ஏற்கனவே இவள் காரணமாக பதவி பறிபோனவள். அவளும் பெரிய இடத்துப் பெண்மணி அவள் பெயர்Madame de Coutade sமேடம் தெ (ரு) கூத்தாடி! !

 

அவள் தன் தோழியுடன் இவளிடம் வந்து உற்று நோக்கினாள்; அடி முதல் முடி வரை நோட்டமிட்டாள்.

அடாடா! என்ன அழகு! என்ன அழகு!! என்று சொன்னாள்.

இவளது பார்வை பாலினுக்குப் பிடிக்கவில்லை; ஆயினும் அழகைப் புகழத்தானே செய்கிறாள் என்று வாளாவிருந்தாள்.

அழகுதான். ஆனால்…. அது மட்டும்……….. என்று இழுத்தாள் பொறாமைக்காரி.

எது மட்டும்!…. என்று வினவினாள் தோழி.

 

நன்றாகப் பார்! தெரியவில்லையா! எம்மாம் பெரிய காது! கழுதைக் காது!

 

எனக்கு மட்டும் இப்படிக் காது இருந்தால், அதை நான் வெட்டித் தூக்கி எறிவேன் என்றாள்.

‘தடால்’ என ஒரு பெரிய சப்தம்!

எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.

பேரழகி பாலின், அந்தச் சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் தடால் என்று மயங்கி விழுந்தாள்.

 

அவளுக்கு இரண்டு கணவர்கள்! ஆயினும் அண்ணன் நெப்போலியன் மீது அளவு கடந்த பாசம்; பிரிட்டிஷாரிடம் நெப்போலியன் தோற்றபோது, அவனைத் தொலைதூர தீவில் சிறையில் அடைத்து அவனுக்கு விஷ உணவு கொடுத்து பிரிட்டிஷார் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றனர். ஏனெனில் அவன் மாவீரன்; தப்பித்தால் பிரிட்டிஷார் கதி- சகதி!

 

அந்த சூழ்நிலையிலும் அவனை வந்து பார்த்த ஒரே ஒரு உறவினர் பாலின் போனபர்ட் என்னும் இந்தப் பேரழகிதான். பாசத்தின் சின்னம் அவள்!

 

சுபம்

 

ஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள்: கம்பன் திறமை! (Post No.5223)

Very Rare Picture of Tamil Yaz- Musical Instrument

Written by London swaminathan

 

Date: 16 JULY 2018

 

Time uploaded in London – 8-06 am  (British Summer Time)

 

Post No. 5223

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கம்பன் பாட வந்தது இந்திரஜித்- இலக்குமணன் யுத்தம்; பாடல் வருவதோ யுத்த காண்டம், பிரம்மாஸ்திரப் படலம்! அங்கும் கம்பன் தன் தமிழ் கலைக் களஞ்சியத்தைக் காட்டத் தவறவில்லை. சான்ஸ் chance கிடைத்த போதெல்லாம் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறான். ஒரே பாடலில் 22 இசைக் கருவிகளை அடுக்குகிறான்.

காரைக்கால் அம்மையார், பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (மலைபடுகடாம் ஆசிரியர்) ஆகியோரை விஞ்சும் பட்டியலைக் கம்பன் தருகிறான்!

கும்பிகை திமிலை செண்டை குறடு மாப்பேரி கொட்டி

பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர்ப் பணவம் தூரி

கம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை

அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே

 

பொருள்:-

 

கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பெரிய பேரிகை, முழக்கும் பம்பை, மாலை அணிந்த முரசு,  சங்கு, பாண்டில், போருக்குரிய பணவம், தூரியம், கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, உடுக்கை, புல்லாங்குழல், கணுவை, அம்பலி, கண்டை, ஊமை, சகடை என்னும் இசைக்கருவிகள் முழங்கின.

 

இந்தப் பாட்டில் 22 கருவிகளை அடுக்கி விட்டு, அடுத்த இரண்டு பாடல்களில் யானையின் மீதான பறை கீழே தொங்கவிடப்பட்ட மணி, ஊது கொம்பு, ஆகுளிப் பறை, பீலி என்னும் துளைக் கருவி, இவ்வாறு மொத்தம் 27 கருவிகளின் பெயர்களைச் சொல்லுகிறான்.

கம்பன் ராமாயணக் கதை மட்டும் சொல்லவில்லை. தமிழர் நாகரீகத்தையும் பாடல்களில் பாடிவிட்டான்.

From my old Aticles:-

 

தமிழ் இசைக் கருவிகள்

1.காரைக்கால் அம்மையார் ஏழு பண்களையும் 11 இசைக் கருவிகளையும் கம்பனுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டியலிட்டார்

துத்தம் கைக் கிள்ளை விளரி தாரம்

உழை இளி ஓசை பண்  கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன் கை மென் தோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினோடாடும் எங்கள்

அப்பன் இடம் திருவாலங்காடே

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

 

காரைக்கால் அம்மையாருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் மலைபடுகடாமில் ஒரு பட்டியலைப் பார்க்கிறோம்

 

M S WITH SAROJINI DEVI

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் இசை!!

Music from Temple Pillars- Indian Wonder

–சுபம்–

அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி……… (Post No.5191)

Written  by London swaminathan

 

Date: 7 JULY 2018

 

Time uploaded in London –  11-59 am  (British Summer Time)

 

Post No. 5191

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

‘அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்?’–

என்ற கண்ணதாசனின் பாடல் மிகவும் பிரஸித்தம்

(திரைப்படம்- அன்னை)

 

“மிதிலை எரிந்திட வேதப் பொருளை

 

வினவும் சனகன் மதி—தன்

 

மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது

 

வல்ல நம் அன்னை மதி”–       (சுப்ரமண்ய பாரதி)

என்ற பாரதியின் பாடல் அதையும் விட பிரபலமானது.

Sita Devi Temple in Janakpur, Nepal

இப்பேற்பட்ட மிதிலா புரியைப் பற்றி- அன்னை ஜானகி பிறந்த ஊரைப் பற்றி- நிறைய சுவையான கதைகள் உண்டு. ஒவ்வொன்றாகத் தருவன்; சுவைத்து மகிழ்க.

 

 

மிதிலையின் தற்போதைய பெயர் ஜனக்பூர். இது நேபாள நாட்டில் உள்ளது. பீஹார் மற்றும் நேபாளத்தின் தென்பகுதி அந்தக் காலத்தில் விதேஹ தேசம் என்று அழைக்கப்பட்டது. அதை ஆண்ட ஜனகன் மாபெரும் தத்துவ ஞானி. அவனது சபையில் பெண் அறிஞர்களும் இருந்தனர். அப்போது அறிஞர் மஹாநாட்டில் தலை சிறந்த தத்துவ ஞானியான யாக்ஞவல்கியரை யாரும் கேள்வி கேட்க அஞ்சிய நேரத்தில் பெண்மணி  கார்க்கி வாசக்னவி எழுந்து நின்று ‘ஐயரே!’ என்று துவங்கினாள். ஜனகர் பற்றிய கதைகளையும் வாசக்னவி பற்றிய உபநிஷத் கதைகளையும் முன்னரே எழுதிவிட்டேன்.

 

விதேஹ என்ற பெயர் ஏன் வந்தது என்ற சுவையான கதையைக் காண்போம். விஷ்ணு புராணக் கதை:-

 

வசிஷ்ட மஹரிஷி, இந்திரனுக்கு ஒரு யாகம் செய்து கொடுத்துவிட்டு விதேஹ நாட்டை நோக்கி விரைந்து வந்தார். காற்றினும் கடுகி வந்த முனிவர் ஐயாவுக்கு ‘ஷாக்’ அடித்தது. ஏனெனில் எந்த நிமி என்ற மன்னனுக்காக இவர் ஓடோடி வந்தாரோ அந்த நிமி, கௌதம ரிஷியைக் கொண்டு யாகத்தை நடத்தி விட்டு ‘ஹாயாக’ உறங்கிக் கொண்டு இருந்தார்.

“ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?” என்று பாடவா பாடுவார்? கொடுத்தார் ஒரு சாபம்!

“பிடி சாபம்; நீ விதேஹன் ஆகக் கடவது”

வி+தேக= உடலற்றவன்

அது முதற்கொண்டு அந்த நாட்டுக்கு விதேக ( உடலற்ற) என்ற பெயர் வந்ததாம்.

ஐயா நிமி என்ன இளிச்சவாயனா? அவர் சொன்னார்;

பிடி சாபம்!

 

தூங்கும் மன்னனுக்கு சாபம் இடுவது சட்டப் பு த்தகத்தின்படி தவறு! ஆகையால் நீவீரும் அழிவீராக! என்றார்.

 

நிமி இறந்தவுடன் அவர் உடலைக் ‘’’கடை’’ந்தனர். உடனே அதிலிருந்து ஒரு குழந்தை பிறந்தது. அதன் பெயர் மிதி; அவர் ஆட்சி புரிந்தவுடன்  அந்தத் தலைநகருக்கு மிதிலா என்று பெயர் ஏற்பட்டது.

 

((இந்த உடலைக் கடைந்து பிள்ளை பெறும் சம்பவம் மநு சாஸ்திரத்தில் வேனன் கதையிலும் வருகிறது. இது ஒரு Technical Term) டெக்னிக்கல் டேர்ம்; அதாவது அறிஞர்கள் அகராதியில் செயற்கை முறைக் குழந்தை என்று பெயர். அதாவது CLONING க்ளோனிங். ; முனிவர்கள் இதைச் சொன்னாலும் புரியாது என்பதற்காக இப்படி’’கடை’’ந்து      பிள்ளை பெற்றதாக விள்ம்புவர்.

Narendra Modi in Janakpur

 

இன்னொரு கதையைக் காண்போம்

சுருசி என்று ஒரு மன்னர் வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய மனைவியின் பெயர் சுமேதா. அவளுக்கு குழந்தை வேண்டும் என்று ஆசை. புத்தரின் அஷ்ட சீலக் கொள்கைகளைக் கடைப்பிடித்து நோன்பு நோற்றாள். உடனே சக்கா

(புத்தமத அகராதியில் இந்திரனின் பெயர்- சக்ரா)

அவள் முன் முனிவர் வடிவத்தில் வந்தார். ‘உன்னைப் பற்றி நீயே 15 துதிகள் பாடுக’ என்று கட்டளையிட்டார். அந்த அம்மையாரும் அப்படியே செய்ய ஒரு குழந்தை பிறந்தது என்று ஜாதகக் கதைகள் புகலும்.

 

இன்னொரு சுவையான கதை:-

விதேஹ நட்டின் மன்னன் தட்சசீல பல்கலைக் கழகத்தில் பயின்றான். அந்த மன்னனுக்கு அறிவுரை புகல நான்கு அமைச்சர் பெருமக்கள் இருந்தனர். அந்த மிதிலை நகரில் பிங்குத்தர என்று ஒரு பிரம்மச்சாரி இருந்தான. அவனும் பல்கலைக் கழக மேம்படிப்புக்காக தட்சசீல நகருக்குச் சென்றான். அங்கு ஒரு குருகுலத்தில் சேர்ந்த கற்கக் கசடறக் கற்றான். குருவுக்கு நன்றி சொல்லி கிளம்பினான்.

அவர் சொன்னார்_;

அன்புமிக்க மாணவா! என் குடும்பத்தில் ஒரு வழக்கம் உண்டு. பருவம் அடைந்த ஒரு மங்கை இருந்தால், அந்த நங்கையை மூத்த மாணவனுக்கு மணம் முடிப்பது வழக்கம். எனக்கொரு மகள் உண்டு அவளை உனக்குக் கன்னிகா தானம் செய்ய விழைகிறேன் என்றார். அடடா! ஒரு கல்லை விட்டு எறிந்தேன்! இரண்டு மாங்காய்கள் விழுகின்றனவே. வலியக் கிடைக்கும் அழகியை யார் நழுவ விடுவார் என்று சொல்லி அவளைக் கல்யாணம் கட்டி கிரஹஸ்தனாக விடு போய்ச் சேர்ந்தான்.

 

 

இன்னும் வரும்………………………………..

 

-சுபம்-

 

ரோம் எரிந்தபோது | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ரோம்…

மிதிலை எரிந்திட வேதப் பொருளை . … மிதிலை … //tamilandvedas.com/2013/03/24/%e0%ae%9c%e0%ae%a9 …

 

காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் கங்கைக்கும் இடையே தாழ்வாரம்! (Post No.5189)

Written by S NAGARAJAN

 

Date: 7 JULY 2018

 

Time uploaded in London –   5-47 AM (British Summer Time)

 

Post No. 5189

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் கங்கைக்கும் இடையே தாழ்வாரம்!

 

ச.நாகராஜன்

 

சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்

இனி அஞ்சிடோம்  – மகாகவி பாரதியார்

 

ஹிந்துக்களின் புனித பூமி

அயோத்யா

மதுரா

காசி

அயோத்யாவில் ராமர் பிறந்தார். ராம ஜென்ம பூமி அது.

மதுரா கிருஷ்ணனின் பூமி. கிருஷ்ண பூமி அது.

காசி விசுவநாதர் ஹிந்துக்களின் புனித தெய்வம். கங்கையோ பாவங்களைப் போக்கும் நதி. விசுவநாத கங்கா பூமி அது.

இந்த மூன்றிலும் இருந்த் ஹிந்து பாரம்பரிய சின்னங்களை முகலாய ஆட்சி தரைமட்டமாக்கியது. அத்தோடு நிற்கவில்லை, அங்கு மசூதிகளை அமைத்தது.

பாபர் மசூதியை அகற்றி அயோத்யாவில் ராமர் கோவில் அமைப்பதையும், காசி விசுவநாதர் சொத்தை காசி கோவிலுக்கு கொடுப்பதையும், மதுராவில் உள்ள மசூதியை அகற்றி அங்கு கிருஷ்ணர் கோவில் அமைப்பதையும் நியாயமாக இஸ்லாமியர் ஏற்று நடவடிக்க எடுத்திருந்தால் அவர்கள் பாராட்டுக்குரியவர்களாக அமைந்திருப்பர். முன்னோர்கள் செய்த இழிசெயலை நீக்கிய புண்ணியம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

ஆனால் நிலைமை அப்படியில்லை.

வழக்கு.

வழக்குக்கு மேல் வழக்கு.

போகட்டும், நியாயம் ஜெயிக்கும்.

 

இப்போது காசி விசுவநாதர் ஆலயத்திற்கும் கங்கைக்கும் இடையே பிரம்மாண்ட்மான ஒரு நடையை அமைக்க 600 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டம் உருவாகி இருக்கிறது.

 

வரவேற்க வேண்டிய திட்டம் இது.

நடை அல்லது தாழ்வாரம் 56 மீட்டர் – அதாவது சுமார் 183 அடி அகலம் கொண்டது. நீளம் சுமார் 400  மீட்டர் – 1308 அடி.

இங்குள்ள சுமார் 166 வீடுகளை இதற்காக அகற்ற வேண்டியிருக்கிறது.

இதில் 56 பேர்கள் உடனடியாக சம்மதித்து விட்டனர். இன்னும் 60 பேரிடம் அவர்கள் இடத்தை வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நியாயமான உரிய இழப்பீட்டை அரசு வழங்க முன் வந்திருக்கிறது.

ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 400 ஆண்டு பழமையான அமிர்தேஷ்வர் மஹாதேவரின் கோவில் ஒரு வீட்டின் உள்ளே இருக்கிறது.

இன்னும் பெரிய மற்றும் குட்டி கோவிலக்ள் 46 அகற்றி வேறு இடத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட்டால் தான் இந்தத் திட்டம் நிறைவேறும்.

பொதுவாக அரசிற்கு மக்களின் ஆதரவு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொகுதி இது.

ஆகவே அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்து குழப்பம் விளைவிக்க முயல்வது இயற்கையே!

1669ஆம் ஆண்டு ஔரங்கசீப் காசி விசுவநாதர் ஆலயத்தை இடித்தான். அங்கு க்யான்வாபி மசூதியைக் கட்டினான்.

அஹல்யாபாய் ஹோல்க்ர் ம்சூதியை அகற்றி விட்டு காசி விசுவநாதர் கோவிலை அமைக்க எவ்வளவோ முயன்றார். அது முடியவில்லை. ஆகவே மசூதிக்கு அடுத்தாற்போல் புதிய இடத்தில் காசி விசுவநாதர் ஆலயத்தை 17870இல் நிறுவினார்.

 

இப்போதைய கங்கா தர்ஷன் திட்டத்தின் கீழ் இந்த தாழ்வாரம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இங்குள்ள ஜனநெரிசலையும் இதர பல பிரச்சினைகளையும் இந்த கோவில் நடை தீர்க்கும்.

இதை வரவேற்போம்.

இதைப் பற்றிய தனது கருத்தை ஆங்கில வார இதழான ‘ட்ரூத்’ தனது 29-6-2018 இதழில் தந்துள்ளது.

அது அப்படியே கீழே தரப்பட்டுள்ளது:-

 

  1. The ndtv and National Herald channels both shaded under typical secular minority

politics have now expressed concern over  secular sentiments associated with the recent

Government move to bring in certain changes  for betterment in the environment and

restoration approach to the pristine Kashi  Viswanath temple, the abode of Lord Shiva

in Varanasi. The very old temples on the approach road with encroachment or no

encroachment, built in the past have also been  regarded as sacred places of worship since decades or centuries, and deserve to be honoured and protected through mutual  agreement between the developing  authorities and the temple owners keeping in mind that– SANTHIMITTE VARAM THYAGA: for some great purpose often sacrifice must fetch higher priority. While some reports reveal that many of the house owners are happy with the deal, those having private temples disagree to the plan. The Authorities are reported  to have assured that they will only get rid of the encroachments and ensured rehabilitation of the shrines and idols that fall along the route. This need to be honourably and diligently pursued.

  1. As per PTI reports from Allahabad, the Kashi Vishwanath Mandir Trust had filed a suit in 1991 claiming that a temple was constructed by Maharaja Vikramaditya more than 2,000 years ago on the site, where the mosque had been later erected.

Alleging that the temple was demolished by Mughal emperor Aurangzeb in 1669 and a mosque constructed on a part of the land with the remains of the razed place of worship, the Trust has sought removal of the Gyanvapi Masjid from the site and possession of the entire piece of land.

In its application before ADJ Varanasi, the Anjuman Intazamia Masjid had contended that a “Mandir-Masjid dispute” could not be adjudicated by a civil court as it was “barred by law” and demanded that the trust’s petition be dismissed at the outset.

However the lower court dismissed the application. The Sunni Waqf Board had moved the court challenging the ADJ Varanasi’s orders turning down its request for being made a party to the civil suit. Initially,both parties had challenged the lower court orders filing petitions under Article 226 (power of High Courts to issue certain writs) of the Constitution.

Upon the high court’s advice, Anjuman Intazamia Masjid had filed an amendment application under Article 227 dealing with power of superintendence over all courts by the high court, which was allowed. The Sunni Waqf Board could not come up with the same and, hence, was granted one week’s time. Justice Chandra directed that the petitions be placed before the bench having the requisite jurisdiction.

  1. Non-Hindu perpetrators unashamedly feel pride on the existence of their super imposed monuments on Hindu shrines as a mark of their past victory and dominance, and the pseudo- secularists join them. May good sense dawn upon Hindus, now victims of induced divisionism, and all others concerned, to usher in the victory of Truth and glory to the All-merciful Lord Kashi Viswanath.

நன்றி : TRUTH VOLUME 86 ISSUE 11 –   29-6-2018

 

***

 

 

 

இந்தியா 250,000 ஆண்டு பழமையானது (Post No.5146)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 25 JUNE 2018

 

Time uploaded in London –  15-11 (British Summer Time)

 

Post No. 5146

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

இந்தியாவின் வரலாற்றை அழகாக தேதி வாரியாக பட்டியலிட்டுள்ளார்  ஆசிரியர்—ஜார்ஜ் பௌர்ஸ்டேய்ன். இந்த ஆசிரியர் 14 வயதான போது ஒருவர் பால் ப்ரண்டன்  (A Search in Secret India by Paul Brunton) எழுதிய ‘மர்ம இந்தியாவில் ஒரு தேடுதல்’ என்ற புஸ்தகத்தை ஒருவர் பரிசளித்தார். அது முதல் ரமண மஹரிஷி போன்ற இந்தியப் பெரியோர்களின் ஆன்ம தேடுதல் பணியில் நாட்டம் கொண்டு யோகம் பயின்றார். அமெரிக்காவில் இவரது யோகா ஆராய்ச்சிக் கழகம் உளது. பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவின் புராதன வரலாறு குறித்து கிடைத்துள்ள பல புதிய தகவல்களைச் சேகரித்து நமது பழமை கி.மு 8000 என்று நிரூபித்துள்ளார்.

கி.மு 250,000 – இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய மனிதர் தடயங்கள்

 

40,000- மத்திய இந்தியாவில் பிம்பெட்கா முதலிய இடங்களில் மக்கள் வரைந்த ஓவியங்கள்

 

கி.மு. 8000 – 5000 ஸரஸ்வதி- சிந்து நதி தீர நாகரீக இடங்கள் கார்பன் கணக்கீடுகள் கி.மு 8000 என்று காட்டுகின்றன. ஆப்கனிஸ்தான் மெகர்காரில் தெளிவான தடயங்கள் உள.

கி.மு 3000 பாலகோர், ஹக்ரா, அம்ரி முதலிய இடங்களில் ஹரப்பா நகர நாகரீகத்துக்கு முந்திய கிராமங்கள்.

 

 

கி.மு 4000- 2000 – ரிக் வேதம், பின்னர் மற்ற மூன்று வேதங்கள், அதையடுத்து புராணங்களின் தோற்றம்.

 

ரிக் வேத தேதியைக் கணக்கிட அதிலுள்ள வானியல் குறிப்புகள் உதவுகின்றன.

மநு வைவஸ்வதர் (கி.மு.3100) எனப்படும் முதல் மநு, சப்த ரிஷிகள், சூர்ய வம்ச- இக்ஷ்வாகு அரசாட்சி துவக்கம்.

 

 

கி.மு-3210 வேனன் என்னும் கொடுங்கோலனை மந்திரங்கள் மூலம் ரிஷிகள் கொன்ற ஆண்டு; முதல் மன்னன் பிருது ( பிருத்வீ= பூமியின் பெயர்க் காரணம்)

 

பிப்ரவரி 18, 3102 கலியுகம் துவக்கம்

.

கி.மு 3000 ஸரஸ்வதி- சிந்து நதி நகரங்கள் உருவாதல்- மொஹஞ்சதாரோ, ஹரப்பா

 

2950– எகிப்தில் முதல் மன்னர் ஆட்சி துவக்கம்

 

 

2600-1900 சிந்துவெளி நகரங்களின் ஆட்சி

 

2600- 1400 யாக யக்ஞங்கள் பற்றிப் பேசும் பிராஹ்மண இலக்கியம் உருவாதல்.

 

2510- சகர மன்னர்- கபில முனி காலம் ரிக் வேதம் சொல்லும் பிரதர்தனன், திவோதஸன் காலம்

 

2450- பரத மன்னன் (பாரதம் எனப் பெயர் காரணம்) ஆண்ட காலம்

 

2371- 2316 பாபிலோனியாவை ஆண்ட ஸர்கோன், இந்திய சகர மன்னன் என்று வாடல் (Waddel)  கூறுகிறார். (Sargon of Babylonia= Sagaera of India)

2050– தஸரதன் ஆட்சி, ராமர் காலம், இலங்கையில் ராவணன் ஆட்சி

1970– சுதாஸ் எனப்படும் ரிக் வேத மன்னன் காலம்

 

 

1900- ஸரஸ்வதி நதி வறண்ட காலம்; ரிக்வேத மன்னன் துர கவசேயன் காலம்

 

1550– ரிக் வேத மன்னன் தேவாபி காலம்- இதுதான் ரிக்வேதத்தின் கடைசி துதி

1500 –பாரத யுத்தம்- மஹா பாரத யுத்த காலம்

 

கி.மு.570 பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் குறிப்பிடப்படும் கடைசி ஆசிரியர் பௌதிமசிபுத்ர. அவருக்கு முன்னர் 50 ஆசிரியர்கள் 1000 ஆண்டுகளுக்கு  உபநிஷத்தைப் பரப்பினர்.

 

563-483 கௌதம புத்தர்- புத்த மத ஸ்தாபனம்

 

550 ஆஜீவக மதப் பிரிவு- ஸ்தாபகர் கோசால மாஸ்கரிபுத்ர + பாணினி+ கானட முதலியோர் காலம்

 

கி.மு 500-400 பகவத் கீதையின் புது வடிவம்

அலெக்ஸாண்டருக்கு முன்னதாக இந்தியாவில் 138 அரசர்கள் ஆண்டதாக கிரேக்கர்கள் எழுதி வைத்துள்ளனர்

 

–SUBHAM–

 

குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்! (Post No.5136)

Written by S NAGARAJAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  5-23 am  (British Summer Time)

 

Post No. 5136

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

குரு தேக் பகதூரின் ஒப்பற்ற தியாகம்!

 

ச.நாகராஜன்

1

பாரதத்தின் வரலாற்றை சரியாக எழுத வேண்டிய அவசியம் முன் எப்போதையும் விட இப்போது அவசியமாகிறது; இது அவசரத் தேவையும் கூட.

செகுலரிஸம் என்ற போர்வையில் கிறிஸ்தவ பாதிரியின் கல்லறையில் அவர் தமிழ் மாணவன் என்று பொறித்திருக்கிறார் என்று சிறு பிள்ளைகளின் பாட புத்தகத்தில் பொய்யும் புரளியுமாக எழுதி வைப்பது; குரு தேக் பகதூரின் ஒப்பற்ற அற்புதமான தியாகத்தைக் கொச்சைப் படுத்துவது அதை NCERT மூலமாகப் பரப்புவது போன்ற பல அபாயகரமான அசிங்கமான பல நூறு “செகுலரிஸ வித்தைகளைப்” பார்த்து விட்டோம்.
(“தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு” இந்தியாவில் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குழு ஆகும். இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது. –

The National Council of Educational Research and Training (NCERT) is an autonomous organisation set up in 1961 by the Government of India to assist and advise the Central and State Governments on policies and programmes for qualitative improvement in school education.)

செகுலரிஸ போர்வையில் கம்யூனிஸ்டுகளும், வெறிபிடித்த மதமாற்றப்  பாதிரிகளும், இஸ்லாமிய தீவிரவாதிகளும், ஐந்தாம்படை வேலை பார்க்கும் போலி ஹிந்துக்களும் உலவுவதும் அறிஞர்கள் போல ஆய்வு என்ற பெயரில் விஷக் கருத்துக்களைத் திணிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

குரு தேக்பகதூரைப் பற்றி Guru Tegh Bahadur’s martyrdom

– Satish Chandra என்ற சதிஷ் சந்திராவின் கட்டுரையும் அதற்கு உரிய பதிலடிக் கட்டுரையாக , An untenable attempt என்று Gurtej Singh எழுதிய அழகிய கட்டுரையையும் ஹிந்து நாளேடு பிரசுரித்தது.

இணையதளத்தில் கீழ்க்கண்ட தொடுப்புகளில் அன்பர்கள் கட்டுரைகளை முழுதுமாகப் படிக்கலாம். (16-10-2001 மற்றும் 13-11-2001 இதழ்களில் வெளியானவை)

http://www.thehindu.com/2001/10/16/stories/05162524.htm

 

http://www.thehindu.com/thehindu/op/2001/11/13/stories/2001111300020100.htm

 

 

2

நமது நாட்டின் சேவையில் சீக்கியர்களின் சேவை மகத்தானது.

இவர்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதும், இவர்களின் பணியை கொச்சைப் படுத்துவதும் இவர்களை தேசீய நீரோட்டத்திலிருந்து பிரித்து பிரிவினையை ஏற்படுத்தும் தீய எண்ணத்தின் அடிப்படையிலானது.

இந்திய சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் பாதக அரசால் தூக்கிலிடப்பட்ட 124 வீரர்களில் 71 பேர்கள் சீக்கியர்கள். ஒரே ஒருவர் தான் முஸ்லீம். அவரும் கூட கைபர் பிராந்தியத்தைச் சேர்ந்த பத்தான். ஆயுள் தண்டனை தரப்பட்ட 3500 சுதந்திரப் போர் தியாகிகளில் 2200 பேர்கள் சீக்கியர்கள்.

1919ஆம் ஆண்டு புனிதத் தலமான அமிர்தசரஸில் நிராயுதபாணிகளாக இருந்தவர்களை பிரிட்டிஷ் அரசு வக்கிரமாக ஈவிரக்கமின்றி வதை செய்தது; அதில் 1301 பேர்கள் பலி ஆயினர். அவர்களுள் 799 பேர்கள் சீக்கியர்கள். ஒருவர் கூட முஸ்லீம் இல்லை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆக வரலாறு நெடுக ஹிந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் இன்னுயிரைத் தேசத்திற்காக தியாகம் செய்ததில் சளைத்ததே இல்லை.

 

3

குரு தேக் பகதூர் (Guru  Tegh Bahadur) பத்து சீக்கிய குருக்களில் ஒன்பதாம் நானக் குருவாவார். (தோற்றம் 1-4-1621 மறைவு 24-11-1675). சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் அவர்களின் ஆவி இவர் மீது ஆவிர்பவித்ததாக நம்பப் படுகிறது.

குரு கிரந்த் சாகிப்பில் இவரது 115 கவிதை நடையிலான இறைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இவரது பெருமை அளப்பரியது.

பல்கலை வித்தகர் இவர். வில்வித்தை, கத்திச் சண்டையில் நிபுணர். குதிரையேற்றத்தில் வல்லவர். பழைய இதிஹாஸ நூல்களில் அவற்றின் ஆழம் கண்டவர்.

பதினான்காம் வயதிலேயே முகலாயரை போரில் எதிர்கொண்ட அஞ்சா நெஞ்சர் இவர்.

பகலா என்னும் இடத்தில் 26 வருடங்கள் 9 மாதங்கள் 13 நாட்கள் இவர் தவத்தில் இருந்தார். குடும்ப பொறுப்பை விட்டு விட்டு அதிகமாக தவத்தில் ஈடுபட்ட காலம் இது.

காஷ்மீரி ஹிந்து பண்டிட்களை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றும் அநியாயத்தைத் தட்டிக் கேட்டார் இவர்.

ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் இஸ்லாமிற்கு மாற்றும் முகலாய அரசின் போக்கை வன்மையாகக் கண்டித்து தைரியமாகப் போர்க்கொடி உயர்த்தினார்.

அனந்தபூர் சாஹிப் என்னும் அழகிய நகரை பஞ்சாப் மாகாணத்தில் நிறுவினார். பிலாஸ்பூர் ராணியான சம்பாவிடமிருந்து 500 ரூபாய் கொடுத்து இதற்கான இடத்தை இவர் வாங்கினார். பாடியாலா நகரையும் இவரே தான் நிறுவினார்.

ஜிஹாங்கீர் அநியாயமாக ஐந்தாம் சீக்கிய குருவான அர்ஜுன் சிங்கைக் கொலை செய்ததன் காரணமாக, இவருக்கு பலத்த பாதுகாப்பை இவரது மெய்காப்பாளர்கள் தந்தனர்.

ஆனால் ஔரங்கசீப் இவரைப் பிடித்து வந்து இஸ்லாமிற்கு மாறு; இல்லையேல் உயிரை எடுப்பேன் என்று கூறிய போது ஒருக்காலும் இஸ்லாமிய மதத்தை ஏற்க மாட்டேன். சாவதே மேல் என்று முழங்கினார்.

 

அனைவருக்கும் முன்பாக 1675-ல் இவர் தலை துண்டிக்கப்பட்டது. இவர் இறந்த இடம் குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப். இவர் உடல் எரிக்கப்பட்ட இடம் குருத்வாரா ராகெப் கஞ்ச் சாஹிப்.

தனது இன்னுயிரை ஈந்து தன் மானத்தைக் காத்த மாபெரும் வீரரான இவரைக் கொச்சைப் படுத்துவதும் ஔரங்கசீப்பை புகழ்வதும் தேசப்பற்றில்லாதவர்கள் மட்டுமே செய்யக்கூடிய செயலாகும்.

இவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் உள்ளன. நாடு முழுவதும் இவர் சுற்றி வந்ததால் மக்களின் அளவிலா அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தார்.

குரு தேக் பகதூரைப் போற்றுவோர் பாரத தேச பக்தர்கள்; இவரது வரலாற்றை மாற்றத் துணிவோர் இந்த தேசத்தின் துரோகிகள்!

குரு தேக் பகதூரை வணங்குவோம்; போற்றுவோம்!

***

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 21 JUNE 2018

 

Time uploaded in London –  14-01  (British Summer Time)

 

Post No. 5135

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

 

சம்ஸ்க்ருதத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சரக ஸம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை போன்ற ஆயுர்வேத நூல்களை நாம் அறிவோம். ஆனால் பாலி மொழியில் உள்ள பௌத்த மத நூல்களில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளை உலகம் அறியாது. புத்தரோ பௌத்தர்களோ மருத்துவ நூல்களை எழுதவில்லை ஆயினும் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய மருத்துவக் குறிப்புகள் அந்த நூல் ல்களிலும் உண்டு.

சில சுவையான செய்திகளை மட்டும் தருவேன்

ஒரு முறை புத்தர் நோய்வாய்ப்பட்டார். உடனே தேவஹித என்ற பிராஹ்மணனிடம் சென்று சுடு நீர் வாங்கி வரும்படி உபவன என்ற சிஷ்யரை அனுப்பி வைத்தார். உடனே அந்தப் ப்ராஹ்மணன் , புத்தரிடம் வந்து அவரை வெந்நீரில் குளிக்கச் சொன்னார். புத்தர் குளித்தவுடன் அவருக்கு வெல்லப்பாகு கலந்த சுடு நீரை சாப்பிட அருளினார். அதைக் குடித்தவுடனே  வாத, பித்த, கப தோஷ வியாதி போயிற்று.

முதலில் மனிதர்களுக்கு ஆசை மூப்பு, பசி என்ற மூன்று நோய்கள் மட்டும் இருந்தன. பின்னர் இது காலப்போக்கில் 96 நோய்களாகப் பல்கிப் பெருகின என்று சுத்தனிபாத என்ற நூல் செப்பும். சிலர் 98 என்றும் பகர்வர்.

புத்தர் காலத்தில் மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னன் பிம்பிசாரன். அவனிடம் புகழ்பெற்ற மருத்துவர் ஜீவகன் இருந்தார். அவர் தக்ஷசீல பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கினார். அப்போது மகத சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்த நோய்கள் குஷ்ட ரோகம், க்ஷய ரோகம் (டி.பி.) , இழுப்பு, ஜூரம் முதலியன ஆகும்

 

கொப்புளங்கள் வந்தால் அதன் மீது கடுகுத் தூளைத் தூவி கட்டுப் போட்டனர்.

தலைவலி தீர பலவித மூலிகை எண்ணைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் மூக்கு வழியாக குழாய் மூலம் மருந்து கொடுத்தனர். இரட்டைக் குழாய் வழியாக நாசியின் இரு த்வாரங்கள் வழியே மருந்து தந்தனர். குழாய் வழியாக மருந்துப் புகையும் செலுத்தினர்.

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசுமாட்டின் மூத்திரம் கலந்த கஷாயம் தந்தனர்.

மூட்டுவலி முதலிய நோய்களுக்கு ஆவிச் சிகிச்சை தரப்பட்டது. ஆறு அடி குழி ஒன்றில் கரியை நிரப்பினர். அதன்மீது மணலைப் பர்ப்பி அதன் மீது மண்ணாலும் களி மண்ணாலும் பூசினர் அதன் மீது மூலிகைகள் போடப்பட்டன. அதிலிருந்து வரும் புகையில் கை, கால் முதலிய உறுப்பைக் காட்ட வைத்தனர். உடலின் எல்லா உறுப்புகளையும் காட்டி புகை பிடிக்க வைத்தனர்.

அசோகர் காலத்தில் ஒரு புத்த பிக்ஷுவுக்கு நோய் வந்தது. மருந்து கிடைக்காமல் அவர் இறக்க நேரிட்டது. உடனே பாடலிபுத்திர நகரத்தின் நான்கு வாயில்களிலும் நான்கு பெரிய தொட்டிகள் முழுக்க மருந்துகளை நிரப்பி அனைவருக்கும் மருந்து கிடைக்க அசோகர் வசதி செய்தார். புத்தகோசரின் சமந்தபாஸாதிக என்ற புஸ்தகம் இத்தகவலைத் தருகிறது. அவரது கல்வெட்டு ஒன்று மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தனித்தனியே ஆஸ்பத்திரிகள் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன

–SUBHAM–

நடக்காத சந்திப்பு – தப்பிப் பிழைத்த பாரதம் (Post No.5115)

Written by S NAGARAJAN

 

Date: 16 JUNE 2018

 

Time uploaded in London –  6-57 am  (British Summer Time)

 

Post No. 5115

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

தேசப் பிரிவினையின் கதை

இதற்கு முன்னர் வெளியான ஆகா கானின் அட்டகாசம்: பிரிவினையின் சோகக் கதை என்ற அத்தியாயத்தைப் படித்தவர்களுக்கு இன்னும் ஒரு கட்டுரை இது :

 

 

 

 

நடக்காத சந்திப்பு – தப்பிப் பிழைத்த பாரதம்! பிரிவினையின் சோகக் கதை!

1

ஒரு சுவாரசியமான (நடக்காத) நிகழ்வை இங்கு பார்க்க வேண்டியிருக்கிறது.

 

இந்திய பத்திரிகையாளர்களில் அந்தக் காலத்தில் பிரபலமானவர் எம்.எஸ்.எம். சர்மா (M.S.M. Sarma) என்பவர்.அவர் தனது நினைவலைகளை (Reminiscences) ‘பீப்ஸ் இன்டு பாகிஸ்தான் ( Peeps into Pakistan) என்ற நூலில் எழுதியுள்ளார்.

அதில் ஒரு சம்பவம் தான் இது.

 

சவர்காரின் அதி தீவிர தீர்க்கதரிசனத்தால் அவர் ஆதரவு தர தேசம் முழுவதிலிருந்தும் சுமார் இரண்டு லட்சம் ஹிந்து-சீக்கிய இளைஞர்கள் பிரிட்டிஷாருக்கு இரண்டாம் உலக மகா யுத்தத்தில் உதவ ராணுவத்தில் சேர்ந்தார்கள்.

பயங்கரமான கோர யுத்தத்தில் பல முனைகளிலும் பணியாற்றிய அவர்கள் பெறுதற்கரிய அனுபவத்தைப் பெற்றனர்.

 

சவர்க்கார் எதிர்காலத்தில் இந்திய ராணுவம் வலிமை வாய்ந்ததாக உருவாக இதை தீர்க்கதரிசனத்துடன் செய்தார்.

ஆகா கான், முகம்மதலி ஜின்னாவின் தீவிர தாக்குதலைத் தடுக்க இந்த வீரர்களின் அமைப்பு பெரிதும் பின்னால் உதவியது. இல்லாவிடில் பல லட்சம் ஹிந்துக்கள் உயிரை இழந்திருப்பர்.

 

ஜின்னாவின் கூட இருந்தவர்கள் பாகிஸ்தான் ஏற்படாவிடில் ரத்தக் களரி தான் ஏற்படும் என்று எச்சரித்தவண்ணம் இருந்தனர்.

 

ஜின்னா நடப்பதைப் பற்றி யோசித்தார். நேருவைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது. அவர் ஒரு கோழை என்று ஜின்னா நினைத்தார்.சவர்க்காரின் வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பதை உணர்ந்த ஜின்னா அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் உணர்ந்திருந்தார்.

 

ஆகவே தனது நலனை உத்தேசித்து ஜின்னா பிரபல பத்திரிகையாளரான எம்.எஸ்.எம். சர்மாவைச் சந்தித்து சவர்க்காருடன் ஒரு ரகசிய சந்திப்பை நிகழ்த்த ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.

 

முஸ்லீம்கள் நிச்சயமாக தாங்கள் கூறும் ரத்தக் களரியை ஏற்படுத்த மாட்டார்கள் என்ற உறுதி மொழியை அளிக்க அவர் விரும்பினார். இதற்கு பதில் உபகாரமாக இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவில் ஏராளமான நிலங்களை வைத்திருக்கும் முஸ்லீம் பிரமுகர்கள் அதை அப்படியே வைத்து உரிமை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொள்ள நினைத்தார்.

 

ஆனால் துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ இந்த சந்திப்பு நிகழவே இல்லை.

இப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகிறது என்ற செய்தி கசிய விடப்பட்டு ஜின்னா மிகவும் சங்கடத்திற்கு உள்ளானார்.

ஆகவே அவர் சர்மாவைக் கூப்பிட்டு சந்திப்பை ரத்து செய்யுமாறு கூறி விட்டார்.

 

2

 

இன்னொரு நடக்காத முக்கிய நிகழ்வையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

 

பாரதத்தை இரண்டாகப் பிரிக்காமல் இருக்க முகம்மதலி ஜின்னாவை பாரத பிரதமர் ஆக்குவது, அப்படி ஆக்கினால் பாகிஸ்தான் என்ற தனி நாட்டைக் கேட்கும் எண்ணத்தை முஸ்லீம்கள் விடுவது என்பது ஒரு திட்டம்.

நல்ல வேளையாக மஹாத்மா ஜின்னாவைச் சந்திக்காமலேயே இந்த திட்டம் கை விடப்பட்டது.

பாரதத்தின் சோகமான பிரிவினை பற்றி அந்த நாட்களில் உயர் மட்டத் தலைவர்களுடன் இருந்த பலரும் பின்னால் எழுதிய புத்தகங்கள் பல திடுக்கிடும் விவரங்களைத் தருகின்றன.

இவற்றையெல்லாம் படித்தால் தெரிய வருவது ஒன்று தான்:

தனி நாடாக முஸ்லீம்களுக்காக மட்டும் பாகிஸ்தான் பிரிக்கப்பட வேண்டும். (அங்கு ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் எந்த வித உரிமையும் கிடையாது – அடிப்படை உரிமைகள் கூட!)

 

செகுலர் என்ற பெயரில் செகுலர் நாடாக உருவாகும் இந்தியாவில் மைனாரிட்டி ரைட்ஸ் என்ற பெயரில் ஏராளமான சலுகைகளைப் பெற்று இந்தியாவை உருக்குலைக்க வேண்டும்.

 

 

 இந்த திட்டத்தினால் இப்போது ஏற்பட்டிருக்கும் தீராத தொடர் வியாதியை நீக்க ஒரு வழி இருக்கிறது.

பாரதத்தை ஹிந்து ராஷ்டிரமாக அறிவித்து விட்டால் அனைத்து தீவிரவாத இஸ்லாமிய பிரச்சினைகள் தீரும்; கிறிஸ்தவ பாதிரிகளின் மத மாற்ற முயற்சியில் மண் விழும்.

எதிர்காலம் ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் என்றே அனைவரும் நம்புவோமாக!

****