தினமணி ரகசியம்: திருடனுக்கு தேள் கொட்டிய கதை! (Post No.3298)

18-05-1996_din_001_cty_mds

Written  by London Swaminathan

 

Date: 28 October 2016

 

Time uploaded in London: 18-59

 

Post No.3298

 

Pictures are taken from various sources; thanks

 

திருடனுக்கு தேள் கொட்டினால் என்ன ஆகும்? சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. கூச்சல் போட முடியுமா? அப்படிப் போட்டால் ‘உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பது போல, தேள் கொட்டிய கடுப்புடன், ஆட்கள் அடிக்கும் கடுப்பும் சேர்ந்து விடும்.

 

இதே போல பத்திரிக்கைகளில் தவறு நேர்ந்தால் சில விஷயங்களில் “திருத்தம்” என்று போடுவோம். இன்னும் சில விஷயங்களில் திருத்தம் போடாமலிருப்பதே மேல். அதாவது தேள் கொட்டிய திருடன் போல மௌனமாக இருந்து விடுவோம்.

நான் 16 ஆண்டுக்காலத்துக்கு மதுரை தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராகவும்(SENIOR SUB EDITOR)  5 ஆண்டுக் காலத்துக்கு மேல் பி பி சி தமிழோசையில் ப்ரொட்யூசராகவும் (PRODUCER,BBC WORLD SERVICE) வேலை பார்த்தபோது நிறைய சுவையான அனுபவங்கள் உண்டு. திடீர் திடீரென சில நினைவுகள் வரும்போதெல்லாம் அவைகளை எழுதுகிறேன். முன்னர் கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்,  A N சிவராமனின் லவ் லெட்டர் நோட்டு என்றெல்லாம் சில கட்டுரைகள் எழுதினேன். இந்த பிளாக்கில் நேரம் கிடைக்கும்போது வாசியுங்கள்

 

 

ஒரு முறை சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் என்பதற்குப் பதிலாக, கேஸ் காலி புரம்

 

என்று வெளியாகிவிட்டது. மறுநாள் எங்கள் சப் எடிட்டர்களில் ஒருவரே கண்டுபிடித்து செய்தி ஆசிரியர் வெ.சந் தானத்திடம் காட்டினார். பேசாமலிருப்பதே உத்தமம், திருத்தம் எதுவும் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

 

 

இன்னொரு தடவை இதைவிட மோசமான ஒரு தவறு நேர்ந்தது. குன்றக்குடி அடிகளார் என்பதற்குப் பதிலாக, குறக்குன்டி அடிகளார்

என்று அச்சாகிவிட்டது. அப்போதும் திருத்தம் வெளியிடக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. வெறும் இடமாறு தோற்றப் பிழைதான்! ஆயினும் அர்த்தம், அனர்த்தம் ஆகிவிட்டது.

 

 

பாதிக்கப்பட்டவர்களும் திருத்தம் வெளியிடச் சொல்லி ஆட்சேபணை கிளப்பவில்லை. அவர்களைப் பொருத்தமட்டில் இந்த செய்தியை இப்படித் திருத்தி வாசியுங்கள் என்று வெளியிட்டால், அது “எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை” என்று நாமே காட்டிக் கொடுத்ததாகிவிடும் என்பது தெரியும். ஆயினும் இந்தச் செய்தி, அதன் புரூப் PROOF ஆகியன யார் கையில் எல்லாம் போயிற்றோ அவர்கள் எல்லாருக்கும் திட்டும் வசையும் கிடைக்கும். அப்போதுதான் அடுத்த முறையாவது சரியாக படி (புரூப்) திருத்துவர் என்பது தாத்பர்யம்!!

 

இதுதான் திருடனுக்கு தேள் கொட்டிய கதை!

 

MOBILE TEXTS மொபைல் டெக்ஸ்ட்

 

இதெல்லாம் ஏன் திடீரென்று நினைவுக்கு வந்தது என்றால், தினமும் மொபைல் போனில் TEXT டெக்ஸ்ட் அனுப்பும்போது நாம் ஒன்று அடிக்க அதுவாக ஏற்கனவே இருக்கும் சொற்களில் ஒன்றைப் போட்டுவிடுகிறது அவசரத்தில் சரி பார்க்காமல் SEND அனுப்பு என்ற பட்டனை சொடுக்கினால் அது பெரிய தலைவலியாக முடியும். இப்படி நானே சிலருக்கு டெக்ஸ்ட் அனுப்புகையில் மிகவும் அபத்தமான MESSAGE மெஸ்ஸேஜ் போனதுண்டு. பின்னர் VERY SORRY வெரி ஸாரி சொல்லி தப்பித்துக் கொண்டேன்.

 

ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஸ்டைல் புக் STYLE BOOK என்று ஒன்று உண்டு. அதாவது அந்தப் பத்திரிக்கையில் ஊர்ப் பெயரையோ ஆட்கள் பெயரையோ எழுதும் போது இந்தமாதிரி SPELLING ஸ்பெல்லிங்தான் இருக்க

வேண்டும். சில சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பர்.

 

முஸ்லீம்களின் ஒரு பிரிவினர் பெயரை அப்படியே எழுதினால் தமிழில் அபஸ்வரமாக இருக்கும் என்பதால் சன்னிSUNNY முஸ்லீம் என்று எழுதுவோம். இதற்கு இடக்கர் அடக்கல் (EUPHEMISM என்று தமிழில் பெயர். டாய்லெட் போய் வந்தோம் என்று சொல்லுவதற்குப் பதிலாக, நாம் “கால் கழுவி வந்தோம்” என்போம்.

 

பி.பி சி. தமிழோசையில் நான் மயிரிழையில் தப்பித்தார் என்று எழுதியபோது என் ‘பாஸ்’ BOSS சங்கர் அண்ணா, “தம்பி அடுத்த முறை எழுதும் போது நூலிழையில் தப்பினார்” என்று சொல்லுங்கள் என்று சொல்லிக்கொடுத்தார்.

 

மற்றொரு இலங்கைப் பெண்மணி, துப்பாக்கி என்பதற்குப் பதிலாக துவக்கு என்று சொல்லும் போதும் திருத்துவார். பாரிய, பாரதூரமான, அங்குரார்ப்பணம் என்ற சொற்களைப் பயன்படுத்துகையிலும் நல்ல தமிழ்ச் சொற்களைத் தருவார்.

 

இன்னும் பல சுவையான விஷயங்களை நினைவுக்கு வருகையில் தருகிறேன்.

 

-சுபம்–

 

 

திராவிடர்களின் இரத்த பலி! படித்து பயந்துவிடாதீர்கள்!! (Post No.3267)

gourd-mask-1

Written by London Swaminathan

 

Date: 19 October 2016

 

Time uploaded in London: 8-44 AM

 

Post No.3267

 

Pictures are taken from Wikipedia and other sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

 

வெள்ளைக்காரர்கள் நரிகளுக்குப் பிறந்தவர்கள். திராவிடர்களைப் புகழ்வது போல நிறையவே திட்டிவைத்துள்ளார்கள் முதலில் போண்டா மூக்கு, முண்டக்கண்ணூ, சுருட்டை முடி, கருப்புத் தோல் உள்ளவர்கள் எல்லாம் திராவிடன் என்று எழுதினான். பின்னர் திராவிடர்கள் மத்தியதரை கடல் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று எழுதினான். பின்னர் பார்ப்பனர்களைத் தவிர மற்ற எல்லோரும் சூத்திரர்கள் என்று எழுதினான். அப்புறம் இந்த இந்தியாவில் பார்ப்பனர்களைத் தவிர உள்ளா எல்லா ஜாதிகள் பற்றியும் பிட்டுப் பிட்டு வைத்து, இவை எல்லாம் திராவிடர்கள் வழக்கம் என்று எழுதி வைத்தான். கள்ளர், மறவன், சாணார், குயவர், குறவன் பள்ளன், பறையன் இவர்கள் பற்றி எல்லாம் வெள்ளைக்காரன் எழுதியதைப் படித்தால், மனு தர்ம சாத்திரம் எழுதிய மனுவுக்கு மாலை போட்டு நீதான் ஐயா நல்லவன் என்று சொல்லிவிடுவார்கள்.

என் கருத்து: வெள்ளைக்காரன் எழுதிய எல்லாம் தப்பு. நிற்க.

 

 

கோண்ட் என்னும் திராவிடர்களின் இரத்த பலி — நரபலி – மனித யாகம் பற்றி ஆர்தர் மைல்ஸ் எழுதியதைக் காண்போம்:–

 

 

“கோண்ட் இன மக்கள் திராவிடர்கள்; இவர்கள் ஒரிஸ்ஸா, ஆந்திரம், வங்கம், மத்திய இந்தியாவில் வசிக்கின்றனர்.

இவர்கள் இரத்த பலி கேட்கும் ‘பாரி பெண்ணு, பேரா பெண்ணு’ ஆகிய , கடவுளருக்கு மனிதனைப் பலி கொடுப்பார்கள் ஆனால் அரசாங்கம் இதைத் தடை செய்துவிட்டதால் இப்பொழுது ஆடுகளையும், எருமைகளையும் பலி கொடுக்கிறார்கள். 1860 ஆம் ஆண்டு வரை மனித பலி நடந்து வந்தது. இந்த பலி கொடுக்கும் சடங்கிற்கு ‘மரியா’ என்று பெயர்.

kondh-implements

Meriah Post

மரியா சடங்கு

ஒரு ஆறு அடி உயர கம்பின் மேலே சிலுவை போல ஒரு குறுக்குச் சட்டம் இருக்கும். அதைத் தரையில் ஊன்றி வைத்து பலி கொடுக்கும் மனிதனின் முடியை மேலே கட்டித் தொங்க விடுவார்கள் அவனுக்குக் கீழேயே அவனைப் புதைக்க ஒரு குழியும் தோண்டி வைத்துவிடுவர். நாலு பேர் அந்த மனிதனின் இரண்டு கைகளை யும் காலகளையும் பிடித்துக் கொண்டு நிற்பர். நரபலி கொடுக்கும் பூசாரி நீண்ட உச்சாடனம் செய்வார். அதே நேரத்தில் அவனது முதுகிலிருந்து கத்தியால் வெட்டி சதையை எடுப்  பார். இந்த மரியா தூண்களில் ஒன்று சென்னை மியூசியத்தில் காட்சியில் உள்ளது.

 

மனிதனின் சதையைச் சாப்பிடும் கடவுள்— கோண்ட் இன மக்களுக்கு ஆயுதமும் வெற்றியும் வழங்குவார் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ராஜா மற்றும் ராஜாங்கத்திடமிருந்து தங்கள் ஜாதியைக் காப்பாற்றும் பிரார்த்தனை அவர்களுடைய பிரார்த்தனையில் முக்கிய இடம் வகிக்கிறது.

 

மனித பலி முடியும் போது பூசாரி பினவரும் வசனங்களைச் சொல்லுவார்:– துக்கப்படாதே. கடவுள் உன்னை உடனே சாப்பிட்டு விடுவார். உன்னுடைய பெற்றோர்களிடமிருந்து உன்னை விலைக்கு வாங்கினோம். உன்னை பலியிடுவதற்காகவே, தெரிந்தே உன்னை எங்களுக்கு விற்றார்கள். ஆகையால் எங்கள் கைகளில் பாவம் ஒட்டாது. ஆனால் உங்கள் பெற்றோர்களின் தலையில்தான் பாபம் விழும்’. இப்படிச் சொல்லி முடித்தவுடன் அந்த ஆளின் தலையையும் ஒரே வெட்டாக வெட்டி விடுவார். உடல் மட்டும் கீழே குழியில் விழும். தலை முடியுடன் கம்பததில் கட்டப்பட்டதால் அப்படியே தொங்கும். அதை மிருகங்கள் சாப்பிட்டு விடும். அந்த ஆளை வெட்டிய கத்தியை அந்தக் கம்பத்திலேயே குத்திவைப்பார். இதை தொடர்ந்து இன்னும் இருவரைப் பலி கொடுக்க இப்படிச் செய்வார். ஒவ்வொரு முறையும் மூன்று ஆட்களைப் பலி கொடுப்பர்.

 

இந்த நரபலியைக் காண பெரிய கூட்டம் காத்திருக்கும். அந்த ஆளின் முதுகுச் சதையை வெட்டியவுடன் எல்லோரும் நரபலி ஆளை நோக்கி ஓடிவருவர். இந்தச் சடங்கிற்காகவே கைகளில் விசேஷமாக அணிந்திருக்கும் வளையங்களால் அவன் தலையை உடைப்பர். அப்போதும் அவன் உயிர் போகாவிடில் ஒரு மூங்கில் கம்பை இரண்டாகப் பிளந்து அதற்கிடையில் அவன் தலையை நசுக்குவர் . பூசாரியானவர் ஆளுக்குக் கொஞ்சம் சதையை வெட்டிப் பிரசாதமாக கொடுப்பார். அந்த பொக்கிஷத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் எல்லோரும் அவரவர் நிலத்துக்கு ஓடிப்போய் ஒரு கம்பத்தில் அந்த சதைத் துண்டை தொங்க விடுவர். அந்த சதை தண்ணீருக்கு மேலே இருந்தால், அந்த நீர்ப்பாசனம் செய்யும் இடமெல்லாம் அதிக விளைச்சல் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.

 

இதற்குப் பின்னர் மிச்சம் இருக்கும் உடற்பகுதியை முறையாக அடக்கம் செய்வர்!

kondh-priestess

ஜெய்ப்பூர் மஹாராஜா இறந்தவுடன், புதிய பட்டம் ஆட்சிக்கு வந்தபோது 13 வயதுச் சிறுமியை துர்கா தேவிக்குப் பலி கொடுத்ததாக மரியா  சடங்கிற்கு ஆட்களைப் பிடித்துத் தரும் ஏஜண்டுகள் கூறுகின்றனர். மரியா சடங்கிற்கு ஆட்களைப் பிடித்துச் சென்றது, கடத்திச் சென்றது பற்றி நிறைய புகார்கள் வந்ததை வெள்ளைக்கார்கள் பதிவு செய்துவைத்துள்ளனர்.

 

ஜெய்ப்பூர் பகுதியில் பெண் குழந்தை பிறந்தால் கொன்றுவிடும் வழக்கமும் இருந்தது. ஆண்டு தோறும் 1500 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடுகின்றனர். கோண்ட் இன மக்கள் பெண் குழந்தைகளை விரும்புவதில்லை. நிறைய குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே இருப்பர். ஆன்மா மீண்டும் மீண்டும் ஒரே குடும்பத்திற்குதான் வரும் என்றும் பெண் சிசுக்களைக் கொன்றாலும் அவர்கள் ஆண்களாகத் திரும்பிவந்து பிறப்பர் என்றும் கருதுகின்றனர்.

 

பெண் சிசுக்களைக் கொல்லும் பணி ஏலத்துக்கு விடப்பட்டு, அதை விலைக்கு வாங்கிய வணிகர் ஆண்டுதோறும் ஜெய்ப்பூர் மன்னருக்கு 300 ரூபாய் (Year 1930s) கொடுத்ததாகவும் தெரிகிறது. அந்த ஏஜெண்ட் வயதான பெண்களை வைத்து சிசுக் கொலை செய்வாராம்.

 

கோண்ட் இனப் பீரிவுகள் பல உண்டு. சிலர் நரபலி கொடுப்பதிலை விலைகொடுத்து வாங்கிய ஆளைத்தான் நரபலி கொடுக்க வேண்டும்; அல்லது இறைவன் ஏற்க மாட்டார் என்றும் கொண்ட் இனத்தினர் கருதுவர். சில நேரங்களில் இளம் வயதிலேயே பலி கொடுக்க என்று ஒருவனை வாங்கிவிடுவர். அவனை எல்லா விஷயங்களையும் அனுபவிக்க வைப்பர். வயதாக ஆக அவனுக்குத் தெரியும் தான் நரபலிக்கான ஆள் என்று. அப்போதிருந்து அந்த ஆளின் மீது கண்காணிப்பு அதிகரிக்கும் அவனுக்கு குடி, அபினி முதலியவற்றைக் கொடுத்துக் கொடுத்து மயக்க நிலையில் ஆழ்த்திவிடுவர்.

 

பலி கொடுப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே மரியா விருந்து மரியா நடனம் எல்லாம் ஆரம்பமாகிவிடும். பலிக்கு முதல் நாளன்று அவனை உட்காரவைத்து “ஓ, தடா பெண்ணு, உனக்கு இவனைப் பலி கொடுக்கப் போகிறோம். எங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் விளைச்சலும் கிடைக்க வேண்டும்” என்று வேண்டுவர். இரண்டாம் நாளன்று அவன் மீது தைலம் பூசுவார்கள் அதை ஒவ்வொருவரும் தொட்டு தன் மீது தடவிக்கொள்வர் பின்னர் அந்த ஆளை அவ னைக் கட்டிய கம்பத்துடன் தூக்கிக் கொண்டு ஊர்வலம் செல்லுவர். பின்னர் பலி பீடத்துக்கு வந்த பின்னர் பூசாரி சதைக ளைக் கிழிக்கும் பணியைத் துவங்குவார். எல்லோரும், ஆளுக்குக் கொஞ்சம் சதை வாங்கியவுடன் திருவிழா முடியும். பின்னர் அங்கே ஒரு எருமை மாட்டை பலி இடுவர். பெண்கள் எல்லோரும் ஆண் உடை தரித்து நடனம் ஆடுவர்.

 

இது பற்றி விசாகப்பட்டிணம் கலெக்டர் ஆர்புத் நாட், கர்னல் கேம்ப் பெல் முதலியோரும் நிறைய குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். சில இடங்களில் யானை போன்ற உருவம் செய்து அதன் துதிக்கையில் நரபலி மனிதனைத் தொங்கவிடுவர். இந்த வழக்கத்துக்கு வெள்ளைக்காரர் ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் 1902-ம் ஆண்டுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக நரபலி நடந்தது. சிலர் இதை பகிரங்கமாக ஆதரித்து நரபலி கொடுக்க அனுமதியும் கோரினர். ஆனால் அவை எல்லாம் நிராகரிக்கப்பட்டன.

dongria-kondh-tribe-membe-006

என் கருத்து:–

 

வெள்ளைக்காரர் சொல்லுவது போல நடந்திருக்கலாம். ஆனால் பண்பாடுமிக்க நகர நாகரீகம் நிலவியபோதே கானக மாக்கள் அவர்களுக்கே உரித்தான வாழ்க்கை முறையினைப் பின்பற்றியதை சம்ஸ்கிருத தமிழ் இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. ஆகையால் திராவிடர் என்று எல்லோருக்கும் முத்திரை குத்துவது சரியல்ல. தோலின் நிறமோ, ஒருவர் பேசும் மொழியோ மட்டும் — ஒரு இனத்தின் அடையாளங்கள் என்று சொல்லுவது தவறு.

 

–சுபம்–

கோண்டு இன மக்களின் விநோதப் பழக்க வழக்கங்கள் -Part 1 (Post No.3219)

india-group-of-gonds

Compiled by London Swaminathan

 

Date: 5 October 2016

 

Time uploaded in London: 6-30 AM

 

Post No.3219

 

Pictures are taken from various sources; thanks.

 

 

Contact swami_48@yahoo.com

 

 

 

 

ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேச எல்லைப் பகுதி காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் கோண்ட் இன மக்களை திராவிடர்கள்  வெள்ளைக்கார அறிஞர்கள் முத்திரை குத்தி வைத்துள்ளனர். நட்புறவு ஒப்பந்தம் முதல் நரபலி வரை பலவகை விநோத வழக்கங்களை உடையவர்கள் இவர்கள்.

 

எல்லா கருப்புத் தோல் ஆட்களையும் திராவிடர்கள் என்று வெள்ளைக்காரர்கள் முத்திரை குத்தினாலும் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் “ஸ்நானப் ப்ராப்தி” உறவு கூடக் கிடையாது! இதைப் பற்றி படித்தவர்கள் அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கலாம்!

 

காண்டவ இனப் பழங்குடி நாகர்கள் பற்றி மஹாபாரதத்தில் உள்ள விஷயங்களையும், கிருஷ்ணனுக்கும் அவர்களுக்கும் நடந்த மோதலுக்குப் பிறகு அவர்கள் தென் அமெரிக்காவுக்குக் குடியேறி அஸெடெக், மாயன் நாகரீகங்களுக்கு அடிகோலியதையும் முன்னரே எழுதியுள்ளேன். கோண்ட் என்னும் சொல், காண்டவ வனம் என்பதிலிருந்து வந்ததையும் அதிலிருந்தே GONDWANA LAND கோண்ட்வானா (காண்டவ+வன) லாண்ட் என்ற சொல் வந்ததையும் முன்னரே எழுதிவிட்டேன்.

 

gond-women-grinding-corn

 

சில வழக்கங்களை மட்டும் காண்போம்.

 

கோண்ட் இன மக்கள் மண் சுவர் எழுப்பிக் குடிசை கட்டுகின்றனர்.

(சிந்துசமவெளியிலிருந்து விரட்டப்பட்டவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இப்படி மண்குடிசைகளில் வசிக்காமல் செங்கல் வீட்டில் வசித்திருப்பார்கள். வெள்ளைக்கார திருடன் தத்துப் பித்து என்று உளறியதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு).

 

அவர்கள் மஞ்சள் முதலியவற்றைப்  பயிரிடுகின்றனர். மஞ்சளை இரத்த பலி தொடர்பான சடங்குகளில் பயன்படுத்துவர். மஞ்சளே இரத்தத்தின் சிவப்பு நி ற த்திற்குக் காரணம் என்பது அவர்களின் நம்பிக்கை.

 

ஆண்களும் பெண்களும் முடியை நன்கு அலங்கரிப்பர். பெண்கள் மலர் சூடி மான் கொம்பு ஊசிகளை கொண்டை ஊசியாகப்   பயன்படுத்துவர்.

ஆண்கள் வேஷ்டி போன்ற ஒரு துணியையும், பெண்கள் புடவை போல ஒன்றையும் மேலே சுற்றிக்கொள்வர். பெண்கள் கல்யாணம் ஆகும்வரை காதில் தோட்டுக்குப் பதிலாகக் குச்சியைச் சொருகிக் கொள்வர். கல்யாணமான பின்னர் காதில் தோடுகள் அணிவர். காப்பு, மூக்குத்திகளையும் அணிவர்.

 

(சில அறைகுரை ஆராய்ச்சியாளர்கள் இந்த மூக்குத்தி அணியும் வழக்கமெல்லாம் வெளி நாட்டிலிருந்து வந்ததென்று எழுதியுள்ளனர். ஆனால் பழங்குடி மக்களிடையே இதை யார் புகுத்தியது?)

 

பெண்களிடையே ஒழுக்கம் குறைவுதான். பழம் பறிக்க, மீன் பிடிக்க என்று காட்டிற்குள் போவார்கள்; கள்ளத் தொடர்பு ஏற்படும் பின்னர் பெற்றோர்கள் கல்யாணம் செய்துவைப்பர்.

பெண்களுக்கு ஒரு “கோண்டி” சீதனம் தர வேண்டும்; ஒரு “கோண்டி” என்பது ஒரு ஆடு அல்லது ஒரு பன்றி அல்லது, ஒரு பித்தளைப் பானை ஆகும்.

 

கோண்ட்,  தனது கிராமத்துகாரரைத் திருமணம் செய்யக் கூடாது (பிராமணர்கள் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யமாட்டார்கள் என்பதைப் போல)

 

பெண்ணை, அவளுடைய மாமன் தூக்கிக் கொண்டுபோய், மணமகன் வீட்டில் விட வேண்டும். அவளை ஒரு சிவப்புக் கம்பளத்தில் சுற்றி தூக்கிக் கொண்டு செல்வர் ( பிராமணப் பெண்கள் சிவப்பு நிறக் கூரைப் புடவை கட்டிக் கொண்டு தாலி கட்டிக்கொள்வதையும், மாமன் தோளில் ஏறி மால மாற்றிக் கொள்வதையும் ஒப்பிடுக)

gonds1

(ஆரியர்- திராவிட என்று பகச் சொல்லி கேளிர் பிரிப்போரைப் பார்த்து நகைக்க இவை எல்லாம் உதவும்).

 

கிராம எல்லையில்  பெண் வீட்டுக்காரர்களை மணமகன் வீட்டுக்காரர்கள் கம்பு கொண்டு தாக்கி வேடிக்கை செய்வர். சில நேரத்தில் பெண் வீட்டுக்காரகள் தா குவதும் உண்டு. மணமகன் வீடு செல்லும்வரை இந்த சண்டை நீடிக்கும். ( பிராமணர் திருமணத்தில் நடக்கும் காசி யாத்திரை, திரு மணத்துக்குப் பின்னர் நடக்கும் நலுங்குப் போட்டிகள் ஒப்பிடற்பாலது)

 

திருமண விருந்தில் ஒரு பன்றி அல்லது எருமையை வெட்டி உண்ணுவர். குடித்துவிட்டு கூத்தாடுவர். மூன்று நான்கு நாட்களுக்குப் பின்னர் மணமகனின் சகோதரன் ஒரு விருந்து கொடுப்பார்.

பெண்ணே நீ நல்லபடி நடந்துகொண்டால், புலி போல ஒரு மகன் பிறப்பான். கண்டபடி நடந்தால் உனக்கு குரங்குதான் பிறக்கும் என்று சகோதரன் புத்திமதி சொல்லுவான். கூடியிருக்கும் பெரியோர் அனைவரும், உனக்கு நிறைய ஆண்பிள்ளைகள் பிறக்கட்டும் என்று ஆசீர்வாதம் செய்வர்.

 

சில கோண்ட் இன மக்கள் பெண்ணின் கைகளில் 20 அல்லது 30 பவுண்டு எடையுள்ள பித்தளை விலங்கு பூட்டுவர். அப்படி மூன்று நாட்களுக்கு வைப்பர். அப்பா வீட்டுக்கு (பிறந்தகத்துக்கு) ஓடிவிடக்கூடாதென்பதற்காக.

 

(அந்தக் காலத்தில் பெண்ணை கடத்தி வந்து கல்யாணம் செய்ததால் இது வழக்கத்தில் வந்திருக்கலாம் (மனுவும் தொல்காப்பியரும் சொல்லும் எண்வகை திருமணங்களில் இவ்வகை இராக்கத திருமணமும் ஒரு வகையாகும்).

 

சிலந்தியின் சாம்பல்

பிரசவம் பார்க்கும் தாதி கர்ப்பிணியின் வயிற்றில் விளக்கெண்ணை தடவுவார். ஒரு சிலந்தியை மெழுகுவர்த்தித் தீயில் எரித்து சாம்பலை விளக்கெண்ணையில் குழைத்து பிறந்த குழந்தையின் தொப்புளில் தடவுவார். ஒரு மாதம் வரை குங்குமப்பூ/  விளக்கெண்ணை சாந்தையும் பூசுவர்.

 

பிறந்த ஆறாவது மாதத்தில் பெயர் சூட்டும் வைபவம் நடக்கும். ஒரு அரிவாளையும் அரிசியையும் பயன்படுத்துவர்.முன்னோர்களின் பெயர்க ளைச் சொல்லுவர். மேலிருந்து தொங்கும் அரிவாள் எந்தப் பெயர் சொல்லும்போது நகர்கிறதோ அந்தப் பெயரை குழந்தைக்கு வைப்பர். எல்லோருக்கும் விருந்து படைப்பர்.

 

கோண்ட் இன மக்களின் ஈமச் சடங்குகளும் வேறுபட்டவையே. சடலத்தை எரித்துவிட்டு அந்த இடத்தில் சமைத்த சோறை வைப்பர்; (பிராமணர்களின் பிண்டக் கிரியை ஒப்பிடுக) மந்திர உச்சாடனம் செய்து உணவைச் சாப்பிடச் சொல்லுவர். அந்த ஆவியை புலி உடலிலோ, பேயின் உடலிலோ புகாமல் இருக்க வேண்டுவர்.

 

ஒருவர் இறந்த மூன்றாம் நாளன்று இறந்தவரின் உருவ பொம்மை செய்து, அதை இறந்தவரின் வீட்டுக் கூரையில் வைப்பர். எல்லா உறவினர்களும் நண்பர்களும் அதைப் பார்த்து அழுவர். ஏழாவது நாளில் ஒரு எருமை மாட்டை பலி கொடுத்த பின்னர் தீட்டு கழியும்.

 

சில கோண்ட் இனங்களில் பிணத்தின் காலில் ஒரு ஆட்டை கட்டி தர தர என்று இழுத்துச் செல்லுவர். சுடுகாட்டுக்குச் சென்ற பின்னர் கட்டி அதை அ வி ழ்த்து விடுவர்.

 

 

ஈமச் சடங்குகளில் ஆண்களின் நடனமும் இருக்கும். 12ஆம் நாளன்று பெரிய ஆட்டமும் எருமை மாட்டு மாமிசத்துடன் விருந்தும் நடைபெறும்.

 

(எனது கருத்து:– இறந்தோருக்கு எருமை மாட்டை பலி கொடுப்பது நீலகிரி தோடர்கள் இனத்திலும் உண்டு. சொல்லப்போனால் எங்கு எல்லாம்  எருமைகள் வசிக்கின்றனவோ அங்கெல்லாம் இது இருக்கிறது. எமனின் வாஹனம் எருமை என்பதால் இப்படி இருக்கலாம். இந்தோநேஷியாவின் செலிபிஸ் தீவுகளில் 10 எருமைகள் வரை பலி கொடுப்பர்)

நட்புறவு ஒப்பந்தம், நர பலி முதலியன குறித்து அடுத்த பகுதியில் காண்போம்

 

தொடரும்……………….

 

சிவ பெருமானுக்கு மீசை! விஷ்ணுவுக்கு ‘ஷேவ்’ ஏன்? (Post No.3215)

siva-ravi-varma

Written by London Swaminathan

Date: 3 October 2016

Time uploaded in London: 12-36

Post No.3215

Pictures are taken from various sources; thanks.

Contact swami_48@yahoo.com

வேதத்தில் உள்ள நூற்றுக் கணக்கான சொற்களை இன்றும் தமிழர்கள் உள்பட நாட்டிலுள்ள எல்லோரும் பயன்படுத்துவது வியப்புக்குரிய்து. உலகிலேயே பழமையான நாகரீகம் இந்து நாகரீகமே என்பதையும் உலகிலேயே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும்தான் என்பதையும் இது காட்டும்.

 

கேசம் என்ற சம்ஸ்கிருதச் சொல் இன்றும் கூந்தல் வளர் தைல விளம்பரங்களிலும் பெயர்களிலும் இருப்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

 

முடி என்பது தலை முடியையும், மன்னர் முடியையும் (கிரீடம்) குறிக்கும் என்பதுமிரு மொழிகளுக்கும் பொது. இது இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்தவை என்பதைக் காட்டும். ஆரிய மொழிக் குடும்பம் – திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் பிதற்றல் என்பதையும் விளக்கும்.

indus-valley-priest

சிந்து சமவெளி யோகி முத்திரையில் காணப்படும் குருவின் தாடி விநோதமாக இருப்பது பலருக்கும் பெரும் புதிராக இருக்கிறது.

 

இதைவிட வேடிக்கை இந்துமதக் கடவுளரின் உருவங்களின் வரை படங்கள் வெவ்வேறாக இருப்பதாகும். புகழ் பெற்ற ரவி வர்மா வரைந்த ஓவியங்களில் சிவன் மீசையுடன் காட்சி தருவார். இன்னும் சில சிலைகளில், குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சிவன், இந்திரன் முதலியோர் மீசையுடன் காணப்படுவர். ஆனால் எல்லா இடங்களிலும் விஷ்ணு, கிருஷ்ணன் ஆகியோர் நல்ல ‘ஷேவ்’ (சவரம்) செய்த முகத்துடன் காட்டப்படுவர். இது ஏன் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

 

இதை விட வியப்பான விஷயம் சிகை (குடுமி) என்ற வேத கால சம்ஸ்கிருதச் சொல்லாகும். பிராமணர்கள் இன்றும் இந்தச் சொல்லை பயன்படுத்துவதில் வியப்பில்லை.ஆனால் கிராமப்புறத் தமிழர்களும் இதை பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்பதைத் தெளிவாக்கும்.

 

சிகைக் காய் பொடி (சீயக்காய் பொடி) என்பதை அறியாதோர் இல்லை. எண்ணை தேய்த்துக் குளிப்போருக்கு இது அவசியம். சிகை+ காய் = சீயக்காப் பொடி. சிகை என்பது குடுமி என்னும் பொருள்படும் சம்ஸ்கிருதச் சொல்!

 

வேத காலத்தில் வாழ்ந்த இரண்டு குருமார்களின் பெயர் சிக, அனு சிக. இதைக் குடுமி, துணைக் குடுமி என்றும் மொழி பெயர்க்கலாம். சிக என்பது சிகரம் (உச்சி, மலை உச்சி), சிகாமணி போன்ற சொற்களிலும் புழங்குகிறது.

 

persian-2

சிகா (குடுமி, நீண்ட தலை முடி), புலஸ்தி (நேரான முடி), சிகண்ட (குடுமி), ஸ்மஸ்ரு (தாடி, மீசை Rig veda (2-11-17; 8-33-6 etc), சீமன் (தலை வகிடு) ஆகிய சொற்கள் வேதங்களிலும் பின் வந்த இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்தியர்கள் சாகும் வரை மீசை, தாடியை போற்றி வளர்த்ததாக மெகஸ்தனீஸ் 2300 ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார்.

 

பாரசீகர்கள், தேன்கூடு போல தாடி வைத்திருப்பதை உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் சம்ஸ்கிருதத்தில் பாடிப் பரவியுள்ளான்.

 

persian-beard

—subham–

 

 

ஆதிவாசிகளின் சிகை அலங்காரம்

kampti-woman

Written by London Swaminathan

 

Date: 3 October 2016

 

Time uploaded in London: 9-01 AM

 

Post No.3214

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

பெண்கள்,  பிறந்த நாள் முதலே,  தங்களை அலங்கரிக்கத் துவங்கி விட்டார்கள். இதற்கு ஆதிவாசிப் பழங்குடிகளும் விலக்கல்ல. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஜாதிகளும் பல நூற்றுக்கணக் கான பழங்குடி இன மக்களும் வசிக்கின்றனர். ஒவ்வொரு இனத்தினரும் வெவ்வேறு வகை திருமணச் சடங்குகள், ஈமச் சடங்குகள், நடை, உடை, பாவனை கொண்டு வாழ்கின்றனர். இப்பொழுது நாகரீகம் வேகமாகப் பரவி வருவதால் அவர்களும் மாறி வருகின்றனர். வெளிநாட்டுக்காரர்கள் நம்மைத் திட்டுவதற்காக எழுதி வைத்த பல குறிப்புகள் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.

 

கருப்புத் தோல் உடைய அவ்வளவு பெயரும் “திராவிடர்கள்” என்றும் அவர்கள் உயரிய நாகரீகம் வாய்ந்தவர்கள் என்றும், அவர்களைக் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் விரட்டி அடித்ததாகவும் வெள்ளைக்காரன் பொய்யுரைகளை பரப்பி இருந்தான். ஆனால் இந்த “திராவிடப் பழங்குடியினரோ” கொஞ்சமும் நாகரீகம் இல்லாத, காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதும் அவர்களில் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பழக்க வழக்கங்கள் இருப்பதுமாராய்ச்சி செய்வோருக்கு வெள்ளிடை மலையென விளங்கும். இந்த திராவிட– ஆரிய கதைகள் எல்லாம் நல்ல கட்டுக்கதை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும்.

 

இதோ சில சிகை அலங்காரங்கள்:

 

பர்மா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் எல்லையில் காம்டி இன மக்கள் வசிக்கின்றனர். அந்த இனப் பெண்கள் திருமணமானவுடம் தலைமுடியை உயர்த்தி ‘கொண்டை’ போடுவர். திருமணமாகாத பெண்கள் முடியைக் கழுத்தின் பின்புறத்தில் தொங்கவிட்டு முடித்து வைப்பர்! ஆக ஒரு பார்வையிலேயே யார் திருமணமானர் என்று கண்டுபிடித்துவிடலாம்!

 

ஒரிஸ்ஸா, ஆந்திரா, மத்தியப்பிரதேச எல்லைகளில் காடுகளில் வசிக்கும் கோண்டு இன ஆண்களும் பெண்களும் முடியைப் பராமரிப்பதில் பெரும் கவனம் செலுத்துவர். மான் கொம்புகளினால் ஆன பெரிய கொண்டை ஊசியைத் தலையில் குத்திக்கொள்வர். மலர்களையும் சூடுவர். திருமணமாகாத பெண்கள் காதில் விளக்கு மாற்றுக்குச்சியை சொருகிக் கொள்வர். திருமணமானபின்னர் நிறைய தோடுகளை அணிவர்.

 

காதுகளைப் பார்த்துதான் காதலிக்க வேண்டும்!!!

 

நாயர் இனப் பேரழகிகள்

nayars-of-kerala-wiki

கேரளத்தில் வசிக்கும் நாயர் இனப் பெண்கள் பற்றி ஆர்தர் மைல்ஸ் என்பவர் 1933 ஆம் ஆண்டில் எழுதியது:-

“இந்தியாவிலேயே பேரழகிகள் நாயர் இனப் பெண்களே. அவர்கள் தலை முடி பிசுக்கில்லாமல் பள பள என்று இருக்கும் . எப்போதும் சிகைக்காய் பொடியால் கழுவி சுத்தமாக வைத்து மலர் சூடுவர். தோலில் ஒரு பருவோ கொப்புளமோ வந்தால் அதைப் பெரிய அவமானமாகக் கருதுவர். மற்ற இனப் பெண்கள் போலல்லாது இடது மூக்கில் மூக்குத்தி அணிவர். குளிக்காமல் எதையும் செய்யார். ‘சுத்தம் சோறு போடும்’ என்பதை அறிந்த இனம். ஒரே ஒரு உடற்குறை! காதில் பெரிய தொளையிட்டு தங்க நகைகளை அணிவதே!”

 

இங்கிலாந்துக்கு வரும் திருப்பதி முடி

 

ஆர்தர் மைல்ஸ் 1933ல் எழுதியது:–

 

ஒருமுறை என் வீட்டுத் தோட்டக்காரன் மீசை, தலை முடி எல்லாவற்றையும் சிரைத்துவிட்டு வெழுமூன பள பள என்று வேலைக்கு வந்தான். எனக்கோ அதுபற்றிக் கேட்கத் தயக்கம். இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின்னர் அவனே சொல்லத் துவங்கினான். நேர்த்திக் கடனுக்காக் கடவுளுக்கு முடியைக் கொடுத்ததாகச் சொன்னான்.

 

இந்தியாவில் பணக்காரகளுகுச் சமமாக ஒரு ஏழையும் தானம் செய்யக்கூடியது தலை முடி ஒன்றே. அதில் அவர்களுக்குப் பரம திருப்தி. அதுவும் பெண்கள் தனது  தலை மயிரை கொடுப்பது பெரிய தியாகமே. இப்படி அவர்கள் திருப்பதியிலும் பழனியிலும் முடி காணிக்கை செலுத்தாவிடில் நாம் ஐரோப்பாவிலும், குறிப்பாக இங்கிலாந்திலும் முடிகளால் ஆன மெத்தைகளில் உறங்க முடியுமா?

 

பிராமணப் பெண்கள், கணவனை இழந்து விட்டால் தலை முடியை எடுத்துவிட்டு தலையை புடவையால் மறைத்துக் கொள்ளுவர். ஆனால்  ஐயங்கார்களில் தென்கலை சம்பிரதாயத்தினர் இப்படிச் செய்வதில்லை என்றும் ஆர்தர் மைல்ஸ் எழுதியுள்ளார்.

 

(இப்போது முடியைக் களையும் வழக்கம் மிக மிகக் குறைந்துவிட்டது)

vv-anni-5

Nilgris:-Toda Tribal woman

பெண்கள் வகிடு எடுப்பது — ஒரு புறம் சக்தியையும் மறுபுறம் சிவனையும் குறிக்கும் என்றும் இது பாசிட்டிவ், நெகட்டிவ் POSITIVE & NEGATIVE சக்திகளை இணைக்கிறது என்றும் 1926ல் ஒருவர் ஆற்றிய உரையையும் மைல்ஸ் விரிவாக கொடுத்துள்ளார் ( எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க).

vv-aani-4

–subham——

 

 

விக்ரம ஆண்டு பற்றிய விநோத தகவல்கள் (Post No.3151)

vikrama-1

Translated by London swaminathan

Date: 13 September 2016

Time uploaded in London: 20-20

Post No.3151

Pictures are taken from various sources; thanks.

இந்தியாவில் பல வகையான ஆண்டுகள்/ காலண்டர்கள் பின்பற்றப்படுகின்றன. கலியுகம் (துவக்க ஆண்டு கி.மு.3101) பற்றி எல்லோருக்கும் தெரியும். இதே ஆண்டை மாயா நாகரீகம் , எகிப்திய நாகரீகம் எல்லாம் பெயர் சொல்லாமல் பின்பற்றி வருவது பற்றி முன்னரே எழுதினேன். கலியு கத்தை நாள் கணக்கில் குறிப்பிடம் கோ கருநந்தடக்கனின் பழங்கால தமிழ் கல்வெட்டு பற்றியும் எழுதிவிட்டேன். இந்தியாவின் தேசிய “சக” வருடம் தினமும் வானொலியில் அறிவிக்கப்படுவதால் அனைவரும் அறிந்ததே. பஞ் சாங்கத்தின் முதல் பக்கத்தில் கலியுகம் முதல்  நாமாக உண்டாக்கிய திருவள்ளுவர் ஆண்டு வரை இருப்பதையும் பெரும்பாலோர் அறிவர்.

 

சில  நாட்களுக்கு முன்னர் டாக்டர் எஸ்.என்.சர்மா எழுதிய ஒரு புத்தகம் படித்தேன். அதில் விக்ரம ஆண்டு பற்றிய பல தெரியாத தகவல்கள் உள்ளன. வரலாறு படிப்போருக்குப் பயனுள்ள தகவல்கள்.

விக்ரம ஆண்டு என்பது விக்ரமாதித்யன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. இது கி.மு.57-ல் துவங்கியது. சக இன வெளிநாட்டுப் படை எடுப்பாளர்களை நாட்டைவிட்டு விரட்டியதைக் கொண்டாட இந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.

vikrama-2

இது குறித்த விசித்திர விஷயங்கள் என்ன?

1.முதலில் இதை கிருத வர்ஷம் என்றும் பின்னர், மாளவ வருஷம் என்றும் பின்னர் விக்ரம வருஷம் என்றும் அழைத்தனர். ஏன் இப்படிப் பல பெயர்கள்? அவற்றின் உண்மைப் பொருள் என்ன? பெரிய புதிர்!

 

  1. இதை விக்ரம ஆண்டு என்று அழைத்தது அது தோன்றி சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின்னரே!

 

  1. இவர்கள் குறிப்பிடும் கி.மு.57-ல் விக்ரமாதித்யன் என்ற ஒரு மன்னன் இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை! யார் இந்த விக்ரமாதித்யன்?

 

4.இந்தியாவில் பல மன்னர்கள் விக்ரமாதித்தன் என்ற பெயருடன் ஆண்டனர். வேதாளக் கதைகளில் புகழ்மிகு  விக்ரமாதித்தன் வருகிறான். கதா சரித் சாகரத்தில் அவன் பற்றிக் குறிப்பு வருகிறது.

மஹேந்திர ஆதித்தன் என்ற மன்னனுக்கு சிவபெருமான் அருளால் விக்ரமாதித்தன் என்ற மகன் தோன்றியதாகவும் அவன் சகரர்களை விரட்டியடித்து பல மன்னர்களை வென்றதாகவும் கதா சரித் சாகரம் என்னும் (கதைக்கடல்) நூல் கூறுகிறது. ஆனால் அது கூறும் மன்னர்களில் ஒருவர் கூட வரலாற்றுப்  புத்தகத்தில் இல்லை.

 

கௌட (வங்க) தேச சக்திகுமாரன்

லாட தேச விஜயவர்மன்

சிந்து தேச கோபாலன்

கர்நாடக தேச ஜயத்வஜன்

காச்மீர் தேச சுநந்தனன்

பாரசீக தேச நிர்முகன்

 

ஆகியோரை விக்ரமாதித்தன் வென்றதாக அந்த நூல் செப்புகிறது.

 

5.வரலாற்றில் எல்லோரும் அறிந்த விக்ரமாதித்தன் இரண்டாவது சந்திரகுப்தன். இது அவனது பட்டங்களில் ஒன்று.

 

5.உலகப் புகழ்பெற்ற காளிதாசனை– விக்ரமாதித்தன் அவைப் புலவர்களில் ஒருவர் என்று கூறும் சம்பிரதாயமும் உளது. அவன் உஜ்ஜைனி நகரத்திலிருந்து ஆண்டவன்.

 

6.சமண மத நூல்கள் மேலும் பல புதிய கதைகளை மொழிகின்றன. ஆனால் இவை அனைத்தும் 12-ஆம் நூற்றாண்டில்  எழுத்துரு பெற்றவை. மஹாவீரருக்குப் பின்னர் காலகன் என்பான் 60 ஆண்டுகள் ஆண்டதாக அவை கூறும். கர்தபில்லா என்பவனை சகர்கள் தோற்கடித்ததாகவும் அவநது மகன் விக்ரமாதித்தன் –சகர்களை விரட்டி பழி வாங்கினான் என்றும் தபாகச்ச பட்டாவளி (சமண நூல்) சொல்லும்.

 

7.நூற்றுக்கு மேற்பட்ட மன்னர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட புராணங்கள் விக்ரமாதித்தன் பெயரைச் சொல்லவில்லை!!

 

நாளந்தா கல்வெட்டில் (கி.பி.226) மாளவ வருடம் குறிப்பிடப்படுகிறது.

மாண்டசூர் கல்வெட்டும் (கி.பி.493) மாளவ கண  பற்றி பேசுகிறது. மாளவ கண என்ற சொல்லை 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினியும் இலக்கணப் புத்தகத்தில் எடுத்துக் காட்டுகிறார்.

 

 

தோல்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட சௌஹான் கல்வெட்டில்தான் முதல் முதலில் விக்ரம சம்வட் (ஆண்டு) வருகிறது. அது கி.பி..842 ஆம் ஆண்டுக் கல்வெட்டு!

 

நேபாள த்தில் விக்ரம சம்வட் (வருஷம்) பயன்படுத்தப்படுகிறது. சமணர் புத்தககங்களில் பல கதைகள் உள்ளன. ஆனால் வரலாற்று ஆதாரங்கள் இல்லை.

 

vikrama-3

என் கருத்து:–

 

1.வெள்ளைக்காரர்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு நாமாக மகாநாடு கூட்டி ஆராய வேண்டும். வெளிநாட்டினர். அங்கிருந்து ஒன்று,  இங்கிருந்து ஒன்று என்று பிச்சுப் பிடுங்கி ஒரேயடியாகக் குழப்பிவிட்டுள்ளனர். எங்கெங்கெல்லாம் முரண்பட்ட தகவல்கள் உள்ளனவோ அவைகளில் தனக்கு ஆதரவாக உள்ள விஷயங்களை எடுத்துக் கொண்டு மற்றவைகளை ஒதுக்கிவிட்டனர். சமணர் நூல்கள், கதா சரித் சாகரம் முதலியன பொய் சொல்லத் தேவையே இல்லை.

 

2.விக்ரமாதித்தன் என்பது ஒரு பட்டமே தவிர மன்னன் பெயர் இல்லை. ஆகையால் மன்னன் பெயர் என்பதை மற ந்துவிட்டு அக்கால மன்னர்களில் இது யாருக்குப் பொருந்தும் என்று பார்க்க வேண்டும். காளிதாசன் போன்றோர் இப்படி ஒரு மன்னன் பெயரைச் சொல்லவில்லை.

 

 

3.கடைசியாக இரண்டாவது சந்திரகுப்தன் விக்ரமாதித்தன் என்ற பட்டத்தைக் கொண்டதால் அவனை கி.மு57-ல் ஆண்ட மன்ன என்று கொண்டால் இந்திய வரலாறு தலை கீழாக மாறும் அதாவது எல் லா மன்னர்களின் காலமும் 400 ஆண்டுகளுக்கு முன்போடப்படும். இந்தியாவின் பழமை இன்னும் வலிவு பெறும். இந்தக் கோண த்திலும் ஆராய வேண்டும். இந்தப் புதிர் இன்றுவரை தீர்க்கப்படா மல் இருப்பதால் இது பற்றி விவாதிக்க ஆராய்ச்சி மகாநாடு கூட்ட வேண்டும். இது தமிழ் வரலாற்றை மாற்றி எழுதவும் — காலத்தை முன் போடவும் — உதவும்.

kalidasa

–Subaham–

வாதாபி கணபதிம் பஜே ஹம் ; புதிய பிள்ளையார் புராணம் – பகுதி 4

mumbai-ganesh-8

Written by London swaminathan

 

Date: 6 September 2016

 

Time uploaded in London: 19-16

 

 

Post No.3128

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வாதாபி கணபதிம் பஜே ஹம்

வாதாபி கணபதிம் பஜே

 

ganesha

முதல் மூன்று பகுதிகளில் பல புகழ்பெற்ற பிள்ளையார்களைக் கண்டோம்; பிள்ளையார் பற்றி ஏராளமான வியப்பான, அதிசயமான செய்திகள் உண்டு. கணேசனைப் பற்றி ஒரு என்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியமே தேவை; இதுவரை அது இல்லாதது ஒரு குறையே. எல்லாப் பிள்ளையார்களையும் விட அதிக வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் வாதாபி கணபதி; முத்து சுவாமி தீட்சிதரின் அற்புதமான சம்ஸ்கிருத கீர்த்தனையில் இடம் பெற்றவர் வாதாபி கணபதி; நரசிம்மவர்மனின் வெற்றிக்குக் காரணமானவர் வாதாபி கணபதி.

 

சுருக்கமாக காண்போம்:– இரண்டாவது புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னன் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திலிருந்து ஆண்ட மகேந்திர பல்லவ வர்மனைத் தோற்கடித்தான். அவனது மகன் பெயர் நரசிம்ம வர்மன். பெயருக்கு ஏற்ற நர சிங்கம்தான் அவன். தந்தையைத் தோற்கடித்த புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி என்ற  கமாண்டரின் (படைத் தளபதி)

தலைமையில் ஒரு படையை கர்நாடகத்திலுள்ள பாதாமிக்கு (வாதாபி) அனுப்பினான். அவர் சாளுக்கியப் படைகளைச் சிதறடித்தார். அங்கே பல்லவர்களின் கொடி பறக்கத் துவங்கியது. அப்போது அந்த நகரிலிருந்த கணபதியையும் எடுத்து வந்து தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். அதற்கு வாதாபி கணபதி என்று பெயர்.

stamps-on-ganesh

ஆயினும் நரசிம்ம வர்மனின் காலத்துக்கு முன்னரே கணபதி வழிபாடு பிரபலமானது சம்பந்தரின் தேவாரப் பாடலாலும் (பிடி அதன் உரு உமை  கொள மிகு கரி அது), சா. கணேசனின் பிள்ளையார்பட்டி ஆய்வாலும் (பகுதி மூன்றில் காண்க), காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் திருவாரூர் கணபதி பற்றி ஆற்றிய சொற்பொழிவாலும் தெளிவாகிறது.

 

எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.

வாதாபியை எப்படி அகத்தியர் வெற்றிகண்டாரோ அப்படி நரசிம்ம வர்மன் வாதாபியை வென்றான் என்று பல்லவர் கல்வெட்டுகள் புகழாரம் சூட்டுகின்றன (வாதாபி ஜீர்ணோ பவ: கதையை தனியாக முன்னரே கொடுத்துள்ளேன்) இந்த வாதாபி கணபதி கதையை முத்துசாமி தீட்சிதரும் தனது ஹம்சத்வனி ராக கீர்த்தனையில் சொல்லுவது சிறப்புக்குரியது.

 

எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.

 

திருவாருருக்கு அருகில்தான் திருச்செங்காடங்குடி உளது. நரசிம்மவர்மனின் படைத் தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனாராகத் தோன்றுகிறார். அவருடைய சிவபக்தியை அறிந்த பல்லவ மன்னன் அவரைப் போற்றி வணங்கி படைப் பொறுப்புகளிலிருந்து விடுவித்து இறைப்பணியைத் தொடர வேண்டுகிறான். அவருடைய ஊருக்கு கணபதீச்வரம் என்றும் பெயர்.

 

வெள்ளை விநாயகர்

 

திருவலஞ்சுழி என்னும் தலத்தில் இவர் கோவில் கொண்டுள்ளார்.

 

வெள்ளை என்பதை சம்ஸ்கிருதத்தில் ஸ்வேத என்பார்கள். இதிலிருந்துதான் WHITE ஒய்ட் (SWHITE= white) என்ற ஆங்கிலச் சொல்லும் உதித்தது. இந்த வெள்ளை விநாயகர் வழக்கத்திற்கு மாறான பொருளால் செய்யப்பட்டதால் அபிஷேக ஆராதனை யின்றி சிறப்புச் சாத்துமுறையுடன் வழிபடப்படுகிறார். சிற்ப வேலைப்படுமிக்க பலகணி வழியாக இவரைத் தரிசிக்கலாம்.

 ganesh-chaturthi-01-jpgfp

Final touches given to Ganesh in Mumbai

படிக்காசு விநாயகர்

பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும் சம்பந்தரும், திருவீழிமிழலையில்

 

“வாசி தீர வே காசு நல்குவீர்” — என்று சிவ பெருமானை நோக்கிப் பதிகம் பாடினர். நாள்தோறும் கோவில் படியில் ஒரு தங்கக் காசு வீதம் வந்தது. அங்கிருக்கும் பிள்ளையார் படிக்காசு பிள்ளையார் ஆவார்.

இவர் பேரளத்திலிருந்து நாலு மைல் தொலைவில் கோவில் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் துதிக்கப் பெற்றவர்:-

 

கடிக்காசு மதியொரு அணி

கடவுள் எங்கள்

குடிக்காசு தவிர்த்து அருள்

செய் படிக்காசு மழகளிற்றை

குறித்து வாழ்வாம்

எனப் போற்றப்படுவார்.

vyasaganesasivaraman

ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவில் உள்ள எல்லாப் பிள்ளையார்களின் கதைகளைத் தொகுத்தால் ஒரு கலைக் களஞ்சியம் வெளியிடலாம். இதே போல மஹராஷ்டிரத்திலும் எட்டு புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள் உள. அவைகளைப் பின்னொரு சதுர்த்தியில் தரிசிப்போம்.

 

–சுபம்–

 

 

 

கருவுயிர்த்தாள் குறத்தி; காயம் தின்றான் குறவன் (Post No.3082)

new tribe 1

Research Article written by London Swaminathan

 

Date: 22  August 2016

 

Time uploaded in London:  15-54

 

Post No.3082

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

குறத்தி கருவுற்ற காலத்தில் குறவன் மருந்து சாப்பிட்டான் – என்று ஒரு தமிழ்ப் பழமொழி உள்ளது. இதன் உண்மைப் பொருள் என்ன?

 

குறத்தி கருவுற்றபோது அவளைப் போலவே கணவனும் மருந்து (காயம்) உண்டான் என்பது இதன் பொருள். இது கிண்டலாக எழுந்த பழமொழியா அல்லது உண்மைப் பொருளுடைத்தா?

 

அரசமரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத்தொட்டுப் பார்த்தாள் (பார்த்தாளாம்) என்று ஒரு தமிழ்ப் பழமொழியும் இருக்கிறது. அதாவது அரச மரத்தைச் சுற்றினால், மகப்பேறு இல்லாதோருக்கு மகப் பேறு (குழந்தைகள்) கிட்டும் என்றும் சொல்லலாம். உடனடி பலனை எதிர்பார்ப்பது மடமை என்றும் பொருள் சொல்லலாம்.

 

இதே போல குறத்தி கர்ப்பமுற்றதற்கு குறவன் மருந்து சாப்பீட்டானாம் என்று கிண்டலாகவும் நினைக்கலாம்.

 

ஆனால் உண்மைப் பொருள் : குறவன் மருந்து சாப்பிட்டான் என்பதே!

 

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்தப் பொன்மொழி  சம்ஸ்கிருத்த்திலும் உண்டு. “மகனைப் பெறுகிறாள் நிஷாதப் பெண்; மருந்தைக் குடிக்கிறான் நிஷாத தந்தை” — என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பொன்மொழி இருக்கிறது.

 

இதைவிட வியப்பான விஷயம் வடகிழக்கு மலையில் வாழும் நாகா இன மக்களும் இப்படியே சொல்லுவர்

“நாகாவின் மனைவி குழந்தை பெற்றாளாம்; நாகன் மருந்து சாப்பிட்டானாம்” என்று.

 

இப்படிப்பட்ட வழக்கம் உலகம் முழுதும் இருக்கிறது. இதை கூவேட் (couvade) என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லால் குறிப்பிடுவர். அந்தச் சொல்லின் பொருள் பறவைகள் முட்டையை ‘அடைகாப்பது’ ஆகும்.

 

மனைவிக்கு பேய் பிசாசுகளால் எந்தப் பாதகமும் வரக்கூடாது என்று பேய் பிசாசுகள், துர் தேவதைகள், அணங்குகளை ஏமாற்ற கணவன் இப்படி பிரசவ வேதனைப்படுவது போல நடிக்கும் வழக்கம் எகிப்து, கிரேக்கம் முதலான நாடுகளில் ஆதிகாலத்தில் இருந்தது. ஆயினும் கணவன்” மருந்து உண்ணல்” என்பது இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகிறது.

 

இதிலிருந்து தெரியும் விஷயங்கள் என்ன?

 

1.நிஷாதர்கள், தமிழ்க் குறவர், குறத்தியர், நாகா இனப் பழங்குடிகள் யாவரும் ஒன்றே.

 

2.அவர்களும் இந்துக்களே. ஏனெனில் நிஷத நாட்டு மன்னன் நளன் சரிதம் மஹாபாரதத்திலேயே உள்ளது. அவன் மிகச் சிறந்த தேரோட்டி, மிகச் சிறந்த சமையல்காரன்.

 

3.நிஷாதர்கள் என்னும் வேடர் குடியைச் சேந்தவர்தான் வால்மீகி, குஹன், கண்ணப்ப நாயனார், சபரி என்னும் தவசி.

 

4.நான் முன்னர் கட்டுரைகளில் குறிப்பிட்டது போல நகர நகரீகம் நிலவியபோதே அவர்கள் கானகத்தில் சுகமான– இயற்கையோடு இணைந்த வாழ்வு நடத்தினர். இதற்கு ராமாயணம், மஹாபாரத, சிலப்பதிகார சான்றுகளை ஏற்கனவே கொடுத்துள்ளேன்

 

  1. வெளிநாட்டு வெள்ளையர்கள், இவர்களை திராவிடர்கள் என்றும், மலைகளுக்கு விரட்டி அடிக்கப்பட்டவர்கள், இந்துக்கள் அல்லாதவர் என்றும் எழுதியது எல்லாம் பொய்ப் புனைச் சுருட்டு என்பதை சங்கத் தமிழ் இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் விளக்குகின்றன.
  2. தமிழர்கள் நகர நாகரீகம் வாழ்ந்த காலத்திலேயே குறிஞ்சி நிலத்தில் கானவர் வாழ்க்கை நடந்ததை சங்க இலக்கியம் பறை சாற்றூம்.

 

7.இப்போது நிஷாதர்களின் ஒரு பிரிவு “பில்” என்ற இன மக்கள் ஆவர். அவர்கள் வில்லும் கையுமாகத் திரிவதால் ‘வில்’ என்பதே ‘பில்’ என்று மாறியதாகச் சொல்லுவர். ஆனால் அவர்கள் இப்போது பேசும் மொழி வடக்கத்திய மொழிகளே (குஜராத்தி, மராத்தி).

 

8.நிஷாதப் பெண்களை மணந்த அந்தணர் பற்றிய குறிப்புகளும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இதே போல நாக கன்னிகைகள் மணந்ததையும் இதிஹாச புராணங்களில் காண முடியும். ஆக ஜாதி, இனம் என்பது கடுமையான விதியாக இருக்கவில்லை.

new tribe 16

ஆக, நாகா இன மக்கள், நிஷாதர்கள் (பில்/வில்லவர்), குறிஞ்சி நிலக் குறவர், குறத்தியர் ஆகியோர் ஒரே மாதிரி சிந்திப்பது  — “இமயம் முதல் குமரி வரை ஒன்று” —  என்பதை நி லைநாட்டுகிறது.

 

வெளி நாட்டினர் எழுதிய பல விஷயங்கள் வடிகட்டிக் கொடுக்கப்பட்ட செய்திகளே (filtered information) அன்றி முழு உண்மை அல்ல என்பதை

பழங்குடி மக்கள் பற்றிப் படித்தால் புரிந்துகொள்ளலாம். அவர்களும் கண்ணப்பர், சபரி, வால்மீகி போல தீவிர இந்துக்களே.

 

வாழ்க நிஷாதர்கள்! வளர்க இந்து மதம்!!

 

மனு ஸ்மிருதியில் மூன்று மர்மங்கள் – பகுதி 3 (Post No.3048)

BlackBuckAntelope

black buck antelope

Research Article Written by london swaminathan
Date: 10th August 2016
Post No. 3048
Time uploaded in London :– 17-12
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்! – Part 3

உலகின் முதல் சட்டப் புத்தகமாகிய மனு ஸ்ம்ருதி யாருக்காக எழுதப்பட்டது, எப்போது எழுதப்பட்டது என்பதெல்லாம் அந்த நூலிலேயே நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதில் மூன்று மர்மங்கள் இருக்கின்றன: கங்கை நதி மர்மம், சரஸ்வதி நதி மர்மம், கறுப்பு மான் மர்மம்.
ஒவ்வொன்றாகக் காண்போம்.

மனு சொல்கிறார்:–
இரண்டு தெய்வீக நதிகளான சரஸ்வதி, த்ரிஷத்வதி ஆகியவற்றின் இடையே இறைவனால் உருவாக்கப்பட்ட பூமி பிரம்மாவர்த்தம் எனப்படும் (வேத பூமி)
மனு 2-17
வேத பூமியை அடுத்துள்ள குரு, மத்ஸ்ய, பாஞ்சால, சூரசேன நாடுகள் பிரம்மரிஷி தேசம் எனப்படும்.
மனு 2-19

 

25d24-talageri-rivers

எனது கருத்து:–

ஜீவ நதியான சரஸ்வதியைக் குறிப்பிடுவதால் அவர் நீண்ட நெடுங்காலத்துக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும். சரஸ்வதி ஆறு வற்றிப் போய் 5000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும் கங்கை நதியை விட்டுவிட்டு வேறு இரண்டு நதிகளை தெய்வீக நதிகள் என்று சொல்லுவதிலிருந்து இந்த நூல் வேத கால நூல் என்று தெரிகிறது. மேலும் ஒரு அதிசயமான ஒற்றுமை அவர் சொல்லும் பூமிகள், சிந்து சமவெளி நாகரீக பூமியாகும். ஆக வேத காலமும், சிந்து சமவெளி நாகரீகமும் ஒன்று என்று கருத இடமுண்டு.

கீழைக்கடல் முதல் மேலைக் கடல் வரையுள்ள, இரண்டு மலைகளுக்கு (இமயமும்,விந்தியமும்) இடைப்பட்ட பூமி, ஆர்யாவர்த்தம் எனப்படும்.
மனு 2-22

(ஆர்ய என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்திலும், சம்ஸ்கிருத நூல்களிலும் பண்பாடுடைய மக்கள், வடக்கில் இமய மலையில் வாழும் தவசீலர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது. இது கு றித்த எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க)

எங்கு கிருஷ்ண மிருகம் எனப்படும் கறுப்பு மான்ன்கள் காணப்படுகின்றனவோ அந்த இடமெல்லாம் யாக யக்ஞங்கள் செய்வதற்குரிய பூமி. அதற்கப்பாலுள்ள இடமெல்லாம் மிலேச்சர் (வெளிநாட்டுக்காரர், பண்பாடற்றவர்) பூமி.
மனு 2-23

வெளிநாட்டினர் சதி:–
மனு ஸ்மிருதியை மொழிபெயர்த்த வெளிநாட்டுச் சதிகாரகளும், அரைவேக்காடுகளும் வேண்டும் என்றே ஆரிய, மிலேச்ச என்ற சொற்களை அப்படியே வைத்துக்கொண்டனர். ஏனெனில் இரண்டுக்கும் இப்போது கெட்ட, தவறான பொருள் கையாளப்படுகிறது. இதை வைத்து மக்களைக் குழப்பலாம் என்பது அவர்கள் செய்த சதி.
மிலேச்ச (யவன) என்பதை அராபியர், ரோமானியர், கிரேக்கர் என்ற பொருளிலேயே 2000 ஆண்டுப் பழமையான பழந்தமிழ் இலக்கியமும் அதற்கு முந்தைய சம்ஸ்கிருத இலக்கியமும் பயன்படுத்துவதை உரைகளிலும், முதல் நூல்களிலும் காணலாம் (மிலேச்ச/ யவனர் பற்றிய எனது முந்தைய ஆய்வுக்கட்டுரைகளில் ஆதாரங்கள் உள).

 

ganges-map-simple

கங்கை நதி மர்மம்

சங்க இலக்கியத்தில் கங்கயின் புனிதத்தை தமிழர்கள் போற்றுவர். இது 2000 ஆண்டுக்கு முந்தியது. ஆனால் மனுவோ கங்கையின் புனிதம் பற்றிப் பேசாமல் சரஸ்வதி நதியின் புனிதத்தைப் போற்றுகிறார். ஏன்?

சரஸ்வதி வற்றி, மறைந்து போன பின்னர்தான் கங்கையின் புகழ் பரவத் தொடங்கியது என்று கொள்ளலாம் அல்லது உலகின் முதல் நீரியல் விஞ்ஞானி, எஞ்சினீயர் பகீரதன் கங்கையை, இப்போதுள்ள கங்கைச் சமவெளிக்குப் திசை திருப்பிய பின்னர் அதன் புகழ் பரவி இருக்கலாம். அதற்கும் முந்தையது சரஸ்வதியும் வேத காலமும்.

பகீரதன் யார்?
ரிக் வேதம் குறிப்பிடும் வைவஸ்வத மனு எட்டாவது மனு. அவருக்கு அடுத்து வந்தவன் இக்ஷ்வாகு. அவனுடைய சூரிய குலத்தில் 54 ஆவது மன்னன் பகீரதன். மாபெரும் பொறியியல் வல்லுநன். பல மன்னர்கள், கங்கையை திசை திருப்பி நீர்ப்ப சனம் செய்ய முயன்றனர்; தோல்வியுற்றனர். ஆனல் பகீரதன் தனது எஞ்சினீயரிங் திறமையால கங்கையத் திசை திருப்பினான். இந்தியாவின் பழங்கால எஞ்சினீயர்கள் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் முழு விவரம் காண்க.

இந்த பகீரதன் இட்சுவாகுவுக்கு 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவன். அப்போதுதான் கங்கையின் பெருமை உலகிற்குத் தெரிந்தது என்றும் கொள்ளலாம். ஆக மனு , கங்கயின் பெயரைச் சொல்லா ததன் மர்மம் துலங்கிவிட்டது. மனுச் சக்ரவர்த்தி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். இட்சுவாகுவோ சிந்து சம்வெளிக்கும் முன்னர் வாழ்ந்தவன். அதியமானை கரும்பு கொண்டுவந்தவனின் வழித்தோன்றல் என்று அவ்வையார் புகழ்வது ஏன்? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இது பற்றி விளக்கியுள்ளேன்.

 

yavana-in-bharhut

மிலேச்சனின் படம்

கறுப்பு மான் மர்மம்

இரலை என்றும் கலைமான் என்றும் போற்றப்படும் கறுப்புமானுக்கு மனு கொடுக்கும் முக்கியத்துவம் வியப்புக்குரியது. அது இருக்கு மிடத்தில்தான் இந்துக்கள் வாழலாம் என்கிறார். ஆனால் கறுப்பு மானோ இன்றும் இந்தியா, நேபாளம் ஆகிய இடங்களில் உள்ளது ஆக தமிழ் நாடும் யாக பூமியே, வேத பூமியே. பல் யாக சாலை முது குடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட பெரு நற்கிள்ளி முதலிய தமிழ் மன்னர்கள் இதற்கு எடு த்துக்காட்டு.

இதைவிட அதிசயம்! சிந்து சமவெளியில் இந்த வகை மானின் எலும்புகள் கா ப்படுகின்றன. வேத கால முனிவர்கள் இதை ஆஸ்ரமங்களில் வளர்த்ததை புற நானூறும், காளிதாசன் காவியங்களும் விதந்து
ஓதுகின்றன. ஆகவே சிந்து சமவெளியில் வேத முனிவர்கள் ஆசிரமங்களை வைத்து மான்களை வளர்த்தமையும் வெள்ளிடை மலையென விளங்கும்!
–Subham–

 

புதிய ஐடியாக்கள் -New Ideas from STRATFORD UPON AVON (Post No.3037)

IMG_0225

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3037

Time uploaded in London :– 9-47 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நான் ரோம், நியுயார்க், ஸ்டாக்ஹோம் போன்ற நகரங்களுக்குச் சென்று வந்த பிறகு புதுப் புது யோஜனைகளை எழுதி இந்தியர்களும் இப்படிச் செய்யலாமே என்று எழுதினேன். இங்கே ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்ட்ராட்போர்ட் அபான் ஏவன் STARTFORD UPON AVON என்ற இடத்தில் விற்கப்படும் காந்த வில்லைகலையும் MAGNETS ஒரு மெஷினையும் பாருங்கள். மேலை நாடுகளில் எந்த ஊருக்குப் போனாலும் பிரிட்J FRIDGE மேல் பொருத்த மாக்னெட் கிடைக்கும். அதில் படமோ மேற்கோளோ பொன்மொழியோ இருக்கும். இது போல நாமும் பாரதி, கம்பன், ராகவேந்திரர், தியாகராஜர் பொன்மொழி ளை காந்த வில்லைகளாக விற்கலாம். எல்லா இடங்களிலும் அதுவது அல்லது அவரவர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், படங்கள் விற்கப்படுகின்றன.

 

IMG_4711

படத்தில் காட்டிய மிஷினில் ஒரு பென்னி அல்லது இண்டு பென்ஸ் காசுகளை நுழைத்தால் SHAKESPEARE படத்துடன் அது வெளியே வரும். இது போல நாமும் ஒரு காசை நுழைத்தால் கம்பன், பாரதி படம் அல்லது பொன் மொழியோடு வரச் செய்யலாம்.

 

IMG_4709

 

IMG_4502

இது போல நாமும் நம் கவிஞர்களின் படைப்புகள் பற்றி சுருக்கமாக போர்ட் அல்லது போஸ்டர் வைக்கலாம்

இது போல அந்தக் கால உடைகளில் நாமும் கவிஞர்கள், சரித்திர நாயகர்கள், ராஜா-ராணிகளின் கதைகளை அவரவர் பிறந்த இடத்தில் நடித்துக் காட்டலாம். இவர்கள் இருவரும் 37  நாடகங்களிலிருந்து முக்கிய கட்டங்களை நடித்துக் காட்டுவர்.

 

IMG_4577

 

Shakespeare’s Birth Place at Stratford upon Avon- two hours’ drive from London: Every time I go to a country or a place, I write about new ideas for Indians to follow (Please see my ideas from New York, Stockholm and Rome).

 

Why dont we sell the quotations of Kamban, Bharatiyar and others on magnets so that we fix them on the Fridges. We always buy fridge magnets whenever we go to a country or a city. Look at the Shakespeare quotations here. And see the machine: if you insert one penny or two pence coin you will get a picture embedded on it. We can also do such things at the birth places of Ragavendra, Bharathy, Kamban, Thyagaraja etc.

மண்டை ஓடு போல காப்பிக் கோப்பைகள்

IMG_4716