எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா?-எகிப்திய அதிசயங்கள் -18 (Post No.3716)

Written by London swaminathan

 

Date: 12 March 2017

 

Time uploaded in London:- 6-39 am

 

Post No. 3716

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

எகிப்தின் மீது படை எடுத்த HYKSOS ஹிக்ஸோஸ், வெளிநாட்டினர் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் ஆசியாவில் எங்கிருந்து என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. என்னுடைய கருத்து அவர்கள் இந்தியர்கள் என்பதே.

 

எகிப்தியர்களுக்கு குதிரை என்றால் என்ன என்று தெரியாது. ஹிக்ஸோச் கி.மு 10 வாக்கில் எகிப்துக்குள் நுழைந்த பின்னர்தான் அவர்கள் குதிரையைப் பயன்படுத்தத் துவங்கினர். அதற்கு முந்தைய 1500 ஆண்டுகளுக்கு குதிரையும் தெரியாது; ரதமும் (தேர்) தெரியாது. ஆயினும் கி.மு.1500 முதல் குதிரை ரதங்களின் படைகளில் எகிப்திய பாரோக்கள் சண்டை போடுவது போல படங்கள் இருப்பதால் ஹிக்ஸோஸ் படை எடுப்பதற்கு முன்னரே குதிரை வியாபாரிகளாகப் போயிருக்க வேண்டும். இலங்கைக்குள் குதிரை வியாபாரம் செய்யப்போன தமிழர்கள், ஆட்சியைக் கைப்பற்றிய செய்தி மஹா வம்சத்தில் இருக்கிறது.

IMG_1464

துருக்கியில் கிடைத்த (கி.மு.1300) சம்ஸ்கிருத கையேட்டில், குதிரைப் பயிற்சி எல்லாம் சம்ஸ்கிருதக் கட்டளைகளில் இருப்பதால் அக்காலத்திலேயே நம்மவர் துருக்கிவரை சென்று சம்ஸ்கிருத மொழி   மூலம் பயிற்சி தந்தது தெரிகிறது. இது தொல்பொருட் துறை சான்று என்பதால் மறுப்பதற்கில்லை.

 

துருக்கி என்ற நாடு இன்று முஸ்லீம் நாடாக இருந்த போதிலும் துருக்கி, சிரியா, இராக், ஈரான் முதலிய நாடுகள் இந்துக்களின் ஆதிக்கத்தில் அவ்வப்பொழுது இருந்து வந்தது. துரக (குதிரை) என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்தே துருக்கி என்ற சொல் வந்தது. இந்தக் காலத்துக்குப் பின்னர் எகிப்து – இந்துக்கள் தொடர்பு நல்ல ஆதாரங்களுடன் அமைந்துள்ளது. துருக்கி-சிரிய பகுதியை ஆண்ட தசரதன் என்ற மன்னன் எழுதிய கடிதங்கள் எகிப்தில் உள்ளன.

 

இனி ஹிக்ஸோஸ் (Hyksos) ஆட்சி பற்றி சற்று விரிவாகக் காண்போம்:

 

” பின்னர் கிழக்கு திசையிலிருந்து திடீரென்று இனம் தெரியாத ஆட்கள் வெற்றி முழக்கத்துடன் நம் தேசத்தின் மீது படை எடுத்தனர். பலத்தைப் பயன்படுத்தி நம் மன்னர்களை அவர்கள் வென்றனர். கருணையின்றி நம்முடைய நகரங்களை எரித்தனர்; கடவுளரின் கோவில்களை தரை மட்டமாக்கினர். நாட்டு மக்களை வெறுப்புடன் கொடூரமாக நடத்தினர்” — இவ்வாறு எகிப்து வரலாற்றை எழுதிய மனீதோ (Manetho) எழுதி இருப்பதாக முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோசபஸ் (Josephus) எழுதியுள்ளார்.

 

இதை அப்படியே நம்பிவிடக்கூடாது. ஏனெனில் ஹிக்ஸோஸ் படை எடுத்தது மனீதோவுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு!

மனீதோவின் புத்தகம் முழுதும் கிடைக்காததால் அவர் சொன்னதாக மற்றவர் எழுதி இருப்பதைப் பார்க்கிறோம்.

Pottery from Hyksos period

இவ்வளவுக்கும் இன்றுவரை அவர்கள் யார் என்பதற்கான தொல்பொருத் துறை தடயங்களோ, உறுதியான தகவல்களோ இல்லை. 15ஆவது 16ஆவது வம்சங்கள் ஆண்டபோது இவர்கள் இருந்ததால் சமகாலத்திய எழுத்துகள் கிடைத்துள்ளன. மனீதோ எழுதியதாக மற்றவர்கள் மேற்கோள் காட்டுவதைத்தான் நாம் நம்ப வேண்டியுள்ளது.

 

அதிலிருந்து கிடைக்கும் குறிப்புகள்:

  1. ஹிக்ஸோஸ் கடல் வழியாக (SEA PEOPLE) வந்த வெளிநாட்டினர்.

2.இந்தச் சொல்லின் பொருள் வெளிநாட்டு ஆட்சியாளர். இதற்கான எகிப்திய சொல்லை கிரேக்கர்கள் ஹிக்ஸோஸ் என்று எழுதத் துவங்கினர்.

  1. அவர்கள் நைல் நதி டெல்டாவில் அவரிஸ் என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

4.அவர்களுடைய ஆட்சி தெற்கில் நூபியா NUBIA வரை பரவியது

6.அவர்கள் கொடூரமானவர்கள்.

7.இறுதியில் எகிப்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.

இவர்கள் கி.மு 1650 முதல் கி.மு.1550 வரை சுமார் 100 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

 

சில மன்னர்களின் பெயர்கள்

சகிர் ஹர — ??

க்யான் (ஞான) –கி.மு.1620

அசுர அபோபி –கி.மு.1595-1555

கமுதி (கௌமுதி) – – கி.மு. 1555- 1545

சேஷி (சசி)

(பெயர்களில் சம்ஸ்கிருத சாயல் இருப்பதைக் கவனியுங்கள்)

இதெல்லாம் நடந்தது நடு ராஜ்யத்துக்கும் இரண்டாவது இடைவெளிக் காலத்துக்கும் இடையே ஆகும். அவர்களை கி.மு 1520 ஆம் ஆண்டில் விரட்டி அடித்தவுடன் எகிப்தில் புதிய ராஜ்யம் ஆட்சி செய்யத் துவங்கியது.

இக்காலத்திய கல்வெட்டுகள் இரண்டு கிடைத்தன. தீப்ஸ் THEBES நகர மன்னர் காமோசி, தலை நகர் ஆவரிஸ் AVARIS வரைக்கும் 1540ல் சென்றார். ஹிக்ஸோஸ் மன்னர் அசுர அபோபிஸ்,  , கோட்டையைவிட்டு வெளியே வரவில்லை. பின்னர் கி.மு 1520ல்  காமோசிக்குப் பின்னர் ஆண்ட  அமோசி சென்று அவர்களை விரட்டினார்.

 

எங்கிருந்து வந்தனர்?

 

இவர்கள் எந்த இனத்தவர் என்பதற்கான துப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஹகா கசுட் Heqa Khasut என்றால் வெளிநாட்டு ஆட்சியாளர்- இது கிரேக்க மொழியில் ஹிக்ஸோஸ் ஆனது. சில காகிதங்களில் ஆவர்கள் Aamu ஆமு (ஆசிய நாட்டவர்) என்று சொல்லப்படுகிறது. அவர்களுடைய பெயர்களில் அசுர என்ற சொல் வருவதால் அவர்கள் செமிட்டிக் மொழியினர் என்று ஊகிக்கப்படுகிறது.

 

1985 ஆம் ஆண்டுவரை இரண்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ததில் அவர்கள் பைபிளில் குறிப்பிடப்படும் கானனைட் (Cananite) தொடர்புடையோர் என்பது தெரிகிறது. பானை ஓடுகள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றைக் கொண்டு இதை அறிந்தனர்.

 

படங்களைப் பார்க்கையில் அவர்கள் குதிரை பூட்டிய ரதங்களில் வருவதும், புதுவகை வில்லைப் பயன்படுத்துவதும் தெரிகிறது. இதை இதற்கும் முன்னர் பாலஸ்தீனம், சிரியா  ஆகிய இடங்களில் காணலாம். புதிய ஆட்சியைப் பிடித்த அவர்கள் எகிப்திய கலாசாரங்களின் பல அம்சங்களை ஏற்று அவர்களோடு இணைந்துள்ளனர்.

 

கிழக்கு மத்திய தரைக் கடலோர நாடுகளான கிரீஸ், துருக்கி, பாலஸ்தீனம், சிரியா ஆகிய பகுதிகளை லெவான்ட் LEVANT என்று அழைப்பர். அதன் தென்பகுதிலிருந்து இவர்கள் வந்தனர் என்பது சிலரின் கணிப்பு.

 

13-ஆவது வம்சம் ஆட்சி பலவீனமானபோது பல நாடோடிக் குழுக்கள் எகிப்துக்குள் புகுந்து குடியேறினர் அவர்களே பின்னர் இப்படி ஆட்சியைக் கைப்பற்றினர் என்பர் மற்றும் சிலர். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் எகிப்து நீண்ட தொலைவு கடல் வாணிபம் செதுள்ளது. கிரேக்க நாட்டிலும், அருகிலுள்ள தீவுகளிலும் இவர்களுடைய பரிசுப் பொருட்கள் கிடைத்தன. வாசனைத் திரவிய பாட்டில் மூடிகளில் மன்னர் க்யான் KHYAN (ஞானி?) பெயர் உள்ளது. அவர்கள் அருகாமை நாடுகளுடன் நட்புறவுடன் வாழ இப்படிப் பரிசுகளை அனுப்பியது குறிப்பிடத் தக்கது.

 

அவரிஸ் AVARIS என்ற தலைநகரில் ஹிக்ஸோஸ் அரண்மனையில்,  கிரேக்க நாட்டு மினோவன் MINOAN பாணி ஓவியங்கள் இருக்கின்றன. எகிப்தியர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிவர்கள்; ஆனால் ஹிக்ஸோஸ் கடலாதிக்கம்  செலுத்தினர்..

 

குதிரைகளை எகிப்துக்குள் கொண்டுவந்தவர்கள் என்பதாலும், ஞான், அசுர, யக்ஷ (Hykso) போன்ற சப்தம் உடைய பெயர்கள் இருப்பதாலும் இவர்கள் இந்திய நிலப் பரப்பிலிருந்து புறப்பட்டவர்களாக இருக்கலாம்.

 

தீப்ஸ் என்னும் தெற்கத்திய நகரிலிருந்து தன்னாட்சி செய்துவந்தோர் எகிப்திலிருந்து ஹிக்ஸோசை வெளியேற்றி முன்னைவிட சக்தி வாய்ந்த எகிப்தியப் பேரசை உருவாக்கினர்.

xxxx

 

 

My Research Articles on Egypt

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

 

Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014

 

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

 (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

 

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

14 october 2012

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

POST No. 716 dated 21 Novemeber 2013

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

15 September 2014

 

எகிப்திய அதிசயங்கள் 17 கட்டுரைகள்

 

1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017

2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017

 

3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)posted 18-2-2017

 

4.எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017

 

5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017

6.எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on  21-2-2017

 

7.எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017
8.மனித முகம்சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on  23-2-2017

9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

posted on  24-2-2017

 

10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)posted on  25-2-2017

 

11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11posted on  27-2-2017

12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on  2-3-2017

 

13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687)posted on  3-3-2017

 

14.மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on  4-3-2017

15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)

posted on  5-3-2017

 

16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on   6-3-2017

 

17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)

 

 

 

xxxxx

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)  BY S NAGARAJAN; posted on  Date: 14 May 2016

 

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)

 

8000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இந்துக்கள் குடியேற்றம்! (Post No.3707)

Written by London swaminathan

 

Date: 9 March 2017

 

Time uploaded in London:- 9-21 am

 

Post No. 3707

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரிலிருந்து பேரறிஞர்  நிகலஸ் கஜானாஸ் எழுதிய வேதமும் இந்திய-ஐரோப்பிய இயல் ஆய்வுகளும்  (Vedic and Indo-European Studies by Nicholas Kazanas, Aditya Prakashan, New Delhi, year 2015) என்ற புத்தகத்தில் பல சுவையான தகவல்கள் உள்ளன. 16 ஆண்டுகளுக்கு முன் வெளியான மரபியல் ஆராய்ச்சி மூலம் இந்துக்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து புறப்பட்டு ஐரோப்பா முழுவதும் சென்றது தெரிய வந்துள்ளது.

 

குஜராத், ராஜஸ்தான், சிந்து மாநிலங்களிலிருந்து புறப்பட்ட இந்துக்கள் வடமேற்காகச் சென்றனர்.

Genetics also has in the 2000 decade established beyond any doubt the fact that genes flowed into Europe from N W India (Gujarat, Rajsathan, Sindh); these are the R1a 1a and the M458 and they travelled north westward before 8000 years ago (see underhill 2010)

 

பத்தாம் பசலிக் கொள்கை

 

பிரபல சம்ஸ்கிருத அறிஞர் எம்.பி. எமனோ (M B Emeneau)  1954ஆம் ஆண்டில் எழுதினார்:

“கி.மு.2000 ஆம் ஆண்டுகளில் இந்திய ஐரோப்பிய மொழி (சம்ஸ்கிருதம் என்ற பெயர் பின்னால் ஏற்பட்டது) பேசும் ஒரு குழுவோ, குழுக்களோ இந்தியாவின் வடமேற்கிலுள்ள கணவாய்கள் வழியாக இந்தியாவுக்குள் வந்தது. இந்த மொழியியல் கொள்கை 150 ஆண்டுகளாக இருந்துவருகிறது. இதுவரை இதை மறுப்பதற்கான நல்ல காரணம் ஏதுமில்லை. ஆனால் இந்துக்கள் இப்படிப்பட்ட படையெடுப்பு நடந்தது குறித்து அறியாமையில் (ignorance) உழல்கின்றனர்”

இதற்கு நிகலஸின் பதில்:

எமனோதான் அறியாமையில் உழல்கிறார். இந்துக்கள் அல்ல. அவர் இப்படி எழுதி 12 ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற சைன்டிfபிக் அமெரிக்கன் விஞ்ஞான சஞ்சிகையில் பிரபல தொல்பொருட்துறை நிபுணர் ஜார்ஜ் டேல் 1966-ல் எழுதிய கட்டுரையில் ( Eminent archaeologist George Dale in Scientific American Journal) சிந்து சமவெளியில் படையெடுப்போ, வன்செயலோ, ரத்தக் களறியோ வெற்றி முழக்கமோ, நடந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். எமனோ பழைய கொள்கையை திரும்பச் சொன்னாரே தவிர சாட்சியங்கள், தடயங்கள் ஏதும் தரவில்லை ஆனால் ஏ.எல். பாஷம் ( Professor A L Basham, author of the famous book The Wonder that was India) போன்ற வரலாற்று அறிஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை ( ஆண்டு 1975) ஒப்புக்கொண்டனர். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இந்தியர்கள் இதை ஒப்புக்கொள்ளத் துவங்கினர் இப்போது சிலர் அமைதியான குடியேற்றம் என்று கதைக்கத் துவங்கியுள்ளனர் – என்று நிகலஸ் தனது நூலில் எழுதுகிறார்.

 

 

ரிக் வேதத்தின் காலம் கி.மு.3500

 

மாக்ஸ்முல்லர் செய்த பெரிய தவறு:

கதா சரித் சாகரம் என்ற 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சம்ஸ்கிருத கதைப் புத்தகத்தில் ஒரு பேய்க்கதை உள்ளது. அதில் காத்யாயனர் என்ற ஒருவரின் பெயர் வருகிறது. அவர்தான் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்  வாழ்ந்த இலக்கண வித்தகர் காத்யாயனர் என்று மாக்ஸ்முல்லர் (Max Muller)  ஊகம் செய்து கொண்டு வேதங்கள் கி.மு 1200 க்கு முன் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லிவிட்டார். அறிஞர் உலகம் முழுதும் இந்த அபத்தமான முடிவை எதிர்த்தவுடன் மாக்ஸ்முல்லர் அந்தர்பல்டி (ulta) அடித்தார்!

 

கோல்ட்ஸ்டக்கர், விட்னி, விண்டர்நீட்ஸ் ( Goldstrucker, Whitney, Winternitz and others) மற்றும் பலரெதிர்ப்பு தெரிவித்தனர். முல்லரும் ஒப்புக்கொண்டார். எவரும் ரிக் வேதத்தின் காலத்தைக் கணிக்கவே முடியாதென்று! ரிக் வேத துதிகள், 1500 அல்லது 2000 அல்லது கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருக்காலாம் – என்றார் மாக்ஸ்முல்லர்.

 

(ஆயினும் வெள்ளைக் காரர்கள் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப 1200 -ஆண்டை எழுதி வருகின்றனர். மேலை நாட்டிலும் பெரும்பாலான இந்திய பல்கலைக் கழகங்களிலும் கற்பித்து வருகின்றனர். ஜெர்மன் அறிஞர் ஜாகோபி (Herman Jacobi) , இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் பால கங்காதர திலகர் (B G Tilak) ஆகியோர் ரிக் வேதம் கி.மு 4500 க்கு முந்தையது என் று எழுதியதைக் காட்டுவதுகூட இல்லை. அவர்கள் இருவரும் தனித் தனியே ஆராய்ந்து வானியல் ரீதியில் (Based on astronomical data)  நிரூபித்ததை இன்றுவரை எவராலும் மறுக்கவும் முடியவில்லை; இந்திய வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுதுவது நமது தலையாய கடமை)

 

ஆரியர்கள் இந்தியாவுக்குள் குடியேறினர் என்பது அபத்தமான கொள்கை என்பதை அறிஞர் நிகலஸ் கிரேக்க, அவஸ்தன் (Greek and Avestan) மொழிகள் மூலம் நிரூபிக்கிறார்.

நிகலஸின் கணிப்பு ரிக் வேதம் கி.மு.3500 க்கு முன், அதாவது சிந்து வெளி நாகரீகத்தின் முன், என்பதாகும். அவர் மொழியியலைக் கொண்டு நிரூபிப்பது நமது புராணங்களிலும் பஞ்சாங்கத்திலும் எழுதியதை ஒத்திருக்கிறது. கி.மு 3102- ல் கலியுகம் துவங்கியது என்றும் அதற்கு சற்று முன்னர் வியாசர், வேதங்களை நான்காகப் பிரித்து நான்கு சீடர்களுக்கு அளித்து, அவற்றைப் பரப்பும் பணியை ஒப்படைத்தார் என்றும் எழுதியிருப்பதை எல்லோரும் அறிவர்.

 

கி.மு 7000 முதல் கி.மு 600 வரை தங்கு தடையற்ற தொடர்ச்சியான ஒரு கலாசாரம் வடமேற்கு இந்தியாவில் இருந்தது; யாரும் வெளியிலிருந்து புகுந்து மாற்றவில்லை என்பதையும் ஆல்சின், கெநோயர், போஸல், ஷாப்பர் ஆகியோர் அண்மைக்கால ஆராய்ச்சியில் காட்டிவிட்டனர். சிந்து சமவெளிக்குள் வெளியார் புகுந்ததற்காக தடயங்கள் அறவே இல்லை என்பதை அமெரிக்க அறிஞர் ஜே எம் கெநோயர் (American scholar J M Kenoyer)   தெளிவாகக் காட்டிவிட்டார்.

However all archaeologists today, experts in the area of Saptasindhu (Allchin, Kenoyer, Poschel, Shaffer and many others), emphasize the unbroken continuity of the native culture from c.7000 to 600 BCE, when the Persians began to invade the region.

இந்திய ஆபஸ்தம்ப, போதாயன ரிஷிகளின் நூல்களில் உள்ள சுலப சூத்ரங்களிலிருந்துதான் எகிப்திய, பாபிலோனிய கிரேக்க கணிதங்கள் உருவாயின என்று அமெரிக்க விஞான வரலாற்று அறிஞர் ஏ. செய்டென்பர்க் கூறுகிறார். இவை கி.மு 2000-ல் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

Of great significance are two articles by American historian of science A.Seidenberg wherein he argues that Egyptian, Babylonian and Greek mathematics derive from the Indic Sulbasutras of Apastamba and Baudhayana or a work like that, dated c 2000 BC as lower limit, thus furnishing totally independent evidence………………………………….

 

(எகிப்திய பிரமிடுகளை இந்தியர்கள் கட்டினார்கள் என்ற கட்டுரையில் சுலபசூத்திரங்கள் பற்றி நான் எழுதியுள்ளேன்)

 

ஆகையால் ரிக் வேதம் கி.மு 3500 க்கு முன் வந்திருக்க வேண்டும். பிராமணங்களும் உபநிஷத்துகளும் கி.மு 2500 ல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ராமர் கதை முதலிலும் மஹாபாரதக் கதை பின்னரும் வந்தன. இவை பற்றி மக்களுக்கு கி.மு.3000 வாக்கிலேயே தெரிந்திருக்கக்கூடும் என்று எழுதும் நிகலஸ் இதை மொழி இயல் ரீதியிலும் நிரூபித்துள்ளார். அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

–சுபம்–

 

எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)

Picture of Ka (Brahma)

Written by London swaminathan

 

Date: 8 March 2017

 

Time uploaded in London:- 21-32

 

Post No. 3705

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

எகிப்தில் (NTR) இந்திரன்

 

எகிப்து நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் ஹைரோகிளிபிக்ஸ் (hieroglyphs) என்ற சித்திர எழுத்தை எழுதினர். இதில் கடவுள் என்பதற்கான சித்திரம் — ஒரு கம்பில் சின்ன துணி சுற்றப்பட்ட படம் ஆகும். இதைத்தான் இந்திரத்வஜத்தின் முன்னோடி என்று சொன்னேன் (த்வஜம் = கொடி) ஏன் தெரியுமா? அந்த சித்திர எழுத்துக்கான ஒலி “ntr” என்.டி.ஆர் என்பதாகும். பழங்கால மொழிகளில் உயிர் எழுத்தை (vowel) எழுதமாட்டார்கள். நாமாகப் போட்டு நிரப்பி பின்னர் அதை வாசிக்கவேண்டும். என் டி ஆர் NTR என்பதில் உயிர் எழுத்துக்களைப் போட்டால் வரும் ஒலி இன் டி ர (INTIRA இந்திரன்)!! ஆக கடவுள் என்றால் எகிப்திய மொழியில் இந்திரன்!

God in Egypt (NTR = Intra) Indra Dwaja in Egypt

 

பிரம்மா வழிபாடு

 

தத் (THOTH) என்ற எகிப்திய தெய்வம் மொ”ழிக்கும் வார்த்தைகளுக்கும் படைப்புக்கும்” உள்ள தெய்வம். இதன் பங்கு பணிகளைப் படித்தால் அப்படியே பிரம்மாவுக்கு உள்ள எல்லாம் இருக்கும்.  பிரம்மாவுக்கு ஹம்சம் வாஹனம். அங்கு மற்றொரு நீர்ப்பறவையின் (IBIS) முகத்தை தத்– துக்குப் பொருத்தி இருக்கிறார்கள்.

 

 

தத்-தின மனைவி பெயர் செஷட் (Seshat). இவள் எழுத்துக்கு அதிதேவதை. நமது சரஸ்வதியை செஷட் என்று உச்சரிக்கிறார்கள்!

 

க  (KA) என்னும் எழுத்து பற்றி ரிக் வேதத்தில் ஒரு மந்திரம் இருக்கிறது. க என்பது பிரம்மாவைக் குறிக்கும் . எகிப்தில் க என்பதை பிராமி, தமிழில் உள்ளதைப் போலவே சித்திரத்தில் காட்டினர்!

நாராயணன் என்பதை நுன் (Nun) என்று வழிபட்டனர். நுன் என்பதே நாம் சொல்லும் பாற்கடல்; பரந்தாமன் அங்கே தானே பள்ளிகொண்டிருந்தார்.

 

தத்தாத்ரேயர் வழிபாடு

எகிப்திய எழுத்துக்களைப் படிக்க உதவிய ரோஸட்டா கல்வெட்டில் தத் என்ற தெய்வம் கிரேக்க நாட்டின் ஹெர்ல்மிஸ் ற்றைஸ்மெஜிச்டஸுக்கு  (Hermes trimegistus))  என்று கூறியுள்ளனர். ஹெர்மிஸ் பற்றிப் படித்தால் அப்படியே இந்து தெய்வமான தத்தாத்ரேயரின் குணங்கள் முழுதும் இருக்கும் இதில் தத் என்ற சொல் வருவதைப் பாருங்கள் (தத்– தாத்ரேயர்)

 

ட்ரைமெஜிஸ்டஸ் என்றால் மூன்று குணங்கள் ஒன்றானது. ததாத்ரேயர் பிரம்ம-விஷ்ணு-சிவன் மூன்று அவதாரங்களின் சங்கமம். மேலும் கிரேக்க தெய்வம் “அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி” போன்ற கருத்துக்களைச் சொன்னதாகவும் என்சைக்ளோபீடியா கூறும். இவை இந்துமத உபநிஷத வாக்கியங்கள் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

 

காயத்ரீ, சூர்ய வழிபாடு

 

இந்த வரிசையில் எழுதிய 16 கட்டுரைகளில் ஹதோர் (Hathor) என்னும் தேவி சவிதுர் என்னும் வேத கால தெய்வம் என்பதையும், ஹோரஸ் (Horus)  என்பது சூர்யஸ் என்பதன் திரிபு என்றும் விளக்கி இருக்கிறேன். ஆக, அங்கு காயத்ரீ, சூர்ய வழிபாடும் இருந்தன.

 

எகிப்தில் பவித்ரம் (Ankh)

எகிப்தியர் அங்க் (Ankh) என்ற அடையாலத்தை உபயோகித்தனர். இதன் தோற்றம் மர்மமானது என்று எகிப்தியல் நிபுணர்கள் கூறுவர். இது இந்துக்கள் பூஜை காலத்தில் பயன்படுத்திய பவித்ரம் ஆகும்.

 

விஷ்ணுவை நரசிம்மாவதார ரூபத்தில் வழிபட்டனர் ஆனால் அந்த தெய்வத்தைப் பெண் தெய்வமாக்கி, ஷெகாமட்  (ஜகன் மாதா) என்று பெயர் தந்தனர். இந்துக்கள் கூட நாராயணன் என்பதை நாராயணி (துர்கா) ஆக வழிபடுவதுண்டு.

 

விஷ்ணுவை நரசிம்மாவதார ரூபத்தில் வழிபட்டனர் ஆனால் அந்த தெய்வத்தைப் பெண் தெய்வமாக்கி, ஷெகாமட்  (ஜகன் மாதா) என்று பெயர் தந்தனர். இந்துக்கள் கூட நாராயணன் என்பதை நாராயணி (துர்கா) ஆக வழிபடுவதுண்டு.

Picture of Sekhemet -Narasimha avatar

எகிப்தில் திருமூலர் கருத்துகள் என்ற கட்டுரையில் திருமூலர்  பாடலை ஒட்டிய கருத்துகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.

 

எகிப்தில் மாதா (ma’at) பிதா (Ptah) என்ற தெய்வங்கள் வழிபடுவது பற்றியும் முன்னரே எழுதியுள்ளேன். உடம்பைக் கூடாகவும் ஆன்மாவைப் பறவையாகவும் சித்தரிக்கும் எகிப்தின் வழக்கத்தையும் திருக்குறளில் இருப்பதைக் காட்டினேன்.

 

ஆசிரிஸ் – சேத் பகைமை

 

ஆசிரிஸ் – சேத்  (Osiris Vs Seth) பகைமை என்பது பருவ காலங்களின் மாறுபாட்டைக் காட்டுவது போன்றது. நமது ஊரில் இந்துக்கள் காம தகனம், ஹோலி முதலிய பண்டிகைகளைக் கொண்டாடுவது போல அவர்களும் ஆசிரிஸ்- செத் மோதலை பண்டிகை யா

கக் கொண்டாடுவர்.

 

இந்துக்களைப் போலவே கோவிலகளுக்கு நிலம் அளித்து அதற்கு வரிவிலக்கும் தந்தனர்.

 

இந்துக்கள் கோவில்களுக்கு சிவப்பு வெள்ளை அடிப்பது போல அரணமனைச் சுவர்களுக்கு சிவப்பு-வெள்ளை வர்ணம் பூசினர்.

 

எகிப்திய பிரமிடுகளின் சுவர்களில் உள்ள விஷயங்கள், மரணப் புத்தகத்திலுள்ள விஷயங்கள் முதலியன வேத மந்திரங்களைப் போல இருப்பதையும்,  நட்சத்திரங்கள் பற்றிய அவர்களுடைய நம்பிக்கைகள் நம்மைப் போலவே இருப்பதையும்  முன்னரே காட்டிவிட்டேன்.

 

xxxxxxxxxxx

My Research Articles on Egypt

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

 

Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014

 

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

 (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

14 october 2012

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

POST No. 716 dated 21 Novemeber 2013

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

15 September 2014

 

 

எகிப்திய அதிசயங்கள் 16 கட்டுரைகள்

 

எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017

 

எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017

 

எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648) posted 18-2-2017

 

எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017

 

ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017

 

எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on  21-2-2017

 

எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017

 
மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on  23-2-2017

எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

posted on  24-2-2017

 

பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670) posted on  25-2-2017

 

பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11, posted on  27-2-2017

 

வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on   2-3-2017

 

 

சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687) posted on  3-3-2017

 

மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்? எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on  4-3-2017

 

சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)

posted on  5-3-2017

 

விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on   6-3-2017

 

 

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)  BY S NAGARAJAN; posted on  Date: 14 May 2016

 

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)
 

சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் -15 (Post No.3693)

Written by London swaminathan

 

Date: 5 March 2017

 

Time uploaded in London:- 6-50 am

 

Post No. 3693

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எகிப்தில் பயன்படுத்தப்பட்ட சித்திர எழுத்துக்கு ஹைரோக்ளிப்ஸ் (Hieroglyphs)  என்று பெயர். இது கிரேக்கர் உருவாக்கிய சொல். இதன் பொருள் புனித எழுத்து (Sacred writing). இது முதல் முதலில்  கி.மு.3200 ல் காணப்பட்டாலும் கி.மு.2800 முதலே பெரிய வாக்கியங்கள் உள்ள கல்வெட்டுகள் கிடைத்தன.

 

சிந்து சமவெளி எழுத்து பற்றி ஐம்பதுக்கும் மேலான விசித்திரமான விளக்கங்கள் இருப்பது போல ஆளாளுக்கு மனதில் தோன்றியதை எல்லாம் எழுதிக்கொண்டிருந்தனர். ஒரு பிரெஞ்சுக்காரர் ரோசட்டா கல்வெட்டு (Rosetta Stone) எனும் கல்வெட்டைக் கண்டுபிடித்தவுடன் குழப்பம் நீங்கியது; புதிரும் விடுபட்டுப் போனது! காரணம் அதில் மூன்று மொழிகளில் ஒரே விஷயம் எழுதப்பட்டிருந்ததால் எகிப்திய எழுத்துக்களின் பொருள் விளங்கியது.

அதுவரை அது பொரிவிலாங்காய் உருண்டையாக (பொருள் விளங்கா) இருந்தது!

 

இதுபற்றிய சில விநோத விஷயங்களைக் காண்போம். இதில் எகிப்தியரின் புத்தி எவ்வளவு கூர்மையானது என்பது தெரியும். ஆயிரம் பட எழுத்துக்களை (symbols) உபயோகித்து பல விஷயங்களை எழுதினர்.

இதில் மெய்யெழுத்துக்களை (consonants) மட்டுமே எழுதினர்; உயிர் எழுத்துக்களை (Vowels) உபயோகிக்கவில்லை. இதனால் எகிப்தியரின் பெயர்கள் எல்லாம் குத்துமதிப்பானவையே. நூற்றுக்கு நூறு சதம் உச்சரிப்பு யாருக்கும் தெரியாது.

 

முதலில் ஒரு படத்தை வரைந்தனர்.அதில் என்ன காண்கிறோமோ அதுதான் அதன் பொருள். பின்னர் அந்த சப்தத்தைக் கொண்டு புதிய சொற்களை (Symbol=Syllable=Sound) உருவாக்கினர்.

துவக்க கால மன்னர் பெயர்கள் கொஞ்சம் கரடுமுரடானவை; பின்னர் வந்தோரின் பெயர்கள் அர்த்தபுஷ்டியுள்ளவை; மிருதுவான ஒலி படைத்தவை என்பது எகிப்தியல் அறிஞர்களின் கருத்து.

 

எல்லா பழைய கலாசாரங்களிலும் மன்னரை காளை, சிங்கம் அல்லது புலி என்று வருணிப்பர். ஆனால் எகிப்தியர் மட்டும் ஹோரஸ் (HORUS) என்னும் தெய்வத்தைக் குறிக்கும் கழுகை ( Falcon பருந்து, Eagle கருடன்) மன்னரின் சின்னமாகப் பயன்படுத்தினர். சித்திரங்களைப் பயன்படுத்துவதில் எகிப்தியருக்கு நிகர் எகிப்தியரே! தங்க நிறமான பருந்து வானத்திற்கு உச்சியில் பறப்பது சூரியனை நோக்கிச் செல்லும் பறவையாக அவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

 

எகிப்தியர்கள் அன்றாடம் காணும் பறவைகள், மிருகங்கள், பொருள்களையே சித்திரமாக வரைந்தனர்.

 

எகிப்தில் வேதப் பசு

 

ரிக்வேதத்தில் தாய்பசுவுக்கும் கன்றுக்கும் இடையேயுள்ள அன்பை பெரிதும் புகழ்வர். ‘வத்ச’ என்றால் கன்று. இதனிடத்தில் தாப்பசு காட்டும் அன்பை ‘வாத்சல்யம்’ என்பர். இந்தச் சொல்லை மக்களின் பாசத்துக்கும் அன்புக்கும் பயன் படுத்தினர் இந்துக்கள். இந்த சின்னம்தான் எகிப்தியர், “மகிழ்ச்சியான, சந்தோஷமான” என்பதற்குப் பயன்படுத்தினர். வேத கால ரிஷிகளும் எகிப்தியரும் எந்த  அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினர் என்பதற்கு  இது ஒரு எடுத்துக்காட்டு.

தொடுவானம், மலை, சூரிய உதயம் — ஆகியவற்றை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினர் என்பதைக் கண்டால் அவர்களின் புத்தி தீட்சண்யம் விளங்கும்; அறிவுக்கூர்மை பொலிவுறும்.

 

மலை என்பதை இரண்டு முகட்டுடன் வரைந்தனர். இது மலை. அதன் இடையில் மூன்றாவது முகட்டை (சிகரத்தை) வரைந்தால் அது வெளிநாடு என்று பொருள்! அந்த முகட்டுக்குப் பதிலாக இரண்டு சிகரங்களுக்கிடையே சூரியன் போன்ற வட்டத்தை வரைந்தால் அது தொடுவானம், சூரியன் உதயம். அதற்கு மேல் சூரியன் கிரணங்கள் இருப்பது போல வரைந்தால் சூரியன் உதிக்கும் மலை. பிறகு இதையே ஐடியோக்ராமாக IDEOGRAM — அதாவது இந்த எண்ணத்தை, வேறு பொருளை உணர்த்தும் சின்னமாக — பயன்படுத்தினர். புகழுடன் தோன்றல், மன்னன் தோன்றுதல், உயர்நிலை என்றெல்லாம் பொருள் கொண்டனர்.

 

மன்னன் என்பவன் சூரியனைப் போன்றவன் (Solar Dynasty-Surya Kula) என்று சங்கத் தமிழ் பாடல்களும், சம்ஸ்கிருதப் பாடலகளும் போற்றுகின்றன.

 

தோன்றிற் புகழோடு தோன்றுபவர் மன்னன் அல்லாவா!

 

எல்லா மொழிகளும் வளர்ந்தது போலவே எகிப்திய மொழியும் 5000 ஆண்டுகளில் வளர்ந்தது. ஆகவே ஒரு சித்திர எழுத்து துவக்க கால எழுத்தா, பிறகால எழுத்தா அது எந்த இடத்தில் வருகிறது என்பதை எல்லாம் அறிதல் வேண்டும்.

 

லண்டனில் மாலை நேரக் கல்லூரிகளில் கூட ஹைரோகிளிபிக்ஸ் கற்பிக்கிறார்கள். எகிப்திய கல்வெட்டுகளைப் படித்தறிய  நீண்டகாலப் பயிற்சியும், அதன் பின்னுள்ள எகிப்திய வரலாறும் அவர்களுடைய கலாசாரமும் தெரிந்திருக்க வேண்டும். இப்படி இல்லாவிட்டால் இப்பொழுது சிந்து சம்வெளி எழுத்துக்களைப் பற்றி எல்லோரும் பிதற்றுவது போல நாமும் பிதற்றுவோம்.!!

 

……………….to be continued

மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்? எகிப்திய அதிசயங்கள் -14 (Post No.3689)

Written by London swaminathan

Date: 4 March 2017

Time uploaded in London:- 8-09 am

Post No. 3689

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com
11 ஆவது வம்சாவளி அரசர்கள், நடு ராஜ்ய (MIDDLE KINGDOM) காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் கால அரசர்களில் சிறந்தவர் நெபபத்ரெ மண்டுஹோதப் (NEBHEPETRE MONTUHOTEP- நவபத்ரி மண்டூக தேவன்) அவர் நீண்ட காலம் (2055-2004 BCE) அரசாட்சி செய்தார்.

இதற்கு முன்னர், பாரோ என்பவர் கடவுளின் அவதாரம் என்று கருதப்பட்டது. இப்பொழுது அவர் ஒரு பெரிய அதிகாரி என்று நிலைமை மாறிவிட்டது.

உண்மையில் 11-ஆவது வம்சாவளியில் அதிகாரியாக இருந்த ஒருவர் மன்னராகி (பாரோ- ஆகி) 12ஆவது வம்சத்தைத் துவக்கிவைத்தார்.
12-ஆவது வம்சாவளியின் சிறப்பமசம் எல்லா மன்னர்களும் நீண்டகாலம் ஆட்சி செய்தனர்.
(வெள்ளைக்கார்களின் இந்திய விரோதப் போக்கிற்கு இங்கே ஒரு எடுத்துக்காட்டு உள்ளது. புராணங்களில் உள்ள வரலாற்றை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துவிட்டு புதிய வரலாறு எழுதினர் வெள்ளைக்காரர்கள். ஆனால் எகிப்தில் உள்ள விஷயங்களை — முன்னுக்குப் பின்னாக முரணாகவுள்ள விஷயங்களை ஒடடுப் போட்டு உண்மைபோல எழுதி வருகின்றனர். இந்திய புராண மன்னர்கள் எல்லோரும் 60 முதல் 90 ஆண்டு ஆட்சி புரிந்தனர். ஆனால் இந்திய அரசர்களின் சராசரி ஆட்சிக் காலம் 20 ஆண்டுகள் மட்டுமே என்று வெளிநாட்டினர் பொய் வரலாறு எழுதினர். அதை மாற்றி உண்மை வரலாறு எழுதுவது நமது கடமை)
இந்த ஆட்சிக் காலத்தில் எகிப்தின் ஆதிக்கம் வெளிநாடுகளுக்குப் பரவியது. புதிய கலைகள் வளர்ந்தன; புதிய பாணி பின்பற்றப்பட்டது. பழைய ராஜ்யத்தில் “பிரம்மாண்டம்” என்று அளவுக்கு மதிப்பு கொடுத்தனர். நடு ராஜ்யத்தில் அளவு சின்னதானாலும் அதில் கலைவேலை நுணுக்கமாக மாறியது.

 

சிறந்த மன்னர் சேஷாத்ரி

12-ஆவது வம்சாவளியில் குறிப்பிடத்தக்கவர் சென்வர்ச்ரேட் SENWOSRET (சம்வத்சர சிரேஷ்டன்) கி.மு 1965-1920

இவர் இளவரசராக இருந்தபோது லிபியாவில் போர் செய்துகொண்டிருந்தார். அப்போது மன்னன் அமணமேத (Amenemhet I) படுகொலை செய்யப்பட்ட செய்தி வந்தது. உடனே எகிப்துக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றினார். இவருடைய பெயர் கிரேக்க புத்தகங்களில் சேஷாச்த்ரி (Sesostris) என்று எழுதப் பட்டுள்ளது!

இதற்கு அடுத்து வந்த 13-ஆவது வம்சம் எகிப்திய வரலாற்றில் மிகப்பெரிய மாறுதல்களை உண்டாக்கின. ஆசியாவிலிருந்து ஹிக்ஸோஸ் (HYKSOS) என்பவர் உள்ளே புகுந்தனர். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது என் கருத்து. அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்?

இறந்தவர்களுடன் படகுகளையோ கப்பல்களையோ புதைக்கும் வழக்கம் நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும், பிலிப்பைன்ஸிலும் இருந்தது. ஆயினும் மிகப்பழமையான தடயங்கள் எகிப்திலிருந்தே கிடைத்துள்ளன (கி.மு.2500).
ஆஹா (ஹோர் Hor Aha) என்ற மன்னன் கி.மு.3150-ல் ஆண்டான். அவனுடைய கல்லறை சக்கராவில் இருக்கிறது. அருகில் இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்கள் உண்டு. ஒரு கிராமப்புற காட்சியின் பொம்மைகளை செய்துவைத்துள்ளனர். இர்ணடாவது ஒரு படகு புதைக்கப்பட்டது. மன்னன் மேலுகத்துக்க்ப் போன பின்னர் நட்சத்திரங்களுக்கு இடையே படகில் பவனி வரவும், அப்படி பவனி வருகையில் பழைய கிராமப்புற காட்சிகளை நினைவுகொள்ளவும் இந்த ஏற்பாடு. இது எல்லாம் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் செய்துள்ளனர் எகிப்தியர்!

கீஸா (பெரிய) பிரமிடு மூலம் வரலாற்றில் அழியா இடம்பெற்ற கூஃபு (கிரேக்கர்கள் கீயாப்ஸ் CHEOPS என்பர்) ஒரு பெரிய கப்பலையும் விட்டுச் சென்றுள்ளார். மன்னர் தனது மறு உலக வாழ்வில் பயன்படுத்த இதைப் பிரமிடில் ஓரிடத்தில் புதைத்து வைத்தனர். இது இப்போது (GIZA SOLAR BOAT MUSEUM) மியூசியத்தில் உள்ளது.

143 அடி நீளமும் 20 அடி அகலமும் உடைய இந்தப் படகு, உண்மையில் பயன்படுத்திய படகு அல்ல. மன்னருக்காக அடையாளபூர்வமாகச் செய்யப்பட்டது. மேலும் இதை பூமியிலிருந்து 1954ல் எடுத்தபோது தனித் தனியாகக் கிடைத்தது. அதை படகுகள் பற்றி ஆராய்ச்சி செய்து அதன்படி ஒட்ட வைத்துள்ளனர். அதாவது வரலாற்றை “உருவாக்கியுள்ளனர்” (RECONSTRUCTED).

இதில் பழைய கயிறுகள் கூட அப்படியே உள்ளன. இது தைக்கப்பட்ட (Sewn) படகு. அதாவது கயிறு கொண்டு கட்டப்பட படகு. ஆணிகள் அல்லது மர ஆணிகள் (குச்சிகள்) (neither riveted nor nailed) பயன்படுதப்படவில்லை. ஒமான் கடற்கரையில் இன்றும் இத்தகைய படகுகள் உள்ளன. பாலைவனம் போன்ற பகுதிகளைக் கடக்கையில் அவைகளைப் பிரித்து துண்டு துண்டாக எடுத்துக் கொண்டு போய் பின்னர், மீண்டுமிணைத்து படக்காக்கிக் கொள்ளலாம்!

1991-ஆம் ஆண்டில் அபிதோஸ் (ABYDOS) நகரில் பா லைவனப் பகுதியில் ஒரு அரிய கண்டுபிடிப்பு! அதவது 12 படகு வடிவக் கல்லறைகள்!

 

உண்மையில் ஒவ்வொரு கல்லறையிலும் ஒரு படகு காணப்பட்டது. இந்த கல்லறைகள் செங்கற்களால் செய்யப் பட்டவை. சராசியாக ஒவ்வொரு கல்லறையும், 86 அடி நீளம். அதில் 75 அடி நீளமுள்ள மரத்தினால் ஆகிய படகு. பகிற்குள்ளும் செங்கற்களை நிரப்பி மேலே காரை கொண்டு பூசி வெள்ளை அடித்துள்ளனர். 2000 ஆம் ஆண்டில் இதைத் தோண்டி ஆராய்ந்தனர். இவைகளும் தைக்கபட்ட (sewn) படகுகள். ஆனால் உண்மையில் நதியில் பயன்படுத்தக் கூடியவை. வெறும் பொம்மைப் படகுகள் (not Models) அல்ல. மன்னர்கள் அல்லது அதிகாரிகளை ப் படகுகளோடு புதைப்பதில்லை. அவர்கள் அருகில் அல்லது கொஞ்சம் தொலைவில் புதைக்கப்படுவர்.

புதைக்கப்பட் ட இடம் தெரியாமல் இருக்க அந்த இடங்களை சம தரை போலக் காட்டி இருக்கின்றனர் இது போல சக்கரா, ஹெல்வா (Helwan) ஆகிய இடங்களிலும் படகுப் புதையல்கள் கிடைத்தன.

பல இடங்களில் யாருக்காக இந்தப் படகுகள் என்று பெயர் எழுதாமலேயே புதைத்துள்ளனர். பொதுவாக மன்னர்கள் புதைக்கப ட்ட இடங்களில் அவர், மேல் உலகத்தில் பயன்படுத்துவதற்காக துணிமணிகள், நாற்காலிகள், உணவு, பானங்கள் ஆகியவற்றை விட்டுச் சென்றனர். ஒரு வேளை இந்தப் படகுகள் மூலம் அவைகள் மேலும், மேலும் வரும் என்று கருதி இருக்கலாம்.

எகிப் திய சுவர் எழுத்துக்களில் மன்னரின் மறு உலகப் பயணம் (after life) பற்றியும், சூரிய தேவனின் வானுலகப் படகுப் பயணம் பற்றியும் எழுதி வைத்துள்ளனர். ஆகையால் நாம் இவற்றின் பயனை ஊகித்தறியலாம்.

அ ருகருகே புதைக்கப்ப ட்ட இரண்டு படகுகளின் அளவுகள் வித்தியாசப் படுவதால் ஒன்று மன்னரின் படகு, மற்றொன்று சூரியனின் படகு என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஊகிப்பர்.

 

5000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் விட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கான விஷயங்கள் குறித்து புதுப் புது விஷயங்களுடன் பத்திரிக்கைகளும், புத்தகங்களும் வந்து கொண்டே ருக்கின்றன. மேலை உலத்தில் எகிப்தியவியல் (Egyptology) ஒரு கவர்ச்சிகரமான துறையாகும்.

–தொடரும்

 

பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)

Written by London swaminathan

 

Date: 25 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 17-36

 

Post No. 3670

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

கட்டுரை-9ல் முப்பது வம்சங்களின் தோற்றத்தையும் முதல் வம்சாவளியையும் கண்டோம்.

இரண்டாவது வம்சாவளி (2800 BCE)

இரண்டாவது வம்சாவளி பற்றி அதிக விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை. ஆயினும் எகிப்து ஒரே நாடாக (Unification) உருப்பெற்றது. இந்த சாதனையை உருவாக்கியவர் காசிகெம்வி (Khasehemvy). அவர் மிகவும் பெரிய உருவம் படைத்தவர். அவர் விட்டுச்சென்ற நினைவலைகள் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. அவருக்கு மகன் கிடையாது. எகிப்திய வழக்கப்படி அவர் தன் மகளையே திருமணம் செய்துகொண்டார் என்று ஊகிக்கப் படுகிறது.. அவர் பெயர் (Nemmathap) நெம்மாதாப்.

 

துவக்க காலத்தில் பெண்களே ஆட்சிக்கு வந்தனர். அதாவது மன்னனின் மூத்த மகள் அல்லது மஹாராணி,  (Isis) ஐஸிஸ் என்னும் தேவதையின் அம்சமாகக் கருதப்பட்டாள். மன்னன், ஹோரஸ் (Horus) என்னும் கடவுளின் அவதாரமாகக் கருதப்பட்டார். சிம்மாசனத்துக்கான சித்திர எழுத்து மூலம்  ஐஸிஸ் குறிக்கப்பட்டாள். அந்த சிம்மாசனத்தில் உடகார்ந்ததால் மன்னர் கடவுள் அம்சம் பெறுகிறார்.

 

இந்து அரசர்களும் அரச பதவியை ராஜ்யலெட்சுமி என்று அழைத்தது ஒப்பிடத் தக்கது.

 

மூன்றாவது வம்சம் (2600 BCE)

நெம்மாதாப் (NemmaathapP மூலம் மூன்றாவது வம்சம் தோன்றியது. அவளுக்கு இரண்டு மகன்கள். முதல் புதல்வனின் பெயர் சனக்தே (Sanakhte) அல்லது Nebka நேப்கா. இரண்டாவது புதல்வன் தஜொசர் நெட்ஜெரிகேட் (Djoser Netjerykhet).

 

முதல் பிரமிட் (First Pyramid)

 

நெட்ஜெரிகேட் (கேது) என்ற மன்னந்தான் முதல் முதல் பிரமிட் கட்டியவர். இது படிக்கட்டுகள் போல அமைந்த (Step Pyramid)  பிரமிட். இது சக்கரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பிரமிடு கட்டிய பெருமை அவருடைய அமைச்சரும், கட்டிடக் கலைஞருமான இமோதேப் (Imhotep)  அவர்களையே சேரும் ஒரு  மில்லியன் டன் (பத்து லட்சம்) கற்களை நன்கு செதுக்கி உருவாக்கப்பட்ட ஒப்பற்ற கட்டிடம் இது. இதற்கு ஈடு இணையாக அக்காலத்தில் ஒரு கட்டிடமும் கிடையாது.

 

பல பெயர்கள் கேட் என்று முடியும். இது மஹாபாரதத்தில் பல அரசர்களின் பெயர்கள் ‘கேது’ என்பதன் திரிபாக இருக்கலாம். இதே போல அமைச்சரின் பெயர் ‘தேப்’ என்பது ‘தேவ’ என்பதன் திரிபாக இருக்கலாம். எகிப்தில் பல தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதை முன்னரே ஒரு  கட்டுரையில் தந்துள்ளேன்.

 

படிக்கட்டு வடிவில் அமைந்த முதல் பிரமிடுதான் பிற்கால மன்னர்களைப் பெரிய பிரமிடுகளைக் கட்ட ஊக்குவித்தது. எகி ப்துக்கு வரலாற்றில் அ ழி யாத இடத்தையும் புகழையும் ஈட்டித் தந்தது.

 

மன்னர் என்பவர் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டதால் மன்னரின் மதிப்பு உயர்ந்தது. ஹீலியோபோலிஸ் (Heliopolis) எனப்படும் சூர்யபுரி நகரம் பெரும் சிறப்புடன் திகழ்ந்தது. இங்கிருந்து நட்சத்திரங்களைக் கவனித்தனர். நட்சத்திரங்களை வழிபடவும் செய்தனர்.

 

நட்சத்திர வழிபாடு; அதிசய சிரியஸ் (SIRIUS) நட்சத்திரம்

 

இது இந்துமத்துக்கு மிக நெருக்கமான விஷயம். இன்றுவரை 27 நட்சத்திரங்கள் அதற்கான அதி தேவதைகள் வணங்கப்படுகின்றன. மேலும் வேதங்களிலேயே நடசத்திரங்களின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த இடத்தில் சிரியஸ் (Sirius) நட்சத்திரம் பற்றிய சில வியப்பான தகவல்களைக் காண்போம்; எகிப்தியர் வாழ்வில் சிரியஸ் நடசத்திரம் முக்கியப் பங்கு ஆற்றியது.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 19 ஆம் தேதி இது எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவின் வானத்தில் தோன்றும்போது நைல் நதி வெள்ளப் பெருக்கெடுக்கும். ஆகையால் இதை எகிப்தியர்கள் ஆதிகாலத்திலிருந்தே கவனித்து அது தோன்றும் தேதியைப் பதிவு செய்யத் துவங்கினர். இதை எகிப்தியர்கள் சோதி (Sothi) என்று அழைத்தனர் நாமதை ஜோதி (ஒளி) என்று அர்த்தம் செய்தாலும் பொருந்தும். ஏனெனில்  இதுதான் வானத்திலேயே மிகவும் பிரகசமான நட்சத்திரம். எல்லா பண்பாடுகளும் இதை நாய், ஓநாய் அல்லது அது போன்ற மிருகங்களுடன் சம்பந்தப்படுத்தினர். சம்ஸ்கிருதத்தில் இதை ம்ருக வ்யாத என்று அழைத்தனர். மான் வேட்டை என்று பொருள். எகிப்தில் இது தோன்றும்போது வெள்ளம் வந்தது போலவே கிரேக்க நாட்டில் கோடைக் காலம்  துவங்கும். ஆகவே அவர்களைப் பொருத்தமட்டில கோடை நட்சத்திரம். பாலிநேசியன் எனப்படும் பசிபிக் மஹாசமுத்திர பழங்குடியின ருக்கு இது கப்பல் விட உதவும் நட்சத்திரம்.

 

இந்த நட்சத்திரம் முதலில் இருந்த நிலைக்குத் திரும்பிவர 1460 ஆண்டுகள் ஆகும்.

 

எகிப்திய காலண்டர் சிரியஸ் நட்சத்திரம் தோன்றும் நாளன்று துவங்கும். இதை எகிப்தியர் சோப்டு (Sopdu) என்று அழைத்தனர். கிரேக்க நாட்டினர் சோதிக் காலண்டர் (Sothic Calendar) என்று அழைத்தனர். இந்துக்களின் சாந்திர மாதம் போலவே இதுவும் 360 நாட்களைக் கொண்டது. பின்னர் ஐந்து நாட்களைக் கூட்டி 365 நாள் என்று மாற்றினர். அப்படியும் ஒவ்வொரு ஆண்டும் 6 மணி  நேரம் துண்டு விழும். ஆங்கிலக் காலண்டரில் லீப் வருடம் என்று உண்டாக்கி இதை ஈடு செய்தனர். எகிப்தியரும் வேறு சில காலண்டர் முறைகளைப் புகுத்தி குறைகளைப் போக்கினர்.

 

புதிய ராஜ்யம் (New Kingdom) , நடு (Middle Kingdom) ராஜ்யம் ஆகியவற்றில் சிரியஸ் நட்சத்திர உதயம் பற்றி மூன்று முறை கல்வெட்டுகளில் பதித்துள்ளனர்.

 

தொடரும்………………..

எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

Written by London swaminathan

 

Date: 24 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 21-38

 

Post No. 3667

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எகிப்திய வரலாறு மிக குழப்பமானது;புராணங்களில் உள்ள அரசர் வம்சாவளிகளைவிட முன்னுக்குப்பின் முரணானது. ஆயினும் அதை ஒட்டுப்போட்டு ஓரளவுக்குச் சரிக்கட்டிவிட்டனர். உலகிலேயே முதலில் வரலாறு எழுதியது இந்தியர்கள்தான். சுகர் என்பவர்தான் புராணங்களில் இந்திய வரலாற்றை முதல் முதலில் எழுதினார். புராணம் என்பதற்கான ஐந்து லட்சணங்களில் ஒன்று வம்சாவளி. உலகில் இப்படி எந்த நாட்டிலும் கிடையாது. அதுமட்டுமல்ல இப்படி வரலாறு சொல்லுவதை நைமிசாரண்யம் முதலிய காடுகளில் முனிவர்கள் உட்கார்ந்து 12 வருடங்களுக்குக் கேட்டுள்ளனர். இப்பொழுதுதான் இதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியுள்ளனர். நமது இதிஹாச புராணங்கள் சொல்லுவதை நம்புவோமானால் எகிப்திய வரலாற்றுக்கு முந்தைய வரலாறு நம்முடையது. ஆனால் மிகப்பெரிய வித்தியாசம்—- மெசபொடோமியாவும் (இராக்), சுமேரியாவும் (தெற்கு இராக்), எகிப்தும் பாலைவனப் பகுதிகள் ஆனதாலும் அவர்கள் கற்களையும் களிமண் பலகைகளையும் பயன்படுத்தியதாலும் அவர்களுக்குப் பழைய ஆதாரங்கள் உள்ளன. நமக்கு நதிப் பிரதேசம் என்பதாலும், பருவமழை காரணமாகவும் நாம் ஓலைச் சுவடி/ மரப்பட்டைகளில் எழுதியதாலும் பழைய ஆதாரங்கள் இல்லை. இது நமது துரதிருஷடமே.

 

எகிப்தில் கார்பன் – 14 (Carbon Dating) விஞ்ஞான முறை ஆய்வுகளில் பெரும் வித்தியாசம் வந்தபோதும் ஆராய்ச்சியாளர்கள் அதைப் பூசி மெழுகி ஓரளவுக்குத் தட்டிக்கொட்டி ஒரு வரலாற்று தேதிகளைக் கொடுத்துள்ளனர்!

பாலர்மோ ஸ்டோன் (Palermo Stone) (கல்வெட்டு), அபிதோஸ் (Abydos) நகர பட்டியல், டூரின் (Turin) நகர பட்டியல் சக்கரா (Saqqara) நகர பட்டியல் என்று பல்வேறு ஆதாரங்களை ஒட்டுப்போட்டு ஒரு புதிய பட்டியலை உருவாக்கினர். இதற்கெல்லாம் அடிபடையாக அமைந்தது மனிதோ (Manetho) என்பவரின் பட்டியல். எப்படி சுகர் வம்சாவளி பட்டியலை புராணங்களில் கொடுத்தாரோ அதைப் போல மனிதோ ஒரு அடிப்படையை அமைத்துக் கொடுத்தார்.

யார் இந்த மனீதோ?

 

இரண்டாம் டாலமி பிலடெல்பியாஸ் Ptolemy II Philadelphias (கி.மு.285-246) காலத்தில் ஹீலியோபோலிஸின் (சூரியபுரிHeliopolis) தலைமை குருமார் மானீதோ. (இந்தப் பெயர் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருவதால் இது சம்ஸ்கிருதப் பெயர் என்றும் சொல்லலாம்) இவர் சொல்லும் விஷயம் விநோதமானது:

 

முதலில் எகிப்தை (Time of the Gods) தெய்வங்கள் ஆண்டன.

அதன் பின்னர் இறந்தோரின் ஆவிகளும் (The spirits of the dead, the demi gods) தேவர்களும் ஆண்டனர்.

அதன்பின்னர் இறந்து போகக்கூடிய மனிதர்கள் (mortal kings) ஆண்டார்கள்.

 

நமக்குக் கிடைக்காத பல விஷயங்கள் அவருக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்திருக்க வேண்டும்! அவர்தான் எகிப்தின் மன்னர் வம்சங்களை 30 வம்சாவளிகளாகப் (Dynasties) பிரித்தார். ஏன் இப்படிப் பிரித்தார்? ஒரு குடும்பத்தினரின் ஆட்சி — ராஜா, அவரது மகன், அவரது பேரன், அவரது கொள்ளுப்பேரன் என்று ஆண்டு வேறு ஒருவர் கைப்பற்றும்வரை —ஒரு வம்சாவளி என்று பிரித்தார். இதைத்தான் இன்றுவரை எல்லோரும் பின்பற்றி வருகின்றனர். இது மேல் எகிப்தும், கீழ் எகிப்தும் ஒரு குடைக்கீழ் (Unification) வந்த பின்னர் துவங்கிய வம்சாவளிகளாகும். ஆனால் அதற்கு முன், பழங்காலம் (Archaic Period), வம்சாவளிக்கு முந்தைய அரசர் காலம் (Pre Dynastic Period),  என்றெல்லாம் இருந்துள்ளன. அதற்கும் முன்னர் படாரியன் (Badarian) காலம் நகாதா (Naquada) காலம்  என்றெல்லாம் சேர்ந்து சுமார் 10,000 ஆண்டு வரலாற்றைக் கொண்டது எகிப்திய வரலாறு. மனீதோ சொன்ன பல அரசர்களுக்கு வரலாற்றுச் சான்றுகளோ, தொல் பொருட் துறை ஆதாரங்களோ கிடையாது!

மேலும் தனித்தனி அரசர் காலமும், வம்சாவளியின் மொத்த ஆட்சிக்காலமும் அவரது பட்டியலில் உள்ளன. ஆனால் இரண்டு கணக்குகளும் ஒத்துப் போவதில்லை. நமது புராணங்களில் உள்ளதைப் போலத்தான்! பெரிய கணக்குப் புலிகளையும் திணற வைக்கிறார் மனீதோ!

 

முன்னரே எகிப்திய மன்னர் வம்சாவளிகளை பழைய ராஜ்யம் (Old Kingdom) புதிய ராஜ்யம் (New Kingdom), கிரேக்க- ரோமானியர் ஆட்சிக் காலம் என்ற மூன்று பிரிவுகளாகக் கொடுத்துள்ளேன். இடையிடையே குழப்பமான காலம் இருந்ததை இடைப்பட்ட காலம் (First, Second Intermediate Periods)  ஒன்று, இரண்டு என்றெல்லாம் பிரித்துள்ளனர்.

 

கிறிஸ்தவ ஆட்சியாளர் , எகிப்திய நாகரீகத்தின் மிச்ச மீதிகளைச் சிதைத்தனர். வெளிநாட்டுப் படைகள் பீரங்கிப் பயிற்சிக்கு எகிப்திய சின்னங்களைப் பயன்படுத்தினர். கல்லறைத் திருடர்கள், அவைகளைத் தோண்டி, விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றனர். நமது நாட்டில் கோட்டைச் சுவர்களை உடைத்து வீடுகட்ட கற்களைக் கொண்டு சென்றது போல பலர் செய்தனர். மிச்சம் மீதி, பூமிக்கு அடியில் இருந்ததால் பிழைத்தன.

 

தேள் (Scorpion) , இரிஹோ (Iryhor)ர், கா (Ka) (கா என்றால் சம்ஸ்கிருதத்தில் பிரம்மா), ஆஹா (Aha), மெனெஸ் Menes (மனு), நர்மேர் (Narmer நரமேரு) முதலிய மன்னர்களுக்குப் பின்னர், எகிப்திய வரலாறு துவங்குகிறது. முதல் இரண்டு வம்சாவளிகளை பழங்காலம் என்னும் பிரிவில் வைக்கின்றனர்

 

இனி ஒவ்வொரு வம்சாவளியின் சுவையான அம்சங்களைக் காண்போம்:

முதல் வம்சாவளி

முதல் வம்சாவளி மன்னர்கள் சுமார் 300 ஆண்டுக் காலம் ஆண்டனர். எகிப்தின் பிற்கால வளர்ச்சிக்கான அஸ்திவாரம் இடப்பட்டது. தெற்கே நைல் நதி உற்பத்தியாகும் இடம் முதல் வடக்கில் கடலில் சங்கமிக்கும் வரை ஒரே நாடாக இன்ணைக்கப்பட்டது. மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் மதிக்கப்பட்டபோதும், அவர்களுடைய கல்லறைகள் எல்லாம் சேதமாக்கப்பட்டன. மன்னருக்கு அடுத்தபடியாக முத்திரைதாங்கிகள் (SEAL BEARERS) எனப்படும் பிரபுக்கள் இருந்தனர். விரிவான, சிக்கலான அதிகார வர்கம் தோன்றியது. இவர்கள் காலத்தில் பிரமிடுகள் தோன்றவில்லை. வெறும் செங்கல் கல்லறைகளில் மன்னர்கள், அதிகாரிகள் புதைக்கப்பட்டனர். இவை எல்லாம் கி.மு.3150 ஐ ஒட்டிய காலத்தில் — இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் — நடந்தன.

அடுத்த கட்டுரைகளில் ஏனைய 29 வம்சங்களைக் காண்போம்.

 

–SUBHAM–

 

மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664)

Written by London swaminathan

 

Date: 23 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 21-10

 

Post No. 3664

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் பிரமிடுகளுக்கு அடுத்தபடியாக எல்லோருக்கும் தெரிந்தது ஸ்பிங்ஸ் SPHINX என்னும் பிரம்மாண்டமான சிலை ஆகும். இதற்கு மூன்று பெருமைகள் உண்டு:

 

உலகிலேயே மிகப்பெரிய சிலை!

உலகிலேயே பழமையான சிலை!

உலகிலேயே விநோதமான சிலை!

இந்து மதத்தில் விஷ்ணுவுக்கு முக்கிய அவதாரங்கள் 10. அதில் ஒன்று நரசிம்மாவதாரம்; அங்கே சிங்க முகம் , மனித உடல். ஆனால் எகிப்தில் மனித முகம், சிங்க உடல்: நேர் எதிர் உருவம்.

 

எகிப்தில் எங்கே உள்ளது (Sphinx) ஸ்பிங்ஸ்?

கீஸா (Giza) என்னும் இடத்தில் இந்தச் சிலை இருக்கிறது. அது எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு அருகில் உள்ளது.

 

இந்த சிலையின் பொருள் என்ன? இது என்ன?

 

இது எகிப்திய மன்னரின் முகத்தையும் படுத்திருக்கும் சிங்கத்தின் உடலையும் கொண்டது.

 

இதன் உயரம் நீளம் என்ன?

இதன் உயரம் 66 அடி; நீளம் 240 அடி. பெரும்பாலும் ஒரு மலையைச் செதுக்கி உருவாக்கியுள்ளனர். ஆயினும் அத்தோடு கல்வேலைப்பாடு செய்து பொருத்தியுள்ளனர்.. அருகில் நாலாவது அரச வம்சத்தைச் சேர்ந்த காப்ரே என்ற மன்னரின் பிரமிடு இருக்கிறது

இது கொஞ்சம் சேதம் அடைந்துள்ளது. எகிப்துக்குள் வந்த துருக்கி படைகள் துப்பாக்கி– பீரங்கிப் பயிற்சிக்கு இதை குறியிலக்காகப் பயன்படுத்தியது!!

 

3000 ஆண்டு எகிப்திய வரலாற்றில் பலமுறை இதைப் பாதுக்காக்க மேல்பூச்சு பூசினர். பாலைவனப்பகுதியில் இருந்ததால் பெரும்பகுதியை மணலும் மூடிப் பாதுகாத்தது. முன்காலத்தில் இதில் பல வர்ணங்களைப் பூசி யிருந்தனர். உடலையும் முகத்தையும் சிவப்பு வர்ணத்தாலும் மன்னரின் தலைக் கிரீடத்தை மஞ்சள்-நீல நிறங்களாலும் அலங்கரித்தனர்.

 

 

ஸ்பிங்ஸ் சிலை குறித்து இரண்டு புதிர்கள் உள்ளன:

  1. இதன் வயது எதற்காக இப்படி ஒரு விநோதமான உருவத்தை அந்த மன்னன் சமைத்தான்?

 

இது இருக்கும் பகுதியில் பெரிய பிரமிடு (Great Pyramid)  என அழைக்கப்படும் கூஃபூவின் பிரமிடு, அவனுடைய மகன் காஃப்ரேயின் பிரமிடு, அவனுடைய மகன் மென்கௌரேயின் பிரமிடு (அதாவது கூஃபுவின் பேரன்) ஆகியன இருக்கின்றன. சிலர் இது காப்ரேயின் முகம் என்பர்; மற்றும் சிலர் இது மன்கௌரேயின் முகம் என்பர்; இவர்கள் எல்லோரும் கி.மு 2600 முதல் 2400 வரை ஆண்டவர்கள். ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் இது அவர்களுக்கெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது — அதாவது கி.மு.5000 தான் இதன் உண்மை வயது என்பர். அப்படியானால் 7000 ஆண்டுகளாக இது மழையிலும் வெய்யிலிலும் கஷ்டப்பட்டு வருகிறது!

 

ராபர்ட் ஸ்சோச் (Robert Schoch) என்ற அறிஞர் காலநிலை மாற்றத்தால் சிலைக்கு ஏற்பட்ட அரிப்பு/ சிதைவை வைத்துக் கணக்கிட்டு 7000 ஆண்டுப் பழமையானது என்பார். ஆனால் தொல்பொருட்துறை அறிஞர்கள் இது காப்ரே மன்னரின் காலத்தை ஒட்டியே உருவாகி இருக்க வேண்டும் என்பர். அப்படியானால் இதன் வயது 5000 ஆண்டுகளுக்கும் குறைவே.

 

இப்படி ஒரு உருவத்தை ஏன் உருவாக்கினர்?

இது திட்டமிடப்பட்டு உருவாக்கிய சிலை என்பது ஒருசாரார் வாதம்; மற்றொரு கோஷ்டி, இல்லை, பக்கத்தில் உள்ள பிரமிடுகளுக்குக் கல் தோண்டுகையில் கற்களை வெட்ட வெட்ட இப்படி ஒரு உருவம் இயற்கையிலேயே உருவாகியது. அதை வீணடிக்கவேண்டாம் என்று எண்ணி, சிங்க உருவமாகச் செதுக்கிவிட்டார்கள் என்கின்றனர்.

 

அருகிலேயே ஸ்பிங்ஸ் கோவில் (Sphinx Temple)  இருக்கிறது அது காப்ரே (Khafre) என்ற மன்னருடன் தொடர்புடையது. ஆகையால் காப்ரேதான் இதையும் உருவாக்கினான் என்பது ஊகம்! இது ஒரு சாலையின் முடிவில் இருப்பதாலும் அருகில் மிகப் பழைய பிரமிடுகள் இருப்பதாலும் அவைகளின் காவலனாக — காவல் தெய்வமாக- இதைப் படைத்தனரோ என்றும் எண்ணுவர். இது பற்றி எந்தக் கல்வெட்டும் இல்லா ததால் இப்படிப் பல ஊகங்கள், புதிர்கள் உலவுகின்றன!

 

எகிப்திலும் கிரேக்க (Greece) நாட்டிலும் பலவகையான ஸ்பிங்ஸ் சிலைகள் உள்ளன. அவைகளைப் பின்னர் காண்போம்.

 

–Subham–

 

 

சிவபக்தன் சேரன் செங்குட்டுவன்! (Post No.3662)

Written by London swaminathan

 

Date: 23 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 6-27 am

 

Post No. 3662

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சிலப்பதிகாரத்தில் பெரிதும் புகழப்படும் சேரன் செங்குட்டுவன், பெரிய சிவபக்தன். கண்ணகிக்கு சிலை எழுப்புவதற்கு இமயமலை நோக்கி அவன் புறப்பட்டபோது என்ன நடந்தது என்பதை சேரன் தம்பி இசைத்த சிலப்பதிகாரம் செப்புவதைக் காண்போம்:-

 

ஞாலங்காவலர் நாள்திறை பயிரும்

காலைமுரசம் கடைமுகத்து எழுதலும்

நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ் சென்னி,

உலகுபொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி

மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங் கொண்டு,

மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை

நறைகெழு மாலையின் நல்லகம் வருத்த,

கடக்களி யானை பிடர்த்தலை ஏறினன்

–கால்கோட்காதை, சிலப்பதிகாரம்

 

பொருள்:-

நாட்டினைக் காவல் செய்யும் பிற மன்னர்கள் கப்பம் (திறை) செலுத்த வருக என்று காலை முரசம் வஞ்சி மாநகரின் கடை வாசலில்  ஒலித்தது. நிலவுக் கதிரினை முடித்த நீண்ட பெரிய சடை முடியும், உலகனைத்தும் ஒருங்கே தன் கைப்படுத்தும் உருவமும் உடைய உயர்ந்தோனான சிவபெருமானின், செவ்வையான திருவடிகளை (காலணி) வெற்றி பொருந்திய வஞ்சி மாலையுடன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். யாருக்கும் வணங்காத தன் தலையில் சிவன் திருவடிகளை வைத்து வலம் வந்தான் பிராமணர்கள் , அப்போது கொண்டுவந்த ஆகுதிப் புகையானது தேன் நிறைந்த செங்குட்டுவன் மலர்மாலையை வாடுமாறு செய்தது. மதக் களிப்பினுடைய யானையின் தலையில் செங்குட்டுவன் அமர்ந்தான்.

 

அந்த நேரத்தில் ஆடக மாடத்திலுள்ள (திருவனந்ததபுரம்) பெருமாள் கோவில் பிரசாதத்தை  அர்ச்சகர்கள் கொடுத்தனர்.  தலை மீது சிவன் பிரசாதத்தை வைத்திருப்பதனால், திருமால் பிரசாதத்தை தோள்மீது வைத்துக்கொண்டான்.

 

செங்குட்டுவன் சிவபக்தன் என்பதை மாடல மரையோன் என்ற பிராமணனும் சுட்டிக்காட்டுகிறான்:-

 

நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்

அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்

அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,

பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,

புதுவதன்றே; தொன்றியல் வாழ்க்கை

ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி

மாநிலம் விலக்கிய மன்னவன் ஆதலின்

செய்தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்

கையகத்தன்போற், கண்டனையன்றே!

ஊழிதோறு ஊழி உலகங்காத்து

நீடுவாழியரோ நெடுந்தகை! என்ற

மாடல மறையோன் தன்னொடு மகிழ்ந்து

–வரந்தரு காதை

 

பொருள்:-

நல்ல செயல்களைச் செய்தோர் சுவர்க்கத்துக்குச் செல்லுதலும் அன்புள்ளம் மிக்கவர், பற்றின் காரணமாக மீண்டும் பிறத்தலும் அறத்துக்கான பயன் தப்பாது சம்பவித்தலும், பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் புதுமையானவை அல்ல. தொன்றுதொட்டு நடந்துவரும் வாழ்க்கை நியதி இது. ரிஷப வாஹனத்தில் பவனிவரும் சிவனின் அருளினால் வஞ்சியிலே தோன்றி,  உலகம் சிறப்புறுமாறு செய்த மன்னன் நீயாதலின், செய்த தவப் பயன்களையும் உயர்ந்தோரின் உருவையும் நின் கைஅகத்தே உள்ளது போலத் தெளிவாகக் கண்டனை. ஊழிதோறு ஊழி உலகம் காத்து நீ நீடூழி வாழ்வாயாக! நெடுந்தகையே, நீ வாழ்வாயாக.

 

இவ்வாறு மாடல மறையோன்  வாழ்த்திய பிறகு செங்குட்டுவனும் அவன்பால பெரிதும் மகிழ்ச்சியுடைவன் ஆனான்.

 

முந்தைய காதைகளில் கோவில்கள் பற்றிச் சொல்லும்போது சிவபெருமானின் கோவிலை பிறவா யாக்கைப் பெரியோன் கோவில் என்று பாராட்டியுள்ளார் இளங்கோ அடிகள்.

என்னுடைய பழைய கட்டுரைகள்:—

 

சிலப்பதிகார கோவில்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/சிலப்பதிகார-கோவி…

Translate this page

சிலப்பதிகாரக் கோவில்கள். ஆராய்ச்சிக் கட்டுரை: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்: 1215; தேதி 5 ஆகஸ்ட் 2014.சிலப்பதிகாரம் என்னும் தமிழ் …

2.சீனா, ஜப்பான், தமிழ் சிலப்பதிகாரம் அதிசய ஒற்றுமை! (ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1318; தேதி:– 30 September 2014.)

3. கோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல் (Research Article No.1765;  Dated 1April 2015.)

The Wonder that is Madurai Meenakshi Temple | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2011/…/wonder-that-is-madurai-meenakshi-temple.htm…

14 Oct 2011 – How did the Houston (USA) Meenakshi temple receive a Madurai idol even after the … Madurai Meenakshi Temple is an architectural wonder.

 

 

—SUBHAM—

 

 

 

 

 

எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660)

லபிஸ் லசூலி Lapis lazuli நீலக்கல் (Wikipedia)

 

Written by London swaminathan

 

Date: 22 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 16-59

 

Post No. 3660

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் இந்தியாவின் தாக்கம், துவக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக விளங்குவது நீலப் பாறை (லபிஸ் லசூலி) ஆகும். எகிப்தியர்களுக்கு மிகவும் பிடித்தது நீலம். தங்கள் நாட்டின் நதிக்கே நீலம் என்ற சம்ஸ்கிருதப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். நீல ( niila= Nile) என்பதை ஆங்கிலத்தில் எழுதி அதை நைல் என்று திரித்துவிட்டனர். ஆயினும் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? இன்றும் ஆங்கிலத்திலும் ப்ளூ நைல்(BLUE NILE) நதி என்றே சொல்லுவர்.

 

நீலம் என்ற விலைமதிப்புமிக்க Sapphire-க்கு அடுத்த படியாக உபயோகத்தில் உள்ளது லபிஸ் லசூலி (LAPIS LAZULI) எனப்படும் நீலப் பாறை ஆகும். இதை பவளம் போல வெழுமூன வழு வழு என்று பாலிஷ் செய்தால் சலவைக்கல் போல வழுவழுப்பாகிவிடும்.

 

எகிப்தியர்களுக்கு இந்தக் கல் மீது ஒரு அலாதிப் பிரியம்; இதை பாரதத்திலிருந்து இறக்குமதி செய்து, மன்னர் கிரீடம் முதல் பொம்மைகள் வரை எல்லாவற்றுக்கும் பயன்படுத்தினர். இதை சிந்து வெளி மக்களும் பயன் படுத்தியதை எனது ஆராய்சிகட்டுரையில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

 

இந்தக் கல் கிடைக்கும் இடங்கள் இப்பொழுது ஆப்கனிஸ்தான் நாட்டிலும் பாகிஸ்தான் நாட்டிலும் உள்ளன. ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியர் இதைப் பெற்றபோது இவ்விரு இடங்களும் அப்போது உலகிலேயே பெரிய நாடான பாரதத்துக்குள் இருந்தன. சந்திரகுப்த மௌர்யன் ஆட்சிக் காலத்தில்கூட — 2400 ஆண்டுகளுக்குமுன் – இவை பாரதப் பேராசின் ஒரு பகுதியே!

லபிஸ் லசூலி (Lapis lazuli)  கிடைக்கும் இடங்கள்:

படக்க்ஷான் (Badkshan) – ஆப்கனிஸ்தான்

குவெட்டா (Quetta) – பாகிஸ்தான்

 

எகிப்து நாடு,  இவ்விரு இடங்களிலிருந்து தொலைவில் இருந்தாலும், இந்திய வணிகர்கள் இதை ஈரான் வழியாக கொண்டு சென்றனர்.

 

எகிப்திய மன்னர்கள் தங்கள் பெயரை எழுத சதுரக் கட்டதைப் ( SEREKH) பயன்படுத்தினர். இதை செரிக் என்பர். இது சார்க்க (Saarka) என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் திரிபாக இருக்கலாம். “சூரியன் தொடர்புடைய” (Sa+ Arka) என்று பொருள்; மன்னர் தன்னை ஹோரஸ் (சோரஸ்= சூர்ய= சோலார்; Horus=Sorus=Solar= Suurya) என்ற சூரியக் கடவுளின் பிரதிநிதியாகக் கருதினார். மேலும் இது தென்மேற்கு ஆசியாவில் (South West Asia) உருவானதாக எகிப்தியவியலாளர் (Egyptologists)  கூறுவர்.

 

இந்துக்கள்தான் வட்டம், சதுரம் போன்ற வடிவங்களை வைத்து சொற்களை உருவாக்கினர் பூஜ்ய (வட்டம்) என்றால் புனிதத்துக்குரிய என்று பொருள். சதுரம் என்றால் புத்திசாலி என்று பொருள்; யார்கொலோ சதுரர்? என்று மாணிக்கவாசகர் சிவபெருமானைக் கிண்டல் செய்கிறார். சதுரா என்று கடவுளை பஜனைப் பாடல்களில் புகழ்வர். சதுரத்திலிருந்து உருவான சாதுர்யம், சாதுர்யமான என்ற சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். எவ்வகையில் பார்த்தாலும் இது இந்துக்கள் உருவாக்கியதே.

Goddess Hathor (Hindu name Savitr)

மேலும் தென்மேற்கு ஆசிய கட்டிடக்கலை அம்சங்களும் எகிப்தில் காணப்படுகின்றன. பிரமிடுகள் கட்டுவதற்கு முன் மஸ்தபா (Mastaba)  என்பப்படும் செங்கல் சமாதிகளி ல்தான் எல்லோரையும் புதைத்தனர். இவை கி.மு.3500 முதல் சுமேரியாவில் (Mesopotamia)  காணப்படுகின்றன. பின்னர்தான் கருங்கல் கட்டிட பிரமிடுகள் தோன்றின.

தெற்கே உதித்த நாகரீகம்

 

எகிப்திய நாகரீகம் மேல் எகிப்து எனப்படும் தெற்கு எகிப்தில் தோன்றியது. பின்னர்தான் நைல் நதி சங்கமம் ஆகும் கடற்பகுதிவரை — வட பகுதி வரை பரவியது. இதை கீழ் எகிப்து என்பர். தெற்கில் முதல் முதலில் எல்-படாரி el-Badari, எல்-அம்ரா el-Amra, நகாதா Naqada என்ற மூன்று விதமான தோற்றுவாய்களைக் காணலாம். எப்போதாவது எகிப்துக்கு ஆபத்து வந்தாலோ, கலாசாரம்  கீழ்நோக்கிச் சென்றாலோ உடனே- பழைய கலாசாரம் தஞ்சம் புகுந்த இடம் தென்பகுதிதான்.

 

தமிழுக்குத் தென் பாண்டி நாடு எப்படிக் காவலனாக இருந்ததோ அது போல எகிப்திய பண்பாட்டுக்கு தென் எகிப்து காவலனாக இருந்தது. ஆயினும் தொடக்க காலத்திலேயே எகிப்துக்குள் வெளிநாட்டினர் குடியேறினர். அதனால்தான் இந்த நாட்டுகே மிஸ்ர (கலப்பட) தேசம் என்று பெயர் என்பதை முதல் கட்டுரையிலேயே விளக்கினேன்.

 

அடுத்த கட்டுரையில் ஒவ்வொரு வம்ச (Dynasty wise) அரசு பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம்.

 

 

எனது பழைய ஆரய்ச்சிக் கட்டுரை:–

Indus Valley to Egypt: Lapis lazuli Export! | Tamil and Vedas

Indus Valley to Egypt: Lapis lazuli Export!

6 Sep 2014 – Afghanistan and Pakistan, parts of ancient Bharat were the main sources for this stone, says the archaeologists. The contact between Egypt and the Hindu kings of Turkey and Syria is well documented. … Egypt and Sumer had jewellery made up of lapis lazuli blue stones from 2500 BCE……………..

 

–Subham–